துள்ளி துள்ளி நீ பாடம்மா சீதையம்மா ( ஆஹா )
நீ கண்ணீர் விட்டல் சின்ன மனம் தாங்காதம்மா
https://youtu.be/9tLYhiSVLv0
Printable View
துள்ளி துள்ளி நீ பாடம்மா சீதையம்மா ( ஆஹா )
நீ கண்ணீர் விட்டல் சின்ன மனம் தாங்காதம்மா
https://youtu.be/9tLYhiSVLv0
'உள்ளத்தில் குழந்தைகளடி'
'குமரி வடிவம் குழந்தை உள்ளம் ரெண்டும் ஒன்றான மாயம் நீயோ
தலைவன் மடியில் மகளின் வடிவில் தூங்கும் சேயோ'
மார்கண்டேயன் மடியில் மலங்க மலங்க கண்களை உருட்டி விழித்து, குழந்தையாய் சிவாவின் கட்டைவிரலை பிடித்து கடித்து சரிதா செய்த நடிப்பு அக்னி சாகசம்.
சிவா கொடுத்து வைத்தவர். அந்தக் காலக்கட்டத்தில் எல்லாப் படங்களிலும் பெண்களிடம் மாட்டித் திண்டாடுவார். அதுவும் ரெண்டு ரெண்டு.:)
https://youtu.be/AF-ZL8snxws
'உள்ளத்தில் குழந்தைகளடி'
'கேனையிலும் கேனையின்னு கேலியும் செஞ்சாங்க' என்று இந்த அப்பாவி மூர்த்தி (இந்த ஒரு படத்தோட ஆள் காலின்னு நினைக்கிறேன்) ஊரார் கேலியை உதறித் தள்ளி தேவயானியை சந்தோஷப்படுத்துகிறார் ராஜா குரலில்
'உன் பக்கத்துல ஒரு பூவ வச்சா அந்த பூவும் மயங்கிப் போகும்'
தேவயானிக்கு பிரில் வைத்த ஜாக்கெட் என்றால் ரொம்பப் பிடிக்குமோ? நிறையப் படங்களில் இப்படி வருவார்.
https://youtu.be/h3SPQ1IrMzM
'உள்ளத்தில் குழந்தைகளடி'
இந்தப் பாடல் கொஞ்சம் என்னைப் புரட்டிப் போட்ட பாடல் என்று சொல்லலாம். எப்போது கேட்டாலும் மனம் வலிக்கும். அப்பாவி லூஸ் சர்க்கரையின் (வினீத்) மேல் அருணாவின் தங்கை (நந்தினி) தாமரைக்கு காதல். அதனால் வேதனை. ஜானகியின் பின்னணியில் ஒலிக்கும் சாகாவரம் பெற்ற பாடல். ஒவ்வொருமுறையும் கேட்கையில் உடலில் ஒரு சிலிர்ப்பு உண்டாவது நிஜம்.
ஜானகி மிக அம்சமாகப் பாடிய ஒருசிலப் பாடல்களில் முதலிடத்திற்கு இப்பாடல் போட்டி போடும். ராஜாவின் மனம் உருக்கும் இசை...
அதுவும்,
'கனவே எனத் தெரிந்தே அதை நினைக்கும் மனமே' வரிகளில்:clap: பாடல் ஆசிரியரும், இசைஞானியும், ஜானகியும் நீயா நானா என்று போட்டி போடுவார்கள். அவ்வளவு அம்சம் அந்த வரி.
பரதன் என்ற கலைஞனின் அற்புதமான பாடல் படமாக்கல், இயற்கை சூழல், நந்தினியின் (முன்னால் வைதேகி என்று பெயர் வைத்திருந்தார்) அளவான பரிதாபப்படவைக்கும் எக்ஸ்பிரஷன்ஸ் என்று ஏகத்துக்கு என் நெஞ்சை அள்ளிய பாடல்.
http://i1.ytimg.com/vi/r0YLuo_zVGg/mqdefault.jpghttps://i.ytimg.com/vi/5Wa135tLQCQ/hqdefault.jpg
பிரதாப் போத்தன், சுரேகா நடித்த 'தகரா' மல்லு தமிழில் 'ஆவாரம்பூ' ஆனது. இரண்டுமே கவர்ச்சியை அள்ளித் தெளித்தவை. தமிழைவிட மலையாளத்தில் சுரேகா கூடுதல்.
