Maanbumigu Needhiyarasargal. New 7 channalil pudhiya nigalchi.
http://cinema.dinamalar.com/tamil-tv...-7-channel.htm
Nandri.Dinamalar.
Printable View
Maanbumigu Needhiyarasargal. New 7 channalil pudhiya nigalchi.
http://cinema.dinamalar.com/tamil-tv...-7-channel.htm
Nandri.Dinamalar.
Solvathellaam Unmai Nigalchiyai Thodaravillai; solgirar Lakshmi Ramakrishnan.
Thamil Tholaikatchiyil Solvathellaam Unmai Nigalchiyai valangi vandhaar Nadigai Lakshmi Ramakrishnan.
http://cinema.dinamalar.com/tamil-tv...-7-channel.htm
Nandri ; Dinamalar.
Cenima Padal Paadiya chinnathirai Natchathirangal.
chinnathirai Natchathirangal Cenimavil nadikathaan sendru kondirundhaargal.Ipodhu paaduvadharkum sella aarambithirukiraargal.
http://cinema.dinamalar.com/tamil-tv...for-kakapo.htm
Nandri.Dinamalar.
Raj Tvyil Pudhiya Thodar Indira
Varugira 15aam thedhi mudhal RajTvyil Indira endra Pudhiya Thodar oliparapaagiradhu.
http://cinema.dinamalar.com/tamil-tv...-in-Raj-tv.htm
Nandri.Dinamalar.
Titeel vedangalil nadikka veandum;Nadigai Shamli.
Paasamalar thodaril paasakaara thangaiyaga nadithu varubavar Shamli.ivar shrikanth nadithulla om shanthi om padathilum nadithulaar.
http://cinema.dinamalar.com/tamil-tv...Title-role.htm
Nandri.Dinamalar.
cenimavil naayagiyana serial nayagi Jeevitha.
chinnathiraiyil office serial,vairakyam mulam nadithavar.......
http://cinema.dinamalar.com/hindi-ne...as-heroine.htm
Nandro.dinamalar.
Quote:
சீரியலுக்கு பிரேக் கொடுத்தது ஏன்? - லதாராவ்
திருமதி செல்வம், செல்வி, மகாபாரதம் உள்பட சுமார் 30 சீரியல்களில் நடித்தவர் லதா ராவ். ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக அவர் எந்த சீரியல்களிலும் நடிக்கவில்லை. அதேசமயம் சில படங்களில் நடித்து வருகிறார். அவரிடத்தில், மீண்டும் சின்னத்திரைக்கு வருவீர்களா? இல்லை சினிமாவில் மட்டும்தான் நடிப்பீர்களா? என்று கேட்டபோது...
சின்னத்திரைதான் என்னை மக்களுக்கு அடையாளம் காட்டியது. தமிழ், தெலுங்கு, மலையாளம் என நிறைய சீரியல்களில் நடித்திருக்கிறேன். ஒவ்வொரு தொடரிலும் ஒவ்வொரு விதமான வேடங்களில் நடித்ததால் இப்போது எந்த மாதிரியான வேடம் கொடுத்தாலும் என்னால் நடிக்க முடியும் என்கிற அளவுக்கு தேர்ச்சி பெற்று விட்டேன். சீரியல்களில் நடித்து வந்தபோதே, தில்லாலங்கடியில் வடிவேலுவுக்கு ஜோடியாக நடித்தேன். அந்த காமெடி காட்சிகள் டிவியிலும் அடிக்கடி வந்து கொண்டிருப்பதால் அந்த படம் சினிமாவில் என்னை பிரபலப்படுத்தி விட்டது. பின்னர் பல படங்களில் நடித்து வந்த நான், இப்போது கே.எஸ்.ரவிக்குமார் சுதீப்பை வைத்து இயக்கியுள்ள முடிஞ்சா இவனை புடி என்ற படத்திலும் நடித்திருக்கிறேன். இந்த படத்தில் கதாநாயகி நித்யாமேனனின் அண்ணியாக நடித்திருக்கிறேன். அதோடு கடிகாரமுள் என்ற படத்திலும் நடித்துள்ளேன்.
அந்த வகையில், நான் சின்னத்திரையில் நடித்து இரண்டு வருடமாகி விட்டது. இப்படி சின்னத்திரைக்கு பிரேக் கொடுத்ததின் முக்கிய காரணம் நேரம் இல்லாததுதான். எனது முதல் மகன் 2-ஆம் வகுப்பும், இரண்டாவது மகன் யுகேஜியும் படிக்கிறார்கள். அதனால் அவர்களை கவனிக்க எனக்கு நேரம் தேவைப்படுகிறது. மேலும், டிவி சீரியல்களில் நடித்தால் அதற்கு அதிக நேரம் செலவிட வேண்டியதிருக்கும். ஆனால் சினிமாவைப் பொறுத்தவரை அதிகபட்சம் 10 நாட்கள்தான் படப்பிடிப்பு இருக்கும். அதனால்தான் தற்போது சினிமாவில் மட்டுமே நடித்து வருகிறேன். அதேசமயம், இப்போதைக்கு நேரம் இன்மை காரணமாக டிவி சீரியல்களில் நடிக்காத நான் எதிர்காலத்தில் நேரம் அதிகமாக கிடைக்கும்போது மறுபடியும் சீரியல்களில் நடிப்பேன் என்கிறார் லதாராவ்.
http://img1.dinamalar.com/cini//CNew...1524000000.jpg
நன்றி: தினமலர்
Quote:
"திறமைக்கு தீனி போடும் வாய்ப்புகள் தேவை! -மதுமிலா
விஜய் டிவியில் ஒளிபரப்பான ஆபீஸ் மற்றும் தாயுமானவன், அக்னி பறவை போன்ற தொடர்களில் நடித்தவர் மதுமிலா. அதோடு, பூஜை, ரோமியோ ஜூலியட், மாப்ள சிங்கம் என பல படங்களிலும் நடித்திருக்கும் அவர், எனது திறமைக்கு தீனி போடும் சரியான வாய்ப்புகளை எதிர்பார்க்கிறேன் என்கிறார். தினமலர் இணையதளத்திற்காக அவர் அளித்த பேட்டி...
