கண்பத் சார்.. நான் நகைச்சுவையை எண்ணித்தான் சிரித்தேன்..பிழை பார்க்கவே இல்லை..இப்போது அந்தப் பிழையும் பொருத்தமாய்த் தெரிகிறது ;) அனில் அம்பானியா..பெருமாள் தான் நீங்கள்..(பெருமாள் - பெரிய ஆள்)
Printable View
டியர் கோபால் சார்,
ஏற்கெனவே 1985-லேயே மோகன், ராதிகா, ஊர்வசி நடித்த 'தெய்வப்பிறவி' என்ற படம் வந்தது (இந்திப்படம் 'தோபா' ரீமேக்). அதுபோக சில ஆண்டுகளுக்கு முன் சரத்குமார் நடித்த (வீரபாண்டிய இல்லாத) வெறும் 'கட்டபொம்மன்' மற்றும் 'நாடோடி மன்னன்' படங்கள் வந்தன. இப்போதோ பழைய படங்களின் பெயர் வைப்பது ஒரு பேஷனாகவே ஆகிவிட்டது.
கதைகளில் ரீமேக், தலைப்புகளில் ரீநேம், பாடல்களில் ரீமிக்ஸ் என்பதெல்லாம் சமீபத்திய படைப்பாளிகளின் (????) கற்பனை வறட்சியைக் காட்டுவதே தவிர வேறில்லை. எவனோ சிரமப்பட்டு சமைத்து வைத்ததை நோகாமல் எடுத்துப் பரிமாறுவது. உத்தமபுத்திரன் கதையையே திருப்பி எடுத்தாலும் அதற்கு 'இம்சை அரசன் 23-ம் புலிகேசி' என்று தலைப்பிடவில்லையா?. அதுபோல புதிய தலைப்புகளை வைக்க வேண்டியதுதானே.
வேறு மொழிகளில் வந்த படத்தை தமிழில் ரீமேக் செய்யலாம். தமிழில் வந்ததையே மீண்டும் தமிழில் ஏன்?...
நடிகர் திலகத்தின் நடை (என்னைக் கவர்ந்தவை)
*
1. முதல் நடை என்னை அழைத்ததே..
*
நடை என்றால் என்ன நினைவுக்கு வருகிறது.? ,முதன் முதல் குழந்தை சற்றே எழப் பார்க்கிறது. படக் படக் என நீந்திச் சுவரருகே செல்கின்றது. பின் சுவற்றைப் பிடித்துப் பற்றியவண்ணம் கொஞ்சம் கொஞ்சமாய் நடக்கிறது ( நான் இந்தக் கட்டுரை எழுதுவதன் மூலம் செய்வதைப் போல). பின் விழுகிறது பின் பிடிப்பில்லாமல் தளர் நடை..முதலில் ஒரு கால்..பின் தொடரும் சிறுகால் அட நாம் கொஞ்சம் தூரம் நடந்து விட்டோமே என ப் பெருமை..யாராவது பார்த்து யே எனக் கைதட்டினால் பூரிப்பு பிறகு கிடுகிடுவென வந்து கால்களைக் கட்டிக் கொள்ளும்.. அது ஒரு நடை..
*
வளர்ந்து மங்கைப்பருவத்தை அடைந்த பெண் கண்களில் கனவு மின்ன தெருவில் அழகிய சுடிதாரணிந்து நடக்கையில் கொள்ளும் மென்மை நடை.. ராணுவத்தில் சேரும் வீரன் ஏகப் பட்ட பயிற்சிகளால் கொள்ளும் கம்பீர நடை..ஓ. நிறைய நடைகள் இருக்கின்றன..
*
இப்போது நடிகர் திலகம் ஒரு படத்தில் நடந்த நடை பார்க்கலாமா..
**
அவள் அழகி.. வண்ணக் கனவுகள் மின்னிடும் பருவம்..காலத்தின் கோலத்தில் அவள் எழில் கருப்பு வெள்ளையாய்த் தான் தெரிகிறது. நமக்கு .ம்ம் சொல்ல மறந்து விட்டேனே..அவள் இளம்பருவத்தில் இருப்பவள்..கண்களால் கொல் கொல்லெனச் சிரிப்பவள்.. இப்போது அந்தக் கண்களில் மயக்கம்..ஏனாம்..
*
ஏனெனில் அவளுக்குக் காதல் வந்து விட்டது..
சோதனையாய் உள்நுழைந்து சுட்டுவிடும் வேதனைகள்
காதலில் வந்திடும் காண்
என்று சில பெரியவர்கள் (?!) சொல்லியிருப்பது போல்.. துன்பங்கலந்த இன்பம்.. அவன் மனம் அவளிடம் இருக்கிறதா..இல்லையா தெரியவில்லை..வரச் சொல்லுகிறாள்..
*
அவன் என்றால் யார்..அவன் அவள் மனம் கவர்ந்தவன்..ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்றவன்..வாழ்க்கையெனும் போர்க்கள்ம் என்பார்கள்..அவன் வாழ்க்கையில் போர்க்களம் பல கண்டவன்..பல அடிகள் கொண்டவன்.. போர்க்களத்திலும் காலில் அடிபட்டு சற்றே ஊனமாகி விந்தி விந்தி நடப்பவன்..எல்லாவற்றிற்கும் மேலாய் அவளுடைய சகோத்ரியின் கணவர் அலுவலகத்தில் வேலை பார்ப்பவன்..கொஞ்சம் பூரித்த உடல்வாகு..சிரித்த முகம்..யெளவனப் பருவம்..திடகாத்திர உடல். மென்மைப் பேச்சு, கூரிய அறிவு...போதாதா பாவையின் உள்ளம் கொள்ளை போவதற்கு..
*
தனியாக அழைத்து விட்டாளெயொழிய அவனிடம் எப்படிச் சொல்வது..துடிக்குமிதழின் ஆசையை…ஓசையின்றி ஆர்ப்பரிக்கும் உள்மன ஓசையை… கேட்கிறாள் கேள்விகளாய்…
கொடியசைந்ததும் காற்று வந்ததா
காற்றுவந்ததும்கொடியசைந்ததா..
அவனும் பதில் பாடி வேகமாகவும் அவளது துள்ளல் நடைக்குப் போட்டியாக தனது விந்தும் நடையையும் வைத்து விரைவாக நடக்கிறான்..
*
ஓடி வந்ததும் தேடி வந்ததும் பாடி வந்ததும் பார்க்க வந்ததும் எனக் குறும்புக் கண்களும், கொஞ்சும் கண்ணுடனும் சற்றே கொழுக்மொழுக் கன்னமுமாக அந்த நாயகி கேட்க நாயகனும் குறும்புச் சிரிப்புடன்
“காதலென்பதா பாசமென்பதா கருணையென்பதா உரிமை என்பதா எனக் கேட்கிறான்..
*
ம்ம் அந்த வித்தியாச வேக நடை காதல் வயப்பட்ட மனது.. காட்டும் தன்மையில் இன்னும் நடிகர் திலகம் கண் முன் நிற்கிறார்
*
வாசக தோஷ ஷந்தவ்யஹ
*
(தொடரும்)
(ஸாரி கோபால் சார்..நடை என்றதும் இது தான் முதலில் என் நினைவுக்கு வந்தது..உங்கள் காதல் கட்டுரையில் குழப்புகிறேன் என ஊடல் கொள்ள வேண்டாம்!)
Murali Sir - there is no word in dictionary of any language to find a word worth to your write ups - "excellent " , superb are all outdated one - marvelous is some what close but still it was used by many Hubbers already - so I'm using a little inferior word - "thank you so much " - what a flow !!! How much realistic with facts and figures !!! how much hard work that has gone into your write ups - This thread is reaching an iconic status and all because of you , Vasu , gopal , Ragavendran sir , , KC sir , karthik ,Ganpat , NT 360 , chinna kannan , LS ( a new joinee in our hub) .
