Dear SP
A small request :
kindly consider avoiding words like No other actor, only actor etc., when we talk about releases and re-releases. Because this always triggers the other sensitive people.
thanks
Printable View
Dear SP
A small request :
kindly consider avoiding words like No other actor, only actor etc., when we talk about releases and re-releases. Because this always triggers the other sensitive people.
thanks
Dear Ragavendran sir,
thanks for Compliments sir, indepth analysis will be done today sir
அறிவு ஜீவிகள் என்று கூறிக் கொண்டு நடிகர் திலகத்தின் சில படங்களை மட்டும் அதுவும் பிரபலமான படங்களை மட்டும் பாராட்டி விட்டு நானும் சிவாஜி ரசிகன் என்று சொல்லிக் கொண்டு திரிபவர்கள் மத்தியில், அவருடைய பின்னாளைய படங்களையும் எடுத்துக் கொண்டு அலசும் ராகுல் ராம் அவர்களைப் போன்ற ரசிகர்களை மனதார வரவேற்பதை நான் கடமையாகவும் பெருமையாகவும் கருதுகிறேன். நடிகர் திலகத்தின் அனைத்துப் படங்களிலும் அவருடைய பங்களிப்பைப் பாராட்டும் ரசிகர்களை நான் மனமார வரவேற்கிறேன். தீவிரமான விசுவாசமான பக்தி சிரத்தையுள்ள ரசிகர்களைக் கொண்டுள்ளதால் தான் எம்.ஜி.ஆர் அவர்கள் இன்றும் மக்கள் மனதில் நிலைகொண்டிருக்கிறார் என்பதை நம் நண்பர்கள் உணர வேண்டும். அதைப் போன்ற வேகம், அதைப் போன்ற விசுவாசம் மட்டுமே நடிகர் திலகத்தை நாம் அடுத்த தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்க உதவும் என்பது தான் என் எண்ணம்.
நடிகர் திலகத்தின் படங்களைப் பற்றி, அதுவும் குறிப்பிட்ட ஒரு படத்தைப் பற்றிய விவாதம் நடந்து கொண்டிருக்கும் போது வேறு படத்தைப் பற்றியோ அல்லது சம்பந்தமில்லாத வேறு பதிவுகளோ வரும் போது சம்பந்தப் பட்ட விவாதம் இடையில் நிறுத்தப் பட நேரிடுகிறது. உதாரணமாக ஞான ஒளி படத்தைப் பற்றிய விவாதம் நடைபெறும் போது நானே ஞானப் பறவை படப் பாடலைக் குறிப்பிட்டேன். இதைத் தவிர்த்திருக்கலாம் எனத் தோன்றுகிறது. எதிர்காலத்தில் இது போல் நேராமல் பார்த்துக் கொள்கிறேன். மற்ற நண்பர்களுக்கும் இதையே நான் வேண்டுகோளாய் வைக்கிறேன். முடிந்த வரையில் ஒரு விவாதம் முடிந்த பிறகு மற்றதைத் தொடரலாமே. இதனால் இரு படங்களைப் பற்றிய விவாதங்களுமே பாதிக்கப் படலாம்.
அதே சமயத்தில் புதியவர்களுக்கு இதனால் தொய்வு மனப்பான்மை ஏற்படவும் வாய்ப்பிருக்கிறது. இது எப்போது முடியுமோ நாம் எப்போது போடுவது என்று எண்ணி அவர்கள் கலந்து கொள்வதையே தவிர்க்கவும் சந்தர்ப்பம் நேரிடலாம்.
இதற்கு சரியான தீர்வை நண்பர்கள் ஆலோசித்து வழங்க வேண்டுகிறேன்.
Nadigar Thilagam's films in TV Channels this week
AMARA KAVIYAM RAJ DIGITAL PLUS 10.09.2013 1 PM
DEEPAM MEGA TV 10.09.2013 12 NOON
IMAIGAL RAJ TV 10.09.2013 1.30 PM
AVAN ORU SARITHIRAM RAJ TV 11.09.2013 1.30 PM
ANNAIYIN ANAI RAJ DIGITAL PLUS 12.09.2013 1 PM
NEETHIPATHI RAJ TV 12.09.2013 1.30 PM
RAJA MARIYATHAI RAJ DIGITAL PLUS 12.09.2013 8 PM
THOOKKU THOOKKI MURASU TV 12.09.2013 7.30 PM
EN MAGAN RAJ TV 13.09.2013 1.30 PM
NEELAVANAM JAYA TV 13.09.2013 10 AM
OORUM URAVUM RAJ DIGITAL PLUS 13.09.2013 1 PM
VIDIVELLI MEGA TV 13.09.2013 12 NOON
AVAN THAN MANITHAN J MOVIES 14.09.2013 1 PM
RAJA MARIYATHAI RAJ TV 14.09.2013 1.30 PM
அதை நெறிப்படுத்தும் பொறுப்பை குறிப்பிட்ட ஒருவர் எடுத்துக்கொள்ளலாம் . என்னைக் கேட்டால் நீங்கள் தான் அதற்கு சரியானவர் .
எனவே ஒரு குறிப்பிட்ட படத்தைப்பற்றிய விவாதம் நடந்து கொண்டிருக்கும் போது போதுமான அளவுக்கு அலசியாகிவிட்டது என நீங்கள் நினைக்கும் போது அதை குறிப்பிட்டு அந்த விவாதத்தை முடித்து வைக்கலாம் .
ஜோ சார்,
எனக்கு தனிப்பட்ட முறையில் தோன்றும் கருத்து, அந்த கருத்துப் பரிமாற்றத்தை ஆரம்பித்தவரே அதை முடித்து வைப்பதாகக் கூறினால் பொருத்தமாகவும் உசிதமாகவும் இருக்கும். முடிந்தால் ஒரு காலக் கெடுவும் வைத்துக் கொள்ளலாம்.
