welcome back rks sir
http://i1170.photobucket.com/albums/...pswhdj7ria.jpg
Printable View
welcome back rks sir
http://i1170.photobucket.com/albums/...pswhdj7ria.jpg
Puratchi Thalaivar First Public Appearance after Bullet injury in GH with wife Janaki and his Family Doctor
http://i1170.photobucket.com/albums/...pslvrjdrpq.jpg
ஒரு நல்ல ஆட்சிக்கு அஸ்திவாரம் என்என்னா மக்கள் நம்ப பேர்லே வச்சிருக்கிற மதிப்பும் நாம் அவங்க பேர்லே வச்சிருக்கிற நம்பிக்கையும்தான்.
-புரட்சிதலைவர்
இனிய நண்பர் திரு குமார் சார்
இது வரை பார்த்திராத அபூர்வ விளம்பரங்களை அள்ளி வழங்கும் உங்களுக்கு அன்பு பாராட்டுக்கள் . திருச்சி நகரில் 1960 களில் வெளிவந்து ஓடிகொண்டிருந்த தமிழ் படங்களின் விளம்பர பதிவுகள் மூலம்திருச்சி மற்றும் திருச்சி -தஞ்சை மாவட்டத்தில் இருந்த திரை அரங்குகள் மற்றும் அன்றைய கால கட்டத்தில் வெளியான படங்கள் பற்றிய தொகுப்பு தகவல்களை அறிய முடிகிறது . குறிப்பாக மக்கள் திலகத்தின் காவல்காரன் , விக்கிரமாதித்தன் ,பறக்கும் பாவை . விவசாயி ,பட விளம்பரங்கள் அருமை.
எல்லோரும் நமக்கு வேண்டியவர்கள்தான். ஆனால், எங்கே யாரை வைக்க வேண்டும் என்று பார்க்க வேண்டும். குடும்பத்தில் கலகம் விளைவிப்பவர்களோடு தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது.
- புரட்சித்தலைவர்
மூன்று முறை தொடற்ந்து முதல்வர்
ஆன.தானை தலைவர் எம் ஜி ஆர்
பொற்க்காலஆட்சியின் சிலதுளி
கட்சி ஆட்சியில் மூன்றில் ஒரு பங்கு
இடஒதுக்கீடு வழங்கியவர் எம் ஜி ஆர்
ஆசிரியர்களுக்கும் அரசு ஊழியர்களுக்கும் மத்தியஂஅரசுக்கு இணையாகஂஅகவிலைபடி உயர்வு
போனஸ் எல்டிசி போன்ற எண்ணற்றஂசலுகை வழங்கியவர் எம் ஜி ஆர்
மெட்ரோ ரெயிலுக்கு முன்னோடியாகஂபறக்கும் ரயில் திட்டம்.எம்ஜிஆர் கொண்டு வரப்பட்டஂ
பயிர் இன்சூரன்ஸ் திட்டம் உழவர்
அடையாளஂஅட்டை
முதியோர் ஓய்வூதியம்
குடிசைகளுக்கு மின்வசதி
கிராமம் மாறி நகரம் மாக்கியஂதன்னிறைவு திட்டம்
இது எம் ஜி ஆர் பொற்க்காலஆட்சி எனும் கடலின் சிறு துளிகள்தான்
இனியும் வரும்
courtesy net
this news is true?
13-9-1969இல் அருமை நண்பர் எம்.ஜி.ஆர். ஓர் அறிக்கை வெளியிட்டார். அந்த அறிக்கையின் இறுதியில், "மதுவிலக்குக் கொள்கையில் தமிழகத்தில்
மட்டுமல்ல; இந்தியத் துணைக் கண்டத்திலுள்ள எந்தத் தனி மனிதனுக்கோ, எந்தக் கட்சிக்கோ உள்ள
அக்கறையை விட, அந்தக் கொள்கை மக்களுக்குத் தேவையானது என்பதில், தி.மு. கழகத் தலைவரும்,
தமிழக முதல்வருமான கலைஞருக்கு அதிக அக்கறையும், அதிகப் பிடிப்பும் உண்டு என்பதை மற்றையோரைவிட அழுத்தமாக என்னால் துணிந்து கூற முடியும்"
1971ஆம் ஆண்டு நிதி நிலை அறிக்கை மூலமாக மதுவிலக்கை ஒத்தி வைத்த போது கூட, நிதி நிலை அறிக்கையிலே நான் என்ன உரைத்தேன் என்பதை 6ஆம் தேதிய எனது மடலில் குறிப்பிட்டிருக்கிறேன். அதே நிதி நிலை அறிக்கையில், "தமிழகத்தில் மட்டும் மதுவிலக்குச் சட்டத்தை தீவிரப்படுத்து வதால் மதுவிலக்கின் வாயிலாக நாம் காப்பாற்ற விரும்பும் ஒழுக்கம், நாணயம், நேர்மை இவைகளையே பாதுகாக்க வாய்ப்பு இல்லாமல் போகிறது.
