குருவை படமெடுக்கும் சிஷ்யர்.
http://i1087.photobucket.com/albums/...4b02c3c165.jpg
Printable View
குருவை படமெடுக்கும் சிஷ்யர்.
http://i1087.photobucket.com/albums/...4b02c3c165.jpg
'பலே பாண்டியா' ஆனந்த விகடன் விமர்சனம்
http://i1087.photobucket.com/albums/...570541eb8e.jpg
அன்புள்ள திரு. கோபால்,
எனது "எங்கே நிம்மதி" பாடல் ஆய்வைப் பாராட்டியதோடு மட்டுமல்லாமல், தவறை சுட்டிக்காட்டியமைக்கு நன்றி.
அன்புடன்,
இரா. பார்த்தசாரதி
பார்த்தசாரதி சார்,
இன்று தான் உங்களுடைய "எங்கே நிம்மதி" பாடல் பற்றிய திறனாய்வு படித்தேன் அற்புதம் வர்ணிக்க வார்த்தைகள் இல்லை . படித்தவுடன் என் மனதில் தோன்றிய உணர்வு என்னவென்றால் "தேவாரம் திருவாசகம் மற்றும் நாலாயிர திவ்ய பிரபந்தம்" போன்றவை சம்பந்தர்,நாவுக்கரசர்,சுந்தரர்,மாணிக்கவாசகர்,பன்னி ரு ஆழ்வார் போன்றவர்களால் பாடப்பட்டு பின்னாளில் சேக்கிழார் அவர்களால் பெரிய புராணம் என்றும் நாத முனி அவர்களால் நாலாயிர திவ்ய பிரபந்தம் என்றும் தொகுக்கப்பட்டு பொருள் விளக்கத்துடன் வந்தது போல் நம்மவரின் பாடல் காட்சிகளின் தொகுப்பு ஒன்று (திரு பம்மலார் அவர்கள் முயற்சியினால் ) வெளி வருமா என்று ஒரு ஏக்கம் தோன்றி விட்டது .
தமிழின் சிறப்பு நடிகர் திலகம் என்றால் வார்த்தைகளின் சிறப்பு சாரதி சார் அவர்கள் என்றால் மிகை ஆகாது
ஊர் கூடி தேர் இழுப்போம்..
ஒவ்வொருவரும் தேவை..
வேண்டாம் பிரிவு நடிகர்திலகத்தின் இதயங்களே..
வேற்றுமையை வளர்ப்பதனாலே விளையும் தீமையே!
http://www.youtube.com/watch?v=5PYAmWkBwc4
என்ன நடக்கிறது இங்கே?
இந்த தளத்தின் பதிவுகளால் கவரப்பட்டு,நானும் ஏதாவது எழுதலாமே எனும் ஆசையில் கடந்த ஏப்ரல மாதம் என் பெயர் மற்றும் விவரங்களைப்பதிவு செய்தேன்.ஏதோ அழைப்பு வரும் என நினைத்தால் மாதங்கள் ஆறு ஆகியும் ஒன்றையும் காணோம்.இத்தனைக்கும் இங்கு moderator என கருதப்படும் நபர்களுக்கு பிரத்யேக messages வேறு அனுப்பியும் ஒரு பலனும் இல்லை.சரி இது இந்திய அரசால் நடத்தப்படுகிறது போலும் என மனதை திடப்படுத்திக்கொள்ள,திடீரென நண்பர் கோபால்,பிரபு,முரளி,பார்த்தசாரதி அபயமளித்து என்னை ஒரு அங்கத்தினர் ஆக்கினர்.
உள்ளே வரும்போதே சில துவந்த யுத்தங்கள் நடைபெற்றுகொண்டிருந்தன.பெயர்கள் இங்கு தேவையில்லை.
Being a system dependent person,I found these things funny and indigestible.சரி நாம் நம் வேலையை செய்யலாம்
என ஆரம்பித்தேன்.எனக்கு மகாஸ்ரீஸ்ரீ உ.வே.சா. போல பரண் மீது ஏறி ஓலைச்சுவடிகளை தட்டியெடுத்து அதை பிரசுரிக்கும் மனப்பாங்கு இல்லை.நடிகர் திலகம் அவர்களின் சில சிறப்புகளை வேறொரு பரிமாணத்தில் காண்பிக்க ஆவலும் ஆர்வமும் கொண்டு, அதே மனப்பாங்குடன் எழுதி வந்த சில அங்கத்தினர்களுடன் அளவளாவி நட்பு பாராட்டி வந்தேன்.அதில் முக்கியமானவர் வனஜா.ஒரு சிறந்த நட்புணர்வோடும்,நகைச்சுவை உணர்வோடும் அவர் எல்லாரிடமும் பழகிய விதம என்னை கவர்ந்தது.
