மக்கள் நேசித்த மக்களால் முழு மனதுடன் ஏற்கப்பட்ட ஒரே முதல்வர் என்று எங்கள் புரட்சி தலைவரை தவிர வேறு யாரை சொல்ல முடியும்!!
http://i1170.photobucket.com/albums/...psebd083d1.jpg
Printable View
மக்கள் நேசித்த மக்களால் முழு மனதுடன் ஏற்கப்பட்ட ஒரே முதல்வர் என்று எங்கள் புரட்சி தலைவரை தவிர வேறு யாரை சொல்ல முடியும்!!
http://i1170.photobucket.com/albums/...psebd083d1.jpg
http://i1170.photobucket.com/albums/...psde4b2e39.jpg
courtesy facebook
FANTASTIC ART BY THALAIVAR FAN HATS OFF THIS WORK
http://i1170.photobucket.com/albums/...psfdf0474e.jpg
COURTESY FACEBOOK
http://i1170.photobucket.com/albums/...ps81f61426.jpg
COURTESY FACEBOOK
1981 ஆம் ஆண்டு.எங்களூரில் கோயிலுக்கு படிகள் அமைக்க சேலத்திலிருந்து கல்தச்சர்கள் வந்திருந்தனர்.அவர்களில் ஒருவர் மோஹன்.அவரிடம் பேசும் போது ஒருமுறை அவர் தலைவர் சேலம் வந்த போது தேர்தலில் சிறப்பாக வேலை செய்தவர்களை பாராட்டி அவர்களின் கைகளை பிடித்து வாழ்த்துக்களை பரிமாற்றம் செய்ததாய் சொன்னார்.தனது கைகளையும் தலைவர் பிடித்து பாராட்டிய போது தான் எங்கோ பறப்பதாய் உணர்ந்ததாக கூறினார் மோஹன்.
எந்த கையை அண்ணா தலைவர் பிடித்தார் என்று நான் கேட்டேன்.அவர் காட்டின கையை உடனே நான் பிடித்துக்கொண்டு நானும் தலைவரின் கைகளை தொட்டுவிட்டது போல் பரவசமடைந்தேன்.
அப்போது நான் பத்தாம் வகுப்பு மாணவன்.இன்னும் அந்த ஈர்ப்பு குறையவே இல்லை.
இதே போன்ற உங்களது அனுபவங்களை இங்கு பகிரலாமே.
Courtesy net
சரித்திர நாயகன் ஒன் அண்ட் ஒன்லி நம்ம தலைவர் எம்.ஜி.ஆர் மட்டுமே.....
Every Man Has a Past. Every Don, A History = MGR is Real Don in Indian Cinema Industry as well as in Politics...
http://i1170.photobucket.com/albums/...ps6c334ded.jpg
http://i1170.photobucket.com/albums/...psd3434c95.jpg
சுத்தமான தங்கமடா இவரின் கள்ளம் கபடமில்லா புன்னகைக்கு ஈடு இனை ஏது!!
புரட்சி தலைவர்
வெற்றி-திருப்புகழ், பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.
https://www.youtube.com/watch?v=tWbA4cw_ejY#t=10
மக்கள் திலகம் அவர்களின் திருமண நாளையொட்டி சிறப்பான பதிவுகள் மற்றும் படங்கள் பதிவிட்ட திரு செல்வகுமார் , திரு ரவிச்சந்திரன் அவர்களுக்கு நன்றி ..திரு தெனாலி அவர்களின் புகைப்பட வீடியோ தொகுப்பு - பாட்டுடை தலைவன் எம்ஜிஆர் ஆல்பம் அசத்தல் .யுகேஷின் பதிவுகள் அருமை .
கருணை இருந்தால் வள்ளல் ஆகலாம்
கடமை இருந்தால் வீரன் ஆகலாம்
பொறுமை இருந்தால் மனிதன் ஆகலாம்
மூன்றும் இருந்தால் தலைவன் ஆகலாம்
இந்த மூன்றும் இருந்தால் தலைவன் ஆகலாம்.
எங்கள் இறைவா !
புரட்சித்தலைவா !
http://i1170.photobucket.com/albums/...ps9f15951b.jpg
கேளம்மா சின்னப் பொண்ணு கேளு
உன் கேள்விக்கு பதிலைச் சொல்வேன் கேளு
வாழ்விலே வளர்ந்திருக்குது நாடு - ஏழை
வழியை மட்டும் தடுத்து நிக்குது மேடு !
ஏழை படும் பாடு அதில் எழுந்து நிக்குது வீடு
அவன் இருப்பதுவும் படுப்பதுவும்
குருவி வாழும் கூடு !
இருப்பவங்க கொடுக்கணும் , இல்லாததை
எடுக்கணும் - அதைத் தடுப்பவரை மறுப்பவரை
சட்டம் போட்டு பிடிக்கணும் !
தவிதவிக்கிற ஏழைக்காக திட்டம் போடணும்
பொருளை சரிசமமா பங்கு வைக்க
சட்டம் போடணும் ; குவியக் குவிய
விளைவதெல்லாம் கூறு போடணும் - ஏழை
குடிசைக்குள்ளே பாலும் தேனும் ஆறா ஓடணும் !
சாலையிலே மேடு பள்ளம் வண்டியைத் தடுக்கும்
நாட்டு ஜனங்களிலே மேடு பள்ளம் தேசத்தையே கெடுக்கும் !
