டியர் கோபால் சார்,
கார்த்திக் சார் சொன்ன வார்த்தைகளை ஏற்று, மீண்டு(ம்) வருக, பொன்னான பதிவுகளைத் தருக.
Printable View
டியர் கோபால் சார்,
கார்த்திக் சார் சொன்ன வார்த்தைகளை ஏற்று, மீண்டு(ம்) வருக, பொன்னான பதிவுகளைத் தருக.
அற்புதம் வினோத் சார். அப்படியே சொக்கிப் போய் நிற்கிறேன். கோடி கோடி தேங்க்ஸ்.
gopal சார் ragavendra சார் மற்றும் ்
நம்முடைய எல்லா சகோதரர்களுக்கும் வேண்டுகோள்
தயவு செய்து யாரும் திரியை விட்டு வெளியை செல்கிறேன் என்று சொல்ல வேண்டாம் நிச்சயமாக திரு கார்த்திக் சார் அவர்கள் கருத்து தான் எல்லாரின் கருத்தாக இருக்க முடியம்
உங்களுடைய ஞானஒளி படித்து நாங்கள் ellam இன்புற்று இருக்கும் நேரத்தில் தயுவு செய்து இப்படி ஒரு குண்டு
வேண்டாம் உங்கள் எல்லோரின் எழுத்துகளுக்கு ஏங்கி கொண்டு இருக்கும் எங்களை போன்றவர்களின் எதிர்பார்புகளை எமாற்றி விடாதீர்கள்
'ஞான ஒளி' பதிவுகளைப் பாராட்டிய முரளி சார், அன்பு கார்த்திக் சார், கோபால் சார், ராகவேந்திரன் சார், சந்திரசேகரன் சார், ராதாகிருஷ்ணன் சார், சுப்பிரமணியம் ராமஜெயம் சார், சுப்பு சார், வாசுதேவன் சார், ராமச்சந்திரன் சார், மற்றும் கைபேசியில் தொடர்பு கொண்டு பாராட்டிய அருமைச் சகோதரர் பம்மலார், கோல்ட் ஸ்டார் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கார்த்திக் அவர்கள் கருத்தை வழி மொழிகிறேன். அனைவரும் ஒற்றுமையாய் இருந்து இந்த தேரை (திரி ) இழுத்து செல்ல வேண்டிய தூரம் இன்னும் உள்ளது. ராகவேந்தர் சார் மற்றும் கோபால் சார் இருவரும் உங்கள் பங்களிப்பை தொடர்ந்து தர வேண்டும்.
HUMBLE REQUEST TO ALL OUR NT FOLLOWERS AND HUBBERS PARTICIPAING IN NT THREAD.
From sivaji's family mr ramkumar ganesan and prahu are definitely giving lot of support physically and morally for all pending issues. no one can deny this andblame them. sivaji peravai kc sekar also doing his BEST ALWAYS WHENEVER AND WHEREVER POSSIBLE. SO LET US WAIT AND SEE FOR GOOD RESULTS'
My personal request is that all of us stand UNITED and cintribute oUR MITE AND LOYALITY TO ONE AND ONLY SUPERSTAR FROM 1952 TILL HIS LIFE OR FILM CARRER.
SPECIAL REQUEST TO GOPAL VASU AND RAGHAVENDER.
As a senior follower of NT iam placing this request.
ஆண்டனி, கோபால். (ஒரு ஒப்பீட்டுப் பார்வை).
http://i1098.photobucket.com/albums/...naOli00011.jpg http://i1.ytimg.com/vi/CJ0pm7hOJHI/hqdefault.jpg
ஒரு விஷயம் யோசித்துப் பார்த்தேன். 'ஞான ஒளி' ஆண்டனியையும் 'புதிய பறவை' கோபாலையும் கம்பேர் செய்து பார்த்தாலென்ன என்று.
புதிய பறவையின் நாயகன் கோபால் பற்றி நம் சூப்பர் ஸ்டார் கோபால் ஆய்வில் பிய்த்து உதறியிருந்தார். அதை இப்போது மனதில் கொள்க.
கோபால் என்ற அந்த இளைஞன் பெரும் தனவந்தன். ஆனால் நம் ஆண்டனியோ பரம ஏழை. ஆனால் பாருங்கள்... இருவருமே ஒரு வகையில் அனாதைகள்தான்.
குணத்தில் கோபால் ரொம்ப மிருதுவானவன். ஆனால் ஆண்டனியோ முரட்டுப் பயல் என்றே பட்டம் வாங்கியவன்.
கோபால் கொஞ்சம் reserved டைப். ஆண்டனியோ கலகல பேர்வழி. இருவருக்குமே மனைவி உண்டு.
கோபால் சற்று பால் கவர்ச்சியின்பால் மயங்கி மேல்நாட்டு நடன பாடகியை அவனுக்கேற்றவாறு இருப்பாள் என நம்பி, மணந்து கெட்டான். மகிழ்ச்சியை இழந்தான்.