ஆனால் பாடல்களில், இசையில் ராஜா பிளந்து கட்டினார். ஒவ்வொரு பாடலும் பெரும் வரவேற்பை பெற்றன.
https://youtu.be/YtTGh8WfgSc
'உள்ளத்தில் குழந்தைகளடி'
'பெண்ணின் பெருமை'யை நிலை நாட்ட நடிகையர் திலகம் தோற்றத்தில் வாலிபனாயும், குணத்தில் குழந்தையாகவும் இருக்கும் அரைக்கிறுக்கு கணவன் ஜெமினியை மணந்து, அவன் குணம் தெரிந்து, வெளியே சொல்ல முடியாமல் மனம் புழுங்கி தனக்குத்தானே முதலிரவில் பாடும் பாடல். நடிகையர் திலகம் அந்தப் பட்டத்திற்கு பெருமை சேர்ப்பதை கண் கூடாக இப்பாடலில் காணலாம். முகம் சோக ஜாலங்கள் நிகழ்த்துகிறது. ஜெமினியின் அப்பாவி நடிப்பும் ஜோர்.
'மாசில்லாத எனது வாழ்வும் மலரக் கூடாதோ' அருமையோ அருமை.
'இதய வானில் ஒளியை வீசும் இன்ப நிலாவே'
https://youtu.be/MVnWTFyJAoE
'உள்ளத்தில் குழந்தைகளடி'
குணாவைப் பற்றி முழுதும் தெரிந்த புரிந்த வரல்ஷ்மியின் ஆறுதல். 'குணா'வைப் பற்றிதான் நம் எல்லோருக்கும் தெரியுமே! அதனால் அதிக விளக்கம் தேவையில்லை.
உன்னை நானறிவேன்
என்னையன்றி யாரறிவார்
கண்ணில் நீர் வழிந்தால்
என்னையன்றி யார் துடைப்பார்?
https://youtu.be/AbfqLijGqeI
இதே பாடல் ரேகாவிற்கும் உண்டு.
https://youtu.be/DHyAMW9Lr-Q
ராகவேந்தர்,
எனக்கு தெரிந்த ஒரே வக்கிரம் ,இந்த பாடல் மட்டுமே.
வக்ர துண்ட மகாகாய
https://www.youtube.com/watch?v=EiLkqPOTWP8
நான் சந்திரசேகர் ஆள் என்று நினைக்கிறீர்கள்.
எனக்கு சந்திரசேகரை பிடிக்கும்.உங்களையும் பிடிக்கும். அவர் பெயரை சொல்லி வயிறு வளர்க்கும் வீணர்களை மட்டுமே பிடிக்காது.
உங்களின் ஊமை பெண் என்னை அசைத்து விட்டாள் .தொடருங்கள்.
From avan(1953), Tamil dubbed version of aah(hindi)
aahaa naan indru arindhu konden.
http://www.youtube.com/watch?v=TdKLZCowt70
From the Hindi original
jo mein jaanti unkeliye....
http://www.youtube.com/watch?v=al3gdqrc7N4
வாசு சார்
மதுர கானம் திரியில் தங்களுடைய உள்ளத்தில் குழந்தையடி குறுந்தொடர் தங்களுடைய அபார உழைப்பையும் அதற்கான கருவைத் தேர்ந்தெடுக்கும் தங்களுடைய தனித்திறமையினையும் மிகவும் ரசித்துப் பாராட்டி எழுத வேண்டும் என எத்தனித்தேன். முத்தாய்ப்பாக தலைவரின் ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ பாடலும் இடம் பெறும் என எதிர்பார்த்தேன். ஏமாற்றாதது மட்டுமல்ல, இதை விட சிறப்பாக இப்பாடலைப் பற்றி யாரும் எழுதி விட முடியாது என்கிற அளவிற்கு எழுதி இம்மய்யத்தில் தங்களுடைய உயர்ந்த இடத்தை அப்படியே ஸ்திரப்படுத்திக்கொண்டு விட்டீர்கள்.
அது மட்டுமல்ல
இந்த வரிகளின் மூலம் நம் ஒவ்வொருவருடைய உள்ளத்தையும் குளிரச் செய்து விட்டீர்கள்.Quote:
அவர் ஆயிரத்தில் ஒருவரல்ல...
லட்சத்தில் ஒருவரல்ல...
