http://oi64.tinypic.com/29lnrit.jpg
Printable View
பைலட் பிரேம்நாத் பத்திரிகைகளின் தொகுப்பு தொடரும்...........
மனத்தைக் கவரும் மதுர கானங்கள் திரியிலிருந்து......மனமாற்றிகள்!
Mood and Mind Moderators!
நம் வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடமே!
மனிதனின் இறப்பிடம்....தத்துவங்களின் பிறப்பிடம்...சமரசத்தின் உறைவிடம் நமக்கு உணர்த்திட்ட அறிவுக்கண் திறந்திட்ட ஞான கானங்களின் உலா!!
போனால் போகட்டும் போடா....இந்த பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா!
(கண்கெட்ட பின்) ஞானோதயம் No.3 பாலும் பழமும் ......வந்தவரெல்லாம் தங்கி விட்டால்...இந்த மண்ணில் நமக்கே இடமேது!
https://www.youtube.com/watch?v=xJv69gO4dBA
NT at his best....!
நடிகர்திலகத்தின் சமரச சாம்ராஜ்ஜியம்....முடி சூடிய மன்னரும் முடிவில் ஒருபிடி சாம்பலே!!
https://www.youtube.com/watch?v=hBWh4TrnUeQ
https://www.youtube.com/watch?v=EYjT...=RDEYjTYoi1i7M
https://scontent.fmaa1-2.fna.fbcdn.n...9e&oe=57FA5F76
மனித வாழ்வில் மரணம் என்பது தவிர்க்க முடியாதது என்றாலும் அதைத் தாங்கும் வலிமையையும் நாம் இறைவனிடம் தான் கேட்டுப் பெற வேண்டியுள்ளது. இதை நாம் இன்று இயக்குநர் ஏ.சி.திருலோகசந்தர் மறைவில் உணர்கிறோம். நடிகர் திலகமும் திருலோக்கும் பிரிக்க முடியாத இரு பெயர்கள். திருலோக் என்றில்லை, பல இயக்குநர்கள் தங்கள் வாழ்வில் நடிகர் திலகத்தை ஒரு படம் இயக்கினால் கூட புளகாங்கிதம் அடைந்து ஜென்ம சாபல்யம் பெற்று விட்டதாக கருதுவார்கள். அப்படி ஒரு பேற்றினைப் பலமுறை பெற்று நடிகர் திலகத்தின் மனதில் மட்டுமின்றி அவருடைய ரசிகர்கள் மனதிலும் நீங்கா இடம் வகிப்பவர் திருலோக் சந்தர். எத்தனை படங்கள்... இவர்கள் இணையில்... நடிகர் திலகத்தின் திரைப்பட வரலாற்றில் திருப்புமுனை படம் தந்தவர்களில் திருலோக்கின் பங்கு முக்கியமானது. அதுவரை குடும்பக்கதைகளிலும் புராண இதிகாச இலக்கியப் பாத்திரங்களிலும் நடித்து வந்த நடிகர் திலகத்தின் நடிப்பில் அதுவரை இல்லாத புதிய பரிமாணத்தை வெளிக்கொணர்ந்த பெருமை திருலோக் அவர்களுக்கே சாரும். அவருடைய தங்கை திரைப்படம் ஏராளமான புதிய ரசிகர்களை நடிகர் திலகத்திற்குப் பெற்றுத் தந்தது. அதற்குப் பிறகு இவர்கள் இணையில் வெளிவந்த அத்தனை படங்களுமே ரசிகர்களின் நெஞ்சில் நீங்கா இடம் பெற்றவையாகும்.
நடிகர் திலகத்தோடு திரையுலக வாழ்வில் மட்டுமின்றி இப்போது மேலுலகிலும் இரண்டறக் கலந்து விட்ட அவரின் பிரிவு தமிழ்த்திரையுலகிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும்.
அவரை இழந்து வாடும் அவர் குடும்பத்தினருக்கு எல்லா சிவாஜி ரசிகர்கள் சார்பிலும் நமது ஆழ்ந்த இரங்கலையும் இத்துயரைத்தாங்கும் வலிமையை அவர்களுக்கு இறைவன் வழங்கவேண்டும் என்கிற பிரார்த்தனையும் தெரிவித்துக் கொள்வோம்.
http://i1028.photobucket.com/albums/...pskm96k2qc.jpg
நன்றி அய்யா!
மரண வாகனமேறிக் கொண்டு
எங்களிடமிருந்து தாங்கள்
விடைபெறுகிற இந்த நிமிஷம்..
இந்த நன்றியை நாங்கள் சொல்ல வேண்டியது கடமை.
ஒரு ரசிகனுக்குத் தேவையான
அத்தனையையும் தந்து வளமாக்க எங்களுக்கோர்
நடிகர் திலகம் கிடைத்தார்.
அந்த அற்புதக் கலைஞன்
தன்னை முழுசாய் வெளிப்படுத்தத் தேவையான
அத்தனையும் தருவதற்கு
அவருக்கு நீங்கள் கிடைத்தீர்கள்.
அய்யா நடிகர் திலகத்தின்
படங்களைப் பார்ப்பதற்காக
டூரிங் திரையரங்கில்
மணல் குவித்து அமர்ந்ததில்
எனக்குக் கிடைத்த உயரத்தை,
என் வாழ்வின் உயர்வுகள்
என்றே சொல்வேன்.
அதில் பெரும்பாலான உயர்வுகள்- அய்யா...தங்களால்
கிடைத்தவையே.
காதல், கோபம், அழகு, அருவருப்பு, லட்சியம், அழுகை, ஆர்ப்பரிப்பு, புன்னகை, சிரிப்பு,
சிலிர்ப்பு... எல்லாம் பார்த்து விட்டோம் உங்கள் படங்களில்.
எதுவும் பாக்கி வைக்கவில்லை நீங்கள்.
அணிந்திருக்கும் கோட்டில்
படிந்த தூசியை, நூறு ரூபாய்
நோட்டினால் தட்டி விடுகிற
செல்வந்தனுக்கும் உங்கள்
படம் பிடிக்கும்.
பைசா பைசாவாய் சேர்த்து வைத்து பல மாதங்களுக்கு
ஒரு முறை படம் பார்க்கிறவனுக்கும் உங்கள்
படம் பிடிக்கும்.
நிறைவான நிறைவும், முழுமையும் தந்து எங்களிடமிருந்து விடை பெறும் தங்களுக்குப் பணிந்து
தருவதற்கு என்ன இருக்கிறது..
