Adharkkul Yaaro oruvar FB yil ungal peyarai poattu upload seidhullar Vasudevan sir !!
Enna Vegam...Enna Vegam
Printable View
Adharkkul Yaaro oruvar FB yil ungal peyarai poattu upload seidhullar Vasudevan sir !!
Enna Vegam...Enna Vegam
டியர் வாசுதேவன் சார்,
சினிமா எக்ஸ்பிரஸ் (ஏப்ரல் 1-15) ல் வெளியான ஒளிப்பதிவாளர் வின்சென்ட் அவர்களின் அருமையான பேட்டிப் பதிவிற்கு நன்றி.
There are quite a few formula scenes when we look at Tamizh Films be it is old or new.
One such scene is Arrival of Police in the last scene. Police will not be seen along with the storyline to help the hero....But in the Climax...The incapable police will appear and take the already captured.
I remember one such scene !
SRS sir,
Not only in Tamil movies, mostly all Indian movies were like this, including the "Great" SHOLAY (except few malayalam or bengali movies).
But in NT's Bond movies Thangasurangam and Raja, NO police will enter with a shout 'hands up' after the climax fight over. In Raja already three police officers (Raja, Prasad, Pattabi) involved in climax fight.
But in Vaira Nenjam, Sreedhar did this mistake.
Naam Pirantha Mann
Dear hubbers ,
I am going to write about Naam Pirantha Mann another rare movie of NT . The movie is still not made available in DVD but I managed to catch it up somehow .
For the benefit of persons who have not watched the movie I will give a gist of the movie.
Story:
The movie takes us back to pre independence era where we are introduced to a pair of powerful eyes & britishers searching for a person Santhanadevan.
British Government is on a hunt for a man called Santhana Devan who is a big headache for them and is one among the pioneer in leading the freedom movement.
Cut to the next scene we see NT as a pannaiyar leading a happy life with his wife KR Vijaya, sister & servant Nagesh. NT roams in the night for hunting the hunting is nothing but freedom movement. Yes NT is Santhanadevan( remember Vithadu KAruppu Serial or Kodi Parakuthu Thalaivar Rajini).
In a strange encounter NT comes across Gemini Ganesan who intends to join his team. NT (Santhanadevan ) keeps him. But back home NT is his master(Pannaiyar). He has a small kid
NT &GG decides to murder a british official in the process , a young lad dies. NT & GG’s mother becomes emotionally attached .
KR Vijaya helps britisher’s officer ‘s son to recover from chicken pox.
The Govt. becomes keen in arresting Devan in the process GG lands in prison in an attempt to save Devan. British officials kills NT’s sister on knowing Devan & Pannaiyar are same person. NT avenges the death of his sister and is arrested by the police. He performs last rites for GG’s mother who dies. The Army General & NT on their way to prison accidentally lans in midst of small mountains together they come out of it & NT lands in prison. When NT is about to be hanged India gets independence hence NT is freed but all his wealth is lost by now & he becomes a pauper.
NT now lives in small house with his wife and his son (Kamal Hasan). Kamal Hasan is vexed as he does not find a job & also pained by looking at the plight of his family. Even Thyagi’s pension is rejected as a politician insults Kamal.
Kamal finds a job in arrack shop only for NT quarrel with the owner & Kamal loses the job. Nagesh also rejoins NT as his loyal servant.
NT finds a deaf& dumb Gemini Ganesan at a function & takes him to his house. Kamal finds a job & they buy back their palace & slowly regains their property . The police are for a hunt looking for Kamal as he is a smuggler. NT decides to kill his son . Both father & son fight with each other when NT shoots his son KR Vijaya saves her son , in the process get killed. NT too dies at the end.
The movie released in 1977 after comeback movie of NT Deepam. It was a dream come true for a young artist like Kamal as he acted with all his favourite actors NT, GG, KR Vijaya & Nagesh.
NT breathed fire in the role of Santhana Devan freedom fighter. It was a cakewalk for him as he is a true patriot and also acted in many such movies earlier like VPKB, Rajapart, Kappal Ottiya Tamilan. His mannerisms as jovial Pannaiyar teasing his wife is too authentic.
In the next half it is like Devar Magan get up even get up, confrontation scenes, dialogues. NT even imitates Kamarajar (in a nice way, At the end of the scene We can see NT & Kamarajar photo in same frame)
GG- we have seen NT & GG combination movies previously may be this was a last one. GG acted with elan in this movie particularly as an old man who gives his heart & soul for freedom
Kamal was also good but definitely not on par with later movies
The only other movie of NT that VVSundaram directed other than Gouravam was Naam Pirantha Mann but here he had to share the credits with Vincent, the cameraman. As you must be aware Gouravam was produced by Hindu Rangarajan and Naam Pirantha Mann was also produced by him.
The movie might not be a hit those days but it was a blockbuster when the movie was remade as Indian by Shankar . Irony is that Kamal acted in the same movie when he did some 20 years back
A very rare movie close to reality
Hope more discussions would be done on this movie.
