காமராஜர் சிலை உடைப்பு
நடிகர்திலகம் திறந்து வைத்தது.
விபரத்திற்கு இணைப்பைக் காண்க.
View Album, http://s1055.photobucket.com/user/se...nadigartilagam
Printable View
காமராஜர் சிலை உடைப்பு
நடிகர்திலகம் திறந்து வைத்தது.
விபரத்திற்கு இணைப்பைக் காண்க.
View Album, http://s1055.photobucket.com/user/se...nadigartilagam
Tributes to NT on the eve of his B'day on Oct 1
அக்டோபர் 1 நடிப்பிலக்கணத்தின் பிறந்தநாள். ஒப்புவமையற்ற நடிப்புச்சக்கரவர்த்தி ஓணம் திருநாளில் தன் குடிமக்களை காண வரும் மஹாபலி சக்கரவர்த்தியைப் போல விண்ணுலகிலிருந்து அமரத்துவம் வாய்ந்த அவர்தம் நினைவலைகளை இப்பூவுலகிற்கு தன் கோடானுகோடி ரசிகப்பெருமக்களுக்கு நெஞ்சம் நிறைந்திட அனுப்பிவைக்கும் நன்னாள். நம் மன்னவரை அத்தக்கோலமிட்டு வரவேற்க தயாராவோமே!
https://www.youtube.com/watch?v=5-y-J9Pabq8
திரையுலகைப் பொருத்தவரை பாட்டும் அவரே பாவமும் அவரே! கூத்தும் கூத்தின் முறையும் வரையறுப்பவரும் அவரே!
https://www.youtube.com/watch?v=xg_hBWlR3h0
Tributes to NT on the eve of his B'day on Oct 1
செல்வமும் செல்வாக்கும் நிறைந்த திரைத் தோற்றங்கள் மட்டுமன்றி சாமான்யனின் நிலைப்பாட்டை பிரதிபலிக்கும் உடையலங்காரங்களிலும் விஞ்சி நிற்பவர் நடிகர்திலகம் ஒருவரே! Top 10 Common man get-ups!
1. படிக்காத மேதை ரங்கன் : ஈங்கிவனை நான்(ம்) பெறவே என்ன தவம் செய்திட்டோம்!
https://www.youtube.com/watch?v=Htoa_maG9Jo
https://www.youtube.com/watch?v=rV8yRtU8jmo
2. ராமன் எத்தனை ராமனடி: What a transformation to a சாப்பாட்டு ராமன் characterization with a built-in innocence!
https://www.youtube.com/watch?v=cU9_w77CM1k
When NT turns into a celebrated actor,see the oceanic changes in his traits with traces of the poor old raman!
https://www.youtube.com/watch?v=y0khGzjDhNQ
3. கழனிகாக்கும் உழவன் பழனி!
https://www.youtube.com/watch?v=i7wZg2jW2ag
https://www.youtube.com/watch?v=31lPks6WVLE
4. என்றுமே தரம் நிரந்தரமான தங்கம் : பாகபிரிவினை
https://www.youtube.com/watch?v=ZCwKgD9E7Qo
5. சவாலே சமாளி: all challenges get evaporated when Lord Shivaa opens his third eye!
https://www.youtube.com/watch?v=uPJC_T-iEAA
6. பாபு : சாமான்யனான ஒரு ரிக்ஷா ஓட்டி இளம்தளிரின் பாசப்பிணைப்பில்
https://www.youtube.com/watch?v=k3YN6RCZHs0
7. மணப்பாறை மாடு கட்டி
https://www.youtube.com/watch?v=WQQwUqxBaFg
8. அம்மம்மா தம்பியென்று நம்பி...
https://www.youtube.com/watch?v=LAvh6WYCdjU
9. நெஞ்சில் குடியிருக்கும் அன்பர்: இரும்புத்திரை
https://www.youtube.com/watch?v=q48ihhHK5kg
10.கல்யாணியின் கணவன்
https://www.youtube.com/watch?v=v2mZUk6vm_c
NT the King-pin of Acting Hub!
Special mention to Aandavan Kattalai song Aaru Maname Aaru as this does not come under a rich get up or poor get up but a richly dressed Professor transformed into a self exploratory god-man dress! Even NT's silhouette acts!!
https://www.youtube.com/watch?v=G97Q6mVk4yc
Also for comparison, Hindi Raaj Kumaar's song from Heer Ranjha hindi film. Though a good actor Raajkumar is uncomfortable in close-up scenes to show emotions! That is why NTis construed as the King-pin of Acting-hub!!
https://www.youtube.com/watch?v=wHw0h1kDPvA
Oct 2 Gandhi Jayanthi : Tributes to our Father of Nation and the Mahaathmaa.
On behalf of our humble NT thread we salute his relentless contributions to sustain humanity and to instill humility and brotherhood among the unitedly divided states of our country. Satyameva Jayathey!
(We think of Gandhi/Ben Kingsley we thank Attenborough!)
https://www.youtube.com/watch?v=duZm6OytAns
https://www.youtube.com/watch?v=SNmJqRV7LOA
https://www.youtube.com/watch?v=R1XqHDd6K9k
https://www.youtube.com/watch?v=WW3uk95VGes
சந்திரசேகர் சார்,
நான் போட்ட பதிவிற்கு உங்கள் வருத்தத்தை வெளிப்படுத்தும் விதமாக பதில் சொல்லியிருக்கிறீர்கள். எனக்கு உங்களை குறை சொல்லும் நோக்கமில்லை. இன்னும் சொல்லப் போனால் நான் உங்கள் உறுப்பினர்களை குற்றம் சாட்டவும் இல்லை. என் concern என்னவென்றால் RKS ஒரு தனி மடல் அனுப்பியுள்ள நிலையில் நீங்களும் அவ்வாறே செய்திருக்கலாம் என்பதுதான். அவரது இன்பாக்ஸ் நிறைந்து விட்ட காரணத்தினால் நீங்கள் உங்கள் பதிலை திரியிலே பதிந்திருந்தாலும் கூட தனி மடலின் சாராம்சத்தை பொது விவாதப் பொருளாக கொண்டு வந்ததை தவிர்த்திருக்கலாம் என்ற என் கருத்தைதான் குறிப்பிட்டேன். அது உங்கள் மனதை காயப்படுத்தியிருந்தால் மன்னிக்கவும். நண்பர் RKS முன் வைத்த விஷயங்களிலும் சரி நீங்கள் பதிலில் குறிப்பிட்ட விஷயங்களிலும் சரி நியாயங்கள் இருக்கின்றன என்பதை மறுக்க முடியாது.
உங்களின் ஒரு வருத்தத்தை வெளிப்படுத்தியிருக்கிறீர்கள். அதுவும் பொது மன்றத்தில் விவாதிக்கப்பட முடியாத ஒன்று என்பது உங்களுக்கு தெரியும். ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். விரைவில் உங்கள் மனக்குறை அகலும் என்பது என் நம்பிக்கை. அதற்கு இன்றைய நடிகர் திலகத்தின் பிறந்த நாள் ஒரு தொடக்கமாக அமையட்டும். நல்லதை நினைப்போம். நல்லதே நடக்கும்.
அன்புடன்
இன்றைய தினமும் மதுரையில் கடையடைப்பு, பேருந்துகள் இயக்கப்படாமை, பதற்றம் நிறைந்த சூழல் இவற்றோடு இன்றும் பலத்த மழை பெய்திருக்கிறது. இப்படி இருந்தும் வேலை நாளாக இருந்தும் மாலைக் காட்சிக்கு கணிசமான மக்கள் கூட்டம். இன்று இரவோடு மொத்த வசூல் சுமார் ரூபாய் 60,000/- ஐ எட்டியிருக்கிறது. 5 காட்சிகள் ரத்து செய்யபட்டும் 5 நாட்களில் இந்த வசூல். அதுவும் 1980-களில் வெளியான படத்திற்கு. இந்தப் படங்கள் எல்லாம் சரியாகப் போகாது என்று சொன்னவர்களையெல்லாம் திகைக்க வைத்து வசூல் செய்து வருகிறது சென்ட்ரல் சினிமாவில் வெள்ளை ரோஜா.
எப்போதும் போல் வெற்றி நடிகர் திலகத்திற்குதானே!
அன்புடன்
என்றென்றும் எங்கள் மனங்களில் நிறைந்தவனே!
எந்நேரமும் எப்போதும் எங்கள் மனத்தை ஆட்கொள்பவனே!
எங்களின் காலையும் நீயே மாலையும் நீயே
எங்களின் மதியமும் நீயே இரவும் நீயே!
எங்களின் தலையாய சந்தோஷமே!
அன்று எங்களுக்கு நினைவு தெரிந்த நாள் முதல்
இன்று 86-வது வயதை நீ நிறைவு செய்யும்போது கூட; ஏன்
நாங்கள் வாழும் வரை உன் நினைவோடுதான் பயணிப்போம்.
இனியும் பல நூற்றாண்டுகள் நீ வாழும் வரை
அன்றும் இது போன்ற ரசிகர்கள் உன் கலையை ரசிப்பார்கள்!
இப்பூவுலகம் உள்ளவரை நீ வாழ்ந்திருப்பாய்!
நடிகர் திலகமே
இன்றைய உன் பிறந்த நாளில் என் சிரம் தாழ்த்திய வணக்கங்கள்!வாழ்த்துகள்!
