கலைஞர் இன்று தன்னுடைய முகநூல் பக்கத்தில் அவர் குறித்து நடிகர் திலகம் பேசிய ஒளிக்காட்சியை பகிர்ந்திருக்கிறார்கள்
https://www.facebook.com/Kalaignar89...55638611115012
Printable View
கலைஞர் இன்று தன்னுடைய முகநூல் பக்கத்தில் அவர் குறித்து நடிகர் திலகம் பேசிய ஒளிக்காட்சியை பகிர்ந்திருக்கிறார்கள்
https://www.facebook.com/Kalaignar89...55638611115012
Dear RKS,
NT spoken the word NEVER in different accent and he gave new dimension. Example in Niraikudam when he have a conversation with Major before the operation and
in Gowravam with Pandaribai. I still do know how he uses the word for two different situation with different accent. That is why we called him as an Acting God.
Bachelor's child play differs from the child care by a Wedlocked!
NT's penchant for comedy has been revealed in many movies like Bale Paandia, the hilarious one being Galaatta Kalyaanam (for the first time teaming up with Jayalalitha as his love interest though he dared to act as her father alongside Kaanchanaa too, in MSP earlier). His much slim and slender getup sometimes stirs up mixed feelings in us as to why he could not concentrate on maintaining his frame that is very handsome even today! In Deivamagan too NT dominated in comedy scenes with an edge over Nagesh! Enjoy with a smile, the way a bachelor novice NT foreshores his expressions in a delicate situation of quandry in pacifying an abandoned child that goes into uncontrollable crying, in the apt company of Nagesh, with his trade mark copying of Jerry Lewis pattern comical expressions!!Also enjoy the maturity with which the trained NT alone deals with a child in Uththaman in a different situation.
https://www.youtube.com/watch?v=kAntINJE0s0
https://www.youtube.com/watch?v=hF98K5ToYUU
நடிகர் திலகம் அவர்கள் மேக்-அப் பற்றி
மேக்-அப் என்பது ஒரு தனி கலை.
முக அலங்காரம் பற்றி பேசும்போது ஒரு குறிப்பிட்ட மேக்-அப் மேன் பற்றி ஒரு சிலர் மிகவும் மிகைபடுத்தி பேசுவார்கள். அதாவது அவரிடம் மேக்-அப் போட்டுக்கொள்ள வரிசையில் நின்று காத்து கிடந்து போட்டுகொள்வார்கள் , அவர் தாடி ஓட்டும் கலையில் வல்லவர்...அப்படி இப்படி என்று...!
அவர் நடிகர் திலகம் அவர்களுக்கு மேக்-அப் போட்டு அது பேசப்பட்டுள்ளதா என்று தெரியவில்லை. எனக்கு தெரிந்தவரையில் நடிகர் திலகம் அவர்கள் எதிர்பார்க்கும் தரத்திற்கு அவர் ஈடுகொடுக்க முடியாததால் அவர் இவருடைய மேக்கப் உதவியாளர் என்ற அந்தஸ்த்தை பெற முடியவில்லை என்று நினைக்கிறன் !
ஏதோ கொஞ்சம் பவுடர் பூசினோம், pancake தடவிவிட்டோம், மீசை வரைந்தோம், உதட்டுசாயம் பூசினோம் என்று ஏனோ தானோ என்று அலங்காரம் செய்பவர்கள் நடிகர் திலகத்திடம் நிச்சயம் ஈடுகொடுக்க முடியாதல்லவா !
ஆனால் நடிகர் திலகம் அவர்கள் போட்டுக்கொண்ட மேக்கப் - அது எந்தளவிற்கு மேக்கப் கலையிலும் நடிகர் திலகம் அவர்கள் கைதேர்ந்தவராக இருந்திருந்தால் சர்வ சாதாரணமாக இவரே கையாண்டுள்ளார் என்று பாருங்கள். !!!
http://i501.photobucket.com/albums/e...psc9ebfad2.jpg
நடிகர் திலகம் அவர்கள் போட்டுக்கொண்ட மேக்கப் - அது எந்தளவிற்கு மேக்கப் கலையிலும் நடிகர் திலகம் அவர்கள் கைதேர்ந்தவராக இருந்திருந்தால் சர்வ சாதாரணமாக இவரே கையாண்டுள்ளார் என்று பாருங்கள். !!!
http://i501.photobucket.com/albums/e...ps2e32d906.jpg
நடிகர் திலகம் அவர்கள் போட்டுக்கொண்ட மேக்கப் - அது எந்தளவிற்கு மேக்கப் கலையிலும் நடிகர் திலகம் அவர்கள் கைதேர்ந்தவராக இருந்திருந்தால் சர்வ சாதாரணமாக இவரே கையாண்டுள்ளார் என்று பாருங்கள். !!!
http://i501.photobucket.com/albums/e...psbad6ae00.jpg
கடந்த சில வாரங்களாக குமுதம் இதழில் சொல்வது நிஜம் என்ற தலைப்பில் பத்திரிக்கையாளர் மணா அவர்கள் எழுதி வரும் அனுபவ தொடர் இடம் பெறுகிறது. அதில் இந்த வாரம் நடிகர் திலகத்துடனான தன அனுபவங்களை பகிர்ந்துக் கொண்டிருக்கிறார். இதில் பாராட்டப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால் உண்மைகளை எழுதி இருக்கிறார். இன்றைய சூழலில் நடிகர் திலகத்தைப் பற்றிய உண்மைகளை எழுதுவதனால் எந்த வித லாபங்களும் கிடைக்காது என்று தெரிந்தும் உண்மைகளை சரியான முறையில் பதிவு செய்ததற்கு அவருக்கு மனங்கனிந்த நன்றி.
