Thanks murali sir immediate response
Printable View
Thanks murali sir immediate response
அன்பு நடிகர் திலகம் நண்பர்களுக்கு..
என் நண்பர் சைலேஷ் பாசு அவர்கள் பதிவுகளில் அவர் திருப்தியில்லாமல் இருப்பது அறிகிறேன் ..உங்களது ஆறுதல் என் நண்பருக்கு சரியான ஆறுதலாக இருக்கும் என்று நம்புகிறேன்..இதை நீங்கள் செய்யவேண்டும் என்று பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்..இதை கேட்பதற்கு இந்த திரியில் எனக்கு உரிமைஉள்ளது என்று சொல்வதைவிட பணிவுடன் கேட்க உரிமை உள்ளது .. செய்வீர்கள் நண்பர்களே.. எனக்காக..நன்றி..
அன்பு நண்பர்களே!
கல்கியில் ஸ்ரீதர் எழுதிய திரும்பி பார்கிறேன் என்ற தொடரில் சிவந்தமண் வெற்றி குறித்து சில விசயங்களை கூறியிருந்தார்!
அந்த தொடரை சந்திரமௌலி என்பவர் தனி புத்தகமாக வெளியிட்டார்! அந்த புத்தகத்தில் சிவந்தமண் தோல்விப்படம் என்று ஸ்ரீதர் கூறியதாக எழுதபட்டதாக மாற்று முகாம் நண்பர் ஒருவர் பொய்யான பதிவுகளை வெளியிட்டார்! நான் கல்கியில் அந்த தொடரை படித்தவன்! அதில் அப்படி ஸ்ரீதர் கூறவில்லை என்று தெரிவித்து இருந்தேன் ! ஒருவேளை சந்திரமௌலி அவரின் புத்தகத்தில் தவறான செய்திகளை போட்டிருக்கிறார் போலும் என்று நினைத்தேன்!
என் எண்ணங்களை கடந்த என் பதிவுகளில் தெரிவித்தும் இருந்தேன்! ஆனால் கல்கியில் வந்தது தான் சந்திரமௌலி புத்தகத்திலும் உள்ளது என்று ஒரு நண்பர் தெரிவித்ததாக நேற்று ஒரு பதிவில் தெரிவித்தேன்! சந்திரமௌலி புத்தகத்தில் சிவந்தமண் குறித்து ஸ்ரீதர் எழுதிய பக்கங்களின் zeroxcopy எனக்கு இன்று கிடைத்தது! மாற்று முகாம் நண்பர் எந்த புத்தகத்தில் உள்ளது என்று கூறினாரோ அதே புத்தகத்தின் பக்கங்களை நான் இங்கு கீழே பதிவு செய்கிறேன்!
அதை கிளிக் செய்து பாருங்கள்! உண்மையை உணருங்கள்! நமது நண்பர்கள் பார்த்துவிட்டு தங்கள் கருத்துக்களை கூறுமாறு வேண்டுகிறேன்!
புத்தகத்தின் பக்கங்களை ஜெராக்ஸ் எடுத்து அனுப்பிய சிவாஜி சமூக நல பேரவையின் மாநில ஒருங்கிணைப்பாளர் சென்னையை சேர்ந்த அன்பு நண்பர் திரு ராமஜெயம் அவர்களுக்கு என் இதயப்பூர்வமான நன்றி!
கீழே உள்ள படத்தை கிளிக் செய்து காணவும்! அதில் சிரமம் இருந்தால் கூறவும்! மாற்று ஏற்பாடு செய்கிறேன்!
மிக்க நன்றி!!!
Attachment 4438
Attachment 4439
Dear Sailesh Sir,
It is sort of an open letter to you. I have interacted with you only twice or rather I should say that was one sided because only i had written. Once I thanked you for writing that Bharat Ratna should be conferred on NT. Second was yesterday when i cleared a possible misunderstanding.
Whatever may be the reason, would request you not to get emotional and pose a challenge by declaring such assets in public. This is after all a discussion forum where exchange of views happen. People so much attached to their idol may say something harsh in the heat of the moment. We will have to understand that we require all types of people to make this world.
Basically everybody is good. Only when provoked some react. I am not here to advise you and I don't think I am qualified for that. It is only a friendly gesture. I don't know whether you will respond to this but one thing is sure. I am not doing it for dramatics sake and it is a genuine request.
Good Night and and have a safe travel Expecting you to see you back
Regards
நண்பர் திருச்சி பாஸ்கர்
தாங்கள் பதிவிட்ட புத்தக பக்கங்களின்படி
சிவந்த மண் சிறப்பாக ஓகோ என்று ஓடி
ஶ்ரீதருக்கு ஆறுதலையும் ஆதாயத்தையும்
கொடுத்திருக்கிறது
கலைஞர் வசனம் எழுதியிருந்தால் சிவந்த மண்
மேலும் சிறப்பாகஓடி தர்த்தி தந்த
நஷ்ட்டத்தை ஈடு செய்திருக்கும்
என்று ஶ்ரீதர் சொல்லியிருக்கிறார்
சிறு பிள்ளைகள் கூட விளங்கிக்கொள்ளக்கூடியமாதிரி
விளக்கமாகசொல்லப்பட்டிருக்கிறது
மறைதிரு எம் ஜி ராமச்சந்திரன் அவர்களின் ரசிக நண்பர்கள்
இதனை எப்படி தவறாக புரிந்துகொண்டார்கள் என
எனக்குப்புரியவில்லை
http://i59.tinypic.com/21oslki.jpg
http://i59.tinypic.com/jucz7q.jpg
திரு கலைவேந்தன் அவர்களே !
சந்திரமௌலி புத்தகத்தின் பக்கங்களை நான் பதிவிட்டது பார்த்தீர்களா ?
அந்த புத்தகத்தில் உள்ளதாக நீங்கள் பதிவிட்ட செய்திகளுக்கும், உண்மையிலேயே அந்த புத்தகத்தில் உள்ள செய்திகளுக்கும் எவ்வளவு வித்தியாசம்!
சிவந்தமண் ஹிந்தி தர்த்தி தான் சரியாக போகவில்லை தமிழில் பெரிய வெற்றி என்றுதான் ஸ்ரீதர் எழுதினார் என்று நான் என் பதிவுகளில் கூறியது தான்
உண்மை என்பதை இப்போதாவது புரிந்து கொண்டீர்களா? அல்லது இந்த என் பதிவுக்கும் ஏதாவது சால்ஜாப்பு சொல்ல போகிறீர்களா? எந்த விஷயத்தயும் விமர்சிக்கலாம்! ஆனால் நாம் சொல்லும் செய்திகளில் பொய், புரட்டு இருக்ககூடாது! எந்த ஒரு செய்தியையும் அதை சொன்னவர்கள் சொன்ன அர்த்தத்தில்
கூறாமல் மாற்றி வேறு அர்த்தம் கொள்ளும்படி திரித்து எழுதகூடாது! மீண்டும் கூறுகிறேன் நண்பரே என் பதிவுகளில் வேகம் இருக்கலாம், ஆனால் ஒரு
போதும் உண்மையற்ற செய்திகளோ, திரித்து எழுதுவதோ இருக்காது! புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்!
கலை வேந்தன் சார் நாடோடிமன்னன் படத்தில் எங்களுக்கு புகழ் தான் கிடைத்தது ஆனால் பெரிதாக பொருள்கிடைக்கவில்லை என்று mg சக்ரபாணி
அவர்கள் கூறியதாக உங்கள் அன்பு நண்பர் திரு சைலேஷ்பாபு அவர்கள் உங்கள் திரியில் சமீபத்தில் ஒரு பதிவு செய்திருந்தார்! நாடோடிமன்னன் பல இடங்களில் 100 நாட்கள் ஓடியும் பெருசாக பொருள் கிடைக்கவில்லை என்று உங்கள் நண்பரே சொல்கிறார்! அப்போது அந்த படம் 100 நாட்கள் ஓடியது ஆனால்
வசூல் குறைவு என்று அர்த்தமா? சக்ரபாணி அவர்கள் கூறியதுக்கு சரியான காரணம் என்ன? எனக்கு புரியவில்லை நண்பரே! விளக்குங்கள்!
நன்றி !
அன்பு தம்பி திரு யுகேஷ் அவர்களே!
நேற்று இன்று நாளை படம், மற்றும் அதை தயாரித்த அசோகன் அவர்கள் பற்றி எனக்கு தெரிந்த சில விசயங்களை கூறுகிறேன்! கேளுங்கள்!
அந்தப்படம் நல்ல வசூல் பெற்றபடம் தான்! 100 நாட்கள் ஓடிய படம் தான்! ஆனால் பிரச்சனை என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்! அந்தப்படம் 1971 ம் ஆண்டே அசோகனால் ஆரம்பிக்கப்பட்ட படம்! 1972 ல் உங்கள் தலைவர் கட்சி ஆரம்பித்த பிறகு அந்த படத்துக்கு பலமுறை கால்ஷீட் கொடுத்தும்
பட பிடிப்புக்கு வரவில்லை! படபிடிப்பு செட், ஸ்டுடியோ வாடகை , மற்ற நடிகர்களின் கால்ஷீட் வீண் போன்ற காரணங்களால் தேவையற்ற செலவு
அசோகனுக்கு அதிகம் ஏற்பட்டது! மேலும் எல்லோரும் சொந்த பணத்தில்மட்டும் படம் எடுக்கமாட்டார்கள்! அசோகனும் கடனும் வாங்கியும் தான் அந்த
படத்தை தயாரித்தார்! வட்டி தலைக்கு மேல் போய்விட்டது! சுருக்கமாக சொன்னால் இரண்டு mgr படங்கள் எடுத்த செலவு அவருக்கு ஒரு படத்துக்கே ஆனது!
