Page 148 of 400 FirstFirst ... 4898138146147148149150158198248 ... LastLast
Results 1,471 to 1,480 of 3997

Thread: மனதை மயக்கும் மதுர கானங்கள்

  1. #1471
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    நன்றி கார்த்திக் சார்

    சாயபாபா பற்றி நீங்கள் சொன்னது ஒரு நல்ல தகவல்
    நீண்ட இடைவெளிக்கு பின் இளையராஜா இசையில்
    1987 காலகட்டத்தில் வேலைக்காரன் படத்தில் "தோட்டத்திலே பாத்தி கட்டி " பாடலின் ஆரம்பம் இவரின் மீள் ஆரம்பம் என பேசப்பட்டது .
    ஆனால் அதற்கு பிறகும் இவர் பாடல்கள் எதுவும் பெரிதாக வரவில்லை
    gkrishna

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #1472
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Rajesh,
    I thank you for your views on T.K.R.I request you to remove the post no 1396 in page 140 as it contains the quote of Ramesh which was removed by him .Thanks.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  4. #1473
    Senior Member Veteran Hubber mr_karthik's Avatar
    Join Date
    Sep 2005
    Location
    Irumbu kOttai
    Posts
    1,416
    Post Thanks / Like
    டியர் கிருஷ்ணாஜி,

    'உயர்ந்தவர்கள்' படத்தைப்பற்றி பதிவிட்டு என் எண்ணங்களை கடந்த காலத்தை நோக்கி திருப்பி விட்டீர்கள்.

    உயர்ந்தவர்கள் நான் நடித்த படம்..... அதிர்ச்சி வேண்டாம்.

    அந்தப்படத்தில் கமலின் குழந்தை ஒரு கடையின் முன்னாள் காணாமல் போகும் அல்லவா?. அந்தக்காட்சி சென்னை எட்வர்ட் எலியட்ஸ் ரோட்டிலுள்ள 'டாய் செண்டர்' என்ற கடையில் படமாக்கப்பட்டது. கடையின் வாசலில் தள்ளுவண்டியில் உட்கார வைக்கப்பட்டிருந்த குழந்தையைக் காணோம் என்று அந்தப்பெண் கடையின் உள்ளே வந்து கடையின் உரிமையாளர் அபுல்கலாம் என்பவரிடம் விசாரிக்கும்போது, கடையிலிருந்து ஒரு பையன் (கொஞ்சம் இளைஞன் என்றும் சொல்லலாம்) கடையில் பொம்மை வாங்கிக்கொண்டு வெளியே செல்வதுபோல ஒரு காட்சி வரும். அந்த இளைஞன் பக்கத்தில் நிற்கும் இன்னொரு பையன் நான்தான்.

    கடையில் நின்றுகொண்டிருக்கும்போது யதார்த்தமாக வந்து படமெடுத்தார்கள் (உரிமையாளரிடம் முன்கூட்டியே சொல்லியிருப்பார்கள் போலும்). இயக்குனர் டி.என்.பாலு வரவில்லை. சிறிய காட்சியென்பதால் அவரது உதவியாளர்தான் வந்து எடுத்தார். இனி அந்த படம் பார்க்க வாய்ப்புக்கிடைத்தால் அந்தக்காட்சியில் உற்றுப்பாருங்கள். அதில் நான் ஒரு செகண்ட் ஹீரோ. அதாவது ஒரே ஒரு செகண்ட் மட்டுமே வருவேன்.

  5. #1474
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    வாசு சார்
    சூப்பர்... 5 நட்சத்திர அந்தஸ்து பெற்ற திரியின் நாயகருக்கு உளமார்ந்த நல்வாழ்த்துக்கள். மற்றும் பங்கு கொண்டு இச்சிறப்பிற்கு வழிவகுத்த ஒவ்வொரு நண்பருக்கும் பாராட்டுக்கள்.
    தொடருங்கள்
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  6. #1475
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    கார்த்திக் சார்
    உயர்ந்தவர்கள் படம் காணக் கிடைக்கும் போது கண்டிப்பாக உங்கள் நினைவோடு தான் பார்ப்பேன். சும்மாவா செகண்ட் ஹீரோவாச்சே...
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  7. #1476
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    வாசு சார்
    எந்தப் பதிவைப் பாராட்டுவதெனத் தெரியவில்லை... நிலவே நீ சாட்சி... அந்தக் காலத்தில் அந்த லிஃப்ட் ஒலி பரபரப்பாக பேசப்பட்டது. வானொலியில் முதன் முறை ஒலிபரப்ப முயன்ற போது இந்த ஒலியைக் கேட்டு விட்டு ரிகார்டு சரியில்லை எனத் திருப்பி அனுப்பியதாக சில நண்பர்கள் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன். அவர்களையே ஏமாற்றிய அந்த சிறப்பொலி இன்றைக்கும் நம்முள் ஒரு பாதிப்பை ஏற்படுத்துகிறது. இப்போது சொல்லும் ஹஸ்கி வாய்ஸையெல்லாம் அப்போதே அவர் பாடிக் காண்பித்து விட்டார்.