ஆனால் ஆண்டனியோ விளையாட்டுத்தனமாய் காதலித்து தனக்கேற்ற குணம் கொண்ட பெண்ணை தேர்ந்தெடுத்து மனைவியாக்கிக் கொண்டான். மகிழ்ச்சியுடன் அவளுடன் வாழ்ந்தான்.
ஆண்டனி, கோபால் இருவருமே மனைவியை இழக்க நேரிட்டது.
ஆண்டனி மனைவியை அவளுடைய தலைப்பிரசவத்தில் இழந்தான். கோபாலோ தலைவிதியால் தன் மனைவியை அடித்துக் கொல்ல வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டான்.
கோபாலோ தனக்கு மீள்துணையாக லதாவை தேர்ந்த்தெடுத்து, அவளுடன் வாழத் துடித்தான். ஆண்டனியோ பாதிரியின் கனவுகளை நிறைவேற்றத் துடித்தான். மகளின் வாழ்வுக்காகவும் துடித்தான்.
இருவருமே சந்தர்ப்ப வசத்தால் குற்றவாளியாகி கொலைகாரர்கள் ஆனவர்கள். இருவருமே கொலை செய்ய வேண்டும் என்ற நோக்கமே இல்லாத நல்லவர்கள்.
மனைவியின் நடத்தை மோசமானதால் ஆத்திரம் கொண்டு கணவன் என்ற உரிமையில் கோபால் தன் மனைவியை அடித்தான்.
தன் அன்பு மகளின் வாழ்வுக்காக தந்தை என்ற ஸ்தானத்தில் அவளை உதாசீனம் செய்த அவள் காதலனை ஆத்திரத்தில் ஆண்டனி அடித்தான்.
இருவருமே கண்மூடிக் கண் திறப்பதற்குள் பொறுமை எல்லை மீற ஆத்திரத்தின் உச்சத்தைத் தொட்டவர்கள். இருவருமே உரிமையில் அடித்தவர்கள். மனைவி என்ற உரிமையில் முன்னவனும், பெண்ணின் காதலன் அல்லது மருமகன் என்ற உரிமையில் பின்னவனும். இருவருமே சொந்தங்களைக் காலி செய்தவர்கள்.
முக்கியமான ஒன்று. இருவருமே ஒரே ஒரு அடியில், ஒரே ஒரு நொடியில் உயிர்களைப் பறித்தவர்கள். அதனால் உயிர் போகும் என்று அறியாமல் செய்தவர்கள்.
கோபால் படித்தவன். சமூக மான, அவமானங்களுக்கு பயந்து தான் செய்த கொலையை யாருக்கும் தெரியாமல் புத்திசாலித்தனமாக மறைத்தவன். தான் மாட்டிக் கொள்ளாத வகையில் திட்டம் தீட்டியவன்.
ஆண்டனிக்கு அப்போது அது தேவை இல்லை. தன் மகளின் வாழ்வை ஆத்திரத்தில் தானே கெடுத்தவன். தான் செய்தது கொலை என்று தெரியாமலேயே மற்றவர்கள் சொல்லித்தான் அது கொலை என்று தெரிந்து கொண்டவன். வகையாக மாட்டிக் கொண்டவன். போலீசிடம் மாட்டித் தப்பித்த பின் தான் மாட்டிக் கொள்ளாத வகையில் திட்டம் தீட்டியவன்.
குற்றம் புரிந்தும் போலீசிடம் சிக்காதவன் கோபால். ஆனால் கொலைக் குற்றவாளியாய் சிறைக்கதவுகளுக்குள் பூட்டப்பட்டவன் ஆண்டனி. பின் தப்பித்து போலீசிடம் சிக்கிக் கொள்ளாதவன் ஆண்டனி.
தான் சிக்கிக் கொள்ளாதிருக்க சில கபட நாடகங்கள் நடத்தியவன் கோபால். போலீசிடமிருந்து தப்பிய ஆண்டனி என்ற அருணோ படு புத்திசாலி. அவன் எந்த நாடகமும் நடத்தாமல் தன் சாமர்த்தியத்தால், திறமையால் தன்னையே காப்பாற்றிக் கொண்டு வருபவன்.
கோபாலுக்கு இரண்டாம் காதலில் வெற்றியடைய வேண்டும் என்ற ஒரே வெறி. ஆண்டனிக்கோ பாதிரியாரின் லட்சியங்களை நிறைவற்றிக் காட்ட வேண்டும் என்ற ஒரே வெறி.
தன்னை வட்டமிடும் கழுகாக சுற்றுபவன் தன் போலீஸ் நண்பன் என்பதை நன்கறிந்து அவனுக்கு தண்ணி காட்டியவன் ஆண்டனி.
தன்னைச் சுற்றியிருக்கும் காவல் கழுகுகள் யாரன்று தெரியாமலேயே அவர்கள் விரித்த வலையில் கொஞ்சம் கொஞ்சமாக மாட்டிய அப்பாவி துரதிருஷ்டசாலி கோபால்.
