thanks madhu sir
Printable View
மீத்தா ருங்ராத் பற்றி எழுத்தாளர் இரா.முருகன் ஆனந்த் ராகவ்வின் ஒரு புத்தக முன்னுரையில் (க்விங்க் என நினைக்கிறேன்) எழுதியிருந்தார்.. அவர் டி.வி.சீரியல்களில் எல்லாம் நடிக்கிறாராம்..புத்தகத்தை மறுபடி தேடி எடுத்துஇடுகிறேன்.
மேனகா - மோகம் முப்பதுவருஷம் மணியன் கதையில் ஆர்ட்டிஸ்ட் ரவிசங்கரின் மனைவி..
http://www.thehindu.com/thehindu/fr/...1501440201.jpghttp://2.bp.blogspot.com/-dmlzMGlCr9....Meiyappan.jpghttp://www.indiacatalog.com/images/l...cal/th_avm.jpg
AVM என்பதன் விளக்கமான AV மெய்யப்ப செட்டியார் அவர்களின் 35 வது நினைவு நாள் இன்று .(12 ஆகஸ்ட் 1979 இல் அவர் காலமானார் )
அவரது நினைவாக
http://www.youtube.com/watch?v=HiQI7tgwZoo
மின்னல் வேகம்... அல்லது என்னவெனச் சொல்வது.. இந்த வேகத்தை..
வினோத் சொன்னது போல் நாளைக்கே அடுத்த பாகம்...
பொறுங்க.... பொறுங்க...அடுத்த பாகம் இன்னும் கொஞ்ச நேரத்திலே ஆரம்பிக்கப் போறாங்களா... அதுக்குள்ளே இந்த போஸ்ட் ஏத்திடணுமா இல்லைண்ணா அடுத்த பாக்ததிலே தானா..
சார் சார்... இந்த ஒரே ஒரு போஸ்டை மட்டும் போட்டுடறேனே...
எஸ்.வரலக்ஷ்மியின் இனிமையான குரலில் வேலைக்காரன் படத்தில் ஆர்.சுதர்ஸனம் இசையில்...
என்னது வேலைக்காரனில் எஸ்.வரலக்ஷ்மியா சுதர்ஸனமா... ன்னு கேட்டுடாதீங்க..
1952ல் வெளிவந்த வேலைக்காரன் படத்திலிருந்து சார் இந்தப் பாட்டு.
நானே ராணி...
http://www.inbaminge.com/t/v/Velaikkaran%201952/
நான் இன்னும் ஐம்பத்திரண்டையே தாண்டலையே...
பொங்கும் பூம்புனல்
http://www.inbaminge.com/t/v/Valaiyapathi/
குளிர் தாமரை மலர் பொய்கை கண்டேன்
ஓடையிலே குளிர் ஓடையைக் கண்டேன்
இந்தப் பாட்டில் உள்ள மொத்த வரிகளை எண்ணி விடலாம்...
உலவும் தென்றல் காற்றை மெட்டில் மட்டுமல்ல கருத்திலும் நினைவூட்டும் பாடல்..
குலுங்கிடும் பூவிதனால் தேனருவி கண்டதனால் என்ற பாட்டால் புகழ் பெற்ற வளையாபதியிலிருந்து தான் இந்தப் பாடலும்.
தக்ஷிணாமூர்த்தி இசையில் இனிமையான பாடல்
chinnakannan sir
சூரியகலா- [வயது-72] பழம்பெரும் நகைச்சுவை, குணச்சித்திரம் மற்றும் வில்லி நடிகை. ஜே.பி.சந்திரபாபுவுடன் குமார ராஜா, ஏ.வீரப்பனுடன் சாது மிரண்டால், இல்லறமே நல்லறம் படத்தில் எஸ்.வி.ராம்தாஸின் காதலியாக இருந்துகொண்டே சித்தூர் வி.நாகையாவை மயக்கி தன் வலையில் வீழ்த்தும் நடனக்காரியாகவும் அன்பு எங்கே, கண் திறந்தது உட்பட பல தமிழ்த் திரைப்படங்களிலும் பெரும் வெற்றி பெற்ற தெலுங்குப் படமான “சொர்ண சுந்தரி”, 1957-இல் வெளிவந்த “பலே அம்மாயிலு” போன்ற தெலுங்குப் படங்களிலும் கன்னட மொழியில் சில படங்களிலுமாக மும்மொழிகளிலும் 500-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் சூரியகலா. இவர் கடந்த 30.06.2014 அன்று இரவு 10.00 மணியளவில் சென்னையில் தனது 72-ஆவது வயதில் காலமானார்.
http://antrukandamugam.files.wordpre...pg?w=593&h=348http://antrukandamugam.files.wordpre...pg?w=593&h=341
இவர் நினைத்தாலே இனிக்கும் படத்திலும் ரஜினி காந்துடன் 'அன்பரே உங்களை ஒருமுறை பார்த்தேன் பாரத்ததும் பரம ரசிகை ஆகி விட்டேன் "
என்ற குரலுக்கு சொந்தகாரர் போல் காமெடி செய்து ஏமாற்றுவார் .
இந்த படத்தில் ரூம் clearner வேடத்தில் வருவார் drums விசு (ராஜப்பா) இவரை 'நம்ம ஊர் குப்பம்மா ' என்று கூறுவார்