ஒருவழியாக படத்தை ஆரம்பித்து மூன்று வருடங்கள் கழித்து மிகவும் சிரமப்பட்டு 1974 இல் படத்தை வெளியிட்டார்! வழக்கமாக mgr படங்களை என்ன
விலைக்கு வாங்குவார்களோ அதே விலைக்கு இந்த படமும் படம் ஆரம்பித்த போதே distributors அட்வான்ஸ் கொடுக்கப்பட்டது! பேசிய தொகைக்கு அவர்கள்
வாங்கி படம் ரிலீஸ் ஆகி distributors க்கு லாபம் கிடைத்தது! ஆனால் படம் தயாரித்த செலவு விற்ற தொகையை விட அதிகம் என்ற காரணத்தால் அசோகனுக்கு
நஷ்டம் ஏற்பட்டு mgr அவர்களுடன் மனக்கசப்பு ஏற்பட்டது! அதற்கு பிறகு வந்த 13 mgr படங்களில் நினைத்ததை முடிப்பவன் படத்தை தவிர அசோகன்
வேறு mgr படத்தில் நடிக்கவில்லை! நி முடிப்பவன் 1971 இல் ஆரம்பித்த படம்! அதனால் அந்தபடத்தில் மட்டும் அவர் இருந்தார்! ஏன் அசோகன் நே இன் நாளை க்கு பிறகு mgr படத்தில் நடிக்கவில்லை? அசோகனுக்கு ஏற்ற கதாபாத்திரம் இல்லை அதனால் mgr படத்தில் அதற்கு பிறகு நடிக்கவில்லை என்று
தான் நீங்கள் கூறுவீர்கள் என்று எனக்கும் தெரியும்! சரி ஓகே! 1978 இல் கருணாநிதி அவர்களின் சொந்த படமான அவரின் வசனத்தில் வந்த வண்டிக்காரன்
மகன் என்ற படத்தில் mgr அவர்களை நக்கலடித்து அசோகன் நடித்தாரே? அதுக்கு என்ன காரணம்? நண்பரே அந்த படத்தை இப்போதும் நீங்கள் பார்க்கலாம்!
ஒருவேளை நீங்கள் இதற்கு முன்பு வண்டிக்காரன் மகன் பார்த்ததில்லை என்றால் இப்போது பாருங்கள்! நான் சொன்னதின் பொருள் விளங்கும்!
நேற்று இன்று நாளை திரைஅரங்கு உரிமையாளர்கள், வினியோகஸ்தர்கள் போன்றவர்களுக்கு லாபம் கொடுத்த வெற்றிப்படம்!
ஆனால் மேலே சொன்ன காரணங்களால் தயாரிப்பாளர் அசோகனுக்கு நஷ்டத்தை கொடுத்த படம் !
நன்றி !!
,
அன்புக்கும் மதிப்புக்கும் உரிய ராகவேந்திரா சார் !
நம் நடிகர்திலகத்தின் அரசியல் தவறுகளை நான் கடுமையாக விமர்சனம் செய்தபோது நீங்கள் கோபப்பட்டு வருத்தத்தில் திரியை விட்டு போகிறேன் என்று
கூறினீர்கள்! அப்போது ragavendrar சார் பாஸ்கர் சொன்ன அல்பதனமான வார்த்தைகளுக்காக நீங்கள் திரியை விட்டு செல்லாதீர்கள், பாஸ்கர் என்ற அற்ப
மனிதனுக்கு சிவாஜியின் பெருமைகள் தெரியவில்லை! தேர்தல் தோல்வியை வெய்தா சிவாஜியை எடைபோடுவது? என்று மாற்று திரி நண்பர்கள் உங்களுக்காக நம் திரியில் வந்து உருகினார்கள்! நான் சொல்வது நடந்த உண்மை தானே? ஆனால் நேற்று அவர்கள் திரியில் ஒருவர் சிவாஜி கவுன்சிலர்
பதவிக்கு கூட தேர்ந்து எடுக்கபடாதவர் என்று பதிவு செய்துள்ளார்! அவர்களின் உண்மையான முகத்தை நீங்கள் முதலில் புரிந்து கொள்ளுங்கள்!
சிவாஜியின் சினிமா சாதனைகளின் பாதி அளவு கூட செய்ய இயலாதவர்கள் அவர்கள்! அவரின் அரசியல் தோல்வியை விமர்சனம் செய்யாமல் சினிமா
சாதனைகளை மட்டும் விவாதித்து அவர்களால் எந்த காலத்திலும் தாக்கு பிடிக்க முடியாது! அரசியலுக்கு வருவார்கள் அல்லது பொய் பதிவுகளை இடுவார்கள்!
ராகவேந்திரர் சார் என் பதிவுகள் எதுவாவது உங்களுக்கு மனவருத்தத்தை உண்டாக்கினால் அதை நீக்கும்படி எனக்கு நீங்கள் உரிமையுடன் கட்டளை இடலாம் சார்! நீங்கள் என்னைவிட மூத்தவர் என்பதால் மட்டுமல்ல! நீங்கள் சிவாஜியின் தவறுகளையும் ஏற்று கொள்ளும் பரந்த மனதுடையவர்!
அந்த வகையில் நீங்கள் என்னைவிட சிவாஜியின் மேல் அதிகம் பற்றுள்ளவர் என்று உங்களை மதிக்கிறேன் !
மாற்று நண்பர்களிடம் நட்புணர்வுடன் இருப்பது நல்ல பண்பு தான்! ஆனால் ஒரு விவாதம் என்று வந்தால் நம் ரசிகர்களின் உண்மையான கருத்துக்கு
ஆதரவு தாருங்கள் என்பதே என் வேண்டுகோள்!
நன்றி !!
அன்பு நண்பர்களே !
சிவாஜியின் அன்னை சிலையை மக்கள்திலகம் திறந்தார் ! உண்மை!
சிவாஜியின் தஞ்சாவூர் சாந்தி , கமலா திரை அரங்கங்களை மக்கள்திலகம் திறந்து வைத்தார்! உண்மை!
சிவாஜியும் எம்ஜிஆரும் நல்ல நட்புணர்வுடன் இருந்தவர்கள்! உண்மை!
நான் சிவாஜி வெறியன்! சிவாஜியை ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும்! அதற்காக சிவாஜிக்கு பிடித்த எல்லோரையும் எனக்கும் பிடிக்கவேண்டும் என்று எந்த
கட்டாயமும் இல்லை! சிவாஜிக்கு மக்கள்திலகத்தை பிடிக்கும் என்பதால் மக்கள் திலகத்தை விட திரைஉலகில் அதிக சாதனைகள் படைத்தவர் நடிகர்திலகம்
என்று சொல்லும் உரிமையை நான் இழந்து விட்டதாக நினைக்கவில்லை! அதை அனைவரும் உணர வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்!
நன்றி !
இனிய நண்பர் திரு திருச்சி பாஸ்கர் சார்
தங்களுக்கு எப்படி நன்றி கூர்வது என்றே தெரியவில்லை.
நாம் என்றுமே பொய் தகவலை பதிவிட்ட வழக்கம் இல்லை என்பது உலகறிந்த உண்மை. மேலும் நாம் என்றுமே அடுத்தவருடைய புகழை நம் புகழாகவோ அல்லது நமது சிறுமையை அடுத்தவரின் சிறுமை என்றோ கூறும் பழக்கமோ இல்லாதவர்கள் .
நம் தலைவர் நமக்கு கற்று கொடுத்த பாடம் " ஒருவன் புகழை ஒருவன் மறைத்து உயரும் வரலாற் இல்லை " என்பதாகும் ! அதன் படியே நாம் நடக்கிறோம். அதுமட்டுமல்ல ஒருவரை இறக்கிதான் நம் புகழை நிலைநாட்ட வேண்டிய நிர்பந்தம் நமக்கு 1952 முதலே கிடையாது !
இத்தனைக்கும் நம்மால் தான் உலக அரங்கில் தமிழன் திரை நிலை வானளாவ உயர்ந்தது !
நம்மை மட்டும்தான் உலக அளவில் பாராட்டும், பட்டமும், பதவியும் அங்கீகாரத்தையும் உலக சினிமா மற்றும் அரசியல் சார்ந்தவர்கள் நம்மை தேடி வந்து கொடுத்துள்ளனர்.
1953 முதல் 1987 வரை நம்முடைய திரைப்படத்தின் வியாபாரம் தமிழ் திரைப்பட வியாபாரத்தில் கிட்டத்தட்ட மூன்றில் ஒருபங்காக இருந்தது ! இது அனைவருக்கும் தெரியும்.
இருந்தாலும் ஏதோ ஒரு காழ்புணர்ச்சி ..பலரை நம் பெயரை களங்கபடுத்தும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட செய்கிறது .....செப்டம்பர் 11ஆம் தேதி 2015 வரை தொடர்ந்துகொண்டிருக்கிரதேன்றால் பாருங்கள்.
வயிதேரிச்சலும்,,,பொறாமையும்...காழ்புனர்சியும் எந்தளவிற்கு மற்றவர்களுக்கு நம் மீது உள்ளது என்று.
திரு ஸ்ரீதர் அவர்கள் சொன்னதாக உள்ள இணைப்பை பதிவு செய்தவுடன் ...ஆமாம்...இது உண்மை...எனக்கு தெரியும்...எனக்கு நினைவிருக்கிறது...நன்றாக நினைவிருக்கிறது...ஸ்ரீதர் அப்படிதான் சொன்னார் என்று கூறியவர்கள் எல்லாம் இன்று நீங்கள் பதிவு செய்த அந்த SOURCE ஆதாரத்தை ஆவணத்தை பார்க்கும்போது, திரிகளை படிக்கும் பொது மக்கள் நடுநிலையாளர்கள் இவர்களை பற்றி என்ன நினைப்பார்கள் என்று சற்று கூட சிந்துத்து பார்க்கட்டும் !
உண்மை தெரியாமல் சபாஷ் போடுபவர்களுக்கும் இது சால பொருந்தும் !
இந்த நிலையில் தாங்கள் பதிவு செய்துள்ள ஆதாரம்...அதாவது நம் மீது வேண்டுமென்றே சேற்றை வாரி இறைத்த பொய் தகவலை ....பொய் தகவலே என்று நிரூபிக்கும் வண்ணம் ஒரு ஆதாரம் பதிவு செய்தது மிகவும் மெச்சத்தகுந்தது !
இறைவன் நடிகர் திலகம் அவர்களின் ஆன்மா நிச்சயம் உங்களை வாழ்த்தும் !
