http://i1087.photobucket.com/albums/..._000617600.jpg
http://i1087.photobucket.com/albums/...01408680_2.jpg
http://i1087.photobucket.com/albums/..._000260560.jpg
http://i1087.photobucket.com/albums/..._001498200.jpg
அன்புடன்,
நெய்வேலி வாசுதேவன்.
Printable View
டியர் ராகவேந்திரன் சார்,
பாலும் பழமும் ஸ்டில்ஸ் அசத்தல். ஸ்டைல் டாக்டர் சூப்பர். அனைத்துபாடல்களையும் ஒலி-ஒளி- வடிவங்களில் தந்து கலக்கி விட்டீர்கள். அதக் காவியத்தின் மீது தங்களுக்கு எத்துணை ஈடுபாடு இருக்கிறது என்பது தங்களின் பங்களிப்புகளில் இருந்தே தெளிவாகப் புரிந்து கொள்ள முடிகிறது. அனைத்துக்கும் ஒரே வார்த்தை' நன்றிகள்'.
அன்பு பம்மலார் சார்,
நடிகர்திலகத்தை இளையதிலகம் கண்ட பேட்டியை அருமையாக வெளியிட்டு உள்ளீர்கள். கலக்கல். பாலும் பழமும் வெளியீட்டு விளம்பரங்கள் நிஜமாகவே நெஞ்சை அள்ளுகின்றன. நன்றிகள் சார்.
அன்புடன்,
வாசுதேவன்.
டியர் பம்மலார்,
'பாலும் பழமும்' திரைக்காவியத்தின் விளம்பர அணிவகுப்பு படு சூப்பர். 50 ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த ஒரு படத்துக்கு, ஏதோ நேற்று வந்தது போல இவ்வளவு விளம்பரங்கள் காணக்கிடைப்பது நிச்சயம் அதிசயமே. எடுத்து, பாதுகாத்து, வைத்திருந்து, இப்போது அவற்றை மாலையாகத் தொகுத்து இங்கே வழங்கியமைக்கு மிக்க நன்றி.
அதிலும் 100-வது நாள் விளம்பரத்துக்குக்கீழாக, இத்திரைக்காவியம் 100 நாட்களைக்கடந்து ஓடிய திரையரங்குகளின் பட்டியலை நீங்கள் அளித்திருப்பது, உண்மையை பலருக்குப்புரியவைக்கும் வண்ணம் அமைந்துள்ளது.
டியர் ராகவேந்தர்,
நான் கேட்டதும், 'தென்றல் வரும்' பாடலை அளித்தமைக்கு மிக்க நன்றி.
நடிகர்திலகத்தின் பிறந்தநாள் விழா நிகழ்ச்சிகளின் அழைப்பிதழை இங்கே பதித்தமைக்கும் மிக்க நன்றி. 'சிவாஜி விருது' பெற இருக்கும் கலை விற்பன்னர்களுக்கு வாழ்த்துக்கள்.
டியர் வாசுதேவன்,
தங்கள் பங்கிற்கு நீங்களும் 'தென்றல் வரும்' படலின் இணைப்பைத் தந்து அசத்தி விட்டீர்கள். நன்றி.
டாக்டர் ரவியின் பல்வேறு முகபாவங்களைக் காட்டும் நிழற்பட வரிசை அருமையோ அருமை. படத்தில் வரும் மிக முக்கிய காட்சிகளை அந்த ஸ்டில்கள் நினைவுக்குக் கொண்டு வருகின்றன. குறிப்பாக, கண்களில் கட்டோடு தன் மனைவி சாந்தியையே, நர்ஸ் நீலாவாக நினைத்துக்கொண்டு சிரித்துக்கொண்டே பாடும் 'நான் பேச நினைப்பதெல்லாம்' சோகப்பாடல் காட்சி மனதை அள்ளுகிறது. சோகப்பாடலைக்கூட சிரித்துக்கொண்டே பாடியவர் இவர் ஒருவராகத்தான் இருக்க வேண்டும்.
இந்த நேரத்தில், இப்படத்தில் இடம்பெற்ற 'என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்' பாடல் உருவான கதையை நான் எழுதியதை இங்கே தருவது பொருத்தம் என நினைக்கிறேன். இதோ இந்த இணைப்பில் படிக்கலாம்.....
http://www.msvtimes.com/forum/viewto...t=159&start=15
சகோதரி சாரதா,
தங்களின் பாராட்டுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றி !
தங்களின் எழுத்தோவியமான 'என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்' பாடல் உருவான கட்டுரை உண்மையிலேயே அசத்தல். அனைவரும் அறிய வேண்டிய பல அரிய தகவல்களை உள்ளடக்கிய ஒரு கட்டுரைப்பதிவைப் படைத்த தங்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்!
டியர் வாசுதேவன் சார்,
பாராட்டுக்கு நன்றி !
'டாக்டர் ரவி' ஆல்பம் அற்புதம் !
அன்புடன்,
பம்மலார்.
செல்லுலாய்ட் திலகத்தின் செப்டம்பர் சித்திரங்கள்
"பாலும் பழமும்" : பொன்விழா நிறைவு
[9.9.1961 - 9.9.2011] : 51வது ஆரம்பதினம்
பொன்னுக்கு மேலான பொக்கிஷங்கள் [தொடர்ச்சி...]
"பாலும் பழமும்" வெளியீட்டு தினமான செப்டம்பர் 9, 1961 சனிக்கிழமையன்று, இக்காவியத்தின் இயக்குனரான பீம்சிங் அவர்கள், சென்னை சாந்தி திரையரங்கிற்கு வருகை புரிந்து தான் உருவாக்கிய உன்னத படைப்பை ரசிகர்கள், பொதுமக்கள், பத்திரிகையாளர்கள், பிரமுகர்கள் புடைசூழ அனைவருடனும் இணைந்து கண்டு களித்தார். இந்நிகழ்வு குறித்த ஒரு விரிவான மிகமிக அரியதொரு கட்டுரைத் தொகுப்பு:
வரலாற்று ஆவணம் : பேசும் படம் : நவம்பர் 1961
முதல் பக்கம்
http://i1094.photobucket.com/albums/...EDC4542a-1.jpg
இரண்டாவது பக்கம்
http://i1094.photobucket.com/albums/...EDC4543a-1.jpg
மூன்றாவது பக்கம்
http://i1094.photobucket.com/albums/...EDC4544a-1.jpg
நான்காம் பக்கம்
http://i1094.photobucket.com/albums/...EDC4545a-1.jpg
தொடரும்.....
அன்புடன்,
பம்மலார்.
செல்லுலாய்ட் திலகத்தின் செப்டம்பர் சித்திரங்கள்
"பாலும் பழமும்" : பொன்விழா நிறைவு
[9.9.1961 - 9.9.2011] : 51வது ஆரம்பதினம்
பொன்னுக்கு மேலான பொக்கிஷங்கள் [தொடர்ச்சி...]
"பாலும் பழமும்" வெளியீட்டு தினமான செப்டம்பர் 9, 1961 சனிக்கிழமையன்று, இக்காவியத்தின் இயக்குனரான பீம்சிங் அவர்கள், சென்னை சாந்தி திரையரங்கிற்கு வருகை புரிந்து தான் உருவாக்கிய உன்னத படைப்பை ரசிகர்கள், பொதுமக்கள், பத்திரிகையாளர்கள், பிரமுகர்கள் புடைசூழ அனைவருடனும் இணைந்து கண்டு களித்தார். இந்நிகழ்வு குறித்த ஒரு விரிவான மிகமிக அரியதொரு கட்டுரைத் தொகுப்பின் தொடர்ச்சி:
வரலாற்று ஆவணம் : பேசும் படம் : நவம்பர் 1961
ஐந்தாம் பக்கம்
http://i1094.photobucket.com/albums/...EDC4546a-1.jpg
ஆறாவது பக்கம்
http://i1094.photobucket.com/albums/...EDC4547a-1.jpg
ஏழாவது பக்கம்
http://i1094.photobucket.com/albums/...EDC4548a-1.jpg
எட்டாம் பக்கம்
http://i1094.photobucket.com/albums/...EDC4549a-1.jpg
[இக்கட்டுரைத் தொகுப்பு மொத்தம் எட்டு பக்கங்களைக் கொண்டது.]
அன்புடன்,
பம்மலார்.
Thirumbipaar movie for viewing pleasure
http://www.youtube.com/watch?v=VvxymStKeSY
பம்மலார் தந்துள்ள பேசும் படம் கட்டுரையில் பீம்சிங் அவர்கள் ஒரு குறிப்பிட்ட காட்சியினைப் பற்றிக் கூறி அதை திரை அரங்கிலேயே எடிட் செய்திருக்கும் செய்தியைப் படித்திருப்பீர்கள். அந்தக் காட்சியில் ஸ்விட்சர்லாந்திலிருந்து ஒரு பார்சல் வந்துள்ளதாக ஒரு சக டாக்டர் கூறுவார். அந்த சக டாக்டராக நடித்த நடிகர் பெயர் நாகராஜன் என்பதாகும். அவர் தி.மு.க. மேடைப் பேச்சாளர். அவரைக் கட்சிக் காரர்கள் திப்பு சுல்தான் என்று அடைமொழியிட்டு அழைப்பார்கள். 1972ல் ஏற்பட்ட மாற்றத்திற்கு சில ஆண்டுகட்குப் பின் அவரிடம் பேசிக் கொண்டிருந்த போது, 67 கால கட்டங்களில் தான் நடிகர் திலகத்தை மேடையில் எதிர்த்துப் பேச வேண்டிய சூழ்நிலையைப் பற்றி மிகவும் மனம் வருந்திப் பேசினார்.
இது மறக்க முடியாத நிகழ்வாகும்.
டாக்டர் ரவியை அவரது பல்வேறு முகபாவங்களை உணர்வுகளை இங்கே பதிந்ததற்கு வாசுதேவன் சாருக்கு நன்றி. ராகவேந்தர் சாருக்கு நன்றி. நான் பொதுவாக சுவாமிக்கு நன்றி கூறுவதில்லை. காரணம் அதையேதான் தினசரி செய்து கொண்டிருக்க வேண்டும். அது மட்டுமல்ல சுவாமியுடன் அன்றாடம் உரையாடுபவன் என்ற முறையில் what Swami is capable of என்பது எனக்கு நன்றாகவே தெரியும். ஆனால் சில நேரங்களில் எனது கணிப்பையும் மீறி சுவாமி சில ஆச்சரியங்களை அளிப்பார். அப்படிப்பட்ட ஒன்றுதான் பேசும்படம் பீம்சிங் பேட்டி அழகான நேர்முக வர்ணனையோடு இன்றைக்கு மிக சரியாக 50 வருடங்களுக்கு முன் இதே நாளில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை காணும் போது மனதில் ஒரு nostalgic feeling. நன்றி சுவாமி!
பாலும் பழமும் படத்திற்கு மனதில் ஒரு தனி இடம் உண்டு. அந்த வருடம் வெளியான மூன்று பா வரிசை படங்களில் பாலும் பழமும் படமும் சரி, நடிகர் திலகத்தின் பாத்திரப் படைப்பும் சரி class என்று சொல்வோமே அந்த வகையில் அமைந்திருக்கும். அவரது நடிப்பை பற்றி சொல்ல ஆரம்பித்தால் முதலில் மருத்துவமனையில் நடந்து வரும் ஸ்டைல், நர்ஸ் சாந்தியின் அறிவு, அவரது தொழில் பக்தியை கவனிப்பது, அவர் மேல் உண்டாகும் பரிவு, ஒரு நாள் கிளம்புவதற்கு நேரமாகிவிட, shall I drop you, if you dont mind? என்று கேள்வி கேட்கும் நேர்த்தி, நான் பேச நினைப்பதெல்லாம் பாடலில் வெறும் ஹம்மிங்கிலேயே அசத்துவது, அதிலும் குறிப்பாக இரண்டாவது சரணத்தில் ஒன்றோடு ஒன்றாக உயிர் சேர்ந்த பின்னே! உயிர் சேர்ந்த பின்னே என்ற வரியை சரோஜாதேவி பாடியவுடன் ஊஹுகும் என்ற ஹம்மிங்க்கு வாயசைத்தவாறே அந்த இடது புருவத்தை மட்டும் ஏற்றி இறக்குவாரே, ஆஹா!, அது மட்டுமா?
அது போல மாலையில் சீக்கிரம் வருகிறேன் என்று மனைவியிடம் சொல்லும்போது மனைவியை டா போட்டு பேசுவார். இன்றைக்கு பெண்களை பார்த்து ஆண்கள் மிகவும் common ஆக உபயோகிக்கும் இந்த வார்த்தையை 50 வருடங்களுக்கு முன்பு ஆரம்பித்து வைத்தவர் நடிகர் திலகம். சோகத்தின் கனம் முகத்தில் தெரிய மனைவியை சக்கர நாற்காலியில் வைத்து தள்ளிக் கொண்டே பாலும் பழமும் கைகளில் ஏந்தி என்று பாடும் அந்த பாவம் [13 வருடங்களுக்கு பின்னால் அதே போல் ஒரு காட்சியமைப்பு என்றாலும் கூட சுமைதாங்கி சாய்ந்தால் பாடலில் சோகத்திலும் ஒரு கம்பீரத்தை காட்டி அந்த மாறுபாட்டை வெளிப்படுத்துவார். என்ன இருந்தாலும் அது எஸ்.பி. சௌத்ரி அல்லவா!]. படத்தின் உயிர்நாடியான பாடலைப் பற்றி சொல்லவே வேண்டாம். அந்த மலை பாதையில் அந்த நடை! அந்த முகம்!
கண் பாதிக்கப்பட்டு முடிந்து கட்டோடு படுத்திருக்க அப்போது நர்சாக சேரும் சரோஜாதேவியின் குரல் கேட்டு சாந்தி என்று எழுந்திருப்பாரே! எப்படி அதை வர்ணிப்பது? அந்த நேரத்தில் விரித்து வைக்கப்பட்டிருக்கும் அவரது இரண்டு கால்களுக்கு நடுவில் காமிரா கோணம் வைக்கப்பட்டு படமாக்கப்பட்டிருக்கும் அழகை என்னவென்று சொல்வது?என்னை யாரென்று பாடல் மட்டும் குறைந்ததா என்ன? சரோஜாதேவி கையைப் பிடித்துக் கொள்ள வேகமாக நடக்கும் அந்த நடை! இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.