கோடியில் ஒருவரல்ல....
அந்த ஒருவர் ஒருவர்தான். வேறு எவரும், எதுவும் அவருக்கு இணை, ஈடு இல்லை.
உண்மையிலேயே உள்ளத்தில் குழந்தையான நாயகனுக்கு, இப்பாடலின் மூலம் இதை விட சிறந்த அஞ்சலி செய்ய முடியுமா என்பது ஐயமே.
தங்களுக்கு உளமார்ந்த பாராட்டுக்கள்.
இளமை ஜெயமாலினியும், 'அழகே உன்னை ஆராதிக்கிறேன்' புகழ் நடிகரும், நடன மாஸ்டருமான சின்னி பிரகாஷும் (நினைத்துப் பார்க்கிறேன்... என் நெஞ்சம் இனிக்கின்றது...) பாடும் ஒரு ஜாலியான பாடல்.
பாடலின் ஆரம்ப வரிகளாக வரும் அந்த புரியாத பாஷை வரிகளும் அமர்க்களம்.
ஹோய் லேலே செண்டே கியா
ஹோய் லேலே லூகா கோரா
சொகு தின மொக காரி
கொலேலே
கொலேலே
கொலேலே
ஹோய் மாமா ஒரு வாரமா
ஹாய் இருந்தேனே உன் மோகமா
மெதுவா சிரிச்சேனே எதுக்கு
தெரியும் உனக்கு
ஜானகியின் டிரேட் மார்க் பாடல். உடன் பாலாவும். இந்த மாதிரிப் பாடல்களுக்கு ராஜாவை விட்டால் யார்? அத்தனை இசைக்கருவிகளும் நர்த்தனம் புரியும். கிடார், டோலக், புல்லாங்குழல், தபலா, பாங்கோஸ், மிருதங்கம் உள்ளிட்ட அனைத்து இசைக்கருவிகளின் பங்கையும் மிகச் சரியாகக் கலந்து கொடுத்திருப்பார் இப்பாடலில் ராஜா. இடையிசையை அனுபவித்துக் கேளுங்கள். வரிகள் சற்று எளிமையாக இருந்தாலும் மியூசிக்கில் அதகளம்தான். பாடலினூடே வரும் கோரஸும் மனம் மயங்க வைக்கும்.
https://youtu.be/X2csdZ9ZuGA
ஆந்திரப் பெண்மணியாக ஆச்சி எப்படி அசத்துகிறார்? தெலுகும், தமிழும் கலந்து பாடி சொந்தக் குரலில் சொக்க வைக்கிறார். அவருக்கு சொல்லித் தரணுமா? அடி தூள். கூட நீலுவும், சோவும். 'துக்ளக்'கை வெறுப்பேற்ற நீலு விடம் சரசம். 'சோ'வை 'வாரு வாரு' என்று வாரி நக்கல். நீலுவின் அப்பாவி வழிசலைப் பார்த்து புரிந்தவர்கள் உள்ளுக்குள் 'க்ளுக்'குவார்கள்.
கோழி முட்டைக் கண்ணாரு, அரவாடு என்று 'சோ'வை அநியாத்துக்கு கிண்டல் அடிப்பார் ஆச்சி. நீலுவுடன் சேர்ந்து பார்க்க ஆசைப்படும் தெலுங்குப் படத்தின் பெயரை பாருங்கள். 'சீக்ரெட் ஏஜென்ட் கோடாச்சாரி' யாம்.:)
http://chaibisket.com/wp-content/upl...ChaiBisket.jpg
(Gudachari 116' என்று கிருஷ்ணா, ஜெயலலிதா நடித்து 1967-ல் ஒரு படம் வந்தது. என் பிரியமான கீதாஞ்சலியும் உண்டு அதான் பக்கெட். ஹி..ஹி.):) இந்தப் படம் பார்க்கத்தான் ஆச்சி ஆசைப்படுகிறார் போல
அதுவும் நாயுடு ஹோட்டலில் டபுள் ரூமாம். கூட துணைக்கு அரைக்கிறுக்கு சோவையும் கூப்பிட்டுகிட்டு போகணுமாம். எப்படி இருக்கு கதை பாருங்கள்!
