நன்றி எஸ்வி சார்
அதே போல் இந்த உசுவா பாடலை பற்றி தகவல் இருந்தால் சொல்லுங்கள்
http://i49.tinypic.com/2hozbs6.jpghttps://encrypted-tbn0.gstatic.com/i...GmHHn7kudASBXQ
Printable View
நன்றி எஸ்வி சார்
அதே போல் இந்த உசுவா பாடலை பற்றி தகவல் இருந்தால் சொல்லுங்கள்
http://i49.tinypic.com/2hozbs6.jpghttps://encrypted-tbn0.gstatic.com/i...GmHHn7kudASBXQ
அனைத்து சகோதர உள்ளங்களுக்கும் எங்கள் இனிய ரமதான் வாழ்த்துக்கள். அந்த ஓரிறை உலகில் சாந்தியும் சமாதானமும் நிலவிட அருள் புரியுமாக. மனிதம் ,மதங்களை முந்தட்டும்.
ஓ மை லவ்... ஓ மை ஸ்வீட் ஹார்ட்...
உலகம் சுற்றும் வாலிபனோடொரு பயணம் வந்தவள் நான்
உறவுப் பாடலை பாடவும் ஆடவும் உரிமை கொண்டவள் நான்
தெரிந்த வரையில் "உலகம் சுற்றும் வாலிபன்" படத்துக்காக உருவாக்கப்பட்டு இடம் பெறாத பாடல்.
அதே படத்தில் சுசீலா பாடிய " நினைக்கும்போது .. தனக்குள் சிரிக்கும் மாது" என்ற பாட்லும்
இடம் பெறவில்லை.
ஏ.எல்.ராகவன் குறிப்பில் விட்டு போன எனது மற்றொரு பிரிய பாடல்.பாஞ்சாலி படத்தில் கே.வீ.மகாதேவன் இசையில் , ஏ.எல்.ராகவன் bass voice கொண்டு ஒரு gazal போல பாடியிருப்பார்.
கேளுங்க,கேளுங்க ,கேட்டுகிட்டே இருங்க.(ஒரு முறை பார்த்தாலே போதும்.ஆனால் பல முறை கேட்க வேண்டும்)
http://www.youtube.com/watch?v=9_eEkQQzoeA
எங்கள் செல்வி என்ற படம் 1960 இல் ஏ.என்.ஆர்-அஞ்சலி தேவி இணையில் வந்து ,சுமார் வெற்றி கண்டது. பாடல்கள் கே.வீ.மகாதேவன் .சூப்பர் ஹிட் ரகங்கள்.என்ன பேரு வைக்கலாம்,சில சில ஆண்டுகள் முன்னம், என்று நல்ல தரமான பாடல்கள்.
இந்த பாடல் பீ.சுசிலாவின் இளைய குரலில் ஒரு அழகு.(சொல்லத்தான் நினைக்கிறேன் முடியவில்லை.)
http://www.youtube.com/watch?v=qq6mqQ7_agU
சம்பத் செல்வம் னு ஒரு இசை அமைப்பாளர்
இவர் ஓடங்கள்,துளசி (அடிகடி ராஜ் டிஜிட்டல் பிளஸ் சேனல் இந்த படத்தை ஒளி பரப்பும் ) போன்ற படங்களுக்கு இசை அமைத்தவர்
இந்த இசை அமைப்பாளர் குலதெய்வம் ராஜகோபால்க்கு ஏதாவது உறவா ? படித்த நினைவில் இருந்து எழும் கேள்வி
இந்த ஓடங்கள் படம் ஷபீக் என்ற சஞ்சய் என்ற வருன்ராஜ் என்ற நடிகர் நடித்து வெளிவந்தது 1986 .
பாலச்சந்தர் உதவி இயக்குனர் அமீர் ஜான் இயக்கம்
psv ஹரிஹரன் தயாரிப்பு
வைரமுத்துவின் வைர வரிகளில் பாலாவின் இனிய குரல்
'சந்தன பூவா சந்தன பூவா சம்மதம் கேக்க போரேன் போரேன் .
பங்குனி மாசம் பரிசம் போட வாரேன் வாரேன்
உனது உதட்டில் எனது உதடு கவிதைகள் தீட்டுமே
காமன் தேசம் கடிதம் போட்டு பாராட்டுமே '
http://www.youtube.com/watch?v=76EoBhPP7Ws
இந்த நடிகர் மலையாளத்தில் ஷபீக் என்ற பெயரில் அறிமுகம் ஆகி பின் சஞ்சய் என்ற பெயரில் ஓடங்கள் என்ற தமிழ் படத்தில் நடித்து
பிறகு 1992 கால கட்டத்தில் வருன் ராஜ் என்ற பெயரில் 'தூது போ செல்லகிளியே','கங்கை கரை பாட்டு '
போன்ற திரை படங்களில் மீண்டும் முயற்ச்சி செய்தார் என்று நினைவு
http://i1.ytimg.com/vi/7txJFrkyGPE/mqdefault.jpg
https://encrypted-tbn3.gstatic.com/i...6j8QkUrqiRHUmHhttp://tamilbites.com/wp-content/upl...arai-Pattu.jpg
http://www.inbaminge.com/t/o/Odangal/
இளைய ராஜாவுடன் பனி போர் (பனி என்ன ,நேரடி)உச்சத்தில் இருந்த போது ,வாய்ப்பில்லாமல் தவித்து டப்பிங் படங்களில் பணியாற்றி கொண்டிருந்த வைர முத்து, ஒரு தோதாக இசையமைப்பாளரை உருவாக்கி அவருடன் பயணிக்க எண்ணியதன் விளைவே சம்பத்-செல்வன்.(குலதெய்வம் ராஜகோபால் மகன்).ராதாரவியின் புண்ணியத்தில் வாய்ப்பு கை கூடினாலும்,எண்ணம் கை கூடவில்லை. ரோஜாவின் ராஜா திலிப் வரும் வரை காத்திருக்க வேண்டியதாயிற்று.