இன்றைக்கு நம்மை சுற்றிலும் காணும் வரலாறு தெரியாத [அரசியல், சினிமா, விளையாட்டு என்று எந்த அரங்கை எடுத்துக் கொண்டாலும்] பத்திரிக்கையாளர்கள் மத்தியில், தெரியாதவற்றை தெரிந்தது போல் அள்ளி விடும் பத்திரிக்கையாளர்கள் மத்தியில், பொய் செய்திகளை பொய்யான வரலாறு தகவல்களை உண்மை போல் எழுதி மக்களை ஏமாற்றும் பத்திரிக்கையாளர்கள் மத்தியில், தாங்கள் சார்ந்த இயக்கத்தைப் பற்றி அல்லது தங்களுக்கு பிடித்தவரை, அபிமானத்துக்குரியவரை வரலாற்று பொய்களின் மூலம் அவர்களின் பிம்பங்களை உயர்த்திப் பிடிப்பதற்கு மக்களின் நம்பகதன்மையைப் பெற்ற பாரமபரியமிக்க பத்திரிக்கைகளை பின்புலமாகவும் ஆடுகளமாகவும் பயன்படுத்தும் பத்திரிக்கையாளர்கள் மத்தியில் இன்றும் உண்மை பேசுபவர்கள் இருக்கிறார்கள் என்பதே மிகவும் மகிழ்ச்சியான விஷயம்தானே!
மீண்டும் நன்றி மணா அவர்களே! Let your tribe grow!
அன்புடன்
மாநகர் மதுரையில் நடிகர் திலகத்தின் வெள்ளை ரோஜா இன்று முதல் சென்ட்ரல் திரையரங்கில் வெளியிடப்பட்டு எப்போதும் போல் சிறப்பான வரவேற்பை பெற்றிருக்கிறது. இன்றைய தினத்தில் 4 காட்சிகளில் ஏறத்தாழ 700 பேர்கள் கண்டு களித்திருக்கின்றனர். சற்றேறேக்குறைய 15,000/- ரூபாயை மொத்த வசூலாக பெற்றிருக்கிறது. முதல் நாளைப் பொறுத்தவரை அண்மையில் வெளியான தங்க சுரங்கம் படத்திற்கு அடுத்தபடியான வசூல் இது. சென்ட்ரல் திரையரங்க வளாகமே முழுமையாக அலங்கரிக்கப்பட்டு அரங்கிற்கு வெளியேயும் மிகப் பெரிய பானர்கள் கட்டப்பட்டு ஒரு புதுப் பட ரிலீஸ் தோரணையில் டவுன் ஹால் ரோட்டில் போவோர் வருவோர் கவனத்தையெல்லாம் கவர்ந்து கொண்டிருக்கிறது என்று நண்பர் சந்திரசேகர் தகவல் தெரிவித்தார். குறிப்பாக நண்பர் சுந்தர்ராஜன் அவர்கள் பதிவிட்ட ரசிகர்கள் அமைத்துள்ள நடிகர் திலகத்தின் பல படங்களின் போஸ்கள் ஸ்டாண்டிஸ் கட் அவுட் ஆக அமைக்கப்பட்டு ஸ்டார் attraction ஆக திகழ்கிறது என்பதையும் சொன்னார்.
சென்னை மகாலட்சுமியில் இன்று முதல் இரண்டு காட்சிகளாக திரையிடப்பட்டிருக்கும் [முன்னரே குறிப்பிட்டது போல் இப்போது மகாலட்சுமியில் இரண்டு காட்சிகள் மட்டுமே ஒரு படம் திரையிடப்படுகிறது] நடிகர் திலகத்தின் சங்கிலி திரைப்படமும் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது என்று தெரிய வந்துள்ளது. மேலதிக விவரங்கள் கிடைத்தவுடன் அதை இங்கே பகிர்ந்துக் கொள்கிறேன்.
சந்தோஷ செய்திகளுடன் மீண்டும் சந்திப்போம்.
அன்புடன்
Courtesy The Hindu Tamil
ராமநாதபுரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதியில் அடைமழை பெய்து எங்கு நோக்கினும் வெள்ளக்காடாகக் காட்சியளித்துக்கொண்டிருக்கிறது.
1959 அல்லது 1960 நவம்பர் மாதம் என நினைவு. நான் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த நேரம். வீடு மற்றும் உடமைகளை இழந்த மக்கள் பொது இடங்களில் தங்கவைக்கப்பட்டிருந்தனர். வெள்ளச் சேதங்களைப் பார்வையிட அன்றைய முதலமைச்சராக இருந்த காமராஜர் எங்கள் பகுதிக்கும் வந்திருந்தார்.
குடியிருப்புப் பகுதிகளில் முழங்கால் அளவுக்கு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருந்ததையும் பொருட்படுத்தாமல், அவர் தனது வேட்டியைத் தூக்கி மடித்துக் கட்டிக்கொண்டு, வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிய பகுதிக்குள் சென்று மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய நிகழ்வு இன்னும் எனது நினைவில் பசுமையாக நிற்கிறது.
காமராஜர் போன்று எந்த முதல்வரும் மழை வெள்ள நேரத்தில், பாதிக்கப்பட்ட மக்களை நேருக்கு நேர் சந்தித்து ஆறுதல் கூறியதாக நினைவில்லை. எளிமை, நேர்மை இவற்றுடன், ஊழல் கறை ஏதும் இல்லாது வாழ்ந்த தன்னலமற்ற அரசியல்வாதி காமராஜர். அத்தகைய நேர்மையாளர் வாழ்ந்த காலத்தில் நானும் இருந்தேன் என்பது பெருமையே.
