http://cinema.dinamalar.com/tamil-tv...-interview.htmQuote:
Originally Posted by mr_karthik
மிகப் பழைய நாடகமான குடும்பம்(?) ஜெய்கணேஷின் பேத்தியாக வந்த ஞாபகம் ...
Printable View
http://cinema.dinamalar.com/tamil-tv...-interview.htmQuote:
Originally Posted by mr_karthik
மிகப் பழைய நாடகமான குடும்பம்(?) ஜெய்கணேஷின் பேத்தியாக வந்த ஞாபகம் ...
சிரிப்பை நிறுத்தலாமா சோனியா?
'செல்லமே'- தொடரில் சம்பந்தமே இல்லாமல் சிரிச்சுக்கிட்டே இருக்கும் சோனியாவை அவரது வீட்டில் சந்தித்தோம்.
''என்னங்க இப்படித் திடீர்ன்னு சிரிப்பதை விட்டு விட்டு பழிவாங்குதில் இறங்கிட்டீங்க'' என்றவுடன் கலகலவெனச் சிரிக்கத் தொடங்கி விட்டவரை நிறுத்தி சற்று சீரியஸôகப் பேச வைத்தோம்:
'ஆமாம். இப்போது சிரிக்க முடியவில்லையே என்று கொஞ்சம் வருத்தமாகத்தான் இருக்கிறது. கதையோட களம் எல்லாம் மாறிப்போனதுனால இப்போது சிரிக்க முடியவில்லை. இருந்தாலும் சிரிப்பதற்கு முயற்சி செய்துகிட்டுத்தான் இருக்கிறேன். இந்தத் தொடரில் என் அம்மா இறந்துபோன பிறகு கதை கொஞ்சம் மாறி ரொம்ப சீரியஸôன சீன்ஸ் போய்க்கிட்டு இருக்கிறது. ராதிகா மேடமை எதிர்த்து யாராவது சண்டை போட வேண்டியிருப்பதினால், அது நாத்தனாராக இருந்தால் நன்றாக இருக்கும் என்பதால் என்னால் சிரிக்க முடியாமல் போய்விட்டது. எவ்வளவு கஷ்டமான கதாபாத்திரமாக இருந்தாலும் செய்துவிடலாம். ஆனால், எல்லாரையும் சிரிக்க வைப்பதுதான் சிரமம்.
இந்தச் சிரிப்பு பாத்திரத்திற்காகவே வீட்டிற்குப் போய் கண்ணாடி முன்னால நின்று ஒரு மணிநேரம் சிரித்துப் பழகுவேன். என் கணவர் பார்த்துவிட்டு உனக்குப் பைத்தியம் பிடித்துவிட்டதா என்று கேட்பார். கொஞ்ச நாள் அந்த மாதிரியேதான் திரிந்தேன். வெளியில் போகிறபோது சின்னச்சின்ன குழந்தைகள்கூட என்னைப் பார்த்ததும் சிரிக்கத் தொடங்கிவிடுவார்கள்.'
இப்பொழுது எத்தனை தொடர்களில் நடித்துக் கொண்டிருக்கிறீர்கள்?
'செல்லமே', 'மாதவி' என்று இரண்டு தொடர்களில் நடித்துக் கொண்டிருக்கிறேன். இரண்டுமே வேறுவேறு வித்தியாசமான கதாபாத்திரங்கள். 'செல்லமே'வில் எல்லாரும் திட்டுவது மாதிரி பாத்திரம். மாதவியில் எல்லாரும் பார்த்து பரிதாபப்படுகிற பாத்திரம். இப்படி ஒரே நேரத்தில் இரண்டு வித்தியாசமான பாத்திரங்கள் செய்வது நல்ல அனுபவமாக இருக்கிறது. அதோடு 'ராம ராவணன்','மூன்று முகம்' என சில மலையாள படங்களில் நடிச்சுக்கிட்டு இருக்கேன்.
உங்கள் கணவரை இப்பொழுது தொடர்களில் பார்க்க முடியலையே?
மூன்று வருடங்களாக அவர் தொடர்களில் நடிப்பதில்லை. இது வரை மூன்று தொடர்களில்தான் நடித்திருக்கிறார். பெரியதிரை வாய்ப்பு வந்ததால் அங்கு சென்று விட்டார். தற்போது 'ரசிக்கும் சீமானே', 'ஆறாவது வரம்' போன்ற படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார்.
உங்கள் கணவரும் நீங்களும் நடிப்பைப் பற்றி விவாதிப்பீர்களா?
நான் நடிக்கும் தொடரைப் பார்ப்பதற்கு அவருக்கு நேரம் இருக்காது. நான் சிறுவயதில் இருந்து நடிப்பதால் என்னிடம் ஆலோசனை கேட்பார். விமர்சனங்கள் எதுவும் சொல்ல மாட்டார். ஆனால் என் திறமைக்கேற்ற பாத்திரம் கிடைக்கவில்லை என்கிற வருத்தம் அவருக்கு உண்டு.
சின்னத்திரை அல்லது சினிமாத்துறை இப்பொழுது எப்படி இருக்கிறது என்று நினைக்கிறிர்கள்?
எல்லாத் துறையும் நன்றாக வளர்ந்திருக்கிறது. ஆரோக்கியமாகவும் இருக்கிறது. நான் குழந்தை நட்சத்திரமாக நடித்தபோது பேபி அஞ்சு, மீனா, சாலினி என்று மூன்று நான்கு பேர் தான் இருப்போம். இப்போது ஏகப்பட்ட படங்கள் வருகின்றன. ஏகப்பட்ட பேர் நடிக்கிறார்கள். இது வளர்ந்திருப்பதைத்தானே காட்டுகிறது. இடையில் கொஞ்ச நாள்களுக்கு முன் கிளாமருக்குத்தான் வாய்ப்பு அதிகமாக இருந்தது. ஆனால் இப்போது அந்த நிலைமையும் மாறிவிட்டது. புதுமுகங்களும் திறமை காட்டுவதற்கு நிறைய வாய்ப்பு இருக்கிறது. அதுபோல சினிமா என்றாலே ஒரு தப்பான துறை என்கிற மாதிரியான கருத்துகள் இருந்தன. அதுவும் இப்போது மாறிப் போய்விட்டது.
உங்கள் குழந்தைகள் பற்றி சொல்லுங்க?
என் மகன் தேஜஸ்வின்னுக்கு ஐந்து வயதாகிறது. என் மகள் பவதாரணிக்கு ஒரு வயது தான் ஆகிறது. என் அப்பா, அம்மாவும் என் சித்தியும்தான் பார்த்துக் கொள்கிறார்கள். பெரியவனாவது என்னோடு கொஞ்சம் நாள் இருந்தான். ஆனால் மகள் தான் எட்டு மாதத்தில் இருந்தே அம்மாவிடம் வளர்ந்து வருகிறாள்.
http://dinamani.com/edition/story.as...44&SEO=&Title=
ஞாயிறு கொண்டாட்டம்
லட்சிய நடிப்பு
"தங்கம்' தொடரில் வரும் வடிவு என்றாலே இளவஞ்சிக்கு வயிற்றில் புளிதான். வடிவைக் கொஞ்சம் நமது வாசகர்
களுக்காக சீண்டி பார்ப்போமே என்று சின்னத்திரை நடிகை வர்ஷாவை தொடர்பு கொண்டோம். இன்று
ஷூட்டிங் இல்லை ஜாலியா வீட்டில் டிவி பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்று சுந்தர தெலுங்கு கலந்த தமிழில் கூறினார். அவரைச் சந்தித்தோம்.
உங்கள் குடும்பத்தினர் பற்றி சொல்லுங்கள்?
என் குடும்பத்தைச் சேர்ந்த எல்லாரும் ஹைதராபாதில் உள்ளார்கள். நான் பிறந்தது வளர்ந்தது எல்லாம் அங்குதான். நான் முஸ்லீம் மதத்தை சார்ந்தவள். இங்கே சென்னையில் என் அத்தை, மாமாவோடு தங்கியிருக்கேன்.
என்ன என்ன தொடர்கள் நடிச்சுகிட்டு இருக்கீங்க?
"தங்கம்', "இதயம்', "அம்மன்', "கஸ்தூரி' என நான்கு தொடர்கள் நடிக்கிறேன். இந்த நாலு தொடரிலுமே நான்கு வித்தியாசமான கதாபாத்திரங்கள் செய்துகிட்டு இருக்கேன். இப்படி வேற வேற டிபரண்ட்டா செய்வது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. "தங்கம்'ல கிராமத்துப் பெண்ணாக நடிக்கிறேன். "கஸ்தூரி'யில் மென்மையான கேரக்டர், "அம்மன்' தொடரில் போலீஸ் ஆபிசரா வருவேன். "இதயம்' தொடரில் இப்பொழுது தான் என் போர்ஷன் ஆரம்பமாகி இருக்கு அதுவும் நெகட்டீவ் ரோல் தான். அதற்கு எப்படி வரவேற்பு இருக்கும் என்று இனிமேதான் தெரியும்.
"தங்கம்' தொடரில் இளவஞ்சியை எதிர்த்து வெளுத்து வாங்குறீங்களே, எப்படி?
அந்த சீரியலில் காவேரி அக்காதான் எப்பவுமே எல்லாரையும் டாமினேட் செய்வாங்க. ஆனா நான் அவுங்களுக்கு டென்ஷன் கொடுக்கிற மாதிரி எதிர்த்து சண்டை போடுவேன். இது ஒரு வித்தியாசமான அனுபவமா இருக்கிறது. அதனாலயே என் கேரக்டர் மக்கள்கிட்ட நல்லா ரீச் ஆகியிருக்கிறது. வெளியே எங்கயாவது ஆடியன்ஸ் பார்த்தாகூட "எப்பங்க உங்களுக்கு கல்யாணம். நீங்க கல்யாணமாகி அங்கே போங்க அப்ப தான் நல்லா இருக்கும். நீங்க ரெண்டு பேரும் ஸ்கிரீன்ல வந்தாலே ரொம்ப இன்ட்ரஸ்ட்டா பார்ப்போம்'னு சொல்லுவாங்க.
நீங்கள் எப்படி சினிமாவைத் தேர்ந்தெடுத்தீங்க?
சின்னவயதில் எங்கள் வீட்டில் டிவி எல்லாம் பார்க்க கூடாது. ஒரே ஒரு ரேடியோ தான் இருக்கும் அது கூட எங்க அப்பாதான் வைத்திருப்பார். சின்ன வயதில் இருந்தே எனக்கு டிவியில் வருபவர்கள் போட்டிருக்கும் நகைகள்,டிரஸ் எல்லாம் பார்க்க ரொம்ப ஆசையாக இருக்கும்.
அதற்காகவே டி.வி. பார்ப்பேன். காலேஜ் முடிச்சதும் மாடலிங் துறையை தேர்ந்தெடுத்தேன். மாடலிங்கில் இருக்கும்போதுதான் "லட்சியம்' என்ற தொடரின் டைரக்டர் என்னைப் பார்த்துவிட்டு இந்தக் கேரக்டரை நான் செய்தால் நல்லா இருக்கும் என்று சொன்னார். அதுதான் என்னோட ப்ர்ஸ்ட் சீரியல். அதன் பிறகு பாலாஜி டெலி ஃபிலிம்ஸ் மூலமாக மற்ற தொடர்களில் நடிக்க ஆரம்பித்தேன்.
ஓய்வு நேரங்களில் என்ன செய்வீர்கள்?
நடனம் என்றால் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும். ஏதாவது பாட்டுபோட்டுவிட்டு நானும் என் சிஸ்டரும் ஆடிக்கிட்டு இருப்போம். கலா மாஸ்டரோட சிஸ்டர் ஜெயந்தி அக்காவிடம் தான் நடிகர் சங்கத்துல போய் டான்ஸ் கற்றுக்கொண்டேன். நடிப்புக்கு அடுத்தபடியா எனக்கு டான்ஸ்தான் ரொம்ப பிடிக்கும்.
டான்ஸ் மீது இவ்வளவு ஆர்வமாக இருக்கும் நீங்கள் டிவியில் வரும் நடன நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவில்லையே ஏன்?
தொடர் முடிந்ததும், டான்ஸ் பிராக்டிஸ் போகணும். ஏற்கனவே இத்தனை தொடர்கள் போய்கிட்டு இருக்கு. நேரம் கிடையாது. இதற்கு மேல டான்ஸ் எடுத்துகிட்டா ரொம்ப கஷ்டமாகிவிடும். நடிப்பில் சரியா கவனம் செலுத்த முடியாது. ஒர்க் லோட் அதிகமாகிவிடும். சின்னத்திரை நிகழ்ச்சி, நட்சத்திர விழா எல்லாம் வரும் போது டான்ஸ் நிகழ்ச்சிகள் செய்யணும்னு ஆசை இருக்கு. ஆனால் போட்டிகள்ல கலந்துக்க விருப்பமில்லை.
ரம்யாகிருஷ்ணோட நடிக்கும் அனுபவம் எப்படி?
நான் அவருடைய படங்கள் நிறைய பார்த்திருக்கிறேன். அப்பவே எனக்கு அவரைப் ரொம்ப பிடிக்கும். ஆனால் படத்தில் பார்த்ததற்கும் இப்போது நேரில் பார்ப்பதற்கும் ரொம்ப வித்தியாசம் இருக்கு. ஒரு சாதாரண குடும்ப பெண் எப்படி இருப்பாங்களோ, பழகுவாங்களோ
அப்படிதான் பழகுவாங்க. பெரிய ஹீரோயின் என்ற பந்தாஎல்லாம் அக்காவிடம் கிடையாது. யார் எந்த சீன் நல்லா நடித்தாலும் உடனே நீ நல்லா செய்த நல்லா இருந்தது எனக்கு ரொம்ப பிடித்திருந்தது என்று பாராட்டுவாங்க.
பொட்டு வைத்து பூ வைத்துக் கொண்டு தமிழ் பெண்ணாக நடிக்கும்பொழுது உங்கள் நடிப்பைப் பார்த்து வீட்டில் என்ன சொல்லுவார்கள்?
சொல்லப் போனால் எங்கள் குடும்பத்தில் பலருக்கு நான் நடிப்பதே தெரியாது. எனக்கு பொட்டு வைத்துக் கொள்வது, பூ வைத்து கொள்வது எல்லாம் ரொம்ப பிடிக்கும்.
சமீபத்தில் பெண்கள் தினம் வந்ததில்லையா அதைப் பற்றி என்ன நினைக்கிறீங்க?
ரொம்ப சந்தோஷமாக இருந்தது. பெண்களுக்காக ஒரு தினம் வைத்து கொண்டாடுவது பெண்களுக்குக் கிடைத்த அங்கீகாரம் தானே? என்னை பொருத்தவரை பெண்கள் யாரும் அடிமையாக இருக்க கூடாது. சுதந்திரமா செயல்படணும். எப்பவும் தன்னம்பிக்கையோட இருக்கணும்,யாரையும் சார்ந்து வாழக் கூடாதுன்னு நினைப்பேன்.
http://dinamani.com/edition/story.as...44&SEO=&Title=
திருமணம் திருப்பு முனையாக இருக்கும்!
"கோலங்கள்" தீபா வெங்கட் என்றால் தெரியாதவர்களே
கிடையாது. அந்த அளவுக்கு இல்லத்தரசிகளின்
மனங் களையும் கொள்ளை கொண்டவர். பெரிய திரையில் பின்னணிகுரல் கொடுப்பவராகவும், ரேடியோவில் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் வலம் வருகிறார் தீபா. இதோ அவரது வசீகரக் குரலில் நமது கேள்விகளுக்குப் பதிலளிக்கிறார்..
* தொலைக்காட்சி தொடர்களில் உங்களை நிறைய பார்க்க முடியவில்லையே, ஏன்?
இது வரை நிறைய தொடர்களில் நல்ல நல்ல ரோல்ஸ் நடித்திருக்கிறேன். அதற்காக ஆடியன்ஸ் கிட்ட பாராட்டுகளும் வாங்கியிருக்கிறேன். இப்போது என்னுடைய எதிர்பார்ப்புக்கு ஏற்ற மாதிரி ரோல் அமையவில்லை. நிறைய தொடர்கள் நடிக்கவேண்டும் என்பதில்லை. ஒரு சில தொடர்கள் நடித்தாலும் அது மக்கள் மனதில் நிற்க வேண்டும் என்று நினைக்கிறேன்.
நான்கு மாதங்கள் வரை தொடர்கள் நடிக்க வேண்டாம் என்று முடிவு செய்திருந்தேன். அந்த நேரத்தில்தான் டைரக்டர் விஸ்வநாதன் "வாடகை வீடு' தொடரைப் பற்றி சொன்னார். அது இரண்டு நாயகிகள் கதை. இருந்தாலும் இரண்டு பேருக்குமே முக்கியத்துவம் உள்ள கதை. அந்த ஸ்கிரிப்ட் எனக்குப் பிடித்திருந்தது.
சந்தோஷியும் நானும் நடிக்கிறோம். வாடகை வீட்டில் குடியிருப்பவர்களின் சொந்த வீடு பற்றிய கனவும் அதற்காக அவர்கள் சந்திக்கும் பிரச்னையும்தான் கதை. அது ஒரு காமெடி தொடர். இதில் நான் ஒரு மிடில் கிளாஸ் குடும்பத்தைச் சார்ந்த பெண்ணாக நடிக்கிறேன். என் கேரக்டர் பெயர் பூஜா.
* இன்றைய சின்னத்திரையில் நடிப்பதற்கு நிறைய பெண்கள் வந்துவிட்டார்கள். அது உங்களுக்குப் போட்டியாக இருக்கும் என்று நினைக்கிறீர்களா?
அப்படி யாரையும் நான் போட்டியாக நினைப்பதில்லை. இது போன்று நிறைய புதுமுகங்கள் வரும்பொழுது அது ஒரு ஆராக்கியமான போட்டியாக தான் இருக்கும். என் திறமை மீது எனக்கு நிறைய நம்பிக்கை இருக்கிறது. இந்த மாதிரி ஆரோக்கிய போட்டிகள் வரும்போதுதான்,திறமைகள் வெளியே தெரியும். அதுவே தங்களை இந்த பீல்டில் தக்க வைத்துக் கொள்ள ஒரு முயற்சியாக இருக்கும்.
* பெரிய திரையில் நடிப்பதற்குச் சின்னத்திரை நடிகைகள் விரும்புவதில்லையே? ஏன் நீங்களும் சின்ன சின்ன கதாபாத்திரத்தில்தான் வருகிறீர்கள் அதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
பெரிய திரையில் நீடிக்க வேண்டும் என்றால் கொஞ்சம் கிளாமராகவும் நடிக்க வேண்டும். கிளாமராகவும் ரொமான்ஸôகவும் நடித்தால்தான் மக்கள் ஏற்றுக்கொள்கிறார்கள். இது தவிர்க்க முடியாதது. ஒரு படத்தில் இரண்டாவது நாயகியாக நடித்துவிட்டால் அதற்குப் பிறகு சில வரைமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டியிருக்கிறது. என்னுடைய லிமிட்டுக்குள்ள வருகிற படங்களில் மட்டுமே நான் நடிக்கிறேன். அப்படி என்னுடைய லிமிட்டைத் தாண்டி நடித்தால் எனக்கும் நிறைய வாய்ப்புகள் வரும். இப்போது தங்கை கேரக்டர்கள் நடித்துக் கொண்டிருக்கிறேன்.
* நீங்கள் டைரக்ட் செய்ய போகிறீர்களாமே?
உண் மையைச் சொல்ல வேண்டுமென்றால் ஒரு நடிகையாக ஜெயிப்பதற்கே நிறைய போராட வேண்டியிருக்கிறது. எத்தனையோ பிரச்னைகளைச் சந்திக்க வேண்டியிருக்கிறது. இதையெல்லாம் தாண்டி வந்தால் தான் ஜெயிக்க முடியும். அதுபோல ஒரு டைரக்டர் ஆவது சுலபமல்ல. நிறைய பொறுப்புகளைச் சுமக்க வேண்டியிருக்கும். அப்படி நான் டைரக்ஷனில் இறங்கினால் எப்படி நடிகர், நடிகைகளை வேலை வாங்குவதில் இருந்து மற்ற எல்லாவற்றையும் தெரிந்து கொண்டு, கற்றுக் கொண்டுதான் வருவேன்.
* உங்கள் வருங்கால திட்டம் என்ன?
எந் தத் துறையாக இருந்தாலும் நல்ல பேர் வாங்குவதற்கும், ஒரு நல்ல இடத்திற்கு வருவதற்கும் நிறைய உழைக்க வேண்டியிருக்கும். ஆனால் சினிமாவைப் பொருத்தவரை அது ரொம்ப ஈசி. இப்போதைக்கு எனக்கு நல்ல நடிகை என்று பெயர் இருக்கிறது. அதை கடைசிவரை காப்பாற்ற வேண்டும் என்று நினைக்கிறேன். மக்கள் என்னை அவர்கள் குடும்பத்தில் ஒருத்தியாக நினைக்கிறார்கள் அதை தக்கவைத்துக் கொள்வதுதான் இப்போதைய பிளான்.
* நடிப்பைத் தவிர வேறு எந்த துறையில் ஆர்வம் இருக்கு?
நடிப்பைத் தவிர பெரிய திரையில் நாயகிக்கு டப்பிங் குரல் கொடுக்கிறேன். சினிமாவில் நடிக்க வந்ததில் இருந்து டப்பிங் பேசிக் கொண்டிருக்கிறேன். இதை தவிர ஹலோ ஒன் எப் எம் ரேடியோவில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருக்கிறேன். ரேடியோவிலும் நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள். அது எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது.
* உங்கள் திருமணம் எப்போது? காதல் திருமணமாக இருக்குமா?
கல் யாணம் என் வாழ்க்கையில் ஒரு திருப்பமாக இருக்கும். நான் காதலித்தாலும் இல்லை என்றாலும் அது என் பெற்றோர்கள் சம்மதத்துடன் நடக்கும். காதல் திருமணம் செய்து கொள்பவர்கள் சந்திக்கும் நிறைய பிரச்னைகளை நான் பார்த்திருக்கிறேன். பெற்றவர்கள் வாழ்த்துக்களோட நடக்கிற திருமணம்தான் சந்தோஷமானதாக இருக்கும். என் திருமணம் என் அப்பா அம்மாவின் விருப்பபடிதான் இருக்கும். அந்த பொறுப்பை அவர்களிடமே ஒப்படைத்துவிட்டேன். திருமணத்திற்குப் பிறகு நடிப்பதில் எனக்கு விருப்பமில்லை.
http://dinamani.com/edition/story.as...44&SEO=&Title=
ஞாயிறு கொண்டாட்டம்
நடிப்பதில் ஆர்வம் இல்லை!
விஜய் டிவியில் நிகழ்ச்சி தொகுப்பாளினியாக கொஞ்சும் தமிழில் பேசி மக்கள் மனதில் இடம் பிடித்தவர் ஷில்பா. "நம் வீட்டு கல்யாணம்' நிகழ்ச்சியின் படப்பிடிப்பு தளத்தில் அவரைச் சந்தித்தோம். நம்மிடமும் கொஞ்சும் தமிழில் பேசினார். இனி அவருடன்..
* உங்களைப் பற்றி சொல்லுங்கள்?
எனக்கு பூர்வீகம் கேரளா. நான் ஆங்கில இலக்கியம் படித்திருக்கிறேன். ஐந்து வருடமாக இந்துஸ்தானி மியூசிக் கற்று வருகிறேன். என் தங்கை என்ஜினீயரிங் படிக்கிறாள். எங்களுடையது சிறிய அன்பான குடும்பம்.
* தற்போது என்னென்ன நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்குகிறீர்கள்?
"நம் வீட்டு கல்யாணம்' நிகழ்ச்சியை ஒன்றரை வருடமாக தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கிறேன். அதைத்தவிர டிவி நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குகிறேன். தற்போது விஜய் டிவியில் புதியதாக தொடங்கியிருக்கும் "சினிமா சினிமா' நிகழ்ச்சியின் தொகுப்பாளினியாகவும் இருக்கிறேன்.
* பிரபலங்களின் திருமணத்தை "நம் வீட்டு கல்யாணம்' நிகழ்ச்சி மூலம் தொகுத்து வழங்கும் அனுபவம் பற்றி சொல்லுங்கள்?
புது மையான அனுபவம். பிரபலங்களின் திருமணத்தை நேரில் சென்று பார்க்க முடியாதவர்கள் தங்கள் வீட்டில் இருந்தே அவர்களுடைய சடங்குகள், சம்பிரதாயங்களைப் பார்ப்பது நன்றாக இருக்கிறது. அதைத் தவிர திருமணத்தில் கலந்து கொள்ளும் பிரபலங்களைப் பார்க்கும் வாய்ப்பும் கிடைக்கிறது. இந்தக் கான்சப்ட்டே ரொம்ப புதுமையானது. மக்களிடம் நிறைய வரவேற்பு இருக்கிறது.
* தொடர்களில் ஏன் நீங்கள் நடிக்கவில்லை?
தொடர்களில் நடிக்க நிறைய வாய்ப்புகள் வருகின்றன. ஆனால் நடிப்பதில் எனக்கு அவ்வளவு ஆர்வம் இல்லை.
* நிகழ்ச்சி தொகுப்பாளினி தவிர வேறு எதில் கவனம் செலுத்துகிறீர்கள்?
ஸ்டேஜ் ஷோக்களில் இந்துஸ்தானி இசையில் பாடல்கள் பாடுகிறேன். பாட்டு தான் ரொம்ப பிடித்திருக்கிறது. இப்போதைக்கு முழுக்க முழுக்க இந்துஸ்தானி இசை பாடல்களில்தான் கவனம் செலுத்துகிறேன்.
* பின்னணி பாடகி ஆவதற்கு ஏதும் முயற்சி செய்கிறீர்களா?
கன் னடப் படம் ஒன்றில் ஒரு பாடல் பாடியிருக்கிறேன். தமிழில் பாடுவதற்கான முயற்சிகள் செய்து வருகிறேன். அதற்காக இசையமைப்பாளர்களிடம் டெமோ சிடிகள் கொடுத்து வருகிறேன்.
* இந்துஸ்தானி இசையைத் தேர்தெடுத்தது ஏன்?
என் குரலுக்கு இந்துஸ்தானி இசை பொருத்தமாக இருக்கிறது. சிறுவயதில் கர்நாடக இசை கொஞ்சம் கற்றுக்கொண்டேன். மேற்கத்திய மற்றும் இந்துஸ்தானி இசை பிடித்தமானவை. எனவே அவற்றை விரும்பி கற்றுக்கொண்டேன். பொதுவாகவே எனக்கு மெலோடியான இசையைக் கேட்க ரொம்ப பிடிக்கும்.
* நிகழ்ச்சிகளின் மூலம் மக்களிடம் நேரடியாக தொடர்பு கொண்டு பேசும் அனுபவம் பற்றி சொல்லுங்கள்?
மக் களை நேரடியாக தொடர்பு கொண்டு பேசுவதால், நிதானமாகவும், கவனமாகவும் பேசவேண்டியுள்ளது. ஏதாவது தவறாகி போனாலும் திருத்திக் கொள்ள முடியாது. மக்கள் நம்மை நேரடியாக திட்டிவிடுவார்கள். அதனால் மிக கவனத்துடன் பேச வேண்டும். சிரமங்களுக்கு ஆண்,பெண் என்ற வேறுபாடு தெரியாது. பிற துறைகளில் உள்ள சிரமங்கள் இத்துறையிலும் இருக்கின்றன.
* உங்களைப்பற்றி ரசிகர்கள் என்ன சொல்லுகிறார்கள்?
நிகழ்ச் சியைத் தொகுத்து வழங்கும்போது என் உச்சரிப்பு நன்றாக இருக்கிறது எனச் சொல்லுகிறார்கள். மேலும், நளினமாகப் பேசுவதாகவும் சொல்லுகிறார்கள். இப்படி மக்கள் நம்மிடம் நேரடியாக சொல்லும்போது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. இதை எனக்கு கிடைக்கும் பரிசாக நினைக்கிறேன்.
http://dinamani.com/edition/story.as...44&SEO=&Title=
Quote:
மானாகிறேன் மயிலாகிறேன் - நமீதா!
தமிழ் சினிமாவில் "கவர்ச்சிகன்னி'யாக தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் நிலைத்து நிற்பவர் நமீதா. தற்போது வித்தியாசமான வேடங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து நடித்து வருவதோடு, சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் பங்கெடுத்துக் கொண்டு, பல்வேறு இளம் நடனக் கலைஞர்களையும் ஊக்கப்படுத்தி வருகிறார்.
நமீயிடம் கவனிக்கப்பட வேண்டிய விஷயம், அவர் கொஞ்சம் இளைத்து, இன்னும் கூடுதல் அழகாயிருப்பது! தட்டுத்தடுமாறி நமீ பேசும் தமிழை கேட்டுக் கொண்டேயிருக்கலாம்.
வெயில் தலைக்காட்டத் தொடங்காத ஒரு காலை வேளையில் நமீயை ஒரு காபி ஷாப்பில் சந்தித்து உரையாட காத்திருந்தோம். "வாங்க மச்சான்' என்று கூறியபடியே நமீ, கண்களில் காந்தப்பார்வையும், இதழில் புன்னகையுமாக நம் முன்னே வந்து அமர்ந்தார். இரண்டு கோல்டு காபிகளுக்கு ஆர்டர் செய்து விட்டு, நம்மிடம் உரையாடினார்.
நீங்கள் நடித்து வெளியான ஒரு படம் சம்பந்தமாக உங்களைப் பற்றி சர்ச்சைகள் எழுந்துள்ளதே?
இனிமேல் அந்தப் படத்தை பற்றி நான் பேச விரும்பவில்லை என்றாலும் நீங்கள் கேட்டதற்கு பதில் சொல்ல வேண்டிய கடமை இருக்கு. என்னைப் பொருத்தவரைக்கு நாலு பேர் திட்டினாக்கூட அது ஒரு செய்திதான். ஆனால், எந்தத் திட்டுக்கும் நான் பொறுப்பானவள் இல்லை.