எனவே உயர் தனிக் கொள்கையான மதுவிலக்கில் இந்த அரசு தொடர்ந்து நம்பிக்கை வைத்திருக்கிறது
எனினும், இந்திய நாடு முழுவதுக்குமாக இந்தக் கொள்கையை அமல்படுத்த மத்திய அரசு பொறுப்பேற்றுக்கொள்ளும் வரையில் தமிழகத்தில் மதுவிலக்குச் சட்டம் செயல்படுவதை ஆகஸ்ட் 30ஆம் நாளில் இருந்து ஒத்தி வைக்க இந்த அரசு முடிவு செய்கிறது என்பதை வருத்தத்துடன் தெரி வித்துக் கொள்கிறேன்" என்று தான் குறிப்பிட்டேன். மேலும் நண்பர் எம்.ஜி.ஆர். தலைமையில் மதுவிலக்குப் பிரச்சாரக் குழு ஒன்றும் அமைக்கப் பட்டது என்பதையும் மறந்து விடக் கூடாது. இன்னும் சொல்லப்போனால், மதுவிலக்கு குறித்து 13-9-1969இல் அருமை நண்பர் எம்.ஜி.ஆர். ஓர் அறிக்கை வெளியிட்டார். அந்த அறிக்கையின் இறுதியில், "மதுவிலக்குக் கொள்கையில் தமிழகத்தில் மட்டுமல்ல; இந்தியத் துணைக் கண்டத்திலுள்ள எந்தத் தனி மனிதனுக்கோ, எந்தக் கட்சிக்கோ உள்ள அக்கறையை விட, அந்தக் கொள்கை மக்களுக்குத் தேவையானது என்பதில், தி.மு. கழகத் தலைவரும்,தமிழக முதல்வருமான கலைஞருக்கு அதிக அக்கறையும், அதிகப் பிடிப்பும் உண்டு என்பதை மற்றையோரை விட அழுத்தமாக என்னால் துணிந்து கூற முடியும்" என்று தெரிவித்ததையும், அதற்குப் பின் அவரே "ஆனந்த விகடன்" பத்திரிகையிலே "நான் ஏன் பிறந்தேன்"என்ற தலைப்பிலே எழுதிய நீண்ட தொடர்
கட்டுரையிலே விரிவாக எழுதியதையும் அ.தி.மு.க.விலே தற்போதுள்ளவர்கள் வேண்டு மானால்
மறந்திருக்கலாம்; ஆனால் நான் மறக்க வில்லை. இந்த அளவுக்கு மதுவிலக்குக் கொள்கையிலே
உறுதியாக இருந்த அருமை நண்பர் எம்.ஜி.ஆர்., பின்னர் முதலமைச்சராக இருந்த போதுதான், மதுவிலக்கு
சம்பந்தமான சட்டங்கள், திட்டங்கள் இவைகள் எல்லாம் மாற்றப்பட்டன. 1-5-1981இல் சாராயம் மற்றும்
கள்ளுக்கடைகள் கூட திறக்கப் பட்டன. ஆனால் குடிப்பவர்கள்"பெர்மிட்" ஒன்று பெற வேண்டுமென்று
விதிமுறைகளில் கூறப்பட்டது. 1981 வரை தமிழ்நாட்டில் இந்தியாவில் தயாரிக்கப்படும் வெளி நாட்டு
மதுபானங்கள் உற்பத்தி செய்கின்ற தொழிற்சாலைகள் இல்லை. 1981க்குப் பின்பு தான் இந்த
மதுபானங்களைத் தயாரிக்கின்ற உரிமையை நான்கு தனி நபர்களுக்கும், கூட்டுறவுத் துறை
நிறுவனத்திற்கும் அளிக்கப்பட்டது. கள்ளுக் கடைகள் ஏல முறையில் அனுமதிக்கப்பட்டன. சாராய உற்பத்தி
10 தனிப்பட்ட நபர்களுக்குக் கொடுக்கப் பட்டது. சாராயத்தை விநியோகம் செய்கின்ற மொத்த வியாபாரம்
15 தனிப்பட்ட நபர்களுக்குக் கொடுக்கப் பட்டது. இவை எல்லாம் கடந்த காலத்தில் நடந்த சம்பவங்களாகும்.
