Sila chinnathirai secretgal.........
kanavarai pirindhuvitta ramyamaana thogupaalini.......
http://cinema.dinamalar.com/tamil-tv...on-secrets.htm
Nandri; Dinamalar.
Printable View
Sila chinnathirai secretgal.........
kanavarai pirindhuvitta ramyamaana thogupaalini.......
http://cinema.dinamalar.com/tamil-tv...on-secrets.htm
Nandri; Dinamalar.
Quote:
சைக்கோவாக நடிக்க வேண்டும்! -சீரியல் நடிகை கிருத்திகா பேட்டி
மெட்டி ஒலி சீரியலில் தனது சின்னத்திரை பிரவேசத்தை தொடங்கியவர் கிருத்திகா. அதையடுத்து பல மெகா சீரியல்களில் நடித்த அவர், தற்போது முந்தானை முடிச்சு, செல்லமே, வம்சம், கேளடி கண்மணி போன்ற தொடர்களில் நடித்து வருகிறார். தினமலர் இணையதளத்திற்காக அவர் அளித்த பேட்டி...
எந்தமாதிரியான கேரக்டர்களுக்கு முதலிடம் கொடுக்கிறீர்கள்?
நான் சீரியல்களில் நடிக்கத் தொடங்கியபோது எனக்கு நெகடீவ் ரோல்களாகத்தான் கிடைத்தன. ஆனால் இப்போது இரண்டுவிதமான வேடங்களும் கிடைத்து வருகிறது. என்னைக்கேட்டால் எந்த மாதிரி வேடம் கொடுத்தாலும் நடிப்பேன். ஆனால் அந்த வேடம் கதைக்கு முக்கியத்துவமானதாக இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருக்கிறேன்.
சீரியல் டைரக்டர்கள் சொன்னது போலவே நடந்து கொள்கிறார்களா?
முதலில் இந்த மாதிரி கேரக்டர் என்று சொல்லி புக் பண்ணுவார்கள். ஆனால் அதில் சிலசமயங்களில் மாற்றம் ஏற்படும். காரணம், சீரியலின் ரேட்டிங்கைப் பொறுத்து கதையில் அவ்வப்போது திருத்தம் செய்து கொண்டேயிருப்பார்கள். அப்போது அவர்கள் சொன்னது போலவே இல்லாமல் சில சமயங்களில் நம்முடைய கேரக்டரின் தன்மை குறையலாம். அதேசமயம், முதலில் சொன்னதை விட பின்னர் வெயிட்டான ரோலாகவும் மாற வாய்ப்பிருக்கிறது. அதனால் இந்த விசயத்தில் யாரையும் நிறை-குறை சொல்ல முடியாது.
வில்லியாக நடித்து நேயர்களிடம் திட்டு வாங்கிய அனுபவம் உண்டா?
அது பலமுறை நடந்திருக்கிறது. எங்காவது ஷாப்பிங் செல்லும்போது சந்திக்கும் பெண்கள், நான் யாரை கொடுமைப்படுத்துவது போன்று நடிக்கிறேனோ அந்த கேரக்டரின் பெயரை குறிப்பிட்டு, எதற்காக அப்படி கொடுமைப்படுத்துகிறீர்கள் என்று கேட்பார்கள். சிலர் கெட்ட வார்த்தையில் திட்டகூட செய்கிறார்கள்.
மேலும், வம்சம் தொடரில் நான் வில்லனுக்கு ஜோடியாகப்போவது போல் கதை சென்றபோது யாருக்கும் என்னை பிடிக்கவில்லை. ஆனால் பின்னர் அந்த வில்லனை நான் வேண்டாம் என்று சொன்னபோது எனது கேரக்டர் ரீச்சாகி விட்டது. அதேபோல், கேளடி கண்மணியில் தம்பிக்காக தட்டிக்கேட்கும் ஒரு அக்கா வேடத்தில் நடிக்கிறேன். பிரச்சினை செய்பவர்களை அடித்து விடும் அளவுக்கு கொஞ்சம் ஆவேசம் கலந்த வேடமும்கூட. இந்த வேடமும் தற்போது என்னை பேச வைத்துள்ளது.
எந்த மாதிரியான வேடங்களில் உங்களை உங்களுக்கு பிடிக்கும்?
வில்லியாகத்தான் என்னை எனக்கு பிடிக்கும். சீரியல்களில் கொலை செய்யும் அளவுக்கு கொடூரமான வேடங்களில் நடிக்க ஆசைப்படுகிறேன். ஆனால் நிஜத்தில் நான் ரொம்ப நல்ல பெண். கோபத்தில்கூட நான சூடான வார்த்தை களை பேச மாட்டேன். நேரில் பார்ப்பவர்கள், என்னம்மா நீ சீரியல்ல அப்படி நடிக்கிறே, ஆனா ரொம்ப சாப்ட்டா இருக்கியே என்று கேட்பார்கள். அந்த அளவுக்கு நிஜத்தில் நான் ரொம்ப சாப்ட்டான பெண். கேமரா முன்பு நடிக்கச் சொல்லும்போது மட்டுமே என்னை முழு வில்லியாக மாற்றிக்கொள்கிறேன்.
மேலும் முந்தானை முடிச்சு சீரியலில் நான் நடித்த பிரேமா என்ற வேடமும் எனக்கு ரொம்ப பிடிக்கும். ஒரு குடும்பத்தை பழிவாங்கும் ரோல். வயதானவர் ஒருவரை திருமணம் செய்து கொண்டு ஒரு பெண் அந்த குடும்பத்தை எந்த லெவலுக்கு சென்று பழிவாங்குவாள் என்பதுதான் கதையே. அந்த ரோலை நான் ரொம்ப என்சாய் பண்ணி நடித்தேன்.
உங்களை கவர்ந்த வில்லி நடிகை யார்?
தற்போது சந்திரலேகா நடித்துக்கொண்டிருக்கும் புவனேஸ்வரியை எனக்கு ரொம்ப பிடிக்கும். டிரஸ்ஸிங் சென்ஸ், பாடியை மெயின்டெய்ன் பண்ணுவது என பக்காவாக மாற்றிக்கொண்டு நடிப்பார். அதன்பிறகு தேவிப்ரியா. அவங்களும் டிரஸ், மேக்கப் என முழுசாக தன்னை மாற்றிக்கொண்டு நடிப்பார். செல்லமே தொடரில் கலக்கியிருப்பார்.
மேலும், திமிறு படத்தில் ஸ்ரேயா ரெட்டி நடித்த வில்லி வேடமும் எனக்கு ரொம்ப பிடிக்கும். அப்படி லட்டு மாதிரி ஒரு வில்லி வேடம் கிடைத்தால் பின்னி எடுத்து விடுவேன்.
என்னென் மாறுபட்ட வேடங்களில் நடிப்பதில் ஆர்வமாக உள்ளீர்கள்?
சைக்கோ மாதிரி, இது வேணும்னா அதுக்காக நான் எந்த லெவலுக்கும் போவேன் என்கிற மாதிரி வேடத்திலும் நடிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. லூசு மாதிரி நடிக்க ஆசை. இந்த மாதிரி வெரைட்டியாக பண்ணும்போது மாறுபட்ட பர்பாமென்ஸை கொடுக்க முடியும்.
எந்தமாதிரி வேடங்களுக்காக ரிகர்சல் எடுத்து கொண்டது உண்டு?
இந்த மாதிரி கேரக்டர் என்பதை டைரக்டர்கள் முன்பே சொல்லி விடுவார்கள். அதனால் அதற்கு ரெடியாக நாங்களும் ஸ்பாட்டுக்கு வருவோம். ஆனால் சினிமாவைப்போன்று முன்பே ரிகர்சல் கொடுப்பதெல்லாம் சீரியலில் கிடையாது. அதற்கு நேரமும் இருக்காது. ஒரு மணி நேரத்தில் இரண்டு சீன் எடுக்க வேண்டுமென்றால் அதை எடுத்த பிறகே விடுவார்கள். அந்த அளவுக்கு திட்டமிட்டுதான் சீரியல்கள் படமாக்கப்படுகின்றன என்கிறார் கிருத்திகா.
