-
Thavaputhalvan Photo album
-
Thavaputhalvan Photo album continue
-
Thavapudhalvan Mania
Thanks Gopal sir, Ragavendran sir for uploading images of Pammalar sir & Vasu sir
-
தவப் புதல்வன்(தொடர்ச்சி)
ஒரு மத்யதர குடும்பத்து கல்யாண விருந்துக்கு செல்கிறீர்கள் என்று வைத்து கொள்ளுங்கள். உங்களுக்கே தெரியும் traditional மெனு .breakfast ,டின்னெர் எல்லாமே நீங்கள் எதிர்பார்த்த படியே. ஆனால் உப்பு,உறைப்பு,இனிப்பு எல்லாமே சரியான விகிதத்தில் கலந்து சுவை கூடுதலாய், பரிமாறும் விதமும் பாந்தமாய் இருந்தால் மனதுக்கு ஒரு இதம் ஏற்படுமல்லவா?அதைத்தான் தவப்புதல்வனில் ரசிகர்கள் உணர்ந்தனர்.தூயவன் திரைக்கதை படு கச்சிதம்.
நிர்மல் இசையறிவு மிகுந்த ,இசைக்கருவிகள் பலவற்றில் இயல்பான வாசிப்பு திறமை கொண்ட ,அன்னையுடன் தனித்து வாழும் ஒரு பணக்கார இளைஞன்.டாக்டர் வசந்தி அவனை மணக்க இருக்கும் மாமன் மகள்.இருவருமே ஒருவரின் திறமை மீது மற்றவர் மரியாதை வைத்து,ஒருவரின் முன்னேற்றத்தில் மற்றவர் உண்மை அக்கறை செலுத்தும் தூய அன்பு கொண்டவர்கள்.
நிர்மல் தன் நண்பன் james வேண்டுகோளை தட்ட முடியாமல் ,அவன் ஹோட்டல் இல் trumpet வாசிக்க ஒப்பு கொள்ள,அதன் மூலம் நடன காரி விமலா அவள் குடிகார புல்லுருவி அண்ணன் ஜம்பு இவர்களுடன் அறிமுகமாகி ,அவர்களுடன் உரிய எச்சரிக்கையுடன் நடக்கிறான். இடையில், நிர்மலுக்கு அவன் பரம்பரை நோயான மாலைக்கண் தாக்க,தன் தந்தையை தாக்கி விபத்திலும் கொன்ற அந்த நோய் தாயை சித்த சுவாதீனம் இழக்க வைத்ததையும், தாய் இந்த உண்மையை தாங்க மாட்டாள் என்பதையும் ,வசந்தியிடம் ரகசியம் தங்காது என்பதால் இரவுகளில் தான் வாசிக்கும் ஹோட்டல் அறையில் தங்கி ரகசியம் காக்கிறான்.தற்செயலாய் திருட வரும் ஜம்புவிற்கு இந்த உண்மை தெரிய விமலா இதை வைத்து ,வசந்தியை அறைக்கு வரவழைத்து நிர்மல் தன்னுடன் அந்தரங்கமாய் இருப்பது போல தோற்றம் கொடுத்து அவர்கள் கல்யாணத்தை நிறுத்துகிறாள்.
நிர்மல் தாய் விரும்பும் பெண்ணிற்கே கல்யாணம் செய்து சொத்தும் சேரும் என்பதால் ,வசந்தியின் கார் முன் தற்கொலை செய்ய வருவது போல் நடித்து தனக்கும் நிர்மலுக்கும் தொடர்புண்டு என்று நிருபித்து, நிர்மலை மிரட்டி வீட்டிற்கே வருகிறாள்.james ,விமலாவை அங்கிருந்து விரட்ட அவள் அண்ணன் போல் விமலாவுடன் வருகிறான். விமலாவை விரட்ட சதி செய்யும் ஒவ்வொரு முறையும் சந்தர்ப்பம் விமலாவிற்கே சாதகமாகி ,கல்யாணம் வரை போக, தற்செயலாய் உண்மை வசந்திக்கு தெரிய, ஒரு வெளிநாட்டு டாக்டர் சிகிச்சையால் நிர்மல் குணமாகி ,விமலாவின் குட்டு வெளியாகி வசந்தியும் நிர்மலும் சேர james அரசியல் பஞ்ச் காமெடியுடன் சுபம்.
எனக்கு நினைவு தெரிந்த வரை ஒவ்வொரு அசைவுக்கும் லாஜிக் பார்த்து,மிக சுவையான திருப்பங்கள்,மனதை தொடும் பன்முகம் கொண்ட காட்சியமைப்புகள் என்று ஒரு சில மசாலா குடும்ப படங்களே ,ஒரு action பட விறுவிறுப்புடன் அமைந்தன. அவற்றில் ஒன்று தவப்புதல்வன். ஆரம்பம் முதல் இறுதி வரை தொய்வில்லாத திரைக்கதை,அளவான வசனங்கள்.உறுத்தாத executive வகை இயக்கம்.
சுவையான காட்சிகளுக்கு பஞ்சமே வைக்காத படம்.love is fine நடனம், வசந்தியுடன் ஹோட்டல் trumpet வாசிப்பதை வீட்டில் சொல்லாமல் மாட்டும் இடம், வாசு திருட வரும் இடத்தில் கண்தெரியாமல் சிவாஜி அவருடன் மோதும் இடம்,
அம்மாவுக்கு தவறுதலாய் விஷ மருந்து கொடுக்க முயலும் காட்சி ,தான்சேன் காட்சி,விமலா திட்டமிடும் காட்சிகள்,james (சோ),மனோரமா வசந்தியை மாட்ட வைக்க பார்த்து backfire ஆகும் சுவாரஸ்யம் (முக்தா பஞ்ச் ),சிவாஜியை சகுந்தலா ( பிரசித்தி பெற்று தொடர்ந்த ஜோடியின் முதல் படம்) tease பண்ணும் காட்சிகள்,தான் கொடுத்த கம்பு தனக்கே உதவும் காட்சி,சிவாஜி வாத்தியத்தை உடைத்து விரக்தியை வெளிப்படுத்த கே.ஆர்.விஜயா அதே பாணியில் தன் மருத்துவ கருவிகளை உடைக்கும் காட்சி,கிண்கிணி கிண்கிணி கிறிஸ்மஸ் தாத்தா காட்சி, போட்டி பாடல் காட்சி ,இரு பகுதி கொண்ட விறு விறு இறுதி காட்சி , வசந்தியின் நல்ல நோக்கம் கேள்விக்குள்ளாவது என்று பல நல்ல காட்சிகள் சிறந்த முறையில் திரைக்கதையுடன் இணைந்தே பயணிக்கும். மற்ற முக்தா படங்களை விட கூடுதல் professionalism தெரியும்.
சிவாஜியின் சிகை அலங்காரம்(முக்தா சிவாஜிக்கு நிறைகுடத்தில் ஆரம்பித்த பிரத்யேக ஸ்டைல் அக்கால கிருதாவுடன்),
வித விதமான டிசைன் குர்தா டைப் மேலுடை,இளமை தெறிக்கும் அழகு,அமெரிக்கையான நடிப்பு,படம் முழுதும் பிரமாதம். மாலைக்கண் நோய்க்கு முழு விளக்கம், கூடுதல் பிரச்சினை என்று மெடிக்கல் ஆகவும் நன்கு டீல் பண்ண பட்ட படத்தில் (Nyctalopia ,xerosis ,edema ) சிவாஜி dry eyes பிரச்சினையில் கண்ணை கொட்டுவதும், கண் தெரியாத போது காதை சிறிதே திசை நோக்கி சப்தம் உணர்வது என்று கலக்குவார். துள்ளல் ஸ்டைல் நானொரு காதல் சந்நியாசி,தான்சேன் இசை கேட்டால், உருக்க கிண்கிணி,முத்திரையுடன் போட்டி பாடல் காட்சி என ரசிகர்களுக்கு full மீல்ஸ் . வாத்தியங்களை உடைத்து முடித்து கடைசியாக கிடாரை எடுத்து வசந்தி போய் விட்டதை உணர்ந்து கடைசி நிமிடத்தில் உடைக்காமல் அணைத்து கொள்ளும் பரவச உருக்க ஈடுபாடு,கடைசியில் தன்னை படுத்தி எடுத்தாளே என்று விமலா கண்ணை கட்டி பரபரப்பாய் பழி வாங்கும் டீசிங் என்று இந்த படத்திலும் அவர் கொடி நாட்டி விடுவார்.
மெல்லிசை மாமன்னர் இந்த இசையுடன் சம்பந்தமுள்ள படத்திற்கு நன்றாக பங்களித்துள்ளார்.(திருப்தியா கார்த்திக் சார்?)