- சசிபாலன், ‘தி இந்து’ இணையதளம் வழியாக…
Keywords: காமராஜர், அடைமழை, அது பெருமையே
https://scontent-a-nrt.xx.fbcdn.net/...a3&oe=54C321B2
மஹாராஜா மார்த்தாண்ட பூபதி...Simply superb performance in Sarithira Nayakan... A different diction in pronouncing the word "Bhuvaneshwari". One scene is a classic example. தன்மேல் கோபமும் ஆத்திரமும் பழிவாங்கும் உணர்ச்சியும் கொண்டு வாழும் தங்கையின் கணவர் கொலை செய்யப்பட்ட செய்தி கிடைத்தவுடன் பாண்டியராஜாவின் பரிதவிப்பு .... நடிகர் திலகம் என்ற உலகமகா கலைஞனின் புதிய பரிமாணம் இந்த இடத்தில் வெளிப்படும். வார்த்தைகளை முழுங்கி முழுங்கி பாதியிலேயே நிறுத்தி நிறுத்தி அதன் மூலம் தங்கையின் மேல் பாசத்தையும் பிரதிபலித்து, அவளுடைய அறியாமையை எண்ணி வருத்தமும் கொண்டு, தன் தங்கையின் வாழ்க்கையில் இத்தகைய அவலநிலையைக் கொண்டு வந்தவர்கள் மேல் கோபமும் கண்டு, இவற்றிற்கெல்லாம் மேலாக தன்னுடைய சுயகௌரவத்தையும் விட்டுக்கொடுக்காமல் அந்த சூழ்நிலையிலும் தலைநிமிர்ந்து நிற்கும் புதியதொரு காட்சிச்சூழல்.. இவ்வளவு உணர்ச்சிகளையும் வெளிப்படுத்த வேண்டுமானால் அதற்கு உலகில் இருக்கும் ஒரே கலைஞன் நடிகர் திலகம் மட்டுமே.. சும்மாவா சொன்னார்கள் சரித்திர நாயகன் என்று...
Two saving graces for this movie
நடிகர் திலகத்தின் மாறுபட்ட உச்சரிப்பு... குறிப்பாக புவனேஸ்வரி என்ற வார்த்தையை அவர் இந்தப் படத்தில் பிரயோகித்திருக்கும் விதம்...பல்வேறு காட்சிகளில் பல்வேறு உணர்ச்சிகளில் தன் தங்கையை புவனேஸ்வரி என அழைக்கும் போது, ஒவ்வொரு உணர்ச்சிக்கும் ஏற்ப அதனை வேறுபடுத்தியிருப்பது... பிரமிக்க வைக்கும் பரிமாணம்...
படத்தின் துவக்கத்தில் பிரபுவிற்குக் கிடைத்த ஒரு அருமையான கராத்தே சண்டைக் காட்சி.
படத்தைப் பற்றிச் சொல்ல வேண்டுமென்றால்...
வேண்டாம் ... விட்டு விடுவோம்...சொல்வதற்கு வேறொன்றுமில்லை.
சிகரம் தொட்ட திரைப்படங்கள்:
நகைச்சுவை நடிப்பில் நாகேஷ் சிகரம் தொட்ட திரைப்படங்கள் பல.
எம்.ஜி.ஆர்.,- சிவாஜியுடன் இணைந்து பல திரைப்படங்களில் நகைச்சுவையின் பரிமாணங்களை நயமாகவும் நுட்பமாகவும் அவர் வெளிப்படுத்தி இருக்கிறார்.
குறிப்பாக, 'தில்லானா மோகனாம்பாள்' திரைப்படத்தில் அவர் ஏற்ற வைத்தி வேடமும்,
'திருவிளையாடல்' படத்தில் ஏழை தருமி பாத்திரமும் சாகா வரம் பெற்றவை.
நகைச்சுவை நடிகர்கள் வேறு எவரிடமும் காணப்பெறாத - நாகேஷிடம் மட்டுமே காணக்கூடிய தனிச்சிறப்பு - நடிகர் திலகத்திற்கு ஈடு கொடுக்கும் விதத்தில் நாகேஷ் முக பாவனையில் காட்டி இருக்கும் எதிர்வினை ஆகும்.
சிவாஜிக்கு இணையாக, ஜாடிக்கு ஏற்ற மூடியாக நடிப்பில் சோபித்தார் நாகேஷ்
நடிகர் திலகதிதின் 86 வது பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி மாரிஸ் குருப் சிவாஜி பக்தர்கள் வெளியிட்டுள்ள நாங்கு பிட் போஸ்டர்
https://mail.google.com/mail/u/0/?ui...&sz=w1337-h488
நடிகர் திலகதிதின் 86 வது பிறந்தநாளை முன்னிட்டு பட்டுக்கோட்டை ரசிகர் வெளியிட்டுள்ள போஸ்டர்
https://mail.google.com/mail/u/0/?ui...&sz=w1337-h488
நடிகர் திலகதிதின் 86 வது பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி சிவாஜி ரசிகர்கள் வெளியிட்டுள்ள போஸ்டர்
https://mail.google.com/mail/u/0/?ui...&sz=w1337-h488
உலகம் போற்றும் பெண் :
1995 am aandu nagarkovilil nadandha oru thirumana nigazchiyil kalandhu kondu
vazhthi pesiya nadigar thilagam sivaji ganesan kooriyathu:
" palar thangalukku பெண் குழந்தை பிறந்தால் ஆண் குழந்தை பிறக்கவில்லையே என்று வருத்தபடுகிரர்கள். மகாத்மா காந்திக்கு ஆண்
குழந்தைகள் மட்டுமே பிறந்தன. இன்று உலகில் காந்திஜியை மட்டும்தான் தெரியும். அவர் பிள்ளைகளை யாருக்கு theiryum?
Aanal, Nehruvirku ore oru பெண் குழந்தை than pirandhadhu. Ulagam போற்றும்
piradhamar indiravaga அவர் thigalthandadai kankooda parthom. enave, பெண் குழந்தை பிறந்தால் kavalaipadathergal.
From the issue of Kumudam dt 24.09.14
1960-களின் இறுதியில் துவங்கி நடிகர் திலகத்தின் படங்கள் வெளியான கால கட்டத்தைப் பற்றிய எனது நினைவலைகளை தாங்கிய இந்த தொடர் பதிவின் அடுத்த கட்டம். இது புதிய பதிவு.
கடந்த பதிவின் இறுதி பகுதி.
தர்மம் எங்கே படத்திற்கு ஜூலை 16-ந் தேதி மாலைக் காட்சி போவதற்கு நாங்கள் ஓட்டமும் நடையுமாய் தேவி டாக்கீஸ் சென்றோம். தானப்ப முதலி தெரு வழியாக வடக்கு மாசி வீதி கடந்து கிருஷ்ணாராயர் தெப்பக்குள தெரு தாண்டி B 4 போலீஸ் ஸ்டேஷன் பக்கத்து தெருவில் நுழைந்தபோதுதான் புரிந்தது கூட்டம் பற்றி பல ரசிகர்களும் சொன்னது எந்தளவிற்கு சரி என்று!