என்னிடம்?
தேடுகிறேன்..
முப்பத்தைந்து ஆண்டுகளாக
என் இதய வீட்டுக்குள்
என் சொந்தங்களாய் உலவுகிற
சுந்தர், உமா, சாந்தி... ஆகியோரை அணு அணுவாய்
வியந்து நான் "தரிசனம்"
என்கிற தலைப்பில் "இரு மலர்கள்" பற்றி எழுதியதைப்
படித்து விட்டு, இன்றளவும்
ஏராளமானோர் என்னைப்
பாராட்டும் போது.. என்னுள்
ஊற்றெடுக்கிறதே.. நன்றிக்
கண்ணீர்...?
அதைத் தந்து விடைகொடுப்பேன்.
ACT KNOWN AS AC DIRECTOR THOSEDAYS, His brother happened to be an iobian he comes to the bank VERY OFTEN that time we used to chat with him about films morso about NT and he as a simple man with no reservation.
MAY HIS SOUL REST IN PEACE,
ஏசி திருலோக்சந்த்ர் இயக்கத்தில் நடிகர் திலகம் நடித்து வெளிவந்த படங்கள்:
தங்கை
2. இரு மலர்கள்
3. என் தம்பி
4. திருடன்
5. தெய்வமகன்
6. எங்கிருந்தோ வந்தாள்
7. எங்க மாமா
8. பாபு
9. தர்மம் எங்கே
10. பாரத விலாஸ்
11. அவன் தான் மனிதன்
12. அன்பே ஆருயிரே
13. டாக்டர் சிவா
14. பைலட் பிரேம்நாத்
15. விஸ்வரூபம்
16. லாரி டிரைவர் ராஜாக்கண்ணு
17. வசந்தத்தில் ஓர் நாள்
18. குடும்பம் ஒரு கோயில்
19. அன்புள்ள அப்பா
20. அன்பளிப்பு.
இவற்றில் மெல்லிசை மன்னர் இசையமைத்த படங்கள் 18. அவற்றின் பட்டியல்
1. தங்கை
2. இரு மலர்கள்
3. என் தம்பி
4. திருடன்
5. தெய்வமகன்
6. எங்கிருந்தோ வந்தாள்
7. எங்க மாமா
8. பாபு
9. தர்மம் எங்கே
10. பாரத விலாஸ்
11. அவன் தான் மனிதன்
12. அன்பே ஆருயிரே
13. டாக்டர் சிவா
14. பைலட் பிரேம்நாத்
15. விஸ்வரூபம்
16. லாரி டிரைவர் ராஜாக்கண்ணு
17. வசந்தத்தில் ஓர் நாள்
18. அன்பளிப்பு
குடும்பம் ஒரு கோயில் படத்திற்கு எம். ரங்கா ராவ் அவர்களும், அன்புள்ள அப்பா படத்திற்கு சங்கர் கணேஷ் அவர்களும் இசையமைத்திருந்தார்கள்.
Hearty condolences to the bereaved family of Ace Director of NT Mr ACT on his sudden demise
senthil
https://www.youtube.com/watch?v=kDLjdJ2we5c
அவன் தான் மனிதன் சிங்கப்பூரில் படப்பிடிப்பு. பாடல் காட்சி படமாக்கப் படவேண்டும். படப்பிடிப்பிற்கான எல்லா ஏற்பாடுகளும் தயார். ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகர் திலகம் உட்பட அனைத்துக் கலைஞர்களும் படப்பிடிப்பு துவங்குவதற்காக காத்திருக்கின்றனர்.
திடீரென பரபரப்பு.. உதவியாளர் ஒருவர் பதைபதைப்புடன் இயக்குநர் ஏசிடியிடம் ஓடி வந்து ஏதோ சொல்கிறார். இதைக் கேட்ட திருலோக் செய்வதறியாது திகைத்து நிற்கிறார். இதற்குள் படப்பிடிப்புக்குழுவைச் சேர்ந்த பலருக்கும் தகவல் தெரிய வர, அனைவரும் என்ன செய்வது எனத் தெரியாமல் தடுமாறுகின்றனர்.
இங்கோ கடல் கடந்து வந்து நாயகன் நடிகர் திலகத்தின் படப்படிப்பில் ஒரு நிமிடம் கூட வீணாகக் கூடாது என நினைத்திருந்த இயக்குநருக்கும் தயாரிப்பாளருக்கும் கவலை தொற்றிக்கொள்கிறது. இதை எப்படி நடிகர் திலகத்திடம் சொல்வது, எப்படி சமாளிப்பது, என்ன செய்வது என்று முழிக்கின்றனர். ஒரு வழியாக நடிகர் திலகத்திடம் விஷயத்தை சொல்கின்றனர்.
என்ன திருலோக் ஏன் தடுமாறுகின்றாய். ஷூட்டிங் ஆரம்பி. எல்லோரும் போய் அவங்க அவங்க வேலையை தொடருங்கள் என நம்பிக்கையூட்டுகிறார்.
இயக்குநர் மற்றும் படப்பிடிப்புக்குழுவைச் சார்ந்த அனைவருக்கும் தடுமாற்றம் ஏற்படக் காரணம்.
மற்ற பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டு விட்ட நிலையில் மீதமிருக்கும் ஒரு பாடல் மட்டும் அன்று படமாக்கப்பட வேண்டும். இந்த நிலையில் பாடல்கள் ஒலிப்பதிவு செய்யப்பட்டு ஒலிநாடாவில் கொண்டு வரப்பட்டிருந்த பெட்டிகளில் அன்று ஒளிப்பதிவு செய்யப்பட வேண்டிய பாடலின் ஒலி நாடா...
ம்ஹீம்... வரவில்லை. அதற்கு பதில் ஏற்கெனவே படமாக்கப்பட்டிருந்த ஒரு பாடல் இரண்டு பெட்டிகளில்..
இந்த இக்கட்டான சூழலை எப்படி சமாளித்தார் நடிகர் திலகம்...
சென்னையில் பாடல் பதிவு நடைபெற்ற போது படத்தின் அனைத்துப் பாடல்களையும் நடிகர் திலகம் கேட்டிருந்தார். அதன் காரணமாக கிட்டத்தட்ட அனைத்துப் பாடல்களும் அவருக்கு மனப்பாடம் ஆகி விட்டிருந்தன. அவருடைய அபாரமான நினைவாற்றல் எப்போதுமே அவருக்கு மட்டுமின்றி படப்பிடிப்புக்குழுவினருக்கும் எண்ணற்ற சமயங்களில் பயன்பட்டு வந்துள்ளன.