அன்புடன்
இன்று நடிகர் திலகத்தின் பிறந்த நாள் .அவரது பிறந்த நாளை மகிழ்வுடன் கொண்டாடும் இனிய நண்பர்கள் அனைவருக்கும் மக்கள் திலகம் திரியின் நண்பர்கள் சார்பாக வாழ்த்துக்களை தெர்வித்து கொள்கின்றோம் .
http://i60.tinypic.com/vdzfwi.jpg
உன்னை தவிர யாராவது நான் சோழ மன்னன் பரம்பரை என்று சொல்லியிருந்தால் நகைத்திருப்போம். நீ சொன்ன போது வருந்தினோம். உலகத்தையே ஆண்டு கொண்டிருக்கும் சக்கரவர்த்தி ,ஏன் சோழ பரம்பரை என்று தமிழ் நிலத்தை மூன்றிலொரு பங்காக குறுக்க வேண்டும்?
உலகத்திலே ஒருவனென உயர்ந்து நிற்கும் திலகமே.
அவதார புருஷர்களில் தந்தை தாய் இருவரையுமே பெருமையாக அடையாளம் காட்டி வாழும் ஒரே அவதாரன் நீ.
சரியான நிலத்தில் சரியான விதையாக ,நாடக உரத்தில் தழைத்த அற்புத பயிரே! உன்னை சுவைக்க வேண்டிய இனமோ , அந்நிய கள் குடித்து அறியாமையில் உழன்றது.
நாங்கள் ஏற்றுமதி செய்திருக்க வேண்டிய முதல் உலகத்தரம் வாய்ந்த இந்திய பொருள் நீதான்.ஆனால் தரமான பொருளுக்கு அழகான உறை போட்டு அலங்கரிக்க தவறினோம் . இப்போது சரியான உறைகளில் தவறான பொருளெல்லாம் ஏற்றுமதி கண்டு தழைக்கிறது.
நீ மட்டுமே பணம்,அதிகாரம் விளம்பர போதைகளால் போலி புகழில் வாழாமல், எங்கள் குடிசை வீடுகளிலும் நிரந்தர தெய்வமாய் எங்களை உன்னதம் பெற வைத்து எங்கள் ஒவ்வொரு அணுக்களிலும் அனுதினமும் உயிர்க்கிறாய்.இந்த உயிர்ப்பு ,சமாதிகள் அல்ல.சந்நிதிகள் .
ஒரு பிறவியால் ,இத்தனை பிறவிகளுக்கு வாழும் போதே மோட்சமளித்த நடிப்பு ராமானுஜனே!!!
உலகத்திற்கு பல நாட்கள் ,பல தினங்கள். தாய்க்கு,தந்தைக்கு,நண்பர்களுக்கு,காதலர்களுக்க ு என்று. தமிழர்களுக்கு ஒரே நாள். அக்டோபர் 1 மட்டுமே.
தமிழர் பெருமை நாள்.
திருவள்ளுவனுக்கு பிறகு பெருமை மீட்ட நாள்.
சேர பாண்டியர்களை தலை குனிய வைத்த சோழ திருமகனின் அவதார நாள்.
மேதைமையும்,திறமையும் ,உழைப்பும்,நேர்மையும்,புகழும் அதிசயமாக இணையும் ஒரே நாளின் நினைவு திருநாள்.
உன்னால் தலை நிமிர்ந்த தமிழே தலை குனிகிறது. உன்னை போற்ற போதிய சொற்களின்றி.
என் உயிர்,உடல் என்றவற்றை தாண்டி எதை உனக்கு காணிக்கையாக்குவேன்?அழியும் இவைகள் அழியாத உனக்கு எப்படி காணிக்கையாகும்?
என் எழுத்தே உனக்கு நானளித்த காணிக்கை. அது என்றும் வாழும் சரஸ்வதி தேவி.என் எழுத்துக்களே நான் உன்னை அர்ச்சித்து போற்றும் சத்திய பூஜை.
எங்கள் போற்றுதலுக்குரிய தலை தமிழ் மகனே!!! தரம் கேட்ட தமிழர்களையும் உன் ஆன்மா மன்னிக்குமாக.வாழும்போதே நண்பர்-பகைவர், உற்றோர்-மற்றோர் என்று பேதம் காட்டாத நீயா ,தெய்வமாகிய பின் பேதம் காட்டுவாய்? உன்னை திரிக்கும் ,திரிக்கும் ,தமிழர்களாய் வாழாமல் தாழும் நரிக்கும் கூட அருள் தருவாய்
நடிப்புக்கும்,ஆண்மைக்கும்,அழகுக்கும்,திண்மைக்கும், தன்மைக்கும்,தகைமைக்கும்,பண்புக்கும்,நட்புக்கும்,தூ ய மனதுக்கும், சொற் தமிழுக்கும் இலக்கணம் வகுத்த எங்கள் தலை தெய்வமே!!
தமிழனான எனது முழு முதற் கடமை நிறைவேறிய திருப்தியில் ,நான் நிஜமாக நேசிக்கும் ஒரே நாளில் என் பணிகளை தொடங்குகிறேன்.
தினமலர் நாளிதழுக்கு நன்றி.
http://i1369.photobucket.com/albums/...psb2119a43.jpg
இருக்கும் வரை உத்தமன் சிவாஜி புகழ் காப்போம்.
நடிகர் திலகத்தின் பிறந்த நாளை ஒட்டி, ஓவியர் கோவை ஜீவானந்தன் கைவண்ணத்தில் நேற்று பிறந்த ஓவியம்.
https://imagizer.imageshack.us/v2/48...538/ADNtqQ.jpg
பலவித உணர்ச்சிகளை திரையில் கொணர்ந்த சிவாஜியை பலவித வண்ணங்களால் அழகுபடுத்தியிருக்கிறார்.
:notworthy:
அன்பர்களே! இணையத் திருட்டு இப்போதெல்லாம் நிறைய நடக்க ஆரம்பித்துவிட்டது. யாரேனும் இதுபோன்ற ஓவியங்களை ஓவியரின் பெயரை நீக்கிவிட்டு எங்கேனும் பயன்படுத்த ஆரம்பித்தால் முடிந்த அளவு கண்டிக்க முயலுங்கள். முடியாவிட்டால் சம்பந்தப்பட்ட ஓவியர்களிடம் தெரிவிக்கலாம்.
Irandhum Irava Pughazudan Irrukkum Em Thalaiva Unakku En Namaskarangal.
There is a article by Mr NPN Ponnusamy about NT in Kungumam lates issue. If anyone have the facility can
upload the same.
Regards
MY DEAR NADIGAR THILAGAM WISHING YOU A MANY MORE HAPPY RETURNS OF THE DAY!!
SUCCESS!!
Even after going through
A lifetime of struggle
Even after having so many
Responsibilities to juggle
We are happy to see you
Standing so strong and tall
Celebrating your Eighty Seventh Birthday
Is a proud moment for us all
Happy 87th Birthday Dear Nadigar Thilgam (AVL)
God gave a gift to the world when you were born—
a person who loves, who cares,
who sees a person's need and fills it,
who encourages and lifts people up,
who spends energy on others
rather than herself,
someone who touches each life,
and makes a difference in the world,
because ripples of kindness flow outward
as each person you have touched, touches others.
Your birthday deserves to be a National Holiday,
because you are a SPECIAL TREASURE
HAPPY BIRTHDAY GOD OF ACTING
JAIHIND
M. Gnanaguruswamy
கலைமகளின் அவதாரமே,
கலைமகள், அலைமகள், மலைமகள் மூவரையும் போற்றும் நவராத்திரி சமயத்தில் உலகத்தில் நீ அவதரித்ததே, நீ கலைமகளின் அவதாரம் என்பதைப் பறை சாற்றத்தானோ?
எங்கள் ஊன், உடல், உயிர் எல்லாவற்றிலும் நீக்கமற நிறைந்து விட்ட கலைக்குரிசிலே, நடிகர் திலகமே, எப்பிறவி எடுத்தாலும், என்னை உன் ரசிகனாகவே படைத்து விடு.
இரா. பார்த்தசாரதி
Thanks Vasu for the Good write-up.
'திரும்பிப் பார்' (நடிகர் திலகம் பிறந்தநாள் சிறப்பு ஆய்வுக் கட்டுரை)
திரும்பிப் பார்
நடிகர் திலகத்தின் 5 ஆவது அற்புதப் படைப்பு.
வெளியான நாள் - 10.07.1953
தயாரிப்பு - மாடர்ன் தியேட்டர்ஸ்
கதை வசனம் - மு.கருணாநிதி
சென்னையில் வெளியான திரையரங்குகள் - பாரகன், பிரபாத், சரஸ்வதி, நூர்ஜஹான்
இசை - 'இசைமேதை' ஜி.ராமநாதன்
படத்தொகுப்பு - எல்.பாலு
ஒளிப்பதிவு - w.r.சுப்பாராவ்
இயக்கம் - டி.ஆர். சுந்தரம்
நடிக நடிகையர்:
நடிகர் திலகம், பி.வி.நரசிம்ம பாரதி, பண்டரிபாய், கிரிஜா, கிருஷ்ணகுமாரி, டி.எஸ்.துரைராஜ், ஏ.கருணாநிதி, டி.பி.முத்துலட்சுமி மற்றும் பலர்
கதை:
பெற்றோரை இழந்து தன் தம்பி பரந்தாமனுடன் கோவையில் தனியே வாழ்ந்து வருகிறாள் நல்மனம் கொண்ட பூமாலை. தம்பி பரந்தாமனோ பரம அயோக்கியன். கபடதாரி, வேஷதாரி, காமுகன், நயவஞ்சகன் போன்ற பல பட்டங்களுக்கு முதல் சொந்தக்காரன். பெண்களிடம் காதல் போதையூட்டும் களிப்பான கனிமொழி வார்த்தைகளை தேன் குழைத்து பேசி, வாளிப்பான அவர்கள் அழகை சூறையாடி விட்டு அவர்கள் வாழ்வை நாசம் செய்து சுகம் காணுவதில் கை தேர்ந்த சூத்ரதாரி. தம்பியைத் திருத்த பல வழிகளில் முயன்று முடியாமல் முழிக்கிறாள் பூமாலை.
