நடிகர் திலகத்தின் சிலை அமைந்திருக்கும் இடம் பற்றிய நீதிமன்ற வழக்கும் அதையொட்டி எழுந்துள்ள விவாதங்களும் அனைவரின் மனதையும் மிகவும் புண்படுத்தியிருக்கிறது என்பதோடு இந்த திரியின் வேகத்தையும் மட்டுப்படுத்தி கிட்டத்தட்ட சலனமற்று நிற்கும் ஒரு சூழலையும் உருவாக்கியிருக்கிறது. இப்போதுள்ள மன நிலையில் நடிகர் திலகத்தின் படங்களைப் பற்றியோ அல்லது அவை சம்மந்தப்பட்ட விஷயங்களைப் பற்றியோ எழுதுவதற்கு எவருக்கும் விருப்பம் இல்லாமல் இருப்பது புரிந்துக் கொள்ள கூடியதே. இருப்பினும் டிசம்பர் 13-ந் தேதி வரை இப்படி தொடர்வதை தவிர்க்கலாம் என்று தோன்றுகிறது. பெரும் கொண்டாட்டங்களாக இல்லாமல் நடிகர் திலகத்தைப் பற்றிய சேதிகளை பகிர்ந்து கொள்ளலாம். இது ஒரு யோசனையே.
அன்புடன்