அப்பொழுது கோபால் அவர்களின் அந்த பதிவு வெளியாகியது.அதை திடீரென வாசு கடுமையாக எதிர்த்தபோது ,வனஜா இயல்பாக "அதில் ஒரு குற்றமும் இல்லையே?நம் நடிகர் திலகம் நடித்து வெளிவந்து நாம் எல்லாரும் பார்த்த ஒரு படக்காட்சியைத்தான் கோபால் விவரித்துள்ளார்?" என வினவியபோது,வாசுவின் பதில் மிக அநாகரீகமாக அமைந்து, வனஜாவை இந்த தளத்தை விட்டு வெளியேற வைத்தது.அது மிக சரியான முடிவு.
அதை தொடர்ந்து கோபாலும் தார்மீக பொறுப்பேற்று வெளியேறியுள்ளார்.அதுவும் சரியான முடிவே!
ஆனால் வாசுவும் வெளியேறப்போவதாக சொல்லியிருப்பது வியப்பாக இருக்கிறது.அவர் தான் எழுதிய பதிவிற்கு வனஜாவிடம் வருந்தியிருந்தாலே போதுமே! யாரும் வெளியேற வேண்டாமே!
சரி ஒரு பதிவு எதாவது ஒரு காரணத்திற்காக ஒரு அங்கத்தினருக்கு பிடிக்கவில்லை என வைத்து கொள்வோம்.
அப்பொழுது அவர் செய்ய வேண்டியதுதான் என்ன? சற்று யோசிப்போம்.
தொடர்கிறேன்..
என்ன நடக்கிறது இங்கே?
தொடர்கிறேன்..
அவர் மறுபதிவு ஒன்றை இட்டு தன் எதிர்ப்பை தெரிவிக்கலாம்.
அதை moderators க்கும் அனுப்பி அந்த ஆட்சேபகரமான பதிவை நீக்கும்படி வலியுறுத்தலாம்.
இதற்கான வழிமுறைகள் இங்கு தற்போது உள்ளனவா எனத்தெரியவில்லை.
அதை உடனடியாக அமல படுத்த வேண்டும்.
ஆனால் வாசு செய்தது moral policing வேலை..நம் பஜ்ரங் தால் செய்வதுபோல தானே கோதாவில் இறங்கி சரி செய்யப்பார்த்தது.அது மிகத்தவறான அணுகுமுறை.நாளை நானே "கப்பலோட்டிய தமிழன் படத்தில் சில காட்சிகளில் சுப்பையா நடிப்பு தலைவர் நடிப்பையும் விஞ்சியது" என்று எழுதினால்.."ஏண்டா கண்பத்துன்னுபேர வச்சுகினுகிரே.அத்தனையுமா குருடு?"என ஒரு அன்பர் பதில் எழுதினால்?
முடிவாக moderators களுக்கு ஒரு வேண்டுகோள்..
போஸ்ட் எண் 1907 ஐப்படியுங்கள்.
நீங்கள் வாசு செய்தது சரி என நினைத்தால் அவரை மீண்டும் பதிவிட அழையுங்கள்.வனஜாவும் கோபாலும் வருவதும் வராததும் அவர்கள் இஷ்டம்.
அதற்கு மாறாக நீங்கள் வாசு செய்தது தவறு என நினைத்தால்அதை இங்கு பதிவு செய்து, வனஜா & கோபாலை மீண்டும் வர அழைக்கவும்.அப்படி வாசுவும் திரும்ப வர வேண்டுமென்றால் அவர் மேற்கண்ட தன் பதிவுக்கு வனஜா விடம் வருத்தம் தெரிவித்த பிறகே அனுமதிக்க வேண்டும்.
உங்கள் முடிவிற்கு (வெளியிலிருந்து) காத்திருப்பேன்.
நன்றி.
அனைவருக்கும்
நேருக்கு நேர் பேசுவதிலே 40 சதமே சொல்வழி கேட்பவர் மனம் சேரும்..
மீதி எல்லாம் உடல்மொழி, குரல் பாவம்.
இவைதான் பிரதான தொடர்பு சாதனங்கள்.
தொலைபேசியில் பேசினால் 30 சதத்துக்கும் குறைவாய்த்தான் சேரும்.
அதனால்தான் தொலைபேசியில் பேசும்போதும்
மகிழ்ச்சி என்றால் முகம் மலர்ந்தபடி பேசினால் கேட்பவர்க்கு அந்த உணர்வு கொஞ்சம் சேரும்..
சரி, எழுத்தால் எத்தனை சதம் சேர்ப்பிக்க முடியும்?
அதுவும் ஒரு நிமிட எதிர்வினைப் பதிவில்..
ஒரு வரி சொல்லாடல் பதிவில்..
புரிந்துகொள்ளப்படாமைக்கும்
தவறாக புரிந்துகொள்ளப்படுதலுக்குமான
Recipe -- அவசர எழுத்தில் இயற்கையாகவே இருக்கிறது.
நேற்று நடந்தவை எழுத்துச் சிதறல்கள்..
நம் அனைவரின் மனமும் சிவாஜி பாசம் என்ற பந்தத்தால் பிணைக்கப்பட்டன அல்லவா?
சம்பந்தப்பட்ட அனைவருமே ஒருவரை ஒருவர் அனுசரித்து, புரிய முயன்று மீண்டும் வாருங்கள் என அழைக்கிறேன்..
தீர்ப்புகள் அல்ல.. தீர்வுகள் போதும் நட்புக்குள்.. குடும்பத்துள்..