ஏழை மனம் கோபப்பட்டா என்னென்னமோ நடக்கும் ;
அதை எண்ணிப் பார்த்து நடந்து கொண்டா
நிம்மதி பிறக்கும் .................
http://i1170.photobucket.com/albums/...ps84c69a3c.jpg
The man who stole my heart and millions ....!!!
http://i1170.photobucket.com/albums/...ps047d8b97.jpg
முப்பதாயிரம் பல்புகளை கொண்டு அமைக்கப் பட்டிருந்த, 'ஸ்விஸ் பெவிலிய'னில் படம் எடுக்க ஏற்பாடாகி இருந்தது. நானும், சந்திரக்கலாவும் அதனுள் நுழைந்தோம். நாங்கள் சென்ற பாதை, எங்களுக்குப் புதியது. சுற்றினோம்... சுற்றினோம்... ஏறத்தாழ, ஒரு மணி நேரம் சுற்றி சுற்றி நடந்தோம். சுவிஸ் அரங்கைக் கண்டுபிடிக்க முடியவில்லை. வழியில் யாரையாவது கேட்டால், அவர்கள் சரியாகத்தான் பாதை சொல்வர். ஆனால், ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குப் போவதற்கு முன், நாங்கள் பார்க்கும் காட்சி எங்களைப் பிரமிக்க வைக்கும். அதை பார்த்த பின் திரும்பிச் செல்வதற்குள், வழி தவறி விடும். தூரத்தில் அந்த அரங்கின் விளக்கொளி கண்ணுக்குத் தெரியும். 'அப்பாடா' என்று, பெருமூச்சு விட்டு நடப்போம். வழி எங்களை எங்கோ கொண்டு போய் நிறுத்தும். இப்படி அலைந்து அலைந்து ஒரு வழியாக படப்பிடிப்பு நடக்கும் இடத்தை அடைந்தோம்.
அவசரத்தில், 'செட்-அப்' செய்து, நடனத்தை எடுக்க நேரமில்லை. வாயால் சொல்லிக் கொண்டு நடித்தோம். சில சமயம் அப்போது தோன்றுகிற ஏதாவது நடன அசைவைச் செய்தால், சந்திரகலாவும் குழப்பமின்றி அதைச் செய்து நிறைவு செய்ததை, போற்றாமலிருக்க முடியாது. இப்படி அந்தக் காட்சியைப் படமாக்கிய பின் தான், எல்லாருக்கும் மன நிம்மதி ஏற்பட்டது.
பண்புள்ள மக்களான ஜப்பானியர்கள் கூட, மது அருந்தி, மயங்கும் நிலைக்கு ஆளாகி விட்டால், எப்படிப்பட்ட தவறு செய்வர் என்பதை, அன்று நேரில் அனுபவித்தேன்.
ஒளிப்பதிவாளர் அழைக்கும் வரையில், நானும், சந்திரகலாவும் ஒரு இடத்தில் உட்கார்ந்து கொண்டிருந்தோம். நாகேஷ் மற்றும் அசோகனும் எங்களுடன் இருந்தனர். குடி மயக்கத்தில் இருந்த ஒரு ஜப்பானியர், சந்திரகலாவின் உடைகளை ஆர்வத்தோடு கவனித்தபடி, மெல்ல மெல்லத் தள்ளாடியவாறு, அருகில் நெருங்கி வந்தவர், சந்திரகலா அணிந்திருந்த துணியை மரியாதையோடு, மெல்லத் தொட்டுப் பார்த்தார். என்ன எண்ணினாரோ தெரியாது, திடீரென சந்திராவின் உடலைத் தொட்டு விட்டார். அருகில் இருந்த நான், எல்லாவற்றையும் மறந்தேன். அவர் கை சந்திராவின் மீது பட்டதும், என் கை ஜப்பானியரின் உடலில் பட்டது. பலமாக அடித்து விட்டேன். அவர் கண்ணில் இருந்த கண்ணாடி, தெறித்து கீழே விழுந்தது.
பக்கத்திலிருந்த அனைவரும் திகைத்து விட்டனர். சந்திரகலா, அதிர்ச்சியில் பேச இயலாது ஊமையாகி விட்டார்.
அடிபட்ட ஜப்பானியர், தவறுக்கு வருத்தம் தெரிவிக்கும் வகையில், இரு கைகளையும் கோர்த்து, தலையிலிருந்து இடுப்பு வரை முன்னால் வளைந்து, மேலும், கீழும் உடம்பை ஆட்டியபடி, 'மன்னியுங்கள்' என்று, அவருடைய மொழியில் சொல்லியவாறு, அப்படியே பின்னால் நகர்ந்து போனார்.
ஜப்பானிய நாட்டில், ஒரு ஜப்பானியரை அடித்து விட்டோமே அவருடைய நண்பர்கள், 'எவனோ ஒரு இந்தியன், ஜப்பானியனைத் தாக்கி விட்டான்...' என்று பிரச்னை செய்வார்களோ... அந்த அடிப்படையில் பிரச்னை உருவாகுமாயின், விளைவுகள் எதுவரை போகும், என்றெல்லாம் யோசித்துக் கொண்டிருந்தேன். எனினும், என் உள்ளம் மட்டும், நான் செய்தது சரிதான் என்று, எனக்கு உற்சாகத்தையே அளித்தது.
ஆனால், அங்கு சுற்றி நின்று வேடிக்கை பார்த்த மக்கள், விவரத்தை அமைதியாகக் கேட்டு, உண்மையை அறிந்ததும், தவறு செய்த அந்த ஜப்பானியரைக் கண்டித்தனர்.
இவர்களும் ஜப்பானியர் தான்; மதி கெட்ட செயல் புரிந்த அவரும், ஜப்பானியர்தான். ஆனால், ஒரே வித்தியாசம், தவறு செய்தவர் குடித்ததால், மதி மறந்திருந்தார். வருத்தம் தெரிவித்த மற்றவர்களோ, மதி மறக்காதவர்கள். இதுதான் இவர்களுக்கிடையே உள்ள வித்தியாசம்.
மதுவினால், ஒரு மனிதன் எப்படியெல்லாம் சீரழிந்து போகிறான் என்பதைக் கவனிக்கும்போது, குடியைக் கெடுக்கும் குடியை, பெரிதாக எண்ணுபவர்களை என்னவென்று சொல்வது?
'எக்ஸ்போ'வில், ஒரு இடத்தில், பெரிய சித்திரம் வரைந்த தட்டி வைக்கப்பட்டிருந்தது. 'இந்த கலை அழகு பொருந்திய இடத்தில், ஏன் இப்படி ஒரு சித்திரத்தை வைத்திருக்கின்றனர்?' என்று கேட்டோம்.
'எக்ஸ்போ முடிகிறதே...' என்று, அப்பெண் கண்ணீர் விடுவதாக, அந்த ஓவியத்தின் அர்த்தத்தை கூறினர்.
அதில் எழுதியிருந்ததைப் படித்த நாகேஷ், 'ஏண்ணே... எங்கேயும் திறப்பு விழாவுக்குத்தானே போவீங்க? ஆனா, இங்கே மூடு விழாவுக்குல்ல வந்திருக்கோம்...' என்றார்.
எல்லாரும் வாய்விட்டுச் சிரித்தோம். அதற்குள் சொர்ணம் சொன்னார்... 'அந்தக் கெட்ட பேர் நமக்கு வரக்கூடாது. அதை, இந்த நாட்டு மக்களுக்கே விட்டு விட்டு, ௧௨ம் தேதியே, 'எக்ஸ்போ' வை விட்டு புறப்படப் போகிறோம்...' என்றார்.
பன்னிரெண்டாம் தேதி படபிடிப்பில், 'எக்ஸ்போ'வின் மத்தியிலிருந்த கூண்டிலிருந்து, எக்ஸ்போவில் நிறுத்தப்பட்டிருந்த கார்களுக்கு மத்தியில் அசோகன் நின்று கொண்டிருப்பதையும், அதே ஷாட்டில் நானும், சந்திரகலாவும் கூண்டுக்குள் உட்கார்ந்து அவரைப் பார்ப்பதையும், மீண்டும் நானும், மஞ்சுளாவும் எக்ஸ்போவின் மத்தியில் நின்று பேசிக்கொண்டிருப்பதையும், 'எக்ஸ்போ'வில் வேறொரு இடத்தில் நாகேஷ் எங்களைத் தேடிக் கொண்டிருப்பதையும், 'ஜூம்' கருவியைக் கொண்டு படமாக்கினோம்.
இத்தனையையும், ஒரே ஷாட்டில் எடுக்க வேண்டும். அதாவது, அசோகன் அருகில் தெரிவது, கேமராவின் கண்ணாடி சுழன்றதும், நாங்கள் உட்கார்ந்திருப்பதும் சேர்த்துத் தெரியவேண்டும். மீண்டும் கண்ணாடி சுழலும் போது, நானும் மஞ்சுளாவும் காத்து நிற்பது, அதன் பின், நாகேஷ் மட்டும் தனியாக அங்குமிங்கும் நடந்தவாறு காத்து நிற்பது, அதைப் பார்த்த நாங்கள் புறப்படுவது - இப்படி படமாக்கினோம்.
அசோகன் நின்ற இடத்திற்கும், நாங்கள் உயரத்தில் இருந்த இடத்திற்கும், குறைந்தது,
4 கி.மீ., தூரம் இருக்கும்.
அதே போலத்தான் மஞ்சுளாவும், நானும் நிற்கும் இடமும்.
இவர்களுக்கும், நாகேஷ் நடந்து கொண்டிருந்த இடத்திற்கும், 1 கி.மீ., தூரமாவது இருக்கும்.
இவர்களை எல்லாம் அடுத்தடுத்து எப்படி தொடர்ந்து நடிக்க வைப்பது என்று யோசித்த பின், 'கூண்டிலிருக்கும் கண்ணாடி வழியாக விளக்கைப் போடுகிறோம், உடனே நடியுங்கள்...' என்று விளக்கினேன்.
விளக்கை போட்டோம். ஆனால், வெயிலின் வெளிச்சம், கண்ணாடி மேல் விழுந்ததால், உள்ளேயிருந்த வெளிச்சம் தெரியாமலே போய்விட்டது. அதனால், 'நடிகர்கள் நடித்துக் கொண்டே இருக்க வேண்டும்; படப்பிடிப்பு முடிந்ததும், நண்பர்கள் வந்து சொல்வர்...' என்ற செய்தியை, நடிகர்களிடம் சொல்ல சொல்லி, ஒருவரை அனுப்பினேன். இதைத் தவிர அவர்களை தொடர்பு கொள்ள வேறு எந்த வசதியும் எங்களுக்கில்லை.
ஏறத்தாழ மூன்று மணி நேரம், அவர்கள் அனைவரும் திரும்பத் திரும்ப நடித்துக் கொண்டே இருந்தனர். நாங்கள் இருந்த கூண்டுக்குப் போடப்பட்டிருந்த கண்ணாடி மிக அழுத்தமானது; வளைந்ததும் கூட. இதன் வழியாகப் பார்ப்பவர்களுக்கு, சில சமயம் உருவங்கள் உருமாறிக் காட்சியளிக்கும். இந்தக் கண்ணாடி வழியாகத்தான், படம் பிடிக்க வேண்டும். அதிலும், 'ஜூம்' லென்சின் உதவியால் படமாக்க வேண்டும்.
