Page 165 of 401 FirstFirst ... 65115155163164165166167175215265 ... LastLast
Results 1,641 to 1,650 of 4005

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 10

  1. #1641
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    குருவை படமெடுக்கும் சிஷ்யர்.

    Last edited by vasudevan31355; 6th February 2013 at 11:06 AM.
    நடிகர் திலகமே தெய்வம்

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #1642
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    'பலே பாண்டியா' ஆனந்த விகடன் விமர்சனம்

    Last edited by vasudevan31355; 6th February 2013 at 11:06 AM.
    நடிகர் திலகமே தெய்வம்

  4. #1643
    Senior Member Senior Hubber
    Join Date
    Jul 2010
    Location
    chennai
    Posts
    214
    Post Thanks / Like
    அன்புள்ள திரு. கோபால்,

    எனது "எங்கே நிம்மதி" பாடல் ஆய்வைப் பாராட்டியதோடு மட்டுமல்லாமல், தவறை சுட்டிக்காட்டியமைக்கு நன்றி.

    அன்புடன்,

    இரா. பார்த்தசாரதி

  5. #1644
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like

    pudiya paravai

    Quote Originally Posted by parthasarathy View Post
    நடிகர் திலகத்தின் வித்தியாசமான மிகச் சிறந்த நடிப்பில் வெளி வந்த பாடல்கள் (தொடர்ச்சி...)

    8. "எங்கே நிம்மதி" படம்:- புதிய பறவை (1964); பாடல்: கவியரசு கண்ணதாசன்; பாடியவர்கள்:- டி. எம். சௌந்தரராஜன் மற்றும் குழுவினர்; இசை:- மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன்-ராமமூர்த்தி; இயக்கம்:- தாதா மிராசி; நடிப்பு:- நடிகர் திலகம் சிவாஜி கணேசன், சௌகார் ஜானகி மற்றும் சரோஜா தேவி.
    இந்தப் பாடல் தமிழ்த் திரையுலகுக்கு மிகவும் புதிய முறையில் அளிக்கப் பட்ட பாடல். பொதுவாக, கனவுப் பாடல்கள் பெரும்பாலும் டூயட்டுகளாகவே இருக்கும் நிலையில், ஒரு மனிதனின் வாழ்க்கையில் நடக்கும் போராட்டங்கள் அவனை நிம்மதி இல்லாத மன நிலைக்கு இட்டுச் செல்ல, அவன் நனவுலகத்திலிருந்து விலகி, கனவுலகத்திற்குச் சென்று அங்கும் அல்லல் படுவதை, ஒரு வகை "fantasy " என்று சொல்லக் கூடிய முறையில் எடுத்திருப்பார்கள்.

    இதற்கு முன்னரே, "நிச்சய தாம்பூலம்" படத்தில், "படைத்தானே" பாடலில் இந்த முறையை நடிகர் திலகம் சிறப்பாகக் கையாண்டிருந்தாலும், அந்தப் பாடலை விட, "எங்கே நிம்மதி" பாடலை இன்னமும் செம்மைப் படுத்தியிருந்ததால், இந்தப் பாடலை ஆய்வுக்கு எடுத்துக் கொள்கிறேன்.