சோ,மனோரமா,வாசு ,பண்டரிபாய்,செந்தாமரை அவரவர் பங்கை உரிய முறையில் தர, விஜயா,சகுந்தலா செமையாய் ஸ்கோர் செய்வார்கள்.இந்த படத்திற்கு விஜயா ஓகே.(டூயட் கிடையாது)
வழக்கமாய் வெற்றி பெரும் முக்தா formula ,இந்த படத்தை சரியான விகித உணர்ச்சி,entertainment ,விறுவிறுப்பு, பாத்திர படைப்பில் முழுமை ,படம் முழுதும் தெரியும் sincerity &seriousness தன்மை இவற்றுடன் ரசிகர்கள்,பொதுமக்கள் (அனைத்து வயதினர்) திருப்தி தந்ததால் பெரிய ஹிட் என்ற status எட்டியது.
-
Thavaputhalvan photo album continue...
-
அடுத்து வாசு சாரின் அந்தோணி என்கிற கோடீஸ்வர அருண் உரிய முறையில் மனோதத்துவ முறையில் அலசி கூறு போட படுவார்.
தொடர்ந்து பாலாஜியுடன் அவர் ராஜா,நீதிக்கு ஒன்றாக ராஜநீதி புரிந்து, கோடீஸ்வர(முதல் கருப்பு வெள்ளை கோடீஸ்வரன்) மூக்கையன் புகழ்பாடி 1972 நிறைவு பெரும். வெள்ளிவிழா(வசந்த மாளிகை) தொடங்கி வெள்ளிவிழா(பட்டிக்காடா பட்டணமா) முடிவு ----1972.
-
Quote:
Originally Posted by
Gopal,S.
அலசி கூறு போட படுவார்..
முள்ளை வளைத்ததும் மகுடம் தரித்ததும்
ஆணி அடித்ததும் சிலுவை அறைந்ததும்
அன்று நடந்தது ஆவி துடிக்குது
இன்று நடப்பது நெஞ்சு வெடிக்குது
:)
-
-
-
Quote:
Originally Posted by
joe
இந்த கட்டுரையில் சில தவறுகள் உள்ளன.
1)நடிகர்திலகத்துடன் ரஜினி இணைந்த படம் நான் வாழ வைப்பேன். சிவாஜிதான் ஹீரோ.
2)சாதனை மறக்க பட்ட படமல்ல. நூற்று இருபத்தைந்து நாட்கள் ஓடிய பேச பட்ட படம்.
3)இளைய ராஜா இசைத்துறையில் நுழைந்த அடுத்த வருடமே சிவாஜி பட வாய்ப்பு. இந்த இணைவில் 23 படங்கள் 1999 வரை. சிவாஜி 1976-1999 நடித்த 100 படங்களில் இது 23 %.
4)எம்.எஸ்.விஸ்வநாதன் -சிவாஜி productions ஒரு வின்னிங் combination (திரிசூல வெற்றி).அந்த வருட இளைய ராஜா இசையில் வேறெந்த படமும் இதன் வெற்றியை தொடவில்லை. எனினும் அறுவடை நாள் முதல் கிட்டத்தட்ட 6 படங்களுக்கு இளைய ராஜா சிவாஜி பிலிம்சால் பயன் படுத்த பட்டார்.
5) சிவாஜி படங்களுக்கு யார் இசையமைத்தாலும் சிவாஜிதான் ஹீரோ. யாரும் dominate செய்வதை கனவு கூட காண முடியாது.(மோகன்,ராமராஜன் படங்களில் இது சாத்தியம் இசையமைப்பாளருக்கு)
-
இளைய ராஜா இசையில் மிக சிறந்த நடிகர்திலகம் பட பாடல்கள்.
1)பூங்காற்று திரும்புமா
2)வெட்டிவேரு வாசம்
3)ராசாவே உன்னை நம்பி
4)எங்கெங்கோ செல்லும் என் எண்ணங்கள்
5)எந்தன் பொன் வண்ணமே
6)பூவிழி வாசலில்
7)நல்லவர்கெல்லாம்
8)நெஞ்சில் உள்ள காயமொன்று
9)இங்கே நான் கண்டேன் அனார்கலி
10)ஒ மானே மானே மானே
11)மாலை தென்றல்
12) மான் கண்டேன் மான் கண்டேன்
13)சிந்து நதிக்கரை ஓரம்
14)பேசாதே வாயுள்ள ஊமை
15)ஆராரிரோ பாடியதாரோ
-
deepam
Quote:
Originally Posted by
Gopal,S.
இளைய ராஜா இசையில் மிக சிறந்த நடிகர்திலகம் பட பாடல்கள்.
1)பூங்காற்று திரும்புமா
2)வெட்டிவேரு வாசம்
3)ராசாவே உன்னை நம்பி
4)எங்கெங்கோ செல்லும் என் எண்ணங்கள்
5)எந்தன் பொன் வண்ணமே
6)பூவிழி வாசலில்
7)நல்லவர்கெல்லாம்
8)நெஞ்சில் உள்ள காயமொன்று
9)இங்கே நான் கண்டேன் அனார்கலி
10)ஒ மானே மானே மானே
11)மாலை தென்றல்
12) மான் கண்டேன் மான் கண்டேன்
13)சிந்து நதிக்கரை ஓரம்
14)பேசாதே வாயுள்ள ஊமை
15)ஆராரிரோ பாடியதாரோ
innum sila paadalgal thiru gopal sir .
andhapurathil oru maharajan (hope it is one of the best mayamalava gowlai )
http://www.thehindu.com/features/fri...cle2618199.ece
“Anthapurathil oru maharani” from the film “Deepam,” in the music of Ilayaraja and sung by T.M.S. and S. Janaki, is an example of a free-flowing Mayamalavagowla. Starting in the top sadja, the opening phrase “ss n d p d m p,p,p” straightaway establishes the stamp of the raga. This song flagged off a successful innings in Mayamalavagowla for the maestro, and he would compose, over the next few decades, some of his best-known tunes in this scale.
raja yuva raja
kanna un leela vinotham inge unnale uruvatche pavam - nallodhor kudumbam
chacha chaca
ennodu padungal nalvazhudu koorungal - nan vazha veipan
thiru teril varum silayio - (seems to be mohanam)
vasantha kala kolangal - (like madha un koilil in atchani)
(seems to be Suddha Dhanyasi)
-
ஜீகே சார்,
தாங்கள் குறிப்பிட்ட படி சராசரி நல்ல பாடல்கள் உண்டு (ராகம் தழுவிய)
யோசியுங்கள்
நாத நாம கிரியா ராகத்தில் அமைந்த பொன்வண்ணமே very unique .இதுவே என் தேர்வின் அடிப்படை.
மோகனத்தில் நிலவும் மலரும் பாடுது(ஏ .எம்.ராஜா),கம்பன் ஏமாந்தான் (எம் எஸ்.வீ),மலர்கள் நனைந்தன பனியாலே(கே.வீ.எம்),நின்னுகோரி (இ..ரா) என்று பல சிறந்த பாடல்கள்.
மாயா மாளவ கௌளையில் துள்ளுவதோ இளமை,கல்லெல்லாம் (எம்.எஸ்.வீ.,டி.கே.ஆர்),மதுரை மரி கொழுந்து,காதல் கவிதைகள் (இ.ரா )
சுத்த தன்யாசியில் தொட்டால் பூ மலரும்,நீயே உனக்கு(எம்.எஸ்.வீ,டி.கே.ஆர்),விழியில் விழுந்து,மாஞ்சோலை கிளிதானோ (இ.ரா)
என்று சம்பத்த பட்ட ராகங்கள் பிழிய பட்டு விட்டதால் என் தேர்வில் நீங்கள் சொன்னவை விடு பட்டன.
-
Quote:
Originally Posted by
Gopal,S.
இளைய ராஜா இசையில் மிக சிறந்த நடிகர்திலகம் பட பாடல்கள்.
1)பூங்காற்று திரும்புமா
2)வெட்டிவேரு வாசம்
3)ராசாவே உன்னை நம்பி
4)எங்கெங்கோ செல்லும் என் எண்ணங்கள்
5)எந்தன் பொன் வண்ணமே
6)பூவிழி வாசலில்
7)நல்லவர்கெல்லாம்
8)நெஞ்சில் உள்ள காயமொன்று
9)இங்கே நான் கண்டேன் அனார்கலி
10)ஒ மானே மானே மானே
11)மாலை தென்றல்
12) மான் கண்டேன் மான் கண்டேன்
13)சிந்து நதிக்கரை ஓரம்
14)பேசாதே வாயுள்ள ஊமை
15)ஆராரிரோ பாடியதாரோ
IMHO, Poo pole un punnagaiyil song from Kavarimaan and oru kootu kiliyaga from Padikkathavan are better than many of the songs that are listed here ... If what I believe is right, IR was the first MD to start using Malaysia Vasudevan for Sivaji whose voice fitted Sivaji the most in the later part of his film life
-
yes gopal sir.
