டியர் வாசுதேவன் சார்,
நடிகர்திலகத்தின் சிலை திறப்பு விழா நிகழ்ச்சிகள் பற்றிய பதிவு உண்மையிலேயே உணர்ச்சிப்பூர்வமான ஒன்று. பதிவிற்கு நன்றி.
டியர் வாசுதேவன் சார்,
நடிகர்திலகத்தின் சிலை திறப்பு விழா நிகழ்ச்சிகள் பற்றிய பதிவு உண்மையிலேயே உணர்ச்சிப்பூர்வமான ஒன்று. பதிவிற்கு நன்றி.
டியர் பம்மலார்,
சித்தூர் ராணி பத்மினி, என்னைப்போல் ஒருவன் வெளியீட்டு விளம்பரப் பதிவு சிறப்பு
சிக்கலார் பற்றிய பதிவிற்கு மனந்திறந்த பாராட்டுகளை வழங்கிய கர்ர்த்திக், பெயரையே சிக்கலார் என்று எழுதிக் கொண்ட சுவாமி, பதிவின் வாசங்களை குறிப்பிட்டு உணர்ச்சி வசப்பட்ட வாசு ஆகிய அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி!
அண்மையில்தான் உறுப்பினராக சேர்ந்தாலும் பதிவ்களில் தூள் கிளப்பும் வினோத் அவர்களே, என் பெயரையும் குறிப்பிட்டு நன்றி தெரிவித்தற்கு மிக்க நன்றி!
அன்புடன்
தென்னாடுடைய சிவாஜியே போற்றி !
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !
http://i1110.photobucket.com/albums/...ar/Sivan-1.jpg
பக்திப்பெருக்கில்,
பம்மலார்.
வேருக்கு நீரூற்றி விளைக்கின்ற தலைவா !
எங்கள் எல்லோரையும் காத்தருள் இறைவா !
http://i1110.photobucket.com/albums/...aar/Sivan1.jpg
"திருவிளையாடல்(1965)" திரைக்காவியத்தில்
நம் பெருமானும், தருமியும் [Q & A]
http://www.youtube.com/watch?v=S5xP4UZTnTs
நம் பெருமானும், நக்கீரரும்
http://www.youtube.com/watch?v=K8W-ViRl5iA
"திருவிளையாடல்(1965)" முழுத்திரைக்காவியம்
http://www.youtube.com/watch?v=AIbo_...eature=related
பக்தியுடன்,
பம்மலார்.
லேட்டஸ்ட்
மீண்டும் 'குமுதம்' [1.8.2012] : மீண்டும் இளைய திலகம் [Face-to-Face]
http://i1110.photobucket.com/albums/...GEDC6164-1.jpg
http://i1110.photobucket.com/albums/...GEDC6165-1.jpg
பக்தியுடன்,
பம்மலார்.
http://i1094.photobucket.com/albums/.../GEDC4205a.jpg
http://i1094.photobucket.com/albums/.../GEDC4218a.jpg
மேற்காணும் விளம்பரப் படங்களுக்கு நன்றி பம்மலார்.
http://i872.photobucket.com/albums/a...kiReviewfw.jpg
இவையெல்லாம் சென்ற ஆண்டு ஜூலைத் திங்கள் படங்களைப் பற்றி விவாதிக்கும் போது பதிவுகளில் இடம் பெற்றவை.
இவற்றைத் தொடர்ந்து நம்முடைய ஹப்பர்கள் பம்மலாருக்கு தந்திருந்த புகழாரம்
ref: http://www.mayyam.com/talk/showthrea...-Part-8/page75Quote:
While looking at the amazing pace in which our NT thread is moving on, i felt this.....
Majority of contribution for most of the threads in this hub comes from youngsters & tech savvy's whereas in our case, majority of contribution comes from seniors, which I'm sure is the pulse of this threads success. Now, that itself is an achievement in its own order, isn't it ??
hubber: rangan_08
30th July 2011, 06:12 PM
இதற்கு அடியேனுடைய பதில் பதிவு
நண்பர் கார்த்திக் கூறியிருந்ததுQuote:
Dear Mohan,
Thank you for the complements.