courtesy in karunathi facebook
சகோதரர் திரு.யுகேஷ் பாபு அவர்களுக்கு,
கலைஞர் கருணாநிதி அவர்கள் கூறியிருப்பது உண்மைதான். இதில் மறைக்க எதுவும் இல்லை. இதுபற்றி தனது சுயசரிதையான ‘நான் ஏன் பிறந்தேன்?’ தொடரில் தலைவரே கூறியிருக்கிறார்.மேலும், அப்போது சென்னை அயனாவரத்தில் கள்ளச்சாராயம் குடித்து ஒரே நாளில் 60க்கும் மேற்பட்டோர் இறந்தனர். இதுபற்றி கடந்த வாரம் கூட தினமலர் நாளிதழில் ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி மணி என்பவர் தெரிவித்திருந்தார்.
மதுவிலக்கை அமல்படுத்தும் மாநிலங்களுக்கு நிதியுதவி வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தபோதும் தமிழகத்துக்கு கைவிரித்து விட்டது. புதிதாக அமல்படுத்தும் மாநிலங்களுக்கு மட்டுமே நிதி வழங்கப்படும் என்று அறிவித்தது. கள்ளச்சாராய சாவு ஒருபுறம். நிதி நெருக்கடி வேறு. எனவே, வேறு வழியில்லாத நிலையில் மதுவிலக்கு ஒத்திவைக்கப்பட்டது.
தலைவர் முதல்வராக இருந்தபோதும் இதே நிலை. எனவேதான், அப்போதும் மதுவிலக்கு ரத்து செய்யப்பட்டது. ‘எம்ஜிஆர் எவ்வளவோ பாடுபட்டபோதும் அவராலும் மதுவை ஒழிக்க முடியவில்லை.’’ என்று நேற்று (6-ம் தேதி) வெளியிட்ட அறிக்கையில் கலைஞர் கருணாநிதி அவர்கள் கூறியிருப்பதும் குறிப்பிடத்தக்கது. (அறிக்கையின் இணைப்பு கீழே கொடுத்துள்ளேன்) தலைவர் உடலால் மறைந்த பிறகு 1989ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த கலைஞர் கருணாநிதி அவர்கள் மலிவு விலையில் பாக்கெட் சாராயத்தை அறிமுகப்படுத்தினார்.
தமிழகத்தில் மதுவிலக்கு ரத்து செய்யப்படுவதற்கு முன்பே காங்கிரஸ் ஆண்ட பல மாநிலங்களிலும் மதுவிலக்கு இல்லை. (இதையும் கலைஞர் கருணாநிதி அவர்கள் 1971-ல் சட்டப் பேரவையில் பேசிய பேச்சில் குறிப்பிட்டுள்ளார். இணைப்பு கடைசியில் கொடுத்துள்ளேன்).
1948-ம் ஆண்டு வரை தமிழகத்தில் முழு மதுவிலக்கு அமலில் இல்லை. சொல்லப்போனால், மிகவும் பழமையான நாகரிகமாக குறிப்பிடப்படும் வேதகாலத்தில் இருந்தே மது வேறு பெயர்களில் அதாவது சோம பானம், சுரா பானம் என்ற பெயர்களில் குடிக்கப்பட்டது. அவை பற்றிய தகவலுக்கான இணைப்புகளை கொடுத்துள்ளேன்.