சட்டப் பேய்க்குப் பயந்து பாசத்தை மறைத்துக் கொண்டு உள்ளுக்குள் ஊமையாய் அழுதான் ஆண்டனி.
எந்த சூழ்நிலையையும் மறந்து காதலை பகிரங்கமாகக் காட்டினான் கோபால்.
ஆண்டனியைக் குறி வைத்தது ஒரே ஒரு காவலன்.
கோபாலைக் ஒரு காவல்துறை குழுவே கண்காணித்தது.
கோபால் அவசரக்காரன். காதல் அவன் கண்ணை மறைத்தது. அவன் காதலியிடம் தன்னை நல்லவன் என்று நிரூபிக்க போராட வேண்டியிருந்தது. தன்னிடம் வந்த பழைய பறவையை டூப்ளிகேட் என்று புதிய பறவையிடம் நிரூபிக்க அவன் அளித்த ஆதாரங்கள் ஆணித்தரமாய் இருந்த போதிலும் இறுதியில் அவை ஆட்டம் கண்டன.
ஆண்டனி எமகாதகன். அழுத்தக்காரன். அவன் போலீஸ் நண்பனை இல்லை இல்லை எதிரியைப் பொறுத்தவரை. தான்தான் ஆண்டனி என்ற தடயங்களையே விட்டு வைக்காதவன்.
ஆனால் கோபால், ஆண்டனி இருவருமே காவல் துறையை கசக்கிப் பிழிந்தவர்கள்.
இருவருமே தங்களின் மீது, தங்கள் திறமைகள் மீது அசாத்திய நம்பிக்கை கொண்டவர்கள். இருவருமே உணர்ச்சி வசப்பட்ட கேஸ்கள். கோபால் பப்ளிக்காகவே உணர்ச்சிவசப்படக் கூடியவன். ஆண்டனியிடம் இது கொஞ்சம் வித்தியாசம். போலீஸ் நண்பன் முன்னால் மட்டும் உணர்சிவசப்படவே மாட்டான்.
கோபால் தன்னை மறந்து தன் வாயாலேயே தன்னை குற்றவாளி என்று சொல்ல வைக்கப்படும் நிலைக்கு ஆளாக்கப்பட்டவன்.
ஆண்டனியும் தன்னை மறந்து கோபத்தில் தன்னை வெளிக்காட்டிக் கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டவன்.
இருவருமே தங்கள் வாயால் வாக்குமூலம் கொடுத்து, அல்லது கொடுக்க வைக்கப்பட்டு அதன் மூலம் மட்டுமே சிக்கியவர்கள்.
மகள் பாசம் என்ற பிரம்மாஸ்திரத்தில் வீழ்ந்தான் ஆண்டனி.
லதா காதல் என்ற பிரம்மாஸ்திரத்தில் வீழ்ந்தான் கோபால்.
கோபாலுக்கும், ஆண்டனிக்கும் நிறைய அடிப்படை ஒற்றுமைகளும் உண்டு. சில வேற்றுமைகளும் உண்டு.
ஆனால் இருவருமே பாவப்பட்டவர்கள். பரிதாபத்துக்குரியவர்கள்.
அதையெல்லாம் மீறி அன்பு உள்ளங்கள் அனைத்திலும் ஆட்சி செலுத்திக் கொண்டிருப்பவர்கள்.
Mr Neyveliar Sir,
Your analysis of Mr Antony & Mr Gopal is excellent. We can do this analysis with
NT only.
ஆண்டனி மற்றும் கோபால், மிக அற்புதமான ஒப்பீடு நன்றி திரு. வாசுதேவன் சார் . நான் முதலில் நம்ம கோபாலை தான் ஒப்பீடு செய்ய போவதாக நினைத்து படிக்க ஆரம்பித்தேன்.
திரு.வாசுதேவன் சார்,
தங்களுடைய ஆண்டனி, கோபால் - ஒப்பீட்டுப் பார்வை அருமை. இப்படியெல்லாம்கூட ஒப்பீடு செய்யமுடியுமா? அற்புதம்.
புதிய பறவை கோபாலையும், ஞான ஒளி ஆண்டனியையும் சேர்த்துவைத்த கலவையாக இருப்பவர் இங்குள்ள நம்ம வியட்நாம் கோபால் சார்???