..
Partly true. But I personally feel, it is because of youngsters like Saradha, Karthik, Murali Sriniivas, Parthasarathy, KrishnaG, Sathish, yourself, Balakrishnan, and ABOVE ALL THE ONE AND ONLY PAMMAL SWAMINATHAN, and many others, that this thread is going great heights. That is the strength of NT. Some of the names mentioned here might be old in their age but they find place in youngsters as they are young in their heart and passion for NT.
Dear Balakrishnan,
Kindly can you try to provide the translation for the telugu text?
30th July 2011, 06:21 PMQuote:
பம்மலார் சார் மற்றும் ராகவேந்தர் சார்,
ஆரம்பமாகிவிட்டது அடுத்த அட்டகாசம். சாதாரண படங்களுக்கே விளம்பர அணிவகுப்பைத்தந்து அசத்துவீர்கள். திருவிளையாடலோ சாதனைப்படம், வெள்ளிவிழாப்படம். கேட்கணுமா?. ஒரே அதகளம்தான் போங்க.
உண்மையில் நினைக்க நினைக்க ஆச்சரியமாக வே இருக்கிறது. நமக்கு நினைவுதெரிந்த நாள் முதல், இந்த விளம்பரங்களை தினத்தாள்களில் வெளியாகும்போது பார்த்ததோடு சரி. ஆனால் அவற்றையெல்லாம் அப்போது பத்திரப்படுத்தவில்லையே என்று பலமுறை வருந்தியதுண்டு. இப்படி ஒரு கனினி யுகம் வெருமென்றோ, அதிலும் கூட கிடைத்தற்கரிய இவ்விளம்பரங்களைப் பத்திரப்படுத்தி வைத்து நீங்களெல்லாம் அவற்றை மீண்டும் காண்ச்செய்வீர்கள் என்றோ கனவிலும் நினைத்ததில்லை.
இவற்றை இங்கே பதிவேற்றம் செய்வதில் எவ்வளவு சிரமங்கள், எத்தனை ஸ்டெப்கள் இருக்கின்றன என்பதை அறிய முடிகிறது. இருந்தபோதிலும், நடிகர்திலகத்தின் புகழ் பரப்பும் சேவைக்கு முன்னால் இந்த சிரமங்களெல்லாம் துச்சம் என்று எண்ணி செயல்படும் உங்களைப்பாராட்ட வார்த்தைகளே இல்லை. இது வெறும் சம்பிரதாயச்சொல் அல்ல.
அதிலும் 'துளி விஷம்' வெளிவந்த காலத்திலெல்லாம் இத்திரியில் ப்ங்கேற்கும் நாம் யாருமே பிறந்திருக்கவில்லை. அப்போது வெளியான பத்திரிகை விளம்பரங்களை இப்போது பார்க்கும் வாய்ப்புக் கிடைப்பது என்பது உண்மையிலேயே ஒரு த்ரில்லிங்கான அனுபவம்.
இதுவரை ஒரு சிலரிடத்தில் மட்டுமே பாதுகாக்கப்பட்டு வந்த இந்த ஆவணங்கள், இப்போது எண்ணற்ற நடிகர்திலகத்தின் ரசிகர்கள் கைகளில் தவழ்ந்துகொண்டிருக்கின்றன. அவரவர்களும் கணினி, சிடி, ப்ளாஷ் மெமோரி என பல வகையிலும் பத்திரப்படுத்தி வருகின்றனர். இந்தப்பெருமைகள் அனைத்தும் உங்களுக்கே சொந்தம்.