Taking names a highly risky one - there are enough chances to leave out other greats in this hub - though unintentional my apology for having left out any one's name ) - it might take generation to reach your level of writing but as small squirrels in Ramayana - we scrabble some thing here and there to keep the thread going . It pains , irrespective of what personality NT is , his talents are not praised in an unbiased manner - people still lacks that level of maturity to recognize talents and pride of a person who added so much laurels to tamil , Telungu , malayalam , kannada cine fields in his life time. Cheetah is a Cheetah , all cats who paint themselves with stripes cannot become cheetahs - you have once again proved his movies are immortal and money spinners if preparatory work is done with adequate care .
Ravi
:smokesmile::-D
டியர் சின்னக்கண்ணன் சார்,
தங்களின் "நடிகர்திலகத்தின் நடை" (நடையழகு என்றழைத்தால் நன்றாக இருக்கும்) தொடர் ஆரம்பமே அழகாக இருக்கிறது. தங்களின் நடையும் பிரமாதமாக இருக்கிறது. நான் எழுத்து நடையைச் சொன்னேன்.
எங்களுக்கு கோபால் சாரின் அசைவமும் வேண்டும், சின்னக்கண்ணன் சாரின் சைவமும் வேண்டும்.
கோபால் சார், ராகவேந்திரா சார், சேகர் சார் நன்றி..
//ஊஹூம், நீயெல்லாம் சுத்த சைவம். என் காதல் track வேறே.கவலையே படாதே...(என் சிவகாமியின் செல்வன் எத்தனை அழகு பதிவு படித்ததில்லை போல....) //
ம்ம் அது சரி காதல் பாட்டுன்னு குத்தகை எடுத்துக்கிட்டு இப்படி சொன்னா என்னவாம்.. :) (அது சரி..பொண்ணுக்கென்ன அழகு தானே..சொல்லுங்க சொல்லுங்க!!)
டியர் சின்னக்கண்ணன் சார்,
நடையழகுப் பாடல் தங்கள் நடையழகில் அருமை. அதன் விளைவு?. இதோ நாமும் எழுதுவோமே என்ற எண்ணம்.
காதல் வயப்பட்டு விட்டான் கட்டிளம் மங்கையிடம். அவளோ கண்களாலேயே காதல் மொழிபேசும் கலையில் தேர்ந்தவள். அவள் எப்படியிருப்பாள் என்று தன நண்பனிடம் (ஆம், நண்பனிடம்தான், ஏனெனில் அதுவரை தெரியாது அவன் தன் தம்பியென்று) விளக்கும் முகமாக பாடும் பாடலில்தான் அவனுக்கே சொந்தமான அந்த அழகு நடை..
கடற்கரையில் கட்டுமரத்தின் மீது அமர்ந்திருக்கும் நண்பனிடம் தன் காதலியின் அழகை வர்ணிக்கும்போதுதான் அவன் முகத்தில் என்ன மலர்ச்சி, மாறாத புன்னகை. அந்த உற்சாகத் துள்ளலோடு அவன் நடக்கும் நடையில்தான் எத்தனை அழகு கொட்டிக்கிடக்குது, எப்படி மனதை தட்டிப்பறிக்குது. கடற்கரையில் நடக்கும் அந்த ஸ்டைல் நடை அவனுக்கே உரிய தனிச்சொத்து. பலர் காப்பியடிக்க முயன்று தோற்றனர் செத்து.
காதலி 'அஹஹஹா' என்று ஹம்மிங் மட்டும் பிடிக்க, அவளை மனதில் நினைத்துக்கொண்டே அந்த ஸ்டைல் நடையுடன் பாடும் அழகில்தான் எத்தனை கம்பீரம்.......
'எண்ணிரண்டு பதினாறு வயது
அவள் கண்ணிரண்டில் ஆடுதம்மா காதல் கொண்ட மனது'
(நடையழகை எழுதுவது என்று ஆகிவிட்டது, அது 'அண்ணியின்' பாடலாக இருக்கட்டுமே)
கார்த்திக்கின் பதிவைப் பார்த்து, படித்து பின் உடனே மனதில் ஏனோ இந்தப் பாட்டு நினைவுக்கு வந்து விட்டது...
http://youtu.be/MJEpfLQCQfY
பாட்டு ஆரம்பமே நடையோடு... அதுவும் ....சரணத்தில் அந்த மணற் பரப்பில் தேவிகா பாடி ஆட, படகுகளின் ஓரமாய் தலைவரின் நடை..... ஆஹா....
ஹாய் கார்த்திக் சார்..வெரி நைஸ்.. என்னா அழகுப் பாட்டு அது..ம்ம் அதுவும் ஜோடிப் பொருத்தம் வாவ்..
ராகவேந்திரா சார்.. அது என்ன பாட்டு பந்த பாசம் தானே படம்..என்னுடைய ஸ்பீக்கரில் ஆடியோ அவுட்..பாட்டுக் கேட்கவில்லை..ம்ம்
சரி சரி..பலவருடங்களுக்கு முன் தேவிகா பற்றி ஒரு இணையக் குழுவில் எழுதிய கட்டுரை..அடுத்த போஸ்ட்டில் ( I hope that post wont deviate this threads intention)
(விதி யாரை விட்டது :) )
******************
தேவிகா....
**************
அது ப்ளஸ்டூ முடித்த சமயமா, கல்லூரி ஆரம்பித்த பொழுதா என எனக்குச் சரியாக நினைவிலில்லை. ஒன்று மட்டும் நினைவிருக்கிறது. பழைய- பார்க்காமல் விட்டுப் போன சிவாஜி படங்களைத் தேடிப் பார்த்த பருவமது.
• *
எங்களூர் (மதுரை) சாந்தி தியேட்டரில் வெள்ளி வெள்ளியன்று படம் மாற்றுவார்கள். சிவாஜி படமென்றால்
சனிக்கிழமை மாலைக்காட்சி நான் ஆஜர்.
• *
அப்படி சாந்தி தியேட்டரில் வராத ஒரு படம் செல்லூர் போத்திராஜாவில் ஓடுவதைக் கண்டேன். அதைப் பார்க்க
வேண்டுமென்று வழி கேட்டால் இப்படியே 25 ம் நம்பர் பஸ் -சென்ட் ரல் - குலமங்கலமோ ஏதோ போட்டுச் செல்லும்
அதில் போய்ச் செல்லூரில்(வைகையாற்றின் அக்கரையில்) இறங்கு என்றான் வக்கீலாத்து ராதா. சரி என்று ஒரு சனி
மாலை ஏறிச் சென்றால் அது ஒரு சின்னத் தியேட்டர்.. கைலி,வேட்டி, சேலை என்று கிராம பாஷையுடன் மனிதர்கள்
வர பேண்ட் போட்ட எனக்கு ராஜ மரியாதை. 80 பைசாவுக்கு மாடியில் டிக்கட். குஷியுடன் படம் பார்க்க ஆரம்பிக்க
அந்தக் கதானாயகி அறிமுகமாகும் காட்சியிலும் பின்னர் கண்டிப்புக்கார புரபஸர் சிவாஜி மழையில் அவளை
அணைக்க..குறும்புடன் அவள் இடி மழை புரபஸர் எனச் சொல்ல- ஆமாம் இடியும் மழையும் வானத்தின் குழந்தைகள் என்று
டால்ஸ்டாய் சொல்லியிருக்கிறார் என சிவாஜி வழிய- அந்த நாயகி என் மனதில் குட்டிச் சுவரில் சினிமாப்
படப் போஸ்டர் மாதிரி பச்சக் என்று ஒட்டிக் கொண்டாள்..
• *
அது தேவிகா.. படம்.. ஆண்டவன் கட்டளை..