அந்தப் படத்தை பொருத்தவரை நான் நேர்மையாகவும், சரியாகவும், மரியாதையாகவும் நடந்திருக்கிறேன். தவறுகள் யார் தரப்பில் என்பதை நான் உணர்த்தத் தேவையில்லை என்று நினைக்கிறேன். என்னைப் பற்றி அவதூறாக பேசுபவர்களின் பேச்சில் உண்மையில்லை என்பது என்னை அறிந்த எல்லோருக்கும் தெரியும். ஏன்? சொன்னவருக்கும் கூட இது தெரியும்!
அப்படியிருக்கும்போது நான் எதைச் சொல்லுவது?
நடந்தது நடந்ததாக இருக்கட்டும். என்னை பழிப்பவர்களுக்கு கடவுள் பதில் அளிப்பார்.
தற்போது நடித்து வரும் படங்கள் பற்றி?
தெலுங்கில் "சிம்ஹா' என்னும் பெயர் கொண்ட படத்தில் பாலகிருஷ்ணாவிற்கு ஜோடியாக, போயபட்டி சீனு இயக்கத்தில் நடிக்கிறேன்.
இதில் எனக்கு கிளாமர் கேர்ள் வேடம் (உங்களுக்கு வேறெந்த வேடமும் கொடுக்கமாட்டாங்களா? நமீ!) இதில் பாலகிருஷ்ணா ஸôர் பொதுவுடைமை பேசுகிற வேடத்தில் நடிக்கிறார். அவருடைய இந்த பேச்சினால் அவர் மேல் எனக்கு காதல் பிறக்கிறது. அதன்பின் எங்கள் வாழ்க்கை என்னவாகிறது? என்பதுதான் படம். இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் ஏறக்குறைய முடிந்துவிட்டது.
இன்னும் இரண்டு நாட்கள் மட்டும்தான் படம் பிடிக்க வேண்டியிருக்கிறது. இந்தப் படத்தைத் தொடர்ந்து அசோக் இயக்கத்தில் "தேசத்துரோகி' என்ற படத்தில் நடிக்கிறேன். மேலும் மலையாள இயக்குநரான பிரமோத் பப்பன் இயக்கும் தமிழ் படம் ஒன்றில் நடிக்க இருக்கிறேன்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் துவங்குகிறது. இது தவிர வேறெந்த படத்திலும் நடிக்க நான் ஒப்புக்கொள்ளவில்லை. இனிவரும் காலங்களில் நல்ல கதையம்சம் உள்ள படங்களில் மட்டுமே நடிப்பது என்று முடிவெடுத்திருக்கிறேன்.
தொடர்ந்து தெலுங்கிலும் நடிப்பீர்களா?
இயக்குநர் சரண் ஸôர்தான் தெலுங்கு "ஜெமினி' படத்தில் அறிமுகப்படுத்தினார். அதன்பிறகுதானே தெலுங்கிலிருந்து நான் தமிழுக்கு நடிக்க வந்தேன். தொடர்ந்து தெலுங்கு படங்களில் நடிப்பதில் ஒன்றும் தவறில்லையே? தமிழ், தெலுங்கு, மலையாளரம், கன்னடம் என நான்கு மொழிகளிலும் நடித்தாகிவிட்டது. எல்லா மொழியிலும் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறேன்.
"கோ' படத்தில் நடிக்க மறுத்தீர்களாமே?
"கோ' படத்தில் ஒரு பாடலுக்கு நடிக்க அழைத்தார்கள். ஆகவேதான் நடிக்க மறுத்தேன். இப்போது
மட்டு மில்லை,எப்போதுமே ""ஒரு பாடலுக்காக நான் நடிக்க மாட்டேன்'' என்று சொல்லித்தான் வந்திருக்கிறேன்.அது மிகப்பெரிய படமாக இருந்தாலும் கூட நான் நடிக்க மாட்டேன்.
ஏனென்றால், நான் ஒரு பாடலுக்கு மட்டும் போய் அந்தப் படங்களில் ஆடி, நடித்தால் பிறகு அதையே நமது பாணியாக்கி நம்மை ஒரு பாடலுக்கு மட்டும் ஆடும் நடிகையாக்கி விடுவார்கள். எனக்கென்று ரசிகர்களிடத்தில் ஒரு இமேஜ் இருக்கிறது. ஆகவேதான் "கோ' படத்தில் நடிக்க மறுத்தேன்.மற்றபடி அதில் வேறெந்த உள்நோக்கமும் இல்லை!
உங்களுக்கு முக்கியத்துவம் உள்ள வேடங்கள் கிடைக்கிறதா?
என்னை நம்பி எடுக்கப்படுகிற படங்களுக்கு ரசிகர்களின் ஆதரவு நிச்சயம் இருக்கிறது.அதனால் என்னுடைய ரசிகர்கள் எதை விரும்புவார்கள்?என்று யோசித்து,அதற்கேற்றவாறு கதைகளைத் தேர்ந்தெடுக்கிறேன்.தயாரிப்பாளர்களும் இந்த விஷயத்தைப் புரிந்து வைத்திருப்பதால்தான் எனக்கேற்ற கதைகளைத் தேர்வு செய்துகொண்டு வந்து என்னை அணுகுகிறார்கள்.
அப்படித்தான் "நில் கவனி என்னைக் காதலி',"இந்திரவிழா' போன்ற படங்களில் நடித்தேன்.ரசிகர்களும் இப்படங்களுக்கு பெரிய ஆதரவு அளித்தார்கள்.இது போன்ற கதைகள் எனக்கு அமைந்தால் தொடர்ந்து நடிப்பேன்.ஏனெனில்,என்னை வைத்து படமெடுக்கும் தயாரிப்பாளர்கள் என்னால் நஷ்டமடையக்கூடாது!
"மானாட மயிலாட' குறித்து?
இன்று எனக்கு கிடைத்திருக்கும் ரசிகர் பட்டாளத்தில் பெரும்பாலானவர்கள் சின்னத்திரை மூலம் கிடைத்தவர்கள்தான்.அடித்தட்டு மக்கள் வரை போய்ச் சேருகிற சாதனமாக இன்று சின்னத்திரை இருக்கிறது.
ரசிகர்களின் இடத்திற்கே சென்று, அவர்களைச் சந்திப்பது என்பது சின்னத்திரை மூலம்தான் முடியும்."மானாட மயிலாட' என்பது ஒரு வெற்றிகரமான நிகழ்ச்சி.அதுக்கு மக்கள் மத்தியில் கிடைத்திருக்கும் வரவேற்பு எத்தகையது? என்பது உங்களுக்கேத் தெரியும்!
இந்நிகழ்ச்சி மூலமாக பாராட்டுகிற வேலையை நான் செய்து வருகிறேன்.இதை யார் வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால்,நடனத்தை சரியாகப் புரிந்து கொண்டவர்கள், ரசிக்க தெரிந்தவர்கள் அதைப் பார்த்து பாராட்டும் போது, போட்டியாளர்களுக்கும், அந்த நிகழ்ச்சியை பார்க்கும் ரசிகர்களுக்கும் இன்னும் கூடுதல் உற்சாகம் கிடைக்கிறது.
அந்த உற்சாகப்படுத்தும் வேலையை நான் மானாகவும்,மயிலாகவும் இருந்து செய்து வருகிறேன். அதுமட்டுமில்லை, இந்த நிகழ்ச்சி என்னுடைய மனதிற்கு நிறைவையும், குதூகலத்தையும் கொடுக்கிறது. வட இந்திய நடிகர்கள்தான் இதுபோன்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு போட்டியாளர்களையும்,ரசிகர்களையும் உற்சாகப்படுத்துவார்கள்.
தென் னிந்தியாவில் இந்த வேலையை முதலில் நான் இறங்கி செய்ததால் எனக்கு நடிப்பதில் கிடைக்கிற திருப்தியை விடவும் அதிகமாக "மானாட மயிலாட' மூலம் கிடைக்கிறது. தற்போது என்னைத் தொடர்ந்து இதுபோன்ற நிகழ்ச்சிகளில் பூஜா,ரம்பா ஆகியோர்களும் கலந்துகொண்டு வருகிறார்கள். சின்னத்திரை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதால் நடிகைகளுக்கு மார்க்கெட் போய்விடும் என்பதை நான் உடைத்திருக்கிறேன்.
ஆக்ஷன் ஹீரோயினாக நடிப்பீர்களா?
இந்தக் கேள்வியை நீங்கள் இயக்குநரிடம்தான் கேட்டிருக்க வேண்டும்.எந்த இயக்குநர் ஆக்ஷன் காட்சிகளில் நடிக்கக் கேட்டாலும் என்னுடைய கால்ஷீட் ரெடி!தற்போது நடிக்க இருக்கும் "தேசதுரோகி' படத்தில் ஆக்ஷன் காட்சிகளில் நடிப்பதற்கான வாய்ப்புகள் இருக்கு.
படம் தயாரிக்கும் எண்ணமுண்டா?
ஒரு நல்ல கதை கேட்டு வைத்திருக்கிறேன்.இதை கொஞ்ச காலத்திற்குப் பிறகு தயாரிக்கலாம் என்று திட்டமிட்டிருக்கிறேன்.அவசரப்பட்டு தற்போது படம் தயாரிக்கும் திட்டமில்லை.ஆனால் தயாரிக்கும்போது கண்டிப்பாக தமிழில்தான் அந்தப் படத்தை எடுப்பேன்.
சாமியார்களைச் சந்தித்து இருக்கிறீர்களா?
எனக்கு கடவுள் நம்பிக்கை உண்டு!
நெருக்கமான தோழிகள் யார்? யார்?
சினேகாவும், பூஜாவும்தான்!
நன்றி: தினமணி
தங்கம் தந்த தங்கை!
சன் டிவியில் இரவு 8.30 மணிக்கு
பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கும்
"தங்கம்' தொடரில் ரம்யாவின்
தங்கையாக வந்து எல்லோர் மனதிலும்
இடம் பிடித்த ஜோதியை அத் தொடரின்
படப்பிடிப்பு தளத்தில் சந்தித்தோம்.
சின்னத்திரையில் நடிக்க வந்தது எப்படி?
நான் ஆந்திராவைச் சேர்ந்த தெலுங்கு பெண். என்ஜினீயரிங் படித்துவிட்டு ஹைதராபாத்தில் உள்ள மல்டி நேஷனல் கம்பெனியில் வேலை பார்க்க வேண்டும் என்பதுதான் என் ஆசையாக இருந்தது. ஆனால் விதி என்னை சினிமாவில் கொண்டு வந்து விட்டுவிட்டது.
ஒருமுறை ராதிகா மேடம் "தாலிபிரமா' என்கிற தெலுங்கு தொடருக்காக மேக் - அப் டெஸ்ட் எடுத்துக்கிட்டு இருந்தார்கள் என்று கேள்விப்பட்டு என் பெற்றோர்கள் சம்மதத்துடன் போய் பார்த்தேன்.
அந்தத் தொடரில் எனக்கு நிரோஷாவோட மகளாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ராடான் மீடியாவில்தான் நான் முதன் முதலில் நடித்தேன். இப்படி தான் என் சின்னத்திரை பயணம் தொடங்கியது. படிப்பை விட்டுவிட்டு நடிகையாக வருவேன் என்று நான் நினைத்து கூட பார்த்ததில்லை.
முதல் தொடரே எனக்கு ஆந்திராவில் நல்ல பெயரைக் கொடுத்தது. அதன் பிறகு ஹன்ஷா விஷன் தயாரித்த தொடரில் வாய்ப்பு கிடைத்தது. அதை தொடர்ந்து ஏ.வி.எம்.மின் "சொர்க்கம்' தொடர் மூலமாக தான் முதன் முதலில் தமிழில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இப்போழுது நிறைய தமிழ் தொடர்களில் நடித்து வருகிறேன்.
தற்போது என்ன தொடர்களில் நடித்து
வருகிறீர்கள்?
தங்கம் தொடரில் ரம்யாகிருஷ்ணன் தங்கையாக நடித்து வருகிறேன். அவங்களைப் போல பெரிய ஹீரோயின்கூட நடிப்பது ரொம்ப சந்தோஷமா இருக்கு. அதை அடுத்து கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ஏ.வி.எம்.மின் "உறவுக்கு கை கொடுப்போம்' என்கிற தொடரில் நடித்து கொண்டிருக்கிறேன்.
ஒரே நேரத்தில் தமிழ்,தெலுங்கு இரண்டிலும் நடிப்பது கஷ்டமாக இல்லையா எப்படி நேரம் கிடைக்கிறது?
தெலுங்கு எனது தாய் மொழி என்பதால் அதில் நடிப்பதில் எனக்கு அவ்வளவு பெரிய சிரமம் ஒன்றும் தெரியவில்லை. தமிழில் நடிக்க வந்த புதிதில் எனக்குத் தமிழே தெரியாது. எங்கே எப்படி பேச வேண்டும் என்று தெரியாது. இப்போது கொஞ்சம் கொஞ்சமாகத் தமிழ் கற்றுக் கொண்டிருக்கிறேன். இப்போது நான் ரொம்ப நன்றாகவே தமிழ் பேசுவதாக எல்லோரும் சொல்கிறார்கள்.
எனக்கு தமிழ் இன்டஸ்ட்ரி ரொம்ப பிடித்திருக்கிறது. நிறைய தமிழ் தொடர்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசையிருக்கிறது. தமிழ் மக்கள் மரியாதையாகப் பழகுகிறார்கள். "தங்கம்' தொடருக்குப் பிறகு நிறைய தமிழ் மக்களிடம் அங்கீகாரம் கிடைத்திருக்கிறது.
தெலுங்கில் இரண்டு தொடர்கள் நடித்துக் கொண்டிருக்கிறேன். தமிழில் முன்று தொடர்கள் நடிக்கிறேன். இரண்டு மொழிகளிலும் நடிப்பது எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது.
சென்னைக்கும், ஆந்திராவுக்கும் மாறி மாறி போய் வரும் போது சில நேரங்களில் நான் சென்னையில் இருக்கிறேனா அல்லது ஆந்திராவில் இருக்கிறேனா என்று குழப்பமாக இருக்கும். இரண்டு மொழியிலும் நடிப்பதில் என்ன கஷ்டம் வந்தாலும் அதை எதிர்த்து போராடி பெரிய இடத்துக்கு வர வேண்டும். சாதிக்க வேண்டும் என்கிற எண்ணம் நிறைய இருக்கிறது.
பெரியதிரைக்குச் செல்லும் எண்ணம் உண்டா?
நல்ல கம்பெனி, பெரிய டைரக்டர், நல்ல ஹீரோ இந்த மாதிரி வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக நடிப்பேன். பெரிய திரையில் இருந்து நிறைய வாய்ப்புகள் வருகின்றன. வருகிற வாய்ப்புகள் எல்லாம் கிளாமர் ரோலாகவே வருவதால் எனக்கு நடிக்க விருப்பமில்லை. கதையை ஒட்டி கிளாமராக இருந்தால் பரவாயில்லை.
ஒருமுறை கிளாமராக நடித்து விட்டால் அதை தொடர்ந்து அது போன்ற வாய்ப்புகள்தான் அமையும் என்பதால் நல்ல வாய்ப்பு வரும் போது நடிப்பேன். இப்போதைக்கு சின்னத்திரையில் மட்டும்தான் கவனம் செலுத்தி
வருகிறேன்.
உங்களுக்கு என்ன மாதிரி கேரக்டர்கள் நடிக்க பிடிக்கும்?
எனக்கு ஹோம்லியான கேரக்டர் நடிக்க ரொம்ப பிடிக்கும். கிராமத்துப் பொண்ணா நடிக்க பிடிக்கும். எந்த மாதிரி கேரக்டர் ஒத்து வருமோ அது மாதிரி நடிக்க வேண்டும். இப்பொழுது நடித்து கொண்டிருக்கிற தொடர்களும் என் எண்ணம் போலவே கிடைத்திருக்கின்றன. இப்படி ஒவ்வொரு தொடரில் வேறு வேறு மாதிரி நடிப்பது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. நெகட்டீவ் ரோல்ஸ் நடிக்க வேண்டும் என்ற ஆசையிருக்கிறது.
ரசிகர்களைச் சந்தித்தது உண்டா, என்ன சொல்லுவார்கள்?
ஆந்திராவில் உள்ள மக்களுக்கு என்னை நன்றாக அடையாளம் தெரியும். பொது இடங்களில் அல்லது ஷாப்பிங் போகும் போது எங்காவது பார்த்து விட்டால் என் பக்கத்தில் வந்து பேசுவார்கள், நலம் விசாரிப்பார்கள், என்னுடன் புகைப்படம் எடுத்துக்கொள்வார்கள் நான் நடிக்கும் தொடர்களைப் பற்றி விமர்சிப்பார்கள்.
இப்படி அவர்கள் என் மீது அன்பு செலுத்தும்போது எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கும். அதே போல் தங்கம் தொடரில் நடிக்க ஆரம்பித்த பிறகு தமிழ் மக்களிடம் இருந்தும் நல்ல வரவேற்பு இருக்கிறது.
http://dinamani.com/edition/story.as...44&SEO=&Title=
ஞாயிறு கொண்டாட்டம்
தென்றல் தந்த அங்கீகாரம்!
'தென் றல்' தொடரில் சுபலேகா சுதாகரின் மகள் துளசியாக வந்து அசத்துபவர் ஸ்ருதி. பார்ப்போர் நெஞ்சத்தை தனது எதார்த்த நடிப்பால் ஈர்க்கிறார். பாவாடை தாவணி, கழுத்தில் ஒரு முத்துமாலை என எளிமையாகத் தோன்றும் ஸ்ருதி, சினிமாவிலும் கால்பதித்திருக்கிறார். "தென்றல்' தொடரின் படப்பிடிப்பிலிருந்த ஸ்ருதி நம்மிடம்
பேசியதிலிருந்து...
இந்த தொடருக்காக உங்களை எப்படித் தேர்தெடுத்தார்கள்?
"ஜெர்ரி' படம் ரீலிஸிற்குப் பிறகு நிறைய பேர் நடிப்பதற்கு கேட்டார்கள். நான் உடனே ஒத்துக்கவில்லை. நல்ல கதாபாத்திரமாக இருக்கவேண்டும் என்று எதிர்பார்த்து காத்திருந்தேன். அந்த நேரத்தில்தான் சன் டிவியில் விகடன் டெலிவிஷன் தயாரிப்பில் தென்றல் தொடருக்கு நடிக்கிற வாய்ப்பு வந்தது. கிட்டத்தட்ட ஆறு வருடங்களுக்கு மேல் ஓடி, ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்ற கோலங்கள் தொடர், நல்ல தொடராக இருந்ததால்தான் பெரியளவில் வெற்றி பெற்றது. அந்தமாதிரி ஒரு தொடரை தயாரிக்கிற நிறுவனத்தில் இருந்து நடிக்க வாய்ப்பு கிடைத்தது ரொம்ப சந்தோஷமாக இருந்தது அதனால் உடனே ஒப்புக்கொண்டேன்.
முத லில் டைரக்டர் குமரன் வந்து கதையைச் சொன்னார். "பாவாடை தாவணி போட்டுகிட்டு நீங்க சாதாரணமாக எப்பவும் வீட்டில் இருப்பது போல ஒரே ஒரு பொட்டு மட்டும் வெச்சுக்கிட்டு வாங்க ஒரு டெஸ்ட் செய்து பார்த்திடலாம்' என்று சொன்னார். பிறகு டயலாக் கொடுத்து பேசச் சொன்னார்கள் அதில் ஓ.கே. ஆகிவிட்டேன்.
அந்த கேரக்டர் இந்தளவுக்குப் பேசப்படும் என்று எதிர்பார்த்தீர்களா?
நல்ல கேரக்டர் என்று தான் நினைத்தேன். ஆனால் இந்தளவிற்கு வரவேற்பு இருக்கும் என்று நினைக்கலை. ஒரு நல்ல பிராஜக்ட் ஒத்துக்கிட்டு செய்வது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. தென்றல் தொடர் ஆரம்பித்த முதல் வாரத்தில் இருந்தே ரசிகர்கள் நிறைய சப்போர்ட் செய்கிறார்கள். திரையுலகைச் சார்ந்தவர்களும் நிறைய பேர் ஃபோன் செய்து என் நடிப்பைப் பாராட்டினார்கள். அதைக் கேட்கும் பொழுது என் கேரக்டர் மீது இன்னும் ஆர்வம் அதிகம் ஆகிறது. துளசி கேரக்டரில் வரும் மேனரிஸம், உச்சரிப்பு,நடிப்பு எல்லாமே டைரக்டர் சொல்லி கொடுப்பதை அப்படியே செய்கிறேன். அவர் சொன்னதை அப்படியே என்னுடைய கதாபாத்திரத்தில் பிரதிபலிக்கிறேன்.
சினி மாவில் பெரிதாக வருவீர்கள் என்று நினைத்திருப்பீர்கள். ஆனால் சின்னத் திரைதான் உங்களை நன்றாக அடையாளப்படுத்தியிருக்கிறது. அப்படித்தானே?
ஆமாம் உண்மைதான். நிறையப் பேர் சொன்னாங்க. சினிமாவை விட இந்த ஒரு தொடர் பெரியளவில் அங்கீகாரத்தை உண்டு பண்ணியிருக்கு. "காதல் டாட் காம்', "ஜெர்ரி', "மந்திரம்' என மூன்று தமிழ் படங்களில் நடித்தேன். தெலுங்கில் இரண்டு, மூன்று படங்கள் நடித்திருக்கிறேன். மலையாளத்தில் "தோஸ்த்' என்ற படம் நடித்திருக்கிறேன். அதுதான் என்முதல் படமும் கூட. இத்தனை படம் நடித்திருந்தாலும் எனக்கு இந்தத் தொடரும், துளசி கேரக்டரும்தான் பெரியளவில் பெயர் வாங்கி கொடுத்திருக்கிறது. இது, தென்றல் தந்த அங்கீகாரம்தான். பெரியத்திரையில் எதிர்பார்த்தது சின்னத்திரையில் கிடைத்திருக்கிறது.
இனி சினிமாவில் நடிப்பீர்களா?
நல்ல கேரக்டராக இருந்து அந்தக் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இருந்தால் கண்டிப்பாக நடிப்பேன். வாய்ப்பு வருகிறது என்பதற்காக எல்லா படங்களிலும் நடிக்க மாட்டேன். இப்போழுது இந்தத் தொடரின் மூலமா மக்கள் மனதில் நல்ல அடையாளம் கிடைத்திருக்கிறது. "யார், இந்தப் பெண் புதுசா இருக்கிறது?' என்று ஆச்சர்யமாக கேட்கிறார்கள். இனி சின்னச் சின்ன கேரக்டர் சினிமாவில் செய்யமுடியுமா? அதில் எனக்கு விருப்பமும் இல்லை. அதேசமயத்தில் கிடைத்த நல்ல பெயரைத் தக்க வைத்துகொள்ள வேண்டும் இல்லையா? அதனால் நல்ல கதையும், கதாபாத்திரமும் வந்தால் கண்டிப்பாக நடிப்பேன்.
நடிக்க வேண்டும் என்ற ஆசை உங்களுக்குள் எப்பொழுது வந்தது?
நான் நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டது எல்லாம் கிடையாது. சின்ன வயதில் பள்ளி நாடகங்களில் நடித்திருக்கிறேன். அப்படி எட்டாம் வகுப்பு படிக்கும் பொழுது ஒரு நாடகத்தில் நடித்தேன். அப்போது நிகழ்ச்சியில் எடுத்த போட்டோவைப் பார்த்துவிட்டு நடிக்கக் கூப்பிட்டார்கள். ஆனால் பத்தாவது படிக்கும் போதுதான் நடிக்க வந்தேன். மலையாளப் படத்தில் அறிமுகமானேன். அதன்பிறகுதான் தமிழுக்கு வந்தேன். இந்த நான்கு வருடப் போராட்டத்திற்குப் பிறகு இப்பொழுதுதான் நல்ல வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
குடும்பம் பற்றி?
அப்பா ராஜன் நாயர் ஒரு மிலிட்டரி எக்ஸ்சர்வீஸ்மேன், அம்மா சுலோச்சனா ராஜன், நான். இதை தவிர்த்துப் பெரிய பேக் ரவுண்டெல்லாம் எதுவுமில்லை. என் தாய்மொழி மலையாளம். சின்ன வயதில் டான்ஸ் கொஞ்சம் கத்துக்கிட்டு இருக்கேன் அவ்வளவுதான்.
http://dinamani.com/edition/story.as...44&SEO=&Title=
வெற்றியின் ரகசியம்!
ஸ்ரீதேவிகுமரேசன்
First Published : 25 Apr 2010 11:21:00 AM IST
Last Updated :
சன் டிவியில் ஞாயிறு தோறும் இரவு பத்து மணிக்கு ஒளிபரப்பாகும் "ராணி மகா ராணி' நிகழ்ச்சியின் நாயகி மமதி. தன் வசீகர குரலால், அழகு தமிழில் அனைவரையும் கவர்ந்திழுக்கும் அவரைச் சந்தித்தோம்....
ராணி மகா ராணி நிகழ்ச்சியின் சிறப்பம்சமாக நீங்கள் எதை நினைக்கிறீர்கள்?
இந்த நிகழ்ச்சி முழுக்க முழுக்க பெண்களுக்காக மட்டுமே உருவாக்கப்பட்ட கேம் ஷோ. எல்லா பெண்களுக்குள்ளேயும் ஏதாவது ஒரு திறமை இருக்கும். அதை வெளிக்கொண்டு வரவே இந்த கேம் ஷோ. சில பெண்களுக்குப் போட்டிகளில் கலந்து கொள்ளும் திறமை மட்டும் இருக்கும்.
ஆனால்,வெற்றிபெறத் தெரியாது. அப்பொழுது அவர்களைச் சுற்றி இருப்பவர்களோ, அல்லது வேறு யாராவதோ நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் அப்பெண்களின் மனது வேதனைப்படும்படி பேசிவிடுவார்கள். ஆனால் இந்த மேடையில் அதைப் போன்று எதுவும் கிடையாது.
அவர்களுக்கு என்ன திறமை இருக்கிறதோ அதை வெளிப்படுத்துவதற்கு வாய்ப்பு இருக்கும். இதில் வெற்றி, தோல்வி என்ற இலக்கு இல்லாமல் சந்தோஷமாக விளையாடுவார்கள். ஒவ்வொரு பெண்ணும், பணமோ அல்லது பொற்காசோ வென்று செல்லுவார்கள்.
ஆக்கப்பூர்வமாக நாலு விஷயங்களைப் பேசி, சந்தோஷமாக விளையாடி, திருப்திகரமாக வீட்டுக்குப் போக வேண்டும். அதுதான் இந்த நிகழ்ச்சியின் நோக்கம்.
சின்னத்திரையை எப்படி தேர்ந்தெடுத்தீர்கள்?
தூர்தர்ஷன் மட்டும் இருக்கும் பொழுதிலிருந்தே சின்னத்திரையில் நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்கி கொண்டுதான் இருக்கிறேன். தொடர்கள் எதுவும் நடிக்கவில்லை.
வேறு என்னென்ன நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்குகின்றீர்?
பிக் எஃப்.எம் வானொலியில் "பிக் வணக்கம்' என்ற நிகழ்ச்சி தொகுத்து வழங்கியிருக்கிறேன். இப்பொழுது ஒரு சில நிகழ்ச்சிகள் மட்டுமே வழங்கிக் கொண்டிருக்கிறேன். இதை தவிர விஜய் டிவியில் "சில்லுன்னு ஒரு சேலஞ்ச்' என்ற நிகழ்ச்சியும் வழங்கி கொண்டிருக்கிறேன்.
சிறுவயது முதலே சின்னத்திரையில் இருக்கும் நீங்கள் பெரியதிரை பக்கம் போகாதது ஏன்?
பெரியதிரையில் இருந்து நிறைய வாய்ப்புகள் வருகின்றன. எனக்கு நடிப்பதில் ஈடுபாடு இல்லை. நிகழ்ச்சி தொகுப்பாளராகவோ, அல்லது பங்கேற்பாளராகவோ இருக்கத்தான் விருப்பம். அதனால்தான் நடிப்பதற்கு வருகிற வாய்ப்புகளை வேண்டாம் என்று சொல்லிவிடுகிறேன்.
ஆனால் சூப்பர் ஸ்டார் ரஜினி சாரோட படத்தில் மட்டும் நடிக்க வாய்ப்பு வந்தால் கண்டிப்பாக நடிப்பேன். சின்னவயதில் இருந்தே அவரோட ஸ்டைல் எனக்கு ரொம்ப பிடிக்கும்.
தமிழ் ரசிகர்களைப் பொருத்தவரை மமதியின் குரலை ரசிக்காதவர்களே இருக்க முடியாது, அப்படியிருக்க பின்னணி குரலுக்கு நிறைய வாய்ப்புகள் வந்திருக்குமே?
தமிழ் சின்னத்திரையைப் பொருத்தவரை என்னையும் என் தமிழையும் தெரியாதவர்களே இருக்க மாட்டார்கள். ஏனென்றால் அது எனக்கு கடவுள் கொடுத்த வரம். பின்னணி குரலுக்கான வாய்ப்புகளும் நிறைய வருகின்றன.
குரலால் நடிக்கவும் எனக்கு விருப்பமில்லை. சின்னத்திரையைத் தவிர ரியல் எஸ்டேட் பிசினஸ் செய்துகிட்டு இருக்கிறேன். அதற்கு முழு நேரமும் செலவிட வேண்டியிருப்பதால் அதிகப்படியான நிகழ்ச்சிகள் வழங்க நேரம் கிடைப்பது இல்லை.
இந்தத் துறையில் பெண்கள் வெற்றி பெறுவது சுலபமில்லை என்று சொல்கிறார்களே அதைப் பற்றி உங்கள் கருத்து என்ன?