ஏமன்டி நீங்க எப்புடு ஒச்சாரு
எம் மேலே ஆசை எப்படி வச்சாரு
மன்ச்சீ நா மனசு
இந்த மாப்பிள்ளை புதுசு
மன்ச்சீ நா மனசு
இந்த மாப்பிளை புதுசு
எப்பன்டி செப்பன்டி நம்ம கல்யாணம்
ஏமன்டி நீங்க எப்புடு ஒச்சாரு
எம் மேலே ஆச எப்படி வச்சாரு
அம்மாயி ஊரு இந்தப் பக்கம் நெல்லூரு
அப்பாயி மீரு அந்தப் பக்கம் குண்டூரு
குண்டூர் மாமா நெல்லூர் மாமி
குண்டூர் மாமா நெல்லூர் மாமி
சம்பந்தி ஆனாரு
கொஞ்சுற போதும் கோங்குரா தின்னு
குஸ்திக்கு நின்னாரு
மன்ச்சீ நா மனசு
இந்த மாப்பிள்ளை புதுசு
எப்பன்டி செப்பன்டி நம்ம கல்யாணம்
அமிஞ்சிக்கரையில் தெலுங்கு படிச்சி
அரைகுறையாப் போச்சு
அரவாடோடே காதல் செஞ்சேன்
ஆபத்தாப் போச்சு
அமிஞ்சிக்கரையில் தெலுங்கு படிச்சி
அரைகுறையாப் போச்சு
இந்த அரவாடோடே காதல் செஞ்சேன்
ஆபத்தாப் போச்சு
கொஞ்சிப் பேச ஒச்சாரு
கோழி முட்ட கண்ணாரு
கொஞ்சிப் பேச ஒச்சாரு
கோழி முட்ட கண்ணாரு
குத்துக்கால தரையில நட்டு
குஷியா நின்னாரு
மன்ச்சீ நா மனசு
இந்த மாப்பிள்ளை புதுசு
எப்பன்டி செப்பன்டி நம்ம கல்யாணம்
சூலூர்ப்பேட்டைக்கு சாயங்காலம் ஹனிமூன் போத்தாமா
'சீக்ரெட் ஏஜென்ட் கோடாச்சாரி' சினிமா சூஸ்தாமா
நாயுடு ஹோட்டலில் டபுள் ரூம் எடுத்து நாளைக்கு ஒஸ்தாமா
நாயுடு ஹோட்டலில் டபுள் ரூம் எடுத்து நாளைக்கு ஒஸ்தாமா
நமக்குத் துணையா அரவாடயும் கூட்டிட்டுப் போவோமா
மன்ச்சீ நா மனசு
இந்த மாப்பிள்ளை புதுசு
எப்பன்டி செப்பன்டி நம்ம கல்யாணம்
ஏமன்டி நீங்க எப்புடு ஒச்சாரு
அட எம் மேலே ஆச எப்படி வச்சாரு
'அருணோதயம்' படத்தில் கொஞ்சம் மறந்து போன பாடல். பார்த்து சிரியுங்கள்.
https://youtu.be/VELGIj82CkY
ஹோய் மாமா ஒரு வாரமா
ஹாய் இருந்தேனே உன் மோகமா// ஆமா வாசு ஏன் ஒரு வாரமா காணோமேன்னு நினச்சா பாட் போட்டுட்டீங்க..( நான் கணக்குல வீக்) பாட் பொறுமையா ஃபுல்லா கேட்டேனாக்கும்.. ஆரம்ப கால ஜெயமாலினி முழுவுடையில் லுக்கிங்க் குட்.. ( எல்லாமே மூடி இருந்தால் தான் அழகு என்று ஆன்றோர்கள் சொல்வார்கள்) அதுக்கப்புறம் சட்டையைக் கழட்டினாலும் கண்கள் உறுத்தவில்லை..இயல்பான அழகாய் இருந்தது என அந்தக்காலத்தில் என் சித்தப்பா சொல்லியிருந்தது நினைவில்! ஆமா என்னவாக்கும் படம் பேர் போடவேயில்லையே..
என் பிரியமான கீதாஞ்சலியு// ம்ம் கிருஷ்ண குமாரிலருந்து கீதாஞ்சலியா கு வில் யார்..குமாரியா ((விஜயவை வெட்டி விட்டு) :) பட் அருணோதயம் ரிலீஸின் போது கண் சின் பையன். எனில் ஈ பாட் நினைவில் இல்லை..ரீரன்னில் பார்த்தபோது கூட கோல்ட் ஃப்ளேக் ப்ளெய்ன் பெட்ட்ர் எனப் பட்டதால் வெளியே சென்றுவிட்ட நினைவு..(இப்பக்கூட ஈ பாட் பார்க்கத்தோணலை ஸாரி) நன்றி ஃபார் த ரைட் அப்ஸ்..