இந்த ஆற்றலின் துணையோடு அன்றும் படப்பிடிப்பிற்கு தயாரானார் நடிகர் திலகம். ஒலி நாடாவின் துணையின்றி, தன் இசை ஞானத்தாலும் நினைவாற்றலாலும் பாடல் வரிகளை மனதில் தானே அந்த வரிகளுக்கேற்றவாறு முணுமுணுத்தவாறே ஒரு மாத்திரை ஒரு இம்மி அளவு கூட பிறவாமல் த்த்ரூபமாக நடித்துக் கொடுத்தார் நடிகர் திலகம். அந்த இயக்குநரும் தயாரிப்பாளரும் அன்று அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை.
அந்த இயக்குநர் தான் மறைந்த திரு ஏ.சி. திருலோக்சந்தர் அவர்கள்.
அந்தப் பாடல் காட்சி. அவன் தான் மனிதன் படத்தில் இடம் பெற்ற மனிதன் நினைப்பதுண்டு பாடல்.
பாடல் ஒளிப்பதிவு செய்யப்பட்ட நாடு சிங்கப்பூர்.
"புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். நடித்த "அன்பே வா", நான் நடித்த "எங்கிருந்தோ வந்தாள்", "தர்மம் எங்கே", "எங்க மாமா" மற்றும் "தெய்வ மகன்" போன்ற வெற்றி திரைப்படங்களை இயக்கியுள்ளார். இவற்றில் நான் நடித்த "தெய்வமகன்" ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது என்ற சிறப்பினை பெற்றது.
Read more at: http://tamil.oneindia.com/news/tamil...de-256107.html
- புரட்சித்தலைவி அம்மா
அன்பளிப்பு.- 1969.
A Tribute to our dear Director A.C.Thirulokchandar.
வரும் புத்தாண்டில் 48 வருட முடிவை எய்த போகும் அன்பளிப்பு ,வந்த நாட்களில் ஒரு தீவிர சமுதாய பிரச்சினையை பொழுது போக்குடன் கலந்து பேசிய படம்.
முதல் பாராட்டு ஏ.சி.திருலோக சந்தர். இவர் ஒரு நவீன ராஜா கால பொழுது போக்கு (வீர திருமகன்), குடும்ப செண்டிமெண்ட் (நானும் ஒரு பெண்)Romantic musical (அன்பே வா),thriller (அதே கண்கள்) ,Anti -hero பொழுதுபோக்கு (தங்கை) என்று வித விதமாக variety கொடுத்து தன்னை சிறை படுத்தி கொள்ளாத executive வகை இயக்குனர்.(திரைக் கதை நுட்பங்களும் அறிந்த படிப்பாளி)இவர் கிராமிய மணத்துடன்,கிராமிய பிரச்சினை என்று சுருக்காமல் மனித இனத்துக்கே அச்சுறுத்தலாக சவால் விட்டு கொண்டிருக்கும் இன்றைய பிரச்சினையை அன்றே சொன்னார்.ஓரளவு nativity கொண்ட நல்ல பொழுது போக்கு படம்.
பசுமை விவசாயம், விவசாய விளை நிலங்கள் பிளாட்டுகளாக,தொழிற்சாலைகளாக(சில நேரம் ஆபத்தான ரசாயன-அணு நிலையங்களாகவும்) மாறி கிராமங்களையும் ,உணவு உற்பத்தியையும் சிதைக்கும் அபாய விளைவுகளை ,முக்கிய கருவாக கொண்ட படம்.
ஒரு பூர்ஷ்வா செல்வ நிலை கொண்ட ஒருவனும், அவன் குடும்பம் சார்ந்து நிற்கும் விவசாய சுயம் கொண்ட ஏழை தொழிலாளி ஒருவனும் சகோதரர் போல மன இணைப்பு கொண்டாலும், அந்த கிராமத்தை தொழில்-சார் நகர முகமாக மாற்ற நினைக்கும் படித்த பணக்காரனுக்கும்,விவசாயம் சார்ந்த மண் பற்று கொண்ட அடிப்படை ஏழை மனிதனுக்கும் நிகழும் போராட்ட நிலையில் தொடரும் பிரச்சினைகள்.இடை-நிலை சுயநலமிகளால் தீ மூட்ட பட்டு ,தீயுடனே முடியும் இறுதி காட்சி.
நடிகர்திலகம் இந்த படத்தில் அற்புதமான உடல் கட்டு (கிருஷ்ணாவின் சொற்களில் தேக்கு மர தேகம் ),திராவிட மன்மத எழில் தோற்றம்,இளமை சுடர் விடும் துறு துறுப்பு கொண்டு அவ்வளவு ,இவ்வளவு என்று சொல்ல முடியாத அளவு handsome உச்சத்தில் இருப்பார்.(அதுவும் தம்பியாக நடிக்கும் ,வயது மிக குறைந்த அன்றைய வளரும் இன்னொரு நடிகரின் அருகில் பாதி வயதாக தெரிவார்)
பிரச்சாரமாக தெரியாமல் தன் தொழில்-சார் மண் நேசத்தை இயல்பாக உணர்த்தும் ,பாத்திரத்தை ஒட்டிய நடிப்பு.ஒரு raw என்ற நிலையில் ஜாலி நடன காட்சிகள், எல்லை மீறா காதல் குறும்புகள்,மிதமான நட்பு-பாச வெளியீடுகள்,விறு விறுப்பான சிலம்ப சண்டை,என்று இயல்பான நகைசுவையும் தெளிப்பார். ரவி சந்திரனை இரண்டாவது நாயகனாக்கியிருக்கலாமோ என்ற ஏக்கம் எனக்கு இன்றும் உண்டு.
விஸ்வநாதன் இசையமைப்பில் தேரு வந்தது , வள்ளி மலை மான்குட்டி பாடல்கள் என்னை இன்று வரை மயக்கும் பாடல்கள்.அது தவிர வேஷ பொருத்தம்,கோபாலன் எங்கே உண்டோ,எனக்கு தெரியும் என்ற நல்ல பாடல்கள்.
