இயக்குநர் அடூர் கோபாலகிருஷ்ணன் about NT
இப்போதைய தமிழ் சினிமாவைக் கவனிக்கிறீர்களா... பிடித்திருக்கிறதா?''
''திண்டுக்கல் காந்தி கிராமப் பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருந்த காலத்தில் நான் அதிகம் பார்த்தது தமிழ் சினிமாக்களைத்தான். அப்போது எல்லாம் மிக நீளமாகவும், புராணமயமாகவும் இருக்கும். அந்தச் சமயத் தில்தான் கருணாநிதியின் கதை வசனத்தில் 'பராசக்தி’ படம் வெளியானது. சிவாஜி வெகு சிறப்பாக நடித்திருப்பார். அதுவரை வெளியான இந்தியத் திரைப்படங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட படம், பராசக்தி. பல முறை ரசித்துப் பார்த்து 'பராசக்தி’ வசனங்களை எல்லாம் மனப்பாடம் செய்துவைத்திருந் தேன். 'வீரபாண்டியக் கட்ட பொம்மன்’ படமும் அவ்வளவு பிடித்தது.