கோ,
திரும்ப திரும்ப படித்துக் கொண்டிருக்கிறேன்.பாகப் பிரிவினையே இன்னும் முடியவில்லை. பாகப் பிரிவினை தந்து உடனே பாலும் பழமும் கொடுத்து முரண்.:) தங்கள் குணத்தைப் போலவே.:) படித்து விட்டு இல்லை இல்லை ரசித்து விட்டு எழுதுகிறேன்.
Printable View
கோ,
திரும்ப திரும்ப படித்துக் கொண்டிருக்கிறேன்.பாகப் பிரிவினையே இன்னும் முடியவில்லை. பாகப் பிரிவினை தந்து உடனே பாலும் பழமும் கொடுத்து முரண்.:) தங்கள் குணத்தைப் போலவே.:) படித்து விட்டு இல்லை இல்லை ரசித்து விட்டு எழுதுகிறேன்.
ராகவேந்தர்,
நான் பாட்டுக்கு போய் கொண்டிருந்தாலும் என்னை குறி வைத்து அரசியல் தொடர்கிறது. நகைச்சுவை சரிதான். ஆனால் பதிவுகளுக்கு வரும் ஒன்றிரண்டு நல்ல எதிர் வினைகளையும் குலையறுத்து போடும் காரியம் அல்லவா? எல்லோருக்கும் பதில் போடுங்கள் அல்லது ஒருவருக்கும் போடாதீர்கள் என்ற ரீதியில்.ஒருவரை மிரட்டும் தொனியில் நகைச்சுவை பதிவு வந்தால்..என்ன செய்வது? மிரட்டியா நற்பெயர் வாங்குவது? நான் என்ன ஒரு பிரதி விளைவுகளும் இல்லாமல் எழுதி தள்ள வேண்டுமா? புரியவில்லை என்று சொன்னீர்களே என்று,இறங்கி வந்து பாக பிரிவினை, பாலும் பழமும் படங்களுக்கு எல்லோரையும் அணைத்து செல்லும் பதிவுகளே இட்டும் வாசு, முரளி இரண்டே எதிர்-வினை. அதனையும் கருவறுக்கும் பதிவு உங்களிடமிருந்து.
முரளி கேட்டதால், பராசக்தி,பாகபிரிவினை,பாலும் பழமும்,நவராத்திரி ஆகிய படங்களுக்கு எழுத தலை பட்டேன். வாசு சொன்னதால் சில பேச படாத படங்களில் அவர் நடிப்பின் சிறப்பை விளக்கும் பதிவுகள் போட எண்ணினேன். வழக்கமாக அழகாக தொடரும் நீங்களா இப்படி என்ற ஆச்சரியம் எனக்கு.(ஏனென்றால் அவ்வளவு முயற்சி எடுத்து இலக்கண திரிக்கு தனி மரியாதை தந்து ,தொடர்ந்து துணை பதிவுகள் இட்டவர் நீங்களே.). என்னை புரிந்தவர்களுக்கு தெரியும், நான் பேர் வாங்குவதற்காக எந்த சமரசங்களுக்கும் உடன் பட்டவனில்லை. முரளியும் ,நான் எது செய்தாலும் ஆமோதிக்கும், கண் மூடி நண்பரல்ல.
நான் இன்னொன்றும் உறுதியாக சொல்கிறேன். என் பெயரில் இன்னொருவர் எழுதினாலும்,என்னை தொடருபவர்களுக்கு ,என் எழுத்துக்கள் தெரியும் என்பதால் யோசிக்கவே செய்வார்கள். முரளியும் யோசிப்பார்.
நீங்கள் நடிகர்திலகத்தை விட மற்ற விஷயங்களை பெரிதாக எண்ணுவது எனக்கு வியப்பாக உள்ளது. உங்கள் மீது எனக்கு வருத்தமோ கோபமோ இல்லை. எனது பார்வையில் ,இந்த விஷயங்களை பதிவு செய்தேன். ஒவ்வொரு முறையும் இந்த மாதிரி அச்சானியமாக ஏதாவது நிகழ்ந்து ,நான் எழுதுவது தடை பட நேருகிறது. நவராத்திரி படத்திற்கு, showcase பதிவு போட எண்ணியிருந்து ,தயார் செய்ய ஆரம்பித்தேன். இப்போது ஒத்தி வைத்து விடுகிறேன்.
நானே சும்மா இருந்தாலும் ,இந்த மாதிரி நேர்ந்து விடுகிறது. என் ஜாதக பலன் போலும்.(நம்பிக்கை இல்லையெனினும்)
Thanks Vasu and Murali for the good responses and supporting postings with great contents to enhance the original content. This adds new gloss to the thread.
Dear Senthilvel,
Wish you many more happy returns of the day. Pls continue the good work.
Regards
HAPPY BITHDAY KOVAISEHIL SIR Your hardwork gives aboom to our folders please keep it up
BLESSINGS
http://i1065.photobucket.com/albums/...psdxsor5oq.jpg
பிறந்தநாள் வாழ்த்து சொன்ன திரி நண்பர்கள் அனைவருக்கும்
]http://i1065.photobucket.com/albums/...psumoluuol.jpg
Dear senthilvel sir,
many many happy returns of the day,may god and our nt bless you.
நன்றி கோபால் சார்..ஒன்று மட்டும் எனக்கு புரியவில்லை "தெருவில் வரையும் ஓவியர்..மற்றும் ஆர்ட் கேலரி.." நான் என் எண்ணங்களை பதிவு செய்வதில்லை. படங்கள் மட்டும் திரியில் பதிவு செய்வேன். ஆனால் உங்களது பாராட்டில் ஏதோ விஷயம் இருப்பதாக உணர்கிறேன். உதாரணங்கள் சொல்வதிற்கு நிறைய விசயங்கள் உள்ளன. இது தேவையில்லாததாக உணர்கிறேன். நான் ஓவியரும் அல்ல. நான் பதிவிட்ட திரி ஆர்ட் கேலறியும் அல்ல. அன்பு சகோதர்களின் பதிவுகள் அவ்வளுதான். இதில் ஏற்ற தாழ்வுகள் ஏதும் இல்லை.நான் உணர்ந்துகொண்டுளேன்.சரியா நண்பா..
http://i60.tinypic.com/2me94ya.jpg
Belated Birthday Wishes to Dear Kovai Senthilvel!!!!
Dear Senthilvel sir,
Belated Birthday Wishes to you.
http://i60.tinypic.com/2me94ya.jpg
திரு. கோபால்,
தெருவில் வரையப்படும் ஓவியங்களும் சரி, அதை வரைபவர்களும் சரி தரம் குறைந்தவையோ, தரம் குறைந்தவர்களோ அல்ல. ஆர்ட் காலெரியில் குளுகுளு அறையில் படங்களை பார்த்து ரசிக்கிறார்களே சொகுசானவர்கள், அவர்கள் அப்படி ரசிப்பதற்கு ஆர்ட் காலெரியையும் குளுகுளு வசதியையும் ஏற்படுத்தி தருபவர்களே தெருவில் வசிப்பவர்கள்தான். ஆர்ட் காலெரியில் வைக்கப்பட்டிருக்கும் சில மாடர்ன் ஆர்ட்கள் யாருக்கும் புரியாது என்ற விமர்சனங்களும் உண்டு.