படத்திற்கு திருஷ்டி சரோஜா தேவி. சோர்வு தெரியும்,தளர்ச்சி கொண்ட வயதான தோற்றத்தில் சிவாஜிக்கு அம்மா போல தோற்றமளிப்பார்.படத்தில் காதல் காட்சிகள் குட்டிசுவரானது இவரால்தான்.ஒட்டாமல் போகும். அதை விட கொடுமை விஜய நிர்மலா.கதாயகியர் இருவரும் கொடூரம்.(ஆனால் இதற்கு பின் வந்த அஞ்சல் பெட்டியில் சரோஜாதேவி ப்ரெஷ் ஆக இளமையாக இருந்தார்)
எல்லோருடைய நல்ல பங்களிப்பு ,அளவான நல்ல திரைகதை-வசனங்கள், உறுத்தாத இயக்கம், பொழுதுபோக்கு, தீவிர பிரச்சினையின் நுணுக்கமான கையாளல்,நடிகர்களின் நிறைவான பங்களிப்பு இருந்தும் ,எதிர்பார்த்த வெற்றி கோட்டை இந்த படம் தொடாதது இது வரை புதிராகவே உள்ளது.
நடிகர்திலகம் , ஒரு இயக்குனர் தயாரிப்பாளருக்கு பணிவது அவசியம் என்றாலும்,இந்தளவிர்க்கா ?என்று கேட்டிருந்தார். எம்.ஆர்.சந்தானம்-ஏ.சி.திருலோக் சந்தர் எங்கே குறி தவறினர்?
அதாவது அன்பே வா புரட்சித்தலைவர் நடித்தது .. "எங்கிருந்தோ வந்தாள்", "தர்மம் எங்கே", "எங்க மாமா" மற்றும் "தெய்வ மகன்" இதெல்லாம் புரட்சித்தலைவி கூட சிவாஜி-ன்னு ஒரு துக்கடா நடிகர் சைட் கேரக்டர்ல நடித்தது .. தெய்வமகன்ல கூட இந்தம்மாவோட இமாலய நடிப்புக்குத்தான் ஆஸ்காருக்கு அனுப்புனாங்க .
ஜோ,
எனக்கும் அந்த துக்கடா செய்தியை படித்து செம கடுப்பு.கடுப்பு.one Tamil சங்கர்,மற்றும் அதன் தலைமை செய்தியாளர் , ஹிந்து பத்திரிகையின் ஸ்ரீதர் என்கிற கலை வேந்தன் இவர்களெல்லாம் சரித்திரம், செய்திகளை திரிக்க வேறு செய்கின்றனர். அந்த தொழிலையே அவமதிக்கின்றனர்.
தமிழனுக்கு தன் மண்ணின் அபார திறமை கொண்ட அசல் வித்துக்களான சிவாஜி,கமல் போன்றோரை உரிய முறையில் கவுரவிக்கும் மாண்பு இல்லை.கன்னட ராஜ் குமார்,மலையாள சத்யன்,வங்காள உத்தம் குமார், ஹிந்தியில் திலிப்,போன்ற சராசரிகள் மண்ணின் மைந்தர்களாக கொண்டாட படும் போது ,தன இனம் அழிவதை தானே பார்க்கும் cannibal போன்று தமிழன் வாழ்கிறான்.
ஒரு நிறுவனமான தி.மு.கவை விடுத்து மற்றவற்றை ஆதரித்த தமிழன் அவதி படவே போகிறான்.
Dear Mr.Siva,
Load and Load of Thanks for your valuable Postings.We are indebted to you.
தெய்வ மகன்.(1969).(An Oscar Achievement by Nadigarthilagam and A.C.Thirulokchandar.)
மத்திய அரசு தனது தென்னிந்திய படங்களை பற்றிய மாற்றாந்தாய் பார்வையை மாற்றி கொண்டு, அன்றைய பாராமுக மாநில அரசையும் மீறி, உலக பட தர கோட்பாடுகளை தளர்த்தி,அத்தனை அறிவுஜீவிகளையும் நடிப்பு என்ற ஒரே அம்சத்தால் மட்டுமே அசர வைத்து, oscar போட்டிக்கு தேர்ந்தெடுக்க பட்ட முதல் தென்னிந்திய திரை படம் தெய்வ மகன்.(1969).
பலர் ரசித்த காட்சிகளில் என்றுமே முன்னணியில் நிற்கும் மூன்று சிவாஜி தோன்றும் காட்சியை ரசித்த கோடி கணக்கானோருக்கு,தாங்கள் ரசித்தது மூன்று வெவ்வேறு உலக நடிப்பு கல்லூரி பாணியில் அந்த உலத்திலேயே ஒப்பாரும் மிக்காரும் இல்லாத நடிகன் நடித்த ஒப்பில்லாத காட்சிதான் ,என்பது புரிந்திருக்குமா என்பது சந்தேகமே. இப்போது நாம் அலச போவது அந்த படத்தை பற்றி அல்ல.
நான் ஏற்கெனவே விளக்கிய மூன்று முக்கிய நடிப்பு பள்ளி/கோட்பாடுகளான method Acting school ,Chekhov school ,Oscar wilde concept என்ற மூன்றையும்தான் மூன்று பாத்திரங்களாக்கி அந்த மேதை மூன்று பாணிகளையும் மோத விட்டார். வேறு வேறு நடிகர்கள் அந்த மூன்று பாத்திரங்களில் மோதியிருந்தால், ஒவ்வொரு நடிகனுக்கும் உள்ள திறமையளவின் ஏற்ற தாழ்வால்,நமக்கு முடிவு தெரியாமலே போயிருக்கும். ஒரே நடிகர்,சம திறமை,சம அக்கறையுடன் மூன்று பாத்திரங்களையும் வார்த்ததால் ,போட்டிக்கு ஒரு மாதிரி தீர்ப்பு வந்தது. இரண்டு சம வலுவுள்ள சங்கர்(அப்பா), கண்ணன்(மூத்த மகன்) பத்திரங்களை method acting (அப்பா),Chekhov (மூத்த மகன்) முறைகளிலும், மிக casual ஆக உருவான light ஆன விஜய்(இளைய மகன்) பாத்திரத்தை oscar Wilde பாணியில் சுதந்திர கற்பனை திறத்துடன் கையாண்டிருந்தார்.
இங்கேதான் நமக்கு ஒரு பாடமே நடத்த பட்டுள்ளது. உலக திறமையாளனான ஒரு versatile நடிகன்,தன் கற்பனை வளத்தை பயன் படுத்தி,சராசரி வாழ்க்கையில் பார்க்கவே முடியாத ஒரு பாத்திரத்தை தன் அழகுணர்ச்சியில் வடித்தால்?
