-
30th August 2013, 06:00 PM
#1621
Senior Member
Veteran Hubber
அன்புள்ள சுப்பு சார்,
வசந்த மாளிகை (1972) - 271 ஹவுஸ்புல் காட்சிகள்.
கீழ்வானம் சிவக்கும் (1981) - 288 ஹவுஸ்புல் காட்சிகள்
இரண்டும் சரியாக இருந்தாலும், இவற்றுக்கிடையே 1979-ல் 'திரிசூலம்' சாந்தி, கிரௌன், புவனேஸ்வரி மூன்று அரங்குகளிலும் தொடர்ந்து 100 நாட்களுக்கு மொத்தம் 900 தொடர் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடியிருக்கிறது. (ஆதாரம் திரிசூலம் 100வது நாள் தினத்தந்தி மற்றும் தினகரன் விளம்பரம்)...
-
30th August 2013 06:00 PM
# ADS
Circuit advertisement
-
30th August 2013, 06:09 PM
#1622
Junior Member
Devoted Hubber

Originally Posted by
mr_karthik
அன்புள்ள சுப்பு சார்,
வசந்த மாளிகை (1972) - 271 ஹவுஸ்புல் காட்சிகள்.
கீழ்வானம் சிவக்கும் (1981) - 288 ஹவுஸ்புல் காட்சிகள்
இரண்டும் சரியாக இருந்தாலும், இவற்றுக்கிடையே 1979-ல் 'திரிசூலம்' சாந்தி, கிரௌன், புவனேஸ்வரி மூன்று அரங்குகளிலும் தொடர்ந்து 100 நாட்களுக்கு மொத்தம் 900 தொடர் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடியிருக்கிறது. (ஆதாரம் திரிசூலம் 100வது நாள் தினத்தந்தி மற்றும் தினகரன் விளம்பரம்)...
திரு கார்த்திக் சார்,
தகவலுக்கு நன்றி...!
நீங்கள் கூறியதை அனைவரும் அறிந்திருந்தாலும் இதோ அந்த விளம்பரம் !
100 நாட்களும் தொடர்ந்து அனைத்து திரையரங்கிலும் மொத்தம் 900 அரங்கு நிறைந்த காட்சிகள் ...!!
12 வாரத்தில் ஒரு கோடி ருபாய் வசூலை கடந்து விண்ணைமுட்டும் வெற்றியல்லவா திரிசூல வெற்றி !
திரை உலகையே புரட்டிபோட்ட வெற்றி அல்லவா ! முதன் முதலில் திரையுலக வரலாற்றில் ருபாய் இரண்டு கோடிக்கு மேல் வசூல் செய்த காவியமாயிட்ரே நம் agmark தமிழனின் திரிசூலம் !!
100days-900shows.jpg
Last edited by NTthreesixty Degree; 30th August 2013 at 10:18 PM.
-
30th August 2013, 07:04 PM
#1623
Junior Member
Newbie Hubber
Joe சார்,
உங்கள் இணைப்புகளுக்கு நன்றி. எழுத தூண்டும் இணைப்புகள்.
கார்த்திக் சார்,
சும்மா பேருக்காக சொல்லவில்லை. ஏற்கெனெவே பல முறை சொன்னது. உங்களுடைய,சாரதாவினுடைய,முரளியுடைய எழுத்துக்களே என்னை இங்கு இழுத்து வந்தவை. உங்களிடமிருந்து வரும் வார்த்தைகள் வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷி போன்றது. நன்றி.
360 டிகிரி- திரும்ப சுறுசுறுப்பாகி விட்டீர்கள். எங்களுக்கு தினமும் விருந்துதான்.
ராகவேந்தர் சார்,
பம்மலாரின் நேரடி பங்களிப்பு இல்லாத குறையை உங்கள் மீள்பதிவுகள் தீர்த்து ,பம்மலார் அருகிலிருக்கும் உணர்வை ஏற்படுத்துகிறது.
-
30th August 2013, 09:35 PM
#1624
Junior Member
Devoted Hubber
1952 - இந்திய திரை உலகமே எதிர்பார்க்காத ஒரு புயல் தமிழகத்திலிரிந்து எழும் என்று எவருமே எதிர்பார்க்காத ஒரு வருடம்..! விழுப்புரம் சின்னையா கணேசன் என்ற ஒரு நடிகர் தமிழ் திரை உலகு, தென்னிந்திய திரை உலகு மட்டுமல்ல, இந்திய திரை உலகமே திரும்பிபார்க்கும் வண்ணம் தன்னுடைய திரையுலக தொடக்கத்தை ஆணித்தரமாக பதிய வைத்த ஆண்டு.