சீரியலில் உங்களது என்ட்ரி?
ஆபீஸ் சீரியலில்தான் நான் அறிமுகமானேன். அதுவே பெரிய ஹிட்டாக அமைந்தது. எனது நடிப்புக்கு நல்லதொரு அங்கீகாரத்தையும் அந்த சீரியல் கொடுத்தது. தொடர்ந்து தாயுமானவன், அக்னி பறவை போன்ற தொடர்களிலும் நடித்தேன். அதன்பிறகு சினிமாவில் நடிக்கத் தொடங்கினேன். பூஜை படத்தில் விஷாலின் தங்கையாகவும், ரோமியோ ஜூலியட்டில் ஹன்சிகாவின் இரண்டு தோழிகளில் ஒருவராகவும் நடித்தேன். அதையடுத்து, விமல் நடித்துள்ள மாப்ள சிங்கம் படத்தில் செகண்ட் லீடாக நடித்திருக்கிறேன். இதுதவிர இன்னொரு படத்தில் மெயின் ஹீரோயினாக நடித்துள்ளேன். அந்த படம் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளிவரும்..
சின்னத்திரையில் இருந்து சினிமாவுக்கு வந்தது ஏன்
சினிமாவில் பெரிய நடிகையாக வேண்டும் என்பதுதான் எனது ஆசை. ஆனபோதும் சின்னத்திரையில் கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்திக்கொண்டே சினிமாவுக்காக முயற்சி எடுத்தேன். சினிமாவில் தங்கை வேடத்தில் என்ட்ரி ஆனபோதும் தற்போது ஹீரோயினாக நடிக்கும் அளவுக்கு படிப்படியாக வளர்ந்து வருகிறேன்.
அப்படியென்றால் அடுத்து டிவியில் நடிக்கும் ஐடியா இல்லையா?
அப்படி எந்த முடிவும் எடுக்கவில்லை. என்னைப்பொறுத்தவரை என்னை ரசிகர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். அதாவது, சினிமாவில் நடிப்பதே எனது நோக்கமாக இருந்தாலும் ரசிகர்கள் ஏற்றுக்கொண்டால் முழுநேர சினிமா நடிகையாகி விடுவேன். ஒருவேளை அவர்கள் சரியான ஆதரவு கொடுக்காதபட்சத்தில் சின்னத்திரைக்கு வந்து விடுவேன். அதற்காக நான் பீல் பண்ண மாட்டேன்.
எந்தமாதிரியான வேடங்களில் நடிப்பதில் ஆர்வமாக இருக்கிறீர்கள்?
நன்றி: தினமலர்
Quote:
வம்சம் சீரியலில் என்ட்ரியான பிரியங்கா
கேப்டன் டிவியில் சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தவர் பிரியங்கா. இந்நிலையில், ராஜ் டிவியில் ஒளிபரப்பான என் இனிய தோழியே, சபீதா என்கிற சபாபதி ஆகிய தொடர்களில் நடித்து வரும் அவர் தற்போது ரம்யா கிருஷ்ணனின் வம்சம் சீரியலில் என்ட்ரியாகி நடித்து வருகிறார்.
இதுகுறித்து பிரியங்கா கூறுகையில், கேப்டன் தொலைக்காட்சியில் நான் தொகுப்பாளினியாக இருந்தபோது சில சீரியல்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. எனக்கு பொருத்தமான, பிடித்தமான கேரக்டர்களாக இருந்ததால் சீரியல் நடிகை யாக மாறினேன். அப்படி நான் முதன்முதலில் நடித்த என் இனிய தோழியே சீரியலில் நான் நடித்த கேரக்டரும், நடிப்பும் நன்றாக ரீச் ஆனது.
அதனால் அதைப்பார்த்து விட்டு சபீதா என்கிற சபாபதி சீரியல் வாய்ப்பு வந்தது. அதையடுத்து இப்போது ரம்யா கிருஷ்ணனின் வம்சம் சீரியலில் நடிக்கிறேன். இந்த தொடரில் ஹீரோயினி பூமிகாவின் சகோதரியாக நடிக்கிறேன். நான் நடிக் கும் ஜோதிகா என்கிற வேடம் பாசிட்டீவானது. நல்லது மட்டுமே செய்யக்கூடிய வேடத்தில் நடிக்கிறேன். இதனால் சமீபத்தில்தான் எனது கேரக்டர் என்ட்ரியானபோதும் நேயர்கள் மனதில் இடம் பிடித்து விட்டேன். அந்த அளவுக்கு டச்சிங்கான வேடம். அதோடு எனக்குப் பிடித்தமான ரம்யாகிருஷ்ணன் மேடத்தின் சீரியலில் நடிக்கக் கிடைத்த இந்த வாய்ப்பை ரொம்ப பெருமையாக கருதுகிறேன் என்கிறார் பிரியங்கா.
நன்றி: தினமலர்
Quote:
வில்லனாக நடிக்க வந்த என்னை காமெடியனாக்கி விட்டனர்! - ஜெமினி மணி
சில படங்களில் நடித்திருக்கும் ஜெமினி மணி, ஆபீஸ் தொடரை அடுத்து இப்போது ஆண்டாள் அழகர் தொடரில் நடித்து வருகிறார். வில்லனாக நடிக்க வந்த என்னை காமெடியனாக்கி விட்டனர் என்று கூறும் அவர், வில்லன் வேடத்திற்காக காத்திருப்பதாகவும் சொல்கிறார்.