காழ்ப்புணர்ச்சி காரணமாக மக்கள் திலகத்தையோ அவர் திரியையோ தாழ்த்திப் பேசுவதாக நினைத்துக் கொண்டு உங்களை நீங்களே தாழ்த்திக் கொள்ளாதீர்கள்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
அன்பு நண்பர் செந்தில்வேல் அவர்களுக்கு
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்
https://s-media-cache-ak0.pinimg.com...2065563808.jpg
Gap filler : Beach songs with NT!
கடற்கரை கான அலைகள்! காதல் வலைகள்!! கற்பனை சிலைகள்!! மனித மன நிலைகள்!!!
Part 1 : Annai Illam ! அன்னை இல்லம்
https://www.youtube.com/watch?v=C_Y80VfixCUQuote:
கடற்கரையில் மணலினூடே காலாற நடப்பது ஒரு சுகம் ! பீச்சில் சுண்டல் சுவைத்து காதலியுடன் உலகை மறப்பதும் சுகமே!!காதலியைக் கலாய்ப்பதும் சுவாரஸ்யமே!
Quote:
கடலில் உக்கிரமாக எழும் அலைகள் ஆர்ப்பரித்து அடங்குவது கடற்கரை எல்லையிலேயே !!
மனதில் எழுந்த காதல் அலைகளை நண்பருடன் பகிர்ந்து மன சாந்தமடைகிறார் நடிகர் திலகம் !
https://www.youtube.com/watch?v=i5LaULZ-vFo
Sivaji Ganesan - Definition of Style 21
பாலும் பழமும்
பாலும் பழமும்..
பல காட்சிகளில் நுட்பமான நடிப்பில் நடிகர் திலகம் நம்மை மயக்கி விடுவார்..
எனக்கு மிகவும் பிடித்த விஷயங்களில் ஒன்று Contrivation... பொதுவாக Contrivation...என்றால் வலுவில் திணிக்கப் படுவது அதனால் அதில் செயற்கை இருக்கும் என்கிற அபிப்ராயம் உண்டு. ஆனால் அந்த Contrivation...என்கிறதையே யதார்த்தமாக மாற்றிய பெருமை பீம்சிங்கையே சாரும். டாக்டருக்குத் தன் கடமை உணர்ச்சியைப் புரிய வைக்க சாந்தி வெள்ளைக் கோட்டு அணிந்து டாக்டராக உருவகப்படுத்தி ரவிக்குப் புரிய வைக்கும் காட்சி. பேசப்படாது, நான் இப்போ டாக்டர் ரவி. நான் தான் நீங்க என சொல்வதும் அதற்கு உடனே நடிகர் திலகம் அப்போ நீங்க தான் நாங்களா எனக் கேட்டு விட்டு உடனே குரலை மாற்றி பெண் குரலில் பேசுவதும்...
ஆஹா.. யதார்த்தம் என்றால் இதுவல்லவோ யதார்த்தம்.. இயற்கை நடிப்பு என்றால் இதுவல்லவோ இயற்கை நடிப்பு..
இந்த இடத்தில் தலைவர் ஒரு விதமான புன்னகையோடு, அவள் சொல்வதைப் புரிந்து கொண்டே வருவதைத் தன் முகத்திலேயே பிரதிபலித்து, அப்படியே தன் கடமை உணர்ச்சி உந்த அமரும் இடம்...அந்த உட்காரும் விதத்திலேயே அந்த பாத்திரத்தின் மனதை வெளிப்படுத்தும் உன்னதம்...
சரோஜாதேவி சொல்லச் சொல்ல அந்த முகத்தில் மெலிதாக வெளிப்படும் பல்வேறு உணர்வுகள்,
பேரும் புகழுமாய் நீங்கள் கழுத்தில் மாலையுடன் வந்து நிற்பதை நான் பார்க்க வேண்டும் என்று ஆசையாய் இருக்கிறது என்று சரோஜா தேவி சொல்லும் போது லேசாக கண்களை அவள் பக்கம் திருப்பி தான் அவளை கவனிப்பதாக நமக்கு உணர்த்தும் யுக்தி, அவள் காபி கொண்டு வரப் போனவுடன் அந்த சிந்தனையுடனேயே நம்மை கர்வத்தோடு புருவத்தை நிமிர்த்திப் பார்க்கும் பார்வை...
அது மட்டுமா. உடனேயே காட்சி சீரியஸாகி விடுகிறது. சாப்பிட உட்காரும் சாந்தியை அவரழைக்க, உடனே ஓடுவதும். (அழகுப் பதுமையாகவே வலம் வந்த சரோஜாதேவி அவர்களின் நடிப்பில் புதிய பரிமாணத்தை அறிமுகப் படுத்தியது பாகப்பிரிவினை என்றால் அதை அழுத்தமாக நிரூபித்தது பாலும் பழமும், அதற்கு இந்தக் காட்சி ஒரு பானை சோற்றில் ஒரு பதம்.. கையைக் கழுவிக் கொண்டு அவர் ஓடும் இடம் குறிப்பிட வேண்டும்.) அப்போது டாக்டர் தன் மருத்துவ உபகரணங்களைப் பார்த்துக் கொண்டே அவளுக்கு உத்தரவிடுவதும், அதை அவர் எடுக்கச் செல்வதும்.. அந்த அளவிற்கு கேஷுவலாக இருக்கும். அதுவும் அந்த மருந்துகளின் பெயர்களை நடிகர் திலகம் உச்சரிக்கும் போது..
யாராவது அங்கே சிவாஜியை நினைப்பார்களா... டாக்டர் ரவியைத் தானே பார்ப்பார்கள்.. இதற்கு மேல் இயற்கை நடிப்புக்கு உதாரணம் வேறென்ன வேண்டும்..
உடனே அங்கு வசனத்தின் பங்கு குறைந்து மெல்லிசை மன்னர் காட்சியைத் தன்வசம் எடுத்துக் கொண்டு விடுவார்.
இந்தக் காட்சி படத்தில் என்னை மிகவும் ஈர்த்த காட்சி.. கோபாலின் எழுத்தில் இந்தப் படத்தைப் பற்றிப் படித்தவுடனேயே என் மனதில் தோன்றிய எண்ணங்கள் இவை.
https://www.youtube.com/watch?v=z5AwjR342RE
பார்க்க 49.45 நிமிடத் துளியில்.
கோபால்.. என்று புதிய பறவை படத்தின் க்ளைமாக்ஸில் சரோஜா தேவி நாயகனிடம் நான் தோற்று விட்டேன் என்று கூறும் அந்த குரலில் நம் கோபாலைப் பார்த்து நான் கூவ வேண்டும் போல் தோன்றுகிறது... தங்களுடைய எழுத்தில் பாலும் பழமும் பொங்கும் தமிழமுதாய் பிரவாகமெடுக்க பருகக் காத்திருக்கும் எங்களிடம் ஏனிந்தக் கோபம் என்று மனம் கேட்கிறது...
Please be cool Gopal. It was for pure fun and nothing underlined. முந்தைய பதிவில் நான் குறிப்பிட்டிருக்கும் என் எண்ணங்கள் தங்களுடைய பாலும் பழமும் படத்தைப் பற்றிய பதிவைப் படித்த உடனேயே தோன்றியவை. நம் அருமை நண்பர்களின் பதிவுகள் தொடர்ச்சியாக வந்ததாலும் எனக்கும் உடனடியாக பதில் போடுவதற்கான அவகாசம் கிடைக்காததாலும் சற்று மெதுவாக போடலாம் என்றிருந்தேன். அவ்வளவே.