அதில் ஒரு சிக்கல் இருக்கிறது . சிலர் ஆரம்பித்துவிடுவார்கள் ,பின்னர் அதிகமாக இங்கே வரமுடியாமல் போகலாம் . அதனால் தான் எப்போதும் தொடர்ந்து இங்கே வந்து கவனித்துக்கொள்ளும் உங்களைப் போன்ற ஒருவர் பொதுவாக அந்த நெறியாழ்கையை செய்வது நல்லது என்பது என் கருத்து .
மற்றவர்கள் என்ன கருத்தை கொண்டிருக்கிறார்கள் என பார்ப்போம்.
சிரஞ்சீவி படத்தின் நடிகர் திலகத்தின் கேரக்டர் யை மட்டும் எடுத்து தனியா எழுதணும் என்று ராகவேந்திரன் சார் , போட்ட பதிவு தான் நான் இதை எழுத காரணம் . மேலும் இது வரை நடிகர் திலகத்தின் பாத்திரம் அனாதை என்ற பாரத்துடன் வாழ்ந்த தெய்வ மகன் கண்ணன் , அந்தோனி கூட இந்த டேவிட் சிரஞ்சீவி யை ஒப்பிட்டு எழுத போகிறேன்
வாசு சார் யின் பாணி தான்
ஒரே மாதிரி பாத்திரங்கள் எடுத்து நடிப்பது என்பது ஒரு நடிகரின் வாழ்க்கையில் சகஜம் அதுவும் நடிகர் திலகம் போலே ஏக பட்ட படங்களில் நடித்த நடிகர் க்கு இது ஒரு சாதாரன நிகழ்வு தான் ஆனால் அந்த ஒரே பாத்திரத்தை ஒரு நடிகர் எப்படி வெளி கொண்டு வருகிறார் என்பதே முக்கியம்
தெய்வ மகன் கண்ணன் ஆகட்டும் , கண்ணன் ஆகட்டும் அவர்கள் வாழ்க்கையில் ஒரு சோகம் இருக்கும் , தான் ஒரு அனாதை என்பது, நீதியில் தான் ஒரு அனாதை என்ற வலியை கொஞ்சம் arrogance இருக்கும் ஆனால் இந்த டேவிட் சிரஞ்சீவி படத்தில் அந்த ஒரு angle இருக்கவே இருக்காது.
அதே மாதிரி தான் ஒரு அனாதை என்ற கோபம் , சமுகத்தில் மேல் ஒரு வெறுப்பு , தான் கவனிக்க பட வேண்டும் என்ற ஒரு எண்ணம் , அந்த கோபம் கூட தன்னை ஒரு கருவியாக எடுத்து கொண்டு இந்த சமுகம் advantage அக எடுத்து கொள்ள கூடாது என்பதுக்காக போட்டு கொண்ட ஒரு தற்காப்பு வேலி தான் (கோபம் தான் நல்ல உள்ளகளுக்கு ஒரே தற்காப்பு என்றதை ஒரு புத்தகத்தில் படித்ததாக ஒரு நினைவு )
டேவிட் சிரஞ்சீவி இந்த சூத்திரத்தில் அடங்காத பாத்திரம் , அவருக்கு கோபம் என்பது ரொம்ப provoke செய்தால் மட்டுமே வருகிறது
அதே போலே தெய்வ மகன் கண்ணன் மற்றும் ஒலி அந்தோனி இருவருக்கும் வாழ்க்கையில் ஒரு personal கோஅல் என்பது இருக்கும் .
கண்ணனுக்கு தன் பெற்றோர்களை கண்டுபிடிப்பது , அந்தோனிக்கு தன் மகளின் வாழ்வு மற்றும் father யின் ஆசைகளை நிறைவேற்ற வேண்டும் என்று ஒரு தாகம். நீதி யின் நாயகனுக்கு தன்னால் பாதிக்க பட்ட குடும்பத்துக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற ஒரே இலக்கு
டேவிட் சிரஞ்சீவி க்கு இந்த மாதிரி சொந்த அபிலாஷை என்பதே கடையாது , சொந்த விருப்பு , வெறுப்பு என்பது கிடையாது , அவர் வேலை செய்யும் கப்பலில் வரும் பயணிகளின் ஷேமம் மட்டுமே ஒரே குறிக்கோள்
என் பார்வையில் தெய்வ மகன் கண்ணன் , ஒலி அந்தோணி இருவரின் வாழ்க்கையிலும் காதல் என்ற ஒரு அம்சம் கடுகு அளவாக இருக்கும் , சிரஞ்சீவி யில் அதுவும் இருக்காது , ஒரே துறவி போலே வாழ்கை சிரஞ்சீவிக்கு .(நீதி யில் கடைசியில் எல்லாம் சுபம் )
அதானால் தான் சௌகார் பாவ மணிப்பு கேட்கும் பொது அவர் கண்ணில் ஒரு தெய்வீக ஒலி மற்றும் ஒரு தேஜஸ் . அந்த காட்சியில் அவர் குரலும் அதுக்கு ஏற்றரர் போல் ஒரே வித base வாய்ஸ் மற்றும் echo உடன் எதிரொலிக்கும்
கண்ணனுக்கு தான் ஒரு அனாதை தன்னை தன் அப்பா அனாதை அக்கி விட்டார் என்ற ஒரே குறை மற்றும் சுமை
அந்தோனி க்கு தன் பேத்தி யின் கல்யாணத்தை முடிக்க வேண்டும் என்ற சுமை. நீதியில் ஒரு emotional outburst காட்சி உண்டு.
