மிக்க மகிழ்ச்சி வாசு சார்
கார்த்திக் சார் உடன் சேர்ந்து நானும் உங்கள் அனுபவங்களுக்கு காத்து கொண்டு இருக்கிறேன்
Printable View
1962- சினி டைரி பதிவினை பாராட்டிய எல்லா நண்பர்களுக்கும் எனது நன்றி .
இன்றைய ஸ்பெஷல் பாடல்கள் -எல்லாமே சூப்பர் .
டியர் கார்த்திக் சார்,
பதிவுகளுக்கான தங்களது மனம் திறந்த பாராட்டுதல்களுக்கு நன்றி!
நமக்குள் இன்னொரு ஒற்றுமை. நானும் 'குலேபகாவலி' திரைப்படத்தை ஒரு டூரிங் டாக்கீஸில்தான் முதன் முதலாகப் பார்த்தேன். பின் கடலூர் துறைமுகம் 'கமர்' திரையரங்கில் ஓரிருமுறை பார்த்தேன்.
அப்போதே இன்றைய ஸ்பெஷலாக வந்த 'நாயகமே' பாடல் நங்கூரமாக என் நெஞ்சில் பாய்ந்து விட்டது. மேலும் முஸ்லீம்கள் அதிகம் வசிக்கும் பகுதி கடலூர் துறைமுகம். மசூதிகளும் நிறைய. கடலூரிலிருந்து கடற்கரை வழியாகப் பயணித்தோமானால் புதுச்சத்திரம், ஆலப்பாக்கம், முட்லூர், பரங்கிப்பேட்டை என்று பெரும்பாலும் முஸ்லீம் இன மக்களே அதிகம் இருப்பார்கள். தானுண்டு தன் வேலையுண்டு என்று அமைதியாக இருக்கும் மக்கள். மீன்பிடி தொழிலில் அதிக நாட்டம். மசூதிகளில் அதிகாலையில் ஒலிக்கும் முஸ்லீம் பாடல்கள். பெரும்பாலும் நாகூர் ஹனிபா அவர்கள்தாம் பாடியிருப்பார்.
'அல்லாவைத் தொழுதிடு முஸ்லீம் பெண்ணே'
'எங்கும் நிறைந்தவனே அல்லா அல்லா'
'பாத்திமா வாழ்ந்த முறை உனக்குத் தெரியுமா' (என்னுடைய பேவரேட்)
'அருள் மழை பொழிவாய் ரஹ்மானே'
'தூதர் முஹம்மது வாழும் மதீனா'
'இறைவனிடம் கையேந்துங்கள் அவன் இல்லையென்று சொல்லுவதில்லை'
'உலக மக்கள் யாவருக்கும் உரிமையானவர்'
மறக்கவே முடியாத பாடல்கள்.
எதையோ தொடக்கி எங்கோ முடிக்கிறேன். ஆனால் நினைவுகள் தேன்தானே.
http://www.youtube.com/watch?feature...&v=Dul9YWOWl5g
கார்த்திக் சார்,
நெல்லை பூர்ணகலா திரையரங்கில் உத்தமன் திரைப்படம்
நடைபெற்றுக் கொண்டிருந்த பொழுது ஒரு மாலைக்காட்சிக்கிடையே
நடிகர் திலகம் வந்து பேசி விட்டுச் சென்றார்.அந்தக் காட்சி எனது
பசுமையான நினைவில் உள்ளது.ஏனெனில் நடிகர் திலகத்தை மிக
அருகில் காண வாய்ப்பு அன்றுதான் எனக்கு கிடைத்தது.
டியர் வாசு சார்,
பலே....., நமது 'மனதை மயக்கும் மதுரகானங்கள்' திரியில் ரமலான் ஸ்பெஷலாக அருளிசைப்பாடகர் இசை முரசு நாகூர் ஹனீபா அவர்களின் வீடியோவும் இடம்பெற்றுவிட்டதே.
நீங்கள் பட்டியலிட்டிருக்கும் அவரது பாடல்கள் அனைத்துமே மிக அருமையானவை. அதிலும் 'இறைவனிடம் கையேந்துங்கள்' என்னுடைய ஆல்டைம் பேவரிட்....
