மதுஜி!
நீங்கள் அளித்த 'அன்பளிப்பு' ராட்சஸி பாடல் போலவே இன்னொன்று.
'அருணோதயம்' படத்தில்
ஜெய்குமாரி
'எதற்கும் தயார்' (நடிகர் திலகம் செம ஸ்மார்ட்)
நீங்க தயாரா?
http://www.youtube.com/watch?feature...&v=ausQEx-mv8c
Printable View
மதுஜி!
நீங்கள் அளித்த 'அன்பளிப்பு' ராட்சஸி பாடல் போலவே இன்னொன்று.
'அருணோதயம்' படத்தில்
ஜெய்குமாரி
'எதற்கும் தயார்' (நடிகர் திலகம் செம ஸ்மார்ட்)
நீங்க தயாரா?
http://www.youtube.com/watch?feature...&v=ausQEx-mv8c
கோ,
நமக்குப் பிடித்த ரவியின் இன்னொரு அபூர்வ பாடல்.
'இலைகளில் விளையாடும் கனித் தோட்டமே'
ஒரு கண்டிஷன். பாடலைப் பார்க்கும் போது ரவியை மட்டுமே பார்க்க வேண்டும். கூட ஒரு இம்சை பாடாய்ப் படுத்தும். பொறுத்துக் கொள்ளவும்.:)
http://www.youtube.com/watch?v=OqQ7szspUJg&feature=player_detailpage
மதுஜி!
உங்களுக்கு இன்னொரு பாடல்.
'குலவிளக்கு' தருகிறது.
அருமை டியூன் மதுஜி! இந்த பாட்டைக் கேட்டு எனக்கு ரொம்ப நாளாச்சு மதுஜி! உங்களுக்கு?
'கொண்டு வந்தால் அதைக் கொண்டு வா வா
பால் குடிக்கின்ற நேரம் அல்லவா
உண்டு மகிழ்ந்திட ஓடி வா ஓடி வா
பழம் உண்ணுகின்ற நேரம் அல்லவா'
http://www.youtube.com/watch?v=Sf5_YbR6V6o&feature=player_detailpage
வாசு சார்.. நன்றி நன்னு..தாங்க்ஸ்லு. ஷீக்ரியா.தன்யவாத்.. :) ஃபுல் மீனிங்க்லாம் சொல்ல முடியுமா என்ன..சில இலை மறை காயா இருந்தாத் தான் அழகு இல்லியோ..
இந்தாங்க ஒங்களுக்கு ஒரு குட்ட்டிப் பாட்டு..:)
**
படம் நடிப்பு என்றெல்லாம் பல பேர் எழுதி ஃப்ரேம் பை ஃப்ரேமாக ரசித்த படந்தேன்..:) மேல் என்ன நாஞ் சொல்லிட முடியுங்கறேன்.. ந.தி யோட நடிப்புன்னே சொல்ல முடியாத மாதிரி ரொம்ப இயல்பா ஒரு கிராமத்துப் பெரியவரோட வாழ்க்கை தாங்கறேன்....
வானம் தொட்டுவிடும் தூரம் தான் நு குமுதத்தில எழுதறதுக்கு முந்தியே ஒரு மாத நாவல் ஒண்ணு வைரமுத்து எழுதினாக.. அதுல இந்த நாட்டுப் புறப் பாட்டு வருமாக்கும்..
நைஸாங்காட்டியும் அத இழுத்து இந்தப் படத்துக்குள்ளாற தள்ளியிருப்பாருல்லா.. ரொம்ப அழ்ழகாவும் இருக்குமில்லா அது..
என்னாங்கறீயளா.. இதோ
ஏறாத மலை மேலே
ஏறாத மலை மேலே ஏ ஏஎலந்த பழுத்திருக்கு எலந்தபழுத்திருக்கு
ஏறி உலுப்பட்டுமா இன்னும் கொஞ்சம் நாளிருக்கு இன்னும்கொஞ்சம் நாளிருக்கு
அடி மாந்தோப்புக் கரை மேலே மயிருணத்தும் சின்னவளே
மயிருணத்தும் சின்னவளே...
ஆசையிலே நானும் வந்து பாடும் குரல் கேக்கலையா
பாடும் குரல் கேக்கலையா
பாட்டுச்சத்தம் கேக்கலையா பாட்டுச் சத்தம் கேக்கலையா
பாட்டுச்சத்தம் கேட்டதய்யா உன் பாட்டுச் சத்தம் கேட்டதய்யா
கூப்புடற சத்தமில்லாம்குயிலு ச் சத்தமின்னிருந்தேன் குயிலுச் சத்தமின்னிருந்தேன்
அடி என் சத்தமின்னிருந்தா என்னடி நீ செஞ்சுருப்ப என்னடி நீ செஞ்சிருப்ப
ஒங்க சத்தமின்னிருந்தா ஓடோடி நான் வந்திருப்பேன் ஓடோடி நான் வந்திருப்பேன்
ஓடோடி வந்திருந்தா ஓடைப் பக்கம் அடி ஓடைப்பக்கம்..(பாடிய ந.தி வடிவைப் பார்த்து ப் பம்மும்போது பார்த்துக்கொண்டிருக்கும் தியேட்டர் சனமும் பம்முவர்)..
இன்னும் கொஞ்ச நேரம் போயிருக்கக் கூடாதா எனத் தோன்றவைக்கும் பாட்டுக்களில் ஒன்று இது..