கோவை சிவசக்தி மில் தொழிலார்களின் மேஸ்திரி புண்ணிய கோடியின் மகன் பாண்டியன் ஒரு எழுத்தாளன். நல்லவன். அவன் எழுதும் கதைகளைத் திருடி அவற்றை தான் எழுதுவதாக தன் பெயரை அச்சிட்டு ஊரை ஏமாற்றுகிறான் பரந்தாமன். அவனுக்கு உடந்தை கருடா பதிப்பகத்தின் உரிமையாளன் கருடன். அவனும் ஒரு எத்தன். பணப் பித்தன். இந்த ஏமாற்று அக்கிரமத்தைத் தட்டிக் கேட்கும் பாண்டியனுக்கும், பரந்தாமனுக்கும் அடிக்கடி தகராறு எற்பட்டு இருவரும் பகையாளியாகிறார்கள்.
பாண்டியனின் எழுத்தை தன் எழுத்தாக கருதி தெரியாமல் ஏமாளியாக நம்பும் பாமா என்ற இளம் பெண்ணை தன் காதல் வலைக்குள் சிக்க வைக்கிறான் பரந்தாமன். அந்தப் பேதையும் இவனுடைய காதல் ரசம் சொட்டும் பேச்சுகளுக்கு மயங்கி அடிமையாகிறாள்.
பூமாலைக்கு குமுதா என்றொரு சொந்தம். பரந்தாமனுக்கு முறைப்பெண். குமுதாவை தன் தம்பி பரந்தாமனுக்கு மணமுடித்து வைக்க எண்ணியிருக்கிறாள் பூமாலை. ஆனால் பரந்தாமன் பாமாவைக் காதலிப்பதை அறிந்து பாமாவை அவனுக்கு மணமுடித்து வைக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகிறாள் பூமாலை. திருமணத்தன்று பாமாவைக் கல்யாணம் செய்து கொள்ளாமல் அவளை வெறும் மணக் கோலத்திலேயே விட்டுவிட்டு தாலி கட்டாமல் யாருக்கும் தெரியாமல் வெளியே கம்பி நீட்டி விடுகிறான் கயவன் பரந்தாமன். தன் கல்யாணம் நின்று போனதை எண்ணிக் கண்ணீரும் கம்பலையுமாய் நிற்கிறாள் பாமா.
சில நாட்கள் சென்று வீட்டிற்கு திரும்பி வரும் தம்பி பரந்தாமனை பாமாவை ஏமாற்றி ஓடிய குற்றத்திற்காக அக்காள் பூமாலை கடுமையாக கடிந்து கொள்ள, திருமணத்திற்கு முன் பாமா நடத்தை கெட்டவள் என்று தனக்குத் தெரிந்தததால் கல்யாணம் பிடிக்காமல் ஓடி விட்டதாக வாய் கூசாமல் பொய் கூறி பாமாவின் மீது பழி சுமத்தி அக்காள் வாயை அடைத்து விடுகிறான் அந்த பசப்பு வார்த்தை பரந்தாமன் எனும் கபட நரி. என்றாலும் பூமாலை அதை நம்ப மறுக்கிறாள். தம்பியை எவ்வழியிலும் திருத்த இயலவில்லையே எனக் கவலை கொள்கிறாள்.
பாண்டியனின் தந்தை அவனுக்கு திருமணம் செய்ய பாமாவைப் பெண் பார்த்து முடிக்கிறார். இதைக் கேள்விப்பட்ட பரந்தாமன் தன் விரோதியான பாண்டியனின் வாழ்வை சீர்குலைக்க முடிவு செய்கிறான். அவன் கல்யாணத்தை நாசமாக்கவும் சதி செய்கிறான்.
அதனால் பாண்டியனுக்கு நிச்சயத்திருக்கும் பாமாவின் வீட்டிற்கு திரும்ப வந்து தன் சதித் திட்டங்களை நிறைவற்றத் தொடங்குகிறான் பரந்தாமன். திருமணத்தன்று தாலி கட்டாமல் ஓடிப் போன பரந்தாமன் தன் மேல் கோபமுற்றிருக்கும் பாமாவை பல கட்டுக் கதைகள் கூறி அவளை சமாதானப் படுத்தி, மறுபடியும் அவளுக்குக் காதல் போதையூட்டி, அவளை வீட்டை விட்டே தன்னுடன் ஓடி வந்து விடும் படியும் தூண்டுகிறான். இதனால் பாண்டியனின் வாழ்வு நாசமாகும் அல்லவா! அவன் எண்ணியபடியே எல்லாம் நடக்கிறது. அந்த அப்பாவி பாமாவும் இவன் பேச்சை நம்பி அவனுடன் வீட்டை விட்டு வெளியேறுகிறாள். மணமகள் பாமா ஓடிப் போன நிலையில் திருமணம் தடைப் பட்டு பாண்டியன் பேரதிர்ச்சிக்கு உள்ளாகிறான். அன்று பரந்தாமன் பாமாவை திருமணத்தன்று தவிக்க விட்டு ஓடிப் போனான். இன்று பாமாவோ பாண்டியனைத் தவிக்க விட்டு விட்டு பரந்தாமனுடன் ஓடிவிட்டாள். இரண்டு குற்றங்களுக்கும் மூல காரணம் பகல் வேஷக்காரன் பரந்தாமனே!
பாமாவை சென்னைக்கு அழைத்து செல்லும் பரந்தாமன் அவளுடன் சில நாட்கள் உல்லாசமாய் இருந்து விட்டு அவளை தன்னந்தனியே தவிக்க விட்டு விட்டு ஊருக்கு ஓடி வந்து விடுகிறான். தான் மீண்டும் பரந்தாமனால் ஏமாற்றப்பட்டு விட்டோம் என்று தெரிந்த பாமா கடற்கரையில் மூர்ச்சையாகிறாள். வாழ வேறு வழி தெரியாமல் வேசியாகிறாள். தன் வாழ்வை சூறையாடிய பரந்தாமனை பழி வாங்க சமயம் பார்த்திருக்கிறாள்.
தன் திருமணம் தடை பட்டதை எண்ணி வருந்தும் பாண்டியனை தற்செயலாக ரயிலில் சந்திக்கிறாள் பூமாலை. அவன் நிலைமை அறிந்து அவனை சென்னையில் உள்ள குமுதா வீட்டில் வைத்து ஆதரிக்கிறாள் அவள். பாண்டியன் மேல் ஒருதலைக் காதலும் கொள்கிறாள். ஆனால் குமுதாவும் பாண்டியனைக் காதலிக்கிறாள். பாண்டியனும் அவளை விரும்புகிறான்.
ஊர் திரும்பிய பரந்தாமன் அங்குள்ள சிவசக்தி மில் தொழிலாளிகளின் நியாயமான போராட்டங்களை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறான். 'பாட்டாளியின் குரல்' என்ற ஒரு புத்தகத்தை தொழிலாளர்களுக்காக குரல் கொடுப்பது போல் எழுதி அவர்களின் நம்பிக்கையை நயவஞ்சகமாகப் பெறுகிறான். தொழிலாளர்களின் தலைவனாகவும் ஆகி விடுகிறான்.வேலை நிறுத்தத்தையும் அறிவிக்கிறான். மேஸ்திரியும், தொழிலாளர்களும் அவனை மலை போல் நம்பி ஏமாறுகின்றனர்.
இது சம்பந்தமாக பேச அழைக்கும் மில் முதலாளியிடம் தொழிலார்களை விலை பேசி பெரும் பணத்தையும் அவரிடமிருந்து லஞ்சமாகப் பெற்றுக் கொண்டு தொழிலார்களை ஏமாற்றுகிறான் பரந்தாமன். அது தெரியாத தொழிலார்கள் இன்னும் அவன் மாய்மாலப் பேச்சை நம்பி அவன் சொன்னபடி திரும்ப வேலைக்கு செல்கிறார்கள்.
குமுதா பாண்டியன் இவர்களுடன் சென்னையிலிருந்து கோவை திரும்புகிறாள் பூமாலை. பாண்டியன் அங்கிருப்பது கண்டு ஆத்திரமுற்று அவனை அடித்து விடுகிறான் பரந்தாமன். இதனால் மனம் நொந்து தன் தந்தையிடமே சென்று விடுகிறான் பாண்டியன்.
இதனால் வேதனையடையும் குமுதா பூமாலையிடம் தான் பாண்டியனைக் காதலிப்பதை சொல்ல அதிர்ச்சியடையும் பூமாலை தன் ஒருதலைக் காதலை மனதுக்குள்ளேயே பூட்டி அழுகிறாள். பாண்டியனை குமுதாவிற்கு திருமணம் செய்து தருவதாக உறுதி கூறுகிறாள்.
பாண்டியனின் தந்தை மேஸ்திரி ஒரு ஊமைப் பெண்ணை இரண்டாவது திருமணம் செய்து கொள்கிறார் தன் மகனின் எதிர்ப்பை மீறி. . பாண்டியன் இது பிடிக்காமல் வீட்டை விட்டு வெளியேறுகிறான். திரும்பவும் அவனைச் சந்தித்து தன் வீட்டிற்கு அழைத்துச் சென்று பாண்டியனுக்கும், குமுதாவிற்கும் திருமணம் செய்து வைக்கிறாள் பூமாலை தன் காதல் தோல்வியுற்ற நிலையில்.