டியர் கண்பத்,
நான் இந்த விவாதங்களில் ஈடுபட வேண்டாம் என்று தான் இருக்கிறேன். வாசு மேல் உள்ள கருத்து வேற்றுமையில் என் பெயரையும் இழுத்து திரியை நாங்கள் எங்கள் பாணியில் கொண்டு செல்ல விழைவதாக நண்பர் எழுதியிருக்கிறார். நான் மேலும் மேலும் வளர்க்க வேண்டாம் என அமைதியாய் இருக்கிறேன். தங்களுடைய விவாதங்களில் என் பெயர் ஏன் அடிபடுகிறது. தெரியவில்லை.
தாங்கள் ஏப்ரல் 2012ல் தான் வந்துள்ளீர்கள். இன்னும் 100 பதிவுகள் வரவில்லை. தங்களுக்கு ஒரு ஆண்டுக்கு முன் வந்தவர் வாசுதேவன். இரவு பகலாக உழைத்து இன்று 3000 பதிவுகளை எட்டும் நிலையில் இருக்கிறார். பல்வேறு சொந்த அலுவல்களுக்கிடையில் நாங்கள் - தங்கள் பாஷையில் சொல்வதானால் - பரண் மேல் ஏறு தூசு தட்டி ஆவணங்களை இங்கு பதிவிடுகிறோம். இவற்றின் அருமை தங்களுக்குத் தெரியாவிட்டாலும் பரவாயில்லை. அதனை கேலி செய்யும் வகையில் பதிவினை எழுதியது அதிர்ச்சியளிக்கிறது. ஆய்வெழுத எவ்வளவு சிரமம், எவ்வளவு நேரம், எவ்வளவு உழைப்பு தேவைப் படுகிறதோ அதைப் போல் பல மடங்கு, ஆவணங்களைத் தருவதற்கு தேவைப் படுகிறது. இன்றைக்கு ஒரு பழைய பேப்பர், சுமார் 40 அல்லது 50 ஆண்டுகளுக்கு முன்பான நாளிதழைத் தேடி எடுத்து பிரதி எடுக்க தேவைப் படும் சிரமங்களை யும் பொருட்செலவையும் சற்றே விசாரித்துப் பாருங்கள், தங்களுக்கு அதனுடைய மதிப்புத் தெரியும். அந்த அடிப்படையில் பார்த்தால் நமது பம்மலார் இதுவரை நமக்கு அளித்துள்ள ஆவணங்கள் - விலை மதிப்பற்றவை என்பது ஒரு பக்கம் - குறைந்த பட்சம் 70 ஆயிரம் ரூபாய்களிலிருந்து ரூ. 1.0 லட்சம் வரைக்கும் மதிப்புப் பெறும். பம்மலார், வாசுதேவன் போன்ற நமது சிவாஜி ரசிக நண்பர்களெல்லாம் பிரதிபலன் எதிர்பார்த்தா செய்கிறார்கள்.
வாசு சொன்னது என்ன நாகரீகமாக எழுதுங்கள் என்றார். அவர் மேற்கோள் காட்டியது நடிகர் திலகத்தின் இளைய தலைமுறை படப் பாடல் என்பதும் தங்களுக்குத் தெரியாததல்ல ..அவர் எழுதியது போல் இது அறிவுஜீவிகளுக்கு மட்டுமான திரியில்லை, சாதாரணமானவர்களும் படிக்கிறார்கள். நிறைய மகளிரும் படிக்கிறார்கள். சிவகாமியின் செல்வன் பாடலைப் பற்றி முதல் பதிவில் இருந்த நாகரீகம் இரண்டாம் பதிவில் இல்லாததாக உணர்ந்து வாசு தன் மன வருத்தத்தை எழுதியிருக்கிறார். தாங்கள் இரு சாராரையும் உரிமையோடு கண்டித்திருந்தால் அதில் நிச்சயம் அனைவரும் பாராட்டி யிருப்பர். ஆனால் யாராவது ஒருவர் போக வேண்டும் எனத் தாங்கள் எழுதியிருப்பது வியப்பை அளிக்கிறது. மற்ற அனைவரும் மன வருத்தங்களை மறந்து மீண்டும் அனைவரும் ஒன்று சேர்ந்து நடிகர் திலகத்திற்காக பதிவுகளை இட வேண்டும் என பொதுவாக கேட்டுக் கொள்வார்கள். ஆனால் தாங்களோ யாராவது ஒருவர் போக வேண்டும் என்று பொருள் தரும் வகையில் எழுதியுள்ளீர்கள். அல்லது அப்படி எனக்குத் தோன்றுவது தவறா தெரியவில்லை.
தேவையற்ற விவாதங்களில் ஈடுபடாமல் நடிகர் திலகத்தின் நடிப்பின் சிறப்பையும் அவருடைய சமுதாயப் பணிகளையும் பற்றி விவாதிக்கலாமே என வாசுதேவன் ஆலோசனை கூறியதில் என்ன தவறு உள்ளது என எனக்கு தெரியவில்லை.