உ கு வில் தேவயானி பஃப் கை பாட் முதல் தடவை கேட்கிறேன்.. ம் அந்த ஆடவரை முன் பார்த்த நினைவில்லை
பிரதாப் போத்தன், சுரேகா நடித்த 'தகரா' மல்லு தமிழில் 'ஆவாரம்பூ' ஆனது. இரண்டுமே கவர்ச்சியை அள்ளித் தெளித்தவை. தமிழைவிட மலையாளத்தில் சுரேகா கூடுதல்.
ஆனால் பாடல்களில், இசையில் ராஜா பிளந்து கட்டினார். ஒவ்வொரு பாடலும் பெரும் வரவேற்பை பெற்றன. // நதியோரம் கரையோரம் பாட் டும் முதலில் இப்போ தான் கேக்கறேன்.. நைஸ்.. அதில் வேறொருபாட் உண்டோன்னோ. பட் நந்தினிக்கும் இதன் பின்னர் வாய்ப்பெதுவுமில்லை.. தகரா போஸ்டர் பார்த்த நினைவு..இந்த சுரேகா ஈ நாடு தானே..
ஜெய், நிர்மலா ஒன்று சேர்ந்து அண்ணி பிரமிளாவை வெறுப்பேற்றும் பாடல் ஒன்று உண்டு. இதில் நம் தொடர் நாயகர் பாடுவார். .
ஈஸ்வரி ரகளைகள் டாப். பாலா கம்பீரக் குழைவில் அட்வைஸ் அளிப்பார். கடற்கரை காட்சிகள் கண்ணுக்கு இதம். ஆனால் பிரமிளா வதம். ஜெய் சுறுசுறு. நிர்மலா தாவணி கடலைவிட குளிர்ச்சி என்று சொல்லாவிடில் சின்னா வைவார்.
பிரமாதமான பாடல் ஒன்றுமில்லைதான். ஆனால் கணக்கில் சேருமே!// ஓய் பிங்கி பிங்க்கி பாங்க்கி என ரோஸ்கலர்ல எழுதினா சின்னா எப்படிப் படிக்கும்... இந்த பாட் ரொம்ப சுமார் தான் அப்புறமா கேட்கலாம்னு இருந்தேனா..இப்பதான் பார்த்தேன்.. தாவணி போட்டிருந்தாலும் லாங்க் ஷாட்டில் போட்டது தப்பு என ஆன்றோர்கள் சொல்வார்கள்.. :)
ஸ்ரீதேவி தான் என நினைக்கிறேன் பிழிபய் பிழிய அழுகை.. சின் வயதில் பார்த்தது தான் பின் ரீரன்னெல்லாம் பார்க்கவில்லை..
ஹப்புறம் உ.கு ல் நடுவில் நைஸாக ஏதோ சாமி ஸ்லோகம் கேட்டதே..என்ன ஒரு ஐரனி.. :)
//இந்த சுரேகா ஈ நாடு தானே//
mm.
https://i.ytimg.com/vi/miOHdaVpiDE/hqdefault.jpg
CONGRATULATION C.K SIR
SUPERB
http://i67.tinypic.com/15wxmhz.jpg
POSTINGS.
பிடித்த பாடல்களை பகிர்கிறேன். உங்களைப் போல் பத்திபத்தியாய் எனக்கு எழுத தெரியாதே. நினைவில் வைத்திருந்ததற்கு நன்றி வாசு அவர்களே!
நீ இல்லாத இடமே இல்லை. அல்லாஹ். சோ ராமசாமியின் மிகச் சிறந்த படைப்புகளில் ஒன்று "முகம்மது பின் துக்ளக்" .