மிக்க நன்றி சார் !
rks
அன்பு நண்பர் பாஸ்கர்
தங்களுடைய பதிவிற்கு நன்றி.
எனக்கு என்றுமே உண்மை பேசிப் பழக்கமில்லை.
நடிகர் திலகத்துடன் நான் பழகியதும் அவர் என்னிடம் சொன்னதாக நான்
சொன்ன விஷயங்களும் பொய்யே.
நடிகர் திலகத்தை தவறாக அட்வைஸ் செய்து அவரைத் தேர்தலில் தோல்வியடையச் செய்து விட்டேன்.
என்னைப் பொறுத்த மட்டில் அன்னை இல்ல்த்திற்கு விசுவாசமாக இருப்பதால் இங்கே பதிவிடும் தகுதியை இழந்து விட்டேன். அது மட்டுமல்ல, விக்ரம் பிரபுவின் பேரப்பிள்ளைகள் நடிக்க வந்தாலும் அவர்களுக்கும் நான் காவடி தூக்குவேன்.
மாற்றுத்திரி நண்பர்களோடு நட்புணர்வு தான் எனக்கு முக்கியம். சிவாஜி முக்கியமில்லை.
சிவாஜிக்கு யாரைப் பிடிக்குமோ அவரை எனக்கும் பிடிக்கும்.
இங்கே சிவாஜி ரசிகனாக தொடர வேண்டுமென்றால் முதல் தகுதி நடிகர் திலகத்தின் அரசியலையும் அவருடைய குடும்பத்தையும் விமர்சிக்க வேண்டும். அவருடைய சினிமாவை மட்டுமே பாராட்ட வேண்டும். அதுவும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கப்புறம் அவர் நடித்த படங்களைப் பற்றிப் பேசினால் அவ்வளவு தான், அவர்களுடைய ஏழேழு ஜென்மங்களுக்கும் சாபம் கிடைக்கும். யார் யாரெல்லாம் அவருடைய நடிப்பை ஓவர் ஆக்டிங் என்று விமர்சித்தாலும் அவர்களுக்கு பெருந்தன்மையுடன் இங்கு இடம் தரவேண்டும். அதே போல ஒரு குறிப்பிட்ட காலம் வரைக்கும் தான் அவர் நல்லவர் என்று சொல்ல வேண்டும். அதற்கப்புறம் அவர் ஒரு சந்தர்ப்பவாதி, பச்சோந்தி என்று நினைக்க வேண்டும்.
இப்படிப் பல்வேறு தகுதிகளை ஒவ்வொன்றாக நான் பெறுவதற்கு எனக்கு இந்த ஜென்மம் போதாது.
இங்கே சிவாஜி ரசிகனாகப் பதிவிடுவதற்குத் தேவையான தகுதிகளையெல்லாம் நான் அடைந்த பின் தான் முழுமையாக பங்கு கொள்ள முடியும். அது எப்போது என்னால் பெற முடியும் என்பது தெரியவில்லை. எனக்கு தெரிந்த்தெல்லாம் கண்மூடித்தனமான சிவாஜி ஆதரவு. அதற்கு இங்கே அவசியமில்லை.
எனவே என்னுடைய ஆதரவு தங்களுக்கு இல்லாமல் இருந்தாலே அது தங்களைப் போன்ற தீவிர சிவாஜி ரசிகர்களுக்கு பெருமை, என நான் நினைக்கிறேன்.
ஏதோ ராமருக்கு அணில் மாதிரி என்னால் முடிந்த சின்னச் சின்ன பதிவுகளை மட்டும் பகிர்ந்து கொண்டு அவ்வப்போது வந்து போகிறேன்.
தங்களுக்கும் மற்ற நண்பர்களுக்கும் வயதில் மூத்தவன் என்ற ஒரு தகுதியை மட்டும் வைத்துக் கொண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். மற்றபடி தங்களுக்கெல்லாம் அறிவுரை கூறும் தகுதி எனக்கிருப்பதாக எனக்குத் தெரியவில்லை.
ஆவணத்திலகம் பம்மலார் அவர்களிடம் கூட இருக்குமா தெரியவில்லை. ஸ்ரீதரின் திரும்பிப்பார்க்கிறேன் பக்கங்கள் அன்பு நண்பர் ராமஜெயம் அவர்களிடம் இருக்கின்றன. ராமஜெயம் சார், கூடிய விரைவில் தாங்களும் இங்கே பங்கு கொண்டு அபூர்வமான ஆணித்தரமான ஆவணங்களைப் பகிர்ந்து கொண்டு பம்மலார் இல்லாத குறையைப் போக்க வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
http://www.tamilyogi.tv/wp-content/u...2015/05/rr.jpg
வெகு விரைவில்...
http://www.moviespicy.com/wp-content...-9-800x400.jpg
தொடர்ந்து 4வது வாரம் நாஞ்சில் நகரில்
இனிய நண்பர் பாஸ்கர் அவகளுக்கு ஒரு விண்ணப்பம்
இதே புத்தகத்தில் திரு ஸ்ரீதர் அவர்கள் உரிமைக்குரல் மூலம் மக்கள் திலகம் அவருக்கு செய்த உதவியினை பற்றிய பத்திகள் இருப்பின் அதனை தாங்கள் பதிவிட்டு உதவ வேண்டும் என்று கேட்டுகொள்கிறேன்.
Rks
கடந்த வாரம் தனியார் தொலைகாட்சியில் தமிழ் சினிமாவில் குடியும் புகையும் தவிர்க்க இயலாதா என்ற கருத்தை வலியுறுத்தி ஒரு கருத்தோட்டம் நடைபெற்றது.
அதில் தயாரிப்பாளர், சிலரும் நடிகர் மயில்சாமி போன்றோர் பங்கேற்றனர்.
திரு மயில் சாமி அவர்கள் பேசுகையில் கதாநாயகர்கள் கதைகேர்ப்ப அதனை செய்வதில் தவறு இல்லை எனவும் காட்சிகள் திநிக்கப்படாதவரையில் கதைக்காக சரியே என்றும் கூறினார்.
அவர் மேலும் கூறுகையில் ஒரு திரைப்படத்தில் தங்களுடைய கதாநாயகன் செய்வதை பார்த்துதான் பொது மக்கள் influence ஆகிறார்கள் என்பதை முழுமையாக ஏற்றுகொள்ள முடியாது என்றும் கூறினார்.
அதற்க்கு உதாரணம் குறிப்பிடுகையில் சிவாஜி அப்பா அவரது படத்தில் கதைக்காக கதாபாத்திரத்தின் தன்மைக்காக குடிப்பதுபோல, பல படங்களில் நடித்துள்ளார் ....
ஆனால் தமக்கு தெரிந்த வரையில் சிவாஜி அப்பாவின் ரசிகர்கள் 75% குடிக்காதவர்கள் என்று பெருமையுடன் கூறினார் !
http://i501.photobucket.com/albums/e...ps6rmnp2cp.jpg
ஆகையால் ஒரு நடிகன் சமுதாயத்தை வெகுவாக influence செய்கிறார் என்று கூறுவது முழுமையாக ஏற்றுகொள்ள கூடியது அல்ல என்று கூறினார் !
Rks
சிவந்த மண் பட 100-வது நாள் தினத்தந்தி முழுப்பக்க விளம்பரத்தில் அப்படம் 100 நாட்களைக்கடந்த ஒன்பது தியேட்டர் பெயர்களும் குறிப்பிடப் பட்டுள்ளது.
ஆனால் நம்நாடு பட 100-வது நாள் தினத்தந்தி விளம்பரத்தில் ஊர் பெயர்களோ தியேட்டர் பெயர்களோ இல்லை.
ஏன்?.
பிற்காலத்தில் சிவந்தமண்ணை விட நம்நாடு அதிக அரங்குகளில் 100 நாள் ஓடியதாக இஷடத்துக்கு கதையளந்துகொள்ள வசதியாகவா?.
(இரண்டு விளம்பரங்களும் இதே இரண்டு திரிகளிலும் ஏற்கனவே பதிவிடப்படுள்ளன)
கும்பகோணம் விஜயலட்சுமியிலெல்லாம் 100 நாள் ஓடியதாக அள்ளிவிடப்படுகிறது.
சத்யராஜ் சிவாஜியுடன் இணைந்து நடித்த ஜல்லிக்கட்டு
சிவாஜிகணேசன் நடித்த "ஜல்லிக்கட்டு" படத்தில் இன்னொரு ஹீரோவாக சத்யராஜ் நடித்தார். இந்தப்படமும் வெற்றி பெற்றது.
சிவாஜியுடன் "ஜல்லிக்கட்டு" படத்தில் நடித்த சத்யராஜுக்கு, படத்தில் முக்கியமான கேரக்டர்.
நீதிபதி ஒருவர் தனக்கு ஏற்பட்ட பாதிப்பை ஒரு அதிரடி இளைஞன் மூலம் சரி செய்து கொள்ளும் கதை. இதில் பாதிக்கப்பட்ட நீதிபதியாக சிவாஜியும், அவருக்கு உதவும் இளைஞராக சத்யராஜும் நடித்தார்கள். வித்தியாசமான கதைக்கருவைக் கொண்ட இந்தப்படமும் பெரிய அளவில் வெற்றி பெற்றது.
இந்தப் படத்தின் வெற்றி விழாவில், அன்றைய முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். கலந்து கொண்டு சிவாஜி உள்ளிட்ட கலைஞர்களை வாழ்த்தினார்.
எம்.ஜி.ஆர். கலந்து கொண்ட கடைசி சினிமா விழா இதுதான்.
சிவாஜியுடன் நடித்த "ஜல்லிக்கட்டு" அனுபவம் குறித்து சத்யராஜ் கூறியதாவது:-
"ஜல்லிக்கட்டு படத்தை நண்பர் மணிவண்ணன்தான் இயக்கினார். சித்ரா லட்சுமணன் தயாரித்தார்.
கதையைக் கேட்கும்போதே இது நன்றாக ஓடும் என்று தோன்றியது.
