http://youtu.be/85KXz3s1w4c
அது சரி சிக்கா.. அது ஆனந்தனா ? உதயகுமாரா ?
Printable View
http://youtu.be/85KXz3s1w4c
அது சரி சிக்கா.. அது ஆனந்தனா ? உதயகுமாரா ?
//ம்ம்... ம்ம்... அந்தப் பெண்மணி எந்த கிளாஸ் ? ஆறாவதோ ஏழாவதோவா ?
வீ..கா..வுக்கு இந்த விஷயம் தெரியுமா ?// வீ.காவிடம் இதுவரை சொன்னதில்லை..(சொல்லச்சந்தர்ப்பம் நேரிடவில்லை..) அந்தப் பெண்மணி பி.ஏ லேடி டோக்கில்ஃபர்ஸ்ட் இயர் படித்திருந்தார் என நினைக்கிறேன்..:)
//சின்ன கண்ணனிடம் ஒரு சின்ன கேள்வி (கேட்கலாமா ?)
பதிவு ஆரம்பிக்கும் போது 'ம்ம்' அப்படின்னா என்ன அர்த்தம்
எட்டாப்பு படிக்கும் போதே 'கல்யாண ஆசை வந்த காரணத்தை சொல்லவா '// க்ருஷ்ணா ஜி.ம்ம்னா ஆரம்பிக்கப் போறேன்ம்ம் நு அர்த்தம்.. அப்புறம் க.ஆ.கா எல்லாம் இல்லை.. ஒன்றும் தெரியாத கண்ணாவாக்கும் நான்.. :)
மக்கள்ஸ்.. என் அம்மாவிடமும் சொல்லிக் கொண்டு தான் போனோம்.. ! :) (டிவிஎஸ் ஸ்டாப் ல ருந்து பெரியார் பஸ்ஸ்டாண்ட் அங்கிட்டு இருந்து 4 சென் ட்ரல் (பிற்காலத்தில் மையப்பேருந்து நிலையம்) டு தெப்பக்குளம் பஸ் ஏறிப் போய் விட்டு..இன் டர்வெல்ல கோன் ஐஸ் சாப்பிட்டு பின் சமர்த்தாய் பஸ் ஏறி வீட்டிற்கு வந்தோமாக்கும்..
டி.ஆர். எம்மின் சோலோ..அந்தக் குரல் அதைவிட அந்த லிரிக்ஸ் மனதை அள்ளுமாக்கும்.. படம் மாலையிட்ட மங்கை..படம் பார்த்ததில்லை..பாடல் பார்த்திருக்கிறேன் வெகுகாலம் முன்..யாராக்கும் ஆடுவது..
*
சில்லென்று பூத்த சிறு நெருஞ்சி காட்டினிலே
நில்லென்று கூறி நிறுத்தி வழி போனாளே
நின்றாது போல் நின்றாள் நெடுந்தூரம் பறந்தாள்
நிற்குமோ ஆவி நிலைக்குமோ நெஞ்சம்
மணம் பெறுமோ வாழ்வே….ஆ…ஆ..ஆ..ஆ..ஆ..
செந்தமிழ் தேன் மொழியாள்
நிலாவென சிரிக்கும் மலர்க் கொடியாள் (
பைங்கனி இதழில் பழரசம் தருவாள்
பருகிட தலை குனிவாள்
காற்றினில் பிறந்தவளோ புதிதாய்
கற்பனை வடித்தவளோ
சேற்றினில் மலர்ந்த செந்தாமரையோ
செவ்வந்திப் பூச்சரமோ
அவள் செந்தமிழ் தேன் மொழியாள்
கண்களில் நீலம் விளைத்தவளோ
அதைக் கடலினில் கொண்டு கரைத்தவளோ
பெண்ணுக்கு பெண்ணே பேராசை கொள்ளும்
பேரழகெல்லாம் படைத்தவளோ…
*
ப்ளூ ஐஸ் இருந்தாக்க கண்களில் நீலம் விளைத்தவளோ..அப்புறம் அதைப்பயிர் பண்ணி கடல்ல கரைச்சுட்டாளாம் அதான் ஸீ இஸ் ப்ளூவாம்..என்னா இமாஜினேஷன்..