சினிமாத்துறை மட்டுமல்ல எந்தத் துறையாக இருந்தாலும் வெற்றி என்று எடுத்து கொண்டாலே அது ஆடவராக இருந்தாலும் சரி, பெண்களாக இருந்தாலும் சரி பேராடினால்தான் வெற்றி கிடைக்கும்.
அதே சமயத்தில் தன்னுடைய எல்லையைத் தாண்டாமல் உழைக்கும் வரை பிரச்னைகள் எது வந்தாலும் எதிர்கொள்ளலாம். உண்மையாக சொல்ல வேண்டும் என்றால் திறமையிருந்தால் வெற்றி பெறுவதற்கு ஆண், பெண் வேறுபாடு எல்லாம் கிடையாது.
ஆண்களுக்குத்தான் ஜெயிப்பது கஷ்டம். புத்திசாலிதனமான பெண்களுக்கு அது சுலபம். வெற்றியை எப்படி வேண்டுமானாலும் அடையலாம் என்று நினைப்பவர்களும் உண்டு, இப்படித்தான் அடைய வேண்டும் என்று நினைப்பவர்களும் உண்டு. அது அவரவர் தனிப்பட்ட கொள்கை.
ஓரிரண்டு நிகழ்ச்சிகளில் மட்டுமே வந்தாலும் உங்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறதே அதன் ரகசியம் என்ன?
என் தமிழ் உச்சரிப்பைக் கேட்க பிடித்திருப்பதாக நிறைய பேர் சொல்கிறார்கள். நிகழ்ச்சி ரொம்ப இயல்பாக இருக்கிறது என்றும் சொல்லுவார்கள். அதுதான் வெற்றியின் ரகசியம் என்று நினைக்கிறேன்.
http://dinamani.com/edition/story.as...44&SEO=&Title=
பெண்கள்தான் ஹீரோக்கள்!
ஸ்ரீதேவிகுமரேசன்
First Published : 02 May 2010 12:00:00 AM IST
Last Updated :
சன் குடும்ப விருதுகள் நிகழ்ச்சியின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் மீண்டும் வந்து சிம்மாசனம் போட்டு அமர்ந்து கொண்ட பெரியதிரையின் பிரபல நாயகியான கஸ்தூரியை அந்த நிகழ்ச்சியின் ஒளிபரப்புக் கூடத்தில் சந்தித்தோம். அங்கே இருந்த பரபரப்பின் ஊடே நம்முடைய
கேள்விகளுக்குச் சுடச்சுட பதிலளித்தார்.
பெரியதிரையில் வாய்ப்புகள் இருக்கும்பொழுது எப்படி சின்னத்திரையில் தொகுப்பாளினியாக வந்தீர்கள்?
சின்னத்திரையில் ஒரு நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினால் அதை உலகம் முழுவதும் பார்க்க முடிகிறது. வெளிநாட்டில் இருக்கும் என் குடும்பத்தினர்கள் அனைவரும் பார்த்து மகிழ்கிறார்கள்.
சன் டிவியில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் அது பட்டி தொட்டி எல்லாம் பரவிவிடும். இந்த மாதிரி ஒரு பெரிய நிறுவனத்தில் நமக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும்போது அதை பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்பதற்காகத்தான் தொகுப்பாளினியாக இருந்தாலும் பரவாயில்லை என்று நினைத்து ஒத்துக்கொண்டேன்.
நான் எதிர்பார்த்தது போலவே எனக்கு நல்ல அங்கீகாரம் கிடைத்தது. சன் குடும்ப விருதுகள் நிகழ்ச்சியின் மூலம். வெகு நாட்களுக்கு பிறகு என் முகம் ஒரு சில நிமிடமே டிவியில் வந்து போனாலும் அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. எத்தனை பேர் எனக்கு போன் செய்து மறுபடியும் எப்போது சினிமாவிற்கு வந்தீர்கள்.
சின்னத்திரையில் உங்களைப் பார்க்கும்போது ரொம்ப சந்தோஷமாக இருந்தது என்று சொன்னார்கள். சின்னத்திரையின் வளர்ச்சியைக் கண்டு ரொம்ப ஆச்சர்யமாக இருந்தது.
ஏன் டி.வி. சீரியலில்களில் நடிப்பதில்லை?
சன் டிவியில் ஒளிபரப்பாகும் ஒரு தொடருக்கு நடிக்க வாய்ப்பு வந்தால் கண்டிப்பாக நடிப்பேன். அப்படியில்லாமல் வேறு டிவி சேனலாக இருந்தால் அதுவும் உலகமெங்கும் தெரியக்கூடிய டிவியாக இருந்தால் கண்டிப்பாக நடிப்பேன். நானே மாதத்தில் பாதிநாள் ஜெர்மனியில்தான் இருக்கிறேன்.
அந்த நேரங்களில் நான் நடித்ததைப் பார்க்க எனக்கே ஒரு சந்தர்ப்பம் கிடைக்கும் என்பதால்தான். அது குறிப்பிட்ட சில தொலைக்காட்சிகளில்தான் சாத்தியம். அந்த மாதிரி முன்னணியில் இருக்கும் தொலைக்காட்சிகளில் கண்டிப்பாக நடிப்பேன்.
தெலுங்கு, மலையாளம் தொலைக்காட்சியில் வரும் தொடர்களில் இருந்து நடிக்க கேட்கிறார்கள். இப்போது சினிமா வாய்ப்புகள் நிறைய வந்து கொண்டு இருப்பதால் நான் இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை.
சின்னத்திரையைப் பொருத்தவரை எனக்கு ரோல் மாடலாக ரம்யா கிருஷ்ணனைத்தான் நினைக்கிறேன். அவர்கள் இரண்டு துறையிலும் கலக்குகிறார்கள். அது போல செய்ய முடிந்தால் கண்டிப்பாகச் செய்வேன்.
பெரிய திரை நடிகைகள் நிறைய பேர் சின்னத்திரை பக்கம் வந்துவிட்டார்கள். அதைப்பற்றி உங்கள் கருத்து என்ன?
சின்னத்திரைதானே என்று சொல்லி ஒதுக்கிய காலம் எல்லாம் எப்போதோ மலையேறிவிட்டது. ஒருமுறை இயக்குநர் வாசு சொன்னார். "முன்பெல்லாம் தியேட்டரில் சினிமாவைத் தேடிப் போய் பார்ப்பார்கள். ஆனால் இப்போது சினிமா வீட்டுக்கே தேடி வருகிறது.
அதைப் பார்க்கக்கூட மக்கள் விரும்புவது இல்லை. தொடர்கள், கிரிக்கெட் என்று உலகத்தில் நடக்கும் அனைத்தையும் தெரிந்து கொள்கிறார்கள். அப்படி இருக்கும் போது சின்னத்திரையா,பெரியதிரையா என்ற பேச்சுக்கே இடமில்லை.
அப்படிபார்த்தால், சந்தானம், எம்.எஸ்.பாஸ்கர், ரியாஸ்கான் போன்றவர்கள் எல்லாம் சின்னத்திரையில் இருந்து போய்தான் பெரியதிரையில் கலக்கிகிட்டு இருக்காங்க. அவ்வளவு ஏன் டான்ஸ் மாஸ்டர் முதல் கொண்டு தொலைக்காட்சியில் இருந்து பெரியத்திரைக்குப் போகிறார்கள்.
அது அவரவர் மனதைப் பொருத்தது. எங்கு அங்கீகாரம் கிடைக்கிறதோ அங்கு வேலை செய்கிறார்கள்' என்றார். இதுதான் என் கருத்தும்.
சின்னத்திரை, பெரியதிரை இரண்டிலும் ஒரே நேரத்தில் நல்ல லீடிங் ரோல் வந்தால் எதற்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள்?
இன்றைய சூழ்நிலையில் நான் கேரக்டர் ரோலுக்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறேன். அதே போல டான்ஸ் என்றாலும் ஒ.கே. கலக்கலா ஆறு நிமிடம் வந்தாலும் அந்த ஆறு நிமிடத்தில் ஸ்கோர் செய்துவிட வேண்டும் என்று நினைக்கிறேன்.
பெரியதிரையைப் பொருத்தவரை படம் முழுக்க ஹீரோயினாக நடித்தாலும் நல்ல கதை அமையவில்லை என்றால் ஸ்கோர் செய்வது ரொம்ப கஷ்டம். சின்னத் திரையில் அப்படியில்லை.
பெண்கள்தான் ஒவ்வொரு கதையிலும் ஹீரோ. தினமும் ஒவ்வொருவருடைய வீட்டிற்கே சென்று அவர்களோட வீட்டில் ஒருவராக வாழ்கிறார்கள் சின்னத்திரை ஹீரோயின்கள்.
சன் குடும்ப நிகழ்ச்சிக்கானத் தேர்வு வேலைகள் செய்து கொண்டு இருக்கும்போதுதான் தெரிந்தது சின்னத்திரை நடிகைகளுக்கு எவ்வளவு பெரிய அங்கீகாரம் இருக்கிறது என்று. எனக்கு ரொம்ப ஆச்சர்யமாக இருந்தது. "திருமதி செல்வம்' என்ற தொடரில் நடித்த அபிதாவுக்குச் சினிமாவில் கிடைக்காத வெற்றியை சின்னத்திரை கொடுத்திருக்கிறது.
அவருக்கு இனி பெரியதிரை பக்கம் போகவேண்டும் என்கிற எண்ணம் கூட வருமா என்று தெரியவில்லை. அந்த மாதிரி வாய்ப்பு எனக்கு கிடைத்தால் நான் ஏன் வேண்டாம் என்று சொல்லவேண்டும்?
சின்னத்திரை வளர்ச்சியினால் பெரியதிரை பாதிக்கப்பட்டதாக சொல்கிறார்களே அதைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
ஆரம்ப காலத்தில் மேடை நாடகங்கள் வந்த போது கூத்து கொஞ்சம் நசுங்கி போனது. அடுத்து சினிமா வந்த போது நாடகங்கள் நலிந்து போனது. இப்போது டிவி வந்தபோது சினிமா கொஞ்சம் நலிந்து தான் போனது.
இந்த மாதிரி அந்தந்த காலகட்டத்துக்கு ஏற்ப வளர்ச்சி மாறிக்கிட்டே இருக்கிறது. எத்தனையோ மேடை நாடக கலைஞர்கள் வேலையில்லாமல் அவதிப்பட்டவர்கள் இன்று டிவி வந்த பிறகு ரொம்ப பிஸியாக வேலை செய்து கொண்டிருக்கிறார்கள் என்றால் அதற்கு காரணம் தொலைக்காட்சியில் வரும் மெகா தொடர்கள் தான். அந்த வகையில் சின்னத்திரை ஒரு முன்னேற்றம் என்றுதான் சொல்ல வேண்டும்.
திருமணத்திற்குப் பிறகு மீண்டும் நடிக்க வந்திருக்கிறீர்கள். உங்கள் கணவரோட ஆதரவு எந்த அளவுக்கு இருக்கிறது?
என் கணவர் டாக்டர் குமார். அவருக்கு நான் நடிப்பதைப் பற்றி எந்தவித ஆட்சேபனையும் இல்லை. நான் நடிப்பதை ரொம்ப விரும்பிப் பார்ப்பார். அதற்காக எல்லா விதத்திலும் சப்போர்ட் செய்வார். ஆனால் நடிப்பதற்காக அவரைப் பிரிந்திருப்பதில்தான் அவருக்குக் கொஞ்சம் வருத்தம்.
http://dinamani.com/edition/story.as...44&SEO=&Title=
பாடகர் கிருஷ்ஷை திருமணம் செய்து ஒரு வருடம் நெருங்கிவிட்ட நிலையிலும் ஒரு கேள்வி மட்டும் சங்கீதாவை சங்கடத்தில் ஆழ்த்தி வருகிறதாம்.
என்னவென்று கேட்டால்...
""நாங்கள் காதலித்தோம்; திருமணமும் செய்துகொண்டோம். இப்போது நாங்கள் கணவன்-மனைவி. திருமண வாழ்க்கையைப் பற்றிக் கேட்டால் கூட பரவாயில்லை. ஆனால் இன்னமும் எங்களைப் பார்ப்பவர்கள் எங்களுடைய காதலைப் பற்றியே கேள்வி கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
அதனால் இனி எங்கும் சேர்ந்து போகக்கூடாது என்று முடிவெடுக்கும் அளவுக்கு எங்களைத் தள்ளிவிட்டார்கள். கணவரை அழைத்துக்கொண்டு ஹீரோ வாய்ப்பு தேடுவதாவும் கூறுகிறார்கள். அதிலும் உண்மையில்லை. அவர் ஏதாவது ஒரு படத்தில் ஹீரோவாக நடித்தால்கூட அதில் ஒரு சிறிய கேரக்டரில்கூட நான் நடிக்க மாட்டேன்'' என்கிறார் சங்கீதா.
http://dinamani.com/edition/story.as...44&SEO=&Title=
ஆட்டோ ராணி!
"தென் றல்' தொடரில் ஆட்டோ ஓட்டுனராக வந்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த சுசைனியை (அது தாங்க அவரின் நிஜபெயர்) நமது வாசகர்களுக்காக ஒரு மாலை பொழுதில் சந்தித்தோம். இதமாக வந்தது அவரின் இனிமையான பதில்கள்
நடிக்க வந்தது எப்படி? நடிப்பதற்கு உங்கள் வீட்டில் எப்படி சம்மதித்தார்கள்?
அம்மா, அண்ணன், நான் மட்டும்தான். அப்பா இறந்துவிட்டார். அம்மா கல்லூரி பேராசிரியையாக இருந்தவங்க. இப்போ வேலையை விட்டுவிட்டு வீட்டில்தான் இருக்கிறார். அண்ணன் ஸ்கிரிப்ட் ரைட்டர். நான் வளர்ந்தது, படித்ததெல்லாம் பெங்களுரில். டிப்ளமோ சாப்ட்வேர் படிச்சேன். இறுதி ஆண்டு படிக்கும் போதுதான் சென்னைக்கு வந்தேன். நான் நடிப்பதற்கு சம்மதிக்க வைத்தது ரொம்ப பெரிய கதை. நான் சென்னைக்கு படிக்க வந்த போது ஜெயாடிவியில் இருந்து எங்க கல்லூரியில் நிகழ்ச்சி தொகுப்பாளினி தேர்வு செய்தார்கள். அதில் தேர்வு ஆனேன்.
படிப்பில் சாதிக்க வேண்டும் என்று நினைக்கிற குடும்பம். அதனால அம்மா கண்டிப்பாக டி.வி.யில தோன்ற ஒத்துக்க மாட்டாங்க,என்ன செய்வது என்று யோசித்தேன். ஆனால் என்னோட தோழிகள் எல்லாம் கிடைத்த வாய்ப்பை நழுவவிட வேண்டாம் என்று சொன்னார்கள். அதனால அம்மாவுக்குத் தெரியாம ஜெயாடி.வி.யில காலைல வரும் "தகவல்.காம்' என்ற நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிக் கொண்டிருந்தேன்.
ஒருநாள் அம்மா டி.வி.யில் என்னைப் பார்த்துவிட்டு ரொம்ப சத்தம் போட்டார்கள். பிறகு அம்மாவிடம் பேசி ஒரு வழியா சம்மதம் வாங்கிவிட்டேன். அம்மா எப்பவுமே ரொம்ப பிராக்டிக்கலா யோசிப்பவங்க. எப்பவுமே ரொம்ப என்கரேஜ் செய்வாங்க. அதனால என்னோட ஆசையைப் புரிந்து கொண்டு சரின்னு சொல்லிட்டாங்க. ஆனா தோற்றுப் போய் மட்டும் வரக் கூடாது என்று
சொன்னார்கள்.
பெங்களுரைச் சேர்ந்த நீங்கள் நல்ல தமிழ் பேசுவது எப்படி?
நிறைய டைரக்டர்கிட்ட திட்டுவாங்கி, எழுதி எழுதி பழகியே தமிழை கற்றுக் கொண்டேன். இப்போ சூப்பரா தமிழ் பேசுவேன், எழுதுவேன்.
சின்னத்திரை பக்கம் வந்தது எப்படி?
பிரம்மா சார் முலமாகத்தான் முதன் முதலில் தொலைக்காட்சிக்கு வந்தேன். விஜய் டிவியில் வி.ஜே.வாக நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்கி கொண்டிருந்தேன். அப்போ "தென்றல்' தொடரில் என் கேரக்டருக்கு நடிக்க ஒப்பந்தமாகி இருந்தவங்க வராததால், நான் அந்த கேரக்டருக்கு பொருத்தமாக இருப்பதாக என்னைக் கேட்டாங்க.
ஆட்டோ ஓட்டுனராக வரும் காட்சிகளில் நிஜமாகவே ஆட்டோ ஓட்டுவீர்களா, ஓட்டுவதுபோல நடிப்பீர்களா?
நிஜ மாகவே ஆட்டோ ஓட்ட கற்றுக் கொண்டேன். ஆட்டோ ஓட்டுவது ரொம்ப பிடிச்சிருக்கு. தொடர் இல்லைன்னா கூட கைவசம் ஒரு தொழில் இருக்குங்க (சிரிக்கிறார்). முதலில் தயக்கமாகத்தான் இருந்தது. என்னால அந்த கேரக்டர் செய்ய முடியுமா என்று நினைத்தேன்.
வில் லத்தனமான கேரக்டர்கூட யோசிக்காமல் செய்துவிட்டேன். ஆனால் ஆட்டோகாரியாக மேக்கப்பே இல்லாம நடிக்க வேண்டும் என்ற போது, இதெல்லாம் சரியா வருமா என்று யோசித்தேன். ஆட்டோ ஓட்டுவது அவ்வளவு ஈசியான விஷயமல்ல. அவங்க பாடி லாங்வேஜ், அந்தக் குரல் எல்லாம் ரொம்ப கஷ்டப்பட்டு ஹோம் ஒர்க் செய்ய வேண்டியிருந்தது.வெளியில் எங்காவது சென்றால் ரசிகர் தெரிந்து கொண்டு ஆட்டோ வருமா என்று கேட்கிறார்கள். அதுவே எனக்கு கிடைத்த வெற்றியாக நினைக்கிறேன்.
வேறு என்ன தொடர்கள் நடித்துக் கொண்டிருக்கிறீர்கள்?
"வேட்டை' என்ற தொடரில் கதாநாயகியாக நடிக்கிறேன், பாலிமர் சேனலுக்காக "மூன்று முகம்' என்ற தொடரில் நடிக்கிறேன். அடுத்து "உயிரின் நிறம் ஊதா' என்ற தொடர் கலைஞர் டிவிக்காக நடித்துக் கொண்டிருக்கிறேன். இது எல்லாம் புதுத் தொடர்கள் அனேகமாக அடுத்த மாதத்தில் இருந்துதான் ஒளிபரப்பாக உள்ளது. இதற்கு முன்பு விஜய் டி.வி.யில் "அன்பேவா' என்ற தொடரில் நடித்துள்ளேன், அதேபோல "ரோஜா கூட்டம்' தொடரிலும் நடித்துள்ளேன்.
பெரிய திரையில் நடிக்க வாய்ப்பு வருகிறதா?
"மைனா", "அர்ஜுனன் காதலி' என்று இரண்டு படங்கள் நடித்து கொண்டு இருக்கிறேன். இரண்டு படங்களும் அடுத்த மாதம் திரைக்கு வர இருக்கிறது. ரொம்ப ஆவலோடு எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன். அதில் "அர்ஜுனன் காதலி' என்ற படத்தில் முழுக்க முழுக்க காமெடி ரோல் செய்திருக்கிறேன்.
http://dinamani.com/edition/story.as...44&SEO=&Title=
ஞாயிறு கொண்டாட்டம்
இளவரசி கயல்விழி!
படபடக்கும் பட்டாம் பூச்சியாய், நமது கேள்விகளை
முடிக்கும் முன்னரே சட்டென்று கொஞ்சமும்
தயாங்காமல் தெள்ளத் தெளிவாக பதிலளிக்கும் இவர், "இளவரசி' தொடரில் அமைதியான
கயல்விழியாக வந்து ரசிகர்களின் மனதை அள்ளி செல்லும் அகிலாதான். அவருடன் ஒரு சந்திப்பு.
எப்படி சினிமாத்துறையை தேர்ந்தெடுத்தீங்க?
நான் சினிமாத்துறை தான் வேண்டும் என்று தேர்ந்தெடுக்க வில்லை அது தானாகவே அமைந்த ஒன்று. எனக்கு குருவாக இருந்து என்னை வழி நடத்தி செல்லும் பிரதாப் என்பவர்தான் நான் முதன் முதலில் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளினியாக சேர உதவி செய்தார்.
அதன் பின் படிப்படியாக உயர்ந்து தற்போது நிகழ்ச்சி தயாரிப்பாளராக வளரும் வரை எனக்கு பக்கபலமாக இருந்து, உதவிகள் செய்து, ஊக்குவித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் நானும், பிரதாப் சாரும் சேர்ந்து ஐடியா செல்லர் என்று நிறுவனம் ஒன்றை வைத்து நடத்தி வருகிறோம். இந்நிறுவனத்தின் மூலம் ஜெயா டிவியில் ஒளிபரப்பாகி வரும் "பாடவா என் பாடலை' என்ற நிகழ்ச்சியை வழங்கி வருகிறோம்.
வேறு என்ன நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்கி கொண்டிருக்கிறீர்கள்?
வஸந்த் டிவியில் பெண்களுக்கான ஸ்பெஷல் க்விஸ் நிகழ்ச்சி, பாலிமர் சேனலில் லைவ் ஷோ அது மட்டுமல்லாமல் ஒரு துறையில் சாதித்த சாதனையாளர்களைப் பிரபலங்களை நேர்காணல் செய்து வருகிறேன். இதைத் தவிர பெரியதிரையில் கிட்டத்தட்ட பனிரெண்டு படங்களில் நடித்து வருகிறேன்.
பிரபலங்களையோ, சாதனையாளர்களையோ நேர்காணல் செய்யும்போது என்ன தோன்றும்?
பிரபலங்களின் நேர்காணல் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவது எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. இந்நிகழ்ச்சியில் பங்கேற்று ஒரு சாதனையாளர்களிடம் அவர்கள் சம்பந்தப்பட்ட விஷயங்களைத் தெரிந்த கொண்டு கேள்வி கேட்கும் போது என்னுடைய அறிவும், செயல் திறனும் அதிகரிக்கிறது.
ஒரு மருத்துவரையோ, அல்லது பாடகரையோ அல்லது வேறு துறையில் சாதித்தவர்களையோ, கேள்வி கேட்கும் போது அவர்களுக்கு ஏற்றவாறு என்னை தயார் செய்து கொள்ள முடிகிறது. இதனால் நமது அறிவும் தெளிவும் வளர்ச்சியடைகிறது. சாதனையாளர்களைச் சந்திக்கும் போது மனதில் ஒருவித தெம்பு பிறக்கிறது. நாமும் எதையாவது சாதிக்க வேண்டும் என்று தோன்றும்.
"இளவரசி' தொடரில் கயல்விழியாக நடிக்கும் அனுபவம் எப்படியிருக்கிறது?
"இளவரசி'யில் பூ தொடுத்து விற்று பிழைக்கும் அம்மாவுக்கு மகளாக நடிக்கிறேன், நிஜத்தில் கயல்விழிக்கும் எனக்கும் சம்பந்தமே இல்லை. அதற்கு அப்படியே நேர் எதிரான கேரக்டர் நான். இந்த மாதிரி ஒரு ரோலில் நடிப்பது உண்மையிலேயே எனக்கு ரொம்ப வித்தியாசமான அனுபவம். அதே சமயத்தில் நல்ல அனுபவமும் கூட. ராடன் நிறுவனத்தின் தொடரில், ஒரு நல்ல ரோலில் நடிப்பது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது.
நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சிகள் மூலம் மக்களைத் தொடர்பு கொண்டு பேசும் போழுது உங்கள் மனநிலை எப்படி இருக்கும்?
நேரடி நிகழ்ச்சிகள் வழங்கும் போது அதை நாம் பார்க்கவோ கேட்கவோ முடியாது. அதே போல அடுத்து நம்மிடம் யார் தொடர்பு கொண்டு பேசுகிறார்கள், யாரிடம் பேசப்போகிறோம், என்ன கேட்பார்கள், என்ன பதில் சொல்ல போகிறோம் என்பதே சில நேரங்களில் தெரியாமல் பேச வேண்டியிருக்கும். அதே சமயத்தில் அந்த நிகழ்ச்சியை உலகம் முழுவதும் உள்ள மக்கள் பார்த்துக் கொண்டிருப்பார்கள்.
இப்படி எதுவுமே தெரியாமல் எதிரே கேட்டபவர்கள் மனநிலையை அறிந்து அவர்களுக்குத் தகுந்த பதில் அளிப்பது என்பது ஒரு கலைதான். உண்மையில் சொல்ல வேண்டும் என்றால் ரொம்ப த்ரில்லிங்கான அனுபவமாக இருக்கும். நான் ரொம்ப விரும்பி வழங்கும் நிகழ்ச்சிகளில் "லைவ் ஷோ'வும் ஒன்று.
நீங்கள் விரும்பி பார்க்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சி எது?
கலைஞர் டிவியில் காலை ஒன்பது முதல் பத்து மணிவரை ஒளிபரப்பாகும், தேனும் பாலும், ஜெயா டிவியில் ஒளிபரப்பாகும் "தேன்கிண்ணம்', வஸந்த் டிவியில் "தேனருவி', கேப்டன் டிவியில் "நெஞ்சில் நின்றவை' போன்ற பழைய பாடல்களை ஒளிபரப்பும், நிகழ்ச்சிகளையும் மற்றபடி க்விஸ் புரொகிராம்களும்தான் விரும்பி பார்ப்பேன்.
உங்களைப் பற்றி?
நான் ஒரு மலையாள பெண். அப்பா, அம்மா, அண்ணன், அக்கா, இதுதான் எங்கள் இனிய குடும்பம். பிறந்து வளர்ந்தது படித்தது எல்லாம் சென்னையில்தான். எப்பவும் தைரியமாக இருக்கணும், எதையாவது சாதிக்கணும், எந்தத் துறையாக இருந்தாலும் அதைச் சரியான முறையில் நேர்த்தியாக செய்து முடிக்க வேண்டும் என்று நினைப்பேன். என்னைப் பொருத்தவரை சோம்பேறியாக இல்லாமல் எப்போதும் சுறுசுறுப்பாக இயங்கி கொண்டிருக்க வேண்டும். இதுதான் அகிலா.
http://dinamani.com/edition/story.as...44&SEO=&Title=
ஞாயிறு கொண்டாட்டம்
குழந்தை நக்மாவாக நான்!
ஸ்ரீதேவிகுமரேசன்
First Published : 06 Jun 2010 01:56:00 PM IST
Last Updated :
இரவு 8.30 மணிக்கு சன் டிவியில் விறுவிறுப்பாக ஒளி
பரப்பாகிக் கொண்டிருக்கும் "தென்றல்' தொடரில் ரசிகர்
களுக்கு நல்ல பரிச்சயமான கதாபாத்திரம் ஹேமா. அத்தொடரின் கதாநாயகி துளசியின் தோழியாக வந்து "நிழல்கள்' ரவியை படாதபாடுபடுத்தும் கதாபாத்திரம் அது. ஹேமாவாக கலக்கிக் கொண்டிருக்கும் தீபாவுடன் ஒரு சந்திப்பு..
சின்னத்திரையில் தொடர்கள் பக்கம் எப்போது வந்தீர்கள்?
ராடன் நிறுவனத்தின் "சித்தி' தொடர்தான் எனக்கு முதல் தொடர். அந்த முதல் தொடரிலேயே எனக்கு நல்ல அங்கீகாரம் கிடைத்தது. அடுத்து "மனைவி' என்ற தொடரில் நடித்தேன்.
அதன்பிறகு ஒரு சிறிய இடைவெளி. "விஜய்' டிவியில் "கனா காணும் காலங்கள்' தொடரில் நடித்தேன். எனக்கு அதில் நன்றாக நடிக்கக் கூடிய வேடம் கிடைத்தது. அந்தத் தொடர் என் வயதுக்குரிய தொடராக அமைந்தது. பள்ளியில் படிக்கும் பெண்ணாக நடித்திருந்தேன். அதற்குப் பின் இப்போது "தென்றல்' தொடரில் நடித்துக் கொண்டிருக்கிறேன்.
"தென்றல்' தொடரில் நடிக்கும் அனுபவம் பற்றி சொல்லுங்கள்?
"கனா காணும் காலங்கள்' தொடரில் எனக்கு அமைதியான கேரக்டர். அதற்கு நேர் எதிரான கேரக்டர் "தென்றலி'ல் வரும் தீபா கேரக்டர். வெளியே எங்காவது போகும் போது "தீபா வராங்கன்னு' சொல்கிறார்கள். ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது கேட்பதற்கு. அதுதான் இந்த கேரக்டருக்குக் கிடைத்த வெற்றி என்று நினைக்கிறேன்.
சினிமாத் துறைக்கு எப்போது வந்தீர்கள்?
என் அம்மாவோட தம்பிகள் உதய்குமார்- சுரேஷ் என்ற என் மாமா இருவரும் சினிமாத்துறையில்தான் இருக்கிறார்கள். ஒரு மாமா, மணிரத்னம் சார் இயக்கிய "நாயகன்' படத்தில் நடித்திருக்கிறார். அவர் ஷூட்டிங் போகும் போது என் பாட்டி எங்களை எல்லாம் அங்கு அழைத்துப் போவார்கள்.
இப்படி போன போது எனக்கு ரஜினி சாரோட "பாட்ஷா' படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்தப் படத்தில் ரகுவரன் சாரோட பெண்ணாக வரும் சின்னகுழந்தை நான்தான். இப்படித்தான் சினிமாத் துறைக்குள் வந்தேன். "சூர்ய வம்சம்' போன்ற படங்களிலும் நடித்துள்ளேன். நடிப்பு என் ரத்தத்தோடு கலந்துவிட்டது.
மறுபடியும் பெரிய திரை பக்கம் போகும் எண்ணம் உண்டா?