இந்த பிரம்மா இருக்கிறாரில்லையா.. சரஸ்வதி கிச்சுக் கிச்சு மூட்டிக் கொண்டிருந்த தருணத்தில் அவளைப்
(தேவிகாவை) படைத்திருப்பார் போல.. முகம் முழுக்க குறும்பு. ஆப்பிளை நன்றாக அரைத்து அதனுடன் இட்லி
மாவையும் கலந்து இட்லித் தட்டில் எடுத்துவைத்த பொசு பொசு இட்லி மாதிரி கன்னங்கள். தள்ளுவண்டியில் வரும்
காய்கறிக் காரனிடம் பேரம் பேசி இரண்டு ரூபாய்க்கு வாங்கும் வாழைத் தண்டு மாதிரி முற்றலாக இல்லாமல்
நிஜமாகவே இளம் வாழைத்தண்டாட்டம் கைகள்.. மற்றும் என்று ஆரம்பித்தால் ராயர் கிளப்பில் மெம்பர்ஷிப் கான்ஸல்
செய்து விடுவார்கள்.
• *
1966 ல் பொம்மை -யின் முதல் இஷ்யூவில் அட்டைப் படமாக வந்தவராம் அவர். (அப்போது கைக்குழந்தையான எனக்கு
அம்மா நிலாச் சோறு ஊட்டியிருப்பார் என நினைக்கிறேன்)
• *
சிவாஜியுடன் நடித்த படங்களில் மட்டும் கொஞ்சம் நெருக்க்கம்.. மற்ற படங்களில் அப்படிக் கிடையாது..
எம்ஜிஆருடன் ஒரே ஒரு படம்..ஆனந்த ஜோதி..நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்கத் தெரியாதா..மறக்க
முடியாத பாடல்..
• *
ஆண்டவன் கட்டளை பார்த்த பிறகு தேவிகா படங்களாகத் தொடர்ந்து பார்க்க ஆரம்பித்தேன்.
*
மேற்கண்ட படத்தில் 'ஒரு கேள்வியை உன்னிடம் கேட்டு விட்டேன், நான் கேட்டதை எங்கே போட்டு விட்டாய், என்ன
தேடுகிறாய் எங்கே ஓடுகிறாய், உன் தேவைகளை ஏன் மூடுகிறாய்' என்று பாடிய போது அவர் முகத்தில்
பிரதிபலித்த குறும்பு, நீல வானத்தில் 'மலரில்லாத தோட்டமா கனியில்லாத வாழையா மனதில் மட்டும்
அன்னையா மகனே நீ இல்லையா..' என்ற சோக நடிப்பு,அதே படத்தில் 'வருடந்தோறும் வசந்தம் தேடி வருவோம்
இங்கே, வாடைக் காற்றில் மூடும் பனியை ரசிப்போம் இங்கே' என்ற உற்சாகம், கொழுக் மொழுக்கென்ற உடம்பு
முழுவதும் முழுத் திரையில் தெரிய 'குறை கொண்ட உடலோடு நானிங்கு மெலிந்தேன்' என்று கர்ணனில் பாடுவதைப்
பார்த்த போது சிரிப்பு, திருவிளையாடலில் box officeற்காக பாண்டிய ராணியாக 'பொதிகைமலை
உச்சியிலே புறப்படும் தென்றல்' எனப் பாடிய வண்ணம் நீராடிய போது கண்களில் காட்டிய நாணம் +ஆசை,
சாந்தியில் 'நூலிடை மீதொரு மேகலை ஆட மாலைக் கலைகள் ஆசையில் வாடும், ஏலப் பூங்குழல் இன்னிசை பாட
எண்ணம் யாவும் எங்கோ ஓட - காலையில் உறங்கி மாலையில் எழுந்தால் கண்கள் இரண்டில் நிம்மதி ஏது.. நிம்மதி
ஏது ' என்று காதல் வயப்பட்டுப் பாடுவதைப் பார்த்த போது போன நிம்மதி..ம்ம் சொல்லிக் கொண்டே
போகலாம்.
**
வாழ்க்கைப் படகில் 'மன்னவனே ஆனாலும் வாள்பிளந்து அறுத்தாலும் பெண்மனதை நீ அடைய முடியாது' என்று விழிகளில்
காண்பித்த சீற்றம்,ஜெமினியுடன் 'உன்னை நான் பார்க்கும்போது மண்ணை நீ பார்க்கின்றாயே' எனும் போது
கொள்ளும் வெட்கம், 'என் அன்னை செய்த பாவம் நான் மண்ணில் வீழ்ந்தது.. என் அழகு செய்த பாவம் உன்னைக்
கண்டது..என் கண்கள் செய்த பாவம்..' என்ற போது காண்பித்த சோகம் எனச் சேர்த்துக் கொள்ளலாம்..
• *
கண்ணதாசன் எழுதிய கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறார் ' வாழ்க்கையில் ஜாக்கிரதையாக இருக்கத் தெரியாதவர்
தேவிகா (என்ன என எனக்குத் தெரியாது). நான் திரைப்படங்கள் எடுத்த போது நன்கு ஒத்துழைப்புக் கொடுத்த
நடிகை அவர்.. என்னை எப்போது பார்த்தாலும் அவர் பாடும் பாட்டு'பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர்
பெருமானே.. உனைப் புரிந்து கொண்டாள்.. ஒன்று தெரிந்து கொண்டாள் இந்தப் பூவையர் குலமானே'' என்று
எழுதியிருந்தார் (குமுதத்தில் வெளியான கட்டுரை என நினவு).
• *
உண்மையான ரசிகனுக்கு நடிக நடிகையரின் பெர்ஸனல் வாழ்க்கையைப் பற்றி அவ்வளவு விருப்பம் கிடையாது எனச்
சொல்லலாம். அவனுக்குத் தேவை நடிப்பு + அழகு. பிற்காலத்தில் அவர் அண்ணி, அம்மா என நடித்திருந்த படங்களைப்
பார்த்த போது கொஞ்சம் வருத்தமாகத் தான் இருந்தது.
• *
எனக்குக் கல்யாணமான புதிதில் வேறு படம் கிடைக்காமல் வீடியோவில் கரகாட்டக் காரன் பார்த்துக் கொண்டிருந்த
போது - இந்த நடிகையின் தாய் தான் எனது க.க' என இலக்கியத் தனமாக உளறி விட என் அகம் கொடுத்த
எக்ஸ்பிரஷன் இருக்கிறதே.. மறக்கவே முடியாது.(கூடவே இலவச இணைப்பாக ஒரு கிள்ளும் கிடைத்தது வேறு
விஷயம்.)
• *
இப்போதும் கூட தேவிகாவின் படங்களைப் பார்க்கும் போதெல்லாம் - என் வீட்டில் 'யோவ்.. நாக்கை உள்ளே
இழுத்துக்கய்யா.. ஜொள்ளுவிடுவது தாங்கலை' எனப் பொறாமைக் குரல் வரும்.
•
• *
வருஷம் தோறும் வசந்தம் தேடி வருவோம் இங்கே...
வாடைக் காற்றில் மூடும் பனியில் மகிழ்வோம் இங்கே..
இந்த வரிகள் இரண்டாம் முறை ஒலிக்கும் போது
தலைவரின் முகத்தைப் பாருங்கள்....
எவ்வளவு அர்த்தங்கள் ... வருஷம் தோறும் என அவள் அடுத்த முறையையும் எதிர்பார்த்து பாடுவதாக ஒரு பொருள் கொண்டு வருந்துகிறார், அவள் அடுத்த வருடம் இருக்க மாட்டாளே என்று..
அவளோ அடுத்த வருடமும் வருவோம் என்கிற நம்பிக்கையில் பாடுகிறாள்.
வார்த்தைச் சித்தர் கண்ணதாசன் இரு பொருள் பொதியும் படி எழுத்தில் ஜாலம் காட்டி அந்த சூழலை அப்படியே வார்த்தையில் வடிக்க, மெல்லிசை மன்னரின் இசையில் அந்த வரிகளுக்கு சுசீலா இரு பொருளும் புலப்படும் படி உச்சரித்துப் பாட ...