மனம் வெளுக்க எதுதானுண்டு. நபிகள் வேதம் உண்டு.
https://www.youtube.com/watch?v=I0M6mgDA3nI
பிடித்த பாடல்களை பகிர்கிறேன். உங்களைப் போல் பத்திபத்தியாய் எனக்கு எழுத தெரியாதே. நினைவில் வைத்திருந்ததற்கு நன்றி வாசு அவர்களே!// இப்படில்லாம் சொன்னா விட்டுவிடமாட்டோம் காட்டுப் பூச்சி.. ஒரு குட்டிப்பாராவாவது வேணும் நும்.. இப்படி ச் சொன்ன சி.செ வயணமா கட்டம் போட்டு வண்ணமா அழகா எழுதிண்டு இருக்கார்.. திடுதிப்னு நான் ஜெமினியை சந்தித்த கதைன்னுஎழுதினார் (இப்போ இன்னொண்ணும் எழுதுவார்..எழுதுவீங்க தானே சி.செ) ஸோ நீங்களும் எழுதுங்க..
நன்றி எஸ்வி சார்....நானே கவனிக்கவில்லை.. கடைசி நூறு பாட்டுக்குப் பாட்டில் போய்விட்டது என நினைக்கிறேன்..
மன்மதன் வந்தான் தேரோடு இங்கே
காதலர் கண்ணும் நெஞ்சும் படக் படக் பட்பட்...
https://youtu.be/lXHee4fDiv8
மாம்பழத் தோட்டம் இருந்தாலும் என்னால் பார்க்க மட்டும் தான் முடியும்.. சாப்பிட முடியாது .. ஷூகர் கண்ட்ரோல் :sad:
https://youtu.be/MWzXg4PNYzQ
இந்தப் பாட் வாசு போட்டாச் சா என்ன..
ரவி-பிரமிளா நடிப்பில் வள்ளி தெய்வயானை என்றொரு படம்.1972 அல்லது 1973 வாக்கில்.பிரமிளா இரட்டை வேடம். இந்த படத்தில் டி.ஆர்.பாப்பா போல ரேடியோ இசையில் பிரபலம் ஆன தியாகராஜன் என்பவர் இசை. பூத்திருந்து காத்திருந்தேன் சந்தோசம் -சோகம் என்று இரண்டு முறை. (சோகம் நன்றாக இருக்கும்)
இதில் ஒரு surprise package தனசேகரன் -மல்லிகா என்பார்கள் பாடிய (ஷோபா-சுரேந்தர் போல குரல் சாயல்.பின்னால் ஷோபா-சுரேந்தர் பிரபலம் ஆனது மாலை இளம் மனதில் ஆசைதனை தூண்டியது)
மலர்களில் ராஜா. இதற்கு வாயசைத்தது படத்தின் நாயக-நாயகி அல்ல.
சசி குமார் -பானுமதி . செம பிரபலம் இந்த பாடல்.
https://www.youtube.com/watch?v=qQTPVO8N3Bs
Congrats Chinnu.Keep it up.
Vasu, aayiraththil oruththiyamaa nee -Word by word ,we analysed in person. But in print,again it moved me a lot.Thanks.
Chinnakannan Sir
Congratulations for 9000 super postings.
மையம் திரியில் 9000 பதிவுகளைக் கடந்தமைக்கு சின்னக்கண்ணன் அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்.
சிக்கா.... தடைகள் எதிலும் சிக்காத சிக்கா....9000 பதிவுகள் கண்ட பெருமைக்குரிய பெருந்தகை சிக்கா..
வாழ்க வளமுடன் !!!
கோபால் ஜி..
மலர்களின் ராஜா ஒரு சூப்பர் டூப்பர் ஹிட்..
அதன் பின் சமர்ப்பணம் படத்தில் அதே ஜோடி பாடிய பாடல் ஓரளவு பிரபலம்.
தந்தைக்கு ஒரு பிறவி தாயாருக்கோ இரு பிறவி
https://www.youtube.com/watch?v=bf6rubjPbMk
வாசுஜி..
ஹி ஹி.. நல்ல வேளை.. ஈ நாடு பிரபல போஸ்டர் படத்தைப் போட்டுடுவீங்களோன்னு நெனச்சுட்டேன் !!
Congrats SiKa for crossing your workaholic 9000!
with Love from GG's Treasure Pleasure!
May 1 இன்று உழைப்பாளர் பெருமை நாள் !
https://www.youtube.com/watch?v=yfx1kel88PE
https://www.youtube.com/watch?v=7rc90ZMn-MA
SiKa! Congratulations for your threading achievements spreading over 9K!!
For your hard work with devotion and dedication ... thanks giving from NT (Nermai+Thiramai) thread!!!