சிரஞ்சீவிக்கு சௌகார் தன் மேல் மதிப்பு வைத்து பாவ மணிப்பு கேட்டு , அந்த உண்மையை வெளியே சொல்ல முடியாமல் , மோசடிநபர்கள் செய்யும் வேலைகள் தன் 30 வருட குட்வில் யை இழக்கும் என்று தெரிந்தும் அதை கர்த்தர் இட்ட கட்டளை என்று தெரிந்தே பழி என்ற சிலுவையை சுமகிறார்
இந்த உலகத்தில் நல்லவர்கள் வந்த வேலை முடிந்த உடன் சென்று விடுவார்கள் என்ற விதிக்கு ஏற்ப , சிரஞ்சீவி கடைசி மூச்சு வரையில் கடமையே கண் என்று உயிர் விடுகிறார் (கடைசி காட்சியில் அவர் பேசும் வசனம் கம்பீரம் + கருணை )
இந்த படங்களில் நடிகர் திலகத்தின் costumes மற்றும் accesories என்று பார்த்தல்
தெய்வ மகன் யில் ஒரு tight full hand டிரஸ் . அந்தோனி 3/4 pant , நீதியில் ஒரே costume (இவர்களின் costume என்பது ஒரே pattern அல்லது ஒரே டிரஸ் தான் )
சிரஞ்சீவி யில் நடிகர் திலகத்தின் டிரஸ் என்பது தன் சீருடை மட்டுமே , அதும் அடர்த்தியான கிர்தா, முன்னாடி பட்டன் போடாமல் அந்த சிலுவை யை பிரகாசமாக காடும் அந்த விரிந்த மார்பு , சற்று தளர்ந்த நடை (அந்தோனி க்கு பணம் கிடைக்க வில்லை என்றல் இப்படி தான் நடந்து இருப்பாரோ )
இப்படி பாத்திரத்தில் ஒற்றுமை இருந்தாலும் அதை present செய்யும் விதத்தில் மாறுதல் இருக்கும்
இந்த பாத்திரத்தில் நடிகர் திலகம் 5 வருடத்துக்கு ஒரு முறை சராசரியாக நடித்தாலும் இந்த பாத்திரம் ஒரு matured performance இருக்கும் , காரணம் டைரக்டர் யின் அணுகுமுறை , காலம் நம் நடிகர் திலகத்தின் வாழ்வில் ஏற்படுத்தும் ஒரு matured outlook யை கொடுக்கும்
இந்த சமூகமும் , பக்குவம்
இனிய விநாயக சதுர்த்தி வாழ்த்துக்கள்.
முழு முதற்கடவுள் கணேசனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் கூறும் முழுமுதல் நடிப்பு கடவுள் கணேசன் பக்தர்கள்.
Rahul Ram,
I do not mean to discourage you but modelling others style and copying is not good for you in the long run. Like Pammalar,Murali, Karthik,Ragavendhar,Vasudevan all have different and distinct style ,you develop your own style instead of aping others.
You Pl.Develop some taste for movies instead of mechanically writing whatever comes to your mind. Atleast ask your mother whether she likes the Film that you are going to write about.
We do not want to dilute others good work in this thread. You can read more and develop a taste. Do not copy others as you demean their writing also.
You are young and I appreciate your enthusiasm.
Dear Gopal sir,
I got inspired from Vasu saar's writing its true and for comparison I had no other go other than comparing the same roles played by him
உத்திரகண்ட் மாநிலத்தை சேர்ந்த தருண் விஜய் என்ற எம்.பீ தமிழை பெருமை படுத்தி பேசியுள்ளது நம்மை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது.
http://tamil.oneindia.in/news/2013/0...il-183012.html
நம் தமிழுக்கே பெருமை சேர்த்த தமிழன் நடிகர்திலகத்தை போற்றுவதில்
"உலக தமிழர்களே ஒன்று படுங்கள்."
Thanks for your information Sir.
Ravichandran,
Warm welcome to the world of Nadigar Thilagam Fans. We are very eager to read your views, nostalgia about Nadigar Thilagam. Before that kindly introduce and say about yourself.
Raghavendran
Dear Sir,I am happy to be welcomed by one of the great admirers of NT.My native is Musiri.FUpto 5th standard i studied in Musiri.from 6th to 8th ,I studied in SAINIK School,Amaravathinagar.Then upto 12th I studied in E.R school trichy.I did diploma in civil in SIT,Trichy.Joined L&T thro campus in 1987.Upto 2004 I worked there.In that about 10years I worked in NorthIndia.I resigned in 2004 .Now I am taking care of automobile spares shop owned by my Brother in Law.With regard to how I became a fan of NT,since my mother was a teacher I was brought up mostly by my mother's sisters who were Sivaji fans and quiet naturally,they made me as a fan of NT thro the food and milk which in turn became my blood.I think this is enough for now and I am proud to be a simple fan of NT
சில நாட்கள் இடைவெளிக்கு பின் அனைவரையும் மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
புதிய பறவை கோபால் ஞான ஒளி ஆண்டனி ஆகிய இருவரையும் ஒப்பிட்டு வாசு அவர்கள் எழுதிய comparative study மிக மிக சுவையாக அந்த இரண்டு பாத்திரங்களையும் மீண்டும் கண் முன் கொண்டு வருவதாக அமைந்திருந்தது. வாழ்த்துகள் வாசு.
நண்பர் கார்த்திக் அடிக்கடி விஷயம் ஒன்றை குறிப்பிடுவார். என்னவென்றால் சென்னை, மதுரை போன்ற நகரங்களில் பழைய நினைவுகளை இங்கே பகிர்ந்து கொள்வது போல் திருச்சி மாநகரில் நடிகர் திலகத்தின் பொற்கால சாதனை நாட்களை பற்றிய நினைவுகளை பகிர்ந்து கொள்ள யாரேனும் இருந்தால் எவ்வளவு இனிமையாக இருக்கும் என்று குறிப்பிடுவார். அந்த குறை போக்கும் வண்ணம் அங்கத்தினராக வந்து திருச்சி மாநகரில் மறு வெளியீடுகளில் நடிகர் திலகத்தின் படங்கள் சாதனை புரிந்த வரலாற்றை இங்கே பகிர்ந்துக் கொண்ட நண்பர் ராமச்சந்திரன் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி.
