விஜயகாந்த்திற்கு சில பல நல்ல பாடல்களும் அமைந்திருக்கின்றன..குறிப்பாக அவரது இளவயதில்..
எல்லாரும் தீபாவளியில் பிஸியாக இருப்பதால் நான் தனியாக இருக்கிறேனே..ஸோ தனிமையிலே.. என்ன ஆகும்..வி.கா பாட்டு நினைவுக்கு வந்தது..
சட்டம் ஒரு இருட்டறை.. சங்கர் கணேஷ் என நினைக்கிறேன்..ஹீரோயின் தெரியவில்லை.. ஆனால் பாடல் மென்மையான ஒன்று. எஸ்.என் சுரேந்தர் (மோகனின் வாய்ஸ்) எஸ்.ஜானகி..
நினைப்பது நிறைவேறும் நீ இருந்தால் என்னோடு..இதுவும் சிலோன் ரேடியோ உபயத்தில் மனதில் பதிந்த பாட்டு..வி.கா தான்..ஆனால் பாடல் படமாக்கிய விதம் சொதப்பியிருப்பார்கள்..
*
தனிமையிலே ஒரு ராகம் ஒரு தாளம் உருவாகும்
இனிமையின் கவிதைகள் பிறந்தது
இளைமையின் நினைவுகள் பறந்தது
ஹோ நெஞ்சமே உன்னிடம் இன்று தான் மாற்றமே
கல்லான நெஞ்சங்கள் கூட இளம் பெண்ணாளே பூவாக மாறும்
இனி நான் காணும் இன்பங்கள் ஆறு போல ஓடவேண்டும்
என் தேவனே என் மனம் உன்னிடம் தஞ்சமே
என் உள்ள பொன்வாசல் தேடி
இசை காற்றாக என்னோடு கூடி
புது ஊற்றாக இன்பங்கள் ஊர வேண்டும் சேரவேண்டும்
ஹே தென்றலே என் மனம் வானிலே போகுதே
எண்ணாத இன்பங்கள் யாவும் இனி என்னாலும் உன்னோடு வாழும்
பனி நீராட்டும் இந்நேரம் பாடவேண்டும் கூட வேண்டும்
**
//வாசு சார் கங்கா ஸ்நானம் ஆச்சா..எவ்ளோசரவெடி விட்டீங்க.. இங்கே வெடி பார்த்தே நாளாச்சு..//
http://www.youtube.com/watch?v=qa4Pqfqq2cw