May 1 உழைப்போர் மேன்மை தினம் இன்று! உழைப்பால் உயர்ந்தவர்தம் நினைவுகளைப் போற்றுவோம் !
உழைப்பின் வாரா உறுதிகள் உளவோ ?
உழைப்பின் பலன் மட்டுமே இனிக்கும் !
https://www.youtube.com/watch?v=YtejNDSHCKkQuote:
உழைப்பும் நேரம் தவறாமை மற்றும் நேர்மை என்னும் நடிகர்திலக உதாரண குணங்களைக் கடைப்பிடிக்கும் போதுதான் மேன்மை பெறும் !
https://www.youtube.com/watch?v=geYyN5_QYKg
https://www.youtube.com/watch?v=rV8yRtU8jmo
chinnakkaNNan: You took 10 years for 9000 posts. You are in the last stretch to reach 10000. You better hurry up and do it in one month ! :lol: Congratulations ! :)
https://lh3.googleusercontent.com/Vw...8SysmXCTkRAFL6
சின்னா!
வாழ்த்துக்கள்....வாழ்த்துக்கள்.
'தமிழுக்கு அமுதென்று பேர்
அந்த அமுதுக்கு சின்னக் கண்ணன் என்று பேர்'
ம்ம்.ம்ம்ம்..9000 பெருகட்டும்.
'மேதினம் உழைப்பவர் சீதனம்'
http://www.comments20.com/wp-content...raphics-37.gif
அனைவர்க்கும் தொழிலாளர் தின நல்வாழ்த்துக்கள்.
அதை முன்னிட்டு அற்புதமான இந்த பாட்டாளி பாடல்.
'வாழ்க வாழ்க பாட்டாளி
தாழ்வில்லாத வழியை இங்கே
அமைத்திட வாரும் கூட்டாளி'
'வாழ்க வாழ்க பாட்டாளியே
வாழ்க வாழ்க பாட்டாளியே'
1957- ல் வெளிவந்து பாடல்களாலேயே மனதில் நீங்கா இடம் பெற்றுவிட்ட 'Naya Daur' இந்திப் படம் தமிழில் 'பாட்டாளியின் சபதம்' என்று 'டப்' ஆனது. பாடல்கள் ஒவ்வொன்றும் தேன் அமுது. திலீப், வைஜயந்தி ஜோடி இந்தி ரசிகர் மனதில் நங்கூரமாய் ஆழப் பதிந்தது.
'Saathi Haath Badhana' என்ற தொழிலார்களின் புகழ் பரப்பும் பாடல் இப்படத்தில் மிகப் பிரசித்தம். அந்தப் பாடலைத்தான் தமிழில்
'வாழ்க வாழ்க பாட்டாளி'
யாகக் காணப் போகிறீர்கள். அப்படியே இந்தி ஒரிஜினல் வடிவத்தையும்.
ஓ.பி.நய்யரின் விஸ்வரூப இசை இந்தப் படத்தின் பாடல்களை மறக்க முடியாமல் செய்து விட்டது. படப்பிடிப்பும் அபாரம்.
இந்தியில் ஆஷாவும், ரபியும் பின்னியெடுக்க அதையே தமிழில் டி.எம்.எஸ்ஸும், சுசீலாவும் பின்பற்றியிருப்பார்கள். இந்திப் பாடல்களை தமிழில் மொழி பெயர்ப்பது சற்று கடினம் என்பதால் தமிழ்ப் பாடல் இந்தி போல் வராது. அது தவறில்லை. இந்தப் பாடலும் அப்படித்தான். ஆனால் சுசீலா குரலில் வளம் பெறுவதை மறுக்க முடியாது. (முக்கியமாக 'பாட்டாளி' என்ற வார்த்தையை 'பட்டாளி' என்று சுசீலா சுருக்கி சுகம் தருவதை உணராமல் விட்டு விடாதீர்கள்)
அதே போல பாடலின் கோரஸ் குரல் ஜாலங்களை விட்டு விடுவதற்கில்லை. விட்டுவிட்டால் பாவியாகி விடுவேன். மீதி விளக்கங்களை ராஜ்ராஜ் சார் தருவார்.
வாழ்க தொழிலாளர் வர்க்கம்.
'வாழ்க வாழ்க பாட்டாளி'
https://youtu.be/INxSA-bXUyU
'Saathi Haath Badhana'
https://youtu.be/pWgTQa9Cm0o