பாராட்டுவதைப் பற்றி முரளி சார் சொன்னதே என் கருத்தும். சொல்லப் போனால் என்னை விட தங்களுக்குத் தான் அதிகம் பொருந்தும். அனைத்து விதமான பாராட்டுக்களுக்கும் அப்பாற்பட்ட தங்களை வித்தியாசமான விதத்தில் பாராட்டலாம் என்று தான் முரளி சாரை நகைச்சுவையாக சீண்டினேன்.
Nothing else intended. Please take it in lighter vein.
அன்பு நண்பர் செந்தில்வேல் அவர்களுக்கு
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்
Gap filler 2 : Beach songs with NT!
கடற்கரை கான அலைகள்! காதல் வலைகள்!! கற்பனை சிலைகள்!! மனித மன நிலைகள்!!!
Part 2 : நெஞ்சிருக்கும் வரை
https://www.youtube.com/watch?v=NaItT2DZVXUQuote:
வாழ்ந்தே தீருவோம் என்னும் நேர்மறை எண்ணமே நம்மை வாழ வைத்து விடுமே ! மூன்று பிரம்மச்சாரி நண்பர்கள் கவலை மறக்க கலக்கியெடுக்கும் கடல் கரையோர ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்!! Watch NT's meticulous steps while Gopi and Muthuraaman try dancing steps with observing side eyes on NT!!
Gap filler 3: Beach songs with NT!
கடற்கரை கான அலைகள்! காதல் வலைகள்!! கற்பனை சிலைகள்!! மனித மன நிலைகள்!!!
Part 3 : உத்தமன்
Quote:
கடல் மட்டும் அலைகளின் சீற்றத்தால் பொங்குவதில்லை மனித மனமும் பொங்குமே கைப்பிடித்த காதல் பூங்கொடியாள் கைகழுவிச் செல்லுன்போது !
சிலை வடித்து முடிக்கும் முன்னே தலை வெடித்துப் போன கதையை கடற்கரையோரம் வெளிப்படுத்துகிறார் நடிப்பின் உத்தமர் !!
Quote:
Quote:
மாயாஜாலம் புரியும் நடிகர்திலகத்தின் மாறிமாறி மின்னும் முகபாவங்கள் வானவில்லின் வர்ணஜாலமே! பின்னணி இசையும் பாடல் வரிகளும் பொதிந்த அர்த்தங்களும் நம்மை ஏதோ இனம் புரியாத பரவச நிலைக்கு உட்படுத்துவது உளவியல் விந்தையே ! அது நடிகமன்னனின் நடிப்புக் களவியல் சிந்தையே !!
https://www.youtube.com/watch?v=VNuTeMvpOMc
But...enjoy 6'2" Sean Connery's beach song 'underneath a mango tree...' in his James Bond/OO7 intro movie DrNo even as Ursula Andress emerges out of the sea like Venus!!
This is a bonus!!
https://www.youtube.com/watch?v=AZ6mOC4uSX4
https://www.youtube.com/watch?v=fTEt_Dz2KDkQuote:
Connery's back pose with a blue T-shirt reminds me of NT with a red/maroon T-shirt in Ooty varai Oravu in the song Poo Maalaiyil Oar Malligai!!
//நடிகர் திலகம் திரியில் பதிய ஒரு பெரிய பதிவு தயார் செய்து கொண்டிருந்ததால் மெய்மறந்து அதிலேயே மூழ்கி விட்டேன். (நமக்குதான் நடிகர் திலகம் என்றாலே நானூறு நாளுக்கு பசி, தூக்கம் இருக்காதே)//
எங்கே?எங்கே?வாசு?
வாங்க கலை. ரசனைகளில் உயர் ரசனை, கீழ் ரசனை எல்லாம் உண்டு. ஓவியத்தில் portrait ,images ,landscapes எல்லாம் புகைப்பட கலையால் அழிந்த பிறகு ஓவியம் ஜீவித்தது pointilism ,impressionism ,expressionism ,sur -realism ,cubism ,abstract post modernism இவற்றால்தானே? ஒருவர் சங்கீதம் தேர்ந்து பாடுவதற்கும், தெரு பாடகர்களுக்கும் வித்யாசம் உண்டு.
எல்லாருமே ஓவியம் வரையும் போது(பள்ளி சிறார்கள் உட்பட) Rembrandt ,Vangoh ,Picasso போன்றோர் கொண்டாட பட காரணங்கள் உண்டு. நமக்கு புரியாதவை இல்லாதவையாகி விட முடியாது. eistein கோட்பாடு எல்லோருக்கும் புரியாது. அதற்கென்று அவை ஏற்க முடியாதவை என்று அர்த்தமல்ல.நீங்கள் முன்முடிவுகள்,முன்பகை,வைத்து கலையை அணுகினால் ,இருக்கும் நிலை தாண்ட முடியாது. நான் உதாசீனம் செய்பவை எக்காலத்திலும் கலையாக முடியாது.
ராகவேந்தர் ,
உங்கள் மீது வருத்தமோ,கோபமோ, எழ வாய்ப்பேயில்லை. தன்னலம் பாராது எங்களை வழி நடத்தும் பிதாமகர்,தாங்கள்.
நவராத்திரி பின்னொரு நாளில் பதிப்பேன்.
Gap filler 4 : Beach songs with NT!
கடற்கரை கான அலைகள்! காதல் வலைகள்!! கற்பனை சிலைகள்!! மனித மன நிலைகள்!!!
பகுதி 4 :தியாகம்
Quote:
Quote:
வசந்த கால கோலங்கள் ....கலைந்திடும் கனவுகள்.......என்னவொரு மென்மையான இதய வருடல்....நுரை பொங்கும் கடலலைகள் பாதங்களை மோதி வருடுவது போன்ற குறுகுறுப்பு !!
https://www.youtube.com/watch?v=PuV8Hemr_l8
ராகவேந்திரா,
பிரமாதம். Role Reversal Contrivation ,இதே சிவாஜி-சரோஜாதேவி இணைவில் ஆலயமணி படத்திலும் பிரமாதமாக வந்திருக்கும். அந்த ஏஸ் ஞாபகம் உள்ளதா?
https://www.youtube.com/watch?v=S0PER0Ko1C8
50 . 10 இலிருந்து 51.28 வரையும், 56.30 இல் இருந்து 57.35 வரையும்.
என்னா pair பா சிவாஜி-சரோஜாதேவி தூள்.
Physical deformation or physically disabled functions like dumbness...