பெரிய திரையில் இருந்து வாய்ப்புகள் வந்து கொண்டுதான் இருக்கின்றன. எனக்கு பொருத்தமான நல்ல ரோலில்தான் நடிக்கவேண்டும் என்று ரொம்ப உறுதியாக இருக்கிறேன். சும்மா வந்து நின்றுவிட்டுப் போக எனக்கு ஆசையில்லை. ஒரே படம் நடித்தாலும் எல்லாருடைய மனதிலும் நிற்கும்படி நடிக்கவேண்டும்.
வேறு என்ன தொடர்கள் நடித்துக் கொண்டிருக்கிறீர்கள்?
சன் டிவியில் காலை பத்தரை மணிக்கு ஒளிபரப்பாகும் "மகள்' தொடரில் நடிக்கிறேன். அதில் சந்திரா லக்ஷ்மன் அவங்களோட உறவுக்கார பெண்ணாக நடித்து வருகிறேன்.
என்ன மாதிரியான கதாபாத்திரங்களில் நடிக்க விருப்பப்படுவீர்கள்?
நடிக்க வந்தாச்சு. இதில் இந்த மாதிரியான கேரக்டரில்தான் நடிக்கவேண்டும் என்று நினைக்காமல் எல்லாவிதமான கேரக்டர்களும் நடிக்கணும்.
சின்ன வயதிலிருந்தே நடிப்பின் மீது எனக்கு ஆர்வம் அதிகம். ஒரு நல்ல நடிகையாகத்தான் வரவேண்டும் என்று எப்போதுமே நினைத்துக் கொண்டிருப்பேன். அந்த ஆசை இன்று ஓரளவு நிறைவேறியிருக்கிறது.
உங்கள் குடும்பத்தில் உங்களுக்கு யாருடைய சப்போர்ட் அதிகமாகக் கிடைக்கும்?
எங்கள் குடும்பம் பெரியது. எனக்கு இரண்டு அண்ணன், இரண்டு அக்கா இருக்கிறார்கள்.
நான்தான் வீட்டில் கடைசி பெண். அண்ணன்கள், அக்காவுக்கு எல்லாம் திருமணம் ஆகிவிட்டது. எல்லாருமே எனக்கு ரொம்ப துணையாக இருப்பாங்க. நான் நடிப்பது எல்லாருக்குமே ரொம்பப் பிடிக்கும். அக்கா, மாமா, சித்தப்பா, சித்தி என்று எல்லாருமே என் நடிப்பை விரும்பிப் பார்ப்பார்கள்.
http://dinamani.com/edition/story.as...44&SEO=&Title=
Quote:
நாடகத்துறையிலிருந்து சினிமா, சினிமாவிலிருந்து அரசியல் என்று கலக்கிக் கொண்டிருப்பவர் எஸ்.வி.சேகர். தனது 5600-வது நாடகக் காட்சியை அரங்கேற்றிய உற்சாகத்தில் இருந்தவரை சந்தித்தோம். அவரின் கலகல பேட்டி இதோ!
தற்கால நாடகச் சூழல் குறித்து?
தற்காலத்தில் நிறைய நாடகங்கள் நடக்குது. ஆனால், நாடகங்களுக்கு வரக்கூடிய ஆட்களின் எண்ணிக்கைதான் குறைஞ்சு போயிருக்கு. சமீபத்தில் என்னுடைய நாடகம் ஒன்றை காமராஜர் அரங்கத்தில் போட்டேன். அந்த அரங்கம் 1700 இருக்கைகள் கொண்டது. அரங்கம் நிறைந்து 100 பேர் நின்றுகொண்டே பார்த்தனர்.
ஆனால், பெரும்பாலும் இப்போதெல்லாம் இருபத்தைந்து பேர், ஐம்பது பேர், நூறு பேர்தான் நாடகம் பார்க்கவே வருகிறார்கள். பெரும்பாலான நாடகங்கள் இலவசம் என்று அறிவித்தும் கூட யாரும் பார்க்க வரமாட்டார்கள். காரணம் தொலைக்காட்சியினுடைய தாக்கம் நாடகத்தைப் பாதித்திருக்கிறதுதான்.
"நாடகப்பிரியா' மூலம் 5600வது முறையாக நாடகக் காட்சியை மேடையேற்றியிருக்கிறீர்கள். இந்த அரிய சாதனையை எப்படி உணருகிறீர்கள்?
நாங்கள் 1974-ல் நாடகப்பிரியாவை ஆரம்பித்தோம். இதுவரை 36 வருடங்களில் 5600 முறை நாடகக் காட்சியை அரங்கேற்றியிருக்கிறோம். தினம் ஒரு நாடகம் என்று பார்த்தால் கூட 13 வருடங்கள் ஆகும். ஒன்று விட்டு ஒரு நாள் என்று நாடகம் போட்டால் மட்டுமே இது சாத்தியமாகும். இதை நினைத்தால் கொஞ்சம் பிரமிப்பாகத்தான் இருக்கு. கடவுளுடைய அருள் இருப்பதால் இதைச் செய்திருக்கிறோம்.
இதுவரை அதிகமாக அரங்கேற்றப்பட்ட நாடகம் எது? எதனால் அந்த நாடகம் தொடர்ந்து அரங்கேற்றப்பட்டது?
எந்த நாடகமுமே தொடர்ந்து அரங்கேற்றப்படுவதற்கு முக்கியக் காரணம் அது ஜனங்களுக்குப் பிடித்திருக்கிறது என்பதால்தான்! "ஆவியே உன்னை ஆராதிக்கிறேன்', "மகாபாரதத்தில் மங்காத்தா', "காதுல பூ', "ஆயிரம் உதை வாங்கிய அபூர்வ சிகாமணி' இவை எல்லாமே முந்நூறு, நானூறு முறை தொடர்ந்து அரங்கேற்றப்பட்டவைதான்.
உலக நாடுகளில் "நாடகப்பிரியா' எந்த மாதிரியான நாடகங்களை நடத்தியிருக்கிறது? உங்களை கவர்ந்த நாடு எது?
எல்லா நாடுகளிலும் எங்களுடைய நாடகப்பிரியாவின் நாடகங்களைத்தான் நடத்தியிருக்கிறோம். அமெரிக்கா போன்ற நாடுகளில் செட் போட இயலாத இடங்களில் கூட நாடகத்தை நடத்தியிருக்கிறோம். அங்கு அரங்குகள் எல்லாம் மிகப்பெரியதாக இருக்கும். கார், பைக் எல்லாம் அரங்குக்கே வருகிற அளவிற்கு நீளமானதாக இருக்கும். அங்கே போய் நாம் செட் போட்டால் அரங்கத்தின் நடுவே வத்திப்பெட்டி வைத்தது மாதிரி இருக்கும்.
அதுமட்டுமின்றி சின்ன இடங்களில் கூட நாடகத்தை போட்டிருக்கிறோம். எந்த நாட்டில் போட்டாலும் நம்முடைய தமிழ் மக்களுக்காகத்தானே நாடகம் போடுகிறோம். அதனால் எந்த நாட்டில் போட்டாலும் மிகப்பெரிய வரவேற்பு இருக்கும்.
மறக்க முடியாத நாடக நிகழ்வு எது?
மறக்க முடியாத நாடக நிகழ்வுகள் நிறைய இருக்கின்றன. எங்கள் நாடகக் குழுவில் பாலன் என்று ஒருத்தர் இருந்தார். முக்கியமான வேடங்களில் எல்லாம் அவர்தான் நடிப்பார். சமீபத்தில் அவருடைய குழந்தை ஒன்று இறந்து போய் விட்டது. சரி!
அவருடைய இடத்தில் வேறு யாரையாவது நடிக்க வைக்கலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தபோது, தன் குழந்தையினுடைய ஈமச்சடங்கை முடித்துவிட்டு, அன்று மாலையே நடிக்க வந்துவிட்டார். அதுபோல முக்கியமான நாடகம் ஒன்றில் நடிக்க வேண்டிய பெண் ஒருத்தர் நாடக அரங்குக்கு வரவில்லை. நாடக ஆர்வலர்கள் எல்லாம் அரங்குக்குள் வந்து காத்திருக்கின்றனர்.
அவர் 6.45 மணிக்கு வர வேண்டும். ஆனால், 6.45 மணிக்குத்தான் அவர் வரமாட்டார் என்கிற செய்தியே எங்களுக்குத் தெரிந்தது. பிறகு, அவசரமாக எங்களது குழுவில் உள்ள டி.ஏ.குமார் என்பவரை பெண் வேடமிட்டு நடிக்க வைத்தோம். இதுபோல் எத்தனையோ இக்கட்டான சூழல்களை எதிர்கொண்டு நாடகம் நடத்தியிருக்கிறோம்.
பிரபலங்கள் ரசித்த நாடகம் எது?
பிரபலமா? அல்லது பிரபலமாகாதவரா? என்பது முக்கியம் இல்லை. ரசிகரா இருக்காரா? இல்லையா? என்பதே முக்கியம். பிரபலம் ஒருவரை அழைத்து வந்து முதல் வரிசையில் உட்கார வைத்து, அவர் நாடகத்தை ரசிக்காமல் உர்ரென்று இருந்தால் என்ன செய்வது? பொதுவாக எங்கள் நாடகத்தின் அடிப்படையே நூறு நிமிடத்தில் 200 சிரிப்புகள் என்பதுதான். எல்லா பிரபலங்களும் எங்கள் நாடகத்தை ரசித்திருக்கிறார்கள்.
பிரபலமில்லாதவர்களும் ரசிக்கிறார்கள். அதேபோல எங்கள் நாடகத்தைப் பார்க்காதவர்களும் இருக்கிறார்கள். முக்கியமாக எங்கள் நாடகத்தை முதல்வர் கலைஞர், துணை முதல்வர் ஸ்டாலின், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, மறைந்த சபாநாயகர் ராஜாராம், வலம்புரி ஜான், பத்திரிகையாளர் சோ உள்ளிட்டோரும் பார்த்து ரசித்திருக்கிறார்கள்.
உங்களை மிகவும் கவர்ந்த நாடகாசிரியர் யார்?
அப்படியெல்லாம் ஒன்றும் கிடையாது. நல்லா இருக்கக் கூடிய எல்லா நாடகங்களும் எனக்குப் பிடிக்கும். குறிப்பாக "சோ'வின் நாடகங்கள் ரொம்பப் பிடிக்கும்.
ழ் திரைப்படம், தொலைக்காட்சி, இணையம் இவற்றின் ஆதிக்கத்தின் சூழலில் தொடர்ந்து நாடகங்களை அரங்கேற்றுவதில் என்ன சிரமங்கள் உள்ளன?
மக்களை வரவழைக்கிற சிரமம்தான். ஆனால் அதையும் தாண்டி வர்றாங்க. இது ஒரு வியாபாரம் மாதிரி. இந்தக் கடையில் இந்தப் பொருள் கிடைக்கும் என்றால் கிடைக்கணும். அப்படிக் கிடைக்காமல் போனால் மக்கள் அந்தக் கடைக்கு வருவதை நிறுத்திக் கொள்வார்கள். நான் அவர்கள் எதை எதிர்பார்த்து வருகிறார்களோ, அதைக் கொடுக்காமல் ஏமாற்றுவதில்லை. ஆகவே, என்னுடைய நாடகங்களுக்கு ரசிகர்கள் வந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.
பல்துறை வித்தகராக இருக்கிறீர்கள். உங்கள் மனநிலையை எப்படி சமன் செய்து கொள்கிறீர்கள். எது உங்களுக்குப் பிடித்திருக்கிறது?
இதில் ஒன்றுமேயில்லை. எல்லோருமே சராசரிதான். எல்லோருக்குமே பல்வேறு விதமான முகங்கள் உண்டு. ஒரு சட்டமன்ற உறுப்பினர் என்றால் அந்த இடத்தில் ஒரு அரசியல்வாதியாக நடந்து கொள்ள வேண்டும். வீட்டிற்கு வந்தால் என் குடும்பத்தில் ஒரு தகப்பனாக, கணவனாகத்தான் நடந்துகொள்ள வேண்டும்.
இது அடிப்படையான விஷயம். வீட்டில் வந்து அரசியல்வாதி வந்திருக்கேன், சாப்பாடு போடுங்கன்னு சொன்னா? போய்ட்டு வாங்கன்னு சொல்லிடுவாங்க! எனக்குப் பிடித்தது நாடகக்காரன் என்கிற ஆளுமைதான். ஏன்னா, அதில்தான் எல்லா அதிகாரங்களும் எங்கிட்ட இருக்கு.
"நாடகப்பிரியா'விற்கு கிடைத்த விருதுகள் குறித்து?
எல்லா விருதுகளும் உயர்வான விருதுகள்தான். இதில் உயர்வு, தாழ்வெல்லாம் ஒன்றுமில்லை. இருபது வருடங்களுக்கு முன்பு கோயம்புத்தூரில் நாடகம் போட்டேன். அப்போது உடம்பெல்லாம் கரி படிந்த நிலையில் ஒருத்தர் வந்து, ""இருபது ரூபா டிக்கெட்டுக்கு கடைசி வரிசையில்தான் உட்காரணும்னு சொல்றாங்க ஸôர்! நான் முதல் வரிசையில் உட்கார்ந்து நாடகம் பார்க்க வேண்டும்'' என்று சொன்னார்.
நான் அவரிடம் என்ன வேலைப் பார்க்கிறீர்கள்? என்று விசாரித்தபோது, அவர் கரி வண்டி இழுப்பதாகவும், ஒரு நாளைக்கு கரி வண்டி இழுத்தால் இருபது ரூபாய் கிடைக்கும் என்றும் சொன்னார். நான் அவரிடம் நீங்கள் பணம் எல்லாம் கொடுக்க வேண்டாம். முதல் வரிசையில் உட்கார்ந்து நாடகம் பாருங்கள் என்று கூறினேன். அதைத்தான் மிகச்சிறந்த விருதாக நினைக்கிறேன். ஏன்னா அவருடைய ஒரு நாள் சம்பளத்தை என்னுடைய நாடகத்திற்காக கொடுக்கிறார் இல்லையா?
அதனால்தான் அப்படி சொன்னேன். இன்றைக்கு என்னுடைய நாடகத்தின் முதல் வரிசை டிக்கெட்டின் விலை ஆயிரம் ரூபாய். கடைசி இருக்கையின் டிக்கெட் விலை இருநூறு ரூபாய். சிலர் என்னிடம் வந்து, ""ஸôர் டிக்கெட் விலை அதிகமாக இருக்கு. ஆனால், உங்க நாடகம் பார்க்க வேண்டும் என்ற ஆசையிருக்கு'' என்பார்கள். அவர்களிடம், "இலவசமாக பார்த்துவிட்டு போங்க' என்று சொல்லுவேன்.
அதற்காக எல்லோரையும் இலவசமாக நாடகம் பார்க்க அனுமதிக்க முடியாது. நாடகம் நடத்துபவர் பிழைக்க வேண்டும் இல்லையா? இப்போதும் ஒவ்வொரு முறை நாடகம் நடக்கும்போதும் குறைந்தது நான்கு பேரையாவது இலவசமாக பார்க்க அனுமதிக்கிறோம். அந்த நான்கு பேர் யாருன்னா இதுவரைக்கும் என்னுடைய நாடகத்தையே பார்க்காதவர்களாகத்தான் இருப்பார்கள்.
குடும்பம் பற்றி?
என் மனைவி பேரு உமா மகேஸ்வரி. ஒரு மகன். ஒரு மகள். மகன் அஸ்வின் சேகர் திரைப்பட நடிகர். "வேகம்'னு ஒரு படம் நடித்திருக்கிறார். இப்போ "நினைவில் நின்றவள்'னு ஒரு படம் நடிச்சிட்டு இருக்காரு. மகள் அனுராதா சேகர். அளவான அழகான குடும்பம் எங்களுடையது.
ஆவியா.. ஓவியா!
ஜெயா டிவியில் ஒளிபரப்பாகும் "ஓவியா' என்கிற திகில் தொடரின் நாயகியாக நடிக்கிறார் அம்மு. நடிப்பு, தொகுப்பாளினி, டப்பிங் எனப் பிஸியாக இருப்பவரிடம்
தொடரின் திகில் அனுபவங்கள் பற்றிப் பேசினோம்:
"ஓவியா'வில் நடிக்கும் அனுபவம் பற்றி?
ஓவியா ஒரு திகில் தொடர். முதன்முறையாக இதுபோன்ற திகில் தொடரில் நடிக்கிறேன். ரொம்ப வித்தியாசமான அனுபவமாக இருக்கிறது. ஒரு இறந்துபோன பெண்ணினுடைய ஆவி என் உடம்பில் புகுந்து அவள் மரணத்திற்குக் காரணமானவர்களைப் பழிவாங்குவது போன்ற பாத்திரம். அதை நான் சிறப்பாகச் செய்வதாக எல்லோரும் சொல்கிறார்கள். எனக்கு என்னவென்றால் என்னைப் பார்த்து எல்லோரும் பயப்படுகிறார்களே என்று கொஞ்சம் வருத்தமாகவும் இருக்கிறது.
பேய்ப் பாத்திரத்தில் நடிக்கப் பயமாக இருக்கிறதா?
நடிப்பதில் பயமாக இல்லை. அதற்கான லோகேஷனுக்குப் போகும் பொழுதும்,அந்த இடங்களைப் பார்க்கும்பொழுதும்தான் பயமாக இருக்கிறது.
சாதாரண கதாபாத்திரத்தில் நடிப்பதற்கும், இதுபோன்ற பேய்க் கதாபாத்திரத்தில் நடிப்பதற்கும் என்ன வித்தியாசம்?
பேய்ப் பாத்திரம் அவ்வப்போது வந்துபோகிற கதாபாத்திரம் என்பதால் அது ரொம்ப சேலஞ்சிங்காக இருக்கிறது. திடீரென்று முறைக்க வேண்டும், சிரிக்க வேண்டும், கோபப்பட வேண்டும். சில நேரங்களில் ஆக்ரோஷமான சீன்ஸ் எல்லாம் எடுத்து முடித்த பிறகும்கூட அந்தக் கோபத்தில் இருந்து மீண்டுவர கொஞ்சம் நேரம் பிடிக்கும். ஒரே சமயத்தில் இரண்டு விதமான உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டும் என்றால் எவ்வளவு சிரமமாக இருக்கும் என்று நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். சாதாரணமாக நடிக்கிறபோது அப்படியெதுவும் இல்லை. ஒரே மனநிலையில் இயல்பாய் நடித்துவிட முடியும்.
வேறு என்ன தொடர்களில் நடிக்கிறீர்கள்?
வேறு எந்தத் தொடரிலும் நடிக்கவில்லை. பெரியதிரை பக்கம் இப்போதைக்குக் கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறேன். டைரக்டர் கரு. பழனியப்பன் இயக்கத்தில் "மந்திரபுன்னகை' என்கிற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறேன். இதைத் தவிர "சிக்குபுக்கு' பட ஹீரோயினுக்கு டப்பிங் பேசுகிறேன்.
நடிப்பு, டப்பிங், தொகுப்பாளினி இதில் எதைத் கடினமானதாக உணர்கிறீர்கள்?
இதில் எதையுமே நான் கடினமாக நினைக்க வில்லை. வேலை மட்டுமல்ல; எதையும் கஷ்டம் என்று நினைத்தால் கஷ்டம். சுலபம் என்று நினைத்தால் சுலபம்.
திருமணம்?
இதுவரை காதல் வரவில்லை. அதனால் அம்மா விருப்பப்படிதான் என் திருமணம் இருக்கும்.
http://www.dinamani.com/edition/stor...44&SEO=&Title=
Quote:
ஒரு தொடர்... ஒன்பது வேடங்கள்!
அரசி'யில் ராதிகாவின் மகளாக வந்து இப்போழுது "இளவரசி'யாகி இருக்கும் சந்தோஷியை நமது ஞாயிறு கொண்டாட்டத்துக்காக சந்தித்தோம். கிச்சனில் படுபிஸியாக இருந்தவர்,சமைத்துக் கொண்டே நம்மோடு உரையாடினார். இதோ கம கம வாசத்துடன்.
இளவரசி என்ன மாதிரியானவள்?
"இளவரசி' தொடர் ஆரம்பமாகி இரண்டு வாரங்கள்தான் ஆகின்றன. இருந்தாலும் மக்கள் கிட்டே இருந்து நல்ல வரவேற்பு இருக்கு. ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. நடுத்தர வர்க்கத்தில் இருக்கும் பெண்களுக்கு ஏற்படும் நிலையை சொல்லும் கதை. இந்தத் தொடரில் நான் மெயின் ரோல் செய்கிறேன். ரொம்ப ஹோம்லியான கேரக்டர்.
அரசியில் ராதிகாவின் மகளாக நடித்த அனுபவம் எப்படி?
ராதிகாவைப் பார்க்கும்போது ஒரு பெண் பத்து வருஷமா ஒரு நிறுவனத்தை இவ்வளவு வெற்றிகரமா நடத்த முடியுமான்னு பிரமிப்பாக இருந்தது. அவ்வளவு துணிச்சலான, திறமையானவங்களோட பக்கத்தில் இருந்தது பார்த்தது ரொம்ப சந்தோஷமா இருந்தது. அவங்க துணிவும், திறமையும் எதையாவது சாதிக்கணும்னு இன்ஸ்பரேஷனா இருந்தது.
வேறு என்ன தொடர்களில் நடிக்கிறீங்க?
காமெடி தொடர் ஒண்ணு சன் டி.வி.யில் புதுசா வரப்போகிறது. தொடர் பேரு "பொண்டாட்டி தேவை', கலைஞர் டிவியில் 12.30 மணிக்கு ஒளிபரப்பாகும்தொடர், பாலிமர் டிவியில் ஒரு பிராஜக்ட் எடுத்திருக்காங்க. அது இனிமேதான் வரப்போகிறது, மறுபடியும் அணுவளவும் பயமில்லை நிகழ்ச்சியில் என் கணவரோட கலந்துக்கப் போறேன்.
அணுவளவும் பயமில்லை நிகழ்ச்சியில் பங்கேற்பதில் உங்களுக்கு தயக்கமில்லையா?
தினமும் காலையில் எழுந்து மேக்கப் போட்டு நடிக்க போறத்துக்கு இந்த நிகழ்ச்சி கொஞ்சம் வித்தியாசமான எக்ஸ்பிரியன்ஸô இருக்கு. இந்த சான்ஸ் எல்லாருக்குமே கிடைக்காது. நான் உண்மையில் என் நிஜவாழ்க்கையில் ரொம்பவே பயந்தவள். திக்திக் தொடர் எல்லாம் பார்க்கக்கூட ரொம்ப பயப்படுவேன்.
அங்கே போய் பாம்பு, தேள் கூட எல்லாம் எடுக்கும்போது ரொம்ப சேலஞ்சிங்கா இருந்தது. மற்றவர்கள் செய்யும் போது நானும் செய்யணும்னுங்கிற எண்ணம் அங்கே போனதும் தன்னாலேயே வந்துவிடுகிறது. அப்படி ஒரு தைரியம் வருவது எனக்குப் பிடித்திருந்தது. நிறைய விஷயத்தில் பயப்பட கூடாது, தைரியமா இருக்கணும்ங்கிற விஷயத்தை எடுத்துச் சொல்வதுபோல இருக்கு இந்த நிகழ்ச்சி.
"அரசி' தொடரில் பைத்தியமா நடிக்கும் போது என்ன நினைத்தீர்கள்?
"அரசி' தொடரை பொறுத்தவரை பத்து சீரியல்ல நான் நடிப்பதை ஒரே சீரியல்ல நடிச்சிருக்கேன். கல்லூரி பொண்ணாக, மனைவியாக, குழந்தை காணாமல் போனதில் பைத்தியம் பிடிக்கும் தாயாக, கொலைகாரியாகன்னு ஒன்பது கேரக்டர் அந்த ஒரு சீரியல்ல கிடைச்சது.
அந்த எல்லா கேரக்டருமே ரொம்ப சேலஞ்சிங்கா இருந்தது. சமுத்திரகனி இயக்கிய தொடர் அது. நான் எட்டு வயதில் இருந்து சீரியலில் நடிச்சுக்கிட்டு இருக்கேன். அப்போதில் இருந்து அவரை பார்த்துக்கிட்டு இருக்கேன். அவர் இருந்ததுனால எனக்கு அவ்வளவு கஷ்டமா தெரியல. எப்படி பட்டவங்களா இருந்தாலும் அவர் வேலை வாங்கிடுவார்.
அந்த மாதிரி பைத்தியமா நடிக்கும் போது ரொம்ப ஈசியா இருந்தது. டப்பிங்க எல்லாம் போனா கத்துற வேலை தான் ஐந்து நிமிடத்தில் ஒரே டேக்ல கத்திட்டு வந்துகிட்டே இருப்பேன்.
என்ன மாதிரி கேரக்டர் செய்ய நினைக்கிறீங்க?
எனக்கு குறும்புத்தனமான கேரக்டர் பண்ண ரொம்ப பிடிக்கும். ரொம்ப அழுது நடிக்கிற மாதிரி கேரக்டர் பிடிக்காது. தமிழ் சீரியலைப் பொருத்தவரை இன்னும் நிறைய வளரணும், மாற்றங்கள் வரணும்னு நினைக்கிறேன். நம் தமிழ்நாட்டு பெண்களை பொறுத்தவரை கிளிசரின் போட்டு அழுறவங்களைத்தான் பிடிக்குது.
அதே மும்பை சீரியல் எல்லாம் பார்த்தா ரொம்ப கலர் ஃபுல்லா இருக்கும். இந்த மாதிரி தமிழ்லயும் வரணும்னு அடிக்கடி நினைப்பேன். அதனாலயே என் காஸ்டியூம், என் மேக்கப் எல்லாத்துக்கும் நிறைய அக்கறை எடுத்துக்குவேன்.
நடிப்பு தவிர இந்த ஃபீல்டில் வேற எந்த துறையில் ஆர்வம் இருக்கு?
புரொடக்ஷன் சைடுல ஆர்வம் இருக்கு. அதுக்காக புரொடியூசரா யோசிக்கல. பேக் ஆப் தி ஸ்கிரின் சொல்லுவாங்கல புரொடக்ஷன் எக்ஸிகியூட்டிவ்வா பண்ணணும்னு ஆசையிருக்கு. ரேவதி மேடம் கிட்ட கூட ஆப்ளிகேஷன் போட்டு வெச்சிருக்கேன், உங்க ஆபிஸ்லேயே எனக்கு ஒரு வேலை வேணும்னு.
ஓய்வு நேரங்களில் என்ன செய்வீர்கள் டிவி பார்ப்பீர்களா?
டிவி பார்ப்பேன். ரியாலிட்டி ஷோ பார்ப்பேன். இண்டெர் நெட்ல உக்கார்ந்துடுவேன். அதைவிட முக்கியமா எந்தக் கடைக்குப் போகலாம், என்ன வாங்கலாம்ன்னுதான் யோசிப்பேன்.
சின்னத்திரை நடிகைகளில் யாருடைய நடிப்பு பேசப்படுகிறது என்று நினைக்கிறீர்கள்?
நிறைய பேர் இருக்கிறார்கள். குறிப்பாக சின்னத்திரையில் தேவிப்ரியாவோட நடிப்பு ரொம்ப நல்லா இருக்கும்னு ஒரு பேர் இருக்கு. என்ன கேரக்டர் கொடுத்தாலும் அந்த கேரக்டராகவே மாறிடுவாங்க.
நன்றி: தினமணி
நம்பியார் செய்யாத வில்லத்தனமா?
திருமதி செல்வம்' தொடரில் வடிவுகரசியின்
மருமகளாக வந்து ரசிகர்களின் மனதில் எரிச்சலை
ஏற்படுத்தும் ராகவியை நேரில் சந்தித்து, "இப்படிப் பழிவாங்குறீங்களே "நியாயமா?' என்றால் கொஞ்சம் நேரம்
சத்தமாகவே சிரித்தார். கல்மிஷம் இல்லாத சில்மிஷ சிரிப்பை ரசித்தபடியே அவரோடு பேசினோம்:
சினிமாத் துறைக்கு வந்தது எப்போது?
ரஜினி நடித்த "ராஜா சின்ன ரோஜா' படத்தில்தான் முதன்முதலில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானேன். அதில் நடித்த நான்கு, ஐந்து பிள்ளைகளில் நானும் ஒருத்தி. அதைத் தொடர்ந்து சில படங்களில் நடித்தேன். அப்பொழுது படித்துக் கொண்டிருந்ததால் தொடர்ந்து நடிக்க முடியவில்லை. இருப்பினும் அவ்வப்போது வாய்ப்பு கிடைக்கும்போது நடித்து வந்தேன்.
அதன் பிறகு முழுமையாகப் படிப்பில் கவனம் செலுத்தி பி.ஏ. முடித்துவிட்டு, மறுபடியும் சினிமாத்துறைக்கு நடிக்க வந்துவிட்டேன். தற்பொழுது சின்னத்திரையில் திருமதி செல்வம் தொடரிலும், மகாலஷ்மி தொடரிலும் நடித்துவருகிறேன்.
"திருமதி செல்வம்' தொடரில் நடிக்கும் அனுபவம் எப்படியிருக்கிறது?
ரொம்ப நல்ல அனுபவம். ரெண்டு வருஷத்துக்கு மேலாக இந்தத் தொடரில் நடித்துக்கொண்டு இருக்கிறேன். ஹோம்லியான கதை. படப்பிடிப்பின் நடுவே அத்தை, மாமா, அண்ணன், அண்ணி, தங்கச்சி என்று ஒரு குடும்பமா வாழ்ந்துகிட்டு இருக்கோம். அதில் கொஞ்சம் வில்லத்தனமான பாத்திரத்தில் நடிக்கிறேன்.
வில்லத்தனமான கதாபாத்திரத்தை விரும்பித்தான் ஒப்புக்கொண்டீர்களா?
இல்லவே இல்லை. இந்தக் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்புக்கொண்டாலும் ஆரம்பத்தில் மிகவும் வருத்தமாகவும் சிரமமாகவும் இருந்தது. என்னை இப்படி நெகடீவ் கதாபாத்திரமாக மாற்றுகிறீர்களே என்று புலம்பிக்கிட்டே இருப்பேன். அப்போதெல்லாம் இயக்குநர் "உங்கள் கதாபாத்திரத்தின் பலத்தைப் போகப்போகப் புரிந்துகொள்வீர்கள்' என்று சொல்வார். அவர் சொல்லியபடி ரசிகர்களிடம் கிடைத்த வரவேற்புக்குப் பிறகுதான் எனக்குப் புரிந்தது. இப்போது விரும்பி நடித்து வருகிறேன்.
ரசிகைகளிடம் திட்டு வாங்கிய அனுபவம் இருக்கிறதா?
திட்டு இல்லை. ஓர் அம்மா என் கழுத்தை நெரித்தே இருக்கிறார். பக்கத்தில் இருந்தவர்கள் எல்லாம் ஓடிவந்து அந்த அம்மாவை விலக்கிவிட்டு, அது நடிப்புங்க, நிஜமில்லை என்று சொன்ன பிறகே விட்டார். இந்தச் சம்பவத்திற்குப் பிறகு வெளியில் போக வேண்டும் என்றாலே கொஞ்சம் பயமாக இருக்கிறது.
ரசிகர்கள் இந்த மாதிரி நடந்து கொள்ளும்பொழுது உங்கள் மனநிலை எப்படியிருக்கும்?
ஆரம்பத்தில் அழுதே இருக்கிறேன். நடிப்பு என்று தெரிந்து இப்படி நடந்து கொள்கிறார்களே என்று வருத்தமாக இருக்கும். இப்போது கதையோடு எப்படி ஒன்றிப் போயிருக்கிறார்கள் என்று நினைத்துச் சந்தோஷப்படுகிறேன். அவர்கள் திட்டுவதில்தான் என் வெற்றி இருக்கிறது என்றும் புரிகிறது. அதேசமயம் அந்தக் காலத்தில் நம்பியார் செய்யாத வில்லத்தனத்தை நான் என்ன செய்துவிட்டேன் என்றும் நினைக்கத் தோன்றுகிறது.
குடும்பம்?
கணவர் சசிகுமார் சினிமாத் துறையில் தான் கேமிராமேனாக இருக்கிறார். "தொட்டுப்பார்' படம் முடித்துவிட்டு வேறு ஒரு படத்தில்
பணியாற்றி வருகிறார். எங்களுக்கு ஜிரித்தி சாய் என்கிற பெண்குழந்தை உள்ளது.
http://www.dinamani.com/edition/stor...44&SEO=&Title=[/quote]
3 மணி நேரமா? வருடமா?
" உல்லாசம்' மகேஸ்வரி ஜெயா டிவியில் ஒளிபரப்பாகி வரும் "சௌந்தரவள்ளி' தொடரில் உற்சாகமாக நடித்துக்கொண்டிருக்கிறார். எதையும் தட்டிக் கேட்கும் கதாபாத்திரத்தில் நடிக்கும் அவரோடு சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தோம்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிக்க வந்த அனுபவம் எப்படி இருக்கிறது?
நல்ல கதையாக இருந்தால் சின்னத்திரை பக்கம் வரலாம் என்று நினைத்துக் கொண்டிருந்ததேன். அப்பொழுது "சௌந்தரவள்ளி' தொடரைப் பற்றி சொன்னார்கள்.
அதன் கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதனால் ஒத்துக்கொண்டேன். இடையில் தெலுங்கு தொடர்களில் நடிக்க வாய்ப்பு வர அதில் கவனம் செலுத்திக்கொண்டு இருந்தேன். அதனால் என்னைப் பொறுத்தவரை இடைவெளி எதுவும் இல்லாமல்தான் நடித்துக் கொண்டிருக்கிறேன். தமிழில் அதிகம் நடிக்காததால் இடைவெளி ஏற்பட்டிருப்பதுபோல உங்களுக்குத் தோன்றலாம்.
சினிமாவிலேயே தொடராமல் சின்னத்திரை பக்கம் வந்தது ஏன்?
சின்னத்திரையில் வருவதும் நல்ல விஷயம் தானே. ஏன் சின்னத்திரையைத் தேர்தெடுத்தேன் என்பதற்கு சிறப்புக் காரணம் எதுவுமில்லை. ஏற்கனவே விஜய் டிவியில் தொடர்கள் எல்லாம் நடித்துக் கொண்டுதான் இருந்தேன். பெரியதிரையில் ஒரு படம் நடித்தால் மூன்று மணி நேரம் தான் ஆடியன்ஸ் மனதில் நிற்போம். ஆனால் சின்னத்திரையில் ஒரு தொடரில் நடித்தால் இரண்டரை வருடம், மூன்று வருடம் என்று ரசிகர்களின் மனதில் நிலைத்து நிற்க முடியும்.
தெலுங்கில் வேறு தொடர்கள் நடிக்
கிறீர்களா?
தெலுங்கில் "மை நேம் இஸ் மதர்தெராஸô' என ஒரு தொடரில் நடித்துக் கொண்டிருந்தேன். அது முடிந்து விட்டது. அந்தத் தொடரை தமிழில் எடுக்கப் போவதாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் முடிவாகவில்லை.
பெரிய திரையில் வாய்ப்பு வந்தால் நடிப்பீர்களா?
சின்னத்திரையே முழு திருப்தியாக இருப்பதனால், இப்போதைக்குப் பெரியதிரை பக்கம் போகிற எண்ணம் இல்லை.
நெகட்டீவ் கதாபாத்திரம் எல்லாம் செய்கிற எண்ணம் உண்டா? எந்த மாதிரியான கதைகள் தேர்வு செய்கிறீர்கள்?
கதை கேட்கும் பொழுது பிடித்திருந்தால் செய்கிறேன். மற்றபடி இந்த மாதிரியான பாத்திரம் என்றெல்லாம் தேடி நடிப்பதில்லை.
நடிப்பைத் தவிர இயக்கம், புரொடக்ஷன் என வேறு துறைகளில் ஆர்வம் இருக்கிறதா?
என் கணவர் ஜெயகிருஷ்ணா சாப்ட்வேர் கம்பெனி வைத்திருக்கிறார். எனவே ஆபிஸ், குடும்பம், நடிப்பு என இதற்கே நேரம் சரியாக இருக்கிறது. அதனால் வேறு துறை பக்கம் கவனம் செலுத்துகிற எண்ணம் எல்லாம் இப்போதைக்கு இல்லை.
http://www.dinamani.com/edition/stor...44&SEO=&Title=
என் வீட்டு டிவியைக் கேட்டுப் பார்!
ஸ்ரீதேவிகுமரேசன்.
First Published : 05 Sep 2010 02:35:00 PM IST
Last Updated :
ஜா', "வானமே எல்லை', "ஜென்டில்மேன்' போன்ற வெற்றிப் படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் மதுபாலா.
தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு
ஜெயா டிவியில் "செüந்தரவல்லி' தொடரின் மூலம் சின்னதிரைக்கு வந்திருக்கிறார்.
அவரோடு பேசினோம். எல்லாக்
கேள்விகளையும் நிதானமாக எதிர்கொண்டு,
இனிமையாகப் பேசினார்:
நீண்ட இடைவெளிக்குப் பிறகு சின்ன
திரையில் நடிக்கும் அனுபவம் எப்படி இருக்
கிறது?
சிறிது இடைவெளிக்குப் பிறகு வந்தாலும் நடிப்பு என்பது ஒன்றுதானே. சின்னதிரைக்கும் பெரியதிரைக்கும் திரைதான் வெவ்வேறே தவிர மற்றபடி எல்லாமே ஒன்றுதான். நீண்ட நாளைக்குப் பிறகு மேக்-அப் போட்டபோது மிகவும் சந்தோஷமாக இருந்தது. இழந்த ஒன்றைப் பெற்றது போன்று இருந்தது.
"சௌந்தரவல்லி'யில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்கிறீர்களே?
சௌந்தரவல்லி தொடரில் எனக்குத் தாசி கதாபாத்திரம். சுதாசந்திரன், மகேஸ்வரி எல்லாம் அக்ரஹாரத்துப் பெண்களாக நடிக்கிறார்கள். ஒரு கிராமத்தோட சரித்திரம் இந்தக் கதையில் இருக்கிறது. பருவ வயதில் ஊரைவிட்டுப் போன ஒரு பெண். நீண்ட காலத்துக்குப் பிறகு திரும்பவும் ஊருக்குள் வந்து பழிவாங்கத் துடிக்கிறாள். நியாயத்துக்காகப் போராடுகிறாள். ஐயர் குடும்பத்துப் பெண்களை எதிர்த்துப் போராடும் தாசி பெண்தான் சௌந்தரவல்லி.
இந்தித் தொடர்களில் நடிக்காமல் தமிழில் நடிக்க வந்தது ஏன்?
மும்பையிலேயே ஏதாவது இந்தி தொடர்கள் நடிக்கலாம் என்று யோசித்து கொண்டிருந்த போது தான் பிரபுநேபால் இந்தக் கதைகயைப் பற்றி சொன்னார். அங்கிருந்து சென்னை வந்து நடித்துவிட்டுப் போக வேண்டும் என்றால், சரியா வருமா என்று நினைத்து முதலில் வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். ஆனால் பிரபு நேபால் என்னை வந்து சந்தித்து, இந்தக் கதாபாத்திரத்தைப் பற்றி விரிவாகச் சொன்னார்.
என்னை அந்தக் கதாபாத்திரமாகவே கம்ப்யூட்டரில் சித்தரித்துக் காண்பித்தார். அதைப் பார்த்தபொழுது வித்தியாசமாக இருந்தது. அவருடைய ஆர்வத்தைப் பார்த்தபொழுது கண்டிப்பாக என் கதாபாத்திரம் பேசும் படியாக இருக்கும் என்று தோன்றியது. அதில் ஏற்பட்ட ஆசையினால்தான் இந்தி தொடர்களில் நடிக்க நேரம் இல்லை என்று சொல்லிக்கொண்டிருந்த நான், இந்தக் கதை மேல் உள்ள ஆர்வத்தினால் இப்பொழுது சென்னைக்கு வந்து நடித்துவிட்டு போகிறேன்.
இந்திப் படங்களில் நடிக்கிறீர்களா?
இரண்டு படங்கள் நடித்துக் கொண்டிருக்கிறேன். "டெல் மீ யுகுதா' என்ற ஹேமாமாலினியோட படத்தில் அவர்களுடைய இயக்கத்தில் ஒரு சின்ன கெஸ்ட் ரோலில் நடிக்கிறேன். அதுதான் மறுபடியும் எனக்கு இன்டஸ்ட்ரியில் ரீ என்டரி கொடுத்த படம்.
அதையடுத்து ராஜஸ்ரீ புரொடக்ஷனில் "லவ் யூ மிஸ்டர் காலாகான்' என்ற படத்திலும் ஒரு அருமையான கதாபாத்திரம் செய்து வருகிறேன்.
தமிழில் பெரிய திரையில் நடிக்கும் எண்ணம் உண்டா?
பிரச்னை இல்லாமல் எனக்குப் பொருந்துவது போல் கதாபாத்திரம் அமைந்தால் கண்டிப்பாக நடிப்பேன்.
நீங்கள் நடிக்கும் தொடரைப் பார்க்க நேரம் கிடைக்
கிறதா?
என் வீட்டு டிவியைக் கேட்டுப் பாருங்கள் "செüந்தரவல்லி... செüந்தரவல்லி' என்றுதான் சொல்லும். ஆனால் இதில் ஒரு விஷயம் தொடர் ஒளிபரப்பாகும் 8.30 மணிக்கு என்னால் பார்க்க முடிவதில்லை. அந்த நேரம் பிள்ளைகள் படிக்கும் நேரம். அதனால் அந்தத் தொடரை ரிக்கார்ட் செய்து வைத்துகொண்டு பிறகுதான் பார்க்கிறேன். பிரபுநேபால் குழுவினரின் தயாரிப்பு முறை, வழங்கும் தன்மை எல்லாம் பிடித்திருக்கிறது. அதனாலேயே அவசியம் பார்த்துவிடுகிறேன்.
உங்கள் குடும்பம்?
குஜராத்தி குடும்பம். கணவர் பிஸினஸ் செய்துகிட்டு இருக்கிறார். இரண்டு பெண் குழந்தைகள். பெரியவளுக்குப் பத்து வயது. அவள் பெயர் அமியா. சிறியவளுக்கு எட்டு வயது. அவள் பெயர் கெயா. மாமனார், மாமியார் எல்லாம் சேர்ந்து கூட்டுக் குடும்பமாக வாழ்கிறோம்.
http://dinamani.com/edition/story.as...44&SEO=&Title=
என் வீட்டு டிவியைக் கேட்டுப் பார்!
ஜா', "வானமே எல்லை', "ஜென்டில்மேன்' போன்ற வெற்றிப் படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் மதுபாலா.
தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு
ஜெயா டிவியில் "செüந்தரவல்லி' தொடரின் மூலம் சின்னதிரைக்கு வந்திருக்கிறார்.
அவரோடு பேசினோம். எல்லாக்
கேள்விகளையும் நிதானமாக எதிர்கொண்டு,
இனிமையாகப் பேசினார்:
நீண்ட இடைவெளிக்குப் பிறகு சின்ன
திரையில் நடிக்கும் அனுபவம் எப்படி இருக்
கிறது?
சிறிது இடைவெளிக்குப் பிறகு வந்தாலும் நடிப்பு என்பது ஒன்றுதானே. சின்னதிரைக்கும் பெரியதிரைக்கும் திரைதான் வெவ்வேறே தவிர மற்றபடி எல்லாமே ஒன்றுதான். நீண்ட நாளைக்குப் பிறகு மேக்-அப் போட்டபோது மிகவும் சந்தோஷமாக இருந்தது. இழந்த ஒன்றைப் பெற்றது போன்று இருந்தது.
"சௌந்தரவல்லி'யில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்கிறீர்களே?
சௌந்தரவல்லி தொடரில் எனக்குத் தாசி கதாபாத்திரம். சுதாசந்திரன், மகேஸ்வரி எல்லாம் அக்ரஹாரத்துப் பெண்களாக நடிக்கிறார்கள். ஒரு கிராமத்தோட சரித்திரம் இந்தக் கதையில் இருக்கிறது. பருவ வயதில் ஊரைவிட்டுப் போன ஒரு பெண். நீண்ட காலத்துக்குப் பிறகு திரும்பவும் ஊருக்குள் வந்து பழிவாங்கத் துடிக்கிறாள். நியாயத்துக்காகப் போராடுகிறாள். ஐயர் குடும்பத்துப் பெண்களை எதிர்த்துப் போராடும் தாசி பெண்தான் சௌந்தரவல்லி.
இந்தித் தொடர்களில் நடிக்காமல் தமிழில் நடிக்க வந்தது ஏன்?
மும்பையிலேயே ஏதாவது இந்தி தொடர்கள் நடிக்கலாம் என்று யோசித்து கொண்டிருந்த போது தான் பிரபுநேபால் இந்தக் கதைகயைப் பற்றி சொன்னார். அங்கிருந்து சென்னை வந்து நடித்துவிட்டுப் போக வேண்டும் என்றால், சரியா வருமா என்று நினைத்து முதலில் வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். ஆனால் பிரபு நேபால் என்னை வந்து சந்தித்து, இந்தக் கதாபாத்திரத்தைப் பற்றி விரிவாகச் சொன்னார்.
என்னை அந்தக் கதாபாத்திரமாகவே கம்ப்யூட்டரில் சித்தரித்துக் காண்பித்தார். அதைப் பார்த்தபொழுது வித்தியாசமாக இருந்தது. அவருடைய ஆர்வத்தைப் பார்த்தபொழுது கண்டிப்பாக என் கதாபாத்திரம் பேசும் படியாக இருக்கும் என்று தோன்றியது. அதில் ஏற்பட்ட ஆசையினால்தான் இந்தி தொடர்களில் நடிக்க நேரம் இல்லை என்று சொல்லிக்கொண்டிருந்த நான், இந்தக் கதை மேல் உள்ள ஆர்வத்தினால் இப்பொழுது சென்னைக்கு வந்து நடித்துவிட்டு போகிறேன்.
இந்திப் படங்களில் நடிக்கிறீர்களா?
இரண்டு படங்கள் நடித்துக் கொண்டிருக்கிறேன். "டெல் மீ யுகுதா' என்ற ஹேமாமாலினியோட படத்தில் அவர்களுடைய இயக்கத்தில் ஒரு சின்ன கெஸ்ட் ரோலில் நடிக்கிறேன். அதுதான் மறுபடியும் எனக்கு இன்டஸ்ட்ரியில் ரீ என்டரி கொடுத்த படம்.
அதையடுத்து ராஜஸ்ரீ புரொடக்ஷனில் "லவ் யூ மிஸ்டர் காலாகான்' என்ற படத்திலும் ஒரு அருமையான கதாபாத்திரம் செய்து வருகிறேன்.
தமிழில் பெரிய திரையில் நடிக்கும் எண்ணம் உண்டா?
பிரச்னை இல்லாமல் எனக்குப் பொருந்துவது போல் கதாபாத்திரம் அமைந்தால் கண்டிப்பாக நடிப்பேன்.
நீங்கள் நடிக்கும் தொடரைப் பார்க்க நேரம் கிடைக்
கிறதா?
என் வீட்டு டிவியைக் கேட்டுப் பாருங்கள் "செüந்தரவல்லி... செüந்தரவல்லி' என்றுதான் சொல்லும். ஆனால் இதில் ஒரு விஷயம் தொடர் ஒளிபரப்பாகும் 8.30 மணிக்கு என்னால் பார்க்க முடிவதில்லை. அந்த நேரம் பிள்ளைகள் படிக்கும் நேரம். அதனால் அந்தத் தொடரை ரிக்கார்ட் செய்து வைத்துகொண்டு பிறகுதான் பார்க்கிறேன். பிரபுநேபால் குழுவினரின் தயாரிப்பு முறை, வழங்கும் தன்மை எல்லாம் பிடித்திருக்கிறது. அதனாலேயே அவசியம் பார்த்துவிடுகிறேன்.
உங்கள் குடும்பம்?
குஜராத்தி குடும்பம். கணவர் பிஸினஸ் செய்துகிட்டு இருக்கிறார். இரண்டு பெண் குழந்தைகள். பெரியவளுக்குப் பத்து வயது. அவள் பெயர் அமியா. சிறியவளுக்கு எட்டு வயது. அவள் பெயர் கெயா. மாமனார், மாமியார் எல்லாம் சேர்ந்து கூட்டுக் குடும்பமாக வாழ்கிறோம்.
http://dinamani.com/edition/story.as...44&SEO=&Title=
ஞாயிறு கொண்டாட்டம்
யாரும் தப்பாகப் பார்க்கவில்லை!
-ஸ்ரீதேவிகுமரேசன், படம் : குணா
First Published : 12 Sep 2010 02:14:00 PM IST
Last Updated :
சன் டிவியில் இரவுவேளையில் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் இரண்டு தொடர்களிலும் பெரும்பாலான ரசிகர்களின் பரிதாபத்தைச் சம்பாதித்து வருபவர் காவ்யா. "திருமதி செல்வ'த்தில் ப்ரியாவாகவும், "செல்லமே' தொடரில் அஞ்சலியாகவும் வந்து எல்லோர் மனதிலும் இடம் பிடித்துவரும் அவரைச் சந்தித்துப் பேசினோம்:
* "செல்லமே' தொடரின் அனுபவம் பற்றி சொல்லுங்களேன்?
"செல்லமே' தொடரில் நடிப்பது ஒரு நல்ல அனுபவத்தைத் தருகிறது. ராதிகா மேடத்தோடு நடிப்பது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. அவர்களிடமிருந்து நிறைய விஷயங்களைக் கற்றுக்கொள்கிறேன்.
எப்போது நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் வந்தது?
அடிப்படையில் நான் ஒரு பாடகி. கூடவே மேடையில் சில நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கிக் கொண்டிருந்தேன். அப்போதுதான் ஜெயா டிவியில் "ஸ்டார்ஸ் கப்புள்' என்கிற நிகழ்ச்சியை வழங்குவதற்கு வாய்ப்பு கிடைத்தது. அதன் மூலமாகத்தான் தொடரில் நடிக்க வந்தேன்.
* சினிமாவில் பாடியிருக்கிறீர்களா?
இல்லை. அதற்குச் சந்தர்ப்பம் இதுவரை கிட்டவில்லை. மேடை கச்சேரிகள், சில விழா நிகழ்ச்சிகளில், திருமண வைபவங்களில் பாடிவருகிறேன். பாட்டு என்றால் எனக்கு உயிர். ஏதாவது ஒரு பாட்டை முணுமுணுத்துக் கொண்டே இருப்பேன்.
* "செல்லமே', "திருமதி செல்வம்' இரண்டிலுமே உங்கள் பெண்மையைப் பறிப்பது போன்ற கதாபாத்திரம் அமைந்திருக்கிறது. இதில் நடிக்க எப்படி ஒப்புக்கொண்டீர்கள்?
இதுபோன்ற அழுத்தமுள்ள கதாபாத்திரத்துக்குத்தான் எப்போதுமே வலிமை அதிகம். எனக்கு அமைந்தது ஒரு சவாலான ரோல் என்றுகூட சொல்லலாம். வழக்கமான கதாபாத்திரமாக அமையாமல் வித்தியாசமாக அமைந்தது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. முதலில் கொஞ்சம் தயக்கமாகத்தான் இருந்தது. இருந்தாலும் என் கதாபாத்திரத்தைப் பற்றி எல்லோரும் எடுத்துச் சொன்ன பிறகு நடிக்க முடிவெடுத்தேன். ரசிகர்களின் பரிதாபத்தைப் பெறுவதுதான் ஒரு நல்ல நடிகருக்குக் கிடைக்கும் மிகப்பெரிய வெற்றி.
* "திருமதி செல்வம்' தொடரில் ப்ரியாவாக நடிக்கும் அனுபவம்?
கடந்த ஒரு மாதமாகத்தான் இந்தத் தொடரில் என் கேரக்டர் ஆரம்பித்திருக்கிறது. ஆரம்பத்திலிருந்தே என் கதாபாத்திரம் ரொம்ப அழுத்தமாக அமைந்திருக்கிறது. காதலனை நம்பி ஏமாந்து போய்விடும் ஒரு பெண்ணின் மனநிலை, அவள் சந்திக்கும் பிரச்னை, அதனால் அவளுக்கு ஏற்படும் பாதிப்பு இதை வெளிப்படுத்தக்கூடிய ரோல். இதற்கு முன்பே கே. பி. ஸôரின் "சொல்லத்தான் நினைக்கிறேன்' என்ற தொடரிலும் இது போன்று நடித்திருக்கிú றன்.
அது "கல்கி' படத்தைப் பின்னணியாகக் கொண்ட கதை. ஒரு பெண்ணுக்கு நல்லது செய்வதற்காக, ஒரு பையனைக் கல்யாணம் செய்துகொண்டு அவனைத் திருத்திக் கொண்டு போய் அவளிடம் ஒப்படைப்பது போன்ற கதை. இதில் நடித்ததால் இப்போது நடிப்பதில் எனக்கு அவ்வளவாகக் கஷ்டம் தெரியவில்லை.
* ரசிகர்கள் உங்கள் நடிப்பைப் பற்றி என்ன சொல்கிறார்கள்?
ஷாப்பிங் போகும்போது, மேடைக் கச்சேரிகளில் பாடுவதற்காகச் செல்லும் இடங்களில் எல்லாம் ரசிகர்கள் ஆர்வத்தோடு வந்து சூழ்ந்துகொண்டு பேசுகிறார்கள். "நீங்க ரொம்ப நல்லா நடிக்கிறீங்க. உங்களைப் பார்க்கும் பொழுது ரொம்ப பரிதாபமாக இருக்கிறது. உங்களுக்கு ஏன் இந்த மாதிரி கஷ்டங்கள் வருகிறது' என்று சொல்வார்கள். உங்களை ஏமாற்றியவர்களைச் சும்மாவிடக்கூடாது, கண்டிப்பாக நீங்கள் பழிவாங்க வேண்டும் என்று சொல்கிறார்கள். யாரும் என் கதாபாத்திரத்திரத்தைப் தப்பாக பார்க்கவில்லை.
* சினிமாவில் நடிக்க ஆர்வம் உண்டா?
இப்போதைக்குச் சினிமா பக்கம் போகிற எண்ணம் இல்லை. தொடர்களிலேயே நிறைய நல்ல வித்தியாசமான, சேலஞ்சிங்கான பாத்திரங்களில் நடித்துச் சாதிக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.
Quote:
Anuradha
You now play character roles on the small screen. Why weren't you able to do this on the big screen?
I played the heroine in 35 films, the majority of which did not do well at the box office. So I began to dance, and it clicked. I have done nearly 700 films in all the South Indian languages and Hindi. I have acted in a Telugu serial; now I am appearing in “Thangam”, a serial on Sun TV.
Don't you think every film in those days had a song sequence pictured on an ‘item girl'?
It was a must in every film in those days. But today, the heroines don't mind wearing glamorous outfits and doing item numbers. On the whole, the number of solo dances has come down these days.
Why did you make your daughter dance in films and not allow her to play good roles?
She is doing a variety of roles, besides dance. In the recent film, Quarter Katting, she plays the role of a police officer. She has also won the ‘Nandi' Award for her comedy role in a Telugu film. She has acted as a heroine, vamp and comedian and danced in some.
Can you name five best films of your career?
Mohana Punnagai, Nermai, Puthuyugam and Simmasoppanam in Tamil and Repati Pourulu in Telugu.
Even today, Jothilakshmi dances in films, why not you?
She maintains her figure and is able to dance. But I am happy playing character roles on the small and big screens. I am waiting for a good big screen break.
[html:e557ff72cf]<div align="center">http://www.hindu.com/cp/2010/09/19/i...1950331601.jpg </div>[/html:e557ff72cf]
நன்றி: Hindu
Quote:
Thirumbi Paarkiraen
(Jaya TV, Monday – Friday, 10 p.m.)
The show that features the experiences of senior actors and technicians of Tamil cinema will have ‘Kaka' Radhakrishnan talking about his past, for a week beginning September 20.
Even after 1,000 films Radhakrishnan continues to work! His thoughts about his 60 years in cinema should be a treat.
Arukaani 2 Azhagurani (Jaya TV, Sunday, 12 noon)
The curtain comes down on this talent hunt this weekend.
The nine girls who have reached the finals will compete for the title ‘Arukaani 2 Azhagurani.' Many prizes await the winner and the top team.
<h>
Kanavu Meippada Vendum-(Makkal TV, Sunday, 10.30 a.m.)
The team visited Puducherry where young contestants gave their opinion on how they would handle things if they were a minister.
Manmanam-(Makkal TV, Sundays, 2 p.m.)
The programme documents the lifestyle, culture and festivals of those residing in various parts of the State.
Different sports and competitions, based on the beliefs of a particular sect, are highlighted.
Bommai - BommaiMakkal TV, Saturdays, 7 p.m.
The show serves as a platform for creative minds to showcase their talent in arts and crafts. The programme gets a facelift as the forthcoming episodes will feature many new talents. In this week's episode, a young girl will explain how various objects are created and how they can be used.<h>
Tamizhagathin Champions -(Polimer TV, Sundays, 8 p.m.)
Watch some amazing acts on this show. Jaiganesh performs yoga while putting on his clothes; Anand, with his eyes covered, lifts a person with his teeth and Parthasarathy cuts vegetables with his eyes covered.
Bhajans -(Sri Sankara TV, Mon-Sun, 5 a.m.)
For the religious minded, begin the day with a spiritual touch. Listen to devotional songs rendered by eminent scholars.
For those who miss the programme, watch the repeat telecast on Friday and Saturday, 1 p.m.<h>
Sangeeta Mahayuddham - (Sun TV, Sunday, 9.30 p.m.)
It's a crucial week as the top two contenders for the finals will be chosen. Usha Uthup joins the team.
On Sunday Chennai Singangal take on Tiruchi Thimingalangal.
நன்றி: Hindu
Quote:
ராதிகாவோடு சண்டை போடுவேன்: கன்யா
-
"செல்லமே' தொடரில் எப்பொழுதும் மது பாட்டிலும் கையுமாகத் திரியும் (மதுமிதா)கன்யாவைப் படப்பிடிப்பில் சந்தித்தோம். அவர் மீது மது வாடை வீசுமே என்கிற தயக்கத்துடனே பக்கத்தில் அமர்ந்து பேசினோம். வாசனைத் திரவியம் மணக்க எவ்வித ஆக்ரோஷமும் இல்லாமல் அமைதியாகப் பேசினார்:
சினிமாத்துறைக்கு எப்படி வந்தீர்கள்?
முதன் முதலில் டெலி ஃபிலிம் மூலமாக தான் என் வாழ்கையை ஆரம்பித்தேன். டெலி ஃபிலிம் நடிக்கும்போது, "நங்கூரம்' என்ற மலையாளப் படத்தில் கதாநாயகியாக நடிக்க வாய்ப்புக் கிடைத்தது. அதன் பிறகு நிறைய படங்களில் கேரக்டர் ரோலில் நடித்திருக்கிறேன். அப்போது நிம்பஸ் டெலிவிஷன் மூலம் தொடரில் நடிக்கும் வாய்ப்பு வந்தது. தமிழில் "நீதி' என்ற தொடரில் ஷோபனா மேடம் நடித்திருந்த கதாபாத்திரத்திற்கு மலையாளத்தில் நான் நடித்தேன். அதன் பிறகு சன் டிவியில் "நீலவானம்' என்ற தமிழ்த் தொடரில் நடிக்கக் கூப்பிட்டார்கள். அது எனக்கு ஒரு பெரிய பிரேக் கொடுத்தது. அதன் பிறகு "காவ்யாஞ்சலி' தொடரில் நடித்தேன். ஒரு பெண்ணுக்கு எவ்வளவு பொறுமை இருக்குமோ அவ்வளவு அமைதியான பெண்ணாக அஞ்சலி என்ற கேரக்டர் செய்திருந்தேன். பேரும், புகழும் வாங்கி கொடுத்த கேரக்டர் அது. அதன் பிறகு இப்பொழுது "செல்லமே' தொடரில் நடித்துக் கொண்டிருக்கிறேன்.
"செல்லமே' தொடரில் மதுமிதா கேரக்டருக்கு உங்களை எப்படித் தேர்வு செய்தார்கள்?
அந்த கேரக்டருக்கு நான் பொருத்தமாக இருப்பேன். என்னால் செய்ய முடியும் என்ற நம்பிக்கை அவர்களுக்கு இருந்ததினால்தானே என்னைக் கூப்பிட்டிருப்பார்கள்? அந்த நம்பிக்கையைப் பூர்த்தி செய்ய வேண்டும் என்று நினைத்தேன். முதலில் கதையைக் கேட்கும் பொழுது தயக்கமாக இருந்தது. ஒரு குடும்பப் பெண் இப்படி இருப்பாளா இந்த மாதிரி நடித்தால் நம்மையும் இப்படி தான் நினைப்பார்களோ என்று நினைத்தேன். என் கணவரிடம் கேட்டேன். அவர் உனக்கு விருப்பமிருந்தால் செய் என்று சொன்னார். அதன் பிறகு தான் ஒத்துக்கொண்டேன்.
உங்களுடைய உடை, அலங்காரம் எல்லாம் ரொம்ப வித்தியாசமாக இருக்கே?
எல்லோரையும் டாமினேட் செய்யும் கேரக்டர். சாதாரணமாக இருந்தால் பொருத்தமாக இருக்காது. மற்றவர்களைக் காட்டிலும் வித்தியாசமாக இருக்க வேண்டும் என்று தோன்றியது. அதனால் நானேதான் என் காஸ்ட்யூமை டிசைன் செய்துகொண்டு போய் நின்றேன். ராதிகா மேடம், டைரக்டர் எல்லோருமே பார்த்துவிட்டு இந்த கேரக்டருக்குப் பொருத்தமாக இருக்கும் இப்படியே செய்திடுங்கள் என்று சொல்லிவிட்டார்கள். அதே மாதிரி ஸ்கிரீனில் பார்க்கும்போது ரொம்ப பொருத்தமாக இருந்தது. என்னைப் பார்க்கிற நிறையபேர் என்னிடம் உடைகளைப் பற்றித்தான் முதலில் விசாரிக்கிறார்கள்.
தொடரில் கணவரையும், பிள்ளைகளையும் எப்போதும் திட்டிக் கொண்டே இருக்கிறீர்களே உங்களுக்குக் கஷ்டமாக இல்லையா?
எனக்குக் கணவராக அபிஷேக் ஸôர் ரொம்ப பொறுமையான கேரக்டரில் நடிக்கிறார். ரொம்ப நல்ல நடிகர் அவர். அப்படி அவர் திட்டு வாங்குவதனாலதானே அவருடைய கேரக்டரும் என்னுடைய கேரக்டரும் பேசப்படுகிறது. அதேபோல தான் அதில் என் பிள்ளைகளுக்கும் பெயரும் புகழும் கிடைக்கிறது.
உங்கள் நடிப்பைப் பார்த்துவிட்டு வீட்டில் என்ன சொல்கிறார்கள்?
வீட்டில் உள்ள எல்லோருக்கும் என்னைப் பற்றி நன்றாகத் தெரியும். என் கணவர் கவிதாபாரதியும் சரி, என் அம்மாவும் சரி நான் ஏதாவது சரியாகச் செய்யவில்லை என்றால் உடனே சொல்லிவிடுவார்கள். அதுவே நன்றாக நடித்திருந்தால் எதுவுமே சொல்ல மாட்டார்கள். அதைக் கொண்டே நான் என்று நன்றாக நடித்திருக்கிறேன் என்று தெரிந்துகொள்வேன்
வேறென்ன தொடரில் நடிக்கிறீங்க?
இப்பொழுது விஜய் டிவியில் ஆரம்பமாகி இருக்கிற மீரா தொடரில், என் கணவர் கவிதா பாரதி இயக்கத்தில் நடிக்கிறேன். இதிலும் ஒரு மாதிரி நெகட்டீவ்வான கேரக்டர்தான். அமைதியான குடும்பப் பெண்ணாக இருந்து கொண்டு உள்ளுக்குள் குத்திவிடுவது போன்ற கேரக்டர்.
செல்லம்மாவுடன் சண்டை போடும்போது உங்கள் மனநிலை எப்படியிருக்கும்?
ராதிகா மேடம் ரொம்ப சீனியர் ஆர்ட்டிஸ்ட். இந்தத் தொடரைப் பொருத்தவரை எங்களுக்கு முதலாளியாக இருந்தாலும் நடிப்பு என்று வரும்போது அவுங்க செல்லம்மா என்ற கேரக்டர்... நான் மதுமிதா என்ற கேரக்டர் அவ்வளவுதான். இயக்குநர் சொல்கிறபடி ராதிகாவோடு தொடர்ந்து சண்டை போடுவோம்.
[html:e00affc93d]<div align="center">http://www.dinamani.com/Images/artic...9/19konda1.jpg</div>[/html:e00affc93d]
நன்றி: தினமணி
சன் டிவியில் இரவு ஒன்பது மணிக்கு ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் தொடர் "தென்றல்'. இத்தொடரில் தமிழரசு குடும்பத்தின் மூத்த மருமகளாக வந்து ரசிகர்களின் சாபத்தை வாங்கி கட்டி கொள்ளும் சுதாவை சந்தித்தோம். பெங்களூருவைச் சேர்ந்த அவரின் நிஜப்பெயர் பவ்ய கலா. கன்னடம், தெலுங்கு, தமிழ் என்று மூன்று மொழியிலும் படுபிசியாக இருக்கும் அவருடன் உரையாடினோம்.
"தென்றல்' தொடரில் நடிக்கும் அனுபவம் பற்றி சொல்லுங்களேன்?
"தென்றல்' தொடரில் எனக்கு முழு வில்லத்தனமான கதாபாத்திரம் இல்லை என்றாலும் கொஞ்சம் நெகடிவ்வான ரோல்தான், பொதுவாக ஒவ்வொரு வீட்டிலும் நடக்கும் மாமியார், மருமகள் சண்டை, ஈகோ, பிரச்னைதான் தென்றல் தொடரிலும் நடக்கிறது. அந்த வீட்டுக்கு மூத்த மருமகள் நான். புதிதாக வரவிருக்கும் பணக்கார சின்ன மருமகள் மீது பாசம் காட்டும் மாமியாரைப் பழிவாங்குவதற்காக அந்தத் திருமணத்தை நிறுத்த பல வகையில் முயற்சி செய்வேன். ஆனால் திருமணம் தானாகவே நின்றுவிடும்.
நெகட்டீவ் கேரக்டர் செய்யப் பிடித்திருக்கிறதா?
மென்மையான கதாபாத்திரத்தைவிட, இதுபோன்ற கேரக்டர் செய்வதுதான் எனக்கு ரொம்பப் பிடித்திருக்கிறது. என்னதான் வலுவான கதாபாத்திரமாக இருந்தாலும் மென்மையாக நடிக்கும்போது அந்த
அளவுக்கு மக்களிடம் அங்கீகாரம் கிடைப்பதில்லை. அதுவே வில்லத்தனம் என்றால் உடனே ரீச் ஆகிவிடுவோம்.
வேறு என்ன தொடர்களில் நடிக்கிறீர்கள்?
"கஸ்தூரி' தொடரில் நடித்திருக்கிறேன். அதையடுத்து "தங்கம்' தொடரில் ரம்யாகிருஷ்ணனின் கணவராக வரும் கலெக்டருக்கு முறைப் பெண்ணாகக் கிராமத்து வேடம் செய்கிறேன். அதில் கங்கா-கலெக்டர் காதலுக்காக என் வாழ்க்கையை விட்டுக் கொடுத்துவிட்டுப் போய்விடுவது போன்ற கதாபாத்திரம்.
இதற்கு முன்பு தொடர்களில் நடித்திருக்கிறீர்களா?
நான் முதன் முதலில் கன்னட தொடர்களிலும் படங்களிலும் நடித்து கொண்டிருந்தேன். பிறகு தெலுங்கில் ஜெமினி டிவியில் நிகழ்ச்சி தொகுப்பாளினியாகவும், தொடர்களிலும் நடித்து வருகிறேன். அதன் பிறகு தமிழில் மெகா டிவியில் "சுற்றமும் நட்பும்' என்ற நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினேன். அதுதான் தமிழில் எனது முதல் புராஜக்ட். அதை அடுத்து "ருத்ரா' தொடரில் குஷ்புவின் தங்கையாக நடித்துள்ளேன். அதன் பிறகு "கோலங்கள்' தொடரில் ஒரு பாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இப்போது தென்றலிலும் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது.
உங்களைப் பற்றி?
என்னுடைய சொந்த ஊர் ஆந்திரம். ஆனால் ரொம்ப நாள் முன்பே பெங்களூருவில் செட்டில் ஆகிவிட்டோம். அதனால் இப்போது கன்னடவாசி என்றும் சொல்லலாம். தொடர்களில் நடிப்பதற்காக பெங்களூருவில் இருந்து சென்னைக்கும் ஆந்திரத்துக்கும் வந்து போகிறேன்.
சென்னை, ஆந்திரம், பெங்களூரு என்று பயணம் செய்து கொண்டே இருப்பது சிரமமாக இல்லையா?
ஆரம்பத்தில் கொஞ்சம் கடினமாகத்தான் இருந்தது. இருந்தாலும் நடிக்க வேண்டும் என்ற ஆசையோடு வருவதனால் இப்பொழுது பழகிவிட்டது. அவ்வளவாக சிரமம் தெரியவில்லை.
http://www.dinamani.com/edition/stor...44&SEO=&Title=
சினிமா என்றாலே திருவிழாதான்!
"திரைவிழா', "ஹாலிவுட்' போன்ற நிகழ்ச்சிகளைப் பாலிமர் டிவியில் தொகுத்து வழங்கும் மோனிகா, நர்சிங் முடித்துவிட்டு ஒரு தனியார் மருத்துவமனையில் நிர்வாகத்துறையில் வேலை பார்க்கிறார் என்றால் உங்களுக்கு ஆச்சரியமாகத்தானே இருக்கிறது? அதே ஆச்சரியத்தோடுதான் நாங்களும் அவரை அணுகிப் பேசினோம். அவருடைய பதில்களிலும் பல சுவாரஸ்ய ஆச்சரியங்கள்.
செவிலியருக்குப் படித்துவிட்டு சின்னதிரை பக்கம் வந்தது எப்படி?
நர்ஸிங் படித்து முடித்ததும், தனியார் மருத்துவமனை ஒன்றில் ஒரு வருடம் செவிலியராக வேலை பார்த்தேன். அதன்பிறகு டிவியில் காம்பயரிங் செய்ய வேண்டும் என்ற ஆசையினால் சினிமா சம்பந்தப்பட்ட விருது வழங்கும் மேடை நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கிக் கொண்டிருந்தேன்.
அப்பொழுது நண்பர்கள் மூலமாக இமயம் டிவியில் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்க வாய்ப்பு கிடைத்தது. அப்படித்தான் சின்னதிரைக்கு வந்தேன். அது தவிர ராஜ் டிவியில் "சினிமா சினிமா', "காதல் மீட்டர்' போன்ற நிகழ்ச்சிகளைக் கொஞ்ச நாள் தொகுத்து வழங்கினேன்.
இப்பொழுது பாலிமர் டிவியில் "ஹாலிவுட் டாக்கிஸ்', "திரைவிழா' நிகழ்ச்சியின் தொகுப்பாளினியாக இருக்கிறேன், இதையடுத்து சிங்கப்பூர் டவுன் சேனல், தமிழ் பாக்ஸ் ஆபிஸில், "ஹலோ டி.பி.ஓ.' போன்ற நிகழ்ச்சிகளை வழங்கி கொண்டிருக்கிறேன். இதை தவிர சில விளம்பரப் படங்களில் நடித்திருக்கிறேன்.
"திரை விழா' நிகழ்ச்சி சினிமாவை ஒவ்வொரு கட்டமாக விவரிக்கும் நிகழ்ச்சி... அதைப் பற்றி சொல்லுங்கள்?
சினிமா என்றாலே திருவிழா மாதிரிதான் இருக்கும். இந்த நிகழ்ச்சியில் என்ன சிறப்பு என்றால் ஒரு படம் திரைக்கு வருவதற்கு முன்பு அப்படத்தின் துவக்க விழாவில் தொடங்கி இசை வெளியீடு, டிரெய்லர் வெளியீடு, படப்பிடிப்பு.. எனப் பல கட்டங்கள் கடந்து பிறகுதான் ரிலீஸ் ஆகும். அப்படத்தின் செய்திகளையும், இது போன்ற குட்டிக் குட்டி திரைவிழாவையும் தொகுத்து வழங்குவதுதான் இந்நிகழ்ச்சியின் சிறப்பம்சம்.
தமிழ்ப் படங்களை விமர்சிப்பதற்கும் ஆங்கிலப் படங்களை விமர்சிப்பதற்கும் என்ன வித்தியாசம் உணர்ந்தீர்கள்?
தமிழில் டப் ஆகி திரைக்கு வரும் புதிய ஆங்கில திரைப்படங்களை விமர்சிப்பதுதான் ஹாலிவுட் டாக்கீஸ். நம்முடைய தமிழ்ப் படங்களில் யதார்த்தம் இருக்கும், வாழ்க்கை இருக்கும். அதே சமயம் லாஜிக்கில்லாத விஷயங்கள் இருந்தால் நம்மால் அதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஆனால் ஹாலிவுட் படங்களில் அதை எதிர்பார்க்க முடியாது. பிரம்மாண்டம், கிராபிக்ஸ், டெக்னாலாஜி தான் அதிகமாக இருக்கும். லாஜிக்கே இருக்காது. தமிழ்ப் படத்துக்கும் ஆங்கிலப் படத்திற்கும் உள்ள வித்தியாசத்தைத் தெரிந்துதானே பார்க்கிறோம்? அதனால் அதற்கு ஏற்றாற்போல் விமர்சனமும் இருக்கும்.
மருத்துவமனை போன்ற பொதுமக்கள் கூடும் இடத்தில் இருப்பதனால் ரசிகர்கள் உங்களை அடையாளம் கண்டு கொள்வார்களா?
என்னோடு பணிபுரியும் ஒரு சிலருக்குத்தான் நான் டிவியில் தொகுப்பாளினியாக இருப்பது தெரியும். அதே போல் மருத்துவமனைக்கு வரும் பேஷன்ட்களில் ஒரு சிலர் அடையாளம் கண்டு கொண்டு கேட்பார்கள். உங்கள் நிகழ்ச்சி நன்றாக இருந்தது என்று சொல்லுவார்கள், ஒரு சிலர் தெரிந்தாலும் என்னைப் பார்த்துக் கொண்டே இருப்பார்களே தவிர பேசமாட்டார்கள். ஒரு சிலர் கண்டுபிடிக்கவே மாட்டார்கள். ஆனால் ஆட்டோ ஓட்டுனர்கள் நிறைய பேர் அடையாளம் கண்டு கேட்டிருக்கிறார்கள். அப்பொழுதெல்லாம் ரொம்ப சந்தோஷமாக இருக்கும்.
மேடை நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்குவது, டிவியில் தொகுப்பாளினியாக இருப்பது இந்த இரண்டிலும் எது சுலபமானது?
இரண்டையுமே சுலபமானது என்று சொல்ல முடியாது. ஒவ்வொன்றிலுமே சில சிரமங்கள் இருக்கும். அதேசமயம் டிவி நிகழ்ச்சியைக் காட்டிலும் மேடை நிகழ்ச்சிதான் கடினமானது. டிவி நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும்போது ஏதாவது தவறு நேர்ந்தால், அதை அடுத்த டேக் எடுத்துச் சரி செய்து விடலாம்.
ஆனால் மேடை நிகழ்ச்சிகள் அப்படி இல்லை, நம்மை மக்கள் நேரடியாக பார்த்துக் கொண்டிருப்பார்கள். அவர்கள் கண்களைப் பார்த்து நாம் பேச வேண்டும். ஏதாவது தவறு செய்துவிட்டால் உடனே முகம் சுளித்துவிடுவார்கள். அதனால் அதில்தான் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும். பார்க்க அழகாக மேக்கப் போட்டுக் கொண்டு மட்டும் போனால் போதாது. சமயோசிதமாக வேலை பார்க்க வேண்டும்.
கடின உழைப்பாளியாக இருக்கும் நீங்கள், உங்களை எப்படி உற்சாகப்படுத்திக் கொள்கிறீர்கள்?
பொதுவாக வேலைக்கும் செல்லும் பெண்கள் எல்லோரையும் போல நானும் காலை 9.30 மணியில் இருந்து மாலை 5.30 மணிவரை மருத்துவமனையில் வேலை பார்த்துவிட்டு, மாலை நேரத்தில் தான் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குகிறேன். இரண்டையும் நான் எப்பொழுதும் குழப்பிக் கொள்வதில்லை. இந்த நேரத்தில் இதைத்தான் செய்ய வேண்டும் என்று தெளிவாக இருப்பேன்.
இரண்டு வேலைகளையும் விரும்பிச் செய்கிறேன். சோர்வாக உணரும் நேரங்களில் எஃப்.எம். ரேடியோவில் பாடல்களை விரும்பிக் கேட்பேன். அது என்னை உற்சாகப்படுத்திக் கொள்ள உதவுகிறது. இதைத் தவிர ஞாயிற்றுக்கிழமைகளில் முக்கியமான நிகழ்ச்சிகளைத் தவிர வேறு எதிலும் கலந்து கொள்வதில்லை. முழுமையாக ரெஸ்ட் எடுத்துக் கொள்வேன். இதைத் தவிர மற்ற பெண்களைப் போல சினிமாவுக்குச் செல்வது, ஷாப்பிங் செல்வது ரொம்பப் பிடிக்கும்.
http://www.dinamani.com/edition/stor...44&SEO=&Title=
ஞாயிறு கொண்டாட்டம்
பரி கொய்ரே என்கிற பரமேஸ்வரி!
படித்ததற்குத் தொடர்பில்லாமல் தொலைக்காட்சி, சினிமா, ஈவென்ட் மேனேஜ்மென்ட், மாடலிங் என்று பலதுறைகளில் கலக்கிக் கொண்டிருக்கிறார் பரி கொய்ரே. அவர் படித்ததோ ஹோமியோபதி, அக்குபங்சர் மருத்துவம். தற்போது ஈவென்ட் மேனேஜ்மென்ட் துறையில் மேனேஜராக இருக்கிறார். பரி கொய்ரேவிடம் ஒரு மினி உரையாடல்...
பேரே வித்தியாசமாக இருக்கிறதே?
அப்பா, அம்மா வைத்த பெயர் பரமேஸ்வரி. ஊடகத்தில் நுழைந்தபோது வித்தியாசமாக பெயர் இருக்க வேண்டும் என்று வைத்துக் கொண்டதுதான் பரி கொய்ரே. இதில் கொய்ரே என்பது குடும்பப் பெயர். பரமேஸ்வரியின் சுருக்கம்தான் பரி.
படித்ததற்குத் தொடர்பில்லாமல் ஊடகத்தில் பணிபுரிந்து கொண்டிருக்கிறீர்களே?
அப்படிச் சொல்ல முடியாது. எனது மூன்று வயதில் இருந்தே நடனம் கற்றுக் கொள்ள ஆரம்பித்தேன். ராபர்ட் மாஸ்டரிடம் , பரதம், நாட்டுப்புற நடனம், மேற்கத்திய நடனம் எல்லாம் கற்றுக் கொண்டேன். பள்ளியில் படிக்கும்போது மாடலிங் செய்தேன். அதன் தொடர்ச்சியாகத்தான் நான் ஊடகத்துறையில் நுழைந்திருக்கிறேன். கலைத்துறையில் நுழைவதற்குச் சின்ன வயதிலேயே அடித்தளம் போட்டாகிவிட்டது.
உங்களைப் பார்த்தால் தமிழ்ப்பெண் மாதிரி தெரியவில்லையே, தமிழ் நன்றாகப் பேசுகிறீர்களே?
நீங்கள் மட்டுமல்ல, எல்லாரும் எனக்குத் தமிழ் தெரியாது என்றுதான் நினைக்கிறார்கள். பஸ்ஸில் செல்லும்போது, பொது இடங்களில் எனக்குத் தமிழ் தெரியாது என்று நினைத்துக் கொண்டு கமெண்ட் அடிப்பார்கள். அவர்கள் மனம் புண்படக்கூடாது என்பதற்காக நானும் தமிழ் தெரியாத மாதிரி இருந்துவிடுவேன். ரொம்ப ஓவராகக் கமெண்ட் அடித்தால் மட்டும், எனக்கும் தமிழ் தெரியும் என்பதைக் காட்டிக் கொள்வேன்.
எனது தாய்மொழி நேபாளி. ஆனால் பிறந்தது வளர்ந்தது எல்லாம் சென்னையில். அதனால் தமிழ் சரளமாகப் பேசுவேன்.
சின்னதிரையில் என்ன செய்திருக்கிறீர்கள்?
ராஜ் டிவியில் "என் மனமே' என்று ஒரு நிகழ்ச்சி. ஆல் டைம் மியூசிக் எனும் அந்த நிகழ்ச்சிக்கு காம்பியராக இருந்தேன். விஜய் டிவியில் "கோடம்பாக்கம் ஸ்கூல்' என்ற நிகழ்ச்சியில் நடித்தேன். அதில் தமிழ் தெரியாதவர்களுக்குத் தமிழ் கற்றுக் கொடுப்பார்கள். நான் மும்பையில் இருந்து தமிழ் சினிமாவில் நடிக்க வந்த நடிகையாக அந்த நிகழ்ச்சியில் நடித்தேன். எனக்குத் தமிழ் தெரியாது. தமிழை எப்படியெல்லாம் சிரமப்பட்டுக் கற்றுக் கொண்டேன் என்பதை மிகுந்த கலகலப்புடன் சொல்லும் நிகழ்ச்சி அது. தற்போது சன் தொலைக்காட்சியில் திருமுருகன் இயக்கத்தில் ஒளிப்பரப்பாகிவரும் "நாதஸ்வரம்' தொடரில் நடிக்க இருக்கிறேன்.
சினிமாவில்?
ஏ.எம்.ரத்தினம் அவர்களின் மகன் ஜோதிகிருஷ்ணா இயக்கிய "ஊ..ல..ல..லா..' படத்தில் நடித்தேன். இப்போது நல்ல கதாபாத்திரம் கிடைத்தால் மட்டுமே நடிப்பது என்ற உறுதியுடன் இருக்கிறேன்.
வேறெந்த துறைகளில் கலக்குகிறீர்கள்?
பெங்களூருவைச் சேர்ந்த சன்னி என்பவர் இயக்கிய "சிதறல்' என்ற குறும்படத்தில் நடித்திருக்கிறேன். தற்போது "சென்னை ஈவென்ட் ஆர்ட்' என்னும் நிறுவனத்தில் பிசினஸ் மேனேஜராக இருக்கிறேன்.
குடும்பத்தினர் ஒத்துழைப்பு?
அப்பா ஷ்யாம்லால் அசோக்லேலண்ட் நிறுவனத்தில் வேலை செய்தவர். சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். அம்மா மது குடும்பத் தலைவி. அண்ணன்,தங்கை உள்ளனர். எனது முயற்சிகளுக்கு எங்கள் வீட்டில் யாரும் தடை சொல்வதில்லை. இல்லாவிட்டால் இப்படிச் சிறகடித்துப் பறக்க முடியுமா?
http://www.dinamani.com/edition/stor...44&SEO=&Title=
[html:3639873480]<div align="center">http://www.dinamani.com/Images/artic...1/8/07kon6.jpg</div>[/html:3639873480]
என் பெயர் அமுதா!
சென்னையில் உள்ள திரிசூலம் மலையில் பரபரப்பாக இயங்கி கொண்டிருந்த, விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் "என் பெயர் மீனாட்சி' தொடரின் படப்பிடிப்பில், ஒரு காட்சியில் நாயகி மீனாட்சிக்கு எதிராக நடித்துக் கொண்டிருந்த அமுதாவை (ப்ரியா) சந்தித்து உரையாடினோம்.
"என் பெயர் மீனாட்சி' தொடரில் நடிக்கும் அனுபவம் பற்றி?
இது நான் நடிக்கும் முதல் தொடர். உண்மையாக சொல்ல வேண்டும் என்றால் இந்த தொடரின் நாயகியாக நடிப்பதற்குத்தான் ஆடிஷனுக்குப் போனேன். ஆனால் அதில் நான் தேர்வாகவில்லை. அதன் பிறகு தான், டைரக்டர் ஜெரால்ட் ஸôர் என்னைக் கூப்பிட்டு, ஹீரோயினுக்கு எதிரான கதாபாத்திரம் நல்ல முக்கியத்துவமுள்ள ரோல் இருக்கு. அதை நீங்கள் செய்யுங்கள் என்றார். முதலில் எனக்கு நெகட்டீவ் ரோல் என்றதும் அது சரியாக வருமா என யோசித்தேன். நான் நிஜத்தில் ரொம்ப மென்மையானவள். அதற்கு அப்படியே எதிரான கேரக்டர் என்றபோது என்னால் செய்ய முடியுமா எனக் கொஞ்சம் தயக்கமாக இருந்தது. உங்களால் முடியும் முயற்சி செய்யுங்கள் என்று டைரக்டர்தான் உற்சாகப்படுத்தினார். அதன் பிறகுதான் ஒப்புக் கொண்டேன்.
தன்னைக் கல்யாணம் செய்து கொள்ள வேண்டியவர் வேறு ஒரு பெண்ணை கல்யாணம் செய்து கொள்ளப் போகிறார் என்றபோது நார்மலாக ஒரு பொண்ணுக்கு என்ன கோபம் வருமோ அந்த மாதிரியான கேரக்டர். நிறைய காட்சியில் அமுதாவாகவே மாறி நிஜமாக அழுதிருக்கிறேன். ஒரு விஷயம் வேண்டும் என்றால் அதற்காக என்னவேண்டுமானாலும் செய்வாள் அமுதா என்கிற மாதிரியான கேரக்டர். இப்பொழுது என் கதாபாத்திரத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருப்பது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது.
தொகுப்பாளினிக்கும் நடிகைக்கும் என்ன வித்தியாசத்தை உணர்ந்தீர்கள்?
காம்பெயரிங் செய்வதைப் பொருத்தவரை ப்ரியா டேக் என்று சொன்னதும் நான் பேச ஆரம்பித்துவிடுவேன். அதோடு ஸ்டாப் என்று சொல்லும்வரை பேசிக் கொண்டே இருப்பேன். ஆனால் தொடரைப் பொருத்தவரை அப்படியில்லை. அவர்கள் என்ன சொல்கிறார்களோ அதை பேச வேண்டும். எனக்கு முதலில் கொடுத்த டயலாக் என்ன தெரியுமா? ஓர் இடத்தில் ஹீரோ நின்று பேசிக்கிட்டு இருப்பாரு. அவருக்குப் பின்னாடி நான் திரும்பி நின்றிருப்பேன். இரண்டு பேருமே ஒருவரை ஒருவர் பார்க்காமல் மோதிக் கொள்வது போன்ற சீன்.அப்போ நான் ஹீரோவிடம் என்னை நினைச்சியா என்று கேட்க வேண்டும். இதுதான் என் முதல் காட்சி. அதில் கோபம், காதல், ஆசை, அதிர்ச்சி என எல்லாவிதமான பாவமும் இருக்க வேண்டும். ஒவ்வொரு சீனையும் இப்படி ஃபீல் செய்து அனுபவித்து செய்ய வேண்டும். இது தான் தொகுப்பாளினிக்கும் நடிகைக்கும் உள்ள வித்தியாசம்.
நடிப்பின் மீது ஆர்வமாக இருக்கும் உங்களுக்குப் பெரியதிரை பக்கம் போகிற எண்ணம் உண்டா?
சினிமாவில் இப்பொழுது ஒரு வாய்ப்பு வந்திருக்கிறது. கரு.பழனியப்பன் இயக்கும் "மந்திர புன்னகை' படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதில் க்ளைமாக்ஸில் வருகிறேன். இந்தக் கதாபாத்திரமும் எனக்கு ஒரு நல்ல அங்கீகாரத்தை வாங்கித் தரும் என்று நினைக்கிறேன்.
பெரியதிரையில் நடிப்பதற்கும் சின்னதிரையில் நடிப்பதற்கும் என்ன வித்தியாசம் உணர்ந்தீர்கள்?
பெரியதிரையில் நிறைய ஹீரோயின்ஸ் வருகிறார்கள். அதில் சிலர் வந்த இடமே தெரியாமற் போய்விடுகிறார்கள். சின்னதிரையில் நடித்தால் ஒவ்வொரு கதாபாத்திரமும் மக்கள் மனதில் நிற்கிறது.
நிகழ்ச்சித் தொகுப்பு, நடிப்பு, மற்றும்..?
முதன் முதலில் ஜி தமிழ் தொலைக்காட்சியில் "ஹலோ நான் அதிர்ஷ்ட லஷ்மி' என்ற நிகழ்ச்சிக்குத்தான் தொகுப்பாளினியாக வந்தேன். அதன் பிறகு கேப்டன் டிவியில் "வணக்கம் சென்னை' என்ற நிகழ்ச்சியில் சின்ன போர்ஷன் செய்தேன். இப்போது அதில் வருவதில்லை. ஆனால் "மிஸ் அண்ட் மிஸ்டர் கலாட்டா' என்று கேப்டன் டிவியில் ஞாயிறு இரவு 8-9 வரை வரும் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கிறேன்.