சில கதைகளை கேட்டதுமே, அது வெற்றி பெறும் என்று சொல்லிவிட முடியும். ஜல்லிக்கட்டு அப்படியொரு கதை.
அப்போதெல்லாம் நானும் மணிவண்ணனும் செட்டிலே ஒருவரை ஒருவர் 'தலைவா!' என்று கூப்பிட்டுக் கொள்வோம். இந்த 'தலைவா' பழக்கம் செட்டில் இருந்த மற்ற டெக்னீஷியன்களையும் தொற்றிக் கொண்டது.
இது எதில் போய் முடிந்தது தெரியுமா? செட்டில் சிவாஜி சாரிடம் போன டான்ஸ் மாஸ்டர் பாபு அவரிடம், "தலைவா! ஷாட் ரெடி" என்று சொல்லப்போக, பதிலுக்கு சிவாஜி சார் அவரை கேலி செய்யும் அளவுக்குப் போய்விட்டது. "ஏண்டா! உங்க 'தலைவா' என் வரைக்கும் வந்தாச்சா?" என்று கேட்க, மாஸ்டர் அவசரமாய் 'எஸ்கேப்' ஆகியிருக்கிறார்.
நானும் பிரபுவும் 'தலைவரே' என்று அழைத்துக் கொள்வதும் சிவாஜிசாருக்கு தெரிந்திருக்கிறது. இப்போது அவரே செட்டில் "தலைவா" என்று அழைக்கப்பட்டு விட்டதால், அன்று படப்பிடிப்பு முடிந்து வீட்டுக்குப் போனவர், பிரபு வரும் வரை காத்திருந்திருக்கிறார். பிரபு வீட்டுக்குப் போனதும் "வாங்க தலைவரே!" என்று அழைத்து அவரை வெலவெலக்க வைத்திருக்கிறார்.
மறுநாள் இதுபற்றி பிரபு என்னிடம் சொன்னபோது, எங்களுக்கெல்லாம் அடக்கமுடியாத சிரிப்பு.
நேரத்துக்கு மதிப்பு கொடுப்பதில் சிவாஜி சாருக்கு நிகர் அவரேதான். காலை 7 மணிக்கு படப்பிடிப்பு என்றால் நான் 7 மணிக்கு செட்டில் இருப்பேன். ஆனால் அதற்கு முன்பே சிவாஜி சார் செட்டில் இருப்பார். ஒருநாளாவது அவரை முந்திவிடவேண்டும் என்று இன்னும் சீக்கிரம் வரத்தொடங்கினேன். அப்போதும் சிவாஜி சார் எனக்கு முந்தி வந்திருந்தார். நடிப்பில் மட்டுமின்றி, 'பங்ச்சுவாலிட்டி'யிலும் சிவாஜி சாருக்கு இணையாக யாருமில்லை என்பதை நானும் இந்த நாட்களில் கண்கூடாக உணர்ந்தேன்.
"ஜல்லிக்கட்டு" படப்பிடிப்புக்காக பெங்களூரில் இருந்து மங்களூருக்கு விமானத்தில் போனோம். நான், மணிவண்ணன், கேமராமேன் சபாபதி, சித்ரா லட்சுமணன் எல்லோரும் ஒரே ரூமில் தங்கினோம். சிவாஜி சார் பக்கத்து ரூமில் தங்கினார்.
படப்பிடிப்பு முடிந்து ஊருக்கு கிளம்ப வேண்டிய நாள். காலை 6 மணிக்கு விமானம் ஏறவேண்டும். சிவாஜி சார் அதிகாலை 4 மணிக்கு விழித்தவர் எங்கள் அறைக்கு வந்திருக்கிறார். நாங்கள் முந்தின நாள் இரவு சிக்கன் பிரியாணி சாப்பிட்டு விட்டு அப்படியே தூங்கியிருக்கிறோம். அதிகாலையில் எங்களை வந்து பார்த்தவர், நாங்கள் படுத்திருந்த இடத்துக்கு அருகில் சிக்கன் எலும்புகள் கிடந்ததை பார்த்திருக்கிறார். அப்போதைக்கு ஒன்றும் சொல்லாமல் போனவர், நாங்கள் புறப்பட்டு தயாராகி வந்தபோது பிடித்துக்கொண்டார். "ஏண்டா! காலையிலேயே எழுப்பலாம்னு வந்தால் செத்துப்போன கோழியோட ஒண்ணா படுத்திருக்கீங்களே" என்று கிண்டல் செய்தார். அந்த கிண்டலில் ஒரு தந்தைக்கே உரிய அக்கறை இருந்தது.
விமான நிலையத்துக்கு புறப்பட சிவாஜி சார் அவசரப்படுத்தின தால், ஆளாளுக்கு சீக்கிரமே கிளம்பி விட்டோம். கமலா அம்மாளும் சிவாஜி சாருடன் வந்திருந்தார்கள். "மாமா இப்படித்தான் அவசரப்படுத்துவாங்க. நாமபோறப்போ விமான நிலைய கேட்டை திறந்திருக்க மாட்டாங்க" என்றார்.
கமலா அம்மாள் சொன்னதுபோலவே ஆயிற்று. நாங்கள் போய்ச் சேர்ந்த பிறகுதான் விமான நிலைய பயணிகள் கேட்டையே திறந்தார்கள்! அப்போது மங்களூரில் இருந்து பெங்களூருக்கு தினமும் ஒரு விமானம்தான். எனவே விமானத்தை தவறவிட்டால் தேவையில்லாமல் ஒருநாள் காத்திருக்க வேண்டியிருக்கும். இந்த வகையில் சிவாஜி சாரின் 'அவசரம்' நியாயமானதுதான்.
பார்த்ததுமே "வாங்க கவுண்டரே!" என்பார். படப்பிடிப்பின்போது கிடைக்கிற இடைவெளி நேரத்தில் குடும்ப விஷயங்கள் பற்றி பேசுவார். எங்கள் சித்தப்பா அவரது நண்பர் என்ற முறையில் எங்கள் குடும்பம் பற்றி ஆர்வமாய் விசாரிப்பார். என் சிறுவயதிலேயே விவசாய நிலங்கள் விற்கப்பட்டதை தெரிந்து கொண்டவர், "நீ சம்பாதிச்சு சொந்த ஊர்லயே நிறைய தென்னந்தோப்பு வாங்கணும்" என்று சொன்னார். அவர் சொன்னதுபோலவே பொள்ளாச்சி பகுதியில் வாழவாடி ஊரில் 95 ஏக்கர் தென்னந்தோப்பு வாங்கியிருக்கிறேன்.
"ஜல்லிக்கட்டு" படம் எதிர்பார்த்த மாதிரியே நன்றாக ஓடி, வெற்றி பெற்றது.
இந்தப் படத்துக்குப் பிறகே பாரதிராஜாவுடன் "வேதம் புதிது" படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்தது."
இவ்வாறு சத்யராஜ் கூறினார்.
http://i59.tinypic.com/21oslki.jpg
http://i59.tinypic.com/jucz7q.jpg
திரு.பாஸ்கர் அவர்களே,
‘திரும்பிப் பார்க்கிறேன்’ புத்தக பதிவுக்கு நன்றி. சிவந்த மண் திரைப்படம் (இந்தியையும் சேர்த்து) கணக்கு பார்த்தபோது ஒட்டுமொத்தத்தில் நஷ்டம் என்று ஸ்ரீதர் கூறியிருப்பதை நீங்கள் பார்க்கவில்லையா?
//கணக்கு பார்த்தபோது ஒட்டுமொத்தத்தில் சித்ராலயாவுக்கு நஷ்டம்தான். கண்ணை மூடிக்கொண்டு இஷ்டப்படி செலவு செய்தது எவ்வளவு பெரிய தவறு என்று எனக்கு புரிந்தது.செலவில் சிக்கனம் காட்டியிருந்தால் லாபமில்லாவிட்டாலும் நஷ்டத்தையாவது தவிர்த்திருக்கலாம். ஒட்டுமொத்தமாக நஷ்டம் என்றாலும்கூட சிவந்தமண் எனக்கு திருப்தி அளித்த படம். சிவாஜியுடன் நான் இணைந்து பணியாற்றிய அந்தப்படம் வெற்றி பெற்றது எனக்கு ரொம்ப ஆறுதல்//
இதைத்தான் ஸ்ரீதர் கூறியிருக்கிறார். ஒட்டுமொத்தத்தில் சித்ராலயாவுக்கு நஷ்டம் என்று கூறியிருக்கிறார். சிவந்த மண் பல இடங்களில் 100 நாட்கள் ஓடியுள்ளது. நல்ல வசூலும் கிடைத்துள்ளது. ஆனால், போட்ட முதலீடு அளவுக்கு எதிர்பார்த்தது கிடைக்கவில்லை. இதைத்தான் அந்தப் பதிவிலும் சிவந்த மண்ணுக்குப் பிறகு ஸ்ரீதருக்கு இறங்கு முகம் என்று குறிப்பிட்டுள்ளனர். பேராசிரியர் செல்வகுமார் அவர்களும் ஸ்ரீதர் இதைத்தான் ஒரு பேட்டியில் குறிப்பிட்டதாக கூறியிருந்தார்.
சரி. நீங்கள் முதலில் என்ன சொன்னீர்கள்? அதை எழுதியது ஸ்ரீதரே அல்ல என்று கூறினீர்கள். பின்னர், கல்கியில் வந்தது போல புத்தகத்தில் இல்லை என்றீர்கள். அதை எழுதியவர் சிவந்தமண் பற்றி ஸ்ரீதர் கூறியதை மறைத்து பொய் எழுதிவிட்டார் என்று கூறினீர்கள்.
ஆனால், இப்போது ஸ்ரீதர்தான் எழுதினார். கல்கியிலும் புத்தகத்திலும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறது என்றெல்லாம் சொல்லவில்லையா? நீங்கள் கூறியுள்ளபடி...