இங்கிருந்து பதிவு தொடர்கிறது.
அந்த நாள் ஞாபகம்
நான் என் சிறு வயது முதல் பல நடிகர் திலகத்தின் படங்களுக்கு பெரிய அளவில் மக்கள் கூட்டத்தைப் பார்த்திருக்கின்றேன். பிரம்மாண்ட கூட்டத்தையும் பார்த்திருக்கிறேன். முதல் நாள் அல்லாமல் படம் வெளியான சில நாட்களுக்குள் பெரிய கூட்டம் என்று சொன்னால் அது தங்கத்தில் கர்ணன் படத்திற்கும் ஸ்ரீதேவியில் திருவிளையாடல் படத்திற்கும் பார்த்த கூட்டத்தை குறிப்பிட வேண்டும். அவை இரண்டுமே மிக சிறிய வயதில் பார்த்தது என்பதனால் நாங்கள் சென்றது எத்தனையாவது நாள் என்பது எனக்கு தெரியவில்லை.
ஆனால் ஓரளவிற்கு விவரம் தெரிய ஆரம்பித்தவுடன் முதல் நாள் கூட்டம் பார்த்தது என்றால் அது முதன் முதலில் 1967 நவம்பர் 1 தீபாவளி அன்று சென்ட்ரலில் ஊட்டி வரை உறவு படத்திற்கு பார்த்த கூட்டம்தான். இப்போதும் நினைவிருக்கிறது. யாரோ உறவினர்கள் அந்த தீபாவளிக்கு வந்திருந்ததால் ஒரு சினிமாவிற்கு போவோம் என்ற முறையில் வீட்டிலிருந்து சென்ற படம் என்பது நினைவில் இருக்கிறது.[ஏன் என்றால் அதற்கு முன்போ அல்லது பின்போ முதல் நாள் படம் பார்க்க வீட்டில் பெற்றோருடன் போனதேயில்லை. பின்னாட்களில் கசினுடன் சேர்ந்து முதல் நாள் போனதுண்டு]. தாயாருடன் சென்றதால் [தந்தை மற்றும் ஆன் உறவினர்கள் வெளியில் நிற்க] சென்ட்ரல் உள்ளே போக முடிந்தது. ஆனால் டிக்கெட் கிடைக்கவில்லை. அப்போது பார்த்த கூட்டம் சரியான கூட்டம்.
அதன் பிறகு மதுரையில் பெரிய அளவில் வந்த முதல் நாள் கூட்டங்கள் என்று சொன்னால் தில்லானா, எங்க மாமா, சொர்க்கம், ராஜா, வசந்த மாளிகை, ராஜ ராஜ சோழன், எங்கள் தங்க ராஜா, கெளரவம், சிவகாமியின் செல்வன், தங்கபதக்கம், அவன்தான் மனிதன், அண்ணன் ஒரு கோவில் திரிசூலம் இவற்றையெல்லாம் குறிப்பிடலாம். ஆனால் எனக்கு தெரிந்தவரை அல்லது நான் பார்த்தவரை பிரம்மாணடமான பயங்கரமான கூட்டம் என்று சொன்னால் நான் இரண்டு படங்களைத்தான் குறிப்பிடுவேன். ஒன்று சிவந்த மண் மற்றொன்று தர்மம் எங்கே! மற்ற படங்களுக்கு வந்தது பெரிய கூட்டம். ஆனால் சிவந்த மண் மற்றும் தர்மம் எங்கே படத்திற்கு வந்ததோ பிரம்மாண்டத்தையும் தாண்டியது.
மதுரையில் ஸ்ரீதேவி திரையரங்கம் அமைந்திருந்த [ஆம், இப்போது அந்த அரங்கம் இல்லை. apartment ஆக மாறி விட்டது] தெருவிற்கு ஒர்க் ஷாப் ரோடு என்று பெயர். ஸ்ரீதேவி திரையரங்கம் அன்றைய நாட்களில் மதுரையில் ஏனைய அரங்குகளை விட [தங்கம் திரையரங்கை தவிர்த்து விட்டுப் பார்த்தால்] பெரிய வளாகத்தை கொண்டது. தெருவில் ஆரம்பித்தால் உள்ளே அரங்கம் அமைந்திருக்கும் இடம் வரை நல்ல விசாலமான ஏரியா. சைக்கிள் மற்றும் கார் பார்க்கிங் வரை செய்யலாம். இரு பக்கமும் நீளமான கம்பிகளுக்குள் அமைக்கப்பட்டிருக்கும் ticket counter வரிசை. உள்ளே பெண்களுக்கு என்று தனி counter என பலவேறு வசதிகள். நான் முன்னர் குறிப்பிட்டது போல் அவையெல்லாம் இடிக்கப்பட்டு குடியிருப்பு வளாகமாக மாறி விட்ட போதிலும் அந்த திரையரங்கை காண வேண்டுமென்றால் இயக்குனர் பார்த்திபன் இயக்கி வெளிவந்த ஹவுஸ் புல் [House Full] படத்தில் காணலாம். அந்த படம் முழுக்க ஸ்ரீதேவி திரையரங்கிலேதான் படமாக்கப்பட்டது.
(தொடரும்)
அன்புடன்
http://i1146.photobucket.com/albums/...ps07046b8c.jpg
மனமார்ந்த வாழ்த்துக்கள் கிருஷ்ணாஜி... சமீப காலத்தில் அசுர வேகத்தில் பதிவுகளைப் பகிர்ந்து கொண்டு 2000 பதிவுகளைக் கடந்து உள்ளீர்கள். பாராட்டுக்கள். தொடர்ந்து நடிகர் திலகத்தின் புகழ் பாடும் பதிவுகளையும் எதிர்பார்க்கிறேன்.
அன்புடன்
ராகவேந்திரன்
Ancient Times Marina was called as Chola Mandala Kadarkarai then it was named as Coramandala Kadarkarai.