    புகுந்த வீடு பாடலைப் பற்றி ஒரு அந்தக் காலத்தில் காற்று வாக்கில் பரவிய தகவல் ஒன்று உண்டு. அது வேறொருவருக்காக வேறொரு படத்திற்காகப் பதியப் பட்டதாகவும் என்ன காரணத்தாலோ அந்தப் படத்திற்குப் பயன்படுத்தப் படாமல் இந்தப் படத்தில் பயன்படுத்தப் பட்டதாகவும் கேள்விப் பட்டிருக்கிறேன்.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  8. #1477
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    தங்க நிலவே நீயில்லாமல்....

    இசை என்பது சுத்தமான முழுமை மட்டும் அல்ல ,சிறிதே பிசிறும் கலக்க வேண்டிய, செம்பு கலந்த தங்கமாகவும் வேண்டும் என்று
    எனக்கு உணர்த்தியவர் என் சிறு வயது வகுப்பாசிரியர் ஆர்.பீ மாஸ்டர்.(என்னை விட சிவாஜி பக்தர்)டி.எம்.எஸ் பாடும் போது கவனிச்சிருக்கியா ,கொஞ்சம் பிசிரடிக்கும்.அதுவே பாட்டை தூக்கும். என்பார்.(பின்னால் இதே கருத்து வாமனன் புத்தகத்திலும் வந்தது). நான் சிறு வயதில் டி.எம்.எஸ்.ரசிகனாக எல்லா மேடையிலும் அவர் பாணியில் ,அதே குரலில் பாடுவேன்.(இன்றும்)ஆனால் பாடும் போது அவர் போலவே கன்னியை கல்னி என்றும் ,கன்னலை கல்னல் என்றுமே பாடுவேன்.மற்றோர் சுட்டி காட்டிய போது ,என் சார்பில் நின்றவர் ஆர்.பீ. அவர் கருத்து எனக்கு போக போக இன்னும் புரிந்தது.

    ஜனனி ஜனனி பாட்டில் இளைய ராஜாவிற்கு சுருதியே நிற்காது. அதே மெட்டில் அம்மா என்றழைக்காத பாடலை அவ்வளவு சுத்தமாக ஜேசுதாஸ்.ஆனால் எனக்கென்னவோ ஜனனி ஜனனியின் திருப்தி அம்மாவில் கிடைக்கவில்லை.

    என்னுடைய கனவு நாயகி நடித்தாலே குதூகலம்.பாட வேறு பாடினால்?(பழம் நழுவி பாலில்)எஸ்.எம்.எஸ் இசையில் சிநேகிதி படத்தில்.ஏற்கெனெவே தினத்தந்தி வெள்ளி திரையில் படித்ததனால் ,ரேடியோ கேட்கும் போது வியக்கவில்லை.என் பெற்றோர் இவளெல்லாம் ஏன் பாடணும் .ஒத்தையும் ரெட்டை குரலுமாய் அபஸ்வரம் என்றதை,நான் மிக மிக ரசித்தேன்.சிறிதே hoarse ஆனாலும் ஓபன் வாய்ஸ் இல் மிக மிக innocense தெரியும்.முடியுமா என்று இழுக்கும் போது ,முடியுமடி செல்லம் என கட்டி கொள்ள தோன்றும்.

    ஒரு imperfection என்னை இந்தளவு ஆட்கொள்ள முடியுமா?எத்தனை முறை கேட்டு ரசித்திருப்பேன்?