    இந்தப் பாடலின் பல்லவியான "எங்கே நிம்மதி" வரிகள் முதலில் கவியரசருக்குக் கிடைக்கவில்லை எனவும், கவியரசு, மெல்லிசை மன்னர் விஸ்வநாதன் மற்றும் நடிகர் திலகம் மூவரும் பாடல் எடுப்பதற்கான ஆயத்தங்கள் அனைத்தையும் செய்த பின்னரும் அந்த முதல் வரி எதிர்பார்த்தபடி கிடைக்கவில்லை என்று ஏமாற்றத்துடன் (ஏனென்றால், கவியரசு எப்போதுமே முதல் வரியிலேயே மொத்தப் பாடலின் காலத்திற்கு அவரும் சென்று கேட்பவரையும் அழைத்துச் சென்று விடுவார், நடிகர் திலகம் நடிப்பில் காட்டுவது போல் - "கண்ணா கருமை நிறக் கண்ணா உன்னைக் காணாத கண்ணில்லையே" என்று ஒரு கரிய நிறம் கொண்ட பெண்ணின் இறைவன் கண்ணனை நோக்கிய முறையீட்டில் தந்தவர். இது ஒரு சிறிய ஒரு உதாரணம். இது போல் பல உதாரணங்கள் கூறலாம்.), வீடு சென்றதாகவும், நள்ளிரவில், திடீரென்று நடிகர் திலகமே, அந்த வரிகள் மனதில் வரப் பெற்று, மற்ற இருவருக்கும் தொலைபேசி செய்து, அன்றிரவே, பாடலைப் பதிவு செய்ததாகவும் பல வருடங்களுக்கு முன்னர் படித்திருக்கிறேன். பொதுவாக, நடிகர் திலகம் பிற துறைகளில் அதீதமாகத் தலையிட மாட்டார் என்று பொத்தாம் பொதுவாகச் சொல்வார்கள் என்றாலும் இந்தக் கூற்று உண்மையல்ல. இந்தப் பாடலே அதற்கு உதாரணம். இது போல் பல படங்களைச் சொல்லலாம். அவர் அதீதமாகத் தலையிட மாட்டாரே தவிர, படம் முழுமையாக வர, அவரது ஆலோசனைகளை வழங்கி, முழு ஈடுபாட்டினையும் காட்டித்தான் வந்திருக்கிறார் - சக கலைஞர்களின் பங்களிப்பையும் பட்டை தீட்டுவது உட்பட.

    இந்தப் பாடல் பல ஆண்டுகள், உலகின் எந்த மூலையில் மெல்லிசைக் கச்சேரி நடந்தாலும் மறக்காமல் முயற்சி செய்து பாடப்பட்ட பாடல். இன்றும் இது தொடர்கிறது. மெல்லிசை மன்னர்களின் மிகச் சிறப்பான டியூனும், எண்ணற்ற வாத்தியக் கருவிகளின் ஆர்ப்பரிப்பும், இன்றளவும் ஒவ்வொரு இசையமைப்பாளரையும் இன்னமும் வியக்க வைத்துக் கொண்டிருக்கிறது. பாடல் வரிகளோ கேட்கவே வேண்டாம். முக்கியமாக, "கண்ணைப் படைத்து பெண்ணைப் படைத்த இறைவன் கொடியவனே" சிரஞ்சீவித்தன்மை பெற்ற வரிகள். டி.எம்.எஸ்ஸின் அற்புதப் பங்களிப்பில், பாடல் எடுக்கப்பட்ட விதமும், அதில் நடித்த அனைத்து கலைஞர்களின் நடிப்பும் இன்றளவும் புதிதாகத் தோற்றமளிக்கிறது.

    இப்போது, நடிகர் திலகத்தின் வித்தியாசமான முயற்சிக்கு வருவோம். இந்தப் படத்தை முதலில் பார்த்தபோது, நடிகர் திலகம் அவருடைய முயற்சியில் தோற்று (சௌகாரின் கை ரேகையை பிரதி எடுக்க முயன்று தோற்று, நடிக வேள் எம்.ஆர். இராதாவால் மேலும் மனம் உடைந்து போயிருப்பார்) மிகுந்த மன உளைச்சலுடன் படுக்கையில் புரளுவார் - "என் நிம்மதியே போய்டும் போலிருக்கே!" - அப்போதே, திரை அரங்கம் ஆர்ப்பரிக்கத் துவங்கி விட்டது. அப்போதே எனக்கும் விளங்கி விட்டது - படத்தின் மிக முக்கியமான highlight பாடலான "எங்கே நிம்மதி" வரப் போகிறதென்று.

    இந்தப் பாடல் முழுக்க நடிகர் திலகத்தின் உடல் மொழி கொடி கட்டிப் பறக்கும். பாடல் முழுவதிலும், அவரது கைகளும், கால்களும் காண்பிக்கும் அபிநயங்களை வேறெந்த நடிகன் முயற்சித்திருந்தாலும், நகைப்புக்கிடமாகத்தான் போயிருக்கும். எந்த விஷயத்தையும் பரீட்சித்துப் பார்ப்பதில் (சோதனை முயற்சி சில முறை ஜெயிக்கலாம் சில முறை தோற்கலாம். ஆனால் அதைப் பற்றி என்றுமே கவலைப் படாமல், கடைசி படம் வரை, வித்தியாசப் படுத்தி நடிப்பதில் பிடிவாதம் காட்டியவரல்லவா?) முனைப்பு காட்டும் நடிகர் திலகம் இந்த முறை, ஏற்கனவே "படைத்தானே" பாடலில் செய்த சோதனை முயற்சியை விட பல படிகள் முன்னே போய், அவரது நம்பிக்கைக்குரிய குழுவின் மூலம் (கவியரசு/டி.எம்.எஸ்./மெல்லிசை மன்னர்கள் - "படைத்தானே"வும் இதே குழு தான்!) ஒரு பரீட்சார்த்த பாடல் முயற்சியை செய்திருப்பார்.

