இருக்கட்டும் . உங்களை போன்ற மேதாவிகளிடமிருந்து இகழ்தலையும் தூற்றுதலையும் பெறுவதில் பெருமை கொள்கிறேன்.
Printable View
டியர் வாசுதேவன் சார்,
தாராவின் அருமையான நிழற்படங்களை தங்கள் அருமையான கமெண்ட்களோடு பார்ப்பதற்கு மிக மிக அற்புதமாக உள்ளது. நன்றிகள் பல.
இதென்ன சார் வைப்ரேஷன்?. தாராவை அடுத்து விஸ்வத்தை அலசலாம் என்று நினைத்து திரியைத் திறந்தால் அடுத்த இன்ப அதிர்ச்சி. விஸ்வத்தை மிக சூப்பராக அலசித்தள்ளிவிட்டீர்கள். நமக்குள் இப்படி ஒரு வைப்ரேஷனா. அசந்து விட்டேன்.
இப்போதே சொல்கிறேன். அடுத்து "ஜம்பு"வை பற்றி நான்தான் எழுதுவேன்....
கார்த்திக் சார்,
கனியிருப்ப காய் கவர்ந்தற்று. ஜம்புவை பற்றி வாசுவே எழுதட்டும். நாம் ஜாலியாக காஞ்சனா,ஜெயகுமாரி, சகுந்தலா,பத்மாகன்னா,சினேகலதா,சத்யப்ரியா,விஜயலலிதா, விஜயஸ்ரீ,ஆலம் என்று புகுந்து விடலாம் என பார்த்தால், வில்லன்களிடம் தஞ்சம் புகுகிறீர்களே? என்ன இது?
நடிகர்திலகத்தோடு ஜோடியாக (நேரடி) நடித்த கதாநாயகிகள் 59 பேர்.ஜோடியாக நடித்த படங்கள் எண்ணிக்கையில்.
பத்மினி-32 , கே.ஆர்.விஜயா-32,ஜெயலலிதா-18,
சரோஜாதேவி-17,சுஜாதா-16,தேவிகா-12,ஸ்ரீப்ரியா-11,சௌகார்-11,சாவித்திரி-11,வாணிஸ்ரீ-9, மஞ்சுளா-9,பண்டரி பாய்-8,பானுமதி-7,லக்ஷ்மி-7,ஜமுனா-7,எம்.என்.ராஜம்-6,உஷா நந்தினி-5,வடிவுக்கரசி -4,ஸ்ரீவித்யா-3,வைஜயந்தி மாலா-3,ஜி.வரலக்ஷ்மி-3,பாரதி-2,விஜயகுமாரி-2,அம்பிகா-2,ராதா-2,ஸ்ரீதேவி-2,ஸ்ரீரஞ்சனி-2,கிருஷ்ணகுமாரி-2,வசந்தா-2,சாரதா-2,அஞ்சலிதேவி-2,மைனாவதி-2,லலிதா-2,ராஜசுலோச்சனா-2,லதா-1,காஞ்சனா-1,மாலினி-1,வெண்ணிற ஆடை நிர்மலா-1,மணிமாலா-1,விஜயஸ்ரீ-1,விஜய நிர்மலா-1,பத்மப்ரியா-1,எஸ்.வரலக்ஷ்மி-1,மாலினி பொன்சேகா-1,சிலோன் கீதா-1,ரீனா-1,ராதிகா-1,ஜெயசுதா-1,குசலகுமாரி-1,பிரமிளா-1,மாதுரி தேவி-1,சரிதா-1,ராஜஸ்ரீ-1,கமலா-1,ருக்மிணி-1,சந்தியா-1,மனோரமா-1,சுமித்ரா-1,ஜெயபாரதி-1.
நடிகர்திலகம்
மொத்தம் 49 இசையமைப்பாளர்களோடு பணியாற்றியுள்ளார்.
எம்.எஸ்.விஸ்வநாதன்-95,கே.வீ.மகாதேவன்-38,விஸ்வநாதன்-ராமமூர்த்தி-24,இளையராஜா-23,ஜி.ராமநாதன்-18,சங்கர் கணேஷ்-9,டி.ஜி.லிங்கப்பா-6,எஸ்.வீ.வெங்கட்ராமன்-5,கங்கை அமரன்-5,எஸ்.எம்.சுப்பையா நாயுடு-4,டி.ஆர்.பாப்பா-4,சுதர்சன்-3,சந்திர போஸ்-3,சக்கரவர்த்தி-3,சி.என்.பாண்டுரங்கன்-2,எஸ்.தக்ஷிண மூர்த்தி-2,டி.சலபதிராவ்-2,எஸ்.ராஜேஸ்வர் ராவ்-2,குன்னக்குடி -2,மனோஜ் கியான்-2,வித்யா சாகர்-2,தேவா-2,ஆதிநாராயண ராவ்-1,எம்.ஜி.நாய்டு-1,தண்டாயுத பாணி-1,என்.எஸ்.பாலகிருஷ்ணன்-1,கண்டசாலா-1,கிருஷ்ண மூர்த்தி-1,ராம்நாத்-1,பீ.என்.ஆர்-1,கோவிந்த ராஜுலு-1,ஏ.எம்.ராஜா-1,டி.கே.ராமமூர்த்தி-1,ஜி.தேவராஜன்-1,புகழேந்தி-1,கோவர்தனம்-1,வீ.குமார்-1,சங்கர்-ஜெய்கிஷன்-1,கே.ராகவன்-1,எம்.ஏ.ரவீந்தர்-1,தேவேந்திரன்-1,எம்.ரங்கா ராவ்-1,டி.ராஜேந்தர்-1,ஜே.வீ.ராகவலு-1,
அம்சலேகா-1,ஸ்ரீராஜா-1,கீதப்ரியன்-1, ஏ.ஆர்.ரகுமான்-1.
நடிகர்திலகம் 96 இயக்குனர்களோடு பணியாற்றியுள்ளார்.((கௌரவ வேடங்கள் நீங்கலாக)
ஏ.சி.திருலோகச்சந்தர்-20,ஏ.பீம்சிங்-18,பீ.மாதவன்-15,சி.வீ.ராஜேந்திரன்-14,கே.விஜயன்-14,டீ.யோகானந்த்-13,ஏ.பீ.நாகராஜன்-12,வீ.ஸ்ரீனிவாசன்-8,பீ.ஆர்.பந்துலு-7,கிருஷ்ணன்-பஞ்சு-7,ஸ்ரீதர்-7,கே.சங்கர்-7,ஆர்.கிருஷ்ணமூர்த்தி-7,எல்.வீ.பிரசாத்-6,ராமண்ணா-6,கே.எஸ்.கோபாலகிருஷ்ணன்-5,கே.எஸ்.பிரகாஷ் ராவ்-5,கே.சோமு -5,தாதாமிராசி-3,ப.நீலகண்டன்-3,சி.எச்.நாராயண மூர்த்தி-3,வீ.பீ.ராஜேந்திர பிரசாத்-3,ஏ.காசிலிங்கம்-3,எஸ்.பீ.முத்துராமன்-3,கார்த்திக் ரகுநாத்-3,மேஜர் -3,ஏ.எஸ்.ஏ.சாமி-2,வேம்பு-2,ஆர்.எம்.கிருஷ்ண சாமி-2,வீ.எஸ்.ராகவன்-2,பீ.எஸ்.ரங்கா-2,பீ.புல்லையா-2,டி.பிரகாஷ் ராவ்-2,டி.ஆர்.ரகுநாத்-2,எஸ்.எம்.ஸ்ரீராமுலு நாய்டு-2,வீ.சுந்தரம்-2,அமிர்தம்-2,ஏ.ஜகந்நாதன்-2,பாரதி ராஜா-2,ராஜசேகர்-2,,என்.எஸ்.கே-1,டி.ஆர்.சுந்தரம்-1,எம்.நடேசன்-1,எஸ்.டீ.சுந்தரம்-1,ஜி.ஆர்.ராவ்-1,எஸ்.பாலச்சந்தர்-1,எஸ்.ஏ.முருகேஷ்-1,சுந்தர் ராவ் நட்கர்னி-1,ஜே.சிங்கா-1,ஏ.சுப்பா ராவ்-1,ராமகிருஷ்ணா-1,பீ.ஸ்ரீதர் ராவ்-1,கே.ஜே.மகாதேவன்-1,எஸ்.எஸ்.வாசன்-1,எஸ்.எஸ்.பாலன்-1,ஆர்.எஸ்.மணி-1,ஏ.சுப்பா ராவ்-1,ஏ.டி.கிருஷ்ணசாமி-1,பீ.ஆர்.சந்திரன்-1,ஜி.ஆர்.நாதன்-1,டி.என்.பாலு-1,கே.பாலச்சந்தர்-1,எஸ்.ராமநாதன்-1,சாவித்திரி-1,மல்லியம் ராஜகோபால்-1,சாணக்கியா-1,எஸ்.ஏ.கண்ணன்-1,ஏ.வின்சென்ட்-1,அப்பச்சன்-1,எம்.ஏ.திருமுகம்-1,கே.பாப்பையா-1,துரை-1,விஜய நிர்மலா-1,ராஜகணபதி-1,எஸ்.எஸ்.கே-1,கிருஷ்ணா-1,கே.பாக்யராஜ்-1,பாரதி வாசு-1,ஏ.எஸ்.பிரகாசம்-1,பாலச்சந்திர மேனன்-1,மனோஜ் குமார்-1,தாசரி நாராயண ராவ்-1,கே.ராகவேந்திர ராவ்-1,மணிவண்ணன்-1,சந்தான பாரதி-1,சி.குக நாதன்-1,பரதன்-1,மனோபாலா-1,பிரதாப் போதன்-1,எஸ்.ஏ.சந்திர சேகர்-1,ஆர்.வீ.உதயகுமார்-1,ஹாசன்-1,பிரசாந்த் குமார்-1,கே.எஸ்.ரவிக்குமார்-1,ஏ.வெங்கடேஷ்-1.ராம்சந்தர்-1.கஸ்தூரி ராஜா-1.