அதைத் திரையில் பார்ப்பது வரையில், எந்த உத்தரவாதமும் இல்லை. இருந்தும் துணிவோடும், நம்பிக்கையோடும் அக்காட்சியை பதிவு செய்தோம்.
— தொடரும்.
தொகுப்பு: வைரஜாதன்,
நன்றி 'பொம்மை'
விஜயா பப்ளிகேஷன்ஸ்,சென்னை.
- எம்.ஜி.ஆர்.,
courtesy dinamalar
real life super star one & only our god mgr
பண்புள்ள மக்களான ஜப்பானியர்கள் கூட, மது அருந்தி, மயங்கும் நிலைக்கு ஆளாகி விட்டால், எப்படிப்பட்ட தவறு செய்வர் என்பதை, அன்று நேரில் அனுபவித்தேன்.
ஒளிப்பதிவாளர் அழைக்கும் வரையில், நானும், சந்திரகலாவும் ஒரு இடத்தில் உட்கார்ந்து கொண்டிருந்தோம். நாகேஷ் மற்றும் அசோகனும் எங்களுடன் இருந்தனர். குடி மயக்கத்தில் இருந்த ஒரு ஜப்பானியர், சந்திரகலாவின் உடைகளை ஆர்வத்தோடு கவனித்தபடி, மெல்ல மெல்லத் தள்ளாடியவாறு, அருகில் நெருங்கி வந்தவர், சந்திரகலா அணிந்திருந்த துணியை மரியாதையோடு, மெல்லத் தொட்டுப் பார்த்தார். என்ன எண்ணினாரோ தெரியாது, திடீரென சந்திராவின் உடலைத் தொட்டு விட்டார். அருகில் இருந்த நான், எல்லாவற்றையும் மறந்தேன். அவர் கை சந்திராவின் மீது பட்டதும், என் கை ஜப்பானியரின் உடலில் பட்டது. பலமாக அடித்து விட்டேன். அவர் கண்ணில் இருந்த கண்ணாடி, தெறித்து கீழே விழுந்தது.
பக்கத்திலிருந்த அனைவரும் திகைத்து விட்டனர். சந்திரகலா, அதிர்ச்சியில் பேச இயலாது ஊமையாகி விட்டார்.
அடிபட்ட ஜப்பானியர், தவறுக்கு வருத்தம் தெரிவிக்கும் வகையில், இரு கைகளையும் கோர்த்து, தலையிலிருந்து இடுப்பு வரை முன்னால் வளைந்து, மேலும், கீழும் உடம்பை ஆட்டியபடி, 'மன்னியுங்கள்' என்று, அவருடைய மொழியில் சொல்லியவாறு, அப்படியே பின்னால் நகர்ந்து போனார்.
ஜப்பானிய நாட்டில், ஒரு ஜப்பானியரை அடித்து விட்டோமே அவருடைய நண்பர்கள், 'எவனோ ஒரு இந்தியன், ஜப்பானியனைத் தாக்கி விட்டான்...' என்று பிரச்னை செய்வார்களோ... அந்த அடிப்படையில் பிரச்னை உருவாகுமாயின், விளைவுகள் எதுவரை போகும், என்றெல்லாம் யோசித்துக் கொண்டிருந்தேன். எனினும், என் உள்ளம் மட்டும், நான் செய்தது சரிதான் என்று, எனக்கு உற்சாகத்தையே அளித்தது.
ஆனால், அங்கு சுற்றி நின்று வேடிக்கை பார்த்த மக்கள், விவரத்தை அமைதியாகக் கேட்டு, உண்மையை அறிந்ததும், தவறு செய்த அந்த ஜப்பானியரைக் கண்டித்தனர்.
இவர்களும் ஜப்பானியர் தான்; மதி கெட்ட செயல் புரிந்த அவரும், ஜப்பானியர்தான். ஆனால், ஒரே வித்தியாசம், தவறு செய்தவர் குடித்ததால், மதி மறந்திருந்தார். வருத்தம் தெரிவித்த மற்றவர்களோ, மதி மறக்காதவர்கள். இதுதான் இவர்களுக்கிடையே உள்ள வித்தியாசம்.
மதுவினால், ஒரு மனிதன் எப்படியெல்லாம் சீரழிந்து போகிறான் என்பதைக் கவனிக்கும்போது, குடியைக் கெடுக்கும் குடியை, பெரிதாக எண்ணுபவர்களை என்னவென்று சொல்வது?
எம்.ஜி.ஆரின் பொன்மொழிகள்
நம்பிக்கை எதன் மீது ஏற்பட்டாலும் சரிதான்; அது உண்மையில் நம்பிக்ககைக்க உரியதாக இருக்க வேண்டும்; அப்போதுதான் வெற்றிக் கிட்டும்.
கடமைகளை இன்முகத்துடன் ஆற்றி உரிமைகளைப் பெற்றிடுவோம்! அமைதியும் ஒற்றுமையும் காத்து வளர்ச்சிக்கு வழிவகுப்போம்! புதிய சமத்துவ சமதர்ம அமைப்புக்காகத் தொடர்ந்து பாடுபடுவோம்!
