Results 1 to 10 of 4018

Thread: Makkal Thilagam MGR -PART 16

Threaded View

  1. #11
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    this news is true?

    13-9-1969இல் அருமை நண்பர் எம்.ஜி.ஆர். ஓர் அறிக்கை வெளியிட்டார். அந்த அறிக்கையின் இறுதியில், "மதுவிலக்குக் கொள்கையில் தமிழகத்தில்
    மட்டுமல்ல; இந்தியத் துணைக் கண்டத்திலுள்ள எந்தத் தனி மனிதனுக்கோ, எந்தக் கட்சிக்கோ உள்ள
    அக்கறையை விட, அந்தக் கொள்கை மக்களுக்குத் தேவையானது என்பதில், தி.மு. கழகத் தலைவரும்,
    தமிழக முதல்வருமான கலைஞருக்கு அதிக அக்கறையும், அதிகப் பிடிப்பும் உண்டு என்பதை மற்றையோரைவிட அழுத்தமாக என்னால் துணிந்து கூற முடியும்"

    1971ஆம் ஆண்டு நிதி நிலை அறிக்கை மூலமாக மதுவிலக்கை ஒத்தி வைத்த போது கூட, நிதி நிலை அறிக்கையிலே நான் என்ன உரைத்தேன் என்பதை 6ஆம் தேதிய எனது மடலில் குறிப்பிட்டிருக்கிறேன். அதே நிதி நிலை அறிக்கையில், "தமிழகத்தில் மட்டும் மதுவிலக்குச் சட்டத்தை தீவிரப்படுத்து வதால் மதுவிலக்கின் வாயிலாக நாம் காப்பாற்ற விரும்பும் ஒழுக்கம், நாணயம், நேர்மை இவைகளையே பாதுகாக்க வாய்ப்பு இல்லாமல் போகிறது.

    எனவே உயர் தனிக் கொள்கையான மதுவிலக்கில் இந்த அரசு தொடர்ந்து நம்பிக்கை வைத்திருக்கிறது
    எனினும், இந்திய நாடு முழுவதுக்குமாக இந்தக் கொள்கையை அமல்படுத்த மத்திய அரசு பொறுப்பேற்றுக்கொள்ளும் வரையில் தமிழகத்தில் மதுவிலக்குச் சட்டம் செயல்படுவதை ஆகஸ்ட் 30ஆம் நாளில் இருந்து ஒத்தி வைக்க இந்த அரசு முடிவு செய்கிறது என்பதை வருத்தத்துடன் தெரி வித்துக் கொள்கிறேன்" என்று தான் குறிப்பிட்டேன். மேலும் நண்பர் எம்.ஜி.ஆர். தலைமையில் மதுவிலக்குப் பிரச்சாரக் குழு ஒன்றும் அமைக்கப் பட்டது என்பதையும் மறந்து விடக் கூடாது. இன்னும் சொல்லப்போனால், மதுவிலக்கு குறித்து 13-9-1969இல் அருமை நண்பர் எம்.ஜி.ஆர். ஓர் அறிக்கை வெளியிட்டார். அந்த அறிக்கையின் இறுதியில், "மதுவிலக்குக் கொள்கையில் தமிழகத்தில் மட்டுமல்ல; இந்தியத் துணைக் கண்டத்திலுள்ள எந்தத் தனி மனிதனுக்கோ, எந்தக் கட்சிக்கோ உள்ள அக்கறையை விட, அந்தக் கொள்கை மக்களுக்குத் தேவையானது என்பதில், தி.மு. கழகத் தலைவரும்,தமிழக முதல்வருமான கலைஞருக்கு அதிக அக்கறையும், அதிகப் பிடிப்பும் உண்டு என்பதை மற்றையோரை விட அழுத்தமாக என்னால் துணிந்து கூற முடியும்" என்று தெரிவித்ததையும், அதற்குப் பின் அவரே "ஆனந்த விகடன்" பத்திரிகையிலே "நான் ஏன் பிறந்தேன்"என்ற தலைப்பிலே எழுதிய நீண்ட தொடர்
    கட்டுரையிலே விரிவாக எழுதியதையும் அ.தி.மு.க.விலே தற்போதுள்ளவர்கள் வேண்டு மானால்
    மறந்திருக்கலாம்; ஆனால் நான் மறக்க வில்லை. இந்த அளவுக்கு மதுவிலக்குக் கொள்கையிலே
    உறுதியாக இருந்த அருமை நண்பர் எம்.ஜி.ஆர்., பின்னர் முதலமைச்சராக இருந்த போதுதான், மதுவிலக்கு
    சம்பந்தமான சட்டங்கள், திட்டங்கள் இவைகள் எல்லாம் மாற்றப்பட்டன. 1-5-1981இல் சாராயம் மற்றும்
    கள்ளுக்கடைகள் கூட திறக்கப் பட்டன. ஆனால் குடிப்பவர்கள்"பெர்மிட்" ஒன்று பெற வேண்டுமென்று
    விதிமுறைகளில் கூறப்பட்டது. 1981 வரை தமிழ்நாட்டில் இந்தியாவில் தயாரிக்கப்படும் வெளி நாட்டு
    மதுபானங்கள் உற்பத்தி செய்கின்ற தொழிற்சாலைகள் இல்லை. 1981க்குப் பின்பு தான் இந்த
    மதுபானங்களைத் தயாரிக்கின்ற உரிமையை நான்கு தனி நபர்களுக்கும், கூட்டுறவுத் துறை
    நிறுவனத்திற்கும் அளிக்கப்பட்டது. கள்ளுக் கடைகள் ஏல முறையில் அனுமதிக்கப்பட்டன. சாராய உற்பத்தி
    10 தனிப்பட்ட நபர்களுக்குக் கொடுக்கப் பட்டது. சாராயத்தை விநியோகம் செய்கின்ற மொத்த வியாபாரம்
    15 தனிப்பட்ட நபர்களுக்குக் கொடுக்கப் பட்டது. இவை எல்லாம் கடந்த காலத்தில் நடந்த சம்பவங்களாகும்.


    courtesy in karunathi facebook

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •