-
13th September 2015, 04:23 PM
#11
Junior Member
Seasoned Hubber


திரு.பாஸ்கர் அவர்களே,
‘திரும்பிப் பார்க்கிறேன்’ புத்தக பதிவுக்கு நன்றி. சிவந்த மண் திரைப்படம் (இந்தியையும் சேர்த்து) கணக்கு பார்த்தபோது ஒட்டுமொத்தத்தில் நஷ்டம் என்று ஸ்ரீதர் கூறியிருப்பதை நீங்கள் பார்க்கவில்லையா?
//கணக்கு பார்த்தபோது ஒட்டுமொத்தத்தில் சித்ராலயாவுக்கு நஷ்டம்தான். கண்ணை மூடிக்கொண்டு இஷ்டப்படி செலவு செய்தது எவ்வளவு பெரிய தவறு என்று எனக்கு புரிந்தது.செலவில் சிக்கனம் காட்டியிருந்தால் லாபமில்லாவிட்டாலும் நஷ்டத்தையாவது தவிர்த்திருக்கலாம். ஒட்டுமொத்தமாக நஷ்டம் என்றாலும்கூட சிவந்தமண் எனக்கு திருப்தி அளித்த படம். சிவாஜியுடன் நான் இணைந்து பணியாற்றிய அந்தப்படம் வெற்றி பெற்றது எனக்கு ரொம்ப ஆறுதல்//
இதைத்தான் ஸ்ரீதர் கூறியிருக்கிறார். ஒட்டுமொத்தத்தில் சித்ராலயாவுக்கு நஷ்டம் என்று கூறியிருக்கிறார். சிவந்த மண் பல இடங்களில் 100 நாட்கள் ஓடியுள்ளது. நல்ல வசூலும் கிடைத்துள்ளது. ஆனால், போட்ட முதலீடு அளவுக்கு எதிர்பார்த்தது கிடைக்கவில்லை. இதைத்தான் அந்தப் பதிவிலும் சிவந்த மண்ணுக்குப் பிறகு ஸ்ரீதருக்கு இறங்கு முகம் என்று குறிப்பிட்டுள்ளனர். பேராசிரியர் செல்வகுமார் அவர்களும் ஸ்ரீதர் இதைத்தான் ஒரு பேட்டியில் குறிப்பிட்டதாக கூறியிருந்தார்.
சரி. நீங்கள் முதலில் என்ன சொன்னீர்கள்? அதை எழுதியது ஸ்ரீதரே அல்ல என்று கூறினீர்கள். பின்னர், கல்கியில் வந்தது போல புத்தகத்தில் இல்லை என்றீர்கள். அதை எழுதியவர் சிவந்தமண் பற்றி ஸ்ரீதர் கூறியதை மறைத்து பொய் எழுதிவிட்டார் என்று கூறினீர்கள்.
ஆனால், இப்போது ஸ்ரீதர்தான் எழுதினார். கல்கியிலும் புத்தகத்திலும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறது என்றெல்லாம் சொல்லவில்லையா? நீங்கள் கூறியுள்ளபடி...
//எந்த விஷயத்தயும் விமர்சிக்கலாம்! ஆனால் நாம் சொல்லும் செய்திகளில் பொய், புரட்டு இருக்ககூடாது! எந்த ஒரு செய்தியையும் அதை சொன்னவர்கள் சொன்ன அர்த்தத்தில்
கூறாமல் மாற்றி வேறு அர்த்தம் கொள்ளும்படி திரித்து எழுதகூடாது! மீண்டும் கூறுகிறேன் நண்பரே என் பதிவுகளில் வேகம் இருக்கலாம், ஆனால் ஒரு
போதும் உண்மையற்ற செய்திகளோ, திரித்து எழுதுவதோ இருக்காது! புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்!//
அதையே நானும் உங்களுக்கு கூறுகிறேன்.
நாடோடி மன்னன் படம் குறித்து பெரியவர் சொன்னது உண்மைதான். படம் நன்கு வசூல் செய்தாலும் தயாரிப்பு செலவு மிக அதிகம் அந்தக் காலத்தில். அதனால்தான் பெரிசாக பொருள் கிடைக்கவில்லை என்று திரு.சக்ரபாணி அவர்கள் அப்படி கூறியிருக்கிறார். அதேதான் சிவந்த மண்ணிலும் நடந்திருக்கிறது. நன்றாக ஓடினாலும் எதிர்பார்த்தது வசூல் ஆகவில்லை.
நீங்கள் கூறினீர்கள் நம்நாட்டை விட சிவந்த மண் அதிக சென்டர்களில் 100 நாள் ஓடியது என்று. அதை நாங்கள் மறுக்கவில்லை. ஆனால், வசூல் ரீதியாக பார்த்தால் சிவந்தமண்ணை விட நம்நாடு அதிகம் (ஓவர் ஆல் தமிழ்நாடு) என்றுதான் ஆரம்பத்தில் இருந்து கூறிவருகிறோம்.
முக்கியமான விஷயம். திரு.பம்மலார் அவர்களே இந்த தகவலை திரு.எஸ்.வி.யிடம் ஒப்புக் கொண்டதாக அறிகிறேன். (பி.எம்.தகவல்கள் மூலம்) விரைவில் திரு.எஸ்.வி அதை வெளியிடுவார் என்று நம்புகிறேன். சந்தேகம் இருப்பவர்கள் தெளிவுபடுத்திக் கொள்ளலாம்.
திரையுலகில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக, தான் மக்கள் திலகத்தை சந்தித்து உதவி கோரியது குறித்தும், மக்கள் திலகம் உதவியது குறித்தும் அன்று சிந்திய ரத்தம் படத்துக்காக வாங்கிய அட்வான்ஸ் தொகை ரூ.25,000த்தை உரிமைக்குரல் சம்பளத்தில் கழித்துக் கொண்டார் என்றும் அந்த புத்தகத்தில் உள்ளது. திரு.ஆர்.கே.எஸ். கூறியபடி அவற்றையும் பதிவிட்டு உண்மையை உலகுக்கு உணர்த்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-
13th September 2015 04:23 PM
# ADS
Circuit advertisement
Bookmarks