Dear Thiru.Raghavendra,
தெரிந்தோ தெரியாமலோ உங்களிடத்தில் ஒரு பலவீனம் இருக்கிறது.பிறர் சொல்வதை தவறாக புரிந்து கொள்வதோடு மட்டுமின்றி, அதை உங்கள் இஷ்டத்திற்கு திரிக்கவும் செய்கிறீர்கள்.(எனக்கு மைசூர் போண்டா பிடிக்கும் என்று சொன்னால், Ganpat மங்களூர் போண்டாவின் பரம எதிரி எனபது போல).
ஒரு நிறுவனத்தில் production, engineering, sales, personnel, என்று பல துறைகள் இருக்கும். அனைத்தும் அவசியம்.ஆனால் சிலர் இயல்பிலேயே சில துறைக்குத்தான் சரிபட்டு வருவார்கள்.நான் சொல்ல வந்தது அதுவே."எனக்கு ஊர் ஊராக திரிந்து பொருள்களை விற்கும் மனப்பாங்கு இல்லை" என்று சொல்வதால் நான் sales ஐ மட்டம் தட்டுவதாக அர்த்தம இல்லை.
மகா ஸ்ரீ ஸ்ரீ உ.வே.சா.பரண் மேல் ஏறாதிருந்தால் நமக்கு ஐம்பெருங்காப்பியங்ககள் கிடைத்திரா.அது கூட தெரியாத அப்பாவி இல்லை நான்.மேலும் என் பதிவில் உங்களை பற்றியும் நான் எதுவும் சொல்லவில்லை.எனவே ...
தங்களுடைய விவாதங்களில் என் பெயர் ஏன் அடிபடுகிறது. தெரியவில்லை.
தாங்கள் ஏப்ரல் 2012ல் தான் வந்துள்ளீர்கள். இன்னும் 100 பதிவுகள் வரவில்லை. தங்களுக்கு ஒரு ஆண்டுக்கு முன் வந்தவர் வாசுதேவன். இரவு பகலாக உழைத்து இன்று 3000 பதிவுகளை எட்டும் நிலையில் இருக்கிறார். பல்வேறு சொந்த அலுவல்களுக்கிடையில் நாங்கள் - தங்கள் பாஷையில் சொல்வதானால் - பரண் மேல் ஏறு தூசு தட்டி ஆவணங்களை இங்கு பதிவிடுகிறோம். இவற்றின் அருமை தங்களுக்குத் தெரியாவிட்டாலும் பரவாயில்லை. அதனை கேலி செய்யும் வகையில் பதிவினை எழுதியது அதிர்ச்சியளிக்கிறது. ஆய்வெழுத எவ்வளவு சிரமம், எவ்வளவு நேரம், எவ்வளவு உழைப்பு தேவைப் படுகிறதோ அதைப் போல் பல மடங்கு, ஆவணங்களைத் தருவதற்கு தேவைப் படுகிறது. இன்றைக்கு ஒரு பழைய பேப்பர், சுமார் 40 அல்லது 50 ஆண்டுகளுக்கு முன்பான நாளிதழைத் தேடி எடுத்து பிரதி எடுக்க தேவைப் படும் சிரமங்களை யும் பொருட்செலவையும் சற்றே விசாரித்துப் பாருங்கள், தங்களுக்கு அதனுடைய மதிப்புத் தெரியும். அந்த அடிப்படையில் பார்த்தால் நமது பம்மலார் இதுவரை நமக்கு அளித்துள்ள ஆவணங்கள் - விலை மதிப்பற்றவை என்பது ஒரு பக்கம் - குறைந்த பட்சம் 70 ஆயிரம் ரூபாய்களிலிருந்து ரூ. 1.0 லட்சம் வரைக்கும் மதிப்புப் பெறும். பம்மலார், வாசுதேவன் போன்ற நமது சிவாஜி ரசிக நண்பர்களெல்லாம் பிரதிபலன் எதிர்பார்த்தா செய்கிறார்கள்.
.....என்பது விவாதத்தை திசை திருப்ப நீங்கள் செய்துள்ள ஒரு அதீத கற்பனை மட்டுமே.
ஆனால் யாராவது ஒருவர் போக வேண்டும் எனத் தாங்கள் எழுதியிருப்பது வியப்பை அளிக்கிறது. மற்ற அனைவரும் மன வருத்தங்களை மறந்து மீண்டும் அனைவரும் ஒன்று சேர்ந்து நடிகர் திலகத்திற்காக பதிவுகளை இட வேண்டும் என பொதுவாக கேட்டுக் கொள்வார்கள். ஆனால் தாங்களோ யாராவது ஒருவர் போக வேண்டும் என்று பொருள் தரும் வகையில் எழுதியுள்ளீர்கள். அல்லது அப்படி எனக்குத் தோன்றுவது தவறா தெரியவில்லை.
