பணிப்பெண் அன்பும் சேவையும்.
Quote:
Originally Posted by
bis_mala
P..................d.
a truly affectionate maid....
என்கால் தன்மடி மீதுவைத்தாள்
இனிதாய்த் தடவி வேதுவைத்தாள்
தன்கால் மொத்தடி பட்டதுபோல்
தான்மனக் கவலை உற்றுவிட்டாள்.
சின்னக் கண்ணனும் எனைத்தேற்ற
சேர்ந்தே பெண்ணவள் எனைப்போற்ற.
அன்னை மூவராய் ஆனதினால்
அதைத்த நோவதும் போனதன்றோ!
அன்பினர் யாரும் எட்டநின்றால்
ஆன வலியெலாம் கிட்டவந்து
பண்பில் எருமைபோல் முட்டநிற்கும்
அன்பினர் குறுகிடில் விட்டகலும்
இரவில் வலியும் ஏறிடுமோ
என்பால் தோழியும் கூறிடுவாள்
வருவது வரட்டும் என்செய்வது
வைத்தியம் என்பது பின்செய்வது
வேது = இளஞ்சூடு கொடுத்தல்.
மொத்தடி - மொத்து அடி.
அதைத்த= வீக்கம் ஏற்பட்ட.
நோவு = வலி. நோவு அதும் = நோவு அதுவும்
கிட்ட - பக்கத்தில். அருகில்.
பண்பில் - பண்பு இல் - பண்பு இல்லாத
அன்பினர் - அன்பு உடையோர்.
பிழைப்புக்கு வேட்டுவைத்தால்,,,,,,,
காட்டை அழித்துவிட்டார் -- அந்தக்
காட்டுக் குரங்குகள் வீட்டின் மருங்கிலே
கூட்டமாய் வந்தனவே -- அவை
கூரைக்குக் கூரை இருந்துகொண்டே வீட்டின்
ஓட்டை அகற்றினவே -- கீழே
ஒதுங்கக் கிடந்தது குப்பைப் பெருந்தொட்டி
ஆட்டிக் கவிழ்த்தனவே -- அதை
அள்ளி இடுதற்கே உள்ளாரோ யாருமே!
இருப்பிடம் போனதென்று ---அதில்
ஏற்பட்ட கோபத்தின் பாற்பட்டிவ் வண்ணமாய்
தெருக்களில் கூரைகளில் -- ஏறித்
திரண்டதோர் சேட்டைகள் செய்தனவோ இவை!
பொறுப்புடன் செய்தக்கதோ --பிடித்துப்
போக்கிட வேண்டுமே காட்சிசேர் காப்பகம்!
பிழைப்புக்கு வேட்டுவைத்தால் --வந்த
பீதியில் போரிடல் யார்க்கும் இயல்பன்றோ!
funny multiple marriage case....
Quote:
Originally Posted by
chinnakkannan
நேற்று ஈத் பெரு நாள் இங்கு.
இன்னும் நாளை வரை விடுமுறை..பின் மறுபடி வழக்கம் போல..ஆனால் இந்தத் தடவை உபவாசம் காலை 4 மணிமுத்ல் மாலை 7 மணிவரை நீடிக்க மக்களுக்குக் கொஞ்சம் சிரமம் தான்..
If one is from a vegetarian background, he or she may not be able to partake in such festivals, unless invited with specially catered food thrown in!
Now, on a recent funny criminal case in TN.
ஒருவனிடம் உண்மை விளம்பி -- அவன்
ஒருபோதும் ஏலா உலகமீதில்
பலரிடமும் பொய்யைத் துணிந்து--- அவள்
பகர்ந்தாளோ எவ்வாறு அறிகிலேனே!
மடுத்தசெவி எல்லாம் விழுந்து --அணல்#
மறுத்தோத மாட்டா மெழுகுமாகி
விடுத்தகணைக் கெல்லாம் இலக்காய்---மண
விலங்கேற்றார், எவ்வாறு ? அறிகிலேனே.
மணவினைக்குள் மாட்டினாள் மற்றும்-- வழி
மறுத்திட்ட ஆண்கள் அனைவருக்கும்
நினைவுவரு முன்பாய் அகன்று -- பிற
நிலைகொண்ட தெவ்வாறு? அறிகிலேனே!
Notes
#அணல் -தொண்டை, வாய்
ஏலா - ஏற்காத. உண்மை சொல்கையிலேயே ஆடவர் பலர் ஏற்காமல் வாதம் புரிகிறார்கள். அவள் பெரும்பொய் சொன்னபோது எப்படி நம்பினார்கள் என்பது கருத்து.
மணவிலங்கு - மணவாழ்வு என்னும் கைவிலங்கு (. கைக்கட்டு )
வழி = மணவாழ்க்கை நிலையிலிருந்து அவள் தப்பிச் செல்லும் வழி.
பிற நிலை - மணவாழ்வில் இல்லாத தனியாள் நிலை.