அபிநய சரஸ்வதியின் ஓவியத்தை பார்த்து ஆறுதல் அடையும் அருமைத்தலைவரின் புகைப்படத்தை அனுப்பிய ஆருயிர் நண்பர் வினோத் அவர்களுக்கு ஆயிரம் கோடி நன்றி.. இப்படம் அனைவரையும் கவர்ந்தது உண்மை. சோக நடிப்பில் சோடை போகாத நடிக பேரரசர்.
Printable View
''ப'' வரிசையில் வந்த மக்கள் திலகத்தின் கருப்பு வெள்ளை படங்களில் மிகவும் பிடித்த படங்கள் .
1. பாசம்
2. பணத்தோட்டம்
3. பெரிய இடத்து பெண்
4. பணக்கார குடும்பம்
5. பணம் படைத்தவன்
6. பெற்றால்தான் பிள்ளையா
7.. படகோட்டி- கலர்
8. பறக்கும் பாவை - கலர்
பாசம் படம் பற்றிய விமர்சனம் - தொடரும்
பாசம் வைத்த ரசிகர்கள்..
http://i43.tinypic.com/33lhugm.jpg
புரட்சி நடிகர் தன்னுடைய திரைப்படங்கள் மூலம் சமுதாயத்திற்கு தேவையான கருத்துகளை கூறி ஒரு மிகப்பெரிய சமுதாய மாற்றத்தை ஏற்படுத்தினார்..புரட்சி நடிகரின் நடிப்பு ஒவ்வொரு தனி மனிதனையும் பாதித்தது மறுக்க முடியாத உண்மை..அந்த பாதிப்பு ஒரு ரசிகனை நல்ல மனிதனாக, பெண்களை மதிக்கும் ஆணாக, எல்லா உயிரகளிடமும் அன்பு செலுத்தும் ஒரு மனித நேயனாக, மற்றவர்களுக்கு ஓடி சென்று உதவி செய்யும் சமூக சேவகனாக வார்த்தெடுத்தது..அதே போல் தலைவரும் ஒவ்வோர் ரசிகனையும் தன் உயிராக மதித்தார்..பொது நிகழ்ச்சிகளிலும், பொதுக்கூட்டங்களிலும் பேசும்போது கூட அங்கே குவிந்திருக்கும் ரசிகர்களின் நிலையை, அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வார் .ரசிகனின் பாதிப்பும் புரட்சி நடிகர் ரசிகரின் மேல் வைத்த அன்பும் மதிப்பும் இருவருக்குமிடையே ஒரு பாசப்பிணைப்பை ஏற்படுத்தியது..இந்த பாசம் ஒரு தாய்-தந்தை-மகன் பாசமாக சகோதர பாசமாக உருவெடுத்தது. இந்த பாசத்தால் ஒருவருக்கு ஏற்பட்ட பாதிப்பு மற்றவரை பாதித்தது..திரையில் கூட தங்கள் தலைவன் சோகமாக இருப்பதையோ, தலைவனின் தோல்வியையோ, தங்கள் தலைவன் இறப்பது போல நடிப்பதையோ அவர்களால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை..தங்கள் தலைவன் மரணம் திரையில் நிகழ்ந்தால் கூட, அது எப்படிப்பட்ட படமாக இருந்தாலும், நடிப்பில் எத்தனை திறமையை காட்டியிருந்தாலும், இது வெறும் நடிப்புதான் என்று யார் கூறினாலும் அதை ஏற்றுக்கொள்ளக் கூடிய மன நிலையில் அவருடைய ரசிகர்கள் என்றுமே இருந்ததில்லை.ரசிகர்கள் என்பதை விட தமிழக மக்கள் என்று சொல்லலாம்..அதனால் அவர் நடித்த சிறந்த படங்கள் கூட, இறப்பதாக இருந்தால், பெரிய அளவில் வெற்றி பெற முடியவில்லை..அதற்கு பாசம் ஒரு உதாரணம்..மற்ற நடிகர்களின் ரசிகர்கள் அவரவரின் நடிப்பை ரசித்தார்கள்.அதோடு நிறுத்திகொண்டார்கள்..ஆனால் புரட்சி நடிகர் மற்றும் அவருடைய ரசிகனுக்குமிடையே ஏற்பட்ட இந்த தாக்கம் இந்த உலகத்தில் எங்கும் நடக்காத அதிசயமாகும்..