கார்த்திக் சார் ஜம்புவை ஜம்மென்று அலசுவார். அவர் எழுதினால் மிக மிக அற்புதமாக இருக்கும். ஆனந்தமாக ரசிக்கலாம். கவர்ச்சி வில்லன் கூட கலக்குவாரே! எத்தனையோ படங்களில் அவர் தலை காட்டியிருந்தாலும் அவருக்கு மிகவும் பெயர் வாங்கிக் கொடுத்த கேரக்டர் அல்லவா! அதுவும் தலைவர் ரசிகர்களின் பாராட்டைப் பெறுவதென்றால் சும்மாவா? பூவோடு சேர்ந்தால் நாரும் மணம் பெறும் அல்லவா!
இரண்டாவது நடிகர் திலகம் அல்லாது மற்ற திறமைசாலிகளுக்கும் முன்னுரிமை கொடுத்து அவர்களின் திறமையை அலசிப் பாராட்டுவதில் நமது திரிக்கு ஈடேது? என்ன நான் சொல்றது?
கோ,
நடிகர் திலகத்துடன் பணிபுரிந்த நாயகியர் மற்றும் இயக்குனர்கள், இசையமைப்பாளர்கள் லிஸ்ட் சூப்பர். எனக்கு ரொம்ப உதவியாக இருக்கும். ஆமாம்! தெலுங்கெல்லாம் ஒழுங்காகச் சேர்த்து விட்டீர்களா? சரி! சரி! திட்டாதீர்கள். நான் செக் செய்து கொள்கிறேன்.
கோ,
உங்கள் item girls லிஸ்ட்டில் வாணிஸ்ரீயை விட்டு விட்டீர்களே!:-D
ரந்தாவாவுக்கு பின்னணிக் குரல் கொடுத்தது பி.டி.ரட்சகன் என்று நினைக்கிறேன். தெலுங்கில் இருந்து தமிழில் மொழி மாற்றம் செய்யப்படும் பழைய டப்பிங் படங்களின் நாயகர்களுக்கு (குறிப்பாக என்.டி. ஆர், காந்தாராவ்) அதிகமாக பின்னணிக் குரல் கொடுக்கும் நபர். வானொலி நாடகங்களிலும் பிரசித்தம். பத்மாகன்னாவிற்கு?....
திருச்சி மக்கள் நல இயக்கம் சார்பாக நடிகர் திலகம் அவர்களின் 86 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு நடைபெறும் விழாவிற்காக தீட்டப்பட்டுள்ள சுவர் விளம்பரம்.
https://mail.google.com/mail/?ui=2&i...qya0&safe=1&zw
https://mail.google.com/mail/?ui=2&i...r0f1&safe=1&zw
தெய்வ மகன்-1969
செப்டம்பர் ஐந்தாம் தேதி 44 ஆம் வருடத்தை கடந்த தெய்வ மகன் காவியத்தை நடிகர்திலகத்தின் நடிப்பம்சத்தை மட்டும் அலசிய பதிவின் மீள் பதிவு.
ஒருங்கிணைக்க பட்டு.
மத்திய அரசு தனது தென்னிந்திய படங்களை பற்றிய மாற்றாந்தாய் பார்வையை மாற்றி கொண்டு, அன்றைய பாராமுக மாநில அரசையும் மீறி, உலக பட தர கோட்பாடுகளை தளர்த்தி,அத்தனை அறிவுஜீவிகளையும் நடிப்பு என்ற ஒரே அம்சத்தால் மட்டுமே அசர வைத்து, oscar போட்டிக்கு தேர்ந்தெடுக்க பட்ட முதல் தென்னிந்திய திரை படம் தெய்வ மகன்.(1969).
பலர் ரசித்த காட்சிகளில் என்றுமே முன்னணியில் நிற்கும் மூன்று சிவாஜி தோன்றும் காட்சியை ரசித்த கோடி கணக்கானோருக்கு,தாங்கள் ரசித்தது மூன்று வெவ்வேறு உலக நடிப்பு கல்லூரி பாணியில் அந்த உலத்திலேயே ஒப்பாரும் மிக்காரும் இல்லாத நடிகன் நடித்த ஒப்பில்லாத காட்சிதான் ,என்பது புரிந்திருக்குமா என்பது சந்தேகமே. இப்போது நாம் அலச போவது அந்த படத்தை பற்றி அல்ல.
நான் ஏற்கெனவே விளக்கிய மூன்று முக்கிய நடிப்பு பள்ளி/கோட்பாடுகளான method Acting school ,Chekhov school ,Oscar wilde concept என்ற மூன்றையும்தான் மூன்று பாத்திரங்களாக்கி அந்த மேதை மூன்று பாணிகளையும் மோத விட்டார். வேறு வேறு நடிகர்கள் அந்த மூன்று பாத்திரங்களில் மோதியிருந்தால், ஒவ்வொரு நடிகனுக்கும் உள்ள திறமையளவின் ஏற்ற தாழ்வால்,நமக்கு முடிவு தெரியாமலே போயிருக்கும். ஒரே நடிகர்,சம திறமை,சம அக்கறையுடன் மூன்று பாத்திரங்களையும் வார்த்ததால் ,போட்டிக்கு ஒரு மாதிரி தீர்ப்பு வந்தது. இரண்டு சம வலுவுள்ள சங்கர்(அப்பா), கண்ணன்(மூத்த மகன்) பத்திரங்களை method acting (அப்பா),Chekhov (மூத்த மகன்) முறைகளிலும், மிக casual ஆக உருவான light ஆன விஜய்(இளைய மகன்) பாத்திரத்தை oscar Wilde பாணியில் சுதந்திர கற்பனை திறத்துடன் கையாண்டிருந்தார்.
இங்கேதான் நமக்கு ஒரு பாடமே நடத்த பட்டுள்ளது. உலக திறமையாளனான ஒரு versatile நடிகன்,தன் கற்பனை வளத்தை பயன் படுத்தி,சராசரி வாழ்க்கையில் பார்க்கவே முடியாத ஒரு பாத்திரத்தை தன் அழகுணர்ச்சியில் வடித்தால்?
எந்த கொம்பனி டம் வேண்டுமானாலும் இன்று கூட கேளுங்கள். தெய்வமகனில் உன்னை கவர்ந்த பாத்திரம் எதுவென்று? நூற்றுக்கு நூறு பேரின் விடை விஜய்தான்.இப்போது அந்த பள்ளிகளுக்கு போட்டி வைத்தால், சமமான பாத்திர வார்ப்பாக இல்லாவிடினும்,
Method Acting , Chekhov என்ற வலுவான பள்ளிகளை புறம் தள்ளி,Oscar Wilde சுதந்திர கற்பனை கோட்பாட்டில் ஜெயித்த அந்த ஒப்பற்ற கலைஞன்,மற்ற எல்லோரையும் விட எங்கு வேறு பட்டு நின்றார் என்பது உங்களுக்கு புரிந்திருக்குமே?இருந்தாலும் விளக்கத்தான் போகிறேன்,இந்த படங்களின் பாத்திரங்களையே பாடமாக்கி.
எந்த பள்ளிகளையும் முறையாக கல்லாமல், அந்தந்த பாத்திரங்களுக்கு , இன்னின்ன முறையில்தான் வடிவமைக்க வேண்டும், இந்த பாணியில்தான் நடிக்க வேண்டும் என்று அந்த மேதைக்கு எப்படி தெரிந்தது? பிறவி மேதை என்ற பிறகு இந்த ஆராய்ச்சியே தேவையில்லை.
தெய்வமகன் சங்கர், கண்ணன் பாத்திரங்களை எடுத்து கொள்வோம்.இரண்டுமே, தன் முகத்தின் அழகு கெட்டு ,விகாரமாகி, அதனால் மற்றவர்களின் கேலிக்கும், சீண்டலுக்கும் பாத்திரமாகி , inferiority complex இனால் அவதி படும் பாத்திரங்களே. தந்தை-மகன் என்ற உறவு முறை வேறு. நடிகர்திலகம் நினைத்திருந்தால், இரண்டையுமே, ஒரே பாணியில் வடிவமைத்து சில நு ட்பங்களை மட்டுமே மாற்றியிருக்கலாம். ஆனால் பாத்திரங்களை அவர் பார்த்த முறையே வேறு.
சங்கர், சிறு வயதில் அவமானங்களை சுமந்து அவதி பட்டிருந்தாலும் ,அது அவன் வாழ்வில் ஒரு பகுதியே. Trauma என்ற சொல்லோடு கடந்து போகும். அவன் வாழ்வில், அப்பா,அம்மா, அன்பான மனைவி,பிள்ளை,நண்பர்கள் மற்றும் கஷ்ட பட்டு முன்னேறி அடைந்த தொழில் செல்வாக்கு எல்லாமே, ப்ரம்மாண்டமாகி அவன் குறையை சிறிதாக்குகிறது.தன் குறையை தினம் தினம் ஞாபக படுத்தி சித்திரவதை படுத்த வாய்ப்புள்ள ஒருவனை ,பிறவியிலேயே அழிக்க சொன்னது தனக்காக கூட இருக்கலாம்.
ஆனால் கண்ணனோ, அனாதை விடுதியில், அனுதினமும் குறையை மட்டுமே பார்க்கும் சக மனிதர்களுடன் கூட்டு புழுவாக வாழ்பவன்.மொழியறிவு, சிறிது இசை, சிறிது பாபாவின் அன்பு இவை தவிர வேறு வெளிச்சமே இல்லாத வாழ்க்கை. Herzog எடுத்த ஒரு ஜெர்மன் படத்தில், இருபது வயது வரை மோசமான நிலையில், captivity யில் இருந்த ஒரு மனிதனை, திடீரென்று ஒரு நகரத்தில் விட்டு விட்டு போய் விடுவார்கள்.(உண்மை கதை).கண்ணன் நிலை கிட்ட தட்ட அப்படித்தான்.டாக்டர் வீட்டிலும் இருட்டறை சிறை வாழ்வே. அப்போது கண்ணனின் வாழ்வே அவன் முகதழும்பு, அவமானம், சார்ந்தே சிறுது இசையுடன் பயணிக்கிறது. உள்ள போராட்டம் சங்கரை விட கண்ணனுக்கு ஏராளம்.