படத்தில் போனால் போகட்டும் போடா பாடலின் அதே உயரத்திற்கு வரும் ஒரு பாடல் இருக்கிறது. காதல் சிறகை காற்றினில் விரித்து பாடல். மன்னர்கள், கவியரசர், இசையரசி மூவர் கூட்டணி அந்த பாடலை எங்கேயோ கொண்டு போய் விடுவார்கள்.
முதல் நாள் காணும் திருமணப் பெண் போல்
முகத்தை மறைத்தல் வேண்டுமா
முறையுடன் மணந்த கணவன் முன்னால்
பரம்பரை நாணம் போகுமா
என்ற வரிகளும் சரி அதற்கு பிறகு வரும்
பிரிந்தவர் மீண்டும் சேர்ந்திடும் போது
அழுதால் கொஞ்சம் நிம்மதி
பேச மறந்து சிலையாய் நின்றால்
பேச மறந்து சிலையாய் நின்றால்
அதுதான் தெய்வத்தின் சன்னதி
அதுதான் காதல் சன்னதி
என்று சுசிலா பாடும் போது அதிலும் குறிப்பாக காதல் சன்னதி என்ற வார்த்தையை அவர் உச்சரிக்கும் விதம் இருக்கிறதே காதலிக்காதவர்களை கூட காதலின் பால் ஈர்த்துவிடும்! அந்த வரி முடிந்தவுடன் ஒரு ஹம்மிங் வரும் அதை சுசிலா பாடியிருப்பதை கேட்கும் போது இதை விட இனிமை வேறு உண்டா என்று தோன்றும். இந்த இடத்தை குறிப்பிட்டு வைரமுத்து சொல்வார். அந்த ஹம்மிங்கை கேட்கும் போதெல்லாம் என் உயிர் கூட்டை விட்டு பறந்து போய் விட்டு ஹம்மிங் முடிந்தவுடன் மீண்டும் உடலில் வந்து உட்கார்ந்து கொள்ளும் என்பார்.
தினசரி அருந்தினாலும் உட்கொண்டாலும் எப்படி பாலும் பழமும் நமக்கு அலுப்பதில்லையோ அது போலதான் பாலும் பழமும் படத்தை எத்தனை முறை பார்த்தாலும் அதை பற்றி பேசினாலும் நமக்கு அலுப்பதில்லை.
அன்புடன்
மதிப்பிற்குரிய சாரதா மேடம்,
தங்கள் அன்பு உள்ளத்திற்கு பணிவான நன்றிகள்.'என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்' பாடல் உருவான கதையை மறுபடியும் அனுபவித்து படித்து மகிழ்ந்தேன். டி.எம்.எஸ்.எந்த மன,உடல் நிலைகளில் பாடினாலும் நம்மவர் அதை அப்படியே 100% பிரதிபலித்து விடுவார் என்ற பீம்சிங்கின் அசாத்தியமான நம்பிக்கை தான் பல்வேறு அற்புதமான பாடல்களை நமக்களித்தது.
அதிலும் டி.எம்.எஸ்.பாவமன்னிப்பில் பாடும் அந்த 'சிலர் சிரிப்பார் சிலர் அழுவார்' பாடலில் 'காலம் பல கடந்து அன்னை முகம் கண்டேனே' என்று ஆரம்பப் பல்லவியை அவர் அற்புதமாகத் துவங்குவதும் ,தொடரும் சீரான சரணங்களில் அவர் புரியும் ஏற்ற இறக்க குரல் பாவங்களும், அதை முழுவதுமாக உள்வாங்கி உன்னத உணர்ச்சிகளின் பிரதிபலிப்பால் நம்மவர் மற்றவர் கண்களைக் குளமாக்குவதும், பாடலின் பின்னணி இசையில் மனதைப் பிசைந்தெடுக்கும் இனம் புரியாத சோகம் குடி கொண்டு நம்மை பிழிந்து எடுப்பதையும் எப்படி மறக்க முடியும்? பீம்சிங் பீம்சிங் தான்....
நன்றியுடன்,
வாசுதேவன்.
டியர் ராகவேந்திரன் சார்,
01.10.2011 அன்று நடைபெற உள்ள நடிகர் திலகத்தின் பிறந்த நாள் விழாவின் அழைப்பிதழை அருமையாகப் பதிவிட்டு அசத்தி விடீர்கள். நன்றி.
டியர் பம்மலார் சார்,
இயக்குனர் பீம்சிங்கின் நேரடி 'திக்' தியேட்டர் விஜயம் விவரங்களையும்,ஸ்டில்-களையும் அளித்து அமர்க்களப் படுத்தி விட்டீர்கள்.
கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா! கிருஷ்ணா!
கேட்காமல் கொடுப்பவரே எங்கள் பம்மலாரே! பம்மலாரே!
அன்புடன்,
வாசுதேவன்.
Dear Ragahvendra , pammalar, murali, vasudevan sir
i request you all to help me out in giving NT standing stills and different photos of our NT, This is required for us to put huge banners for Vasantha malaigai movie which is going to be released in Bangalore, we would be great ful.
please help us
regards
kumar
பம்மலார் அவர்கள் அளித்த பீம்சிங் பற்றிய பேசும்படம் கட்டுரை அருமை. அந்தக் காலத்தில் இயக்குனர்கள் எவ்வாறு ரசிகர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்தார்கள் என்பதை இப்போதைய இயக்குனர்கள் புரிந்துகொள்ளவேண்டும்.
டியர் முரளி,
என்ன ஒரு சர்ப்ரைஸ்...... சிறிது நீண்ட இடைவெளிக்குப்பின்னர் உங்கள் எழுத்தோவியம் கண்டு மனம் குதூகலிக்கிறது. உங்களுக்கே உரிய அழகு நடையில், அண்ணனின் 'பாலும் பழமும்' திரைக்காவியத்தை அலசியிருக்கும் பாங்கே தனி. குறிப்பாக அவரது ஸ்டைல் வெளிப்படும் இடங்கள் பற்றிய சிறப்பு குறிப்பீடுகள்.
'காதல் சிறகை காற்றினில் விரித்து' பாடலைப்பற்றி ஒரு மினி ஆய்வு நடத்தியிருக்கிறீர்கள். மூன்றாவது சரணம் முடிவில் வரும் இசையரசி சுசீலாவின் அந்த Humming எல்லோருக்கும் மிகவும் பிடித்தமான ஒன்று. அவர் பாடுவதற்கு முன்பாக அதே Humming-ஐ இரண்டாவது சரணம் முடிவில் புல்லாங்குழல் இசையில் தந்திருப்பார்கள் மெல்லிசை மன்னர்கள்.
அந்தப்பாடலில் இன்னொரு விசேஷம், அதில் சம்மந்தப்பட்ட மூவரின் மீதும் நமக்கு பரிதாபமே வரும். அவசரப்பட்டு கணவனைப்பிரிந்து வெகுதூர்ம வந்துவிட்டோமே என்று தவிக்கும் சாந்தி (சரோஜா தேவி), இரண்டாவது மனைவி கட்டில்ல் காத்திருக்க, முதல் மனைவியின் நினைவுகளால் உந்தப்பட்டு தவிப்புடன் கட்டிலைச்சுற்றிச்சுற்றி நடந்து இறுதியில் சுழல் நாற்காலியில் கண்ணயரும் டாக்டர் ரவி (நடிகர்திலகம்), கணவனை எதிர்பார்த்துக் காத்திருந்து கடைசியில் ஏமாற்றத்துடன் கட்டிலில் உறங்கிவிடும் நளினி (சௌகார்), எதிரும் புதிருமாக திரும்பிக்கொண்டிருக்கும் பொம்மைகளில் கேமராவைக்கொண்டு போய் நிறுத்தும் பீம்சிங். என்ன ஒரு படைப்பு இப்படம்.
முரளியண்ணா, உங்கள் கணிணிப்பிரச்சினை தீர்ந்து விட்டது என்று நினைக்கிறேன். இனி எங்களுக்காக நேரம் ஒதுக்கி உங்கள் அற்புதப்பதிவுகளை அள்ளித்தாருங்கள். காத்திருக்கிறோம்.
டியர் பம்மலார்,
இயக்குனர் பீம்சிங்கின் சாந்தி திரையரங்க விஜயம் பற்றிய கட்டுரையை அப்படியே பதிப்பித்த உங்களுக்கு எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை. காரணம், அந்த குறிப்பிட்ட 'பேசும் படம்' இதழ் என் மனதுக்கு மிக மிக நெருக்கமானது. என் தந்தை பல்லாண்டுகள் பத்திரமாக வைத்திருந்தவற்றுள் அதுவும் ஒன்று. அதை என் சிறு வயதில் ஐம்பது தடவைக்கு மேல் திருப்பித்திருப்பிப் படித்திருக்கிறேன். முன்பக்க உள் அட்டையில் 'கப்பலோட்டிய தமிழன்' விளம்பரமும் பின் அட்டையில் 'பங்காளிகள்' பட விளம்பரமும் இடம் பெற்றிருக்கும். உட்பகுதிகளில் கப்பலோட்டிய தமிழன், மற்றும் மருதநாட்டு வீரன் படங்களின் ஏராளமான ஸ்பெஷல் ஸ்டில்கள், ஜெமினியின் 'பனித்திரை' பட ஸ்டில்கள், குமாரி சச்சு பற்றிய சிறப்புக்கட்டுரை, குமுதம் படத்தில் வரும் 'நில் அங்கே' பாடல் பற்றிய பதிவு என அமர்க்களமான இதழ் அது.
'பாலும் பழமும்' உதய தினத்தையொட்டி, பீம்சிங் சாந்தி தியேட்டரில் நேரில் ரசிகர்களோடு அமர்ந்து படம் பார்த்த அனுபவம் பற்றிய அந்த அற்புதக் கட்டுரை இங்கு இடம்பெற்றால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று நேற்றுக்கூட நினைத்தேன். கூடவே ஒரு எண்ணம், என் தம்பி பம்மலார் என்கிற பம்மல் சுவாமி இருக்கிறார். அந்தக் கட்டுரையை எந்த உலகத்தில் இருந்தாலும் தேடிக்கொணர்ந்து இங்கு பதித்து விடுவார் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை. அது பலித்து விட்டது. பம்மலாரா கொக்கா...?.
அந்தக்குறிப்பிட்ட ஸ்டாம்ப் காட்சி வெட்டு பற்றிக்கூட அந்த இதழின் கேள்வி பதிலில் கூட இடம் பெற்றிருந்தது.
கேள்வி: 'பாலும் பழமும் படத்தில் சிவாஜிக்கு வெளிநாட்டிலிருந்து வரும் பார்சலில் இந்திய ஸ்டாம்ப் ஒட்டப்பட்டுள்ளதாக காண்பிக்கப்படுகிறதே?'
பதில்: 'சாந்தி தியேட்டரில் டைரக்டர் பீம்சிங்கிடம் ரசிகர்கள் நேரடியாக இந்தக்குறையைச் சுட்டிக்காட்ட, அவர் அப்போதே அக்காட்சியை வெட்டி விட்டார். வெளியூர்களில் அந்த வெட்டு வேலை நடக்கவில்லையென்று தெரிகிறது'.
(டாக்டர் ரவி பார்சலைப்பிரிக்கும்போது, பார்சலை குளோசப்பில் காண்பிக்கும்போது தெரியும். நெகடிவில் அக்காட்சியை வெட்டாததால் இன்று வரை சி.டி.க்களில் அந்தக்குறை தெரிகிறது)
'பாலும் பழமும்' திரைக்காவியத்தின் உதயத்தை அற்புதமாக நிறைவு செய்த உங்களுக்கு காலம் முழுதும் பாராட்டுக்கள்.
(கூடவே, 'ஒரே ஆண்டில் மூன்று வெள்ளிவிழாப்படங்கள்' என்ற அற்புத சாதனை நிகழவிடாமல் சதி செய்தவர்களுக்கு (எதிர் அணியினர் அல்ல, நம்மவர்கள்தான்) காலம் முழுதும் வசவுகள்).
டியர் முரளி சார்,
தங்கள் வாழ்த்துதல்களுக்கும் அன்பிற்கும் நன்றிகள் சார். சில நாட்களுக்குப் பிறகு தங்கள் பதிவு. அருமை. மிக அருமையாக நடிகர் திலகத்தின் (பாலும் பழமும்) அசைவுகளை அற்புதமாக அலசி உள்ளீர்கள். 50 ஆண்டுகளுக்கு முன்னமேயே மனைவியை 'டா' போட்டு இன்றைய தலைமுறைக்கு வழி காட்டியவர் என்றால் அதே போல் பல விஷயங்களுக்கும் முன்னுதாரணம் அவர்தான்.
'ராஜா' திரைப் படத்தில் ஒரு அருமையான சண்டைக்காட்சி. பணத்தை எடுத்துக் கொண்டு தன் காதலியுடன் ஓடி ஒரு பங்களாவுக்குள் ஒளிந்திருக்கும் வில்லனை பாலாஜியும்,நடிகர் திலகமும் கண்டு பிடித்து விடுவார்கள். முதலில் பாலாஜி அந்த வில்லனிடம் சண்டையிட்டு தோற்றுப் போவார். பின் நடிகர் திலகம் வில்லனிடம் சண்டையிட வருவார். முதலில் வில்லனை ஒரு அடி அடித்துவிட்டு குறுக்கே நிற்கும் வில்லனின் காதலியிடம் (பத்மா கண்ணா) படு ஸ்டைலாக "Escuse me Mam" என்றபடி தன் வலது உள்ளங்கையை மடக்கி, மோதிர விரலில் படும்படியாக வாயால் சிறிது காற்றை ஊதி பின் லேசாக கையை முத்தமிடுவது போன்ற பாவனையோடு களத்தில் இறங்குவார்.
அந்த சூப்பர் சண்டைக் காட்சியின் குறிப்பிட்ட ஸ்டில்.
http://i1087.photobucket.com/albums/..._001412747.jpg
1972-லேயே 'மேடம்' என்ற வார்த்தையை ""மேம்" என்று ஸ்டைலாக உச்சரித்த அந்த ஸ்டைல் சக்கரவர்த்தியை என்னவென்று சொல்வது!