திரை உலகத்திருக்கு எப்படி தமிழ் பேசவேண்டும், எப்படி நடிக்கவேண்டும் என்று பல கோணங்களிலிருந்தும் கற்றுகொடுத்த மறத்தமிழன். பிற்காலத்தின் இந்திய மாகாணம் மட்டும் அல்ல உலக அளவில் பெயரும் புகழும் நிலைக்கும் வண்ணம் திறமையின் உச்சம் தொட்ட கலைஞன், நடிகர் திலகம்.
பல தருணங்களில் உலக திரை உலகையே தன பக்கம் திரும்பிபார்க்கவைத்த உன்னத கலைஞன்.
நடிக்க வந்த அந்த ஒரு வருடம் மட்டுமே இரண்டு படங்கள். 1953 முதல் கிட்டத்தட்ட 45 ஆண்டுகள் தமிழ் திரை உலகின் சராசரி 40 சதவிகித வியாபாரத்தை தன்னுள் கொண்டுவந்த உன்னத கலைஞன்.
தயாரிபாளர்களின் விநியோகஸ்தர்களின் முதல்தர விடிவெள்ளியாக என்றேண்டும் வரவேற்கபட்டவன்.
Producer என்ற அந்தஸ்து, கெளரவம் இவரை வைத்து ஒரு திரைப்படமாவது எடுத்தாலொழிய எவருக்குமே கிட்டாதது, நிறைவும் பெறாது .
நடிக்க வந்த 7 வருடத்தில் இந்திய திரை உலகையே, உலக திரை உலக அளவில் கௌரவபடுத்திய ஒரே தமிழன்.
கப்பலோட்டிய தமிழன், கட்டபொம்மன், கர்ணன், டான்சன், சலீம், செங்குட்டுவன், சோக்ரடீஸ், ஒதெல்லோ, பரதன், ராஜ ராஜ சோழன், அப்பர், சுந்தரர், கொடிகாத்த குமரன், பகத்சிங், பாரதி என பல தேசிய தலைவர்களையும், சரித்திர, இதிகாச நாயகர்களை தன்னுடைய தணியாத சேவை நோக்கம் கொண்டு தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல இந்திய திரையுலகமே வியக்கும் வண்ணம் திரையிலே பிரதிஷ்டை செய்த திரை உலக சித்தர்.
ஒவ்வொரு வருடமும் பல படங்கள் இருந்தாலும், குறைந்தபட்சம் ஒரு திரைப்படமாவது இந்திய திரை உலகை நம் தமிழ்திரைஉலகின் பக்கம் திரும்பிபார்க்கவைத்த பெருமை நம் நடிகர் திலகத்திற்கு உண்டு.
உதாரணமாக
1952இல் பராசக்தி
1953இல் திரும்பிப்பார்
1954இல் மனோஹர
1956இல் ரங்கூன் ராதா
1957இல் மக்களை பெற்ற மகராசி
1958இல் இரட்டை வேட வரலாற்றில் ஒரு நாயகன் ஒரு வில்லன் - எப்படி வித்தியாசம் காட்டவேண்டும் என்று அனைவர்க்கும் கற்றுத்தந்த உத்தமபுத்திரன்
1959இல் உலக அரங்கில் தமிழனை தமிழ் திரை உலகை தலை நிமிரச்செய்த வீரபண்டியகட்டபோம்மன்
1960இல் படிக்காத மேதை
1961இல் பார்போற்றும் பாசமலர்
1962இல் ஆலயமணி
1963இல் இருவர் உள்ளம்
1964இல் நவராத்திரி
1965இல் தெய்வ நிந்தனையும், நாத்தீகமும் தமிழகத்தில் தலைவிரித்து ஆடியபோது நெற்றிக்கண்ணால் பரமேஸ்வரன் தீமைகளை சுட்டெரிப்பது போல தன்னுடைய நடிப்பால் ஆதிகத்தையும், தெய்வ சிந்தனையையும் ஆலவ்ருட்சம் போல தழைக்க செய்து நாத்தீகமும் தெய்வ நிந்தனையையும் நடிப்பால் தலைதூக்கவிடாமல் சுட்டெரித்த திருவிளையாடல்
1966இல் சரஸ்வதி சபதம்
1967இல் ஊட்டி வரை உறவு
1968இல் தில்லான மோகனம்பாள்
1969இல் ஆஸ்கார் விருது பரிந்துரைத்த தெய்வமகன்
1970இல் வியட்நாம் வீடு
1971இல் பாபு
1972இல் பட்டிக்காடா பட்டணமா, வசந்த மாளிகை
1973இல் எங்கள் தங்கராஜா
1974இல் தங்கபதக்கம்
1975இல் அவன்தான் மனிதன்
1976இல் உத்தமன்
1977இல் அண்ணன் ஒரு கோயில்
1978இல் தியாகம்
1979இல் தமிழ் திரை உலகவரலாற்றிலயே ருபாய் 2 கோடிக்கு மேல் வசூல் குவித்த திரிசூலம்
1981இல் கீழ்வானம் சிவக்கும்
1982இல் தீர்ப்பு
1983இல் சந்திப்பு
1984இல் வாழ்கை
1986இல் சாதனை மற்றும் மருமகள்
இப்படி ஒவொரு வருடமும் தென்னிந்திய திரை உலகம் மட்டும் அல்ல...இந்திய திரை உலக, உலக திரை உலக வரலாற்றையே ஒரு முறை இரு முறை அல்ல பல முறை நாலா திசைகளிலும் புரட்டிபோட்ட மஹா கலைஞன், நம் தமிழகத்தின் பெருமை நடிகர் திலகம் சிவாஜி கணேசன் என்பது உண்மை தமிழர்கள் நன்றி மறந்தாலும் உள்ளத்தால் ஒத்துகொண்ட உண்மையாகும்.