அதனால் சங்கருக்கு, inferiority காம்ப்ளெக்ஸ் கொண்ட ஒரு normal மனிதனை சித்தரிக்கும் method Acting .ஆனால் கண்ணனுக்கோ, முழுதும் ஆதி மனிதனின் impulsive basic instincts மட்டுமே தலை தூக்கும் பதுங்குதல்,பாய்தல்,அன்புக்கு உருகுதல் (இசை) என்ற அடிப்படை உணர்வு மட்டுமே கொண்ட,தந்தையின் தாக்கம் சிறிதளவே கொண்ட ,உளவியல் தாக்கம் நிறைந்த chekhov பாணி.
விஜய்க்கு, இப்படி எந்த சிக்கலும் இல்லாததால், சாதாரணமாக ஓயவெடுத்திருக்கலாம். ஆனால் மேதைகளுக்கு ஏது ஓய்வு? P _R சிலாகித்த அற்புத ராஜின் மேம்பட்ட பிரதியாக சிறிதே effeminacy கலந்த ஒரு spoilt lover boy .ஆக realism பாணியில் இன்றி, முழுக்க synthetic ஆக,ஒரு கலவையான கற்பனை கலந்த அழகுணர்ச்சியில் வடிவமைக்க பட்டு....
இப்போது கண்ணனை மிக நுணுக்கமாக ஆராய்வோம். ஆஸ்கார் பரிசு பெற்ற Robert de Niro போன்ற நடிகர்கள்,தங்கள் நடிப்பில் இயற்கையின் ,மிருகங்களின் சாயலில் தங்கள் பாத்திரங்களை வடிவமைத்து வெற்றி கரமாக தங்களது பாத்திரங்களை கையாண்டுள்ளனர்.
"He based the movement of his character Travis Bickle in Taxi Driver (1976) on that of a crab. He thought the character was indirect and tended to shift from side to side."
நடிகர்திலகம் 1954 இலிருந்தே இதனை கையாண்டுள்ளார். நடைகளில், சிரிப்பில்,உறுமலில், mannerism என்று சொல்லப்படும் mood related gesture இல்.பின்னாட்களில் பாலா பிதாமகன் பாத்திரத்தில் இதனை புகுத்தி வெற்றி கண்டார்.தெய்வ மகன் கண்ணன் , body language சில சமயம், மானின் மருளல், அடிபட்ட வேங்கையின் சீற்றம்,எலியின் survival ஒடுக்கம் ,நாயின் உருகும் அன்பு என்று.
இதை உன்னிப்பாக கவனிக்க வேண்டுமென்றால் , திருடன் பட்டம் சுமந்து ,பெண்ணுடன் அவள் hand bag திருப்பி கொடுக்கும் காட்சி, ஜெயலலிதாவிடம் தன்னை மறைத்து ஒடுக்கும் காட்சி, மற்ற படி அவர் hyper ecstacy ,( அ ) extreme emotions like anger நிறைந்த காட்சிகள்,ஜெயலலிதா தன் காதலை வெளியிட்டதும் காட்டும் சுய வெறுப்பு காட்சிகளில் கவனித்து பாருங்கள்.(கர்ணனின் உறுமல் ,சாமுண்டியின் சீற்றம் obvious )
டாக்டர் தன்னை நிலை கண்ணாடியில் காட்டும் போது அலட்சியம் செய்யும் விகார முகம் , ஒரு பெண் தன்னை காதலிப்பதாய் கற்பனை செய்து (ஒதெல்லோ பற்றி சொன்னதும் டாக்டரின் கையை உடையும் அளவு இறுக்கும் வெறி கலந்த எதிர்பார்ப்பு),அது தன கற்பனையே என்றவுடன் சுய வெறுப்பின் உச்சமாய் கண்ணாடியில் தன் உருவத்தை தானே காறி உமிழ்ந்து, கண்ணாடியை உடைக்கும் மூர்க்க சுய வெறுப்பு.அந்த காட்சியில் அவர் காட்டும் subtle change in tempo and body position , தன் வீட்டுக்கு வந்து தாய்,தந்தை, தம்பியை கண்டு காட்டும் உருக்கம் கலந்த, euphoric ecstacy, டாக்டரிடம் அதை கொட்டி விட்டு, பசித்து சோர்ந்த நாய் குட்டி போல் மடி மேல் சோரும் கட்டம்.
கண்ணனை, விஜய் வெல்வதாவது என்று தோன்றுகிறதல்லவா?
சங்கர் பாத்திரத்தை method acting பாணியில் அந்த மேதை முடிவு செய்ததற்கு, இரண்டு காரணங்கள். முதல் காரணம் , குறையை பெரிதாக நினைக்க வேண்டாத நிலையில் நிகழ்காலத்தில் இருப்பவன்.அவன் இறந்த காலத்தை நினைக்க வேண்டிய மூன்று இடங்கள் முதல் பிள்ளை பிறந்த போது, மூத்த பிள்ளை உயிரோடு இருப்பதை அறிந்ததும் அதிர்ச்சி கலந்த குற்றவுணர்ச்சி. டாக்டரை சந்திக்கும் போது. இந்த கட்டங்கள் எல்லாமே sense memory யில் அமைய வேண்டியவை. இரண்டாவது காரணம், method acting முறையில் மற்ற நடிகர்களின் performance தூக்கலாகும். கண்ணனும் விஜய்யும் ஓங்கி தெரிய ,சங்கரின் method acting முறையில் அமைந்த பாணி யாலும், இந்த முறையில் scene stealing என்பது முடியாதென்பதும் ஒரு காரணம்.(சமீபத்தில் Lincoln படத்தில் Daniel Day Lewis இதே முறையில் method Acting செய்திருக்கிறார்.now now now என்று சொல்லும் போது சங்கர் ,ராஜுவிடம் you you சொல்லும் அதே gesture )
முதல் காட்சியில்,புற முதுகு காட்டியே , குழந்தை பிறந்த மகிழ்ச்சிக்கு expansive hand ,gesture ,ராஜு சமாதான படுத்த வரும் போது elbowing gesture ...அடடா, எத்தனை மேதைமை!!! ராஜுவுடன், தான் சிறு வயது trauma வை விவரித்து, குழந்தையை கொன்று விட சொல்லி ,குற்ற உணர்ச்சியேயின்றி உலர்ந்த மனதோடு ஆணையிடுவது போல், சிறு வயதின் உணர்ச்சியின் பால் பட்டு maturity இன்றி பேசும் விதம், ஒரு method acting ஸ்கூலில் பாடமாக வைக்க வேண்டும்.sense memory அடிப்படையில் நடிக்க விரும்புவோருக்கு பாடம்.
விஜய் உடன் அவர் கண்டிப்பு காட்ட நினைத்து இளகி சிரிப்பது, மனைவியின் வற்புறுத்தல் பேரில் இணங்குவது போல் தன கனிவை,செல்லத்தை மறைப்பது, மனைவியிடன் காட்டும் romance கலந்த நன்றியுணர்வுடன் கூடிய அன்பு இவை பார்த்து அனுபவிக்க வேண்டியவை.
டாக்டருடன் பல வருடங்களுக்கு பிறகான சந்திப்பு காட்சி ஒரு கல்வெட்டு. தயக்கம் கலந்த anxiety உடன் நுழைவது ஓர கண்ணால் சிறி து தயக்கம்,சங்கடம், curiousity கலந்த eye follow up என்று ஆரம்பித்து, formal ஆக தொடங்கி,கேட்க விரும்புவதை கேட்டு, நட்பை re -assert செய்து விட்டு,முடிவில் சிதார் ஓசை கேட்டு அலையும் மனதுடன், restless ஆக ,மகனை பார்க்க விழைந்து ,அரை மனுதுடன் ,திரும்பி செல்லும் கட்டம்.சுந்தர்ராஜன்,சிவாஜி இருவருமே உணர்ந்து, அருமையாய் நிமிர்த் தியிருப்பார்கள் . இந்த காட்சி எதை உரைக்க வேண்டுமோ, அதை உரைத்து , எதை உயிர்ப்பிக்க வேண்டுமோ அதை உயிர்ப்பித்து, எதை அடைய வேண்டுமோ அதை அடைகிறது. perfect sub text for method acting .
கண்ணன் சந்திக்க வரும் காட்சியில், உணர்வுகளை காட்டும் அளவே காட்டி, மிகை குற்றவுணர்வு இன்றி, ஆனால் கண்ணன் அநாதையாக்க பட்டு வாழ்ந்ததன் வலிகளை மட்டுமே, ,ஒரு தந்தையாக empathise செய்வார். இந்த காட்சி ,இன்றளவும் பேச படுவதற்கு காரணமே,மற்றவர்களை தூக்கி காண்பிக்கும் அளவு perform செய்த சங்கரே.
காணாமல் போன விஜய் பற்றி வரும் டெலிபோன் காட்சியில் , பதற்றம் ,எச்சரிக்கை, பதைபதைப்பு,மகனுக்கு எதுவும் நேர கூடாது என்று அவர் விடும் இயலாமை கலந்த வெற்று மிரட்டல் என்று ,ஒரு சராசரி காட்சியில் கூட நடிப்பு கொடி பறக்கும்.
ஆயிற்று. இத்தனை மேம்பட்ட கண்ணன் பாத்திரத்தை,சங்கர் பத்திரத்தை, ஒரு மேதை தன் வாழ்நாளின் one of the best என்று சொல்லும் அளவு பண்ணி விட்ட பிறகு, to lighten the proceedings என்று filler பாத்திரமான விஜய் என்ன செய்து ,இவர்களை சமாளிக்க போகிறது?