நன்றி: தினமலர்
Quote:
வில்லியாக நடிக்கத்தான் பிடிக்கிறது; வந்தனா சொல்கிறார்
பொன்னூஞ்சல் மற்றும் காதல் முதல் கல்யாணம் வரை தொடரில் வில்லியாக நடிக்கிறார் வந்தனா. சில தொடர்களில் பாசிட்டிவான கேரக்டர்கள் வந்தபோதும் நடிக்க மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இதுபற்றி வந்தனா கூறியதாவது:
சின்னத்திரைக்கு வந்தது முதலே நான் வில்லியாகத்தான் நடித்து வருகிறேன். இது நான் விரும்பி செய்ததில்லை. ஆனால் இப்போது வில்லி கேரக்டர்கள்தான் பிடிக்கிறது. அழ வேண்டியதில்லை. ரொம்ப சிரிக்க வேண்டியதில்லை. வில்லித்தனத்தை கச்சிதமாக வெளிப்படுத்தினால் போதும். அதனால்தான் வில்லி வேடங்களை விரும்புகிறேன்.
நிறைய சினிமா வாய்ப்புகள் வந்தது. நடிக்க விருப்பம் இருந்தாலும் நேரம் இல்லை. ஒரே நேரதில் இரண்டு சீரியல்கள், அதன்பிறகு நடன பயிற்சி, நடன நிகழ்ச்சி என்று பிசியாக இருப்பதால் சினிமாவில் நடிப்பது பற்றி யோசிக்க வில்லை. என்கிறார் வந்தனா.
நன்றி: தினமலர்
சீரியலையே நகர்த்தி செல்லும் மெயின் வில்லனாக நடிக்க வேண்டும்! - நடிகர் துரைமணி பேட்டி
கல்யாண பரிசு, அமுதா ஒரு ஆச்சர்யக்குறி, சிவரகசியம், ஆதிரா உள்பட பல சீரியல்களில் நடித்திருப்பவர் துரை மணி. ஒரு முழு சீரியலையே நகர்த்தி செல்லக் கூடிய மெயின் வில்லனாக நடிக்க வேண்டும் என்பதுதான் எனது இப்போதைய ஆசை என்கிறார் அவர்
தினமலர் இணையதளத்திற்காக அவர் அளித்த பேட்டி...
1993-ல் வெளியான மோகமுள் படத்தில் ஜூனியர் ஹீரோவாக நான் அறிமுகமானேன். அப்போது 3வது படித்தேன். அதன்பிறகு கல்லூரி படிப்பெல்லாம் முடித்த பிறகு இளவரசி, கல்யாண பரிசு சீரியல்களில் வில்லன் வேடம் கிடைத்தது. 2014ல் ஒளிபரப்பான இந்த சீரியல்தான் எனக்கு பெரிய அளவில் ரீச் ஆனது.
இந்த தொடர்களில் பெண்களை கொடுமைப்படுத்தும் வேடங்கள். புளு பிலிம் எடுப்பது. மயக்க மருந்து கொடுத்தாவது அடைய வேண்டும் என்று முயற்சிப்பது போன்று நடித்தேன். குறிப்பாக என்னை அசிங்கப்படுத்தும் பெண்களை பழிவாங்குவது போல் நடித்தேன். அப்படி நடித்த வேடங்கள்தான் எனக்கு பெரிய பெயரை வாங்கித்தந்தன.
அதைப்பார்த்து விட்டுத்தான் இயக்குனர் சிகரம் கே.பாலசந்தரின் அமுதா ஒரு ஆச்சர்யக்குறி சீரியலில் நடிக்க சான்ஸ் கிடைத்தது. அதில் ஒரு அனாதை வேடத்தில் நடித்தேன். கே.பாலசந்தரின் இயக்கத்தில் நடித்ததை என் வாழ்நாளில் மறக்கவே முடியாத தருணமாக அமைந்தது. பின்னர் சிவனின் ரகசியங்களை சொல்லும் சிவரகசியம் சீரியலில் ஒரு நெகடீவ் ரோலில் நடித்தேன். சூனியம், மாந்திரீகம் பண்ணுவது போல் நடித்தேன். அடுத்து கெளசல்யா நடித்த அக்கா சீரியலில் பாசிட்டிவான ஒரு ரோலில் நடித்தேன். பைரவியில் நெகடீவ் ரோல். இப்போது ஆதிரா ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கிறது. இப்படி பாசிட்டீவ், நெகடீவ் என இரண்டுவிதமான வேடங்களிலும் நடித்ததால் எனக்கு நல்லதொரு எக்ஸ்பீயன்சாக அமைந்து வருகிறது.
ஆதிராவில் உங்கள் ரோல் பற்றி?
ஆதிரா சீரியலில் அண்ணன் தம்பிகளாக நடிக்கும் 6 பேரின் பிளாஷ்பேக் இப்போது நடக்கிறது. அதில் 2வது பையனான தேவராஜ் என்ற கேரக்டரின் இளமை கால வேடத்தில் நான் நடிக்கிறேன். நான் நடிக்கிற இந்த தேவராஜ்தான் ஆதிராவின் மாமனார். மேலும், ராஜா காலத்தில் இருந்தே பராமரிக்கப்பட்டு வரும் ஒரு பொக்கிஷப்பெட்டியை அடைய நாங்கள் என்னென்ன செய்கிறோம் என்பதுதான் இப்போது நடந்து கொண்டிருக்கிறது. இந்த சீரியலின் படப்பிடிப்பு அனைத்தும் கேரளா, பொள்ளாச்சி காட்டுப்பகுதிகளில் நடைபெற்று வருகிறது. ஆக, இந்த சீரியலிலும் எனக்கு நேகடீவ் ரோல்தான் கிடைத்திருக்கிறது.
டைரக்டர்கள் உங்களை வில்லனாகவே பார்ப்பதேன்?
வில்லனாக நடித்த ஒரு சீரியல் ரீச் ஆனால் டைரக்டர்கள் அதே தாட்டில் போகிறார்கள். எனக்கு அதுதான் செட்டாகிறது. அந்த கதாபாத்திரங்களாகவே மாறி நடிக்கிறேன். மேலும், இப்போது ஒரு குறிப்பிட்ட காலம் மட்டுமே இல்லாமல் சீரியல்கள் முழுக்க மெயின் வில்லனாக நடிக்க வேண்டும் என்ற ஆசை இப்போது எனக்கு ஏற்பட்டுள்ளது. அடிதடி காட்சிகளிலும் நடிக்க வேண்டும். எல்லாமே நானாக இருக்க வேண்டும். இதுவரை நடித்த சீரியல்கள் எனக்கு நல்ல பயிற்சியையும், அனுபவத்தையும் கொடுத்திருப்பதால், இன்னும் என்னை மாறுபட்ட நடிகனாக வெளிப்படுத்தும் ஆர்வம் அதிகரித்துள்ளது.
உங்கள் நடிப்புக்கு எந்த மாதிரி விமர்சனம் வருகிறது?
ஒருநாள் கோயிலுக்கு சென்றபோது ஒரு பூக்கார பாட்டி, ஏன் அந்த பொண்ணை அப்படி கொடுமைப்படுத்துறே என்று என்னை திட்டினார். அதேசமயம், பலருக்கு இது சீரியல். நாட்டில் நடக்கும் விசயங்களைத்தான் சீரியலாக காட்டுகிறார்கள். கெட்டவன் வேடத்தில் இவர் நடிக்கிறார் என்கிற புரிதலும் உள்ளது. அந்த வகையில் நல்லவனாக நடிப்பதை ரசிப்பது போன்று கெட்டவனாக நடிப்பதையும் ரசிக்கிறார்கள். இது வரவேற்க வேண்டிய விசயம்.
http://img1.dinamalar.com/cini//CNew...3628000000.jpg
மேலும், நான் கலைத்துறைக்கு வருவதற்கு உறுதுணையாக இருப்பது என் அம்மா சிவகாமிதான். அவர் இல்லையென்றால் நான் நடிகனாகவே ஆகியிருக்க முடியாது. அதேசமயம் என் அம்மா எனது நடிப்பைப்பற்றி இதுவரை என்னிடம் எதுவும் சொன்னதில்லை. ஆனால், மற்றவர்களிடம் பெருமையாக பேசுவார். அதை நான் கேட்டிருக்கிறேன். அதுவே எனக்கு பெரிய சந்தோசம். ஆக, என் அம்மாவுக்கு என் நடிப்பு பிடித்திருப்பது தெரிகிறது என்கிறார் துரைமணி.