    அந்த மெல்லிய வெள்ளை சட்டை, முழங்கைக்கு மேல் மடித்து விட்ட விதம், அந்த வெளிர் நீல பாண்ட், சரியாக சவரம் செய்யப்படாத முகம் - இவைகளை மட்டும் வைத்துக் கொண்டே, துவக்கத்திலேயே, அந்தப்பாடலின் சூழலுக்கு உடனேயே சென்று, பார்க்கும் அனைவரையும் இழுத்துச் சென்று விடுவார் வழக்கம் போல்.

    பாடல் துவங்கி கேமரா கீழே படுத்துக் கொண்டிருக்கும் அவர் மீது zoom செய்யப் பட, கோரஸில், பலர் "ஒ..." என்று கூவத் துவங்கும்போதே, அவர் எச்சிலை மிடறு விழுங்கி அந்தச் சூழலின் பயங்கரத்தைக் காண்பிப்பார். உடனே தொடரும் ஒரு அதிரடி இசைக்கு சட்டென பின்னோக்கி நடக்கும் போது அரங்கம் அதிரத் துவங்கும்.

    "எங்கே நிம்மதி" எனப் பல்லவி பாடும் போது, இரண்டு கைகளையும் ஒரு விதமாக relaxed - ஆக stretch செய்து, மிகுந்த மன உளைச்சலில் இருப்பவனின் ஆயாச உணர்வினை எடுத்துக் காட்டும் விதம் பிரமிக்க வைக்கும்; கூடவே அரங்கமும் அதிரும்.

    பல்லவி முடிந்தவுடன் சௌகார் மற்றவர்கள் சகிதம் வந்து அவரை இம்சை செய்யத் துவங்கியவுடன், அந்த இம்சையை எதிர் கொள்ளும் விதம்!

    இப்போது சிறிய சரணம். அந்தக் கூட்டத்திடமிருந்து விலகி ஓடி வந்து, வலது கையை மட்டும் ஸ்டைலாக மேலே பின்னோக்கித் தூக்கி "எங்கே மனிதன் யாரில்லையோ" என்று சொல்லி இப்போது இடது கையைத் இலேசாக மேலே தூக்கி "அங்கே எனக்கோர் இடம் வேண்டும்" என்று பாடுவார். இதற்கும் அரங்கம் அதிரும்!

    இப்போது சரணம். "எனது கைகள்" எனும்போது, இடது கையை மேலே தூக்கி, "மீட்டும் போது வீணை அழுகின்றது" எனும் போது வலது கையை இடது கை அருகாமையில் கொண்டு சென்று வீணை போல் மீட்டி, "எனது கைகள் தழுவும் போது" என்று கூறும் போது, கைகளை உடனே X (எக்ஸ்) போல் ஆக்கி, தழுவுவது போல் வித்தியாசமாய்க் கைகளைக் கையாண்டிருப்பார். பொதுவாகத் தழுவுவது என்பது கைகளை நேரிடையாகத் தழுவுவது போல் தான் வரும். இருப்பினும் அதற்கு முன்னர் இரண்டு கைகளையும் வைத்துக் கொண்டு வீணை வாசிக்கும் பாவனையைக் காட்டிக் கொண்டே, அதே கோணத்தில், எதிரிடையாக X (எக்ஸ்) குறியில், தழுவும் பாவனையைக் காண்பித்திருப்பார். (ஆங்கிலத்தில், follow through என்று கூறுவார்களே, அது தான் இந்த நடிகர் திலகத்திடம் எத்தனை முறை பாடம் காண்பிக்கப்பட்டிருக்கிறது!) அப்படியே, பின்னோக்கிப் போய்க் கொண்டே "கண்ணைப் படைத்து பெண்ணைப் படைத்த இறைவன் கொடியவனே; ஓ! இறைவன் கொடியவனே" எனும் போது மேலே தூக்கிய இரண்டு கைகளையும் சட்டென்று கீழே இறக்கி "இறைவன் கொடியவனே" என்று சரியான follow through முறையில் கீழே கொஞ்சம் வேகமாகவும், ஒரு வித அலுப்பு கலந்த வன்மையோடும் கீழே இறக்கி அந்த வரிகளுக்கு அதாவது "இறைவன் கொடியவனே" என்ற அந்த வரிகளுக்குரிய வன்மையைக் காட்டியிருப்பார்.