ஜூலை இறுதி வாரத்திலேயே நடிகர்திலகம் - ஏ.பி.நாகராஜன் கூட்டணியில் மூன்று முத்தான படங்கள் வெளிவந்திருப்பது அபாரம். தேதிவாரியாக நாம் கொண்டாடுவதால் வருட வாரியாக உல்டாவாகி விட்டது என்பது இன்னொரு சுவாரஸ்யம். முதலில் 1968, பின்னர் 1967, இப்போது 1965.
உங்கள் சேவையைப்பார்க்கும்போது, ஒவ்வொரு நாளும் நமதி திரிக்கு விஜயம் செய்யும் நேரம் 'இன்றைக்கு நடிகர்திலகத்தின் எந்தப்படத்தின் வெளியீட்டு நாள்?' என்ற ஆவலுடன் திறக்கின்றோம். நீங்களும் எங்களை ஏமாற்றாமல் அள்ளி அள்ளி வழங்குகிறீர்கள்.
இந்தச்சேவைக்காக உலகெங்கிலும் உள்ள நடிகர்திலகத்தின் ரசிகர்கள் உங்களை வாழ்த்தியவண்ணம் இருப்பார்கள்.
mr_karthik
இதற்கு அடியேனுடைய பதில்
ref: http://www.mayyam.com/talk/showthrea...-Part-8/page76Quote:
டியர் கார்த்திக
தங்களுடைய பாராட்டுக்கு உளமார்ந்த நன்றிகள்.
தங்களுடைய பதிவுக்கு சற்று நீண்ட துணைப் பதிவினைத் தர விழைகின்றேன்.
அதற்கு முன்னர் நாம் அனைவரும் ஒரு சேர ஓ போட வேண்டியது ஸ்வாமிக்குத் தான். அவருடைய இத்தனை இளம் வயதில் அவர் இந்த அளவிற்கு ஆவணங்களை சேமித்து வைத்திருக்கிறார் என்றால் முதலில் அவர் தான் நடிகர் திலகத்தின் தீவிரமான ரசிகர் என்று நான் எண்ணுகிறேன், அதே போல் அவரைப் போல் ரசிகரை அடைய நடிகர் திலகம் பெரும் பேறு பெற்றுள்ளார் என்றால் அது மிகையில்லை. குறிப்பாக நடிகர் திலகத்தின் ரசிகர்களைப் பொறுத்த வரையில் ஒவ்வொருவரும் தம் சொந்தப் பொருள் உடல் ஆவி அனைத்தையும் அவருக்கே அர்ப்பணித்து விட்டனர். அதற்கு முழு உதாரணம் ஸ்வாமி.
ஆவணங்களைப் பொறுத்த மட்டில் தாங்கள் கூறியது முற்றிலும் உண்மை. அதுவும் எங்களைப் போன்ற பிராயத்தினர் அந்தக் காலங்களில் மிகுந்த சிரமத்திற்கிடையில் தான் திரைப் படங்களைக் காணவே அனுமதி பெறுவோம். சினிமாவைப் பற்றிப் பேசினாலே ஏச்சும் பேச்சும் பலர் வீட்டில் கண்டிருப்பர். அப்படிப் பட்ட ஒரு கால கட்டத்தில் அதுவும் நாங்களெல்லாம் சராசரிக்கு உட்பட்ட பொருளாதார அடிப்படையில் அமைந்த வகுப்பினர். அதனால் திரைப்படம் பார்க்கவே பொருளாதாரத்தில் சிக்கல். கிடைக்கும் சில்லரைகளை சேர்த்து வைத்து அதை நடிகர் திலகம் படம் பார்க்க வைத்திருப்போம். நாம் சாப்பிடுகிறோமோ இல்லையோ, அவர் படம் பார்க்க வேண்டும் . சில சமயம் சில்லரை மிச்சமிருந்தால் பாட்டு புத்தகம் வாங்கி விடுவோ்ம். செய்தித் தாள் பருவ இதழ் சேமிப்பு என்பது மிகுந்த சிரமம். தேவைப் படும் தாளை மட்டும் தனியே