விஜய் என்னதான் செய்யவில்லை?ஒரு உலகத்திலேயே சிறந்த மகா கலைஞன், தன் சுதந்திர கற்பனைகளோடு, எந்த realism சார்ந்த விஷயங்களோடும் சமரசம் செய்து கொள்ளாமல், முழுதும் தன் திறமை மற்றும் creativity ஐ நம்பி மட்டும் ஒரு பாத்திரத்தை conceptualise செய்து execute செய்தால்? தங்கத்தை போன்று ஜொலித்தன நெல் மணிகள் என்று கவிஞன் எழுதும் சுதந்திரத்தால் தான் கலைகள் ஜீவிக்கின்றன. மொக்கை தனமாக, நெல் மணிகள் நெல் போல தானே இருக்க வேண்டும் என்போருக்கு, கலைகளை ரசிக்கும் பக்குவமோ,அறிவோ இல்லை என்று பொருள். சரோஜா தேவியின் புத்தகம் கூட realism தான். அதை படிப்பதும் சுலபம். ஆனால் ஒரு காளிதாசன் ,கம்பனை பயில பயிற்சி தேவை. அல்லது என் போல ஒரு பொழிப்புரையாளன் தேவை.அப்படித்தான் அந்த உலக கலைஞனின் பாத்திர வார்ப்புகளும்.
விஜய் முதல் shot இலேயே ஈர்த்து விடுகிறான். பிறகு ஈர்க்க பட்டவர்களை தன்னிடையே தக்க வைக்கிறான். scene stealing செய்கிறான்.Antics செய்கிறான்.. பக்கத்திலிருக்கும் ,காமெடியன் ஒருவனை அவன் விளையாட்டிலேயே ஜெயிக்கிறான்.(beating bull in its game ). வேறு படுத்தி கொள்கிறான், நடை ,உடை,பாவனைகளில்.முக்கியமாய் இது வரை காணாத புதுமை ஆக்குகிறான். அதே நேரத்தில் ஒரு பாத்திரமாகவும் establish செய்கிறான்.ஜனங்களை ஆசுவாச படுத்துகிறான்.(heavy emotion ridden proceeding இல் இருந்து) .இன்னும் நிறைய காட்சிகளில் வர மாட்டானா என்று ஏங்கவே வைத்து விடுகிறான்.
கூர்ந்து கவனித்தால் , விஜய் much more than a spoilt mother 's virgin boy and a rich brat . பணத்தின் சௌகரியங்கள் கிடைத்தும், ஒரு identity crisis and false start உள்ள vested interest கொண்ட நண்பர்களால் சூழ பட்டவன். அம்மா, அப்பாவின் அதீத அரவணைப்பில் இருந்தாலும், முழு அப்பாவியும் அல்ல.அதீத பாதுகாப்பே ,அவன் ஆபத்துகளை உணர முடியாமல் செய்து விடுகிறது.தன்னால் தன்னை காத்து கொள்ள முடியும் என்ற அசட்டு நம்பிக்கை வேறு.ஆனால் விஜய்யை புன்னகையோடு தொடர முடியும்.
நண்பன் என்று சூழ்ந்தவனின் அதீத gimmick ஐ எள்ளுகிறான். (அதான் நான் வரை வரைக்கும் கயிறு கூட மாட்டிக்காமே???), விஜய் உனக்குன்னு கேளு என்றதும், இல்லை,இல்லை உனக்குன்னு கேட்கிறேன், அப்பத்தான் குகுளுன்னு என் daddy கொடுக்கும் என்று சொல்லும் அழகு.(நாகேஷ் வேடிக்கை தான் பார்ப்பார் என்ன பண்ணி புகுரலாம் என்று. ம்ஹும் chance இல்லவே இல்லை). மழலையான ஆங்கிலம் கலந்த தமிழ் உச்சரிப்பிலிருந்து , சுருட்டி கொண்டு சோம்பேறி கோழி தூக்கம் போடுவதாகட்டும்,அம்மா வை ice வைப்பதாகட்டும் (first class Tamil Picture கூட்டிட்டு போறேன் )உன் மேலதான் daddy க்கு எவ்ளோ லவ்வு என்று லொள் விடுவது என்று. (பின்னாடி மௌன ராகம் கார்த்திக் character இதிலிருந்து inspire ஆனதே.சந்திரமௌலி போன்ற antics .அந்த character உம் ஈர்ப்பு கொண்ட synthetic கற்பனையே ).
தன் ரூமில் யாரோ இருப்பதை தெரிந்து, அப்பா அம்மா இல்லை என்று உறுதியானதும், thief என்று மிரட்டல் ,பயம் கலந்த மெல்லிய மிரட்டல், anxiety யுடன் தேய்ந்த குரலில் மூன்றாவது thief என்று விஜய் என்னை முழுவதும் ஆட்கொண்ட பிறகு, சங்கராவது,
கண்ணனாவது?
தன்னிடம் வீட்டிலிருக்கும் கண்ணனை பற்றி பேசும் நிம்மியிடம், அவள் மடியில் உறங்குவது போல் disinterest காட்டி பின் சகிப்பு தன்மை இருக்கிறது. யாரோ புல்புல்தாரா வாசிப்பான் அவன் ரூமுக்கு போறேன் என்று என் கிட்டேயே என்று cute ஆக காதலன் possessiveness குழந்தை தனமாக வெளியிடும் அழகு.(முந்திய வருடம் 80 வயது அப்பரான மனிதன், அடுத்த வருடம் retire ஆக போகும் ஒரு பிராமணன், 20 வயது lover boy ஆக எல்லோர் மனதையும் அள்ளும் அழகு ). அப்பா அமாவிடம் அவர் காதலியை அறிமுக படுத்தும் அழகே அழகு.(certainly not .அதனால்தான் மம்மியை கட்டிக்கிட்டீங்களா, இது செய்யனும்....போன்ற one liner ).
அது மட்டுமல்ல, விஜய்யின் entry தான் அந்த மூன்று சிவாஜி தோன்றும் காட்சிக்கே, epic cult status கொடுக்கிறது. தன் தம்பியே ,தன் பெற்றோர்களுக்கு போதும் என்று கண்ணனை convince செய்து விடுகிறது. அதற்கு முன்னாள் நடந்த அத்தனை உணர்ச்சி மிகு encounter செய்யாத அதிசயம். பார்வையாளர்களும் convince ஆகி விடுகிறோம்.(கண்ணன் cheque ஐ நிராகரிக்கும் நிர்தாட்சண்யம் , விஜய் அதை உரிமை நிறைந்த ஆவலுடன் எடுக்கும் அழகு-- இந்த காட்சியையே அர்த்த படுத்தி விடவில்லையா)
கடைசி காட்சியிலும், அவ்வளவு பெரிய வில்லன் கும்பலிடம், அசட்டு மிரட்டலுடன் போராட்டம். டே... head லியா அடிச்சே என்று மயங்கி சாய்வது.
எனக்கு தெரிந்து character identity establish செய்து சாதாரண one liners ஐ அதீத ரசிக்கும் காமெடி ஆக்கிய அதிசயம் இந்த படத்தில்தான் நிகழ்ந்தது. ஒரு சாதாரண வலுவில்லாத பாத்திர படைப்பு, உலகத்திலேயே அதிக வலுவுள்ள நடிகனின் கற்பனையால் மட்டும் அமர துவம் பெற்று, அவரே நடித்த வலுவுள்ள மற்ற பாத்திரங்களை இரண்டு, மூன்று என்று வரிசை படுத்தும் உலக அதிசயம் நிகழ்ந்த ஒரே காரணம்---தெய்வ மகன் விஜய்.
http://ts2.mm.bing.net/th?id=H.4882532831660969&pid=1.7
http://ts4.mm.bing.net/th?id=H.4825959530627943&pid=1.7
http://www.einthusan.com/images/covers/DEIVA-MAGAN.jpg
http://ts1.mm.bing.net/th?id=H.5022930989942224&pid=1.7
http://ts4.mm.bing.net/th?id=H.4861672171571971&pid=1.7
http://dozeu380nojz8.cloudfront.net/..._megan__1_.jpg
http://www.freewebs.com/pammalar/Kannan1.jpg
நடிகர் திலகத்தின் 305 படங்களில் திரும்பத்திரும்ப பிரபலமான படங்களையே அலசுவதால் வேறு படங்கள் இவருக்கு இல்லை போலிருக்கிறது என்கிற எண்ணத்திற்கு இடம் கொடுக்காமல் மிக மிக அபூர்வமாக, இதுவரை விவாதிக்கப் படாத படத்தை எடுத்துக் கொள்ளுமாறு நண்பர்களை கேட்டுக் கொள்கிறேன். கோபால் சார், Let us explore more of his films very rare and hither to not discussed.
இதனைத் தொடங்கி வைக்க சரியானவர் நம் வாசு சார் தான். வாசு சார் தெய்வ மகன் முடிந்த பின்னர் தாங்கள் தேர்ந்தெடுக்கும் படத்தை நாம் விவாதிப்போமே.
Choice is yours.
quoted from wikipedia
wikipedia page link: http://en.wikipedia.org/wiki/List_of..._Language_FilmQuote:
List of submissions to the 42nd Academy Awards for Best Foreign Language Film
The following 24 films, all from different countries, were submitted for the 42nd Academy Awards in the category Academy Award for Best Foreign Language Film. The titles highlighted in blue and yellow were the five nominated films, which came from Algeria, France, Sweden, the USSR and Yugoslavia.
Algeria, submitting a film for the first time, became the first African country to receive an Oscar nomination in this category. Algeria ending up winning the award (for the only time) for the political thriller Z, a co-production with France
India Deiva Magan Tamil தெய்வ மகன் A. C. Tirulokchandar
also see
http://en.wikipedia.org/wiki/List_of..._Language_Film
வாசு சாரைத் தொடர்ந்து ஒவ்வொருவரும் தம்முடைய பங்கிற்கு ஒரு படத்தைத் தேர்ந்தெடுத்து இங்கே கருத்துப் பரிமாற்றங்களை மேற்கொள்ளலாம்.