மீண்டும் உங்களது திரிக்கும் மனப்பான்மை வெளிப்படுகிறது.நான் கேட்பதெல்லாம் இதுதான்.வாசுவின் 1907 எண் பதிவு நாகரீகமானதா இல்லையா? இதை moderators தீர்மானிக்கட்டும்.அப்படி அதில் தவறில்லை எனும் பட்சத்தில், வனஜா &கோபால் திரும்பி வருவது அவர்கள் இஷ்டம்.அதற்கு மாறாக முடிவெடுத்தால், அதை எழுதியதிற்கு வாசு வருத்தம் தெரிவித்து விட்டுதான் வரவேண்டும் என்பதே.இதை எப்படி நீங்கள் யாராவது ஒருவர் போக வேண்டும் என்று பொருள் தரும் வகையில் எழுதியுள்ளீர்கள். என குயுக்தியாக எடுத்துக்கொண்டீர்கள் என்பது இறைவனுக்கே வெளிச்சம்.
சிலம்பு கண்ணகியுடையதா கோப்பெருந்தேவியுடையதா எனும் வழக்கில், கண்ணகியுடையதே என நிரூபணம் ஆன பிறகு, தவறான தீர்ப்பு அளித்த குற்றத்திற்கு தன் உயிரையே கொடுத்து தன்னை தண்டித்து கொண்டான் பாண்டிய மன்னன்.அதுதான் அந்தகால மனு நீதி..
ஆனால் தவறு எல்லார் பேரிலும் உள்ளது.கண்ணகி சோழ நாட்டை சேர்ந்தவள்.பாண்டிய நாட்டிற்கு வந்து ஒரு மாதம் கூட ஆகவில்லை. பொற்கொல்லனோ நம் இனம். 300 மாதங்களாக இங்கு நம்முடன் பணி புரிகிறான்.எனவே அவனையும் தண்டிக்க முடியாது.ஆகவே சிலம்பு 6 மாதம் அதன் உரிமையாளரான கண்ணகியிடத்தும்,5 மாதம் மகாராணியிடத்தும் 1 மாதம் பொறகொல்லனின் மனைவியிடத்தும் இருக்கவேண்டும் எனும் தீர்ப்பு ..தற்போதய கழக நீதி..
இங்கு வழங்கப்படும் தீர்ப்பை பொறுத்திருந்து பார்ப்போம்.
நன்றி.
டியர் கண்பத் சார்,
பல்வேறு சொந்த மனக்கஷ்டங்கள் மற்றும் அலுவல்களுக்கிடையில் நேரம், உழைப்பு, யாவையும் செலவழித்து இங்கு நடிகர் திலகத்தின் சிறப்புகளை எடுத்தியம்பவே நான் இங்கு முனைந்து வருகிறேன். விவாதங்களைத் திரித்து மனக் கசப்புகளை வளர்த்து விரோதங்களை வளர்க்கும் மனப் பான்மை எனக்குக் கொஞ்சமும் கிடையாது அதற்கான நேரமும் அவசியமும் கிடையாது. ஆவணங்களைத் தேடிப் பிடித்து இங்கு தருவதில் உள்ள சிரமங்களை சொல்வதில் என்ன திசை திருப்பும் முயற்சி உள்ளது எனத் தெரியவில்லை. தாங்கள் உ.வே.சா. வைப் பற்றி எழுதிய வரிகளுக்குக் தான் பதில் எழுதினேன். தங்களுக்கு அவ்வாறு மனப்பான்மை இல்லை என்றால் இல்லை என்று சொல்லுங்கள். இதில் திசை திருப்பும் முயற்சி என்று எழுதுவது ஏன். அதில் என்ன கற்பனை உள்ளது.
அதே போல் தங்கள் விவாதங்களில் என் பெயர் இடம் பெறுகிறது என்பதற்கு பொருள் ... சிவகாமியின் செல்வன் பாடலைப் பற்றிய தங்கள் அனைவரின் விவாதங்களில் என்பதையே நான் குறிப்பிட்டுள்ளேனே தவிர , உங்கள் ஒருவரைத் தனியாகக் குறிப்பிட வில்லை. அதில் என் பெயரை தாங்கள் எழுதவில்லை என்பதையும் நான் அறியாதவனல்ல. சம்பந்தமில்லாமல் என் பெயரை இந்த விவாதத்தில் ஏன் கொண்டு வர வேண்டும்.
அதே போல் ஒரே ஒரு பதிவினை மட்டும் தாங்கள் குறிப்பிட்டு கூறுவதிலிருந்து தங்களிடம் பேசிப் பயனில்லை என நான் உணர்கிறேன். எனவே இனிமேல் இதில் கருத்துக்களைக் கூறுவதில் எனக்கு உடன் பாடு இல்லை.
என் எழுத்துக்களில் ஏதேனும் பிழையிருந்தால் அல்லது தங்களைப் புண்படுத்தியிருந்தால் என்னை மன்னிக்கவும். ஏனென்றால் தெரிந்து யார் மனதையும் புண்படுத்தும் தைரியமும் குணமும் எனக்கில்லை.
நன்றி திரு ராகவேந்தர்..
உங்கள் பேரிலும் எனக்கு எந்த கோபமோ,வருத்தமோ இல்லை..
மேலும் எனக்கும் இந்த விவாதத்தை இழுக்க மனமில்லை.
இனி நடப்பவை நல்லவைகளாக இருக்கட்டும்.
