-
22nd October 2014, 03:21 PM
#671
Senior Member
Senior Hubber
விஜயகாந்த்திற்கு சில பல நல்ல பாடல்களும் அமைந்திருக்கின்றன..குறிப்பாக அவரது இளவயதில்..
எல்லாரும் தீபாவளியில் பிஸியாக இருப்பதால் நான் தனியாக இருக்கிறேனே..ஸோ தனிமையிலே.. என்ன ஆகும்..வி.கா பாட்டு நினைவுக்கு வந்தது..
சட்டம் ஒரு இருட்டறை.. சங்கர் கணேஷ் என நினைக்கிறேன்..ஹீரோயின் தெரியவில்லை.. ஆனால் பாடல் மென்மையான ஒன்று. எஸ்.என் சுரேந்தர் (மோகனின் வாய்ஸ்) எஸ்.ஜானகி..
நினைப்பது நிறைவேறும் நீ இருந்தால் என்னோடு..இதுவும் சிலோன் ரேடியோ உபயத்தில் மனதில் பதிந்த பாட்டு..வி.கா தான்..ஆனால் பாடல் படமாக்கிய விதம் சொதப்பியிருப்பார்கள்..
*
தனிமையிலே ஒரு ராகம் ஒரு தாளம் உருவாகும்
இனிமையின் கவிதைகள் பிறந்தது
இளைமையின் நினைவுகள் பறந்தது
ஹோ நெஞ்சமே உன்னிடம் இன்று தான் மாற்றமே
கல்லான நெஞ்சங்கள் கூட இளம் பெண்ணாளே பூவாக மாறும்
இனி நான் காணும் இன்பங்கள் ஆறு போல ஓடவேண்டும்
என் தேவனே என் மனம் உன்னிடம் தஞ்சமே
என் உள்ள பொன்வாசல் தேடி
இசை காற்றாக என்னோடு கூடி
புது ஊற்றாக இன்பங்கள் ஊர வேண்டும் சேரவேண்டும்
ஹே தென்றலே என் மனம் வானிலே போகுதே
எண்ணாத இன்பங்கள் யாவும் இனி என்னாலும் உன்னோடு வாழும்
பனி நீராட்டும் இந்நேரம் பாடவேண்டும் கூட வேண்டும்
**
//வாசு சார் கங்கா ஸ்நானம் ஆச்சா..எவ்ளோசரவெடி விட்டீங்க.. இங்கே வெடி பார்த்தே நாளாச்சு..//
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
22nd October 2014 03:21 PM
# ADS
Circuit advertisement
-
22nd October 2014, 05:45 PM
#672
Senior Member
Diamond Hubber
சின்னக் கண்ணன் சார்,
அதிகாலையிலேயே ஆச்சு சார். 5 மணிக்கு ஆயில் பாத் எடுத்து 6 மணிக்கெல்லாம் வேலைக்குப் போயாச்சு. ஆபிசில் பெண்டு கழட்டிட்டாங்க. தீபாவளி மே தினம் மாதிரி மாறிப் போச்சு. தலைவர் படங்களோட தீபாவளி மகிழ்ச்சியெல்லாம் போச்சு. அவர் இல்லாத தீபாவளி இனிப்பு இல்லாத அதிரசம் போல. வெடியெல்லாம் கிடையாது சார். பசங்க ரொம்ப ஸ்டிரக்ட். சுற்றுப்புறசூழல் பாதிக்கக் கூடாது என்று. ஆசையாய் மத்தாப்பு கொளுத்தும் என்னையும் கொளுத்த விடுவதில்லை.
'தனிமையிலே' ரொம்ப இனிமையான பாடல். ஞாபகப் படுத்தியதற்கு நன்றி. இன்று ஞான ஒளி 'அம்மாக்கண்ணுவை' பார்த்துவிட்டு அடுத்து நீங்கள் பதித்த பாடலைத்தான் பார்த்து ரசித்தேன்.