என் நினைவுக்கெட்டியவரை இங்கு பங்கு கொள்ளும் அன்பர்கள்
ஜோ
முரளி ஸ்ரீநிவாஸ்
ராகேஷ்
சக்திப்பிரபா
சாரதா
கார்த்திக்
பார்த்தசாரதி,
ராதாகிருஷ்ணன்
சுப்ராஸ்
வாசு தேவன்
பம்மலார்
சித்தூர் வாசுதேவன்
சுப்பு
கல்நாயக்
ஆதிராம்
கண்பத்
கிருஷ்ணாஜி
சிவன் கே
சங்கரா 1970
இன்னும் பெயர் விட்டுப் போன நண்பர்கள் இருப்பின் அவர்கள்
வினோத் சார், தாங்களும் தங்களுக்குப் பிடித்த நடிகர் திலகத்தின் படத்தைப் பற்றிய தங்கள் கருத்துக்களை இங்கே பகிர்ந்து கொள்ளலாம்.
மேற்கூறிய வரிசையில் விடுபட்டுப் போன பெயர்களும் இங்கே குறிப்பிடப் பட்ட பின்னர், அகர வரிசை அல்லது சிறியவரிலிருந்து பெரியவர் என்ற வரிசையில் நாம் ஒவ்வொருவராக ஒவ்வொரு படத்தைப் பற்றிய விவாதங்களை நடத்தலாமே.
தெய்வ மகன் - முரளி சாரின் பதிவு மீண்டும் இங்கே
பாகம் 1 நாள் 01.04.2008
http://www.mayyam.com/talk/showthrea...l=1#post289528
பாகம் 2Quote:
தெய்வ மகன் - என் மனதிற்கும் சிந்தைக்கும் மிக நெருக்கமான படம். மீண்டும் பார்த்த போது தோன்றிய சில எண்ணங்களை பதிகிறேன்.
சங்கர் - பணக்கார தந்தை. இயற்கையாகவே அமைந்த விகாரமான முக அமைப்பினால் தனக்கு நேர்ந்த அவமானங்கள்,புறக்கணிப்புகள் தன் மகனுக்கும் ஏற்படக்கூடாது என்ற எண்ணத்தில் உணர்ச்சிவசப்பட்டு எடுக்கும் ஒரு முடிவினால் கடைசிவரை மன துன்பம் அனுபவிக்கும் ஒரு மனிதன்.
முதல் காட்சி. முகம் தெரியவில்லை என்றாலும் கூட அந்த துடிப்பு, சந்தோஷம், துள்ளல் எல்லாம் தெரியும் அந்த நடையிலேயே. டாக்டரிடம் பேசும் போது உள்ள மகிழ்ச்சி கலந்த எதிர்பார்ப்பு, அது ஏமாற்றமாக மாறும்போது தளர்ந்து போகும் அந்த நடை. இரண்டு நடைக்கும் எவ்வளவு வித்யாசம்? குழந்தையை கொல்ல மாட்டேன் என்று மறுக்கும் டாக்டரிடம் தன் தரப்பு நியாயத்தை சொல்வது.[ என்னை உண்மையிலே நேசிக்கறவங்க என் உயிர் நண்பனான நீயும் என் மனைவியும்தான். மத்தவங்க எல்லாம் என் பணத்துக்காக என்னை மதிக்கிறாங்க.]
நண்பன் தான் கொடுத்த பணத்தை தூக்கி எறிந்து விட்டு நட்பு முறிந்து விட்டது என சொன்னவுடன் மௌனமாக வெளியேறுவது, இப்படி முதல் காட்சியில் இளமையாக இருக்கும் போது இரு வேறுபட்ட உணர்வுகளை வெளிப்படுத்தும் இந்த பாத்திரம் 25 வருடங்களுக்கு பின் ஒரு கம்பீரமான ஆளுமையை வெளிப்படுத்தும்போது நடிகர் திலகம் அதை அழகாக கையாள்வர்.
தனக்கு முன்னால் வளைந்து நெளிந்து நின்று பணம் கேட்கும் மகனிடம் (Just a Lakh and Fifty thousand) கடுமை காட்ட முடியாமல் வரும் சிரிப்பை அடக்கி கொண்டு அவர் காட்டும் expressions ஓஹோ! இதில் இன்னொன்றும் சுட்டி காண்பிக்கப்பட வேண்டியது. நடிப்புதானே என்று சும்மா கிறுக்காமல் செக்-ஐ எழுதுவார். எழுத்தி முடிக்கும் போது மகன் நாற்காலிக்கு பின் பக்கமாக சுற்றி வர அவனை சைடு-ல் திரும்பி பார்த்து விட்டு செக்-ஐ கிராஸ் செய்வார். மகன் பக்கவாட்டில் வருவதும் அவர் திரும்பி பார்ப்பதும் ஒரே டைம்-ல் நடைபெறும். பார்ப்பவர்களுக்கு இரண்டும் வேறு வேறு ஆட்கள் என்றே தோன்றும். மிக சரியாக அந்த timing-ஐ அவரால் மட்டுமே செய்ய முடியும்.
அந்த நீளமான படிக்கட்டில் அந்த தாளக்கட்டு மாறாமல் அவர் இறங்கி வரும் அழகு. மனைவி கோவிலில் பார்த்தது தன் மூத்த மகனாக இருக்குமோ என்று சந்தேகப்பட்டு டாக்டர் வீட்டிற்கு வருவார். டாக்டர், நண்பனாக பழகாமல் விலகி நின்று பேச, வாய் தவறி ஒருமையில் அழைத்து விட்டு உடனே "Sorry, Dr. ராஜு" என்று style-aga கூறுவது. இறுக்கம் தளர்ந்து விடை பெறும்போது மாடியிலிருந்து ஒலிக்கும் சிதார் இசையை கேட்டு விட்டு அவர் காட்டும் அந்த தவிப்பு, எதையோ சொல்ல வந்து சொல்ல முடியாமல் தவிப்பது, அதை புரிந்து கொண்டு டாக்டர் " உன் மகனை பார்க்கணுமா?" என்று கேட்க முகமெல்லாம் பூரிப்பாக "ஆமாம்" என்று சொல்லிவிட்டு அதை கேட்க தனக்கு எந்த அருகதையும் இல்லை என்பதை உணர்ந்தவராக பேசாமல் வெளியேறுவது. திலக முத்திரைகள்.
இளைய மகனை காதலிக்கும் பெண்ணிடம் கடுமையாக பேசுவது போல பாவனை செய்வது, இளைய மகனின் கல்யாணத்தன்று தன் மனைவிக்கு ஒரு விலை மதிப்பில்லாத பரிசு கொடுக்க போவதாக சொல்வது, இதெல்லாம் அவருக்கு child's play.சுருக்கமாக ஒரு கம்பீர performance.
கண்ணன் மற்றும் விஜய் பற்றி -விரைவில்
நாள் 05.04.2008
http://www.mayyam.com/talk/showthrea...l=1#post290877
பாகம் 3Quote:
தெய்வ மகன் - கண்ணன்
கண்ணன் - பரிதாபத்திற்கு உரிய அதே சமயம் நம் மனதில் ஒரு பிடிப்பு அந்த பாத்திரத்தின் மேல் ஏற்படுத்தக்கூடிய திரைக்கதை அமைப்பு. சிறுவனாக இருக்கும் போதும் ஆரம்பிக்கும் அந்த கோபமும் ஆவேசமும் கடைசி வரை குறையாது வெளிப்படும். தான் அனாதை இல்லை என்று தெரிந்ததும் பாபா (நாகையா) கொடுத்த டைரி-ஐ புரட்டி பார்க்கும் ஆவேசம், மருத்துவமனையில் டாக்டர்-ஐ மிரட்டும் கோபம், தன் தாய் தந்தையரை தெரிந்து கொள்ள எந்த காரியத்தையும் செய்ய தயாராக இருப்பது இவை அந்த கதாபாத்திரத்தை வலுவாக நிலை நிறுத்தும் களங்கள். அவற்றை நடிகர் திலகம் தன் பாணியில் மெருகேற்றியிருப்பார்.
படத்தின் தலைப்பிற்கேற்ப கதாநாயகன் கண்ணன்தான். முதல் இரண்டு காட்சிகளில் சாதாரணமாக வரும் அவர், அனாதை இல்லத்திலிருந்து வெளியேறி கடைத்தெருவில் திருடனிடம் சண்டை இடும் காட்சியிலிருந்து அந்த Body Language அப்படியே மாறும். டாக்டர் வீட்டிற்கு வரும் அவரை பார்த்ததும் அவர் யார் என்று தெரிந்து கொள்ளும் டாக்டர், அவரை தவிர்க்க முயற்சிக்க,கொஞ்சம் கொஞ்சமாக பொறுமை இழந்து ஒரு கட்டத்தில் டாக்டரின் கழுத்தை நெரிப்பார். [என் தாய் தந்தையார் யார்னு தெரிஞ்சுக்க நான் எதையும் செய்ய தயங்க மாட்டேன்]. அதற்கு முன் தான் அந்த காலை உதைத்து, முடிகற்றை முன்னால் வந்து விழ,ஆட்காட்டி விரலை சுட்டி " டாக்டர்" என்று கத்துவது.[ தியேட்டர் அலறும் என்பதை சொல்லவே வேண்டாம்].
பிறகு டாக்டர் வீட்டில் அடைக்கலம். அங்கே மாடியில் எப்போதும் சிதாரும் இசையுமாக இருப்பவர் ஒரு நாள் இரவு சொல்லாமல் கொள்ளாமல் தன் தாய் தந்தையரை பார்க்க வீட்டிற்கு போகிறார்.
முதலில் தாய். படுத்திருக்கும் தாயின் கால்களுக்கு பூக்களை அர்ச்சனை செய்து விட்டு கண்ணீர் துளியை காணிக்கையாய் சிந்தும்போது, தாயன்புக்கு ஏங்கும் ஒரு இளைஞனை கண் முன்னே நிறுத்துவார்.