அன்புடன்
வாசுதேவன்.
DEAR KUMARESAN SIR,
Please give me your email id so that I can mail you some photos which I have in my computer(ofcourse those were downloaded from this thread only)
சிவாஜி பற்றி சுவையான சிறு குறிப்புகள்
சிவாஜி கணேசன்... இந்திய சினிமாவின் திறந்தவெளிபல்கலைக்கடிதம். எல்லா நடிகர்களுக்கும் ரசிகர்கள் இருப்பார்கள். ஆனால், அனைத்து நடிகர்களும் இவருக்கு ரசிகர்கள். அந்தக் கலைச் சமுத்திரத்திலிருந்து சில துளிகள்....
சத்ரபதி சிவாஜி வேடத்தில் நடித்த வி.சி.கணேசனை மேடைக்குக் கீழ் இருந்து பார்த்த தந்தை பெரியார், 'இனி இவர்தான் சிவாஜி!' என்று சொன்னார். அதுவே காலம் சொல்லும் பெயரானது!
நடிகர் திலகம் முதன்முதலில் போட்டவேடம் பெண் வேடம் தான். உப்பரிகையில் நின்றுகொண்டு ராமனைப் பார்க்கும் சீதை வேடம்தான் சிவாஜி ஏற்ற முதல் பாத்திரம்!
1952 -ல் நேஷனல் பிக்சர்ஸ் தயாரித்த `பராசக்தி’யில் 'குணசேகரன்' பாத்திரத்தில் சிவாஜியைக் கதாநாயகனாக்க படத் தயாரிப்பாளர் பி.ஏ.பெருமாள் முடிவு செய்தபோது. பலரும் எதிர்ப்புத் தெரிவித்தனர். எதையும் காதில் வாங்கிக்கொள்ளாமல் சிவாஜியை ஹீரோவாக்கிய பெருமை பெருமாளுக்கே உண்டு!
சின்சியாரிட்டி,ஒழுங்கு நேரந் தவறாமைக்கு சிவாஜி ஒர் உதாரணம், ஏழரை மணிக்கு ஷீட்டிங் என்றால், ஆறே முக்கால் மணிக்கே செட்டில் ஆஜராகிவிடுவார். தனது வாழ்நாளில் ஒரு நாள்கூடத் தாமதமாக் ஷீட்டிங்குக்குச் சென்றது இல்லை!
கலைஞரை 'மூனா கானா', எம்.ஜி.ஆரை 'அண்ணன்', ஜெயலலிதாவை 'அம்மு', என்றுதான் அழைப்பார்!
வீரபாண்டிய கட்டபொம்மன், பாரதியார், வ.உ.சி, பகத்சிங் திருப்பூர் குமரன் போன்ற சுதந்திரப் போராட்ட வீரர்களின் பாத்திரங்கள் அனைத்தையும் ஏற்று நடித்தவர் சிவாஜி ஒருவரே!
தன்னை 'பராசக்தி' படத்தில் அறிமுகம் செய்த தயாரிப்பாளர் பி.ஏ.பெருமாள் வீட்டுக்கு ஒவ்வொரு பொங்கல் அன்றும் சென்று, அவரிடம் ஆசி பெறுவதை வழக்கமாகவே வைத்திருந்தார் சிவாஜி!
திருப்பதி, திருவானைக்கா, தஞ்சை மாரியம்மன் கோயில்களுக்கு யானைகளைப் பரிசளித்துள்ளார்!
தமிழ் சினிமா உலகில் முதன்முதலாக மிகப்பெரிய கட் – அவுட் வைக்கப்பட்டது சிவாஜிக்குத்தான். 1957 ல் வெளிவந்த அந்தப் படம் 'வணங்காமுடி'!.
சிவாஜி தனது நடிப்புக்காக வாங்கிய முதல் பரிசு ஒரு வெள்ளித்தட்டு, 'மனோகரா' நாடகத்தைப் பார்த்த கேரளா கொல்லங்காடு மகாராஜா கொடுத்த பரிசு அது!
தனது அண்ணன் தங்கவேலு, தம்பி சண்முகம் போன்றவர்களுடன் ஒரே கூட்டுக் குடும்பமாக இறுதிவரை வாழ்ந்தார்.சிவாஜியின் கால்ஷீட், நிர்வாகம் அனைத்தையும் கவனித்துகொண்டவர் அவரது தம்பி சண்முகம்தான்!
சிவாஜி நடித்த மொத்தப் படங்கள் 301. இதில் தமிழ்ப் படங்கள் 270. தெலுங்கில் 9, ஹிந்தி 2, மலையாளம் 1, கெளரவத் தோற்றம் 19 படங்கள்!
ஒவ்வொரு வருடமும் குடும்பத்துடன் தனது சொந்த ஊரான் சூரக்கோட்டையில் பொங்கல் விழா கொண்டாடுவதை வழக்கமாகவே வைத்திருந்தார். அன்றைக்குப் பல சினிமா பிரபலங்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்வார்கள்!
விநாயகர் மீது மிகுந்த பக்திகொண்டவர் சிவாஜி, சிறு வெள்ளியிலான பிள்ளையார் விக்கிரகத்தை எப்போதும் கூடவே வைத்திருப்பார்!
சிவாஜிக்கு சிகரெட் பிடிக்கும் பழக்கம் இருந்தது. 'பராசக்தி' படத்தை இயக்கிய, இயக்குநர்கள் கிருஷ்ணன் – பஞ்சு முன்னிலையில் மட்டும் சிகரெட் பிடிக்கமாட்டார்!
'ரத்தத் திலகம்' படத்தில் இவரது நடிப்பைப் பாராட்டி சென்னை சினிமா ரசிகர் சங்கம் கொடுத்த பரிசு ஒரு துப்பாக்கி!
படப்பிடிப்பின்போது அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் எடுக்காத நேரங்களில் மற்றவர்கள் நடிப்பதை உற்றுக் கவனிப்பார். ஆர்வமாகக் கேட்டால் மற்றவர்களுக்கு டிபஸ் கொடுப்பார்!
சிவாஜியும் எம்.ஜி.ஆரும் இணைந்து நடித்த ஒரே படம் கூண்டுக்கிளி!
விதவிதமான கடிகாரங்களை அணிவதில் இவருக்கு அலாதி பிரியம். ஒமேகா, ரோலக்ஸ் போன்ற வாட்சுகளை ஏராளமாக வாங்கி வைத்திருந்தார்!
தன் தாய் ராஜாமணி அம்மையாருக்கு சிவாஜி கார்டனில் சிலை ஒன்றை அமைத்தார் சிவாஜி. அந்தச் சிலையைத் திறந்துவைத்தவர் எம்.ஜி.ஆர்!
'ஸ்டேனிஸ் லா வோஸ்கி தியர்' என்கிற நடிப்புக் கல்லூரி மாணவர்களுக்கான பாடப் புத்தகத்தில் 64 வகையான முகபாவங்களைப் பிரதிபலிக்கும் திறமை பெற்றவர் என்று குறிப்பிட்டு சிவாஜியின் புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன!
அவரது தீவிரமான ஆசைகளில் ஒன்று தந்தை பெரியார் வேடத்தில் நடிப்பது கடைசி வரை அது நிறைவேறவே இல்லை!
பிரபலதவில் கலைஞர் வலையப்பட்டி. 'தமிழ் சினிமாவில் நீங்கள்தான் எல்லோருக்கும் ரோல் மாடல்' என்று சிவாஜியிடம் சொன்னபோது, 'டி.எஸ்.பாலையா, எம்.ஆர்.ராதா வரிசையில் மூன்றாவதாகத்தான் நான்' என்றாராம் தன்னடக்கமாக!
பெருந்தலைவர் காமராஜரின் மீது அளவிட முடியாத அன்புகொண்டவர் இவர்.`அந்த சிவகாமியின் செல்வனின் அன்புத் தொண்டன் இந்த ராஜாமணியின் மகன் – என்பதுதான் தன்னைப்பற்றி சிவாஜி செய்துகொள்ளும் அடக்கமான அறிமுகம்!
கிரிக்கெட், கேரம்போர்டு இரண்டும் இவருக்குப் பிடித்தமான விளையாட்டுகள்!.
http://65.175.77.34/makkalosai/epape...?issue=2172010
a TRIBUTE to NT
ஒரு நினைவூட்டல்
நடிகர் திலகம் பிறந்த நாள் நிகழ்ச்சிகள்
1. டாக்டர் சிவாஜி கணேசன் நினைவுப் பரிசு வழங்கு்ம் நிகழ்ச்சி - 01.10.2011 - சென்னை தியாகராய நகர் ஹபிபுல்லா சாலை, கர்நாடக சங்கத்தைச் சார்ந்த ராமராவ் கலா மண்டபம், மாலை 6.00 மணியளவில். பரிசுகள் பெறுவோர் இயக்குநர் ஏ.சி. திருலோக்சந்தர், சுகுமாரி, திரு பாலமுருகன், திரு ஏ. வின்சென்ட், திரு சித்ராலயா கோபு.
2. கலைநிலை சிவாஜி ரசிகர் மன்றம் 11வது ஆண்டு விழா மற்றும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பிறந்த நாள் விழா - 02.10.2011 காலை 10.00 மணி, சமபந்தி போஜனம், சிறப்பு விருநதினர் கலந்து கொள்கிறார். சந்திர சேகர் திருமண மண்டபம், சென்னை பெரம்பூர் லட்சுமியம்மன் கோயில் அருகில்
3. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் - நடிப்புக்கு கை கொடுத்த தெய்வம்/ கௌரவம். திரு ஒய்.ஜி.மகேந்திரா வழங்கும் நிகழ்ச்சி. 02.10.2011 மாலை சென்னை தேனாம்பேட்டை அண்ணா சாலையில் உள்ள காமராஜர் அரங்கம். நேரம் மற்றும் நிகழ்ச்சி விவரங்கள் விரைவில்.
4. இதயராஜா சிவாஜி பித்தர்கள் குழு சார்பில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பிறந்த நாள் மற்றும் ஏழை எளியோர்க்கு இலவச பாட நூல்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்கும் விழா, 16.10.2011 ஞாயிறு மாலை, சென்னை பெரம்பூர் லட்சுமியம்மன் கோயில் அருகில் உள்ள சந்திரசேகர் திருமண மண்டபம்.
மேலும் நிகழ்ச்சிகளின் விவரங்கள் கிடைக்கும் போது உடனுக்குடன் இங்கு பகிரந்து கொள்ளப் படும்.
அனைவரும் கலந்து கொண்டு நிகழ்ச்சிகளை சிறப்பிக்க வேண்டுகிறேன்.
அன்புடன்
டியர் வாசுதேவன்,
ராஜா படத்தில் நடிகர்திலகமும், பத்மா கன்னாவும் இரண்டே முறைதான் சந்திப்பார்கள். அந்த 'எக்ஸ்க்யூஸ் மி மேம்' தவிர இருவருக்கும் நேரடி வசனமே கிடையாது. நீங்கள் குறிப்பிட்டது முதல் சந்திப்பு.
இரண்டாவது சந்திப்பும் மிக வித்தியாசமாக இருக்கும். நாகலிங்கத்தின் (ரங்காராவ்) இருப்பிடத்துக்கு முதன்முதலாக பாபுவால் (பாலாஜி) அழைத்து வரப்படும் ராஜா, அங்கே மதுபானப்புட்டிகள் கொண்ட வீல்-ட்ரேயைத் தள்ளிக்கொண்டு வரும் தாராவைப்பார்த்ததும் ஆச்சரியப்பார்வை பார்ப்பார். உடன் திரும்பி பாபுவைப் பார்ப்பார்.
பார்வையிலேயே ராஜாவின் கேள்வி :'இவள் குமாரின் காதலி அல்லவா?. இங்கே எப்படி?'
பாபுவும் பார்வையாலேயே பதில்: 'இப்ப ஒண்னும் கேட்டுக்காதே, அப்புறமா விளக்கமா சொல்றேன்'.
தாராவின் பார்வையிலும் சற்று வெறுப்பு: 'தன் காதலனை மாட்டவைத்து, தான் நாகலிங்கத்தின் அடிமையானதற்கு இந்த ராஜாவும் ஒரு காரணமல்லவா'. (பாவம் அதுவரையிலும் குமார் தப்பிப்போய் எங்கோ உயிருடன் இருப்பதாகவே தாரா நினைத்துக்கொண்டிருப்பாள். அடியாட்கள் 'பறவை சுட்ட கதை' அப்புறம்தானே தெரியும்).
டியர் தனுஷ்,
கொஞ்சநாளைக்கு ஒருமுறை வந்து எட்டிப்பார்த்துவிட்டு காணாமல் போய் விடுகிறீர்களே ஏன்?. முன்போல உங்களின் தொடர்ந்த பங்களிப்பை எதிர்பார்க்கிறோம்.
another tribute to the thespian
http://thangameen.com/contentdetails.aspx?tid=430
சிவாஜியின் நடிப்பிலக்கணம் பகுதி – 2
1. பாட்டும் – நடிப்பும்
நாடகம் என்பது நடிப்பும் – பாட்டும் ஆகும். அதுவே கூத்து. சிலபத்திகார் கூறும் சாந்திக்கூத்து மற்றும் வினோதக் கூத்துகள் பாடல் கலந்து ஆடப்பெற்றவைகளே என்பதை மூன்றாம் இயலில் விரிவாகக் கண்டோம். கதை தழுவாது பாட்டின் பொருள்பற்றி அபிநயிக்கும் கூத்து ‘அபிநயக்கூத்து’. ஒரு கதையைத்தழுவி நடிக்கும் கூத்து ‘நாடகக்கூத்தாகும்.
ஆக, திரைப்படம் என்பது நம்மைப் பொறுத்தவரை ‘அபிநயமும் – நாடகமும் இணைந்து ‘நாடகக்கூத்து’ என்ற பெயர் கொண்ட ஒன்று என்று கொண்டால் தவறாகாது.