தினமலர் இணையதளத்திற்காக அவர் அளித்த பேட்டி...
குள்ளநரிக்கூட்டம், சண்டியர், சுண்டாட்டம், பாயும், புலி, கிருமி ஆகிய படங்களில் நடித்திருக்கிறேன். விஜய் டிவியில் ஒளிபரப்பான ஆபீஸ் சீரியல் மூலம் சின்னத்திரைக்கு என்ட்ரி ஆனேன். அந்த சீரியலில் முதலில் எனது ரோல் சிறியதாகத்தான் இருந்தது. எனது நடிப்பைப்பார்த்த விஜய் டிவி ரமணன் சார், பின்னர் எனக்கான கேரக்டரை பெருசுபடுத்தினார். அதனால் வாரத்தில் ஐந்து நாட்கள் வந்தேன். அந்த வகையில் ஆபீஸ் சீரியலில் 350 எபிசோடுகளில் நடித்தேன். பொதுவாக எனக்கு காமெடியே வராது. ஆனால் ஆபீஸ் சீரியலில் என்னை காமெடியாக நடிக்க வைத்தனர். வில்லனுக்கு முயற்சி செய்த என்னை காமெடியனாக்கி விட்டனர். அதற்கு காரணம் விஜய் டிவி ரமணன், இயக்குனர் பிரம்மா ஆகியோர்தான். அதற்காக அவர்கள் இருவருக்கும் நான் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்.
மேலும், ஆபீஸ் பண்ணிக்கொண்டிருக்கும்போதே ஆண்டாள் அழகர் சீரியல் வாய்ப்பு வந்தது. அந்த தொடரில் பூசாரி என்ற ரோலில் நடித்து வருகிறேன். ஹீரோவுடன் சீரியல் முழுக்க வருவேன். அவருக்கு ஒத்தாசையாக, பிரச்சினை என்றால் ஐடியா, அட்வைஸ் கொடுக்கும் நண்பனாக நடிக்கிறேன். நான் வெளியில் போனாலே பூசாரி போறார் என்று சொல்லும் அளவுக்கு நல்ல ரீச் கிடைத்தது. செம பாசிட்டீவான ரோல். மதுரை தமிழில் பேசித்தான் அனைவருமே நடிக்கிறோம். அந்த தொடரில் நாயகன் ஸ்டாலின் மதுரைக்காரர் என்பதால் அவருக்கு பிரச்சினை இல்லை. ஆனால் எனது சொந்த ஊர் தஞ்சாவூர். அதனால் பயிற்சி எடுத்துதான் மதுரை தமிழ் பேசி நடித்து வருகிறேன்.
அதோடு, தற்போதுவரை நான் எனக்கு கிடைக்கிற வாய்ப்புகளில்தான் நடித்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் நான் எதிர்பார்க்கிற மாதிரியான வேடங்கள் இன்னும் எனக்கு கிடைக்கவில்லை. அதாவது என்னைப் பொறுத்தவரை நெகடீவ் வேடங்களில் நடிக்க வேண்டும் என்பதுதான் ஆர்வமாக உள்ளது. காமெடி எனக்கு ஐடியாவே இல்லை. ஆனால் கிடைத்தது என்னவோ அதுதான். நான் எதிர்பார்க்கிற வில்லன் வேடம் கிடைத்தால் ரொம்ப மகிழ்ச்சியாக நடிப்பேன்
இணையதளங்களில் எனது நடிப்பு குறித்து கமெண்ட் கொடுக்கும் ரசிகர்கள், இயல்பாக, யதார்த்தமாக இருப்பதாக சொல்கிறார்கள். மற்றபடி இதுவரை யாருமே எனது நடிப்பு குறை சொன்னதில்லை என்று கூறும் ஜெமினி மணி, நான் ஜெமினி ஸ்டுடியோவில் ஒரு டிரைவராகத்தான் வேலை பார்த்தேன். அஜீத்தின் தீவிரமான ரசிகனாக இருந்தேன். அவரது பெயரை என் கையில் பச்சைக்குத்தியிருக்கிறேன். அஜீத் கிரீடம் படத்தில் நடித்து வந்தபோது அவரிடம் என்னை நேரில் அழைத்து சென்று, இவர் உங்களது தீவிரமான ரசிகன் என்று அஜீத்திடம் சொல்லி எனக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தவர் ஜெமினி ஸ்டுடியோவின் முதலாளி மனோ அக்கினேனி மேடம். அவர்தான் எல்.வி. பிரசாத்தின் பேத்தி. அவர்கள்தான் எனக்கு விலாசம். என்னை ஒரு டிரைவர் மாதிரி ஒருநாளும் நினைத்ததில்லை.
அப்படி அஜீத்திடம் அவர்கள் கொடுத்த அறிமுகம் காரணமாக, அன்றைய தினம் தனது வீட்டில் இருந்து வந்த பிரியாணியை எனக்கும் ஒரு பாக்ஸ் கொடுத்து சாப்பிட சொன்னார் அஜீத். அதையடுத்து கிரீடம் படம் முடிகிற வரைக்கும் அஜீத் சாரிடம் நான் டிரைவராக ஒர்க் பண்ணினேன். அப்போது நடிப்பெல்லாம் உனக்கு வேண்டாம். வேற வேலை பாரு. குடும்பத்தை நல்ல முறையில் கவனிச்சிக்கோ என்று அட்வைஸ் செய்தார். ஆனால் நான் அவர் பேச்சைக் கேட்காமல் நடிக்க வந்து விட்டேன்.