Really a coincidence when vasu sir uploaded the article about Mr. Vincent & hubbers felt he did not mention about Naam Pirantha mann, a write up is given
Thanks Vasu sir for your wonderful scans
Mr. Ragulram sir,
Nice coverage of the rare movie "Naam Pirndha Mann". I am always in the side of fans who are talking, discussing, pouring light for this kind of rare movies.
I never heared any song, or watched any telecast of any songs of this movie.
Actually 'Chandana Thevan" is a real charector and a freedom fighter who lived in Chengalpattu area. But history did not give much importance for his sacrifice.
நன்றி ராகுல். அரியதொரு காவியத்தை (நாம் பிறந்த மண்) அருமையாக, அழகாக அலசியதற்கு பிடியுங்கள் என் வாழ்த்துக்களை. நான் பலமுறை விரும்பிப் பார்த்த படம். சந்தனத் தேவரின் உடையலங்காரங்கள் அருமையாக இருக்கும். நடிகர் திலகத்தின் கம்பீரம் படத்திற்கு பெரிய பலம். ஜெமினி வயதான ரோலில் தலைவருக்கு அடுத்து நன்றாகப் பண்ணியிருப்பார். இடைவேளை வரை விறுவிறுப்பாகப் போகும் படம் அதன் பிறகு சற்று தொய்ந்து விடும். காமராஜர் போல 'ன்னேன்'... என்று கமலிடத்தில் தலைவர் பேசிக் காட்டுவது ஜோராக இருக்கும்.
ராகுல், இந்த இளம்வயதில் நடிகர் திலகத்தின் அதுவும் அவரின் அரிதான படங்களைத் தேர்ந்தெடுத்து ஆய்வு செய்யும் உங்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
ஆதிராம் சார் மற்றும் ராகுல்,
"நான் யார்?... அன்று நான் யார்?"
தலைவரின் ஆர்ப்பாட்டமான நடிப்பில் தேசபக்தி ஊட்டும் பாடல் 'நாம் பிறந்த மண்'ணிலிருந்து.
இந்தப் பாடலின் துவக்கத்தில் கமலிடம் தலைவர் சொல்லும் வசனம்.
("தேவர் மகன்னு சொன்னதும் என்னைப் பத்தி ஷேம லாபங்களையெல்லாம் விசாரிச்சிருப்பாங்களே! கனவில கூட தேவரை மறக்க முடியுமா?")
ஆச்சர்யமாக இல்லை? 'நாம் பிறந்த மண்' படத்திலேயும் கமல் 'தேவர் மகன்'தான்.
'தேவர் மகனி' லும் 'தேவர் மகன்' தான்.
என்ன ஒரு பொருத்தம்! God is great. அப்போதே தீர்மானமாகி விட்டது போல் இல்லை!
http://www.youtube.com/watch?v=VF7VP...yer_detailpage
'நாம் பிறந்த மண்'
கமலின் சூப்பர் நடனத்தில்
'ஆசை போவது விண்ணிலே
கால்கள் போவது மண்ணிலே'
http://www.youtube.com/watch?v=xEAAU...yer_detailpage
டியர் ராகுல் ராம்,
தங்களுடைய எங்க ஊர் ராஜா பதிவும் சரி, நாம் பிறந்த மண் பதிவும் சரி, அபூர்வமான படங்களைத் தேர்ந்தெடுத்து ஆராயும் தங்கள் மனப்பான்மையையும் ஆர்வத்தையும் பிரதிபலிக்கின்றன. பாராட்டுக்கள்.
நாம் பிறந்த மண் திரைப்படம் மறக்க முடியாத ஒன்றாகும். ஏற்கெனவே இங்கு அதனைப் பற்றிய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டுள்ளேன். படம் வெளியான அனஅறு ரசிகர் மன்றக் காட்சி சென்னை சாந்தி திரையரங்கில் காலைக் காட்சி நடைபெற்றது. மறக்க முடியாத நாட்கள். எங்க வீட்டு தங்க லட்சுமி தயாராகும் போதே இதனுடைய செய்திகளும் வெளிவந்து கொண்டிருந்ததன. சொல்லப் போனால் இப்படத்தை ஆகஸ்ட் 15 அன்று இந்திய விடுதலை நாளை யொட்டி வெளியிடத் திட்டமிட்டிருந்தார்கள். ஆனால் படத்தின் வேலைகள் முழுமையடையாததால் தள்ளிப் போயிற்று. எங்க வீட்டு தங்க லட்சுமி பின்னர் அண்ணன் ஒரு கோயிலானது அனைவருக்கும் தெரிந்திருக்கலாம்.
நாம் பிறந்த மண் திரைப்படம் மாடர்ன் சினிமா நிறுவனத்தால் குறுந்தகடாக வெளியிடப் பட்டுள்ளது. அதனுடைய நிழற்படம் நம் பார்வைக்கு
http://i1146.photobucket.com/albums/...psbff1bc97.jpg
Guys,
Watch NPM online at http://www.einthusan.com/movies/watc...g=tamil&id=427.