கிருஷ்ணா சார்.
அச்சமில்லாமல் புதிர் போட்ட அகல்யா இவர்தான்.
http://i1087.photobucket.com/albums/...0-2/xzcvbn.jpg
கார்த்திக் சார்,
உங்களுக்கு பிடித்த அருளிசைப் பாடகரின் 'இறைவனிடம் கையேந்துங்கள்'
இதோ
https://www.youtube.com/watch?v=gzMOsaT3Xkw&feature=player_detailpage
original audio
http://www.youtube.com/watch?v=o4f4Jh9tLAY&feature=player_detailpage
வாசு சார்
காலை 6.15 முதல் 6.45 வரை வானொலியில் பக்திமலர் என்று ஒரு நிகழ்ச்சி .அதற்கு பிறகு செய்திகள்
பக்தி மலர் நிகழ்ச்சியில் அடிகடி கேட்கும் பாடல்கள்
'ஈச்ச மரத்து இன்ப சோலையில் நபி '
'நபிகளிடம் மறைந்து இருப்பது என்ன அன்பு அமைதி ஆக்கம் ''
'தமிழகத்து தர்க்ஹாகளை பார்த்து வருவோம் தூய வழி காட்ட சொல்லி கேட்டு வருவோம் '
'அல்லவை நாம் தொழுதால் துயர் இல்லாமல் போய் விடுமே '
அதே போல் கிறிஸ்துவ கீதங்கள்
'அய்யய்ய நான் வந்தேன் தேவ ஆட்டு குட்டி வந்தேன் தேவ ஆட்டு குட்டி வந்தேன் '
'அன்னையே ஆரோக்கிய அன்னையே '
எம்மதமும் சம்மதம் என்ற உங்கள் கருத்துக்கு நன்றி
thanks vasu sir
http://3.bp.blogspot.com/-HtOtG6wt7G...+MP3+Songs.jpg
படம் : அகல் விளக்கு
பாடியவர்கள் : S.P.ஷைலஜா & கே.ஜே.ஜேசுதாஸ்
இசை : இளையராஜா
வரிகள் : கங்கைஅமரன்
ஏதோ நினைவுகள் கனவுகள் மனதிலே மலருதே
காவேரி ஊற்றாகவே காற்றோடு காற்றாகவே
தினம் காண்பது தான் ஏனோ....
ஏதோ நினைவுகள்...
மார்பினில் நானும் மாறாமல் சேரும்
காலம் தான் வேண்டும்..ம..ம்ம்ம்
வான்வெளி எங்கும் என் காதல் கீதம்
பாடும் நாள் வேண்டும்..ம..ம்ம்ம்
தேவைகள் எல்லாம் தீராத நேரம்
தேவன் நீ வேண்டும்..ம்ம் தேடும் நாள் வேண்டும்..ம்ம்
ஏதோ நினைவுகள்..
நாடிய சொந்தம் நாம் காணும் பந்தம்
இன்பம் பேரின்பம்..ம..ம்ம்
நாளொரு வண்ணம் நாம் காணும் எண்ணம்
ஆஹா ஆனந்தம்..ம..ம்ம்
காற்றினில் செல்லும் என் காதல் எண்ணம்
எங்கும் எந்நாளும்..ம்ம் ஏக்கம் உள்ளாடும்..ம்ம்
ஏதோ நினைவுகள்..
http://www.youtube.com/watch?v=rD2U89lCOeo
அழகான கானம். ஷைலஜாவின் கலக்கல்களில் ஒன்று, ஜென்ஸியை விடவும் 'கிறீச்' கம்மிதான். நன்றி கிருஷ்ணரே!
வினோத் சார்
அபூர்வ ஆவணங்களைத் தரவேற்றி நம் நினைவுகளை அந்நாளைக்கே அழைத்துச் செல்கிறீர்கள்.
தங்கள் பணியை மிகவும் பாராட்டுகிறேன். தொடருங்கள்.