ஆக, இப்போது சினிமா, சின்னத்திரை என இரண்டு துறைகளிலும் நடிகராக இருக்கும் நான், தற்போது காக்கா குருவி கல்யாணம் -என்ற பெயரில் இயக்கியுள்ள டெலிபிலிமை மனோ அக்கினேனி மேடத்துக்கும் போட்டுக்காட்டினேன். அதனால் அவர்களது நிறுவனத்துக்கே நான் படம் இயக்கினாலும் ஆச்சர்யப்படு வதற்கில்லை என்று கூறும் ஜெமினி மணி, துரோகி உள்பட சில படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றி யிருப்பதாகவும் சொல்கிறார்.
நன்றி: தினமலர்
Quote:
கொடுமை செய்யும் சித்தியாக நடிக்கிறேன்! - பாலாம்பிகா
பிரியமானவளே, நாதஸ்வரம், பாசமலர்கள், அக்னிபறவை என பல தொடர்களில் நடித்தவர் பாலாம்பிகா. தற்போது பொன்னூஞ்சல் என்ற தொடரில் சித்தி வேடத்தில் நடித்து வருகிறார். செண்டிமென்ட் அம்மாவாக பல தொடர்களில் நடித்து வந்த எனக்கு இந்த தொடரில் நடிக்கும் கொடுமைக்கார சித்தி வேடம் ஒரு புதிய அனுபவமாக உள்ளது என்கிறார் பாலாம்பிகா.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், சினிமாவில் நடித்து வந்த நான் திருமணத்திற்கு பிறகு ஒரு பிரேக் கொடுத்து விட்டு சின்னத்திரைக்கு வந்தபோது அம்மா வேடங்களாக கிடைத்தன. குறிப்பாக, பிரியமானவளே தொடரில் அவந்திகாவின் அம்மாவாக நடித்தேன். அது நல்ல ரீச் ஆனது. அதனால் அடுத்தடுத்து அம்மா வேடங்களே கிடைத்தபோதும், அந்தந்த கதைக்களங்களின் சூழலுக்கேற்ப என்னை மாற்றிக்கொண்டு நடித்தேன். அதனால் தொடர்ந்து அம்மா வேடம் என்றாலும் என்னால் மாறுபட்ட நடிப்பை கொடுக்க முடிந்தது.
அதேசமயம், திருமுருகன் இயக்கிய நாதஸ்வரம் தொடரில் கேங் லீடர் வேடத்தில் நடித்தேன். முதலில் அந்த கேரக்டர் பற்றி டைரக்டர் சொன்னபோது, ஷாக் ஆகி விட்டேன். நான் போய் எப்படி கேங் லீடராக நடிப்பது. காமெடியாகி விடாதா? என்றேன். டைரக்டர்தான் தைரியம் கொடுத்து நடிக்க வைத்தார். ஆனால் அந்த வேடம் ஒர்க் அவுட்டானது. அதேபோல் இப்போது பொன்னூஞ்சல் தொடரில் வில்லியாக நடிக்கிறேன். அக்கா பிள்ளைகளின் சொத்தில் வாழ்ந்து கொண்டே அவர்களை கொடுமை செய்யும் சித்தியாக நடிக்கிறேன். என்னைப்பொறுத்தவரை இது ஒரு மாறுபட்ட வேடம் என்பதால் வில்லத்தனமான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறேன். மேலும், பெரும்பாலும் வில்லி வேடங்களில் நடிப்பவர்களை கண்டால் நேயர்கள் திட்டுவார்கள். ஆனால் என்னை சந்திக்கும் பெண்கள், இந்த சீரியலில் உங்கள் நடிப்பு வித்தியாசமாக உள்ளது என்று பாராட்டுகிறார்கள். அதனால் இந்த தொடர் என்னை சின்னத்திரையில் பரபரப்பான நடிகையாக்கி விடும் என்று எதிர்பார்க்கிறேன் என்கிறார் பாலாம்பிகா.
நன்றி: தினமலர்
Quote:
மக்களை மகிழ்விக்க வேண்டும் - பிரேம் -
எஸ்.பி.முத்துராமன் இயக்கிய நிம்மதி உங்கள் சாய்ஸ் தொடரின் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானவர் பிரேம்குமார். அதன் பிறகு ஆபாவணன் இயக்கிய கங்கா யமுனா சரஸ்வதி சங்கமம், சமுத்திரகனி இயக்கிய தொடர், ராதிகாவின் அண்ணாமலை, மனைவி தொடர்களில் நடித்து புகழ்பெற்றார். அதன் பிறகு கண்ணம்மா என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு சின்னத்திரை சீரியல்களுக்கு விடைகொடுத்து விட்டு முழுநேர சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார்.