தான் இல்லாத நேரத்தில் சொன்னபடி குமுதாவை தனக்கு திருமணம் செய்து வைக்காமல் பாண்டியனுக்குத் திருமணம் செய்து வைத்த விட்டதாக அக்காளின் மேல் பாய்கிறான் பரந்தாமன்.
பரந்தாமனின் தொழிலாளர் நயவஞ்சகத்தை எண்ணிக் கொதிப்படையும் பாண்டியன் தொழிலார்களிடம் பேசி பாண்டியனின் அக்கிரமங்களைப் பற்றி அவர்களுக்குப் புரிய வைக்கிறான். தவிர தொழிலாளர்களின் தலைவனாகவும் ஆகிறான்.தொழிலாளர்களுக்காக முதலாளியிடம் பரிந்து பேசுகிறான். முதலாளி தரும் கையூட்டையும் தூக்கி தூர எறிகிறான் அந்த நல்லவன். முதலாளியின் மகள் டாக்டர் உஷாவும் தொழிலாளர்களுக்காகப் பரிந்து பேசுகிறாள்.
மேஸ்திரி புண்ணியகோடி இரண்டாவது திருமணம் செய்து கொண்ட அந்த ஊமைப் பெண்ணையும் கூட சூறையாடத் துடிக்கிறான் பரந்தாமன். மேஸ்திரி புண்ணியகோடி பரந்தாமனின் உண்மையான சொருபத்தை அறிந்து கொள்கிறான்.
உஷாவைத் தனக்குத் திருமணம் செய்து தரும்படி முதலாளியிடம் நிர்ப்பந்திக்கிறான் பரந்தாமன். ஆனால் முதலாளி அதற்கு மறுத்து விடுகிறார்.
குமுதாவை தன்னிடமிருந்து பிரித்து திருமணம் செய்து கொண்டது, தொழிலாளிகளிடம் தன் துரோக செயல்களை எடுத்துரைத்து தன் முகமூடியைக் கிழித்தது என்று பாண்டியன் மேல் கடும் கோபம் கொள்ளும் பரந்தாமன் பாண்டியனைக் கொலை செய்ய முயற்சிக்கிறான். இதை அறிந்த குமுதா பரந்தாமன் மேல் கடும் கோபம் கொள்கிறாள். இனியும் இருந்தால் தன் கணவனைக் கொன்று விடுவான் பரந்தாமன் என்று பயந்து கண்ணீர் வடிக்கிறாள். இதனால் பூமாலை அவர்கள் இருவரையும் திரும்ப சென்னைக்கே அனுப்பி விடுகிறாள்.
சென்னையில் தங்கியிருக்கும் பாண்டியனை சாமர்த்தியமாக ஒரு திருட்டுக் குற்றம் சுமத்தி ஜெயிலுக்கு அனுப்பி விடுகிறான் பரந்தாமன். கர்ப்பவதியான குமுதா ஆதரவற்று நிற்கிறாள். ஒரு ஆஸ்பத்திரி வாட்ச்மேன் அவளை ஆதரித்து தன் வீட்டிற்கு அழைத்துச் செல்கிறார்.
வேலை நிறுத்தத்திற்காக தொழிலாளர்களைத் தூண்டி விட்டதற்காக போலீஸ் பரந்தாமனைத் தேட, பரந்தாமன் மாறு வேடத்தில் தப்பி சென்னை செல்கிறான். அங்கு எதிர்பாராவிதமாக வேசியாக பாமாவை சந்திக்கும் பரந்தாமன் அவளிடமிருந்தும் தப்பி விடுகிறான். போலீசிலும் சிக்கி கோர்ட்டாரிடம் தன் சாமர்த்திய வாதத் திறமையினால் முதல் மன்னிப்புப் பெற்று வெளியே வந்து விடுகிறான். ஆனால் தொழிலாளிகள் பாண்டியனின் கயமைத்தனத்தைப் புரிந்து கொள்கிறார்கள்.
ஜெயில் வாழ்க்கையில் வாடும் பாண்டியனும் சுதந்திரதின நாளன்று கருணை விடுதலை செய்யப்பட்டு பல கஷ்டங்களுக்கிடையே கைக்குழந்தையுடன் கஷ்டப்படும் தன் மனைவி குமுதாவைத் தேடிக் கண்டு பிடித்து அவளுடன் சேர்கிறான். மில் முதலாளி வேலை நிறுத்தம் செய்த தொழிலாளர்களை வேலையை விட்டே நீக்கி விட, மேஸ்திரி புண்ணியகோடியும்,இதர தொழிலார்களும் பிச்சைக்காரர்களாய் சென்னை வந்து சேர, அவர்களை காணும் பாண்டியன் தன் தந்தையும், மற்றவர்களும் வேலை இழந்து தவிப்பதை அறிந்து அவர்கள் மீண்டும் வேலை பெற வேண்டி முதலாளியைச் சந்திக்க அனைவருடனும் கோவை செல்கிறான்
பரந்தாமனின் பேச்சை நம்பி வேலை பறி போன தொழிலாளர்களுக்காக வேலைக் கேட்க முதலாளியைச் சந்திக்க செல்லும் பூமாலையின் வேண்டுகோளை நிராகரிக்கிறார் முதலாளி. அங்கு மயக்கமாகும் பூமாலையை முதலாளி மகள் டாக்டர் உஷா முதல் உதவி செய்து பூமாலையின் வீட்டிற்குக் கொண்டு சென்று உடன் இருந்து கவனிக்கிறாள். உஷாவின் மேல் ஒரு கண்ணாயிருக்கும் பரந்தாமன் அங்கே இரவில் உறங்கிக் கொண்டிருப்பது தன் அக்காள் பூமாலை என்பது தெரியாமல் அவளை உஷா என்று நினைத்து காம வெறியில் நெருங்கித் தொட, திடுக்கிட்டு எழுந்திருக்கும் பூமாலை தன் தம்பியின் கெட்ட எண்ணத்தைப் தெரிந்து கொண்டு கோபத்தின் உச்சத்தில் பொங்கி விடுகிறாள். "உனக்கு பெண் சுகம் தானே வேண்டும். இதோ உன் அக்காள் நான் இருக்கிறேன். என்னிடமே அதைப் பெற்றுக் கொள்' என்று அவனை வார்த்தை அம்புகளால் தைக்கிறாள். நீ ஏமாற்றிய பெண்களின் வாழ்க்கையைத் 'திரும்பிப் பார்'... நீ செய்த கொடுமைகளைத் திரும்பிப் பார்... நீ நடந்து வந்த பாதையைத் திரும்பிப் பார்' என்று கர்ஜிக்கிறாள். சற்றும் இதனை எதிர்பாராத பரந்தாமன் அக்காளின் கடும் கோபச் சொல்லையும், அக்காவே தன் காம வெறியைத் தீர்க்க அவளையே தனக்கு அர்ப்பணிக்கத் தயாரான நிலையையும், தன்னைத் திருத்த அவள் மேற்கொண்ட அந்த கொடுஞ் செயலையும் கண்டு துடித்துத் துவள்கிறான். கதறுகிறான். கண்ணீர் வடிக்கிறான். மனம் திருந்துகிறான். ஆனால் அக்காள் நம்ப மறுக்கிறாள்.
தன் முறைப் பெண் கோமதி வாழ்வு தன்னால் தானே கேட்டது என்று எண்ணி அவளிடம் மன்னிப்பு கேட்க கோமதியின் விலாசம் தேடி அவள் வீட்டிற்கு செல்கிறான் பரந்தாமன்.ஆனால் அங்கு தன்னால் பாதிக்கப்பட்டு வேசியான பாமா துப்பாக்கியுடன் தன்னை சுட வந்தததை அவன் எதிர்பார்க்க வில்லை. தான் திருந்திவிட்டதைக் கூறும் பரந்தாமன் தன்னை சுடாமல் இருக்கும்படி பாமாவிடம் வேண்ட, வழக்கம் போல பரந்தாமன் நாடகமாடுகிறான் என்று பாமா மறுக்க, இருவரும் துப்பாக்கியுடன் போராடும் போது துப்பாக்கி வெடித்து பாமா கொலையுண்டு விழ, அங்கே தம்பி பரந்தாமனைத் தேடி வரும் பூமாலை பரந்தாமன் கோமதியைத்தான் பழி உணர்ச்சியின் காரணமாக சுட்டு விட்டான் என்ற தவறுதலான கோபத்தில் தம்பியையே தான் கொண்டு வந்த துப்பாக்கியால் சுட்டு விடுகிறாள். திருந்திய தம்பியாக பரந்தாமன் தான் இப்போது நல்லவன் என்று அக்காளிடம்கூறி உயிரை விடுகிறான். தன் தம்பியைத் தன் கையால் சுட நேர்ந்த துரதிருஷ்டத்தை எண்ணி கலங்குகிறாள் பூமாலை. இறந்தது கோமதி அல்ல...பாமா என்றும் கண்டு கொள்கிறாள்.