Your knowledge in music/school of acting/writing etc., amazing one.
Only in IR music some more songs which are good and also hits are mentioned.
Not to criticise your comment
Regards
Gk
-
http://nhstella.blogspot.in/2012/07/...-ganesans.html
Seen some of the rare photos of NT which were also displayed in our thread
-
Quote:
Originally Posted by
rsubras
IMHO, Poo pole un punnagaiyil song from Kavarimaan and oru kootu kiliyaga from Padikkathavan are better than many of the songs that are listed here ... If what I believe is right, IR was the first MD to start using Malaysia Vasudevan for Sivaji whose voice fitted Sivaji the most in the later part of his film life
I think it is Gangai Amaran used MV Voice first to NT in Imaigal.(Mada puravo)
-
அன்புள்ள கோபால் சார்,
தவப்புதல்வன் ஆய்வு மிக மிக அருமை. ஒரு குடும்பச் சித்திரத்தில் இவ்வளவு திரில், சஸ்பென்ஸ் கலந்து தருவது என்பது உண்மையிலேயே பெரிய சாதனை. அதை கதாசிரியரும், நடிகர்திலகமும், இயக்குனரும் சேர்ந்து மிக அற்புதமாக உருவாக்கிவிட்டனர். இப்படத்தில் சகுந்தலாவின் பங்களிப்பு மிக அருமை. அந்த ஆண்டில் மூன்று பெரிய வெற்றிப்படங்களில் வில்லன்களைவிட வில்லிகளுடன்தான் அவருக்குபோட்டி. வசந்த மாளிகையில் சாந்தகுமாரி, பட்டிக்காடாவில் சுகுமாரி, தவப்புதல்வனில் சகுந்தலா. இவர்களில் சகுந்தலாவின் வில்லத்தனம் அட்டகாசம். நீங்கள் குறிப்பிட்டதுபோல இந்த இணையின் முதல் படம் இது. தவப்புதல்வன், வசந்த மாளிகை, நீதி, பாரத விலாஸ், ராஜராஜ சோழன், பொன்னூஞ்சல், எங்கள்தங்க ராஜா (அடுத்து கௌரவத்தில் 'ஜெயகுமாரி' இடைநுழைந்து அட்டகாசமாக அனுதாபத்தை ஸ்கோர் செய்தார்) அன்பைத்தேடி, அந்தமான் காதலி, ஜஸ்டிஸ் கோபிநாத், இமயம் என்று தொடர்ந்தது. அழகும் வில்லத்தனமும் சரிவிகிதமாக கலக்கப்பட்ட நடிகை சகுந்தலா.
நான்கு பாடல்களுக்கும் நான்கு சிறப்புக்காட்சிகள். விஜயாவுடன் டூயட் இல்லாதது பெரிய ரிலீப். நடிகர்திலகத்தின் தோற்றம், சிகையலங்காரம், அருமையான உடைகள், காட்சிகளின் அமைப்பு, தான்சேன், கிறிஸ்துமஸ் தாத்தா காட்சிகள் இவற்றைஎல்லாம் பார்த்தபோது தென்பட்ட ஒரே ஒரு குறை மற்றும் வருத்தம்........ "இப்படத்தை கலரில் எடுத்திருக்கலாமே" என்பதுதான்.
அட்டகாசமான அலசல் சார். அடுத்த படத்துக்குக் காத்திருக்கிறோம்....
-
3 Attachment(s)
கோபால் சார்,
நீங்கள், உயிரோடு இருக்கும் காதலிக்காக வசந்தமாளிகையை கட்டிய ஆனந்தை பற்றி எழுதும்போது, ஒரு விஷயம் இங்கு சொல்ல ஆவல் கொண்டுள்ளேன்.
1972, சென்னையை பொறுத்தவரையில் சாந்தி, கிரௌன், மற்றும் புவனேஸ்வரி ஆகிய மூன்று திரையரங்குகளிலும் 271 தொடர்ந்து அரங்கு நிறைந்த காட்சிகள் கண்ட காவியம்.
அதாவது கிட்டத்தட்ட 90 நாட்களுக்கு மேல் மூன்று திரையரங்குகளிலும் அனைத்து காட்சியும் தொடர்ந்து அரங்கு நிறைவுபெற்று ஓடுவது என்பது சாதனைகளின் உச்சம் என்றே கருதுகிறேன்.
அதற்க்கு பிறகு மூன்று திரையரங்கு அதாவது சாந்தி, பாண்டியன் மற்றும் ராக்சியில் 162 தொடர்ந்து அரங்கு நிறைந்த காட்சிகள் கண்டு, அந்த 271 தொடர்ந்து அரங்கு நிறைந்த காட்சிகள் கண்ட சாதனையை, சாந்தியில் மட்டும் 288 தொடர்ந்து அரங்கு நிறைவு கண்டு முறியடித்த பெருமை பெற்ற திரைப்படம் திரையுலக சித்தரின் கீழ் வானம் சிவக்கும்.
Attachment 2529Attachment 2531Attachment 2530
-
கோபால் சார்,
சிவாஜி புரொடக்ஷன்ஸ் - எம்.எஸ்.விஸ்வநாதன் 'லக்கி' காம்பினேஷன் பற்றி நீங்கள் குறிப்பிட்டது சரியே.
தங்கப்பதக்கம், திரிசூலம், சந்திப்பு - வெள்ளிவிழாப்படங்கள்.
அண்ணன் ஒரு கோயில், வா கண்ணா வா - 100 நாட்களைக்கடந்த மாபெரும் வெற்றிப்படங்கள்.
(என்ன சொல்றீங்க?. 'ரத்த பாசமா?' அட விடுங்க ஒருகை சோறு அள்ளும்போது ஒன்றிரண்டு பருக்கை சிந்தத்தான் செய்யும்)....
-
அன்புள்ள சுப்பு சார்,
வசந்த மாளிகை (1972) - 271 ஹவுஸ்புல் காட்சிகள்.
கீழ்வானம் சிவக்கும் (1981) - 288 ஹவுஸ்புல் காட்சிகள்
இரண்டும் சரியாக இருந்தாலும், இவற்றுக்கிடையே 1979-ல் 'திரிசூலம்' சாந்தி, கிரௌன், புவனேஸ்வரி மூன்று அரங்குகளிலும் தொடர்ந்து 100 நாட்களுக்கு மொத்தம் 900 தொடர் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடியிருக்கிறது. (ஆதாரம் திரிசூலம் 100வது நாள் தினத்தந்தி மற்றும் தினகரன் விளம்பரம்)...
-
1 Attachment(s)
Quote:
Originally Posted by
mr_karthik
அன்புள்ள சுப்பு சார்,
வசந்த மாளிகை (1972) - 271 ஹவுஸ்புல் காட்சிகள்.
கீழ்வானம் சிவக்கும் (1981) - 288 ஹவுஸ்புல் காட்சிகள்
இரண்டும் சரியாக இருந்தாலும், இவற்றுக்கிடையே 1979-ல் 'திரிசூலம்' சாந்தி, கிரௌன், புவனேஸ்வரி மூன்று அரங்குகளிலும் தொடர்ந்து 100 நாட்களுக்கு மொத்தம் 900 தொடர் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடியிருக்கிறது. (ஆதாரம் திரிசூலம் 100வது நாள் தினத்தந்தி மற்றும் தினகரன் விளம்பரம்)...
திரு கார்த்திக் சார்,
தகவலுக்கு நன்றி...!
நீங்கள் கூறியதை அனைவரும் அறிந்திருந்தாலும் இதோ அந்த விளம்பரம் !
100 நாட்களும் தொடர்ந்து அனைத்து திரையரங்கிலும் மொத்தம் 900 அரங்கு நிறைந்த காட்சிகள் ...!!
12 வாரத்தில் ஒரு கோடி ருபாய் வசூலை கடந்து விண்ணைமுட்டும் வெற்றியல்லவா திரிசூல வெற்றி !
திரை உலகையே புரட்டிபோட்ட வெற்றி அல்லவா ! முதன் முதலில் திரையுலக வரலாற்றில் ருபாய் இரண்டு கோடிக்கு மேல் வசூல் செய்த காவியமாயிட்ரே நம் agmark தமிழனின் திரிசூலம் !!
Attachment 2532
-
Joe சார்,
உங்கள் இணைப்புகளுக்கு நன்றி. எழுத தூண்டும் இணைப்புகள்.