தேவிகாவின் முகத்தில் நம்பிக்கையும், தலைவரின் முகத்தில் ஏமாற்றத்தை சந்திக்கப் போகிறோமே என்கிற வருத்தம், அவளுடைய உடல் நலத்தைப் பற்றிய சோகம் அனைத்தும் சேர்ந்து தமிழ்த் திரையுலகின் மறக்க முடியாத பாடல் காட்சியாக அளித்து விட்டார்கள்.
தேவிகா என்ற உடனே நினைவுக்கு வரும் இப்பாடலைப் பற்றிச் சொல்லாமல் இருக்க முடியவில்லை, பார்க்காமலும் இருக்க முடியாது
http://youtu.be/ygjqxrk-Hsc
டியர் சின்னக்கண்ணன் சார்,
உங்களுக்கு கனவுக் 'கன்னி' அதனால் ஜொள்ளோ ஜொள்ளு என்று வழிகிறீர்கள். ஆனால் எனக்கோ (நானே என் மனதில் வரித்துக்கொண்ட) என் 'அண்ணி'. அதனால் லிமிட் தாண்ட முடியாது, தாண்ட மனம் விரும்பாது. அண்ணி தேவிகாவின் பாடல்களை அழகாய் பட்டியலிட்டீர்கள். இன்றைக்கும் கூட 'கங்கைக்கரை தோட்டம்' பாடலைப் பார்த்துக்கொண்டு இருக்கும்போது சுனாமி வந்தால், பாட்டைப் பார்த்து முடித்துவிட்டு ஓடுவோம் என்றிருப்பவன்.
'நானும் ஒரு தொழிலாளி' கமலும் அம்பிகாவும் ஜோடி என்றார்கள். மெல்லப்பர்த்துக்கொள்வோம் என்று நினைத்தேன். ஸ்ரீதர் இயக்கம் என்றார்கள். சுணங்கிப் பார்ப்போம் என்றிருந்தேன். தேவிகாவும் இருக்கிறார் என்றார்கள். செருப்பை மாட்டிக்கொண்டு கிளம்பிவிட்டேன் தியேட்டருக்கு. அண்ணியின் கடைசிப்படம் என்று அப்போது தெரியாது எனக்கு. இருந்தாலும் மனதுக்குள் ஒரு உறுத்தலாய் அண்ணி வரும் காட்சியில் எல்லாம் சோகமே உருவாக பார்த்துக் கொண்டிருந்தேன். அவர் கமலுடன் தாய்ப்பாசத்தை பொழிந்து கொண்டிருந்தார். ஆனால் நான் மனதுக்குள் அவரோடு பேசிக்கொண்டிருந்தேன்.
கனகாவுடன் படப்பிடிப்புக்கு துணைக்கு வந்துகொண்டிருந்தவர், உடல்நிலை காரணமாக வருவதில்லை என்று செய்தி போட்டார்கள். அப்போதே எனக்குப் பொறி கலங்கியது. அண்ணன் மறைந்த அடுத்த வருடமே (2002) அண்ணனைத் தேடிப்போய்விட்டார் என்ற செய்தி இடியாய்த் தாக்கியது.
ஆயிரம் நடிகையர் இங்குண்டு... ஆனால் அண்ணி உன்போல் யாருண்டு.....
சின்ன கண்ணன் சார் in full form..
பலே பாண்டியா என பாராட்டலாமென ஆரம்பித்தால்..
என்ன சார் அதை விட்டுடீங்க?
வாழநினைத்தால் வாழலாம்..
இரவுக்காய் உறவுக்காய் ஏங்கும் இந்த ஏழைக்காய்..
(நீங்க நிலாச்சோறு சாப்பிட்ட போது,நாங்கள் தட்டில் போட்டு பிசைந்து சாப்பிட்டவங்களாக்கும்!:smile::smile:)
Chinnakannan you have reminded me about the goldendays we have enjoyed sivaji- devika pair right from pandapasam days followed by cute A. KATTALAI NEELAVANAM ETC. LOVELY PAIR OF SIXTIES.
TODAYmy sleep has gone. one of my very close friend has ot taken food for several days when she paired with the other side star,
டியர் சுப்ரமணியம் ராமஜெயம் சார்,
ஐந்து பக்கங்களுக்கு ஒருமுறை நான் ஒரு வேண்டுகோள் பதிவை இடுவது வழக்கம் என்று சென்ற வாரம் கூட குறிப்பிட்டிருந்தேன். திரும்ப திரும்ப அந்த வேண்டுகோளை வைக்கும்போது மற்றவர்கள் மனம் வருத்தப்படுமோ என்ற அச்சமும் ஏற்படுகிறது. என்ன செய்வதென்று தெரியவில்லை......
Kartik sir.
As our anni devika's neelavanam song has to be enjoyed with my reply I have done like that, keeping in mind your early reminders very much. sorry it will not happen again.
டியர் கார்த்திக் சார்.நன்றி..தேவிகா பற்றிய.இந்தக் கட்டுரை ராயர் காப்பி கிளப் இணையக் குழுவில் எழுதியது..சொல்லாமல் விட்ட விஷயம்..இது எழுதி சில தினங்களில் (மே 1) என நினைக்கிறேன். அவர் இறந்துவிட்டார் எனச் செய்தி வ்ந்து மிக வருத்தமாக இருந்தது..
கண்பத் சார் நன்றி.. அப்ப நான் ச்சின்னக் கண்ணன் தான் :) சார்லாம் வேண்டாம்.. பலே பாண்டியாவை விடவில்லை..எழுதும் போது கொஞ்சம் விடுபட்டு விட்டது (அதில் வரும் பாலாஜி லவ்வர் நன்னாயிட்டு இருக்கும் :) )
ராகவேந்திரா சார்..//தலைவரின் முகத்தைப் பாருங்கள்...// நடிகர் திலகத்தின் உணர்ச்சிகள் அபாரமாக இருக்கும்..இன்னொரு காட்சியில் ரோஜாச்செடி வளர்ந்து பதறுவதை..ம்ம் ஓ லஷ்மி ஓ ஷீலா ஓ மாலா வும் நினைவுக்கு வருகிறது...
சுப்ரமண்யம் ராம ஜெயம் சார்.. நன்றி :) ஆனந்த ஜோதி ஒன்று தானே அவர் எம்ஜியாருடன் நடித்த படம்.. நான் பாடல் மட்டும் பார்த்திருக்கிறேன்..
பலே! பலே!
கண்பத் சார்,
ரங்கனின் அய்யய்யோவை அற்புதமாக வடித்திருக்கிறீர்கள்.
சின்னக் கண்ணா சார்,
உங்கள் காட்டில் அடை மழை. தேவிகா, பாடல்கள் என்று ஒரே கலக்கல்.
கார்த்திக் சார்,
தங்கள் பங்கிற்கு குறைவில்லை. கன்னி, அண்ணி என்று எதுகை, மோனை. எனக்கு மஞ்சு ஞாபகம் வந்து விட்டது.
ராகவேந்திரன் சார்,
பொருத்தமான வீடியோக்கள் அளித்து ஏனையோர் பதிவுகளுக்கு மெருகு அளித்துள்ளீர்கள்.
கோ,
அனைத்துக்கும் நீதான் காரணம். சந்திரசேகரன் சாரையே நீண்ட பதிவு போட வைத்து விட்டாயே! இதில் நீ நிஜமாகவே சாதனை படைத்து விட்டாய்.
சந்திர சேகரன் சார்,
படத்தலைப்புகளைப் பற்றிய தங்கள் விளக்கம் அருமை. ஏதேது?... முரளி சார், நீங்கள் எல்லாம் வக்கீல் தொழிலுக்கு வந்திருந்தால் பல பேரை கிலி கொள்ள வைத்திருப்பீர்கள் போல் இருக்கிறதே! எவ்வளவு அறிவார்ந்த பதிவுகள்! முரளி சார்! மீண்டும் தங்களுக்கு நன்றி! மறுமுறை அனுபவித்துப் படித்தேன்.