ஊர் திரும்பி முதலாளியைச் சந்திக்கும் பாண்டியன் வேலை இழந்த அனைவருக்கும் வேலையைத் திருப்பித் தருமாறு அவரிடம் வேண்டுகிறான். மில் முதலாளி தன் மகள் உஷாவால் மனம் திருந்தி பாண்டியனிடம் மில் நிர்வாகத்தை ஒப்படைகிறார். தொழிலாளர் மனம் மகிழ்கின்றனர். அனால் செய்தித்தாளில் பூமாலை தன் தம்பி பரந்தாமனைக் கொலை செய்ததாக வந்த செய்தியைப் படித்து அதிர்ச்சியாகும் பாண்டியனைப் போலீஸ் கைது செய்கிறது. போலீஸ் பாண்டியனுக்கும் பரந்தாமனுக்கும் இருந்த முன் விரோதத்தின் காரணமாகவே பாண்டியன் பரந்தாமனைக் கொலை செய்தான் என்று பாண்டியனைக் கைது செய்கிறது
கோர்ட்டில் விசாரணை நடக்கிறது. 'பூமாலை பரந்தாமனை சுட்டிருக்க முடியாது....முன் விரோதம் காரணமாக பாண்டியன்தான் பரந்தாமனை சுட்டு விட்டான். பாண்டியன் மேல் உள்ள அன்பினால் கொலைப் பழியை பூமாலை ஏற்றுக் கொண்டாள்' என்று அரசு தரப்பு வக்கீல் வாதாடுகிறார். ஆனால் பூமாலை 'தன் தம்பியைக் சுட்டுக் கொன்றது நானே! பாண்டியன் அல்ல... அவன் நிரபராதி' என்று நீதிபதி முன் வாக்குமூலம் கொடுத்து, நடந்த கதைகள் அத்தனையையும் விளக்க, உண்மைகள் அனைவருக்கும் புரிகிறது. நீதிபதி பூமாலைக்கு மரண தண்டனை விதிக்கிறார். பாண்டியன் நிரபராதி என விடுவிக்கப் படுகிறான்.
பரந்தாமனாக நடிகர் திலகம்
பரந்தாமன் என்னும் அனைவரையும் மிரள வைக்கும் வில்லன் பாத்திரத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். ஆண்டி-ஹீரோ. ஹீரோவும் அவரே. (நரசிம்மபாரதி ஒப்புக்கு சப்பாணி நாயகர்) கதாநாயகர்கள் எவருமே செய்யத் துணியாத பாத்திரம். அதுவும் முதல் படத்தில் முழு ஹீரோவாக நடித்து விட்டு ஐந்தாவது படத்தில் கொடிய வில்லன் என்ற பாத்திரத்தை ஏற்று நடிக்க நடிகர் திலகத்திற்கு மட்டுமே துணிச்சல் வரும். அந்த அளவிற்கு தன் திறமை மேல் அவருக்கு அவ்வளவு நம்பிக்கை.
பல பெண்களை ஏமாற்றும் காமுகன் வேடம். அக்கா குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கும் போது குழந்தைகள் போடும் சப்தம் பிடிக்காமல் அக்காவிடம் சலித்துக் கொள்வது, சோம்பேறித்தனத்தின் உச்சியில் போட்டிருக்கும் நைட் கவுனுடனே ஷவர் பாத் எடுப்பது, கருடன் பதிப்பகம் நடத்தும் டி.எஸ். துரைராஜுடன் சேர்ந்து எழுத்தாளன் பாண்டியன் எழுத்துக்களைத் திருடுவது, பாண்டியனின் எழுத்தை தன் எழுத்து என்று நம்பி ஏமாறும் கிருஷ்ணகுமாரியிடம் காதல் மொழி வசனங்கள் பேசி ஏமாற்றுவது, கள்ளச் சிரிப்பு, பேச்சிலே நயம் காட்டி பசப்பு வார்த்தைகளால் பாவையரை மயக்குவது, பாண்டியன் தனக்குப் போட்டியாக தொழிளார்களுக்கு தலைவன் ஆகி விட்டானே என்ற பொறாமையில் வெந்து தணிவது, அக்கா தன்னைக் கண்டிக்கும் போதெல்லாம் ஏதாவது சமாதானம் சொல்லி அவள் வாயை அடைப்பது, தன் செயலுக்கு நியாயம் கற்பிப்பது, புத்திசாலித்தனமாக பேசி பிரச்னைகளிடமிருந்து தப்பிக்கும் சாமார்த்தியம், கிருஷ்ணகுமாரியை மீண்டும் மயக்கும் பேச்சுக்களால் மதி மயங்கச் செய்து சென்னை அழைத்துச் சென்று அவளை பரிதவிக்க விட்டு விட்டு ஓடி வந்து விடும் துரோகம், தொழிலாளர்களின் அவல நிலையை தனக்கு சாதகமாக்கி அவர்களை வேலை நிறுத்தத்திற்கு தூண்டும் மேடைப் பேச்சு சாமர்த்தியம், முதலாளியிடம் தொழிலாளர்களை அடகு வைத்து விட்டு லஞ்சம் வாங்கும் கோரம், பாண்டியனை கொலை செய்யவே போகும் அளவிற்கு கண்மண் தெரியாத ஆத்திரம், கோர்ட்டில் எசகுபிசகாக மாட்டிக் கொண்டவுடன் 'இது என்னுடைய முதற்குற்றம்... அதற்காகவே நான் மன்னிக்கப் படலாம்' என்று சாதுர்யமாக வாதிட்டு தண்டனையில் இருந்து தப்பிக்கும் விவேகம், மேஸ்திரி தங்கவேலுவின் ஊமை மனைவியியைக் கூட விட்டு வைக்காத காமுக குணம், முதலாளி மகள் டாக்டர் உஷா மீதும் கண், பாண்டியனின் மீது சாமர்த்தியமாக சுமத்தும் நகை திருட்டு குற்றம் என்று அத்தனை கெட்ட குணங்களையும் கொண்ட ஒரு வஞ்சக நரி கதாபாத்திரத்தை அற்புதமாகச் செய்ய நடிகர் திலகத்தை விட்டால் செய்ய ஆளேது?
மனிதர் கண்களாலேயே அசத்துகிறார். கண்களில் தெரியும் கள்ளத்தனம், ஓரப்பார்வையில் தெரியும் வஞ்சகக் குணம், சிரிப்பில் காட்டும் குரூரம் என்று அச்சு அசலாக ஒரு பெண்பித்தனையையும்,பஞ்சமாப் பாதகம் செய்யும் ஒரு கொடூரனையும் நம் கண் முன் கொண்டு வந்து நிறுத்திவிடுகிறார் நடிகர் திலகம்.
கிளைமாக்ஸ் காட்சிகளில் நடிப்பின் பல பரிமாணங்களைத் தொடுகிறார் அந்த இளம் வயதிலேயே. டாக்டார் உஷா என்று நினைத்து படுக்கையில் படுத்திருக்கும் தன் அக்காளைத் தெரியாமல் தொட்டு விட , அக்கா பண்டரிபாய் எழுந்து இவருடைய அக்கிரமக் குணங்களை வசைபாடி 'என்னை எடுத்துக் கொள்' என்று அதிர்ச்சி தரும்போது மனம் திருந்தும் நடிகர் திலகத்தின் நடிப்பு நம்மை சிலிர்க்க வைக்கிறது. இறுதியில் நல்லவனாகத் திருந்தியும் தன் உடன் பிறந்த அக்காவினால் விவரம் அறியாமல் சுடப்பட்டு சாவின் வாசலைத் தொடும் போது 'நான் குற்றமற்றவன் அக்கா' என்று தன்னை நிரூபித்து கண் மூடும் போது எல்லோரையும் கலங்கடித்து விடுவார்.
இந்தப்படத்தில் நடிகர் திலகம் வில்லனாக நடித்திருந்தாலும் முதன் முதலாக வில்லன் நடிப்பையும் ரசிக்க வைத்த பெருமைக்கு உரியவராகிறார். அதே போல நடிகர் திலகம் இப்படத்தில் வித விதமாக அணிந்து வரும் உடை அலங்காரங்கள் மிக பிரசித்தி பெற்றவை இன்றளவும் கூட.
பரந்தாமனாக நடிகர் திலகம், பாண்டியனாக நரசிம்ம பாரதி, அக்கா பூமாலையாக பண்டரிபாய், கோமதியாக கிரிஜா, பாமாவாக கிருஷ்ணகுமாரி, கருடனாக டி.எஸ்.துரைராஜ், மேஸ்திரி புண்ணிய கோடியாக தங்கவேலு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்தனர்.
"திரும்பிப் பார்"
திரும்பிப் பார்க்க வைக்கும் சில விசேஷ தகவல்கள்.
1. நடிகர் திலகத்தின் ஐந்தாவது படம் இது.
2. நடிகர் திலகமும், கலைஞரும் இணைந்த மூன்றாவது படம் இது.
3. மாடர்ன் தியேட்டர்ஸ் சிவாஜி அவர்களை வைத்து தயாரித்த முதல் படம்.
4. இயக்குனர் டி.ஆர். சுந்தரம் அவர்களின் சிவாஜிக்கான முதல் இயக்கம்.
5. முதன் முதலாக கிருஷ்ண குமாரி (நடிகை சௌகார் ஜானகியின் தங்கை), கிரிஜா, தனலக்ஷ்மி ஆகியோர் நடிகர் திலகத்துடன் இணைந்து நடித்தனர்.
6. நடிகர் திலகமும், நரசிம்ம பாரதியும் நடித்த முதல் படம் இது.
7. பராசக்திக்குப் பிறகு நிறைய புரட்சிக் கருத்துக்களும், புதுமையான வசனங்களும் நிறைந்த படம்.
8. 'கலப்படம் கலப்படம் எங்கும் எதிலும் கலப்படம்" என்ற பாடல் அப்போது ரொம்பவும் பிரபலம். அரிசியில் கால், நெய்யில் டால்டா, காபித் தூளில் புளியங்கொட்டைத் தூள் என்ற கலப்பட சந்தையின் தகிடு தத்தங்கள் இப்பாடலில் அப்பட்டமாக எதிரொலிக்கும். காணொளி வடிவில் காணுங்கள்.