Sivaji hailed from Cholas clan so the right man in right place
http://i501.photobucket.com/albums/e...psf3e59189.jpg
http://www.youtube.com/watch?v=ulNjLsIV3JU
பம்மலார் ,
தங்கள் calender மிக சிறப்பு என்று நண்பர்கள் சிலாகித்தனர். எந்த pose என்பதில்தான் போர் நடக்கிறதாம். நன்றிகள்.
தங்களுக்கு அளிக்க நினைத்த பிறந்த நாள் பரிசு தாமதமானதற்கு மன்னிப்பு கோருகிறேன். நேரமின்மை (அதுவும் விடுமுறை நாட்களில் இதை செய்ய இயலாதே)
தினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி - 28-09-2014
தமிழகத்தின் அதிர்ஷ்டம் சிவாஜி கணேசன்! - ஏ.வி.எம். சரவணன்
அக்., - 1 சிவாஜி பிறந்த நாள்
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தமிழ்த் திரையில் அறிமுகமான படம், பராசக்தி. இப்படத்தை, பி.ஏ.பெருமாளுடன் இணைந்து தயாரித்தவர் ஏ.வி.மெய்யப்பன். ஏ.வி.எம்., மகனும் பிரபல திரைப்படத் தயாரிப்பாளருமான ஏ.வி.எம்.சரவணன், சிவாஜியுடன் நெருங்கிப் பழகியவர்; சிவாஜியின் பிறந்த நாளை ஒட்டி, அவரைப் பற்றிய பல சுவாரசியமான விஷயங்களை, வாரமலர் இதழுக்காக பகிர்ந்து கொண்டார். அது:
கடந்த, ஏப்., 9, 1958ஐ என்னால் மறக்க முடியாது. அன்று தான், ஏ.வி.எம்., ஸ்டுடியோ மற்றும் தயாரிப்பு பொறுப்பாளராக பொறுப்பு ஏற்றுக் கொண்டேன். ஸ்டுடியோ நிர்வாகியான ரங்கஸ்வாமி அய்யங்கார், ஸ்டுடியோவில் இருந்தோரை எனக்கு அறிமுகப்படுத்தினார். அப்போது, ஸ்டுடியோவின் ஐந்தாவது தளத்தில், தெய்வப் பிறவி படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. அங்கு தான் முதன் முதலில் சிவாஜியைச் சந்தித்தேன். அவருடைய நல்வாழ்த்துக்களுடன் என் சினிமாப் பயணம் துவங்கியது.
எங்கள் குடும்பத்தின் நல்ல நண்பர் சிவாஜி. என்னை எங்கு எப்போது சந்தித்தாலும், 'நல்லா இருக்கிங்களா?' என்று மனதார கேட்பார். அத்துடன், 'உங்க மனைவி லட்சுமி, பிள்ளைங்க எல்லாம் நல்லா இருக்காங்களா...' என்று பாசத்தோடு கேட்பதுடன், 'மறக்காமல் உங்க மனைவி லட்சுமிகிட்டே நான், அவங்களை விசாரிச்சேன்னு சொல்லுங்க...' என்பார். அடுத்து, எப்பவாவது என் மனைவியை சந்திக்கும் போது, 'என்னம்மா லட்சுமி... நான் உங்களை விசாரிச்சேனே... உங்க வீட்டுக்காரர் சொன்னாரா?' என்று, 'கன்பர்மேஷனு'க்கு கேட்டு விடுவார்.
என் தந்தையிடம் மிகுந்த மரியாதையும், பாசமும் கொண்டவர் சிவாஜி. அவரது மகள் சாந்தியின் திருமணத்தின் போது, என் தந்தைக்கு தான் முதல் பத்திரிகை கொடுத்தார். எங்கள் வீட்டில் எந்த நிகழ்ச்சி நடந்தாலும், சிவாஜியை முதல் வரிசையில் உட்கார வைப்பார் என் தந்தை.
அதேபோன்று, தன் அமெரிக்க நண்பர்களிடம், சிவாஜியை அறிமுகம் செய்யும் போதெல்லாம், 'தமிழகத்தின் அதிர்ஷ்டம், சிவாஜி கணேசன் இங்கு பிறந்திருக்கிறார்; அமெரிக்காவின் துரதிருஷ்டம், அவர் அங்கு பிறக்கவில்லை...' என்று கூறுவார்.
சிவாஜி சிறந்த நடிகர் மட்டுமல்ல; நல்ல குடும்பத் தலைவர். சகோதரர்கள், மகன்கள் மற்றும் பேரப்பிள்ளைகள் என்று கூட்டுக் குடும்பமாக, ராஜ வாழ்க்கை வாழ்ந்தவர்.
இப்படத்தின் ஐம்பதாவது ஆண்டை, ஏ.வி.எம்., ஸ்டுடியோவில் விழா எடுத்து கொண்டாட வேண்டும் என்று மிகவும் விரும்பினார் சிவாஜி. ஆனால், துரதிருஷ்டவசமாக விழா எடுக்க அவர் இல்லை. அப்படத்திற்காக எடுக்கப்பட்ட முதல் காட்சியில், 'சக்ஸஸ்...' என்று சொல்வார் சிவாஜி. அக்காட்சி, ஸ்டுடியோ தளத்திற்குள் எடுக்கப்படாமல், ஏ.வி.எம்.,மில் வெளிப்புற காட்சியாக எடுத்திருந்தனர். அதே இடத்தில், அவரது நினைவு சின்னம் ஒன்றை வைத்தோம். சிவாஜியின் மகன்கள் ராம்குமாரும், பிரபுவும், 'நினைவுச் சின்னம் திறப்பதற்கு நடிகர் கமலை கூப்பிடலாம்; அது தான் பொருத்தமாக இருக்கும்...' என்றனர். தன் கலை வாரிசு என்று, சிவாஜியால் அறிவிக்கப்பட்ட கமல், அக்.,19, 2002ல், சிவாஜி சிலையை திறந்து வைத்தார்.