வெட்டி எடுத்து வைக்க வேண்டும். அவ்வாறு கஷ்டப் பட்டு சேர்த்தது நிறைய. ஆனால் ஒரு கால கட்டத்தில் இடப் பற்றாக்குறை உள்ளிட்ட பல காரணங்களினால் கணிசமான ஆவணங்களை இழந்தேன். அப்படியும் விடாப்பிடியாக சேர்த்து வைத்தவை ஓரளவு. அவை இன்று நமக்கு உதவுகின்றன. இன்னோரு விஷயம், என் பிராயத்தினர் பெரும் பாலானோர், தாங்கள் அப்படி சேர்த்து வைத்த ஆவணங்களை, யாருக்கும் தர மாட்டார்கள், நான் உட்பட. அன்றைய கால கட்டத்தில் அது வருத்தத்திற்குரிய விஷயமாக இருந்தாலும் இன்று அவை வெளியுலகத்தினைப் பார்க்க உதவுகின்றன என்பதை எண்ணும் போது இன்றைக்கு பெருமையாக உள்ளது. ஒரு வேளை நடிகர் திலகம் மறைவுக்குப் பிறகு பல மடங்கு பெரியதாக விஸ்வரூபம் எடுப்பார் என்பதற்கான சான்றாக இவை திகழ்கின்றன என்பதும் ஓர் எண்ணம்.
இன்னும் நிறைய என்னிடம் இல்லையே என்பதே என் வருத்தம்.
மற்றபடி இருக்கும் ஆவணங்களை நம் அனைவரிடமும் பகிர்ந்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சியே.
நன்றியுடன்
இவையெல்லாம் நினைவூட்டலுக்காகத் தான். இது போல் நமது நண்பர்கள் அனைவரிடமும் ஒரு சேர பாராட்டுப் பெற்றவர் நமது ஸ்வாமி...
டியர் ராகவேந்திரன் சார்,
அடியேன் செய்த சிறுசேவையை மிகப் பெரிய முறையில் தொடர்ந்து அங்கீகரித்துக் கொண்டிருக்கும் தங்களின் உயர்ந்த உள்ளத்துக்கு எனது உச்சமான நன்றிகள்..! தங்களைப் போன்றே அன்றும்-இன்றும் இந்த எளியவனைப் பாராட்டி ஊக்குவித்துக் கொண்டிருக்கும் ஒவ்வொருவருக்கும் எனது இதயங்கனிந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்..!
நமது நடிகர் திலகம் திரிக்குத் தாங்கள், பெருந்தன்மையோடும், தொண்டுள்ளத்தோடும் அளப்பரிய பங்களிப்பினை தொடர்ந்து நல்கி வருகிறீர்கள், வாழ்க தங்களின் திருப்பணியாகிய திரிப்பணி..! நான் ஏற்கனவே குறிப்பிட்டது போல் வாசுதேவன் சாரும், தாங்களும் நமது திரியின் இரு கண்கள்..!
நமது நடிகர் திலகம் திரியின் மெகா வெற்றியை தொடர்ந்து புள்ளிவிவரங்களோடு பறைசாற்றி வரும் தங்களுக்கும், சேவை மனப்பான்மையுடன் இங்கே பங்களிப்புகளை நல்கி வரும் அனைவருக்கும், பாசத்துக்குரிய பார்வையாளர்களுக்கும், மரியாதைக்குரிய மாடரேட்டர்களுக்கும் நமது இதயபூர்வமான நன்றிகள்..!
எல்லாப் பெருமையும், புகழும் நமது இதயதெய்வம் நடிகர் திலகத்துக்கே..!
பாசப்பெருக்கில்,
என்றென்றும் கலைதெய்வத்தின் புகழ்பாடும் குயில்,
பம்மல் ஆர். சுவாமிநாதன்.
டியர் mr_karthik,
அருமை ! அருமை ! அருமை !