வில்லன், போலீஸ் ஆபீசர், ஹீரோவின் அண்ணன் என இதுவரை 26 படங்களில் நடித்து விட்டார். தனம் என்ற படத்தில் ஹீரோவாக நடித்தார். என்றாலும் சினிமாவில் ஒரு நிலையான இடத்தை அவரால் பிடிக்கமுடியவில்லை. தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறார். தற்போது சிங்கம் 3. எஸ் 3 படங்களில் நடித்து வருகிறார். நடித்து முடித்துள்ள தமிழ் செல்வனும் தனியார் அஞ்சலும் படம் வெளிவர வேண்டியது இருக்கிறது
"இப்போது சிங்கம்3 எஸ்3 படத்தில் நடிக்கவுள்ளேன் . படப்பிடிப்பு அடுத்த வாரம் துவங்க உள்ளது . “தமிழ் செல்வனும் தனியார் அஞ்சலும்” படத்தில் வில்லன் கதாபாத்திரம் ஏற்று நடித்துள்ளேன் , ஒரு விதமான அமைதியான வில்லன் கதாபாத்திரம் அது , முற்றிலும் வித்தியாசமான திரைக்கதையமைப்பு இந்த படத்தில் இருக்கிறது. அதுபோல் பிரபுசாலமோன் இயக்கத்தில் உருவாகி வரும் ரயில் என்றழைக்கப்படும் படத்தில் தனுஷுடன் நடித்து வருகிறேன் . இன்னும் பல திரைப்படங்கள் பண்ண வேண்டும் மக்களை மகிழ்விக்க வேண்டும் என்ற ஆசை எனக்கு உள்ளது. விதவிதமான கதாபாத்திரங்களில் நடிக்கவேண்டும் என்று எனக்கு நிறைய ஆசை உண்டு ,சவாலான பல கதாபாத்திரம் செய்ய வேண்டும் எனக்கு ஆசை உள்ளது" என்கிறார் பிரேம் குமார்.
நன்றி: தினமலர்
Herovaanaar Office Karthi.
http://www.mayyam.com/talk/showthrea...Artists/page30
Nandri.Dinamalar.
Nalinikku kidaitha 3 virudhugal.
http://cinema.dinamalar.com/tamil-tv...t-3-awards.htm
Nandri.Dinamalar.
Nalinikku kidaitha 3 virudhugal.
http://cinema.dinamalar.com/tamil-tv...t-3-awards.htm
Nandri.Dinamalar.
Radhigavidam Serial vayppu keata S.A.C
http://cinema.dinamalar.com/tv-seria...ision-News.htm
Nandri.Dinamalar.
En kanavarukku pidaitha Throwbathi veadam.Nisha Venkatraman.
http://cinema.dinamalar.com/tamil-tv...enkatraman.htm
Nandri.Dinamalar.
Tele Secrets.
Marraige to love thodaril Pojana nadigaiyai
http://cinema.dinamalar.com/tamil-tv...on-Secrets.htm
Nandri.Dinamalar.
Radhigavin parattu urchagathai koduthadhu. solgiraar shilpha.
http://cinema.dinamalar.com/tamil-tv...ays-Shilpa.htm
Nandri.Dinamalar.
ji thamil channelil kannada serial.......
http://cinema.dinamalar.com/tamil-tv...l-Magamayi.htm
Nandri.Dinamalar........
chinnathirai nadigargalukku 27.5 sadhaveedha udhiya uyarvu........
http://cinema.dinamalar.com/tamil-tv...rai-artist.htm
Nandri.Dinamalar.
sareithara kadhaigalil nadipadhu pudhumaiyaana anubavam santhi ananth......
http://cinema.dinamalar.com/tamil-tv...hantiAnand.htm
Nandri.Dinamalar.
karunaanidhiyin vasanam pesi nadithadhai paakiyamaaga karudhugirean madhurai logu.....
http://cinema.dinamalar.com/tamil-tv...Actor-Logu.htm
Nandri.Dinamalar.
Serial annanai nija annanaaga karudhugirean nadigai shamili....
http://cinema.dinamalar.com/tamil-tv...ys-Shamili.htm
Nandri.Dinamalar.
Quote:
ஹீரோவாக நடிக்கவே மாட்டேன்: சுப்பு பஞ்சு உறுதி
பிரபல தயாரிப்பாளர் பஞ்சு அருணாசலத்தின் மகன் சுப்பு பஞ்சு. தற்போது தமிழ் சினிமாவில் வில்லன் மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார். அவரை ஹீரோவாக நடிக்க வைக்கும் முயற்சிகளில் இருந்து தப்பித்தார் சுப்பு பஞ்சு. “நான் ஹீரோவாக நடித்து நல்லா போய்கிட்டிருக்கிற கேரியரை கெடுத்துக்க மாட்டேன்” என்று உறுதியாக கூறுகிறார்.
அவர் மேலும் கூறியதாவது: எங்களோட பி.ஏ.ஆர்ட்ஸ் நிறுவனத்தில் தயாரிப்பு வேலையில் அப்பாவுக்கு துணையாக நானும் இருந்தேன். 'குரு சிஷ்யன்' படத்தில்தான் முதல்முறையாக தயாரிப்பு பணியில் இறங்கினேன். நிறைய படங்களை தயாரித்து வந்தாலும் நடிப்பு, ஹீரோங்கற ஆசையெல்லாம் வந்ததில்லை..பிரதாப்போத்தன் மலையாளத்தில் 'டெய்சிக் படம் இயக்கியபோது ஒரு முக்கியமான ரோல் இருக்கு பண்றியான்னு கேட்டார். அப்பா சம்மதிச்சதால் அந்தப்படத்தில் நடிச்சேன். அதுதான் நடிப்பில் எனக்கு முதல் படம். அப்புறம் ;என் ஜீவன் பாடுதுக் படத்தில் ஒரு கேரக்டர் பண்ணினேன். அதுக்கு மேல நடிக்கணும்னு தோணலை.