புதிய வரவாக வருகை தந்திருக்கும் முசிறியின் மைந்தன் பொன்.ரவிச்சந்திரன் அவர்களுக்கு எப்போதும் புதியவர்களை வாழ்த்துவது போல் நல்ல இடம் நீங்கள் வந்த இடம் என கூறி வரவேற்கிறேன். நடிகர் திலகத்தின் பல்வேறு பரிமாணங்களை நீங்கள் ரசித்த விதம் மற்றும் திருச்சியிலும் சுற்று வட்டாரங்களிலும் நடிகர் திலகத்தின் படங்கள் செய்த சாதனைகளையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.
நடிகர் திலகத்தின் முதல் படத்தையே 245 நாள் படமாக்கிய மாநகர் அல்லவா! வாழ்த்துகள்.
அன்புடன்
70 வதுகளில் எனக்கு தழிழ்நாட்டை சேர்ந்த
இல .நல்லதம்பி (திண்டுகல்)
எஸ் .செல்வராஜ் (நாகர்கோவில்)
டீ .எத்திராஜூலு (சென்னை)
ஆர் .ராஜ்குமார் (போவி தெரு; பெங்கழூர்)
அனந்தராஜ் (அருப்புகோட்டை)
ஆகிய நண்பர்களுடன் கடிதத்தொடர்பாடல் மூலம் நடிகர்கள்கள்திலகத்தின் பட விபரங்கள் பத்திரிகைகள்
நோட்டீஸ் மலர்கள் முதலியனவற்றை பரிமாறிக்கொண்டேன்.காலப் போக்கில் பல நண்பர்களுடன் தொடர்பு அற்றுப்போய் கடைசியாக
அருப்புக் கோட்டை நண்பர் ஆனந்தராஜ் அவர்களுடன் தொடர்பு இருந்ததுநாட்டப்பிரச்சினையில் அதுவும் அற்றுப்போய்விட்டது.
(மேலே குறிப்பிட்டுள்ள நண்பர்கள் எவரையேனும் திரு செல்வராஜ் தவிர hub நண்பர்களுக்கு தெரியுமாயின் அறியத்தாருங்கள்)
அண்மையில் இந்தியா வந்திருந்த பொழுது திரு செல்வராஜ் அவர்களை கன்னியாகுமரியில் சந்தித்தேன் .
மிகவும் கவலைக்குரிய விடயம் என்னவெனில்தொலைபேசி தொடர்பில் இருந்த hub நண்பர்களான திரு ராகவேந்திரா சார் திரு முரளி சார் ஆகியோரை சந்திக்க முடியாமல் போனதுதான்.அதற்காக இருவரிடமும் மன்னிப்பு கேட்டுக் கொள்கின்றேன்.இதுவிடயமாக திரு ராகவேச்திரா சாருடன் தொடர்பு கொண்டு விபரம் கூறியிருந்தேன். திரு முரளி அவர்களுக்குகோல் எடுத்திருந்தேன் ஆனால் தொடர்புகொள்ளமுடியவில்லை
பொற்கால நாயகரின் புகழை இங்கு பாட வந்த திரு. பொன்.ரவிச்சந்திரன் அவர்களே! தங்களை வரவேற்பதில் மிக்க உவகை அடைகிறேன். வருக! வருக!
இனிய நண்பர் திரு சிவா
பெங்களுர் அலசூர் போவி தெருவில் இருந்தவர் திரு ஜெயகுமார் - நடிகர் திலகத்தின் தீவிர ரசிகர் .
[ராஜ்குமார் அல்ல ].எங்களின் நண்பரும் கூட . 1971-2000 வரை நன்கு அறிமுகமானவர் .
1971களில் தமிழ்நாடு - இலங்கை பகுதிகளில் வசித்த முக்கியமான மக்கள் திலகம் - நடிகர் திலகம்
மன்ற நிர்வாகிகள் அடிக்கடி கடித போக்கு வரத்து மூலம் நட்பு வட்டம் பெருகியது .
குறிப்பாக சென்னை - மதுரை - திருச்சி - சேலம் - கோவை - நெல்லை - யாழ்ப்பாணம் - கொழும்பு
நாகர்கோயில் - வேலூர் - போன்ற நகரங்களில் இருந்து வாரத்திற்கு 10 கடிதங்கள் போக்கு வரத்து
இருக்கும் . அதில் முக்கியமான தகவல்கள் என்ன வென்றால்
படம் ஓடும் விபரம்
விளம்பரங்கள்
நோட்டீஸ்
சாதனை தகவல்கள்
ஒப்பீடு நிலவரம்
வர இருக்கும் படங்கள் பற்றிய நிலவரம்
புள்ளி விபரம்
கருத்து பரிமாற்றம்
என்று கடித போக்கு வரத்து இருந்தது . நட்பு ரீதியில் நாங்கள் எங்களுக்கு கிடைத்த தகவல் வைத்து நேருக்கு நேர் சந்தித்து விவாதம் நடத்திய அந்த இனிமையான நாட்கள் மறக்க முடியாத ஒன்றாகும் .
திரு ஜெயகுமார் - நடிகர் திலகத்தின் தீவிர ரசிகர் 1973ல் ''நீதி சிவாஜிகணேசன் கலைக்குழு '' என்ற
மன்றத்தினை துவக்கி சிறப்பாக செயலாற்றி வந்தார் . பின்னர் உடல் நலம் பாதிக்கபட்டு 2001ல்
காலமானார் . என்னுடைய நண்பர் என்ற முறையில் [உங்களுக்கும் ] இந்த தகவல் தெரிவிக்கிறேன் .