    முதல் சிறிய சரணம் முடிந்து அனு பல்லவியில் "எங்கே நிம்மதி...எங்கே நிம்மதி...அங்கே எனக்கோர் இடம் வேண்டும்" என்று அந்த மேல் நோக்கிச் செல்லும் வழியில் ஏறும் போது, அலுப்பையும் ஆயாசத்தையும் நடையில் காட்டிய நடிப்புலக மன்னர் மன்னன், இந்த இரண்டாம் சரணம் முடிந்து - அதாவது "எனது கைகள் மீட்டும் போது..." என்கிற சரணம் - ஒரு வித வேகத்துடன் "எங்கே நிம்மதி? எங்கே நிம்மதி" என்று இரு புறமும் திரும்பித் திரும்பி நடித்திருப்பார் - ஏன்? முதல் முறை, ஆயாசத்தையும், இரண்டாவது முறை, வேகத்தையும், பாடிய டி.எம்.எஸ். தந்ததால்!

    மூன்றாவது சரணம் - "பழைய பறவை போல ஒன்று பறந்து வந்ததே" சரோஜா தேவி அருகில் வந்ததும், பாலைவனத்தில் சோலையைக் கண்ட மன நிலையுடன், ஒரு வித ஆயாசம் கலந்த relief-உடன் சென்று, அவரை முழுமையாகத் தழுவாமல், "உன்னிடம் தஞ்சம் புகுந்தேன்" என்ற மன நிலையில் கண்ணியத்துடன் தழுவி நடந்தவுடன், திரும்பவும் "பழைய பறவை போல ஒன்று" என்று அதே சரணம் இரண்டாவது முறை வரும் போது, உள்ளே இருந்து சௌகார் வேகமாக வந்தவுடன், அந்த வேகத்துக்கு ஈடு கொடுத்து, ஸ்டைலாக பின்னோக்கி செல்லும்போது, மீண்டும் அரங்கம் அதிரும்! மறுபடியும் சரோஜா தேவி வந்தவுடன், "என்னைக் கொஞ்சம் தூங்க வைத்தால் வணங்குவேன் தாயே என்று வேதனையுடன் (அளவான) கூறி அப்படியே கீழே உட்கார்ந்து, அவரது மடியில் படுத்து, "இன்று மட்டும் அமைதி தந்தால் உறங்குவேன் தாயே" என்று கூறி, "எங்கே நிம்மதி? எங்கே நிம்மதி?" என்று படுத்துக் கொண்டு சரோஜா தேவியைப் பார்க்கும் போது, அப்போது தான் முதன் முறையாக அவரது முகத்தில், ஒரு வித relief தெரியும்! சௌகாரின் இம்சை போய், காதலி சரோஜா தேவியைப் பார்த்த திருப்தியில்!

    மீண்டும் அனு பல்லவி துவங்கி, பலர் சௌகாருடன் சேர்ந்து அவரை இம்சித்து, அப்படியே, நடிகர் திலகம் சௌகாரின் பிடியில் freeze ஆகி நிற்பது போல் முடியும்.

    நடிகர் திலகம் வேறொரு உலகத்திற்குச் சென்று, பார்க்கும் எல்லோரையும் அந்த உலகிற்கு அழைத்துச் சென்றிருப்பார்! பாடல் முடிந்து, நனவுலகதிற்குச் சென்று மீண்டும், அவரது முகம் க்ளோசப்பில் காட்டப்படும் போது, அவர் முகத்தில் தெரியும் ஆயாசம் கலந்த அதிர்ச்சி நம்மையும் தொற்றியிருக்கும்!!