நாங்க 'மாயக்கண்ணாடிக் படம் தயாரிச்சப்போ சமுத்திரகனி அவர் இயக்கி வந்த 'அரசி சீரியலில் ஒரு சின்ன கேரக்டரில் நடிக்க கேட்டார். வேண்டாம்னு மறுத்தும் ரெண்டு நாள் மட்டும் நடிச்சிட்டு போயிடுங்கன்னார். சரின்னு ஒத்துக்கிட்டு அதில் நல்லதம்பி கேரக்டரில் நடிச்சேன். என்னோட கேரக்டரை டெவலப் பண்ணி ராதிகாவுக்கே வில்லனா நிற்கிற அளவுக்கு கேரக்டர் ரீச்சாகிடுச்சு. அப்புறம் 'பாஸ் என்கிற பாஸ்கரன்க் படத்தில் ஆர்யா அண்ணனா நடிக்கிற வாய்ப்பு வந்தது. அதிலும் நல்ல பெயர் கிடைக்க, 'கலகலப்புக் படத்தில் காமெடி வில்லன், 'நவீன சரஸ்வதி சபதத்தில் சிவன், ஆண்மைத்தவறேல்க் படத்தில் வில்லன், -;அரண்மனை 2க்வில் நெகட்டிவ் ரோல்னு வேண்டாம்னு ஒதுக்கின நடிப்பு இப்போ உடும்புப் பிடியாய் பிடிச்சுகிச்சு.
http://img1.dinamalar.com/cini//CNew...0121000000.jpg
இரண்டு படங்களில் ஹீரோவா நடிக்க வாய்ப்பு வந்தது. நல்லா போய்ட்டு இருப்பதை நாமே கெடுத்துக்குவானேன் என்று மறுத்திட்டேன். கதையை மட்டும் கேட்டுட்டு அவங்களை பத்திரமா அனுப்பி வச்சிட்டு நான் தப்பிச்சிட்டேன். தற்போது ஜீவாவுடன் 'ஜெமினிகணேசன்க், வெங்கட்பிரபு இயக்கும் 'சென்னை 28 பார்ட் டூ, ராஜேஷ் இயக்கும் 'கடவுள் இருக்கான் குமாருக் உள்ளிட்ட படங்களில் நடிச்சிக்கிட்டிருக்கேன். என்கிறார் சுப்பு பஞ்சு.
நன்றி: தினமலர்
Kerala naatilam nayagi
http://cinema.dinamalar.com/tamil-tv...-interview.htm
Nandri.Dinamalar.
Ennai comedy police aakki vittadanar Telephone Raj.
http://cinema.dinamalar.com/tamil-tv...ephone-raj.htm
Nandri.Dinamalar.
Vibathu kaaranamaaga seithi vaasipaalar aanean Padma Ayyar.
http://cinema.dinamalar.com/tamil-tv...-interview.htm
Nandri.Dinamalar.
Vittadhai pidika pogirean Suresh Kumar.
http://cinema.dinamalar.com/tamil-tv...ws/TV-Actor-Su
Nandri.Dinamalar.
Quote:
சினிமா வில்லனான சீரியல் வில்லன் பெரோஸ்கான்!
சின்னத்திரையில் புதுக்கவிதை, அக்கா, மோகினி உள்பட பல சீரியல்களில் வில்லனாக நடித்தவர் பெரோஸ்கான். இதில் புதுக்கவிதை சீரியலில் அண்ணன் மனைவிக்கே ரூட் விடும் ஒரு அதிரடியான வில்லனாக நடித்து வருகிறார். அதோடு, சீரியல்களில் நடித்துக்கொண்டே சினிமாவிலும் இடம் பிடிக்க வேண்டும் என்று பல மாதங்களாக முயற்சி எடுத்து வந்த பெரோஸ்கான் தற்போது சினிமாவிலும் அதிரடி வில்லனாகி விட்டார்.
அதுபற்றி அவர் கூறுகையில், சினிமாவில் ரகுவரன் போன்ற ஒரு வில்லனாக வேண்டும் என்றுதான் கோவையில் இருந்து சென்னை வந்தேன். ஆனால் சினிமாவில் எதிர்பார்த்தபடி உடனே வாய்ப்பு கிடைக்கவில்லை. அதனால், சீரியல்களில் நடித்து என்னை வளர்த்துக்கொண்டு வந்தேன். குறிப்பாக, நான் எதிர்பார்த்த நெகடீவ் வேடங்களே கிடைத்ததால் அதை உள்வாங்கி நடித்து எனது நடிப்பாற்றலை வளர்த்துக்கொண்டு வந்தேன்.
இந்நிலையில், 'மதியால் வெல்' என்ற படத்தில் வில்லனாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. சீரியல்களில் நான் நடித்த வில்லன் வேடத்தை விடவும் அதிரடியான வேடம் இது. ஒரு பயங்கரமான சமூக விரோதி வேடம். அதனால் எனக்கு சினிமாவில் இந்த படம் மூலம் ஒரு பெரிய என்ட்ரி கிடைத்துள்ளது. அதனால் இப்படம் திரைக்கு வரும்போது சின்னத்திரை உலகம் வில்லனாக என்னை ஏற்றுக்கொண்டது போல், சினிமா உலகமும் ஏற்றுக்கொள்ளும் என்ற நம்பிக்கையில் காத்திருக்கிறேன் என்கிறார் பெரோஸ்கான்.
நன்றி: தினமலர்
Super singer thearvil murai keadu edhuvum nadakavillai. vijay tv vilakkam.arivippu.
http://cinema.dinamalar.com/tamil-tv...r-Singer-5.htm
Nandri.Dinamalar.
Aanlainil serial panna pogirean/ Aanger dsk interview.
http://cinema.dinamalar.com/tamil-tv...-on-online.htm
Nandri.Dinamalar.
Seialgalil pennadhikam kurainrthu varugiradhu nadigar Bharath.
http://cinema.dinamalar.com/tamil-tv...or-Bharath.htm
Nandri.Dinamalar.
90 vayadhu kilaviyaga kuda nadipean-Nagalakshmi interview.
http://cinema.dinamalar.com/tamil-tv...-interview.htm
Nandri.Dinamalar.