வணக்கம்.
Hope everyone must forget their differences and come
back to this wonderful thread of our NT.
பிரபு அவர்கள் நடிக்கத்தொடங்கிய காலகட்டத்தில் மக்கள்திலகத்திடம் ஆசிபெற்றபோது கீழ்வரும் பொருள்படி அவர் சொன்னதாய்ப் படித்திருக்கிறேன் -
'' சண்டைக்காட்சிகளில் வேண்டுமானால் என்னை ஆசானாய்க் கொள். ஆனால் காதல் இணைப்பாடல் காட்சிகளுக்கு உன் தந்தையே மிகச்சிறந்த முன்னோடி..'' .
.
நாயகியின் கரம் தன்வசம் வந்தால் அதை உரிமை, அன்பு, காதல் கலந்து வருடி ஆராதிக்கும் அழகு உடல்மொழி நடிகர்திலகம் தனிமொழி..
சிட்டுக்குருவி முத்தம்கொடுத்து பாடலில் மரக்கிளை அருகே சரோஜாதேவி கைக்கு அவர் நடத்தும் காதல் ஆராதனை நினைவிருக்கிறதா?
------------------------
நீலவானம்
பசுந்தரை
வெண்-சேலை, மல்லிகை,கழுத்து நகை. புன்னகை..- நாயகி
கருங்கேசம், வசீகர முகம், மென்னடர் நிற உடை, உள்ளங்கவர் நடை - நாயகன்
ஶ்ரீதர்,மெல்லிசை மன்னர், கவியரசர், ஒளிப்பதிவாளர் என எல்லாரும் உச்சத்தில் துணைநிற்க
நடிகர்திலகத்தின் காதலிணைப்பாடல்கள் எனும் தேன்குடத்தில் ஒரு துளி..
http://www.youtube.com/watch?v=aHR0BfPNF7U
Mr Kaveri Kannan
Superb Sir your Kavithai Nadai.
நன்றி திரு கோல்ட்ஸ்டார் அவர்களே!
It is with utter disappointment and embarrassment that moderators are continually called to moderate this thread. Even Ajith and Vijay threads are running without any moderation these days as those fans seem to know where to draw the line.
The purpose of Hub is for mutual discussion and exchanging of thoughts and NOT the place for childish arguments and name-calling. Very very disappointing!
WARNING
1. No personal abuses will be tolerated and will result in the respective Hubber banned immediately.
2. All posts should ONLY discuss Sivaji Ganesan and his movies.
3. Action will be taken on anyone making provocative posts.
This EXACTLY what I am referring to.
What does it matter about posts? What has it got to do with NT? Does it add any value to the discussion here?
People who open the thread to find a new discussion, end up feeling frustrated and eventually won't even bother coming back here.
PLEASE STOP THIS NONSENSE.
இமயம் பட விமர்சனத்தில் விகடன் இப்படி எழுதியது நினைவிருக்கிறது.
''நடிகர்திலகம் தம் சினிமா அனுபவ வயதுள்ள மற்ற இளைய நடிகர்களுக்கெல்லாம் சவால் விடும் தரத்தில் இந்தப் பாடலில் அசத்தியுள்ளார் ''
ஶ்ரீவித்யா ( இமயம், நீதியின் நிழல்) இணைந்த படங்கள் இன்னும் இன்னும் இருந்திருக்கக்கூடாதா எனச் சிறு ஏக்கம் உண்டு எனக்கு!
http://www.youtube.com/watch?v=blmm8EdNdM8
நக்கீரன் இதழ்ப் பக்கங்கள் விருதுகளைப் பற்றிய பதிவிற்குப் பாராட்டுக்கள் சந்திரசேகர் சார்.
என் விருப்பம்
http://youtu.be/t2Zmj1ShKLo
அதிகம் பேர் பார்த்திருக்க மாட்டார்கள். இப்பாடலை நான் விரும்பக் காரணம், அந்தக் கால கட்டத்தை மனதில் வைத்து கவிஞர் கண்ணதாசன் எழுதிய வரிகள். இப்படம் 1971 தேர்தல் பிரச்சாரம் துவங்க இருந்த நேரம். ஸ்தாபன காங்கிரஸ் இளைஞர்கள் மத்தியில் மிகவும் தாக்கம் ஏற்படுத்திய நேரம். குறிப்பாக சிவாஜி ரசிகர்களின் உழைப்பில் திராவிட இயக்கங்களுக்கு சவாலாக விளங்கிய நேரம். பெருந்தலைவரை மனதில் வைத்து கண்ணதாசன் எழுதிய வரிகள், உனைத் தேடி வரும் எதிர்காலம்.
இப்பாடலில் கை விரல்களை சொடுக்கிக் கொண்டே வரும் நடிகர் திலகம் பின்னர் அப்படியே பின் பக்கம் தலைக்கு மேலே எடுத்துச் சென்று சுழற்றும் ஸ்டைலைப் பாருங்கள். கண்ணிமைக்க மறந்து விடுவீர்கள்.