On looking at this mail, my meories goes back to 68- 76 years, when I was on contact with two of my coimbatore friends namely mr
radhakrshnan and umamaheswaran very strong followers of NT.radhakrishnan native of madurai settled in cbe.
we used to echange papercuttings of NT news materials of coimbatore and madras vice versa.
suddely the links broken and we could not establish contacts.
nanbargal engirundalum valga. they were employed in LMW cbe at that time. very great penfriends of yesteryears.
வினோத் சார்
தாங்கள் கூறியது போல் அல்சூர் போவி தெருவில் நீதி சிவாஜி கணேசன் ரசிகர் கலைக்குழு ஜெயக்குமாரை மறக்க முடியாது. மிகவும் இனிய நண்பர். நடிகர் திலகத்தின் அதி தீவிர ரசிகர். எந்த ஒரு படத்தையும் விடமாட்டார். அனைத்திற்கும் மலர் வெளியிடுவார். நாங்கள் தென்னக சிவாஜி கொள்கை பரப்பும் குழு என்று அமைப்பில் இருந்தோம். அதில் பல ஊர்களிலிருந்தும் ரசிகர்கள் பங்கு கொண்டு நடிகர் திலகத்தின் பட வெளியீட்டு விவரங்கள், விளம்பரங்கள், வசூல் விவரங்கள் போன்றவற்றை கடிதங்கள் மூலம் பகிரந்து கொள்வோம். இதை நான் முன்பே கூறியுள்ளேன். அப்போதெல்லாம் தொலைபேசிக்குக் கூட வாயப்ப்பிருக்காது. போஸ்ட் கார்டும் இன்லேண்ட் லெட்டரும் தான். ஜெயகுமார் அவர்களின் கையெழுத்து மிகவும் அழகாக இருக்கும். இருந்தாலும் தகவல்களை டைப் செய்து அனுப்புவார். கும்பகோணம், பொள்ளாச்சி, கோவில்பட்டி, குவைத், கண்டி, மலேசியா, சிங்கப்பூர் என பரந்து விரிந்தது எங்கள் குழு. 1970களின் மத்தியில் ஜெயகுமார் நடிகர் திலகத்திற்கு ஆற்றிய பங்கு 2000 வரை தொடர்ந்தது. மறக்க முடியாத நண்பர். அவர் இப்போது இல்லை என்று நினைப்பதற்கே கஷ்டமாயிருக்கிறது. நடிகர் திலகத்தின் செல்லப் பிள்ளைகளில் ஜெயகுமாரும் ஒருவர். அன்னை இல்லத்தில் சென்று விட்டால் அது அவர் வீடு தான். ஜெயகுமாரை நடிகர் திலகம் செல்லமாய்க் கடிந்து கொள்வதைப் பார்ப்பதே தனி அழகு.
ஜெயகுமாரைப் பற்றிய நினைவுகளைப் பகிர்ந்து கொள்ள வாய்ப்பளித்தமைக்கு நன்றி.
சிவா சார்
தங்களுடன் தொலைபேசியில் உரையாடும் வாய்ப்புக் கிடைத்தது மிகவும் சந்தோஷமாயிருந்தது. இலங்கையிலிருந்து நடிகர் திலகத்தின் புகழ் பாடும் ரசிகர்கள் ஏராளமானவர்கள் அப்போது ஓரளவு எனக்கு பரிச்சயம். உத்தமன் பட வசூல் விவரங்கள் அவ்வபோது எனக்கு கண்டியிலிருந்து கதிர் காமர் என்ற நண்பர் அனுப்புவார். அவரைத் தங்களுக்குத் தெரிந்திருக்குமா எனத் தெரியவில்லை. சில சமயம் அவசரம் என்றால் ஏர் மெயிலில் அனுப்புவார், அதற்குக் கட்டணம் சற்று கூடுதல் என்றாலும் கவலைப் படமாட்டார். அதே போல் எங்கள் குழுவிலிருந்தும் நாங்களும் அனுப்புவோம்.
இப்போதைய வசதிகள் அப்போது கிடைத்திருந்தால் எவ்வளவு பயனுள்ளதாய் இருந்திருக்கும் என்று நினைத்துப் பார்க்கிறேன்.
பொன்னை வேண்டாதவர்கள் யார்? எங்களுக்கு ஒரு பொன் கிடைத்தால் போதாது. பல நூறு பொன் கிடைக்க வேண்டும்.வருக.வருக.
சிவா சார், மீள்வருகைக்கு நன்றி. கலக்குங்கள்.
சௌத்ரி சார், தகவல்கள் அருமை.
வாசு, நான் சமீபத்தில் மிக மிக ரசித்த பதிவு கோபால்-அந்தோணி. Very creative .
வினோத், தங்கள் பங்களிப்புக்கு நன்றி. நடுநிலை மனிதர் என்ற வகையில் தாங்கள் இரு திரியிலும் பங்களித்தல் நலம்.
நான் நன்கு பாடுவேன் என்ற வகையில் சிவாஜி ரசிகர் மன்றத்தினருக்கு அறிமுகம் ஆனவன். என் சகோதரர்கள் படித்து வந்த நெய்வேலி ஜவகர் பள்ளியின் அருகில் ,நெய்வேலி அமராவதி திரையரங்கு செல்லும் சாலையில் இருந்த மன்றத்துக்கு நான் செல்ல பிள்ளை.(வட்டம்-17)
நிறைய மாலைகளில், புது நாடகத்தில்,யாரை நம்பி,இசை கேட்டால் போன்ற பாடல்கள் ஒரு தபேலா,ஒரு மிருதங்கம் வாசிப்போரின் துணையுடன் நடந்தேறும். என் பேச்சுக்கு, பாட்டுக்கு சோழ நாடே அடிமை பட்டு கிடந்த காலம்.(பின்னே பத்து வயது prodigy என்றால் சும்மாவா).