    அந்தப் பாடல் முடியும் போது இருக்கும் shot - சௌகாரின் பிடியில் freeze -ஆகி நிற்கும் காட்சி - ஆங்கில நாடகங்களில் பாலே போன்ற நடன நாடகங்களின் inspiration தெரியும்! இந்தப் படத்தின் ஒவ்வொரு காட்சியும், பாடலும் (இந்தப் பாடலையும் சேர்த்து!), அரங்க அமைப்பும், நடை/உடை/பாவனைகளும், களமும், கலைஞர்களின் உழைப்பும் (நடிகர் திலகம் துவங்கி), ஆங்கிலப் படங்களுக்கு நிகராக இருக்கும்.

    கிட்டத்தட்ட ஐம்பது வருடங்களுக்கு முன்னரே, "ahead of times" என்று கூறிய, இன்றும், படத்தைப் பார்ப்பவர்கள் (இன்றைய தலைமுறையினர் உட்பட) வாய் பிளந்து அதிசயிக்கும் இந்தப் படத்தை, almost ghost direct செய்தது நடிகர் திலகமே தான் என்று கூறுவார்கள். பின் எப்படி, அவருக்கு சினிமா என்ற ஊடகத்தில், பிற துறைகள் அந்த அளவிற்குத் தெரியாது என்று சொல்லப் போயிற்று?!!!!

    தொடரும்,

    அன்புடன்,

    இரா. பார்த்தசாரதி

    பார்த்தசாரதி சார்,

    இன்று தான் உங்களுடைய "எங்கே நிம்மதி" பாடல் பற்றிய திறனாய்வு படித்தேன் அற்புதம் வர்ணிக்க வார்த்தைகள் இல்லை . படித்தவுடன் என் மனதில் தோன்றிய உணர்வு என்னவென்றால் "தேவாரம் திருவாசகம் மற்றும் நாலாயிர திவ்ய பிரபந்தம்" போன்றவை சம்பந்தர்,நாவுக்கரசர்,சுந்தரர்,மாணிக்கவாசகர்,பன்னி ரு ஆழ்வார் போன்றவர்களால் பாடப்பட்டு பின்னாளில் சேக்கிழார் அவர்களால் பெரிய புராணம் என்றும் நாத முனி அவர்களால் நாலாயிர திவ்ய பிரபந்தம் என்றும் தொகுக்கப்பட்டு பொருள் விளக்கத்துடன் வந்தது போல் நம்மவரின் பாடல் காட்சிகளின் தொகுப்பு ஒன்று (திரு பம்மலார் அவர்கள் முயற்சியினால் ) வெளி வருமா என்று ஒரு ஏக்கம் தோன்றி விட்டது .

    தமிழின் சிறப்பு நடிகர் திலகம் என்றால் வார்த்தைகளின் சிறப்பு சாரதி சார் அவர்கள் என்றால் மிகை ஆகாது
    gkrishna

  6. #1645
    Devoted Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    33
    Post Thanks / Like
    ஊர் கூடி தேர் இழுப்போம்..
    ஒவ்வொருவரும் தேவை..

    வேண்டாம் பிரிவு நடிகர்திலகத்தின் இதயங்களே..
    வேற்றுமையை வளர்ப்பதனாலே விளையும் தீமையே!



    Last edited by kaveri kannan; 6th February 2013 at 01:09 PM.
    நடிகர்திலகத்தின் நிரந்தர ரசிகன்

  7. #1646
    Junior Member Devoted Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    என்ன நடக்கிறது இங்கே?
    இந்த தளத்தின் பதிவுகளால் கவரப்பட்டு,நானும் ஏதாவது எழுதலாமே எனும் ஆசையில் கடந்த ஏப்ரல மாதம் என் பெயர் மற்றும் விவரங்களைப்பதிவு செய்தேன்.ஏதோ அழைப்பு வரும் என நினைத்தால் மாதங்கள் ஆறு ஆகியும் ஒன்றையும் காணோம்.இத்தனைக்கும் இங்கு moderator என கருதப்படும் நபர்களுக்கு பிரத்யேக messages வேறு அனுப்பியும் ஒரு பலனும் இல்லை.சரி இது இந்திய அரசால் நடத்தப்படுகிறது போலும் என மனதை திடப்படுத்திக்கொள்ள,திடீரென நண்பர் கோபால்,பிரபு,முரளி,பார்த்தசாரதி அபயமளித்து என்னை ஒரு அங்கத்தினர் ஆக்கினர்.