Last edited by NTthreesixty Degree; 31st August 2013 at 09:49 AM.
-
30th August 2013, 10:20 PM
#1625
Junior Member
Devoted Hubber
திரு கார்த்திக் சார்,
தகவலுக்கு நன்றி...!
நீங்கள் கூறியதை அனைவரும் அறிந்திருந்தாலும் இதோ அந்த விளம்பரம் !
100 நாட்களும் தொடர்ந்து அனைத்து திரையரங்கிலும் மொத்தம் 900 அரங்கு நிறைந்த காட்சிகள் ...!!
12 வாரத்தில் ஒரு கோடி ருபாய் வசூலை கடந்து விண்ணைமுட்டும் வெற்றியல்லவா திரிசூல வெற்றி !
திரை உலகையே புரட்டிபோட்ட வெற்றி அல்லவா ! முதன் முதலில் திரையுலக வரலாற்றில் ருபாய் இரண்டு கோடிக்கு மேல் வசூல் செய்த காவியமாயிட்ரே நம் agmark தமிழனின் திரிசூலம் !!
100days-900shows.jpg
-
31st August 2013, 08:58 AM
#1626
Junior Member
Devoted Hubber
இந்திய திரை உலகை பொறுத்த வரை சமுதாய சிந்தனை மற்றும் மக்களால் தான் சம்பாதிகின்றோம் ஆகையால் மக்களுக்கு தன்னால் இயன்ற உதவிகளையும் எக்காலத்திலும் செய்யவேண்டும் என்ற மிகபெரிய நல்ல எண்ணம் கொண்டவர் நம் நடிகர் திலகம்.
நல்ல காரியங்களை செய்வதற்கு விளம்பரமோ அரசியல் அனுபவமோ தேவை இல்லை, நல்ல மனது மட்டுமே தேவை என்ற எண்ணம் கொண்டவர்,நடிகர் திலகம் அவர்கள்.
இது பல தருணங்களில் நிரூபித்தவர் நடிகர் திலகம். 1959இல் அகில இந்திய அளவில் முதன்முதலாக பண்டித ஜவஹர்லால் நேஹ்ருவிடம் குழந்தைகள் மதிய உணவு திட்டத்திற்கு பெருந்தலைவர் முன்னிலையில் மொத்தமாக ஒரே தவணையில் ஒரு லட்சம் ருபாய் வழங்கியவர் நடிகர் திலகம் அவர்கள்.
அதுமட்டுமா, 1965இல் இந்திய சீனா யுத்தசமயத்தில் அப்போதைய பிரதமர் திரு லால் பகதூர் சாஸ்திரியிடம் சுமார் 200 சவரனுக்கும் மேல் தங்கநகைகளை யுத்தநிதிக்காக வழங்கினார்.
மேலும் இந்திய எல்லைக்கு அனைத்து நல்லுள்ளம் கொண்ட நடிக நடிகையரை தனது செலவில் அழைத்துக்கொண்டு போர்வீரர்கள் உற்சாகபடுத்த அந்த எல்லையிலேயே கலைநிகழ்ச்சி சொந்த செலவில் இந்த நாட்டைகாப்பாற்றும் வீரர்களை உற்சாகபடுத்த செய்தவர் இந்த நாட்டின் மைந்தன் நடிகர் திலகம் என்பது அனைவரும் அறியவேண்டும்.