வாசு சார்
நேர்த்தியான ஒப்பீடு
நடிகர் திலகத்தின் வேடங்களை இப்படி கூட ஒப்பீடு செய்ய முடியுமா எப்படி பாராட்டுவது என்று தெரியவில்லை
Gk
படிக்காத மேதை ரங்கன்
பராசக்தி குணசேகரன்
படித்தால் மட்டும் போதுமா ராஜு
தெய்வமகன் சங்கர் கண்ணன் மற்றும் விஜய்
கலாட்ட கல்யாணம் மதன்
sumathi என் sundari மது
விஎட்னம் வீடு பத்மநாபா ஐயர்
கெளரவம் பர்ரிச்ட்டர் ரஜினிகாந்த்
தங்க சுரங்கம் ராஜன்
பரத விலாஸ் கோபால்
புதிய பறவை கோபால்
வசந்த மளிகை ஆனந்த்
உத்தமன் கோபி
தங்க பதக்கம் சௌத்ரி
உயர்ந்த மனிதன் ராஜு
ஞான ஒளி அந்தோனி அருண்
மேலை குறிப்பிட்ட
சில வேடங்களை நினவு கூர்ந்து பார்கிறேன் .வேடங்கள் நினைவுக்கு வருகிறதா சிவாஜி நினைவிற்கு வருகிறாரா
அன்புள்ள வாசுதேவன் சார்,
புதிய பறவை கோபால், ஞானஒளி ஆண்டனி ஒப்பீடு மிக மிக அருமை. இப்படியெல்லாம் கூட ஆய்வு செய்ய முடியும் என்று எப்படி உங்களுக்குத் தோன்றுகிறது என்பதே முதல் ஆச்சரியம். அதை ஒவ்வொரு படியாக நீங்கள் ஒப்பிட்டுக் கொண்டே செல்லச் செல்ல ஆச்சரியம் பன்மடங்காகிறது.
இருவரும் காவல் துறையால் குறிவைக்கப்பட்ட அப்பாவிகள். (திட்டமிட்டு கொலை செய்யாமல் உணர்ச்சி வசப்பட்டு அடித்த அடியில் எதிராளி உயிர் போக, அதனால் கொலைக்குற்றம் சுமத்தப்பட்ட அப்பாவிகள்).
பெரிய வித்தியாசம், இன்ஸ்பெக்டர் லாரான்சைப் பார்த்ததுமே அருணாக இருக்கும் ஆண்டனி உஷாராகிறார். தனது ஒவ்வொரு அடியையும் கவனமாக எடுத்து வைக்கிறார். சாத்துக்குடி பிழிவதாகட்டும், சிலவர் டம்ப்ளர் வசனத்தைச்சொல்லி கையுறையை கழட்டுவதாகட்டும், தப்பாக கையெழுத்திட்ட செக்கைக் கிழித்து தன பாக்கெட்டிலேயே போட்டுக்கொள்வதாகட்டும், எங்கும் கவனம், எதிலும் கவனம், 'எதிரே இருப்பவன் என்னைப்பிடிக்க அலையும் போலீஸ்' என்ற எச்சரிக்கையுணர்வு.
ஆனால் அப்பாவி கோபால் நிலை அப்படியல்ல. கடைசிக்காட்சி வரை தன்னைச்சுற்றி இருப்பவர்கள் அனைவரும் (தன போலீஸ் நண்பன் குமார் உள்பட) அபிமன்யுவை வீழ்த்த சுற்றி வளைத்த கௌரவர் கூட்டம் என்பது தெரியவே தெரியாது. தன்னைப்பிடிக்க விரித்து வைக்கப்பட்ட வலையினுள்ளேயே இத்தனை நாள் வளைய வந்திருக்கிறோம் என்று அறியும்போது அடையும் அதிர்ச்சி, அது ஆண்டனிக்கு நேராத ஒன்று. அதனால்தான் "என்னை வீழ்த்த வேறு எந்த வேஷத்தையாவது போட்டிருக்க கூடாதா?" என்று அந்த அப்பாவி, அப்பாவித்தனமாகக் கேட்கும்போது நம் மனம் பதை பதைக்கும். அடப்பாவிகளா, எங்க அபிமன்யுவை இப்படி வேஷம் போட்டே வீழ்த்திட்டிங்களடா என்று கதறும்.
இருவரும் இறுதியில் சிறைக்குச்செல்கின்றனர். அதிலும் வித்தியாசம்..
தன மகளின் கற்பின்மீது சுமத்தப்பட்ட களங்கத்தை துடைத்து அவளை புனிதமாக்கிவிட்டோம் என்ற பெருமிதத்தோடு சிறைக்குச்செல்லும் தந்தை ஆண்டனி...
காதலி வேஷம் போட்டவளிடம் ஏமாந்து மாட்டிக்கொண்டோமே என்ற விரக்தியில் நடந்து போகும் காதலன்(?) கோபால்....
Dear Vasu Sir
The comparison between Puthiya paravai Gopal and Gnana oli Antony is unimaginable. Really you are man of imagination
C.Ramachandran
Dear Gopal,
I hope you understand the context and my stance regarding your subject of posting. I do not want my post and never had intention to hurt any body any time any how which includes you too.
Pls continue your in-valuable postings here.
Don't bother about other threads.
Raghavendran.
P.S. தங்கள் ஆய்வுக்கேற்ற தீனி வர உள்ளது. தயாராகுங்கள்.