எந்த கொம்பனி டம் வேண்டுமானாலும் இன்று கூட கேளுங்கள். தெய்வமகனில் உன்னை கவர்ந்த பாத்திரம் எதுவென்று? நூற்றுக்கு நூறு பேரின் விடை விஜய்தான்.இப்போது அந்த பள்ளிகளுக்கு போட்டி வைத்தால், சமமான பாத்திர வார்ப்பாக இல்லாவிடினும்,
Method Acting , Chekhov என்ற வலுவான பள்ளிகளை புறம் தள்ளி,Oscar Wilde சுதந்திர கற்பனை கோட்பாட்டில் ஜெயித்த அந்த ஒப்பற்ற கலைஞன்,மற்ற எல்லோரையும் விட எங்கு வேறு பட்டு நின்றார் என்பது உங்களுக்கு புரிந்திருக்குமே?இருந்தாலும் விளக்கத்தான் போகிறேன்,இந்த படங்களின் பாத்திரங்களையே பாடமாக்கி.
எந்த பள்ளிகளையும் முறையாக கல்லாமல், அந்தந்த பாத்திரங்களுக்கு , இன்னின்ன முறையில்தான் வடிவமைக்க வேண்டும், இந்த பாணியில்தான் நடிக்க வேண்டும் என்று அந்த மேதைக்கு எப்படி தெரிந்தது? பிறவி மேதை என்ற பிறகு இந்த ஆராய்ச்சியே தேவையில்லை.
தெய்வமகன் சங்கர், கண்ணன் பாத்திரங்களை எடுத்து கொள்வோம்.இரண்டுமே, தன் முகத்தின் அழகு கெட்டு ,விகாரமாகி, அதனால் மற்றவர்களின் கேலிக்கும், சீண்டலுக்கும் பாத்திரமாகி , inferiority complex இனால் அவதி படும் பாத்திரங்களே. தந்தை-மகன் என்ற உறவு முறை வேறு. நடிகர்திலகம் நினைத்திருந்தால், இரண்டையுமே, ஒரே பாணியில் வடிவமைத்து சில நு ட்பங்களை மட்டுமே மாற்றியிருக்கலாம். ஆனால் பாத்திரங்களை அவர் பார்த்த முறையே வேறு.
சங்கர், சிறு வயதில் அவமானங்களை சுமந்து அவதி பட்டிருந்தாலும் ,அது அவன் வாழ்வில் ஒரு பகுதியே. Trauma என்ற சொல்லோடு கடந்து போகும். அவன் வாழ்வில், அப்பா,அம்மா, அன்பான மனைவி,பிள்ளை,நண்பர்கள் மற்றும் கஷ்ட பட்டு முன்னேறி அடைந்த தொழில் செல்வாக்கு எல்லாமே, ப்ரம்மாண்டமாகி அவன் குறையை சிறிதாக்குகிறது.தன் குறையை தினம் தினம் ஞாபக படுத்தி சித்திரவதை படுத்த வாய்ப்புள்ள ஒருவனை ,பிறவியிலேயே அழிக்க சொன்னது தனக்காக கூட இருக்கலாம்.
ஆனால் கண்ணனோ, அனாதை விடுதியில், அனுதினமும் குறையை மட்டுமே பார்க்கும் சக மனிதர்களுடன் கூட்டு புழுவாக வாழ்பவன்.மொழியறிவு, சிறிது இசை, சிறிது பாபாவின் அன்பு இவை தவிர வேறு வெளிச்சமே இல்லாத வாழ்க்கை. Herzog எடுத்த ஒரு ஜெர்மன் படத்தில், இருபது வயது வரை மோசமான நிலையில், captivity யில் இருந்த ஒரு மனிதனை, திடீரென்று ஒரு நகரத்தில் விட்டு விட்டு போய் விடுவார்கள்.(உண்மை கதை).கண்ணன் நிலை கிட்ட தட்ட அப்படித்தான்.டாக்டர் வீட்டிலும் இருட்டறை சிறை வாழ்வே. அப்போது கண்ணனின் வாழ்வே அவன் முகதழும்பு, அவமானம், சார்ந்தே சிறுது இசையுடன் பயணிக்கிறது. உள்ள போராட்டம் சங்கரை விட கண்ணனுக்கு ஏராளம்.
அதனால் சங்கருக்கு, inferiority காம்ப்ளெக்ஸ் கொண்ட ஒரு normal மனிதனை சித்தரிக்கும் method Acting .ஆனால் கண்ணனுக்கோ, முழுதும் ஆதி மனிதனின் impulsive basic instincts மட்டுமே தலை தூக்கும் பதுங்குதல்,பாய்தல்,அன்புக்கு உருகுதல் (இசை) என்ற அடிப்படை உணர்வு மட்டுமே கொண்ட,தந்தையின் தாக்கம் சிறிதளவே கொண்ட ,உளவியல் தாக்கம் நிறைந்த chekhov பாணி.
விஜய்க்கு, இப்படி எந்த சிக்கலும் இல்லாததால், சாதாரணமாக ஓயவெடுத்திருக்கலாம். ஆனால் மேதைகளுக்கு ஏது ஓய்வு? P _R சிலாகித்த அற்புத ராஜின் மேம்பட்ட பிரதியாக சிறிதே effeminacy கலந்த ஒரு spoilt lover boy .ஆக realism பாணியில் இன்றி, முழுக்க synthetic ஆக,ஒரு கலவையான கற்பனை கலந்த அழகுணர்ச்சியில் வடிவமைக்க பட்டு....
இப்போது கண்ணனை மிக நுணுக்கமாக ஆராய்வோம். ஆஸ்கார் பரிசு பெற்ற Robert de Niro போன்ற நடிகர்கள்,தங்கள் நடிப்பில் இயற்கையின் ,மிருகங்களின் சாயலில் தங்கள் பாத்திரங்களை வடிவமைத்து வெற்றி கரமாக தங்களது பாத்திரங்களை கையாண்டுள்ளனர்.
"He based the movement of his character Travis Bickle in Taxi Driver (1976) on that of a crab. He thought the character was indirect and tended to shift from side to side."
நடிகர்திலகம் 1954 இலிருந்தே இதனை கையாண்டுள்ளார். நடைகளில், சிரிப்பில்,உறுமலில், mannerism என்று சொல்லப்படும் mood related gesture இல்.பின்னாட்களில் பாலா பிதாமகன் பாத்திரத்தில் இதனை புகுத்தி வெற்றி கண்டார்.தெய்வ மகன் கண்ணன் , body language சில சமயம், மானின் மருளல், அடிபட்ட வேங்கையின் சீற்றம்,எலியின் survival ஒடுக்கம் ,நாயின் உருகும் அன்பு என்று.