காங்கிரஸ் மேல் ஒரே பிடிப்பு நடிகர்திலகத்தை முன்னிட்டே. (உண்மையில் பிடித்த தலைவர்கள் பெரியார்,அண்ணா,கலைஞர்) அதனால் காங்கிரஸ் மேடைகளில் முழக்கமிடுவேன். பெருந்தலைவர்கள் வந்து சேரும் வரை நேரத்தை ஒப்பேற்றுவோம். ஒரு முறை நிஜமாகவே பாதி பேச்சில் பெருந்தலைவர் வந்து விட்டார். என்னை பிடித்து இழுத்து போதும் என்று சொன்ன நிர்வாகியை கண்டித்து பேசட்டும் சொன்ன பெருந்தலைவரின் பெருந்தன்மை பசுமையாய்.ஒரு முறை கண்ணதாசன் பங்கு பெற்ற மேடையில் காந்தி,நேரு,காமராஜ் பற்றி கவிதையெழுதி படித்த ஞாபகம்.
குறிப்பிட வேண்டியது ,எனக்கு அன்னை மட்டுமின்றி ஆசிரியை ஆகவும் இருந்த என்னை பெற்றவளின் vision .(1970 வாக்கில்). என்னை பற்றி நிறைய நலம் விரும்பிகள் கெட்டு போகிறேன் என்று கோள் சொன்ன போது ,என்னை நாடகம்,public speaking இவற்றில் பங்கு கொள்வதில் தவறில்லை என்று சொல்லி ஊக்குவித்த என் அன்னைக்கு என்றுமே எனது சிரம் தாழ்ந்த நன்றிகள். எங்களை உண்மையிலேயே செதுக்கியவர் அவர்தான்.
இப்போது நான் கேட்க வந்தது என் சென்னை நண்பர் ஒருவர் பற்றி. அவர் பெயர் சிவாஜி .மு.ராமசாமி. அவரை பற்றி 70 களின் சென்னை நண்பர்களுக்கு தெரிந்தால், அவரை இந்த நண்பன் தேடுவதை தெரிய படுத்தவும்.
நடுநிலை நண்பர் சுகாராம் காண்பதே இல்லையே?
வரும் ஞாயிற்று கிழமை ntf சார்பில் என் தம்பி திரையிடல் என்று கேள்வி படுகிறேன். உண்மையா?
அது மட்டுமில்லை Joe . 1970 களில் நிறைய திமுகவினர் நடிப்பு,திரைப்படங்கள் என்றால் நடிகர்திலகமே என்று புகழ்ந்து ,அவர் படங்களை ஆசையோடு பார்த்தவர்கள். உதாரணங்கள்- டி.ஆர்.ஆர்.,ஆளவந்தார் போன்ற என் தமிழ் ஆசிரியர்கள், என் நண்பர்கள் ராஜமகேந்திரன், ரவீந்திரன் போன்றோர். இன்னும் நிறைய.
அண்ணாவும் ,கலைஞருமே மானசீக சிவாஜி ரசிகர்களே. பாலும் பழமும் போன்ற படங்கள் ரிலீஸ் ஆன போது,அண்ணா, முதல் நாளே படம் பார்த்து, அவர் உடல் சற்றே பெருத்ததை குறிப்பிட்ட சகாக்களிடம், கணேசன் நடிப்பை பார் ,அவரை விட உலகில் சிறந்த நடிகர் இல்லை. என்ன தரமான படங்கள். என்று குறிப்பிட்டதாக குறிப்புகள் உண்டு. கலைஞரும் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் ,நடிகர்திலகம் படம் பார்த்து ,டி.வீ. பெட்டியை வாஞ்சையுடன் தடவி நீதாண்டா ஒரே நடிகன் என்று தழுதழுப்பாராம்.
கனிமொழி மற்றும் அழகிரி சிவாஜி ரசிகர்களே. கனிமொழி ,அரவிந்தனிடம் சிவாஜி படங்களை பற்றி discuss பண்ணியதை ஒரு பேட்டியில் குறித்துள்ளார்.திருச்சி சிவா ,வை.கோ போன்றோர் குறிப்பிட பட வேண்டியவர்கள்.
என்ன தல .. மக்கள் திலகம்ம் திரியில் நான் சொன்னது சம்பந்தமாகவா ?
நீங்கள் உதாரணத்துக்கு வேறெங்கும் போக வேண்டாம் . நானே உதாரணம் . எனக்கு விபரம் தெரிந்ததிலிருந்து நான் நடிகர் திலகத்தின் ரசிகன் .அதே நேரத்தில் எப்போதும் நான் திமுக அபிமானியாகவே (இடையில் சிறிது காலம் மதிமுக-வை ஆதரித்தது தவிர்த்து) இருந்திருக்கிறேன் .
எங்கள் கிராமத்தை பொறுத்தவரை அண்ணா காலத்தில் திமுக-வின் கோட்டையாக இருந்திருக்கிறது . விரல் விட்டு எண்ணக்கூடிய காங்கிரசு குடும்பங்கள் இருந்திருக்கின்றன .பின்னர் எம்.ஜி.ஆர் அதிமுக ஆரம்பித்த பிறகு பெரும்பகுதி அதிமுக-வுக்கு சென்றது . திமுக-வில் தங்கிவிட்டோர் பலர் எம்.ஜி.ஆர் ரசிகர்களாகவும் தொடர்ந்தார்கள் . ஆனால் நான் சிறுவனாக இருந்த போது எங்கள் ஊரை பொறுத்தவரை அதிமுக-வினர் எம்.ஜி.ஆர் படங்களை திரையிடும் போது அதற்கு இணையாக சிவாஜி படங்களை திரையிட்டது திமுக-வினர் தான் . காங்கிரசார் சீன்லயே கிடையாது . நான் மட்டுமல்ல என் வயதில் சிவாஜி ரசிகர்களாக இருந்த என் நண்பர்கள் பலர் அரசியலில் திமுக அனுதாபிகள் தான் .