அது மட்டுமின்றி இப்பாடலில் நடிகர் திலகம் அணிந்திருந்த சட்டையின் டிசைன் மிகவும் பிரபலம். சுமதி என் சுந்தரி வரும் வரையில் இந்த டிசைன் தான் ரசிகர்கள் மத்தியில் ஒரு கிரேஸாக இருந்தது. அது மட்டுமின்றி வெண்ணிற ஆடை நிர்மலா ஜோடியாக நடித்த ஒரே படம். [தங்க சுரங்கம் படத்தில் நடிப்பிற்காக வருவது போல் காட்சி வரும்]
மெல்லிசை மன்னரின் இசையில், டி.எம்.எஸ்., எஸ்.ஜானகி குரல்களில் மிகவும் அருமையான பாடலாயிற்றே..
நக்கீரன் கட்டுரைக்கு நன்றி திரு கேசி அவர்களே..
தங்கைக்காக படத்தில் மறைந்திருந்த தங்கத்தை வெட்டித்தந்த இராகவேந்திரருக்கு நன்றியும் பாராட்டும்!
Mr Raghavendra Sir,
Thokku Thooki indeed a remarkable fillm in NT's career.
I have no other option than to watch the movie tonight.
Thank you sir.
குமார் அவர்களே!
பந்தபாசம் படத்தில் நடிகர்திலகத்தின் இணை - தேவிகா..
இன்ப நினைவுகளை எழுப்பும் பாடல்..
http://www.youtube.com/watch?v=r0FWaYlH5Gs
எஸ், வாசுதேவன் அவர்களைப் பின்பற்றி
எதிர்பாராதது படப்பதிவுக்கான
http://www.mayyam.com/talk/showthrea...20#post1014920
என் நன்றியை இங்கே பதிக்கிறேன்.
பின்னாளில் வந்த மூன்று முடிச்சு கதை முடிச்சு இதை ஒட்டியே , இல்லையா?
சிக்கலான கதையைச் சிறப்பாய் எடுத்து, நடித்ததால் முதல் வெற்றியாகி
வேறு மொழிகளில் வெற்றி பெறவும் முன்னோடியாகி
- எதிர்பாராதது - '' புதிய அலை'' பாணி படம்.
நடிகர்திலகம் திரைவாழ்வில் முக்கிய மைல்கல்!
நன்றி ராகவேந்திரா அவர்களே!
அடிபட்டவன் நான், சிகிச்சை பத்மினிக்கா - நகைச்சுவை உணர்விலும் நம்மவர் திலகம்தான்!
The other name of experimentation = NT
திரு.காவேரி கண்ணன் அவர்களே,
இமயம், பந்தபாசம் பாடல் இணைப்புகள் அருமை.
திரு.வாசுதேவன் அவர்களின் "எதிர்பாராதது" திரைப்படப் பதிவை எதிர்பாராமல் இணைத்தது இன்ப அதிர்ச்சி.
நன்றி!
பாராட்டுக்களுக்கு நன்றி வாசுதேவன், காவிரிக்கண்ணன் மற்றும் சேகர் சார்.
http://imageshack.us/scaled/landing/143/tpathak0001.jpg
மதுரை சென்ட்ரல் திரையரங்கில் நேற்று 08.02.2013 முதல் நடிகர் திலகத்தின் மாபெரும் வெற்றிக் காவியமான தங்கப் பதக்கம் திரையிடப் பட்டுள்ளது. சிறப்பான வரவேற்பைப் பெற்று வருவதாக தகவல்.
இத்தகவலைத் தந்த திருச்சி செல்வம், மற்றும் ராமஜெயம் நண்பர்களுக்கு மிக்க நன்றி.
என் விருப்பம்
எனக்கு 10 வயதிருக்கும்போது இப்பாடலில் மயங்கினேன்..
40 ஆண்டுகள் கழித்தும் மயக்கம் குறையவில்லை.
பாட்டுக்கோட்டை கட்டிய பட்டுக்கோட்டையார் - எத்தனை எளிய சரளமான கருத்துள்ள வரிகள்
மெல்லிசை மன்னர்கள் - என்ன எளியோருக்கான துள்ளல் தாளம், லயம்
சந்திரபாபு - என்ன பொருத்தமான சுறுசுறுப்பான துணை
டி. எம். எஸ் - எத்தனை பாந்தமான குரல், நயம்..
Prop - எனப்படுவதைக் கையாளும் திறன்..
இங்கே ரிக்*ஷா நடிகர்திலகத்தால் எத்தனை அழகாய்க் கையாளப்படுகிறது..!
கடவுள் இருப்பதும் இல்லை என்பதும் கவைக்கு உதவாத வெறும்பேச்சு..
