மதுண்ணா பொறுத்துக்காதீங்க..இந்தோ.. பட் இது ஆடியோவாம்..கேக்குமான்னும் எனக்குத் தெரியாது :)
http://www.inbaminge.com/t/t/Thabalkaran%20Thangai/
குமார் சார் தாங்க்ஸ் :) அந்த க் குட்டி ப்ளாக் அண்ட் ஒய்ட் படம் நல்லா இருந்துச்சே! :)
Printable View
மதுண்ணா பொறுத்துக்காதீங்க..இந்தோ.. பட் இது ஆடியோவாம்..கேக்குமான்னும் எனக்குத் தெரியாது :)
http://www.inbaminge.com/t/t/Thabalkaran%20Thangai/
குமார் சார் தாங்க்ஸ் :) அந்த க் குட்டி ப்ளாக் அண்ட் ஒய்ட் படம் நல்லா இருந்துச்சே! :)
இனிய நண்பர் குமார் சார்
திருச்சி நகரத்தில் வெளிவந்த சிவாஜி இதழில் இடம் பெற்ற படங்களின் விளம்பர பதிவுகள் அனைத்தும் அருமை ..
இனிய நண்பர் வாசு சார்
நேரமின்மையால் திரியில் பதிவுகள் வழங்க இயலவில்லை . ஆனாலும் இத்திரியில் இடம் பெற்ற அத்தனை பதிவுகளையும் ரசித்து படித்து கொண்டு வருகிறேன் . நீங்கள் கூறியது போல் திரியின் ஜாம்பவானாகிய திரு கார்த்திக் அவர்களின் பதிவு இடம் பெற்று நீண்ட நாட்களாகி விட்டது .தேவிகா அண்ணியாரின் படமோ பாடலோ இடம் பெற்றால் ஒரு வேளை வருவார் என எண்ணுகிறேன் . மக்கள் திலகம் எம்ஜிஆர் திரியில் அவர் பதிவிட்ட பொன்னந்தி மாலை பொழுது பாடல் பதிவை தினமும் படித்து ரசித்து வருகிறேன் .
சிக்கா... ஆடியோ கேட்டிருக்கேன். இருந்தாலும் தாங்க்ஸ்.... வீடியோவைக் கண்டு புடிச்சாத்தான் ஜிகிர்தண்டா..
( அது சரி.. நீங்க லிங்க் கொடுத்த பக்கத்தில் இந்தப் படத்தில் மாணிக்க மகுடம் சூட்டிக் கொண்டாள் பாட்டையும் சேர்த்துட்டாங்க கவனிச்சீங்களா ? )
வாசு,
மிக்க நன்றி. இந்த பாடல் நீங்கள் சொன்னது போல் சுசீலா எஸ்பிபி குரல்களில் தேவாமிர்தமாய் ஒலிக்கும். அந்த ஹம்மிங்கும். நான் முன்பே சொன்னது போல் சரணத்தின் இறுதியில் வரும் அந்த வார்த்தைகளை நீட்டியபடி பாடும் (மணநாள் தேடினாள்) அந்த பாவமும் பிடிக்கும். என்ன ஒன்று இந்த சரணத்தின் இதே ட்யுனை புகுந்த வீடு படத்தில் செந்தாமரையே பாடலுக்கும் சரணத்தில் பயன்படுத்தியிருப்பார்கள் சங்கர் கணேஷ்.
நீங்கள் குறிப்பிட்ட சின்ன சின்ன பாப்பா பாடலை ஒரு இங்கிலீஷ் படத்திலிருந்து சுட்டிருப்பார்கள் சங்கர் கணேஷ். City City Bang Bang என்ற படம். மதுரை பரமேஸ்வரியில் வந்தது. அதிசயமாக அந்த படத்தில் பாடல் வரும். City City Bang Bang Bang Bang என்று வரும் அந்த பாடலின் ட்யுனை அப்படியே பயன்படுத்தியிருப்பார்கள். விசிலடிச்சான் குஞ்சுகளா பாடலில் கமலைப் பார்த்தால் வேடிக்கையாக இருக்கும்.
இந்த மாணவன் படம் ஒருவகையில் நம்மை பாதித்த படம். பாதித்த என்றால் நமது பிரிஸ்டிஜ் பத்மநாபனை பாதித்த படம் எங்கள் மதுரையில். இதை பற்றி முன்பே குறிப்பிட்டிருக்கிறேன். வியட்நாம் வீடு மதுரை ஸ்ரீதேவியில் பிரமாதமாக ஓடிக் கொண்டிருந்த நேரம்.
வியட்நாம் வீடு படத்தை ஒரு சாதாரண லெவல் விநியோகஸ்தர் என்று சொல்லக்கூடியவர்.வெளியிட்டிருக்க மாணவன் படத்தை வெளியிட்டது கிழக்கரை யாசின் குழுமத்தை சேர்ந்த சேது பிலிம்ஸ். மாணவன் வெளியான நாள் 1970 ஜூலை 10. ஸ்ரீதேவி அரங்க உரிமையாளரிடம் மாணவன் படத்தை அங்கேதான் வெளியிட வேண்டும் என்று சேது பிலிம்ஸ் அழுத்தம் கொடுக்க ஆரம்பித்தனர்
வியட்நாம் வீடு holdover விடாமல் ஓடிக் கொண்டிருந்தது. அந்த 13வது வாரம் ஞாயிற்றுக்கிழமை (86-வது நாள்) மாலைக்காட்சி கூட ஹவுஸ்ஃபுல். சிந்தாமணியில் கூட ரிலீஸ் செய்திருக்கலாம். அங்கே ஓடிக் கொண்டிருந்த படமும் அதே நாள்தான் (ஜூலை 9 )கடைசி நாள். ஆனாலும் ஸ்ரீதேவியில்தான் வெளியிட வேண்டும் என்று சேது பிலிம்ஸ் நிர்பந்தம் செய்து மாணவன் படத்தை ரிலீஸ் செய்தனர். அதனால் 90 நாட்களில் வியட்நாம் வீடு எடுக்கப்பட்டு விட்டது. 100 நாள் லிஸ்டில் சென்னை கோவை, திருச்சி சேலம் ஆகிய நகரங்களோடு சேர்த்து இடம் பெற்றிருக்க வேண்டிய மதுரை இந்த சதியினால் அந்த வாய்ப்பை இழந்தது. அந்த காரணத்தினாலும் மாணவன் எப்போதும் என் நினைவில் நிற்கும்.
முந்தைய எஸ்பிபி பாடல்களில் பௌர்ணமி நிலவில் அருமையான பாடல். கொஞ்சம் மூக்கால் பாடியிருந்தாலும் கூட (கம்பன் தமிழோ பாட்டினிலே) நல்ல இனிமை. அதுவும் படத்தின் திருப்புமுனை காட்சி வேறு. 2010 நவம்பரில் வாலியின் 80 வது பிறந்தநாள் விழாவும் அவர் பாடல்களின் தொகுப்பான வாலி 1000 புத்தக வெளியீட்டு விழாவின்போது பின்னணி இசை இல்லாமல் எஸ்பிபி மேடையில் இந்த பாடலை பாடியபோது அதுவரை அசிரத்தையாக அலைபேசியில் விளையாடிக் கொண்டிருந்த கமல் முகம் நிமிர்ந்து ரசித்த காட்சி இப்போதும் மனதில் நிற்கிறது. .
காவியத் தலைவி பற்றி அது நடிகர் திலகத்திற்கு கிடைத்திருக்கக் கூடாதா என்றும் சொல்லியிருந்தீர்கள். எனக்கு தெரிந்து சௌகார் முதலில் நடிகர் திலகத்தைத்தான் அணுகினார். ஆனால் கால்ஷீட் இடித்தது ஒரு காரணம் என்றால் அப்போது கேபி இயக்கத்தில் எதிரொலி படத்தில் நடிகர் திலகம் நடித்துக் கொண்டிருந்த காரணத்தினால் repetion வேண்டாம் என்று நடிகர் திலகம் (அல்லது விசிஷண்முகம்?) நினைத்தார் என்றும் சொல்வார்கள்.
தொடருங்கள்!
அன்புடன்
இந்தப் பூஞ்சிட்டு மான்குட்டி போகின்ற போகிலே போகட்டும்
பொறுத்துக்கோ ஐயா பொறுத்துக்கோ... ம்ம் இப்பத் தான் கேக்கறேன்..
இப்படியா சிக்காவை டீல்ல வுடறது.. மதுண்ணா ராகவேந்தர்..மோசம்..:) ம்ம் தேடறேன்
இந்த மாட்டிக்கிச்சு மைனாவையும் தான்.. .ஜாக்பாட் ம்ம்..
அஞ்சுகுதிரை ஒண்ணா வந்தா ரூபா பதினஞ்சு லட்சம்
அதுல ஒண்ணு வரலேன்னா அவமானம் தான் மிச்சம்..யாராக்கும் லிரிக்ஸ் :)
சின்னா!
காலையிலே என்னைப் பாவம்னீங்க.:) இப்போ நீங்களே பாவமாயிட்டீங்க.:) போட்டு வாட்றாங்க சின்னப் புள்ளையை.:)
ஜெயலிதா ஜாக்பாட்
ஜெயசங்கர் ஜாக்பாட்.
அபூர்வ கானங்கள்
காலம் என்னோடு வரும் போது கடவுள் வருகின்றார்..
காதல் என் நெஞ்சைத் தொடும் போது என் தலைவன் வருகின்றார்..
திரை இசைத் திலகம் கே.வி.மகாதேவன் இசையில் எஸ்.ஜானகி குரலில் நீண்ட நாட்களுக்குப் பின்
புதிய வாழ்க்கை திரைப்படப் பாடல்..
நன்றி வடவை பாஸ்கி
https://www.youtube.com/watch?v=zi8bAUy3v4w
வாசு சார்
கோவிச்சுக்காதீீங்க.. இது அபூர்வ கானங்கள் என்பதால் இங்கு அறிமுகம் மட்டும் செய்கிறேன்.
உங்களுடைய வரிசையில் வரும் போது நீங்கள் எங்களுக்கு இதைப் பற்றிய விரிவான பதிவினைத் தரவேண்டுகிறேன்.
நீண்ட நாட்களுக்குப் பின்
புதிய வாழ்க்கையிலிருந்து பேசு மனமே பேசு.. காணொளி...
https://www.youtube.com/watch?v=omfaWZjatBk
ஒரு வேளை புதிய வாழ்க்கைப் பாடல்களைப் பகிர்ந்து கொண்டு விட்டோமோ...
மதுர கானம் திரிகளின் வேகத்தில் இதெல்லாம் மறந்து விடுகிறது..
அபூர்வ கானங்கள்
அல்லி திரைப்படத்திலிருந்து
இசையரசியின் குரலில் இனிமைக்கோர் உதாரணமான பாடல்..
திரை இசைத் திலகத்தின் கைவண்ணத்தில் மலர்ந்த மதுர கானம்..
உன்னையன்றி யாரிடம் என் நிலையைச் சொல்வேன்
https://www.youtube.com/watch?v=5dECa9jgb7A
அபூர்வ கானங்கள்
இரண்டு மனம் .. தலைவரின் வசந்த மாளிகை பாடலின் தாக்கத்தில் படத்தின் பெயரே இரண்டு மனம்.. சுரேஷ் சுலக்ஷணா நடித்த திரைப்படத்தில் இடம் பெற்ற இப்பாடல் ஜெயச்சந்திரனுக்கு புகழ் வாங்கித் தந்த பல பாடல்களில் ஒன்று..
கார்கால மேகம் உன் கண்கள் மீது ஊர்கோலம் போவதென்ன..
அந்தப் பெண் கண்ணீர் சிந்துவதை எவ்வளவு அழகாக வர்ணித்திருக்கிறார் கவிஞர்..
பாடல் முழுதுமே இலக்கிய மயம்...
https://www.youtube.com/watch?v=4Iw2iReB5ys
அபூர்வ கானங்கள்
இன்னுமோர் அபூர்வ கானம்.. இதுவும் ஆரம்ப கால எஸ்.பி.பாலா... வாசு சார் கோவிக்கக் கூடாது.. இந்தப் பாடல் பட்டியலில் வருமா தெரியாது..
இருந்தாலும் ஓர் அறிமுகமாக அமையட்டுமே..
இந்தப் பாடல் பலர் கேட்டிருக்க வாய்ப்பில்லை.. இசைத்தட்டும் மிகக் குறைவாகத் தான் வெளியிடப்பட்டது. ராணி யார் குழந்தை படத்தில் டி.வி.ராஜு இசையில் இடம் பெற்ற பாடல்...
டிங்கிரி டிங்கிரி டால்...
https://www.youtube.com/watch?v=0xOUKtBZiO8
மேற்கண்ட அபூர்வ கானங்களுக்கு நன்றி திரு வடவை பாஸ்கி
அபூர்வ கானங்கள்...
அபூர்வமானது மட்டுமல்ல.. நெஞ்சில் பசுமரத்தாணி போல் ஆழ ஊறிவிட்ட பாடல்..
மெல்லிசை மன்னரின் வெறியனாக என்னை மாற்றிய பாடல்.. கோடிக்கணக்கான முறை கேட்டாலும் நெஞ்சைத் தொடும் பாடல்..
என்ன எழுதுவது எப்படி எழுதுவது...
அவரைத் தவிர வேறு யாராலும் கற்பனை செய்ய முடியாத அற்புத கானம்..
ஒரு வாரிசு உருவாகிறது படத்தில் எந்தன் பூவனத்தில் இன்று வசந்தம்..
மலரே மலரே தூங்காதே..
இந்த மலரே மலரே இரண்டு வார்த்தைகளிலேயே பாலா நம்மைக் கட்டிப் போட்டு விடுவார்..
இதற்கு மேலும் நான் சொல்ல வேண்டாம்.. நீங்களே அனுபவியுங்கள்..உணருங்கள்..
https://www.youtube.com/watch?v=IYz4bAT3RYs
நிஜம்மாவே குழந்தைய ரொம்ப வாட்டிட்டாங்க..:) தேடினா கிடைக்கலை..பொறுத்துக்கோஐயாவையும் அபூர்வ கானஙக்ள்ல சேர்த்து ராகவேந்திரர் தான் போடணும்..அல்லது மது..
பர்த்தியா நான் ஒரு பாட் போடறேன்.. இந்தப் பாட்ட சர்ச் பண்ணா ஒரே ஷாக்.. மனதைக்கவரும் மதுர கானங்கள் பாகம் 2 ந்னு வந்துச்சு..வந்துச்சா ஃபுல்லா ஸ்க்ரோல் பண்ணியும் சிக்கலை.. அப்புறம் பொறுமையா மறுபடி படிக்க.. கார்த்திக் தான் ஒரே ஒரு வரி எழுதியிருந்தார் இந்தப் பாட்டில் முத்து ராமனுக்கு சீர்காழி குரல் பொருத்தமாக இருக்கும் என..ஹப்பாடி தப்பிச்சேன்..அது என்ன பாட்டுன்னா...
வெண்பளிங்கு மேடை கட்டி..
தங்கரதம் ஏறி வந்து மங்கை முகம் பார்த்தவரே
பொங்கிவரும் ஆசையிலே பங்குபெறக் கூடாதோ..(ம்ம் மணிமாலாவிடம் என்ன நாசூக்கு..!)
https://youtu.be/4z_dvy2x-XE
போட்டாச் என்றால் பா.சொ.ப.சொ ( பாகம் சொல்லி பக்கம் சொல்க :) )
Dear Rajraj sir
Thanks for uploading the enchanting theme song from Chitti Chitti Bang Bang produced by the James Bond company by Broccoli for a change from the Bond genre of movies. A drastic contradiction towards capturing the hearts of children!
senthil
chitti chitti bang bang .. awesome movie..
ராகவேந்திரன் சார்,
அருமை. மீண்டும் 'அபூர்வ கானங்கள்' தொடரை திரியில் பார்க்க சந்தோஷமாய் இருக்கிறது. ஒவ்வொன்றாகப் பார்க்க வேண்டும். மிக்க நன்றி.
இன்று தாங்கள், சின்னா, மது அண்ணா, குமார் சார் என்று பதிவுகள் அட்டகாசம். வேலை நிமித்தம் வராத நண்பர்கள் திரும்ப வந்தால் திரி இன்னும் களை கட்டும். அனைவரும் நாளை வருவார்கள் என்று நம்புவோம். குறிப்பாக ரவி சார், கல்ஸ், ஆதிராம் சார்.
நானும் இன்று ஒரு அபூர்வ பாடலை வாணிஸ்ரீ பிறந்த நாளுக்காக தேர்ந்தெடுத்து வைத்தேன். அவருக்கு நமது மதுர கானங்கள் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது.
பாடகர் திலகமும், இசையரசியும் பாடும் அட்டகாசமான பாடல்.
எல்லாப் பாடல்களுமே அருமையாய் அமைந்த 'எதிர்காலம்' படப் பாடல். இசை 'மெல்லிசை மன்னர்'.
ராகவேந்திரன் சார், மது அண்ணா!
இந்தப் பாடலில் ஒரு சிறு சந்தேகம். பாடலின் துவக்கத்தில் வரும் அந்த ஆண்குரல் ஹம்மிங் யாருடையது? (ம்ஹூஹூம் ம்ஹூஹூம்) உன்னிப்பாகக் கேட்டால் பாலா குரல் போல இருக்கிறது. அல்லது பொன்னுசாமியா? அல்லது வேறு யாராவதா? கண்டிப்பாக சௌந்தரராஜன் இல்லை.
பாட்டுப் புத்தகம் இருந்தால் தகவல்கள் தெரியும் என நினைக்கிறேன்.
பாட்டின் நடுவில் வரும் ஷெனாய் ஓசை பித்துப் பிடிக்க வைக்கிறது.
பொண்ணு ஏன் தானே சிரிக்குது
கண்ணு ஏன் நீரில் குளிக்குது
பூவைக் கிள்ளும் நினைப்போ
தன் பேரைச் சொல்லும் சிரிப்போ
பிள்ளை ஏன் தானே சிரிக்குது
கண்ணு ஏன் நீரில் குளிக்குது
பூவைக் கிள்ளும் நினைப்போ
தன் தேவை சொல்லும் சிரிப்போ
பட்டும் படாமல் கட்டிப் பிடித்தேன்
தொட்டும் தொடாமல் முத்து கொடுத்தேன்
முத்து கொடுத்தேன்
கட்டுப் படாமல் கையைத் தடுத்தேன்
வெட்கம் கெடாமல் கொட்டிக் கொடுத்தேன்
கொட்டிக் கொடுத்தேன்
மூங்கில் பந்தல் வெற்றிலைக் கொடி போல்
மார்பில் சாய்ந்தேன் ஆயிரம் தடவை
முன்னும் பின்னும் ஆசை இருந்தும்
முகத்தை ஏனோ மூடுவது புடவை
(சுசீலாவும், சௌந்தரராஜனும் இந்த இடத்தில் 'யய்யாயயயாயா' போடுவார்கள் பாருங்கள். அம்சமோ அம்சம்).
'யய்யாயயயாயா' 'யய்யாயயயாயா'
'யய்யாயயயாயா' 'யய்யாயயயாயா'
(பிள்ளை ஏன்)
ஆப்பிள் பழங்கள் தோப்பில் பறித்தேன் ('ஆப்பிள் பழங்கள்'வார்த்தையை அழகாய் உச்சரிப்பார் சௌந்தரராஜன்)
பார்த்துச் சுவைத்தேன் சேர்த்துக் குடித்தேன்
சேர்த்துக் குடித்தேன்
கண்ணை மறைத்தேன் மண்ணில் கிடந்தேன்
என்ன நினைத்தோ என்னைக் கொடுத்தேன்
என்னைக் கொடுத்தேன்
ஆஹா மஞ்சள் கன்னம் செந்நிறமாக
கொஞ்சம் தந்தேன் கொடுத்தது போக
மழையோ நதியோ வந்தது போலே
மயங்கி இருந்தே மணமகளாக
'யய்யாயயயாயா' 'யய்யாயயயாயா'
'யய்யாயயயாயா' 'யய்யாயயயாயா'
(பொண்ணு ஏன்)
https://youtu.be/8V8WXLQmukY
காமெடியன்களின் ஷாம்பெயின் கலக்கல் மதுர கானங்கள்
பகுதி 6 : சாரங்கபாணி
Quote:
கலைவாணர் காலத்திலும் அதற்குப் பின்னரும் கொடிகட்டிப் பறந்த நகைச்சுவை வித்தகர் திரு சாரங்கபாணி அவர்கள் !
மிஸ்ஸியம்மா அலிபாபாவும் நாற்பது திருடர்களும் குறிப்பிடத்தகுந்த படங்கள் !! தில்லானா மோகனாம்பாளில் எடுத்தவுடன் தவில் வசிக்கும் காட்சி இவருக்குப் பெருமை சேர்த்தது !!
அந்த வயதிலும் பாலையாவுடன் என்னவொரு போட்டி அடி!
https://www.youtube.com/watch?v=cPfu1r_NUjw
காதல் மன்னருடன் மிஸ்ஸியம்மா திரைப்படத்தில் அசத்தலான பாடல் இசை பங்களிப்பு !!
வஞ்சியரின் வார்த்தையிலே அர்த்தமே வேறுதான் ...அகராதியும் வேறுதான்!!
https://www.youtube.com/watch?v=daJdkHGeZ00
https://www.youtube.com/watch?v=T0MO7pNHXiY
அலிபாபாவில் இரண்டு பாடல் காட்சிகள் !!
பானுமதியின் முத்திரைப் பாடல் காட்சியில் சாரங்கபாணியாரின் இசை அசைவுகள்!
https://www.youtube.com/watch?v=nrdxKy2J0Zw
ஏக்கு பரதேசி மேரா தில் லேகயா என்று மகுடி இசை மேலோங்கி நிற்கும் பாஹன் என்னும் ஹிந்தி படத்தின் சாயலில்...மதுபாலாவின் மறக்கமுடியாத நடனப் பாடல்!!
https://www.youtube.com/watch?v=x0nwDVgmI50
சின்னஞ்சிறு சிட்டே எந்தன் சீனா கற்கண்டே ...ராஜம் இணைவில்!
https://www.youtube.com/watch?v=88qY0TghS5I
sivajisenthil sir. super
sarangapani my fav.. enna body language ... adeyappa... sabapathy, my wife and many more ..ellame super
//இந்தப் பாடல் பட்டியலில் வருமா தெரியாது//
நிச்சயமாக ராகவேந்திரன் சார். பட்டியலில் எப்போதோ உட்கார்ந்து விட்டது.:) விரைவில் விவரங்களுடன் வரும். உங்கள் அபூர்வ தேடல்கள் ஆச்சர்யப்பட வைக்கின்றன.
ஜி!
வணக்கம். நலமா? தங்கள் நல்ல உள்ளத்திற்கு நன்றி. விரைவில் நிலைமை சுமுகமாகும் என்று நம்புகிறேன். நீங்கள் மீண்டும் வந்து கலக்க ஆரம்பித்திருப்பது பெரு மகிழ்ச்சி.
செந்தில் சார்,
'ஏக்கு பரதேசி மேரா தில் லேகயா' தினம் தினம் நான் கேட்டு ரசிக்கும் பாடல். பதித்தமைக்கு நன்றி. நய்யரின் மகுடிக்கு எப்போதோ நான் அடிமை. மதுபாலா என்ன ஒரு அழகு! பரத் பூஷன் குழந்தை முகமும் ரொம்பப் பிடிக்கும். என்ன மாதிரி ஒரு இனிமையான பாடல்! நாள் முச்சூட கேட்டுக் கொண்டே இருக்கலாம். ஆமாம். வில்லன்களின் வில்லங்கப் பாடல்கள் அதுக்குள்ளே முடிஞ்சுடுச்சா?
வாசு சார்
கையைக் கொடுங்கள்.. சூப்பரோ சூப்பர்.. வாணிஸ்ரீயின் பிறந்த நாளைக்கு...அருமையான பாடலைத் தேர்ந்தெடுத்துள்ளீர்கள்..நெஞ்சைத் தொடும் இனிய பாடல்..
மெல்லிசை மன்னரின் பின்னணி இசையைப் பற்றிப் பக்கம் பக்கமாக எழுதலாம்.
தாங்கள் குறிப்பிட்ட அந்த ஹம்மிங்... எம்.எல்.ஸ்ரீகாந்தின் குரலாகத் தெரிகிறது. ஏனென்றால் அந்த 70களின் கால கட்டத்தில் இது போன்ற ஹம்மிங்கிற்கு அவரைத் தான் மெல்லிசை மன்னர் அழைப்பார். மற்றபடி குரலில் பல்வேறு எஃபெக்டுகளைக் கொண்டு வரவேண்டுமென்றால் சதன் அவர்களும், மேண்டலின் ராஜு அவர்களும் தருவார்கள்.
அதுமட்டுமின்றி எதிர்காலம், உத்தரவின்றி உள்ளே வா படங்கள் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் பாடல் பதிவுகள் செய்யப்பட்டவை என கேள்விப்பட்டிருக்கிறேன்.
பின்னணி இசையில் டி.எம்.எஸ் பல்லவியைப் பாடி முடித்தவுடன் சுசீலா பாடத் துவங்குதற்கு முன் வாணிஸ்ரீயின் நடனத்திற்குப் பின்னணியில் ஒரு அக்கார்டின் ஒலிக்கும். அட்டகாசம். கூடவே புல்லாங்குழல்...
அதுவும் நீங்கள் குறிப்பிட்ட அந்த ஹம்மிங்கின் போது தான் அந்த பாடலின் தாளமே துவங்கும். இவையெல்லாம் மெல்லிசை மன்னரின் மாபெரும் இசை மேதமைக்கு சான்று. வித்தியாசமாக சிந்திப்பார். எப்போது தாளம் துவங்குமென்று தெரியாது. ஆனால் எந்த தாளமென்றாலும் அதற்குள் பாடலின் சந்தங்கள் வந்து அமர்ந்து விடும்.
வாணிஸ்ரீ ஓடி வரும் போது வயலின்கள், பின் அதைத் தொடர்ந்து ட்ரம்பெட், அதைத் தொடர்வது புல்லாங்குழல், வைப்ரஃபோன் என அமர்க்களமாக இருக்கும். ஆனால் எதுவுமே பாடலைக் கெடுக்காமல் தனித்தனியே ஒலித்து இனிமையைக் கூட்டும். ஜெய்யின் வாயிலிருந்து சிகரெட்டை வாணி எடுக்கும் நேரத்தில் ஒரு ட்ரம்பெட் ஆரம்பிக்கும். ஆஹா..
அதற்குப் பிறகு தாளக்கட்டு மாறி, பாடல் வேகமெடுத்து பிறகு மீண்டும் தாளக்கட்டு மாறி தொடக்க நிலைக்கே வரும் லாவகம்...
திரை இசைச் சக்கரவர்த்தி யாயிற்றே...
அருமையான தேர்வு வாசு சார். பாராட்டுக்கள்.
https://www.youtube.com/watch?v=RYTcHTbWl3s
வாணியின் பிறந்த நாளில் அவருடைய முதல் படப்பாடல் நினைவிற்கு வருகிறது.
பாடகர் திலகம் இசையரசியின் குரலில் இப்படி ஓர் இனிமையான பாடலை தொலைக்காட்சிகள் ஏனோ கண்டு கொள்வதில்லை.
கார்த்திக் சொல்வது போல பெரும்பாலான சேனல்கள் அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருக்கின்றன.
காமெடியன்களின் ஷாம்பெயின் கலக்கல் மதுர கானங்கள்
பகுதி 7 : 'சோ'
பிரசித்தி பெற்ற பத்திரிகையாளரான சோ ராமசாமி அவர்களின் தமிழ்த்திரை நகைச்சுவைப் பங்களிப்பும் மறக்க முடியாததே ! நடிகர்திலகத்தின் பார் மகளே பார் அறிமுகம்....நாகேஷுக்கு அடுத்த இடம் ..பொம்மலாட்டம் ஜாம்பஜார் ஜக்கு மனோரமா பாடல் காட்சியில் சோவின் முட்டைக் கண் கொனஷ்டைகள் நினைவில் நிற்கும்......
அவரது அரசியல் சட்டையர் முகமது பின் துக்ளக்,
நீலகிரி எக்ஸ்ப்ரெஸ்,தேன்மழை, அடிமைப் பெண், எங்கமாமா...குறிப்பிடத் தகுந்தவை !
https://www.youtube.com/watch?v=oiqJrRG1b7s
https://www.youtube.com/watch?v=vZ8zu_IPGjE
ராகவேந்திரன் சார்
கலக்கி விட்டீர்கள். பாடலில் ஒலிக்கும் அத்தனை வாத்தியக் கருவிகளின் பங்களிப்புகளை மிக அழகாக தொகுத்து வழங்கியதற்கு நன்றிகள்.
நீங்கள் சொன்னது போல இசைக் கருவிகளின் ஒலிகள் பாடலைக் கெடுக்காமல் அருமையாக காதில் வந்து விழுகின்றன. நான் ஒரு ஷெனாய் ரசிகன். எனவே இது போன்ற பாடல்கள் மிக மிகப் பிடிக்கும்.
இது போன்ற ஏனோதானோப் படங்களிலெல்லாம் 'மெல்லிசை மன்னர்' கொஞ்சமும் வித்தியாசம் பாராது உழைத்திருப்பார். அவருடைய பாடல்களால் மட்டுமே இந்த மாதிரிப் படங்களை நாம் இன்னும் நினைவில் கொண்டுள்ளோம். இது மறுக்க முடியாத உண்மை. அது போலத்தான் சங்கர் கணேஷ், குமார் இவர்களும்.
//ஜெய்யின் வாயிலிருந்து சிகரெட்டை வாணி எடுக்கும் நேரத்தில் ஒரு ட்ரம்பெட் ஆரம்பிக்கும்//
அருமையான கவனிப்பு ராகவேந்திரன் சார். நானும் ரொம்ப ரசித்தேன். எங்கள் ரசிக வேந்தரா கொக்கான்னானாம்.
அது போல சுசீலா 'தடுத்தேன்' எனும் போது 'தடுத்தே...(ஏ ஏ ஏ.ஏ).....ன்' என்று ஒரு வைப்ரேட் பண்ணுவார் பாருங்கள். அடி தூள்.
நன்றி வாசு சார்
மதுபாலாதான் இந்திய நடிகைகளில் வீனஸ் தேவதை ....நர்கிஸ் சம போட்டியாளராயினும்!
அவரது அபாரமான நடனத் திறமை அற்புதமான காட்சி நகர்வில் வெளிப்பட்ட படம் முகல் ஏ ஆஜம..திலீப் குமாருடன்...நடிகர்திலகம் மிகவும் மதித்த பிருதிவி ராஜ்கபூரின் ஆளுமை நிறைந்த பங்கேற்பில்....
https://www.youtube.com/watch?v=TdOS-0sIW-Y
https://www.youtube.com/watch?v=Kj6nveaC4uY
வில்லங்க கானங்கள் அவ்வளவுதான் வாசு சார் அவர்களுக்கப்புறம் வில்லன்கள் எல்லோரும் முன்னாள் கதாநாயகர்களே ..ஜெய் ரவி விஜயகுமார்....
Mmmm...rajesh sir...!!
பாரதிராஜாவின் ஹீரோயின்களின் தலை சாய்த்த சிரிப்பின் மாடல் நர்கிஸ்தான் !!!
https://www.youtube.com/watch?v=AvXH3IOQFiQ
எந்தக் காலத்திலும் மனதை மயக்கும் தேன் மதுர கானம் !!
https://www.youtube.com/watch?v=y01uvU0UAoU
Madhubala and nargis poles apart..
//பொண்ணு ஏன் தானே சிரிக்குது
கண்ணு ஏன் நீரில் குளிக்குது//2 x 9= 18
3 x 8= 24// ஆஹா ரெண்டு வாணிஸ்ரீ பாடலுக்கும் அலசலுக்கும் வாசு, ராகவேந்திரருக்கு மிக்க நன்றி..
ம்ம் காதல் படுத்தும் பாடு தான் ஃபர்ஸ்ட் படமா.. நான் இந்தப் பாட் போடணும்னு எடுத்துவச்சுருக்கேனே.. சரி பரவாயில்லை..
*
சி.செ. உங்கள் ஆங்கிலப்பட பாடல்களுக்கு வியாழன் அல்லதுவெள்ளி என ப் பார்க்கப் போகிறேன்..ராகவேந்திரரின் அபூர்வ கானங்களும் தான்
சி.செ. இந்த சாரங்கபாணி தூள்.. நல்ல நடிகர்..சின்னஞ்சிறு சிட்டே எந்தன் சீனாக்கற்கண்டே நல்ல பாட்டு.. எனக்குப் பிடிக்கும்..
ஆனால் நடுவில் கொடுத்தீங்க பாருங்க ஒரு பாட்டு வாவ்.. எவ்ளோ நாளாச்சு மும்தாஜ் ஜெஹான் டெஹ்லவி.. பார்த்து.. (என் தாத்தாவின் க.க)
அந்தக் காலத்தில் அழகு, நடிப்பு என்பதற்கு அர்த்தமாக விளங்கியவர்..சொந்த வாழ்க்கை மிகச் சோகம்..
தேவதை பிறந்தது காதலர் தினத்தில்(14.2.33) இன் பாகிஸ்தான்..ஐந்தாவது மகளாகப் பிறந்து பின் டெல்லி பம்பாய் எனப் புலம்பெயர்ந்து குடும்பத்தைக் கவனிக்க ஸ்டூடியோக்களில் பயணித்து பின் ஹிந்திப்படவுலகில் மெல்ல நுழைந்து முன்னேறி பாடுபட்டு பின் திலீப் குமாரிடம் காதல் வயப்பட்டு அப்பா ஏற்காமல் போக –கிஷோர் குமாரைக் கைப்பிடித்து குடும்ப வாழ்க்கை வாழலாம் என்றால் அங்கும் விதியின் சிரிப்பு..
அழகாய் நடிப்புடன் அழகிய தேவதையாக மும்தாஜைப் படைத்த இறைவன் வேறொன்றும் தந்து விட்டான்..அவர் இருபத்தோராவது வயதில் ஹ்ருதயத்தில் ஓட்டை.. பின் நடிப்புத் தொழில் காதல் இன்ன பல ப்ரஷர் என உடல் நிலை சீர்குலையத்தான் செய்தது.
.
கடைசியில் தேவதையின் முப்பத்தாறாவது வயதில் வா என்று அழைத்துக் கொண்டுவிட்டான்.. மும்தாஜ் என ஆரம்பப் பெயருடன் பின் மதுபாலா என (Mughal-e-Azam மேலும் புகழ் சேர்த்தது) மின்னியவர் மறைந்தும் விட்டார் நோயினால்..
எப்போது மதுபாலா பார்த்தாலும் கொஞ்சம் மனம் வலிக்கும்..பலவிதமான காண்ட்ரவர்ஸிக் கதைகள் படித்திருந்தாலும்.. நல்ல அழகி. நல்ல நடிப்பு..ம்ம்
https://youtu.be/tssqks17h5w
நான் ராஜேஷை வழி மொழிகிறேன் சி.செ :)
சி க /ராஜேஷ் சார்களே!
நான் மதுபாலாவின் இணையற்ற அழகுக்கும் நடனத்துக்கும் அடிமை ....
நர்கிசின் பாந்தமான வதனம் மற்றும் நளினமான நடிப்பின் பக்தன்
சி.க சார்.. நாளைக்கு பாடு நாளைக்குப் பாத்துக்கலாம்.
தூங்கப் போறதுக்கு முன்னாடி ஒரு சந்தேகம்...
நர்கீஸ் அந்தக் காலத்துப் பொண்ணு கேள்விப்பட்டிருக்கேன்...
மதுபாலா யாரு, அர்ஜூன் கூட ஜென்டில்மேன், அரவிந்த சாமி கூட ரோஜாவிலே எல்லாம் வருவாங்களே அவங்களா..
தூங்கறதுக்கு முன்னாடி கேள்வி கேட்டுறது பெட்டர்..
பதில் சொல்றவங்க மண்டை காஞ்சிடும் இல்லே..