அன்புடன்
வாசு சார்
நடிகர் திலகத்துடனான சந்திப்பை விட வாழ்க்கையில் நமக்கு சிறந்த அனுபவம் வேறேது வேண்டும். ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறோம்.
நாகூர் ஹனீஃபாவின் பாடல்கள் எல்லாமே எல்லோருக்குமே பிடிக்கும். சில பாடல்கள் 40, 50 ஆண்டுகளாக குழந்தைப் பருவமுதலே நம் நினைவில் தங்கி விடும்.
ஹனீஃபாவின் பாடல்களில் எனக்கு இதுவும் மிகவும் பிடித்த பாடல்
அல்லாவை நாம் தொழுதால்... இதை கிருஷ்ணா கூட சொல்லியிருக்கிறார். கேட்போமே..
http://www.youtube.com/watch?v=rVHxLnz03yQ
இந்த ஆல்பத்திற்கு இசை மெல்லிசை மன்னர் டி.கே.ஆர் என நினைவு. கோபால் சார் உறுதி செய்ய வேண்டும்.
வாசு சார்
நாம் கடவுளின் தீர்ப்பு 1981 திரைப்படம் பற்றி அலசி விட்டோமோ
http://www.photofast.ca/files/products/1654.jpg
கோவர்தனம் இசையில்
விஜய் பாபு,ஸ்ரீகாந்த்,sangeetha நடித்து வந்தது
வாணி பாடகர் திலகம் குரல்களில்
'அன்பு தலைவன் காலடி சுவட்டில்
ஒன்று கலந்தால் என்ன தவறு
இன்ப முகத்தை நெஞ்சில் நிறுத்தி
எண்ணி மகிழ்ந்தால் என்ன தவறு '
வாணியின் குரலில்
'இன்று வரும் காற்றினிலே என்ன விஷேசம்
அது ஏந்தி வரும் வாசனையிலே என்ன விஷேசம்
இன்று வரும் காற்றினிலே என்ன விஷேசம்
அது ஏந்தி வரும் வாசனையிலே என்ன விஷேசம்
இளமை புதுமை தனிமை இனிமை'
http://www.inbaminge.com/t/k/Kadavulin%20Theerpu/
உள்ள(த்)தை அள்ளித்தா
நாகரீகம்... இதை வரையறுப்பது எப்படி... ஒவ்வொரு தலைமுறைக்கும் அதனுடைய அளவுகோல் வேறு படுகிறது. கருத்து வேறுபாடு உருவாகவும் சில சமயம் இல்லறத்திலேயே விரிசல் ஏற்படுவதற்கும் கூட இந்த நாகரீகம் ஒரு வகையில் காரணமாயிருக்கிறது. இதைப் பற்றி நடிகர் திலகத்தின் கருப்பு வெள்ளைக் காவியம் பட்டிக்காடா பட்டணமா மிகச் சிறப்பாக எடுத்துரைத்துள்ளது.
இந்த நாகரீகத்தின் அடிப்படையே ஜூபிடர் ஆர்ட் மூவீஸின் விஜயா படமாகும். நவநாகரீகத்தில் திளைக்கும் கதாநாயகன் ஜெய், லட்சுமியை மணக்கிறார். அவர்களுக்கு பிறக்கும் பெண் குழந்தை வளர்ந்து பெரியவளாகி - இதுவும் லட்சுமியே - நாகரீகத்தில் திளைக்கிறாள். மனப் போராட்டத்தில் தவிக்கிறார் ஜெய்.
படத்தின் தொடக்கத்தில் ஜெய்யின் பிறந்த நாளன்று தாத்தா மேஜர் சுந்தரராஜனுடன் நாகரீகத்தைப் பற்றிப் பாடலில் விவாதிக்கிறார் ஜெய்.
இதே போல் படத்தின் முடிவுக்கு முன்னர் வரும் ஒரு பாடல் காட்சியில் மகளின் நாகரீகப் போக்கை எண்ணி மனம் வருந்தி தாயார் லட்சுமி இறைவனை பிரார்த்திக்கிறார். இதே சமயம் மகள் லட்சுமியோ நாகரீகத்தின் மோகத்தில் பாடுகிறார்.