*
பாடல் வீடியோ!
https://www.youtube.com/watch?v=4TpW...3F5B577844E9E3
வாசு சார்
எதற்கும் தயார் என்பதற்கு பதில் எதற்கும் உஷார் என்று ஒரு பாட்டிருந்தால் அதைப் போட்டிருக்கலாம்...
இதைப் பார்க்கும் போது என் நினைவுக்கு வந்தது..
http://www.youtube.com/watch?v=eoldjJS1OWI
இப்பாடலில் வரும் அந்த ஸ்ரீதுர்கையை நினைத்து மனசாந்தி அடைவோம்...
எதற்கும் தயாரா வாசு சார் மற்றும் நண்பர்களே..
இதற்கு தயாராகுங்கள்..
கண்கள் குளமாகும், நெஞ்சு ஈரமாகும்...
சீர்காழியின் குரலில் எங்கிருந்தோ வந்தான் படப்பாடலைக் கேட்கும் போது மட்டுமல்ல..
அவரே அதை பாடுவதைக் காணும் போதும் கூட..
லண்டனில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் இசைமணி சீர்காழி அவர்கள் புதல்வர் சிவ சிதம்பரத்துடன் இணைந்து பாடும் நெஞ்சைத் தொடும் பாடல்..
http://www.youtube.com/watch?v=AKAgDfUuzYg
காணக் கிடைக்காத தங்கம்... என்று கூவலாம்..
அபூர்வமான காணொளி..
இசைமணி சீர்காழி கோவிந்தராஜன் அவர்களின் இசை நிகழ்ச்சி.. எம்.எஸ்.அனந்தராமன் வயலின், ஸ்ரீமுஷ்ணம் ராஜா ராவ் மிருதங்கம், விக்கு விநாயகராம் கடம்...
ரசிப்பது நாவலரும் குன்னக்குடியும் மட்டுமல்ல.. நாமும் தான்..
http://www.youtube.com/watch?v=7twnTx0xcis
குட்ட்டிப் பாட்டு -3
இந்தக் காலத்துலல்லாம் காதல் காதல் எல்லாம் டபக்குன்னுல்லாம் வருதா என்ன..பொண்ணுங்கள்ளாம் தெளிவு தான் அண்ணாச்சி..
அந்தக் காலத்துல பாத்தோமுன்னா அங்கிட்டு அவளப்பார்ப்பான் அவன் அவளும் பார்ப்பா காதல் வந்துடும்..கூடவே போராட்டமுந்தேன்..
அவளப் பாக்கறது கூட கஷ்டமாச்சுன்னா உசுரே போய்டும் இந்தக் காதலப் படவாவுக்கு..
பாருங்க..மொதல்ல அந்தப் பொண்ணு பாடிச்சு..அதப் பாட வுடாம க் கிண்டல் பண்ணிக் கெடுத்தவன் தானே இவன்..
அது என்ன பாடிச்சு
*
தரிசனம் கிடைக்காதா? என் மேல் கரிசனம் கிடையாதா?
கண்ணா
உன் தரிசனம் கிடைக்காதா? என் மேல் கரிசனம் கிடையாதா?
**
அதக் கிண்டல் பண்ணி பின் வருந்தி தானும் அதக் கத்துக்கிட்டு அவளுக்கு முன்னாடிபாடறான்..ஏன்..எல்லாம் வயசு..கெமிஸ்ட்ரி பண்ற வேலைங்காணும்!
**
தரிசனம் கிடைக்காதா? என் மேல் கரிசனம் கிடையாதா?
தேவி
உன் தரிசனம் கிடைக்காதா? என் மேல் கரிசனம் கிடையாதா?
தேவி உன் தரிசனம் கிடைக்காதா?
பொய்யில்லை கண்ணுக்குள் தீ வளர்த்தேன்
உன் பூஜைக்கு நெஞ்சுக்குள் பூ வளர்த்தேன்
விழிகளில் வழிகிற துளிகளில்
இவள் மனம் தினம் தினம் கரைகிற வரையிலும்
தேவி உன் தரிசனம் கிடைக்காதா?
என் மேல் கரிசனம் கிடையாதா?
*
சாலமன் பாப்பையா ஸ்டைலில்.. நல்லாத் தான்யா இருக்கும் பாட்டு.. அப்புறம் தரிசனஞ்செஞ்சானான்னு கேக்காதீங்க.. நாம்பாக்கலை..:)
வீடியோ கீழே..
http://www.youtube.com/watch?v=A7o_tmDEw68
இந்த அற்புதமான பாடலின் வீடியோவைக் கண்டு களியுங்கள்.
கண்ணா கண்ணா வாராய்
ராதை என்னைப் பாராய்
ஜாலம் பண்ணாதே
நீ இப்போ எங்கே போறாய்
கண்ணா கண்ணா வாராய்
ஸ்ரீராம் சந்திரகாந்தா இணைந்த இப்பாடல் தேனினும் இனிமை. இப்பாடலில் சந்திரகாந்தா அடையாளம் தெரியாத அளவிற்கு மிக இளமையாய் இருப்பதைப் பார்க்கலாம். 'மாய மனிதன்' படத்தில்தான் இந்த மதுர கானம். ஜிக்கி அவர்களின் குரல் ஜாலம் புரிகின்றது. ஸ்ரீராம் என்ன ஒரு தேஜஸ்! மனிதர் மழ மழவென செம அழகு. ஆஜானுபாகுவான உயர்ந்த உருவம்.
http://www.youtube.com/watch?v=L7-IZ3iSGGA&feature=player_detailpage
இன்னிக்கு நெற்றய ஹோம் வொர்க் இருக்கும் போல இருக்கே..மழை அங்கே எப்படி வாசு சார்..?