உலகின் முதல் நாகரீகம் கண்டவன் தமிழன் என்ற இறுமாப்புடன் மகிழ்ச்சியுடனும், இசையிலும் பாட்டிலும் சிறந்தவன் தமழனே எனக் கூறலாம். சிலப்பதிகாரக் காலத்தில் தனித்தமிழ் இசை வழங்கியது. அவ்வாறே, கடைச் சங்கத்தில் நாட்டியக் கலை அடைந்திருந்த பெருமையை சிலப்பதிகாரத்தின்’ ‘அரங்கேற்றுக்காதை’ நன்கு விளங்கும்.
நடனமாதின் இலக்கணம், ஆடலாசிரியன் அமைதி, இசையாசிரியன் அமைதி, முழவாசிரியன் அமைதி, முழலோன் அமைதி, அரங்கின் அமைதி, கூத்திலக்கணம் ஆகியவற்றை அரங்கேற்றுக் காதை விளக்குகிறது. அமைதி என்ற சொல்லுக்குத் தன்மை என்று பொருள்.
“உள்ளத்தில் ஓங்காரமாய் நின்ற ஐயா” என்று இறைவனை வாழ்த்துகிறார் மாணிக்கவாசகப் பெருமாள். அந்த ஓங்காரத்தின் விரிவே நாதயோகமான இசைக்கலை. உயிரும் உலகும் நாதக் கடலிலே மிதக்கின்றன. ஓமே எல்லாம்ந அதுவே உள்ளொலி; அதனின்றும் சத்தம் பிறந்தது; அதனின்று எழுத்து; அதனின்று சொல் தொடர்; மொழிகள், நூல்கள், காவியம், சங்கீதம் எல்லாம் உண்டாயின.
கீதம், வாத்தியம், நிருத்தம் (நடனம்) ஆகிய மூன்றும் சேர்ந்தது சங்கீதம்.
நாததிலிருந்து இசையொலி (சுருதி) இசையொலியிலிருந்து இசை (ஸ்வரம்); இசையிலிருந்து பண் (இராகம்); பண்ணிலிருந்து பாட்டு(கீதம்) உண்டாகிறது.
சங்கீத்ததிற்கு தாய் இசையொலி; (சுருதி அல்லது அலகு); தந்தை தாளம் ஆகும்.
ஆன்மாவிலிருந்து பாட்டு வருகிறது. அதுவே பொறிகளை (காணங்கள், இந்திரியங்கள்) ஏவி, ஒரு தீயை, ஓர் ஆர்வத்தை உண்டு பண்ணுகிறது. அந்த ஆர்வத் தீ காற்றை உந்துகிறது. காற்று, நாபி, இதயம், பண்டம், உச்சி, மூக்கு, இதழ், நா, பல், அண்ணம் (உண்ணாக்கு, மேல்வாய்) இவற்றைத் தொழிற்படுத்துகிறது. அதனால் உயிர்மெய் ஆகிய எழுத்துக்கள் உண்டாகின்றன.
உயிரெழுத்துக்களும், இடையின எழுத்துக்களும் கழுத்திற் பிறக்கும். மெல்லெழுத்துக்கள் மூக்கையும், வல்லெழுத்துக்கள் மார்பையும் இடமாகக் கொண்டு பிறக்கும். எழுத்துக்கள் அளபெடுத்து ஆலாபனமாய் நீண்டு இசையாகிப் பண்ணாகும்.
நெஞ்சு, கழுத்து, நாக்கு, மூக்கு, மேல்வாய் (அண்ணம்), உதடு, பல, தலை ஆகியவை நாதம் பிக்கும் எட்டுப் பெருந்தானங்களாகும் (இடங்கள்)
எனவே, பாட்டு நம் திரைப்படங்களில் இடம் பெறுவது நமது கலாச்சாரத்தின், இலக்கியத்தின் நீண்ட வரலாற்றுப் பின்னணியோடு பிணைந்த ஒன்று. பாட்டு பிறக்கும் இடம் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் எதனை அடிப்படையாகக் கொண்டு பாட்டுபிறக்கிறதோ அவ்வாறு பிறந்த பாட்டு அந்தச் சூழலில் பாடப்படுவது இயல்பான ஒன்றா என்ற ஆய்வுக்குள் செல்லாது இடம் பெற்ற ஆடல் காட்சிகளில் நடிகர்திலகத்தின் நடிப்பிலக்கணத்தை எவ்வாறு வரையறை செய்து தர வேண்டும் என்பதே நோக்கம்.
பாடகன்
பண்டைய நிருத்தங்களில், கூத்துகளில் பாடகன் ஒருவன் இசைப்பதற்கென்றே இருந்திருக்கிறான் என்பதை சிலப்பதிகாரத்தின் ‘அரங்கேற்றக் காதை’யிலிருந்து நம்மால் அறிய முடிகிறது அவன், யாழ், குழல், தாளம், ணீர், வாய்ப்பாட்டு, சன்னக்குரலுடன் அமைப்பாக வாசிக்கும் மத்தளம், முன்னே சொன்ன கூத்தின் வகை – இவற்றுடன் இசைந்த பாடலை இனிமையாக, இசையொலி (சுருதி) தாளங்களுடன் (லயம்) பொருந்தப் பாடவேண்டும். வரிப்பாட்டிற்கும், ஆடலுக்கும் உரிய பொருளை இலக்கி (விளக்கி) இயற்சொல், திரிசொல், திசைசொல், வடசொல், ஆகிய சொற்களின் ஓசைகளைச் சுத்தமாகக் கடைப்பிடித்து, அந்த ஓசையின் இலக்கணங்களையெல்லாம் குற்றமறத்தெரிந்த அறிவாளியாயிருக்க வேண்டும் பாடகன், என்பது இசையாசிரியன் தன்மை.
ஒவ்வொரு நடிகனுக்கும் ஏற்றபடி தன் குரலை மாற்றி மாற்றிப் பாடிய ஒரு பாடல் கலைஞனைக் கூடத் தமிழகமேதான் கண்டிருக்கிறது ஒரு பாடல் சங்கம் வைத்துத் தமிழ்வளர்த்த மதுரையிலே பிறந்த டி.எம். சௌந்தர்ராஜன் என்ற திரைப்படப் பாடகர். ஆரம்பகாலங்களில் இவர் தம் வளமான – இனிமையான – காந்தம் போன்ற குரலால் பொதுப்படையாகப் பாட ஆரம்பித்தாலும் நடிகர் திலகதின குரல் வளமும், இவரின் குரள்வளமும் ஒன்றாக அமைந்தது விந்தையிலும் விந்தை. ச்ற்று மிகைப்படுத்திச் சொல்வதென்றால் இப்படித்தான் சொல்ல வேண்டும். இவர் குரலால் நடித்து நடிகர் திலகத்தை உடலால் நடிக்கச்செய்தார். பாடலுக்கு நடிப்பது என்ற பகுதியில் இருவரையும் தனித்தனியே பிரித்துப் பார்ப்பதென்பது இயலாத செயலாகும்.
மேலும் இவர் மட்டுமல்ல. சிதம்பரம் சி.எஸ். ஜெயராமன், சந்திரபாபு, கண்டசாலா, ஏ.எம். ராஜா, சீர்காழி கோவிந்தராஜன், மலேசியா வாசுதேவன், என்ற தமிழகத்தின் அருமையான பாடற் கலைஞர்களின் பாட்டுக்கும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன், அவரவர்களின் குரல்வளத்திற்கேற்ப, தன் முகத்தோற்றத்தை மாற்றி மாற்றி நடித்திருக்கிறார்.
இவருக்குப் பின்னும், இவர் திரையுலகில் சுறுசுறுப்பாக நடித்துக் கொண்டிருந்த காலங்களிலும், பாட்டுக்கு ஏற்ப வாயை அசைப்பது, பாடலின் பொருளுக்கேற்ப, காட்சியின் தன்மைக்கேற்ப நடிக்கும் நடிகர் எவரும் இன்னும் தோன்றவில்லை. இன்னும் சொல்லப்போனால், இவ்வகையான நடிப்புத்திறனை ஒரு நடிகன் வெளிப்படுத்த உதவும் வண்ணம், இப்பொழுதெல்லாம் காட்சிகளும் அமைக்கப்படுவதே இல்லை. பாடலை உருவாக்கும் போதே இது வாயசைப்பிற்கு அல்ல, இது வாயசைப்பிற்கு என்று இருவகைப் பாடல் கட்சிகளைப் பிரித்துவிட்ட நிலையில், இது வாயசைப்பிற்உக (For Lip Movement) என்று உருவாகும் பாடல்களே தற்போது இல்லை என்று திட்டவட்டமாகக் கூறலாம்.
கல்தோன்றாக்காலத்தே முன்தோன்றினாலும், கண்டகண்ட மொழிகளின் பாதிப்புக்கு ஆளாகி கன்னித் தமிழாகவே இருந்துவரும் நம் தமிழுக்கு, சமீபகாலமாக திரைப்படங்களின் மூலம், அதன் பாடல்களில் மூலம் , ஆங்கிலேயர் நம்மை அடிமை கொண்டிருந்தபோது கூட அடிமையாகாத தமிழும் – அதன் கவிதையும் இன்று ஆங்கில மயமாக்கப்பட்டு வருவது ஆபத்தானது என்பதை அறிஞர்கள் ஒப்புக்கொள்வர்.
தமிழ் அதன் இளமை, அதன் இனிமை உலகம் முழுவதும் பரவ வேண்டும் என்பதில் எந்தத் தமிழரும் ஆர்வமே கொள்வர். ஆனால் ஆர்வம் என்பது தவறானு முறையைத் தேர்வுசெய்யும் முறையாக அமைந்துவிடக்கூடாது.
ஒரு மொழியை, அதன் இலக்கியத்தை, அதன் இசையை அதன் இயல்பான வழியில் நின்று பேசி, படித்துப்,பாடினால்தான் அது அம்மொழிக்குச் செய்யும் பெருமையாகும். மாறாக, ஒரு மேலைநாட்டு தாளகதியில் (Rhythm) நம் தமிழ்ப்பாடலொன்றை அமைத்து, அதை வேற்று மொழியினர் எளிதாகப் பாடக் கொற்றுவிடுகின்றனர். என்று வைத்துக்கொள்வோம். அது…. ‘பார்த்தீர்களா என் இசையால் உலக மக்கள் அனவரும் நம் தமிழைப்பாடும் வண்ணம் செய்துவிட்டேன் என்று பெருமை பேசினால் அதனினும் அறியாமை, அறிவீனம் வேறொன்றுமிருக்க முடியாது. மாறக தமிழை இப்படித்தான் பேசவேண்டும் – பாட வேண்டும் போலிருக்கிறது’ என்று எண்ணி புதிதாக ஒரு மொழியைக் கற்றுக்கொள்ள ஆர்வம் காட்டுபவனுக்கு, அது ஒரு தவறான வழிகாட்டுதலாகும்.
இந்த நிலையில், பாடல் காட்சிகளிலும், தொல்காப்பியம் கூறிய ஒன்பான் சுவைகளின் வழியே பாடல் வடிவங்கள் நடிகர்திலகம் எவ்வாறு உருவாக்கித் தந்துள்ளார் என்பதைக் கண்டு வழங்கினால் எதிர்காலக் கலைஞர்களுக்கு அதுவே ‘இலக்கணமாக’ அமையும்.
1. நகைச்சுவைப் பாடல் நடிப்பு
அ. எள்ளல் (பிறரை இகழ்ந்து பாடல்)
தன் ஒரே தங்கையின் திருமணம், தாய்நாட்டைக் காணப்போகிறோம் என்ற தனியாத ஆவலில் கனவுகள் தரைமட்டமாகிப் போகின்றன. படுக்க இடமும் பசிக்கு உணவும் தர மறுக்கிறது பாசமுள்ள தாய்நாடு. ஏமாற்றுபவனுக்கு இடமென்று தெரிந்து கொள்கிறான். பைத்தியக்காரனாக வேடம் புனைந்து தன் தேவைகளை நிறைவேற்றிக் கொள்கிறான். அப்போது பிறக்கும் பணம் பற்றிய பாடலில் பணம் என்று அலைவோரை எள்ளி நகையாடுகிறான். பாடல்மூலம். அது…
“தேசம் ஞானம், கல்வி, ஈசன் பூசையெல்லாம்
காசு முன் செல்லாதடி – குதம்பாய்
காசு முன் செல்லாதடி
ஈசனும் ஈசனார் பூசையும் – தேசத்தில்
காசுக்குப் பின்னாலே ….
……………………………………” என்று
கேலி செய்யும் பாடலில், அப்பாடலின் ஒவ்வொரு வரியின் பொருளும் அவன் முகத்தில் அவ்வப்போது மாறிமாறத் தோன்றி மறையும். நடிகர் திலகத்திற்கு முதன் முதலில் குரல் கொடுத்துப் பெருமை பெற்றவர். சிறந்த இசையறிஞரான சிதம்பரம் சி.எஸ். ஜெயராமன்
அவ்வாறே……
“சாப்பாடு இல்லாம தவிக்குதுங்க
ஜனம்
கூப்பாடு போட்டுமனம் குமுறுதுங்க
உயிர்
காப்பாத்த கஞ்சி தண்ணி ஊத்துங்க
என்றால்
தாப்பாளைப் போடுறாங்க பாருங்க
அந்தச் சண்டாளர் ஏங்கவே
தன்னலமும் நீங்கவே
தாரணி மீதிலே பாடுங்க
ராகம் கா.. கா….”
இப்பாடல்களையும், கதை – வசனத்தையும் தந்தவர் கலைஞர் மு. கருணாநிதி – படம் பராசக்தி (1952).
ஆ. இளமை
(இளமை கண்டு எள்ளல்) தன்மை ஒரு ஓட்டுநர் எனத் தவறாகப்புரிந்து கொண்ட பெண்ணை அவள் அறியாமையை எண்ணி அவள் இளமையை (அறிவு முதிரா தன்மையை) எள்ளிப் பாடும் பாடலின் வடிவத்தை அன்னை இல்லம் (1963) படத்தில்,
“நடையா – இது நடையா
ஒரு
நாடகமன்றோ நடக்குது
இடையா – இது இடையா
அது
இல்லாத்து போல் இருக்குது(நடையா)
……………………..
