https://scontent.fykz1-1.fna.fbcdn.n...8e&oe=5BC04830
https://scontent.fykz1-1.fna.fbcdn.n...a0&oe=5B84F5B7
https://scontent.fykz1-1.fna.fbcdn.n...12&oe=5B91DB2D
Printable View
இன்று( 28/05/2018) 64 வது பிறந்தநாள் காணும்
திரு ராகவேந்திரா சார் அவர்கள்
நீண்ட ஆயுளோடும் நல் ஆரோக்கியத்துடனும்
நீடூழி வாழ வாழ்த்துகின்றேன்
http://oi66.tinypic.com/10gidcz.jpg
மதிய வணக்கம் நண்பர்களே!
படித்தால் மட்டும் போதுமா? வெற்றியைத் தொட.ர்ந்து, சென்னையில் நூறுநாள் ஓடிய நடிகர்திலகத்தின் படப்பட்டியலில் இன்று...
ஆலயமணி.
முதன்முதலாக சென்னையில் நான்கு அரங்குகளில் நூறுநாட்கள் ஓடிய படம். ( ஆதாரம்: படத்தின் தமிழ் விளம்பரம் காண்க)
திலீப்குமார் நடிக்க 'ஆத்மி' என்ற பெயரில் இந்தியில் தயாரிக்கப்பட்டது....
PSV. PICTURES சார்பாக நடிகர் பி.எஸ். வீரப்பா தயாரித்த படம் இது.
https://scontent.fykz1-1.fna.fbcdn.n...75&oe=5B8BE9E9
vaannilla
vee yaar
Digital Raja Emperor Raja – Part II
ஆல்பர்ட் அளப்பரை
27.05.2018 – எப்பேர்ப்பட்ட நாள் – சென்னை சூப்பர் கிங்ஸ் IPL இறுதிப்போட்டியில் சன்ரைஸர்ஸுடன் மோதும் போட்டி – நீயா நானா என்ற கோதாவில் இரண்டு அணிகள் முழு வீச்சுடன் மோதக் காத்திருந்த நாள். சாலைகளெல்லாம் வெறிச்சென அந்த நேரங்களில் காலியாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நாள். சில அரங்குகளில் திரைப்படக்காட்சிகளை ரத்து செய்யக் கூட தயங்காத அளவிற்கு தயாராக இருந்த நாள்.. அதுவும் இரண்டு ஆண்டு இடைவெளிக்குப் பின் மீண்டும் Tournamentல் நுழைந்த போட்டி. கேட்க வேண்டுமா.
ஆனால் நடிகர் திலகம் யார்...
சவால் என்றால் அவருக்கு ரஸ்க் சாப்பிடுவது போல... ஊதித்தள்ளி விடுவாரே. அவர் வாழ்க்கையில் அவர் சமாளிக்காத சவால்களே இல்லை, துரோகம், வஞ்சம், என அத்தனையையும் சந்தித்து வென்றவராயிற்றே.. ராஜா என்றால் ராஜா தான் என்று நிரூபித்தவராயிற்றே..
அவருடைய ராஜா டிஜிட்டல் முறையில் வடிவமைக்கப்பட்டு பல்வேறு நவீன மெருகேற்றல்களுடன் துல்லியமான ஒலியமைப்புடன் சென்னை நகரில் வேலன் பிக்சர்ஸ் அவர்களால் வெளியாகியுள்ளது. இந்த ஐபிஎல் இறுதிக்கட்டத்தில் படம் வெளியாகிறதே என்ற பரபரப்பு நிச்சயம் அவர்களுக்கு இருந்திருக்கும். அது நியாயமே. ஆனால் இந்த நாளின் ஆல்பர்ட் திரையரங்கில் அந்த கவலை முற்றிலும் துடைத்தெறியப்பட்டிருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
அநேகமாக சென்னை மாநகரில் இன்றைய நாளில் கிட்டத்தட்ட 90 சதவீதத்திற்கும் மேல் அரங்கு நிறைந்த ஒரே அரங்கு ராஜா வெளியான ஆல்பர்ட் திரையரங்காகத் தான் இருக்கும். அவ்வளவு பெரிய அரங்கில் 90 சதம் என்பதுடைய பரிணாமம் மேற்கூறிய சூழ்நிலைகளின் மூலம் நன்கு புலப்பட்டிருக்கும்.