கார்த்திக் சார்,
சும்மா பேருக்காக சொல்லவில்லை. ஏற்கெனெவே பல முறை சொன்னது. உங்களுடைய,சாரதாவினுடைய,முரளியுடைய எழுத்துக்களே என்னை இங்கு இழுத்து வந்தவை. உங்களிடமிருந்து வரும் வார்த்தைகள் வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷி போன்றது. நன்றி.
360 டிகிரி- திரும்ப சுறுசுறுப்பாகி விட்டீர்கள். எங்களுக்கு தினமும் விருந்துதான்.
ராகவேந்தர் சார்,
பம்மலாரின் நேரடி பங்களிப்பு இல்லாத குறையை உங்கள் மீள்பதிவுகள் தீர்த்து ,பம்மலார் அருகிலிருக்கும் உணர்வை ஏற்படுத்துகிறது.
-
1952 - இந்திய திரை உலகமே எதிர்பார்க்காத ஒரு புயல் தமிழகத்திலிரிந்து எழும் என்று எவருமே எதிர்பார்க்காத ஒரு வருடம்..! விழுப்புரம் சின்னையா கணேசன் என்ற ஒரு நடிகர் தமிழ் திரை உலகு, தென்னிந்திய திரை உலகு மட்டுமல்ல, இந்திய திரை உலகமே திரும்பிபார்க்கும் வண்ணம் தன்னுடைய திரையுலக தொடக்கத்தை ஆணித்தரமாக பதிய வைத்த ஆண்டு.
திரை உலகத்திருக்கு எப்படி தமிழ் பேசவேண்டும், எப்படி நடிக்கவேண்டும் என்று பல கோணங்களிலிருந்தும் கற்றுகொடுத்த மறத்தமிழன். பிற்காலத்தின் இந்திய மாகாணம் மட்டும் அல்ல உலக அளவில் பெயரும் புகழும் நிலைக்கும் வண்ணம் திறமையின் உச்சம் தொட்ட கலைஞன், நடிகர் திலகம்.
பல தருணங்களில் உலக திரை உலகையே தன பக்கம் திரும்பிபார்க்கவைத்த உன்னத கலைஞன்.
நடிக்க வந்த அந்த ஒரு வருடம் மட்டுமே இரண்டு படங்கள். 1953 முதல் கிட்டத்தட்ட 45 ஆண்டுகள் தமிழ் திரை உலகின் சராசரி 40 சதவிகித வியாபாரத்தை தன்னுள் கொண்டுவந்த உன்னத கலைஞன்.
தயாரிபாளர்களின் விநியோகஸ்தர்களின் முதல்தர விடிவெள்ளியாக என்றேண்டும் வரவேற்கபட்டவன்.
Producer என்ற அந்தஸ்து, கெளரவம் இவரை வைத்து ஒரு திரைப்படமாவது எடுத்தாலொழிய எவருக்குமே கிட்டாதது, நிறைவும் பெறாது .
நடிக்க வந்த 7 வருடத்தில் இந்திய திரை உலகையே, உலக திரை உலக அளவில் கௌரவபடுத்திய ஒரே தமிழன்.
கப்பலோட்டிய தமிழன், கட்டபொம்மன், கர்ணன், டான்சன், சலீம், செங்குட்டுவன், சோக்ரடீஸ், ஒதெல்லோ, பரதன், ராஜ ராஜ சோழன், அப்பர், சுந்தரர், கொடிகாத்த குமரன், பகத்சிங், பாரதி என பல தேசிய தலைவர்களையும், சரித்திர, இதிகாச நாயகர்களை தன்னுடைய தணியாத சேவை நோக்கம் கொண்டு தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல இந்திய திரையுலகமே வியக்கும் வண்ணம் திரையிலே பிரதிஷ்டை செய்த திரை உலக சித்தர்.
ஒவ்வொரு வருடமும் பல படங்கள் இருந்தாலும், குறைந்தபட்சம் ஒரு திரைப்படமாவது இந்திய திரை உலகை நம் தமிழ்திரைஉலகின் பக்கம் திரும்பிபார்க்கவைத்த பெருமை நம் நடிகர் திலகத்திற்கு உண்டு.
உதாரணமாக
1952இல் பராசக்தி
1953இல் திரும்பிப்பார்
1954இல் மனோஹர
1956இல் ரங்கூன் ராதா
1957இல் மக்களை பெற்ற மகராசி
1958இல் இரட்டை வேட வரலாற்றில் ஒரு நாயகன் ஒரு வில்லன் - எப்படி வித்தியாசம் காட்டவேண்டும் என்று அனைவர்க்கும் கற்றுத்தந்த உத்தமபுத்திரன்
1959இல் உலக அரங்கில் தமிழனை தமிழ் திரை உலகை தலை நிமிரச்செய்த வீரபண்டியகட்டபோம்மன்
1960இல் படிக்காத மேதை
1961இல் பார்போற்றும் பாசமலர்
1962இல் ஆலயமணி
1963இல் இருவர் உள்ளம்
1964இல் நவராத்திரி
1965இல் தெய்வ நிந்தனையும், நாத்தீகமும் தமிழகத்தில் தலைவிரித்து ஆடியபோது நெற்றிக்கண்ணால் பரமேஸ்வரன் தீமைகளை சுட்டெரிப்பது போல தன்னுடைய நடிப்பால் ஆதிகத்தையும், தெய்வ சிந்தனையையும் ஆலவ்ருட்சம் போல தழைக்க செய்து நாத்தீகமும் தெய்வ நிந்தனையையும் நடிப்பால் தலைதூக்கவிடாமல் சுட்டெரித்த திருவிளையாடல்
1966இல் சரஸ்வதி சபதம்
1967இல் ஊட்டி வரை உறவு
1968இல் தில்லான மோகனம்பாள்
1969இல் ஆஸ்கார் விருது பரிந்துரைத்த தெய்வமகன்
1970இல் வியட்நாம் வீடு
1971இல் பாபு
1972இல் பட்டிக்காடா பட்டணமா, வசந்த மாளிகை
1973இல் எங்கள் தங்கராஜா
1974இல் தங்கபதக்கம்
1975இல் அவன்தான் மனிதன்
1976இல் உத்தமன்
1977இல் அண்ணன் ஒரு கோயில்
1978இல் தியாகம்
1979இல் தமிழ் திரை உலகவரலாற்றிலயே ருபாய் 2 கோடிக்கு மேல் வசூல் குவித்த திரிசூலம்
1981இல் கீழ்வானம் சிவக்கும்
1982இல் தீர்ப்பு
1983இல் சந்திப்பு
1984இல் வாழ்கை
1986இல் சாதனை மற்றும் மருமகள்
இப்படி ஒவொரு வருடமும் தென்னிந்திய திரை உலகம் மட்டும் அல்ல...இந்திய திரை உலக, உலக திரை உலக வரலாற்றையே ஒரு முறை இரு முறை அல்ல பல முறை நாலா திசைகளிலும் புரட்டிபோட்ட மஹா கலைஞன், நம் தமிழகத்தின் பெருமை நடிகர் திலகம் சிவாஜி கணேசன் என்பது உண்மை தமிழர்கள் நன்றி மறந்தாலும் உள்ளத்தால் ஒத்துகொண்ட உண்மையாகும்.
-
திரு கார்த்திக் சார்,
தகவலுக்கு நன்றி...!
நீங்கள் கூறியதை அனைவரும் அறிந்திருந்தாலும் இதோ அந்த விளம்பரம் !
100 நாட்களும் தொடர்ந்து அனைத்து திரையரங்கிலும் மொத்தம் 900 அரங்கு நிறைந்த காட்சிகள் ...!!
12 வாரத்தில் ஒரு கோடி ருபாய் வசூலை கடந்து விண்ணைமுட்டும் வெற்றியல்லவா திரிசூல வெற்றி !
திரை உலகையே புரட்டிபோட்ட வெற்றி அல்லவா ! முதன் முதலில் திரையுலக வரலாற்றில் ருபாய் இரண்டு கோடிக்கு மேல் வசூல் செய்த காவியமாயிட்ரே நம் agmark தமிழனின் திரிசூலம் !!
Attachment 2532
-
5 Attachment(s)
இந்திய திரை உலகை பொறுத்த வரை சமுதாய சிந்தனை மற்றும் மக்களால் தான் சம்பாதிகின்றோம் ஆகையால் மக்களுக்கு தன்னால் இயன்ற உதவிகளையும் எக்காலத்திலும் செய்யவேண்டும் என்ற மிகபெரிய நல்ல எண்ணம் கொண்டவர் நம் நடிகர் திலகம்.
நல்ல காரியங்களை செய்வதற்கு விளம்பரமோ அரசியல் அனுபவமோ தேவை இல்லை, நல்ல மனது மட்டுமே தேவை என்ற எண்ணம் கொண்டவர்,நடிகர் திலகம் அவர்கள்.