அகில இந்திய திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு என்னை தலைவராக தேர்ந்தெடுத்தனர். அதைத்தொடர்ந்து சர்வதேச திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் என்ற உலக அமைப்பிற்கு, ஜப்பான், சீனா, இந்தியா மற்றும் ஸ்ரீலங்கா போன்ற ஆசிய நாடுகளின் பிரதிநிதியாகவும், சர்வதேச சங்கத்தின் துணைத் தலைவராகவும் தேர்ந்தெடுத்தனர். அதன் தலைமை செயலகம் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் உள்ளது. இந்த பொறுப்பு எனக்கு கிடைத்ததற்காக, சிவாஜி தன்னுடைய தலைமையில் எல்லா நடிகர்களையும் அழைத்து, எனக்கு பாராட்டு விழா நடத்தினார். அத்துடன். தனிப்பட்ட முறையிலும், தேனீர் விருந்தும் கொடுத்தார். அவர், என் மீது கொண்டிருந்த பாசத்தை நினைத்தால், இன்னும் மெய் சிலிர்க்கிறது.
சிவாஜி நடித்த, 125வது படம் ஏ.வி.எம்.,மின், உயர்ந்த மனிதன். உத்தர் புருஷ் என்ற வங்காள மொழி படத்தை, தமிழில் தயாரிக்க முடிவு செய்தோம். அப்படத்தை சிவாஜிக்கு போட்டு காண்பித்தோம். படத்தை பார்த்ததும், அவருக்கு மிகவும் பிடித்து விட்டது. உத்தர் புருஷ் படத்தின் கதைக் கருவை ஒட்டி எடுக்கபட்ட, உயர்ந்த மனிதன் படத்துக்கு திரைக்கதை, வசனம் எழுதிய ஜாவர் சீதாராமனிடம், சிவாஜியின் நடிப்புத்திறமையை வெளிப்படுத்தும் விதமாக எழுதும்படி கேட்டுக் கொண்டோம். கிருஷ்ணன் - பஞ்சு இயக்குனர்கள். இப்படத்திற்கு சிவாஜி முன்பணமோ, வேறு தொகையோ வாங்கிக் கொள்ளவில்லை. படம் வெளியான பின் தான் அவருக்கு சேர வேண்டிய பணத்தை பெற்றுக் கொண்டார்.
கலைத்துறைக்கு சிவாஜி ஆற்றியுள்ள அளப்பரிய சேவையைப் பாராட்டி, பிரஞ்சு அரசு, மிக உயர்ந்த, 'செவாலியே' விருதை அளித்து கவுரவித்தது. அதை ஒட்டி சென்னையில் நடைபெற்ற பாராட்டு விழாவில், சத்ரபதி சிவாஜி குதிரையில் அமர்ந்திருப்பது போன்று வெள்ளியில் செய்யப்பட்ட (தோட்டா தரணி உருவாக்கியது) சிலையை, தமிழ்த் திரை உலக சார்பில், சிவாஜிக்கு வழங்கினேன்.
ஒரு முறை, திருலோகசந்தர் டைரக்ட் செய்யும் படத்தின் படப்பிடிப்பிற்கு சென்றிருந்தேன். அங்கு, படப்பிடிப்பில் இருந்த சிவாஜியை பார்த்து, 'ஏன் ஒரு மாதிரி இருக்கிறீர்கள், உடம்பு சரியில்லையா?' என்று கேட்டேன். 'உடம்பைத் தொட்டுப்பார்...' என்றார். தொட்டுப் பார்த்தால், உடம்பு அனலாக கொதித்துக் கொண்டிருந்தது. 'உடம்பு கொதிக்கிறதே... ஓய்வு எடுத்துக்க வேண்டியது தானே?' என்று கேட்டேன்.
'நாளை, 'வியட்நாம் வீடு'ன்னு ஒரு நாடகம் அரங்கேற்றம் செய்றேன்; அதிலே எனக்கு ஒரு பிராமணர் கேரக்டர். அதை சிறப்பாக செய்யணுமேன்னு டென்ஷன்; அதனால் தான் ஜுரம்...' என்றார் சிவாஜி. 'பிராமணர் கேரக்டரிலே நடிக்கிறது உங்களுக்கு ஒன்றும் சிரமமானது இல்லையே...' என்றேன்.
'அது, சாதாரண பிராமணர் ரோல் இல்லை; பிரஸ்டீஜ் பத்மநாபன் என்ற எமோஷனலான கேரக்டர். அந்த சீரியசான கேரக்டரிலே நடிக்கிறபோது, ஏதாவது தப்பா போயிட்டா மக்கள் காமெடியா நினைச்சு சிரிச்சுடுவாங்க...' என்றார்.
அவர் அழைத்ததை அடுத்து, மறுநாள் மியூசிக் அகாடமியில் நடந்த, 'வியட்நாம் வீடு' நாடகத்தின் அரங்கேற்றத்திற்கு போயிருந்தேன்; திரை விலகியது... நான் அங்கே சிவாஜியைப் பார்க்கவில்லை; பிரஸ்டீஜ் பத்மநாபனைத்தான் பார்த்தேன்.
ஒரு முறை கமல்ஹாசன், சிவாஜியைப் பற்றி கூறும் போது, 'ஒருவர் தன் நூறாவது படத்தில் நடிக்கிறபோது கிடைக்கிற பர்பெக் ஷனை தன் முதல் படத்திலேயே கொடுத்தவர் சிவாஜி...' என்று குறிப்பிட்டார். 'சிவாஜியிடம் என்ன மாதிரியான கேரக்டரில் நடிக்கப் பிடிக்கும்?' என்று கேட்டால், 'நடிக்க, 'ஸ்கோப்' இருக்கிற கேரக்டர்களில்...' என்று சொல்வார்.
நடிப்பில் ஈடு இணை இல்லாத நடிகராக இருந்த போதும், கடைசி வரை சிறந்த நடிகருக்கான, 'பாரத்' விருது அவருக்கு தரப்படவில்லை என்பது வருத்தமான விஷயம். முதல் மரியாதை படத்துக்காக அவருக்கு கிடைத்திருக்க வேண்டிய விருது கூட நழுவி, ஒரு வங்காள நடிகருக்கு போய்விட்டது.
