Originally Posted by
g94127302
திரு பாஸ்கர்
உங்கள் பதிவுகள் , ஆழமாகவும் , எதார்த்தமாகவும் , உண்மையை மட்டுமே எடுத்துச்சொல்வதாகவும் , மனதில் உண்மை என்று படுவதை நல்ல துணிவுடன் எடுத்துச் சொல்வதாகவும் அமைந்துள்ளது . நாம் எவ்வளவு தான் உண்மையை எழுதினாலும் அதை மறைத்து , அதை புதைக்க விரும்பவர்கள் அதிகம் உள்ள நாடு தமிழ் நாடு . நாம் திரை உலகம் என்னும் பூமியைத் தோண்டினால் - அங்கே மண்ணை விட அதிகமாக குழி தோண்டி புதைக்கப்பட்ட உண்மைகள் தான் வெளி வரும் . ஒருவரை மட்டம் தட்டியே , இன்னமொருவர் வாழத் துடிக்கும் நாடு இது - அதில் தமிழ் நாட்டுக்கு முதல் இடம் என்றால் அது மிகை ஆகாது . கற்பனைகளை உண்மையாக்கி , நடித்த நகல்களை மாபெரும் ஹீரோக்களாக்கி அதில் ஒரு அசட்டு சந்தோஷத்தை உண்டு பண்ணிக்கொண்டு வாழும் மக்கள் நிறைந்த நாடு இந்த தமிழ் நாடு . படங்கள் தரம் வாய்ந்ததா ? அப்படிப்பட்ட படங்கள் எவ்வளவு தலைமுறைகளுக்கு எடுத்துக்காட்டாக இருக்கப்போகின்றன என்று யாருமே அலசி உண்மைகளை கொண்டு வருவதில்லை - ஒரு vpkp மாதிரியோ , வ.வு சி மாதிரியோ இனி யாரால் படங்களில் நடித்து அழிந்துகொண்டிருக்கும் தேச பக்திக்கு உயிர் கொடுக்க முடியும் ?- இப்படிப்பட்ட படங்கள் என்றுமே வாழும் - அவைகளுக்கு என்றுமே மரணம் இல்லை . நாம் சிவாஜியின் மூலம் இந்த நாட்டின் பல தலைவர்களையும் , சரித்திர நாயகர்களையும் , தெய்வங்களையும் நம் அடுத்த தலைமுறைக்கும் விட்டு செல்கிறோம் - ஆனால் சிலர் எல்லா நாயகர்களையும் சிவாஜியின் உருவமாகவே பார்க்கிறார்கள் - அதனால் அவர்களால் அதன் சக்தியை , வீரியத்தை எடை போடமுடியவில்லை - அதனால் அவர்கள் தோல்விகளை ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தை இழந்து , தங்கள் தலைவர்களை இன்னும் பல கற்பனைகளை சேர்த்து , வானளாவ புகழ்கின்றார்கள் - விட்டு விடுவோமே!! - தூங்கு பவர்கள் போல நடிக்கும் அவர்களை நம் எவருடைய பதிவுகளும் தட்டி எழுப்ப முடியாது ..இது என் சொந்த கருத்து
உங்கள் பதிவுகள் என்று வெற்றி அடைய மனமார இறைவனை வேண்டுகிறேன் .
அன்புடன்
ரவி