நன்றி: தினமலர்
Quote:
நானே நானா பேசும் மைனா
தியேட்டர்களில் கைதட்டல் சத்தம் அதிர, காமெடியால் சிரிப்பு பூக்கள் உதிர, ரசிகர்களின் ரசனையில் ரெக்கை கட்டி பறக்கும் அழகுக் குதிரை, நடிப்பு கோட்டையில் வெற்றி கொடி கட்டிய நம்மூர் மதுர நந்தினி, ,;நானே நானா பேசும் மைனா,; என்ற, கெத்தான கேரக்டரில் டிவி தொடரில் கலக்கோ கலக்குன்னு கலக்கி வருகிறார். ,;தினமலர்,; பொங்கல் மலருக்காக இவருடன் ஒரு கலகல கலாய் பேட்டி இதோ...
உங்களை பற்றி...
நான் ஒரு பக்கா மதுரை பொண்ணு. வக்போர்டு, அம்பிகா காலேஜ்ல தான் டிகிரி படிச்சேன்.
எப்படி நடிக்க வந்தீங்க ?
நடிக்குற அம்சம் இருக்குன்னு வம்சம் படத்துல இயக்குனர் பாண்டிராஜ் வாய்ப்பு கொடுத்தாரு. அப்புறம் கேடி பில்லா கில்லாடி ரங்கா, ரோமியோ ஜூலியட், வெள்ளைக்கார துரை, படங்களில் நடிச்சேன்.
சினிமா டூ டிவி..
முதல்ல ,டிவி; தொடர்ல நடிக்குற ஐடியாவே இல்லை. நடிச்சா ஹீரோயினா தான் நடிக்கணும்னு லட்சியமெல்லாம் இருந்துச்சு. டிவி தொடர்ல நண்பர் ரமணன் தான் நடிக்க வைச்சாரு. அது தான் இன்னிக்கு என்னை ஒரு நல்ல நடிகையா நடிப்பு உலகத்திற்கு கொண்டுவந்திருக்கு.
இனி சினிமால நடிப்பீங்களா ?
என்ன இப்படி கேட்டுபுட்டீங்க, என் ரசிகர்கள் காமெடி கேரக்டர்ல நடிக்க சொல்றாங்க. அடுத்த கோவை சரளா, மனோரமான்னு சொல்லி ஓவரா உசுப்பேத்தி வேற விடுறாங்க. கெத்து கேரக்டர் கிடைச்சா கண்டிப்பா நடிப்போம்ல
மதுரை பாஷைல சும்மா பின்றீங்களே..
இதுல என்ன ஆச்சர்யம்? நம்மூர் பேச்சு நமக்கு வராதா என்ன? டிவி தொடர்ல வர என்னோட ,;மைனா,; கேரக்டர் என் அம்மா தான். ஆமா, அவுங்க எப்படி மதுரை பேச்சு பேசுவாங்களோ அதை தான் நான் பேசுறேன். இது மட்டுமில்லை நெல்லை, கோவை, கன்னியாகுமரி என பல ஊர் பாஷைகளும் எனக்கு அத்துப்படி.
நடிக்க கிரீன் சிக்னல் எப்படி ?
என் அப்பா, அம்மா கிரீன் சிக்னல் தான் கொடுத்தாங்க. சொந்தக்காரங்க தான் ரெட் சிக்னல் போட்டாங்க. விண்ணை தாண்டி வந்த மாதிரி, சிக்னலை தாண்டி தான் நடிக்க வந்தேன். இன்னிக்கு சொந்த, பந்தமெல்லாம் என்னை பார்த்து பெருமைப்படுறாங்க
உங்களுக்கு பிடிச்ச காமெடி நடிகை?
கோவை சரளா, ஆரம்பத்துல இவங்க என்ன காமெடி பண்றாங்கனு எல்லாரும் சிரிக்குறாங்கன்னு நினைச்சேன். இப்போ என்னை பார்த்து ரசிகர்கள் ,;கோவை சரளா,;ன்னு சொல்லும் போது தான் புரியுது.
காமெடி மட்டும் தானா..
காமெடி நடிகையா ரசிகர்களை சிரிக்க வைக்குறதுல ஒரு திருப்தி இருக்கு. ஆனால், எந்த கேரக்டர் கொடுத்தாலும் என்னால நடிக்க முடியும்.
மதுரையும், பொங்கல் விழாவும்
மதுரை, பாரம்பரியத்தை போற்றும் பாசக்காரர்கள் நிறைந்த ஊர்ன்னு பெருமையா சொல்வேன். பொங்கலுக்கு முதல் நாள் விடிய, விடிய கலர் கோலம் போடுவோம். காலங்காத்தால மண் பானையில பொங்கல் வைச்சு சாமி கும்பிடுவோம்
பொங்கல் சபதம்?
புத்தாண்டுக்கு தான் சபதம் எடுப்பாங்க, பொங்கலுக்குமா? பொங்கி வரும் கோபத்தை குறைக்கணும்னு சபதம் எடுத்திருக்கேன்.
அடுத்த ஆண்டு தலைப் பொங்கல் போல...
அதுக்குள்ள விஷயம் தெரிஞ்சுருச்சா, நிச்சயதார்த்தம் முடிஞ்சது. கல்யாண வேலை நடந்துகிட்டு இருக்கு.
எந்த ஹீரோவுடன் நடிக்க ஆசை
தனுஷ், சிவகார்த்திகேயன் கூட கலகலன்னு காமெடி கேரக்டர்ல நடிக்கனும்.
http://img1.dinamalar.com/cini//CNew...5013000000.jpg
உங்கள் கனவு
என் வருங்கால கணவருடன் இணைந்து ஆரம்பித்த, ,;வே பவுண்டேஷன்,; மூலம் சென்னை மழை வெள்ள பாதிப்பிற்கு நிவாரண நிதி கொடுத்தோம். எங்களுக்கு தனுஷ் நிதி கொடுத்து உதவினார். இது போல இன்னும் நிறைய சமூக சேவைகள் செய்யணும்.
நன்றி: தினமலர்
Not sure where else to post. Maybe someone shared this already.
Balakumaran's out of body experience. Interview and recorded footage.
https://www.youtube.com/watch?v=o1WGlfcp6s4
"Ithellam naan paaka mudiyadhu na, nee paaka mudiyadhadhu neraiye iruku thambi. Naathigam pesum muttal nee. Unnai sulubamaga matramudiyum. Nalai naan irandu kadhal kadhaigalai eluthinaal yennai deivamaai paarpai." :lol2::oops:
IAS veadam kidaithaal sambalam vaangaamalea nadipean.
PRIYANKA
imayam, keaptan TV-yil 3 aandugalaaga nigalchi thogupaalaraaga irundhaar priyanga.
Nandri; Dinamalar.
http://cinema.dinamalar.com/tamil-tv...s-Priyanka.htm
coffee with DD-yil Ilaiyaraja.
isaijaani ilaiyaraja epodhume thani beatigalukku udanpaduvathillai. Adhuvum kuripaaga thanithu peati tharuvadhu aboorvamanathu.Aanaal Ilaiyaraja-vin nadavadikaigalil tharpothu maatrangal earpattullathu.
Nandri. Dinamalar.
http://cinema.dinamalar.com/tamil-tv...ee-with-DD.htm
Aadiyancin comments-ai arindhu nadikirean Nadigar Arnav.
kealadi kanmani seariyalil naayaganaaga nadithu varubavar Nadigar Arnav..Antha thodaril YUGI endra kearaktar makkal mathiyil nandraaga reach aagiyirukkiradhu.