மிக்க நன்றி கோபால் சார்
நிறைய நினைவலைகளில் நீந்தி கொண்டு இருக்கிறேன்
அதில் இருந்து கேள்விகள் எழுகின்றன
இதில் ராதா ரவி எங்கிருந்து வந்தார்
வைரமுத்து ராஜா நேரடி போர் இன்னும் தீரவில்லை
இன்று கூட அந்த அக்க போர் தொடர்கிறது
இயக்குனுர் சீனு ராமசாமி யுவன் வைரமுத்து ராஜா செய்திகள் தட்ஸ்தமிழ்.கம இல் படித்து இருப்பீர்கள் என நினைக்கிறன்
கோ,
அதென்ன ஒண்ணு புதுசு ஒண்ணு பழசு?.
ரோஜாவில் திலீப்தான் என்பதில் நீங்கள் பிடிவாதமாக இருக்கும்போது, வைரமுத்துவுடன் மோதியவர் இளையராஜா அல்ல, பண்ணைபுரம் ராசைய்யா...
கோ,
'சொல்லத்தான் நினைக்கிறேன் முடியவில்லை' பாடல் ரொம்பநாள் தேடிக்கொண்டிருந்த ஒன்று. அந்தப்படம் பார்த்ததில்லை. ஆனால் பாடல் இலங்கை வானொலியில் பயங்கர ஹிட். வரிகள் அத்தனை அர்த்தம் பொதிந்தவை.
இங்கே சொந்தபந்தங்களை விட்டு, குறிப்பாக இளம்மனைவியைப்பிரிந்து கிடைத்தற்கரிய இளமையை மலேசிய, சிங்கப்பூர் மற்றும் வளைகுடா நாடுகளில் காசுக்காக மலிவு விலையில் விற்றுக்கொண்டிருக்கும் பரிதாபத்துக்குரிய நம் சொந்தங்களுக்காக எழுதப்பட்ட வரிகள்...
"இன்று வரும் நாளை வரும்
சென்றாலும் திரும்பிவரும் செல்வம்
இளமை சென்று முதுமை வந்தால்
காதல் இசை பாடாது உள்ளம் - இதை
சொல்லத்தான் நினைக்கிறேன் முடியவில்லை"
http://sim06.in.com/aaf0eb1d05d36a65...26701db0_m.jpghttps://encrypted-tbn2.gstatic.com/i...jPm6OekTi9879n
A .V ரமணன் இன் musiano இசைகுழு 1970 1980 காலகட்டங்களில் மிகவும் பிரபலமான ஒன்று .
இதே போன்று மேலும் சில இசை குழுகள் காமேஷ் ராஜாமணி (இவரின் மோனிகா ஒ மை டார்லிங் கரவன் பாடல் மிகவும் பிரபலம் -நடிகை கமலா காமேஷ் இவரின் மனைவி); சிவராஜ் ஆனந்த் ; அபஸ்வரம் ராம்ஜி ஆகியோர் தலைமையில் இயங்கி வந்தன.
இவர்களுக்கு என்றே சில ரசிக கண்மணிகளும் இருந்தனர். மெல்லிசை கச்சேரி முடிந்த பிறகு அதை பற்றி பேசி மேலும் அடுத்த நாள் செய்தி தாள்களில் விமர்சனம் எல்லாம் எழுதும் அளவுக்கு மிகவும் பிரபலமாக இருந்தன. 1970 கால கட்டங்களில் வெளி வந்த ஹிந்தி தமிழ் படங்களின் பிரபலமான பாடல்களை எல்லாம் மேடை ஏற்றி கொண்டு இருந்தனர் .RD பர்மன்,ஷங்கர் ஜெய் கிஷன் ,மெல்லிசை மன்னர் போன்றோரின் பாடல்களை கூடுமானவரை அது போலவே வாசித்து நல்ல வருமானம் ஈட்டி வந்தனர் அதில் ரமணின் musiano குழு முன்னணி வகித்து வந்தது . மேடை நிகழ்சிகளில் இணைந்து பாடிய உமா அவர்கள் திரு ரமணனையே திருமணம் செய்து கொண்டு பின்னர் உமா ரமணன் ஆகி திரு ரமணன் உடன் இணைந்து பல பாடல்களை பாடுவார்கள் பின்னாட்களில் உமா ரமணன் அவர்கள் இளையராஜா இசையில் பல பிரபல சினிமா பாடல்களை பாடி உள்ளார்கள் .
என்னுடைய நல்ல நினவு ஒன்று பதினாறு வயதினிலே வந்த புதிதில் ஒரு மேடை நிகழ்ச்சியில் உமா ரமணன் அவர்கள் 'செந்தூர பூவே ' பாடலை ஒரு வெள்ளை நிற சேலை ஒன்று கட்டி கொண்டு பாடி கொண்டு இருந்தார்கள். அப்போது கேட்டு கொண்டு இருந்த ரசிகர்கள் 'வெள்ளை மயில் வெள்ளை மயில் ' என்று கூவி கொண்டு விசில் அடித்து கொண்டு இருந்தார்கள். அந்த பாடல் முடிந்த உடன் திரு ரமணன் அவர்கள் 'தயவு செய்து இப்படி behave செய்வதை நிறுத்துங்கள் . இப்போது பாடலை பாடியவர் என் மனைவி . 16 வயதினிலே படம் வந்து நிறைய பேரை கெடுத்து விட்டது '
என்று கூறினார்
பாடகர் திலகம் குரலுக்கு ஒரு பாடகர் வருவார். மற்றபடி ஸ்ரீநிவாஸ்,பாலா ,கிஷோர்,ரபி,ஜேசுதாஸ் போன்ற எல்லா பாடகர்களின் பாடல்களை ரமணன் அவர்களே பாடுவார் .
"தேகான ஹாய் ரே சோச்சனா " (धेकाना है रे सोचना ) பாடல் மிகவும் பிரபலமான பாடல் .கிஷோர் பாடுவது போலவே பாடுவார் .
ரசிகர்கள் once மோர் கேட்பது வழக்கம். அந்த கால கட்டங்களில் CD ,mp 3 ,USB என்று எல்லாம் இல்லாத போது இந்த இசை குழு நிகழ்சிகள் மிக சிறந்த பொழுது போக்கு ஆக இருந்தது
2000 கால கட்டங்களில் சன் தொலை காட்சியில் ரமணின் சப்த ஸ்வரங்கள் நிகழ்ச்சி மிகவும் பிரபலமான ஒன்று .
திரு AV ரமணன் அவர்கள் நீரோட்டம்,காதல் காதல் காதல்,சம்சாரம் என்பது வீணை போன்ற படங்களுக்கு இசை அமைத்தார் .மேலும் படங்களுக்கு இசை அமைத்தாரா என்று நினைவு இல்லை
நீரோட்டம் 1980 கால கட்டத்தில் வெளி வந்த விஜய்காந்த்,சத்யராஜ்,பஞ்சகல்யாணி புகழ் திருமுருகன் நடித்த படம்.
இந்த படத்தில் ரமணன் உமா ரமணன் உடன் இணைந்து பாடிய ஒரு பாடல் - சிலோன் ரேடியோ அடிகடி ஒளிபரப்பிய பாடல்
'ஆசை இருக்கு நெஞ்சுக்குள்ளே
அடிகடி துடிக்குதே ஏனோ தெரியலே
இது பருவ கால நினைவுகளின் பழக்கம் அல்லவா'
http://www.raaga.com/play/?id=374667
காதல் காதல் காதல் ரமணன் அவர்கள் ஹீரோஆக நடித்து தேசிய நடிகை தீபா கதாநாயகி என நினைவு இதயம் பேசுகிறது மணியன் தயாரிப்பு என நினைவு இதிலும் ஒரு பாடல் 'காதல் காதல் காதல் என்று கண்கள் சொன்னது என்ன " ரமணன் பாடியது பாடலின் இடையே தீபாவின் அழகை வர்ணித்து சில வசனங்கள் எல்லாம் வரும்
GKrishna ji..
இதோ உங்களுக்காகவே ரமணன், தீபா நடிப்பில் ஏ.வி.ரமணன், உமா ரமணன் குரல்களில்.. "காதல் காதல் காதல் என்று கண்கள் சொல்வதென்ன"
http://youtu.be/Fhlxva2vbvQ
இன்றைய ஸ்பெஷல் (41)
'அடிமைப் பெண்' திரைப்படத்தில் ஜெயலலிதா அவர்கள் பாடிய புகழ் பெற்ற பாடலான
http://i1.ytimg.com/vi/v_AsLwqY1Dw/0.jpg
அம்மா என்றால் அன்பு
அப்பா என்றால் அறிவு
ஆசான் என்றால் கல்வி
அவரே உலகில் தெய்வம்.
பாடலை அனைவருக்கும் தெரியும்.
இப்போது இன்றைய ஸ்பெஷலாக ஒலிக்கும் பாடல். 'இதிலென்ன ஸ்பெஷல்?... கேட்டுப் புளித்துப் போன பாடல்தானே' என்று யாரோ புலம்புவது போல் என் காதுகளுக்கு கேட்கிறது.
கண்டிப்பாக ஸ்பெஷல்தான்.
சில பேருக்கு தெரிந்திருக்கலாம். பல பேர் அறிய வாய்ப்பில்லை.
இந்தப் பாடலை நமது டி.எம்.சௌந்தரராஜன் அவர்களும் பாடி இருப்பதுத்தான் இன்றைய ஸ்பெஷலாக வருகிறது.
எம்ஜிஆர் அவர்களுக்காக பதிவு செய்யப்பட்ட பாடல். ஆனால் படத்தில் இப்பாடல் வராமல் ஜெயா பாடும் பாடல் காட்சியே இடம் பெற்றது.