முதல் சூழ்நிலையில் ஜெய்க்காகப் பாடுபவர் எஸ்.பி.பாலா, தாத்தா மேஜருக்கு குரல் தந்தவர் கோவை சௌந்தர்ராஜன்.
இரண்டாம் சூழ்நிலையில் தாயார் லட்சுமிக்கு இசையரசியும், மகள் லட்சுமிக்கு மாதுரியும் குரல் தந்திருப்பார்கள்.
மிக மிக அபூர்வமாக இணையத்தில் முதன் முதலா எனவும் சொல்லலாம் என நினைக்கிறேன்.. இந்த இரு பாடல்களும் உங்களுக்காக..
நேற்று வேறு இன்று வேறு
http://www.mediafire.com/listen/53on...VeruVijaya.mp3
மலையரசி சக்தி மீனாட்சி
http://www.mediafire.com/listen/c5wb...rasiVijaya.mp3
வாசு சார்
ஒரு சின்ன suggestion
நிறைய பாடல்கள் படங்கள் நிகழ்சிகள் பதிவிடபடுகின்றன
ஒரு index create செய்யலாமா
repeat ஆகாமல் இருப்பதற்கு
கிருஷ்ணாஜீ
அன்புத் தலைவன் காலடிச் சுவட்டில் மிகவும் அருமையான பாடல். என்றைக்கும் மனதில் இனிமையூட்டும் பாடல்
பிறந்த நாள் பாடல் ... ஈஸ்வரியின் குரலில் நமக்கு வாழ்த்து தரும் பாடல் என்றைக்கும் பொருந்தும்.. இன்றைக்கு பிறந்த நாள் கொண்டாடும் நண்பர்களுக்கு இந்தப் பாடல் மிகவும் பிடிக்கும் எனக் கூறலாம்.
மாளிகையில் மான் குட்டியின் திருநாளாம்..
அத்தை மகள் படத்திலிருந்து..
http://www.inbaminge.com/t/a/Athai%20Magal/
மேலே உள்ள இணைப்பில் ஈஸ்வரியின் சூப்பர் டூப்பர் பாடல் மெல்லிசை மன்னரின் இசையில் ...சொக்கய்யா சொக்கய்யா...
நம்மை சொக்கவைக்கும் குரல் சொக்க வைக்கும் பாடல்... இதையும் கேளுங்கள்..
பாடலின் நடுவில் வரும் ஹஸ்கி வாய்ஸ், கிடாருடன் நம்மை கிறங்க வைக்கும்.. தாளம்.... மிக மிக மிக ... வித்தியாசமாக இருக்கும்..
வாசு\இராகவேந்தர் சார்,
பாடல்கள்,பாடல் காணொளிகள்,புகைப்படங்கள்
ஆகியவற்றை இத்திரியில் இணைக்கும் வழிமுறைகளை விளக்க
வாய்ப்பிருந்தால் அதனை வழங்குமாறு வேண்டுகிறேன்.
அன்பு கோபு
கலக்கல் ராகவேந்திரன் சார்.
'விஜயா' படத்தைப் பற்றியும், இப்படத்தின் பாடல்களைப் பற்றியும், லஷ்மியின் ஹொட்டேல் ( நன்றி நடிகர் திலகம்) பற்றியும் நாம் சில தின தினங்களுக்கு முன் செல்லி பேசி மகிழ்ந்தது நினைவுக்கு வருகிறது. அருமையான பாடல்கள்.
'நாகரீகம் என் தெய்வம்
புது நடனமே எந்தன் செல்வம்'
நியூவேவ் லஷ்மி அட்டகாசம்.
இப்பாடல் காட்சியில் நாகரீக மகள் லஷ்மியின் தோற்றம். (பிரத்யோகமாக நமது திரிக்கு மட்டும்)
http://i1087.photobucket.com/albums/...0-2/lashmi.jpg
Vasu,
Awaiting your memories on our Acting God in association with you. KCS,Ragavendhar and you are really lucky.