    உள்ளே வரும்போதே சில துவந்த யுத்தங்கள் நடைபெற்றுகொண்டிருந்தன.பெயர்கள் இங்கு தேவையில்லை.
    Being a system dependent person,I found these things funny and indigestible.சரி நாம் நம் வேலையை செய்யலாம்
    என ஆரம்பித்தேன்.எனக்கு மகாஸ்ரீஸ்ரீ உ.வே.சா. போல பரண் மீது ஏறி ஓலைச்சுவடிகளை தட்டியெடுத்து அதை பிரசுரிக்கும் மனப்பாங்கு இல்லை.நடிகர் திலகம் அவர்களின் சில சிறப்புகளை வேறொரு பரிமாணத்தில் காண்பிக்க ஆவலும் ஆர்வமும் கொண்டு, அதே மனப்பாங்குடன் எழுதி வந்த சில அங்கத்தினர்களுடன் அளவளாவி நட்பு பாராட்டி வந்தேன்.அதில் முக்கியமானவர் வனஜா.ஒரு சிறந்த நட்புணர்வோடும்,நகைச்சுவை உணர்வோடும் அவர் எல்லாரிடமும் பழகிய விதம என்னை கவர்ந்தது.

    அப்பொழுது கோபால் அவர்களின் அந்த பதிவு வெளியாகியது.அதை திடீரென வாசு கடுமையாக எதிர்த்தபோது ,வனஜா இயல்பாக "அதில் ஒரு குற்றமும் இல்லையே?நம் நடிகர் திலகம் நடித்து வெளிவந்து நாம் எல்லாரும் பார்த்த ஒரு படக்காட்சியைத்தான் கோபால் விவரித்துள்ளார்?" என வினவியபோது,வாசுவின் பதில் மிக அநாகரீகமாக அமைந்து, வனஜாவை இந்த தளத்தை விட்டு வெளியேற வைத்தது.அது மிக சரியான முடிவு.

    அதை தொடர்ந்து கோபாலும் தார்மீக பொறுப்பேற்று வெளியேறியுள்ளார்.அதுவும் சரியான முடிவே!

    ஆனால் வாசுவும் வெளியேறப்போவதாக சொல்லியிருப்பது வியப்பாக இருக்கிறது.அவர் தான் எழுதிய பதிவிற்கு வனஜாவிடம் வருந்தியிருந்தாலே போதுமே! யாரும் வெளியேற வேண்டாமே!

    சரி ஒரு பதிவு எதாவது ஒரு காரணத்திற்காக ஒரு அங்கத்தினருக்கு பிடிக்கவில்லை என வைத்து கொள்வோம்.
    அப்பொழுது அவர் செய்ய வேண்டியதுதான் என்ன? சற்று யோசிப்போம்.

    தொடர்கிறேன்..

  8. #1647
    Junior Member Devoted Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    என்ன நடக்கிறது இங்கே?

    தொடர்கிறேன்..

    அவர் மறுபதிவு ஒன்றை இட்டு தன் எதிர்ப்பை தெரிவிக்கலாம்.
    அதை moderators க்கும் அனுப்பி அந்த ஆட்சேபகரமான பதிவை நீக்கும்படி வலியுறுத்தலாம்.
    இதற்கான வழிமுறைகள் இங்கு தற்போது உள்ளனவா எனத்தெரியவில்லை.
    அதை உடனடியாக அமல படுத்த வேண்டும்.

    ஆனால் வாசு செய்தது moral policing வேலை..நம் பஜ்ரங் தால் செய்வதுபோல தானே கோதாவில் இறங்கி சரி செய்யப்பார்த்தது.அது மிகத்தவறான அணுகுமுறை.நாளை நானே "கப்பலோட்டிய தமிழன் படத்தில் சில காட்சிகளில் சுப்பையா நடிப்பு தலைவர் நடிப்பையும் விஞ்சியது" என்று எழுதினால்.."ஏண்டா கண்பத்துன்னுபேர வச்சுகினுகிரே.அத்தனையுமா குருடு?"என ஒரு அன்பர் பதில் எழுதினால்?

