http://i59.tinypic.com/2m76usi.jpg
Printable View
அரிய புகைப்படம் .
நன்றி ;- பிரதீப் சார் .
http://i62.tinypic.com/5bhp1.jpg
http://www.youtube.com/watch?v=nXI4VBk2NCM
The one I mentioned MGR and M.R.Radha dialog about contesting in election and tearing the document.
Thanks to MGCB Pradeep for uploading rare images.
அரிய, அற்புத, அசத்தல் ஆவணம். நன்றி திரு. ராமமூர்த்தி சார்.
http://i59.tinypic.com/n68dip.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
எம்.ஜி.ஆர்’ நடித்து 1965–ல் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடிய படம் ஆயிரத்தில் ஒருவன். இதில் கதாநாயகியாக தற்போதைய முதல்வர் ஜெயலலிதா நடத்து இருந்தார். நம்பியார், நாகேஷ், ஆர்.எஸ்.மனோகர் போன்றோரும் நடித்தனர்.
இந்த படம் டிஜிட்டலில் புதுப்பிக்கப்பட்டு தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் 14–ந்தேதி வெளியிடப்பட்டது. மொத்தம் 122 தியேட்டர்களில் திரையிடப்பட்டது. தற்போது சென்னையில் உள்ள சத்யம், ஆல்பட் தியேட்டர்களில் 25–வது வாரமாக 175–வது நாளை நோக்கி ஓடிக் கொண்டு இருக்கிறது.
இதையொட்டி ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தில் பணியாற்றியவர்களை பாராட்டி சிறப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
175–வது நாள் வெற்றி விழாவையும் கலைஞர்களுக்கு பாராட்டு விழாவையும் நாளை மறுநாள் (1–ந்தேதி) மாலை 6.30 மணிக்கு தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் நடத்துகின்றனர். சரத்குமார் எம்.எல்.ஏ. தலைமை தாங்குகிறார். ஆயிரத்தில் ஒருவன் படத்தை வெளியிட்ட திவ்யா பிலிம்ஸ் சொக்கலிங்கம் வரவேற்று பேசுகிறார். எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர்களான சத்யராஜ், பி.வாசு, ஆர்.பாண்டியராஜன், விக்ரமன், விவேக், செந்தில், கே.ராஜன், மயில்சாமி, சார்லி, ஜாக்குவார் தங்கம் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.
ஆயிரத்தில் ஒருவன் படத்துக்கு இசையமைத்த எம்.எஸ்.விஸ்வநாதன், பின்னணி பாடலை பாடிய பி.சுசீலா, வசன கர்த்தா ஆர்.கே.சண்முகம், நாகேஷ் ஜோடியாக நடித்த மாதவி, எல்.விஜய் லட்சுமி, பத்மினி பிக்சர்ஸ் பி.ஆர்.ரவிசங்கர் போன்றோருக்கு விழாவில் கேடயம் வழங்கப்படுகிறது. பி.எஸ்.ராஜூ நன்றி கூறுகிறார்.
repeated article but interesting
`சத்யா மூவிஸ்' தயாரித்த "காவல்காரன்'' படத்தில் எம்.ஜி.ஆரின் தம்பியாக சிவகுமார் நடித்தார்.
1966-ம் ஆண்டின் பிற்பகுதியில் "காவல்காரன்'' படம் தயாராயிற்று. முதன் முதலில் எம்.ஜி.ஆரை சந்தித்தபோது, சிவகுமாரை அவர் கைகுலுக்கி அன்புடன் வரவேற்றார்.
இருவரும் பேசிக்கொண்டிருக்கும்போது, எம்.ஜி.ஆர். தன் தாயார் சத்யா அம்மையார் பற்றியும், குடும்ப நலனுக்காக அவர் செய்த தியாகங்கள் பற்றியும் குறிப்பிட்டார்.
சிவகுமாரும் தன் தாயார் பற்றி எம்.ஜி.ஆரிடம் கூறினார்.
இதுகுறித்து சிவகுமார் எழுதியிருப்பதாவது:-
"என் தாயாரின் வைராக்கியம், தியாகம், எதற்கும் கலங்காத நெஞ்சுரம், நிலத்தில் கடுமையாகப் பாடுபடும் உடல் நலம் பற்றி எல்லாம் எம்.ஜி.ஆருக்கு தைரியமாக எடுத்துச் சொன்னேன்.
