Originally Posted by
vasudevan31355
கோபால் சாருக்கு ஒரு அன்பு வேண்டுகோள். நீங்கள் உங்கள் கருத்தை தெரிவிக்க உங்களுக்கு முழு சுதந்திரம் உண்டு. உங்கள் எதிர்ப்பை பிரதிபலிக்கவும் உரிமை உண்டு.
ஆனால் நீங்கள் உங்கள் கருத்தை தெரிவிக்கும் முறைதான் முரண்படுகிறது. வாந்தி, பூச்சாண்டி போன்ற வார்த்தைகள் நாமே மால்லாந்து படுத்து நம் மேல் எச்சில் துப்பிக் கொள்வது போல. என்றும் இளமையாக இருக்க நடிகர் திலகம் மார்கண்டேயன் அல்லவே! நீங்களே உலகில் நான் வணங்கும் ஒரே நடிப்புக் கடவுள் சிவாஜிதான் என்று உள்ளார்ந்த, ஆத்மார்த்தமான, உலகம் போற்றும் நடிப்பிலக்கணத்தை படைத்து விட்டு நீங்களே நடிகர் திலகத்தை ஒரு பொதுத் திரியில் அதுவும் பார்வையாளர்கள் அதிகம் உள்ள திரியில் பூச்சாண்டி, வாந்தி வருகிறது என்று எழுதி புண்படுத்தலாமா? மற்றவர்கள் நம்மாளை எள்ளி நகையாட நீங்கள் காரணாமாய் இருக்கலாமா? நீங்களே வழிவகுத்துக் கொடுக்கலாமா? உங்கள் கருத்துக்களை உங்கள் எதிர்ப்புகளை இங்கே நாசூக்காகவும் நயமாகவும் பதியலாமே!
நமது மெயின் திரியில் நடிகர் திலகத்தின் எந்தப் படங்களையும் அலசலாம். அதில் கோபால் அவருடைய கருத்துக்களைக் கூறலாம், விமர்சனங்கள் அளிக்கலாம். ஆனால் அது தலைவரோ அல்லது பதிவாளர்களையோ hurt பண்ணும்படி நிச்சயம் இருக்கக் கூடாது. கவனிக்கவும். நிச்சயம் இருக்கக் கூடாது. அல்லது பிடிக்காமல் போனால் பேசாமல் இருந்து விடலாம்
(கோபால் சார், இது என்னுடைய வேண்டுகோள்).