அந்தப் பழரசம் பருக இவன் தானே தலைகுனியணும்.. கன்ஃப்யூஷன் :)
இந்த கண்கள் ப்ளூ, ப்ரெள்னா இருந்தா தனிக் கவர்ச்சி தானே..(காண்டாக்ட்லாம் இல்லாம)
//பெண்ணுக்கு பெண்ணே பேராசை கொள்ளும்
பேரழகெல்லாம் படைத்தவளோ…// ம்ம் பிற்காலத்தில இத வெச்சுத்தான் உன்னழகைக் கண்டுகொண்டால்
பெண்களுக்கே ஆசை வரும்னு பிபிஎஸ் முத்துராமன் மூலமாப் பாடினாரோ..
காதலர்கள் ஏக்கத்தில் தங்களை மறந்து பாடும் பாடல் .
எத்தனை உவமைகள் - வார்த்தை விளையாட்டுக்கள் - அமுத கானம் .
தென்றலிலாடும் கூந்தலில்ககண்டேன்
மழைக்கொண்ட மேகம் என் தேவதை அமுதம் சிந்திடும் நேரம்
இனி என்ன நாணம்
இனி என்ன நாணம், இனி என்ன நாணம்
மன்னவன் உங்கள் பொன்னுடலன்றோ இந்திரலோகம்
அந்தி மாலையில் அந்த மாறனின் கணையில்
ஏன் இந்த வேகம் ஏன் இந்த வேகம்
பாவை உடல் பார்க்கடலில்
பள்ளி கொள்ள நான் வரவோ
பனி சிந்தும் கனி கொஞ்சும் பூவிதழில் தேன் பெறவோ மாலை வரும் நேரமெல்லாம்
மன்னன் வர காத்திருந்தேன்
வழியெங்கும் விழி வைத்து
பார்த்த விழி பூத்திருந்தேன்
ஆலிலையின் ஓரத்திலே
மேகலையின் நாதத்திலே
இரவென்றும் பகலென்றும்
காதல் மனம் பார்ப்பதுண்டோ
கள்ள விழி மோகத்திலே
துள்ளி வந்த வேகத்திலே
இதழ் சிந்தும் கவி வண்ணம்
காலை வரை கேட்பதுண்டோ
காலை வரை கேட்பதுண்டோ
கற்பகத்து சோலையிலே
பூத்த மலர் நீ அல்லவோ
விழிஎன்னும் கருவண்டு
பாட வந்த பாட்டென்னவோ
காவியத்து நாயகனின் கட்டழகு மார்பினிலே
சுகம் என்ன சுகமென்று
மோஹன பண் பாடியதோ
மோஹன பண் பாடியதோ
என்னை மறந்ததேன் தென்றலே
இன்று நீ என்னிலை சொல்லிவா
காற்றோடு வளரும் சொந்தம்
காற்றோடு போகும் மன்னவா
கண்ணோடு மலரும் அன்பு
கனியாக மாறாதோ
கலையாத காதல் நிலையானதென்று
அறியாமல் சொல்லிவைத்தாயோ -
உன்னைஅறியாத பெண்ணின் மனவாசல் கண்டு
திறவாமல் எங்கே சென்றாயோ
நிழலான தோற்றம் நிஜமானதென்று
நீயாளும் நாளும் வருமோ - இந்த
நிலமாளும் மன்னன் நீயானபோதும்
நானாளும் சொந்தம் இல்லையோ
கண்டாலும் போதும் கண்கள்
என் ஆவல் தீரும் மன்னவா
சொன்னாலும் போதும் நெஞ்சம்
கனியாக மாறாதோ(என்னை)
கொடுக்க கொடுக்க இன்பம் பிறக்குமே
என்னை தடுத்து தடுத்து வெட்கம் மறைக்குமே
நினைக்க நினைக்க நெஞ்சம் இனிக்குமே
உன்னை நிறுத்தி நிறுத்தி பெண்மை சிரிக்குமே
கொடுக்க கொடுக்க இன்பம் பிறக்குமே
என்னை தடுத்து தடுத்து வெட்கம் மறைக்குமே
நினைக்க நினைக்க நெஞ்சம் இனிக்குமே
உன்னை நிறுத்தி நிறுத்தி பெண்மை சிரிக்குமே
நினைத்தேன் உடன் பார்த்தேன்
மனம் மகிழ்ந்தேன் உடல் தளர்ந்தேன்
நினைத்தேன் உடன் பார்த்தேன்
மனம் மகிழ்ந்தேன் உடல் தளர்ந்தேன்
களித்தேன் சுகம் குளித்தேன்
கதை படித்தேன்என்னை மறந்தேன்..