என்ற பாடலில் காணலாம். கண்ணதாசனின் கவிதை இது. குரல் தந்தவர். டி.எம். சௌந்தர்ராஜன்.
இ. பேதமை (அறிவின்மை)
சட்டாம்பிள்ளையின் மகன் விரித்த வலையில் விழுந்த அரண்மனைப் பெண்கள், நடுராத்திரியில் கோவிலுக்கு வந்து அவனுக்காகக் காத்திருக, அவர்கள் அறியாமையை எண்ணி எள்ளிப்பாடும் பாடல் தூக்குத்தூக்கி (1954)யில் டி.எம். எஸ். குரலில் -
“ஏறாத மலைதனிலே
ஜோரான கௌதாரி ரெண்டு
தாராளமா இங்கே வந்து
ததிங்கிணத்தோம் தாளம் போடுதய்யா
ததிங்கிணத்தோன் தாளம் போடுதய்யா.
தொகையறா
கல்லான உங்கள் மனம்
கனிஞ்சு நின்று ஏங்கையிலே
கண்கண்ட காளியம்மா
கருணைசெய்வ தெக்காலம்.?!
கோமாளி உடையுடன் , தனது குண்டு குண்டான கண்களை உருட்டி உருட்டி பாடலுகேற்றவாறு ஒரு சின்ன நடனமு ஆடும் இடமே பேதமையின் பாடல் வடிவம்.
ஈ. மடன் (தன் மடமை பற்றித் தோன்றுவது)
தற்கொலைக்கு முயன்றவனைத் தடுத்து நிறுத்தி ‘வாழ நினைத்தால் வாழலாம். ஆசையிருந்தால் நீந்திவா’ என்று அழைத்தவளின் காதலுக்குத் தந்தை ஒரு தடையாக இருக்கிறார். வீரம் விவேகம், கலையில் விற்பன்னாக உள்ளவனுக்கே தன் மகள் என்ற தந்தை, சங்கீதப் போட்டியில் தன்னோடு பாட அழைக்கிறார்.
“நீயே என்றும் உனக்கு நிகரானவன்” – என்று பாட்தொடங்கி அவர் இசையில் இழுத்த இழுப்புக்கெல்லாம் ஆடி அவரை மகிழ்விக்கிறாள். அவர் தந்தையின் இசை வெறியைக் கண்டவன் பாடப்பாட தன் தலையில் அடித்க்கொள்கினாற் பாண்டியன்; தன் மடமையை எண்ணி. நடிகவேள் எம்.ஆர். ராதா நடிகர் திலகத்திற்கு இப்பாடல் காட்சியில் துணையாக வருவது பலேபாண்டியாவில். (1962).
2. அவலச் சுவை பாடல் நடிப்பு
அ. இளிவு (இகழப்பட்டதால் வந்தது)
‘பறவைகள் பலவிதம் – அவை ஒவ்வொன்றும் ஒருவிதம்’ எனப் பாடித்திரிந்தவனின் பார்வையில் மாடப்புறாவொன்று படுகிறது. மணமாலை சூட்டுகிறேன் என்கிறான். கறை படிந்த உன் காதலைக் குப்பையிலே போடு என்கிறான். ஆனால் உண்மையான மனமாற்றத்திற்கு உள்ளனவன், தான் திருந்தி வாழ மாடப்புறாவை மனையாளாக்குமாறு பெற்றவளை வேண்டுகிறான். மகனின் வாழ்வை எண்ணி, விரும்பாத அவளை மகனுக்குமணம் முடித்து வைக்கின்றனர். ஆனால் அவள் உள்ளமோ அவன் கடந்த காலக் கறைபடிந்த வாழ்வை எண்ணி எண்ணி இகழ்ந்து அவனோடு ஒட்டாது உறவாடாது வாழ்கிறது. வீணானது வாழ்வு என்று விழிநீர் சிந்துகிறது மாடப்புறா. முற்றிலுமாக மாறிய கணவன் கேட்கிறான்……
“ஏனழுதாய் ஏனழுதாய்
என்னுயிரே ஏனழுதாய்
நானழுது ஓய்ந்ததற்கு
நன்றி சொல்லவோ அழுதாய்.!…ஆனவரை சொல்லி விட்டேன்
அழுதழுது பார்த்து விட்டேன்
தாய்மொழியில் வார்த்தையில்லை
வாய்மொழிக்கும் வலிமையில்லை. (ஏனழுதாய்)
என்வழக்கில் சாட்சியில்லை
எனதுபக்கம் யாருமில்லை
சட்டம் தரும் சலுகைகூட
சமுதாயம் தரவில்லையே!…..(ஏனழுதாய்)
………………..”
என்று மனைவியின் இகழ்ச்சிக்கு ஆளானதை எண்ணிப் புலம்பும் இச்சுவையின் வடிவம், இருவர் உள்ளம் (1963) படத்தில் கண்ணதாசன் கவிதையை டி.எம். எஸ். குரலில் பாடுகையில கிடைக்கும்.
ஆ. இழிவு (உயிராவது பொருளாவது இழத்தல்)
கட்டிய மனைவியைத்தவிக்க விட்டு, பரத்தையின் பஞ்சணையில் படுத்துப் புரண்டு, முடிவில் கண்ணைப் பறிகொடுத்து விட்டு வந்து கட்டிய மனைவியின் காலடியில் விழுகிறான். மனைவி தவிக்கிறாள்.
தொகையறா
“ஈடற்ற பத்தினியின் இன்பத்தைக்கொன்றவன் நான்
அவள்
இதயத்தில் கொந்தளித்த எண்ணத்தைக் கொன்றவன் நான்
வாழத்தகுந்தவனை வாழாமல் வைத்துவிட்டு
பாழும் பரத்தையினால் பண்பதனைக் கொன்றவன் நான்
அந்தக் கொள்கைக்கே ஆளாய் இருந்து விட்டேன்
இனி
எந்தக் கொலை செய்தாலும் என்னடி என் ஞானப் பெண்ணே!
பாடல்
“தவறுக்கும் தவறான தவறைப் புரிந்து விட்டு
தனிப்பட்டுப் போனவன் ஞானப்பெண்ணே
பதறிப் பதறி நின்று கதறிப்புலம்பினாலும்
பயன்பட்டு வருவானோ ஞானப்பெண்ணே”
(“ஐயோ… அத்தான்! உங்கள் கண்கள் எங்கே அத்தான்… எங்கே?” கதறுகிறாள் மனைவி.)
“கண்ணைக் கொடுத்தவனே பறித்துக்கொண்டாண்டி
மானே வளர்த்தவனே வெறுத்துவிட்டாண்டி”
- என்று கதறிப்புலம்பும் வடிவத்தை மக்கள் கவிஞன், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் கவிதைவரிகளுக்கு சி.எஸ். ஜெயராமன் குரல்கொடுக்கும் தங்கப்பதுமை (1959)யில் காணலாம்.
இ. அசைவு (தளர்ச்சி)
தாயோடு அறுசுவை போகும்;
தந்தையோடு கல்வி போகும்
சேயோடு இன்பம் போகும்;
நல்ல
மனைவியோடு எல்லாம் போகும்!;
மனைவி இறந்துவிட்டாள். மகனோ குற்றவாளி தானோ…. கடமையே கண்ணெனக்கருதும் காவலதிகாரி. அடிமேல் அடி விழுந்தால் ஆடாதார் யார்?
“சோதனை மேல் சோதனை
போதுமடா சாமி
வேதனைதான் வாழ்க்கையென்றால்
தாங்காதுபூமி (சோதனை)
…………………………………………….
…………………………………………….
தானாடவில்லையம்மா சதையாடுது
அது
தந்தையென்றும் பிள்ளையென்றும் உறவாடுது
பூவாக வைத்திருந்தேன் மனமென்பதை
அதற்குள்
பூநாகம் புகுந்துகொண்டு உறவென்றது
அடிதாங்கும் உள்ளமிது இடிதாங்குமா
இடிபோல பிள்ளை வந்தால் மடிதாங்குமா”
வீரமான உள்ளத்தின் தளர்ச்சியைப் படம்பிடித்துக் காட்டும் வரிகள், குரல் வளம், குணச்சித்திர நடிப்பு. கண்ணதாசன், டி.எம். எஸ். கணேசன் இவர்கள் பின்னணியில் இசையமைப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதன் இணைந்தளித்த இவ்வடிவம் தங்கப்பதக்கம (1974).
ஈ. வறுமை(பொருளின்மை)
ஏற்கனவே குறிப்பிட்டதுபோல், நடிகர் திலகம் வறுமையில் வாடும் நாயகனாக வேடமேற்றது ஒன்றிரண்டு படங்கள்தான். செல்வம். அதன் மதிப்பு குறித்து தன் மகனை முன்னிலைப்படுத்திப் பாடி வறுமையை வெளிப்படுத்திய வடிவம் ‘நான் பெற்ற செல்வம்’ (1956) படத்தில் கிடைக்கும். பாடலுக்குக் குரல்தந்தவர் டி.எம்.எ. , பாடல்,
“வாழ்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும்
வையகம் இதுதானடா.(வாழ்ந்தாலும்)
வாழ்ந்தாரைக் கண்டால் மனதுக்குள் வெறுக்கும்
தாழ்ந்தாரைக் கண்டால் வாய்விட்டுச் சிரிக்கும்
இல்லாது போனால் ஏளனம் செய்யும்
இருப்பவன் கேட்டால் நடிப்பென மறுக்கும்”
காதல் வேதனையில் தோன்றும் அவலம்
குடியும் – கூத்துமாக இருந்த ஜமீன்தார் வீட்டு பிள்ளையை நிமிரச் செய்கிறாள் ஒருத்தி. அவளுக்காக ஒரு வசந்த மாளிகை கட்டுகிறான். அவளோடு வாழும் நாளின் வரவுக்காகக் காத்திருக்கிறான். வந்ததோ பிரிவு. மாற்றான் ஒருவனுகு மாலையிட ஏற்பாடுகள் நடக்கின்றன. மனம் உடைது போனவன் மறுபடியும் ம்துவுக்கள்ர மங்கையின் மணநாள் வருகிறது. மறைந்து மறைந்து வந்து அவளை ஒரு முறை பார்க்க வேண்டுமென்று ஆசைப்படுகிறான். வந்தவளும் அவன் வாழ்த்துக்காக காலில் விழுகிறாள். எல்லாம் முடிந்தது என்று எண்ணி இரும்பாகிறது அவன் இதயம். மாளிகைக்கு வருகிறான். மரண தேவதையை அழைக்கிறான்? இந்த மாளிகை இனி யாருக்காக? என்று கூறுகிறான். உயிரைவிட்டுப் பாடியிருக்கிறார் டி.எம்.எஸ்.; உயிர் கொடுக்கிறார் காட்சிக்குக நடிகர் திலகம். காதலின் சோகம் அதன் கனமான வடிவம் கொண்டு வெளிவருகிறது.
“யாருக்காக… யாருக்காக?யாருக்காக…
இது யாருக்காக
இந்த மாளிகை வசந்த மாளிகை
காதல் ஓவியம் கலைந்த மாளிகை
யாருக்காக…..
காதலே! போ…..போ…..
சாதலே! வா…..வா…….
மரணம் என்னும் தூது வந்தது
அது
மங்கை என்னும் வடிவில் வந்தது
சொர்க்கமாக நான் நினைத்தது
வெறும்
நரகமாக மாறிவிட்டது.(யாருக்காக)
……………………………………….
………………………………………..
எழுதுங்கள் என் கல்லறையில்
அவள் இரக்கமில்லாதவளென்று
பாடுங்கள் என் கல்லறையில்
இவன் பைத்தியக்காரனென்று
ஹ்ஹ்ஹா……………………………”
‘தேவதாஸ்’ ஒரு மென்மையான உள்ளத்தின் காதலை, அதன் முடிவைச் சொல்லும் படம் என்றால், வசந்தமாளிகை (1972) முரட்டு உள்ளத்தின் காதலைச் சொல்லும் காவியம்.
காதலியின் வேதனை கண்டு வந்த அழுகை
Those who love each other love at first sight – ஒருவரையொருவன் விரும்பும் காதலில், காதல் என்பது அவர்கள் சந்திப்பின் முதல் பார்வையிலேயே உருவாகிறது – என்றான் ஆங்கில மகாகவியான ஷேக்ஸ்பியர் தனது ‘As you like it’ என்ற நாடகத்தில் .
இதையே…….
“அண்ணலும் நோக்கினான்
அவளும் நோக்கினாள்”
என்று அவருக்கும் முற்பட்ட காலத்திலேயே காதலைப் பற்றி, அதினினும் சுருக்கமாகச் சொன்னவன் தமிழ்க் கவிஞனான கவிச்சக்ரவர்த்தி கம்பன்.
அவ்வாறு…..
மதுரை அழகர் கோவிலில் முதன்முதலாகச் சந்திக்க நேர்ந்த போதே கலைஞர்களான் இருவரும் ஒருவரையொருவர் விரும்பினாலும் அவர்கள் காதல் மூடுமந்திரமாகவே இருந்து வருகிறது. அது சற்று வெளிப்படும்போது சந்தேகம் என்னும் பேய் வந்து சதிராட, கடல் கடந்து கண்காணாத தூரத்துக்குப் போய் விடலாம் எனக் காதலன் கருதும்போது, அவனைத் தடுத்து நிறத்த போட்டிக்கு அழைக்கிறாள் காதலி. போட்டி நடக்கிறது. வெற்றி தோல்வியின்றி சம்மாக முடியும் போது சதிகாரனொருவனால் கத்தியால் தாக்கப்பட்டு இடது கையை இழக்கும் நிலைக்கு வந்து, பன் காப்பாற்றப்படுகிறான். மருத்துவ சிகிச்சைக்காக சென்னை சென்றவன் நிலை என்ன என்று அறியமுடியாத பேதை உள்ளம் புலம்புகிறது.
இந்த நிலையில் அந்த இருகலைஞர்களும் இணைந்து வழங்கும் கலை நிகழ்ச்சிக்கு ஒருவர் மீண்டும் ஏற்பாடு செய்கிறார். தன் உள்ளம் நிறைந்தவனைக் காணப்போகிறோம் என்ற துடிப்பி அன்னை போட்ட அனைத்து நிபந்தனைகளையும் ஏற்றுக்கொள்வதுபோல நடிக்கிறாள், அவனைக் கண்ணால் கண்டால் போதும், தன் கலக்கம் தீர்ந்துவிடும் என்ற ஒரே நம்பிக்கையில்.