அதேபோல கடுமையான பஞ்சத்தால் ராமநாதபுர மாவட்டம் அவதியுற்றபோது கட்சிபேதம் பாராமல் ஒருலட்சம் ருபாய் நன்கொடை வழங்கியவர் நடிகர் திலகம். இதில் கொடுமை என்னவென்றால், நடிகர் திலகம் கொடுத்த நன்கொடையில் குற்றம் இருப்பதுபோல ஒரு மாயை ஏற்படுத்த முயற்சி செய்து, நடிகர் திலகத்தின் கொடைதன்மையில் ஒரு சிலர் வேறொரு கட்சி பெயரில் குழப்பம் விளைவித்து விளம்பரம் தேட முயற்சித்தது நகைப்புக்குரியது, பைசா செலவில்லாமல் இவர் பணத்தில் அவர்கள் விளம்பரம் தேடிகொண்டது அன்றைய செய்தித்தாளை படித்தால் அனைவரும் புரிந்துகொள்ளலாம்.
இதுமட்டுமல்ல, பல நல்ல காரியங்கள், பல நல்ல விஷயங்களை தமிழ்நாடிர்க்கும், மக்களுக்கும், சமுதாயத்திற்கும் எந்த பிரதிபலனும் எதிர்பாராமல் செய்தவர் தமிழகத்தின் உண்மையான மண்ணின் மைந்தன் நடிகர் திலகம்.
1959-One Lakh Midday meal for SchoolChildren-AV-12-4-1959.jpg
1965IndiaPakistanWarDonation200SovereignWeighingGoldenPen.jpg
1974-1975-Ramnad Panjam.jpg
To Nehru in 1959.jpg
Untitled-15-1.jpg
தமிழகத்திற்கும், தமிழன் வாழ்விற்கும், இந்த சமுதாயத்திற்கும், இந்தியாவிற்கும், இந்திய மக்களுக்கும் அவர் தம்மாலான உதவிகளை ஒரு தனிப்பட்ட நல்ல மனிதனாக, சொல்லப்போனால் மனிதரில் மாணிக்யமாக எப்போதும் செய்தவர், செய்துகொடுத்தவர்.
அவர் நம் தமிழகத்திற்கும், இந்தியனாடிர்க்கும் தன்னால் ஆனதை மனிதரில் மாணிக்யமாக விளம்பரபடுத்தாமல் எந்த ஆதாயமும் தேடாமல் செய்துவிட்டார் !
ஆனால் நம் தமிழகமும், தமிழக மக்களும், தமிழன், தமிழ் உணர்வு என்று மேடையில் மட்டுமே முழங்கும் கனவான்களும் அந்த நன்றியை (அரசியலை விட்டுத்தள்ளுங்கள்....ஆகையால் தான் அதை சாக்கடையை என்று அரசியல் விற்பன்னர்களும் விமர்சகர்களும் கூறுகின்றனர் )அதற்குரியவிதத்தில் பிரதிபலித்தார்களா என்று ஒரு கேள்வி எழுகிறது அதற்க்கு பதில் ?
தலையைதான் குனிய வேண்டியிருக்கிறது !
மண்ணின் மைந்தனை எல்லாவிதத்திலும் தமிழகமும் தமிழுணர்வு இல்லாத மக்களும் கேவலம் தங்களுடைய காழ்புணர்ச்சிமட்டுமே கொண்டு அவமதித்ததற்காக ! அவமதித்துகொண்டிருப்பதர்க்காக !
Last edited by NTthreesixty Degree; 31st August 2013 at 11:20 AM.
-
31st August 2013, 10:15 AM
#1627
Junior Member
Seasoned Hubber
Vasanthathil Oar Naal & Chiranjeevi has come 2 in 1 combo DVD for the
benefit of crores of NT's fans.
Mr Gopal sir,
Your analysis on Thavaputhalvan is simply superb. During childhood days
watched the movie at Pilot with my Mother.
-
31st August 2013, 10:17 AM
#1628
Junior Member
Seasoned Hubber
Mr Subbu Sir,
Nijathil nadikka theriyatha vithagar our NT. Truth always triumph in the end.
-
31st August 2013, 10:44 AM
#1629
Senior Member
Diamond Hubber

Originally Posted by
s.vasudevan
Nijathil nadikka theriyatha vithagar our NT.
நிஜத்தில் நடிக்கத் தெரியாதது ஒரு வித்தகம் அல்ல . நிஜத்தில் நடிக்கும் வித்தகம் இல்லாதவர் என்று வேண்டுமானால் சொல்லலாம்.
பாசமலருக்கு அழாதவன் மனுஷனாடே ! - சுயம்புலிங்கம்

-
31st August 2013, 02:24 PM
#1630
Junior Member
Seasoned Hubber
Expecting memorable post from Mr Karthik for his 2000th Post.
Advance wishes sir.
Bookmarks