9. திராவிட முன்னேற்றக் கழகம் திரைப்படங்களை சாதகமாக்கி வளர்ந்து வந்த வேளையில் ஆளும் காங்கிரஸ் கட்சியை பல்வேறு விமர்சனங்கள் செய்தது. இதனால் கோபமுற்ற நேரு திராவிட முன்னேற்றத் தலைவர்களை நான்சென்ஸ் என்று திட்டி விட்டார். இந்த சம்பவத்தை திமுக தலைவர் கருணாநிதி அவர்கள் இப்படத்தின் வசனங்கள் மூலம் அருமையாகப் பயன்படுத்திக் கொண்டார். சிவாஜி அவர்கள் கூலிங் கிளாஸ் அணிந்து அடிக்கடி 'நான்சென்ஸ்' என்று பலரை அடிக்கடி கடிந்து கொண்டே இருப்பார். நேருவை நக்கல் செய்வதற்காகவே இப்படிப்பட்ட காட்சிகள் உருவாக்கப் பட்டனவாம்.
10. இப்படத்தில் சிவாஜி அவர்கள் அணிந்திருந்த பல நவீன புதுவிதமான உடையலங்காரகளைக் கண்டு அனைவரும் அப்போது மிகவும் அதிசயப்பட்டனராம் . குறிப்பாக பத்திரிகைகள் சிவாஜி அவர்களின் உடை தேர்வினை பாராட்டி மகிழ்ந்தனவாம்.
11. ஜி.ராமநாதன் அவர்கள் இசையமைத்த முதல் நடிகர் திலகத்தின் படம் இது.
13. குறிப்பாக நடிகர் திலகத்தின் வில்லன் நடிப்பு அப்போது மிக மிகப் பேசப்பட்டது. 'திரும்பிப் பார்' படத்தின் புரட்சிமிகு வசங்கள் மிக பிரபல்யமாயின.
14. 'கருடன் பதிப்பகம்' என்ற வாசகம் உள்ள பலகையில் 'க' என்ற எழுத்தை 'தி' என்று மாற்றி எழுதி 'திருடன் பதிப்பகம்' என்று மாற்றி வைத்து விட்டு செல்லுவார் அங்கு வேலை செய்யும் ஊழியர். இந்தக் காட்சியும் அப்போது மிகவும் பேசப்பட்ட ஒன்று.
15. படத்தில் வரும் பரந்தாமன் (சிவாஜி ) எழுதும் 'பாட்டாளியின் குரல்' என்ற புத்தகத்தின் பெயரும் அப்போது ரொம்ப பிரபலமடைந்த ஒரு பெயராம்.
16. அப்போது தெலுங்கில் புகழ் பெற்றுக் கொண்டிருந்த நாயகி கிருஷ்ணகுமாரி சிவாஜி அவர்களுடன் நடித்த ஒரே படம் இது.
17. 'பராசக்தி' அளவிற்கு இந்தப் படம் பிரம்மாணடமான வெற்றியடைய முடியாவிட்டாலும் நல்ல வெற்றியடைந்த படம் இது. சிவாஜி அவர்களின் மறக்கவொண்ணா சிறந்த படங்களின் பட்டியலில் 'திரும்பிப்பாரு'ம் நிச்சயம் இடம் பெறும்.
இக்கட்டுரைத்தொடர் முழுதும் என் சொந்தப் படைப்பே!
நன்றி!
அவருடைய பிறந்த தினத்தில் ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு என்று ரிலீஸ் ஆன ஒரே காவியம் "துணை"(1/10/1982). ஆனால் மறக்க முடியாத பெருமைக்குரிய படமாக அமைந்தது.
இதில் தசரத ராமன் பாத்திரம் பிரமாதமாக படைப்பு பெற்று நடிகர்திலகத்தால் அற்புதமான உருவம் பெற்றது. உயிர்ப்பு பெற்றது.உணர்வு பெற்றது. அமரத்துவம் பெற்றது.
தசரத ராமன்-
1)மகனுடன் தனித்து மகனுக்காகவே வாழும் possessive தந்தை.
2)சமூக உயர் நோக்கம் கொண்ட அரசாங்க அதிகாரி.
3)எந்த மாதிரி மனநிலையில் இருந்தாலும், extrovert ஆக எல்லோரிடமும் (பெண்கள் உட்பட) மிக நட்பாக பழகி,சரளமான நகைச்சுவை உணர்வோடு பழகும் இனிய மனிதன்.
4)தன்னுடன் உடன் இருக்கும் அக்கம்பக்கத்தார் நண்பர்கள் நலனில் மிக அக்கறை செலுத்துபவன்.
5)ஒரு சிறிய அசந்தர்ப்பம் (மகனும் நண்பனும் பேசி இவரிடம் சொல்லாமல்)அவருக்கு வாய்க்க போகும் மிக முக்கியமான (மருமகள் cum மகள்)ஒரு உறவை திரிந்த பார்வையில் பார்க்க வைக்கிறது.
6)கல்யாணத்துக்கு பிறகும் உறவு சீர்படாமல் ,மேலும் திரிவே காண்கிறது.
7)உன்னை சொல்லி குற்றமில்லை,என்னை சொல்லி குற்றமில்லை,காலம் செய்த கோலமடி ரீதியில்.
8)தசரத ராமனின் outdated மனநிலை,புலம்பல்,possessiveness ,disciplinarian attitude (out of care ) சூழ்நிலையை சீர்கெடுத்து,மருமகளை இவரை எதிரியாகவே பார்க்க வைத்து கொஞ்சம் vicious ஆகவே மாற்றுகிறது.
9)எனக்கு பிடித்த இரு அற்புத காட்சிகள். சம்பந்தியிடம் தேவையில்லாமல் பேசி,புலம்பி, (insulting tone கொண்டு )வாங்கி கட்டும் இடம்.வேறு ஏதோ நினைவில் இருக்கும் போது,அலுவலகம் வந்து கூப்பிடும் மகனிடம், சடாரென்று அங்கே இங்கே பார்த்து நினைவு வந்து சுதாரிக்கும் இடம்.
10)தசரத ராமன், தன்னிலை மறந்து ,dejection ,depression ,loneliness ஆகியவற்றில் தவித்து ,வீட்டை விட்டு போகும் நிலைக்கு ஆளாகும் கட்டங்களில் நடிகர்திலகம் தவிர வேறு யாரையேனும் நினைத்தேனும் பார்க்க முடியுமா?
இளைய தலைமுறையினர் பார்த்தே ஆக வேண்டிய எண்பதுகளின் நடிகர்திலகத்தின் பெருமைக்குரிய படம்.(இசையை மறந்து,தவிர்த்து விடவும்)
வியட்நாம் வீடு சுந்தரம்,துரை ஆகியோருக்கு மனமார்ந்த நன்றிகள்.
கள்ளம் கபடம் இல்லாத
வெள்ளை உள்ளம் கொண்ட படிக்காத மேதை
கலைத்தாயின் தவப்புதல்வன்
கலைத்தாயின் ஒரே சூரியன்
அண்ணன் சிவாஜி கணேசன்
அவர்களின் இன்றைய பிறந்த நாளில்
அனைவருக்கும் இனிய
சிவாஜி ஜெயந்தி தின வாழ்த்துக்கள்
அக்டோபர் - உலக உத்தமர்களில் முதன்மையானவர்கள் பல திறமையாளர்கள் பல மகான்கள் பிறந்த மாதம்
1ஆம் தேதி - திரை உலகின் அதிசயம்...தமிழ்நாட்டின் பெருமையாம் நடிகர் திலகம் உண்மை தமிழர்களின் தந்தையாம் நமது செவாலியர் சிவாஜி கணேசன் அவர்கள் அவதரித்த நாள் !
தொழிலிலும் சரி, சொந்தவாழ்கயிலும் சரி ..ஒரு நடிகன் எப்படி இருக்கவேண்டும் ..நடந்துகொள்ளவேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்கியர், விளங்கிகொண்டிருப்பவர் நம்முடைய நடிகர் திலகம்.
நாடக உலகிலும் சரி...திரை உலகிலும் சரி - அவர் நிகழ்த்திய சாதனைகள் பட்டியலிடமுடியாது என்பது அனைவருக்கும் தெரியும்.
தமிழ் திரை உலகில் ஒரு மிகபெரிய மாற்றத்தை விதைத்தவர் நமது சிம்மகுரலோன் ! விதைத்ததோடு அல்லாமல் அதை வழிநடத்தி காட்டியவர்.
திரை உலகில் கதாநாயகனுக்காக உருவாக்கப்பட்ட கதாபாத்திரங்கள் என்றால் அது இவர் ஒருவருக்குதான் ! காரணம் அதை கையாளும் திறமை கொண்ட ஒரு திரை உலக சித்தராக நமது நடிகர் திலகம் இருந்தார் என்பதை யாராலும் மறுக்க முடியாது.
இவரை போட்டியாக நினைத்தவர்கள்....நினைப்பவர்கள் கூட....முதலில் இவரை போட்டியாக நினைத்து..அதன் பிறகு...இவருடைய நடிப்பிற்கும், கலைனயத்திர்க்கும் அடிமையாக போனார்கள் என்பதே உண்மை.
இன்னும் சொல்லப்போனால் ....போட்டியே இல்லாமல் ஒரு தனி ராஜாங்கமே நடிகர் திலகம் அவர்கள் கிட்டத்தட்ட கலை உலகில் 60 வருடங்களுக்கு மேல் நடத்தினார் என்பது அனைவரும் அறிந்த உண்மை.
நடிகர் திலகம் -
கதாபாத்திரம் - இவர் நடிப்பில் மெருகேறியது !
அபிநயம் - இவர் நடிப்பில் தனது பசியை தீர்த்துகொண்டது !
தமிழரின் கலை புகழ் - இவரால் உலகளவில் பேசப்பட்டது !
நடிப்பு - இவர் ஒருவரே பல்கலைகழகம் என்று சரண் அடைந்தது !