ஒரு சமயம் அம்மாவின் வலது கை மணிக்கட்டுக்கு மேலே இரண்டு எலும்புகள் ஒடிந்து தொங்கும் அளவுக்கு விபத்து ஏற்பட்டு, ஆறு மாத காலம் எனக்குச் சொல்லாமல் வைத்தியம் பார்த்து கையை சரிப்படுத்திக் கொண்டார். என் படிப்பு கெட்டுவிடக்கூடாது என்பதற்காக, இந்த விபத்து பற்றி எனக்கு தெரிவிக்கவில்லை. என் நண்பர்களையும் மிரட்டி, எனக்குக் கடிதம் எழுத விடாமல் தடுத்துவிட்டார்.
இதை அறிந்ததும், எம்.ஜி.ஆர். நெகிழ்ந்து போனார்.
இந்த உரையாடல் நடந்து 3 மாதத்தில், எம்.ஜி.ஆர். சுடப்பட்டார். சென்னை பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவரைக் காண யாரும் அனுமதிக்கப்படவில்லை. நான் பலமுறை மருத்துவமனைக்குச்சென்று ஆர்.எம்.வீ. அவர்களைப் பார்த்து எம்.ஜி.ஆர். உடல்நிலைப் பற்றி விசாரித்து விட்டுத் திரும்பிவிட்டேன்.
எம்.ஜி.ஆர். உடல் நிலை சற்று முன்னேறியதும், அவரைப் பார்க்க என்னை உள்ளே அனுப்பி வைத்தார், ஆர்.எம்.வீ.
எம்.ஜி.ஆர். படுத்திருந்தார். காவல்காரன் படத்தில், நானும், அவரும் ஒரே ஒருநாள்தான் நடித்திருந்தோம். என் முகம், உடனடியாக அவர் நினைவுக்கு வரவில்லை. கண்களை இடுக்கிக்கொண்டு என்னைப்பார்த்தபடி தீவிரமாக யோசித்தார். நான் சிவகுமார் என்பதைத் தெரிந்து கொண்டார்.
அந்த உடல் நிலையிலும் - கழுத்தில் பெரிய பேண்டேஜ் உறுத்திக் கொண்டிருந்தபோதிலும், முகத்தில் புன்சிரிப்பை வரவழைத்துக்கொண்டு `வாங்க' என்றார். குண்டடிப்பட்ட சமயம், ஊருக்கு போயிருந்ததாக சொன்னேன்.
அவர் முகத்தில் ஒரு மின்னல் வெட்டு. "ஊருக்கு போனியா... அ...ம்...மா... உன் அம்மா... சவுக்கியமா?'' என்று, விசாரித்தார். என் தாயார் பற்றி நான் கூறிய தகவல்களை மரண வாசல் வரை போய் மீண்டு வந்த அந்த நேரத்திலும் நினைவில் வைத்திருந்து அவர் விசாரித்ததைப் பார்த்து கண்ணீர் விட்டு அழுதுவிட்டேன்.
எம்.ஜி.ஆர். என்னைத் தேற்றி, "எனக்காக அம்மாவை வேண்டிக்கச் சொல். சீக்கிரம் குணமாகிவிடுவேன்'' என்றார்.
எம்.ஜி.ஆர். குணம் அடைந்தபின், "காவல்காரன்'' படப்பிடிப்பு மீண்டும் தொடங்கி வேகமாக நடந்தது.
7-9-1967-ல் இப்படம் வெளிவந்து பெரிய வெற்றி பெற்றது.
Thalaivar with nsk song in chakravarthy thirumagal
யானையை பிடித்து யானையை பிடித்து
ஒரு பானைக்குள் அடைத்து வைக்க
ஆத்திரப் படுபவர் போல் அல்லவே
உம் தாரம்பக் கவி சொல்லுதே புலவா
வீட்டின் பூனைக் குட்டி காட்டில் ஓடி
புலியைப் பிடித்து தின்ன
புறப்பட்டக் கதை போல் அல்லவா
தற்புகழ்ச்சி பாடுகிறாயே புலவா
பூதானம் கன்னிகாதானம் சொர்ணதானம் அன்னதானம்
கோதானம் உண்டு பற்பல தானங்கள்
இதற்கு மேலான தானம் இருந்தால் சொல்லுங்கள்
கேள்விக்கு பதிலை கொண்டா
உடைச்சி ஏறிவென் ரெண்டா
உன்னை ஜெயிச்சி கட்டுவேன் முண்டா
அப்புறம் பறக்க விடுவேன் செண்டா
ஜெயக்கொடி ஜெயக்கொடி பறக்குது ஜெயக்கொடி
சொல்றேன்
எத்தனை தானம் தந்தாலும்
எந்த லோகம் புகழ்ந்தாலும்
தானத்தில் சிறந்தது நிதானந்தான்
நிதானந்தனை இழந்தவர்க்கு ஈனந்தான்
சொல்லிட்டான்
கோவிலைக் கட்டி வைப்பது எதனாலே சிற்ப வேலைக்கு பெருமை உண்டு அதனாலே