என் வாழும் நெறி தந்த இவ்வரிக்காகவே பதிபக்தி படப்பாடல் என் மனதுக்கு நெருக்கம்.. விருப்பம்!
http://www.youtube.com/watch?v=PafwC_0zKxc
டியர் காவிரிக் கண்ணன்,
தாங்கள் கூறிய படி பட்டுக் கோட்டை கல்யாண சுந்தரம் பாடல்கள் தனி பாணி தான். காலத்தைக் கடந்து நிற்கும் கருத்தாழமிக்க வரிகள். இந்தப் பாடலிலேயும் சமுதாயத்திற்கு இன்றைக்கும் பொருந்தும் வகையில் வரிகள் அமைந்துள்ளது அவர்களுடைய முன்னோக்குப் பார்வையினை எடுத்துக் காட்டுகிறது. நடிகர் திலகத்தின் பாடல்களில் இது போன்ற அபூர்வமான பாடல்களை தாங்கள் மேலும் மேலும் தர வேண்டும் என்பது என் விருப்பம்.
My Choice என் விருப்பம்
மாங்காய் பாலுண்டு - காவேரி - இசை ஜி.ராமநாதன் - குரல் சி.எஸ்.ஜெயராமன்
நடிகர் திலகத்தின் நடிப்பு ஒரு முழுமையான இலக்கண ஏடு என்பதற்கு ஓர் உதாரணம், அவருடைய நடனக் காட்சிகள். எந்த வித நடனமானாலும் அவருடைய தனித்துவம், அதனுடைய சிறப்பு அதில் மிளிரும். பல ரசிகர்கள் அதிகம் அறிந்திராத சில படங்கள் அல்லது பாடல் காட்சிகளில் அவருடைய சிறப்பான நடனங்கள் எடுத்துக் கூறவேண்டியது நம் கடமை. அந்த வரிசையில் மட்டுமின்றி, என் விருப்பமான பாடலாகவும் இந்தப் பாடல் காட்சி சேர்கிறது. மாங்காய்ப் பாலுண்டு என்று துவங்கும் இப்பாடலை நாம் அடுத்து திரைப் பட்டியலில் இடம் பெற இருக்கும், காவேரி திரைப்படத்தில் காணலாம். நம் அருமை நண்பர் பார்த்தசாரதி அவர்கள் நடிகர் திலகத்தின் வாயசைப்பின் சிறப்பைப் பற்றி இங்கே ஏற்கெனவே மிக அழகாக விவரித்துள்ளார். அதனை மேலும் வலுவாக்கிடும் வண்ணம் அமைந்தது இப்பாடல். இசைச் சித்தர் சி.எஸ்.ஜெயராமன் அவர்களின் குரலின் தன்மைக்கேற்றவாறு இப்பாடலில் நடிகர் திலகத்தின் வாயசைப்பு இருக்கும். இந்த வித்தியாசத்தை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டுமானால், நடிகர் திலகத்திற்காக டி.எம்.எஸ். பாடிய பாடல், ஏ.எம். ராஜா பாடிய பாடல் போன்று ஒவ்வொரு பாடகரின் பாடல் காட்சிக்கும் அவர் வாயசைத்துள்ள விதத்தை கவனித்தால் தான் புரியும்.
இப்பாடல் காட்சியில் அவருடைய நளினமான நடனத்தைப் பாராட்டுவதா, கண்களில் காட்டும் வசீகரத்தை சொல்வதா, புன்னகையின் மகத்துவத்தை சொல்வதா, கால்களில் அவர் காட்டக் கூடிய தாளத்தை சொல்வதா, சரியான நேரக் கட்டில் பின்னால் சென்றவாறே பாட்டிற்கு வாயசைத்துக் கொண்டே நடன அசைவையும் செய்து கொண்டே அவர் நம்மை கட்டிப் போடும் மந்திரத்தை சொல்வதா ...
பாருங்கள் .... உணருங்கள் ...
http://youtu.be/XvLNA-AewBE
Rare Photo of NT is simply superb.
Mr Raghavendra Sir,
I have one suggestion.When you post the NT's movies one by one, you
can also post the views of NT at the bottom of the every film. It has
been posted by Mr Pammalar long time back and it will be very opt for
this thread.
It is only a suggestion.
Really a very valuable suggestion. Shall definitely try to do it.
காவேரி படப் பதிவுகளுக்கும் பாடல் சுட்டிகளுக்கும் நன்றி ராகவேந்திரா அவர்களே..
நீங்கள் சொன்னதுபோல் மாங்காய்ப்பால் பாடலில் நடிகர்திலகம் காட்டும் நவரச பாவங்கள் - பன்முகத் திறமையைப் பறைசாற்றும் சான்றுகள்..
அன்பு வாசு முன்னர் அளித்த காவேரி நாயகரின் கலைவண்ணப் படம் அழகோ அழகு. நன்றி!
வெள்ளை உடையில் சமூகக் கறுப்பைச் சாடும் புயலைக் காண-
''உண்டு'' என்று சொல்ல எப்படி உதடுவைத்தால் மொழியின் அழகு சிதறாமல் உச்சரிக்கலாம் எனக் கற்க -
காமிரா எங்கிருக்கிறது.. எந்த கோணத்திலும் அழகாய்த் தெரியும் தம் முகத்தை அதிகபட்சம் எப்படி அதன் கண்களுக்கு விருந்தாக்கலாம் என்பதன் அரிச்சுவடி அறிய...
இதோ லக்ஷ்மி கல்யாணம் பாட(ல்)ம் - என் விருப்பம்!
http://www.youtube.com/watch?v=RABmwdzsOYw