வாசு சார்
நீங்கள் சொன்ன பாட்டு ரொம்ப நாளாக தேடிட்டு இருந்தேன் சார்
ராட்சசி தான்
கல்யாணமாம் கல்யாணமாம் கொஞ்சம் பட்டிகடா பட்டணம ஜாடை உண்டே இல்லையா சார்
பாலாவின்
"காலம் பொன்னானது
கடமை கண்னானது
வாழ்வு என்னாவது "
என்று கூட ஒரு பாடல் வரும்
Printable View
வாசு சார்
நீங்கள் சொன்ன பாட்டு ரொம்ப நாளாக தேடிட்டு இருந்தேன் சார்
ராட்சசி தான்
கல்யாணமாம் கல்யாணமாம் கொஞ்சம் பட்டிகடா பட்டணம ஜாடை உண்டே இல்லையா சார்
பாலாவின்
"காலம் பொன்னானது
கடமை கண்னானது
வாழ்வு என்னாவது "
என்று கூட ஒரு பாடல் வரும்
சாரி வாசு சார்
அது ஒரு flowvil வந்த வார்த்தை
மன்னித்து விடுங்கள்
கர்ணனின் காலம் வெல்லும் படத்திலும் ஜெய் சங்கர் ஜோடி விஜயகுமாரி தானே சார்
"என்னங்க சம்பந்தி எப்போ நம்ம சம்பந்தம "
"புருசன் வீடு போய் புள்ளையை பெத்த பின்னாலே "
tms சுசீலா காம்போ MD ஷங்கர் கணேஷ் என்று நினவு
கார்த்திக் சார்,
'பதிலுக்கு பதில்' படத்தில்
இந்த லட்சணத்தில் முத்துராமன் வேறு பிளே-பாய் ரோலில் 'ஏழெட்டுப் பெண்கள் எந்தன் பக்கம்' என்று ஆட்டம் வேறு போடுவார்.
இன்னொன்று. இந்தப் படத்தை அப்போது நான் பார்க்கும் போது முத்துராமன் குட்டி பத்மினியை ரேப் செய்வது போன்ற காட்சி (ரொம்ப மோசமாய் இருக்கும்) எப்படியோ சென்சாரில் தப்பித்து காட்சிக்கு வந்து விட்டது.
அப்போது எங்கள் இளைஞர் வட்டத்தில் அதுபற்றித்தான் பரபாரப்பாக பேசிக் கொண்டு இருப்பார்கள்.
ஆனால் இப்போது டிவிடியில் பார்த்த போது அந்தக் காட்சி இல்லையென்று நண்பன் பரிதாபமாகச் சொன்னது பாவமாய் இருந்தது.
நம்புங்கள் கார்த்திக் சார். நண்பன்தான் சொன்னான்.
சரி! முத்துராமனின் கூத்தைப் பார்ப்போம்.
http://www.youtube.com/watch?v=K6BG0...yer_detailpage
தலை வாசு சார்
1979 தீவாளி ரிலீஸ் என்று நினைவு
"போர்ட்டர் பொன்னுசாமி " என்று ஒரு படம்
மாவீரன் ஜேப்பியார் (இப்ப கல்வி தந்தை) films
தேங்காய் மற்றும் வடிவு ஜோடி என்று நினவு
பாலா வித் ஈஸ்வரி காம்போவில் ஒரு பாட்டு வரும்
"அம்மம்மா இது என்னம்மா ஆரம்பமா
ஆசைக்கும் இதழ் ஓசைக்கும் ஆரம்பமா ஆனந்தமா "
ராட்சசி ஒரு சிரிப்பு சிரிப்பா பாருங்க
நெல்லை ரத்னா theatre ஏ அலறிட்சுக்ங்க
டியர் வினோத் சார்,
'துளி துளி துளி மழைத்துளி' (புதுவெள்ளம்) பாடல் வீடியோவுக்கும், விதுபாலாவின் இன்றைய நிழற்படத்துக்கும் நன்றி.
விதுபாலா ஒரே வானம் ஒரே பூமியில் ரவிக்குமார் ஜோடியாக வருவார். நியூயார்க்கில் ஒரு சூதாட்ட விடுதியில் வேலை செய்வார். ஜெய்சங்கர் ஜோடியாக 'ராசி நல்ல ராசி' படத்தில் நடித்திருப்பார்.
மேடை மேஜிக் ஷோக்களில் தந்தையுடன் பங்குபெற்றுள்ளார். சென்னையில் நானே நேரில் பார்த்திருக்கிறேன். மேடையிலும் பேண்ட் கோட் அணிந்து அழகாக இருப்பார்.
கன்னட மஞ்சுளா ஜெய்யுடன் கலைஞரின் 'காலம் பதில் சொல்லும்' படத்திலும் நடித்திருந்தார்.
பதிலுக்கு பதில்
என்ன கொடுமை வாசு?
நீங்க யோககாரர் வாசு
முத்துராமன் குட்டி பத்மினி பற்றி சொன்னேன்
கிருஷ்ணா சார்!
ராட்சஸியை விட்டுட்டீங்களே!