Cheers,
Sathish
Dear சதீஷ்,
நடிகர் திலகத்தின் ஒவ்வொரு ஸ்டில்லுக்குமே நாம் ஆயிரம் பக்கங்களுக்கு பொழிப்புரை எழுதலாம். ஒவ்வொரு காட்சிக்குமே ஏராளமான ஆய்வுரைகள் படைக்கலாம். தாங்கள் அள்ளி வழங்கியிருக்கும் நிழற்படங்களுக்கும் காணொளிகளுக்கும் 1000 பாகங்களுக்கு நமது மய்யம் திரியில் இடம் தேவைப் படும். அ்வ்வளவு விஷயங்கள் அ்ந்த மேதை நமக்கு சொல்லியிருக்கிறார். எதை எடுப்பது எதை விடுப்பது என தெரியாமல் முழிக்கின்றோம்.
மிக்க நன்றி.
ஒவ்வொன்றாக எடுத்துக் கொண்டு நிதானமாக அலசுவோமே. எதுவும் விட்டுப் போகாமல் இருக்கும்.
தாங்கள் இடும் காணொளிகளுடன் அதனைப் பற்றிய தங்கள் குறிப்புகளையும் படிக்க ஆவலாயிருக்கிறோம். அந்தப் படத்தைப் பற்றிய தங்கள் பழைய நினைவுகள், அதில் தங்கள் மனதில் தோன்றும் சிறப்பு அம்சங்கள் இவற்றையும் குறிப்பிட்டால் பல்வேறு தலைமுறையினரிடம் நடிகர் திலகத்தின் படங்கள் எப்படிப் பட்ட தாக்கங்கள், நெகிழ்வுகள் போன்றவற்றை ஏற்படுத்தியுள்ளன என்பதை அறிய மிகவும் ஆவலாயுள்ளேன்.
இனி வரும் காலங்களில் தங்களின் காணொளிகளுடன் தங்களின் நினைவுகளையும் பகிர்ந்து கொள்ளுங்கள். கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள். ஒரு நேரத்தில் ஒன்று என்று அமைந்தால் இன்னும் நன்றாக இருக்கும்.
ஆவலுடன் தங்களுடைய பதிவுகளை எதிர்நோக்குகின்றோம்.
உடைகளுக்கு உயரமளித்த உயர்ந்த மனிதன்
தமிழ்க் கலாச்சாரத்தின் அடிப்படையே வேட்டிதான். ஒவ்வொரு நேரத்திலும் அதனுடைய அமைப்பு பல்வேறு உணர்வுகளை பிரதிபலிக்கும். அதைக் கட்டும் முறையிலேயே பல்வேறு விதமான உணர்வுகளையும் சூழ்நிலைகளையும் சித்தரித்து விடும். அந்த வேட்டிக்கே சிறந்த முறையில் அங்கீகாரம் தந்தவர் நடிகர் திலகம். தான் வேட்டி கட்டும் பாவனையிலேயே அந்த பாத்திரத்தின் தன்மையைக் கூறும் வல்லமை படைத்தவர் உலகிலேயே நடிகர் திலகம் மட்டும் தான். கை கொடுத்த தெய்வம் படத்தில் ஆயிரத்தில் ஒருத்தியம்மா பாடலில் பெண்ணோடு தோன்றி சரணத்தின் போது வேட்டியை சற்றே உயர்த்திப் பிடித்து கோபமாக முறைப்பதாகட்டும், சவாலே சமாளி படத்தில் அதே வேட்டியை மடித்துக் கட்டி வயலில் உழும் போதாகட்டும், பஞ்சாயத்தில் சவாலுக்கு தயாராகும் போதாகட்டும், ஒவ்வொரு சூழ்நிலையில் வேட்டி கட்டும் முறையிலேயே சூழ்நிலையை சித்தரித்தவர் நடிகர் திலகம்.
படம் முழுதும் வேட்டியுடன் நடித்து மாபெரும் வெற்றியைப் பெற வைத்த ஒரே நடிகர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள். உதாரணம் சவாலே சமாளி. அதுவும் 150வது படம். 150வது படம் என்பதற்காக, காம்ப்ரமைஸ் செய்து கொள்ளாமல், டூயட் பாட்டு இல்லாமல், கனவுக் காட்சி, சண்டைக் காட்சி என்று மசாலா அம்சங்கள் இல்லாமல் தந்தவரும் நடிகர் திலகம் மட்டுமே.
உதாரணத்திற்கு கை கொடுத்த தெய்வம் படத்தில் இடம் பெற்ற ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ பாடலைப் பார்ப்போம்.
http://youtu.be/NG7YOfSz8-A
வேட்டியையும் நடிக்க வைக்க முடியும் என ஆணித்தரமாக நிரூபித்துக் காட்டியவர் ஒப்பற்ற ஒரே நடிகர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மட்டும் தான்.
இன்னும் தொடரும் காலங்களில் பல்வேறு விதமான சூழ்நிலைகளில் வேட்டியின் மூலம் பாத்திரத்தை சித்தரித்த அவருடைய சிறப்பை நாம் காணுவோம்.