டியர் வாசு சார்
தங்களுடைய உடல் நலம், பல்வேறு அலுவல்களுக்கிடையிலும் சிரமங்களுக்கிடையிலும் மீண்டும் இங்கே அந்தோணி மூலம் வருகை தந்து, மிகச் சிறப்பான ஆய்வை வழங்கியுள்ளீர்கள். தங்களுக்கு என் உளமார்ந்த பாராட்டுக்கள்.
கார்த்திக்,
என் மேல் தங்களுக்குள்ள நல்லெண்ணத்திற்கும் உயர்வான கருத்துக்கும் மிக்க நன்றி.
வருகிறேன்.... கீழே இறங்கி வருகிறேன் ... என்று துவங்கும் இந்த காட்சி, தமிழ்த் திரையுலக வரலாற்றில் வேறு யாராலும் கற்பனைக் கெட்டாத உயரத்தில் அமர்ந்து கொண்டு நடிகர் திலகத்தின் கொடியைப் பட்டொளி வீசிப் பறக்க வைத்துக் கொண்டிருக்கிறது.
உடல் மொழி, இயல் மொழி, இயற்கலை, விழிமொழி என நடிப்பின் பரிமாணங்கள் அத்தனையும் வரிசையில் வரிந்து கட்டிக் கொண்டு நமக்கு இலக்கணம் கூறுகின்றன.
தர்மசங்கடமான சூழலில் சிக்கிக் கொண்ட மனிதன் இப்படித் தான் தவிப்பானோ - இல்லை, இல்லை, இப்படித் தான் தவிப்பான் என ஆணித்தரமாகக் கூறுகிறது இக்காட்சி.
வாழவும் முடியாமல் சாகவும் முடியாமல் வாழ்க்கையில் விதியின் விளையாட்டை நொந்து கொள்பவர்கள் இப்படித் தான் நடந்து கொள்வார்களோ - இல்லை, இல்லை, இப்படித்தான் நடந்து கொள்வார்கள் என ஆணித்தரமாகக் கூறுகிறது இக்காட்சி.
இருக்கும் நண்பன் இறந்ததாக இருக்க வேண்டும், இருக்கும் கணவனை இருப்பதாக மனைவி எண்ண வேண்டும், இருக்கவும் முடியாமல் இறக்கவும் முடியாமல் தவிக்கிறேனே என இப்படித் தான் மனிதன் புலம்புவானோ - இல்லை, இல்லை, இப்படித் தான் புலம்புவான் என ஆணித்தரமாகக் கூறுகிறது இக்காட்சி.
தர்மசங்கடமான சூழல் ஏற்படும் காட்சியில் இப்படித் தான் நடிக்கவேண்டுமோ என நடிகன் நினைப்பானோ - இல்லை, இல்லை, இப்படித்தான் நடிக்க வேண்டும் என நடிகன் நினைப்பான்.
இப்படி எந்த சூழலில் மனிதன் எப்படி நடந்து கொள்வான், உளவியல் ரீதியாக அவன் எப்படி பாதிக்கப் படுவான் இவற்றையெல்லாம் மனோதத்துவ நிபுணர்களிடம் போய்த் தெரிந்து கொள்வதற்கு அவசியமின்றி, அவன் இப்படித் தான் பாதிக்கப் பட்டு நடந்து கொள்வான் என ஆணித்தரமாகக் கூறியுள்ளார் நடிகர் திலகம் இப்பாத்திரத்தின் மூலம்.
http://youtu.be/b6M8kvsCSAc
ஆண்டனி, கோபால் ஒப்பீட்டுப் பதிவை மனமுவந்து பாராட்டிய அன்பு நண்பர்கள் வாசுதேவன் சார், பரணி சார், சந்திரசேகரன் சார், கிருஷ்ணா சார், ராமச்சந்திரன் சார் அனைவருக்கும் என் உளம் மகிழ்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தங்களின் பாராட்டுதல்கள் என்னை மேலும் ஊக்கப்படுத்துகிறது. நன்றி!
டியர் கிருஷ்ணா சார்,
தாங்கள் தந்துள்ள தலைவர் வாழ்ந்து காட்டிய அத்தனை கேரக்டர்களும் அருமை. மீண்டும் ஒரு முறை ஞாபகப்படுத்தி அனைத்தையும் பார்க்க ஆவல் மீறிடுகிறது. இன்னும் ஒன்றே ஒன்று தங்களுக்காக நான் சேர்த்துக் கொள்கிறேன். 'வீர பாண்டியக் கட்ட பொம்மன்'. ஏனென்றால் (என்னுடைய அன்பு நண்பர் ஒருவர்... தீவிர தலைவரின் அபிமானி) தன்னுடைய பள்ளி நாட்களில் கட்டபொம்மனாக நடித்து சிறப்பான நடிப்பிற்காக முதல் பரிசு வாங்கி அசத்தினாராம். நடிகர் திலகத்தின் ரசிகரா... கொக்கான்னானாம். அந்த இனிய நண்பருக்கு இப்போது என்னுடைய பாராட்டுதல்களை தெரிவித்துக் கொள்கிறேன். அந்த நண்பரும் இங்குதான் மையத்தில் இருக்கிறார். ஓ.கேவா?