கண்ணழகி விஜயலலிதாவிற்கு இவர்
'காலம் வெல்லும்' படத்தில்
பாடும்
பெண்ணொரு கண்ணாடி
பார் கொல்லுது முன்னாடி
பாடல் சும்மா கிறங்கடித்து விடும்.
ரம்ரம்மா...
ஜின்ஜின்னா...
சொர்க்கம் பார்க்க ஆசை உண்டா
சொல்லி விடு சொல்லி விடு
தொட்டுப் கொஞ்சம் பேசலாமா
தூது விடு தூது விடு
தியேட்டரே நீங்கள் சொன்னது போல (கடலூர் பாடலியில்) கும்மாளம் போட்டு குஷியடைந்தது.
உள்ளங்கையில் ரேகை என்ன
பார்த்து விடு பார்த்து விடு
ஒன்றுக்கொன்று சொந்தம் உண்டா
சொல்லி விடு சொல்லிவிடு
எனக்கென்ன ராசி
உனக்கென்ன ராசி
இருவரும் கலந்தால் கைராசி
இன்னா குரல்! இன்னா உச்சரிப்பு!
உலகத்திலேயே இப்படி ஒரு பாடகியை யாராவது காட்டட்டும் பார்ப்போம்.
http://www.youtube.com/watch?v=LSNZdo8E1i4&feature=player_detailpage
பெண் ஒரு கன்னாடி பார் துள்ளுது முன்னாடி
காந்த கண் அழகி விஜயலலிதவின் சூப்பர் டுபேர்
ஈஸ்வரி வாய்ஸ் அப்படியே விஜயலலிதவிற்கு சூட் ஆகும்
ஆனந்த விகடன் பேட்டியில் கவர்ச்சி என்பதற்கு சில பேர் விளக்கம் கொடுத்த நினவு
பாரதி ராஜா "சில்க் ஸ்மிதா"
முத்துராமன் கூறியது "என்னை பொறுத்தவரை ஈஸ்வரியின் வாய்ஸ் என்பதுதான் கவர்ச்சி"
ஆனால் மொட்டை செய்த தவறு ஈஸ்வரியை use பண்ணவே இல்லை
(பாடலுக்கு) எனக்கு தெரிந்து 2 அல்லது 3 பாடல் பாடி இருப்பார்
நம்ம NT இன் "நல்லதொரு குடும்பத்தில்" "சச்சா சச்சா"
ஓடி விளையாடு தாத்தாவில் ஒரு பாடல் நினவு உண்டு
வாசு சார், கார்த்திக் சார், கிருஷ்ணாஜீ {ஜீன்னாலும் மரியாதை தானே ஜீ }, வினோத், கோபால் என எல்லோரும் இங்கே என்ன செய்றீங்க.. போய் அவங்கவங்க வீட்டையும் பாத்துக்குங்க.. அட்லீஸ்ட் சாப்பிடவாச்சும் வீட்டுக்கு வாங்க என்று கேப்டன் [வேறெ யாரு மாடரேட்டர் தான்] கூப்பிட்டாக் கூட காதிலே வாங்க மாட்டீங்க போல... ஹ்ம்... நடத்துங்க....
விதுபாலாவின் தந்தை
http://1.bp.blogspot.com/-3Ie599wPSc...th+Picture.jpg
மேஜிக் நிபுணர் கே. பாக்யநாத்
அதான் ரசிக வேந்தர் ராகவேந்திரன் சார் என்பது!
ராகவேந்திரன் சார்
அது போல 'மேஜிக்' ராதிகா ('சிவந்த மண்', 'சின்னஞ்சிறு உலகம்' புகழ்) கணவர் யாரன்று கூறுங்களேன். ப்ளீஸ்! முடிந்தால் இமேஜ்.
வாசு சார்
வா இந்த பக்கம் மௌலி direction
பிரதாப் உமா ஜோடி
ஷ்யாம் மியூசிக்
கொஞ்சம் மலையாள ஜாடை பாடலாக இருக்கும்
தீபன் சக்கரவர்த்தி ஜானகி என்று நினவு
ஆனந்த தாகம் உன் கூந்தல் பூக்கள் தீர்க்குமே
நாணம் தோற்குமே
அடிகடி மலர்கொடி நேரம் பார்க்குமே
இந்த பாடலில் இறுதியில் "ஆடை கொடு ஆளை விடு "
என்று வரி வரும் போது தியேட்டரில் கரண்ட் கட் ஆகி விட்டது
அப்போது எல்லாம் generator கான்செப்ட் என்று எதுவும் கிடையாது
நெல்லை பார்வதி திரை அரங்கில்
பெஞ்சை போட்டு உடைத்து விட்டார்கள் ரசிகர்கள்
அதுக்குள்ள நெறய பக்கம் ஓடிடுச்சே
வாசு சார்..அ ப கியும் நன்னாத்தான் இருக்கு..ம்ம் :) அதுக்காக இப்படி இந்தக் காலப் படத்தப் போட்டா பயமுறுத்தறது..வி.பாவோட முதல்படம் பொண்ணுக்கு தங்க மனசு..விஜயகுமாரோடதும் தான்..அவருக்கு குரல் கொடுத்தவரோட குரல் இருக்கே..மிக்ஸில பொடிப் பொடி கருங்கல்ல அறைச்சமாதிரி இருக்கும்..