    பாட்டின் ஆரம்பத்திலேயே பாரதியின் பின்னழகை காட்டுவதால்,இந்த படத்தை 1971 வாக்கில் கீத்து கொட்டகை ஒன்றில் repeat audience ஆக பார்த்தேன்.முதலில் மெல்லிய டிசைன் போட்ட ஷிபான் புடவை ,கொண்டை போல நிமிர்ந்து ஒற்றை கூந்தலாகும் ஹேர் ஸ்டைல்.இரண்டாவது சரணத்தில் பூப்போட்ட புடவை ,கொண்டை .மூன்றாவது முடிவில்,கருப்பு பூ போட்ட புடவை,முக்கால் கை ஜாக்கெட்.முதல் ஹேர் ஸ்டைல்.அப்படியே 8 எண்ணை எழுதினார் போல உடல்.

    கூட இருக்கும் ஆள்தான் கொஞ்சம் ஒரு மாதிரி.பொருந்தா கிராப்.கையை உபயோகமே படுத்த தெரியாமல் ஒரு வினோத ஸ்டைல்.ரவியை கற்பனை செய்து ரசிக்க வேண்டியதுதான்.(எங்கே எங்கே என் மனது)

    டி.எம்.எஸ் ,பாரதிக்கு இணைவாக adjust செய்து சமாளிப்பார்.பாரதியை கண்டு கேட்டு மகிழுங்கள்.அவர் என் கனவில் (reserved)வர போவதால்,உங்கள் கனவை தவிர்க்கவும்.

    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  9. #1478
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    வீட்டுக்கு வீடு, முத்துராமன் நாகேஷ் நடித்த திக்குத் தெரியாத வீட்டில் என்ற மேடை நாடகத்தின் திரைப்படமாக்கம்.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  10. #1479
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    Quote Originally Posted by mr_karthik View Post
    டியர் கிருஷ்ணாஜி,

    'உயர்ந்தவர்கள்' படத்தைப்பற்றி பதிவிட்டு என் எண்ணங்களை கடந்த காலத்தை நோக்கி திருப்பி விட்டீர்கள்.

    உயர்ந்தவர்கள் நான் நடித்த படம்..... அதிர்ச்சி வேண்டாம்.

    அந்தப்படத்தில் கமலின் குழந்தை ஒரு கடையின் முன்னாள் காணாமல் போகும் அல்லவா?. அந்தக்காட்சி சென்னை எட்வர்ட் எலியட்ஸ் ரோட்டிலுள்ள 'டாய் செண்டர்' என்ற கடையில் படமாக்கப்பட்டது. கடையின் வாசலில் தள்ளுவண்டியில் உட்கார வைக்கப்பட்டிருந்த குழந்தையைக் காணோம் என்று அந்தப்பெண் கடையின் உள்ளே வந்து கடையின் உரிமையாளர் அபுல்கலாம் என்பவரிடம் விசாரிக்கும்போது, கடையிலிருந்து ஒரு பையன் (கொஞ்சம் இளைஞன் என்றும் சொல்லலாம்) கடையில் பொம்மை வாங்கிக்கொண்டு வெளியே செல்வதுபோல ஒரு காட்சி வரும். அந்த இளைஞன் பக்கத்தில் நிற்கும் இன்னொரு பையன் நான்தான்.

    கடையில் நின்றுகொண்டிருக்கும்போது யதார்த்தமாக வந்து படமெடுத்தார்கள் (உரிமையாளரிடம் முன்கூட்டியே சொல்லியிருப்பார்கள் போலும்). இயக்குனர் டி.என்.பாலு வரவில்லை. சிறிய காட்சியென்பதால் அவரது உதவியாளர்தான் வந்து எடுத்தார். இனி அந்த படம் பார்க்க வாய்ப்புக்கிடைத்தால் அந்தக்காட்சியில் உற்றுப்பாருங்கள். அதில் நான் ஒரு செகண்ட் ஹீரோ. அதாவது ஒரே ஒரு செகண்ட் மட்டுமே வருவேன்.
    கார்த்திக் சார்
    நிச்சயமாக இந்த cd எப்படியாவது வாங்கி பார்த்து விடுவேன்
    முகம் தெரியாத நமது நட்பு இன்னும் ஆழம் ஆகும் அல்லவா
    எங்கள் கார்த்திக் சார் ஒரு ஹீரோ என்று எல்லோரிடமும் பெருமை
    அடித்து கொள்வேன்
    gkrishna

  11. #1480
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Krishnnaji,

    I will do the computer Graphic of that face and publish the Photograph of todays Karthik.(38 varuda koottal)
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •