THANKS PAMMALAR SIR
http://i58.tinypic.com/anl9jr.jpg
Printable View
THANKS PAMMALAR SIR
http://i58.tinypic.com/anl9jr.jpg
நண்பர்களுக்கு வணக்கம்.
திரு.எஸ்.வி.சார், திரு. கலியபெருமாள் சார் வெளியிட்ட தலைவரின் அரிய புகைப்படங்கள் தொகுப்பு, பொக்கிஷம். தலைவர் சம்பந்தப்பட்ட செய்திகளை உடனுக்குடன் பதிவிடும் திரு.லோகநாதன் சார், கோவை தலைவரின் கோட்டை என்பதை உறுதிப்படுத்தும் வகையிலான பதிவுகளை வெளியிடும் திருப்பூர் ரவிச்சந்திரன் சார் ஆகியோருக்கு நன்றி. திரு.ராமமூர்த்தி சார் பதிவிட்டுள்ள உரிமைக்குரல் ஸ்டில் சூப்பர்.
திரு.எஸ்.வி.சார், விரக்தியாளர்களின் மன நிலையை தாங்கள் வெளிச்சம் போட்டு காட்டிய விதம் நன்று. சின்னப்பா தேவர், பந்துலு, வேலுமணி, ஆர்.எம்.வீரப்பன் போன்றவர்கள் தொடர்ந்து தலைவரை வைத்து படம் எடுத்து லாபம் பார்த்தது மட்டுமல்ல. இன்றும் விநியோகஸ்தர்களுக்கு அவரது படங்கள் காமதேனுவாக உள்ளன. தலைவரின் படங்களை இன்றும் ரசிகர்கள் மட்டுமின்றி, எல்லா தரப்பினரும் பார்த்து ரசிக்கின்றனர். ஆனால், மற்ற நடிகர்களின் படங்களை பார்க்கும் பொறுமை அவர்களது ரசிகர்களுக்கு மட்டுமே உண்டு என்பதை அந்தந்த நடிகர்களின் ரசிகர்களே ஒப்புக் கொள்வார்கள்; ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். (இதுபோன்ற சம்பவங்களுக்கு சமீபத்தில் கூட ஆதாரங்கள் உண்டு)
நமது திரியில் புதிதாக இணைந்திருக்கும் நண்பர்கள் திரு. கோவிந்தராஜன், திரு.சந்திரசேகர் ஆகியோரை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன். திரியில் பங்கு பெறும் தலைவரின் பக்தர்கள் அதிகரிப்பது மகிழ்ச்சி. முக்கியமாக, மற்றவர்கள் நம்மைப் பற்றி ரகசியமாக பேசிக் கொள்ளும்போது கூட பாராட்டுவது நமது ஒற்றுமையை. பிறர் நம்மை தூற்றும்போது இருப்பதை விட போற்றும்போதுதான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இதுதான் தலைவர் நமக்கு சொல்லிக் கொடுத்த பாடம். எனினும், இப்போது போல எப்போதுமே நாம் ஒற்றுமையுடன் இருக்க தலைவரின் ஆசி நிச்சயம் உண்டு. காரணம், நம் யாருக்குமே தலைவரின் புகழை காப்பதுதான் முக்கியமே தவிர, நம்மை முன்னிலைப்படுத்திக் கொள்ளும் எண்ணம் அறவே கிடையாது. அந்த வகையில், நமது திரியில் புதிதாக சேர்ந்திருக்கும் நான்கு கரங்களும் புரட்சித் தலைவரின் புகழ்த் தேரை இழுப்பதில் இணையட்டும். வாருங்கள் தோழர்களே.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
திரு. எஸ்.வி. சார். தாங்கள் அளித்துள்ள மக்கள் திலகமும் மாதங்களின் முக்கிய நிகழ்வுகளும் பட்டியல் அற்புதம். அந்த பட்டியலில் விடுபட்ட சிலவற்றில் (எனக்கு உடனடியாக நினைவுக்கு வந்தவரை) இதையும் சேர்க்கலாம்.
ஜனவரி: தோட்டாவுக்கு டாட்டா காட்டி இரண்டாவது பிறவி எடுத்தது (1967). தலைவர் நடித்த கடைசி திரைப்படம் மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் வெளியானது (1978)
பிப்ரவரி: முப்பிறவி கண்ட முதல்வர் மூன்றாம் முறையாக பதவியேற்றது. (1985)
ஜூன் : தலைவர் இரண்டாம் முறையாக முதல்வரானது. (1980). உலகத்துக்கே முன்மாதிரியான சத்துணவுத் திட்டத்தை அமல்படுத்தியது. (1982)
செப்டம்பர் : பேரறிஞர் அண்ணா பவள விழா நிகழ்ச்சியில் பங்கேற்பு. 75 புறாக்களை பறக்கவிட்டார். ராஜராஜ சோழன் (இவன் வெற்றி வீரன்.... மாமன்னன்) சதய விழாவில் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியுடன் தஞ்சை கோயிலில் கலந்து கொண்டது.
டிசம்பர்: சென்னையில் அப்போதைய பிரதமர் ராஜிவ் காந்தியுடன் நேரு சிலை திறப்பு நிகழ்ச்சி. இதுதான் தலைவரின் கடைசி பொது நிகழ்ச்சி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
மக்கள்திலகம் திரியின்நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்
mgr vaalka....
நமது திரியின் புதிய வரவு திரு முத்தையன் அம்மு அவர்களை மக்கள்திலகம் திரியின் சார்பாக வருக வருக என வரவேற்கிறேன், தங்களின் பதிவுகள் அனைத்தும் தலைவரின் புகழ் பாடும் என்பதில் மிக்க சந்தோசம் அடைகிறேன்
http://i57.tinypic.com/ykqko.jpg
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்
என்னை இந்த பதிவிற்கு அறிமுகம் செய்த நண்பர் எம்ஜியார் ராமமூர்த்திக்கு என் நன்றி