தனித்தன்மை - இவரிடம் இருந்துதான் அதன் பலம் அதிகரித்தது !
திரை உலகம் - இவரால் புனிதமடைந்தது.
கலை உலகம் - இவரால் சிரஞ்சீவித்தன்மை கண்டது !
வல்லரசு நாடுகள் இவரால்
அமெரிக்கா - தமிழனை அவன் திறமையை அடையாளம் கண்டு...இவரிடம் சரண் அடைந்து தனது மாநில மேயராக இரண்டு முறை அமரச்செய்து அழகு பார்த்தது. பண்டித நேருவுக்கு பிறகு நம் நடிகர் திலகம் ஒருவருக்குதான் அந்த பெருமை. இந்திய அமெரிக்காவின் காலச்சார தூதுவராக கௌரவித்து பெருமைக்கு பெருமை சேர்த்தது !
ஆசிய - ஆப்ரிகா - இரண்டு கண்டங்களும் அதில் உள்ள அனைத்து கலைஞர்களும் - இவர் திறமை முன் சரண் அடைந்து - இவரே இந்த கண்டங்களின் சிறந்த நாயகன் என மார்தட்டி பெருமை பட்டுகொண்டது !
ஐரோப்பா - மாவீரன் நெப்போலியன் உயிருடன் இருந்தால் எப்படி கெளரவம் செய்திருப்பானோ அந்த கௌரவத்தை இவர் இருக்கும் இடம் சென்று கௌரவித்து மகுடத்தில் வைரமாக மின்ன செய்தது !
உலக விருதுகள் நோக்கி ஓடுபவர்கள் மத்தியில் உலக விருதுகளை தமிழனை நோக்கி வரவழைத்த சிங்க தமிழன் சிவாஜி கணேசன் அவர்கள்.
முதல் படத்திலயே நாயக அந்தஸ்த்து - படம் வந்ததிலிருந்து உச்ச நட்சத்திரமாக இன்று வரை தொடர்வது ...நாயகனா...தீயவனா...நகைச்சுவயாளனா...இன்னும் எத்துனை விஷயங்கள் இருக்கிறதோ அத்தனையும் ஒரு கை பார்த்து ...அனைத்திலும் எவரும் கனவு கூட காண முடியாத வெற்றி திருமகன் நம் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்.
தான் பெற்ற பல உலக விருதுகளால் உண்மையான உலகநாயகனாக வலம் வந்த நம் நடிகர் திலகம் !
எதிரிகளோ..அல்லது துரோஹிகளோ ...அது யாராக இருந்தாலும் அவர்களுக்கு தன்னுடைய வெற்றிகளை மட்டுமே பரிசாக கொடுத்து பழக்கப்பட்ட எங்க ஊரு ராஜா ....
எண்ணிக்கையில் அடக்க முடியாத...எண்ணிக்கையில் அடங்காத வள்ளல் தவப்புதல்வன், நடிப்புலகின் தந்தை புகழ் எட்டு திக்கும் வானம் தொடட்டும் !
இந்தியாவின் மகாத்மா காந்தி பிறந்த நாளுக்கு முதல் நாள் அவதரித்த இந்த திரை உலக மகான் நடிகர் திலகம் அவர்களின் புகழ் இந்த புவி உள்ளமட்டும் வளர்ந்துகொண்டே இருக்க எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் !
தமிழனை உலகளவில் பெயர் புகழ் பெறவைத்த நடிகர் திலகம் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் பணிவுடன் சமர்பித்து வளர்க திரை உலக சித்தரின் புகழ் தாரணி எங்கும் !
https://www.youtube.com/watch?v=EcqXs94XVe8
https://www.youtube.com/watch?v=MmYciykHXMM
Happy Birthday NT Sivaji Sir
You are a true Legend we miss you always
சிவாஜி 25
சிவாஜி கணேசன்... இந்திய சினிமாவின் திறந்தவெளிப் பல்கலைக்கழகம். எல்லா நடிகர்களுக்கும் ரசிகர்கள் இருப்பார்கள். ஆனால், அனைத்து நடிகர்களும் இவருக்கு ரசிகர்கள். அந்தக் கலைச் சமுத்திரத்திலிருந்து சில துளிகள்...
* சத்ரபதி சிவாஜி வேடத்தில் நடித்த வி.சி.கணேசனை மேடைக்குக் கீழ் இருந்து பார்த்த தந்தை பெரியார், 'இனி இவர்தான் சிவாஜி!' என்று சொன்னார். அதுவே காலம் சொல்லும் பெயரானது!
* நடிகர் திலகம் முதன்முதலில் போட்ட வேடம் பெண் வேடம் தான். உப்பரிகையில் நின்றுகொண்டு ராமனைப் பார்க்கும் சீதை வேடம்தான் சிவாஜி ஏற்ற முதல் பாத்திரம்!
* 1952-ல் நேஷனல் பிக்சர்ஸ் தயாரித்த 'பராசக்தி'யில் 'குணசேகரன்' பாத்திரத்தில் சிவாஜியைக் கதாநாயகனாக்க படத் தயாரிப்பாளர் பி.ஏ.பெருமாள் முடிவு செய்தபோது, பலரும் எதிர்ப்புத் தெரிவித்தனர். எதையும் காதில் வாங்கிக்கொள்ளாமல் சிவாஜியை ஹீரோவாக்கிய பெருமை பெருமாளுக்கே உண்டு!
* சின்சியாரிட்டி, ஒழுங்கு, நேரந் தவறாமைக்கு சிவாஜி ஓர் உதாரணம். ஏழரை மணிக்கு ஷுட்டிங் என்றால், ஆறே முக்கால் மணிக்கே செட்டில் ஆஜராகிவிடுவார். தனது வாழ்நாளில் ஒரு நாள்கூடத் தாமதமாக ஷுட்டிங்குக்குச் சென்றது இல்லை!
* கலைஞரை 'மூனா கானா', எம்.ஜி.ஆரை 'அண்ணன்', ஜெயலலிதாவை 'அம்மு' என்றுதான் அழைப்பார்!
* வீரபாண்டிய கட்டபொம்மன், பாரதியார், வ.உ.சி., பகத்சிங், திருப்பூர் குமரன் போன்ற சுதந்திரப் போராட்ட வீரர்களின் பாத்திரங்கள் அனைத்தையும் ஏற்று நடித்தவர் சிவாஜி ஒருவரே!
* தன்னை 'பராசக்தி' படத்தில் அறிமுகம் செய்த தயாரிப்பாளர் பி.ஏ.பெருமாள் வீட்டுக்கு ஒவ்வொரு பொங்கல் அன்றும் சென்று, அவரிடம் ஆசி பெறுவதை வழக்கமாகவே வைத்திருந்தார் சிவாஜி!
* திருப்பதி, திருவானைக்கா, தஞ்சை மாரியம்மன் கோயில்களுக்கு யானைகளைப் பரிசளித்துள்ளார்!
* தமிழ் சினிமா உலகில் முதன்முதலாக மிகப் பெரிய கட்-அவுட் வைக்கப்பட்டது சிவாஜிக்குத்தான். 1957-ல் வெளிவந்த அந்தப் படம் 'வணங்காமுடி!'
* சிவாஜி தனது நடிப்புக்காக வாங்கிய முதல் பரிசு ஒரு வெள்ளித்தட்டு. 'மனோகரா' நாடகத்தைப் பார்த்த கேரளா -கொல்லங்காடு மகாராஜா கொடுத்த பரிசு அது!
* தனது அண்ணன் தங்கவேலு, தம்பி சண்முகம் போன்றவர்களுடன் ஒரே கூட்டுக் குடும்பமாக இறுதிவரை வாழ்ந்தார். சிவாஜி யின் கால்ஷீட், நிர்வாகம் அனைத்தையும் கவனித்துகொண்டவர் அவரது தம்பி சண்முகம்தான்!
* சிவாஜி நடித்த மொத்தப் படங்கள் 301. இதில் தமிழ்ப் படங் கள் 270. தெலுங்கில் 9, ஹிந்தி 2, மலையாளம் 1, கௌரவத் தோற்றம் 19 படங்கள்!
* ஒவ்வொரு வருடமும் குடும்பத்துடன் தனது சொந்த ஊரான சூரக்கோட்டையில் பொங்கல் விழா கொண்டாடுவதை வழக்கமாகவே வைத்திருந்தார். அன்றைக்குப் பல சினிமா பிரபலங்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்வார்கள்!
* விநாயகர் மீது மிகுந்த பக்திகொண்டவர் சிவாஜி. சிறுவெள்ளி யிலான பிள்ளையார் விக்கிரகத்தை எப்போதும் கூடவே வைத்திருப்பார்!
* சிவாஜிக்கு சிகரெட் பிடிக்கும் பழக்கம் இருந்தது. 'பராசக்தி' படத்தை இயக்கிய, இயக்குநர்கள் கிருஷ்ணன் - பஞ்சு முன்னிலையில் மட்டும் சிகரெட் பிடிக்க மாட்டார்!
* 'ரத்தத் திலகம்' படத்தில் இவரது நடிப்பைப் பாராட்டி - சென்னை சினிமா ரசிகர் சங்கம் கொடுத்த பரிசு - ஒரு துப்பாக்கி!
* படப்பிடிப்பின்போது அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் எடுக்காத நேரங்களில் மற்றவர்கள் நடிப்பதை உற்றுக் கவனிப்பார். ஆர்வமாகக் கேட்டால் மற்றவர்களுக்கு டிப்ஸ் கொடுப்பார்!
* சிவாஜியும் எம்.ஜி.ஆரும் இணைந்து நடித்த ஒரே படம் கூண்டுக்கிளி!