இன்று மதியப் பணி சென்றுவிட்டதால் நண்பர்களுடன் சேர்ந்து குதூகலித்து பதிவுகள் இட முடிய வில்லை. ஜாலியான பொழுதை இழந்து விட்டேன்.
எல்லோரும் கலக்குகிறீர்கள். முக்கியமாக தலைவரின் நடை பற்றிய தங்கள் அனைவரது நடையும் நயம்.
ம்ம்...எனக்குப் பிடித்த நடை! வருகிறேன். விரைவில் தருகிறேன்.
அனைவர்க்கும் நன்றி!
என் பதிவுகளை மனமுவந்து பாராட்டிய ராமஜெயம் சார், வாசு, கணேஷ் சார், கோபால், ராகவேந்தர் சார், திருச்சி ராமச்சந்திரன் சார்,சந்திரசேகர், கார்த்திக் மற்றும் ஹைதராபாத் ரவி ஆகியோருக்கு மனங்கனிந்த நன்றி.
நடிகர் திலகம் திரியில் தாமதமாக நுழைந்தாலும் தரமான நகைச்சுவை மற்றும் கவிதைகளால் கலக்கும் சின்னகண்ணன் அவர்களுக்கு வாழ்த்துகள். [எங்கள் ஊர்காரர் அல்லவா, கலக்குவதற்கு கேட்கவா வேண்டும்? கோபால் நற நறவென்று பல்லைக் கடித்தாலும் இதுதான் உண்மை!]
கார்த்திக்,
ஜெய்குமாரி மற்றும் விஜயலலிதா இருவரும் நமது படங்களில் ஏற்று நடித்திருந்த சில கதாபாத்திரங்களை பற்றி நீங்கள் எழுதியிருந்த பதிவுகள் நல்ல ரசனையோடு எழுதப்பட்டிருந்தன. ஒரு சில வார்த்தை பிரயோகங்கள் எல்லாம் மிக பொருத்தமாக அமைந்திருந்தன.
அன்புடன்
நான் வாழ வைப்பேன் சென்னை மகாலட்சுமி திரையரங்கில் ஒரு கலக்கு கலக்கியிருக்கிறது. ஒரு வார வசூலில் பல படங்கள் 60 அல்லது 70 ஆயிரங்களை தொடுவதற்குள் நாக்கு தள்ளிப் போகும் சூழலில் அனாயாசமாக நான் வாழ வைப்பேன் 90 ஆயிரத்தை தொட்டிருக்கிறது. இத்தனைக்கும் நடிகர் திலகத்தின் ரசிகர்கள் பெரும்பாலானோர் படத்தை பார்க்க செல்லவில்லை. நடிகர் திலகத்தின் பிறந்த நாள் விழா சம்மந்தப்பட்ட வேலைகள் மற்றும் ஞாயிறு மாலை T.Nagar வித்யோதயா பள்ளியில் நடைபெற்ற விசில் நிகழ்ச்சியினால் தியேட்டருக்கு போகாமல் இருந்தவர்கள் என்று பல்வேறு காரணங்களினால் ரசிகர்களின் பங்களிப்பு என்பதே bare minimum ஆகிப் போனது. சரி ரஜினியை விரும்புபவர்கள் சென்றார்களா என்றால் அதுவுமில்லை என்கிறார் அரங்க உரிமையாளர். முழுக்க முழுக்க பொது மக்கள் மட்டுமே அமோக ஆதரவு கொடுத்திருக்கின்றனர். திரும்ப திரும்ப ஒரு குரூப் ரசிகர்கள் மட்டுமே பார்க்கும் படமல்ல நடிகர் திலகத்தின் படங்கள். அவை அதையும் தாண்டிய எந்த மன்ற அல்லது அமைப்பு சார்புமற்ற பொது மக்களால் பார்க்கப்படுவது என்பது மீண்டும் நிரூபணம் ஆகியுள்ளது.If at all Proof was required! இந்த வெற்றி உடனே ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் என்ன தெரியுமா? சென்னை பிராட்வே திரையரங்கில் இன்று முதல் தினசரி மூன்று காட்சிகளாக விடுதலை படம் வெளியிடப்பட்டிருக்கிறது.
இந்த மாதிரி படங்களாக,அதாவது நீதி [நாயகன்-நாயகி காரணமாக ஏதேனும் பிரச்சனைகள் வரக் கூடுமோ?] மற்றும் நான் வாழ வைப்பேன் [நாயக நடிகர்களின் ரசிகர்கள் இடையில்?] வெளியிடுகிறீர்களே சரியாக வருமா என்று சில பலர் சந்தேகம் கிளப்பிய போதும் நிச்சயம் நன்றாக வரும் என சொல்லி Fortune Favours the Brave என்ற பழமொழிக்கேற்ப தைரியமாக நின்று இன்று இந்த வெற்றிகளை குவித்திருக்கும் அருமை நண்பர் சுப்பு அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்!
இது போன்ற மேலும் பல வெற்றிகள் உங்களை தேடி வரட்டும்!
அன்புடன்
(காதல் காட்சிகள் தொடரை நான் எழுத ஆரம்ப பதிவாகவும், அண்ணிகள் பற்றி நிறைய பேச படுவதால் என்னுடைய மீள் பதிவு அவசியமாகிறது.)
படம் - சிவகாமியின் செல்வன். -26 ஜனவரி 1974.
பாடல்- எத்தனை அழகு கொட்டி கிடக்குது.
பாடியவர்- எஸ்.பீ.பாலசுப்ரமணியம் .
பாடலாசிரியர்- புதுமை பித்தன்
இசையமைப்பு- மெல்லிசை மன்னர்.
நடிப்பு- சிவாஜி-வாணிஸ்ரீ.
இயக்கம்- சீ .வீ.ராஜேந்திரன்.
நான் பதினைந்து வயது வயதுக்கு வந்த விடலையாய் ,மீசை முளைக்கும் பருவத்தில், இனம் பிரியா குழப்ப இன்ப உணர்வுகள் வாட்டி வதைத்த போது ,நான் மீண்டும் மீண்டும் பார்த்து மகிழ்ந்த படம் (குடந்தை நூர்மஹாலில் வரிசையாய் ஐந்து நாட்கள்)
அதிலும், என் விருப்பமான ஜோடியின் எத்தனை அழகு பாடலுக்காக மட்டும்(amatory மூட்,erotic arousal எப்படி வேண்டுமானாலும் வைத்து கொள்ளுங்கள்)இத்தனை முறை!!!!????
ஆனால் அதே பாடலை, உலகத்தில் இன்பங்கள் பாக்கி உண்டா என்ற பருவத்தில் பார்க்கும் போதும், ஒரு உருது கவிதை, ஒரு erotic சிற்பம் (அ )சித்திரம் பார்க்கும் புத்துணர்வை தருகிறது என்றால் எழத பட வேண்டியதே.
பொதுவாக சிவாஜி,பெண்களை விட ,பெண்களின் அம்மாக்களையே குறி வைத்தவைத்த முதல் அறுபதுகளில் இருந்து விடு பட்டு, பெண்களையும்,வாலிபர்களையும் ஈர்க்க தொடங்கி ,வசந்த மாளிகையில் ராஜாவாய் சுமதி சுந்தரியுடன் , இளைய மன்மதனாக ஜொலித்த கால கட்டம். வேறெந்த நடிகையுடன் நடித்ததை விட, வாணிஸ்ரீ.யுடன் அவர் நெருக்கம் உயர்ந்த மனிதனில் தொடங்கி நல்லதொரு குடும்பம் வரை தொடர்ந்தது.
காதல் காட்சி என்ற போதும் பொத்தாம் பொதுவாக நடிக்காமல், பாத்திர இயல்பு படி,வித்தியாசம் காட்டி ,சூழ்நிலை, கதையமைப்பு புரிந்து நடிக்கும் சுவை ஆஹா!! அதிலும் எத்தனை variety !!!எவன் எவனையோ காதல் மன்னன் என்று அழைக்கிறோமே?இவனல்லவோ காதல் பேரரசன் என்று தோன்றும்.
பொதுவாக erotism என்பது நமது கோவில்கள்,மத நூல்களில் கொண்டாட பட்ட போதும் ,british inhibitions காரணமாய் ,sexual slavery and deprivation இல் அகப்பட்டு, நல்ல hightened aesthetics என்று சொல்ல படும் erotic sensual intense romance என்று சொல்ல படும் காட்சிகளே எந்த இந்திய படங்களிலும் இல்லை.(அப்படியே ஒன்றிரண்டு வந்தாலும், காஞ்ச மாடு கம்பங்கொல்லையில் புகுந்த case தான் அல்லது மாலிஷ்.). எனக்கு தெரிந்த வரை இந்த Erotic genre இலும் முழு மதிப்பெண் நம் நடிகர் திலகத்துக்கே.நெஞ்சத்திலே நீ-சாந்தி, மெல்ல நட-புதிய பறவை,பலூன் காட்சி-சுமதி என் சுந்தரி, plum கடிக்கும் வசந்த மாளிகை என்று ஆயிரம் இருந்தாலும் ,இந்த குறிப்பிட்ட பாடல் erotic திலகம்.
எத்தனை அழகு பாடலில்(ஒரே டேக்கில் படமாக்க பட்டதாம்.hats off ! ஒரு சப்பை முத்த காட்சியை 20 டேக் எடுக்கும் கலிகாலம்) முதலில் களம். தங்களுக்குள் மண பந்த ஒப்பந்தம் புரிந்த(மற்றவர்கள் அறியாமல்) ஒரு ஜோடி ஒரு மழை நிறைந்த குளிர் இரவில்,ஒரு அறைக்குள் மாட்டி, தங்களை இழக்கும் காட்சி. அவனுக்கோ இன்பத்தை சோதிக்கும் ஆர்வமும், சுவைக்க துடிக்கும் அவசரமும்,தன்னை மறந்த நிலை. அவளுக்கோ, தயக்கம் கலந்த சம்மதம், தவிக்க விடும் நாணம்,உரிமையரியா உறவின் அறியா அச்சம் என இந்த ஜோடியின் தவிப்பை, சிவாஜியும் ,வாணிஸ்ரீ யும் அற்புதமாய் expressions ,body language ,suggestive movements என்று பின்னியிருப்பார்கள்.
முதலில் இந்த பாடலில் சி.வீ.ஆரின் colour sense and psychology யை பாராட்டியே ஆக வேண்டும்.(இதை அவர் சுமதி என் சுந்தரியிலேயே அற்புதமாக கையாண்டிருப்பார்) வாணிஸ்ரீ முதலில் ஒரு பிங்க் நிற புடவை அணிந்து அறைக்குள் வருவார். பிங்க் ஒரு வளர் சிறுமியின் பெண்மை குறியீடு. பிறகு சிவப்பு வண்ண அவசர ஆடைக்கும் மாறுவார்.சிவப்பு feeling of intense excitement ,romantic warmth ஐ enhance பண்ணும் நிறம்.ஆணுடையது வெளிர் பச்சை நிறம்.fertility ,bodily functional assurance குறிப்பது. இந்த இரண்டு நிறங்களின் இணைப்பே பாதி mood elater ஆக காரணியாகும்.
இதை விட hero -heroine physical ஆன எவ்வளவோ சிவாஜி பாடல்கள் கூட உண்டு. ஆனால், இந்த காட்சி தந்த intensity எந்த காட்சியும் தந்ததில்லை.
ஒரு இள விமானி, ஒரு target நோக்கி படையெடுக்கும் adventurism ,experimentation முதலிய உணர்ச்சிகளுடன்,ஒரு அவசரம் கலந்த காம விழைவை அற்புதமாய் பிரதிபலிப்பார் NT .வாணிஸ்ரீ (AVM ராஜன் சொல்வது போல சிவாஜிக்காக பிரம்மா ஸ்பெஷல் ஆய் படைத்த கருப்பழகி) சிவாஜியுடன் இழைந்தும், தயங்கியும், உணர்ச்சி வசபட்டும், சூழ்நிலையறிந்து விலகுவதும், இறுதியில் தொடர் தூண்டுதலால் இணங்குவதும் என அற்புதமாய் NT க்கு ஈடு கொடுத்திருப்பார்.
எழும் போதே suggestive ஆக தன் அவசர விழைவை வேட்கையை உணர்த்தி கையில் முத்தமிடுவார். , பிறகு ஒரு இலக்கில்லாமல் விலகும் வாணிஸ்ரீயை ஒரு குறிப்பின்றி தொடர்ந்து அலை பாயும் உணர்ச்சிகளை உணர்த்துவார் சிறு சிறு தொடல்களில். பிறகு ஒரு இலக்கில்லா passionate முத்தங்கள்(ஒரு awkward அவசரம் தெரியும்),பிறகு குறிப்பை உணர்த்தும் coat -stand காட்சி, திரை காட்சி என அவசர தூண்டல் ,ஓரு அனுபவமின்மையின் awkward desperation ஐ மிக அழகாக உணர்த்துவார். இதில், வாணிஸ்ரீயின் திரையை இறுக்கும் கைகள்,என்று எல்லாமே suggestive erotism .physical ஆக மிக குறைவான ,தேவையான அணைப்புகள் மட்டுமே இருக்கும்.
பிறகு மஞ்சத்தில் ஓரளவு தயார் நிலைக்கு ஆளானாலும் ,பிறகு அரை மனதுடன் தயங்கி விலகி, தலையணையை மார்புடன் வைத்து காத்து கொள்ள எண்ணும் வாணிஸ்ரீயை ,ஒரு இரையை குறி வைக்கும் இறுதி ஆவேசத்துடன் சிவாஜி அணைத்து இணங்க வைப்பார்.
ஆபாசம், கவர்ச்சிக்கு விடை தெரியாமல் இன்றும் முழிக்கும், நம் தமிழ் நாட்டு தாய்,தந்தை குலங்களுக்கு, இந்த காட்சியின் அழகும்,அமைப்பும், erotic hightened emotional aesthetics புரியாமல்,இந்த படத்தை கை விட்டனர்.இந்த காட்சியில்,மற்ற காதல் காட்சிகளில் இல்லாத, எந்த மிகையும் இருக்காது. சம்பத்த பட்டவர்களின் உணர்வு மிகு நடிப்பாற்றல்,அழகுணர்ச்சி மிகுந்த suggestive shots &gestures தவிர.,
//நடிகர் திலகம் திரியில் தாமதமாக நுழைந்தாலும் தரமான நகைச்சுவை மற்றும் கவிதைகளால் கலக்கும்// முரளிஸ்ரீநிவாஸ் அவர்களுக்குமிக்க நன்றி..நானெல்லாம் ஒரு துக்கிணியூண்டு ரசிகன்..உங்கள் அளவுக்கு எழுத்தாற்றல் மிக்கவனல்ல.. மறுபடி நன்றி..
என்னங்க்ணா..கோபாலண்ணா :) //வாணிஸ்ரீ முதலில் ஒரு பிங்க் நிற புடவை அணிந்து அறைக்குள் வருவார். பிங்க் ஒரு வளர் சிறுமியின் பெண்மை குறியீடு. பிறகு சிவப்பு வண்ண அவசர ஆடைக்கும் மாறுவார்.சிவப்பு feeling of intense excitement ,romantic warmth ஐ enhance பண்ணும் நிறம்.ஆணுடையது வெளிர் பச்சை நிறம்.fertility ,bodily functional assurance குறிப்பது. இந்த இரண்டு நிறங்களின் இணைப்பே பாதி mood elater ஆக காரணியாகும்// சே இதெல்லாம் தெரியாம ஆன்னு வாணிஸ்ரீயே பாத்துக்கிட்டிருந்திட்டியே கண்ணான்னு இடித்துரைக்குது மனசாட்சி..:) எஸ்பி பி கூட இந்தப் பாட்டைக் கொஞ்சம் சிரமப்பட்டுப் பாடியதாக எங்கேயோ படித்த நினைவு.. கலக்குங்க..// ஒரு சப்பை முத்த காட்சியை 20 டேக் // என்னது இது அப்ப நீங்க என்னை மாதிரி யூத் இல்லையா
குத்தமெனக் குவிந்துவிடும் கொவ்வையிதழ் தன்னையே
முத்தமிட மாறிவிடும் பார் நு யாரோ முனிவர் சொல்லக் கேள்விப் பட்டதில்லையா?!.. ம்ம் நானே இப்போ தான் ராஜாராணி நயன்ஸ் பார்த்துட்டு வந்துருக்கேன்.(நைஸா உன்னப் பத்திச் சொல்லிடு.உன் ஜொ.க்கு அளவே இல்லை.. - மனசாட்சி.கம்னு இரு) ;)
** பார் நா உலகம்கற அர்த்தம்!
கோபால் சார், நீங்க இடலைன்னா நானே கேக்கறதா இருந்தேன். நாளைக்கு. நன்றி..
நடிகர் திலகம் 85வது பிறந்த நாள் விழா, 01.10.2013, சென்னை சங்கீத வித்வத் சபை அரங்கம் ... காணொளி
http://youtu.be/nksk3DR1ypg
நடிகர் திலகத்தின் நடையழகு (என்னைக் கவர்ந்தவை)
*
2. உருவான செந்தமிழில் மூன்றானவன்!
*
• அவள் கொஞ்சம் அழகி..
*
என்ன..பொன்னிறமாய் எண்ணெயில் பொரித்தெடுக்கப் பட்டு வென்னீரில் போட்டு பின் ரசத்தில் போடப்பட்ட மாதிரி இல்லாமல், பொரித்தவுடன் நேரடியாய் ரசத்தில் போட்டு நன்கு ஊறிய ரச வடை போல கொஞ்சம் பூசினாற்போன்ற உடல் வாகு..
பின் என்ன..படிப்பு இருக்கிறது..அழகு இருக்கிறது..ஓ யெஸ்..காதலும் இருக்கிறது..ஆனால் அந்தக் காதல் தோல்வி அடைகிறது..இல்லை அடைந்துவிட்டதாக நினைத்து மகாதுயர் மனதில் கொண்டு ஒரு கிணற்றைப் பார்க்கிறாள்..குதித்து விடலாமா என யோசிக்கிறாள்..கிணறும் நடுங்குகிறது! ம்ம்..கொஞ்சம் ஏறப் பார்க்கையில் தடுக்கிறது ஒரு கரம்..திரும்பினால்….
• *
ஆஹா..என்ன தேஜஸ் மிக்க உருவம்.. கண்களில் ஆழ்ந்த கனவு..உடை மிகப் பணக்காரத் தனமாய் இருக்கிறது..ஆள் இளமையாகவும் இருக்கிறார்..
*
கொஞ்சம் யோசித்து வார்த்தைகளை விடுகிறது அந்த உருவம்..நமது உயிரை நாமே எடுத்துக் கொள்ளக் கூடாது..வா..என்னுடன்..திரும்பி வெகு வெகுமிடுக்காய் அந்த உருவம் நடக்கும் நடை..வாவ்
*
ஒரு அரண்மனை பங்களாவுக்குள் கூட்டிச் செல்கிறார்..அங்கிருக்கும் புகைப்படத்தில் ஒரு அழகிய பெண் சித்திரம். இது என் மனைவி எனச் சொல்கையிலே அப்பா என ஓடி வருகிறது சிறு பூப்பந்து..ஒரு சிறுமி.. இது என் மகள் என அறிமுகப் படுத்துகிறார்..காலை வரை இரு..உன் வீட்டில் சேர்க்கிறேன் என வெகு நயமாய்ச் சொல்லி தங்க வைக்கிறார்.. ஆனால் இடையில் நிகழ்ந்த நிகழ்வுகளால் அவள் அந்த இடத்தை விட்டுச் சென்று விடுகிறாள்..ஓஹ்.. என நளினமாக வருத்தப் படுகிறது அந்த அபூர்வ உருவம்..
*
தெரிந்திருக்குமே.. நவராத்திரியில் ந.தி யின் அற்புத ராஜ் வேடம்.. அந்தப் பாத்திரத்தில் நடந்த நடையை வேறு எந்தப் படத்திலும் அவர் திரும்பச் செய்யவில்லை என்பேன் (என் சிற்றறிவை எட்டிய வரை)..
*
அதே படத்தில் கருணை மனம் மிக்க பைத்தியக்கார ஆஸ்பத்திரி டாக்டர், அவரது மிருதுவான பேச்சு, சாவித்திரியுடன் நடக்கும் நடை, அவர் கதை சொல்ல கருணையுடன் பார்க்கும் முகபாவம் எல்லாம் அழகு தான்..ஆனால் இன்னொரு படத்திலும் திரும்ப வந்திருக்கிறதே..ஆனால் அந்தப் படத்தில் நடை மாற்றியிருப்பார்!
*
அதே நவராத்திரி- வீரக் காவல் துறை அதிகாரி..புலிபோல் கர்ஜித்தல், கம்பீர நடை ம்ம் இதுவும் மறுபடி வந்திருக்கிறது..! (பின்ன அத்தியாயங்கள் எழுதுவதற்கு எனக்கு நடை வேண்டாமா..!)
*
இந்தப் படம் பார்த்து விட்டு வந்து புரியாமல் “அது என்ன ஒன்பது சிவாஜிக்கா” என சகோதரியிடம் கேட்க அவர் ஒரு புரியாத முழி முழித்து “நாளைக்குச் சொல்றேன்..இப்ப தூங்கு” என்றதும் மறு நாள் “உலகத்துல ஒரே மாதிரி ஒன்பது பேர் இருப்பாங்களாம்..அதைத் தான் சிவாஜி செஞ்சுருக்கார்” எனச் சொல்லி விளக்கியதும் இன்னும் நினைவில்..
*
அது சரி..ஒரு சக்கரவர்த்தியை எதிர்த்த குறு நில மன்னனின் நடை..ம்ம் அது அடுத்த அத்தியாயம் (இந்த பில்டப் தானே வேணாங்கறது) :)
(தொடரும்)
டியர் கோபால் சார்,
மீள்பதிவானாலும் சுவையான பதிவு. நடிகர்திலகத்தின் காதல் பாடல்கள் அப்படித்தான். எந்த வயதில் பார்த்தாலும் புதுமையாகவே இருக்கும். 'காதல் பாடல்கள்' தொடரின் துவக்கத்திலேயே ஒரு கஜுராஹோ டைப் பாடலை அதிரடியாகப் பதிவிட்டு மிரட்டி விட்டீர்கள். நமது பயமெல்லாம் எல்லா பாடல்களையும் கஜுராஹோ ஆக்கி விடாதீர்கள்.
ஆய்வின் துவக்கத்தில் பாடலை படைத்தோர் பட்டியலில், பாடலை ஸ்ருங்கார ரசம் சொட்டச்சொட்ட, குழைந்த குரலில் அனுபவித்துப்பாடிய எஸ்.பி.பாலசுப்பிரமணியம் விடுபட்டுப்போய் விட்டார். நீங்கள் முதலில் பதித்தபோது திரியில் இந்தப்பாடலுக்கான வீடியோ தரப்பட்டுள்ளதா?.
எத்தனை அழகு பாடல் ஆய்வைப்படிக்கும்போது, இப்பதிவினால் ஏற்பட்ட தர்க்கத்தில் திரியிலிருந்து கழன்று கொண்ட ஈழத்து பெண்பதிவர் நினைவுக்கு வருகிறார்.