    முடிவாக moderators களுக்கு ஒரு வேண்டுகோள்..

    போஸ்ட் எண் 1907 ஐப்படியுங்கள்.

    நீங்கள் வாசு செய்தது சரி என நினைத்தால் அவரை மீண்டும் பதிவிட அழையுங்கள்.வனஜாவும் கோபாலும் வருவதும் வராததும் அவர்கள் இஷ்டம்.

    அதற்கு மாறாக நீங்கள் வாசு செய்தது தவறு என நினைத்தால்அதை இங்கு பதிவு செய்து, வனஜா & கோபாலை மீண்டும் வர அழைக்கவும்.அப்படி வாசுவும் திரும்ப வர வேண்டுமென்றால் அவர் மேற்கண்ட தன் பதிவுக்கு வனஜா விடம் வருத்தம் தெரிவித்த பிறகே அனுமதிக்க வேண்டும்.

    உங்கள் முடிவிற்கு (வெளியிலிருந்து) காத்திருப்பேன்.

    நன்றி.

  9. #1648
    Junior Member Devoted Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by adiram View Post
    Ganpat,

    When reading your post, when you support the 'pogiren' decision by Vanaja & Gopal, I suspect you also will end your post with 'pogiren', but you ended with 'thodargiren'.

    that is a good one.

    .
    Adiram,

    My thodarkiren is for the post and not for posts.
    Kindly go thro' the second part which is self explanatory.

    Thanks,

  10. #1649
    Devoted Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    33
    Post Thanks / Like
    அனைவருக்கும்

    நேருக்கு நேர் பேசுவதிலே 40 சதமே சொல்வழி கேட்பவர் மனம் சேரும்..
    மீதி எல்லாம் உடல்மொழி, குரல் பாவம்.
    இவைதான் பிரதான தொடர்பு சாதனங்கள்.

    தொலைபேசியில் பேசினால் 30 சதத்துக்கும் குறைவாய்த்தான் சேரும்.
    அதனால்தான் தொலைபேசியில் பேசும்போதும்
    மகிழ்ச்சி என்றால் முகம் மலர்ந்தபடி பேசினால் கேட்பவர்க்கு அந்த உணர்வு கொஞ்சம் சேரும்..


    சரி, எழுத்தால் எத்தனை சதம் சேர்ப்பிக்க முடியும்?
    அதுவும் ஒரு நிமிட எதிர்வினைப் பதிவில்..
    ஒரு வரி சொல்லாடல் பதிவில்..

    புரிந்துகொள்ளப்படாமைக்கும்
    தவறாக புரிந்துகொள்ளப்படுதலுக்குமான
    Recipe -- அவசர எழுத்தில் இயற்கையாகவே இருக்கிறது.


    நேற்று நடந்தவை எழுத்துச் சிதறல்கள்..
    நம் அனைவரின் மனமும் சிவாஜி பாசம் என்ற பந்தத்தால் பிணைக்கப்பட்டன அல்லவா?

    சம்பந்தப்பட்ட அனைவருமே ஒருவரை ஒருவர் அனுசரித்து, புரிய முயன்று மீண்டும் வாருங்கள் என அழைக்கிறேன்..

    தீர்ப்புகள் அல்ல.. தீர்வுகள் போதும் நட்புக்குள்.. குடும்பத்துள்..
    நடிகர்திலகத்தின் நிரந்தர ரசிகன்