இந்தக் குறையோடு வாழ்ந்தாலும் அந்த பாத்திரத்தின் ஈகோவை சற்றும் தளர்த்தாமல் வெறும் அனுதாபத்தை மட்டுமே நம்பி பாத்திரத்தை டெவலப் செய்யாமல் அதே சமயம் ஆடியன்ஸின் முழு பரிதாபத்தையும் சம்பாதிக்கக் கூடிய நடிப்பை வழங்குவது நடிகர் திலகத்திற்கே சாத்தியம். பாகப் பிரிவினை இதற்கு உதாரணம் என்றால் இதை விட அதிகமாக அவர் எஸ்டாப்ளிஷ் செய்தது வளர்பிறை படத்தில். சரஸ்வதி சபதம் படத்தில் ஊமையாக வந்தாலும் அதில் அப்பாவித்தனம் கலந்திருப்பதால் அனுதாபம் பெறுதற்கு அந்தப் பாத்திரத்திற்கு சுலபமாக முடிந்தது. கதையமைப்பும் கைகொடுத்தது. ஆனால் வளர்பிறை அப்படியல்ல. ஊமையாக வந்தாலும் கோபம் சற்றும் குறையாத ஈகோவில் சளைக்காத பாத்திரம். ஒரு கட்டத்தில் தாயாரும் தாரமும் ஒதுக்கினாலும் கூட தன் பிடிவாதத்தை விட்டுக் கொடுக்காத பாத்திரம். சரோஜாதேவியின் மிகச் சிறந்த நடிப்பில் நம்மால் மறக்க முடியாத படம். எப்படி சாவித்திரி சிவாஜி ஜோடிக்கு எல்லாம் உனக்காக அமைந்ததோ அதே போன்று சிவாஜி-சரோஜாதேவி என்றால் வளர்பிறையைச் சொல்லலாம்.
பாத்திரங்களை யதார்த்தமாக வடிவமைப்பதில் யோகானந்த் வல்லவர். அதிகப் பேசப்படாதவர். ஆனால் அவருடைய படங்களில் நடிகர் திலகத்தின் நடிப்பில் வித்தியாசம் தெரியும். நடிப்பது தெரியாது ஆனால் அங்கே மிகச் சிறந்த பங்களிப்பில் நடிகர் திலகம் அசத்துவார்.
வளர்பிறை சிறந்த யூனிட். கர்ணன் புகழ் ஏ.எஸ்.நாகராஜன் மூலக்கதையை ஜாவர் சீதாராமன் நுட்பமாக திரைக்கதையாக்கி பாத்திரங்களை மிகவும் சிறப்பாக செதுக்கியிருப்பார்.
துரதிருஷ்டவசமாக இன்னும் இப்படத்தின் டிவிடி வெளியாகவில்லை.
காத்திருப்போம். நம்பிக்கை இருக்கிறது. மீண்டும் பார்த்து விடுவோம் என்று.
கோபால்,
role reversal contrivation ...
நடிகர் திலகத்தின் பல படங்களில் இடம் பெற்றுள்ளது என்றாலும் யதார்த்தமாக அமைந்தது சில படங்களில் மட்டுமே..அதில் மேலே நீங்கள் குறிப்பிட்ட காட்சி ஒன்று.
அப்படியே பாகபிரிவினை செட் நடிகர்கள்.(தங்கவேலு கூடுதல்)
திலக சங்கமத்தில் கலகலக்குத்து காத்து (டி.எம்.எஸ்-பீ.எஸ்), கூண்டு திறந்ததம்மா(டி.எம்.எஸ்),மவுனம்(பீ.எஸ்),நான்கு சுவர்களுக்குள் (பீ.எஸ்),பூஜ்யத்துக்குள்ளே (டி.எம்.எஸ்) என்று ஜுகல் பந்தி.
சுப்பா ராவ் கேமரா.
இந்த படம் எனக்கு சுமாராகவே நினைவில் நிழல் போல உள்ளது. படத்தின் DVD க்காக ஆவலுடன் காத்திருக்கிறேன். வாசு புண்ணியத்தில் எல்லாம் உனக்காக கிடைத்தது. இதே போல 2001 இல் இருவர் உள்ளம் கிடைக்காமல் சிங்கப்பூர் little india வில் ஒரு கடையில் கெஞ்சி கெஞ்சி ,அவர் ஒரு படு சுமார் பிரிண்ட் போட்டு கொடுத்தார். வொய் .ஜி .மகேந்திரா 2009 இல் வைஜயந்தி,சரோஜா தேவியை கௌரவிக்கும் போது இந்த பட காட்சிகள் கிடைக்கவில்லை என வருந்த, அவருக்கு உடனே வியட்நாம் வீடு நாடக கிரீன் ரூம் சென்று கொடுத்தேன்.
Gap filler 5 : Beach songs with NT!
கடற்கரை கான அலைகள்! காதல் வலைகள்!! கற்பனை சிலைகள்!! மனித மன நிலைகள்!!!
பகுதி 5 :ராஜா
Quote:
காவலர்களின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டுச் செல்லும் கள்வராக இல்லாமல் ஒரு மாறுதலுக்கு காவலர் முன்னிலையிலேயே காதலைக் கடத்தும் ஜோடிகள் ! கடத்தல் வைரங்களைக் கைப்பற்ற காவலர் திலகம் கிடுக்கிப்பிடி போடத் தேர்ந்தெடுத்த இடம் எழில் கொஞ்சும் கடற்கரை எல்லையே
https://www.youtube.com/watch?v=sHWZbgTR1n8
அக்கரைப் பச்சை !
Unlike our police helplessly watching the beach scene James Bond has his (24X7)Thunderball duty to dispatch baddies even as he relaxes in a beach!!
https://www.youtube.com/watch?v=bVRTX1QvQJg
நடிகர் திலகம் சண்டைக் காட்சிகள்.
தொடர்-13
நண்பர்களே!
நடுவில் நின்று போய் இருந்த என்னுடைய 'நடிகர் திலகம் சண்டைக் காட்சிகள்' தொடரை தொடர்கிறேன். ராகவேந்திரன் சார், சந்திரசேகர் சார், வாசு சார், கோபால் மற்றும் இதர நண்பர்களும் தொடரை தொடரும்படி கேட்டுக் கொண்டார்கள். அவர்களுக்கு மட்டுமல்ல. உங்களுக்காகவும், மற்ற எல்லோருக்காகவும்தான்.
இனி நடிகர் திலகத்தின் சண்டைக் காட்சிகளை சண்டை சச்சரவுகள் இல்லாமல் கண் கொட்டாமல் ரசிப்போம்.
தொடருக்குப் போவதற்கு முன்னால்.
நம்மைப் போன்ற தலைவரின் தீவிரவாத ரசிகர்கள் கூட தலைவர் 'தங்கை' படத்தில்தான் சண்டைக்காட்சி கோதாவில் இறங்கினார் என்று சொல்வதுண்டு. அந்த எண்ணம் ஓரளவிற்கே சரி! (உத்தமபுத்திரனும், வணங்காமுடியும் விதிவிலக்கு. அது எல்லோரும் உணர்ந்ததே!) ஆனால் 67க்கு முன்னால்? ம்...சொல்லுங்கள். 67க்கு முன்னால்?.
அதற்கு முன்னாலும் சண்டைக்காட்சிகளில் அவர் 'சூரக்கோட்டை சிங்கம்'தான். ஆனால் கூண்டில் உறுமிக் கொண்டிருந்த சிங்கம். ('தங்கை' படத்தில் பாலாஜி கூண்டை திறந்து விட்டு விட்டார்) அதை நிரூபிக்கத்தான் இந்த சண்டைக்காட்சி. நம்மில் பலர் இந்த சண்டைக் காட்சியை மறந்திருப்போம் அல்லது சற்று அலட்சியம் செய்திருப்போம். பரவாயில்லை. இப்போதும் ஒன்றும் கெட்டுவிடவில்லை. இனி ஒவ்வொன்றாக எடுப்போம். நாமும் ரசித்து பிறரிடமும் நடிகர் திலகத்தின் சண்டைக் காட்சிகளின் மகத்துவத்தை கூறுவோம். அகிலம் அறியும்படி செய்வோம்.
இனி தொடருகிறேன்....
சரி! என்ன அப்படி ஒரு சண்டைகாட்சி! 'டிஷ்யூம்.. டிஷ்யூம்' ஒலிக்காத காலகட்டத்தில் வந்த சண்டைக்காட்சி. அதாவது நேச்சுரல் பைட். எதிராளியைக் குத்திப் பதம் பார்க்கும் போது 'டொக்' என்ற ஒலி மட்டுமே இயல்பாக ஒலிக்கும். அதுதானே சரி! இப்போதைக்கு அது சிரிப்பை வரவழைக்கலாம். ஆனால் விஷயம் தெரிந்தவர்களுக்கு 'டிஷ்யூம்' தான் சிரிப்பை வரவழைக்கும். 'டிஷ்யூம்.. டிஷ்யூம்' எபெக்ட்டுக்குத்தானே! செயற்கையும் கூட.
இனிமேல் சொல்லாவிட்டால் என்னை அடிப்பீர்கள். என்னுடன் சண்டைக்கு வருவீர்கள்.
http://i1087.photobucket.com/albums/...130608.046.jpg
வெள்ளியம்பலத்தின் (பாலையா) 'புதையல்' ஆசை வெறியில் அப்பாவி இளைஞன் துரை ('நடிப்பின் துரை') சிக்கிக் கொள்கிறான். ஒன்றுமே அறியாத துரையை புதையல் ரகசியம் கேட்டு தொல்லை தருகிறான் அம்பலம். துரை தனக்குத் தெரியாது என்று மறுக்க, அவனை அப்படியே தனது அண்டர்கிரவுண்ட் பாதாள இருட்டு அறைக்குள் தள்ளி விடுகிறான் அம்பலம். இதை சற்றும் எதிர்பாராத துரை சற்றே நிலைதடுமாறி உடன் சகஜ நிலைக்குத் திரும்புகிறான். வெள்ளியம்பலத்துக்கு எதிராக வெகுண்டு எழுகிறான்.
அறைக்குள் வரும் வெள்ளியம்பலத்தின் அம்பலத்தை அவனிடமே வெட்ட வெளிச்சமாக்கத் தொடங்குகிறான் தன்னுடைய சிம்ம கர்ஜனையால்.
('நீ ஒரு வெளிச்சம் போடும் காட்டு ராஜா')
நாயகன் இப்படி முழங்கும் போது வில்லன் வெள்ளி சும்மா இருப்பானா? சனியாயிற்றே அவன்! தன்னிடமுள்ள அடியாட்களை துரை மீது ஏவி விடுகிறான். ஒன்றல்ல இரண்டல்ல... ஏழெட்டு அடியாட்களை. துரை ஒருவன். இளைஞன். வீரன். அவர்களுடன் தைரியமாக மோதுகிறான். துணிச்சலுடன் தன்னால் முடிந்தவரை போராடுகிறான். அவர்களை துவம்சம் செய்து பந்தாடுகிறான். ஆனாலும் அவர்கள் எண்ணிக்கையில் அதிகம் என்பதால் போராட்டத்தின் முடிவில் அவர்கள் கையில் சிக்குகிறான்.
சண்டைக்கு முன் ஸ்டைல் போஸ்.
http://i1087.photobucket.com/albums/...131141.538.jpg
கமால் பிரதர்ஸ் பிரைவேட் லிட்தயாரித்த 'புதையல்' (1957) படத்தின் அற்புதமான உண்மையான தத்ரூபமான சண்டைக்காட்சி. மெய் சிலிர்க்க வைக்கிறது நடிகர் திலகத்தின் வீரம். அருமையான உடல்வாகு. மிக எழிலான தோற்றம். இளம் வயது. மடித்து விடப்பட்ட முழுக்கை வெள்ளை சட்டை. லூஸுமில்லாமல், டைட்டாகவுமில்லாமல் 'சிக்'கென்ற மிக அழகான பேன்ட். 'கருகரு' சொந்த முடி. அலட்சிய தோரணை. பாலையா வெள்ளி அம்பலமாக அடியாட்களை கைகொட்டிக் கூப்பிடும்போது தூணில் சாய்ந்தபடி, வலது கையை பின் பக்கத் தலையில் வைத்து, இடது கையை இடுப்பில் ஊன்றியபடி, ஸ்டைலாக பின்பக்கம் திரும்பி, ஓடிவரும் அடியாட்களை நடிகர் திலகம் அலட்சியப் பார்வை பார்க்கும் போதே அதம் பறக்க ஆரம்பித்து விடும்.
பாலையா இவரிடம், "பார்த்தாயா? காட்டு ராஜாவின் படைகள்" என்று கொக்கரிக்க,
"படைகள்... ('ஹ ஹ ஹ ஹ' என்று நக்கல் சிரிப்பு உதிர்ப்பார்) சோற்றால் அடித்த பிண்டங்கள்...எடுபிடிக்கள்...ஏனோதானாக்கள்...இள ிச்சவ ாயர்கள்"
என்று நடிகர் திலகம் பதில் கொக்கரிப்பு செய்யும் போது நரம்புகள் நமக்கு சூடாகும்.
பாலையா: ஏய்! நான் போக்கிரி!
நடிகர் திலகம்: போக்கற்றவர்களுக்கு.
பாலையா: கொன்று விடுவேன்.
நடிகர் திலகம்: கோழைகள் பயப்படுவார்கள்..
பாலையா: ஏய்! நான் இந்த ஊருக்கே ராஜா.
நடிகர் திலகம்: கோழி கூடத்தான் குப்பை மேட்டுக்கு ராஜா. (கதை வசனம் கலைஞர் ஆயிற்றே!)
பதிலடி முதலில் 'பொளேர் பொளேர்' என்று பொட்டில் அடித்தாற்போல் வரும்.
பின் 'ஸ்டன்ட் சோமு'பார்டி அடியாட்களுடன், கையடி,காலடி, நரம்படி, எலும்படி என்று கைகலகலப்பு நீளும். கழுத்துக்கள் முறியும், எலும்புகள் நொறுங்கும்.