அறிவியல் துறையில் போட்டி வேண்டும். ஆற்றலுக்கு முதலிடம் தரப்பட வேண்டும். ஆற்றல் இல்லாதவர்களுக்கு அது கிடைக்க வழி செய்யப்பட வேண்டும்.
சமுதாய உணர்வோடு நாம் பிரச்சினைகளை அணுக வேண்டும்; நாம் தனி மனிதர்கள் என்பது எவ்வளவு முக்கியமோ, அதைவிட முக்கியமானது நாம் ஒரு சமுதாயத்தின் அங்கங்கள் என்பது!
வயிற்றுப் பசியைத் தீர்த்துக்கொண்டால் மட்டும் போதாது! விலங்கினங்கள் கூடத்தான் வயிற்றுப் பசியைத் தீர்த்துக் கொள்கின்றன. அவற்றினின்றும் மேம்பட்ட நிலையை ஒவ்வொரு செயலிலும் ஓர் ஒழுங்கினை வரையறுத்துக் கொள்ள வேண்டும்.
வன்முறைதான் போராட்ட முறை என்றால் தோல்விதான் அதற்குப் பரிசாக்க் கிடைக்கும் என்பது நிச்சயம்.
உழைப்பே உயர்வு தரும்; உழைப்போம் உயர்வோம்; உழைப்போரே உயர்ந்தோர்; உழைப்பவராலே உலகம் உயர்ந்திடும்.
நமது சமுதாயத்தின் அனைத்துப் பகுதி மக்களும் நல்லிணக்கமான முறையில் சீராக முன்னேற்றம் பெற உத்தரவாதம் தரப்பட வேண்டும்; சமநிலைக்குப் பங்கம் ஏற்படாத வகையில் வளர்ச்சிகள் அமைய வேண்டும்.
புகழை நாம் தேடிச் செல்லக்கூடாது. அதுதான் நம்மைத் தேடி வரவேண்டும்.
நல்ல நிலைக்கு வந்த பிறகும் நாம் அனுபவித்த துன்ப, துயரங்களை நினைவில் கொண்டால்தான் நமது கடமையைச் சரிவர நிறைவேற்ற முடியும்.
ஏழ்மை, வறுமையில் எளிமையாக இருப்பது தியாகம் இல்லை; வசதி இருக்கும்போது எளிமையாக இருப்பதுதான் தியாகம்.
இந்த மக்களிடமிருந்து என்னைப் பிரித்திடவோ, என்னிடமிருந்து இந்த மக்களைப் பிரித்திடவோ எந்த சக்தியாலும் முடியாது
ஒரு மனிதன் இறந்தபிறகு அவனை அந்த நாடு மறக்காமல் போற்றினால்தான் அவன் புகழ் பெற்றவனாகின்றான்.
நான் உங்களில் ஒருவன். உங்கள் முன்னேற்றத்தில் அக்கறை கொண்டவன். என் உயிர் மூச்சு உள்ளவரை உங்களுக்காகவே உழைப்பேன். எந்த சக்தியும் என்னை உங்களிடமிருந்து பிரிக்க முடியாது.
அதைச் செய்தான், இதைச்செய்தான் என்று சொல்ல வேண்டாம்!
நம் வள்ளல் முதல்வராக ஆட்சியில் இருந்தபோது, மலேசியாவில் இருந்து குறைந்த விலையில் பாமாயில் இறக்கமதி செய்து, ஒவ்வொரு ரேஷன் கார்டுக்கும் பத்து கிலோ பாமாயில் கிடைக்குமாறு செய்திருந்தார். சாதாரண ஏழை, எளிய மக்கள் பத்து கிலோ பாமாயிலை வாங்கி என்ன செய்ய முடியும். எனவே இரண்டு கிலோ பாமாயிலை தன் வீட்டு சமையலுக்கு வைத்துக்கண்டு, மீதமுள்ள எட்டு கிலோ பாமாயிலை ரேஷன் கடை வாசலிலேயே வியாபாரிகளிடம் நாற்பது ரூபாய்க்கு விற்று விடுவார்கள். அந்த பணத்தை வைத்து இருபது கிலோ அரிசியை வாங்கிச் சென்றனர். கிட்டதட்ட இது மாதா மாதம் ஏழை மக்களுக்கு இலவச அரிசியாகவே கிடைத்துக கொண்டிருந்தது.
இப்படி ஏழை, எளிய மக்கள் மலிவு விலையில் அரசு கொடுக்கும் பாமாயிலை விற்று, அரிசி வாங்கிச்செல்வதை புகாராக, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நம் வள்ளலைச் சந்தித்து சொல்கின்றனர்.
அதற்கு வள்ளல், “இது, ஏற்கனவே எனக்குத் தெரியும். ஆனாலும் அதை தடுக்க வேண்டாம். பாமாயிலை குறைக்கவும் வேண்டாம். கப்பல் கப்பலாக நமக்கு குறைந்த விலையில் பாமாயில் நமக்கு இறக்குமதியாகிறது. அதைத்தான் இந்த ஏழை மக்களுக்கு விநியோகம் செய்கிறோம். இருபது கிலோ பாமாயிலை விற்கும்பொழுது, எட்டு கிலோ அரிசி கிடைக்கிறதல்லவா? அதனால் அவர்களின் வயிறு நிற்கிறதல்லவா? அதுபோதும். இந்த ராமச்சந்திரன் ஆட்சியில், அதைச் செய்தான், இதைச் செய்தான் என்ற பாராட்டுக்களெல்லாம் வேண்டாம். ஏழை மக்களின் பசியைப் போக்கியவன் என்ற புண்ணியம் கிடைத்தால் போதும்” என்று அன்றைய கூட்டுறவு சூப்பர் மார்க்கெட்டிங் தனி அலுவலர் தெய்வச் சிலையிடம் கண்கலங்கச் கூறுகிறார். நம் வள்ளல்.