  11. #1650
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    டியர் கண்பத்,
    நான் இந்த விவாதங்களில் ஈடுபட வேண்டாம் என்று தான் இருக்கிறேன். வாசு மேல் உள்ள கருத்து வேற்றுமையில் என் பெயரையும் இழுத்து திரியை நாங்கள் எங்கள் பாணியில் கொண்டு செல்ல விழைவதாக நண்பர் எழுதியிருக்கிறார். நான் மேலும் மேலும் வளர்க்க வேண்டாம் என அமைதியாய் இருக்கிறேன். தங்களுடைய விவாதங்களில் என் பெயர் ஏன் அடிபடுகிறது. தெரியவில்லை.
    தாங்கள் ஏப்ரல் 2012ல் தான் வந்துள்ளீர்கள். இன்னும் 100 பதிவுகள் வரவில்லை. தங்களுக்கு ஒரு ஆண்டுக்கு முன் வந்தவர் வாசுதேவன். இரவு பகலாக உழைத்து இன்று 3000 பதிவுகளை எட்டும் நிலையில் இருக்கிறார். பல்வேறு சொந்த அலுவல்களுக்கிடையில் நாங்கள் - தங்கள் பாஷையில் சொல்வதானால் - பரண் மேல் ஏறு தூசு தட்டி ஆவணங்களை இங்கு பதிவிடுகிறோம். இவற்றின் அருமை தங்களுக்குத் தெரியாவிட்டாலும் பரவாயில்லை. அதனை கேலி செய்யும் வகையில் பதிவினை எழுதியது அதிர்ச்சியளிக்கிறது. ஆய்வெழுத எவ்வளவு சிரமம், எவ்வளவு நேரம், எவ்வளவு உழைப்பு தேவைப் படுகிறதோ அதைப் போல் பல மடங்கு, ஆவணங்களைத் தருவதற்கு தேவைப் படுகிறது. இன்றைக்கு ஒரு பழைய பேப்பர், சுமார் 40 அல்லது 50 ஆண்டுகளுக்கு முன்பான நாளிதழைத் தேடி எடுத்து பிரதி எடுக்க தேவைப் படும் சிரமங்களை யும் பொருட்செலவையும் சற்றே விசாரித்துப் பாருங்கள், தங்களுக்கு அதனுடைய மதிப்புத் தெரியும். அந்த அடிப்படையில் பார்த்தால் நமது பம்மலார் இதுவரை நமக்கு அளித்துள்ள ஆவணங்கள் - விலை மதிப்பற்றவை என்பது ஒரு பக்கம் - குறைந்த பட்சம் 70 ஆயிரம் ரூபாய்களிலிருந்து ரூ. 1.0 லட்சம் வரைக்கும் மதிப்புப் பெறும். பம்மலார், வாசுதேவன் போன்ற நமது சிவாஜி ரசிக நண்பர்களெல்லாம் பிரதிபலன் எதிர்பார்த்தா செய்கிறார்கள்.
    வாசு சொன்னது என்ன நாகரீகமாக எழுதுங்கள் என்றார். அவர் மேற்கோள் காட்டியது நடிகர் திலகத்தின் இளைய தலைமுறை படப் பாடல் என்பதும் தங்களுக்குத் தெரியாததல்ல ..அவர் எழுதியது போல் இது அறிவுஜீவிகளுக்கு மட்டுமான திரியில்லை, சாதாரணமானவர்களும் படிக்கிறார்கள். நிறைய மகளிரும் படிக்கிறார்கள். சிவகாமியின் செல்வன் பாடலைப் பற்றி முதல் பதிவில் இருந்த நாகரீகம் இரண்டாம் பதிவில் இல்லாததாக உணர்ந்து வாசு தன் மன வருத்தத்தை எழுதியிருக்கிறார். தாங்கள் இரு சாராரையும் உரிமையோடு கண்டித்திருந்தால் அதில் நிச்சயம் அனைவரும் பாராட்டி யிருப்பர். ஆனால் யாராவது ஒருவர் போக வேண்டும் எனத் தாங்கள் எழுதியிருப்பது வியப்பை அளிக்கிறது. மற்ற அனைவரும் மன வருத்தங்களை மறந்து மீண்டும் அனைவரும் ஒன்று சேர்ந்து நடிகர் திலகத்திற்காக பதிவுகளை இட வேண்டும் என பொதுவாக கேட்டுக் கொள்வார்கள். ஆனால் தாங்களோ யாராவது ஒருவர் போக வேண்டும் என்று பொருள் தரும் வகையில் எழுதியுள்ளீர்கள். அல்லது அப்படி எனக்குத் தோன்றுவது தவறா தெரியவில்லை.
    தேவையற்ற விவாதங்களில் ஈடுபடாமல் நடிகர் திலகத்தின் நடிப்பின் சிறப்பையும் அவருடைய சமுதாயப் பணிகளையும் பற்றி விவாதிக்கலாமே என வாசுதேவன் ஆலோசனை கூறியதில் என்ன தவறு உள்ளது என எனக்கு தெரியவில்லை.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •