மக்கள் கலைஞர் ஜெய்சங்கர் நடித்த 'டீச்சரம்மா' படத்தில் நாகேஷ் அவர்கள் ஓவியக் கலைக்கூடம் நடத்துவதாக வரும் ஒரு காட்சி. நடிகர் திலகத்தின் 'வீரபாண்டிய கட்டபொம்மன்' காவியத்தில் நடிகர் திலகம் அவர்கள் கட்டபொம்மனாக குதிரையின் மேல் கம்பீரமாக அமர்ந்து போர் புரியும் காட்சியை 'இடிச்சபுளி' செல்வராஜ் ஓவியமாய் வரைந்திருப்பது போன்ற காட்சி அது. அது மட்டுமல்லாது நாகேஷ் இடிச்சபுளியிடம்,"என்னடா வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தை வரையச் சொன்னா சிவாஜியின் படத்தை வரைஞ்சிருக்கே!" என்று கேட்க அதற்கு இடிச்சபுளி அந்த ஓவியத்தை நாகேஷிடம் காட்டி "சிவாஜிதான் வீரபாண்டியக் கட்டபொம்மன்...வீரபாண்டியக் கட்டபொம்மன்தான் சிவாஜி... இவரைப் பாத்துதான் வீரபாண்டிய கட்டபொம்மன் எப்படி இருப்பாரு என்று எல்லோரும் தெரிஞ்சுகிட்டாங்க" என்று நடிகர் திலகத்திற்கு புகழாரம் சூட்டுவார். அந்த ஓவியக் காட்சி இதோ நமது பார்வைக்கு.
மக்கள் கலைஞர் ஜெய்சங்கர் நடித்த 'டீச்சரம்மா' படத்தில் இடம் பெற்ற நம் கட்டபொம்மரின் ஓவியம்
http://i1087.photobucket.com/albums/...t%20-2/1-1.jpg
அன்புடன்,
வாசுதேவன்