இதை உன்னிப்பாக கவனிக்க வேண்டுமென்றால் , திருடன் பட்டம் சுமந்து ,பெண்ணுடன் அவள் hand bag திருப்பி கொடுக்கும் காட்சி, ஜெயலலிதாவிடம் தன்னை மறைத்து ஒடுக்கும் காட்சி, மற்ற படி அவர் hyper ecstacy ,( அ ) extreme emotions like anger நிறைந்த காட்சிகள்,ஜெயலலிதா தன் காதலை வெளியிட்டதும் காட்டும் சுய வெறுப்பு காட்சிகளில் கவனித்து பாருங்கள்.(கர்ணனின் உறுமல் ,சாமுண்டியின் சீற்றம் obvious )
டாக்டர் தன்னை நிலை கண்ணாடியில் காட்டும் போது அலட்சியம் செய்யும் விகார முகம் , ஒரு பெண் தன்னை காதலிப்பதாய் கற்பனை செய்து (ஒதெல்லோ பற்றி சொன்னதும் டாக்டரின் கையை உடையும் அளவு இறுக்கும் வெறி கலந்த எதிர்பார்ப்பு),அது தன கற்பனையே என்றவுடன் சுய வெறுப்பின் உச்சமாய் கண்ணாடியில் தன் உருவத்தை தானே காறி உமிழ்ந்து, கண்ணாடியை உடைக்கும் மூர்க்க சுய வெறுப்பு.அந்த காட்சியில் அவர் காட்டும் subtle change in tempo and body position , தன் வீட்டுக்கு வந்து தாய்,தந்தை, தம்பியை கண்டு காட்டும் உருக்கம் கலந்த, euphoric ecstacy, டாக்டரிடம் அதை கொட்டி விட்டு, பசித்து சோர்ந்த நாய் குட்டி போல் மடி மேல் சோரும் கட்டம்.
கண்ணனை, விஜய் வெல்வதாவது என்று தோன்றுகிறதல்லவா?
சங்கர் பாத்திரத்தை method acting பாணியில் அந்த மேதை முடிவு செய்ததற்கு, இரண்டு காரணங்கள். முதல் காரணம் , குறையை பெரிதாக நினைக்க வேண்டாத நிலையில் நிகழ்காலத்தில் இருப்பவன்.அவன் இறந்த காலத்தை நினைக்க வேண்டிய மூன்று இடங்கள் முதல் பிள்ளை பிறந்த போது, மூத்த பிள்ளை உயிரோடு இருப்பதை அறிந்ததும் அதிர்ச்சி கலந்த குற்றவுணர்ச்சி. டாக்டரை சந்திக்கும் போது. இந்த கட்டங்கள் எல்லாமே sense memory யில் அமைய வேண்டியவை. இரண்டாவது காரணம், method acting முறையில் மற்ற நடிகர்களின் performance தூக்கலாகும். கண்ணனும் விஜய்யும் ஓங்கி தெரிய ,சங்கரின் method acting முறையில் அமைந்த பாணி யாலும், இந்த முறையில் scene stealing என்பது முடியாதென்பதும் ஒரு காரணம்.(சமீபத்தில் Lincoln படத்தில் Daniel Day Lewis இதே முறையில் method Acting செய்திருக்கிறார்.now now now என்று சொல்லும் போது சங்கர் ,ராஜுவிடம் you you சொல்லும் அதே gesture )
முதல் காட்சியில்,புற முதுகு காட்டியே , குழந்தை பிறந்த மகிழ்ச்சிக்கு expansive hand ,gesture ,ராஜு சமாதான படுத்த வரும் போது elbowing gesture ...அடடா, எத்தனை மேதைமை!!! ராஜுவுடன், தான் சிறு வயது trauma வை விவரித்து, குழந்தையை கொன்று விட சொல்லி ,குற்ற உணர்ச்சியேயின்றி உலர்ந்த மனதோடு ஆணையிடுவது போல், சிறு வயதின் உணர்ச்சியின் பால் பட்டு maturity இன்றி பேசும் விதம், ஒரு method acting ஸ்கூலில் பாடமாக வைக்க வேண்டும்.sense memory அடிப்படையில் நடிக்க விரும்புவோருக்கு பாடம்.
விஜய் உடன் அவர் கண்டிப்பு காட்ட நினைத்து இளகி சிரிப்பது, மனைவியின் வற்புறுத்தல் பேரில் இணங்குவது போல் தன கனிவை,செல்லத்தை மறைப்பது, மனைவியிடன் காட்டும் romance கலந்த நன்றியுணர்வுடன் கூடிய அன்பு இவை பார்த்து அனுபவிக்க வேண்டியவை.
டாக்டருடன் பல வருடங்களுக்கு பிறகான சந்திப்பு காட்சி ஒரு கல்வெட்டு. தயக்கம் கலந்த anxiety உடன் நுழைவது ஓர கண்ணால் சிறி து தயக்கம்,சங்கடம், curiousity கலந்த eye follow up என்று ஆரம்பித்து, formal ஆக தொடங்கி,கேட்க விரும்புவதை கேட்டு, நட்பை re -assert செய்து விட்டு,முடிவில் சிதார் ஓசை கேட்டு அலையும் மனதுடன், restless ஆக ,மகனை பார்க்க விழைந்து ,அரை மனுதுடன் ,திரும்பி செல்லும் கட்டம்.சுந்தர்ராஜன்,சிவாஜி இருவருமே உணர்ந்து, அருமையாய் நிமிர்த் தியிருப்பார்கள் . இந்த காட்சி எதை உரைக்க வேண்டுமோ, அதை உரைத்து , எதை உயிர்ப்பிக்க வேண்டுமோ அதை உயிர்ப்பித்து, எதை அடைய வேண்டுமோ அதை அடைகிறது. perfect sub text for method acting .
கண்ணன் சந்திக்க வரும் காட்சியில், உணர்வுகளை காட்டும் அளவே காட்டி, மிகை குற்றவுணர்வு இன்றி, ஆனால் கண்ணன் அநாதையாக்க பட்டு வாழ்ந்ததன் வலிகளை மட்டுமே, ,ஒரு தந்தையாக empathise செய்வார். இந்த காட்சி ,இன்றளவும் பேச படுவதற்கு காரணமே,மற்றவர்களை தூக்கி காண்பிக்கும் அளவு perform செய்த சங்கரே.
