-
29th July 2014, 04:21 PM
#2601

Originally Posted by
vasudevan31355
கிருஷ்ணா சார்,
நடிகர் திலகத்தை நீங்கள் நெல்லையில் தனிமையில் சந்தித்த விவரங்களை எழுதி என் நினைவுகளைக் கிளறி விட்டீர்கள். அருமை.
எனக்கு அதில் நிறைய அனுபவம் உண்டு. சமயம் வாய்க்கும் போது கண்டிப்பாக புகைப்படங்களுடன் உங்கள் எல்லோருடனும் பகிர்ந்து கொள்கிறேன்.
மிக்க மகிழ்ச்சி வாசு சார்
கார்த்திக் சார் உடன் சேர்ந்து நானும் உங்கள் அனுபவங்களுக்கு காத்து கொண்டு இருக்கிறேன்
-
29th July 2014 04:21 PM
# ADS
Circuit advertisement
-
29th July 2014, 04:24 PM
#2602

Originally Posted by
vasudevan31355
கிருஷ்ணா சார்,
'புதிரு போட போறாளாம் பொட்டப் புள்ள' ...' அச்சமில்லை அச்சமில்லை' படத்தில் அகல்யா என்ற நடிகை பாடுவதாக வரும். திருநெல்வேலி ஆள் முழிக்கிறாராம். நான் சொல்லல. ஜானகி சொல்றாங்க
ஆனா நான் சொல்றேன்.
அடி என்ன வேண்ணா கேளு
கிருஷ்ணா திருநெல்வேலி ஆளு.
நடிகை அகல்யா சரி
நான் தவறுதலாக நடிகை அருந்ததி என்று கூறி விட்டேன்
மன்னிக்கவும்
-
29th July 2014, 04:28 PM
#2603
Junior Member
Platinum Hubber
1962- சினி டைரி பதிவினை பாராட்டிய எல்லா நண்பர்களுக்கும் எனது நன்றி .
இன்றைய ஸ்பெஷல் பாடல்கள் -எல்லாமே சூப்பர் .
-
29th July 2014, 04:40 PM
#2604
Senior Member
Diamond Hubber
டியர் கார்த்திக் சார்,
பதிவுகளுக்கான தங்களது மனம் திறந்த பாராட்டுதல்களுக்கு நன்றி!
நமக்குள் இன்னொரு ஒற்றுமை. நானும் 'குலேபகாவலி' திரைப்படத்தை ஒரு டூரிங் டாக்கீஸில்தான் முதன் முதலாகப் பார்த்தேன். பின் கடலூர் துறைமுகம் 'கமர்' திரையரங்கில் ஓரிருமுறை பார்த்தேன்.
அப்போதே இன்றைய ஸ்பெஷலாக வந்த 'நாயகமே' பாடல் நங்கூரமாக என் நெஞ்சில் பாய்ந்து விட்டது. மேலும் முஸ்லீம்கள் அதிகம் வசிக்கும் பகுதி கடலூர் துறைமுகம். மசூதிகளும் நிறைய. கடலூரிலிருந்து கடற்கரை வழியாகப் பயணித்தோமானால் புதுச்சத்திரம், ஆலப்பாக்கம், முட்லூர், பரங்கிப்பேட்டை என்று பெரும்பாலும் முஸ்லீம் இன மக்களே அதிகம் இருப்பார்கள். தானுண்டு தன் வேலையுண்டு என்று அமைதியாக இருக்கும் மக்கள். மீன்பிடி தொழிலில் அதிக நாட்டம். மசூதிகளில் அதிகாலையில் ஒலிக்கும் முஸ்லீம் பாடல்கள். பெரும்பாலும் நாகூர் ஹனிபா அவர்கள்தாம் பாடியிருப்பார்.
'அல்லாவைத் தொழுதிடு முஸ்லீம் பெண்ணே'
'எங்கும் நிறைந்தவனே அல்லா அல்லா'
'பாத்திமா வாழ்ந்த முறை உனக்குத் தெரியுமா' (என்னுடைய பேவரேட்)
'அருள் மழை பொழிவாய் ரஹ்மானே'
'தூதர் முஹம்மது வாழும் மதீனா'
'இறைவனிடம் கையேந்துங்கள் அவன் இல்லையென்று சொல்லுவதில்லை'
'உலக மக்கள் யாவருக்கும் உரிமையானவர்'
மறக்கவே முடியாத பாடல்கள்.
எதையோ தொடக்கி எங்கோ முடிக்கிறேன். ஆனால் நினைவுகள் தேன்தானே.
Last edited by vasudevan31355; 29th July 2014 at 04:43 PM.
நடிகர் திலகமே தெய்வம்
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
29th July 2014, 04:48 PM
#2605
Junior Member
Regular Hubber
கார்த்திக் சார்,
நெல்லை பூர்ணகலா திரையரங்கில் உத்தமன் திரைப்படம்
நடைபெற்றுக் கொண்டிருந்த பொழுது ஒரு மாலைக்காட்சிக்கிடையே
நடிகர் திலகம் வந்து பேசி விட்டுச் சென்றார்.அந்தக் காட்சி எனது
பசுமையான நினைவில் உள்ளது.ஏனெனில் நடிகர் திலகத்தை மிக
அருகில் காண வாய்ப்பு அன்றுதான் எனக்கு கிடைத்தது.
-
29th July 2014, 04:51 PM
#2606
Senior Member
Diamond Hubber