அந்த நாளும்,,, நேரமும் வருகிறது. கலை நிகழ்ச்சி துவங்குகிறது. மேளங்கள் முழங்குகின்றன. மத்தளங்கள் கொட்டப்படுகின்றன. திரைச் சீலையைத் தள்ளிக்கொண்டு ஆடவரும் அந்த மயில், மேகத்தைப் பார்த்துச் சாடையில் ‘நலமா? என முத்திரை பிடித்துக் காட்டிக் கேட்கின்றது. மேகமோ கண்சிமிட்டி குறும்பு செய்து தன் நலத்தைத் தெரிவிக்கின்றது. நாட்டியப் பாடலிலே,
“நலந்தானா நலந்தானா
உடலும் உள்ளமும் நலந்தானா? (நலந்)
நலம்பெற வேண்டும் நீயென்று
நாளும் என்நெஞ்சில் நினைவுண்டு
இலைமறை காய்போல் பொருள் கொண்டு
எவரும் அறியாமல் சொல் இன்று(நலந்)கண்பட்டதால் உந்தன் மேனியிலே
புண்பட்டதோ அதை நான்றியேன்
புண்பட்ட சேதியைக் கேட்டவுடன் – இந்தப்
பெண்பட்ட பாட்டை யாரறிவார்……”
என அவள் கலங்க நாகசுரம் வாசிக்க வாசிக்க அவன் கண்களில் கண்ணீர் துளிர்க்க, பக்கவாத்தியக்கார்ரான தவில்கார்ர் அவன் தொடையை ஆறுதலாய் தடவிக்கொடுக்க, காதல் வேதனையை, அதன் வடிவத்தை வெளிப்படுத்தும் – காதல் வயப்பட்ட உள்ளங்களையெல்லாம் சுண்டி இழுத்து கண்களைக் குளமாக்கும் கவின்மிகு காட்சியல்லவா அக்காட்சி?! தில்லானாமோகனாம்பாள் (1968) திரைக்காவியத்தின் ஒருதுளி இது. தவில்கார்ராக, நண்பானாக, அண்ணனாகத் துணைநிற்பவர், தமிழகம் தந்த மாபெரும் கலைஞர்களில் ஒருவரான டி.எஸ். பாலையா, பி. சுசிலாவின் குரலுக்கு நாதசுரம் தந்தவர்கள் மதுரை பொன்னுசாமி சகோதர்ர்கள்.
நடிகம் திலகத்தின் வாயசைப்பு என்பது நாகசுரம் வாசிப்பது போன்ற நடிப்பு. அந்த இசைக் கருவியைப்பற்றுவதிலும், சரி செய்வதிலும், மூச்சையடக்கி வாசிப்பது போன்று நடிக்கும் அந்த்ப் பாங்கும், கலைஞனின் கர்வமும் அந்தக் கண்களில் பளிச்சிடுவதைக் கண்டால், உண்மையான நாகசுரக்கலைஞன் கூடத் தானும் அதுபோல எடுப்பாக இருக்க வேண்டுமென விரும்புவான்.
உண்மையில் கூறப்போனால், தமிழக காவல்துறையில் இளைஞர்களும் – ஏனையோரும் மிடுக்காக உடையணியத் துவங்கி, அதற்கென தங்கள் கவனத்தைத்திருப்பியது 1974ல்; நடிகர் திலகம் ‘சௌத்ரி’ என்ற உயர்காவலதிகாரியாக ‘தங்கப்பதக்கம்’ படத்தில் வேடமேற்று நடித்த பின்புதான் என்று கூறினால் மிகையாகாது.
3. இளிவரற்சுவை (இகழ்ச்சி)
‘இழிப்பாவது குற்றமுடையவற்றைக் காணுதல் முதலிய காரணங்களாலே மனதில் தோன்றும் அருவருப்பு’ – என்ற தண்டியலங்காரவுரையின் வழிநின்றே இங்கும் இகழ்ச்சியின் வடிவம் வழங்கப்படுகிறது.
‘அவளோ கன்னிப்பெண். கள்ளங்கபடம் அறியாதவள். பேதமின்றி ஆண்களுடன் பழகும் தன்மை உடையவர். ஆனால் இழி குணம் படைத்தோர், அவளை இழித்தும் பழித்தும் பேசுகின்றனர். இந்த இலைஇல் தன் நண்பனுக்கு இவளை மணம் முடிக்க ஏற்பாடுகள் நடக்கின்றன. ஊரார் ஒரு வெள்ளைமனம் கொண்டவளை தவறாகப் பேசுவதைச் சகிக்காத தலைவன், அவள் கணம்பற்றி பாடும்போது, சமுதாயத்தின் அருவருக்கத்தக்க போக்கைச் சாடுகிறான். அது…….
“ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ
உலகம் அறிந்திடாத பிறவியம்மா நீ
பார்வையிலே குமரியம்மா
பழக்கத்திலே குழந்தையம்மா(ஆயிரத்)
………………………………………….
ஆதாரம் நூறென்பது ஊர்சொல்ல்லாம்
ஆனாலும் பொய்யென்று நான் சொல்லுவேன்”
என்ற இடத்தில் வேட்டியை இருகைகளாலும் தன் முழங்காலுக்கு தூக்கியவாறு வாயசைத்து இகழ்ச்சியின் வடிவத்தைத் தருவது ‘கைகொடுத்த தெய்வம்’ (1964) படத்தில்; குரல் டி.எம்.எஸ்.
அவ்வாறே……
“தர்ம்மென்பார் நீதியென்பார் தரமென்பார்
சரித்திரத்துச் சான்று சொல்வார்
தாயன்புப் பெட்டகத்தைச் சந்தயிலே எறிந்துவிட்டுத்
தன்மான விரமென்பார்
மர்ம்மய் சதிபுரிவார்வாய்பேச அபலைகளின்
வாழ்வுக்கு நஞ்சுவைப்பார்
கர்ம வினையென்பார் பிரம்மன் எழுத்தென்பார்
கடவுள் மேல் குற்றமென்பார்.
எனவே
இந்தத் திண்ணைப்பேச்சு வீர்ரிடம்
ஒரு
கண்ணாயிருக்கணும் அண்ணாச்சி
நாம
ஒண்ணாயிருக்கணும் அண்ணாச்சி
………………………………………………
(திண்ணை)
பொதுநலம் பேசும் புண்ணியவான்களின்
போக்கினிலே அநேக வித்தியாசம்
புதுப்புது வகையில் புலம்புவதெல்லாம்
புவியை மயக்கும் வெளிவேஷம்
………………………………………………………..
கடவுள் இருப்பதும் இல்லை என்பதும்
கவைக்கு உதவாத வெறும் பேச்சு
கஞ்சிக்கில்லாதார் கவலை நீங்கவே
கருத வேண்டியதை மறந்தாச்சு”
என்று இந்தச் சமூகத்தின் பொய்களை இகழ்ந்து பாடும் இகழ்ச்சியின் வடிவம் ‘பதிபக்தி’ (1958) யில் கிடைக்கும்; குரல் எம்.எஸ்.
4. மருட்கை (வியப்பு)
வியப்பு என்பது புதுமைகண்டும், மிகப்பெரியது கண்டும், மிகச்சிறியது கண்டும், மனித செயல்களினால் விளையும் அரும் பொருள்கள் கண்டும் பிறக்கும் என்ற தொல்காப்பிய உரையையும், ‘முன்னர் காணப்படாத ஒன்றைக் கொண்டு உண்டாகும் மனவிரிவு’ என்ற தண்டியலங்கார உரையையும் அறிவால் விளையாத்தே வியப்பு என்றும் கண்டோம்.
ஆனால் பாடல் வடிவங்களை தண்டியலங்கார உரையைவிட பேராசிரியரன் வழிநின்றே வழங்க வாய்ப்புகள் அதிகம்.
அ. புதுமை
இயற்கையின் படைப்பில் என்றும் புதமையானதும் – வியக்கத் தக்கதுமான பொருள் ஒன்றே ஒன்றுதான். அதுவே பெண்மையின் அழகு. எது அழகு என்பதில்மனிதனுக்கு கருத்து வேறுபாடு வரலாம். ஆனாலும் ஒரு பெண்ணின் அழகு என்பது புதுமைதான். அதனால்தான் பெண்ணின் அழகை ஆராய்ந்து பார்க்க இயலாது.
“அம்மா………..டி…………….
பொண்ணுக்குத் தங்க மனசு
பொங்குது சின்ன வயசு
கண்ணுக்கு நூறு வயசு – அவள்
சொல்லுக்கு நாலுவயசு….”
என்று பாடி தன் வியப்பை வெளிப்படுத்துகிறான். வியப்பின் வடிவம் வெளிப்படும் இப்பாடல் ‘ராமன் எத்தனை ராமனடி’ (1970)யில், டி.எம்.எஸ். குரலில் கிடைக்கும்.
ஆ.பெருமை
இயற்கையின் படைப்பில் செயற்றை அழகும் சேர்ந்து மயக்கம் தந்து, மதிமயங்கி வியந்து நிற்கும் மனிதன்,இயற்கையின் பேலெல்லையான காடு, மலை, அருவி இவற்றைக் கண்டு வியப்படையாடு இருக்க முடியுமா? இவையெல்லாம் எப்படி உண்டாயிற்று, யார் உண்டாக்கினார்கள் என்ற கேள்விக்கு விடைதெரியாது, முடிவில்,
“ஆயிரம் கண்போதாது வண்ணக்கிளியே
குற்றால
அழகை நாம் காண்பதற்க வண்ணக்கிளியே”
என வியந்து பாடுகிறான் மனிதன், வியப்பின் வடிவம் கிடைகக்உம் படம் பாவை விளக்கு (1960); குரல் சி.எஸ். ஜெயராமன். இதுவே பெருமை’ கண்டு தோன்றும் வியப்பின் வடிவம்.
இ. ஆக்கம் (செயலால் விளைவது)
தெய்வத்தின் கால் பட்டதும் கல் பெண்ணானதோ இல்லையோ, ஆனால் மனிதனின் கை பட்டும் கல் பெண்ணாவதென்னவோ கண்கூடான உணைம். கரடுமுரடான வடிவமுடைய கருங்கல்லானது, சிற்பக்கலைஞனின் கை வண்ணத்தால் அழகிய வடிவமுடைய பெண்ணாகி, அவனையே மயக்கி, வியப்புக்குள்ளாக்கும். அப்படி வியந்த கலைஞன்தான்-
“மலையே உன் நிலையை நீ பாராய்
கலைஞன் கை உளியாலே
காவியச் சிலையான
மலையே உன் நிலையை நீ பாராய்”
- என வியந்து பாடும் வடிம் வணங்காமுடி (1957) யில் கிடைக்கும்; குரல் சீர்காழி கோவிந்த ராஜன்.
5. அச்சம்
அச்சம் என்பது பேய், விலங்கு, கள்வர், தாய், தந்தை, ஆசிரியன், அரசன், வழிபடும் தெய்வம், தன்தவறு ஆகியவற்றால் விளையும் என்பது தொல்காப்பிய விளக்கம்.
இவ்விளக்கங்கள் அனைத்திற்கும் வடிவம் காணுதல் கடினம் என்பதின் காரணம் என்னவென்று இச்சுவையின் காட்சிகளில் வடுவம் தேடும் பகுதிய்ல கூற்ப்பட்டுள்ளது. அதே அடிப்படையில் பெண் பேய் (பைத்தியக்காரப் பெண்) மற்றும் தன் தவறுக்கான நிலைக்களத்திலிருந்து பிறக்கும் அச்சத்தின் வடிவங்களைக்காணலாம்.
அ. பேய் கண்டு
தன் காதலன் தன்னை ஏமாற்றிவிட்டானென்றும் அவனைப் பழிவாங்காது விடமாட்டேன் என்றும் விரைந்து போனவள் விபத்தில் மாட்டிக்கொண்டு, சுயநினைவை இழந்து பைத்திய்ம கிறாள். அப் பைத்தியக்காரப் பெண் மருத்துவரிடம் அழைத்துச் செல்லப்படும்போது அங்கிருந்த கத்தியை எடுத்து கையில் வைத்துக்கொண்டு மருத்துவரை ஆடவும் – பாடவும் சொல்லி அச்சுறுத்துகிறது. பயந்துபோன மருத்துவர்….
“Ok..Ok……
I wll sing for you
I will dance for you
ஆட்டமென்ன சொல்லு நீ – தோழி நான்
ஆடிடுவேன் கொஞ்ச நாழி! (I wll)”
- என்று பாட ஆரம்பித்து அச்சத்தில் கை, கால்கள் அபிநயக்க வராது ஆடும் இடத்தில் ‘பேய்’ கண்டது போன்ற அச்சத்தின் வடிவத்தைக் காணலாம். இது ‘மனிதரில் மாணிக்கம்(1973) திரைப்படத்தி, டி.எம்.எஸ். குரலில் கிடைக்கும்.
ஆ. தன் தவறுக்காக
ஆத்திரத்தில் மனைவியை ஒரேயொரு அடி அடிக்க சற்றும் எதிர்பாராது இறந்துவிடுகிறாள். அந்த மரணத்தை மறைத்து விடுகிறார். ஆனாலும் அந்தத் தவறு – அந்தக் கொலை அவன் நினைவைவிட்டு அகலாது சுற்றிச்சுற்றி வருகிறது. அச்சத்தால் அவன் நெஞ்சம் தவிக்கிறது. நிம்மதியின்றிப் புலம்புகிறான்.
“எங்கே நிம்மதி! எங்கே நிம்மதி!