சற்றேறக்குறைய 40 வருடங்களுக்கு முன் நடைபெற்ற வெள்ளித்திரை நட்சத்திர கிரிக்கெட் மேட்ச்சுக்கு, தாங்கள் இன்று [31.7.2012] கமெண்டரி [பதிவு] கொடுத்தது,
அருமை ! அருமை! அருமை !
தங்களின் அபார நினைவாற்றலுக்கு எனது அன்பான பாராட்டுக்கள்..!
நமது தலைவர் பேட்டிங் செய்ய வருகை புரிகையில், நிகழ்ந்தவற்றை தாங்கள் எழுதியிருந்தவிதம் ரொம்பப் பிரமாதம். [எனது இன்னொரு தலைவரும் [லிட்டில் மாஸ்டர்] பார்வையாளராக வந்திருந்தார் என்ற செய்தி கொம்புத்தேனாய் இனித்தது].
தங்கள் எழுத்தில் ஹியூமருக்கு என்றுமே பஞ்சமிருந்ததில்லை..!
அபூர்வமான பதிவுக்கு அபரிமிதமான நன்றிகள், சார்..!
அன்புடன்,
பம்மலார்.
அன்பு பம்மலார் சார்,
பிள்ளைக்கு தாய் பாசத்துடன் சோறு ஊட்டும் போது அளவு கடந்த அன்பினால் அந்தப் பிள்ளை பதிலுக்கு ஒரு முறையாவது தனது தாய்க்கு ஒருவாய் சோறு ஊட்டி மகிழ்வதைப் போல அள்ளி அள்ளித் தந்த தங்களுக்கு ஒருவாய் சோறு போல லிட்டில் மாஸ்டரைத் தந்தேன்.நீங்கள் பதிலுக்கு தாய் போல
மாணிக்கத்தைத் தந்து மகிழ்வூட்டி விட்டீர்கள். பல சவால்களை சமாளித்த திரியின் மாணிக்கமான தாங்கள் 'சவாலே சமாளி' மாணிக்கத்தைப் அடியேனுக்கு பரிசாக அளித்திருப்பது அழகு.
சிலை திறப்பு விழா பதிவுக்கான தங்கள் அன்புப் பாராட்டிற்கு மிக்க சந்தோஷமடைகிறேன்.
திருவிளையாடல் புரியும் நம் சிவபெருமானார் நிழற்படம் அம்சம். அழகாக அருள் பாலிக்கிறார். திருவிளையாடல் வீடியோக்களும் அருமை!
மொத்தப் பதிவுகளுக்கும் அன்பு நன்றிகள்.
டியர் வினோத் சார்,
வாழ்த்துக்கள். மக்கள் திலகம் திரி பாகம் இரண்டு இருநூறாவது பக்கத்தை தொட்டிருப்பது மட்டற்ற மகிழ்ச்சியை அளிக்கிறது. அதுவும் தாங்கள் திரிக்கு வந்தது முதல் விர்ரென திரி ராக்கெட் வேகத்தில் பறக்க ஆரம்பித்து விட்டது. காணக்கிடைக்காத போட்டோக்களும், பல்வேறு அற்புத பதிவுகளும் தங்கள் மூலமாகவும், மக்கள் திலகத்தின் சாதனை விவரங்கள், விளம்பர கட்டிங்குகள் நண்பர் ராஜாராம் மூலமாகவும் திரி பெற்று வெற்றி பவனி வருகிறது.