//எந்த விஷயத்தயும் விமர்சிக்கலாம்! ஆனால் நாம் சொல்லும் செய்திகளில் பொய், புரட்டு இருக்ககூடாது! எந்த ஒரு செய்தியையும் அதை சொன்னவர்கள் சொன்ன அர்த்தத்தில்
கூறாமல் மாற்றி வேறு அர்த்தம் கொள்ளும்படி திரித்து எழுதகூடாது! மீண்டும் கூறுகிறேன் நண்பரே என் பதிவுகளில் வேகம் இருக்கலாம், ஆனால் ஒரு
போதும் உண்மையற்ற செய்திகளோ, திரித்து எழுதுவதோ இருக்காது! புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்!//
அதையே நானும் உங்களுக்கு கூறுகிறேன்.
நாடோடி மன்னன் படம் குறித்து பெரியவர் சொன்னது உண்மைதான். படம் நன்கு வசூல் செய்தாலும் தயாரிப்பு செலவு மிக அதிகம் அந்தக் காலத்தில். அதனால்தான் பெரிசாக பொருள் கிடைக்கவில்லை என்று திரு.சக்ரபாணி அவர்கள் அப்படி கூறியிருக்கிறார். அதேதான் சிவந்த மண்ணிலும் நடந்திருக்கிறது. நன்றாக ஓடினாலும் எதிர்பார்த்தது வசூல் ஆகவில்லை.
நீங்கள் கூறினீர்கள் நம்நாட்டை விட சிவந்த மண் அதிக சென்டர்களில் 100 நாள் ஓடியது என்று. அதை நாங்கள் மறுக்கவில்லை. ஆனால், வசூல் ரீதியாக பார்த்தால் சிவந்தமண்ணை விட நம்நாடு அதிகம் (ஓவர் ஆல் தமிழ்நாடு) என்றுதான் ஆரம்பத்தில் இருந்து கூறிவருகிறோம்.
முக்கியமான விஷயம். திரு.பம்மலார் அவர்களே இந்த தகவலை திரு.எஸ்.வி.யிடம் ஒப்புக் கொண்டதாக அறிகிறேன். (பி.எம்.தகவல்கள் மூலம்) விரைவில் திரு.எஸ்.வி அதை வெளியிடுவார் என்று நம்புகிறேன். சந்தேகம் இருப்பவர்கள் தெளிவுபடுத்திக் கொள்ளலாம்.
திரையுலகில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக, தான் மக்கள் திலகத்தை சந்தித்து உதவி கோரியது குறித்தும், மக்கள் திலகம் உதவியது குறித்தும் அன்று சிந்திய ரத்தம் படத்துக்காக வாங்கிய அட்வான்ஸ் தொகை ரூ.25,000த்தை உரிமைக்குரல் சம்பளத்தில் கழித்துக் கொண்டார் என்றும் அந்த புத்தகத்தில் உள்ளது. திரு.ஆர்.கே.எஸ். கூறியபடி அவற்றையும் பதிவிட்டு உண்மையை உலகுக்கு உணர்த்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
நண்பர் திரு.முரளி அவர்களுக்கு,
‘சித்ரா/ சக்தி பெயர் மாற்றம் தவறு என்று ஒப்புக் கொண்டு திருத்தியவன் நான்’ என்று கூறியிருக்கிறீர்கள். மனதுக்குள்ளேயே தவறு என்று ஒப்புக் கொண்டு திருத்தியிருக்கிறீர்கள் போலிருக்கிறது. அது எனக்குத் தெரியாது. இப்போதுதான் முதல் முறையாக வெளிப்படையாக அறிவிக்கிறீர்கள். தவறு என்று ஒப்புக் கொண்டதற்கும் தவறை திருத்தியதற்கும் நன்றி.
நானும் ஒப்புக் கொள்கிறேன். ராஜராஜசோழன் படம் ராம் தியேட்டரில் வெளியானதாக தவறாக சொல்லிவிட்டேன் என்று ஒப்புக் கொள்கிறேன். எப்படி உங்களுக்கு தவறு ஏற்பட்டதோ அதே போன்ற தவறுதான் எனக்கும் ஏற்பட்டு விட்டது. சுட்டிக் காட்டியமைக்கு நன்றி.
ஆனால், ராம் தியேட்டரில் படம் வெளியாகவில்லை என்றாலும் கூட ராஜராஜசோழன் படம் தமிழகத்தின் எந்த ஒரு திரையரங்கிலும் 100 நாட்கள் ஓடவில்லை. அதிகபட்சமாக 97 நாட்கள் (என்று நினைவு) ஓடியது. அந்த திரையரங்கின் பெயரை நீங்கள் ஒரு பதிவில் கூறியிருந்தீர்கள். இருந்தாலும் ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் இரண்டு தியேட்டர்களில் வெள்ளி விழா கொண்டாடியதாக திரு.வினோத் அவர்கள் கூறியதற்கு மறுப்பு தெரிவித்தீர்கள்.
‘சத்தியத்தில் 160 நாட்கள் என்றே வைத்துக் கொண்டாலும் அது 175 ஆகிவிடாதே’ என்று கூறினீர்கள். அதேபோல, 97 என்பது 100 ஆகிவிடாதே.
உங்களுக்கு எப்படி சக்தி/சித்ரா தடுமாற்றம் ஏற்பட்டதோ, எனக்கு எப்படி ராம் தியேட்டர் தடுமாற்றம் ஏற்பட்டதோ அதேபோலத்தான் சாந்தியில் உள்ள கல்வெட்டிலும் ராஜராஜசோழன் 100 நாட்கள் ஓடியதாக தவறுதலாக குறிப்பிடப்பட்டுள்ளது. வேண்டுமென்றே அவர்களும் செய்யவில்லை. எல்லாரும் மனிதர்கள்தானே.
அதேபோல, சாதனை சிகரங்களில் நீங்கள் கூறியுள்ளபடி, சென்னையில் ராஜா திரைப்படம் 3 தியேட்டர்களில் ஓடவில்லை. 2 தியேட்டர்களில்தான் ஓடியது. நீங்கள் அகஸ்தியாவையும் சேர்த்திருக்கிறீர்கள்.
இதுபற்றி, மக்கள் திலகம் திரியில் சமீபத்தில் குமார் சார் தெரிவித்தபோது நீங்கள் மறுக்கவில்லை. ஆனால், துள்ளிவருகுது வேல் பட விளம்பரம் தொடர்பாக குமார் சார் தவறுதலாக தேதியை மாற்றி சொல்லியபோது உடனே மறுப்பு தெரிவித்தீர்கள். அதுபோல, ராஜா 2 தியேட்டர்களில்தான் சென்னையில் ஓடியது என்று திரு.குமார் சார் கூறியதை நீங்கள் மறுக்கவில்லை.
சொல்லப்போனால், ராஜா திரைப்படம் தேவிபாரடைசில் 60வது நாளின்போதே 100 நாளுடன் படம் கடைசி என்று பத்திரிகையில் விளம்பரம் வேறு கொடுக்கப்பட்டது. அதிலும் 100வது நாள் அன்று இரவுக்காட்சி படம் ரத்து செய்யப்பட்டது.
அதேபோல, திருவருட்செல்வர் திரைப்படம் தமிழகத்தின் எந்த திரையரங்கிலும் 100 நாட்கள் ஓடவில்லை. ஆதாரம்.
1. சாந்தி தியேட்டர் கல்வெட்டில் 100 நாள் ஓடியதாக குறிப்பிடப்படவில்லை.
2. நண்பர் திரு.சந்திரசேகர் வெளியிட்ட வரலாற்றின் வரலாறு (நக்கீரன் பதிப்பகம்) புத்தகத்தின் இறுதியிலும் அந்தப் படம் 100 நாட்கள் ஓடியதாக குறிப்பிடப்படவில்லை.
3. கடந்த வியாழக்கிழமை அன்று கூட நண்பர் திரு.ஆதிராம் அவர்கள் திருவருட் செல்வர் சுமாராகத்தான் ஓடியது என்று குறிப்பிட்டிருந்தாரே. என்னை நம்ப வேண்டாம். அவரை நம்பலாமே.
என்னைப் பற்றி நிறைய அனுமானங்கள் வைத்திருக்கிறீர்கள். நான் தஞ்சாவூர்காரன் என்பது உட்பட. நான் தனிப்பட்ட முறையில் கேட்ட கேள்விகளுக்கு கழக அரசியல்பாணி என்று கூறுகிறீர்கள். எதற்காக கழகங்களை இழுக்கிறீர்கள்?
ஒருவர் எந்த நடிகருக்கும் ரசிகராக இருக்கட்டும். எந்தக் கட்சியை சேர்ந்தவராகவும் இருக்கட்டும். அது அவர்கள் விருப்பம், உரிமை. கடவுள் நம்பிக்கை உள்ளவராகவும் இருக்கட்டும். அது அவர்களின் தனிப்பட்ட நம்பிக்கை. ஆனால், இந்த மண்ணில் பெரியார் என்று ஒருவர் பிறக்காமல் போயிருந்தால் இன்று பல்வேறு உயர் பதவிகளில் உள்ள தமிழர்கள் மாடு மேய்க்கத்தான் போயிருப்பார்கள். இதை நன்றி உள்ள, மனசாட்சி உள்ள எந்த தமிழனும் மறக்கவோ, மறுக்கவோ மாட்டான். இது ஒன்றே போதும். நான் திராவிட இயக்கத்தை சேர்ந்தவன் என்பதை பெருமிதத்துடன் கூறிக்கொள்ள.
‘கோபத்தோடு வராதீர்கள் நண்பராக வாருங்கள் ’என்று கூறுகிறீர்கள். நான் எப்போது விரோதியாக வந்தேன்? எல்லாரும் எப்போதும் எனக்கு நண்பர்கள்தான். நீங்கள்தான் கோபப்பட்டீர்கள்.
‘சரடு விடுகிறேன்’ என்று கூறினீர்கள். திரு.சைலேஷ் இதை சுட்டிக் காட்டியதும் வருத்தம் தெரிவித்ததுடன் ‘உங்களை அல்ல’ என்று குறிப்பிட்டீர்கள்.
எனக்கு ராஜராஜசோழன் போபியா என்றீர்கள். ஆனால், தேவையே இல்லாமல் கழகங்களை இந்த விவாதத்தில் இழுக்கும் நீங்கள்தான் அண்ணா, பெரியார், கழகங்கள் என்ற பெயர்களை கேட்டாலே இடிகேட்ட நாகம் போல நடுங்குகிறீர்கள் என்று கருதுகிறேன்.