வெளியே நடிகர் திலகத்தின் திருமுகம் எந்நெந்த பேனரிலெல்லாம் தென்பட்டதோ அத்தனையின் மேலும் ரசிகர்களின் கண்பட்டது. ஆரத்தி எடுக்கப்பட்டது. பட்டாசு வெடிக்கப்பட்டது. அவர்களுடைய கரங்களால் மலர்கள் தூவப்பட்டன. மக்கள் தலைவரைப்போற்றும் கோஷங்கள் விண்ணை முட்டின. ஆரவாரங்களால் அதகளமானது ஆல்பர்ட்.
பல ரசிகர்கள் மிக நீண்ட கால இடைவெளிக்குப் பின்னர் சந்தித்தனர். நினைவுகளைப் பகிர்ந்து கொண்டனர். இவையெல்லாம் 6.30 மணி அதாவது படம் துவங்கும் வரை தான். அதன் பிறகு உள்ளே துவங்கியது அந்த திருவிழா.,
விண்ணை முட்டும் கரகோஷம், உணர்ச்சி மயமான கோஷங்கள், உற்சாக நடனங்கள் என டைட்டில் தொடங்கி வணக்கம் வரை எத்தனை எத்த்னை காட்சிகளில் ரசிகர்கள் தங்களை மறந்தனர். எந்த அளவிற்கு ரசிகர்கள் ஆர்ப்பரித்தனர் என்பதை யூகத்திற்கு விட்டு விட்டு அவற்றை சந்தித்த காட்சிகளின் பட்டியல் இங்கே இடம் பெறுகின்றன. இதை வைத்தே சிவாஜி ரசிகர்கள் எப்பேர்ப்பட்ட ரசனைத் திலகங்கள் என்பதையும் தன் ரசிகர்களை நடிகர் திலகம் எந்த அளவிற்கு தனக்குள் வைத்திருக்கிறார் என்பதையும் எப்பேர்ப்பட்ட இதயங்கள் அவருக்காக தங்கள் இன்னுயிரையும் தரத்தயாராக இன்னும் இருக்கின்றன என்பதையும் இது நிச்சயம் புரியவைக்கும்.
1. டைட்டில் ... படத்தின் ஒரிஜினல் டைட்டில் துவங்கும் முன் டிஜிட்டல் நிறுவனத்தின் கார்டில் நடிகர் திலகம் பெயர் இடம் பெறும் போதே துவங்க விடுகிறது.
2. ஒரிஜினல் டைட்டில் இடம் பெறும் போது.
3. மனோகர் சிகரெட்டை வாயில் பற்றவைக்கும் போதே தயாராகி விட்டனர் ரசிகர்கள். அந்த சிகரெட் திரையில் வலது மூலையிலிருந்து இடது மூலைக்கு வருவதும் ஒரு கரம் லைட்டரை பற்ற வைப்பதும் காமிரா அந்த லைட்டரிலிருந்து நடிகர் திலகத்தின் முகத்தில் நெருங்குவதும்.. அப்ப்பபா. கரகோஷ பிரளயமே தான்... மொத்த அரங்கமும் எழுப்பிய அளப்பரையில் ஆல்பர்ட் திரையரங்கே அதிர்ந்து விட்டது.
4. பாபுவின் ஆளிடம் தொலைபேசியில் தொடர்பு கொள்ளும் காட்சி. முதுகைக் காட்டியவாறு உரை துவங்க ஸ்டைலாக சேரில் திரும்பும் லாவகம்..
5. அறை எண் 207ன் கதவைத் திறந்து ராதா பார்க்கும் போது வியப்பு மேலிட புன்னகையுடன் லேசாக கண்ணடிப்பதும், உதட்டால் ப்ஸ்ச்...என்பதும்...
6. கதவைத்திறந்தவுடன் ஒரு காலை குறுக்கே வைத்து கதவின் இடப்பக்க ஓரமாக டென்னிஸ் லாக்கெட்டை இரண்டு கையிலும் பிடித்தவாறே ஒயிலாக நிற்கும் காட்சி.