முதலில் தன் மீது பாய்ந்து வரும் அடியாள் ஒருவரை நடிகர் திலகம் படு அலட்சியமாகவும், வேகமாகவும் அப்படியே பிடித்துத் தள்ளுவது சண்டையின் விறுவிறு துவக்கம். அதே போல அடுத்து வரும் ஆளையும் பலமாகத் தள்ளுவார். பின் எல்லோரும் இவரைச் சுற்றி வளைத்து பிடித்தவுடன் திமிறிக் கொண்டு ஒரு பின் பக்க டைவ் செய்வது போல் காட்சி. (இந்த இடம் 'டூப்' உபயோகப்படுத்தி இருப்பார்கள்). பின் வருபவர்களை ஒவ்வொருவராக இவர் கும்மாங்குத்து விட்டு நம்மைக் குதூகலிக்க வைப்பது அபாரம்.
http://i1087.photobucket.com/albums/...131257.692.jpg
அடுத்து தன்னை நோக்கி வேகமாகப் பாயும் ஒரு அடியாளின் ஷோல்டரைத் தட்டி (செம சூப்பராக இருக்கும்) கழுத்தைப் பிடித்து அப்படியே விட்டுக் கிடாசுவார். (விட்டல்ராவின் ஒளிப்பதிவு இந்த ஸ்டன்ட் காட்சியில் விளாசி எடுக்கும். பின் ஆக்ரோஷ சண்டைதான். இடையில் சில காட்சிகளில் டூப் போட்டிருப்பார்கள். அதில் நடிகர் திலகத்திற்கு பொருத்தமான டூப் போடாமல் பம்பை முடியுடன் ஒருவரை பொருத்தமே இல்லாமல், அந்தபந்தம் இல்லாமல், டூப்பாகப் போட்டிருப்பார்கள்.:banghead: (இது ஒன்றுதான் நெகடிவ் பாய்ன்ட்)
http://i1087.photobucket.com/albums/...131326.244.jpg
அடுத்து வரும் அடியாளின் கையை அப்படியே முறுக்கி குப்புற விழ வைப்பார். இன்னொருவர் வரும் போது நடிகர் திலகம் காலால் எட்டி உதைக்க, அந்த அடியாள் வசமாக நடிகர் திலகத்தின் காலைப் பிடித்துக் கொண்டதும் பின்னால் அடிக்கப் பாய்ந்து வரும் ஆளை அப்படியே திரும்பி ஒரு குத்து விடுவார். பின் நடக்கும் களேபரங்களில் அடியாட்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் எண்ணெய் தகர டின்களின் மேல் விழுவதும், அடி தாங்க மாட்டாமல் பேரல்களின் உள்ளே குப்புற கவிழ்ந்து விழுவதும் காட்சிக்கு பிரம்மாண்டம் கொடுக்கும்.
பின் சில காட்சிகளை டூப் பார்த்து கொள்ள, பின் ஒரு அதகளமான சீன்.
அடுத்து வரும் அடியாளின் கைகளைப் பிடித்து கழுத்தில் சுற்றி வளைத்து க்ஷண நேரத்தில் மூட்டையை பக்கவாட்டில் தூக்கிப் போடுவது போல தூக்கிப் போடுவாரே பார்க்கலாம். நிஜமாகவே மயிர்க்கூச்செரியச் செய்யும் காட்சி. இந்தக் காட்சியை ஒரு நான்கைந்து தரமாவது ரிவர்ஸ் செய்து பின் பாஸ் செய்து பாருங்கள். மிக மிக அற்புதமான காட்சி இது. அசந்தே போனேன். சர்வ அலட்சியமாக செய்வார் நடிகர் திலகம்.
அடுத்து இன்னும்.. இன்னும்...
நடிப்பில் உச்சம் தொடுவது போல அடிகள் கொடுப்பதிலும் தூக்கிக் கிடாசுவதிலும் உச்சம் தொடுவார். ஒரு அடியாளின் தலைமுடியைக் கொத்தாகப் பிடித்து அப்படியே தூக்கி வீசுவார். அடுத்து வரும் ஆளின் இடுப்பை சுற்றி வளைத்து அப்படியே தலைகீழாகத் தூக்கிப் போடுவார். பின் துரத்தும் அடியாட்களிடம் இருந்து மாடிப்படிகட்டுகள் ஏறி ஓடி அப்படியே திரும்பி அவர்கள் அத்தனை பேர் மேலும் அப்படியே புலி போல டூப்பே இல்லாமல் பாய்வார்.
புலிப் பாய்ச்சல்
http://i1087.photobucket.com/albums/...131420.189.jpg
அடடா! காணக் கோடி கோடியாய்க் கண்கள் வேண்டும். பார்ப்பவர்கள் அப்படியே உறைந்து வாய் பிளந்து பார்க்குமளவிற்கு நடிகர் திலகத்தின் சாகசங்கள் இந்த சண்டைக் காட்சியில் சரித்திரம் படைக்கும். பின் அத்தனை அடியாட்களும் இவர் மேல் விழுந்து இவரை பிடித்து கட்டி வைத்து விடுவார்கள்.
இந்தக் காலத்து ஹீரோக்களும் நகைக் கடையை தன் உடலில் சுமக்கும் இருபது முப்பது சோற்றுத் தடியன்களுடன் சண்டை போடுகிறார்கள். ஹீரோ சும்மா சாதாரணத் துண்டால் சுழற்றி அடித்தால் கூட அடிவாங்கும் அடியாள் ஐநூறு அடி தள்ளி வலி தாங்காமல் கத்தியபடி உருண்டு புரண்டு, அங்கே உள்ள பொருட்களின் மீது விழுந்து வைக்கிறான். ஹீரோ ஒரு அடி கூட வாங்காமல் அதுவும் படு ஸ்டைல் காட்டி, அத்தனை பேரையும் சாய்த்துவிட்டு, சட்டையின் சலவை மடிப்பு கலையாமல் பஞ்ச் டயலாக் விடுகிறான். கொஞ்சம் கூட நம்பவே முடியாத இந்த மாதிரி கூத்துக்களையெல்லாம் நாமும் விதியே என்று பாவமாக பார்த்துக் கொண்டு இருக்கிறோம்.
இந்த சண்டைக் காட்சியிலும் நடிகர் திலகம் ஏழெட்டுப் பேர்களுடன் மோதுகிறார். ஆனால் நம்பும்படியாக இருக்கும். ஒரு ஆவேச இளைஞன் எந்த அளவிற்கு தன்னால் முடிந்த பலம் காட்டி மோதுவானோ அது நடிகர் திலகம் மூலம் அம்சமாக நமக்கு உணர்த்தப்படும். தூக்கிக் கிடாசுவதற்கு தக்கபடி ஆட்கள் சற்று ஒல்லியாக ஆனால் அதே சமயம் ஸ்ட்ராங்காக இருப்பார்கள். ஒற்றை ஆள் இத்தனை பேருடன் போராடி இறுதியில் அவர்களிடம் மாட்டிக் கொள்வார். இதுதானே இயல்பாய் நடக்கக் கூடியது?
மிக மிக இயற்கையான இரத்தம் உறையச் செய்யும் விறுவிறுப்பான சண்டைக்காட்சி. புதையல் கதையிலும், நடிகர் திலகத்தின் இளமை அழகிலும், சொல் சித்தர் விளையாட்டிலும், 'பத்மஸ்ரீ', பத்மினியின் காதல் களியாட்டங்களிலும், சந்திரபாபுவின் நகைச்சுவையிலும், இனிமையான பாடல்களிலும் நடிகர் திலகம் உயிரைக் கொடுத்து நடித்த இந்த அற்புத சண்டைக்காட்சி கொஞ்சம் கண்டு கொள்ளப்படாமல் போய் விட்டது.
இனி என்ன? எடுத்துக் கொடுத்தாகி விட்டது. நீங்கள் இந்த சண்டைக்காட்சியின் பெருமையை அனைவரிடமும் சொல்லி வாயார தலைவரைப் புகழ்ந்து, மனம் மகிழ்ந்து அவர் பெருமையை பறை சாற்ற வேண்டும்.