‘அண்ட....’ என்ற வார்த்தையை பயன்படுத்தினீர்கள். இதற்குத்தான் நான் பதில் சொன்னேன்.
எல்லாவற்றையும் விட உச்சமாக பொழுதுபோக்கு அரங்கத்துடன் வழிபாட்டுத் தலத்தை ஒப்பிட்டு என்னை குத்திக்காட்டினீர்கள். திரு.யுகேஷ் பாபு சுட்டிக்காட்டியபோது அதை திருத்திக் கொண்டதற்கும் மன்னிப்பு கோரியதற்கும் நன்றி. இருந்தாலும், ‘நாங்கள் வாழ்க்கையில் ஒருமுறையேனும் போக விரும்பும் இடம்’ என்று சமாளித்திருப்பதுடன் மறுபடியும் கிண்டல் செய்கிறீர்கள். நீங்கள் குறிப்பிடும் அந்த தலத்தில் நம்பிக்கையாளர்கள்தான் அனுமதிக்கப்படுவார்கள் (அங்கு மட்டும்) என்பது உங்களுக்குத் தெரியாதா?
வாதத்தை வாதத்தால் சந்தியுங்கள். சாதனை சிகரங்களில் இருக்கும் தவறான தகவல்களை (பொய்யான என்ற வார்த்தையை நான் பயன்படுத்தவில்லை) அம்பலப்படுத்துகிறானே? மறுக்க முடியவில்லையே? என்ற ஆத்திரத்தில் வழிபாட்டு தலத்தை குறிப்பிட்டு என்னை குத்திக்காட்டுவது நியாயமா?
நீங்கள் பட்டப்படிப்பு படித்தவர். கல்லூரிப்படிப்பையும் தாண்டி அதிகம் படித்தவர் என்று உங்கள் எழுத்துக்களில் இருந்து தெரிகிறது. அப்படிப்பட்ட நீங்கள், வரைமுறை கடந்து வழிபாட்டுத் தலத்தைக் கூறி தாக்குவதும் கிண்டல் செய்வதும் உங்களைப் போன்ற மெத்தப்படித்த நூலோர்களுக்கு அழகல்லவே? வருத்தப்படுகிறேன் திரு. முரளி அவர்களே.
இதற்கும் கூட ‘நீங்கள் தவறாக எடுத்துக் கொண்டு விட்டீர்கள். சாதுர்யமாக எழுதுகிறீர்கள், நான் அப்படி சொல்லவில்லை’ என்றெல்லாம் சாமர்த்தியமாக பதிலளிப்பீர்கள்.என்றாலும் இந்த விவாதத்தில் இதற்கு மேல் உங்களுடன் எதிர்வாதம் செய்யப்போவதில்லை. தங்களின் உயர்ந்த பண்புக்கு மிக்க நன்றி திரு.முரளி அவர்களே.
ஆனால், நல்லோரும் நடுநிலையாளர்களும் நான் சொல்வதில் உள்ள நியாயத்தை சிந்திக்கட்டும் என்று அருள் கூர்ந்து வேண்டுகிறேன். நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
சில நாட்களாக எனக்கு கிடைத்த அனுபவம் ....
நாம் எந்த மாதிரி சமூகத்தில் வாழ்ந்து வருகிறோம் என்பது தெளிவாகிறது..
பெரிய படிப்பினை...
மனிதர்களை அவர்கள் சுபாவத்தை புரிந்து கொள்ள மேலும் பல சந்தர்ப்பம் ...
தனிப்பட்ட ஒரு மனித விமர்சனம், தவறு என்று தெரிந்தாலும் அதை உணராமல் மற்றவர் மீது பழி போடுவது, நான் எனது தான் ...என்றுள்ள இன்றைய அரசியல் சூழ்ச்சி எங்கிருந்து வந்தது என புரிய வைப்பது , திறமையை மதிக்காமல் ஒருவரை தாழ்த்துவதில் இன்பம் காண்பது, ஊடக இருட்டடிப்பு , சுயநலம் கருதி எண்ணம் செயல் வாழ்க்கை என எல்லாவற்றிலும் போலியை வெளிக்காட்டுவது....மனதுக்குள் உண்மையை நினைத்தாலும் வெளியில் மாற்றிச் சொல்வது ....நடுநிலைமை, நியாயம் பள்ளி பாடத்தில் தான் உள்ளது ...
இது தான் நாம் வாழ்க்கையில் கற்ற பாடமா ? சொன்ன சொல்லை திரும்ப பெற முடியாது ஆனால் எழுதிய எழுத்தை கூடவா திரும்பி படிக்க முடியாது ?
எழுத கூடாது என நினைத்தேன் ஆனால் மனசாட்சி கேட்கவில்லை ....
என்னவோ போங்க நாம் சொல்லித்தான்...எல்லாம் மாறபோகிறதா ?
நம்ம சாதனையை பேச நிறைய விஷயம் இருக்கு ...சரக்கும் இருக்கு ....அப்புறம் என்ன ??
சுந்தர பாண்டியன்
திரு கலைவேந்தன் அவர்களே!
கல்கியில் ஸ்ரீதர் எழுதிய தொடரை நான் அந்த காலத்திலேயே படித்தவன் என்று என் பதிவுகளில் பலமுறை கூறியுள்ளேன்!
நீங்கள் சந்திரமௌலி புத்தகத்தில் இருந்ததாக பதிவிட்டவை ஸ்ரீதரால் எழுதபட்டவை அல்ல என்பது தான் என் வாதம்!
சந்திர மௌலி புத்தகத்தை நான் இன்றுவரை படித்தது இல்லை! சென்னை நண்பர் அனுப்பிய அந்த புத்தகத்தின் ஜெராக்ஸ் பக்கங்களை தான் நானும் பார்த்தேன்! நீங்கள் பதிவிட்ட அண்டப்புளுகு பதிவுகள் கல்கியிலும் இல்லை! நீங்கள் கூறிய புத்தகத்திலும் இல்லை! என்பது இப்போது எல்லோருக்கும்
புரிந்து விட்டது! இப்போது தமிழ் சிவந்தமண் லாபம் தான் , ஹிந்தி தர்த்தி நஷ்டம், மொத்தத்தில் நஷ்டம் என்று தான் கூறினேன் என்று மாற்றி பேசுகிறீர்கள்!
உங்கள் பொய் பதிவுகளில் அப்படியா சொன்னீர்கள்? உங்கள் மனசாட்சி உறுத்தவில்லையா? ஆச்சரியமாக இருக்கிறது!
உண்மையில் தூங்குபவர்களை எழுப்பிவிடலாம்! தூங்குவது போல நடிப்பவர்களை எந்த காலத்திலும் எழுப்ப முடியாது!
பொதுவான பார்வையாளர்கள் உண்மை எது? பொய் எது? என்று முடிவு செய்யட்டும்!
நன்றி !
அன்பு நண்பர்களே !
சிவந்தமண் நஷ்டம் என்று ஒப்பாரி வைத்தவர்கள் நம் உண்மை பதிவுகளை பார்த்தபிறகு ஹிந்தியில் தான் நஷ்டம்! தமிழில் லாபம் ! மொத்தத்தில் நஷ்டம்
என்று தான் கூறினோம் என்று வழக்கம் போல் plate மாற்றி போடுகிறார்கள்!
ஸ்ரீதர் எல்லா மொழிகளிலும் எடுத்து நஷ்டம் அடைவதற்கு சிவாஜி எப்படி பொறுப்பாவார்? கொஞ்சமாவது நியாயமாக பேச வேண்டாமா?
சினிமாவில் சிவாஜி தன் அபார நடிப்பாற்றலால் பெரும் வரலாற்று சாதனை படைத்தார்! அரசியலில் நேரத்துக்கு தகுந்தாற்போல மாற்றி பேசும் திறமை
இல்லாததால் வெற்றிபெற முடியவில்லை !
நன்றி !
திரு பாஸ்கர் அவர்களே
கலைவேந்தன் அவர்கள் பதிவை மறந்துவிடுங்கள். அவர் அப்படிதான் !
நாம் என்ன எழுதுகிறோமோ அதை அப்படியே அவர் நமக்கு எழுதுவார். இது நம் பதிவையும் அவர் பதிவையும் பார்த்தாலே புரியும்...!
அவரை பொருத்தவரை திரு ஸ்ரீதர் அவர்கள் தெளிவாக திரும்பி பார்கிறேன் பதிவில் சிவந்த மண் ஓஹோ என்று ஓடியது என்று குறிப்பிட்டு எழுதி, அதன் ஹிந்தி வடிவம் எதிர்பார்த்தபடி போகவில்லை என்று கூறியதன் அர்த்தம் சிவந்த மண் என்ற தமிழ்படம் வசூல் ஆகவில்லை என்பது' என்று கூறும்பொழுதே...அவருடைய பதிவின் நோக்கம் மற்றும் தன்மை நன்கு விளங்கும்.
ஒரு சிம்பிள் ஆன கணக்கின் அடிப்படையில் இருக்கையும் அரங்கு நிறைவு காட்சியையும் கொண்டு நாம் பதிவு செய்தால் அதுவும் தவறு என்பார் அல்லது விளக்கமே அள்ளிக்கமாட்டார்.
ஆனால் அவரை பொருத்தவரை அவருடைய MATHEMATICS படி 1257 இருக்கைகள் கொண்ட GLOBE திரை அரங்கில் 125 காட்சிகள் அதாவது 41 நாட்கள் தொடர் நிறைவு கண்ட சிவந்த மண் வசூல் 900 இருக்கைகள் கொண்ட சித்ரா திரை அரங்கில் நம் நாடு 125 நாட்கள் தொடர் நிறைவு கண்டால் வசூல் ஆகும் தொகை 1257 இருக்கைகள் தொடர்ந்து அரங்குநிறைவு வசூலை விட அதிகம் என்பார். இது எந்த கணக்கு தியரி என்பது அந்த ராமானுஜருக்கே வெள்ளிச்சம்.