வேந்தரின் மாய வேட்டிகள்
http://padamhosting.com/out.php/i123...1h48m55s36.png
இல்லறஜோதியில் இனிதான வேட்டி
முதல் தேதியில் முத்தான வேட்டி
மங்கையர் திலகத்தில் மணியான வேட்டி
வாழ்விலே ஒரு நாளில் வளமில்லா வேட்டி
மக்களை பெற்ற மகராசியில் மண் மணக்கும் வேட்டி
நா(ம்)ன் பெற்ற செல்வத்தின் நலுங்காத வேட்டி
பாகப் பிரிவினையில் பட்டிக்காட்டான் வேட்டி
நிச்சயத் தாம்பூலத்தில் நிலா வேட்டி
தெய்வப் பிறவியில் தெய்வாம்ச வேட்டி
படிக்காத ரங்கனின் பகட்டில்லா வேட்டி
பாசமலரில் பாங்கான வேட்டி
அறிவாளியில் அழகு வேட்டி
பந்த பாசத்தில் பணிவான வேட்டி
குலமகள் ராதையில் குணமான வேட்டி
கல்யாணியின் கணவனில் கண்ணியமான வேட்டி
கை கொடுத்த தெய்வத்தின் கை தூக்கும் வேட்டி
முரடன் முத்துவின் முரட்டு வேட்டி
பழனியின் பாவமான வேட்டி
நவராத்திரியில் நாட்டுப்புறத்தான் வேட்டி
நீலவானத்தில் நீட்டான வேட்டி
செல்வத்தின் செல்வாக்கான வேட்டி
ஊட்டி வரை உறவின் ஒய்யார வேட்டி
லட்சுமி கல்யாணத்தில் லட்சணமான வேட்டி
உயர்ந்த மனிதனின் உன்னத வேட்டி
அன்பளிப்பில் அலுங்காத வேட்டி
சிக்கலாரின் சிலுசிலு வேட்டி
எங்க ஊர் ராஜாவின் எகத்தாள வேட்டி
விளையாட்டுப் பிள்ளையின் விறுவிறு வேட்டி
வியட்நாம் வீட்டின் பிராமண வேட்டி
எதிரொலியில் எடுப்பான வேட்டி
சொர்க்கத்தில் சொகுசான வேட்டி
குலமா குனமாவில் குணமான வேட்டி
சுமதி என் சுந்தரியில் சுடர் விடும் வேட்டி
சவாலே சமாளியில் சவால் விடும் வேட்டி
தேனும் பாலும் படத்தில் தேனான வேட்டி
பட்டிக்காடா பட்டணமாவில் பண்பாட்டு வேட்டி
பாரத விலாசில் பரபரக்கும் வேட்டி
பொன்னூஞ்சலில் பொன்னான வேட்டி
கௌரவத்தில் கனிவான வேட்டி
ராஜபார்ட்டில் ரம்மியமான வேட்டி
தாயில் தன்மான வேட்டி
சௌத்திரியின் தீபாவளி வேட்டி
அன்பைத்தேடியில் அழகான வேட்டி
சத்தியத்தில் சாந்தமான வேட்டி
கிரஹப் பிரவேசத்தில் கிளாஸ் வேட்டி
அண்ணன் ஒரு கோயிலில் ஆர்ப்பாட்ட வேட்டி
திரிசூலத்தில் மங்கள வேட்டி
முதல் மரியாதையில் மரியாதை வேட்டி
என்று இன்னும் இன்னும் நிறைய வேட்டிகள் நடிகர் திலகத்தோடு சேர்ந்து நடித்துள்ளன.
ராகவேந்தர் சார்! இப்படி உசுப்பேற்றி விட்டீர்களே! நியாயமா? நான் வேலைக்குப் போக வேண்டாமா?
ஆனந்த கண்ணீர் ..........
பரிச்சைக்கு நேரமாச்சு .................
வா கண்ணா வா ..................
கருடா சௌக்கியமா .....................
டியர் வாசுதேவன் சார்,
வேந்தரின் மாய வேட்டிகள் - இனிதான வேட்டி முதல், மரியாதையான வேட்டி வரை - தங்களின் வர்ணனை அருமை - அருமை.
Dear Adiram Sir, , Ragavenderan Sir, Vasu sir,
Thank you for your comments
சமீபத்தில் வாசுதேவன் சார், ஆதிராம் சார், ராகவேந்தர் சார் ஆகியோர் 'வைர நெஞ்சம்' படத்தைப்பற்றி மாறி மாறி பதிவகளைத் தந்தபோது நாமும் அப்படத்தின் பிளஸ் மற்றும் மைனஸ்களை அசைபோட்டால் என்னவென்று ஒரு ஆவல் உண்டானதின் காரணமாக அமைந்ததே இப்பதிவு.
முதலில் அப்படத்தின் அற்புத ஸ்டில்களைப் பதித்து உள்ளங்களை கொள்ளை கொண்ட வாசுதேவன் அவர்களுக்கும், ராகவேந்தர் அவர்களுக்கும், அப்பதிவுகளுக்கு உந்து சக்தியாக அவ்விருவரின் நினைவலைகளை உசுப்பி விட்ட ஆதிராம் அவர்களுக்கும், மேலும் அப்படத்தின் நினைவையும் ‘ராஜா’வின் ராஜாங்கத்தையும் பதிவிட்ட எஸ்.கோபால் அவர்களுக்கும் மிக்க நன்றி.