பாத்துக்கடா சரிதான்
அன்ன சத்திரம் இருப்பது எதனாலே
பல திண்ணை தூங்கி பசங்கள் இருப்பதாலே
எப்படி
பரதேசியாய் திரிவது எதனாலே
ம்ம்ம்....அவன் பத்து வீட்டு
சரி ..... வேணாம்
அவன் பத்து வீட்டு சோத்து ருசி கண்டதாலே
தம்பி இங்க கவனி
காரிருள் சூழுவது எவ்விடத்திலே
காரிருள் சூழுவது எவ்விடத்திலே
கற்றறிவில்லாத மூடர் நெஞ்சகத்திலே
சொல்லிப்பிட்டியெ
புகையும் நெருப்பிலாமல் எரிவதெது
புகையும் நெருப்பில்லாம அதெப்படி எரியும்
நான் சொல்லட்டுமா
சொல்லு
பசித்து வாடும் மக்கள் வயிறு அது
சரிதான் சரிதான் சரிதான்
உலகத்திலே பயங்கரமான ஆயுதம் எது
கத்தி
இல்ல
கோடாரி
இல்ல
ஈட்டி
ம்ஹூம்
கடப்பாரை
இல்லை
அதுவுமில்லையா
அப்புறம் பயங்கரமான ஆயுதம் ஆறறிவாகுமோ
அது ஆயுதம் இல்லையே
அட தெரிய மாட்டேங்குதே
நீயே சொல்லப்பா
உலகத்திலே பயங்கரமான ஆயுதம் எது
நிலைக்கெட்டு போன நயவஞ்சகரின்
நாக்கு தான் அது
ஆஹா ஆஹா
நிலைக்கெட்டு போன நயவஞ்சகரின் நாக்கு தான் அது
புரட்சித்தலைவரின் மூத்த தோழர் - திராவிட இயக்கத்தின் முன்னோடி நாடக மற்றும் திரைப்படக்கலைஞர் - திராவிட இயக்கங்களின் கொள்கைகளை பட்டித்தொட்டி எங்கும் பரப்ப காரணமாக இருந்தவர்களுள் ஒருவர் அய்யா என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களின் நினைவு நாள் 30.08.2014
http://i1170.photobucket.com/albums/...ps7eea5ab0.jpg
50 ஆண்டுகள் கழித்து வெளியாகி, வெள்ளி விழா கண்ட எம்ஜிஆரின் ஆயிரத்தில் ஒருவன்!
ஆயிரத்தில் ஒருவன்
இந்த ஆண்டு அதே பிஆர் பந்துலு இயக்கிய அமரர் எம்ஜிஆரின் ஆயிரத்தில் ஒருவன் வெளியானது. 1964-ல் கர்ணனை எடுத்த பந்துலு, அதற்கு அடுத்த ஆண்டு இந்த ஆயிரத்தில் ஒருவனை இயக்கினார். எம்ஜிஆர் ஜோடியாக இப்போதைய முதல்வர் ஜெயலலிதா நடித்திருந்தார்.
மறுவெளியீடு
படம் மாபெரும் வெற்றி பெற்றது. பந்துலுவின் அத்தனை கடன்களும், சிக்கல்களும் தீர்ந்தன.
தற்செயலாகவோ திட்டமிட்டோ இதே போன்ற இடைவெளியில் மறுவெளியீடாக வந்தன இரு படங்களும். 2013-ல் கர்ணனும், 2014-ல் ஆயிரத்தில் ஒருவனும் மறுவெளியீடு கண்டு மகத்தான வெற்றி பெற்றுள்ளன.
புது சாதனை
குறிப்பாக ஆயிரத்தில் ஒருவன் படம் நிகழ்த்தியிருப்பது சரித்திர சாதனை.
டிஜிட்டலில் புதுப்பிக்கப்பட்ட ஆயிரத்தில் ஒருவன் தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் 14-ந்தேதி வெளியிடப்பட்டது. மொத்தம் 122 தியேட்டர்களில் திரையிடப்பட்டது.
தற்போது சென்னையில் உள்ள சத்யம், ஆல்பட் தியேட்டர்களில் 25-வது வாரமாக நோக்கி ஓடிக் கொண்டு இருக்கிறது, நல்ல வசூலுடன்.
பாராட்டு விழா
இதையொட்டி ‘ஆயிரத்தில் ஒருவன்' படத்தில் பணியாற்றியவர்களை பாராட்டி சிறப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
175-வது நாள் வெற்றி விழாவையும் கலைஞர்களுக்கு பாராட்டு விழாவையும் நாளை மறுநாள் (1-ந்தேதி) மாலை 6.30 மணிக்கு தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் நடத்துகின்றனர். சரத்குமார் எம்.எல்.ஏ. தலைமை தாங்குகிறார்.