குலவிளக்கிலா பனைமரம் தென்னை மரம் வாழை மரம்.. அது ஒரு படம்..டிவிடி போட்டவுடனே டிவி யே ஈரமாய்டுச்சு..சர்ரோவோட தியாகச் சுடர் நடிப்பால.. ஆனா அதுல பூப்பூவா பூத்திருக்கு தான் கேட்ட நினைவு..
டாக்ஸி டிரைவரில் சுகமான சிந்தனையில் இதமான உணர்வோடு சொர்க்கங்கள் வருகின்றன வய்சான ஜெய் ஒல்லி ஸ்ரீதேவி இல்லியோ
ஆட்டோராஜா - தமிழ்ச் சங்கத்தில் காணாத கவிதை அங்கத்தில் யார் தந்தது - அழகிய பாடல் வெகுசுமார் ஹீரோயின் ரெண்டுமெ நல்ல பாட்டு..
சின்னக் கண்ணன் சார்,
அருமையான பாடல்களை ஞாபகப்படுத்தி விட்டீர்கள்.
'டாக்சி டிரைவர்' படத்தின் 'சாந்தி... மை ஹோலி ஏஞ்சல்' பாட்டும் அருமை. பாலாவும், வாணியும் கொஞ்சிக் கொள்வார்கள்.
நன்றி புகைப்படத்திற்கு வாசு சார்.. படம் நான் பார்த்ததில்லை..தயிர்சாதம் வித் காஃபி மாதிரி என்னவொருகாம்பினேஷனோ :)
'ஆட்டோ ராஜா'
தமிழ்ச் சங்கத்தில் காணாத கவிதை அங்கத்தில் யார் தந்தது...
தானா நனனனனன.........
சூப்பர். நீங்கள் குறிப்பிட்டது போல வயது முதிர்ந்த மாதிரி ஒரு ஹீரோயின். (பார்க்க முஸ்லீம் மங்கை போன்ற தோற்றம்)
ஆனால் சாமியார் கலக்கி விடுவார்.
இதைவிட இன்னொரு அருமையான பாடல்.
ராஜீவ் நடித்த 'நாடோடி ராஜா' (1982) வில் அருணாவுடன் ஒரு டூயட்.
பாலா ஜானகியின் இன்னொரு அதிசயம்.
சும்மா சொல்லக் கூடாது. சங்கர் கணேஷ் நம் நெஞ்செல்லாம் நிறைவர்.
சந்தனப் புன்னகை
சிந்திய கன்னிகை
மந்திர மல்லிகைதானே
தேன் மழை பொழியும்
இதழ்களில் வழியும்
விடிந்ததும் காய்ந்து விடும்.
நெஞ்சோரம் இந்நேரம் கள்ளூறும்
இவள் ஒரு தாவணி மேகம்
இதயம் அமுதில் நனையும் தொடுகையில்
பார்வை வேறானது
இங்கு வேர்வை ஆறானது
சேலை தொடு
மாலை இடு
இளமையின் தூது விடு
பாடு
உடனே பாலா சிரித்தபடி 'சந்தனப் புன்னகை' யை சிந்துவார் பாருங்கள். அடடா! சொர்க்கம்... சொர்க்கம்.
எத்தனை முறை கேட்டாலும் அலுக்காத ஒரு பாடல் இது எனக்கு.
http://www.youtube.com/watch?v=X2CFrJExt8M&feature=player_detailpage
Humble request to Neyveliaar to come to Thaliavar Thread which is our
bread and butter. Do consider as Raghavendra Sir posted. Use this thread
as a side dish and not as meals.
Regards
வாசு,
தவிர்க்க முடியாத ஒரு காரணத்தினால் ஒரு சில நாட்கள் ஹப்பிற்கு வர முடியவில்லை. பிறகு கிருஷ்ணாஜி மூலமாக உங்களின் இந்த புதிய திரியைப் பற்றி அறிந்தேன்.
ஒரு பக்கம் மகிழ்ச்சி. மற்றொரு பக்கம் வருத்தம். வருத்தம் என்னவென்றால் நீங்கள் நடிகர் திலகத்தின் திரிக்கு வராமல் இருந்தது. ஆயினும் பரவாயில்லை. கண்டிப்பாக வருவேன் என்று என்னிடம் நீங்கள் சொன்னதை உங்கள் மன சங்கடம் எல்லாம் விலகிய பின் நிறைவேற்றுவீர்கள் என நிச்சயம் நம்புகிறேன்.
மகிழ்ச்சி என்னவென்றால் நான் உங்களிடம் முன்பு கூறியது போல் விழலுக்கு இரைத்த நீராக போய்க் கொண்டிருந்த உங்கள் உழைப்பை மீண்டும் மூன்று போக சாகுபடி கிடைக்கும் மண்ணில் பயிரிட்டிருப்பதை குறிப்பிடுகிறேன்.