‘வைர நெஞ்சம்’ படத்தின் ப்ளஸ் பாயிண்ட்டுகள்:
1) ஸ்மார்ட்டான நாயகன், நாயகி மற்றும் வில்லி. ஸ்ரீதரின் படங்களிலேயே நடிகர்திலகத்துக்கு மிக அருமையான மேக்கப் மற்றும் ஹேர்ஸ்டைல். (ஸ்ரீதரின் படங்களிலேயே நடிகர்திலகம் விக் வைத்து நடித்த ஒரே படம் இது. விடிவெள்ளி, நெஞ்சிருக்கும்வரை, ஊட்டி வரை உறவு, சிவந்தமண் அனைத்திலும் ஒரிஜினல் முடி).
2) அருமையான பாடல்கள் மற்றும் இசை. மெல்லிசை மன்னரின் அற்புத உழைப்பில் 'ஏஹே மைஸ்வீட்டி', 'செந்தமிழ் பாடும் சந்தன காற்று', 'நீராட நேரம் நல்லநேரம்', 'கார்த்திகை மாசமடி', 'அம்மான் மகன் எங்கே அவன் என்னோடு சேர்ந்தாட' என அனைத்துப் பாடல்களும் இனிமையோ இனிமை.
3) உடையலங்காரம் (Costumes): நட்சத்திரங்கள் அனைவருக்கும் அளிக்கப்பட்ட உடையலங்காரம் வெகு நேர்த்தி. நடிகர்திலகம், பத்மப்ரியா, முத்துராமன், பாலாஜி, சகுந்தலா மற்றும் வில்லனின் கையாள் என அனைவருக்கும் அழகான உடைகள். நடிகர்திலகம் அணிந்து வரும் உடைகளனைத்தும் கண்களுக்கு விருந்தோ விருந்து. எல்லா வித உடைகளும் SUPER MATCH.
4) கிளுகிளுப்பு: நடிகர்திலகமும் பத்மப்ரியாவும் கொஞ்சலும், சிணுங்கலுமாக காதல் செய்யுமிடங்கள் நல்ல இளமை விருந்து. பத்மப்ரியா இந்தப்படத்தில் இருந்த இளமையும், அழகும், கவர்ச்சியும் அவர் நடித்த வேறெந்தப் படத்திலும் இல்லை. அதுபோலவே வில்லன்கூட்டத்தின் கையாளாக வரும் சி.ஐ.டி.சகுந்தலாவும் சரியான செக்ஸ் பாம். பாலாஜியின் பிறந்தநாளில் சேலையழகில் ஷோபா ராமநாதன் என்ற பொய்ப்பெயருடன் அறிமுகமாகும் இடமும், தொடர்ந்து பார்ட்டியில் நடனமாடிக்கொண்டே நடிகர்திலகத்துடன் வைர வியாபார பிஸினஸ் பேசும் காட்சியும் செம க்யூட். 'நீராட' பாடல் காட்சியின்போது சரியான இளமை விருந்து. ஒருகாட்சியில் பாலாஜி, சகுந்தலாவை வெறுமனே ஒரு டவலில் சுற்றி அள்ளிக்கொண்டு போகும் காட்சி பலரை கனவில் வந்து தொல்லைப்படுத்தியிருக்கும். அவ்வளவு அட்டகாசம். மற்றும் கிளுகிளுப்பு.
5) ஒளிப்பதிவு: படம் முழுவதும் யு.ராஜகோபால், பெஞ்சமின் இருவரின் ஒளிப்பதிவு சூப்பரோ சூப்பர். கண்ணைக்கவரும் வண்ணக்கோலம். 'செந்தமிழ் பாடும் சந்தனக்காற்று' பாடலில் கடற்கரை ஓய்வுக்குடில்களை படம்பிடித்த அழகு. இரவுக்காட்சிகளைப்படம் பிடித்த அழகும் அப்படியே. நைட்ஷோ சினிமாவுக்குப் போய்த்திரும்பும் பத்மப்ரியா பேங்கில் கொள்ளை அடிக்கவந்த கும்பலால் வாட்ச்மேன் கொல்லப்படும் காட்சியைக்கண்டு அலற, துரத்திவரும் கொள்ளைக்கும்பல் ஆளிடம் இருந்து தப்பி ஓடும் காட்சிகளில் ஒளிப்பதிவும், பின்னணி இசையும் மிக அருமை. ஸ்டுடியோ செட்களும் 'ஹோ'வென்று பெரிதாக இல்லாமல் கனகச்சிதம். பத்மப்ரியா வீடு செட் மிக அழகு என்றால், சகுந்தலா வீடு கலைநயம். (வேடிக்கை என்னவென்றால், கதாநாயகன் நடிகர்திலகத்துக்கு படத்தில் வீடு கிடையாது).