வேண்டுமென்றே தவறான தகவல் கொண்ட இணைப்புக்கு வக்காலத்து வாங்கி சிவந்த மண் நஷ்டம் என்று கூறுவதில் அவருக்கு அலாதி ஆனந்தம் ! சிவந்த மண் மட்டும் அல்ல...விட்டால் நடிகர் திலகத்தின் அனைத்து தயாரிப்பாளர்களும் நஷ்டம் அடைந்தார்கள் என்று கூட ARTICULATE செய்வார். !
இன்னொன்று, சற்று முன் திரு எஸ்வி அவர்களே ஒரு தகவல் பதிவு செய்துள்ளார். அதாவது நம் நாடு வசூல் பற்றி தகவல் வந்ததாக. உடனே கலைவேந்தன் அவர்கள் பம்மலாரிடம் கேட்டு தெரிந்துகொள்ளுங்கள் நம் நாடு வசூல் அதிகம் என்ற பதிவு வர...
அதனை நான் சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரித்தபொழுது நமது பம்மலார் அவர்கள் கோவிலில் கற்பூரம் அடித்து சத்தியம் செய்யாத குறையாக நமது நண்பரிடம் கூறியுள்ளார்...அதாவது தாம் சிவந்த மண் திரைப்படத்தின் வசூல் எல்லாவிதத்திலும் நம் நாடு திரைப்பட வசூலை விட அதிகமே என்று ஒவ்வொரு ஏரியா வசூல் தொகையையும் திரு ஈஸ்வீயிடம்
முக்கால் மணி நேரத்திற்கும் மேலாக பேசியுள்ளேன், பிறகு அவர் ஏன் இப்படி தவறான பதிவு செய்துள்ளார் என்று தெரியவில்லை என்றும் சிவந்தமண் திரைப்படத்தை விட அடிமை பெண் திரைப்படம் வேண்டுமானால் வசூலில் முந்தி இருக்கும் வாய்ப்பு அதிகம் ..ஆனால் நிச்சயமாக நம் நாடு திரைப்படம் சிவந்தமண் திரைப்படத்தை விட வசூல் குறைவே என்று அடித்து கூறியுள்ளார் என்பதை தெரிவித்து கொள்கிறேன்.
இருந்தாலும் எனக்கு வசூல் தகவல் மீது பத்திரிகை விளம்பரம் பார்க்காத வரையில் எந்த படமாக இருந்தாலும் எனக்கு அது ஒவ்வாத ஒன்றுதான் ! அது நான் கடைபிடிக்கும் ஒரு பாலிசி. மற்றவர்கள் அதை வழிமொழியவேண்டும் என்று எதிர்பார்க்கவும் மாட்டேன் !
நீங்கள் வேண்டுமானால் பாருங்கள் நாளையோ அல்லது இன்று திரு எஸ்வி அவர்களிடம் இருந்து நாம் நிச்சயம் இதுபோல இந்த தொனியில் ஒரு பதிவை எதிர்பார்க்கலாம் .
"மக்கள் திலகம் அவர்கள் திரை உலக சாதனை, அரசியல் சகாப்தம் படைத்தது, பொற்கால ஆட்சி இவை அனைத்தும் உலக மக்கள் அறிந்தது. அதனை ஒத்துகொள்ளும் மனம் இல்லாதவர்கள் தங்கள் பதிவின் மூலம் என்ன எதிர்பார்கிறார்கள் என்று தெரியவில்லை. தங்களுடைய தோல்விகளை இப்படி பட்ட பதிவு செய்வதன்மூலம் ஆறுதல் அடைகிறார்கள் என்றால் அதில் வியப்பேதும் இல்லை. " - இதுபோல ஒரு பதிவு அவரிடம் இருந்து நிச்சயம் எதிர்பார்க்கலாம்....
ஒருவேளை அவர் பதிவை நாம் இப்போதே கணித்ததால் இதுபோல பதிவு பதிவு செய்யாமலும் இருக்கலாம்...
அப்போதுதானே மற்றொரு பதிவில் யாராவது ஒருவர் நம்மை குறிப்பாக என்னை - " RKS அன்று கூட நீங்கள் இப்படி ஒரு பதிவு நாங்கள் பதிவு செய்வோம் என்று பொய் பதிவு செய்தீர்கள்...ஆனால் நாங்கள் அப்படி பதிவே செய்யவில்லை " என்று கூறுவதற்கு வசதியாக இருக்கும் !
என்னவோ...!
யோசிச்சா...எனக்கு தலை கிறு...கிறு...கிறு...கிறு..ன்னு சுத்திட்டுதான் வருது...!
எப்போதான் இதுக்கு ஒரு விமோசனமோ..இறைவா !
தம்முடைய தவறை / தாம் ஆராயாமல் பதிவு செய்த ஒரு பொய் தகவலை மறைக்க, எந்த நிலைக்கு வேண்டுமானாலும் ஒரு சிலர் கங்கணம் கட்டிக்கொண்டு பதிவு செய்கிறார்கள் என்பதே இதன் பொருள்.
Regards
RKS
தமிழில் ஓஹோ என்று ஓடியது ! - (அதாவது சிவந்தமண்) இதுவும் திரு ஸ்ரீதர் குறிப்பிட்டுள்ளார்...
கணக்கு பார்த்தபோது ஒட்டுமொத்தத்தில் என்று குறிப்பிட்டுள்ளது ஹிந்தி வடிவத்தை பற்றி அவர் குறிப்பிட்டுளதேயாகும் காரணம்
1) ஹிந்தியில் நாங்கள் எதிர்பார்த்த அளவு ஓடவில்லை என்று தெளிவாக கூறியுள்ளார் ஹிந்தி என்பது உங்களை பொருத்தவரை தமிழ் என்று நீங்கள் அர்த்தம்கொண்டு அதன் அடிப்படையில் வாதிட முயன்றால் அது எந்தளவுக்கு உங்களது காழ்புணர்ச்சி உள்ளது என்பதை தெள்ளம் தெளிவாக காட்டிவிடும் ....
2) திரு ஸ்ரீதர் அவர்கள் தமிழில் சிவந்த மண் ஓஹோ என்று ஓடியது என்று கூறியுள்ளார்.
இதனை எல்லாம் நீங்கள் உங்கள் சொவ்கர்யத்துக்கு மறைக்க முடியாது காரணம் பக்கங்களில் தெளிவாக உள்ள சமாசாரம் !
இப்போதும் நாங்கள் கூறியதில் மாற்றம் இல்லை. அந்த லிங்கில் கொடுக்கப்பட்டது போல இந்த திரும்பி பார்கிறேன் புத்தகத்தில் கிடையவே கிடையாது. லிங்கில் புளுகி தள்ளியுள்ளார் காழ்புணர்ச்சியால் !
பேராசிரியர் செல்வகுமார் அவர்களும் இதைதான் கூறியதாக கூறியுள்ளீர்கள்..ஆனால் அந்த புத்தகமே இங்கு பதிவு செய்தாகிவிட்டது..அதில் நீங்கள் ஒருவர் கூறியபடி கூட இதில் எழுதப்படவில்லையே..அதாவது சிவந்தமண் வகைக்கு திரு ஸ்ரீதர் நஷ்டம் அடைந்தார் என்றோ...அல்லது மீண்டும் வைர நெஞ்சம் தமிழ் ஹிந்தி எடுத்து நஷ்டம் அடைந்தார் என்றோ..? இன்னும் சொல்லப்போனால் அவருடைய அடுத்தபடம் ஹாஸ்ய சித்திரம் உத்தரவின்றி உள்ளே வா...என்பதையும் ஸ்ரீதர் அவர்கள் தெளிவாக எழுதியுள்ளார்.
உண்மைகள் இப்படி இருக்க நீங்களோ மற்ற அனைவரோ எதற்கு இன்னும் லிங்கில் உள்ள பொய் தகவலை கேடயமாக பிடித்துகொண்டு வீணாக பிடி வாதம் செய்கிறீர்கள் என்பது நினைக்கும்போது அதற்க்கு காரணம் உங்களுக்கு மக்கள் திலகத்தின் கொடியை உயர்த்தி பிடிக்க வேண்டுமென்றே நடிகர் திலகம் கொடி கீழே இறக்கவேண்டும் என்ற எண்ணமே மேலோங்கி உள்ளதுபோல தெரிகிறது !
Rks
"அதேபோல, சாதனை சிகரங்களில் நீங்கள் கூறியுள்ளபடி, சென்னையில் ராஜா திரைப்படம் 3 தியேட்டர்களில் ஓடவில்லை. 2 தியேட்டர்களில்தான் ஓடியது. நீங்கள் அகஸ்தியாவையும் சேர்த்திருக்கிறீர்கள்."
திரு.கலைவேந்தன் எதை நிறுவ முயற்சிக்கிறார்?
நடிகர்திலகத்தின் அனைத்து படங்களும் தோல்வி, அவரை வைத்து படம் தயாரித்த தயாரிப்பாளர்கள் அனைவரும் நஷ்டபட்டார்கள் என்கிற ரீதியில் எழுதுகிறார்.
சிவந்தமண் தமிழில் "ஓஹோ" என்று ஓடியது. இந்தியில் நன்றாக போகவில்லை
என்று தானே ஸ்ரீதர் கூறியுள்ளார். அதை வசதியாக மறைத்து மொத்தத்தில் நஷ்டம்
என்று நம் தலைவரை மட்டம் தட்டும் வேலை பார்க்கிறார்.
ஆனால் திரு.முரளி அவர்கள் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் புதிதாக ஒரு கேள்வி கேட்பதன் முலம் சாதூர்யமாக எழுதுகிறார். அந்த வகையில் இவரை மிஞ்ச ஆள் இல்லை.
Image sent by NTFAN Sriram through Whatsapp. Posting on request.
http://i872.photobucket.com/albums/a...psr1ojonbx.jpg
Page from Chitralaya Gopu's book "Gnyabakam Varuthe".