சோம பானம்
https://ta.wikipedia.org/wiki/%E0%AE...AE%AE%E0%AF%8D
சுரா பானம்
https://ta.wikipedia.org/wiki/%E0%AE...AE%AE%E0%AF%8D
இந்த 2 பானங்களையும் யார், யார் குடிப்பார்கள் என்றும் வேதங்களில் கூறப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் யாரும் யாரையும் குறை கூற முடியாது. இப்போது, மதுவிலக்கு வேண்டும் என்று குரல் கொடுக்கும் கட்சிகள் கூட, தேர்தல் நேரத்தில் தங்களுக்கு எத்தனை ‘சீட்’ என்றுதான் திமுக, அதிமுக கட்சிகளோடு பேரம் பேசினார்களே தவிர, ‘மதுவிலக்கு கொண்டு வருவேன் என்று வாக்குறுதி அளித்தால்தான் உங்களோடு கூட்டணி சேருவோம்’ என்று நிபந்தனை விதிக்கவில்லை.
தமிழகத்தில் மட்டுமல்ல, எல்லாரின் ஒத்துழைப்போடு, தேசிய அளவில் மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டால் மகிழ்ச்சிதான்.
எல்லாவற்றையும் விட முக்கியமாக, ‘திருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது..’ என்று திருடாதே படத்தில் தலைவர் பாடியதைப் போல, குடிப்பவர்கள் திருந்த வேண்டும். அப்போதுதான் மது ஒழியும். அதற்கு அரசுகளும் உதவ வேண்டும்.
நான் மேலே குறிப்பிட்டபடி, ‘நெஞ்சில் ஓர் வஞ்சமிலா நீட்டோலை’ என்ற பெயரில் திமுகவின் அதிகாரபூர்வ நாளேடான ‘முரசொலி’யில் நேற்று வெளியான கலைஞர் கருணாநிதி அவர்களின் கடிதத்துக்கான இணைப்பு :
http://www.murasoli.in/Kaditham.aspx
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
thank u kalai sir for immediate response for my doubt post
கருணாநிதியின் ஆழத்தை எம் ஜி ஆர் அறிந்து வைத்திருந்தார்,ஆனால் எம் ஜி ஆரின் ஆழத்தை கருணாநிதியால் அறியமுடியாமல் போய்விட்டது அதுதான் எம் ஜி ஆரின் வெற்றியின் ரகசியம்,திரைவசனகர்த்தா ஆரூர்தாஸ் அவர்களின் தொகுப்பிலிருந்து.
தமிழ் சினிமா கண்ட முதல் சூப்பர் ஸ்டாரும் இவரே இம்மண்ணை விட்டு மறைந்து முப்பது வருடங்களாக போகிறது இன்றும் பல நல்ல உள்ளங்களில் நிரந்தரமாக குடிகொண்டுள்ள சூப்பர் ஸ்டாரும் இவரே...
இதய தெய்வம் புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர்
சென்னை ஓட்டேரி சரவணாவில் 07/08/15 முதல் குடும்பத்தலைவன் தினசரி 3 காட்சிகள் திரையிடப்படுகிறது
http://i60.tinypic.com/et5d05.jpg
http://i62.tinypic.com/2chlvuu.jpg
இனிய நண்பர் திரு ரவிகிரண் சார்
மக்கள் திலகம் எம்ஜிஆர் திரிக்கு வருகை புரிந்தமைக்கு நன்றி .
இந்த நாளில் 8.8.2015 அந்த நாள் 8..8.1972 நினைவலைகள் . சற்று 43 ஆண்டுகள் பின்னோக்கி ....
சினிமா நிலவரங்கள் .சிறு கண்ணோட்டம்
.
மக்கள் திலகம் எம்ஜிஆர் மன்றங்கள் , நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மன்றங்கள் இரு துருவங்களாக வும் , அரசியலில் முறையே திமுக , ஸ்தாபன காங்கிரஸ் இயக்கத்தில் தீவிர பங்களிப்பிலும் செயலாற்றி கொண்டு வந்தார்கள் .