* விதவிதமான கடிகாரங்களை அணிவதில் இவருக்கு அலாதி பிரியம். ஒமேகா, ரோலக்ஸ் போன்ற வாட்சுகளை ஏராளமாக வாங்கிவைத்திருந்தார்!
* தன் தாய் ராஜாமணி அம்மையாருக்கு சிவாஜி கார்டனில் சிலை ஒன்றை அமைத்தார் சிவாஜி. அந்தச் சிலையைத் திறந்துவைத்தவர் எம்.ஜி.ஆர்!
* 'ஸ்டேனிஸ் லா வோஸ்கி தியரி' என்கிற நடிப்புக் கல்லூரி மாணவர்களுக்கான பாடப் புத்தகத்தில் 64 வகையான முகபாவங்களைப் பிரதிபலிக்கும் திறமை பெற்றவர் என்று குறிப்பிட்டு, சிவாஜியின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன!
* அவரது தீவிரமான ஆசைகளில் ஒன்று தந்தை பெரியார் வேடத்தில் நடிப்பது. கடைசி வரை அது நிறை வேறவே இல்லை!
* பிரபல தவில் கலைஞர் வலையப்பட்டி, 'தமிழ் சினிமாவில் நீங்கள்தான் எல்லோருக்கும் ரோல் மாடல்' என்று சிவாஜியிடம் சொன்னபோது, 'டி.எஸ்.பாலையா, எம்.ஆர்.ராதா வரிசையில் மூன்றாவதாகத்தான் நான்' என்றாராம் தன்னடக்கமாக!
* பெருந்தலைவர் காமராஜரின் மீது அளவிட முடியாத அன்புகொண்டவர் இவர். 'அந்த சிவகாமியின் செல்வனின் அன்புத் தொண்டன் இந்த ராஜாமணியின் மகன்' - என்பதுதான் தன்னைப்பற்றி சிவாஜி செய்துகொள்ளும் அடக்கமான அறிமுகம்!
* கிரிக்கெட், கேரம்போர்டு இரண்டும் இவருக்குப் பிடித்தமான விளையாட்டுகள்!
- மானா பாஸ்கரன்
ஆனந்த விகடன்
இறந்து போன தமிழ் திரை உலகை ஊயிர்பிக்க மீண்டும் பிறந்து வா
Nadigar Thilagam's birthday on Saraswathi Puja. What a pious coincidence. Saraswathi takes different Avataars, one is V.C.Ganesan.
What a privilege this bachaa Balu had to sing to SARASWATHI ! BLESSED AM I.
I was blessed to have his abundance of love, which continues to flow to our family from his family.
Anna is ETERNAL.
Long live the legacy of Sivaji Anna.
SPB Sir on his Facebook
சினிமாவிற்கு இன்று பிறந்தநாள்
இறவாபுகழ் பெற்ற நடுப்புச்செம்மலே!
உறங்காத நினைவுகளால் உள்ளங்களை ஆட்கொண்டீர்!
பறவையினம் போல் பரந்த மனம் கொண்டவரே! இனி
பிறந்துதான் வரவேண்டும் உம்மைப்போல் ஒருவர்!
காலத்தை வென்றவர் பலருண்டு! ஆனால்
ஞாலத்தில் கணேசனை வென்றவர் எவருண்டோ!
கோலத்தில் இட்ட புள்ளிகள் போன்று
நீலதிரகடலின் துரும்பு போன்று
நுண்ணிய நிகழ்வுகளையும் தெளிவாக தன்
பண்பட்ட நடிப்பாற்றலால் காட்டியவரே! உமது
கண்ணசைவில் நவரசங்களையும் அள்ளி வழங்கினீர்!
பெண்களின் நளினத்தையும் கண்முன் கொணர்ந்தீர்!
நேரம் தவராமையைத் தவமாக கடைபிடிதவரே!
பேரறிஞர் அண்ணா மற்றும் பெரியாரின் அன்பைபெற்றவரே!
பாரம்பரியமிக்க நாடககலை மூலம் கலைத்துறைக்கு வந்து
ஊரறிய உலகறிய கலைத்தாயின் தவபுதல்வனாநீர்!
கனல்தெரிக்கும் வசனங்களால் உமது புகழை
அனல்பறக்க செய்தீர்! ஆற்றுபெருக்கு போன்ற
நினைவாற்றல் உமது அற்புதசிறப்பு!
மனமென்னும் கோயிலில் தெய்வமென நின்றீர்!
ஏழு வயது முதல் கலைத்தாயின் மடியில் தவழ்ந்தீர்!
ஏழேழு பிறப்புக்கும் ஈடேற்ற இயலாத நடிப்பை தந்தீர்!
ராஜாமணி அம்மையாரின் மணிவயிறு விளங்கிடசெய்தீர்!
பார்போற்றும் கலைஞநாக இன்றும் வலம் வருகின்றீர்!
தெய்வங்களையும் அடியார்களையும் உமது நடிப்பால் செதுக்கினீர்!
மெய்வருத்தி பலவேடங்கள் புனைந்தீர்! வான்மழை
பெய்திட வளரும் பயிர்போல் உமது வருகையால்
உய்ந்திட்ட கலைஞர்கள் ஏராளம் ஏராளம்!
வாழ்க சிவாஜி புகழ்!!!!!!!!!!
By Shankar Muthuswamy
in SIVAJI GANESAN THE GREAT FB pg
நடிகர்திலகத்தின் அன்பு நெஞ்சங்களுக்கு இனிய சிவாஜி ஜெயந்தி நல்வாழ்த்துக்கள்.
From the facebook
"நந்தகோபாலனோடு
நான் ஆடுவேனே!"
-என்று நளின பாவங்களோடு
நகைச்சுவை செய்த போது,
நாங்கள் அடைந்த மகிழ்வு..
"நலந்தானா" கேட்கும்
நாட்டியப் பேரொளிக்கு,
"நல்ல சௌரியம்" என்று
கண்களாலேயே
பதில் சொன்ன போது,
நாங்களடைந்த உற்சாகம்..
"மன்னவன் வந்தானடி"
பாடலில் நடக்கும்
ராஜநடை பார்த்து,
எங்கள் நடைக்கும் வந்த
கம்பீரம்..
"கை வீசம்மா" பாடி
பாசமலரில் அழுத போது,
நெஞ்சுக்குள் நிகழ்ந்த
நெகிழ்வு..
தன் தமிழில் குறை கண்ட
நக்கீரனிடம்
தர்க்கம் பேசும்
கோபத் தமிழிலும்
நாங்கள் கண்ட
இனிமை..
புன்னகை ஒளிரும்
அழகுதடுகள் அசைத்து
"அன்பாலே தேடிய"
பாடிய போது,
எங்கள் இதயம் பெற்ற
பேரமைதி..
விழி உருட்டி,
உடல் நிமிர்த்தி,
குரல் உயர்த்தி
வீரபாண்டிய கட்டபொம்மனாய்
"வெற்றிவேல்..வீரவேல்"
முழக்கமிட்ட போது
எங்களுக்கும் வந்த
உத்வேகம்..
அலைக்கழிப்புக்குப் பிறகு
சந்தித்த காதலியோடு
ஒரு வார்த்தை கூட
பேசாமல்,
சத்தமே இல்லாமல் துவங்கி,
பெருஞ்சத்தத்தோடு
சிரித்து முடிக்கும்
"நவராத்திரி" இறுதிக்காட்சியில்
நாங்கள் அடைந்த
சந்தோஷம்..
உடம்பு முழுக்க
அம்புகள் செருகிக் கிடக்க
தேர்ச் சக்கரத்தின் மேல்
சாய்ந்திருக்கும்
"உள்ளத்தில் நல்ல உள்ளம்",
எங்களுக்குத் தந்த
உருக்கம்..
"காவிரி தந்த
தமிழகத்துப் புது மணலில்.."
-என்று துவங்கி,
மடை திறந்த
வெள்ளமெனப் பாயும்
அழகுத் தமிழ் மேல்
நாங்கள் கொண்ட மயக்கம்..
கன்னக் குழி
கண்டிருக்கிறோம்.
அதிசயமான அதிசயமாய்
இடுப்பில் குழி விழ
எழிலாய்..மீனவனாய்
நடந்த போது,
எங்கள் இதயம்
துள்ளிய துள்ளல்..
கப்பலோட்டிய தமிழனாகவே
மாறி நின்ற போது,
எங்கள் உடல் பெற்ற
புல்லரிப்பு..
பரிசுகள், விருதுகளென்று
மேடையேறும் போதெல்லாம்
ரசிகர் பெருங்கூட்டம் உகுத்த
ஆனந்தக் கண்ணீர்..
"பராசக்தி"க்குப் பிறகு
திரையுலகம்
உங்கள் மேல் வைத்த..
"நீங்கள் இருந்தால்தான்
பராசக்தி" என
பெருமாள் முதலியார் எனும்
பெருமகனார் வைத்த..
நம்பிக்கை..
"சிவாஜி" என்று
எழுதினாலும்,பேசினாலும்,
நினைத்தாலும்,
நெஞ்சம் பெறுகிற
நிறைவு..
நிம்மதி..
-இவையத்தனையும்
எங்களுக்குக் கிடைத்தது
வெவ்வேறு காலங்களில்.
ஆனால்..
01.10.1928-என்கிற
தேடினாலும் கிடைக்காத
தெய்வீகத் திருநாளில்
பிறந்து,
அத்தனையையும்
ஒரே தினத்தில்
அன்னை ராஜாமணியாருக்குக்
கிடைக்கச் செய்தவரே..
வணங்குகிறேன்..
உங்கள் அவதாரத் திருநாளில்.