என்னை மறந்தேன்..என்னை மறந்தேன்
பாலும் புது தேனும் பனி போல்
என் மேலே படர்ந்தோட இடம் தேட
அமுதாகவே பாய்ந்தாய்
என்னைக் கொடுத்தேன்..
என்னைக் கொடுத்தேன்..என்னைக் கொடுத்தேன்
கொடுக்க கொடுக்க இன்பம் பிறக்குமே
என்னை தடுத்து தடுத்து வெட்கம் மறைக்குமே
நினைக்க நினைக்க நெஞ்சம் இனிக்குமே
உன்னை நிறுத்தி நிறுத்தி பெண்மை சிரிக்குமே
கண்ணா,
LDC முதல் வருஷம்னா 17-18. நீங்க 9th-ன்னா 13-14. அதுவும் போனது கணேஷா தியேட்டர்னு சொல்லும்போது எங்கோ இடிக்குதே! ஒரு வேளை கூட வந்தவருக்கு ஹெல்ப் பண்ண (அதாவது அவர் யாரையேனும் சந்திக்க) நீங்கள் துணைக்கு போனீர்களா என்று கேட்டேன்.
வாசு என்னை பிய்க்க போகிறார். பாட்டைப் பத்தி பேச வரல்லை. சைட்டை பத்தி பேச வந்துட்டார்-னு ஓகே எஸ்கேப்!
அன்புடன்
ஒரு தூக்கம் போட்டுட்டு வரதுக்குள்ள எத்தனை பக்கங்கள் ...
வாசு ஜி, குலமகள் ராதை , மானோடும் பாதையில பாட்டெல்லாம் போட்டு பட்டய கிளப்பிட்டீங்க
கூடவே கிருஷ்ணா ஜி, மது அண்ண இன்னிக்கு புல் ஃபார்ம்ல இருந்தார் போல (என்னவோ என்னவோ ????)
சி.கா கேட்கவே வேண்டாம் ஆயிரம் கேள்விகள் ஆயிரம் பதில்கள்னு தூள் கிளப்பிட்டார்
ராகவ் ஜி கடைசி வரைக்கு ஓடி ஓடி வந்து பஸ் கிளம்பியவுடன் படிக்கெட்டில் ஏறுபவர்கள்போல அடுத்த பாகம் தொடங்குவதற்குள் பாட்டுக்களை பதிவிட்ட விதம் அபாரம்...
அதே போல் எஸ்.வியின் படங்கள் என நான் வருவதற்குள் எத்தனை களேபரம்... பிரம்மாண்டம்.. ராட்சசி பாடி நம்மை அசத்தினால் இந்த ராட்சசர்கள் பதிவில் அசத்துகிறார்கள் ..என்னே நான் செய்த பாக்கியம்