Nandri. Dinamalar.
http://cinema.dinamalar.com/tamil-tv...says-Arnav.htm
chinnathirai nadigar sangathil puthiya kattupaadu amalukku varugiradhu.
chinnathirai nadigar sangathin thalaivaraaga tharpodhu shivan shrinivaas poruppeatrulaar. Kadantha madham nadaipetra thearthalil vetri petradhum, chinnathirai
nadigar sangathirkku PUTHIYA KATTADAM katapadum endra VAAKURUTHIyai ALITHULA AVAR,,,,,,,,,,,,,,,,,,,,,
NANDRI.Dinamalar.
http://cinema.dinamalar.com/tamil-tv...gar-sangam.htm
Aasramathil oyvedutha ramya,,,,,
chinnathirai thogupaalini, panbalai thogupaalini,Madel azhagi matrum periyathirai nadigai ipadi panmugangalai kondavar RAMYA................
migavum jallyanna type kondavar valzhkaiyil KONJAM SIKKAL Irukkiradhu.......
Nandri.Dinamalar.
Aasramathil oyvedutha ramya,,,,,
chinnathirai thogupaalini, panbalai thogupaalini,Madel azhagi matrum periyathirai nadigai ipadi panmugangalai kondavar RAMYA................
migavum jallyanna type kondavar valzhkaiyil KONJAM SIKKAL Irukkiradhu.......
Nandri.Dinamalar.
Aasramathil oyvedutha ramya,,,,,
chinnathirai thogupaalini, panbalai thogupaalini,Madel azhagi matrum periyathirai nadigai ipadi panmugangalai kondavar RAMYA................
migavum jallyanna type kondavar valzhkaiyil KONJAM SIKKAL Irukkiradhu.......
Nandri.Dinamalar.
http://cinema.dinamalar.com/tamil-tv...-in-ashram.htm
Irandu padhavi vagikkum Sonia.....
chellame, mugurtham endru pala thodagalil nadithavar Nadigai sonia.....
adhe samayathil periya thiraiyilum KALAKKI KONDIRUPAVAR......
Adhea samayathil nadigar sangathil SEYARKUZHU URUPINAR padhavikkaga pottiyittu VENDRAR.,,,,,,
Adhan piragu sameebathil chinnathirai nadigar sanga thearghal nadipetra pothum THUNAITHALAIVAR padhavikku pottiyirttu VETRI PETRIRUKIRAAR.
Aaga ore nearathil irandu pathavigal VAGITHU varugiraar Sonia.
avarai patri ;;;;;;; niraiya therindhu kolla;;;;;;;;
Nandri; Dinamalar.
http://cinema.dinamalar.com/tamil-tv...-Two-posts.htm
NEEYA NAANAA-vil AJITH-VIJAY KAARASAARA VIVAADHAM,,,,
VIJAY TV-yil NEEYA NAANAA MAKAL MATHIYIL migavum pirabalamaagiyirukiradhu.
ORE THURAIYAI SEARTHA MAATRUKARUTHUTHUKKAL KONDA IRANDU ANIGALAAGA AMAITHU, AVARGALIN KARUTHU , VIVAATHAM ENA KAARA SAARAMAANA meadaiyaakkiyirukkiraar GOPINATH...................
MEALUM THERINTHU KOLLA,,,,
Nandri. Dinamalar.
http://cinema.dinamalar.com/tamil-tv...eeya-Naana.htm
MEENDUM CHINNATHIERAIKKU VARA IRUKKIRAAR PEPSI UMA,,,,,,
THOLAIKAATCHIYIL MUTHAL NATCHATHIRA THOGUPAALINIYAAGA THIGALNTHAVAR PEPSI UMA,,,,,,
MAKAL MATHIYIL MIGA PIRABALAMADAINTHAVAR. umavin pattupudavaikkaagave ANTHA NIGALCHIYAI PAARTHAVAR PALAR........MEALUM,,,,
http://cinema.dinamalar.com/tamil-tv...Television.htm
Nandri.Dinamar.
chinnathirai nadigar ESHWAR-kkum Nadigai JEYASHI-kkum Thirumanam.
20.1.16 indru puthan kilamai kaalai kovilil simple-aaga thirumanam nadai petradhu. but reception 30.1.16 andru grandaaga nadai peravirukkiradhu. pavamannippu thodaril searnthu naditha piragu KADHAL= ARRANGED MARRIAGE.
Matra thagavalgal ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
Nandri;Dinamalar.
http://cinema.dinamalar.com/hindi-ne...ding-today.htm
villiyin kobathai dhyanam mulam kuraikkiraar REKHA KUMAR [DHEIVAMAGAL-GAYATHRI]
PAARIJADHAM thodar mulam arimugamaana rekha, kanada thiraipadam, malayala thodar, thamil thodar dheivamagal mulam thamilil muththirai pathithavar.
Nandri.Dinamalar.
http://cinema.dinamalar.com/hindi-ne...Meditation.htm
Nadhaswaram pugazh SHRUTHIKA-vukku VIRAIVIL Thirumanamaam.
http://cinema.dinamalar.com/tamil-tv...be-tieknot.htm
Nandri.Dinamalar.
Madhavanidam mutham petra simply Kushbhu.
Zee thamil tholaikaatchiyil every saturday night 8pm simply Kushbhu cenima nadigaridam peati kandu varugirar Kushbhu.
http://cinema.dinamalar.com/tamil-tv...m-madhavan.htm
Nandri.Dinamalar.
nadippukku goodbye solla irukkiraar lakshmi viswanath.......
thamilil Ezham uyir seriyalilum, malayalathil Nila Vizhakku seriyalilum nadithu varugiraar. MA padithu teacher aavathea avarin latchiyamaam. so indha 2 seriyalum viraivil mudiya pogiradhaam. podhuvaga ,,,,,,,,,,,,,,,,,,,,
http://cinema.dinamalar.com/tamil-tv...uit-cinema.htm
Nandri. Dinamalar.
Thamil TVkku varum Priyamani......
Bharathi raja mulam Kangalal kaithu sei padam mulam thamilukku vanthavar.adhan piragu balu mahendra mulam thanushudan athu oru kanakalam padathil nadithaar Priyamani.pinbu malaikottai, thotta pondra niraiya moviesil nadithu tholvi kandathaal THELUNGU,MALAIYALAM, KANNADAM movies-il niraiya nadithu kondirundhaar. thamilil munnukku varamudiyavillai. tharpothu vijay tv-yil king Of dance nigalchiyil naduvaraga varugiraar.
http://cinema.dinamalar.com/tamil-tv...Television.htm
Nandri. Dinamalar.
Nirvanamaga nadikka kuda thayaar solgiraar saaisakthi.
thanathu pathaavathu vayathil nadika thodangiyavar saisakthi. nadhasvaram,saravarnan meenakshi utpada 60 thodaril nadithavar.
kalaijar tv-yil 63 kalaijarin vasanathil Nayanmaargal thodaril sekilaragavum,ramanujarin Kurathaalvaar keraktarilum nadikiraar.
http://cinema.dinamalar.com/tamil-tv...Sai-Sakthi.htm
Nandri.Dinamalar.
Prammaandam nam paarambariyathai keduthu vidum nadigai Nalini peatti.
Krishnadhasi thodar mulam chinnathiraikku vandhar.ipodhu seriyalil busyaaga nadithu varugirar.
tharpothu nadithu varum seriyal patri solgiraar. china papa periya papa, thelungil ammana kodana thodarilum nadithu ,,,,,,,,,,,,,
http://cinema.dinamalar.com/tamil-tv...-interview.htm
Nandri. Dinamalar.
BEST COMEDIYANAAGA VENDUM NADHASWARAM PUGAZH MUNISHRAJA INTERVIEW.......
http://cinema.dinamalar.com/tamil-tv...unish-raja.htm
NANDRI.DINAMALAR.
VAKEEL AAGIRAAR AARTHI.