Originally Posted by
gkrishna
நடிகை அகல்யா சரி
நான் தவறுதலாக நடிகை அருந்ததி என்று கூறி விட்டேன்
மன்னிக்கவும்
இதுக்கெல்லாம் எதுக்கு சார் மன்னாப்பு?
-
29th July 2014, 04:53 PM
#2607
Senior Member
Veteran Hubber
டியர் வாசு சார்,
பலே....., நமது 'மனதை மயக்கும் மதுரகானங்கள்' திரியில் ரமலான் ஸ்பெஷலாக அருளிசைப்பாடகர் இசை முரசு நாகூர் ஹனீபா அவர்களின் வீடியோவும் இடம்பெற்றுவிட்டதே.
நீங்கள் பட்டியலிட்டிருக்கும் அவரது பாடல்கள் அனைத்துமே மிக அருமையானவை. அதிலும் 'இறைவனிடம் கையேந்துங்கள்' என்னுடைய ஆல்டைம் பேவரிட்....
-
29th July 2014, 05:00 PM
#2608
Senior Member
Diamond Hubber
கிருஷ்ணா சார்.
அச்சமில்லாமல் புதிர் போட்ட அகல்யா இவர்தான்.
-
29th July 2014, 05:03 PM
#2609
Senior Member
Diamond Hubber
கார்த்திக் சார்,
உங்களுக்கு பிடித்த அருளிசைப் பாடகரின் 'இறைவனிடம் கையேந்துங்கள்'
இதோ
original audio
-
29th July 2014, 05:06 PM
#2610

Originally Posted by
vasudevan31355
டியர் கார்த்திக் சார்,
'அல்லாவைத் தொழுதிடு முஸ்லீம் பெண்ணே'
'எங்கும் நிறைந்தவனே அல்லா அல்லா'
'பாத்திமா வாழ்ந்த முறை உனக்குத் தெரியுமா' (என்னுடைய பேவரேட்)
'அருள் மழை பொழிவாய் ரஹ்மானே'
'தூதர் முஹம்மது வாழும் மதீனா'
'இறைவனிடம் கையேந்துங்கள் அவன் இல்லையென்று சொல்லுவதில்லை'
'உலக மக்கள் யாவருக்கும் உரிமையானவர்'
மறக்கவே முடியாத பாடல்கள்.
எதையோ தொடக்கி எங்கோ முடிக்கிறேன். ஆனால் நினைவுகள் தேன்தானே.
வாசு சார்
காலை 6.15 முதல் 6.45 வரை வானொலியில் பக்திமலர் என்று ஒரு நிகழ்ச்சி .அதற்கு பிறகு செய்திகள்
பக்தி மலர் நிகழ்ச்சியில் அடிகடி கேட்கும் பாடல்கள்
'ஈச்ச மரத்து இன்ப சோலையில் நபி '
'நபிகளிடம் மறைந்து இருப்பது என்ன அன்பு அமைதி ஆக்கம் ''
'தமிழகத்து தர்க்ஹாகளை பார்த்து வருவோம் தூய வழி காட்ட சொல்லி கேட்டு வருவோம் '
'அல்லவை நாம் தொழுதால் துயர் இல்லாமல் போய் விடுமே '
அதே போல் கிறிஸ்துவ கீதங்கள்
'அய்யய்ய நான் வந்தேன் தேவ ஆட்டு குட்டி வந்தேன் தேவ ஆட்டு குட்டி வந்தேன் '
'அன்னையே ஆரோக்கிய அன்னையே '
எம்மதமும் சம்மதம் என்ற உங்கள் கருத்துக்கு நன்றி
Last edited by gkrishna; 29th July 2014 at 05:10 PM.
gkrishna
Bookmarks