இது பல தருணங்களில் நிரூபித்தவர் நடிகர் திலகம். 1959இல் அகில இந்திய அளவில் முதன்முதலாக பண்டித ஜவஹர்லால் நேஹ்ருவிடம் குழந்தைகள் மதிய உணவு திட்டத்திற்கு பெருந்தலைவர் முன்னிலையில் மொத்தமாக ஒரே தவணையில் ஒரு லட்சம் ருபாய் வழங்கியவர் நடிகர் திலகம் அவர்கள்.
அதுமட்டுமா, 1965இல் இந்திய சீனா யுத்தசமயத்தில் அப்போதைய பிரதமர் திரு லால் பகதூர் சாஸ்திரியிடம் சுமார் 200 சவரனுக்கும் மேல் தங்கநகைகளை யுத்தநிதிக்காக வழங்கினார்.
மேலும் இந்திய எல்லைக்கு அனைத்து நல்லுள்ளம் கொண்ட நடிக நடிகையரை தனது செலவில் அழைத்துக்கொண்டு போர்வீரர்கள் உற்சாகபடுத்த அந்த எல்லையிலேயே கலைநிகழ்ச்சி சொந்த செலவில் இந்த நாட்டைகாப்பாற்றும் வீரர்களை உற்சாகபடுத்த செய்தவர் இந்த நாட்டின் மைந்தன் நடிகர் திலகம் என்பது அனைவரும் அறியவேண்டும்.
அதேபோல கடுமையான பஞ்சத்தால் ராமநாதபுர மாவட்டம் அவதியுற்றபோது கட்சிபேதம் பாராமல் ஒருலட்சம் ருபாய் நன்கொடை வழங்கியவர் நடிகர் திலகம். இதில் கொடுமை என்னவென்றால், நடிகர் திலகம் கொடுத்த நன்கொடையில் குற்றம் இருப்பதுபோல ஒரு மாயை ஏற்படுத்த முயற்சி செய்து, நடிகர் திலகத்தின் கொடைதன்மையில் ஒரு சிலர் வேறொரு கட்சி பெயரில் குழப்பம் விளைவித்து விளம்பரம் தேட முயற்சித்தது நகைப்புக்குரியது, பைசா செலவில்லாமல் இவர் பணத்தில் அவர்கள் விளம்பரம் தேடிகொண்டது அன்றைய செய்தித்தாளை படித்தால் அனைவரும் புரிந்துகொள்ளலாம்.
இதுமட்டுமல்ல, பல நல்ல காரியங்கள், பல நல்ல விஷயங்களை தமிழ்நாடிர்க்கும், மக்களுக்கும், சமுதாயத்திற்கும் எந்த பிரதிபலனும் எதிர்பாராமல் செய்தவர் தமிழகத்தின் உண்மையான மண்ணின் மைந்தன் நடிகர் திலகம்.
Attachment 2533
Attachment 2534
Attachment 2535
Attachment 2536
Attachment 2537
தமிழகத்திற்கும், தமிழன் வாழ்விற்கும், இந்த சமுதாயத்திற்கும், இந்தியாவிற்கும், இந்திய மக்களுக்கும் அவர் தம்மாலான உதவிகளை ஒரு தனிப்பட்ட நல்ல மனிதனாக, சொல்லப்போனால் மனிதரில் மாணிக்யமாக எப்போதும் செய்தவர், செய்துகொடுத்தவர்.
அவர் நம் தமிழகத்திற்கும், இந்தியனாடிர்க்கும் தன்னால் ஆனதை மனிதரில் மாணிக்யமாக விளம்பரபடுத்தாமல் எந்த ஆதாயமும் தேடாமல் செய்துவிட்டார் !
ஆனால் நம் தமிழகமும், தமிழக மக்களும், தமிழன், தமிழ் உணர்வு என்று மேடையில் மட்டுமே முழங்கும் கனவான்களும் அந்த நன்றியை (அரசியலை விட்டுத்தள்ளுங்கள்....ஆகையால் தான் அதை சாக்கடையை என்று அரசியல் விற்பன்னர்களும் விமர்சகர்களும் கூறுகின்றனர் )அதற்குரியவிதத்தில் பிரதிபலித்தார்களா என்று ஒரு கேள்வி எழுகிறது அதற்க்கு பதில் ?
தலையைதான் குனிய வேண்டியிருக்கிறது !
மண்ணின் மைந்தனை எல்லாவிதத்திலும் தமிழகமும் தமிழுணர்வு இல்லாத மக்களும் கேவலம் தங்களுடைய காழ்புணர்ச்சிமட்டுமே கொண்டு அவமதித்ததற்காக ! அவமதித்துகொண்டிருப்பதர்க்காக !
-
Vasanthathil Oar Naal & Chiranjeevi has come 2 in 1 combo DVD for the
benefit of crores of NT's fans.
Mr Gopal sir,
Your analysis on Thavaputhalvan is simply superb. During childhood days
watched the movie at Pilot with my Mother.
-
Mr Subbu Sir,
Nijathil nadikka theriyatha vithagar our NT. Truth always triumph in the end.
-
Quote:
Originally Posted by
s.vasudevan
Nijathil nadikka theriyatha vithagar our NT.
நிஜத்தில் நடிக்கத் தெரியாதது ஒரு வித்தகம் அல்ல . நிஜத்தில் நடிக்கும் வித்தகம் இல்லாதவர் என்று வேண்டுமானால் சொல்லலாம்.
-
Expecting memorable post from Mr Karthik for his 2000th Post.
Advance wishes sir.
-
நடிகர் திலகம் பல தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களின் முதல் தர விடிவெள்ளியாக எந்தளவுக்கு இருந்திருக்கிறார் என்பதை கீழ்கண்ட தகவல்களிலிருந்து காணலாம். வருட வாரியாக நடிகர் திலகத்தை வைத்து திரைப்பட துறை வளர்ந்த வாழ்ந்த விபரங்கள்
Every 10 year of Release No of Nadigar Thilagam Films
1952 - 1962 ************** 83
1963 - 1973 ************* 84
1974 - 1984 ************* 81
1985 - 1988 ************* 27
Special appearances ********* 17
சிங்கப்பூரில் உடல் நலம் பாதிக்க படாமல் இருந்திருக்குமேயானால் அடுத்த பத்து ஆண்டுகளில் நிச்சயம் அதே அளவில் திரையுலகில் வலம் வந்திருப்பார். உடல் நலம் சற்று தேருவதற்குள் கலைத்துறையில் உள்ள தாகத்தினால் மருத்துவ ஆலோசனையையும் சரிவர செவிசாய்க்காமல், 1991 - 1, 1992 - 4, இதனால் மீண்டும் உடல் நலம் பாதிக்கபட்டாலும், 1993 - 1998 வரை தலா ஒரு திரைப்படமாக குறைத்துக்கொண்டு , 1999இல் மறுபடியும் 3 திரைப்படங்கள் அவரின் நடிப்பில் வெளிவந்தன.
இது தவிர அந்தந்த வருடத்தில் கௌரவவேடம் புனைந்து மொத்தம் 17 படங்கள்.
40ஆண்டு காலம் எத்தனை புதிய கதாநாயகர்கள், புதிய இயக்குனர்கள், புதிய தயாரிப்பாளர்கள், வசனகர்த்த, இசையமைப்பாளர்கள், பாடகர்கள், தொன்றீருப்பார்கள். எவருமே போட்டிபோட கூட நினைக்கமுடியாவண்ணம் 1953 முதல் வருடத்திற்கு சராசரி 8.58 திரைப்படங்கள் நடிகர் திலகத்தின் நடிப்பில் வெளிவந்திருக்கிறது.
இப்படி கலைதுறைக்காகவே தன்னை முழுவதுமாக அற்பனித்துக்கொண்ட உன்னத தமிழன் கலைக்குரிசில் சிவாஜி கணேசன்.
அப்படியென்றால், எத்தனை இயக்குனர்கள், நடிக நடிகையர், கதாசிரியர், வசனகர்த்த, டப்பிங் கொடுப்பவர், நடன அமைப்பாளர், பாடலாசிரியர், மற்றும் எவ்வளவு திரை துறையை சேர்ந்த தொழிலாளர்கள் இதனால் பயன்பெற்றிருபார்கள். திரை துறையின் வர்த்தகம் எத்தனை கோடிகள் இருந்திருக்கும் இவர் ஒருவரால் ....
நினைத்து பார்த்தால் புளகாங்கிதம் அடைகிறது ..!