மக்கள் திலகத்தின் திரைப்பட செய்திகள் தினத்தந்தி , முரசொலி , தென்னகம் நவமணி , மாலைமுரசு , அலைஓசை, தினமணி பத்திரிகைகளிலும் , நடிகர் திலகத்தின் திரைப்பட செய்திகள் நவசக்தி , சுதேசமித்திரன் , நவமணி , தினமணி தினத்தந்தி , மாலைமுரசு , அலைஓசை பத்திரிகைகளிலும் வந்து கொண்டிருந்தது .
மக்கள் திலகத்தின் '' நான் ஏன் பிறந்தேன் '' 9 வது வாரமாக நடைபெற்று கொண்டு இருந்தது . சிவாஜியின் ''தர்மம் எங்கே '' 4 வது வாரமாக நடைபெற்று கொண்டு இருந்தது . மக்கள் திலகம் எம்ஜிஆர் மற்றும் சிவாஜி இருவரும் 10க்கும் மேலான புதுப்படங்களில் நடித்து கொண்டு வந்தனர் .ஆகஸ்ட் 26ல் தவப்புதல்வனும் , செப்டம்பர் 15ல் அன்னமிட்டகை படமும் வெளிவருவதாக விளம்பரங்கள் வந்தன.
மக்கள் திலகத்தின் இதயவீணை , உலகம் சுற்றும் வாலிபன் , நினைத்ததை முடிப்பவன் போன்ற படங்கள காண ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டு இருந்தார்கள் . . வசந்த மாளிகை , நீதி , ராஜா ராஜ சோழன் போன்ற படங்களை காண சிவாஜி ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டு இருந்தார்கள் .
1972 துவக்கத்தில் வெளிவந்த ''நல்ல நேரம் '' சென்னை நகரில் சித்ரா - மகாராணி -மேகாலா -ராம் 4 அரங்கில் 100 நாட்கள் ஓடியது குறிப்பிடத்தக்கது .சிவாஜியின் ராஜா சென்னையில் தேவிபாரடைஸ் , ராக்ஸி 2 அரங்கிலும் , ஞான ஒளி பிளாசா அரங்கிலும் 100 நாட்கள் ஓடியது . சித்ரா - மகாராணி அரங்கில் நல்ல நேரம் தொடர்ந்து 100 காட்சிகள் நிறைந்தது . ராஜா தேவி பாரடைஸில் 100 காட்சிகளும் ஞான ஒளி பிளாசா வில் 100 காட்சிகளும் chf ஆனது .
தமிழ் திரையுலகில் புதிய வரவாக மு.க .முத்து நடித்த பிள்ளையோ பிள்ளை ஜூன் 1972ல் வெளிவந்த நேரத்தில் அன்றைய தமிழக முதல்வரின் விபரீத பேராசையின் காரணமாக எம்ஜிஆருக்கு இணையாக ஒரே படத்தில் நடித்த முக முத்து விற்கு ரசிகர் மன்றங்களை திறக்க பல் வேறு குறுக்கு வழிகளை தன்னுடைய அதிகாரத்தின் மூலம் கையாண்டார் . எம்ஜிஆர் படங்களை தயாரிக்கும் தயாரிப்பளர்களை அழைத்து முக முத்துவை வைத்து படம் எடுக்க முயற்சித்தார் .
1971ல் இந்தியாவின் சிறந்த நடிகராக மக்கள் திலகம் எம்ஜிஆர் தேர்ந்தடுக்கப்பட்டு பாரத் பட்டம் பெற்றதற்கு தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவர் திரு சிவாஜிகணேசன் தலைமையில் நடந்த பாராட்டு விழாவில் நடிகர் எஸ்.எஸ். ஆர் அவர்கள் உணர்ச்சி வேகத்தில் தினத்தந்தி பத்திரிகையை நேரிடையாக தாக்கி பேசியது பரபரப்பை உண்டாக்கியது . அதன் விளைவு ?........பாரத் பட்டம் விழா செய்திகள் தினத்தந்தியில் இருட்ட்டடிப்பு செய்யப்பட்டது
தொடரும்..........