திரியின் வெறிக்காக பாடுபட்டு வரும் தாங்கள், இருதிலகங்களின் ரசிகர்களும் ஒற்றுமையோடு செயல்பட்டு அந்த அற்புத மனிதர்களின் புகழை உலகம் முழுதும் பரவச் செய்யவேண்டும் என்ற உயரிய கொள்கையை கொண்ட நீங்கள் மென்மேலும் வெற்றிகளைக் குவித்து மக்கள் திலகம் திரியை மேலும் மெருகேற்றப் போவது உறுதி. திரியின் பங்களிப்பில் என்னையும் மறக்காமல் குறிப்பிட்டிருந்தது தங்கள் அன்பு உள்ளத்தைப் பறைசாற்றுகிறது. அதற்காக என் ஆத்மார்த்தமான நன்றிகள்.
http://i49.tinypic.com/s1p4ev.jpg
அன்புள்ள இனிய நண்பர் திரு . வாசு தேவன் சார்
தங்களின் பாராட்டுக்கு நன்றி . 1972 பொம்மை இதழிலிருந்து .... நடிகர் திலகம் கட்டுரை .. வசந்த மாளிகை பட செய்திகள் .... உங்கள் பார்வைக்கு .
அன்புடன்
esvee
திரைக்காவிய முதல் வெளியீட்டு விளம்பரங்கள் : 9
நடிகர் திலகத்தின் 21வது காவியம்
முதல் தேதி [வெளியான தேதி : 12.3.1955]
பொக்கிஷாதி பொக்கிஷம்
முதல் வெளியீட்டு விளம்பரம் : தென்றல் திரை : 15.3.1955
http://i1110.photobucket.com/albums/...GEDC6168-1.jpg
பக்தியுடன்,
பம்மலார்.
டியர் esvee சார்,
"ஞான ஒளி" விளம்பரம், "பிரேம்நகர் & வசந்த மாளிகை" புகைப்படங்கள் மற்றும் செய்திகள், 'புதுமுகங்கள் வர வேண்டும்' என்ற நடிகர் திலகத்தின் கருத்துரை என ஆவண வரிசை அமர்க்களம்..! பாராட்டுக்கள்..!
[தேசிய திலகத்தின் கொடைக்கரம், யுத்த நிதிக்கு ரூ.10000/- அளித்துள்ள செய்தி ரியலி சூப்பர் நியூஸ்..!]
தொடர்ந்து தூள் கிளப்புங்கள்..!
அன்புடன்,
பம்மலார்.
"முதல் தேதி" சிறப்புப் பாடல்
கலைவாணரின் கலக்கல் குரலில்
'ஒண்ணுலே இருந்து இருபது வரைக்கும் கொண்டாட்டம்...'
http://www.youtube.com/watch?v=7iyKReUPxNQ
பக்தியுடன்,
பம்மலார்.
டியர் வாசுதேவன் சார்,
தங்களின் அபரிமிதமான அன்பிற்கும், அளவு கடந்த பாசத்திற்கும் மீண்டும் மீண்டும் தலைவணங்குகிறேன்..!
தங்களின் குதூகலமான பாராட்டுக்கள் என் உள்ளத்தைக் குளிர்வித்தது. தங்களுக்கு எனது குளிர்ச்சியான நன்றிகள்..!
அன்புடன்,
பம்மலார்.
http://t1.gstatic.com/images?q=tbn:A...iEG5ZhxhS30rw1
அன்பு கார்த்திக் சார்,
1973-இல் நடைபெற்ற நட்சத்திர கிரிக்கெட் விழாவை இத்தனை வருடங்கள் கழித்து புத்தம்புதிய பொலிவுடன் தங்கள் வர்ணனை மூலம் வெளுத்து வாங்கியுள்ளீர்கள்.தெளிந்த நீரோடை போன்ற எளிமையான தங்கள் நடை எளிய புரிதல் நடையிலேயே இருப்பதால் படிக்க அருமையாக உள்ளது. அதுவும் ஸ்டேடியத்தை நம்மவர் வலம் வந்த அழகை வர்ணித்திருப்பது தனிச் சிறப்பு. கட்டுரை படித்து முடித்தவுடன் ஏதோ அந்தக் காலத்தில் பயணித்தது போன்ற ஒர் உணர்வு. அற்புதமான வர்ணனைக் கட்டுரைக்கு மனமுவந்த பாராட்டுக்கள், நன்றிகள்.