டியர் ராகவேந்தர் சார்,
'உள்ளத்தை அள்ளித்தா' என்ற சீரீஸில் நீங்கள் அள்ளித்தரும் ஒவ்வொரு பாடலும் அபூர்வமானவையே. ரொம்ப மெனக்கெட்டு தேடித்தேடி கொண்டுவருகிறீர்கள். நாங்க ரொம்ப ஈசியாக என்ஜாய் பண்ணிட்டு போயிடுறோம்.
நமது திரி அபூர்வ பாடல்களின் சேமிப்பு கிடங்காகி வருகிறது.
பாராட்டுக்கள்...
டியர் வாசு சார்,
நடிகர்திலகத்துடன் தங்கள் நேரடி சந்திப்பு அனுபவம் பற்றி அறியக் காத்திருப்போர் கியூ, நீளமாகத் தொடங்கிவிட்டது...
மீண்டும் வருவதற்குள் பக்கங்கள் மள மளவென வளர்ந்துவிட்டது. அடேயப்பா கிருஷ்ணா ஜி, கார்த்திக் ஜி, வாசு ஜி, எஸ்.வி ஜி, ராகவ் ஜி என எல்லோரும் தூள் கிளப்பி விட்டீர்கள்.
வாசு ஜி கன்னட பாடலை நீங்கள் ரசித்தீர்கள் அதனால் இதோ இன்னொன்று .. இது விரகப்பாடால் ஆனால் விரசமில்லாத பாடல்
இதுவும் புட்டண்ணா - எம்.ரங்காராவ் கூட்டணியில் இசையரசியின் குரலில் அருமையான பாடல்
எடகல்லு குட்டத மேலே .. என்ற படம் . பாடல் நாட்டிற்காக சேவை செய்ய சென்றுள்ள கணவனை பிரிந்து வாடும் ஒரு பெண் பாடும் பாடலாக அமைந்த பாடல் .. விஜய நரசிம்மாவின் அற்புத வரிகள் .. எவ்வளவு அழகு.. இயற்கை ரம்மியம் (குடகு மலையில் படப்பிடிப்பு) ..
http://www.youtube.com/watch?v=6qBzZvMiYzQ
சில நேரங்களில் ஒரே டியூனை இசையமைப்பாளர்கள் வேறு மொழிகளில் பயன்படுத்துவார்கள்
இதோ அப்படிப்பட்ட பாடல்
முதலில் எம்.எஸ்.வி .. கிருஷ்ண கானம் மிகவும் பிரபலம் அதிலும் இசையரசியின் குரலில் ஒலித்த “குருவாயூருக்கு வாருங்கள் “ பாடல் என்றுமே மறக்க முடியாத பாடல் அதுவும் அந்த “ நாராயண நாராயண ஹரி ஹரி நாராயண “ பேஷ்
அதே மெட்டை எம்.எஸ்.வி மலையாள “ராமு” ஆம் நம் ராமு படம் அங்கே பாபுமோன் என்ற பெயரில் வெளி வந்தது.
பிரேம் நசீர், ஜெயபாரதி , கரண் (ஆம் இப்பொழுது ஹீரோ வில்லனாக நடிக்கிறாரே அவரே தான்) நடித்தது.
இதோ வள்ளுவ நாட்டிலே புள்ளுவத்தி .. இசையரசியின் குரலில் குருவாயூருக்கு வாருங்கள் மெட்டில்
http://www.youtube.com/watch?v=yqSDYLhNvt8
இதே போல் இளையராஜா தனது பிரபல மெட்டான மாஞ்சோலை கிளிதானோ மான் தானோ ‘வை தெலுங்கில் வேறு ஒரு படத்திற்கு
டூயட்டாக மாற்றினார்
ஆம் பஞ்ச பூதாலு திரைப்படத்திற்காக இசையரசியும், பாலுவும் இசைத்த அற்புத பாடல் இதோ...;
http://www.youtube.com/watch?v=FTP91WBivO0
நன்றி ராஜேஷ் சார்,
கரும்பு தின்னக் கூலியா? கன்னடக் கரும்பு. சுவைத்து விட்டு வருகிறேன்.