காணாமல் போன விஜய் பற்றி வரும் டெலிபோன் காட்சியில் , பதற்றம் ,எச்சரிக்கை, பதைபதைப்பு,மகனுக்கு எதுவும் நேர கூடாது என்று அவர் விடும் இயலாமை கலந்த வெற்று மிரட்டல் என்று ,ஒரு சராசரி காட்சியில் கூட நடிப்பு கொடி பறக்கும்.
ஆயிற்று. இத்தனை மேம்பட்ட கண்ணன் பாத்திரத்தை,சங்கர் பத்திரத்தை, ஒரு மேதை தன் வாழ்நாளின் one of the best என்று சொல்லும் அளவு பண்ணி விட்ட பிறகு, to lighten the proceedings என்று filler பாத்திரமான விஜய் என்ன செய்து ,இவர்களை சமாளிக்க போகிறது?
விஜய் என்னதான் செய்யவில்லை?ஒரு உலகத்திலேயே சிறந்த மகா கலைஞன், தன் சுதந்திர கற்பனைகளோடு, எந்த realism சார்ந்த விஷயங்களோடும் சமரசம் செய்து கொள்ளாமல், முழுதும் தன் திறமை மற்றும் creativity ஐ நம்பி மட்டும் ஒரு பாத்திரத்தை conceptualise செய்து execute செய்தால்? தங்கத்தை போன்று ஜொலித்தன நெல் மணிகள் என்று கவிஞன் எழுதும் சுதந்திரத்தால் தான் கலைகள் ஜீவிக்கின்றன. மொக்கை தனமாக, நெல் மணிகள் நெல் போல தானே இருக்க வேண்டும் என்போருக்கு, கலைகளை ரசிக்கும் பக்குவமோ,அறிவோ இல்லை என்று பொருள். சரோஜா தேவியின் புத்தகம் கூட realism தான். அதை படிப்பதும் சுலபம். ஆனால் ஒரு காளிதாசன் ,கம்பனை பயில பயிற்சி தேவை. அல்லது என் போல ஒரு பொழிப்புரையாளன் தேவை.அப்படித்தான் அந்த உலக கலைஞனின் பாத்திர வார்ப்புகளும்.
விஜய் முதல் shot இலேயே ஈர்த்து விடுகிறான். பிறகு ஈர்க்க பட்டவர்களை தன்னிடையே தக்க வைக்கிறான். scene stealing செய்கிறான்.Antics செய்கிறான்.. பக்கத்திலிருக்கும் ,காமெடியன் ஒருவனை அவன் விளையாட்டிலேயே ஜெயிக்கிறான்.(beating bull in its game ). வேறு படுத்தி கொள்கிறான், நடை ,உடை,பாவனைகளில்.முக்கியமாய் இது வரை காணாத புதுமை ஆக்குகிறான். அதே நேரத்தில் ஒரு பாத்திரமாகவும் establish செய்கிறான்.ஜனங்களை ஆசுவாச படுத்துகிறான்.(heavy emotion ridden proceeding இல் இருந்து) .இன்னும் நிறைய காட்சிகளில் வர மாட்டானா என்று ஏங்கவே வைத்து விடுகிறான்.
கூர்ந்து கவனித்தால் , விஜய் much more than a spoilt mother 's virgin boy and a rich brat . பணத்தின் சௌகரியங்கள் கிடைத்தும், ஒரு identity crisis and false start உள்ள vested interest கொண்ட நண்பர்களால் சூழ பட்டவன். அம்மா, அப்பாவின் அதீத அரவணைப்பில் இருந்தாலும், முழு அப்பாவியும் அல்ல.அதீத பாதுகாப்பே ,அவன் ஆபத்துகளை உணர முடியாமல் செய்து விடுகிறது.தன்னால் தன்னை காத்து கொள்ள முடியும் என்ற அசட்டு நம்பிக்கை வேறு.ஆனால் விஜய்யை புன்னகையோடு தொடர முடியும்.
நண்பன் என்று சூழ்ந்தவனின் அதீத gimmick ஐ எள்ளுகிறான். (அதான் நான் வரை வரைக்கும் கயிறு கூட மாட்டிக்காமே???), விஜய் உனக்குன்னு கேளு என்றதும், இல்லை,இல்லை உனக்குன்னு கேட்கிறேன், அப்பத்தான் குகுளுன்னு என் daddy கொடுக்கும் என்று சொல்லும் அழகு.(நாகேஷ் வேடிக்கை தான் பார்ப்பார் என்ன பண்ணி புகுரலாம் என்று. ம்ஹும் chance இல்லவே இல்லை). மழலையான ஆங்கிலம் கலந்த தமிழ் உச்சரிப்பிலிருந்து , சுருட்டி கொண்டு சோம்பேறி கோழி தூக்கம் போடுவதாகட்டும்,அம்மா வை ice வைப்பதாகட்டும் (first class Tamil Picture கூட்டிட்டு போறேன் )உன் மேலதான் daddy க்கு எவ்ளோ லவ்வு என்று லொள் விடுவது என்று. (பின்னாடி மௌன ராகம் கார்த்திக் character இதிலிருந்து inspire ஆனதே.சந்திரமௌலி போன்ற antics .அந்த character உம் ஈர்ப்பு கொண்ட synthetic கற்பனையே ).
தன் ரூமில் யாரோ இருப்பதை தெரிந்து, அப்பா அம்மா இல்லை என்று உறுதியானதும், thief என்று மிரட்டல் ,பயம் கலந்த மெல்லிய மிரட்டல், anxiety யுடன் தேய்ந்த குரலில் மூன்றாவது thief என்று விஜய் என்னை முழுவதும் ஆட்கொண்ட பிறகு, சங்கராவது,
கண்ணனாவது?
தன்னிடம் வீட்டிலிருக்கும் கண்ணனை பற்றி பேசும் நிம்மியிடம், அவள் மடியில் உறங்குவது போல் disinterest காட்டி பின் சகிப்பு தன்மை இருக்கிறது. யாரோ புல்புல்தாரா வாசிப்பான் அவன் ரூமுக்கு போறேன் என்று என் கிட்டேயே என்று cute ஆக காதலன் possessiveness குழந்தை தனமாக வெளியிடும் அழகு.(முந்திய வருடம் 80 வயது அப்பரான மனிதன், அடுத்த வருடம் retire ஆக போகும் ஒரு பிராமணன், 20 வயது lover boy ஆக எல்லோர் மனதையும் அள்ளும் அழகு ). அப்பா அமாவிடம் அவர் காதலியை அறிமுக படுத்தும் அழகே அழகு.(certainly not .அதனால்தான் மம்மியை கட்டிக்கிட்டீங்களா, இது செய்யனும்....போன்ற one liner ).