அடுத்து தம்பி அறை. அதில் நுழைபவர் அங்கே மாட்டியிருக்கும் இளம் பெண்ணின் கவர்ச்சி படத்தை பார்த்து விட்டு ஒரு வெட்கம் கலந்த ஒரு நமட்டு சிரிப்பு சிரிப்பார் (இருட்டாக தெரியும் முகத்தில் அந்த இரண்டு கண்கள் மட்டும் வெளிச்சம் உமிழும்). அடுத்து தம்பியின் சுவரில் மாட்டியிருக்கும் புகைப்படத்தின் அழகை ரசிப்பார்,( மாசு மருவில்லாத கன்னத்தை தன் விரல்களால் தடவும் அழகு).
அடுத்து டேபிளின் மேல் இருக்கும் போட்டோ-வை எடுத்து யாரும் எதிர்பார்க்காத வகையில் தான் அணிந்திருக்கும் முழுக்கை சட்டையின் வலது மணிக்கட்டு பாகத்தை வைத்து துடைக்கும் ஸ்டைல் இருக்கிறதே, சூப்பர். தீடீரென்று தம்பி வந்து விட தன்னை பார்த்து திருடன் என்று சத்தம் போட அவனை அணைத்துக்கொண்டு சிரிக்கும் அந்த சிரிப்பு, சத்தம் கேட்டு அனைவரும் வந்து விட தாய்,தந்தை மற்றும் தம்பியை ஒரு சேர பார்க்கும் அந்த நேரம், அந்த முகத்தில்தான் எத்தனை சந்தோஷம்.
அதை டாக்டரிடம் போய் பாட்டாக வெளிப்படுத்தும் விதம். பாடலின் நடுவே வேக வேகமாக படி ஏறிவிட்டு அதே வேகத்தில் இறங்குவார். ஆரவாரம் அலை மோதும் (இதையே 10 வருடம் கழித்து திரிசூலத்திலும் செய்திருப்பார்). ஒவ்வொருவரை பற்றியும் பாடலில் சொல்லும்போது அந்த முகத்தில் வந்து போகும் உணர்ச்சிகள். கை அசைப்புகள். "விதி எனு நதி ஒரு பக்கமாகவே ஓடுகிறது" எனும்போது அந்த இடது கை மட்டுமே சைகை காட்டும். "தர்மமே தந்தை தாயை காக்க வேண்டும் தெய்வமே" என்ற வரியின்போது காமிரா லோ ஆங்கிளிலிருந்து அவரை பார்க்க இரண்டு கைகளையுமே தலைக்கு மேல் தூக்கி உள்ளங்கைகள் தரையை பார்க்க ஒரு போஸ் கொடுப்பார். கேட்க வேண்டுமா கைதட்டலுக்கு.
அடுத்து தாயை கோவிலில் வைத்து பார்க்கும் காட்சி. தூணுக்கு பின்னால் மறைந்து நின்று பார்க்கும் அந்த கண்கள் அதில் தெரியும் அந்த உணர்ச்சிகள் [ " என் வயிறெல்லாம் என்னவோ செய்யுதே" என்று பண்டரிபாய் சொல்லும் வசனம் படம் பார்க்கும் எல்லோருக்குமே பொருந்தும்).
இதற்கு நடுவில் டாக்டரின் பெண் தன் இசையால் ஈர்க்கப்பட்டு மாடிக்கு வந்து பேச அதுவரை வாழ்க்கையில் அனுபவித்திராத ஒரு உணர்வு - ஒரு பெண்ணின் சிநேகம். அது மனதுக்குள் திறக்கும் ஜன்னல். தன் முகத்தை எங்கே பார்த்துவிடுவாளோ என்று மறைத்து கொண்டு, அவள் சென்றவுடன் ஓடி சென்று அவள் நின்ற அந்த பால்கனி கைப்பிடியை பிடித்து முழங்காலிட்டு அவள் சென்ற திசையையே பார்த்து சிரிப்பாரே, கிளாஸ்.
தந்தை கொடுத்த பிளாங் செக்கை டாக்டர் கொண்டு கொடுக்கும் காட்சியிலும் அந்த பாத்திரத்தின் சிறப்பு தன்மை வெளிப்படும். எனக்கு தெரியாம வெளியே போறே என்று சொல்லும் டாக்டரிடம் " இந்த கிளியை யாரும் பிடிக்கவும் முடியாது! புரிஞ்சிக்கவும் முடியாது" என்பார். அதற்கு டாக்டர் " பிடிக்க முடியாது-னு சொல்லு ஒத்துகிறேன். ஆனால் புரிஞ்சுக்க முடியாது-னு சொல்லாதே! உங்கப்பா உன்னை புரிஞ்சிக்கிட்டார்" என்கிறபோது " என்ன சொல்றீங்க டாக்டர்"-னு கேட்டு விட்டு உடனே அதற்கான பதிலையும் சொல்வார்." கோவிலிலே எங்கம்மாவை பார்த்தேன். எதையுமே கணக்கு போட்டு பார்க்கிற எங்கப்பவோட வியாபார புத்தி இதையும் முடிச்சு போட்டு கண்டு பிடிச்சிருக்கும்" என்பார்.
டாக்டர் " என்ன கண்ணா இன்னிக்கு நல்ல டிரஸ் போட்டிருக்கே"
கண்ணன் " உடல் தான் வெள்ளையா இல்லை. உடையாவது வெள்ளையாக இருக்கட்டுமே-னு தான்" .
அழகா இல்லாத ஆண்களை பெண்கள் விரும்புவார்களா என்று கேட்கும் கண்ணனிடம் டாக்டர் ஷேக்ஸ்பியர் எழுதிய ஒதேல்லோ நாடகத்தை பற்றி சொல்ல, அவர் கையை பற்றி கொண்டிருக்கும் கண்ணன் இரும்பு பிடியாய் இறுக்க, வலி தாங்காமல் கையை உருவிக்கொண்டு " ஆமாம், இதெல்லாம் நீ ஏன் கேட்கிறே?" என்று வினவ, கண்ணன் " மண்ணை தோண்டி தங்கம் இருக்கா வைரம் இருக்கா-னு தேடற மாதிரி இதயங்களை தோண்டி அன்பு இருக்கா பாசம் இருக்கா-னு பார்க்க தோணுது டாக்டர்" என்று சொல்லிவிட்டு சிரிக்கும் அந்த சிரிப்பு!
தந்தையை போலவே வேறு ஒரு குணாதிசியமும் காட்டுவார். தன்னை சந்திக்க வரும் சங்கரிடம் "பையன்-னு தெரிஞ்சுமா சுட்டிங்க" ? என டாக்டர் கேட்க இல்லை என்பதை ஒரு முக சுளிவிலே காட்டுவார் தந்தை. அதே முகபாவத்தை தந்தையை பார்க்க வரும் கண்ணனும் வெளிப்படுத்துவார். முதல் குழந்தை ஆண் குழந்தைனா பெத்தவங்க ரொம்ப அன்பு செலுத்துவாங்களாமே என்று மகன் கேட்க, உண்மைதான் என்று தந்தை சொல்ல முன்பு தந்தை காண்பித்த அதே முகபாவத்தை காண்பித்து "இல்லை பொய்" என்பார்.
ஒவ்வொரு காட்சியையும் சொல்லிக்கொண்டே போகலாம். அந்த ஸ்டைல், அந்த முக பாவம் எத்தனை தடவை பார்த்தாலும் அலுக்காது. சுருக்கமாக சொன்னால் ஒரு அசாதாரண நடிப்பு, நடிகர் திலகத்தால் மட்டுமே முடியும்.
அடுத்து விஜய்
நாள் 07.04.2008
http://www.mayyam.com/talk/showthrea...l=1#post291219
Quote:
விஜய் என்ற விஜயன் - தெய்வ மகன்
இரண்டாவது மகன். அவனது தாயை பொருத்த வரை ஒரே மகன். மிக மிக செல்லமாக வளர்க்கப்பட்ட மகன். பொதுவாகவே செல்லம் கொடுத்து வளர்க்கப்படும் பணக்கார வீட்டு பையன் போல் இல்லாமல்(ராஜேஷ் இங்கே குறிப்பிட்டது போல்) பயந்த சுபாவம் கொண்ட அம்மா செல்லமாக வளர்ந்த ஒரு மேல்தட்டு பிள்ளை.
கதையை பொறுத்தவரை சங்கர் மற்றும் கண்ணன் பாத்திரங்கள் முக தழும்புடன் காட்சியளிக்க, அதற்கு நேர்மாறாக பால் வடியும் முகத்தோடு அழகாக தோன்றுபவர். இந்த பாத்திரத்தை நடிகர் திலகம் வேறு மாதிரி வித்யாசப்படுத்தியிருப்பார். அதாவது ஒரு பெண்மை கலந்த நளினத்தை இந்த பாத்திரத்தில் நாம் பார்க்கலாம். இதன் Body Language வேறுப்பட்டதாக அமைந்திருக்கும். நகத்தை கடிப்பது, நடையில் ஒரு பெண்மை [தன் ஒரிஜினல் ராஜ நடையில் ஒரு சின்ன மாற்றம் செய்திருப்பார். சாரதா இங்கே சொன்னது போல இடுப்பை வளைத்து ஒரு நடை], ஆங்கிலம் கலந்த பேச்சு தமிழ் என்று விரியும்.
இந்த பாத்திரத்தை பொறுத்தவரை லுக் மட்டுமல்ல, படத்திற்கு தேவையான காதல் மற்றும் இளமை காட்சிகளுக்கும் இவர்தான் பொறுப்பு. கதையின் அடிநாதம் பெற்றோர் - மகன் பாசப்பிணைப்பு. அந்த மெயின் ரூட்டில் வராமல் ஆனால் அந்த கதையோடு பின்னி பிணைந்தவாறே பார்ப்பவர்கள் மனதில் எளிதாக இடம் பிடித்து விடுவார். இவரை வைத்துதான் பட கிளைமாக்ஸ் நடக்கும்.