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்
எங்கே மனிதன் யாருமில்லையோ
அங்கே எனக்கோர் இடம்வேண்டும்(எங்கே)
………………………………………
எனது கைகள் மீட்டும்போது
வீணை அழுகின்றது
எனது கைகள் தழுவும்போது
மலரும் சுடுகின்றது”
என அச்சத்தால் புலம்பும் வடிவம் ‘புதியபறவை’ (1964) யிலும்,
அதேபோன்று தன் மகளின் வாழ்வைக் கெடுத்தவனை ஒரேயொரு அடி அடிக்க, அவன் இறந்துபோக, சட்டத்தின் பிடியிலிருந்து தப்பி ஓடி, தன் நடை, உடை, பாவனைகளையெல்லாம் மாற்றிக் கொண்டு மீண்டும் அதே ஊருக்கே வந்து தன்னை வளர்த்தவரின் ஆசையை நிறைவேற்றும் செயல்கள் புரியும்போது, தன்னைச் சந்தேகிக்கும் நண்பனிடமிருந்து தப்ப முடியாது என்ற எண்ணமும், தன் மகளைத் தானும், தன்னை அவளும் அறிந்தும் ஒன்று சேர முடியாது சட்டத்தின் நெருப்புப் பார்வை தன்மீது பட்டுக்கொண்டேயிருக்க…. நிம்மதியிழந்தவன்,
“தேவனே! என்னைப் பாருங்கள்
என் பாவங்கள் தன்னை வாங்கிக்கொள்ளுங்கள்
ஆயிரம் நன்மை தீமைகள்
நாங்கள் செய்கிறோம் நீங்கள் அறிவீர்
Oh! My Lord! Please Pardon me
தாய்மடியிலே மழலைகள் ஊமையோ
நான் அழுவதா சிரிப்பதா தேவனே
நின் கருணையே திறக்குமா சந்நிதி
ஏன் கர்த்தரே பிறக்குமா நிம்மதி
Oh! My Lord! Please answer my Prayer
மான்களும் சொந்தம் தேடுதே
இம்
மானிடம் செய்த பாவம் என்னவோ!”
என அச்சத்தால் புலம்பும் நவீன நடிப்பு முறைக்கார்ர்க்களான மேற்கு நாட்டினர் குறிப்பிடும் Gestures எனப்படம் அங்க அசைவுகளை எவ்வாறு இந்த இரண்டு பாடல்களிலும் செய்துள்ளார் என்பதை இனிவரும் இயலில் தனியாகக் காணலாம்.
6. பெருமிதம்
இதனை வீரமென்று பொருள் கூறுகிறார் பேராசிரியர். ‘வீர’மாவது மேலான காரியங்களில் உண்டாகும் மனத்துணிவு என்பது தண்டியலங்காரவுரை. கல்வி, வீரம், இசைமை என்ற பழியொடு வருவன செய்யாது, எத்தனை இன்பம் வந்தாலும் புகழொடு வருவன செய்தல், கொடை, ஆகியவற்றால்’பெருமிதம் தோன்றும்.
‘சொல்லப்பட்ட பெருமிதம்’ என்றதனாற் காம்ம் பற்றியும் பெருமிதம் பிறக
Mr. DHANUSU,
What you are posting here are already tooooo much 'அரைத்த மாவு'.
Please try to give something new and attractive.
மறைந்த திரையுலக சாதனையாளர்களுள் ஒருவரான சிவாஜிகணேசனைப் பற்றி நெகிழ்ந்த பாலுமகேந்திரா!
Balu Mahendra and K. Bhagyaraj எழுத்தாளர் தியோடர் பாஸ்கரன் எழுதிய நூல் வெளியீட்டு விழாவில் சிவாஜியைப் பற்றி நினைவு கூர்ந்த இயக்குநர் பாலு மகேந்திரா கண்ணீர் விட்டு அழுதார்.
சென்னை சத்யம் தியேட்டரில் நேற்று காலை நடந்த இந்த விழாவில் ஏவி எம் சரவணன், இயக்குநர் கே. பாக்யராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.
சிவாஜி கணேசனை பற்றிய புத்தகத்தை பட அதிபர் ஏவி.எம்.சரவணன் வெளியிட, டைரக்டர் கே.பாக்யராஜ் பெற்றுக்கொண்டார்.
மற்ற சாதனையாளர்கள் ஷம்மிகபூர், பி.சி.பரூவா, குருதத், மெகபூப்கான், சோராப் மோடி 5 பேர்களை பற்றிய புத்தகங்களை ஏவி.எம்.சரவணன் வெளியிட, டைரக்டர் பாலு மகேந்திரா பெற்றுக்கொண்டார்.
விழாவில், டைரக்டர் பாலு மகேந்திரா பேசியதாவது:
சின்ன வயதில் நான் தீவிர சிவாஜி ரசிகன். சிவாஜி நடித்த படங்களை முதல்நாள், முதல் காட்சி பார்த்து விடும் தீவிர ரசிகன். சிவாஜி நடித்த படங்களைப் பார்த்துவிட்டு வந்து, அந்த படத்தின் கதைகளை என் நண்பர்களிடம் சொல்வேன்.
எனக்கு 14 வயது இருக்கும். சிவாஜி கொழும்பு வந்திருந்தார். என் குடும்பம் கிழக்கு இலங்கையில் உள்ள ஒரு குக்கிராமத்தில் இருந்தது. சிவாஜியைப் பார்க்கப் போகவேண்டும் என்று என் பெற்றோர்களிடம் அடம் பிடித்தேன். அனுமதி கிடைக்கவில்லை. வீட்டைவிட்டு ஓடிவந்து விட்டேன். எங்க கிராமத்தில் இருந்து கொழும்பு 250 மைல் தூரம்!
கொழும்பு நகரில், மாலையில் நிகழ்ச்சி நடந்தது. அதில் சிவாஜி கலந்துகொண்டார். ஸ்டைலாக மேடை ஏறினார். அந்த மேடையில் இருந்து 2 கிலோமீட்டர் தள்ளி நான் உட்கார்ந்திருந்தேன். சிவாஜி, சிம்மக் குரலில் பேச ஆரம்பித்தார். அவர் பேசி முடிக்கும் வரை நான் இரண்டு கைகளையும் மேலே தூக்கி கும்பிட்டபடி அமர்ந்திருந்தேன் (உடனே உணர்ச்சி வசப்பட்டு கண்ணீர் விட்டு அழுதார்...).
இன்றைய நடிகர்களுக்கெல்லாம் நடிப்பில் வழிகாட்டி சிவாஜிதான். அவர் சாகவில்லை. நம்முடன் வாழ்ந்துகொண்டிருக்கிறார். சிவாஜி போன்ற மேதைகள் வாழ்ந்த சினிமாவை பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் பாடமாக வைக்க வேண்டும்.
ஒருமுறை நான் பிரபுவை பார்ப்பதற்காக, அவர்கள் வீட்டுக்கு சென்றேன். அப்போது சிவாஜி மாடியில் இருந்து இறங்கி வந்தார். நான், பிரபுவைப் பார்க்க வந்ததாக அவரிடம் கூறினேன். ஏனப்பா, என்னைப் பார்த்தால் நடிகராக தெரியவில்லையா? என்றார் அவருக்கே உரிய தோரணையில்.
சிவாஜியை வைத்து படம் டைரக்டு செய்ய முடியவில்லை என்பதுதான் என் வாழ்க்கையில் எனக்கு மிச்சமிருக்கும் ஒரே வருத்தம் என்றார் பாலுமகேந்திரா.
Print | E-mail
திங்கட்கிழமை, 5, அக்டோபர் 2009 (8:19 IST)
சிவாஜியுடன் நடிக்க ஆசைப்பட்டேன்: நெப்போலியன்
மறைந்த நடிகர் சிவாஜிகணேசனின் 81/2 அடி உயர முழு உருவ வெண்கல சிலை மதுரை ராஜாமுத்தையா மன்றம் அருகே அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலை திறப்பு விழா அக்டோபர் 4ஆம் தேதி மாலை நடந்தது.
விழாவுக்கு நடிகர் கமல்ஹாசன் தலைமை தாங்கினார். தமிழக செய்தித்துறை அமைச்சர் பரிதிஇளம்வழுதி முன்னிலை வகித்தார். சிவாஜிகணேசனின் மூத்த மகன் ராம்குமார் வரவேற்று பேசினார்.
சிலையை மத்திய உரம் மற்றும் ரசாயனத்துறை அமைச்சர் மு.க.அழகிரி திறந்து வைத்தார். சிலை திறப்பு விழாவில் பேசிய மத்திய அமைச்சர் நெப்போலியன்,
சிவாஜியுடன் நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். ஆனால் என்னால் அது முடியாமல் போய் விட்டது. ஆனால் அவருடைய கலை வாரிசு கமலுடன் சேர்ந்து விருமாண்டி, தசாவதாரம் படத்தில் நடித்து இருக்கிறேன். தசாவதாரம் படத்தில் நான் யானை மீது அமர்ந்து நடித்துக் கொண்டு இருந்தேன். அந்த யானை அங்கு, இங்கும் ஆடியது. இதனால் நான் கீழே விழும் சூழ்நிலை அடிக்கடி ஏற்பட்டுக் கொண்டு இருந்தது. இது குறித்து நான் யானை பாகனிடம் கேட்டேன். அதற்கு யானை பாகன், இந்த யானை கேரளாவை சேர்ந்தது, இங்கு வெப்பம் அதிகமாக இருப்பதால், யானையால் தாங்க முடியவில்லை. யானைக்கு மதம் பிடித்தாலும் பிடிக்கலாம் என்று கூறினார். இதனால் எனக்கு பயம் அதிகமாகியது. அதனால் யானைக்கு தினமும், வாழைத்தார்களை கொடுத்து, அதை நண்பனாக்கி கொண்டு படத்தில் நடித்தேன்.
இதே போல் சிவாஜி கணேசன் சரஸ்வதி சபதம் படத்தில் நடித்துக் கொண்டு இருந்தார். அதில் ஒரு காட்சியில் யானை சிவாஜியின் மேல் கால் வைப்பது போல் உள்ளது. இந்த காட்சியில் சிவாஜி நடிப்பதற்கு முன், இயக்குனர் ஏ.பி.நாகராஜன் அந்த யானையை கொண்டு ஒத்திகை பார்த்தார். அப்போது, அந்த சிவாஜிகணேசனுக்குப் பதில் போடப்பட்டிருந்த மேஜையை யானை மிதித்து விட்டது. அதனால் நீங்கள் இந்த காட்சியில் நடிக்க வேண்டாம் என்று கூறினார். ஆனால் சிவாஜி மிகுந்த தைரியத்துடன் அந்த காட்சியில் நடித்தார் என்றார்.
தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும் * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
உள்ளதைச் சொல்கிறேன் மகா கலைஞன்!
1974-ஆம் ஆண்டு சிவாஜி நடித்து வெளிவந்த படங்களில் சினிமா ரசிகர்கள் எளிதில் மறக்க முடியாத படம் "தங்கப் பதக்கம்'. "வீரபாண்டிய கட்டபொம்மன்', "கப்பலோட்டிய தமிழன்' வ.உ.சி. ஆகியோருடைய பெயரைச் சொன்னவுடன் எப்படி எல்லோர் மனதிலும் அந்த வேடங்களை ஏற்ற நடிகர் திலகத்தின் தோற்றம் நிழலாடுகிறதோ, அதைப் போன்று கண்ணியமிக்க காவல்துறை அதிகாரி என்றவுடன் எல்லோர் மனதிலும் தோன்றக் கூடிய பெயர் எஸ்.பி.செüத்ரிதான். நடை, உடை, தோற்றம், பார்வை என்று எல்லா வகையிலும் "தங்கப் பதக்கம்' செüத்ரிக்கு உயிர் கொடுத்தவர் சிவாஜி.
"தங்கப் பதக்கம்' நாடகம் முதலில் நாடகமாக நடிக்கப்பட்டு பின்னர் திரைப்படமாக உருவாக்கப்பட்டது. முதலில் "தங்கப் பதக்கம்' நாடகத்தில் கதாநாயகனாக நடித்தவர் செந்தாமரை.
அப்போது அந்த நாடகத்தின் பெயர் "தங்கப் பதக்கம்' அல்ல; "இரண்டில் ஒன்று'. செந்தாமரையின் 42-வது நாடக நிகழ்ச்சியின்போது நாடகம் பார்க்க நடிகர் திலகம் வந்தார். நாடகத்தைப் பாராட்டி ரசிகர்கள் கைதட்டி உற்சாகப்படுத்துவதை உன்னிப்பாக பார்த்தார்.
நாடகம் முடிந்ததும் மேடைக்கு வந்த சிவாஜி அந்நாடகத்தின் இயக்குனரான எஸ்.ஏ.கண்ணனையும், செந்தாமரையையும் அழைத்து, ""நாளைக்கு எங்கே நாடகம்?'' என்று கேட்டார். அவர்கள் கூறினார்கள். நாடகத்தை நாளையோட நிறுத்திக்கங்க. இந்த நாடகத்தை நம்ம சிவாஜி நாடக மன்றம் போடட்டும். எஸ்.பி.செüத்ரியாக நானே நடிக்கிறேன்'' என்றார். எஸ்.ஏ.கண்ணன், செந்தாமரை ஆகிய இருவருமே சிவாஜி நடத்தி வந்த சிவாஜி நாடக மன்றத்தில் பணியாற்றியவர்கள்.
அந்த நாடக மன்றம் கலைக்கப்பட்டதால்தான் தனியாக நாடகக் குழு ஆரம்பிக்கும் எண்ணமே அவர்களுக்கு ஏற்பட்டது. ஆகவே சிவாஜியே தனது நாடகக் குழுவின் சார்பில் அந்த நாடகத்தை நடத்துவதாகச் சொன்னதும் இருவருமே மகிழ்ச்சியோடு ஒப்புக் கொண்டனர். "இரண்டில் ஒன்று' "தங்கப் பதக்கம்' என்று பெயர் மாறியது.
அடுத்து மூன்று நாட்கள் படப்பிடிப்பு முடிந்து வந்த பிறகு நாடக வசனங்களை படிக்கச் சொல்லி கண்மூடி கேட்டார் சிவாஜி. நான்காம் நாள் மேடையில் பிரதான ஒத்திகை. ஐந்தாம் நாள் "தங்கப் பதக்கம்' நாடகம் தலைவர் காமராஜர் தலைமையில் மியூசிக் அகாடமியில் அரங்கேற்றம் கண்டது. அந்த தினத்தை "சினிமாவும் நானும்' என்ற தனது நூலில் கதாசிரியர் மகேந்திரன் மிகவும் ரசனையோடு வர்ணித்துள்ளார்.