6) சண்டை காட்சிகள்: நடிகர்திலகத்தின் அறிமுகக்காட்சியைத் தொடர்ந்து ஏர்ப்போர்ட்டிலிருந்து வரும் வழியில் முதல் சண்டைக் காட்சி. வைரங்களடங்கிய பெட்டியைப் பறித்துக் கொண்டு ஓடும் வில்லனின் ஆட்களோடு நடிகர்திலகமும் முத்துராமனும் சூட்கேசை தூக்கி தூக்கிப் போட்டு பிடித்தபடி மோதும் சண்டை அபாரம் எனினும் அதில் மெல்லிசை மன்னர் 'ராஜா' பாணியில் வோகல் எஃபெக்ட் கொடுக்க நினைத்து சற்று சொதப்பி விட்டார். இரண்டாவது சண்டைதான் டூப்ளிகேட் போலீஸுடன் ஜீப்பில் போடும் அபார சண்டைக்காட்சி. முன்னால் சென்று கொண்டிருக்கும் லாரியிலிருந்து ரெயில்கள் இறங்க அதன் வழியே ஜீப் லாரிக்குள் ஏற்றப்பட்டு நடக்கும் சண்டை மிக அற்புதம். மூன்றாவது சண்டை, நல்லவராக நடிக்கும் சகுந்தலாவினால் வைரவியாபாரத்துக்காக அழைத்து செல்லப்படும் பாழடைந்த கட்டிடத்தில் நடக்கும் சண்டை. இதனிடையே ஓடும் காரில் நடக்கும் மினி சண்டை, அத்துடன் பாலாஜியுடன் ஒரு துப்பாக்கி சண்டை. முடிவாக கிளைமாக்ஸ் சண்டை. அனைத்து சண்டைக்காட்சிகளிலும் நடிகர்திலகம் தூள் கிளப்புவார். தன்னை நூற்றுக்கு நூறு பொருத்தமானவர் என்று நிரூபித்திருப்பார். ஒரு ஜேம்ஸ்பாண்ட் படத்துக்கான அட்டகாசமான சண்டைக்காட்சிகள்.
7) பாத்திரப்படைப்பு :
பத்மப்ரியா: அவருடைய முதல்படம். அதிகம் நடிக்க வாய்பில்லை எனினும் அழகாக வளைய வருகிறார். நடிகர்திலகத்தை காதலித்தபோதிலும், அவர் அண்ணன் மீது காதலன் கொலைப்பழி சுமத்தும்போது, அண்ணனின் பக்கம் நின்று வாதிடுவது அவர் பாத்திரத்தை உயர்த்துகிறது அவர் உடல்வாகைப் பார்க்கும்போது (அவரது மட்டுமல்ல நடிகர்திலகம் உள்பட அனைவரின் உடல்வாகை நோக்கும்போது) இப்படம் அதிகநாட்கள் தயாரிப்பில் இருந்ததாக நம்ப முடியாது.
முத்துராமன்: சூழ்நிலையின் காரணமாக கொள்ளைக்கு உடந்தையாக இருந்துவிட்டு, அதைவிட்டு விலகமுடியாமல் தவிக்கும் தவிப்பை நன்றாக பிரதிபலிக்கிறார். தனியார் நிறுவனத்தில் வேலை செய்வதாக நம்பிய தன நண்பன், ஒரு வைரகடத்தல் வியாபாரி என அறிய வரும்போது காட்டும் அலட்சியம், அதே நண்பன் ஒரு துப்பறியும் அதிகாரி, அதிலும் தன வங்கிக்கொள்ளையைக் கண்டுபிடிக்க ஸ்பெஷலாக நியமிக்கப்பட்டவர் என அறியும்போது காட்டும் அதிர்ச்சி, பேங்க் கொள்ளைக்கு தான் உடைந்தையாக இருந்ததை சாதகமாக்கி தன்னை பிளாக்மெயில் செய்யும் வில்லனின் போதனைப்படி தன் நண்பனையே கொல்ல பாத்ரூம் பைப்பில் கரண்ட் கனெக்ஷன் செய்துவிட்டு, பின்னர் (நட்பின் உந்துதலால்) நண்பனுக்கு எலெக்ட்ரிக் ஷாக் அடித்த அதே வினாடியில் மெயின் ஆப்செய்து காப்பாற்றுவது என, தன் ரோலை திறம்பட செய்துள்ளார். முதல் சண்டையிலும் கிளைமாக்ஸ் சண்டையிலும் ஹீரோவுக்கு சமமான வாய்ப்பு. நன்கு பயன்படுத்திக் கொண்டுள்ளார். 'பைனல் ஆடிட்டிங்' என்ற வார்த்தையைக் கேட்கும்போதே அப்பாவும் பின்னர் மகனும் கதிகலங்குவது நன்கு எடுக்கப்பட்டுள்ளது.
8) சுவாரஸ்யமான காட்சிகள் என்றால் பலவற்றைச் சொல்லலாம். வங்கி அதிகாரியாக இருந்த அப்பாவின் கையாடலைச் சொல்லி மிரட்டியே கொள்ளைக்கும்பல், வங்கியின் பிரதான சாவிகளை மெழுகில் பிரதியெடுத்து அதன்மூலம் கொள்ளையை சுலபமாக்குவது. பாலாஜியின் பிறந்தநாள் விருந்துக்காட்சி. நடிகர்திலகத்திடம் பத்மப்ரியாவின் செல்லமான கோபங்கள், சிணுங்கல்கள் என நிறைய அங்கங்கே தூவப்பட்டுள்ளன. .