நான் ஏற்கனவே இந்த திரியில் பலமுறை சொன்னது போல், இந்த படம் வெளி வந்த காலக்கட்டத்தில் (1969) நடிகர் திலகத்தின் படங்களும் ஒரு Entertainment Based-ஆக மாறி கொண்டிருந்த காலம். ஆகவே ரசிகர்களின் எதிர்பார்ப்பையும் நிறைவு செய்ய வேண்டும். அதற்கும் இந்த பாத்திரம் பயன்பட்டது.
அவர் அறிமுகமாகும் அந்த தூண்டில் காட்சியிலிருந்து அமர்க்களம் ஆரம்பமாகிவிடும். முதலில் கவனிக்க வைப்பது அந்த பேச்சு. நுனி நாக்கு ஆங்கிலம் என்று சொல்ல முடியாது. ஆனால் பெரும்பாலான வார்த்தைகளுக்கு கூட ஆங்கிலத்தையே பயன்படுத்துவார். அவர் எந்த அளவிற்கு கேரக்டர் study செய்வார் என்பதற்கு இந்த ரோல் ஒரு உதாரணம். குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் ஒரு சில காட்சிகளை சொல்லலாம். சாதரணமாக வீட்டில் ஒரு திருடனை பார்த்தவுடன் கூட " Thief!Thief" என்றுதான் சொல்லுவார். நம்பியாரிடம் "ஏன்டா, என்னை threaten பண்ணறே? " என்பது, "Thirsty-யாக இருக்கு. ஐஸ் வாட்டர் கொடுங்கடா" என்பது. அம்மாவிடம் (அப்பா இருப்பது தெரியாமல்) "டாடி ஒரு ஜப்பான் பொம்மை. கீ கொடுத்தால் ஆடும்" என்பது, முதலில் JJ-விடம் நடிக்கும் போது ஒவ்வொரு பொய்யிலும் மாட்டிகொள்வது.
தந்தையிடம் நேருக்கு நேர் நின்று பேச அச்சப்படும் கேரக்டர். வளைந்து நெளிந்து அம்மாவின் பின்னால் ஒளிந்து பேசுவது ரசனையான காட்சி. பிஸினஸ் பண்ண பணம் வேண்டும் என்று கேட்பதில் கூட ஒரு ஸ்டைல் (Just a Lakh and Fifty thousand). ஹோட்டல் என்பதைக்கூட ஹோடேல் என்னும் ஆங்கில பாணி உச்சரிப்பு. ஹோட்டலில் நடந்த திருட்டை சரி செய்வதற்காக அப்பாவிடம் பணம் கேட்க வரும் காட்சி. அதில் உணர்வுகளை எப்படி நிமிட நேரத்தில் மாற்றி காட்டுவார். பணம் கேட்கும்போது தயக்கம், தந்தை கோபப்படும்போது பின் வாங்கும் பயம், பிளாங் செக்கை பார்த்தவுடன் உடன் சந்தோஷம், அதற்கு நன்றியாக ஒரு Flying Kiss என்று கலக்கியிருப்பார். தன் ஹோட்டலில் டப்பாங்குத்து ஆடும் JJ-வை அவர் பார்க்கும் பார்வை, பளார் என்று அறைந்துவிட்டு அறைக்கு கூடிக்கொண்டு போய் சத்தம் போடும்போது ஒரு காதலின் possessiveness வெளிப்படும். அந்த காட்சியில் மட்டுமல்ல JJ பார்க்-இல் கண்ணன் பற்றி பேசும் போது வரும் கோபத்திலும் அது தெரியும், ("எனக்கு முன்னாடியே யாரோ ஒருத்தன் புல் புல் தாரா நல்லா வாசிப்பான்னு சொல்லிட்ருக்கே").
மற்ற இரண்டு கதாபாத்திரங்களும் உணர்வு பூர்வமாக நம்மை கலங்க வைப்பார்கள் என்றால் விஜய் நம்மை மயங்க வைப்பார்.
ராகவேந்தர் சார்,
ஆயிரம் புலவர்கள் இருந்தாலும் நாம் பேசுவது சில புலவர்களை பற்றி மட்டுமே. அவர்கள் எழுதிய பல காவியங்கள் இருந்தாலும், நாம் தேர்ந்தெடுத்து ஆய்வது சில காவியங்களை மட்டுமே. அதிலும் ஆய்வின் தரம், புதிய மீள்பார்வைகள், பலவித கோணங்கள், இவை அந்த காவியத்தையே சுவாரஸ்ய படுத்தி,மக்களுக்கு புது நோக்கு கொண்டு அந்த காவியங்களை மீண்டும் படிக்க தூண்டும் இல்லையா?காலத்தால் பிற்பட்ட, குறைந்த அளவே பழைய விஷயங்களுக்கு ஒதுக்க முடியும், புதிய தலைமுறையை ஈர்க்கவும் வேண்டும்.
நாம் பேசுவது ஒரு உலத்திலேயே சிறந்த திறமையை பற்றி. மற்ற திரிகளை போல உயர்வு நவிர்ச்சி அர்ச்சனைகள், சராசரிக்கும் கீழானவற்றை மிகை படுத்தல், எல்லாவற்றையும் பற்றி மொக்கையான பார்வை மற்றும் பொத்தாம் பொதுவான விமரிசனங்கள் போன்றவை நடிகர்திலகம் போன்ற பல உன்னதங்களை நம்மிடையே விட்டு சென்றோர்க்கு அவசியமில்லாதது.
விமரிசனம் என்பது வார்த்தை விளையாட்டு மற்றும் எழுதும் திறனோ மட்டும் அல்ல. நாம் பார்த்ததை ,உணர்ந்ததை சரியான பார்வையில் மற்றோர் மனதிற்கு எடுத்து சென்று அவர்கள் பார்த்தவற்றை புதிய கோணத்தில் பார்க்க உதவுதல்.நாம் எழுதுவது அந்த படத்தை பார்க்கும் அனைவரும் உணர வேண்டும்.
ஒவ்வொரு முறையும் நீங்கள் சொல்லும் விஷயங்களுக்கு உடன் பட்டே நான் என்னுடைய பங்களிப்பை செய்து வந்தேன்.
நீங்கள் எழுவதை பார்த்தால் நான் dominate செய்து மற்றவர் பங்களிப்பை தடுப்பது போலல்லவா உள்ளது?
நீங்கள் கேட்டு விட்டதால் நீதி,பட்டிக்காடா பட்டணமா முடிந்ததும் கீழ்கண்ட படங்களை அலசலாம்.
வளர் பிறை,எல்லாம் உனக்காக,முதல் தேதி,நானே ராஜா,ரங்கோன் ராதா, தேனும் பாலும்,ராஜபார்ட் ரங்கதுரை,பாட்டும் பரதமும்,மருமகள்,விடுதலை.
இதை இதை இதைத்தான் நான் விரும்புகிறேன். முரளி சாரின் பதிவுகளிலும், என் பதிவுகளிலும் எத்தனை வித்யாசங்கள்?கோணங்கள்?உன்னத விஷயங்களில்தான் இவ்வளவும் வெளி வரும்.
டியர் கோபால் சார்,
தங்களின் தெய்வமகன் மீள்பதிவு = முதல் பதிவு போல சுவாரசியம். சங்கர் - கண்ணன் - விஜய் என்று கேரக்டர் அலசல் அருமை.
நடிகர்திலகத்தின் திரைப்பட இயக்குனர்கள், நாயகியர், இசையமைப்பாளர்கள் என்று அனைத்து புள்ளி விபரங்களையும் நினைவுபடுத்தியதற்கு நன்றி.
எனக்கு தெரிந்து ,ரொம்பவும் விவாதிக்க படாத பிரபல படங்கள்-
தூக்கு தூக்கி
பாக பிரிவினை
தெய்வ பிறவி
பாலும் பழமும்
திருவிளையாடல் .
ராகவேந்தர் சார் கூறிய படி இவைகளை விரிவாக எழுதலாம்.