இதை தவிர சூரியன் எப்.எம்.மில் ரேடியோ ஜாக்கியாகவும் பணியாற்றியுள்ளேன். "காதல் காதல் ப்ரியா' எனும் நிகழ்ச்சியும் இன்னும் சில நிகழ்ச்சிகளும் வழங்கியிருக்கிறேன். அதன்பிறகு சமயம் கிடைக்கும்பொழுது டப்பிங் குரல் கொடுப்பேன். சமீபத்தில் எழுத்தாளர் பாலகுமரனின் மகன் இயக்கிய "ஃபேர் அன்ட் லவ்லி' என்ற குறும்படத்தில் நாயகியாக நடித்திருந்தேன். விளம்பர படங்களில் நடித்திருக்கிறேன். குரல் கொடுத்திருக்கிறேன்.
உங்கள் குடும்பம்?
நான் பிறந்தது, வளர்ந்தது எல்லாம் சென்னையில்தான். டிகிரி படித்திருக்கிறேன், நான் ஒரு கிளாசிக்கல் டான்ஸர். அதனால் பியூட்டி ஃபுல் என்று ஒரு சின்னதா நாட்டியப்பள்ளி வைத்து நடத்திவருகிறேன். என் அப்பா ஸ்ரீதர், அம்மா சுதா, அண்ணன் விஜய். இதுதான் எங்கள் பேமிலி.
http://dinamani.com/edition/story.as...44&SEO=&Title=[/tscii]
எங்கள் வீட்டு சீரியல்!
"செல்லமே', "மகள்", "உறவுகள்' என சன்
தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் மூன்று
தொடர்களில் நடித்து வருபவர் சிநேகா
நம்பியார். இவர் தமிழில் மட்டும் இல்லாமல்
கன்னடம், தெலுங்கு சின்னதிரை உலகிலும்
கால்பதித்தவர். மழை ஓய்ந்திருந்த ஒரு மாலை
வேளையில் அவரை சந்தித்தோம். சில்லென காற்று வீச பதில்களும் குளுமையாகவே வந்தன.
"செல்லமே' தொடரில் நடிக்கும் அனுபவம் பற்றி சொல்லுங்கள்?
இது போன்று ஒரு தொடரில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததே ரொம்ப சந்தோஷமா இருக்கு. குறிப்பா சொல்லணும்னா ராதிகா மேடம்கூட சேர்ந்து நடிப்பது இரட்டிப்பு சந்தோஷமா இருக்கிறது. படப்பிடிப்பில் பார்த்தால் ஒரு குடும்பமாக ஜாலியா இருக்கும். அதில் வருவது போன்று ஒரு பாந்தமான கேரக்டரில் நான் இதுவரை வேறு எந்த தொடரிலும் செய்யவில்லை. கடந்த இரண்டு மாதமா என் டிராக் அவ்வளவாக வரவில்லை. மற்றபடி இந்தத் தொடரில் நடிப்பது ரொம்ப நல்ல அனுபவம்.
வேறு என்ன தொடர்களில் நடித்துக் கொண்டிருக்கிறீர்கள்?
"செல்லமே' தவிர "மகள்', "உறவுகள்' இந்த இரண்டு தொடரிலும் நடித்து வருகிறேன். "மகள்' தொடரில் மது என்ற கேரக்டர் செய்கிறேன். அதில் நெகட்டீவ்வாக ஆரம்பித்த என் கேரக்டர் இப்பொழுது பாஸிட்டீவ்வாக மாறிவிட்டது. "உறவுகள்' தொடரிலும் ஒரு நல்ல கேரக்டர் செய்கிறேன்.
வில்லத்தனமான கேரக்டர் அல்லது குடும்பப்பாங்கான கேரக்டர்... உங்களுக்கு எது
பிடித்திருக்கிறது?
நெகட்டீவ் கேரக்டர் செய்யும் பொழுது நடிப்பதற்கு நிறைய வாய்ப்பு இருக்கிறது. வில்லத்தனமான கேரக்டர் தான் நம் திறமையை வெளிக்கொண்டு வரும். ஒவ்வொரு எபிசோடிலும் அடுத்து இந்த வில்லி கேரக்டர் என்ன செய்யப் போகிறாள் என்று ரசிகர்களிடம் ஆவலும் எதிர்பார்ப்பும் எப்போதும் இருந்து கொண்டே இருக்கும். நல்லவளாக ஈசியா நடித்து விடலாம்.
ஆனால் வில்லியாக இருப்பது அவ்வளவு சுலபமல்ல. அதே சமயம் பாஸிட்டீவ் ரோல் வழக்கமான கேரக்டராக இருந்தாலும் ரசிகர்களின் அனுதாபமும் ஆதரவும் நமக்கு நிறைய கிடைக்கும். அதனால ஒரே மாதிரியான கேரக்டராக இல்லாமல் எல்லாவிதமான கேரக்டர்களிலும் நடிக்க வேண்டும். ஒரு தொடரில் நெகட்டீவ் என்றால் அடுத்த தொடரில் பாஸிட்டீவாக நடிக்க வேண்டும் என்பதுதான் ஆசை.
நீங்கள் கன்னட சினிமாத்துறையில் இருந்து
வந்தவரா?
ஆமாம், சொந்த ஊர் பெங்களுரூ. நான் பதினோராம் வகுப்பு படிக்கும் பொழுதே கன்னட இண்டஸ்ட்ரியில் நடிக்க வந்துவிட்டேன். நிறைய கன்னட தொடர்களில் நடித்திருக்கிறேன். அதிலிருந்து தெலுங்கு இண்டஸ்ட்ரியில் வாய்ப்பு கிடைத்தது. அங்கேயும் தொடர்களில் நடித்திருக்கிறேன். அதன் பிறகு தான் தமிழ் இன்டஸ்ட்ரிக்குள்ள வந்தேன். úஸன் மீடியா தான் "அகல்யா' என்ற தொடருக்காக என்னை முதன்முதலில் தமிழில் அறிமுகப்படுத்தினார்கள். இப்போ இங்கேயே செட்டிலாகி சென்னைவாசி ஆகிட்டேன்.
உங்கள் குடும்பம்?
என் அப்பா, அம்மா பெங்களூருவில்தான் இருக்கிறார்கள். அங்கே ஒரு பள்ளிகூடம் நடத்திவருகிறார்கள். ஒரு அண்ணன், ஒரு தங்கை. என் கணவர் குடும்பத்தினர் சென்னையை சேர்ந்தவர்கள். தமிழில் நடிக்க வந்தவுடனேயே எனக்கு திருமணம் ஆகிவிட்டது. எனக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள் மாமியார், மாமனார், என் கணவர் என எல்லாருமே கூட்டுக் குடும்பமாக இருக்கிறோம். சீரியலில் கூட்டுக் குடும்பமாக காட்டுவார்களே அதுபோலத்தான் இருக்கும் எங்கள் வீட்டிலும்.
http://dinamani.com/edition/story.as...44&SEO=&Title=
படிக்க வந்த இடத்தில் நடிப்பு!
"மெட்டிஒலி' தொடரை இயக்கிய திருமுருகன், தற்போது இயக்கி வரும் தொடர் "நாதஸ்வரம்'. ஒரு அழகான காலை பொழுதில் அத்தொடரின் படப்பிடிப்பு தளத்திற்குச் சென்றோம். அங்கு ஒப்பனை அறையில் மேக்கப் போட்டுக் கொண்டிருந்தார், அத்தொடரில் நாயகியாக நடிக்கும் ஸ்ருதிகா. ஒப்பனை செய்தபடியே நம் கேள்விகளுக்குப் பதிலளித்தார்.
"நாதஸ்வரம்' தொடரில் நடிக்கும் அனுபவம் பற்றி சொல்லுங்கள்?
திருமுருகன் ஸôரைப் பற்றி நான் உங்களுக்குச் சொல்லத் தேவையில்லை. அந்த அளவுக்கு வெற்றிகரமாக ஓடிய தொடர்களை இயக்கியவர். அவருடைய டைரக்ஷனில் நடிக்க வாய்ப்புக் கிடைத்தது எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. இந்தத் தொடரில் என் கேரக்டர் பேரு மலர். என்ஜினீயர் கதாபாத்திரம். ரொம்ப சாஃப்ட்டான நேச்சர் உள்ள பாத்திரம். அதேசமயம் என்னோட ஒர்க்ல ரொம்ப பெர்பக்ட்டா இருக்கிற மாதிரியான கேரக்டர். படப்பிடிப்பில் வேலைப் பளுவே தெரியாமல் ரொம்ப ரிலாக்ஸôக ஒரு குடும்பத்துல இருப்பது போல இருக்கு.
இதைத் தவிர வேறு தொடர்கள் நடிக்கிறீங்களா?
தற்சமயம் வேறு எந்த தொடரிலும் நடிக்கவில்லை. பெரியதிரையில் பாலு தம்பி மனசிலே என்ற படத்தில் கதாநாயகியாக நடித்துவருகிறேன். நேரம் கிடைக்காததால் நிறைய தொடர்களில் வாய்ப்பு வந்தும் நடிக்க முடியவில்லை.
"நாதஸ்வரம்' தொடருக்கு உங்களை எப்படி தேர்வு செய்தார்கள்?
"வெண்ணிலா கபடி குழு' படத்தில் நான் இரண்டாவது நாயகியாக நடித்திருந்தேன். அதற்கடுத்து "மதுரை டூ தேனி' படத்திலும் நடித்திருக்கிறேன். "வெண்ணிலா கபடி குழு' படத்துக்கு ஸ்கிரிப்ட் எழுதியவர்தான் "நாதஸ்வரம்' தொடருக்கு ஸ்கிரிப்ட் ரைட்டர். அவர் மூலமாகத்தான் இந்தத் தொடரில் நடிக்க எனக்கு வாய்ப்புக் கிடைத்தது.
நீங்கள் பெரியதிரையில் இருந்து சின்னதிரைக்கு வந்தவரா?
நான் பெரியதிரையில் இருந்து வரவில்லை. முதலில் சின்னதிரையில்தான் ஆங்கராக இருந்தேன். அதைத் தவிர நிறைய விளம்பரப் படங்களிலும் நடித்தேன். அதன் பிறகுதான் பெரியதிரையில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இப்பொழுது சின்னதிரை,பெரியதிரை இரண்டிலும் நடிக்கிறேன்.
சினிமாத் துறைக்கு எப்படி வந்தீர்கள்?
என் அக்கா சுதா, டிவியில்தான் ஆங்க்கராக இருக்கிறார்கள். நான் கல்லூரி விடுமுறையில் இருக்கும் பொழுது அவர் மூலமாக தான் சின்னதிரையில் வாய்ப்பு கிடைத்தது. அப்படி தான் இண்டஸ்ட்ரிக்குள்ளே வந்தேன்.
பெரியதிரை, சின்னதிரை இரண்டுக்கும் என்ன வித்தியாசம் உணர்ந்தீர்கள்?
சினிமாவைப் பொருத்தவரை குறுகிய காலத்தில் முடிந்துவிடும். ஆனால் சின்னதிரையில் தொடரை பொருத்தவரை மெகா பிராஜக்டாக இருக்கிறது. அதை தவிர வேறு வித்தியாசம் எதுவும் எனக்கு தெரியவில்லை.
உங்கள் குடும்பம் பற்றி?
எனக்கு சொந்த ஊர் மலேசியா. பிறந்தது, வளர்ந்தது எல்லாம் அங்கேதான். பள்ளி படிப்பு முடிந்தவுடன் மேற்கொண்டு படிப்பதற்காக மலேசியாவில் இருந்து சென்னைக்கு வந்தோம். பி.பி.ஏ. படித்துக் கொண்டிருக்கிறேன். தற்போது நான், அம்மா, அக்கா மூவரும் சென்னையிலேயே தங்கிவிட்டோம். அப்பா மட்டும் அடிக்கடி மலேசியா சென்று வருகிறார்.
வெளியிடங்களுக்குச் செல்லும்பொழுது ரசிகர்கள் உங்களை அடையாளம் தெரிந்து கொள்கிறார்களா?
நிறைய பேர் அடையாளம் தெரிந்து கொண்டு வந்து பேசுகிறார்கள். "நாதஸ்வரம்' தொடரில் கோபியை எப்போது திருமணம் செய்து கொள்ள போகிறீர்கள் என்று ரொம்ப ஆர்வமாகக் கேட்பார்கள். இங்கு இருப்பது போலவே மலேசியாவிலும் தமிழ் தொடர்களுக்கு நிறைய வரவேற்பிருக்கிறது. மலேசியர்கள், தமிழ் தொடர்களை விரும்பிப் பார்க்கிறார்கள். என் நண்பர்கள் எல்லாம் நான் நடிக்கும் தொடரைப் பார்த்துவிட்டு எப்படியிருந்தது என்று போன் செய்து சொல்லும்பொழுது ரொம்ப சந்தோஷமாக இருக்கும்.
http://dinamani.com/edition/story.as...44&SEO=&Title=
நடிப்பு எனக்குப் புதுசு
ஜெயா டிவியில் ஒளிபரப்பாகி வரும் "வந்தாளே மகராசி' தொடரின் மூலம் சின்னதிரை நடிகையாக களமிறங்கியிருக்கும் ஸ்ரீப்ரியா, தற்போது பெரியதிரையிலும் கால்பதித்து வருகிறார். மாடலிங் துறையில் இருந்த இவர் நடிப்பு துறைக்கு வந்த அனுபவத்தைப் பற்றி அவரிடமே கேட்போமா?
* சினிமாவிலும் டி.வி. தொடரிலும் புதிதாக நடிக்கத் தொடங்கியிருக்கும் அனுபவம் பற்றி?
"வந்தாளே மகராசி'தான் நான் நடிக்கும் முதல் தொடர். அதில் கிராமத்துப் பெண் பவானியாக வருவேன். இந்தத் தொடரின் கதை ரொம்ப வித்தியாசமானது. இப்பொழுது தான் என்னுடைய பகுதி வர ஆரம்பித்து இருக்கிறது. இனிமேல் எனக்கு நிறைய சவாலான நடிப்பு காத்திருக்கிறது. ஒருவிதத்தில் நெகட்டீவ் கேரக்டர்னுகூட சொல்லலாம். ஸ்ரீ எனக்கு ஜோடியா நடித்திருக்கிறார். பேசப்படுகிற மாதிரியான கேரக்டராக இருக்கும் என்னுடையது. அந்த டீம்ல எல்லாருமே ரொம்ப ஃப்ரண்ட்லியா இருக்காங்க. டைரக்டரிடம் இருந்து நடிப்பைப் பற்றி நிறைய விஷயங்களைக் கற்றுக் கொண்டேன். முதல்முறையாகத் தொடரில் நடிப்பது எனக்கு ஒரு புது அனுபவமாக இருக்கிறது.
* சினிமா துறைக்குள் வந்தது எப்படி?
நான் ஈவண்ட் மேனேஜ்மெண்ட் பண்ணிக்கிட்டு இருந்தேன் அப்படியே மாடலிங்கும், சில ஷோவும் செய்துவந்தேன். அப்பொழுது சசிக்குமார் என் போட்டோவைப் பார்த்துவிட்டு அவருடைய "ஈசன்' படத்தில் நடிக்க கூப்பிட்டார். ஏற்கனவே சசிக்குமார் படங்களையெல்லாம் நான் பார்த்திருக்கிறேன். அதனால உடனே ஒத்துக்கிட்டேன். "ஈசன்' படத்தில் நாயகியின் தோழியாக நடித்திருப்பேன். அதன்பிறகு தான் ஜெயா டிவியில் இருந்து நடிக்க கூப்பிட்டார்கள். அப்படித்தான் சினிமாதுறைக்குள் எண்ட்ரி கொடுத்திருக்கிறேன்.
* வேறு தொடர்களில் நடிக்கிறீங்களா?
தற்போதைக்கு தொடர்கள் எதுவும் நடிக்கவில்லை. ஆனால் பெரியதிரையில் இரண்டு படங்கள் கமிட் ஆகியிருக்கேன். படத்துக்குப் பேரு இன்னும் வைக்கவில்லை.
* என்ன மாதிரியான கதாபாத்திரங்கள் நடிக்க விருப்பப்படுகிறீர்கள்?
நான் இப்பொழுதுதான் புதுசா சினிமாத் துறைக்குள் வந்திருக்கிறேன். நடிப்பு எனக்கு புதுசு. அதனால இந்தக் கதாபாத்திரம், அந்தக் கதாபாத்திரம்னு எனக்கு சொல்லத் தெரியலை. இருந்தாலும் எல்லா விதமான கேரக்டர்களும் செய்ய வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். குறிப்பாக நெகட்டீவ் கேரக்டராக இருந்தாலும் கண்டிப்பாக நடிப்பேன்.
* மாடலிங் செய்வதற்கும் தற்போது நடிகையாகி இருப்பதற்கும் என்ன வித்தியாசம் உணர்ந்தீர்கள்?
மாடலிங், நடிப்பு ரெண்டுமே வேற வேற துறை. மாடலிங் பொருத்தவரை கஷ்டம்னு சொல்வது போன்று எதுவும் கிடையாது. ஆனால் நடிப்பு அப்படியில்லை. நிறைய கற்றுக் கொள்ள வேண்டி இருக்கிறது. ஆரம்பத்தில் கேமிரா முன் நிற்பதற்கே எனக்கு ரொம்பப் பயமாக இருக்கும். எப்படி எங்க நிற்கணும், என்ன செய்யணும்னு எதுவுமே தெரியாது.
ஏதாவது தப்பா செய்துவிட்டால் யாராவது திட்டிவிடுவார்களோன்னு பயம் இருந்தது. ஆனால் எல்லாருமே ரொம்ப ப்ரண்ட்லியா இருந்தாங்க. நிறைய சொல்லிக்கொடுத்தாங்க. ஓரளவுக்கு இப்போ அனுபவம் வந்துவிட்டது. இன்னொரு விஷயம் பார்த்தீங்கனா நடிப்பு துறைக்கு வந்த பிறகு எங்கு வெளியே போனாலும் மக்கள் அடையாளம் தெரிந்து கொண்டு வந்து பேசுகிறார்கள். அது எனக்கு புது அனுபவமா இருந்தது. ரொம்ப சந்தோஷமாவும் இருந்தது.
குடும்பம் குறித்து?
நான் பிறந்தது, வளர்ந்தெல்லாம் சென்னையில்தான். பி.எஸ்ஸி. சைக்காலாஜி படித்திருக்கிறேன். அப்பா சந்தானம், அம்மா ஷீலா, அக்கா, தங்கை, பாட்டி இருக்காங்க. இது தான் எங்கள் குடும்பம்.
உங்கள் பொழுது போக்கு என்ன?
சினிமாத்துறைக்கு வருவதற்கு முன்பு அடிக்கடி ஷாப்பிங் போவேன், பிரண்ட்úஸôட ஜாலியா அரட்டை அடிப்பேன். ஆனால் இப்பொழுதெல்லாம் ஷாப்பிங் போவதற்குகூட நேரம் கிடைப்பதில்லை. மாற்றி மாற்றி ஷூட்டிங் போவதற்கே நேரம் சரியா இருக்கிறது, அப்படியே நேரம் கிடைத்தாலும் நல்லா தூங்குறேன்.
Thanks Dinamani
[/tscii]
திருமதிகளின் செல்லப் பிள்ளை!
2008 -ஆம் ஆண்டிற்கான சிறந்த நிகழ்ச்சி தொகுப்பாளருக்கான சின்னதிரை விருது பெற்றிருக்கிறார் "திருமதி செல்வம்'
தொடரின் நாயகன் சஞ்சய். "விளக்கு வெச்ச நேரத்துல' தொடரின் படப்பிடிப்பு தளத்தில் இருந்த அவரை உணவு இடைவேளையின்போது அவரிடம் பேசினோம்:
"திருமதி செல்வம்' தொடரில் நடிக்கும் அனுபவம் பற்றி?
திருமதி செல்வம் தொடரில் வரும் செல்வம் கதாபாத்திரம் ஆரம்பத்தில் சிரமமாக இருந்தது. முதல் ஆறுமாதம் இயக்குனர் உதவியால்தான் சிறப்பாக நடித்தேன். அதன்பிறகு நானே செல்வமாக ஒன்றிவிட்டேன். இப்போது எல்லாம் யாராவது செல்வம்ன்னு கூப்பிட்டால் கூட திரும்பிப் பார்க்கிறேன். அது தான் இந்தத் தொடரில் எனக்குக் கிடைத்த அனுபவம்.
"மானாட மயிலாட' நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் அனுபவம்?
"மானாட மயிலாட' நிகழ்ச்சி முழுக்கமுழுக்க கமர்ஷியலான நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியைக் பொறுத்தவரை நான் முதல் முறையாகத் தொகுத்து வழங்குகிறேன். என் நண்பன் தீபக் கொடுத்த ஊக்கத்தால்தான் இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குகிறேன்.
கலா அக்கா என்னை முதல்ல இந்நிகழ்ச்சியில் நடனம் ஆடுவதற்காகத்தான் கூப்பிட்டார்கள். எனக்கு நடனம் வேண்டாம்ன்னு சொன்னேன். அதனால் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் பொறுப்பைக் கொடுத்தார்கள். இன்று விருது வாங்குகிற அளவுக்கு எனக்கும் ஓர் இடம் கிடைத்திருக்கிறது.
நிஜத்தில் சஞ்சய் செல்வம் மாதிரி பொறுமைசாலியா? இல்லை கோபமானவரா?
ஒரு விஷயத்தைத் தொடர்ந்து செய்யும்பொழுது அது நம் மனசில் பதிந்துவிடும். அந்த விஷயம் சில நேரங்களில் நம் சொந்த வாழ்க்கையைக்கூட பாதிக்கும்னு சொல்வாங்க.
இந்தத் தொடரில் வருவதற்கு முன்பு நான் ஓரளவுக்கு அமைதிதான். என்ன செல்வம் அளவுக்குப் பொறுமை கிடையாது. சட்டென்று கோபம் வந்துவிடும். ஆனால் "செல்வம்' கேரக்டரில் நடிக்க ஆரம்பித்த இந்த நான்கு வருஷத்தில், என் லைப் ஸ்டைலே செல்வமாக மாறிப்போச்சு. ரொம்ப பொறுமைசாலியாகவே மாறிவிட்டேன்.
படங்களில் எதுவும் நடிக்கிறீர்களா?
தற்போதைக்குப் படங்கள் எதிலும் நடிக்கவில்லை. ஒரு படத்திற்கு வாய்ப்பு வந்திருக்கிறது. அது முடிவானால் தான் முழுமையாகத் தெரியும்.
2008-ஆம் ஆண்டுக்கான, சிறந்த நிகழ்ச்சி தொகுப்பாளருக்கான சின்னதிரை விருது வாங்கும் பொழுது எப்படி உணர்ந்தீர்கள்?
முதல்வர் கையால் சிறந்த நிகழ்ச்சி தொகுப்பாளருக்கான விருது வாங்கினது ரொம்ப சந்தோஷமா இருந்தது. அதைவிட பெரிய சந்தோஷம் அவர் விருது கொடுக்கும்பொழுது என்னிடம் உன்னுடைய நடிப்பு எனக்கு ரொம்பப் பிடிக்கும், நான் உனக்குப் பெரிய ரசிகன். எங்க வீட்டில் எல்லாருக்குமே உன் நடிப்பு ரொம்ப பிடிக்கும்னு சொன்னார். அவ்வளவு பெரியவங்க அப்படிச் சொல்லும்பொழுது ரொம்ப சந்தோஷமாக இருந்தது. அது நான் வாங்கிய விருதைவிட அதிக மகிழ்ச்சியைக் கொடுத்தது.
ரசிகர்கள் என்ன சொல்லுகிறார்கள்?
முன்பெல்லாம் என்னைப் பார்க்கிறவர்கள் நல்லா நடிக்கிறீர்கள் என்று சொல்லிவிட்டுப் போய்விடுவார்கள். "திருமதி செல்வம்' வந்த பிறகு நிலைமை அப்படியே மாறி எல்லோரும் என்னைப் பாராட்டுவதோடு நின்று பேசவும் விரும்புகிறார்கள். "திருமதி செல்வ'த்தின் மூலமாக திருமதிகளின் செல்லப்பிள்ளையாகிவிட்டேன்.
குடும்பம்?
என் மனைவி ப்ரித்தி. ரொம்ப உதவியாகவும், ஊக்கமாகவும் இருப்பார். அவரும் சின்னதிரை நடிகை என்பதால் என்னுடைய நடிப்பைப் பார்த்துவிட்டு, "இது நல்லா இருக்கு, இந்த இடத்துல இன்னும் கொஞ்சம் நல்லா செய்திருக்கலாம்'னு சொல்லுவார். எங்களுக்கு லயா என்று எட்டு மாத பெண் குழந்தை இருக்கிறார். இப்போது எங்கள் உலகமே அவர்தான்.
ஞாயிறு கொண்டாட்டம்
நாயகியும் நானே வில்லியும் நானே!
-ஸ்ரீதேவி குமரேசன்
First Published : 27 Mar 2011 12:00:00 AM IST
Last Updated :
சுதôவாக "மகள்' தொடரிலும், சுவாதியாக "முந்தானை முடிச்சு' தொடரிலும் நடித்து வரும் துர்கா. அடுத்து மூன்று வேடங்களில் ஒரு தொடரில் பரபரப்பாக நடித்துக்
கொண்டிருக்கிறார். அவரிடம் பேசியதிலிருந்து..
"மகள்' தொடரில் சுதாவாக நடிக்கும் அனுபவம் பற்றி சொல்லுங்கள்?
"மகள்' தொடரில் எங்கள் குடும்பம் பரம ஏழ்மையான குடும்பம். செருப்புத் தைக்கும் தொழிலாளியின் தங்கை நான். அதனால் பணத்தின் மீது அதிக ஆசைப்படும் ஓர் அப்பாவியான பெண்ணாக வருவேன். எனக்கு ஜோடியாக பாலாஜி நடிக்கிறார். என் அப்பாவித்தனத்தைப் பயன்படுத்தி என்னை ஏமாற்ற நினைப்பார் பாலாஜி. என் அண்ணனை ஒரு பணக்கார வீட்டு பெண் காதலிப்பாள். அவர்கள் காதலைச் சேர்த்து வைக்க முயற்சி செய்கிற மாதிரியான கேரக்டர். இந்தத் தொடரில் நடிப்பது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது.
"முந்தானை முடிச்சு' தொடர் பற்றி?
"முந்தானை முடிச்சு' தொடர், நான்கு அக்கா தங்கைகளின் கதை. அந்த நான்கு பேரில் நான்தான் கடை குட்டி, என் பேரு சுவாதி. மாமியார் வீட்டில் எல்லோரையும் அனுசரித்துப் போகிற அன்பான மருமகள் கேரக்டர் எனக்கு. அந்தத் தொடரில் நடிப்பது நல்ல அனுபவமாக இருக்கிறது. நான் இதுவரை நிறையத் தொடர்களில் நடித்திருக்கிறேன். ஆனால் முந்தானை முடிச்சு தொடரில் நடிக்க ஆரம்பித்த பிறகு, எனக்கு நிறைய அங்கீகாரம் கிடைக்க ஆரம்பித்திருக்கிறது. நிறையப் பேர் சுவாதி கேரக்டரைப் பற்றிப் பேசுகிறார்கள்.
எத்தனை வருடங்களாக தொடரில் நடிக்கிறீர்கள். எப்படி இந்தத் துறையை தேர்ந்தெடுத்தீர்கள்?
என் தம்பி குழந்தை நட்சத்திரமாக நிறைய தொடர்களிலும், படங்களிலும் நடித்திருக்கிறார். தம்பி சூட்டிங்குக்குப் போகும் போது நானும் அடிக்கடி கூட போவேன். அங்கே அவர்கள் நடிப்பதை எல்லாம் பார்த்துப் பார்த்து எனக்கும் நடிக்க வேண்டும் என்று ஆர்வம் வந்தது. அந்த நேரத்தில் தான் ஜீ தமிழ் சேனலில் "யாதுமாகி நின்றாய்' என்ற தொடரில் நடிகை சொர்ணமால்யாவின் மகளாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதிலிருந்து நான்கு வருடங்களாக நடித்து வருகிறேன். "சௌந்தரவல்லி', "உறவுக்குக் கைகொடுப்போம்' போன்ற பல தொடர்களில் நடித்திருக்கிறேன்.
வேறு என்ன தொடர்களில் நடிக்கிறீர்கள்?
ராஜ்டிவியில் ஒளிப்பரப்பாகும் "கொடிமுல்லை' தொடரில் நடித்து வருகிறேன். இதைத் தவிர "ஒன்றாய் இரண்டாய்' என்ற திரை படத்தில் நடித்து வருகிறேன்.
அதையடுத்து தற்போது புதிதாக உருவாகி வரும் ஒரு மெகா தொடருக்காக மூன்று வேடங்களில் நடித்து வருகிறேன். அந்தத் தொடரின் கதாநாயகியும் நான்தான். வில்லியும் நான் தான். இன்னொன்று மென்மையான ரோல். ஆனால் அந்தத் தொடர் எந்த சேனலில் வரப் போகிறது என்று இன்னும் முடிவாகவில்லை. அந்தத் தொடரை, சௌந்தரவல்லி, கர்ணமஞ்சரி, அம்மன் போன்ற தொடர்களை இயக்கிய ஆர்.கே. இயக்கு
கிறார்.
ஒரே நேரத்தில் மூன்று வேடங்களில் நடிக்கும்போது ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் உங்களை எப்படி தயார் செய்து கொள்கிறீர்கள்?
இயக்குநர் ஒவ்வொரு கதாபாத்திரத்தைப் பற்றிச் சொல்லும் போதும் பாஸிட்டிவ்வான கேரக்டரா, வில்லத்தனமான கேரக்டரா என்பதை முதலில் உள்வாங்கிக் கொள்வேன். ஷாட்டில் போய் நிற்கும்போதே அந்தக் கேரக்டராகத்தான் நிற்பேன். அதுவுமில்லாமல் ஒவ்வொரு கேரக்டரையும் மாற்றி மாற்றித் தான் எடுப்பார்கள். ஒரு கேரக்டருக்கு மேக்கப் போடும்போது அந்தக் கேரக்டராக என்னை மாற்றி கொள்வேன்.