எம் ஜி ஆர்
அடிமைப் பெண்
எம் ஜி ஆர் சொந்தமாகஂதயாரித்தஂ
இந்த படத்தின் கதை காட்சி அமைப்பு
இடங்கள் நடிப்பு சண்டை பாடல் உடை எடிட்டிங் போன்றவை இது வரை மிஞ்சபடாதவை
முதல் காட்சியிலே வலைமீது வாள் வீச்சு ஒற்றை காலில் நின்று
அசோகன் கால் கட்டபட்டு இருக்கும்
எம் ஜி ஆர் காலை மடக்கி கொண்டு
சண்டை செய்வார் வலை சும்மா நடப்பதே முடியாதஂவிஷயம்
கூனனாகஂநடிப்பில் ஒரு பரிமாணத்தை காட்டினார்
அம்மா என்றஂபாடலில் பால் அருந்தும் காட்சியில் ஒரு குழந்தை
போல் தோன்றுவார் இந்தஂகாட்சியை
எம் ஜி ஆர் ரை தவிரஂஎவராலும் நடித்திருக்கமுடியாது
பால் அருந்தி மடியில் இளைப்பாறும் போது ப்ரேம் திரையில் ஊஞ்சல் ஆடஂஅப்போது கே வி மகாதேவன் ஒரு இசை கொடுப்பார் அப்பப்பா
வார்த்தைகள் இல்லை
உடை இந்த படத்தில் ஒரு நீளஂமார்போடு மறைக்கபட்டஂசிறு உடை ,இது பொன்னின் நிறம் கட்டுடல் கருணை கொண்டகண்கள்
பெற்றஂஎவர் அணிந்தாலும் விரசமாகதான் இருக்கும்
முதலாகஂஅம்மாவை சந்திக்கஂசெல்லும் காட்சி யில் எம் ஜி ஆர் அம்மா என்று உரக்கக் அழைக்கும் போது அப்போது கேட்கும் இசை அருவில் பாய்ந்து செல்லும் காட்சி எவரையும் புல்லரிக்கஂசெய்யும் காட்சி
தண்டனை விதிக்கப்பட்டது தண்டிக்க
இருகைகள் கட்டபட்டு உடல் சிதறம்
போது .கடைசி முயற்ச்சிபோல் தன் பலம் முழுவதும் உடலில் பாச்சி தம்
பிடிக்கும் போது எம் ஜி ஆர் ரின் உடல் பலம் விரிந்தஂமார்பு இரும்பு கவசம் போல் மின்னும் கைகளில் நரம்புகள் படைத்து மஸில்ஸ் விம்மி
முகம் ரத்தமாகஂசிவக்கஂஅது கண்களில் ஓரத்தில் தெரியஂஇப்படி ஒரு காட்சி தமிழ் திரையில்கண்டது இல்லை
சிங்கத்தோடு மோதஂசிங்கம் வாங்கபட்டு பலமாதங்கள் அதனோடு பழகி மிகஂபிரம்மாண்டமாகஂபடமாக்கபட்டது கடைசியாகஂஅசோகன் ஈட்டி எறியும் போது அதை பிடித்து திருப்பி
வீசம் அழகு தேர்ந்தஂஈட்டி வீசும் வீரர்களின் அழகை காட்டினார் எம் ஜி ஆர்
ஒவ்வொரு காட்சியிலும் எம் ஜி ஆர்
ரின் நடிப்புக்கு எத்தனை ஆஸ்கார்
விருது கொடுத்தாலும் ஈடு ஆகாது
courtesy net
ஒரு தவறு செய்தால் அது தெரிந்து
செய்தால் அவன் தேவன் என்றாலும்
விடமாட்டேன்
எம் ஜி ஆர்
அதிகாரம் இருந்தாலும் இல்லாதபோதும் தப்பை தட்டி ,கேட்டு நியாயம் வழங்கும் சக்தி பலம் பொருந்தியஂமாவீரன் பொன்மனச்செம்மல் ஒருவரே தமிழகத்தின் காவல் தெய்வம்
1956- SUDHESA MITHRAN
http://i61.tinypic.com/e1bxg7.jpg
TODAY 11.00PM WATCH SUNLIFE TV
http://i58.tinypic.com/15y7o7.jpg
http://i59.tinypic.com/aziavq.jpg http://i60.tinypic.com/vdfrxt.jpg http://i61.tinypic.com/27x0zyf.jpg
வினோத்
1972ல் நடந்த மக்கள் திலகம் எம்ஜிஆர் - சிவாஜி படங்கள் பற்றிய நிகழ்வுகள் பதிவு அருமை .