படம் சொல்லும் பாடம் - உழைக்கும் வர்க்கத்தின் ஒப்பற்ற தலைவர்
http://i43.tinypic.com/eldwfb.jpg
இன்று காலையில் ஒரு ரிக்ஷா வண்டியில் பிடித்த படம்..புரட்சித்தலைவர் உழைப்பின் தத்துவத்தையும் அதன் உயர்வையும் மக்களுக்கு விதைத்தவர்..உழைப்பாளிகளை, பாட்டாளிகளை தன் படங்களால் பாடல்களால் போற்றியவர்..அதனால் உழைப்பால் பிரிந்திருந்த மக்களை ஒன்றிணைத்தவர்..அவர் திரைப்படங்களில் சொன்ன கருத்துகள்தான் உழைப்பை உயர்த்தியது மட்டுமல்லாது உழைப்பாளிகளையும் உயர்த்தியது..உழைப்பாளிகளை குறிப்பாக அடித்தட்டு மக்களை சமுதாயத்தில் ஒரு அந்தஸ்தை பெற்றிட தலைவரின் படங்களும் பாடல்களும் ஒரு காரணியாக அமைந்தது..குறிப்பாக வண்டி இழுக்கும் தொழிலாளி, மீனவர்கள், செருப்பு தைக்கும் தொழிலாளி, ரிக்ஷாகாரர்கள் துப்புரவு தொழிலாளிகள் என சமுதாயத்தில் குறைத்து மதிப்பிடப்பட்டவர்கள், தலைவர் ஏற்ற பாத்திரங்களால் உயர்த்தப்பட்டார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை.. அதனால்தான் உண்மையான அன்பு செலுத்தும் உழைக்கும் வர்க்கம் புரட்சி தலைவரை இதய தெய்வமாய் போற்றி வழிபடுகிறது.
படம் சொல்லும் பாடம்
http://i39.tinypic.com/350w4li.jpg
நேற்று (28.04.2013) அன்று புதுச்சேரி முருகா திரையரங்கில் 'நான் ராஜாவாக போகிறேன்' என்ற திரைப்படம் பார்த்தேன்..படம் பார்த்து கொண்டிருக்கும்போதே ஒரு இன்ப அதிர்ச்சி..சென்னைக்கு வரும் கதாநாயகன் நகுல் தன்னுடைய தோழியிடம் நான் தமிழ் படம் பார்த்ததே இல்லை..இன்றைக்கு கண்டிப்பாக தமிழ்ப்படம் பார்க்க கூட்டிபோ என்கிறான்..தோழியும் அவனை சென்னையில் உள்ள ஒரு திரையரங்கிற்கு கூட்டி செல்கிறாள்..நமது தெய்வத்தின் ரசிகர்களுக்கு தான் கண்கள் மேயுமே..திரைப்படத்தில் எங்கேயாவது தலைவரின் உருவம் தெரிகிறதா..திடீரென்று எங்க வீட்டு பிள்ளையின் கட் அவுட்டும் போஸ்டரும் தெரிகிறது..தோழி கதாநாயகனை தலைவரின் எங்க வீட்டு பிள்ளை படம் பார்க்க கூட்டி செல்கிறாள்..தியேட்டரின் முகப்பில் எம்ஜிஆர் பேனர்கள், ஸ்டில், கட்-அவுட்டுகள் வைக்கப்பட்டிருக்கின்றன..தோழி கதாநாயகனிடம் இந்த படங்கள் இப்போது ஹவுஸ் புல்லாக ஓடுகின்றன..நன்றாக இருக்கும் வா என்று அழைத்து போகிறாள்..அந்த தியேட்டரில் ஒரு சண்டை காட்சி உண்டு..தலைவர் முதல்வர் ஆகி சினி பீல்டை விட்டு போனதும்..வந்த படங்களில் பெரும்பாலான படங்களில் இது போன்ற காட்சிகள், எம்ஜிஆர் போஸ்டர்கள், எம்ஜிஆர் பாடல்கள் போடுவதை வழக்கமாக கொண்டிருந்தார்கள்..தலைவரின் ரசிகர்கள் அப்படிப்பட்ட காட்சிகளை நினைவு படுத்தலாம்..பதிவுகள் செய்யலாம்
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
from 1st may
at coimbatore royal
makkal thilagathin
madurai veeran
வினோத் சார்,