உங்கள் பாடல் ஞானமோ அசாத்தியமானது. உங்களுக்கு உறுதுணையாக இசையின் பல்வேறு பரிமாணங்களையும் 50, 60 ஆண்டு கால பாடல்களையும் அறிந்த ராகவேந்தர் சார், கோபால், கிருஷ்ணாஜி, கார்த்திக், சின்னகண்ணன் இவர்களெல்லாம் சேர்ந்து உங்களுக்கு தோள் கொடுக்க திரி உயரத்தில் பறக்கிறது. இனியும் உயரம் தாண்டும். பார்த்தசாரதி வேறு சேர்ந்து கொள்கிறேன் என்று சொல்லியிருக்கிறார். அவருக்கும் ஏகப்பட்ட பாடல்கள் தெரியும். இந்த திரி ஒரு சாதனை படைக்கும் என்பதில் சந்தேகமில்லை. அதற்கு ஒரு சிறு ஆதாரம்தான் இதுவரை என் போன்ற ஒரு சிலருக்கு மட்டுமே தெரிந்த கிருஷ்ணாஜியின் பாடல் புலமை இந்த திரி மூலமாக இப்போது அனைவருக்கும் தெரிய வந்துள்ளது.
இசையின் வடிவங்கள் பற்றியோ இசைக் கருவிகள் பற்றியோ எதுவும் தெரியாத நான் [சொல்லப் போனால் பல முறை நீங்ககளும் கார்த்திக் போன்றவர்களும் ஒரு பாடலை பற்றி அலசும் போது பாடலில் பயன்படுத்தப்பட்டிருக்கும் இசைக் கருவிகளைப் பற்றியெல்லாம் விவரிக்கும் போது பொறாமையே பட்டிருக்கிறேன்] எனக்கு பிடித்த பாடல்கள் இங்கே வரும்போது என் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கிறேன்.
என மனங்கனிந்த பாராட்டுகள் மற்றும் வாழ்த்துகள்!
அன்புடன்
In Indian classical music, 'Sampūrṇa rāgas (संपूर्ण, Sanskrit for 'complete', also spelt as sampoorna) have all seven swaras in their scale. In general, the swaras in the Arohana and Avarohana strictly follow the ascending and descending scale as well. That is, they do not have vakra swara phrases (वक्र, meaning 'crooked').
In Carnatic music, the Melakarta ragas are all sampurna ragas, but the converse is not true, i.e., all sampurna ragas are not Melakarta ragas. An example is Bhairavi raga in Carnatic music (different from the Bhairavi of Hindustani music). Some examples of Melakarta ragas are Mayamalavagowla, Todi, Sankarabharanam and Kharaharapriya.
மாயா மாளவ கௌளை .
நான் ஏற்கெனெவே கூறிய படி இந்த ராகத்தை technical ஆக அலச போவதில்லை.ஒரு ராகம் என்றால் என்னவென்றே தெரியாத பாமரனாக என்னிடம் அது ஏற்படுத்திய கிளர்ச்சிகளை,உணர்வுகளை விவரித்து ,அதற்கு பெயர் எனக்கே பிறகுதான் தெரிந்ததால்,இது ஒரு புது பாதையில் விவரணை. தொடரும் அன்பர்களுக்கு நன்றி.போரடித்தால் சொல்லுங்கள் .நிறுத்தி விட்டு உங்களோடு அரட்டையில் ஜாலியாக பங்கு பெறுகிறேன்.
தமிழில் ஓடி கொண்டேயிருக்கும் பாடல்கள் சொற்பம். அப்படி ஒரு அற்புத பாடல் .இத்தனைக்கும் கதாநாயகர் விபத்தால் ஊனமுற்றிருப்பார்.உட்கார்ந்தே நாயகியின் சித்திரத்தை வரைய தலை படுவார்.அவளை சகுந்தலையாக வரித்து. பின்னழகி சகுந்தலையோ துள்ளி துள்ளி ஓடி நம் மனதை அலை பாய வைப்பார்.
பார்த்த உடனே எனக்குள் அதிர்வை ஏற்படுத்திய ஒரு வித்தியாச படத்தில் இந்த பாடல். கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா?
உங்கள் மனதை மலர்ச்சியாக்கி ஜெட் வேகத்தில் ஓட செய்து இலகுவாக்கி ,காதல் உணர்வை ஊட்டி ,கேள்விகளையும் எழுப்பி பதிலும் தரும் இதத்தை இந்த ராகம் கொடுக்கும். எல்லா நேரமும்,காலமும் எப்போது இந்த ராகத்தை கேட்டாலும் மனம் வானில் பறக்கும்.
மற்றொரு எனக்கு பிடித்த படத்தில் பிடித்த பாடல்.நாயகன் இடம் மாறியிருப்பான்.திடீரென ஸ்பெயின் மாடுபிடி விளையாட்டாய் ஒரு அற்புதமாக கோரியோ க்ராப் செய்யப்பட்ட துள்ளிசை. ராட்சச பாடகிக்கு ,எனக்கு பிடித்த பம்பிளிமாஸ் செக்ஸி பாம் ஒருத்தியின் காளை சண்டை ஆட்டம்.சிறு வயதில் நான் மிக ரசித்த படம்,மற்றும் பாடல்.சரிவிகிதத்தில் அனைத்தும் கொண்ட எங்கள் எம்.எஸ்.வீ சாரின் அழியா உற்சாக பாடல்.