உங்களுக்கு என் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
22nd October 2014, 06:23 PM
#673
Senior Member
Diamond Hubber
இந்த தீபாவளி நாளில் இருந்து இவர் அவர் என்ற வித்தியாசம் இல்லாது தனது ஒப்பற்ற திறமையினால் அனைவர் நெஞ்சங்களிலும் ஆழமாகப் பதிந்த நம் 'மேஸ்ட்ரோ' இளையராஜா இசை அமைத்த பாடல்களை தினம் ஒன்றிரண்டு தரலாம் என்று ஆசை. ரொம்ப டீப்பாக எல்லாம் கிடையாது. சிம்பிளாகத்தான். இதுவரை அதிகமாக நான் ராஜா சார் பாடல்கள் எடுத்ததில்லை. இதில் வெளியே தெரியாத பல ராஜாவுடைய பாடல்களும் தரப் படவிருக்கின்றன. நம் ராஜேஷ்ஜி தொடங்கிய இந்த மூன்றாவது பாகத்தில் தரலாம் என்று எண்ணியிருந்தேன். இன்று தீபாவளி நல்ல நாள் ஆதலால் இன்று தொடங்குகிறேன். வழக்கம் போல் தங்கள் ஆதரவைத் தந்து இந்தத் தொடர் சிறப்பிக்க வேண்டுகிறேன்.
'இளையராஜா என்றும் இனிய ராஜா' என்பது டைட்டில். நண்பர்கள் தங்கள் கருத்துக்களைப் பகிரலாம்.
-
22nd October 2014, 06:29 PM
#674
Senior Member
Diamond Hubber
'இளையராஜா என்றும் இனிய ராஜா' (தொடர் 1)
அன்னக்கிளி'யில் இருந்தே ஆரம்பிப்போம். முதல் படத்திலேயே இசையின் உச்சம். அதுவும் இந்தப் பாட்டில் இசைக்கருவிகளின் ஆக்கிரமிப்பு புருவம் உயர வைக்கும். தன்னுடைய பிரத்யோக ஸ்டைலை இந்தப் பாடலின் ஆரம்ப இசையில் தந்து ஆரம்பித்திருப்பார். பச்சரிசி குத்தும் உலக்கைகளின் சப்தம், கல் இயந்தரம் சுழலும் சப்தம், பணியாரம் பிழியும் சப்தம், இடியாப்பம் நூல் போல உருவாகும் சப்தம், அரிசியை முறத்தில் புடைக்கையில் எழுந்து விழும் அரிசியின் சப்தம், மாப்பிள்ளை பெண்ணாக தோழியர் நடித்துக்காட்டும் போது எழுப்பும் மங்கள ஓசை ஒலி, கூடவே இழைந்தோடும் 'லாலி லல்லி லாலி லல்லி' வாழ்த்தொலி கோரஸ், 'நம்ம வீட்டுக் கல்யாணம்' வரிகளுக்குப் பின் ஒலிக்கும் அந்த இனிமையான விதவிதமான சின்ன நோட்ஸ், பாடல் முழுக்க அங்கிட்டும், இங்கிட்டும் உற்சாகமாய் ஓடி, பாடி, ஆடி கல்யாண சமையல் வேலைகள் செய்திடும் கிராமத்து பெண்மணிகள், சிவக்குமாரை காதலில் 'அம்போ' என்று பறி கொடுத்துவிட்டு வெளியில் மகிழ்ச்சியையும், உள்ளே வேதனையின் துடிப்பையும் காட்டி தனி மரமாய் உலக்கை மரத்தை அணைத்து சோகம் காட்டி, நம்மை அழவைத்த நடிப்பின் அற்புத அன்னக்கிளி சுஜாதா, போதிய வாய்ப்பில்லாமல் இருந்து சந்தர்ப்பத்தை சரியாய் பயன்படுத்திக் கொண்ட ஜாலக்காரி ஜானகி என்று இப்பாடலில் நம் நெஞ்சைக் கவர்ந்த அம்சங்கள் ஏராளம் ஏராளம்.
இசைக் கிராதகனின் இசைச் சாம்ராஜ்யம். முதல் படத்திலேயே முத்தான இசை தந்து ஒட்டு மொத்த இந்தியாவையும் திரும்பிப் பார்க்க வைத்தவன். பின்னால் உலகே தன்னைத் திரும்பிப் பார்க்க இப்பாடலின் மூலம் விதை விதைத்தவன்.