பாசம் படம் பற்றிய தங்களது கருத்து மக்கள் திலகத்தின் ரசிகர்கள் அனைவரது மனதிலும் உள்ள ஒன்றே. மற்றபடி மக்கள் திலகத்தின் ரசிகர்கள் பலரிடமும் பேசியவரை பாசம் படம் அனைவரது மனதிலும் ஓர் உன்னதமான இடத்தைப் பிடித்திருப்பதை உணர முடிந்தது. தங்களது அபிமான படங்களை வரிசைப்படுத்தும் போதும் பாசம் முதல் 10 இடங்களைப் பிடிப்பதை கேட்டறிந்ததுண்டு. மக்கள் திலகத்தைப் பொருத்தவரை அவரது நடிப்பை யாருமே நடிப்பாகப் பார்க்கவில்லை. இயற்கை நடிப்பால் அனைவரையும் கண்டுண்டு கிடக்க வைத்து உண்மையான காட்சியாக நம்ப வைக்கும் மக்கள் திலகம் உண்மையிலேயே நடிகர் பேரரசர் தான்.
அவரது பல படங்களைப் பார்த்துப் பிரமித்துப் போன நான் பாசம் படத்திலும் சொக்கிப் போனேன். இவ்வளவு இயற்கையான நடிப்பை வேறு யாரும் தரவே இயலாது. கோபியாகவே வாழ்ந்திருப்பார். சிறைச்சாலையிலிருந்து வெளியேவரும் முதல் காட்சியிலிருந்து இயற்கையோடு இரண்டறக் கலக்கும் இறுதிக்காட்சி வரை மிக இயற்கையாக நடித்திருப்பார். அதனால் தானோ என்னவோ அவர் மரணிப்பதாக நடித்ததையும் நடிப்பாக எண்ணாமல் உண்மையென எண்ணி துடித்தனர் ரசிகர்கள். இது பாசம் படத்தில் மட்டுமல்ல. அவரது எல்லா படிங்களிலும் இப்படித்தான். இந்த பந்தம் என்றும் நிலைத்த ஒன்று. உண்மையில் அவர் இறந்ததைக்கூட இன்னும் ஏற்றுக்கொள்ளாதோர் ஏராளம்.
திரு. கலியபெருமாள் அவர்களே,
தங்கள் சொன்னது முற்றிலும் உண்மை. இதோ உங்களுக்காக மலையாள திரைப்படம் ஒன்றில் தோன்றும் கட்சி [ தலைவர் கட்சி உள்ளத்தால் இங்கே பதிவு செய்ய படுகிறது]. இந்த படத்தின் நாயகன் சுகுமாரன் [நடிகர் ப்ரித்விராஜ் அவர்களின் தந்தை] ஒரு பெண்ணை கைப்பற்றும் கட்டம். இதில் நம்ம தலைவர் எம் ஜி ஆர் மற்றும் Bruce Lee[Hong Kongs MGR!] காட்சிகள் உள்ளன.
http://www.youtube.com/watch?v=sNp9ClmC0tI
இது மட்டும் இன்றி திரு சத்யராஜ் அவர்கள் நடித்த பல படங்களில் தலைவர் பற்றி வசனம், கட்சிகள் பார்க்கலாம். இதேபோல் இயக்குனர் விக்ரமன் பல படங்களில் பாடல் கட்சி இடம் பெற்று உள்ளது. அடுத்தபடியாக ராமராஜன் இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். நன்றி.
The name of the malayalam film is "Kurukkante Kalyanam".
Vinod Sir,
Pasam, like Thalaivars other films, shall always remain in the heart of every Thalaivars Devotees. All Super Duper hit songs, good story and fitting climax, i.e. all the ingredients required for Box Office success. If I am not wrong it is the FIRST film in which Thalaivar has the opening/punch song in his own way! The way thalaivar dodge the police, appearing before his mother etc and the climax - super scenes. Again Thalaivars hair style was different except for Ulagam Piranthu and Pal Vannam Paruvankandu songs. In short, top class movie liked by every MGR devotee.
Thanks.