Counsling maiyam thodangugiraar Nadigai ramya.
http://cinema.dinamalar.com/tamil-tv...ling-class.htm
Nandri.Dinamalar.
Quote:
வெயிட்டான வேடங்களை எதிர்பார்க்கும் நீயா-நானா கோபிநாத்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நீயா நானா நிகழ்ச்சியை நடத்தி வருபவர் கோபிநாத். அதுதவிர, சிகரம் தொட்ட மனிதர்கள், நடந்தது என்ன, விஜய் அவார்டுஸ் உள்பட பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியிருக்கிறார். அதோடு, பூவெல்லம் உன்வாசம், வாமணன், தோனி, நிமிர்ந்து நில் போன்ற படங்களில் நடித்த அவர், தற்போது ஜீவா-நயன்தாரா நடிப்பில் தயாராகியுள்ள திருநாள் படத்திலும் நடித்திருக்கிறார்.<p>இதற்கு முன்பு நடித்த படங்கள் சிறிய கேரக்டர்களிலேயே நடித்த அவர், திருநாள் படத்தில் புகழேந்தி என்றொரு ஐபிஎஸ் கேரக்டரில் நடித்திருக்கிறார். அந்த வகையில் அவருக்கு பல காட்சிகள் படத்தில் உள்ளதாம். அதோடு முந்தைய படங்களை விடவும் இந்த படத்தில் சிறப்பாக நடித்திருக்கிறாராம் கோபிநாத். அதனால் இனிமேல் இன்னும் அழுத்தமான கதாபாத்திரங்களில் நடிப்பதில் ஆர்வமாக உள்ளாராம் கோபிநாத்.
நன்றி: தினமலர்
Quote:
நான் ஏன் ஜெயித்தேன்? நிம்மதி இழந்தேன்: ஆனந்த் அரவிந்தாக்ஷன் வேதனை
விஜய் டி.வியின் சூப்பர் சிங்கர் 5 சீசனில் டைட்டில் வென்றவர் ஆனந்த் அரவிந்தாக்ஷன். தற்போது இவரது வெற்றி விமர்சிக்கப்பட்டு வருகிறது. தொழில்முறை சினிமா பாடகரான இவர் எப்படி போட்டியில் கலந்து கொண்டார், வெற்றிபெற்றார்? என்று சமூக வலைத்தளங்களில் விவாதிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து மனம் வருந்தி அவர் தனது பேஸ்புக்கில் எழுதியிருப்பதாவது: கடந்த இரண்டு தினங்களாக நான் கொண்டாட்டத்தின் உச்சத்தில் இருந்திருக்க வேண்டும். கடினமாக உழைத்துப் பெற்ற வெற்றியை மகிழ்வாகக் கொண்டாடி இருக்க வேண்டும். ஆனால் இந்த வெற்றி சந்தோஷத்தை தரவில்லை. இந்த வெற்றி என்பதை நான் எளிதாக அடைந்துவிடவில்லை என்பது அனைவரும் அறிந்ததே. இதற்கு முன் பாடியிருக்கிறேன் தான். ஆனால் பின்னணி பாடகர் என்றால் ஒரு பாடல் பாடியவரையும் அப்படித்தான் சொல்கிறோம் ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடிய எஸ்.பி.பி சாரையும் அதே பெயரில் தான் அழைக்கிறோம். என்ன செய்வது? இதற்கு முன்னர் பாடியிருக்கேன் என்பது அத்தனை பெரிய குற்றமா?
நான் இதற்கு முன் பாடியிருக்கிறேன் என்பதை என்றுமே மறைத்ததில்லை. என்னுடைய பேஸ்புக் பக்கத்தில் என்னைப் பற்றிய முழு விபரங்கள் இப்போதும் உள்ளது. மறைக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்திருந்தால் அதையெல்லாம் என்றோ அழித்திருப்பேன். தவிர என்னுடன் பாடியவர்கள், போட்டியிட்டவர்கள் அனைவருக்கும் நான் பாடகன் என்று தெரியும். அவர்கள் ஒருவரும் இதுவரை எனக்கு எதிராக எதுவும் சொன்னதே இல்லை. தமிழகத்தின் பிரம்மாண்டக் குரல் தேடல் என்பதால் முன்பு பாடியிருக்கவே கூடாது என்று விதிமுறையில் இல்லை.
என்னுடைய இந்தப் பாதையும் பயணமும் அத்தனை எளிதாக நான் கடந்து வந்ததல்ல.. பத்து வருட போராட்டத்துக்குப் பின் ஒரு சிறிய நம்பிக்கையின் ஒளி என் பாதையில் தென்பட்ட போது அதை நான் பின் தொடர்ந்தேன். அது தான் இந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி. இந்த வெற்றியின் சந்தோஷத்தை உணர முடியாமல் மீண்டும் புறப்பட்ட இடத்துக்கே வந்து நிற்பது போல் உள்ளது. இப்போது நிம்மதி இழந்து நிற்கிறேன். ஏன் நான் ஜெயித்தேன்? எதற்காக இந்த வெற்றி? என்று எழுதியிருக்கிறார்.
நன்றி: தினமலர்
Quote:
லீடு ரோலில் மட்டுமே நடிப்பேன்! - சந்திரா லட்சுமண் -
ஒரு டிவி சீரியல் ஆரம்பிப்பது முதல் முடிகிற வரை அதில் நான் பயணிக்க வேண்டும் என்பதுதான் எனது ஆசையே. அதனால்தான் லீடு ரோல்களில் மட்டுமே நடிப்பது என்கிற கொள்கையை தொடர்ந்து நான் கடைபிடித்து வருகிறேன் என்கிறார் சின்னத்திரை நடிகை சந்திரா லட்சுமண். தினமலர் இணையதளத்திற்காக அவர் அளித்த பேட்டி..