"துள்ளுவதோ இளமை"
இப்படி ஒரு கிளாஸ் மற்றும் மாஸ் பாடலை தர முடிந்த ஒரு அற்புத ராகமே மாயா மாளவ கவுளை.
என்னை கவர்ந்த மற்ற பாடல்கள்.
நிலவே நீ இந்த சேதி சொல்லாயோ- அருண கிரி நாதர்.
மதுர மரி கொழுந்து வாசம்-எங்க ஊரு பாட்டு காரன்.(போச்சு முரளி !!!)
ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்-முள்ளும் மலரும்.
காதல் கவிதைகள் படித்திடும் நேரம்-கோபுர வாசலிலே.
மாசறு பொன்னே வருக- தேவர் மகன்.
பூவ எடுத்து ஒரு மாலை-அம்மன் கோவில் கிழக்காலே.
பூப்போலே உன் புன்னகையில் -கவரி மான்.
சொல்லாயோ சோலை கிளி - அல்லி அர்ஜுனா .
எனக்கு பிடித்த பாடல்களில் முத்திரை வரிகள்.
முகத்தில் முகம் பார்க்கலாம்- "இகத்தில் இருக்கும் சுகம் எத்தனை ஆனாலும் இருவர்க்கும் பொதுவாக்கலாம் ,அன்பே ,அதன் எண்ணிக்கை விரிவாக்கலாம்".
நினைப்பதெல்லாம்-" ஆயிரம் வாசல் இதயம்.அதில் ஆயிரம் எண்ணங்கள் உதயம்".
உள்ளத்தில் நல்ல உள்ளம்- "தாய்க்கு நீ மகனில்லை,தம்பிக்கு அண்ணனில்லை,ஊர் பழி ஏற்றாயடா"
மலர்ந்தும் மலராத- "நதியில் விளையாடி கொடியில் தலை சீவி நடந்த இளம் தென்றலே"
கல்லெல்லாம் மாணிக்க -"உண்டென்று சொல்வதுந்தன் கண்ணல்லவா,இல்லையென்று சொல்வதுந்தன் இடையல்லவா"
பூ வரையும் பூங்கொடியே-"கன்னமெனும் கிண்ணத்திலே வண்ணங்களை குழைத்தாயே,பொங்கி வரும் புன் சிரிப்பில் கொஞ்சம் கொஞ்சம் இரைத்தாயே"
தரை மேல் பிறக்க வைத்தான்-"கடல் நீர் நடுவே பயணம் போனால் குடிநீர் தருபவர் யாரோ"
ஹம்மிங்க்ஸ் இனிமைகள் நிறைந்த பாடல்கள் ..இரவின் மடியில் பாடல்கள் சில .....
பவள கொடியிலே முத்துக்கள் ............
கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா .....
பூ மாலையில் ஓர் மல்லிகை ..........
காதல் காதல் என்று சொல்ல கண்ணன் ............
காதலன் வந்தான் ....
பொட்டு வைத்த முகமோ .......
திருவளர் செல்வியோ .. நான் தேடிய .......
மழை பொழிந்து கொண்டே இருக்கும் .....
இசை அரசி சுசீலாவின் தேன் குரலில் நடிகை சரோஜாதேவியின் பாடல் நடிப்பில் அமைந்த இந்த பாடல் .
http://youtu.be/tuVJGAMHGEA
1969ல் மெல்லிசை மன்னரும் கே.வி.எம். அவர்களும் கோலோச்சிக் கொண்டிருந்த நேரத்தில் புகழின் உச்சிக்கு மற்றொரு பக்கம் உயர்ந்து கொண்டே இருந்தவர்கள் சங்கர்-கணேஷ் இசையமைப்பாளர்கள். மகராசி படத்திலேயே சூப்பர் ஹிட் பாடல்கள் மூலமாக அறிமுகமாகி புகழ் பெற்றவர்களின் வேகமான வளர்ச்சிக்கு அவர்களுடைய வித்தியாசமான இசை முயற்சி ஒரு முக்கிய காரணம். சங்கர் கணேஷ் இசை எனத் தனியே அடையாளம் காணும் அவர்களுக்கு தங்கள் முத்திரையைப் பதித்தார்கள். அந்தக் காலத்து இளைஞர்களின் மனம் கவர்ந்த இசையமைப்பாளர்களாகவும் உருவெடுத்தார்கள்.
அப்படி அவர்களின் புகழை பரப்பியதில் அக்கா தங்கை படத்தில் இடம் பெற்ற ஆடுவது வெற்றி மயில் பாடலுக்கு மிக மிக முக்கியமான பங்கு உண்டு. பட்டி தொட்டி என்று சொல்வார்களே அது போல எங்கும் எதிலும் ஆடுவது வெற்றி மயில் ஒலித்தது. இப்படம் நூறு நாட்கள் ஓடி மாபெரும் வெற்றி பெற்றதில் சங்கர் கணேஷின் இசைக்கு முக்கிய பங்கு உண்டு. குருவிகளா, குருவிகளா பாடலும் இதே போல் சிறப்பான வரவேற்பைப் பெற்றது. சீர்காழியின் குரலில் பாட்டோடு ராகம் இங்கே மோதுதம்மா பாடலும் நெஞ்சைத் தொட்டுச் செல்லும் பாடல்.