'தங்கை'க்கெல்லாம் முன்னாடியே தன்னிகரில்லா சாதனைகளையெல்லாம் எப்போதோ தங்க நிகர் தலைவர் சண்டைக்காட்சிகளில் படைத்தாகி விட்டது என்று இப்போது நம்புகிறீர்களா?
'மன்னர்' இசையமைத்து கிருஷ்ணன் பஞ்சு இயக்கத்தில் வெளிவந்த நமக்குக் கிடைத்த அரும் 'புதையல்' சண்டைக்காட்சி இது. நன்றி நண்பர்களே! அடுத்து இது போன்ற அரியதொரு சண்டைக் காட்சியில் உங்களை சந்திக்கிறேன்.
'புதையல்' படத்தின் இந்த அருமையான சண்டைக்காட்சியை முதன்முதலில் இணையத்தில் தரவேற்றி உங்களுக்காக.
https://youtu.be/BwewxSLGaDc
Mr Neyveliar,
Now we are eagerly awaiting your remaining series of NT one by one and it will be a treat for
all of us.
Regards
வாசு,
ஒரே மூச்சில் படித்து விட்டேன். இனி வீடியோதான் பார்க்க வேண்டும். ஆனால் நீங்கள்தான் காட்சியை கண் முன்னாள் நிறுத்தி விட்டீர்களே! தொடரட்டும் உங்கள் தொடர்கள்! தொடரட்டும் உங்கள் தொண்டு!.
அன்புடன்
Welcome Mr Krishnaji and do contribute as usual.
வாசு சார்
Simply great... What a dedication, hard work, efforts you have put..
தங்களுடைய கடின உழைப்பிற்கு ஈடு இணையே இல்லை. கடவுள் நன்றாகத் தெரிந்து வைத்திருக்கிறார். நடிகர் திலகத்தின் புகழைப் பரப்பும் பணியில் யார் யார் எப்படி செய்ய வேண்டும் என்று எழுதி வைத்திருக்கிறார். அதில் நம்பர் 1 நீங்கள். நடிகர் திலகத்தின் நடிப்புப் புதையலில் இது வரை பார்த்தறியாத புதிய பொக்கிஷத்தை எடுத்துக் காட்டியுள்ளீர்கள்.
ஒரு முழுமையான நடிகர் என்பதைத் தன் முதற்படத்திலேயே நிரூபித்தவரின் சிறப்பை இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம், என்றால் அவருடைய புகழைப் பரப்பும் தங்கள் பணியையும் அதே போன்று சொல்லிக் கொண்டே போகலாம்.
உளமார்ந்த நன்றியும் பாராட்டும்
http://www.gamecity.ch/wp-content/up...uper-Mario.png
வாசு,
புலி வருது புலி வருது என்று நேற்று எதிர்பார்க்க ,இன்று எதிர்பார்க்கா நேரத்தில் வந்து உறுமுகிறது.
புதையல் என்னை கவர்ந்த படம். இதற்கு என் நண்பர்கள் நால்வர் (வழக்கம் போல தரை to Backbench upgradation என் பங்கு), மாற்று ரசனை கொண்ட ஒரு நண்பன் (இப்போது குறைபாடு கொண்டவர்களை மாற்று
என்று சொல்வதுதானே முறை)ஒருவனும் எங்களோடு. (படம் அவனுக்கு பிடித்தது)
இதெல்லாம் ஒரு சண்டையா என கேலி பேச ,நான் பதிலுக்கு
இதுதானேடா நிஜ சண்டை. டிஷ்யூம் டிஷ்யூம் என்று வருவதெல்லாம் இதற்கு ஈடாகுமா என்று பதில் கொடுத்தேன்.
நன்றி வாசு.
வாசு
உங்கள் புதையல் சண்டை காட்சி பற்றிய பதிவு சூப்பர் .பிதாமகர் ராகவேந்தர் சொன்ன மாதிரி dedication என்பதற்கு மிக சிறந்த எடுத்துகாட்டு உங்கள் பதிவு இதை படித்த உடன் நெஞ்சில் நிழல் ஆடிய குங்குமம் வார இதழில் வெளி வந்த ஜூடோ ரத்தினம் சொல்லிய செய்தி தான் . காபி பேஸ்ட் ஆக இருந்தாலும் ஒரு சண்டை பயிற்ச்சி மாஸ்டர் நம்மவரை பாராட்டும் தகவல் பெருமிதம் கொள்ள தானே செய்யும்
தயங்கிய சிவாஜியின் தடாலடி சண்டை!
http://kungumam.co.in/kungumam_image...0140414/10.jpg
‘சூரக்கோட்டை சிங்கக்குட்டி’ ஷூட்டிங்கில் எடுத்த படம் இது. போட்டோவில் புன்னகை வீசும் சிவாஜி, இதற்கு சில நிமிடங்களுக்கு முன் பதற்றத்துடன் இருந்த விஷயம் பற்றித் தெரியுமா?’’ எனப் புதிர் போட்டு, அந்தச் சம்பவத்தைப் பகிர்ந்துகொள்கிறார் ஜூடோ ரத்னம்.
‘‘இப்போதும், ‘ரயில் சண்டைக் காட்சி எடுப்பதில் ரத்னம் மாஸ்டர் கெட்டிக்காரர்’ என்கிற பெயர் எனக்கு உண்டு. ஏவி.எம் முருகன் தயாரித்த, ‘சூரக்கோட்டை சிங்கக்குட்டி’ படத்தில் பிரபுவை வைத்து செங்கல்பட்டு ரயில் பாலத்தில் சண்டைக் காட்சியை எடுத்தபோது, அதில் இருந்த ரிஸ்க், யூனிட்டையே அலற வைத்தது. பிரபு ரிஸ்க் எடுத்து நடித்தார்.
பிறகு ஒரு வாரம் கழித்து ஏவி.எம் ஸ்டுடியோவில் இன்னொரு காட்சியை எடுத்தோம். திடீரென ஸ்பாட்டுக்கு வந்த சிவாஜி அண்ணன், ‘மாஸ்டர் ஜி... ஃபைட் சீன்ல ரொம்ப ரிஸ்க் எடுக்குறீங்கன்னு சொன்னாங்க. என் மகனை பத்திரமா பார்த்துக்குங்க’ என ஒரு தந்தைக்குரிய அக்கறையில் சொன்னார். அதன் பிறகு சேர்ந்து போட்டோ எடுத்துக் கொண்டோம்’’ என்றவர் சிவாஜிக்கு சண்டை சொல்லிக்கொடுத்த இன்னொரு அனுபவத்தை பகிர்ந்துகொண்டார்.
‘‘சிவாஜி தன் படங்களுக்கு பர்சனலாக இரண்டு ஸ்டன்ட் மாஸ்டர்களைத்தான் பயன்படுத்தி வந்தார். ‘திருப்பம்’ படத்தில் சண்டைக் காட்சியை இயக்கித் தரும்படி சொன்ன கே.ஆர்.ஜி, சிவாஜியிடம் என்னை அறிமுகப்படுத்தி ‘ரொம்பப் பிரமாதமா சண்டைக் காட்சிகளை எடுப்பார்’ என்றார். ‘கேள்விப்பட்டிருக்கேன்’ என்று அரை மனசோடுதான் சம்மதித்தார் சிவாஜி. மறுநாள் சண்டைக் காட்சிக்காக 50 அடி நீளத்துக்கு டிராலி போடப்பட்டு இரண்டு கேமராக்கள் தயாராக இருந்தன.