எப்போதோ கிடைத்திருக்க வேண்டிய, 'பால்கே சாகிப்' விருது கூட, அரசியல் காரணமாக தள்ளிப்போய், 1997ல் தான் கிடைத்தது. அவருக்கு விருது அளித்ததற்காக, அப்போதைய மத்திய செய்தி ஒலிபரப்புத்துறை அமைச்சரான ஜெயபால் ரெட்டியை சந்தித்து, நன்றி சொன்னேன். 'இந்த விஷயத்தில் நான் தலை இடவே இல்லை; அவார்டுக்குரிய தேர்வு கமிட்டி அவரை தேர்ந்தெடுத்தது; எனவே, எனக்கு எதற்கு நன்றி சொல்கிறீர்கள்...' என்று கேட்டார். 'ஒரு கமிட்டியை போட்டு, அதில் எந்தத் தலையீடுமின்றி சுதந்திரமாக தகுதியான நபரை தேர்ந்தெடுத்து, கவுரவிக்க வாய்ப்பு தந்ததற்காகவே உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்...' என்றேன் பதிலுக்கு!
சிவாஜி - சினிமாவுக்கு, சினிமா ரசிகர்களுக்கு கிடைத்த வரம்!
எஸ்.ரஜத்
திருச்சி மாரிஸ் குரூப் சிவாஜி பக்தர்கள் நடிகர் திலகத்தின் 86 வது பிறந்தநாள் விழாவிற்கு வெளியிலட்ட 4 பிட் போஸ்டர்
https://scontent-b-sin.xx.fbcdn.net/...8a&oe=54C64512
பம்மலாரின் காலண்டர் கையில் வாங்கியவுடன் ஏற்படக்கூடிய சிலிர்ப்பினை அனுபவித்தால் தான் அதன் சிறப்பை உணர முடியும்
நான் ரசித்த கலைஞர் நிகழ்ச்சி இப்போது கலைஞர் தொலை காட்சி
பராசக்தி பற்றிய சில காட்சிகளை லட்சிய நடிகர் பகிர்ந்து கொண்டு இருக்கிறார்
நீயா நானா நடிகர் திலகம் ஸ்பெஷல் நிகழ்ச்சியில் திரையரங்க அலங்காரங்களைப் பற்றிய நேயர்களின் நினைவுகளைப் பகிர்ந்து கொள்ளும் பகுதி தனியே யூட்யூப் இணைய தளத்தில் தரவேற்றப்பட்டுள்ளது. இப்பகுதியில் தான் முரளி சார் பேசும் தெய்வம் திரைப்படத்தின் நினைவுகளையும், கிருஷ்ணாஜீ ரோஜாவின் ராஜா திரைப்படத்தின் நினைவுகளையும் அடியேன் சொர்க்கம் திரைப்படத்தின் நினைவுகளையும் பகிர்ந்து கொள்ளும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.
http://www.youtube.com/watch?v=eicTiUl8NNg
நன்றி யூட்யூப் இணைய தளம் மற்றும் விஜய் டிவி
Tributes to NT : in commemoration to his ensuing Birthday celebrations
Mangaiyar thilagam : A movie with a difference in concept and performance by lead artists NT and Padmini who used to pair up hitherto but this time the later acting as the wife of NT's brother character!
Vaidya Films’ Mangaiyar Thilagam- 1955 was produced by A.C.Pillai, and directed by L.V.Prasad. Based on a Marathi story, it was a moving tale of an elder brother (S.V.Subbiah), and his wife (Padmini) who shower love and affection upon the younger brother, who grows up to become Sivaji. As he is much younger to Subbiah, he worships Padmini as his mother and is deeply attached to her. However, his wife (M.N.Rajam) gradually starts resenting his affection for Padmini, and the family’s tranquility is soon lost. (courtesy net)
https://www.youtube.com/watch?v=730Zdr-L5Pw
https://www.youtube.com/watch?v=0MCg1F3e20Q
https://www.youtube.com/watch?v=r4H5gzfuBlo
மாநகர் மதுரையில் நடிகர் திலகத்தின் வெள்ளை ரோஜா சென்ட்ரல் திரையரங்கில் வெளியிடப்பட்டு முதல் நாள் சிறப்பான வரவேற்பை பெற்றதை பகிர்ந்து கொண்டிருந்தேன். நேற்றைய தினம் தமிழகத்தில் நிலவிய அசாதாரண சூழல் காரணமாக மாலை மற்றும் இரவு காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. நேற்று காலை முதல் பதற்றமான சூழல் இருந்தும் காலை மற்றும் மதிய காட்சிகளுக்கு 200-க்கும் அதிகமான மக்கள் வந்திருக்கிறார்கள். இன்று சற்று இயல்பு நிலை திரும்பியவுடன் பொது மக்கள் குறிப்பாக தாய்மார்கள் திரையரங்கிற்கு கணிசமான அளவில் வந்திருக்கின்றனர். இன்று நண்பகல் முதலே மதுரையில் சரியான மழை. விட்டு விட்டு பெய்த மழை மாலை நேரத்தில் வலுவாகவே பெய்திருக்கிறது. ஒரு பக்கம் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறுமோ என்ற பயம், பேருந்துகள் முழுமையாக இயக்கப்படாமல் குறைந்த அளவிலே ஓடும் சூழல், இவை போதாதென்று தொடர்ந்து பெய்த மழை இப்படி எதிர்மறை சூழல்களிலும் இன்று மாலைக் காட்சிக்கு வருகை தந்தவர்கள் எண்ணிக்கை 450. ஞாயிறு மாலைக் காட்சியைப் பொறுத்தவரை தங்கசுரங்கதையும் தாண்டிய வசூல். இன்றைய தினம் இரவுக் காட்சியோடு மொதத் வசூல் ரூபாய் 40,000/--ஐ கடந்திருக்கிறது. நேற்றைய தினத்தில் மட்டும் அந்த இரண்டு காட்சிகள் ரத்து செய்யப்படாமல் இருந்திருந்தால் மூன்று நாள் மொத்த வசூலில் புதிய சாதனை படைத்திருக்கும்.