ராஜா படம் சென்னையில் மூன்று அரங்குகளில் 100 நாட்கள் ஓடியதாக சிவாஜியின் சாதனை சிகரங்கள் பதிவில் இடம் பெற்றுள்ளது . நீங்கள் குறிப்பட்டது போல் தேவி பாரடைஸ் மற்றும் ராக்ஸி 2அரங்கில் 100 நாட்கள் ஓடியுள்ளது .. தகவலுக்கு நன்றி .
மக்களின் கலங்கரை விளக்கம்
வெற்றி திருப்புகழ் வேந்தன்-பாட்டுடைத் தலைவன்;
அற்புத நாயகன்-மக்கள் திலகம்-தெய்வம் எம்.ஜி.ஆர்.
ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும், ஆதவன் மறைவதில்லை,
ஆணைகள் இட்டே யார் தடுத்தாலும், அலைகடல் ஓய்வதில்லை.
ஏற்றுயர் எடுத்தான்
ஏணியாய் இருப்பான்
எல்லையில்லா ஒருவன்
எம்.ஜி.ஆர். விஸ்வரூபம்
ரூபம், ரூபம், ரூபம்.
குடையாய் இருப்பான்
கொடையாய் வருவான்
காலமெல்லாம் வள்ளல்
எம்.ஜி.ஆர். யுக தர்மம்.
தர்மம் தர்மம் தர்மம்.
உழைப்பினில் மகிழ்வான்
உத்தம தலைவன்
உறவாய் மலர்வான்
எம்.ஜி.ஆர். அருள் வேதம்
வேதம், வேதம், வேதம்.
நலன்களை தருவான்
நன்மையை செய்வான்
நீடித்து நிலைப்பான்
எம்.ஜி.ஆர். ஓர் உலகம்
உலகம், உலகம், உலகம்.
கடமையில் சிறப்பான்
கொள்கையில் வாழ்வான்
கருணையின் இறைவன்
எம்.ஜி.ஆர். புகழ் கழகம்
கழகம், கழகம், கழகம்.
மதுரை வீரன்
மன்னாதி மன்னன்
மக்கள் திலகம்
மாதவ தலைவன்
எம்.ஜி.ஆர். இமயம்.
இமயம், இமயம், இமயம்.
ஏழையின் இறைவன்
எங்க வீட்டு பிள்ளை
எம்.ஜி.ஆர். தமிழ் தெய்வம்
தெய்வம், தெய்வம், தெய்வம்.
இவன் யார் என்று தெரிகிறதா?
இவன் தெய்வம் புரிகிறதா.
http://i57.tinypic.com/5r21s.jpg
Makkal Thilagam M.G.R in Adimaipen is running now at Madurai - Vandiyur- Palanimurugan.
Message fromThiru K.Swamy - Madurai
தேவைக்கு மேல் சொத்தைச் சேர்த்து வைப்பதில் கிடைக்கும் மகிழ்ச்சியைவிட,
பயனுள்ள வகையில் மக்களுக்கு உதவும்போது அடையும் மகிழ்ச்சியை நான் பெரிதாக
நினைக்கிறேன்.
- புரட்சித்தலைவர்
2016ல் நடை பெற உள்ள தமிழக சட்ட மன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் திரூஉருவமும் , இரட்டை இலை சின்னமும் , அதிமுக என்ற இயக்கத்தின் வலிமையும் நிச்சயம் எதிரொலிக்கும் என்பது திண்ணம் .மக்கள் திலகம் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா துவக்க ஆண்டில் அவருடைய ரசிகர்களுக்கும் , தொண்டர்களுக்கும் கிடைக்க போகும் மாபெரும் பரிசு . உலகமெங்கும் உள்ள எல்லா தரப்பு மக்கள் திலகம் எம்ஜிஆர் ரசிகர்களின் கொண்டாட்டங்கள்,ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்கப்போகிறது . கோடிக்கணக்கான மக்கள் திலகம் எம்ஜிஆர் ரசிகர்களுக்கும் , தொண்டர்களுக்கும் அட்வான்ஸ் வாழ்த்துக்கள் .
நன்றி -திரு கலிவரதன் - முகநூல்