-
14th June 2014, 02:38 PM
#231
Junior Member
Platinum Hubber
KANNADA MANJULA IN PUTHUVELLAM
-
14th June 2014 02:38 PM
# ADS
Circuit advertisement
-
14th June 2014, 02:41 PM
#232
இளமை நாட்டிய சாலை
tms ஜானகி காம்போ கல்யாணமாம் கல்யாணம்
-
14th June 2014, 02:42 PM
#233
Junior Member
Platinum Hubber
VIDHUBALA - TODAY
-
14th June 2014, 02:44 PM
#234
Senior Member
Diamond Hubber

Originally Posted by
chinnakkannan
காலையில் ஷாப்பிங்க்.. வெளியே வெய்யில் காரினுள்..”இளமை நாட்டிய சாலை... அழகான வாணி(?) மெலடி டபக்கென்று டிஎம் எஸ் வைகை நதி பெருகி வர...
அப்புறம் இந்த பனைமரம் தென்னை மரம் வாழை மரம் என்ற பாட்டு மனதில் ரீங்கரித்துக் கொண்டிருக்கிறது..இசைக்களஞ்சியத்தின் போது கேட்ட்து..என்ன படம் பின் விவரம் எதிர்பார்க்காலாமா..
சின்னக் கண்ணன் சார்!

1969-இல் வெளிவந்த சரோஜாதேவி நடித்த 'குலவிளக்கு' படத்தில் தான் 'பனைமரம், தென்னை மரம் வாழைமரம்' பாடல். எனக்கும் ரொம்ப விருப்பமான பாடல்.
இயக்கம் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன். மாமா இப்படத்திற்கு இசை. மரங்களை வைத்தே மனிதனின் குணத்தை விவரிக்கும் அற்புத வரிகள். simply superb
-
14th June 2014, 02:48 PM
#235
Senior Member
Veteran Hubber
பதிலுக்கு பதில்
1972-ல் வந்த ஒரு கௌபாய் சொதப்பல் வண்ணப்படம். ஏ.வி.எம்.ராஜன் கௌபாய் உடையில். விஜயகுமாரி இப்படத்துக்கு நாயகியாம், முத்துராமன் வில்லனாம். மொத்தத்தில் நட்சத்திர தேர்விலேயே தோல்வி.
இப்படத்தில் ஒரு பாடல். எஸ்.எம்.சுப்பையா நாயுடு இசையில் டி.எம்.எஸ். ஐயா பாடியது. 'ஆராதனா'வுக்கு அப்புறம், சிவகாமியின் செல்வனுக்கு முன் வந்தது. ரயிலில் பயணம் செய்துகொண்டிருக்கும் விஜயகுமாரியைத் தொடர்ந்து ராஜன் குதிரையில் பாடிக்கொண்டு போவார். ஜீப்பில் போனால் ரோட்டில் மட்டுமே போக முடியும். குதிரைதானே. இஷ்டத்துக்கு ரயில் போகும் வழியில் காடுமேடெல்லாம் போகும்.
அவள் ஜாதி பூவென சிரித்தாள்
ஒரு பாதிப்பார்வையில் அழைத்தாள்
அவள் பார்வையில் ஆயிரம் பாடல்
அந்தப்பாடலில் எத்தனை ஊடல்
இது பாலன் பிக்சர்ஸ் படம், எம்.ஆர்.ஆர்.வாசு, கே.கண்ணன் எல்லாம் இருப்பார்கள்.