ஒரு ரகசியம் சொல்லட்டுமா? பெரும் தலைவர் மேல் எனக்கு மிக மிக மரியாதை இருந்தாலும், சிவாஜியை பயன் படுத்திய அளவு, அவருக்கு அங்கீகாரம் கொடுக்காத காங்கிரஸ் மேல் எனக்கு கசப்புணர்வே. நான் திமுக கலைஞர் அனுதாபியாகவே தொடர்ந்தேன். எதிர்ப்பலையிலும் திமுகவை கட்டு கோப்பாய் வைத்திருந்த கலைஞரை நான் வியக்காத நாளேயில்லை. ஆனால் வை.கோ வின் மேல் எனக்கிருந்த மரியாதை நிமித்தம் ,சிறிது காலம் (1998 வரை) வைகோ அனுதாபியானேன்.(சிவாஜி மறைந்ததும் அவருக்கு பாரத் ரத்னா வழங்க மேல்சபையில் குரல் எழுப்பியவர். )
இன்றும் தி.மு.க ,கலைஞர் என்றால் சிறிதே மனம் இளகும்.
சிவாஜியும் ,கலைஞரும் இணைந்த 1980 எனக்கு மகிழ்வு தந்த காலம்.(மற்றோரோடு அவர் மேடையில் தோன்றியது எனக்கு மனது ஒப்பியதே இல்லை) .1988 இல் அவர் தி.மு.க வோடு தேர்தல் உடன்பாடு கண்டிருந்தால், அரசியல் சரித்திரம் திருத்தி எழுத பட்டிருக்கும்.
எனது கல்லூரிப்பருவத்தில் எனது நெருங்கிய நண்பராகவும், நடிகர்திலகத்தின் தீவிர ரசிகராகவும் விளங்கியவர் நண்பர் ஜபருல்லாஹ். திருச்சி மாவட்டம் லெப்பைக்குடிக்காடு என்ற ஊரைச்சேர்ந்தவர். எங்களை நண்பரகளாக்கியதே நடிகர்திலகத்தின் மீது கொண்ட அபிமானம்தான். சிறுவயதிலிருந்தே நடிகர்திலகத்தின் தீவிர ரசிகராம் அவர். 70-களின் இறுதிப்பகுதிகளில் அவரோடு சேர்ந்து பார்க்காத படமே இல்லையெனலாம். ராயப்பேட்டை புதுக்கல்லூரியிலிருந்து மவுண்ட் ரோடு ஏரியாவிலிருந்த அத்தனை தியேட்டர்களுக்கும் நடந்தே போவோம். பிற்பட்டோருக்கான அரசு விடுதியில் (முதலில் கோடம்பாக்கம் பாலத்தின் கீழே இருந்த ஹாஸ்டலிலும், பின்னர் நந்தனம் எம்.சி.ராஜா ஹாஸ்டலிலும்) தங்கிப்படித்தார். அப்போதே திருச்சி பகுதிகளில் நடிகர்திலகத்தின் படங்கள் ஓடும் விபரங்களை அவருடைய நண்பர்கள் மூலம் கடிதங்கள் வாயிலாகவும், செய்தித்தாள் விளம்பரங்கள் வாயிலாகவும் தருவித்து அவற்றைக் கல்லூரிக்கு கொண்டுவந்து நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வார். மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். அதுபோல சென்னை விளம்பரங்களையும் அவர்களுக்கு அனுப்புவார். ஆனால் இந்த வேலைகளில் கவனம் செலுத்தினாலும் படிப்பைக் கோட்டை விட்டுவிட மாட்டார். படிப்பில் அசகாய சூரர்.
பி.காம். பட்டப்படிப்பு முடிந்ததும் திருச்சி சென்றவர் அங்கேயே வேலையில் செட்டில் ஆனாலும் திருச்சியில் நமது படங்களின் சாதனைகள் குறித்த கடிதங்களையும், தினத்தந்தி கட்டிங் களையும் தவறாமல் அனுப்பி வந்தார். ஆனால் சிறிது காலம் மட்டுமே. அதன்பின்னர் துபாயில் நல்ல வேலை கிடைத்திருப்பதாகச்சொல்லி புறப்பட்டுச்சென்றார். நானும் வேலை கிடைத்து சென்னையைவிட்டு வெளியேறியதால் கொஞ்சம் கொஞ்சமாக எனக்கும் நண்பர் ஜபருல்லாஹ்வுக்கும் இடையே இருந்த தொடர்பு துண்டிக்கப்பட்டது. இருவருக்கும் திருமணம் ஆகி குடும்பம், குழந்தைகள் என்று ஆனதும் முக்கிய காரணம். (திருமணம் ஆனதும் முதலில் தொலைப்பது இதுபோன்ற சந்தோஷங்களைத்தானே).
நடிகர்திலகத்தின் தீவிர ரசிகரும், எனது நண்பருமான ஜபருல்லாஹ் இப்போது எங்கேயிருக்கிறார், எப்படியிருக்கிறார் என்று தெரியவில்லை. தெரிந்தவர்கள் சொன்னால் மகிழ்ச்சி.....