அது மட்டுமல்ல, விஜய்யின் entry தான் அந்த மூன்று சிவாஜி தோன்றும் காட்சிக்கே, epic cult status கொடுக்கிறது. தன் தம்பியே ,தன் பெற்றோர்களுக்கு போதும் என்று கண்ணனை convince செய்து விடுகிறது. அதற்கு முன்னாள் நடந்த அத்தனை உணர்ச்சி மிகு encounter செய்யாத அதிசயம். பார்வையாளர்களும் convince ஆகி விடுகிறோம்.(கண்ணன் cheque ஐ நிராகரிக்கும் நிர்தாட்சண்யம் , விஜய் அதை உரிமை நிறைந்த ஆவலுடன் எடுக்கும் அழகு-- இந்த காட்சியையே அர்த்த படுத்தி விடவில்லையா)
கடைசி காட்சியிலும், அவ்வளவு பெரிய வில்லன் கும்பலிடம், அசட்டு மிரட்டலுடன் போராட்டம். டே... head லியா அடிச்சே என்று மயங்கி சாய்வது.
எனக்கு தெரிந்து character identity establish செய்து சாதாரண one liners ஐ அதீத ரசிக்கும் காமெடி ஆக்கிய அதிசயம் இந்த படத்தில்தான் நிகழ்ந்தது. ஒரு சாதாரண வலுவில்லாத பாத்திர படைப்பு, உலகத்திலேயே அதிக வலுவுள்ள நடிகனின் கற்பனையால் மட்டும் அமர துவம் பெற்று, அவரே நடித்த வலுவுள்ள மற்ற பாத்திரங்களை இரண்டு, மூன்று என்று வரிசை படுத்தும் உலக அதிசயம் நிகழ்ந்த ஒரே காரணம்---தெய்வ மகன் விஜய்.
Tributes to Director AC Thirulokchandher,who had long helm of screen association with NT ,,delivering such unforgettable classics like Deiva Magan
https://www.youtube.com/watch?v=7_h74wf_UOk
சினிமா என்றால் அதன் அர்த்தம்
" சிவாஜி"
நடிகர்திலகத்தின் திரைப்பிரவேசத்திற்கு பிறகே தமிழ் மற்றும் இந்திய சினிமாவைப் பற்றிய தகவல்களை உலகளாவிய மக்கள் அறிய ஆர்வம் கொண்டனர்
நடிப்பிற்காக.உலக அரங்கில் விருதை வென்ற முதல் இந்திய நடிகர்(1960 ஆம் ஆண்டு)
... நடிப்பிற்காக ஆஸ்கர் விருதுக்கு அனுப்பப்பட்ட முதல் படம் தெய்வமகன் (1969)
இதுபோன்ற ஏராளமான சாதனைகளை கொண்டவரானதால் " சினிமாவின் குறியீடு ஆகவே திகழ்கிறார் நம் நடிகர்திலகம்
நடிகர்திலகத்தின் " பாசமலர்" அதனை சினிமா குறியீடாக சித்தரிக்கும் புத்தகம்,
அதன் ஆசிரியர் முனைவர் பழனிச்சாமி அவர்களுக்கு நன்றி!
http://oi65.tinypic.com/2uzdtn7.jpg
(சேகர் பரசுராம் அவர்களின் முகநூலில் இருந்து)
வீரபாண்டிய கட்டபொம்மன், படத்தை முதன்முதலாக எனது 7வயதில் பள்ளியில் இருந்து ஆசிரியர்கள் துணையோடு ஊரிலிருந்து 5 km தொலைவில் இருந்த டூரிங் கொட்டகையில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது வருடம் 1983
நானும் என்னுடைய நண்பர்களும்
மெய் சிலிர்த்துபோனோம்
மெய்ச்லிர்ப்பு என்பதன் தன்மை என்னவென்று தெரிந்தது, படத்தில் நடிகர்திலகம் தோன்றும் போது கைதட்டல் அடங்காது, இதனால் எங்களால் வசனங்களை. உள் வாஙக முடியாமல் ...போனது , ஆனால் படம் பார்ப்பவர்கள் ஒவ்வொரு காட்சி க்கும் கூரிய விளக்கம், இதுவே ராஜா, அவர் இப்படித் தான் நடப்பார், கண்ணால் மட்டுமே எதிரியை மிரட்டுவார்,போர்வாள் எடுக்கும் விதம் அதை மீண்டும் சொருகும் விதம், கடவுளை வணங்கும் முறை, குழந்தை யோடு கொஞ்சுவதாகட்டும்,இப்படியே எல்லா காட்ஷிகலுக்கும் எத்தனையோ விளக்கம், ஒரு மாதம் வரை எங்களால் அதன் தாக்கத்திலிருந்து விடுபடாமல் கதைவசன புத்தகம் வாங்கி நடிகர்திலகத்தின் அத்தனை வசனங்களை யும் மனப்பாடம் செய்து வகுப்பிலே ஒரு மேடை நாடகம் நடத்திவிடுவோம், ஆசிரியர்கள் அதனை பாராட்டினார்கள், படித்த காலத்தில் பள்ளியின் மூலமாக திரைப்படம் காண்பித்தது என்றால் நடிகர்திலகத்தின் படங்கள் மட்டுமே
கப்பலோட்டிய தமிழன், கர்னன்,ராஜ ராஜ சோழன், ஹரிச்சந்திரா, மகாகவி காளிதாஸ், திருவிளையாடல், திருவருட்செல்வர், என பட்டியல் நீண்டுகொண்டே போகும்
பின்னாளில் படத்தினை கணக்கில் இல்லாத அளவிற்கு பார்த்தும் நடிகர்த்திலகத்தின் நடிப்பு ஏனோ தெவிட்டாத தேநமுதாகவே இருக்கிறது
http://oi63.tinypic.com/2uorx4j.jpg
(சேகர் பரசுராம் அவர்களின் முகநூலில் இருந்து)
பைலட் பிரேம்நாத் பத்திரிகைகளின் தொகுப்பு தொடர்கிறது.....
http://oi68.tinypic.com/2uqbst2.jpg