நீங்களே பாருங்கள். 'அன்னக்கிளி'யில் என் உள்ளம் கவர்ந்த முதல் பாடல்.
Last edited by vasudevan31355; 23rd October 2014 at 05:52 PM.
நடிகர் திலகமே தெய்வம்
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
22nd October 2014, 08:02 PM
#675
Senior Member
Seasoned Hubber
Vasu ji arumai.
naanum 90'kaLin sila IR songs sollalam enna irundhen . ungal thodarukku vaazhthukkal
-
22nd October 2014, 08:14 PM
#676
Senior Member
Seasoned Hubber
வாசு சார்...
இளையராஜாவின் பாடல்களைப் பற்றிய தங்கள் புதிய தொடருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
அவர் இசையமைத்த பாடல்களில் எல்லோரும் அறிந்தவற்றை விடுத்து, அபூர்வமானவற்றைத் தேர்ந்தெடுத்துத் தரவேண்டும் என வேண்டுகிறேன்.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
22nd October 2014, 09:10 PM
#677
Senior Member
Diamond Hubber
ராஜேஷ்ஜி
தீபாவளி வாழ்த்துக்கள். எப்படிக் கொண்டாடினீர்கள்? இசையரசிக்கு தீபாவளி வாழ்த்துக்கள் சொன்னீர்களா? தங்கள் இளையராஜா தொடர் வாழ்த்துக்கு நன்றி!
-
22nd October 2014, 09:11 PM
#678
Senior Member
Senior Hubber
வாசு சார், எனக்கும் கொஞ்சம் பிழியப் பிழிய வேலை+ மீட்டிங்க்ஸ்.. இப்போ தான் வந்தேன்..(காலையில் அஞ்ச்சு மணிக்கே எழுந்தாச்சு.. நேத்து தூங்க பதினொன்றரைக்கு மேல் ஆகிவிட்டது கீழ் ஃப்ளாட்டிலிருந்து ஒரு பெண் வந்துஎன் வீ.காவிற்கு கைக்கோலம் போட்டுக்கொண்டிருந்தாள்) காலையில் செவேலெனச் சித்திரம் வரைந்த கையால் அடியேனுக்கு லேகியம், இரண்டு இட்லிகள் +இரண்டு பஜ்ஜிகள் தரப்பட லபக்கென விழுங்கி ஓடி விட்டேன்..இப்பத் தான் கண்ணு அசத்தறது ( இங்கே அஞ்சு என்றால் சென்னை ஆறரை)
இளையராஜா வின் அன்னக் கிளியா..ஹை..ஸ்ரீதேவி தியேட்டர் ல ரிலீஸ்.. படம் ஒரே ஒருமுறை ரிலீஸின் போது பார்த்தது.. அதன் பிறகு பாடல்கள் மட்டும் தான் கேட்டிருக்கிறேன்..முத்து முத்தா பச்சரிசி குத்தத்தான் வேணும்.. நல்ல கோரஸ் பாட்டு.. ம்ம் குட் வாசு சார்.. நடத்துங்க நடத்துங்க
-
22nd October 2014, 09:12 PM
#679
Senior Member
Diamond Hubber

Originally Posted by
RAGHAVENDRA
வாசு சார்...
இளையராஜாவின் பாடல்களைப் பற்றிய தங்கள் புதிய தொடருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
அவர் இசையமைத்த பாடல்களில் எல்லோரும் அறிந்தவற்றை விடுத்து, அபூர்வமானவற்றைத் தேர்ந்தெடுத்துத் தரவேண்டும் என வேண்டுகிறேன்.
நன்றி ராகவேந்திரன் சார். நிச்சயமாக. தங்கள் கூறியபடியே செய்ய வெண்டும் என்றுதான் நானும் நினைத்துக் கொண்டிருந்தேன். கண்டிப்பாக ராஜாவின் அரிய பாடல்களைத் தர முயற்சிக்கிறேன்.
-
22nd October 2014, 09:16 PM
#680
Senior Member
Diamond Hubber
சி.க சார்,
முதலில் போய் ரெஸ்ட் எடுங்க. எதுவாயிருந்தாலும் நாளை பேசிக்கலாம். உடல்நலம் முக்கியம். போய்த் தூங்குங்க.
Bookmarks