தங்கள் இனிய நினைவுகளுக்காக
https://www.youtube.com/watch?featur...&v=jKI0IJY5jp8
டியர் கார்த்திக் சார்.
http://cafeipiti.files.wordpress.com...2000-posts.jpg
தாங்கள் வேண்டாம் என்று மறுத்தாலும் நான் வாழ்த்தத்தான் செய்வேன்.
தங்களுடைய ஒப்பிடமுடியாத முத்து முத்தான இரண்டாயிரம் பதிவுகளுக்கு என் மன மகிழ்ச்சியுடன் கூடிய வாழ்த்துக்கள். மற்ற நண்பர்களின் பதிவுகளை வித்தியாசம் பாராது மனமுவந்து பாராட்டுவது மட்டுமல்லாது அந்த பதிவு தொடர்பான பல விஷயங்களை வெகு ஜனரஞ்சகமாக தாங்கள் எளிய முறையில் எங்களுக்கு தரும் அழகே தனி. அது போல பார்த்திருக்கிறேன். உங்கள் ஒரு, இரு வரிப் பதிவில் கூட கண்டிப்பாக ஒரு அருமையான மேட்டர் இருக்கும். மிஸ் ஆகவே ஆகாது. பலமுறை இதை எண்ணி நான் வியந்திருக்கிறேன். ஆழ்ந்து ரசித்திருக்கிறேன். தங்களுடைய இரண்டாயிரம் பதிவுகளும் ஒவ்வொன்றும் விஷயமுள்ளவை. வெளி உலகத்திற்குத் தெரியாத பல விஷயங்களை தாங்கள் எங்களுக்கு அளித்துள்ளீர்கள். (அதுவும் சென்னை தியேட்டர் அனுபவங்கள் பற்றி தாங்கள் எழுதும் பதிவுகள் என் போன்ற கடலூர் வாசிகளுக்கு அல்வா மாதிரி). ஆனால் நிறைகுடம் தளும்பாது என்பது போல தங்களின் அடக்கம் பல முறை என்னை ஆச்சரியத்தில் மூழ்கச் செய்துள்ளது. சமயத்தில் நீங்கள் திரிக்கு சில காலங்கள் வராமலிருந்தால் மிகவும் தங்களை மிஸ் செய்வேன்.
நடிகர் திலகத்தின் பெருமையை நமது திரியில் மட்டுமல்ல ...தங்களால் இயன்ற அளவிற்கு மற்ற திரிகளிலும் விட்டுக் கொடுக்காமல் நமது தலைவரின் புகழை நிலைநாட்டி வரும் தாங்கள் மென் மேலும் தங்கள் ஸ்டைல் பதிவுகளைத் தந்து, எனக்கு சீனியரான தாங்கள் எங்கள் நிறை குறைகளை சுட்டிக் காட்டி எங்களை வழி நடத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
மீண்டும் ஒரு முறை தங்களுக்கு என் இதயபூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆண்டனி கோபால் ஒப்பீட்டுப் பதிவுக்காக தாங்கள் அளித்த இனிய பாராட்டிற்கும் என் ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். தங்களுடைய ஆண்டனி கோபால் ஒப்பீட்டு விஷயங்கள் அருமை. அழகான விளக்கங்கள்.
தங்களுக்காக என்னுடைய special அன்புப் பரிசு.
http://karateramesh.com/Images/large/29.jpg
டியர் ராகவேந்திரன் சார்,
தங்கள் பாராட்டிற்கு மிக்க நன்றி. கீழே இறங்கி வந்து மற்றவர்களை மேலே ஏற்றிவிட்டு அழகு பார்த்த நமது அன்புக் கடவுளின் 'சாந்தி' மனப்போராட்டக் காட்சியின் வீடியோப் பதிவுக்கு நன்றி.
தாங்கள் கேட்டுக் கொண்டதின் பேரிலும், எங்கள் எல்லோருடைய வேண்டுகோளுக்கு செவி சாய்த்தும் கோபால் சார் கண்டிப்பாக விரைவில் வர வேண்டும்.' ராஜா' வாக நின்று 'நீதி' வழங்க வேண்டும்.
ஹாய் கோபால்,
இப்ப வர்றியா இல்லையா? நைசா ப்ளான் போட்டு 72 சாக்கில் ஒளியை எழுதி விட்டு என்னை உசுப்பேத்தி விட்டுட்டு நீ நழுவிக்கினியே.... இன்னாபா ஞாயம் இது... சீக்கிரம் வந்து தொலை. நீ வரலைன்னா நானும் வரலை...
Mr Gopal Sir,
Expecting your post on Lorry Driver & CID. Pls come soon.