7. எனக்கு சேரவேண்டியதை குடுத்துட்டா என்று கூறியவாறே இடது கன்னத்தை சுட்டும் குறும்பு
8. விஸ்வம் சம்பந்தப்பட்டது என்று சொல்லி டென்னிஸ் லாக்கெட்டின் வெளிப்புறத்தில் விரலால் வருடும் ஸ்டைல்.
9. நில்லுங்க என்று ராதா சொன்னவுடன் டக்கென்று நின்று திரும்பும் ஸ்டைல்.
10. பின் கோட்டை சற்றே தள்ளி விட்டு இடது கையை பேண்டின் மேற்புறம் வைத்து நிற்கும் ஸ்டைல்.
11. பாத்தீங்களா பாத்தீங்களா என்னை நம்பறவங்களை நான் எப்பவுமே மோசம் செஞ்சதில்லே ... இந்த வசனத்திற்கு தியேட்டர் என்ன கதியாகியிருக்கும் என்று சொல்லவும் வேண்டுமோ..
12. அது தான் ராஜா என்று தன் நேர்மையைப் பற்றிக் கூறும் போது கையைத் தட்டும் ஸ்டைல்
13. ஆமா உங்க உண்மையான பேரென்ன என்று ராதா கேட்கும் போது டையின் இரு முனைகளையும் விரல்களால் சுற்றிக் கொண்டே ராஜா என ஸ்டைலாக சொல்லுவது.
14. நான் ஜோக்கடிச்சா உங்களை மாதிரியே இந்த மெட்ராஸ் போலீஸுக்கும் பிடிக்கிறதில்லே என்று சொல்லும் போது வலது கை கட்டை விரலை இரு புறமும் அசைத்து சொல்லும் பாடி லேங்குவேஜ்
15. உங்களைப் பாக்கறதைத் தவிர இனிமே எனக்கு வேற வேலையே இல்லே என்று சொல்லும் ஸ்டைல்.
16. போனவர் திரும்பி வந்து ஆப்பிளுக்கு தாங்க்ஸ் சொல்லும் Improvisation
17. போஸ்ட் மேன் வேஷத்தில் வந்தாலும் அம்மா கண்டு பிடிக்கும் போது சமாளித்தல். தன் அண்ணனின் பிறந்த நாளையொட்டி அவரை நினைத்து நெகிழ்தல். Subtle performance
18. ஓ ராஜா என்று ராதா அவனைப் பார்த்ததும் அவர் மேலே நின்று திரும்பும் காட்சி.
19. பாடல் காட்சி முழுதுமே அளப்பரை .. சொல்லி மாளாது.,
ஒரு நினைவூட்டல்.. மேற்காணும் யாவும் ஆல்பர்ட் திரையரங்கில் 27.05.2018 ஞாயிறு மாலைக்காட்சியில் ரசிகர்களின் ஆரவாரம் விண்ணைத் தொட்ட காட்சிகள்.. இது ஆரவாரத்தின் வர்ணனை.. காட்சியைப் பற்றிய வர்ணனையல்ல..
- தொடரும்
p.sekar
ஜால்ரா தந்தி தொடர்ந்து வரலாற்று சாதனைகளை மறைத்து வருகிறது,
நாடோடி மன்னன் வருவதற்கு 200 நாட்களுக்கு முன்னரே உத்தம புத்திரன் தமிழகத்தின் பட்டி தொட்டியெல்லாம் ஓடி வெற்றி கண்டது, இரட்டை வேட சிவாஜியைக் கண்ட மக்கள் வியந்து போனார்கள், ஒரு சிவாஜி அரியாசனத்தில் அமர்ந்து இருக்க இன்னொரு சிவாஜி அவரை சுற்றி வரும் காட்சி இந்திய சினிமாவில் அது தான் முதல் காட்சி
உண்மை இப்படி இருக்க பல் வேறு முக பாவனைகளை எம்ஜிஆர் காட்டி நடித்தாராம்?
த்தனை முறை வந்தாலும் வசூலை அள்ளிக்
கொடுப்பதே இந்தக் கர்ணனின் குணம்!
https://scontent.fykz1-1.fna.fbcdn.n...03&oe=5B8DAA76
நடித்துக் கொடுத்தது சில நாட்கள்...
முரசு கொட்டியதோ நூறு நாட்கள்...!
https://scontent.fykz1-1.fna.fbcdn.n...23&oe=5B78F08E