கீழே நீங்கள் டி.எம்.சௌந்தரராஜன் அவர்கள் பாடிய 'அம்மா என்றால் அன்பு' பாடலைக் கேட்கலாம் 'தாயில்லாமல் நானில்லை... தானே எவரும் பிறந்ததில்லை'... பாடல் காட்சிக்கு பதிலாக.
ஜெயா பாடும் பாடலுக்கும், சௌந்தரராஜன் அவர்கள் பாடும் பாடலுக்கும் அவ்வளவு வித்தியாசம்.
http://i.ytimg.com/vi/6F3DsjWK-Ok/hqdefault.jpg
அம்மா என்றால் அன்பு
அப்பா என்றால் அறிவு
ஆசான் என்றால் கல்வி
அவரே உலகில் தெய்வம்
அம்மா என்றால் அன்பு
அப்பா என்றால் அறிவு
ஆசான் என்றால் கல்வி
அவரே உலகில் தெய்வம்
அன்னையைப் பிள்ளை
பிள்ளையை அன்னை
அம்மா என்றே அழைப்பதுண்டு
அன்பின் விளக்கம் பண்பின் முழக்கம்
அம்மா என்றொரு சொல்லில் உண்டு
பத்துத் திங்கள் மடி சுமப்பாள்
பிள்ளை பெற்றதும் துன்பத்தை மறப்பாள்
பத்தியம் இருந்து காப்பாள்
தன ரத்தத்தைப் பாலாக்கிக் கொடுப்பாள்
அம்மா என்றால் அன்பு
அப்பா என்றால் அறிவு
ஆசான் என்றால் கல்வி
அவரே உலகில் தெய்வம்
இயற்கை கொடுக்கும் செல்வத்தையெல்லாம்
பொதுவாய் வைத்திட வேண்டும்
இயற்கை கொடுக்கும் செல்வத்தையெல்லாம்
பொதுவாய் வைத்திட வேண்டும்
இல்லாதவர்க்கும் இருப்பவர் தமக்கும்
பகிர்ந்தே கொடுத்திட வேண்டும்.
ஒருவருக்காக மழை இல்லை
ஒருவருக்காக நிலவில்லை
வருவதெல்லாம் அனைவருக்கும்
வகுத்தே வைத்தால் வழக்கில்லை
அம்மா என்றால் அன்பு
அப்பா என்றால் அறிவு
ஆசான் என்றால் கல்வி
அவரே உலகில் தெய்வம்
http://www.youtube.com/watch?feature...&v=45xYI3BuY7I
ஜெயா மேடம் பாடும் பாடல் இதோ.
http://www.youtube.com/watch?v=f0tsvDUlzzg&feature=player_detailpage
டியர் கிருஷ்ணாஜி,
70-களில் தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் இயங்கிய சில முக்கிய மேடை மெல்லிசைக்குழுக்கள் பற்றிய விவரங்களை தந்து கடந்த கால நினைவுகளை உசுப்பிவிட்டீர்கள். நீங்கள் சொன்னதுபோல அப்போது சேனல்கள், குறுந்தகடுகள் போன்றவை இல்லாததால் இம்மாதிரி மெல்லிசைக் குழுக்களுக்கு நல்ல வரவேற்பு. இவைகளோடு ஜேசுதாஸ்-சுஜாதா மெல்லிசைக் கச்சேரிகளும் அப்போது களைகட்டின.
ஏ.வி.ரமணன் குழுவுக்கு அப்போது நல்ல வரவேற்பு. அதை வைத்துத்தான் மன்மத லீலையில் 'நேற்றொரு மேனகை இன்றொரு ஊர்வசி' பாட மெல்லிசை மன்னர் வாய்ப்பளித்தார்.
ரமணன் பிற்காலத்தில் 'தமிழ்த்தாத்தா' என்ற டாக்குமென்ட்ரி சீரியலில் தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாதைய்யராக நடித்தார். வேடப்போருத்தம் கனகச்சிதம். இந்த ரோலுக்கு முதலில் பரிசீலிக்கப்பட்டவர், மறைந்த ரகுவரன் அவர்கள்...
கிருஷ்ணா சார்!
ஏ..வி.ரமணன் பதிவு அருமை. நான் கடலூர்காரன் ஆனதால் இங்கெல்லாம் லோக்கல் மெல்லிசைக் குழுக்களே அதிகம். ஆனால் கடலூர் பஸ் ஸ்டாண்ட் மாரியம்மன் கோவில் செடல் உற்சவ திருவிழாவிற்கு வருடாவருடம் ராட்சஸி வந்து மேடைக் கச்சேரி செய்து அமர்க்களப்படுத்தி விட்டுப் போய் விடுவார். 'ராஜபார்ட் ரங்கதுரை' உஷா நந்தினி மாதிரி மொத வரிசையில் நான் இருப்பேன் ஒவ்வொரு வருடமும். சும்மாவா வெறி பிடித்தது?
'ஆட்டக் கடிச்சான்... மாட்டக் கடிச்சான்', 'நான் ரோமாபுரி ராணி'
அப்படின்னு தொடையைத் தட்டி ராட்சஸி ஆரம்பிக்கும் போது கடலூரே சும்மா குலுங்கும் இரவு ஒரு மணிக்கு.
ஆஹா! இப்போது அப்படி ஒரே ஒரு வாய்ப்புக் கிட்டாதா?
டியர் வாசு சார்,
இன்றைய ஸ்பெஷலில் 'அம்மா என்றால் அன்பு' என்று படித்தவுடன், இது 'மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா' அவர்கள் பாடிய பாடல்தான் என்று நினைத்து நான்கூட ஆரம்பத்தில் சாதாரணமாகத்தான் படித்தேன். சிலவரிகள் படித்தபின்னர்தான் இது வேற அம்மா என்று தெரிந்தது.
உண்மையில் இதுநாள் வரையில் எனக்குத்தெரியாத தகவல் இது. இப்பாடலை இப்போதுதான் முதல்முறையாக கேட்கிறேன். ஏன் படத்தில் இடம்பெறவில்லை?. இடம்பெற்றால் தன்பாடலுக்கு மவுசு குறைய வாய்ப்புண்டு என்பது 'மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா' அவர்களின் கண்டிஷனா?.
அரிய தகவலுடன் கூடிய அற்புதப் பதிவு...
கோ/ ராகவேந்திரன் சார்/ கிருஷ்ணா சார்/ கார்த்திக் சார் மற்றும் ராஜேஷ் சார்,
ஒரு மிக முக்கியமான பாடலைத் தருகிறேன். அமர்க்களம். ஈஸ்வரி பற்றி எழுதிவிட்டு ஒரு வித்தியாச பாடலைத் தராமல் போனால் எப்படி? நீங்கள் நிச்சயம் ரசிப்பீர்கள். நம் அருமை நண்பர்களும்தான்.
http://icdn.raaga.com/Catalog/CD/T/T0002257-no-cd.jpg
1968 -இல் வெளிவந்த 'நீயும் நானும்' ரவிச்சந்திரன், ராஜஸ்ரீ நடித்து வெளி வந்த படம். இசை எம்.எஸ். விஸ்வநாதன். இந்தக் கிராதகி இப்படத்தில் பாடிய ஒரு கதி கலங்க வைக்கும் பாடல். கார்த்திக் சார் கண்டிப்பாகக் கேட்டிருக்கக் கூடும்.
ஐயோ! ஐயோ! கேட்கிறேன்... கேட்கிறேன்... கேட்டுக் கொண்டே இருக்கிறேன்.
ஊஞ்சல் கட்டி ஆட்டட்டுமா
உருவைக் கொஞ்சம் மாற்றட்டுமா
பிள்ளை மனசு பெரிய வயசு
கண்ணால் உலகம் காட்டட்டுமா
டவுன்லோட் செய்து கண்டிப்பாக கேட்டுப் பாருங்கள். இரவு தூங்கினா மாதிரிதான்.
http://raagwap.com/download-220780/O...um-Naanum.html
வாசு சார்
திருநெல்வேலியிலும் இந்த கொட்டம் உண்டு .
வருடா வருடம் நெல்லையப்பர் காந்திமதி கேள்விப்பட்டு இருப்பீர்கள் கோயில் தேர் திரு விழாவின் போது அரசு பொருட் காட்சி நடைபெறும் .
அதே நேரத்தில் குற்றாலம் சீசன் வேறு எல்லாம் சேர்ந்து ஒரு திருவிழா கூட்டம் தான் .
தினசரி இரவு மேடை கச்சேரி, நாடகம் .உள்ளூர் வித்வான்கள் 'நெல்லை musiano ஆடர் கலை அரசன் பிரபாகர்' குழு ,ஜேசுதாஸ் எதிரொலி நெல்லை வாசுதேவன் குழு ,கண்டசாலா சீர்காழி எதிரொலி ஓவியர் வண்ண முத்து குழு, திருச்சி லோகநாதன் எதிரொலி நெல்லை கணபதி
இதற்கு நடுவில் மதுரை சோமு புகழ் தண்ணி வண்டி பாலு (இவருக்கு கூஜா நிறைய வடிசாராயம் வேண்டும் அப்ப தான் தொண்டையே திறக்கும் ஒரே பாட்டு மருத மலை மாமணியே திருப்பி திருப்பி பாடுவார் once மோர் கேட்க அவரோட அல்லக்கை 10 பேர் எல்லோருக்கும் தலைக்கு 10 ரூபாய்).
நடுவில் ஒரு நாள் சிலோன் லைலா இன்ப நடனம் (வயது வந்தவர்களுக்கு மட்டும் ஆனால் உள்ளே உட்கார்ந்து இருக்கிறவன் எல்லாம் தாளி நாளைக்கு போற கேஸ் ஆக இருக்கும் தனியாக ஒரு விசில் சத்தம் கேட்கும்.அது யாருன்னு பார்த்தீங்கன எங்க ஊர் சிவன் கோயில் பட்டர் தலையில் துண்டு கட்டி பெரிய தலைபா கொண்டு முகத்தை மறைத்து கொண்டு இருப்பார்.)
வைரம் கிருஷ்ணமுர்த்தி நாடகம்,நாடக காவலர் மனோகர் இன் சிசு பாலன்,இலங்கேஸ்வரன்,sv ராமதாஸ் இன் கில்லெர் நரசிம்ஹன் ,
ராதாவின் ரத்த கண்ணீர்,விவேகா பைன் ஆர்ட்ஸ் சோவின் 'சம்பவாமி யுகே யுகே,என்று தணியும் இந்த சுதந்திர தாகம் ',தில்லை ராகவனின் நாடகங்கள்,நம்ம தாலாட்டு ராஜபாண்டியன் ,சிவசூரியன் கரிகொல்ராஜ் nsk குழு நாடகங்கள்
இறுதி நாள் மெல்லிசை மன்னர் ஈஸ்வரி குழுவினர் தலைமையில் நட்சத்திர இரவு விடிய விடிய ஒரே கொண்டாட்டம் தான். ராட்சசி ஒரு கச்சேரியில் 'இளமை நிரந்த உலகம் இருக்கு' பாடல் பாடும் போது ஆடிய ஆட்டம் இருக்கே இன்னொருதரா இருந்தா ஆனை கால் வியாதி வந்து இருக்கும்.
கமல் ஆரம்ப காலத்தில் நிறைய தடவை வந்து டான்ஸ் எல்லாம் ஆடி இருக்கார். ஒரு தடவை அவர் ஆட மறுத்து அதனால் ரசிகர்கள் எல்லாம் கல்லை தூக்கி எறிந்து அவர் பதிலுக்கு 'நான் இனிமேல் திருநெல்வேலி பக்கமே வரமாட்டேன் ' என்று கூறி பாதியிலே நிகழ்சிகள் தடைபட்டது கூட உண்டு
எல்லாம் முடிந்து காலை 4 மணிக்கு நெல்லை dwaraka lodge என்று ஒன்று உண்டு .அங்கே தான் ஸ்டே. மறுநாள் மதியம் 1 மணிக்கு நெல்லை சேது லிங்க் எக்ஸ்பிரஸ் ஒன்று நெல்லை ஜங்ஷன் ரயில்வே ஸ்டேஷன் இல் இருந்து கிளம்பி மறு நாள் காலை 10 மணிக்கு தான் சென்னை வரும் நாங்கள் கொஞ்சம் 10 பேர் tirunelveli ரயில்வே ஸ்டேஷன் சென்று அவர்களை எல்லாம் வழி அனுப்பி, கொஞ்சம் பணக்கார பசங்க வழிநடைக்கு செலவுக்கு பணம் எல்லாம் கொடுப்பாங்க (துணை நடிகைகளுக்கு மட்டும்) மீண்டும் அடுத்த நிகழ்ச்சிக்கு காத்து இருப்போம்
'என்ன சுகம் என்ன சுகம் '
https://encrypted-tbn3.gstatic.com/i...lIAT-Ub6Kil35whttps://encrypted-tbn1.gstatic.com/i...ltjhzsnVLPjMtw
http://www.youtube.com/watch?v=tdrhyQAZHqM
டியர் கிருஷ்ணாஜி,
தங்களின் 'மலரும் நினைவுகள்' அருமையோ அருமை, சுவையோ சுவை. நாங்களும் திருநெல்வேலி திருவிழா திடலில் இருப்பதாய் உணர்ந்தோம்.
நீங்கள் சொன்ன நாடக சபாக்களெல்லாம் வெளியூர் போகும்போது மட்டும்தான் கோயில் திருவிழாக்களில் நாடகம் நடத்துவார்கள். சென்னையில் சபாக்களுக்கு மட்டும்தான். இதற்காக ஹைகோர்ட் ராஜாஅண்ணாமலை மன்றம், மைலாப்பூர் மியூசிக்அகாடமி, தி.நகர் வாணிமகால், திருவல்லிக்கேணி என.கே.டி.கலாமண்டபம் என்று நாங்கள் படையெடுக்க வேண்டும். ஆனால் எப்படியும் வருஷா வருஷம் பொருட்காட்சியில் இவர்கள் நாடகம் நடக்கும். தலைவரின் தங்கப்பதக்கம் கூட பொருட்காட்சியில் நடந்து இருக்கிறது.
நடிகர் அசோகனின் 'தர்மத்தின் கண்கள்' என்ற நாடகத்தின்போது, வசனத்தின் நடுவே அசோகன் ஏதோ தகாத வார்த்தை பேசியதற்காக கல்லெறி கூட வாங்கினார். சிலோன் லைலா ஒருமுறை ஆபாச நடனம் ஆடினார் என்பதால் அவருடைய ஆட்டத்துக்கு பொருட்காட்சியில் போலீஸ் அனுமதி கிடையாது. சி.ஐ.டி. சகுந்தலா, வெண்ணிற ஆடை நிர்மலா போன்றவர்களின் நடந்களும் நடந்திருக்கிறது.
பொருட்காட்சியின் இன்னொருபக்கம் வெள்ளை ஸ்க்ரீன் கட்டி, தியேட்டர்களில் போணியாகாத சில குப்பைப்படங்கள் தினம் ஒன்றாக திரையிடப்படும். இப்போது சென்னை பொருட்காட்சி எப்படியென்று தெரியவில்லை. மிஸ் பண்ணுகிறோம்...
வாசு சார்
அருமை... அடிமைப் பெண் திரைப்படத்தில் பதிவு செய்யப் பட்டு படத்தில் இடம் பெறாத இந்தப் பாடலைப் போல் ஏராளமான பாடல்கள் உள்ளன. படகோட்டி திரைப்படத்திலும் ஒரு பாடல் படத்தில் இடம் பெறவில்லை. ஏ.எல்.ராகவன் எல்.ஆர். ஈஸ்வரி பாடிய பாடல், பருவ கால ஏட்டினிலே என்று துவங்கும். நம்முடைய நடிகர் திலகம் நடித்த படங்களிலும் கூட இது போன்று சில பாடல்கள் படத்தில் இடம் பெறும் வாய்ப்பை இழந்துள்ளன.
இன்னும் சொல்லப் போனால் இதைப் பற்றியே ஒரு மினி தொடர் தாங்களே தொடங்கலாம்.
ஆஹா நீயும் நானும் ஒரே படத்தில் இன்றைக்கு இரண்டு பாடல்கள்.... யாரடி வந்தார் மற்றும் ஊஞ்சல் கட்டி ஆடட்டுமா... இரண்டுமே எப்போது கேட்டாலும் புதுமையாக மிளிருபவை. இவையன்றி ரவி பாடுவதாக வரும் தேங்கா மாங்கா பட்டாணி சுண்டல் மற்றும் யாரடி வந்தார் இவையும் உண்டு
உண்மை கார்த்திக் சார்
கொஞ்சம் அல்ல நிறைய மிஸ் பண்ணுகிறோம் அல்லது பண்ணி விட்டோம் .
நீங்கள் தலைவர் என்றவுடன் நினைவுக்கு வருகிறது
1977-78 மக்கள் திலகம் அன்றைய முதல்வர் அவர் தலைமையில் பாளையங்கோட்டையில் பிரமாண்டமான நட்சத்திர இரவு.
நெல்லை ஜங்ஷன் பொருட்காட்சி மைதானம் அவ்வளவு பெரியது இல்லை என்பதால் பாளையங்கோட்டை ஜான் 'ஸ் காலேஜ் மைதானம் தான் பெரியது என்பதால் அங்கு ஏற்பாடு செய்து இருந்தார்கள்.
அப்போது கமல் ரஜினி போன்றோர் எல்லோரும் வளரும் கலைஞர்கள்.அவர்கள் எல்லாம் வந்தார்களா என்று நினைவும் இல்லை இரண்டாவது அவர்கள் எல்லோரும் நாடக நடிகர்கள் அல்ல .எனவே எல்லோருக்கும் பேசுவது அல்லது எதாவது பாடுவது என்றே பொழுதை போக்கி கொண்டு இருந்தார்கள். மேஜர் அவர்கள் ஒரு நாடகம் போட்டார் .சுமாராக இருந்தது. அந்த நட்சத்ர இரவு highlight என்னவென்றால் தலைவரின் சாம்ராட் அசோகன் ஓரங்க நாடகம் .வெளுத்து கட்டி விட்டார் . குரல்வளை நொறுங்கி முகம் எல்லாம் உணர்ச்சி குவியல் ஆகி இறுதியில் பௌத்த பிட்சுவின் காலடியில் தன தலை சாய்த்து அப்படியே விழுந்து விட்டார். தலைவரின் உணர்ச்சி மயமான நடிப்பை பாராட்டி அடுத்த நாள் தினத்தந்தி மாலை முரசு தினமலர் எல்லாம் ஒரே நடிகர் திலகம் மக்கள் திலகம் புகை படங்களாக நிரம்பி வழிந்தன
http://i1.ytimg.com/vi/vh1k-W_bkCg/hqdefault.jpg
http://www.youtube.com/watch?v=q929CuI7UZA
கிருஷ்ணா சார்,
சின்ன மீனைப் போட்டு எப்படி பெரிய மீனைப் பிடித்தோம் பார்த்தீர்களா.
நெல்லை மேடைக் களேபரங்கள் நெஞ்சு புடைக்க சிரிக்க வைத்தன. குறும்பு.. அநியாத்துக்கு குறும்பு. நகைச்சுவை கொடி கட்டுகிறது. வாழ்த்துக்கள்.