9) இது போன்ற கிரைம் படங்களுக்கு. வேகத்தடைகளாக அமையக்கூடிய அம்மா செண்டிமெண்ட்கள் இப்படத்தில் இல்லாதது மிகப்பெரிய ஆறுதல். யாருக்குமே அம்மா இல்லாததால் சீனியர் நடிகைகளுக்கு வேலையே இல்லை. (தங்கசுரங்கத்திலும், ராஜாவிலும் நாயகனின் அம்மாக்கள் தேவையான பாத்திரங்கள். ஜெயலலிதாவின் அம்மா காந்திமதி ஒரே சீன் என்பதால் மன்னிக்கலாம். பத்மாகன்னாவின் அம்மாவும் ஒரே சீன். (ராஜாவில் பத்மாகன்னா ஒரு பரிதாபத்துக்குரிய ஜீவன்)
மைனஸ் பாயிண்ட்ஸ்:
1) இம்மாதிரி க்ரைம் மற்றும் துப்பறியும் படங்களுக்கு தேவையான ஸ்டார் வால்யூ மிகவும் குறைவு. வெறும் ஐந்து பேர் மட்டுமே படத்தில். நடிகர்திலகம், பத்மப்ரியா, முத்துராமன், பாலாஜி, சகுந்தலா அவ்வளவுதான். ராஜா, என்மகன் போன்ற படங்களில் இருந்த நட்சத்திரகூட்டம் வைர நெஞ்சத்தில் இல்லை.
2) மந்தமான ஆரம்பம், வலுவான கதை இருந்தும் அதைத் தூக்கி நிறுத்தும் அளவு வலுவில்லாத மெதுவான திரைக்கதை. ஆனால் நடிகர்திலகத்தின் அறிமுகத்துக்குப்பின் படம் வேகம் பிடிக்கிறது. லவ்ஸ்டோரி கதைகளை மட்டுமே படமாக்கி வந்த ஸ்ரீதருக்கு கிரைம் சப்ஜக்டில் அனுபவமின்மை. (அவர் சிஷ்யரான சி.வி.ஆர். இதில் கில்லாடி).
3) சண்டைக்காட்சிகளில் யாரோ முன்பின் தெரியாத ஆட்களுடன் சண்டையிடுவதற்கு மாறாக ராமதாஸ், கே.கண்ணன், ஜஸ்டின் போன்றவர்களுடன் சண்டையிடுவதாக அமைத்திருக்கலாம். முத்துராமனின் அப்பா ரோலில் செந்தாமரை, முத்துராமனை மிரட்டும் வில்லனாக மனோகர் என்றெல்லாம் போட்டு, திரைக் கதையையும் ஸ்பீட் அப் பண்ணியிருந்தால் படம் எங்கேயோ போயிருக்கும் (முத்துராமனின் தந்தை இறந்தபின், அவரை வந்து மிரட்டுவதில் துவங்கி படம் முழுதும் வில்லில் பிரதான கையாளாக வரும் அந்த நடிகர் யார்?. அதுபோல படத்தின் துவக்கத்தில் முத்துராமன், பத்மப்ரியா இவர்களின் தந்தையாக வந்து தற்கொலை செய்துகொள்ளும் நடிகர் யார்?)
4) ஏர்போர்ட்டில் நடிகர்திலகத்தின் அறிமுகக்காட்சி, தியேட்டரில் படம் முடிந்து மக்கள் வெளியேறும் காட்சிகளில் எல்லாம் ரிச்னஸ் மிகக்குறைவு. பிரதான வில்லனின் இருப்பிடமாக காண்பிக்கப்படும் இடமும் மிகச்சிறியது. ஒரு சிறிய ஹால். அதில் ஒரு மேஜையும் சுழல் நாற்காலியும் மட்டுமே. போதாக்குறைக்கு அந்த இடமும் ஒரே இருட்டு வேறு. இதன் காரணமாகவே அட்டகாசமான கிளைமாக்ஸ் சண்டை கொஞ்சம் சுவைக்குறைவாக தெரிகிறது. (ஓ.ஏ.கே.தேவரின் இன்ப நிலையம் போலவோ அல்லது ரங்காராவின் மாளிகை போலவோ பிரமாண்டாமோ வெளிச்சமோ இல்லை). வில்லனின் இரண்டு பக்கமும் ரேகா, ரீட்டா என்ற பெயர்களில் தொடை காட்டும் அழகிகள் இருந்தும் சரிவர பயன்படுத்திக்கொள்ளவில்லை.
5) காமெடி ட்ராக் அறவே இல்லை. இது கிரைம் படத்துக்கு மைனஸா அல்லது பிளஸ்ஸா தெரியவில்லை. ரங்கூனில் கட்டபொம்மன் தெருவில் குடியிருந்த நாகேஷும், 'ட்ரிபிள் ராம்' சகோதரர்கள் சந்திரபாபுவும் அப்படங்களின் ஓட்டத்துக்கு எவ்வகையில் துணையிருந்தார்கள் என்பது தெரியவில்லை. ஸ்ரீதர் படம் என்பதால் சச்சு மட்டும் ஒரேஒரு காட்சியில் வந்து போகிறார்.