பி வாசு
ஆயிரத்தில் ஒருவன் படத்தை வெளியிட்ட திவ்யா பிலிம்ஸ் சொக்கலிங்கம் வரவேற்று பேசுகிறார். எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர்களான சத்யராஜ், பி.வாசு, ஆர்.பாண்டியராஜன், விக்ரமன், விவேக், செந்தில், கே.ராஜன், மயில்சாமி, சார்லி, ஜாக்குவார் தங்கம் ஆகியோர் முன்னிலை வகிக்கிறனர்.
கேடயம்
ஆயிரத்தில் ஒருவன் படத்தில் பணியாற்றிய பல கலைஞர்கள் இப்போது இல்லை. இசையமைத்த எம்.எஸ்.விஸ்வநாதன், பின்னணி பாடலை பாடிய பி.சுசீலா, வசன கர்த்தா ஆர்.கே.சண்முகம், நாகேஷ் ஜோடியாக நடித்த மாதவி, எல்.விஜய் லட்சுமி, பத்மினி பிக்சர்ஸ் பி.ஆர்.ரவிசங்கர் போன்றோருக்கு விழாவில் கேடயம் வழங்கப்படுகிறது.
courtesy one india tamil
மீண்டும் வெள்ளி விழா கொண்டாடியது ஆயிரத்தில் ஒருவன்
Ayirathil Oruvan celebrates its Silver Jubilee again
1965ம் ஆண்டு வெளிவந்த படம் ஆயிரத்தில் ஒருவன். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா இணைந்து நடித்த இந்தப் படத்தை பி.ஆர்.பந்துலு இயக்கி இருந்தார். விஸ்வநாதன், ராமமூர்த்தி இசை அமைத்திருந்தனர். வெளியான ஆண்டே 175 நாட்களை தாண்டி வெள்ளிவிழா கண்ட படம். இந்த படத்தை டிஜிட்டல் தொழில்நுட்பத்திற்கு மாற்றி அகன்ற திரையில் மீண்டும் வெளியிட்டார் திவ்யா பிலிம்ஸ் சொக்கலிங்கம். இப்போது படம் ஆல்பர்ட் காம்பளக்சிலும், சத்தியம் காம்பளக்சிலும் தினமும் ஒரு காட்சியாக 175 நாளை தொட்டுவிட்டது. புதிய படங்கள் சாதிக்க முடியாததை ஆயிரத்தில் ஒருவன் மீண்டும் சாதித்திருக்கிறார். வருகிற 31ந் தேதி ஞாயிற்றுக்கிழமை சென்னை காமராஜர் அரங்கில் பிரமாண்ட விழா நடத்தி இந்த வெற்றியை கொண்டாட இருக்கிறார்கள்.
courtesy dinamalar
correct sir
NEWS FROM THE HINDU DT. 29/08/2014
----------------------------------------------------------------------
http://i62.tinypic.com/2lsfnfr.jpg
நக்கீரன் -வார இதழ் வெளியிட்ட செய்தி.
http://i59.tinypic.com/n134et.jpg
http://i57.tinypic.com/f3hkqh.jpg
நன்றி: நக்கீரன் வார இதழ்.
சென்னை சைதாபேட்டை காரணீஸ்வரர் கோவில் அருகில்
எங்கள் தெய்வம் எம்.ஜி.ஆர். பக்தர்கள் வைத்துள்ள பேனர்
http://i62.tinypic.com/2dkgpf.jpg
சென்னை பாட்சாவில் (மினர்வா) தற்போது வெற்றி நடை போடுகிறது -புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். வழங்கும் "நான் ஏன் பிறந்தேன் "- தினசரி 3 காட்சிகள் .அதன் சுவரொட்டிகளை காண்க .
http://i62.tinypic.com/fm27ly.jpg
சென்னை சைதாபேட்டை , கோடம்பாக்கம் சாலையில் உள்ள
ஒரு ஓட்டலின் முன்பு சுதந்திர தினத்தன்று வைக்கப்பட்டுள்ள பேனர்
http://i60.tinypic.com/zml26v.jpg
சென்னை சரவணாவில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். "தர்மம் தலை காக்கும் " -தினசரி 3 காட்சிகள் வெற்றிகரமாக நடைபெறுகிறது. அதன் சுவரொட்டிகள் நமது நண்பர்களின் பார்வைக்கு.
http://i62.tinypic.com/3vpef.jpg