சிரஞ்சீவி
நடிகர் திலகம் நடித்த படத்தில் அதிகம் விவாதிக்க படாத படத்தில் எதுவும் ஒன்று 1984 ல் வந்த படம் இது
கதை ஒரு கப்பலில் நடக்குது , அந்த கபளின் topaz ( துப்பரவு தொழிலாளி ) தான் டேவிட் சிரஞ்சீவி (நடிகர் திலகம் ), அவர் 7 வயது முதல் அந்த கப்பலில் வேலை செய்து கொண்டு வருகிறார் , அவர் யை எல்லோரும் அன்புடன் அங்கிள் என்றே அழைகிறார்கள் அவர் திருமணம் ஆகாதவர்
ஒரு நாள் அவர் reitre ஆக போவதை கப்பல் கேப்டன் தெரிவிக்கிறார். இந்த சமயத்தில் அவர் அந்த விஷியத்தை எடுத்து கொள்ளும் விதம் , அந்த முகத்தில் தான் எத்தனனை விதமான உணர்ச்சி , அவர் உடம்பும் நடிக்கிறது , பிறகு தன் மனசாட்சி சொல் படி கேட்டு கடைசியாக சிங்கப்பூர் ல் இருந்து சென்னை வரும் ட்ரிப் ல் தன் கடமையை செய்கிறார்
இந்த ட்ரிப் ல் வருவோர்கள் தான் ஸ்ரீ பிரியா (பைத்தியம் ), சரத்பாபு (கைதி ), சௌகார் (சிஸ்டர் ), தேங்காய் & மனோரமா (ஜோசியர்) சரத் யின் காதலி மற்றும் சத்யராஜ் & கோ
இவர்களின் பிரச்சனை யை எப்படி சிவாஜி தீர்த்து வைக்கிறார் என்பதே கதை. சௌகார் யிடம் இருக்கும் வைரம் , நகைகளை அபகரிக்க சத்யராஜ் & கோ முயற்சிப்பதும் , அது முடியாமல் போவதும் , சிவாஜி அதை தடுப்பதும் , ஒரு கடிதாசி யை வைத்து , யார் சௌகார் யிடம் கொள்ளை அடிக்க முயல்க்கியர்கள் என்பதை கண்டுபிடிப்பது , ஸ்ரீ பிரியா பைத்தியம் இல்லை என்பதை அறிந்து கொண்டு , அவர் தான் சௌகார் யின் மகள் என்பதை அறிந்து கொண்டு , சௌகார் க்கு பாவ மணிப்பு வழங்குவது , அதனால் தர்மசங்கடம் நேரும் பொது அதை தாங்கி கொண்டு நடப்பது , முடிவில் ஒரு பலன் கூட எதிர் பாராமல் உயிர் விடும் பொது மனதில் நிரந்து விடுகிறார்
இந்த படத்தில் சிவாஜி ஒரு அனாதை , அதுவும் ஒரு chirsitian , அதுக்கு தகுந்தாற்போல் அவர் மேக் உப பொருத்தம் , ஒரு அழுக்கு சட்டை அதில் மேல் பட்டன் போடாமல் , பெரிய சிலுவை அணிந்து கொண்டு , கடை நிலை உழியன் என்பதால் நடந்து நடந்து ஒரு பக்கமா நடப்பது , மூஞ்சியில் பெரிய கிருதா அதில் கொஞ்சம் நிரை என்று பாத்திரமாக வாழ்ந்து இருக்கிறார் (சிவாஜி சார் க்கு இது சொல்ல தேவை இல்லை )
கடல் ல் இருப்பதால் குரல் கூட கட்டடி இருக்கும் , இந்த படத்தில் அதுவும் சிவாஜி யின் பாத்திரத்தில் பிரதிபலிகிறது.
படம் முழுவதும் கப்பலில் எடுக்க பட்டு உள்ளது , இயக்குனர் சங்கர் கொஞ்சம் விறுவிறுப்பு , செண்டிமெண்ட் என்று படத்தை தொய்வு இல்லாமல் கொண்டு சென்று உள்ளார்
Dear Vasu sir,
Superb comparison of both Gopal & Arun , semma thinking hats off
நண்பர்களே,
நான் சில விஷயங்களால் irritate ஆனது உண்மை. ஆனால் ஆத்ம திருப்தி என்று சொல்லும் நான் ஆத்மார்த்தமாக ஈடு படும் விஷயத்தில் ,பொதுவான ஒரு forum இல் வந்து ஈகோ காட்டி கோபப்படுவது தவறு என்று நண்பர்களும் உணர்த்தி நானும் உணர்ந்து விட்டேன். அதனால் என் மனதுக்கு நெருக்கமான இந்த குழுவை எக்காலத்திலும் விட்டு கொடுக்க மாட்டேன். நான் சொல்லிய படி ,என் பதிவுகளை வரும் வாரம் சென்று ,மறு வாரத்திலிருந்து தொடர்வேன்.என்னுடைய முன்கோபம் என் பலவீனம். சுருக்கவே மீள்வது எனது பெரும் பலம்.
Gopal Sir
As a new visitor like me coming to this forum only because of your fantastic articles aobout our record creator sivaji. So dont stop to display your valuable information to this thread. Thanks for your message and expecting your early response
C.Ramachandran.