MakkaTholaikatchiyil china china aasaigal nigalchi mulam pugazh petravar Aarthi.intha nigalchiyai 5 varudamaaga thodarnthu nadithu sadhanai padaithulaar aarthi.......
http://cinema.dinamalar.com/tamil-tv...-as-lawyer.htm
Nandri.Dinamalar.
madhumithavukku dhruthi kodutha rolegal
oru kal kannadi padathil santhanathukku jodiyaaga nadithavar.
http://cinema.dinamalar.com/hindi-ne...-Madhumita.htm
Nandri.Dinamalar.
kanpaarvai illatha vedathil nadikka veandumchinnathirai nadigar jeyaraam peati.
Vani rani serial mulam prablamaanavar jeyaram. Adhaiyaduthu en iniya thozhi, kealadi kanmani ippadi niraiya serialil nadithu kondirukkum ivar,,,,,,,,
http://cinema.dinamalar.com/hindi-ne...t-in-Blind.htm
Nandri . Dinamalar.
நாடகத்துறைதான் என்னை தயார்படுத்தியது! -வின்சென்ட்ராய்
சக்தி, சித்தி, ஆலயம், அர்ச்சனைப்பூக்கள், பைரவி, அழகி, பொம்மலாட்டம் உள்பட பல மெகா சீரியல்களில் நடித்திருப்பவர் வின்சென்ட்ராய். நாடகத் துறையில் இருந்து வந்த இவர், நாடகம்தான் என்னை நல்லதொரு நடிகனாக தயார்படுத்தியது என்கிறார்.
தினமலர் இணையதளத்திற்காக அவர் அளித்த பேட்டி...
உங்களது நாடகத்துறை அனுபவத்தைப்பற்றி சொல்லுங்கள்?
நான் சுமார் 300 நாடகங்களில் நடித்திருக்கிறேன். அதோடு இந்த மாதிரிதான் என்றில்லாமல் எல்லாவிதமான கேரக்டர்களிலும் நடித்திருக்கிறேன். அன்றைய தினத்தில் நடிக்க வரவேண்டிய வில்லன் வரமுடியாமல் போனால் அவரது வேடத்தில் நான் நடிப்பேன். அதேபோல் காமெடியன் வரவில்லையென்றால் அந்த ரோலில் நடிப்பேன். இப்படி எந்த வேடம் கிடைத்தாலும் நான் நடித்தேன். அதனால் நாடகத்துறை என்னை நல்லதொரு நடிகனாக தயார்படுத்தியது. பின்னர் சினிமா-சின்னத்திரை என்று நடிக்க வந்தபோதும் இப்படித்தான் நடிப்பேன் என்று சொல்லாமல் கிடைக்கிற எந்த வேடமாக இருந்தாலும் நடித்து வருகிறேன்.
இதுவரை என்னென்ன கேரக்டர்களில் நடித்திருக்கிறீர்கள்?
சூர்யவம்சம் தொடரில் வில்லனாக நடித்தேன். ஆலயம், அர்ச்சனைப்பூக்கள் தொடர்களில் சாப்ட்டான வேடங்களில் நடித்தேன். என்றாலும் அதிகப்படியாக வில்லனாகத்தான் நடித்திருக்கிறேன். மேலும், 40 படங்களில் நடித்து விட்டேன். விஜயகாந்த் நடித்த சத்ரியன், ஏழைஜாதி, கேப்டன் பிரபாகரன் மற்றும் விஜய் நடித்த தமிழன் உள்ளிட்ட படங்களில் இன்ஸ்பெக்டர் மற்றும் அரசியல்வாதி, வக்கீல் வேடங்களில் நடித்தேன். பல சீரியல் மற்றும் சினிமாக்களில் அப்பா வேடங்களிலும் நடித்திருக்கிறேன். இப்போது அழகி, பொம்மலாட்டம் சீரியல்களில் நடித்து வருவதோடு, 4 பேய் படங்களிலும் நடித்து வருகிறேன். இதையடுத்து ஒரு படம் இயக்கும் வேலைகளிலும் தற்போது ஈடுபட்டிருக்கிறேன்.
எந்தமாதிரியான கதையில் படம் இயக்குகிறீர்கள்?
1964-ல் அன்னை வேளாங்கண்ணி என்றொரு படம் வந்தது. அதன்பிறகு மாதாவைப்பற்றி எந்த படமும் வரவில்லை. அதனால் பூண்டி மாதா என்ற பெயரில் ஒரு படத்தை இயக்குகிறேன். இது எல்லாதரப்பு மக்களும் பார்த்து ரசிக்கக்கூடிய கமர்சியல் படமாக இருக்கும். பல முன்னணி நடிகர் நடிகைகள் நடிக்கிறார்கள்.
35 வருடங்களாக நடிப்புத்துறையில் இருக்கும் நான் சினிமா, சீரியல்களில் பத்து வருடங்களாக உதவி இயக்குனராகவும் பணியாற்றியிருக்கிறேன். மேலும், மீட் பரின் தாய் என்ற பெயரில் முன்பு ஜெயா டிவிக்காக ஒரு சீரியல் இயக்கினேன். எல்லோருக்கும் கல்வி, எய்ட்ஸ் சம்பந்தப்பட்ட பல குறும் படங்களையும் இயக்கியிருக்கிறேன். அதோடு, பிலிப்பைன்ஸ் நாட்டு வானொலியில் நான் எழுதிய 1600 தமிழ் நாடகங்கள் ஒலிபரப்பாகியிருக்கிறது. ஒவ்வொரு நாடகத்திலும் ஒரு கருத்து சொல்லியிருந்தேன். அதை வீடியோ வடிவில் டெலிபிலிமும் பண்ணினேன்.
இப்படி இயக்கத்தில் எனக்கு பல அனுபவங்கள் உள்ளது.
http://img1.dinamalar.com/cini//CNew...2540000000.jpg
சீரியல் இயக்கும் ஐடியா உள்ளதா?
கண்டிப்பாக, இந்த பூண்டி மாதா படத்தை இயக்கியதும் மெகா சீரியல் இயக்கும் முயற்சியில் இறங்குவேன். அப்படி நான் இயக்கும் சீரியல் கண்டிப்பாக சமுதாயத்துக்கு நல்ல மெசேஜ் சொல்லக்கூடியதாக இருக்கும் என்கிறார் நடிகர் வின் சென்ட்ராய்.
Quote:
வில்லி வேடத்தில் நடிக்க வெறியாக இருக்கிறேன்!- சீரியல் நடிகை ஜீவிதா பேட்டி
பாசமலர் தொடரில் நான் நடித்து வரும் உமா கேரக்டர், சிந்து பைரவி படத்தில் சுகாசினி நடித்தது போன்ற தியாகம் செய்கிற வேடம். நிறைய விட்டுக்கொடுத்து நடிக்கிற வேடம். நான் ரியல்லயும் அப்படித்தான், ரீல்லயும் அப்படித்தான் நடித்துக்கொண்டிருக்கிறேன் என்கிறார் சின்னத் திரை நடிகை ஜீவிதா.
தினமலர் இணையதளத்திற்காக அவருடன் ஒரு நேர்காணல்...
இதுவரை நடித்துள்ள தொடர்கள் பற்றி?
நான் சீரியலுக்கு வந்து 3 வருடங்கள் ஆகப்போகிறது. ஏவிஎம் தயாரித்த மனதில் உறுதி வேண்டும் என்ற சீரியலில்தான் முதன்முதலாக அறிமுகமானேன். சதாசிவம் இயக்கியிருந்தார். அந்த வகையில், நான் ஏவிஎம்மின் அறிமுகம் என்பது எனக்கு பெருமையான விசயம். அதைத் தொடர்ந்து மீண்டும் ஏவிஎம்மின் வைராக்கியம் தொடரில் பட்டாகத்தி பத்மினி என்ற ரோலில் நடித்தேன். சீரியஸ், பைட், காமெடி எல்லாம் கலந்த வித்தியாசமான ரோல் அது. எனக்குள்ளே யும் ஒரு ஆண் இருக்கிறான் என்பதை வெளிப்படுத்தும் ரோல். பாசிட்டிவான வேடம்தான். அதன்பிறகு ஆபீஸ், தேவதை, பைரவி, 63 நாயன்மார்கள், சித்திரம் பேசுதடி என தொடர்ந்து வந்த நான், இப்போது பாசமலர், கைராசி குடும்பம் ஆகிய தொடர்களில் நடித்துக்கொண்டிருக்கிறேன்.