ராஜேஷ் சார்,
'தென்னகத்து இசைக்குயிலை'ப் பற்றி எவ்வளவு புகழ்ந்தாலும் திருப்தி என்பதே ஏற்படாது. அவர் பாடிய சூப்பர் டூப்பர் ஹிட்டான பாடல்கள் தென்னக மொழிகளில் கணக்கிலடங்காது. வெகுஜன ரசனைக்குட்பட்ட பல பாடல்கள். சந்தையில் வெளிச்சம் காணாத, குடத்துக்குள் விளக்காகவே ஒளி வீசும் பாடல்களும் ஏராளம். முடிந்தமட்டும் நாம் அவைகளை வெளிக் கொணர்ந்து அந்த இசை மேதைக்கு புகழாரம் செய்வோம்.
அந்த வகையில் இன்று இரண்டு பாடல்கள்.
ஒன்று இன்று வினோத் சார் நிழற்படமாய்ப் பதித்த 'நினைப்பதற்கு நேரமில்லை' படத்திலிருந்து ஒரு மணியான பாடல். 'இன்றைய ஸ்பெஷலா'க வரவேண்டிய பாடல் ராஜேஷ் சாருக்காக 'இரவு ஸ்பெஷலா'கிப் போனது
அத்தான் கடிதம் நல்ல முத்து முத்து
ஆஹா என் அன்புமலர் கொத்து கொத்து
அத்தான் கடிதம் நல்ல முத்து முத்து
ஆஹா என் அன்புமலர் கொத்து கொத்து
அன்றொருநாள் அழகுடனே அருகினில் நின்றேனாம்
ஆசையுடன் அணைக்க வந்தால் ஆளைக் காணோமாம்.
அன்றொருநாள் அழகுடனே அருகினில் நின்றேனாம்
ஆசையுடன் அணைக்க வந்தால் ஆளைக் காணோமாம்.
இன்னொருநாள் என்னைக் கட்டி முத்தம் இட்டாராம்
எழுந்த பின்னே கனவதுவாய் இருக்கக் கண்டாராம்
அத்தான் கடிதம் நல்ல முத்து முத்து
ஆஹா என் அன்புமலர் கொத்து கொத்து
நீர்நிலையின் நெளிவினிலே என்னைக் கண்டாராம்
நெருங்கியதில் இறங்கினாலோ குளிர்ச்சி இல்லையாம்
நீர்நிலையின் நெளிவினிலே என்னைக் கண்டாராம்
நெருங்கியதில் இறங்கினாலோ குளிர்ச்சி இல்லையாம்
அதை விடுத்து நடந்த போது தொடர்ந்து சென்றேனாம்
ஆசையோடு அன்பே என்றான் யாரும் இல்லையாம்
அத்தான் கடிதம் நல்ல முத்து முத்து
ஆஹா என் அன்புமலர் கொத்து கொத்து
இரண்டுநாள் இருக்குதென்றெ ஏங்கி அழைக்கின்றார்
எண்ணத்தால் அன்புடனே என்னுள் நிற்கின்றார்
இரண்டுநாள் இருக்குதென்றெ ஏங்கி அழைக்கின்றார்
எண்ணத்தால் அன்புடனே என்னுள் நிற்கின்றார்
என்னைப் போலே அதிர்ஷ்டசாலி யார் இருக்கின்றார்
என்று வந்து காண்பேன் என்று எழுதி இருக்கின்றார்
அத்தான் கடிதம் நல்ல முத்து முத்து
ஆஹா அன்புமலர் கொத்து கொத்து
அத்தான் கடிதம் நல்ல முத்து முத்து
ஆஹா அன்புமலர் கொத்து கொத்து
சார்! கொன்னுட்டாங்க சார்... பின்னிட்டாங்க.. இன்னும் என்ன சொல்வது!
அத்தான் கடிதம் நல்ல முத்து முத்து
ஆஹா அன்புமலர் கொத்து கொத்து
அந்த இரண்டு வரிகளுடனேயே பயணிக்கும் அந்த 'டொம் டொம்' என்ற டேப் சப்தம் அமர்க்களமோ அமர்க்களம். அதுக்கே கொடுக்கும் காசு செரித்து விட்டது சார். திரும்ப எப்படா முதல் இரண்டு வரிகள் வரும் என்று மனம் ஏங்கும் சார். மாமா மகத்துவம்.