சிங்கமாச்சேப்பா அது சிங்கமாச்சே.Quote:
அந்த நட்சத்ர இரவு highlight என்னவென்றால் தலைவரின் சாம்ராட் அசோகன் ஓரங்க நாடகம் .வெளுத்து கட்டி விட்டார் . குரல்வளை நொறுங்கி முகம் எல்லாம் உணர்ச்சி குவியல் ஆகி இறுதியில் பௌத்த பிட்சுவின் காலடியில் தன தலை சாய்த்து அப்படியே விழுந்து விட்டார். தலைவரின் உணர்ச்சி மயமான நடிப்பை பாராட்டி அடுத்த நாள் தினத்தந்தி மாலை முரசு தினமலர் எல்லாம் ஒரே நடிகர் திலகம் மக்கள் திலகம் புகை படங்களாக நிரம்பி வழிந்தன
உண்மை வாசு சார்
எழுதும் போது நானே கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டேன்
அந்த நாடகம் இன்னும் என் கண்ணுக்குள்ளே அப்படியே இருக்கு சார்
ரோஜாவின் ராஜா திரை படத்தில் சாம்ராட் அசோகன் நாடகத்தை திரையில் தான் பார்த்து இருக்கிறோம். ஆனால் நேரில் பார்க்கும் வாய்ப்பு அன்றைய இரவு எங்களுக்கு கிடைத்தது . அடுத்த நாள் செய்தித்தாள் கட்டிங் எல்லாம் இருந்தால்
பம்மலர் சார் எஸ்வி சார் நீங்கள் யாரவது பதிவு போட்டால் தான் உண்டு
இனிய ரமலான் நல்வாழ்த்துகள்
எங்கும் சகோதரத்துவம் விளங்கட்டும்
http://www.hindu.com/thehindu/gallery/sg/sg005.jpghttp://www.123telugu.com/content/wp-...h-Sivaji-G.jpghttp://www.oocities.org/vijayalakshm...koondukili.jpghttp://tamil.oneindia.in/img/2013/08...kamal2-600.jpg
உத்தமன் திரை படத்தில் இருந்து நடிகர் திலகம் அவர்கள்
அனார் சலீம்
'அனார் என்றால் மாதுளம் ஆசை கொண்ட மாதிடம்
சலீம் என்ற மன்னவன் சலாம் வைத்தான் உன்னிடம்
உண்மை காதல் காதல் காதல்
அந்த காதல் போயின் சாதல்'
http://www.youtube.com/watch?v=_4qQLyrynfs
இசையரசியின் குரலில் எழுபதுகளில் பல இனிமையான மிகவும் பிரமாதமான பாடல்கள் வந்தன. அப்படி ஒன்றுதான் இது.
மது அண்ணா முகனூலில் மீண்டும் ஞாபகப்படுத்திய பாடல்
சங்கர் கணேஷ் இரட்டையரின் இசை.. அவர்கள் திரையில் தோன்றி வாத்தியங்களை வாசித்த பாடல்
சுஜாதா .. அற்புதமான நடிகை .. திரையில் பத்துபேரோடு நடித்தாலும் அவர்களை தன் நடிப்பால் சிறியவர்களாக்கி விடுவார்.
இதோ பல்லாண்டு காலம் நீ வாழ வேண்டும் ( நீ ஒரு மகராணி படப்பாடல்)
http://www.youtube.com/watch?v=4PbQHySUpx4
அனைவருக்கும் இனிய ரமலான் பெருநாள் வாழ்த்துக்கள்
http://i1087.photobucket.com/albums/...1406560410.jpg
ராஜேஷ் சார்,
'சாக்ஷாத்காரா' கன்னடப் படத்தில் நாம் இசையரசி பாடிய 'ஒலவே ஜீவன சாக் ஷாத்காரா' பாடலை நீங்கள் பதித்து இப்போதுதான் முதன் முறையாக கேட்டு இன்புறுகிறேன். அற்புதம் சார். என்ன குரல் சார் அது!
ஆண்டவன் படைப்பின் அற்புதங்களில் ஒன்று நம் சுசீலாம்மாவின் குரல்.
கன்னடம் எனக்குத் தெரியாது. ஆனால் அவர்கள் தெளிவாக உச்சரிக்கும் விதத்தை உணர முடிகிறது. அழகான இயற்கை சூழ் இடங்களில் அற்புதமாகப் படமாக்கப் பட்டிருக்கிறது. ராஜ்குமாரும் நன்றாகவே இருக்கிறார். ஜமுனா சற்று முற்றிய வெண்டைக் காயாய் தெரிகிறார், நமது 'அன்புச் சகோதரர்களி'ல் வரும் மாலினி தேவி(?!) போல.
பாடலின் நடுவில் அக்பரும், மார்த்தாண்டனும் வயது முதிர்ந்தாலும் கம்பீரமாகத் தெரிகிறார்கள்.(பிருத்வியின் கம்பீரம் என்னைக் கவர்ந்த ஒன்று 'மொகலே ஆசம்' படத்தின் 'pyar kiya to darna kya ' பாடலின் உச்சத்தில் மதுபாலாவைப் பார்த்து கன்னக் கதுப்புகள் துடிக்க, பார்வையை எரிமலையாக்கி கொதிப்பாரே..வாவ்! இவரும், நடிகர் திலகமும் இணைந்து ஒரு படம் செய்திருக்கலாமே என்ற ஏக்கம் என்னுள் எப்போதுமே உண்டு.)
இயற்கை காட்சிகள் கண்களுக்கு ரம்மியம்.
எனக்கு இந்தப் பாடலைப் பார்த்துவிட்டு அப்படியே நடிகர் திலகம், வாணிஸ்ரீ தூள் பரத்தும் இதே சுசீலாம்மாவின் குரலில் ஒலிக்கும் 'பால் போலவே...நாளை இந்த வேலை பார்த்து ஓடி வா நிலா' ஞாபகம் வந்து 'உயர்ந்த மனிதனை'ப் பார்க்க தலைவர் போல்டருக்கு வேறு ஓடி விட்டேன். சிறந்த பின்னணிப் பாடகிக்கான (1969) தேசிய விருதைப் பெற்றுத் தந்த பாடலாயிற்றே
அற்புதமான பாடலை சுகமாக அனுபவிக்கத் தந்தற்கு நன்ற ராஜேஷ் சார்.
இது போல இன்னும் வேண்டும் நிறைய.