6) இம்மாதிரி ஜாலியான படங்களிலாவது நடிகர்திலகம் அதிக சீன்களில் ‘கூலிங்கிளாஸ்’ அணிந்து நடித்திருக்கலாம். அவுட்டோர் காட்சிகளிலாவது முடிந்தவரை அணிந்து ரசிகர்கள் ஆவலை பூர்த்தி செய்திருக்கலாம். அதேபோல துப்பறியும் அதிகாரி ரோல் அமைந்த இப்படத்தில் அதிக காட்சிகளில் ரிவால்வருடன் தோன்றியிருக்கலாம். (மக்கள் கலைஞர் ஜெய், ஜேம்ஸ்பாண்ட் படங்களில் ஒப்பந்தமானதுமே கையில் ரிவால்வரை பெவிகால் போட்டு ஒட்டிக்கொள்வதை நடிகர்திலகமோ ஸ்ரீதரோ பார்த்ததில்லையா).
ஆனால் இத்தனை மைனஸ்களையும் தாண்டி படம் விரும்பக் கூடியதாக அமைந்துள்ளதுதான் ‘வைர நெஞ்ச’த்தின் சிறப்பு.
கார்த்திக் சார்,
வைர நெஞ்சம் படத்தைப் பற்றிய தங்கள் பதிவு .... முழுமையாக நிறை குறைகளை அலசி அருமையாக எழுதியுள்ளீர்கள். பாராட்டுக்கள்.
நாஞ்சில் ரசிகர்களே, பிடியுங்கள் எங்கள் உள்ளம் நெகிழ்ந்த நன்றிகளை...
இது வரை கேள்விப்பட்டிராத அளவிற்கு நாகர்கோவிலில் நடிகர் திலகத்தின் புகழை மிக பிரம்மாண்டமான அளவில் பரப்பியிருக்கும் நாஞ்சில் நகர, சிவாஜி, பிரபு மற்றும் அனைத்து ரசிகர்களுக்கும் நம் அனைவரின் சார்பிலும் உளமார்ந்த நன்றி.
நகரில் திரும்பிய பக்கமெல்லாம் நடிகர் திலகத்தின் கண் கவர் FLEX Bannerகள், கிட்டத்தட்ட 800 பேனர்கள் அமைக்கப் பட்டிருந்ததாக தகவல்கள் வந்துள்ளன. நகரையே குலுங்க வைக்கும் அளவிற்கு மக்கள் வெள்ளம் திரண்டிருந்ததாகவும் இது வரை எந்த தலைவருக்கும் கிட்டாத அளவிற்கு மிக மிக மிக பிரம்மாண்டமான அளவில் நடிகர் திலகத்திற்கு மரியாதை செய்யப் பட்டதாகவும் வந்துள்ள செய்திகள் உள்ளத்தைக் குளிர்விக்கின்றன.
கும்கி 125வது நாள் வெற்றி விழா அண்மையில் நாகர்கோவில் நகரில் நடைபெற்றது. தயாரிப்பாளர் லிங்குசாமி, பிரபு சாலமன், லக்ஷ்மி மேனன் உள்பட படக்குழுவினர் விழாவில் கௌரவிக்கப் பட்டனர். இளைய திலகம் பிரபு அவர்கள் ஆற்றிய உரை வரலாற்றுச் சிறப்பு மிக்கதாக இருந்ததாக அங்கு சென்ற நண்பர்கள் கூறியிள்ளனர். கும்கி படக்குழுவினர் நடிகர் திலகத்திற்கு இத்தனை ஆண்டுகள் கழித்தும் இருக்கும் மாபெரும் ரசிகர்கள் பட்டாளம் பிரமிப்பை ஊட்டியிருப்பதாகவும் அதை மேடையில் தெரிவித்ததாகவும் நண்பர் ஒருவர் கூறினார். நாகர்கோவிலில் இருந்து மற்ற நண்பர்களிடமிருந்து நிழற்படங்கள் கிடைக்கப் பெற்றவுடன் இங்கு பதியப் படும்.
http://t2.gstatic.com/images?q=tbn:A...jRyrAgr9xWlJPE
ஏழுகடல் சீமை - அதை
ஆளுகின்ற நேர்மை - அவர்
எங்க ஊரு ராஜா
தங்கமான ராஜா ...
Raghavendra Sir,
There is news about the Kumki function at Nagercoil from OneIndia site: http://tamil.oneindia.in/movies/news...ha-173954.html
RARE STILL
[http://i36.tinypic.com/2i172w.jpg
MUSTABA- MAKKAL THILAGAM - PERUNTHALAIVAR - NT-
BACK SIDE- K.S.GOPALAKRISHNAN - TIRUPPATHI SAMY.
நன்றி வினோத் சார்.
பெருந்தலைவர் நடிகர் திலகத்தை மறைத்து விட்டார்.