பாசிட்டீவ்-நெகடீவ் எந்த மாதிரியான ரோல்களுக்கு முதலிடம் கொடுக்கிறீர்கள்?
பாசிட்டிவான வேடங்கள்தான் எனக்கு அதிகமாக கிடைத்து வருகிறது. என்னைப்பொறுத்தவரை ஒன்று நெகடீவாகிட வேண்டும், இல்லையேல் பாசிட்டீவாகிவிட வேண்டும். இப்படி முழுசாக மாறி நடிக்கும்போதுதான் அந்த கேரக்டர் பேசப்பட்டு பிரபலமாக முடியும். மேலும், எனக்கு பிடித்த ரோல் என்றால் நெகடீவ்தான். காரணம், நாலு பேர் நம்மை திட்டுகிறார்கள் என்றால்தான் அது ரீச். அழுது கொண்டிருந்தால் அது பெரிய ரீச் கிடையாது. அழுறதை விட அழ வைக்கிறவங்களைத்தான் அதிகமாக நோட்டீஸ் பண்ணுவார்கள். அதனால் எனக்கு வில்லி வேடங்கள் பண்ண வேண்டும் என்பது பெரிய வெறியாக உள்ளது.
அதேபோல் போலீஸ் வேடங்களில் நடிக்க வேண்டும் என்பதிலும் ஆர்வமாக இருக்கிறேன். தற்போது கைராசி குடும்பம் தொடரில் இன்ஸ்பெக்டர் ரோலில் நடிக்கிறேன். இந்த மாதிரி இன்னும் பெரிய வேடங்களில் நடிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். மேலும், எனது உயிர்மூச்சு உள்ளவரை நடித்துக்கொண்டேயிருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.
டைரக்டர்களின் பார்வையில் எந்த மாதிரி நடிகையாக இருக்கிறீர்கள்?
என்னை முதலில் பார்க்கும் டைரக்டர்கள் இந்த ரோலுக்கு இந்த பெண் செட்டாவாளா என்று சந்தேகத்துடன்தான் பார்ப்பார்கள். ஆனால் அவர்கள் எந்த மாதிரி வேடம் கொடுத்தாலும் அவர்கள் எதிர்பார்க்கிற அளவுக்கு நான் பூர்த்தி செய்து கொடுத்து விடுவேன். அதனால் என் நடிப்பை பார்த்த பிறகு இந்த ரோலுக்கு ஜீவிதாவை சரியாகத்தான் செலக்ட் பண்ணியிருக்கிறோம் என்று பின்பு நினைப்பார்கள்.
உங்கள் நடிப்பில் அதிக ரீச் கொடுத்த வேடம் எது?
எந்த வேடம் கொடுத்தாலும் அதில் நேயர்களின் பாராட்டு கிடைக்கும் வகையில் நான் நடித்து விடுவேன். அதில் எந்த குறையும் வைத்ததில்லை. அந்தவகையில, தற்போது பாசமலர் தொடரில் நான் நடித்து வரும் உமா கேரக்டருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. உங்களது நடிப்பைப்பார்த்து விட்டு நாங்களெல்லாம் அழுதோம் என்று என்னை வெளியிடங்களில் பார்க்கும் நேயர்கள் சொல்கிறார்கள். சிந்துபைரவி படத்தில் சுகாசினி மேடம் நடித்தது போன்ற தியாகம் செய்கிற வேடம். நிறைய விட்டுக்கொடுத்து நடிக்கிற வேடம். நான் ரியல்லயும் அப்படித்தான், ரீல்லயும் அப்படித்தான் நடிக்கிறேன். அதனால்தான் இந்த ரோலில் எனது நடிப்பு ரொம்ப இயல்பாக வெளிப்பட்டு நேயர்களை கவர்ந்து வருகிறது.
ஹோம் ஒர்க் பண்ணி நடித்த வேடம் உள்ளதா?
எத்தனை வெயிட்டான வேடமாக இருந்தாலும், அதைப்பற்றி நான் முன்பே யோசிப்பதில்லை. ஸ்பாட்டுக்கு வந்தபோது டைரக்டர்கள் என்ன சொல்கிறார்களோ அதைக்கேட்டு அப்படியே நடிப்பேன். அப்போது என்ன நடிக்கிறேனோ அதுதான். மற்றபடி முன்பே ஐடியா பண்ணிக்கொண்டு வந்து நடிப்பதெல்லாம் என்னிடம் இல்லை.
மேலும், சிவரகசியம் என்ற தொடரில் ஒரு பைத்தியம் போன்ற வேடத்தில் நடித்தேன். பிரம்மை பிடித்தவள் போன்ற கண்களைகூட அசைக்காமல் நடித்தேன். மூச்சு விடுவதைகூட அளவோடு விடுவேன். அதில் நடிக்கத்தான் கொஞ்சம் கஷ்டப்பட்டேன். மற்றபடி, விளையாட்டு, நடிப்பு, டான்ஸ் என எதுவாக இருந்தாலும் சரி முதலில் நார்மலாக இருக்கும் நான், அதை பண்ணும்போது இதை நான்தான் பண்ண வேண்டும் என்று வெறியாகி விடுவேன். விளையாட போறேன் என்றால் கால், கையில் அடிபடும் என்றெல்லாம் நான் நினைக்க மாட்டேன். அதில் வின் பண்ணுவது மட்டும்தான் எனது நோக்கமாக இருக்கும்.
சின்னவயதில் இருந்தே நான் ரொம்ப பிடிவாதமானவள். தப்போ ரைட்டோ அதை நான் செய்தே ஆக வேண்டும் என்று நினைப்பேன். அதேமாதிரி என்னை நம்பி வாய்ப்பு கொடுக்கும் டைரக்டர்களையும் திருப்திபடுத்த வேண்டும் என்கிற கடமையும் எனக்கு உண்டு. அதை உணர்ந்தே ஒவ்வொரு வேடங்களிலும் நடிக்கிறேன். அதேமாதிரி என்னோட ஹேர் ஸ்டைலக்கு தகுந்த மாதிரி டிரஸ் பண்ணுவேன். இப்படித்தான் ஒவ்வொரு கேரக்டர்களுக்கேற்பும் என்னை பக்காவாக மாற்றிக்கொண்டு நடிப்பேன். ஏனோதானோவென்று செயல்படவே மாட்டேன்.
பெண்களுக்கு விழிப்புணர்வு கொடுக்கும் ரோல்களில் நடித்துள்ளீர்களா?
வைராக்கியம் தொடரில் அந்த மாதிரி ரோலில்தான் நடித்தேன். பேமிலியை எப்படி நடத்த வேண்டும். கணவரை எப்படி கைக்குள் வைத்துக்கொள்ள வேண்டும். எதிரிகளை எப்படி அட்டாக் பண்ண வேண்டும் என்பது போன்ற வேடத்தில் நடித்தேன். மற்ற சீரியல்களில் எல்லாம் விட்டுக்கொடுத்து நடிக்கும் வேடத்தில் நடித்த நான், இந்த சீரியலில் மட்டும்தான் எதிர்த்து போராடும் வேடத்தில் நடித்தேன். மாமியார், கணவன்கிட்ட எந்தெந்த மாதிரி நடந்துக்கனும் என்பதை அந்த சீரியலில் வெளிப்படுத்தி நடித்தேன்.
வடஇந்திய சீரியல்களைப் போன்று நம்முடைய சீரியல்களில் பிரமாண்டம் இல்லையே?
அங்குள்ள சீரியல்களில் நடிப்பவர்கள் எந்த அளவுக்கு பிரமாண்டமான உடைகளை அணிந்து நடித்தாலும் அதற்கேற்ற தொகையை கொடுத்து விடுகிறார்கள். ஆனால் நம்ம சீரியல்களில் அப்படியல்ல. பட்ஜெட்டுக்கள் அடக்கி விடுகிறார்கள். அதோடு அவர்களுக்கு நிறைய டயம் கொடுப்பார்கள். இங்கே அப்படியில்லை. இத்தனை நாளுக்குள் இத்தனை எபிசோடு எடுத்தாக வேண்டிய கட்டாயம் உள்ளது. ஆக, போதிய வசதி வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொடுத்தால் இந்தி சீரியல்களில் நடிகர் நடிகைகள் நடிப்பது போன்று நம்ம ஊர் நடிகர் நடிகைகளாலும் பிரமாண்டமாக உடை, நகைகளை அணிந்து நடிக்க முடியும். மற்றபடி அவர்களை விட, அழகிலும், திறமையிலும் நாங்கள் எந்தவிதத்திலும் சளைத்தவர்கள் இல்லை.