இவையல்லாது ஈஸ்வரியின் வசீகரக் குரலில் இடம் பெற்ற ஒரு பாடல் மாறி வரும் சொஸைட்டி. இதிலும் சங்கர் கணேஷின் திறமை பளிச்சிடும். இன்று பார்க்கும் போதும் கேட்கும் போதும் இப்பாடலில் அவர்களின் இசைக் கருவிகளின் பிரயோகமும் பயன் படுத்தியுள்ள விதமும் பாராட்ட வைக்கிறது.
அபூர்வமான இப்பாடல் ராட்சசியின் ரசிகர்களான வாசுவுக்கும் மற்ற நண்பர்களுக்குமாக இங்கே
http://youtu.be/W5Kgw0ASKiE
இப்பாடலில் முதல் சரணத்திற்கு முன் வரும் பியானோ, கிடார் மற்றும் வாய்ஸ் வாப்ளிங் குறிப்பிடத் தக்கது. ஒரே துடிப்பு ஒரே நடிப்பு இந்த வரிகளின் போது இடையிடையே ட்ரம்பெட் ட்ரம்ஸ் என கலக்கியிருப்பார்கள். இரண்டாம் சரணத்தின் போது அக்கார்டியன் கலக்கல். பாடல் முழுதும் ட்ரம்ஸ் தாளம் போட்டுக் கொண்டே ஆட வைக்கும்.
மொத்தத்தில் வித்தியாசமான இசையமைப்பில் அருமையான பாடல்
அன்பு முரளி சார்,
தங்களின் அன்பான, இதயபூர்வமான வாழ்த்துதல்களில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன். இப்படி ஒரு திரி தொடங்க வேண்டும் என்பது என் நெடுநாள் ஆசை. நமது ஹப்பில் இது போன்ற திரிகள் சிலவற்றைப் பார்த்து நான் மகிழ்ந்ததுண்டு. அதில் வருத்தம் என்னவென்றால் அவையெல்லாம் ஒருசில பக்கங்களோடு நின்று போனதுதான்.
திரை இசை மற்றும் பாடல்களைப் பற்றி அறிந்த பல ஜாம்பவான்கள் நிறைய இங்கு இருக்கிறார்கள். அவர்கள் எல்லோரையும் ஒன்று சேர்த்து திரை இசை பொற்காலப் பாடல்களை அலச ஆவல் கொண்டேன்.
நடிகர் திலகம் பற்றிய கருத்துக்கள், சம்பாஷணைகள் தவிர்த்து நான் எனக்கு நினைவு தெரிந்ததிலிருந்து நண்பர்களிடம் பேசி மகிழ்ந்து, பகிர்ந்து கொள்வது பழைய பாடல்களைப் பற்றிதான். அதிலும் குறிப்பாக
அதிகம் வெளியே தெரியாத அற்புதப் பாடல்கள். எவ்வளவோ திறமையான இசைக் கலைஞர்கள் வெளிச்சத்துக்கு வராமல் போய் இருக்கிறார்கள்.
உதாரணத்திற்கு எடுத்துக் கொண்டோமானால் பாடகி சொர்ணா அவர்கள். இயக்குனர் பாலச்சந்தரின் நாடகப் பட்டறையிலிருந்து வந்த மெல்லிசை மாமணி வி. குமார் அவர்களின் மனைவி. தேனும், பலாச்சுளையும் சேர்ந்தது போன்ற வசீகரக் குரலுக்கு சொந்தக்காரர் அவர்.
அப்போதிலிருந்தே நான் அவருடைய குரலுக்கு அடிமை.(ராட்சஸியை விடுங்கள். அவர் பெரும் புகழ் பெற்றவர்) சொர்ணா பாடிய பாடல்கள் மிகக் குறைவு. விரல் விட்டு எண்ணி விடலாம்.
ஆனால் அவர் பாடிய ஒவ்வொரு பாடலும் நங்கூரம் பாய்ச்சியது போல என் மனதில் பதிந்து விட்டன.
மிகப் பிரபலமாக வந்திருக்க வேண்டிய பாடகி. ஆனால் என்ன காரணமோ! அவர் பிரபலமாகவில்லை.
இப்படி பி.வசந்தா, மாதுரி, எம்.ஆர்.விஜயா, மல்லிகா பாடகர்களில் கோவை சௌந்தரராஜன், பொன்னுசாமி (கமர்ஷியல் பாடல்களில் கில்லாடி) தாராபுரம் சுந்தரராஜன், எம்.எல்.ஸ்ரீகாந்த், தனசேகரன் இசையமைப்பாளர்களில் என் நெஞ்சில் என்றும் நிறைந்திருக்கும் ஷியாம், ராஜன் நாகேந்திரா, சலீல் சௌத்ரி, விஜயபாஸ்கர், ஜி.கே. வெங்கடேஷ், மரகதமணி என்று பட்டியல் நீளும்.
நாம் பொதுவாக மெல்லிசை மன்னர், இளையராஜா, பி.சுசீலா, ஈஸ்வரி, ஜானகி, பழைய சூப்பர் ஹிட் பாடல்கள் என்றே பழக்கப்பட்டு விட்டோம். நான் மேற்குறிப்பிட்ட சந்தையில் அதுவும் தமிழ் சினிமா சந்தையில் அதிகம் பேசப்படாத இசைக்கலைஞர்கள் இந்தத் திரி மூலமாக அனைவரையும் சென்றடைய வேண்டும் என்பதே என் பெரும் விருப்பம்.