வரிகளைப் பார்த்தீர்களா?
'நீர்நிலையின் நெளிவினிலே என்னைக் கண்டாராம்'
ஒரு பெண்ணின் உடலமைப்பை அவள் உடலின் வளைவு நெளிவுகளை இந்தக் கவிஞன் ஒரே வரியில் பாமரனுக்கும் புரியும்படி அமர்க்களமாய் எழுதி உணர்த்தி விட்டானே.
இந்தக் குயில் இந்தப் பாட்டின் மூலம் நம் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்து கொள்ளும் சார்.
http://www.youtube.com/watch?v=1b-0CNwMrlk&feature=player_detailpage
வாசு சார் .. எனக்கு மிகவும் பிடித்த பாடல் .. காணொளி கிடைத்ததில் மகிழ்ச்சி.
அந்த முத்திற்கே முத்துக்களை கொட்டித்தரலாம்
அடுத்த பாடல்
இன்னும் பிரமாதம்.
'என் கடமை' படத்தில் விஸ்வநாதன் ராமமூர்த்தியின் மயக்கும் இசையில் சுசீலா அவர்கள் பாடிய
'மீனே மீனே மீனம்மா
விழியைத் தொட்டது யாரம்மா
தானே வந்து தழுவிக் கொண்டு
சங்கதி சொன்னது யாரம்மா
சங்கதி சொன்னது யாரம்மா'
அடா! அடா! அடா!
பல்லவி முடிந்ததம் வரும் அந்த பேஸ் கிடார். சான்ஸே இல்லை.
அதுவும் ஒவ்வொரு முறையும் 'மீனே மீனே மீனம்மா' வை வெவ்வேறு விதமாக பாடி அசத்தும் விந்தை.
முதலில் படிப்படியாக உச்ச ஸ்தாயிக்கு கொண்டு செல்வார்
அப்புறம் அப்படியே அடக்கி வேறு மாதிரி சுருக்கிப் பாடுவார்.
இன்னொரு சமயம் வேறு மாதிரி.
நடுவில் வரும் அந்த 'ஹா ஹா ஹா' ஹம்மிங். ஜென்மம் சாபல்யமடைந்து விடும் சார்.
'தூக்கம் வராமல் தடுத்தவன் அவனம்மா
சொல்லடி சொல்லடி யாரம்மா'
அம்சம். அபிநய சரஸ்வதிக்கு வெகு பொருத்தமாய் பொருந்தும் இவர் குரல். அவரும் நன்றாகவே செய்திருப்பார்.
http://www.youtube.com/watch?v=Nr86B4RpR7o&feature=player_detailpage
அய்யோ .. இசையரசியின் குரலும் அபி நயசரஸ்வதியின் குறும்பும் வேறேன்ன வேறேன்ன வேண்டும் ...மிகச்சிறந்த கூட்டணி இது தான் (என் டாப் பேவரிட்)
//சில நேரங்களில் ஒரே டியூனை இசையமைப்பாளர்கள் வேறு மொழிகளில் பயன்படுத்துவார்கள்//
அருமை. ஆமாம். எப்படி ஒன்று விடாமல் இவ்வ்ளோவ் ஞாபகம் வைத்துள்ளீர்கள்? அதுவும் தமிழிலிருந்து பிற மொழிகள், நேரடி மாற்றம்,மொழி மாற்றுப் பாடல்கள் வரை. புகழ்ச்சிக்கு சொல்லவில்லை... நிஜமாகவே நீங்க ஒரு ஆச்சரியம் சார்.
'Jagadeka Veerudu Atiloka Sundari'
ராஜேஷ் சார்,
மிகுந்த பொருட்செலவில் சிரஞ்சீவி ஸ்ரீதேவி நடித்த படம். நம் இளைய ராஜா இசை.
இதில் படத் துவக்கத்தில் ஸ்ரீதேவி 'காதல் தேவதை'யாய் (தமிழ் டப்பிங் பெயரும் அதுதான்) பூமியில் வந்திறங்க சிரஞ்சீவி அவரை பாலோ பண்ணுவார். அப்போது அருமையான ஒரு பாடல்.