மேலும், வடஇந்திய சீரியல்களில் நிறைய பில்டப் இருக்கும். காபி கேட்டால் கிளாசை எடுப்பதில் இருந்து ஒவ்வொரு விசயத்தையும் காட்டுவார்கள். ஆனால் நம்ம சீரியல்களில் காபி என்றால் காபியை எடுத்து கொடுப்பது போல் மட்டுமே காட்டுவார்கள். காரணம் பட்ஜெட்தான். இந்தி சீரியல்களை மாதிரி தமிழ் சீரியல்களுக்கும் பெரிய பட்ஜெட்டாக இருந்தால் நம்ம டைரக்டர்களாலும் அந்த அளவுக்கு பிரமாண்டமாக படமாக்க முடியும். அந்த வகையில், தமிழ் சீரியல் டைரக்டர்களும் பெரிய திறமைசாலிகள்தான்.
உங்களது ரோல் மாடல் யார்?
நதியா, ராதா எனக்கு ரொம்ப பிடித்தமான நடிகைகள். ஹோம்லியாக பண்ணி அனைவரையும் கவர் பண்ணுவார்கள். இதில் நதியா கிளாமர், செக்ஸியாக நடிக்காதவர். தனது அடக்கமான அழகு, நடிப்பாலேயே அனைவரையும் கவர்ந்தவர். அவரை மாதிரி ஒரு நடிகையாக வேண்டும் என்பதுதான் எனது ஆசை. இந்த பாட்டுக்கு செக்ஸியாக வேண்டும் என்றால்கூட அவர் அதை உடம்பில் காட்டாமல் முகபாவணையில் காட்டியிருப்பார்.
எதிர்காலத்தில் சீரியல் இயக்க வேண்டும் என்கிற ஆசை உள்ளதா?
சதாசிவம் சார் என்னை ஒரு நடிகையாக்கினார். இப்போதுவரை அதை தொடர்ந்து வருகிறேன். கடவுள் நமக்கு என்ன என்று எழுதி வைத்திருப்பார். அது நடக்கும். அதுதான் இப்போது வரை நடந்து வருகிறது. இனிமேலும் அப்படித்தான் நடக்கும். அதனால் எதிர்காலத்தில் நான் டைரக்சன் பண்ண வேண்டும் என்று அவர் எழுதி வைத்திருந்தால் அது நடக்கும். நடிகைதான் என்றால் இதே பயணத்தை தொடர்ந்து கொண்டிருப்பேன்.
சினிமா வாய்ப்புகள் வருகிறதா?
பாரதிராஜா அசோசியேட் பாரதி கிருஷ்ணகுமார் இயக்கும் என்று தணியும் படத்தில் இரண்டு நாயகிகளில் ஒருவராக நடிக்கிறேன். மயில்சாமியின் இரண்டாவது மகன் யுவன் மயில்சாமி அந்த படத்தில் நாயகனாக நடித்திருக்கிறார். இன்னொரு பெயரிடப்படாத படத்திலும் நடித்து வருகிறேன். முன்னதாக, ரோமியோ ஜூலியட் படத்தில் ஒரு கேரக்டரில் நடித்தேன். ஆக, சின்னத்திரை தொடர்களில் நடிக்க பிரச்சினை ஏற்படாத வகையில் படங்களுக்கு கால்சீட கொடுத்து நடிக்கிறேன்.
அவசியப்பட்டால் கிளாமராக நடிப்பீர்களா?
அந்த மாதிரி கதைகள் வரும்போதுதான் முடிவெடுப்பேன். இப்போது சொல்லிவிட்டு பின்னர் மறுத்தால் தவறாகி விடும். அது அப்போதைய மனநிலை சூழ்நிலைகளைப் பொறுத்தது. அப்படி நடிப்பது அந்த வேடத்துக்கு தேவை. அது சரியாக இருக்கும் என்கிறபட்சத்தில் யோசித்து முடிவெடுப்பேன். மேலும், இந்த மாதிரியான ரோல்களில்தான் நடிக்க வேண்டும் என்று நான் சில பாலிஸிகளை வைத்திருக்கிறேன். அக்கா ரோலாக இருந்தாலும் என் ரோல் தனியாக தெரியும் என்றால் கண்டிப்பாக நடிப்பேன் என்கிறார் ஜீவிதா.
http://img1.dinamalar.com/cini//CNew...3800000000.jpg
நன்றி: தினமலர்
Quote:
சின்னத்திரையை விடமாட்டேன்! - ;திண்டுக்கல்' சரவணன் .
சின்னத்திரையில் டாடி எனக்கொரு டவுட் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் திண்டுக்கல் சரவணன். இப்போது நய்யாண்டி நேரம் என்ற நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார். இதையடுத்து, புதுப்பட காமெடி என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப்போகிறார். தினமும் இரவு 9-10 மணிக்கு பிப்ரவரி மாதம் முதல் ஒளிபரப்பாக இருக்கும் இந்த நிகழ்ச்சியில் அந்த காலத்து காமெடி, இந்த காலத்து காமெடி இரண்டையும் இன்னொரு தொகுப்பாளருடன் இணைந்து விமர்சனம் செய்கிறாராம் திண்டுக்கல் சரவணன்.
மேலும், ராதாமோகன் இயக்கிய ;உப்புக்கருவாடு; படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த அவர், நேற்று திரைக்கு வந்துள்ள ;அரண்மனை-2, படத்திலும் சூரியுடன் இணைந்து காமெடியனாக நடித்திருக்கிறார். அதற்கு நல்லதொரு வரவேற்பு கிடைத்திருக்கிறதாம்.
இதுபற்றி திண்டுக்கல் சரவணன் கூறுகையில், சின்னத்திரையில் பிரபலமானதை அடுத்து சினிமா வாய்ப்புகள் நிறைய வரத் தொடங்கியிருக்கிறது. அதனால் அதில் எனக்கு பிடித்த நல்ல வேடங்களாக பார்த்து நடிக்கத் தொடங்கியிருக்கிறேன். அந்த வகையில், உப்புக்கருவாடு படத்தில் ஒரு ஜோதிடராக நடித்தேன்.
இப்போது அரண்மனை-2ல் சூரியுடன் இணைந்து காமெடி செய்திருக்கிறேன். நான் நடித்த இந்த இரண்டு வேடங்களுமே படம் முழுக்க இருந்தது. அதனால் சினிமாவிலும் கவனிக்கப்படும் நடிகராகி விட்டேன்.
மேலும், நிறைய படங்களில் நடிக்கக் கேட்கிறார்கள். ஆனால் முக்கியத்துவமுள்ள கேரக்டர்களாக இருந்தால் மட்டுமே நான் ஓகே செய்கிறேன். அதோடு, என்னால் காமெடி மட்டுமின்றி குணசித்ர வேடங்களிலும் நடிக்க முடியும். அதை நிரூபிக்கத்தான் சரியான வாய்ப்புகளை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். குறிப்பாக, கரண், ஸ்ரீமன் போன்ற நடிகர்கள் நடித்தது போன்ற வேடங்களில் நடிக்க ஆசைப்படுகிறேன். காரணம், இப்போது அவர்கள் நடித்தது மாதிரி வேடங்களில் நடிக்கத்தான் சரியான நடிகர்கள் இல்லை என்று கூறும் திண்டுக்கல் சரவணன், வில்லன் வேடம் கிடைத்தால்கூட மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்த நான் தயாராகவே இருக்கிறாராம்.