‘எதிரிகள் உங்களை தாக்க வரும்போது அவர்களைப் பார்க்காமலேயே ஒவ்வொருவராக அடித்து விரட்டுகிறீர்கள்’ என்று சிவாஜியிடம் விளக்கியபோது, ‘அதெப்படி பார்க்காமலே அடிப்பது? எங்கே செஞ்சு காட்டுங்க...’ என்றார். நானும் ஸ்டன்ட் நடிகர்களை என்னைத் தாக்க வைத்து, அவர்களை அடித்துக் காட்டினேன்.
சிவாஜி ஷாக்காகிவிட்டார். ‘உங்களைப் பத்தி நிறைய சொல்லியிருக்காங்க. இப்போதான் உங்க திறமையை நேர்ல பார்க்கறேன்...’ என்று மரியாதை கலந்த பாராட்டை கொடுத்தார். ஆனாலும் அவருக்குத் தயக்கம். ‘நீங்க செய்யலாம். என்னால் இந்த மாதிரி செய்ய முடியுமா?’ என்றார். ‘அட, ‘மனோகரா’ படத்துல நீங்க சங்கிலியை அறுத்துக்கிட்டு கர்ஜிக்கிற சீன்ல, நிஜமான வீரத்தைப் பார்த்திருக்கோம். இதெல்லாம் உங்களுக்கு தூசுதான்’னு நான் சொல்ல, அடுத்த நிமிஷமே அசத்தலா நடித்து ஆச்சரியப்படுத்தினார்.’’
- அமலன்
புதையல்.
இளைமை துள்ளும் திராவிட மன்மதனின் அற்புதமான பொழுது போக்கு புதையல். எனக்கு மிக பிடித்தமான ஒரு படம். கதைக்குள் போகவில்லை.எல்லோருக்கும் தெரியும் என்று கொண்டு மேலே செல்கிறேன்.
இன்று தில் என்ற படம் பொழுது போக்கு படங்களின் வேகத்தை top gear க்கு கொண்டு போனது என்று எல்லோரும் பிரஸ்தாபிக்கிறார்கள். மூடர்களே, புதையலை ஒரு முறை பாருங்கள். உங்களுக்கே புரியும் நீங்கள் எவ்வளவு முட்டாள்கள் என்று.
என் hot favourite திரைக்கதாசிரியர் கலைஞர் எழுதிய திரைகதை, வசனம் --ஆஹா ,என்ன வேகம்,என்ன விவேகம்!!!
இன்று திரைப்பட இலக்கணங்களில் குறிப்பிட படும், even pacing of screen play ,engaging the audience ,nerrative surprise ,twist &turns ,jumping the nerration மற்றும் அற்புதமான காதல் காட்சிகள்,சண்டை காட்சிகள்,தரமான புத்திசாலித்தனமான நகைச்சுவை, sentiment ,காதல்,தியாகம்,பரபரப்பு,suspense ,அனைத்து தரப்பு பாமர ரசிகருக்கான ஜனரஞ்சகம் அனைத்தும் நிறைந்த total package .(பெண்ணின் ஆண் வேடம்,ஆணின் பெண் வேடம், investigative பாணியில் அமையாமலே ரசிகனையே investigator ஆக கருத வைக்கும் திரைப்பட யுத்தி என்று!!
நான் மிக மிக வருந்தும் விஷயம்- புதையல்,செல்வம் இரு படங்களும் பெற்றிருக்க வேண்டிய வெற்றி இன்னும் இன்னும் அதிகம்.
விண்ணோடும் முகிலோடும் பாட்டை பாருங்கள்.ecstacy என்ற இன்ப லாகிரியின் உச்சம் தொட்டிருப்பார் NT . துள்ளலோடு, ஒரு உன்மத்த நிலை.சடையை பிடித்து விளையாடுவதென்ன,கடலிலே காதலியை இழுத்து பாய்ந்து இன்ப ஆவேசம் காட்டுவதென்ன, குட்டி கரணம் அடித்து மடியிலே துள்ளி விழுவதென்ன--
காட்சிக்கு காட்சி ஒரு சுவாரச்யம், திருப்பம், வசனம் சார்ந்த சித்து விளையாட்டு., மூலத்தோடு ஒட்டியே அசுர வேகத்தில் பயணிக்கும் திரைகதை
என்று அதகளமான படம்.
https://www.youtube.com/watch?v=bg7CugrZk4A
Excellent Vasu sir,
Your write-up about the stunt scene in Pudhaiyal, breifly described with each and every frame.
After that period, before 1967 (Thangai), we have another superb fight scene in "NICHAYA THAAMBOOLAM" between NT and M.N.Nambiar.
அன்பின் வாசுதேவன் சாரின் புதையல் பதிவின் ரசனை தொடர்ச்சியாக ....
Gap filler 6 : Beach songs with NT!
கடற்கரை கான அலைகள்! காதல் வலைகள்!! கற்பனை சிலைகள்!! மனித மன நிலைகள்!!!
பகுதி 6 : புதையல்
இக்கரைப் புதையல்!
https://www.youtube.com/watch?v=IHeGpLCBCjsQuote:
கடல் அலைகள் துள்ளி எழுந்து ஆர்ப்பரித்து அடங்குவதை கடற்கரையோரம் இளைப்பாறி ரசித்திருக்கிறோம்! காதல் சிலைகள் துள்ளிக் குதித்து ஓடி ஆடி பாடுவதை .....?! புதையல் ரகசியம்!!
நடிகர்திலகமும் நாட்டியப் பேரொளியும் வெளிப்படுத்தும் இளமை ஆற்றல் வெளிப்பாடு....அன்னபூர்ணா காபி போல் சுவை மனதில் தங்கி விடுகிறதே!!
அக்கரைப் பச்சை!!
https://www.youtube.com/watch?v=vgTHZhNqOAcQuote:
தண்டர்பால் ஜேம்ஸ் பாண்ட் படத்தில் ஷான் கானரி கடற்கரையோர நாசாவு நகரில் வில்லி கும்பலின் துரத்தலில் தப்பித்து காலில் காயத்துடன் கிஸ் கிஸ் பேங் பேங் என்ற பீச் கிளப்புக்குள் நுழைந்து விடுவார். ஆனால் வில்லக் கும்பல் சுற்றி வளைத்து விடும்.
ஜேம்ஸ் பாண்ட் தப்பித்து விடுவார் என்பது குழந்தை ரசிகனுக்கும் தெரிந்ததே !
எப்படித் தப்பித்தார் ?.....இந்தக் காட்சிக் கரு நடிகர்திலகத்தின் தங்கசுரங்கம் படத்தில் இயக்குனர் 'தேவா'வான ராமண்ணாவால் சத்தி தன்னாடு
பாடல் காட்சியில் புகுத்தப் பட்டிருக்கும் !!
https://www.youtube.com/watch?v=6aS8eGZ8CJQ
வாசு சார்
https://youtu.be/BwewxSLGaDc[/QUOTE]
புதையல்
பட தலைப்பு
மட்டுமல்ல
உங்களின்
இந்த எழுத்தும்
தான்...
நன்றி