அப்போது மட்டுமல்ல இப்போதும் எப்போதும் நடிகர் திலகம் பாடல் வரியில் கூறுவது போல " காலம்தனை நான் மாறவைப்பேன்....கண்ணே உன்னை நான் வாழவைப்பேன்...என் ராஜாத்தி கண்ணே கலங்காதிரு " என்பதுதான் !
-
சத்யராஜ் சிவாஜியுடன் இணைந்து நடித்த 'ஜல்லிக்கட்டு'
பதிவு செய்த நாள் : புதன்கிழமை, ஜூலை 31, 10:39 PM IST
Maalaimalar
சிவாஜிகணேசன் நடித்த 'ஜல்லிக்கட்டு' படத்தில் இன்னொரு ஹீரோவாக சத்யராஜ் நடித்தார். இந்தப்படமும் வெற்றி பெற்றது. சிவாஜியுடன் 'ஜல்லிக்கட்டு' படத்தில் நடித்த சத்யராஜூக்கு, படத்தில் முக்கியமான கேரக்டர். நீதிபதி ஒருவர் தனக்கு ஏற்பட்ட பாதிப்பை ஒரு அதிரடி இளைஞன் மூலம் சரி செய்து கொள்ளும் கதை.
இதில் பாதிக்கப்பட்ட நீதிபதியாக சிவாஜியும், அவருக்கு உதவும் இளைஞராக சத்யராஜூம் நடித்தார்கள். வித்தியாசமான கதைக்கருவைக் கொண்ட இந்தப்படமும் பெரிய அளவில் வெற்றி பெற்றது.
இந்தப் படத்தின் வெற்றி விழாவில், அன்றைய முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். கலந்து கொண்டு சிவாஜி உள்ளிட்ட கலைஞர்களை வாழ்த்தினார். எம்.ஜி.ஆர். கலந்து கொண்ட கடைசி சினிமா விழா இதுதான்.
சிவாஜியுடன் நடித்த 'ஜல்லிக்கட்டு' அனுபவம் குறித்து சத்யராஜ் கூறியதாவது:-
'ஜல்லிக்கட்டு படத்தை நண்பர் மணிவண்ணன்தான் இயக்கினார். சித்ரா லட்சுமணன் தயாரித்தார். கதையைக் கேட்கும்போதே இது நன்றாக ஓடும் என்று தோன்றியது. சில கதைகளை கேட்டதுமே, அது வெற்றி பெறும் என்று சொல்லிவிட முடியும்.
ஜல்லிக்கட்டு அப்படியொரு கதை. அப்போதெல்லாம் நானும் மணிவண்ணனும் செட்டிலே ஒருவரை ஒருவர் `தலைவா!' என்று கூப்பிட்டுக் கொள்வோம். இந்த `தலைவா' பழக்கம் செட்டில் இருந்த மற்ற டெக்னீஷியன்களையும் தொற்றிக் கொண்டது.
இது எதில் போய் முடிந்தது தெரியுமா? செட்டில் சிவாஜி சாரிடம் போன டான்ஸ் மாஸ்டர் பாபு அவரிடம், 'தலைவா! ஷாட் ரெடி' என்று சொல்லப்போக, பதிலுக்கு சிவாஜி சார் அவரை கேலி செய்யும் அளவுக்குப் போய்விட்டது. 'ஏண்டா! உங்க `தலைவா' என் வரைக்கும் வந்தாச்சா?' என்று கேட்க, மாஸ்டர் அவசரமாய் `எஸ்கேப்' ஆகியிருக்கிறார். நானும் பிரபுவும் `தலைவரே' என்று அழைத்துக் கொள்வதும் சிவாஜிசாருக்கு தெரிந்திருக்கிறது.
இப்போது அவரே செட்டில் 'தலைவா' என்று அழைக்கப்பட்டு விட்டதால், அன்று படப்பிடிப்பு முடிந்து வீட்டுக்குப் போனவர், பிரபு வரும் வரை காத்திருந்திருக்கிறார். பிரபு வீட்டுக்குப் போனதும் 'வாங்க தலைவரே!' என்று அழைத்து அவரை வெலவெலக்க வைத்திருக்கிறார்.
மறுநாள் இதுபற்றி பிரபு என்னிடம் சொன்னபோது, எங்களுக்கெல்லாம் அடக்கமுடியாத சிரிப்பு. நேரத்துக்கு மதிப்பு கொடுப்பதில் சிவாஜி சாருக்கு நிகர் அவரேதான். காலை 7 மணிக்கு படப்பிடிப்பு என்றால் நான் 7 மணிக்கு செட்டில் இருப்பேன். ஆனால் அதற்கு முன்பே சிவாஜி சார் செட்டில் இருப்பார்.
ஒருநாளாவது அவரை முந்திவிடவேண்டும் என்று இன்னும் சீக்கிரம் வரத்தொடங்கினேன். அப்போதும் சிவாஜி சார் எனக்கு முந்தி வந்திருந்தார். நடிப்பில் மட்டுமின்றி, `பங்ச்சுவாலிட்டி'யிலும் சிவாஜி சாருக்கு இணையாக யாருமில்லை என்பதை நானும் இந்த நாட்களில் கண்கூடாக உணர்ந்தேன். 'ஜல்லிக்கட்டு' படப்பிடிப்புக்காக பெங்களூரில் இருந்து மங்களூருக்கு விமானத்தில் போனோம்.
நான், மணிவண்ணன், கேமராமேன் சபாபதி, சித்ரா லட்சுமணன் எல்லோரும் ஒரே ரூமில் தங்கினோம். சிவாஜி சார் பக்கத்து ரூமில் தங்கினார். படப்பிடிப்பு முடிந்து ஊருக்கு கிளம்ப வேண்டிய நாள். காலை 6 மணிக்கு விமானம் ஏறவேண்டும். சிவாஜி சார் அதிகாலை 4 மணிக்கு விழித்தவர் எங்கள் அறைக்கு வந்திருக்கிறார்.
நாங்கள் முந்தின நாள் இரவு சிக்கன் பிரியாணி சாப்பிட்டு விட்டு அப்படியே தூங்கியிருக்கிறோம். அதிகாலையில் எங்களை வந்து பார்த்தவர், நாங்கள் படுத்திருந்த இடத்துக்கு அருகில் சிக்கன் எலும்புகள் கிடந்ததை பார்த்திருக்கிறார். அப்போதைக்கு ஒன்றும் சொல்லாமல் போனவர், நாங்கள் புறப்பட்டு தயாராகி வந்தபோது பிடித்துக்கொண்டார்.
'ஏண்டா! காலையிலேயே எழுப்பலாம்னு வந்தால் செத்துப்போன கோழியோட ஒண்ணா படுத்திருக்கீங்களே' என்று கிண்டல் செய்தார். அந்த கிண்டலில் ஒரு தந்தைக்கே உரிய அக்கறை இருந்தது. விமான நிலையத்துக்கு புறப்பட சிவாஜி சார் அவசரப்படுத்தின தால், ஆளாளுக்கு சீக்கிரமே கிளம்பி விட்டோம்.
கமலா அம்மாளும் சிவாஜி சாருடன் வந்திருந்தார்கள். 'மாமா இப்படித்தான் அவசரப்படுத்துவாங்க. நாமபோறப்போ விமான நிலைய கேட்டை திறந்திருக்க மாட்டாங்க' என்றார். கமலா அம்மாள் சொன்னதுபோலவே ஆயிற்று. நாங்கள் போய்ச் சேர்ந்த பிறகுதான் விமான நிலைய பயணிகள் கேட்டையே திறந்தார்கள்! அப்போது மங்களூரில் இருந்து பெங்களூருக்கு தினமும் ஒரு விமானம்தான்.
எனவே விமானத்தை தவறவிட்டால் தேவையில்லாமல் ஒருநாள் காத்திருக்க வேண்டியிருக்கும். இந்த வகையில் சிவாஜி சாரின் `அவசரம்' நியாயமானதுதான். பார்த்ததுமே 'வாங்க கவுண்டரே!' என்பார். படப்பிடிப்பின்போது கிடைக்கிற இடைவெளி நேரத்தில் குடும்ப விஷயங்கள் பற்றி பேசுவார்.
எங்கள் சித்தப்பா அவரது நண்பர் என்ற முறையில் எங்கள் குடும்பம் பற்றி ஆர்வமாய் விசாரிப்பார். என் சிறுவயதிலேயே விவசாய நிலங்கள் விற்கப்பட்டதை தெரிந்து கொண்டவர், 'நீ சம்பாதிச்சு சொந்த ஊர்லயே நிறைய தென்னந்தோப்பு வாங்கணும்' என்று சொன்னார்.
அவர் சொன்னதுபோலவே பொள்ளாச்சி பகுதியில் வாழவாடி ஊரில் 95 ஏக்கர் தென்னந்தோப்பு வாங்கியிருக்கிறேன். 'ஜல்லிக்கட்டு' படம் எதிர்பார்த்த மாதிரியே நன்றாக ஓடி, வெற்றி பெற்றது.