சென்னை மகாலட்சுமியில் இன்று முதல் இரண்டு காட்சிகளாக திரையிடப்பட்டிருக்கும் நடிகர் திலகத்தின் சங்கிலி திரைப்படமும் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது என்று சொல்லியிருந்தேன். தமிழகமெங்கும் நேற்று மாலைக் காட்சி நடைபெறவில்லை என்பதனால் நேற்று மதியக் காட்சி ஓடிய சங்கிலி திரைப்படமும் நேற்று மாலைக் காட்சி ரத்து செய்யப்பட்டது. இன்றைய தினம் பகல் மற்றும் மாலைக் காட்சிக்கு மக்கள் திரளாக வந்திருந்து ரசித்தனர்.மூன்று நாட்களில் நடைபெற்ற 5 காட்சிகளில் மொத்த வசூல் சுமார் ரூபாய் 30, 000/-.
கோவையில் அசாதாரண சூழ்நிலை சற்று தீவிரமாகவே இருந்தது. பதற்றம் முற்றிலும் தணிந்து விடாத நிலைமை. கோவை நகரை பொறுத்தவரை தனியார் பேருந்துகள்தான் பெரும்பான்மையான மக்கள் பயன்படுத்தும் போக்குவரத்து. இன்றும் பெரும்பான்மையான தனியார் பேருந்துகள் இயக்கப்படாத நிலைமை. டிலைட் அரங்கை அடைவதற்கே பஸ் இல்லாத காரணத்தினால் குறிப்பிட்ட தூரம் வரை நடந்து வரவேண்டிய நிலை. சென்னை போன்று ஷேர் ஆட்டோக்கள் இல்லாத இடம். நேற்று முதல் டிலைட் அரங்கில் தினசரி 2 காட்சிகளாக திரையிடப்பட்ட எங்க மாமா திரைப்படத்தை இரண்டு தினங்களில் நடைபெற்ற 3 காட்சிகளில் [டிலைட்டில் பகல் மற்றும் மாலைக்காட்சி என்று இரண்டே காட்சிகள்தான், அதிலும் நேற்று மாலைக்காட்சி ரத்து செய்யப்பட்டு விட்டது] இந்த அசாதாரண சூழலிலும் டிலைட் போன்ற அரங்கில் திரையிடப்பட்டும் கூட 460-க்கும் அதிகமான மக்கள் பார்த்து ரசித்திருக்கின்றனர். இன்றைய பதற்றமான சூழலில் கோவையில் புதுப் படங்களுக்கு கூட பெரிய அளவில் ஆட்கள் வரவில்லையெனும் போது இது ஒரு மெச்சத் தகுந்த நிகழ்வு.
சந்தோஷ செய்திகளுடன் மீண்டும் சந்திப்போம்.
அன்புடன்
http://i157.photobucket.com/albums/t...ps324821d3.jpg
தன்னை காண மற்றவர்களை காக்க வைத்தவர்கள் மத்தியில்Quote:
நமக்கு வெலை இருக்கிறமாதிரி கூட்டத்துக்கு வந்திருக்கிறவன்
ஒவ்வொருத்தனுக்கும் ஒரு வேலை இருக்கும்லே
நாம கூட்டம் முடிஞ்சு நம்ம வேலைய பார்க்கிறமாதிரி
ஆளுக்காள் பார்பாங்க இல்லே
எதுக்காக அவங்கள காக்க வைக்கணும்
என்று எதுவித பகட்டும் இல்லாமல் சொன்னவர்
சரியான நேரத்திற்கு கூட்டத்திற்கு கிளம்பிவிட்டார்
உங்களுக்காக மற்றவர்கள் காத்திருக்கக்கூடாது
அவர்கள் வேலைகள் கெட்டுவிடக்கூடாது
என நினைத்து செயல்பட்ட நீங்கள்தான் ஐயா
பொன்மனச்செம்மல்
http://i157.photobucket.com/albums/t...ps6e5d571d.jpg
தாங்கள் சொன்னதை சொல்லும்படியும் எழுததும்படியும் கூறி
அவற்றை சொல்லவைத்தும் எழுதவைத்தவர்களுக்கு முன்னால்
உனக்கு தோணுறத அப்படியே எழுது எனச்சொன்ன
ஐயா கணேசனே உன்போல் யார் உளர்?
உண்மையானவர்கள் நேர்மையானவர்கள் மனச்சாட்சி
உள்ளவர்கள் மட்டுமே உன்னை புரிந்துகொண்டவர்கள்
Tributes to NT : in commemoration to his ensuing Birthday celebrations
பழுத்த மரம்தான் கல்லடி வாங்கும். பசுமரமோ இடி தாங்கும் . பட்டமரமோ அடியோடு விழுந்து விடும்! மனிதவாழ்வும் இந்தத் தத்துவத்திற்கு உட்பட்டதே! வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும் வையகம்!
நான் பெற்ற செல்வம் (1958) திரைப்படத்தில் இடம் பெற்ற இப்பாடல் காட்சியில் நடிகர்திலகத்தின் Close-up shot superimpose செய்யப்பட்டு அவரது நுண்ணிய முகபாவ மாற்றங்கள் ஒரே shotல் நம்மை மெய்மறக்க வைக்கும்!
இத்தகைய concept shots ரசிகர்களின் மனதில் பதிவது நடிகனின் திறமையான பாடல் வரிகளுக்கேற்ற expressions மூலமே! சிவாஜிகணேசன் ஏன் நடிகர்திலகமாக நடிப்புப்பேரரசராக ரசிகர் மனதில் சிம்மாசனமிட்டு வீற்றிருக்கிறார் என்பதற்கு இக்காட்சி ' ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்'
பாவமன்னிப்பு திரைப்படத்தில் இடம்பெற்ற 'சிலர் சிரிப்பார் சிலர் அழுவார்...' பாடலும் இத்தகைய concept பாடலே!
இதன்பிறகு 1964ல் வெளிவந்த சங்கம் ஹிந்தி திரைப்படத்திலும் கதாநாயக இயக்குனர் ராஜ்கபூர் அவர்கள் இதே conceptல் ஒரு பாடல் காட்சியை அமைத்திருப்பார்
https://www.youtube.com/watch?v=_ongMRRVZrk
https://www.youtube.com/watch?v=OrrHhgNBMX8
https://www.youtube.com/watch?v=OLnSZSSJp5M