""அரங்கேற்ற தினத்தன்று ஒப்பனை அறையில் சிவாஜியை எட்டிப் பார்த்தேன். ஒப்பனை நடந்து கொண்டிருந்தது. கொஞ்சம் கொஞ்சமாக அவரது உடம்பு "எஃகு' போல் நிமிருகிறது. மூன்று நாள்தானே வசனம் படிக்கச் சொல்லி கேட்டார். எதையும் மறக்காமல் எப்படி வசனம் பேசுவார்? என்ற மாதிரியான கேள்விகள் எனக்குள் இருந்தது. மணி அடித்துவிட்டது. நாடகம் தொடங்கியது. நான் எழுதிய ஒரு வசனத்தைக் கூட அவர் மறக்கவில்லை. எனக்குள் பிரமிப்பு! எப்படி இது சாத்தியம்? நாடகம் முடியும்வரை கைத்தட்டல் ஓயவில்லை.
நாடகம் முடிந்து ஒப்பனை அறைக்குள் போனேன். ஒப்பனை கலைத்து விட்டு களைப்போடு உட்கார்ந்திருந்தார் நடிகர் திலகம். நாடகம் முழுக்க அவர் காட்டிய கம்பீரத்திற்கும், ஓப்பற்ற நடிப்பிற்கும் அவர் தனது உடல் சக்தி அத்தனையையும் தந்து விட்டு இப்போது ஒப்பனை கலைந்ததும் செüத்ரியாக வாழ்ந்து நடித்தவர் தனது இயல்பு நிலைக்குத் திரும்பி அவர் அவராகி விட்டார் என்று தெரிந்தது. என்னைப் பார்த்ததும், ""என்னப்பா உன் டயலாக்கை எல்லாம் ஒழுங்காக பேசினேனா?'' என்று ஒரு மாணவனைப் போல கேட்டார் அந்த மாபெரும் நடிகர். என் கண்கள் கலங்கின.
தமிழ் சினிமா உலக அளவில் தன் நெஞ்சை நிமிர்த்திக் கொள்ள அவதரித்த அற்புதக் கலைஞனே நடிகர் திலகம் சிவாஜி கணேசன்.
வாழ்வில் எனக்குக் கிடைத்த வரப்பிரசாதம் ஒன்று இருக்குமென்றால் அது தனது கதையின் கதாபாத்திரமேற்று நான் எழுதிய வசனத்தை அந்த மகா கலைஞன் பேசியதுதான். அதுவே எனக்குக் கிட்டிய மிகப் பெரும் பாக்கியம் என்று சொல்வேன்.
ஒரு திருவள்ளுவர்
ஒரு ஷேக்ஸ்பியர்
ஒரு மைக்கேல் ஏஞ்சலோ
ஒரு பீத்தோவன்
ஒரு நடிகர் திலகம் சிவாஜி கணேசன்
இப்படித்தான் உலக வரலாறு சொல்லப்பட முடியும்'' என்று பெருமிதத்துடன் அந்நூலில் குறிப்பிட்டுள்ளார் கதாசிரியர் மகேந்திரன்.
1975-ல் சிவாஜி நடித்து வெளிவந்த ஏழு படங்களில் "அவன்தான் மனிதன்', "அன்பே ஆருயிரே', "டாக்டர் சிவா' ஆகிய மூன்றும் ஏ.சி. திருலோகசந்தர் இயக்கத்தில் வெளிவந்தன. இதில் "அவன்தான் மனிதன்' படத்திற்கு அமைந்த கூடுதல் சிறப்பு என்னவென்றால் அது சிவாஜியின் 175-வது படம்.
1976 முதல் 1978 வரை வெளிவந்த 19 சிவாஜி படங்களில் வெற்றிப் படங்களும் கலந்திருந்தது. அவர் மலையாளத்தில் நடித்த முதல் படமான "தச்சொள்ளி அம்பு' 1978-ல்தான் வெளியாகியது.
1979-ஆம் ஆண்டின் துவக்கத்தில் வெளியான சிவாஜி கணேசனின் 200-வது படமான "திரிசூலம்' 200 நாட்கள் ஓடியது மட்டுமின்றி அவரது திரையுலக வரலாற்றில் மறக்க முடியாத வசூல் சாதனையை செய்தது.
சிவாஜியின் கலைப் பயணத்தில் அவர் நடித்த 287 திரைப்படங்களில் சிறந்த பத்து படங்களைப் பட்டியலிட வேண்டுமென்றால் பாராதிராஜா இயக்கிய "முதல் மரியாதை' படத்தை நீக்கி விட்டு எவராலும் பட்டியல் போட முடியாது. மிகவும் யதார்த்தமான நடிப்பை அப்படத்தில் வழங்கியிருந்தார் சிவாஜி.
இப்போதெல்லாம் ஒரு படத்தின் படப்பிடிப்பு 200 முதல் 300 நாட்கள் நடைபெறுகிறது. "முதல் மரியாதை' என்ற திரைக் காவியத்தை உருவாக்க பாரதிராஜா எடுத்துக்கொண்ட நாட்கள் எவ்வளவு தெரியுமா? 84 நாட்கள்! அப்படத்தின் பாடல் பதிவு ஆரம்பமானதிலிருந்து 84-வது நாள் படம் வெளியாகி விட்டது. மொத்த நாட்களே 84 தான் என்னும்போது படப்பிடிப்பு நடைபெற்ற நாட்கள் என்றால் அதிகபட்சமாக 50 நாட்கள் இருந்திருக்கும்.
அவ்வளவுதான். 50 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்ற அப்படம் 175 நாட்களுக்கு மேல் ஓடி வசூலில் சாதனை படைத்தது மட்டுமின்றி மிகச் சிறந்த படைப்பு என்ற கலைத்துறை விமர்சகர்களின் பாராட்டையும் பெற்றது. "முதல் மரியாதை'யைத் தொடர்ந்து வெளிவந்து வெள்ளிவிழா கொண்டாடிய படம் "படிக்காதவன்'. இத்திரைப் படத்தில் ரஜினிகாந்த்தோடு நடித்திருந்தார் சிவாஜி.
1986-87 ஆகிய இரு ஆண்டுகளில் சிவாஜி நடித்த "சாதனை', "மருமகள்', "விஸ்வநாத நாயுக்குடு' என்ற தெலுங்கு படம், "ஜல்லிக்கட்டு' ஆகிய நான்கும் 100 நாள் படங்களாக அமைந்தன. இதில் "ஜல்லிக்கட்டு' படத்திற்கு கிடைத்த தனிச்சிறப்பு என்னவென்றால் வள்ளுவர்கோட்டத்தில் நடைபெற்ற இத்திரைப்படத்தின் 100-வது நாள் விழாவிற்கு தலைமை தாங்கி பரிசுக் கேடயங்களை வழங்கியவர் அன்றைய முதல்வரான புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். சிவாஜி கணேசன் நடித்த திரைப்படத்தின் 100-வது நாள் விழாவில் எம்.ஜி.ஆர். கலந்து கொண்ட ஒரே திரைப்பட விழா "ஜல்லிக்கட்டு' விழாதான். எம்.ஜி.ஆர். இறுதியாக கலந்துகொண்ட திரைப்பட விழாவும் அதுதான்.
1952 முதல் 1999 வரை 287 படங்களில் நடித்த சிவாஜி ஏற்ற வித்தியாசமான பாத்திரங்கள் 200-க்கும் மேலிருந்தது. ""அவர் நடிக்காமல் எங்களுக்கு விட்டுச் சென்ற பாத்திரப் படைப்புகளே இல்லை'' என்றுதான் ரஜினி, கமல் முதற்கொண்டு இன்றைய இளம் தலைமுறை நடிகர்கள் வரை எல்லோரும் கூறுகின்றனர்.
ஆனால் அப்படிப்பட்ட மாபெரும் கலைஞனுக்கு சிறந்த நடிகர் என்ற தேசிய விருது வழங்கப்படவே இல்லை என்பது நமது நாட்டில் விருதுகள் எந்த அடிப்படையில் வழங்கப்படுகின்றன என்பதற்கு ஒரு சான்றாக இன்றுவரை இருந்து கொண்டிருக்கிறது என்பது உண்மை.
""ஒரு கலைஞனை சிறந்த நடிகராக மக்கள் ஏற்றுக் கொள்ளும்போதுதான் அந்த கலைஞன் முழுமையடைகிறான். அதுதான் அங்கீகாரம். தான் ஏற்ற பாத்திரத்தை உணரும்போது தான் அதில் முழுமையாக ஒரு நடிகன் வெளிப்பட முடியும். அதுதான் அவனுக்கு அங்கீகாரத்தைப் பெற்றுத் தரும். எத்தனையோ பேர் நடிக்க வருகிறார்கள். எல்லோரையுமா சிறந்த நடிகன் என்று மக்கள் ஏற்றுக் கொள்கிறார்கள்?
அங்கீகாரம் கிடைப்பதற்கும், விருது கிடைப்பதற்கும் சம்பந்தமில்லை. யாரோ ஒருவர் கஷ்டப்பட்டு கொடுத்தாத்தான் விருது. அர்ஜுனா விருது, பாரத் விருது போன்றவற்றை பலருக்குக் கொடுத்திருக்கிறார்கள். அந்த விருதுகள் பெற்ற எல்லோருமா அதற்குத் தகுதியானவர்கள்?
ஒரு கலைஞனுக்கு விருது என்பது அவன் வேகமாக வளரும் இளம் வயதில் கிடைக்க வேண்டும். அப்போதுதான் அதை அவன் கொண்டாட முடியும். விருது தந்த ஊக்கத்தில் அவன் கூடுதலாகப் பரிமளிப்பான். கமல், ரஜினி, பிரபு, சத்யராஜ் போன்ற சின்னப் பிள்ளைகளுக்கு விருது கொடுத்தால் அவர்கள் கொண்டாடுவார்கள். நான் இதையெல்லாம் கடந்தவன்.
ஆனாலும் ஒன்றை நான் சொல்லித்தான் ஆக வேண்டும். உரிய காலத்தில் விருது கிடைக்கவில்லை என்ற ஆதங்கமும், வருத்தமும் என மனதின் ஓரத்தில் "விண் விண்' என்று இருக்கதான் செய்கிறது. நானும் மனுஷன்தானே! இதை மறைத்தால் என்னைவிட "அயோக்கியன்' இருக்க முடியாது'' என்று 1997-ஆம் ஆண்டு ஒரு பத்திரிகைப் பேட்டியில் தேசிய விருது குறித்து தனது எண்ணங்களைப் பதிவு செய்திருக்கிறார் சிவாஜி.
இந்தியத் திரைவானின் நட்சத்திரங்கள் அனைவரும் பார்த்து பிரமித்த நடிப்புச் சக்ரவர்த்தியான சிவாஜியைக் கவர்ந்த நட்சத்திரங்கள் யார் யார் தெரியுமா? ஆங்கிலப் பட நடிகர்களில் சார்லஸ் போயர், ரோனால்ட் கோல்மென் ஹிந்தி நடிகர்களில் தீலிப் குமார், சஞ்சீவ் குமார், நர்கீஸ் தமிழில் ராதா அண்ணன், டி.எஸ்.பாலையா. இவர்கள் இரண்டு பேருக்கும் ஈடான நடிகர்களே இல்லை என்பதுதான் சிவாஜியின் கருத்தாக இருந்திருக்கிறது.
நடிப்பில் தனது வாரிசாக யாரை சிவாஜி அடையாளம் காட்டுகிறார்?
""அதெல்லாம் சும்மா ஸôர். அதென்ன சொத்தா வைத்திருக்கிறோம்... வாரிசு என்று சொல்வதற்கு? வாரிசு என்று சொல்ல முடியாது. வித்தியாசமாக மேக்-அப் போட்டுக்கொண்டு, அதன் மூலம் ரசிகர்களை ஈர்க்கும் நடிப்பைத் தருவது கமல்தான்'' என்று ஆணித்தரமாக தன் அபிப்ராயத்தைப் பதிவு செய்துள்ளார் சிவாஜி.
""கலைமாமணி, பத்மஸ்ரீ, பத்மபூஷன், டாக்டர், செவாலியே, தாதா சாகேப் பால்கே'' போன்ற பல விருதுகளைப் பெற்ற சிவாஜி அவர்களின் சாதனைகளில் தலையாயதாக நடிகர் சங்கத்திற்கு கட்டிடம் கட்டிய சாதனையைக் கூறலாம்.
அப்படிப்பட்ட அரும்பெரும் சாதனையைச் செய்த சிவாஜி பின்னர் வேதனையுடன் நடிகர் சங்கத்தை விட்டு வெளியேறினார். இன்னும் சரியாகச் சொல்வதென்றால் அவர் வெளியே செல்வதற்கான சூழ்நிலை வலிந்து உருவாக்கப்பட்டது. அது குறித்து "எனது கலைப் பயணம்' என்ற தனது வாழ்க்கை வரலாற்று நூலில் விவரித்துள்ளார். வி.கே.ராமசாமி.
Dear Mr. DHANUSU,
Welcome back ! Thanks for your informative posts !
As a senior hubber, your contribution to this thread is very much wanted in the present as well as in the future.
As usual, enrich us with your esteemed posts !
Warm Wishes & Regards,
Pammalar.
Dear rajeshkrv,
Thank you very much for "THIRUMBIPPAAR" movie video !
டியர் ராகவேந்திரன் சார்,
திராவிட முன்னேற்றக் கழக மேடைப் பேச்சாளரான நடிகர் நாகராஜன் பற்றிய மேலதிக தகவலுக்கு நன்றி !
நடிகர் திலகத்தின் 83வது ஜெயந்தி நிறைவு மற்றும் 84வது ஜெயந்தியின் தொடக்க விழா நிகழச்சிகள் குறித்த பட்டியல் அருமை. எல்லா விழாக்களும் இனிதே நடைபெற இதயபூர்வமான வாழ்த்துக்கள் !
அன்புடன்,
பம்மலார்.
Dear Harish
my mail id is kumareshan.s @ retail.adityabirla.com
prabhukumar234@gmail.com
regards
kumareshanprabhu