-
சிவாஜியுடன் நடித்த அனுபவங்கள்: குட்டி பத்மினி வெளியிடும் தகவல்கள்
பதிவு செய்த நாள் : திங்கட்கிழமை, ஜூலை 08, 9:35 PM IST
maalaimalar
சிவாஜியுடன் நடித்த அனுபவங்கள் குறித்து குட்டி பத்மினி கூறியதாவது:-
"நடிப்பில் சிவாஜி சார் இமயம் என்று தெரியும். ஆனால், அப்போது பேபி நட்சத்திரமாக இருந்த எனக்கு, இது தெரிந்திருக்க வாய்ப்பில்லையே. ஏ.பி.நாகராஜன் அங்கிள் அப்போது எடுத்த "திருவருட்செல்வர்'' படத்தில் சிவாஜி சார் நடித்தார். இந்தப் படத்தில் சிவாஜி சாருடன் விவாதம் செய்யும் ஒரு காட்சியில் நடிக்க என்னை `புக்' செய்தார்கள்.
புராணப்படம் என்பதால் தூய தமிழில் பேச ஏ.பி.நாகராஜன் அங்கிள் வீட்டில் ஒரு வாரம் எனக்கு `சுத்தத் தமிழ்' கற்றுத் தந்தார்கள். இந்த ஒரு வாரத்தில் ஏ.பி.என். அங்கிளின் பிள்ளைகளும் எனக்கு `பிரண்ட்ஸ்' ஆகிவிட்டார்கள். சிவாஜி சாருடன் நான் நடிக்க வேண்டிய காட்சி படமாகும் நாளும் வந்தது. அப்போதெல்லாம் எனக்கு `நடிப்பு' பற்றி பயமே இருந்ததில்லை.
படத்தில் திருமலை மன்னராக வரும் சிவாஜிசாருக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது. அவருக்கு கடவுள் நம்பிக்கை ஏற்படுத்தும் சிறுமியாக நான் வந்தேன். கடவுள் நம்பிக்கை பற்றி நான் அவரிடம் பேசப்போக, அவரோ "கடவுள் இருக்கிறார் என்றால், அவர் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார்?'' என்று கேட்பார்.
"இந்தக் கேள்விக்கு பதில் சொல்ல வேண்டுமானால் என்னை திருமலை மன்னராக்கி அரியணையில் அமர வைக்கவேண்டும்'' என்பேன். உடனே திருமலை மன்னர் என்னை அரியணையில் அமர்த்தி மன்னராக மகுடம் சூட்டுவார். அடுத்த கணம் நான், "யாரங்கே! இதுவரை திருமலை மன்னராக இருந்த இவரை பிடித்து சிறையில் அடையுங்கள்'' என்பேன்.
அப்படி உத்தரவிட்டு விட்டு, "கடவுள் இப்போது இதைத்தான் செய்து கொண்டிருக்கிறார்'' என்பேன். இதன் பிறகு திருமலை மன்னர் கடவுள் நம்பிக்கை உடையவராக திருந்துவதுடன் அந்தக் காட்சி முடியும். இந்தக் காட்சியில் திருமலை மன்னராக நடிக்கும் சிவாஜி சார் உணர்ச்சி வேகத்தில் பேசிவிட்டு, என் காலில் விழுவதாக அந்தக் காட்சி முடியும்.
இந்தக்காட்சி பற்றி சிவாஜி சாரிடம் விளக்கிய உதவி இயக்குனர்கள், கடைசியில் `கடவுள் ஞானம்' கொடுத்த சிறுமியின் காலில் விழுவதுடன் காட்சி முடியும் என்பதை தயங்கித் தயங்கி சொன்னார்கள். ஆனால் சிவாஜி சார் அதற்கு பதில் எதுவும் சொல்லவில்லை. காட்சியில் உணர்ச்சிகரமாக பேசிக் கொண்டு வந்தவர், "அம்மா நீ சிறு பெண்ணல்ல; என் அறிவுக்கண் திறக்க வந்த தெய்வம்'' என்று சொல்லி என் கால் பக்கமாக விழுந்துவிட்டார்.
டைரக்டர் ஏ.பி.நாகராஜன் அங்கிள் `கட்' செய்யவும் மறந்து ஒரு கணம் பிரமித்து நின்றுவிட்டார். காட்சியின் கனம் கருதி எந்த நடிப்புக்கும் தயாராக இருந்த சிவாஜி சாரை நினைத்தால் இப்போதும் அவர் மீது ஒரு மரியாதை ஏற்படுகிறது. இந்தப்படம் பற்றி அப்போது விமர்சனம் எழுதிய ஒரு பத்திரிகை, இந்தக் காட்சி பற்றி குறிப்பிடும்போது "திமிங்கலத்தை சின்ன மீன் விழுங்கிவிட்டது'' என்று வர்ணித்திருந்தது.
அதுமாதிரி, "திருமால் பெருமை'' படத்திலும் ஒரு உணர்ச்சிமயமான காட்சி சிவாஜி சாருக்கும் எனக்கும் இருந்தது. படத்தில் குட்டி ஆண்டாளாக வரும் நான் திருமாலுக்கு என் தந்தை (சிவாஜி) சூடிய மாலையை என் கழுத்தில் எடுத்து போட்டுக்கொள்வேன். ஆத்திரமாகும் அப்பா என் மீது கோபப்படுவதாக காட்சி. இந்தக் காட்சியின்போது நான் கொஞ்சமும் எதிர்பாராமல் சிவாஜி சார் என் கன்னத்தில் ஓங்கி விட்டார் ஒரு அறை.
அந்த அறையின் வேகத்தில் என் காதில் இருந்த கம்மல் தெறித்து விழுந்தது. பொறி கலங்கிப்போனேன். என்றாலும் நான் தொடர்ந்து பேசவேண்டிய வசனத்தை பேசி முடித்தேன். காட்சி முடிந்ததும் சிவாஜி சார் ஓடிவந்து என் கன்னத்தை தடவிவிட்டார். பிறகு அம்மாவிடம் அந்தக் காட்சிக்கான விளக்கம் சொன்னார். "இந்தக் காட்சியில் நான் கன்னத்தில் அறைவதை முதலிலேயே சொல்லியிருந்தால் உங்கள் பெண், நான் அடிக்கும்போது கன்னத்தை திருப்பியிருப்பாள். அப்படிச் செய்திருந்தால் அந்தக்காட்சி இயல்பாக அமையாது. அதனால்தான் அடிப்பதை முன்கூட்டியே சொல்லவில்லை. ஆனால் இப்படி சொல்லாமல் கன்னத்தில் அடித்தும், நடிப்பதை நிறுத்தாமல் தொடர்ந்து அழுதுகொண்டே வசனம் பேசி நடித்த உங்கள் பெண் என்னை ரொம்பவே கவர்ந்து விட்டாள்'' என்று சொன்னவர், "உங்க கையை நீட்டுங்க'' என்றார், அம்மாவிடம்.
அம்மா `எதற்கு' என்று புரியாமல் பார்த்த நேரத்தில், "எனக்கு சத்தியம் பண்ணிக் கொடுங்க. உங்க பொண்ணு ஹீரோயினா நடிக்கிற கால கட்டத்துல என்கூட தான் முதல்ல நடிக்கணும்'' என்றார். அம்மா அப்படியே நெகிழ்ந்து போய்விட்டார்.
பெண்ணின் நடிப்பு மீது அந்த மகா கலைஞர் வைத்த நம்பிக்கையும், சிறு குழந்தை மாதிரி அவர் கேட்ட சத்தியமும் அம்மாவை ஆனந்த அதிர்ச்சிக்குள்ளாக்கிவிட்டது.'' இவ்வாறு குட்டி பத்மினி கூறினார்.
-
`கடினமான பாடலுக்கு பிரமாதமாக வாயசைத்தார்'- சிவாஜிகணேசனுக்கு இளையராஜா புகழாரம்
பதிவு செய்த நாள் : திங்கட்கிழமை, ஏப்ரல் 01, 11:30 PM IST
maalai malar
'கவரிமான்' படத்தில், கீர்த்தனை ஒன்றுக்கு புதிய முறையில் இசை அமைத்தார், இளையராஜா. பாடுவதற்கு கடினமான அந்தப்பாடலுக்கு மிகப் பொருத்தமாக வாயசைத்தார், சிவாஜிகணேசன். அதைக்கண்டு இளையராஜா வியந்து போனார்.