இதில் கிருஷ்ணாஜி மிக மிக இவ்விஷயத்தில் உறுதுணையாக இருக்கிறார். அவரின் மெமரி பவரைக் கண்டு நான் அசந்து போய் நிற்கிறேன். மற்றும் என் அருமை நண்பர்கள் ராகவேந்திரன் சார், கார்த்திக் சார், சின்னக் கண்ணன், வினோத் சார், பார்த்தசாரதி சார், கோபு சார், ஸ்டெல்லா மேடம், ராஜேஷ் சார், ரவி சார் (கோபாலை விடுங்கள். மகா மேதைகளைப் பற்றி நான் சொல்லித்தான் தெரிய வேண்டுவதில்லை) உள்ளிட்ட அனைத்து நண்பர்களுக்கும் இதில் இவ்வளவு ஆர்வமா என்று திகைப்பாக இருக்கிறது.
மற்றபடி இந்தத் திரி ஆரம்பிக்க நிச்சயம் வேறு காரணங்கள் எதுவும் இல்லை. நீங்கள் குறிப்பிட்டது போல நடிகர் திலகம் திரியை மறக்க வேண்டுமானால் என் சுவாசத்தைதான் மறக்க வேண்டும். அத்துணை நல்ல இதயங்களும் நடிகர் திலகம் திரிக்கு அழைப்பு விடுக்கும் அளவிற்கு நான் அனைவர் நெஞ்சிலும் இருக்கிறேன் என்பதை விட எனக்கு வேறு மகிழ்ச்சி இருக்க முடியாது. அத்துணை பேருக்கும் என் கோடானு கோடி நன்றிகளை இதயபூர்வமாக தெரிவித்துக் கொள்கிறேன். எல்லாவற்றுக்கும் காலமே சிறந்த தீர்வைக் கொடுக்கும்.
இப்போது உங்களிடம் வருகிறேன்.
இசையை, பாடல்களை ரசிப்பதில் நீங்கள் எந்த அளவிற்கும் அனைவருக்கும் கிஞ்சித்தும் குறைந்தவர் கிடையாது என்பதை நீங்கள் அனுபவித்து ரசித்த 'எல்லாம் அவன் தந்தது' (அப்போதே சொன்னேனே கேட்டியா) பாடல் ஒன்றே சாட்சி ஒருபானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் போல.
பல திரையுலக அதிசயங்களை, ரகசியங்களை, இனிமையாக அம்பலப்படுத்தும் நீங்கள், பொய்கள் தலையெடுக்கும் இடங்களில் உண்மையை உணர வைக்கும் நீங்கள், பாட்டுடைத் தலைவனின் தலையாய ரசிகராய் கொஞ்சமும் சுயநலம் பாராமல் அவருக்காகவே உழைத்து வரும் நீங்கள், அவர்பற்றிய ஜனரஞ்சகமான கட்டுரைகளை அளித்துவரும்
நீங்கள்
இந்தத் திரியில் பங்கு கொண்டால் (தங்களுக்கு நேரம் கிடைக்கும் போது மட்டுமே. தங்களது நேரமின்மையை நன்கு அறிந்தவன் நான்)
எங்களைவிட பாக்கியசாலிகள் எவரும் இருக்க முடியாது.
மீண்டும் தங்களது அன்பு வாழ்த்துகளுக்கு நன்றி!
இப்போது என் இன்னொரு மனம் கவர்ந்த பாடகி சொர்ணா அவர்கள் 'தூண்டில் மீன்' படத்தில் ஜெயச்சந்திரனுடன் இணைந்து பாடிய ஒரு அற்புத பாடலை என்னுடைய சிறு பரிசாக (ஆனால் விலை மதிக்க முடியாத பரிசு என் வரையில்) 'மதுர கானங்கள்' திரியின் சார்பாக மிக்க மகிழ்ச்சியுடன் தங்களுக்கு வழங்குகிறேன்.
இன்னொரு ரகசியம். இந்தப் பாடலை இதுவரைக்கு நான் யாருக்கும் வழங்கியதில்லை. அவ்வளவு ரகசியமாக இப்பாடலை ரசிப்பவன் நான்.
இப்போது எங்கள் முரளி சாருக்காக முதன் முதலாக இத்திரியில் வழங்குகிறேன்.
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=mMv0BkkCBDU
சாருகேசி .
சிறிய வயதில், தாத்தா பெரிய கிராமபோன் வைத்து கொண்டு ,family தோசை சைசில் ரெகார்ட் போட்டு கேட்பார்.உச்ச ஸ்தாயியில் அலறும் அந்த குரல் என்னை ஒன்றும் கவரவில்லை.(அந்த கால cult சூப்பர் ஸ்டார் பாகவதர்).இன்று டி.எம்.எஸ் சில பாடல்கள் நீங்கலாக இதே உணர்வைத்தான் கொடுப்பார். கால,ரசனை மாற்றம்.ஆனாலும் ஒரு ஐந்து பாடல்களின் music content என்னை மிக கவரும்.அப்படி என்னை ஈர்த்த ஒன்றுதான் "மன்மத லீலையை வென்றார் உண்டோ?"