பாலாவும், ஜானகியும் என்று நினைக்கிறேன்.
'அந்தாலலோ அஹோ மஹோதயம்
பூலோகமே நவோதயம்'
ரொம்ப இனிமையாய் இருக்கும் சார்.
தமிழிலும் அருமையாக கொடுத்திருப்பார்கள். தமிழுக்குத் தக்கவாறு சிறப்பான மொழி பெயர்ப்பு.
'கண்கண்டதோ எதோ மகோற்சவம்
பூலோகமே நல்லோவியம்
பூவும் பொன்போல் பொலிகின்ற நேர்த்தியோ
நெஞ்சில் என்ன கும்மாளம் காட்சியோ
இங்கே கண்டேன் அழகின் விலாசமே'.
தெலுங்கு பாடலைப் பார்ப்போம். ஸ்டுடியோவில் ஏக ரகளை செட்டெல்லாம் போட்டு பணத்தை பொரியாய் இறைத்து செலவு பண்ணியிருப்பார்கள். பாடல் நல்ல இனிமை
http://www.youtube.com/watch?v=g3MFxLZM87A&feature=player_detailpage
வாசு இசையரசியின் பல மொழி பாடல்கள் கேட்பதால் வந்த விளைவு. பாராட்டும் அளவிற்கு ஒன்றும் இல்லை
ஜெகதேக வீருடு அதிரூப சுந்தரி என்று நினைக்கிறேன். ஆம் பாடல்கள் அனைத்தும் அருமை. நம்ம மதுர மரிக்கொழுந்து வாசமும் உண்டு
இதோ பெண்டியாலா லேசாக மாற்றம் செய்த நம் முத்துக்களோ கண்கள்
https://www.youtube.com/watch?v=ACg4jPy0w1s
ஆமாம் ராஜேஷ் சார்.
இப்போதுதான் பார்க்கிறேன். மைசூர் பிருந்தாவனம் அட்டகாசமாய் இருக்கிறது. ஜமுனா ரொம்ப குண்டம்மாவாத் தெரிகிறார். ஏ.என்.ஆர் வழக்கம் போல் அதே ஸ்டைல். எப்படி ஆனால் என்ன? சுசீலாம்மாவின் குரல் எல்லாவற்றையும் மறக்கச் செய்து விடுமே.
ராஜேஷ் சார் இந்தப் பாடலைப் பாருங்கள். பாலாவும், இசையரசியும் பாடுவார்கள்.
என்.டி.ஆரின் 'சிம்ஹ பாலுடு' படத்தில் அவரும், வாணிஸ்ரீயும் நம் 'வான் நிலா நிலா அல்ல' பாடலை 'ஓ..செலி சலி' என்று பாடுவதைப் பாருங்கள். திரும்ப அது 'சிம்மக் குரல்' என்று தமிழில் 'டப்' செய்யப்பட்டு மூலம் திரும்ப 'ஓர் கனி கனி' என்று நம்மகிட்டேயே எதிரொலித்தது. (நம் கிருஷ்ணா சாருக்கு ரொம்பப் பிடிக்கும் என்று நினைக்கிறேன்).
தெலுங்கில் இசையரசி அற்புதமாகப் பாடியிருக்கிறார். ஸோ.. 'வான் நிலா'வையும் விட்டு வைக்கவில்லை இசையரசி
http://www.youtube.com/watch?v=g1F2Oc80Svo&feature=player_detailpage
சில பாடல்களை கேட்கும் போது, ஆஹா.. எத்தனை நாளாச்சு இந்தப் பாட்டை என்று எண்ணி மனம் குதூகலித்தவாறே ரசிக்கத் தொடங்கி விடுவோம். அப்படி ஒரு பாடல், இசையரசி பாடிய இந்தப் பாடல். சங்கர் கணேஷ் இசையில் இசைக்குயிலின் குரலில் கண்ணருகே வெள்ளி நிலா ஏன் வராது?
http://www.youtube.com/watch?v=JC0CB-Jj8nY