-
14th June 2014, 02:51 PM
#236
கார்த்தி சார்
புது வெள்ளம் கன்னட மஞ்சுளா
திருநெல்வேலி பக்கத்தில் அவிச்ச பனகிழங்கு என்று சொல்லுவார்கள்
அது போல் இருப்பார்
1975 கால கட்டத்தில் கர்நாடகாவில் இருந்து பொங்கி வந்த புதுவெள்ளம்
உண்மையில் அவர் "ராஜா வீடு கன்னுகுட்டி" தான்
அப்புறம் "துளி துளி துளி மழைத்துளி" பாடலில் ஒரு வரி வரும்
"என்னை வாட்டுது வாலிப விரசம் அது நீ கை கொண்டு அணைதால் குறையும் " என்று பாடும் போது ஒரு நெளி நெளிவார் பாருங்க
-
14th June 2014, 02:58 PM
#237
எஸ்வி சார்
இந்த விது பாலா போட்டோ எங்கே பிடிசீ ங்க
சூப்பர்
இவங்க அப்பா ஒரு magicman என்று நினவு
இவங்க நடித்து எங்கம்மா சபதம் என்று ஒரு படம்
விஜய் பாஸ்கர் இசை
முத்துராமன் விது பாலா ஜோடி
சிவகுமார் ஜெயசித்ரா ஜோடி
tms குரலில் "வா இளமை அழைக்கின்றது" ஒரு பாடல் உண்டு
அப்புறம்
"அன்பு மேகமே இங்கு ஓடி வா எந்தன் துணையை அழைத்து வா
அர்த்த ராத்ரி சொன்ன செய்தியை எந்தன் நினைவில் நிறுத்தி வா "
சூப்பர் பாலா வாணி காம்போ
அதிலும் அந்த ராத்ரி என்ற வார்த்தையை பாலா உச்சரிக்கும் போது
-
14th June 2014, 03:00 PM
#238
Senior Member
Diamond Hubber
கிருஷ்ணா சார்,
'கல்யாணமாம் கல்யாண' த்தில் நம் ராட்சசி பாடகர் திலகத்துடன் சேர்ந்து பாடும் 'கவிதை நான் கவிஞன் நீ' ...பாடல். பைத்தியம் சார் இந்தப் பாடலின் மீது எனக்கு.
விஜயபாஸ்கர் அசத்தியிருப்பாரே!
லாலாலலா....லாலாலலா....லாலாலலா
கவிதை நான் கவிஞன் நீ
கலைகள் நான் ரசிகன் நீ
கனிகள் நான் பறவை நீ
கல்யாணம் யாரோடு நடந்தாலென்ன
கேட்டதுண்டு பலவகைக் காதல்
பார்த்ததில்லை ஏழை என் வாழ்வில்
கேட்டதுண்டு பலவகைக் காதல்
பார்த்ததில்லை ஏழை என் வாழ்வில்
என்ன வேண்டும் நான் தருவேனே
என்னை உறவாக நினைந்தால் என்ன
கவிதை நான் கவிஞன் நீ
மஞ்சள் வானம் மங்கள நிலவு
கொஞ்சும் பொழுது ஆயிரம் கனவு
மஞ்சள் வானம் மங்கள நிலவு
கொஞ்சும் பொழுது ஆயிரம் கனவு
மஞ்சம் இங்கே
வஞ்சியும் இங்கே
மஞ்சம் இங்கே
வஞ்சியும் இங்கே
நெஞ்சம் உடலோடு கலந்தாலென்ன
கவிதை நான் கவிஞன் நீ
பச்சைத் தோட்டம் பாவை உன் மேனி
பாடிப் பறக்கும் நான் ஒரு தேனி
அச்சம் மறந்தேன் (அஹ்) (என்ன ஒரு அலட்சிய வெட்டு இந்த ராட்சஸி யிடம் )
நாணமும் மறந்தேன்
அந்த உலகங்கள்
பிறந்தாலென்ன
மறக்க முடியமா என் பாட்டுத் தலைவியை?
-
14th June 2014, 03:01 PM
#239
கல்யாண சொர்கத்தின் ரதம் வந்தது
கண்ணீரில் நீ சொன்ன கதை வந்தது
பொன்வண்ண மேகங்கள் பேர் சொன்னதால்
பூமாலை நான் சூடும் நாள் வந்ததா
நான் நீ அன்றோ நீ நான் அன்றோ
எனது மயக்கம் தெளிந்ததஆ
-
14th June 2014, 03:05 PM
#240
Senior Member
Diamond Hubber
சின்னக் கண்ணன் சார் விதுபாலாவைக் கருப்பு வெள்ளை கட்டழகி என்றால் கிருஷ்ணாவோ அவிச்ச பனங்கிழங்கு என்கிறார்.
யாரங்கே! முடியல்ல! பி.எஸ்.வீரப்பவைக் கூப்பிடு.
Bookmarks