உங்களைப் பற்றி?
எனக்கு தாய் மொழி சிந்தி. ஆனால் நான் பிறந்து வளர்ந்ததெல்லாம் சென்னையில் தான். அப்பா ஜி.லக்ஷ்மணன் எல்.ஐ.சி ஏஜண்டாகப் பணிபுரிந்து வருகிறார். அம்மா குடும்பத் தலைவி. ஒரு தம்பி, அவரும் நடித்துக் கொண்டிருக்கிறார்.
http://www.dinamani.com/Images/artic...1/3/26/sk5.jpg
Nandri. Dinamani
மனிதரில் இத்தனை நிறங்களா?
-ஸ்ரீதேவிகுமரேசன்
First Published : 10 Apr 2011 12:00:00 AM IST
Last Updated :
விஜய் டிவியில் புதிதாகத் துவங்கியிருக்கும் தொடர் "பிரிவோம் சந்திப்போம்'. மனிதர்களின் நிறத்தைக் கதைக்
கரு வாகக் கொண்டு உருவாகியிருக்கும் தொடர் இது. இதில் இருநாயகிகளில் ரேவதி கேரக்டரில் நடிக்கும் கல்யாணியிடம் பேசினோம். குழந்தைத்தனம் மாறாத அவருடைய பேச்சிலிருந்து...
"பிரிவோம் சந்திப்போம்' என்ன மாதிரி கதை? அதில் உங்கள் கதாபாத்திரம் என்ன?
ஜோதி-ரேவதி என்ற இரு சகோதரிகளுக்கிடையே நடக்கும் கதைதான் "பிரிவோம் சந்திப்போம்'. மனிதர்கள் மனதில் பதிந்து கிடக்கும் நிறவேறுபாடுகளை வைத்து பின்னப்பட்டிருக்கிறது கதை. ரேவதி நல்ல சிவந்த நிறமாகவும் ஜோதி கருப்பாகவும் இருக்கிறார்கள். அதில் நான் ரேவதியாக நடிக்கிறேன். தாய், தந்தையை இழந்த நான் ஜோதியின் வீட்டில் வளர்வேன். எங்களுக்குள் நிற வேறுபாடு இருந்தாலும் நாங்கள் இருவரும் ஒருவர் மீது ஒருவர் அன்பாகவும் பாசமாகவும் எப்பொழுதும் ஒற்றுமையாகவும் இருப்போம். எங்கள் இருவருக்கும் நிறம் ஒரு பிரச்னை இல்லை.
இது பிடிக்காத ஜோதியின் தாயும், பாட்டியும் எங்களைப் பிரிக்க முயற்சி செய்வார்கள். ஒரு கட்டத்தில் எங்களுடைய நிறமே பல சிக்கல்களை உருவாக்குகிறது. கருப்பாக இருக்கிற பெண் ஒருவித பிரச்னையை சந்தித்தால், சிவப்பாக இருக்கிற பெண் வேறு விதமான பிரச்னையைச் சந்திக்கிறாள். இப்படி மனித நிறத்தினால் விளையும் விபரீதங்களை எப்படி எதிர்கொள்ளுகிறோம் என்பதுதான் கதை. இதை உணர்வுபூர்வமானப் பாசப் போராட்டமாக உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் ரசூல் சார். இந்த தொடர் இந்தியில் மிகப் பரபரப்பாக ஓடிய "விதாய்' என்கிற தொடரின் ரீமேக்.
டி.வி.யில் நிகழ்ச்சி தொகுப்பாளினியாக கால் பதித்த நீங்கள் இந்தத் தொடரின் மூலம் நடிகையாகி இருக்கிறீர்கள்?... அதைபற்றி சொல்லுங்கள்?
இந்தத் தொடரின் மூலம் தமிழில் கதையின் நாயகியாக அறிமுகமாகியிருப்பது சந்தோஷமாக இருக்கிறது. ஆனால் நான் சிறுவயதிலேயே நடிக்க வந்துவிட்டேன். குழந்தை நட்சத்திரமாக பல படங்களிலும், தொடர்களிலும் நடித்திருக்கிறேன். பிரபுதேவா சார் நடித்த "அள்ளித் தந்த வானம்' என்ற படத்தில் காசு காசு என்ற ஒரு ஹிட்டான பாடல் காட்சியில் நடித்திருந்தேன். அதன்பின் தான் விஜய் டிவியில் நிகழ்ச்சி தொகுப்பாளினியானேன். இதைத் தவிர மலையாளத்தில் இரண்டு, மூன்று படங்கள் நடித்திருக்கிறேன். "பருந்து' என்கிற படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கிறேன். மோகன்லால் சார், மம்மூட்டி சாருடன் எல்லாம் நடித்திருக்கிறேன். அதனால் நடிப்பது புதுசாக தெரியவில்லை.
வேறு தொடர் எதுவும் நடிக்கிறீர்களா?
வேறு தொடர் எதுவும் தற்போதைக்கு நடிக்கவில்லை. ராஜ் டிவியில் பீச் கேர்ள்ஸ் என்ற நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கிறேன். இதைத் தவிர மேடைநிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கி வருகிறேன். மற்றபடி நான் கிளாசிக்கல் டான்ஸர் என்பதால் பல வெளிநாடுகளுக்குச் சென்று நடன நிகழ்ச்சிகளும் செய்து வருகிறேன்.
சினிமாவில் நடிக்க முயற்சி செய்யவில்லையா?
தமிழில் பெரியதிரையில் இருந்து வாய்ப்புகள் வருகின்றன. ஆனால் நானும் படத்தில் நடித்துவிட்டேன் என்று வந்து போக எனக்கு அவ்வளவாக விருப்பமில்லை. கொஞ்சம் தாமதமானாலும் நல்ல கதையாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். அதுபோன்ற கதை அமையும்போது கண்டிப்பாக நடிப்பேன்.
நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவது, நடிப்பது இவற்றில் எதைச் சுலபமாக உணர்ந்தீர்கள்?
நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவதுதானே என்று அலட்சியமாக இருந்துவிட முடியாது, ஏனென்றால் அங்கே கட் சொல்லி ஒன்ஸ்மோர் எல்லாம் போக முடியாது. கல்யாணியின் திறமைகளை வெளிப்படுத்தவேண்டும். ஆனால் நடிப்பு அப்படியில்லை இயக்குநர் உருவாக்கி வைத்திருக்கும் கதாபாத்திரத்துக்கு உயிர் கொடுக்க வேண்டும். அங்கே கல்யாணிக்கு வேலையில்லை. எந்த வேலை செய்தாலும் அதை நேர்த்தியாகச் செய்து நல்ல பெயர் எடுக்க வேண்டும் என்று நினைப்பவள் நான்.
குடும்பம் குறித்து?
தாய்மொழி மலையாளம். சொந்த ஊர் கொல்லம். ஆனால் நாங்கள் குழந்தையாக இருக்கும் போதே சென்னைக்கு வந்து செட்டில் ஆகிவிட்டோம். என் அப்பா ஜி.கே. சுரேஷ் பைலட்டாக இருக்கிறார். அம்மா வீணா சுரேஷ், அவர்களும் கிளாசிக்கல் டான்ஸர். நான் ஒரே பெண்தான். என்னுடைய சின்ன வயதில் அம்மாவுடன் போய் டான்ஸ் புரோகிராம் எல்லாம் செய்வேன். அப்போதுதான் நடிக்க வாய்ப்பு கிடைத்து நடிக்க வந்தேன்.
http://www.dinamani.com/Images/article/2011/4/9/k13.jpg
Nandri. Dinamani
tks for posting aanaa.
ஞாயிறு கொண்டாட்டம்
உங்கள் குடும்பத்தில் ஒருத்தியாக..!
First Published : 01 May 2011 12:00:00 AM IST
Last Updated :
கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் "உறவுக்கு கை கொடுப்போம்' தொடரில் செந்தாமரையாக நடித்து வரும் சார்மியை இந்த வாரம் சந்தித்தோம். குழந்தை நட்சத்திரமாக திரைத்துறையில் அறிமுகமாகி, இன்று பெரியதிரையில் நாயகர்கள், நாயகிகளுக்கு அம்மா கேரக்டர் வரை செய்து வரும் அவருடன் ஒரு சுவையான கலந்துரையாடல்.
"உறவுக்கு கை கொடுப்போம்' தொடரில் உங்களின் செந்தாமரை கதாபாத்திரத்தைப் பற்றிச் சொல்லுங்கள்?
இந்தத் தொடரில் இரண்டாவது நாயகி செந்தாமரையாக நடித்து வருகிறேன். என்னைத் துரத்தித் துரத்திக் காதலிப்பரை மணந்து கொள்வேன். இதனால் என் மாமனாருக்கு என்னைப் பிடிக்காது அதனால் அவர் என்னை கஷ்டப்படுத்துவது போன்ற கேரக்டர். வெளியிடங்களுக்குப் போகும்போது நிறைய பேர் என் கேரக்டரை பார்த்து என் மீது பரிதாபப்பட்டுப் பேசியிருக்கிறார்கள். அவர்கள் அப்படி பேசும்போது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது.
குழந்தை நட்சத்திரமாக ஆரம்பித்துத் திரையில் நடித்துக் கொண்டிருக்கிறீர்கள். உங்கள் நடிப்பு அனுபவத்தைப் பற்றிச் சொல்லுங்கள்?
என் அப்பா நடிகர் சந்திரபாபுவின் மிக நெருங்கிய நண்பர். அதனால் நான் சிறுபிள்ளையாக இருக்கும் பொழுதிலிருந்தே எங்கள் குடும்பத்துக்கும் சினிமாவுக்கும் ஒரு பந்தம் உண்டு. அப்பவே நான் ஒரு நடிகையாகத்தான் வர வேண்டும் என்று முடிவு செய்துவிட்டேன். அப்போதே நிறைய படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது. "அன்புள்ள ரஜினிகாந்த்' படத்தில் மீனா நடித்த கேரக்டரில் நான்தான் முதலில் நடிப்பதாக இருந்தது. "தூங்காதே தம்பி தூங்காதே' படத்தில் கமல் சாரோட தங்கச்சி கேரக்டரும் நான்தான் நடிப்பதாக இருந்தது. ஆனால் என் அப்பா படிப்பு முடியும் வரை சினிமா பக்கமே போகக் கூடாது என்று கண்டிப்பாகச் சொல்லியிருந்தார். அதனால் படிப்பை முடித்தவுடன் பெரியதிரையில் நடிக்க வந்துவிட்டேன். கிட்டதட்ட முப்பத்தி இரண்டு படங்களுக்கு மேல் நடித்திருக்கிறேன். ஹீரோயின் கேரக்டரில் இருந்து, அக்கா, தங்கை,அம்மா என எல்லாவிதமான கேரக்டரும் செய்து வருகிறேன்.
உங்களை மக்களுக்கு அடையாளம் காண்பித்த தொடர் அல்லது படம் எது?
பெரியதிரையில் "ஒயிலாட்டம்' என்ற படம் என்னை மக்கள் முன் அறிமுகப்படுத்தியது. அதற்கு அடுத்து "சிந்துபாத்' தொடரில் ஒரு சின்ன கேரக்டரில் நடித்திருந்தேன். அது மக்களிடையே வெகுவாக வரவேற்பைப் பெற்றுத் தந்தது.
சின்னதிரையில் வேறு தொடர் எதுவும் நடிக்கிறீர்களா?
"உறவுக்கு கை கொடுப்போம்' தொடர் மட்டும் தற்போது போய்க் கொண்டிருக்கிறது. அடுத்து ஒரு நல்ல கேரக்டராக அமைந்தால் கண்டிப்பாக நடிப்பேன். என்னைப் பொருத்தவரை நிறைய படங்களிலோ, தொடரிலோ நடித்துப் பணம் சம்பாதிப்பதைவிட நல்ல கேரக்டரில் நடித்து நல்ல பெயர் வாங்க வேண்டும் என்பதுதான் ஆசை. அதனால் குறைவாக நடித்தாலும் கேரக்டர் பிடித்திருந்தால்தான் நடிப்பேன். இதைத் தவிர பெரியதிரையில் படங்களில் நடித்து வருகிறேன். சமீபத்தில் "கோட்டி', "புழல்' போன்ற படங்களில் அம்மா கேரக்டரில் நடித்திருக்கிறேன். அடுத்து தற்போது ரிலீஸ் ஆக உள்ள படங்கள் "காந்தி கணக்கு', "காதலித்துப் பார் வேதனை புரியும்', "பாண்டியன் எக்ஸ்பிரஸ்' போன்ற சில படங்களில் நடித்து வருகிறேன். நடிப்பைத் தவிர மேடை நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கிவருகிறேன். இதையடுத்து கடவுள் ஏசு பிரானின் மகிமையைச் சொல்லும் ஏஞ்சல் டிவியில் நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்கி வருகிறேன். நேரம் கிடைக்கும் பொழுது நடன நிகழ்ச்சியும் செய்து வருகிறேன்.
சின்னதிரை, பெரியதிரை எதில் நடிப்பது விருப்பமாக இருக்கிறது?
பெரியதிரையில் நடிப்பதுதான் எனக்கு சுலபமாக தோன்றுகிறது. ஏனென்றால் பெரியதிரையைப் பொருத்தவரை ஒவ்வொரு கேரக்டரும் மிகவும் உணர்வுபூர்வமாக இருக்கும். அதுமட்டுமில்லாமல் எனக்கு சிறுவயது முதலே பெரியதிரையில் ஆர்வம் அதிகம். அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.
அதற்காக சின்னதிரை மீது நாட்டம் இல்லை என்பதில்லை. அதேசமயத்தில் டி.வி.யில் உடனடியாக அங்கீகாரம் கிடைக்கிறது. இன்றைய சூழ்நிலையில் சின்னதிரைக்கு அதிக வரவேற்பிருக்கிறது. ஒரு தொடரில் நடித்தாலும் ரசிகர்களின் குடும்பத்தில் ஒருத்தியாக மாறிவிடலாம். பெரியதிரையில் மூன்று மணிநேரத்தில் நம்முடைய கேரக்டர் முடிந்துவிடும். ஆனால் சின்னதிரையில் அப்படியில்லை. மெகா தொடர்களாக வருவதால் வருடக்கணக்கில் தினமும் நம் முகத்தை மக்கள் பார்க்கிறார்கள். நான் முன்பே சொன்னது போன்று வெளியிடங்களுக்குப் போகும்போது அவர்கள் குடும்பத்துப் பெண் போன்று மக்கள் வந்து நலம் விசாரிக்கிறார்கள். நாம் வில்லியாக நடித்தால் கோபப்படுகிறார்கள். அதுவே பாஸிட்டீவ்வாக நடித்தால் நம் மீது பரிதாபப்படுகிறார்கள். அது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது.
நீங்கள் இதுவரை இது போன்ற கதாபாத்திரத்தில் நடிக்கவில்லையே என்று வருத்தப்பட்டதுண்டா?
வருத்தம் என்பதைவிட ஆசை என்று சொல்லலாம். "படையப்பா'வில் வரும் நீலாம்பரி கேரக்டரைப் போன்ற போல்டான கேரக்டரில் நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டதுண்டு. அதேபோல் வில்லி கேரக்டர்களிலும் நடிக்க வேண்டும் என்று நினைத்ததுண்டு.
உங்களைப் பற்றி?
என் கணவர் ராஜேஷ் செல்போன் கம்பெனி ஒன்றில் என்ஜினீயராக வேலை பார்க்கிறார். எங்களுக்கு இரண்டரை வயது மகன் இருக்கிறார். நான் மிகவும் கடவுள் நம்பிக்கை உள்ளவள். எனக்கு இதுபோன்ற ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொடுத்த கடவுளுக்கு நன்றி.
http://www.dinamani.com/Images/artic...kondattam7.jpg
கையில் சூடம் ஏற்றிப் பூஜை செய்தார்கள்!
சேது படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் அபிதா. இவர் தற்போது திருமதி செல்வம் தொடரின் நாயகி அர்ச்சனாவாக நடிப்பதன் மூலம் இல்லத்தரசிகளின் இதயத்தில் சிம்மாசனமிட்டு அமர்ந்திருக்கிறார். இத்தொடர் பற்றி அவர் கூறுகையில் சில நாட்களுக்கு முன் ஊட்டியில் இருந்து ஒரு பெண் போன் செய்து இந்தத் தொடரைப் பற்றி கூறினாள் : ""எங்கள் வீட்டில் நடப்பது போலவே இந்தத் தொடர் இருக்கிறது. இதைப் பார்த்ததன் மூலமாகப் பிரிந்திருந்த எங்கள் பெற்றோர் ஒன்று சேர்ந்து விட்டார்கள்'' என்று சொன்னது ரொம்ப சந்தோஷமாக இருந்தது. மேலும் தொடருகிறார்...
திருமதி செல்வம் தொடரில் அப்பாவி அர்ச்சனாவாக வந்து இப்படி ரசிகர்களின் பரிதாபத்தை அள்ளுகிறீர்களே?
பொறுப்பான குடும்பத் தலைவன் செல்வத்துக்கு ரொம்ப சாஃப்ட்டான திருமதி நான். ரொம்ப சிக்கனமான மிடில் கிளாஸ் ஃபேமிலி எங்களோடது. இப்போ கொஞ்சம் பணம் வர வர தாராளமாச் செலவு செய்ய ஆரம்பிப்பார் செல்வம். ஆனா பணம் வருதுன்னு இப்படி தாராளமா செலவு செய்யக் கூடாதுன்னு நான் சொல்வேன்.இப்படித்தான் போய்க்கிட்டு இருக்கு எங்க திருமதிசெல்வம் வாழ்க்கை. இந்தத் தொடரைப் பார்த்தீங்கன்னா நிறையக் குடும்பங்களில் நடக்கிற நிஜ சம்பவம் போலவே இருக்கிறது என்று நிறையப் பேர்போன் செய்து சொல்லியிருக்கிறார்கள். இன்ப,துன்பம் இரண்டும் கலந்தது தான் வாழ்க்கை. அதைத்தான் திருமதிசெல்வம் சொல்கிறது.
பல வருடங்களாக ஒரே கேரக்டரில் நடிக்க சலிப்பு ஏற்பட வில்லையா?
இந்தத் தொடரைப் பொறுத்தவரை சலிப்பு எப்பவுமே வந்ததில்லை. ஏனென்றால் அவ்வளவு எதார்த்தமான கதை இது. நாம் நிஜ வாழ்க்கையில் சந்திக்கும் பிரச்னைகளும், சந்தோஷத்தையும், துக்கத்தையும் கண்முன்னே கொண்டு வருவதால். ஆடியன்சின் வரவேற்பு இந்தத் தொடருக்கு அதிகம் கிடைக்கிறது. உதாரணத்துக்குச் சொல்ல வேண்டும் என்றால் இரண்டு வருடங்களுக்கு முன் நான் விபத்துக்குள்ளாகி இறந்துவிட்டதாக ஒரு வதந்தி வந்ததல்லவா? அப்போது பார்த்தீங்கன்னா நிறைய பேர் அழுதுகிட்டே எனக்கு போன் செய்து விசாரித்தார்கள்.
அதுபோல சென்னை கோயிலில் ஓர் அம்மா கையில் சூடம் ஏற்றி பூஜை செய்தார்களாம். அப்போது அங்கு சென்ற இன்னோர் அம்மா அதைப் பார்த்துவிட்டு என்னவென்று விசாரித்திருக்கிறார்கள் அதற்கு அந்தம்மா சொன்னார்களாம். திருமதி செல்வம் தொடரில் வரும் அர்ச்சனாவுக்கு ஆக்சிடண்ட் ஆகிவிட்டதாம். அவங்களுக்கு எதுவும் ஆகாமல் நல்ல படியா பிழைத்து வரவேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன் என்று சொல்லியிருக்கிறார்கள். நான் இங்கு சூட்டிங் வந்த பிறகு இந்த விஷயத்தை எங்களுக்குப் போன் மூலம் அம்மா தெரிவித்தார்கள். கேட்பதற்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது. இந்த ஆடியன்ஸ் எல்லாம் எப்படி என்னை அவர்கள் வீட்டு பெண்ணைப் போல பாவிக்கிறார்கள் என்று நினைக்கும் போது ஒவ்வொருநாளும் இதைவிட இன்னும் நல்லா செய்ய வேண்டும் என்ற ஆர்வம் வருகிறதே தவிர, சலிப்பு ஏற்பட்டதில்லை.
அர்ச்சனா கேரக்டரைப் போன்று நேரில் பார்த்திருக்கிறீர்களா?
நானே அந்த மாதிரி கேரக்டர் தான். அதைத் தவிர இந்தத் தொடரில் நடிக்க ஆரம்பித்த பிறகு நிறையப் பேர் போன் செய்து சொல்லியிருக்கிறார்கள். எங்க வீட்டில் நடப்பது போன்று இருக்கிறது. அல்லது அக்கம் பக்கத்து வீட்டு ஆட்களைப் பற்றி சொல்லுவது போல இருக்கிறது என கேள்விப்பட்டிருக்கிறேன். மற்றபடி ஸ்பாட்ல டைரக்டர் என்ன சொல்றாரோ, அதைத்தான் செய்கிறேன்.
வேறு தொடர் எதுவும் நடித்துக் கொண்டிருக்கிறீர்களா?
இந்தத் தொடரை தவிர கலைஞர் டிவியில் தங்கமான புருஷன் தொடர் மறு ஒளிபரப்பாகிறது. மற்றபடி வேற எந்த தொடரிலும் தற்போதைக்கு நடிக்கவில்லை. நல்ல கதை அமையும் போது கண்டிப்பாக நடிப்பேன்.
பெரிய திரையில் உங்கள் நடிப்பை பார்த்து வெகுநாட்கள் ஆகிறதே மறந்துவிட்டீர்களா?
அப்படியெல்லாம் இல்லை. இப்போது தான் என் குழந்தைக்கு ஒரு வருடம் ஆகப் போகிறது. அதனால் கொஞ்சநாள் கழித்து நடிக்கலாம் என்று காத்திருந்தேன். நல்ல பேனர்ல, நல்ல கேரக்டர்கள் வந்தால் கண்டிப்பாக நடிப்பேன்.
கேரளாவில் இருந்து சூட்டிங்கிற்காக சென்னைக்கு வந்து போவது சிரமமாக இல்லையா?
ஆரம்பத்தில்தான் சிரமம் தெரிந்தது, இப்பொழுது பழகிவிட்டது. சூட்டிங் இல்லாத நாட்களில் கேரளாவில் என் குழந்தையோடு தான்இருப்பேன்.
நடிப்பைத் தவிர வேறு எந்தத் துறையில் ஆர்வம் இருக்கிறது?
என் கணவர் ஒரு பிஸினஸ்மேன் என்பதனால் அவரோடு இணைந்து நானும் ஏதாவது பிஸினஸ் செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. மற்றபடி வருங்கால திட்டம் என்று எதுவும் கிடையாது.
உங்கள் ஓய்வு நேரங்களில் என்ன செய்வீர்கள்?
ஓய்வு நேரமா? அப்படி ஓய்வு நேரம் எல்லாம் கிடைப்பதே இல்லைங்க. வீட்டில் இருந்தால் குழந்தையோடவே நேரம் சரியாக இருக்கும். அதே போல வீட்டில் இருக்கும் பொழுது நான்தான் சமையல் வேலைகளை எல்லாம் கவனிப்பேன். நன்றாகச் சமைக்கவும் செய்வேன். மற்றபடி சூட்டிங் சென்றுவிடுவேன்.
உங்கள் குடும்பம் பற்றி?
எனக்கு மூன்று சகோதரிகள் இருக்கிறார்கள். மூன்று பேருமே திருமணமாகி கேரளாவிலேயே செட்டில் ஆகிவிட்டார்கள். நான் நாலாவது பெண். அம்மா என்னோட தான் இருக்கிறார்கள். என் கணவர் சுனில். என் குழந்தை பேரு அல்சா.
கனவு கதாபாத்திரம் என்ன?
படையப்பா படத்தில் ரம்யா கிருஷ்ணன் நடித்தது போன்ற போல்டான வேடங்களில் நடிக்க வேண்டும். அது போல நல்லா சண்டை போடுவது போல் நெகட்டீவ் கேரக்டர்களும் செய்ய வேண்டும் என்று ஆசையிருக்கிறது.
if you go through the replies of the artists, all looks like sterio type.
why?.
looks like same stories repeating in serials.
ஞாயிறு கொண்டாட்டம்
சாதிப்பதற்கு தடையில்லை!
கன்னட சின்னதிரை நடிகையான மகாலஷ்மி
விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் "பிரிவோம் சந்திப்போம்' தொடரின் மூலம் தமிழ் சின்னதிரையில்
அடியெடுத்து வைத்திருக்கிறார்.
அவரை தொலை பேசியில் தொடர்பு கொண்டு பேசினோம். தமிழில் ஒரு தொடராவது நடிக்க வேண்டும் என்பது என் கனவு. இந்தத் தொடரின் மூலம் என் கனவு
நனவாகியுள்ளது என்கிறார்.
உங்களைப் பற்றி?
என்னுடைய சொந்த ஊர் பெங்களுர். சட்டம் படித்து வருகிறேன். கன்னட சின்னதிரை நடிகையாக இருக்கிறேன். தெலுங்கு தொடரில் நடிக்க வாய்ப்பு கிடைத்து நடித்தேன். அதன் மூலமாகத்தான் தமிழில் பிரிவோம் சந்திப்போம் தொடர் பற்றி கேள்விப்பட்டு அதன் இயக்குனர் ரசூல் ஸôரை வந்து பார்த்தேன். அந்தக் கதைக்கு நான் பொருத்தமாக இருந்ததால் இப்போது கதையிலே நடிக்கிறேன். எனக்குத் தமிழ் ரொம்ப பிடிக்கும். அதனால் தான் தமிழ் தொடர் என்றதும் உடனே ஒத்துக் கொண்டேன். தமிழ் தொடரில் நடிக்க வாய்ப்புக் கிடைத்தது எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது.
பிரிவோம் சந்திப்போம் பற்றி?
இந்தத் தொடர் தான் தமிழில் எனக்கு முதல் தொடர். இதில் இரண்டு நாயகிகள் இருக்கிறோம். இந்தத் தொடர் மனிதர்களின் நிற வேறுபாட்டை அடிப்படையாக கொண்ட தொடர். இதில் நான் கறுப்பு நிற பெண் ஜோதியாக நடிக்கிறேன். பொதுவாக வெள்ளையாக இருப்பவர்களை தான் மற்றவர்கள் ரசிப்பார்கள். கறுப்பாக இருப்பவர்கள் மீது அவ்வளவு ஈர்ப்பு இருக்காது.
கறுப்பாக இருக்கும் ஒரு பெண் எந்த மாதிரியான பிரச்னைகளை எல்லாம் சந்திக்கிறாள் என்பதுதான் என் கேரக்டர்.
பொதுவாக பெண்கள் தங்களை அழகாக காண்பிக்க வேண்டும் என்றுதான் ஆசைப்படுவார்கள், ஆனால் இந்தத் தொடரில் நீங்கள் கறுப்பு நிற பெண்ணாக வருகிறீர்கள். அதற்காக வருத்தப்பட்டதுண்டா?
கண்டிப்பாக வருத்தப்பட்டதில்லை. அதுவுமில்லாமல் நிறத்தை ஒரு பொருட்டாக நான் ஒரு போதும் நினைத்ததில்லை. இதுபோன்று ஒரு கேரக்டர் செய்வதற்கு நான் ரொம்ப சந்தோஷப்படுறேன்.
உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் நிறத்தில் என்ன இருக்கிறது? கறுப்பாக இருக்கிறவர்கள் படித்து நல்ல நிலைமைக்கு வருவதில்லையா? நாம் கறுப்பாக இருப்பதால் மற்றவர்கள் நம்மை உதாசீனப்படுத்தி விடுவார்களோ என்று பயந்தால் எதுவுமே சாதிக்க முடியாது. உலகில் சாதனையாளர்கள் யாரும் நிறத்தைப் பற்றி எல்லாம் யோசிப்பது கிடையாது. சாதிப்பதற்கு நிறம் தடையாக இருந்ததில்லை.
நிஜத்தில் நீங்கள் கறுப்பு நிறம் தானா?
என் நிறத்தைப் பற்றி சொல்லிவிட்டால் சுவாரஸ்யம் குறைந்துவிடும். அதனால் அது ரகசியமாக இருக்கட்டும்.
தமிழ் நன்றாக பேசுகிறீர்களே எப்படி?
பெங்களுரில் எங்கள் அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்கள் எல்லாம் தமிழ் ஆட்கள். அதனால் சின்ன வயதில் இருந்து அவர்களோடு பேசிப் பேசி தமிழ் நன்றாக கற்றுக் கொண்டேன். இங்கே தொடருக்காக முதல் நாள் நடிக்க வந்தபோதுகூட யாருக்கும் தெரியாது நான் கன்னட பெண் என்று. அந்த அளவுக்கு தமிழ் நன்றாக பேசினேன். அதேப் போல தெலுங்கிலும் நன்றாகப் பேசுவேன்.
தமிழில் வேறு தொடர் எதுவும் நடிக்கிறீர்களா? பெரியதிரையில் நடிக்கிற எண்ணம் உண்டா?
தற்போதைக்கு வேறு எந்தத் தொடரிலும் நடிக்கவில்லை. பெரியதிரையில் நடிக்கிற எண்ணம் இல்லை. ஆனால் படங்களுக்கு எடிட்டிங் செய்ய வேண்டும் என்று ஆசையிருக்கிறது. அதற்கான பயிற்சி எடுத்து வருகிறேன்.
குடும்பம்?
அப்பா ருஷிக் குமார் மைசூர் சாண்டல் கம்பெனியில் வேலை பார்க்கிறார். அம்மா சுசீலா, குடும்பத் தலைவி. நான் வீட்டுக்கு ஒரே பெண்தான். ஆனால் தாத்தா, பாட்டி, பெரியப்பா, சித்தப்பா என்று பெரிய கூட்டுக் குடும்பமாக இருக்கிறோம்.
nandri.dinamani