அன்புள்ள வாசுதேவன் சார்,
தங்கள் பாராட்டு மழைக்கு மிக்க நன்றி. (பாராட்டு கொஞ்சம் ஓவர் டோஸாக இருந்த போதும்). தங்கள் நம்பிக்கையைத் தக்கவைக்க நிச்சயம் போராடுவேன்.
அன்புள்ள முரளி சார்,
தங்களுடைய ஸ்பெஷாலிட்டியே இதுதான். எப்போதோ ஒருமுறை சொன்னதையெல்லாம் இவ்வளவு நினைவில் வைத்து சமயம் வாய்க்கும்போது மறவாமல் குறிப்பிடுவது, மற்றவர்கள் பதிவுக்கு நீங்கள் தரும் மிகப்பெரிய கௌரவம். (பெரும்பாலோரிடம் இதைக்காண முடிவதில்லை) . சென்னை, மதுரை போல திருச்சியில் நமது நடிகர்திலகத்தின் சாதனைகளை யாரும் எடுத்துரைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று நான் சொன்னது உண்மை. அதை நீங்கள் குறிப்பிட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. திருச்சி பிரபாத், ஜுபிடர், ராஜா, பேலஸ், ராக்சி, வெலிங்க்டன் அரங்குகளில் நடிகர்திலகத்தின் சாதனைச்சுவடுகளை பதித்த படங்கள் ஏராளம்.
அன்புள்ள ராமச்சந்திரன் சார் மற்றும் பொன்.ரவிச்சந்திரன் சார்,
நல்வரவு. தங்கள் துவக்கப்பதிவுகளே அருமையாக உள்ளன. நாங்கள் எதிர்பார்ப்பதுபோல திருச்சி நகர சாதனைகளை அள்ளி வீசுங்கள். அதன்மூலம் திருச்சியும் நமது கோட்டையே என்று நிரூபியுங்கள்.
அன்புள்ள ராகுல்ராம் சார்,
தங்களின் 'சிரஞ்சீவி' பட ஆய்வு மிகவும் அருமை. டேவிட் சிரஞ்சீவியின் பாத்திரப்படைப்பை நன்றாக அலசியிருக்கிறீர்கள். பாராட்டுக்கள். அப்படம் எடுக்கப்பட்ட 'எம்/வி.சிதம்பரம்' சொகுசுக்கப்பல் இப்போது இல்லை. அக்கப்பலின் நினைவுச்சின்னம் சிரஞ்சீவி படம் மட்டுமே. அப்படத்தில் வரும் சில்க் ஸ்மிதாவின் நடனக்காட்சி மட்டும் ஸ்டுடியோவில் படமாக்கப் பட்டது.....
90-களின் ஆரம்பத்தில் நான் திருச்சியில் இருந்த போது இந்த திரையரங்குகள் இரண்டாம் நிலை திரையரங்குகளாக இருந்தன .. கல்லூரி விடுதி நண்பர்கள் சிப்பி , மாரிஸ் என மொய்க்கும் போது என்னுடைய வார விடுமுறை பெரும்பாலும் இங்கே தான் ..ஏனென்றால் இந்த திரையரங்குகள் தொடர்ந்து நடிகர் திலகத்தின் படங்களை மாற்றி மாற்றி திரையிட்டு வந்தன . குறிப்பாக பிரபாத் , ஜூபிடர் , பேலஸ்.
திருச்சியில் நான் தங்கிய ஒரு வருடம் மறக்க முடியாதது. பிஷப் ஹீபர் கல்லூரியில் பீ.யு.சி படித்தேன். அந்த வருடம் சத்குருதாஸ் ,சாமிராஜ் என்ற ப்ரின்சி- correspondent மோதலில் பாதிக்கும் மேற்பட்ட நாட்கள் கல்லூரி மூட பட்டே இருந்தது. பிரபாத்தில் தங்க பதக்கம்(வெள்ளி விழா நோக்கி),ராஜாவில் என் மகன்,பாலஸ் அன்பை தேடி, பிரபாத் மனிதனும் தெய்வமாகலாம் என்ற புது படங்கள்.என் நண்பன் ராஜா குணசிங் சென் ஜோசெப் பில் படித்து வந்தான். இருவரும் கிட்டத்தட்ட 28 பழைய சிவாஜி படங்கள் ராக்சி,வெலிங்டன் , ராஜா,ராமகிருஷ்ணா ,வில் சனி,ஞாயிறு நூன் ஷோ பார்த்திருப்போம். பா வரிசை, நிறைய 60,61,62,63,64,65,66,67 ஆம் வருட படங்கள் . தங்கியிருந்தது ஆனைகட்டி மைதான் ,பீம நகர். அக்கம் பக்கம் எல்லாம் சிவாஜி ரசிகர் மயம். ஒரே ஒரு ஆள் முனவர் பாச்சா என்பவனை தவிர. ரவி சந்திரன் தன்னை சீர்திருத்தி விமலாவுடன் இணைந்து கொண்டிருந்த காலகட்டம், போன் பண்ண எங்கள் வீட்டுக்கு வருவார்.அருணாவில் பாபி, வெலிங்டன் யாதோங்கி பாராத்.பாபி ஒரு பத்து முறை.(மும்பை யில் இருந்து கோவை வந்த போது பக்கத்து சீட்டில் டிம்பிள்.கடலைதான்)
என் தம்பிகள் இருவர் சென் ஜோசெப் பில் பீ.காம் படித்தனர். தங்கை சீதா லட்சுமியில் டிகிரி.. எங்கள் குடும்பத்திற்கு(சிவாஜி ரசிகர்கள்) திருச்சியுடன் நெருங்கிய உறவாக்கும்.
கண்ணனையும், அந்தோணியையும் நாம் எடுத்து வளர்த்தால் போதும். சிரஞ்சீவியை அனாதையாக விடுவதே எல்லோருக்கும் நல்லது.