அதேபோல்தான் கலைத்துறையில் ஒப்பில்லா ஸ்டாராக திகழ்ந்த போதுகூட, ஒடுக்கப்பட்டவர்களுக்காகவே துணை நின்றிருக்கிறார். நம் வள்ளல். தான் நடிக்கும் சண்டைக்காட்சியோ, பாடல் காட்சியோ அது தரமாக வந்து தயாரிப்பாளர் லாபம் சம்பாதிக்க வேண்டும் என்பதாலும் , படப்பிடிப்பு நாட்களை கொஞ்சம் நீட்டிப்பார். அதனால் தயாரிப்பாளருக்கு நஷ்டம் கிடையாது. காரணம்…. நம் வள்ளல் நடித்த திரைப்படத்தில் தானே தயாரிப்பாளர்களும், விநியோகஸ்தர்களும் ஒன்றுக்கு பத்தாக சம்பாதிப்பார்கள்.
ஒரு சமயம் வள்ளலின் நாடகக் குழுவில் நடித்துக் கொண்டிருந்த எம்.கே. முஸ்தபா விலகிச் சென்று விட்டார். உடனே நம் வள்ளலுடன் தந்தை வேடத்தில் நடித்துக் கொண்டிருந்த என்.எஸ். நாராயணன் மூலம், தேவி நாடக சபாவில் நடித்துக் கொண்டிருந்த நாகர்கோயிலைச் சேர்ந்த பசுபதியை, எம்.கே. முஸ்தபா நடித்த கேரக்டருக்கு சிபாரிசு செய்கிறார். வள்ளலுக்கு பசுபதியின் அழகிய தோற்றமும், கம்பீரமும் பிடித்துப் போகவே, உடனே சேர்த்துக் கொண்டார். ‘இன்பக் கனவு’ ‘அட்வகேட் அமரன்’ ‘பகைவனின் காதலி’ ஆகிய நாடகங்களில் பசுபதி தொடர்ந்து நடித்து மிகவும் பாப்புலராகி உயர்ந்த நிலைக்கு வந்து கொண்டிருந்தார்.
இந்த சூழ்நிலையில் வள்ளலுக்கும், பசுபதிக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டு, பசுபதியை நம் வள்ளல் தன்னுடைய நாடகக் குழுவில் இருந்து நீக்கிவிட்டார்.
வேலையில்லாமல் கஷ்டப்பட்ட பசுபதி, ‘திரௌபதி நாடகக் குழு’ வில் சேர்ந்து நடிக்க ஆரம்பித்தார். வள்ளலை விட்டு பிரிந்த சில ஆண்டுகளில் பசுபதிக்கு திருமணம் நிச்சயமாயிற்று, ‘முதன் முதலாக சென்னையில் தனக்கு வாழ்வளித்த நம் வள்ளலுக்கு திருமணப் பத்திரிக்கை வைப்பதா? வேண்டாமா? அப்படியே பத்திரிகை வைத்தாலும், வள்ளல் வாங்கிக் கொள்வாரா? மாட்டாரா? என்கிற குழப்பம் பசுபதிக்கு, கடைசியில் பத்திரிக்கை கொடுத்து விடுவது என்று தீர்மானித்து, பழத்தட்டுடன் செல்கிறார் பசுபதி. பசுபதி சென்ற நேரம் வள்ளல் வராந்தா வாசலில் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருக்கிறார். பசுபதி தட்டை நீட்டுகிறார். வள்ளல் பத்திரிகையை மட்டும் எடுத்துக்கொண்டு ‘பழத்தை நீ எடுத்துக்கொண்டு போ’ என்று கை சைகையால் தெரிவிக்கிறார். பிறகு பசுபதி அங்கிருந்து செல்கிறார்.
பத்திரிகையை வள்ளல் எடுத்துக் கொண்டாலும், ‘திருமணத்துக்கு வருவாரா? மாட்டாரா? தன் மீது உள்ள கோபம் தீர்ந்ததா? இல்லையா? என்கிற சந்தேகம் பசுபதிக்கு, திருமண வேலைகள் நடந்து கொண்டிருந்தது. ஆனாலும், ‘பசுபதி பணக் கஷ்டத்தில் இருக்கிறார்’ என்பதை வள்ளல் தெரிந்துகொள்கிறார். பசுபதி, ‘கல்யாண மண்டம்ப், வாழை மர தோரணம், பந்தல், மேளக்கச்சேரி, மைக் சேட், சாப்பாடு இற்றிற்கெல்லாம் பேசி ஒரு அட்வான்ஸாவது கொடுத்துவிட்டு வர்ரலாம்’, என்று முதலில் கல்யாண மண்டம் செல்கிறார். ஆனால் அங்கு மொத்தப் பணமும் கட்டப்பட்டு, பணம கட்டிய ரசீதையே, பசுபதியிடம் தருகிறார், மண்டப மேனேஜர்.
பசுபதிக்கு ஆச்சரியம். ‘நமக்காக யார் கட்டியது?’ அப்பொழுதுதான் தெரிந்தது. நம் வள்ளலின் தோட்டத்தில் மேனேஜராக பணிபுரியும் பத்மனாபன்தான் வள்ளல் சொன்னபடி பணம் கட்டியிருக்கிறார், என்று அதோடு உடன் நடராஜன், கிருஷ்ணமூர்த்தி, சீதாராமன் போன்ற வள்ளலின் ஆட்கள், ஆளுக்கொரு வேலையை செய்திருக்கின்றனர்.
கல்யாண மண்டபத்துக்கு மட்டுமல்லாமல், பந்தல் வாடகையில் இருந்து, மைக் செட்வரை பணம் கட்டச்சொல்லியிருக்கறார், நம் வள்ளல்.
திருமண நாள் வருகிறது. முகூர்த்தத்திற்கு இருபது நிமிடத்திற்கு முன்பே நடிப்பிசைப் புலவர் கே.ஆர் . ராமசாமி, சகஸ்ர நாம்ம் ஆகியோருடன் நம் வள்ளலும் வந்து திருமண மண்டபத்தில் அமர்ந்திருந்த காட்சி பசுபதி குடும்பத்தினருக்கு கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.
பத்திரிகையை வாங்கிக் கொள்வாரா? மாட்டாரா? வாங்கிக் கொண்ட பிறகு கூட வள்ளல் வருவாரா? மாட்டாரா? என்கிற மனப்போராட்டத்தில் இருந்த பசுபதிக்கு ‘ஒரு தாய் தந்தை ஸ்தானத்திலிருந்து அனைத்து செலவையும், தானே ஏற்றுக்கொண்டு கட்டில், பீரோ, பண்டம், பாத்திரம் அனைத்து சீர் வரிசைகளோடு வந்த வள்ளலை எப்படி மறக்க முடியும். அந்த மனித தெய்வத்தைப்போல் இப்பொழுது மட்டுமல்ல, இனி எப்பொழுது காணப் போகிறேன்?’ என்று பசுபதி பச்சைக் குழந்தையாய் தேம்புகிறார்.
பட்டினியால் தினம் ஒட்டிய வயிறு
பாதையில் தவிக்குதடா-சில
பாவிகள் ஆணவம் பஞ்சையின் உயிரை
தினம் தினம் பறிக்குதடா!
மாறினால் மாறட்டும், இல்லையேல் மாற்றுவோம்
courtesy - ettavathu vallal book written by manavai pon manikkam
எங்களுக்கு திக்கு ஏது? திசை ஏது?
மதுரை மாவட்டம் பொந்துகபட்டி கிராமத்தில் ஆடு மேய்த்த சுப்பையாவுக்கு ஆஸ்தியும், அந்தஸ்தும் வரக் காரணமாக இருந்தவர், நம் வள்ளல் பெருமகன். அந்த வள்ளல பற்றி,
கோவா கார்வார் பகுதியில் ‘ஆயிரத்தில் ஒருவன்’ படப்பிடிப்பு லைட்மேன், கார்பென்டர் போன்ற தொழிலாளர்கள் படப்பிடிப்புத் துவங்க ஒரு வாரத்திற்கு முன்பே சென்று விடுகிறார்கள். அவர்களுக்கு உணவு பரிமாற அந்த பகுதியைச் சேர்ந்த சமையற்காரர்களை ஏற்பாடு செய்திருந்தனர்.
அவர்கள் உணவு முறைப்படி பாதி வேக வைக்கப்பட்ட மீனையும், பாதி வேக்காட்டில் வடித்த சோற்றையும் பரிமாறுகிறார்கள். இதுபோன்ற உணவு முறையை சாப்பிட்டு பழக்கப்படாத டெக்னீஷியன்கள் சாப்பிட முடியாமல் மிகவும் அவஸ்தைப்படுகின்றனர்.
இந்த செய்தி சென்னையில் இருந்த நம் வள்ளலுக்கு தெரிய வருகிறது. உடனே தன் வீட்டு சமையற்காரர் காளிமுத்துவை கார்வாருக்கு அனுப்பி வைத்து, செட்டிநாடு ஸ்டைலில் உணவு கிடைக்க ஏற்பாடு செய்கிறார். குறைந்த சம்பளம் வாங்கும் தொழிலாளிதானே என்று குறைத்து மதிப்பிடாமல், விருந்தோம்பல் செய்து மகிழ்ந்தவர், நம் வள்ளல்.
ஆவடியில் இருந்து சென்னை, மீனம்பாக்கத்திற்கு இருபது நிமிடத்தில் வந்து சேர அண்ணா நகரில் இருந்து சாலையை விரிவுப்படுத்த திட்டம் தீட்டுகிறார்.
அப்படி விரிவுப்படுத்தும்போது, வடபழனிக்கும், கே.கே. நகருக்கும் இடையில் ஒட்டப்பாளையம் என்ற இடத்தில் நடு ரோட்டில் ஒரு அம்மன் கோயில் சாலைக்கு இடையூறாக இருக்கிறது. இதை எப்படி அப்புறப்படுத்துவது? அப்படி அப்புறப்படுத்தும்போது, மதப் பிரச்சினை வந்து விடுமோ? என்ற அச்சத்தில் வள்ளலிடம் நிலைமையை விளக்குகின்றனர்.
கேட்டுக்கொண்ட வள்ளல், மக்கள் பிரச்சினையை ஏற்படாத வண்ணம், மக்களின் மனம் புண்படாத வண்ணம், காஞ்சிப் பெரியவரை வைத்து, ‘இந்த கோயிலை சாலைக்கு இடையூறு இல்லாமல் இடம் பெயர்த்து வைக்க முடியுமா?’ என்று ஆலோசனை கேட்டு, அந்த மடாதிபதிளை வைத்தே, அத கோயிலை, இடம் பெயர்த்து வைக்க ஏற்பாடு செய்கிறார், நம் வள்ளல். வள்ளல் நினைத்திருந்தால், சட்டப்படி என்ன செய்ய வேண்டுமோ, அதை செய்து கொள்ளுங்கள் என்று ஒரு ஆணை மட்டும் பிறப்பித்திருக்க முடியும். ஆனால்… எவர் மனத்தையும் புண்படுத்தாமல் சத்தியத்தில் அடிப்படையில் செயல்பட்டவர் நம் செம்மல். ‘அந்தச் செம்மலே, எங்கள் குலதெய்வம்’ என்கிறார் சுப்பையா.
“வானம் பொழியுது பூமி விளையுது தம்பிப்பயலே! நாம்
வாடி வதங்கி வளப்படுத்துவோம் வயல-ஆனா
தானியமெல்லாம் வலுத்தவனுடைய கையில-இது
தகாதுன்று எடுத்துச் சொல்லியும் புரியலே”
இவர் ஒரு மலையாளியாக இருந்தும், ஒரு முன்னணித் தமிழ்த் தேசியவாதியாகவும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் முக்கிய உறுப்பினராகவும் திகழ்ந்தார். அக்கட்சியின் பொருளாளராகவும் நீண்ட காலம் பணியாற்றினார். சி.என். அண்ணாதுரையின் மறைவுக்குப் பின், மு. கருணாநிதி முதலமைச்சரானதைத் தொடர்ந்து இடம்பெற்ற சம்பவங்களால் ஏற்பட்ட முரண்பாடுகள் எம்.ஜி.ஆர் கட்சியை விட்டு வெளியேற வேண்டிய நிலையை ஏற்படுத்தின. 1972-ல் அனைந்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் புதிய கட்சி ஒன்றை அவர் ஆரம்பித்தார்.
திரைப்படங்களின் மூலம் அவர் அடைந்த புகழும், அவருடைய வசீகரமான தோற்றமும், சமூகத தொண்டனாகவும், ஏழைகள் தோழனாகவும், கொடையாளியாகவும், வீரனாகவும் நடித்ததன் மூலம் பெற்றுக் கொண்ட நற்பெயரும், அவர் மிக விரைவில் மக்களாதரவைப் பெற உதவின. 1977-ல் இடம் பெற்ற தேர்தலில் பெரு வெற்றி பெற்றுத் தமிழ்நாட்டின் முதலமைச்சரானார். 1984 ல் இவர் கடுமையாக நோய்வாய்ப்பட்டும், 1987 வரை 10 ஆண்டுகள் தொடர்ச்சியாக முதலமைச்சர் பதவியை வகித்துப் பதவியிலிருக்கும் போதே காலமானார். அவர் மறைவிற்குப் பின் பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.
இவர் கடவுள் நம்பிக்கையற்ற நாத்திகக் கொள்கையைப் பின்பற்றினாலும், தமிழ்நாட்டில் பலர் இவரைக் கடவுள் போலவே போற்றினார்கள். இவர் இறந்து, 26 ஆண்டுகளுக்கு மேலாகியும், இன்றும் இவருக்காகவே அனைந்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு வாக்களிப்பவர்கள் தமிழ்நாட்டில் உள்ளனர். இது அவருக்கு மக்கள் மத்தியிலிருந்த அளவு கடந்த செல்வாக்கையே காட்டுகிறது.
courtesy - net
M.G. ராமச்சந்திரன். ஒரு தனி மனிதனால் ஜாதி மத பேதங்களைத் தாண்டி மனித நேய அடிப்படையில் நல்ல கருத்துக்களை தன திரைப்படங்களில் புகுத்தி மக்களைக்கவர்ந்து அரசியலில் முதல்வராக வளர்ந்து தன் மறை வுக்குப் பின்னும் ஓர் ஓட்டு வங்கியை நிலை நிறுத்த முடியும் என்பதை உலகுக்கே எடுத்துக்காட்டிய உன்னத மனிதர். திரைப்படங்களில் அவர் நடிப்புத்திறமை பற்றிய கருத்து வேறுபாடுகள் இருப்பினும் நடிகர் திலகத்தின் ரசிகர்கள் மனத்திலும் அவருக்கென்று ஓர் மரியாதையான இடம் என்றுமே உண்டு. எடுத்துக்காட்டாக வாழ்ந்து மறைந்த பின்னரும் மக்கள் மனதில் வாழும் தெய்வப்பிறவிகளை அவர்தம் சாதனைகளை வருங்கால சந்ததியினரும் போற்றும் வண்ணம் அவர்தம் திரைப்படக் கருவூலங்கள் மாவட்டம் தோறும் உருவாக்கப் பட பேதங்களை புறம் தள்ளி அரசு மூலம் முயல்வோம்.
Be Indian Buy Indian....but when it comes to individual states or individuals...cursing one as a malayaali or a tamilian.....why this anamoly?
நமது மூத்த திரி நண்பர் திரு ரூப் குமார் அவர்களின் தாயார் கடந்த ஒரு வார காலமாக உடல்நலம் குன்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் . அந்த தாய் பூரண குணமடைந்து இயல்பு நிலைக்கு திரும்புமாறு நாம் எல்லோரும் எல்லாம்வல்ல இறைவனையும் எங்கள் குலதெய்வத்தையும் வேண்டி கொள்வோம் ..
HAPPY FATHERS DAY
https://www.youtube.com/watch?v=4-57OE5Uyh4
HAPPY FATHERS DAY
https://www.youtube.com/watch?v=8tvHTt_KC88