Unlike popular perception, Darthi - Hindi version of Sivandha Mann was also a hit film. I do not know how this is rated as a flop, since this film saw more than 25 weeks in Delhi, I remember saw the Silver Jubilee Ad in "The Screen" (full page). This film is enlisted as 12th in the Top 25 BO Rankings of the films released in the year 1970, based on the revenue collected. Below is the quote from the website IMDB :
This vindicates my logic and conclusion that Sridhar suffered losses only at the mediocre and miserable flops of Avalukkendru Or Manam and Alaigal. Neither Sivandha Mann nor Darthi put him into financial trouble.Quote:
Highest Grossing Hindi Movies of 1970
by shrikant-narayanan created 20 Feb 2011 | last updated - 01 Sep 2013
This list is as per the film's performance money wise at the box office in the particular year. The order is as per revenue collected. There are some years in which films which are regarded as classics post their release or have developed cult following among public over the years, have become box office flop at the time of their release.
All the films in the below list are regarded as good classic films.
The first 29 were hits and rest flops. last 7 films including Mera Naam Joker and Prem Pujari were flops at the box office on their release but later on were regarded as classics.The rest in the below list are superhit films and are classics too
1. Johny Mera Naam (1970)
2. Sachaa Jhutha (1970)
3. Kati Patang (1970)
....
....
12. Dharti (1970)
Link for IMDB page: http://www.imdb.com/list/ls000041304/
I hope this debate is stopped asap, so that we continue our goal of glorification of the one and only NT.
ஆர்கேஎஸ்.
திரு சந்திரமௌலி அவர்கள் எழுதிய புத்தகத்தில் சிவந்த மண் பற்றிய விவரங்கள் அடங்கிய xerox copy-ஐ நண்பர் திரு.ராமஜெயம் அவர்களுக்கு தந்ததே சுவாமிதான். சென்ற வாரம் வியாழன் அன்று சுவாமியால் இது ராமஜெயம் அவர்களிடம் கொடுக்கப்பட்டது. அவரிடமிருந்துதான் பாஸ்கர் அவர்களுக்கு சென்றது.
அப்படியிருக்க அது தெரியாமல் நீங்கள் சுவாமி கொடுக்க மறுத்து விட்டார் என்று எழுதியது வருத்தத்துக்குரியது. ஒரு தவறான தகவலை நீங்கள் சரி பார்க்காமல் அப்படி எழுதியிருக்க வேண்டாம்.
நண்பர் கலை,
சிவந்த மண் நம் நாடு பற்றிய வசூல் சர்ச்சையில் அதே போல் நீங்களும் தகவல் சரிதானா என்று தெரியாமல் சுவாமி இதை வினோத்திடம் பிஎம் மூலமாக தெரிவித்தார் என்று சொல்லியிருப்பது வருத்தத்துக்குரியது மட்டுமல்ல கண்டனக்குரியதும் கூட. நீங்கள் இதுவரை நேரில் சந்திக்காத அலைபேசியில் கூட உரையாடாத ஒருவரைப் பற்றி ஒரு தவறான தகவலை பரப்புவது எந்த விதத்தில் சரி? இதன் மூலம் ஒரு சிவாஜி ரசிகர் எங்கள் படம்தான் அதிக வசூல் என்று ஒப்புக் கொண்டு விட்டார் என்று ஒரு விளம்பர தேடல் என்பதை தவிர வேறு என்ன இருக்க முடியும்? இல்லை சிவாஜி ரசிகர்கள் மத்தியில் அவர் பெயரை களங்கப்படுத்த வேண்டும் என்ற எண்ணமா? நண்பர் சுவாமி நீங்கள் பயன்படுத்திய வார்த்தைகளினால் மிகுந்த வருத்தம் அடைந்திருக்கிறார்.
வினோத் சார்,
உங்களிடமிருந்து இப்படி ஒரு செய்கையை எதிர்பார்க்கவில்லை.
அன்புடன்
"கை கொடுத்த தெய்வம்".
தங்கை-அண்ணன் என்கிற
புனித பந்தத்தைக் கொச்சைப்படுத்தி,உடன் வேலை செய்யும் சிலர் இரண்டாம் முறையாகப் பேசி விட..
அவர்களை அடித்து துவம்சம்
செய்த வேகத்திலேயே வீட்டுக்கு வந்து, பெட்டி,படுக்கையெல்லாம் எடுத்துக்
கொண்டு கிளம்பத் தயாராக,
நண்பனும்,தங்கையெனத் தான்
கொண்டாடும் நண்பனின்
மனைவியுமாய் சமாதானப்படுத்தும், ஒரே
டேக்கில் நடிகர் திலகம் நடித்துக் கொடுத்த அந்த நீளமான காட்சியை மீண்டுமொருமுறை கண்டு
வியக்கத்தான் வீட்டில் போட்டுப் பார்த்தேன்.
ஆனால்...
அவ்வளவு நேரமெல்லாம் நீ
காத்திருக்க வேண்டாம் தம்பி..
ஆரம்பத்திலேயே அசத்தி விடுகிறேன்..பார்! "என்றார்
நடிகர் திலகம்.
வடக்கத்தி பூமியில்,சாப்பிட்டுச் சாப்பிட்டு சப்பாத்தி
என்கிற சொல்லையே வெறுக்கிற நண்பன் நடிகர் திலகத்திற்கு,சோறு சமைக்கத் தெரிந்த ஒரு தமிழ்ப் பெண்ணை மணமுடிக்க நண்பன் எஸ்.எஸ்.ஆர், கேஆர்விஜயா மூலமாக முயற்சிக்க, அவர்கள்
பார்த்த தமிழ்ப் பெண் மணமாகி
குடும்பமும்,குட்டியுமாய் இருப்பது கண்டு விழிக்கையில்,
கே.ஆர்.விஜயா, எஸ்.எஸ்.ஆரை மணக்க சம்மதிக்க..
அவர்களின் திருமணத்தை தான்
நடத்தி வைப்பதாக நடிகர் திலகம்,எஸ்.எஸ்.ஆருக்கு
உறுதி கொடுக்கும் காட்சி.
இப்போது திரையில் எதிரும்,புதிருமாய் நடிகர் திலகமும்,
எஸ்.எஸ்.ஆரும்.
இடப்புறம் நிற்கிற நடிகர் திலகம், வலப்புறம் நிற்கிற
எஸ்.எஸ்.ஆரிடம் கேட்பார்..
"இந்தக் கல்யாணத்துல உன்னோட அம்மா,அப்பா,குடும்பம் எல்லாம்.. "என்று
நண்பனின் திருமணத்தில்
அவர்கள் இருக்க வேண்டும்
என்கிற நல்லெணத்தில்
வினவ..
நண்பனின் தோள் பற்றிக்
கொண்டு உணர்ச்சிவசமாகும்
எஸ்.எஸ்.ஆர், "எல்லாரும்
இருக்காங்க..உன் வடிவில்"
என்று உருக..
சொல்ல ஒரு வார்த்தையில்லாமல், வள வள
என்று வாய் பேசாமல், ஒரு
பெருமிதப் புன்னகையுடன்..
கர்வமிகு கண் மலர்ச்சியுடன்,
நண்பனின் தோளில் இரண்டு
முறை தட்டி விட்டுப்
போவாரே..?-அந்தக் காட்சி.
படத்தின் தலைப்பு மட்டுமல்ல.
நம் நடிகர் திலகமும் தான்..
நடிப்பு வாழ "கை கொடுத்த
தெய்வம்."
நண்பர் கலை,
என் பதிலை நீங்களே எழுதி விட்டதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி.
ஒரே ஒரு விஷயம் மட்டும். எப்போதும் போல் ஒவ்வொரு பதிவிலும் உண்மைக்கு புறம்பான ஒரு தகவலையாவது சொல்ல வேண்டும் என்ற உங்கள் நியதிக்கேற்ப இம்முறையும் நான் தவறை பகிரங்கமாக ஒப்புக் கொள்ளவில்லை என்று ஒரு செய்தியை சொல்லியிருக்கிறீர்கள்.
நான் அன்றே தவறு என்று ஒப்புக் கொண்டதற்கு ஆதாரம் இதோ.[நான் முன்பே சொன்னது போல் அது தேவைப்படாவிட்டாலும் கூட]
http://www.mayyam.com/talk/showthrea...art-14/page274
அன்றே திருத்தியதற்கு ஆதாரம்
http://www.mayyam.com/talk/showthrea...art-14/page260
எப்போதும் இந்த பாகத்தில் இந்த பக்கத்தில் இந்த பதிவு என்று போடுவீர்களே! இந்த மாதிரி நேரங்களில் மட்டும் அது வராது போல. ஆமாம், அதை போட்டு விட்டால் எப்படி குறை சொல்ல முடியும்?
நடத்துங்கள்! நடத்துங்கள்!
அன்புடன்
முகநூலில் இருந்துQuote:
https://fbcdn-photos-d-a.akamaihd.ne...c0976c41b0842e
நெருங்கிவரும் கூட்டத்தை சமாளிக்க எத்தனையோ முறைகள் உண்டு.
அவற்றில் ஒன்றை அண்மையில் சிவாஜி கணேசன் கடைப்பிடித்தார்.
காரைக்காலில் நடைபெற்ற கல்யாணம் ஒன்றில் கணேசனின் வருகை
பரபரப்பு உண்டாக்கியது. சீர்காழியின் கச்சேரி இதனால் பாதிப்படைவதைக்கண்டு
மேடைக்கு தாவினார் கணேசன்."அண்ணே நீங்க பாடுங்க நானும் இங்கேயே
உட்காந்துகிறேன் அவுங்க எல்லாம் உங்க பாட்டையும் கேட்கட்டும்
என்னையும் பார்த்துக்கட்டும்" என்று சொல்லி "எஃபெக்ட்" முருகேசனிடமிருந்து
கடத்தை கடன் வாங்கி கடகடவென்று வாசிக்கத் தொடங்கிவிட்டர்
நேரில் ரசித்தவர் "அமிர்தம்"
தன்னால் மற்றவர்களுக்கு எந்தவிதமான சங்கடங்களும் ஏற்படக்கூடாது
என்ற பொன்னான மனம்
அத்துடன் சமயோசிதமான செயல்பாடு
அண்ணா உங்களைபோல யார் உளர்?