Dear All
OUR GREAT NADIGARTHILAGAM SIVAJI'S RE-RELEASE FILMS UNBREAKABLE RECORD IN TRICHY DISTRICT
1. IRUVAR ULLAM - KALAI ARANGAM A/C - CAPACITY 1600 SEATS - 21 DAYS - YEAR 1987
2. VEERA PANDIYA KATTA BOMMAM - MARIS ROCK A/C - 19 DAYS - YEAR 1984
3. KARNAN - RAMBA A/C - 28 DAYS AND CONTINUOUS SHIFTING OORVASHI A/C - 14 DAYS - YEAR 2012[/FONT][/B]
NOBODY CAN TOUCH THIS RECORD ---- SIVAJI IS RECOR CREATOR OF 20TH AND 21ST CENTURY -- HIGH CLASS AND TOP CLASS AUDIENCE ALWAYS WITH SIVAJI
டியர் ராகுல் ராம்,
சிரஞ்சீவி திரைப்படத்தைப் பற்றிய தங்கள் பதிவு அபூர்வமான படங்களைப் பற்றி எழுத வேண்டும் என்ற தங்களுக்குள்ள ஆர்வத்தைப் புலப்படுத்துகிறது. தொடருங்கள்.
http://www.nadigarthilagam.com/paper...ivirunning.jpg
நடிகர் திலகத்தின் சிறந்த நடிப்பினை இப்படத்திலும் காணலாம். குறிப்பாக சௌகார் ஜானகியிடம் ஆறுதல் கூறும் இடம். ஒரு போதகராகத் தோன்றும் காட்சி மிகவும் அருமையாக இருக்கும். படம் முழுதுமே ஒரு soft approach நடிகர் திலகத்தின் கதாபாத்திரத்தில் தென் படும். மிகவும் விரிவாக அலசப் பட வேண்டிய கதா பாத்திரம்.
பாராட்டுக்கள்.
Dear All
OUR GREAT NADIGAR THILAGAM'S RE-RELEASE FILMS UNBREAKABLE REOCRD IN NON A/C THEATRES IN TRICHY DISTRICT
1. TRICHY RAJA - VIDI VELLI - 21 DAYS - 15 SHOUS HOUSE FULL - YEAR 1982
2. TRICHY WELLINGTON - PATTIKADA PATTANAMA - 28 DAYS -- YEAR 1986
3. TRICHY JUPITER - PARTHAL PASITHEERUM - 17 DAYS - YEAR 1987
4. TRICHY PRABHAT - IRUVAR ULLAM - 23 DAYS - YEAR 1982
5. TRICHY MULLAI (THIS IS NOT A/C THEATRE) - PASAMALAR - 16 DAYS - YEAR 1989
6. TRICHY BALAJI (OUTER) - THANGA PATHUMAI - 19 DAYS -IN THIS THEATRE NO BODYS FILM RUN EVEN 10 DAYS - YEAR 1986
ALWAYS WE THINK BIG SO THAT WE ARE RECORDING OUR SIVAJI'S RE-RELEASE FILMS WHICH RUN MORETHAN 20 DAYS AND PROUDLY SAY THERE MORE NO OF
RE-RELEASE FILMS RUN 2 WEEKS IN TRICHY DISTRICT AND WE DONT HAVE MUCH SPACE FOR RECORDING THE SAME.
Also please note that only sivaji's re-release films run 50 days without any gap in trichy district. Nobody create this record for the past 60 years
1. IRUVAR ULLAM - KALAI ARANGAM (21) -CONTINUOUS SHIFT PRABHAT (21) - CONT SHIFT ROXY (9 DAYS) - 51 DAYS
2. KARNAN - RAMBA (28) -CONT SHIFT OORVASHI (14) - CONT SHIFT TV KOIL VENKATESA (10) ---52 DAYS
Amazing Ram .... Keep it up ...
NT 's recoed in Nellai
Raja re-releasd on 30-Mar-1983 ran for 3 weeks with full houses in Nellai Sivasakthi.How I still remember the date is the 29-mar-1983 was my last exam of X SSLC and me and my friend went to watch Neethipathi in Sivasakthi to refresh ourselves from the exam pressure.Only after going there we came to know that was las day of Nethipathi which ran for 63 days.Raja was still going strong even after completing 3 weeks .however same had to be shifted out due to prior commitment for Raja in other areas
நெல்லை என்ன திருச்சி என்ன எந்த ஊராக இருந்தால் என்ன நடிகர் திலகத்தின் ஜீவநாடிகள் அவருடைய புகழைப் பரப்பிக் கொண்டே இருப்பார்கள் என்பதை நிரூபிக்கும் வண்ணம் தங்கள் ஊர் வெற்றி விவரங்களைப் பதிவிடும் சண்முகா, ராம் அனைத்து நண்பர்களுக்கும் உளமார்ந்த பாராட்டுக்கள்.