மலையாள சீரியல்களில் நடித்து வந்த நான் தேவயானி நடித்த கோலங்கள் தொடரில்தான் தமிழுக்கு வந்தேன். முதல் தொடரிலேயே நல்லதொரு வேடத்தில் நடித்ததால் அந்த தொடரே என்னை பிரபலப்படுத்தியது. அதையடுத்து வசந்தம், மகள், சொந்த பந்தம் தொடர்களில் நடித்த நான் இப்போது பாசமலர் தொடரில் நடித்து வருகிறேன்.
இந்த பாசமலர் தொடரில் லீடு ரோலில் நடிக்கிறேன். இந்த சீரியலில் பாசத்துக்காக நிறைய விசயங்களை விட்டுக்கொடுத்து நடிப்பதால் எனது கேரக்டருக்கான வரவேற்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும், நான் சிலரைப்போன்று பாசிட்டீவ், நெகடீவ் என இரண்டுவிதமான வேடங்களிலும் நடிப்பதில்லை. பாசிட்டீவ் வேடங்களில் மட்டுமே நடிக்கிறேன்.
காரணம், எனது முகத்துக்கு செண்டிமென்ட் வேடங்கள்தான் செட்டாகும். அதனால்தான் நடிப்பில் வித்தியாசம் காட்டவேண்டும் என்பதற்காக நான் நெகடீவ் வேடங்களை ஏற்பதில்லை. அதேபோல், சிறிய வேடங்களிலும் நடிப்பதில்லை. கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்த லீடு ரோலில் மட்டுமே நடிக்கிறேன். அதனால்தான் தெலுங்கில் நடித்து வந்த மமதலா கோவேடா தொடருக்குப்பிறகு இப்போது தமிழில் பாசமலர் தொடரில் மட்டுமே நடிக்கிறேன். சில சீரியல்களில் சிறிய கேரக்டர்களில் நடிக்க வேண்டும் என்று அழைத்தபோது மறுத்து விட்டேன்.
http://img1.dinamalar.com/cini//CNew...5027000000.jpg
இதற்கு காரணம் ஒரு சீரியல் தொடங்கியதில் இருந்து முடிகிற வரைக்கும் அதில் நான் பயணிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். இடையில் வந்து இடையில் போவது மாதிரியான கேரக்டர்களில் நடிப்பதில் எனக்கு ஆர்வம் ஏற்பட்டதேயில்லை என்று கூறும் சந்திரா லட்சுமண், ஏற்கனவே மனசெல்லாம், ஏப்ரல் மாதத்திலே, தில்லாலங்கடி ஆகிய படங்களிலும் நடித்திருப்பவர், நல்ல வெயிட்டான வேடங்கள் கிடைத்தால் சினிமாவிலும் நடிப்பாராம். ரோலில் மட்டுமே நடிப்பேன்! - சந்திரா லட்சுமண்
நன்றி: தினமலர்
Quote:
அரவிந்தாக்ஷ்ன் ஆரோகணம் படத்தில் பின்னணி பாடினார்! -லட்சுமிராமகிருஷ்ணன் -
விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் 5வது சீசனின் இறுதி முடிவு சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அதில் ஆன்ந்த் அரவிந்தாக்ஷ்ன் என்பவர் சூப்பர் சிங்கர் டைட்டில் மற்றும் 70 லட்சம் மதிப்புள்ள வீடும் பரிசாக பெற்றார். ஆனால் அவருக்கு முதல் பரிசு கொடுத்தது தவறு என்று கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. அதோடு, புதுமுக பாடகர் பாடகிகள் பங்கேற்றும் அந்த நிகழ்ச்சியில் ஏற்கனவே சினிமாவில் பின்னணி பாடிய அரவிந்தாக்ஷ்னை பாட வைத்து அவருக்கு பரிசு கொடுத்ததை ஏற்க முடியாது என தொடர்ந்து விஜய் டிவிக்கு எதிரான விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.
இந்த நிலையில், என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா என்று விஜய் டிவியினால் கலாய்க்கப்பட்ட நடிகை லட்சுமிராமகிருஷ்ணன் இதுபற்றி கூறுகையில், விஜய் டிவியில் முதல் பரிசு பெற்றுள்ள அரவிந்தாக்ஷ்ன் நான் இயக்கிய ஆரோகணம் படத்தில் ஒரு பாடல் பாடியிருக்கிறார். அந்த வகையில், அவர் ஒரு தொழில்முறை போட்டியாளர் ஆவார். அறிமுக பாடகர்களே பங்கேற்கும் இந்த நிகழ்ச்சியில் ஒரு பின்னணி பாடகரை போட்டியாளராக்கியதை ஏற்க முடியாது.
http://img1.dinamalar.com/cini//CNew...0206000000.jpg
அதோடு, புதியவர்களுடன் அனுபவசாலிகள் போட்டி போடும்போது புதியவர்கள்தானே பாதிக்கப்படுவார்கள். நம்பி அவர்களது ஷோக்களை பார்க்கிற மக்களை இப்படி ஏமாற்றலாமா? என்று தனது கருத்தினை பதிவு செய்துள்ள லட்சுமி ராமகிருஷ்ணன், அந்த நிகழ்ச்சி புதியவர்களுக்கானது என்பது தெரியாமல் நான்கூட அரவிந்தாக்ஷ்னுக்கு வாழ்த்து சொல்லிவிட்டேன் என்கிறார்.
நன்றி: தினமலர்
Samayal killadi Nalini.
http://cinema.dinamalar.com/tamil-tv...in-Cooking.htm
Nandri.Dinamalar.