என்னைப் பொறுத்த மட்டில் நான் விரும்பி விவாதங்களில் பங்கு கொள்ள எண்ணும் படங்கள்
1. காவேரி
2. தெனாலி ராமன்
3. வாழ்விலே ஒரு நாள்
4. மணமகன் தேவை
5. ராணி ல்லிதாங்கி
6. பாக்கியவதி
7. குறவஞ்சி
8. எல்லாம் உனக்காக
9. மருத நாட்டு வீரன்
10. வளர் பிறை ... பெரும்பாலானோர் பார்த்திருக்க மாட்டார்கள். எனவே விரிவான விவாத்த்திற்கு வாய்ப்பிருக்காது
11. பந்த பாசம்
12. சித்தூர் ராணி பத்மினி
13. அறிவாளி
14. கல்யாணியின் கணவன்
15. ரத்த திலகம்
16. அன்னை இல்லம்
17. அன்புக் கரங்கள்
18. செல்வம்
19. பாலாடை
20. திருமால் பெருமை
21. லட்சுமி கல்யாணம்
22. அன்பளிப்பு
23. குருதட்சணை
24. அஞ்சல் பெட்டி 520
25. நிறைகுடம்
26. திருடன்
27. பாதுகாப்பு
28. இரு துருவம்
29. தங்கைக்காக
30. அருணோதயம்
31. பிராப்தம்
32. தேனும் பாலும்
33. எங்கள் தங்க ராஜா
34. மனிதரில் மாணிக்கம்
35. தாய்
36. வாணி ராணி
37. என் மகன்
38. அன்பைத் தேடி
39. மனிதனும் தெய்வமாகலாம்
40. அன்பே ஆருயிரே
41. பாட்டும் பரதமும்
42. உனக்காக நான்
43. கிரகப் பிரவேசம்
44. உத்தமன்
45. ரோஜாவின் ராஜா
46. அவன் ஒரு சரித்திரம்
47. இளைய தலைமுறை
48. நாம் பிறந்த மண்
49. என்னைப் போல் ஒருவன்
50. புண்ணிய பூமி
51. ஜெனரல் சக்கரவர்த்தி
52. பைலட் பிரேம்நாத்
53. ஜஸ்டிஸ் கோபிநாத்
54. கவரிமான்
55. இமயம்
56. பட்டாக்கத்தி பைரவன்
57. எமனுக்கு எமன்
58. விஸ்வ ரூபம்
59. மோகன புன்னகை
60. சத்திய சுந்தரம்
61. ஊருக்கு ஒரு பிள்ளை
62. வா கண்ணா வா
63. கருடா சௌக்கியமா
64. வசந்த்த்த்தில் ஓர் நாள்
65. தியாகி
66. துணை
67. பரீட்சைக்கு நேரமாச்சு
68. ஊரும் உறவும்
69. நெஞ்சங்கள்
70. இமைகள்
71. மிருதங்க சக்கரவர்த்தி
72. சிரஞ்சீவி
73. தராசு
74. வாழ்க்கை
75. தாவணி கனவுகள்
76. வம்ச விளக்கு
77. பந்தம்
78. நாம் இருவர்
79. நேர்மை
80. ராஜ ரிஷி
81. சாதனை
82. மருமகள்
83. ஆனந்தக் கண்ணீர்
84. லட்சுமி வந்தாச்சு
85. ராஜ மரியாதை
86. அன்புள்ள அப்பா
87. விஸ்வநாத நாயக்கடு
88. அக்னி புத்ருடு
89. ஒன்ஸ் மோர்
90. ஒரு யாத்ரா மொழி
91. என் ஆச ராசாவே
92. மன்னவரு சின்னவரு
93. பூப்பறிக்க வருகிறோம்
mudinthaal pangu peruven. ezhuthungal.
திரியின் தன்மை சற்று மாறுபட்டுப் பயணிக்கத் துவங்கியிருப்பதால், எழுதத் துவங்கிய சில பதிவுகளை பாதியில் நிறுத்தியுள்ளேன். அதற்கான காலம் வரும்போது பதிவிடலாம் என்று நினைக்கிறேன்.
அந்த வகையில்.....
‘ஐட்டம் fபிகர்ஸ்’ வரிசையில் “ஜெய்குமாரி”யின் பதிவு பாதியில் நிற்கிறது.
“ராஜாவில் ஜம்பு” பதிவு பாதியில் நிற்கிறது
‘ரிலீஸ்மேளா’ வரிசையில் “ரிஷிமூலம்” பாதியில் நிற்கிறது
இப்போது திரியில் ஒவ்வொரு படமாக அலச முடிவெடுத்திருப்பதால் அவற்றுக்கான சமயம் வரும்போது பதிவிடுகிறேன்.
முடிவெடுத்தபடி ஒவ்வொரு படமாக துவக்கி அலசுங்கள். அவற்றை பற்றி எனக்கு ஏதேனும் தெரிந்தால் நானும் பதிவுகளில் இணைந்து கொள்ள முயற்சிக்கிறேன்.....
Dear friends.
I have already expressed my wish to Murali during my last visit to India to write about all the films of NT. Canīt we start from Parasakthi. we can have all the discussions we want for a period of maximum one week. It can be extended or shortened accordingly to the discussion which may come along with it.
In this way we can discuss about all the fims of NT not only most famous or else
It is my humble request
கார்த்திக்,
ஒரு முறைப்படுத்தல் ஆலோசனை மட்டும் தான் பதிவிடப் பட்டிருக்கிறது. இதனை நம் நண்பர்கள் எல்லோரும் பரிசீலனை செய்து அவர்களுக்குத் தோன்றக் கூடிய - உங்களையும் சேர்த்தே - கருத்துக்களும் ஆலோசனைகளும் ஒருங்கிணைத்து நாம் ஒரு வழிமுறையைக் கடைப்பிடித்த பிறகே அந்த புதிய பாணியில் தொடரலாம். தற்போதைக்கு நம் தன்மை இப்போதுள்ளவாறே உள்ளது. எனவே தங்களுடைய மேலான பதிவுகளை எழுதுங்கள். நாம் அநைவருமே அதில் பங்கு கொள்ளலாம். இதன்றி இன்னும் நமக்கு 1972ன் படங்கள் பாக்கியுள்ளன. இவையெல்லாம் விவாதிக்கும் சமயத்திலேயே புதிய தன்மைக்கான கருத்துக்களும் பெறப் பட்டு அதனை ஒருங்கிணைத்து மேற்கொள்ளலாம். அது கூட என்னுடைய தனிப்பட்ட கருத்தாக மட்டுமே நான் கூறியுள்ளேன். இது போன்று ஒவ்வொருவரின் கருத்தையும் நாம் அறிந்தால் தான் புதிய ஐடியாக்கள் கிடைக்கும்.
After our friends' discussions in our thread, WATCHING RAJA in jaya tv today was more interesting just like watching AFRESH. HATS OFF TO OUR FRIENDS.
சிவன் சார்
தங்களின் ஆலோசனை மிகவும் சிறப்பாக உள்ளது. நம்முடைய திரைப்படப் பட்டியல் திரியில் வரிசைக்கிரமமாக படங்கள் விவரங்கள் தரப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு படத்துடையும் தொடர்புடைய அனுபவங்கள், தகவல் பகிர்வுகள் அங்கே இடம் பெறலாம். படங்களைப் பற்றிய விமர்சனங்கள், ஆய்வுகள் இந்தத் திரியில் இடம் பெறலாம். அந்த வகையில் திரைப்படப் பட்டியல் திரியில் தாங்கள் நடிகர் திலகத்தின் அந்தந்த படங்களை முதலில் எங்கு பார்த்தீர்கள், அது தொடர்பான தங்கள் அனுபவங்கள், தகவல்கள் போன்றவற்றை அங்கே பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன். இந்த வேண்டுகோளை நம் ஒவ்வொருவருக்குமே நான் வைக்கிறேன். கோபால் கிட்டத் தட்ட ஒவ்வொரு படத்திற்கும் தன் பங்களிப்பை சிறப்பாக தந்து வருகிறார். அதே போல் அனைவரும் வர வேண்டும்.
நன்றிகள் கோடி ராகவேந்தர் சார்.
என்னையும் அங்கீகரித்து இந்த ஜாம்பவான்கள் பட்டியலில் சேர்த்துகொண்டதற்கு!
சரி இந்த ஜாம்பவான்கள் தங்கள் அனுபவத்தை எழுதுவது போல நாமும் முயற்சித்தால் என்ன என நினைத்தபோது..
தோன்றிய முத்து#1..
தெனாலிராமன்:
பிஸ்கட்,சாக்கொலேட்,வாழை,த்ராஷை, பட்சணங்கள் (இனிப்பு காரம்)வறுவல் போன்ற லஞ்ச பொருட்களுடன், மூன்று வயதான
என்னை கூட்டிக்கொண்டு என் தாயார் காசினோ அரங்கிற்கு சென்ற கதையை இன்றும் பரணி பாடுவார்.news reel முடியும் வரை அமைதியாக சாப்பிட்டுகொண்டிருந்த நான், titles தொடங்கியதும் தீவிர வாதியாக மாறி, கையில் கொடுத்த பழங்களை விட்டெறிந்து, "இந்த நிமிடம் வீட்டிற்கு போக வேண்டும்" என அலற,Titlecards ஓடும்போது,நான் பழங்களை screen நோக்கி விட்டெறிந்ததை பார்த்த மற்றவர்கள்
இந்த சிறு வயதில் இப்படி ஒரு தீவிர சிவாஜி ரசிகனா.!!என வியந்திருக்க,சாம தான பேத தண்ட உபாயங்கள் எதுவும் உதவாத நிலையில் 'தாயார்' 'அம்மா'வாகி என்னை இழுத்துக்கொண்டு வெளிநடப்பு செய்தார்.ஆனால் அடுத்த சந்தர்ப்பத்திற்கு அவர் சுமார் 55 ஆண்டுகள் காத்திருக்க நேரிட்டது.சென்ற ஆண்டு Raj TVயில் இதை போடும் போது கூட ஒரு வித பயத்துடன்தான் அவர் என்னுடன் அமர்ந்து பார்த்தார்.
இது அருமையான படம்..தலைவர் வசன உச்சரிப்பில் கவனமாக இருந்த காலம்.ஒவ்வொரு வார்த்தையும் தேன் போல காதில் ஒலிக்கும்.தெனாலி ராமன் என்பதால் படம் முழுவதும் அவர் முகத்தில் குறும்பு கொப்பளிக்கும்."தில காஷ்ட மகிஷ பந்தனம்" ஒன்று போதும்..
தலைவர் எனும் ஜம்போ ஜெட் தமிழ் திரையுலகம் எனும் ஓடு பாதையில் மெதுவாக ஓடத்தொடங்கி takeoffக்கு தயாரான படங்களில் ஒன்று.
A great entertainer.
ஜமுனா கூட அந்த படத்தில் படு அழகாக cute ஆக இருப்பார்.
பானுமதி நல்ல வில்லி என்பதை தெனாலி ராமன்,ராஜபக்தி படங்களில் நிரூபித்திருப்பார்.
ஒரு படத்திற்கே அவர் வில்லியாக மாறிய கொடுமை அம்பிகாபதியில் நிகழ்ந்தது.
நினைத்ததை சாதித்து விட்டீர்களே ராகவேந்தர் சார்.நடிகர்திலகத்தின் ஆத்மா உங்களை வாழ்த்தட்டும். கல கல வென்று சென்று கொண்டிருந்த திரியை ஆள் அரவமில்லாமல் பண்ணி விடும் உங்கள் நோக்கம் மிக உயர்ந்தது.
இவ்வளவு அரசியல் கூர்மையும் நாட்டுக்கு பயன் படாமல் போய் விட்டதே?