இசைப்பயணம் பற்றி இளையராஜா கூறியதாவது:-
எஸ்.பி.முத்துராமன் இயக்கிய 'கடவுள் அமைத்த மேடை'படத்தில்தான், ஒரு பரிசோதனை முயற்சி செய்யவேண்டும் என்று தோன்றியது.
அதாவது கர்நாடக சங்கீத ராகங்களை எடுத்துக்கொண்டு, அதன் ஆழம் குறையாமல் கிராமியப் பாணியின் சந்தங்களை மெட் டாக அமைத்து, பாடும்போது அதன் இரண்டு வேறுபட்ட தனிப்பட்ட தன்மைகளை இணைத்துப் பாடவைக்கலாமே என்று தோன்றியது.
பஞ்சு சார் அடுத்து 'கவரிமான்' என்ற படத்தில் நடிக்க சிவாஜியை ஒப்பந்தம் செய்தார். நடிகர் திலகத்தின் பாத்திரப் படைப்பை ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. (மனைவி சோரம் போகிற காட்சியை பார்க்கும் கணவனின் கேரக்டர்)
என் இசையில் முதன் முதலில் ஒரு தியாகராஜ கீர்த்தனை இடம் பெற்றது இந்தப் படத்தில்தான். 'ப்ரோவ பாரமா?' என்ற கீர்த்தனையை ஜேசுதாஸ் பாட, டி.வி.கிருஷ்ணன் அவர்களின் வயலினும், டி.வி.கோபாலகிருஷ்ணனின் மிருதங்கமும் இணைந்தன.
சிவாஜி இந்தப் பாட்டுக்கு வாயசைத்ததை கண்டு வியந்து போனேன்.
ஆரம்பத்தில் ஜேசுதாஸ் ராகம்பாடி, தாளம் ஏதும் இல்லாமல் திடீரென்று `ப்ரோவபாரமா' என்று தொடங்குமாறு பதிவு ஆகியிருந்தது.
ராகம்பாடி, `ப்ரோவ பாரமா' தொடங்குவதற்கு இடையில் தாளத்தில் ஏதாவது வாசித்திருந்தால் நடிப்பவர்களுக்கு பாடல் தொடங்கும் இடம் சரியாகத் தெரிந்து வாயசைக்கலாம்.
ராகம்பாட, வெறும் தம்புரா மட்டும் போய்க்கொண்டிருக்க, அது எவ்வளவு நேரம் போகிறது என்று கண்டுபிடித்து, பாடல் ஜேசுதாஸ் குரலில் வரும் அந்த நொடியை எப்படியோ கண்டுபிடித்து சரியாக வாயசைத்தார்.
https://www.youtube.com/watch?v=cnIH0k44hRI
இதைப் பாராட்டி, அண்ணன் சிவாஜியிடம், 'எப்படிச் செய்கிறீர்கள்?' என்று கேட்டேன்.
'என்னை என்னடா நினைச்சிட்டே? சும்மா ஏனோதானோன்னு சினிமாவுக்கு வந்தவன்னு நினைச்சியா? இதெல்லாம் முடியாட்டா ஏண்டா ஒருத்தன் நடிகனா இருக்கணும்?' என்று கேட்டார் சிவாஜி.
'நடிகர் திலகம்' என்று சும்மாவா பட்டம் கொடுத்தார்கள்?
-
பிரபல தயாரிப்பு நிறுவனங்களின் முதல் வண்ணப்படங்கள்:
(இவர்கள் அனைவரும் தங்கள் முதல் வண்ணப்படங்களை நடிகர்திலகத்தை கதாநாயகனாக வைத்தே தயாரித்தனர்)
1) பத்மினி பிக்சர்ஸ் - வீரபாண்டிய கட்டபொம்மன் (1959) தமிழில் முதல் டெக்னிக் கலர் படம்.
2) ஆர். ஆர். பிக்சர்ஸ் - ஸ்ரீ வள்ளி (1961)
3) பத்மினி பிக்சர்ஸ் - கர்ணன் (1964) தமிழில் முதல் ஈஸ்ட்மன் கலர்ப்படம்.
4) சிவாஜி பிலிம்ஸ் - புதிய பறவை (1964)
5) ஸ்ரீ விஜயலட்சுமி பிக்சர்ஸ் - திருவிளையாடல் (1965)
6) ஏ.எல்.எஸ். புரொடக்ஷன்ஸ் - கந்தன் கருணை (1967)
7) கே.சி.பிலிம்ஸ் (கோவை செழியன்) - ஊட்டிவரை உறவு (1967)
8) ஸ்ரீவெங்கடேஸ்வரா மூவீஸ் - திருமால் பெருமை (1968)
9) ஈ.வி.ஆர்.பிக்சர்ஸ் - தங்க சுரங்கம் (1969)
10) சுஜாதா சினி ஆர்ட்ஸ் - எங்கிருந்தோ வந்தாள் (1970)
11) ஜேயார் மூவீஸ் - எங்க மாமா (1970)
12) சன்பீம் பிக்சர்ஸ் - பாதுகாப்பு (1970)
13) மல்லியம் புரொடக்ஷன்ஸ் - சவாலே சமாளி (1971)
14) பி.எஸ்.வி. - பிக்சர்ஸ் - இரு துருவம் (1971)
15) புவனேஸ்வரி மூவிஸ் - மூன்று தெய்வங்கள் (1971)
16) ராம்குமார் பிலிம்ஸ் - சுமதி என் சுந்தரி (1971)
17) விஜயா சுரேஷ் கம்பைன்ஸ் - வசந்த மாளிகை (1972)
18) சித்ரமாலா கம்பைன்ஸ் - ராஜபார்ட் ரங்கதுரை (1974)
19) வியட்நாம் மூவீஸ் - கௌரவம் (1973)
20) ஆனந்த் மூவீஸ் - ராஜராஜ சோழன் (1973)
21) சினி பாரத - பாரத விலாஸ் (1973)
22) ஜெகபதி ஆர்ட் பிக்சர்ஸ் - எங்கள் தங்க ராஜா (1973)
23) முக்தா பிலிம்ஸ் - அன்பைத்தேடி (1974)
நடிகர்திலகம் நடித்த கடைசி கருப்பு வெள்ளைப்படமான 'தாய்' 1974-ல் வெளியானது. எனவே அதன்பின்னர் தயாரித்த அனைத்து நிறுவனங்களும் வண்ணத்திலேயே தயாரித்திருப்பார்கள் என்பதால் பட்டியல் 1974 உடன் நிறுத்தப்படுகிறது....
-
(Continuation Till 1977 of Karthik Sir )
சன்பீம் -பாதுகாப்பு
பீ.எஸ்.வீ. பிக்சர்ஸ்- இரு துருவம்
மல்லியம் புரடக்ஷன்ஸ் - சவாலே சமாளி
புவனேஸ்வரி மூவீஸ்- மூன்று தெய்வங்கள்
ராசி enterprises -அவன்தான் மனிதன்
அமுதம் பிக்சர்ஸ் - அன்பே ஆருயிரே
ப்ராஸ்பரிடி பிலிம்ஸ்-கிரக பிரவேசம்
சண்முகமணி பிச்சர்- சத்யம்
கோமதி சங்கர் பிக்சர்- அவன் ஒரு சரித்திரம்
யோகசித்ரா - இளைய தலைமுறை
-
Dear Gopal sir,
I can understand why you extended the list uptp 1977.
But the last Black & White movie of our Nadigarthilagam "THAAI" released in 1974. After that no more b & w movies. So all other concerns should start their movies in colour only.
But I accept that, I have omitted Irudhuruvam, Moondru Dheivangal, Padhukappu and Savale Samaali.....
-
Quote:
Originally Posted by
mr_karthik
Dear Gopal sir,
I can understand why you extended the list uptp 1977.
But the last Black & White movie of our Nadigarthilagam "THAAI" released in 1974. After that no more b & w movies. So all other concerns should start their movies in colour only.
But I accept that, I have omitted Irudhuruvam, Moondru Dheivangal, Padhukappu and Savale Samaali.....
Sorry. I agree with you that it has relevance only upto 1974. You are correct and I was little over-enthusiastic .Thank God for stopping me as I was planning till 1999 ????? !!!!!!!!!!!!!
:-D:???:
-
Dear Friends,
I am starting Gnana Oli ,the special movie for many celebrities and to many of our Fans too. As there were many write-up on this movie in the past (recently by Murali and Vasu) ,I will not dwell much on story line and other peripheral matters. I am analysing the character psychology and the unique Acting approach of Nadigarthilagam. Generally this movie has very good performances by Gokul Nath(amazing and unforgettable),Saratha(some of the close-up shots with meaningful reactions ,she proved her mettle) and Sundararajan.But I will take only NT's performance in detail.
-
Gopal sir
please read my posting . I have mentioned the nalla neram record in the year 1972 only.