'பாடல் முழுவதும் ஒரே டேக்கில் எடுக்கப்பட்டதாம்' அல்ல. ஒரே டேக்கில், ஒரே ஷாட்டில், ஒரே கேமரா மட்டும் பயன்படுத்தி எடுக்கப்பட்டது. (இதன்பிறகு ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டது 'மெட்டி ஒலி' சீரியலின் கிளைமாக்ஸ் காட்சி) . இந்தப்பாடல் படமாக்கப்படப் போகும் விதம் பற்றி முதல் நாளே சி.வி.ஆர். வாணிஸ்ரீஇடம் சொல்ல, வாணிக்கு இரவு முழுவதும் தூக்கம் இல்லாமல் காட்சி பற்றியே சிந்தித்து மறுநாள் காலையில் வாணிக்கு கடும் ஜுரம். ட்ரீட்மென்ட் கொடுக்கப்பட்டு ஜுரம் தணிந்ததும் பிற்பகல் 3 மணிக்கு ஷூட்டிங்க் துவங்கி ஜஸ்ட் அரைமணிநேரத்துக்குள் படப்பிடிப்பே முடிந்து பேக்-அப் ஆனது. அதுவும் லைட் செட் பண்ணத்தான் இவ்வளவு நேரம். பாடல்காட்சி படப்பிடிப்பு வெறும் ஐந்து நிமிடங்களில் முடிந்தது.
டியர் பிம்சி சார்
முரளி சார் ரஜினியை இழித்தோ நடிகர் திலகத்தை புகழ்ந்தோ சொல்லவில்லை இரண்டு மிக பெரிய புகழ் பெற்ற நடிகர்கள் நடித்தாலும் அவர்களின் ரசிகர்கள் இல்லாமல் பொது மக்களின் ஆதரவோடு வெற்றி நடை போடுகிறது என்று தான் சொல்கிறார் .
பொதுவாக நடிகர் திலகத்தின் படங்களுக்கு பொது மக்களின் ஆதரவு என்பது எப்போதும் உண்டு
என்றும் அன்புடன்
கிருஷ்ணா
டியர் ஆல்
கடந்த வாரம் தலைவரின் அமரகாவியம் படம் பார்த்தேன் இளமை கொஞ்சும் மாதவி ஸ்ரீப்ரிய அழகான விச்சுவின் இசை
மிக பெரிய வெற்றி படமான முக்கந்தர் க சிக்கந்தர் தழுவல் இருந்தும் எங்கோ இடிக்கிறது டார்லிங் c .v r இல்லாமல் அமிர்தம் இயக்கம் காரணமா தெரியவில்லை நம் தலைவரிடமும் ஒரு சோர்வு முகத்தில் படம் முழுதும்
விச்சுவின் மகன் கோபி முதலில் ஜெய்ஷங்கர் நடிக்க வேண்டும் என்று சொன்னதாகவும் ஆனால் விச்சு தலையீட்டால் நம்மவர் ஹீரோ என்று எப்போதோ படித்த நினவு . செல்வமே ஒரே முகம் பார்கிறேன் சூப்பர் பாடல்
துள்ளல் நடையில் நடிகர்திலகம்...
ஸ்டைல்நடை, சிருங்காரநடை, அழகுநடை இவற்றில் மட்டுமல்ல துள்ளல் நடையிலும் தானே மன்னன் என்று நிரூபித்த பாடல். வெளிநாட்டிலிருந்து திரும்பியபின், அடுத்த துப்பறியும் பொறுப்பேற்க இன்னும் சில நாட்கள் இடைவெளியிருக்க, அதைப்பயன்படுத்தி, பல ஆண்டுகள் தான் பார்த்திராத தாயைக்கான கிராமத்துக்கு வரும்போது கையில் ப்ரீப்-கேஸ், தலையில் தொப்பி, கழுத்தில் கட்டித்தொங்கவிடப்பட்ட ஸ்வெட்டர் சகிதம்,.. தான் பிறந்த நாட்டின் பெருமைகளைப் பாடிக்கொண்டு வரும்போதுதான் எவ்வளவு அழகான அதே சமயம் வேகமான துள்ளல் நடை.
நான் பிறந்த நாட்டுக்கெந்த நாடு பெரியது - இங்கு
பெண்ணும் ஆணும் வாழும் வாழ்க்கை இனியது
தென்னாட்டிலே தண்ணீரும் பொன்மீனும் விளையாடுது
மூன்று தமிழ் தோன்றுமிடம் எங்கள் நாடு........ ஹோய்
குளிக்கும் பெண்களை ஒளிந்து பார்க்கும் கள்ளமனம் இல்லை, அதனால் அவர்கள் குளிக்கும் படித்துறையிலேயே தலைகுனிந்து அதே துள்ளல் நடையுடன் அனுபல்லவி, குளிக்கும் பெண்கள் மனதிலும் கள்ளமிலாததால், அதை அவர்கள் ரசிக்கும் அழகு...
பொட்டழகும் கட்டழகும்
பூவழகும் தண்டைக்காலழகும்
எங்கள் மங்கையரின் கலையல்லவா
திரு மஞ்சள்முக சிலையல்லவா
துள்ளல் நடையின் இடையே சிறு பாலத்தின் மீது கொஞ்சம் மெதுவான நடை, சைக்கிளின் கேரியரில் பயணம் செய்யும்போது சைக்கிள் ஓடிக்கொண்டிருக்கும்போதே இறங்கும் நேர்த்தி, செடிகளுக்கு நடுவே குனிந்து வரப்பின்மீது நடக்கும் அழகு, மாட்டுவண்டியில் தாவி ஏறும் லாவகம்.
இப்படி ஒருபடம் எப்போது வருமென ஏங்கிய ரசிகர்களின் ஆவலைத்தீர்க்க தோண்டப்பட்ட தங்கச்சுரங்கத்தில், இப்பாடலில்தான் என்னவொரு துள்ளல் நடை.
இவர் நடிகர்திலகம் மட்டுமல்ல, 'நடையில்திலகமும்' கூட.....
கார்த்திக் சார்,
பாடல் முழுதும் ஒரே டேக்கில், ஒரே ஷாட்டில், சிவகாமியின் செல்வன் எத்தனை அழகு பாடலைப் போலவே, இன்னொரு பாடல், பிரபு நடித்த ஆயுள் கைதி திரைப்படத்திற்காக படமாக்கப் பட்டது. பிரபு ரேவதி நடித்த ஒரு டூயட் பாடல். அதன் வரிகள் நினைவில் இல்லை
நான் பிறந்த நாட்டுக்கெந்த நாடு பெரியது...
http://youtu.be/tdzOv-qOQkI
மீண்டும் தங்க சுரங்கம் திரைக்கு விரைவில் மறு வெளியீடு... மனம் கிடந்து துடிக்கிறது... எப்போது... எப்போது ... என்று ...
//,.. தான் பிறந்த நாட்டின் பெருமைகளைப் பாடிக்கொண்டு வரும்போதுதான் எவ்வளவு அழகான அதே சமயம் வேகமான துள்ளல் நடை. // என்னைக் கவர்ந்த நடைகளில் இதுவும் ஒன்று..
ஒரே ஷாட்டில் ஒரே டேக்கில் எடுக்கப் பட்ட சி.செ. வியக்க வைக்கிறது.தகவலுக்கு நன்றி கார்த்திக் சார்...ம்ம் த.சு வும் சி.செயும் மறுபடி பார்க்க வேண்டும்...
நெய்வேலி டவுன்ஷிப்பில் தீவிர சிவாஜி பக்தரான திரு. மரியந்துவான் நடிகர் திலகத்தின் பிறந்த நாளையொட்டி அடித்துள்ள போஸ்டர்.
http://i812.photobucket.com/albums/z...s7e6a37fe.jpeg