என் சிவாஜி மன்ற முதிய நண்பர் (அவருக்கு அப்போது 50 வயது.நான் பதினொன்று),மன்றத்தில் உட்காரும்போதெல்லாம் இரண்டு பாடல்களை பாடுவார்.(மற்றதை இன்னொரு சந்தர்ப்பத்தில்)அதில் ஒன்றை எனது பள்ளி பாட்டு போட்டிக்கு என்னை தேற்றி முதல் பரிசு வாங்க செய்தார். அந்த பாடல் "வசந்த முல்லை போலே வந்து".
நான் ,என் தங்கை உட்கார்ந்து லிஸ்ட் போட்டு பழைய பாடல்களை (பாண்டி பஜார் அருகே ஒரு கடை) டேப் செய்து கேட்போம்.(pre -recorded அலர்ஜி .நிறைய குப்பை சுமந்து வரும்).அப்போது எங்கள் லிஸ்டில் தவறாமல் முதலாக (இன்றும்தான்)இடம் பெரும் உன்னத அழியா இசை அதிசயம் "தூங்காத கண்ணென்று ஒன்று".
இந்த ராகமும் மேளகர்த்தா சம்பூரணம்தான். ஒரு ராகம் மெல்லிய காதல் உணர்வை கிளர்ந்தெழ செய்து ,உங்கள் காதலியிடம் உங்கள் உணர்வை அமைதியாக சொன்ன பிறகு, ஒரு திருப்தியை தருமே ?அதை உணர்ந்திருக்கிறீர்களா? அந்த உணர்வுடன் ,இனிய தாலாட்டை கலந்து கண் மூடினால் வரும் பரம சுகத்தை இந்த ராகம் அனுபவிக்க வைக்கும்.
இந்த ராகத்தில் எனது மற்ற தேர்வுகள்
மலரே குறிஞ்சி மலரே -டாக்டர் சிவா.
தூது செல்வதாரடி- சிங்கார வேலன்.
முத்து குளிக்க- அனுபவி ராஜா அனுபவி.
சின்ன தாயவள் தந்த-தளபதி.
உதயா உதயா - உதயா.
ஊரெங்கும் தேடினேன் - தேன் நிலவு.
கோ,
எனக்கு ராகங்கள் புரிகிறதோ இல்லையோ! உங்கள் மாயா மாளவ கௌளை, சாருகேசி இந்தத் திரியப் பார்க்கும் ராகங்கள் பற்றிய அறிவு சார்ந்தவர்களை கொள்ளை அடிக்கும் என்பது மட்டும் நிஜம். எதிலும் தரம் வேண்டும் என்று நினைக்கும் நீங்கள் ராகங்கள் விஷயத்தில் மட்டும் விட்டு விடவா போகிறீர்கள்?
கொஞ்ச கொஞ்சமாக நானும் உங்கள் ராகப் பதிவுகளைப் படித்து அவற்றைப் பற்றி ஓரளவேனும் தெரிந்து கொள்ள முயற்சி செய்கிறேன்.
குருவே துணை.
ராகவேந்திரன் சார்,
'அக்கா தங்கை' ஆகா! ஆகா! மாறி வரும் சொஸைட்டியில் மாறாத இனிமை தரும் பாடல். இப்பாடலை ஒரு காலத்தில் கடைகடையாக கேசட்டில் பதிவு செய்ய ஏறி இறங்கியிருக்கிறேன். (கடைக்கார நண்பர் இளக்காரமாய் ஒரு பார்வை வீசுவார் பாருங்கள்... 'வந்துட்டான்யா! இல்லாத பாட்டையெல்லாம் கேட்டு உயிரெடுக்க')
இப்பாடலைத் தாங்கள்
அளித்தது பியூட்டி.
இப்பாடலுடன் நாம்
இணைவது டியூட்டி.
ராட்சஸி ரிவால்வார் ரீட்டா இருவரும் இணைந்தால் இனிய சுகம்தான் என்றும்.
வினோத் சார்,
இசை மழை தூறத் துவங்கியிருக்கும் 'மதுரகானம்' திரியில் கண்ணியப் பாடகியின் 'மழை பொழிந்து கொண்டே இருக்கும்' பாடல் தங்கள் ரசனையின் பிரதிபலிப்பு. பாராட்டுகிறேன்.
எனக்கு இங்கே வொர்க்கிங்க் டே..அங்கே லீவ் தானே.. கேளுங்கள் இந்த கானங்களை..
முத்தம் போதாதே சத்தம் போடாதே
ரத்தம் சூடானதே நாணமே நாணுதே
முத்தம் போதாதே சத்தம் போடாதே
ரத்தம் சூடானதே நாணமே நாணுதே
இதழ் முத்தம் தரும் அதில் பித்தம் வரும்
இதழ் முத்தம் தரும் அதில் பித்தம் வரும்
என்னையே உன்னிலே தேடினேன் அழகே
அப்புறம்..முத்தமிடும் நேரமெப்போஓ நினைவுக்கு வருதோன்னோ.. :)