அதேசமயம், என்னதான் சினிமாவில் பிசியாகிவிட்டபோதும், சின்னத்திரையை விடமாட்டாராம். என்னை மக்களுக்கு அடையாளம் காட்டியது சின்னத்திரைதான். அதனால் ஏதாவது ஒரு ஷோ மூலம் தொடர்ந்து சின்னத்திரையிலும் இடம் பிடித்திருப்பேன் என்கிறார் திண்டுக்கல் சரவணன்.
நன்றி: தினமலர்
Herovaanaar thogupaalar Suresh.
Music channelin Natchathira thogupaalaraaga irukum Suresh,Cinemavil herovaagi vitaar.
http://cinema.dinamalar.com/tamil-tv...rn-as-Hero.htm
Nandri.Dinamalar.
Vijayashanthi endhu Role Model. Akila Peati.
Thamarai, Ponnunjal,Dheavathai, en iniya thozhi serialil nadithu ,,,,,,,,,,,,,,,
http://cinema.dinamalar.com/tamil-tv...says-Akila.htm
Nandri.Dinamalar.
Meendum Nigalchi nadathuhiraar Lakshmi Ramakrishnan.
http://cinema.dinamalar.com/tamil-tv...TV-Program.htm
Nandri.Dinamalar.
Pattuselai; Puthuyugam channelil pudhiya Thodar.
http://cinema.dinamalar.com/tamil-tv...Puthuyugam.htm
Nandri.Dinamalar.
புதுயுகம் சேனலில் வருகிற 8ந் தேதி முதல் ஒளிபரப்பாக இருக்கும் புதிய தொடர் பட்டுச்சேலை. திங்கள் முதல் வெள்ளி வரை ஒளிபரப்பாகிறது. மாமியார் மருமகள் சண்டை, கணவனின் மனைவி சின்ன வீடு சண்டைகளிலிருந்து விலகி வித்தியாசமான காதல் கதையாக ஒளிபரப்பாகிறது பட்டுச்சேலை.
மிகப்பெரிய பட்டுச் சேலை கடை வைத்திருப்பவர் காஞ்சனா. தன் கடைக்கு போட்டியாக யார் கடை போட்டாலும் அவர்களை விரட்டி விட்டுத்தான் வேறு வேலை பார்ப்பார். அந்த அளவிற்கு கொடூரமானவர். அவரிடம் தவனைக்கு சேலை வாங்கி கிராமத்து மக்களுக்கு கடனுக்கு விற்பவர் தாமரை. வீரமான, நியாயமான பொண்ணு, மற்றவர்களுக்காக போராடுகிற பெண். காஞ்சனாவின் கடைக்கு அடிக்கடி வரும் தாமரைக்கும், காஞ்சனாவின் மகன் அஜய்க்கும் காதல் மலர்கிறது. எதிரில் கடை போட்டாலே ஆளை அழித்து விடும் காஞ்சனா, கோடீஸ்வரியான தன் மகனை சேலை விற்கும் பெண் காதலித்தார் விடுவாரா.?. காஞ்சனா, தாமரையின் மோதல்தான் கதை. இவர்களின் மோதலை மக்கள் எதுவரை ரசிக்கிறார்களோ அதுவரை சீரியல் தொடரும். இதுவரை அன்பான அம்மா கேரக்டரில் நடித்து வந்த மீனா குமாரி இதில் வில்லி காஞ்சனாவாக நடிக்கிறார்
http://img1.dinamalar.com/cini//CNew...3300000000.jpg
Searialgalil aangalukkum mukkiyathuvam ulladhu Nadigar Iyappan.
http://cinema.dinamalar.com/tamil-tv...r-Iyyappan.htm
Nandri.Dinamalar.
Naan Thaneer madhiri; Searial Nadigar Ramachandran.
http://cinema.dinamalar.com/hindi-ne...-interview.htm
Nandri.Dinamalar.
Quote:
இளையராஜாவுக்கு பிரமாண்ட பாராட்டு விழா
இசைஞானி இளைராஜா தாரை தப்பட்டை படம் வரை ஆயிரம் படங்களுக்கு இசை அமைத்துள்ளார். இதனை 999வது படமான ஷமிதாப் இந்திப் படத்தின் இயக்குனர் பால்கி மும்பையில் கொண்டாடினார். அமிதாப்பச்சன் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டனர். சென்னையில் நேரு உள் விளையாட்டரங்கில் பாலா, இளையராஜாவுக்கு பாராட்டு விழா நடத்து திட்டமிட்டார். அந்த நேரத்தில் சென்னையில் பேய் மழை, பெருவெள்ளம் வந்ததால் நடத்த முடியவில்லை. இப்போது இளையராஜா மியூசிக் மேனேஜ்மெண்ட் நிறுவனத்துடன் இணைந்து விஜய் டி.வி பிரமாண்டாக நடத்துகிறது. வருகிற 27ந் தேதி நேரு உள்விளையாட்டரங்கில் இது நடக்கிறது.
இதுகுறித்து விஜய் டி.வி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: இசையால் அனைவரையும் நெகிழச் செய்தவருக்கு இந்த விழா ஒரு சமர்ப்பணம். மக்கள் வியந்து ரசித்த இளையராஜாவின் இனிமையான பாடல்கள் அந்த பிரமாண்ட மேடையில் இளையராஜாவிற்கு காணிக்கையாக சமர்பிக்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் ஒட்டுமொத்த திரையுலகமும் பங்கேற்று இசைஞானிக்கு கவுரம் சேர்க்க இருக்கிறது. கலையுலம் கண்டிராத பெருவிழாவாக இது இருக்கும். என்கிறது விஜய் டி.வி.
நன்றி: தினமலர்
Quote:
கண்ணம்மாவாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன்! - நடிகை சோனியா
கண்ணம்மா சீரியலில் அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறேன். டைட்டீல் ரோல் என்பதால் அதன் பொறுப்பை உணர்ந்து நடிக்கிறேன். இந்த தொடர் பெரிய அளவில் ரீச்சாகி வருவது எனக்கு உற்சாகத்தைக் கொடுத்துள்ளது என்கிறார் நடிகை சோனியா.
மேலும் அவர் கூறும்போது, 1984ல் வெளியான மைடியர் குட்டிச்சாத்தான் படத்தில் நடித்து சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருது பெற்ற நான், அதன்பிறகு 1987ல் நொம்பாரதி பூவு என்ற மலையாள படத்துக்காக கேரள அரசு விருது பெற்றேன். இப்படித்தான் எனது நடிப்பு பயணம் தொடங்கியது. அதையடுத்து தமிழ், மலையாளத்தில் ஏராளமான படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தேன்.
பின்னர் காமெடி மற்றும் குணசித்ர வேடங்களில் இப்போதுவரை நடித்து வருகிறேன். அதோடு, சின்னத்திரையிலும் செல்லமே, மைநேம் இஸ் மங்கம்மா, மாதவி, முகூர்த்தம் உள்பட சில தொடர்களில் நடித்தேன். இப்போது கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கண்ணம்மா தொடரில் நடித்து வருகிறேன். குடும்பத்தலைவி வேடம். கணவன், குழந்தைகள் என வாழ்ந்து வரும் நான், பிரச்சினைகளை எப்படி எதிர்கொள்கிறேன் என்பதுதான் இந்த சீரியல்.
அதனால் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது. குறிப்பாக என்னுடைய போராட்டங்களைப் பார்த்து பெண்கள் கண்கலங்குகிறார்கள். அதனால் இதற்கு முன்பு நான் நடித்த சீரியல்களை விட இந்த கண்ணம்மா தொடர் எனக்கு பெரிய ரீச் கொடுத்துள்ளது. டைட்டீல் ரோல் என்பதால் இப்போது எனது முழுக்கவன மும் இந்த சீரியலில்தான் உள்ளது என்கிறார் சோனியா.
http://img1.dinamalar.com/cini//CNew...5119000000.jpg
நன்றி: தினமலர்
Meendum Cenimavil Thogupalini Ramya.
Pepsi uma, Ilamai pudhumai Archanavukku piragu peasapadum ramya.......
http://cinema.dinamalar.com/tamil-tv...-in-Cinema.htm
Nandri . Dinamalar.