டியர் ராகவேந்திரன் சார்,
நமது திரி நல்ல வரவேற்பை பெற்றுவருவதை தாங்கள் புள்ளிவிவரங்களுடன் பதிவுகளைத் தருவது மிக்க சந்தோஷமளிக்கிறது. தில்லானா மோகனாம்பாளின் நிழற்படங்களை சரியான நேரத்தில் பதிப்பித்து அசத்தி விட்டீர்கள். அன்பு பம்மலாரின் அளப்பரிய சேவைகளை தாங்கள் சுட்டி காட்டியுள்ளது நிச்சயமாக பாராட்டுக்குரியது. ஏற்றுக்கொள்ளக் கூடியதும் கூட. உங்கள் கருத்தை அப்படியே நான் வழிமொழிகிறேன்.
'திருவிளையாடல்' நூறாவது நாள் மற்றும் வெள்ளிவிழாக் கட்டிங்குகள் கண்களுக்கும், கருத்துக்கும் விருந்து.
'திருவிளையாடல்' கல்கி விமர்சனமும் அருமை.
டியர் வினோத் சார்,
நடிகர் திலகத்தின் 'ஞானஒளி' காவியம் தான் அவர் நடித்த காவியங்களிலேயே எனக்கு நெம்பர் 1.
அப்படிப்பட்ட காவியத்தின் பொம்மை இதழ் விளம்பர நிழற்படத்தைத் தந்து உள்ளம் குளிரச் செய்து விட்டீர்கள். அதற்காக என் வாழ்நாள் நன்றிகள் தங்களுக்கு.
இறைவனாரின் இனிய நிழற்படங்கள்.
http://i.ytimg.com/vi/EO2CuqL4rQ8/0.jpg
http://i43.tinypic.com/ok4qp5.jpg
http://i41.tinypic.com/wjunti.jpg
http://i44.tinypic.com/bdllc8.jpg
http://i.ytimg.com/vi/prX9aA3jvrU/0.jpg
http://i.ytimg.com/vi/RJhyuTQb0hY/0.jpg
http://i1098.photobucket.com/albums/...ayadal0006.jpg
http://i1098.photobucket.com/albums/...ayadal0008.jpg
http://padamhosting.com/out.php/i126...h54m44s186.png
அன்புடன்,
வாசுதேவன்.
நடிகர்திலகம் சிவாஜி - வெறும் மேக்கப் டெஸ்ட் மட்டுமே எடுத்து, படத்தில் இடம்பெறாத சில வேடங்கள்.
http://i1234.photobucket.com/albums/...15269614_n.jpg
thriuvalluvar - this wud've been interesting..
appar?
ilangovadigal?
டியர் வாசுதேவன் சார், றாகவேந்திரன் சார், பம்மலார் சார், திருவிளையாடல் திரைப்படம் குறித்த பதிவுகள் கலக்கல்
நன்றி.
மறைமலை அடிகளா? அவர் சமகாலத்தவர் தானே.
சிவாஜி எனும் மூன்றெழுத்து
திவாகர்
சிவாஜி எனும் மூன்றெழுத்துத் தமிழ்க் கலைஞன். இந்தக் கலைஞனைப் பற்றி எப்படி எழுதினால் அவனுக்குப் பெருமை சேர்க்கும் என்பதாக எத்தனையோ எழுத்தாளர்களால் போற்றிகள் பாடப்பட்டவன். இப்படிப்பட்ட கலைஞன் ஒருவன் ஒருவேளை மேற்கத்தியப் படங்கள் மூலம் வெளிப்ப்ட்டிருந்தால் ஆஸ்கார் விருதுகள் பயனற்றவையாக தென்பட்டிருக்கும். அந்நியர் ஆதிக்கத்திலிருந்து விடுபட்டு மீண்டு கொண்டிருந்த இந்தியாவின் தென் எல்லையில் இந்த நட்சத்திரம் ஒளிவிட்டுக் கொண்டிருந்தது நாம் செய்த அதிர்ஷ்டம்.
தமிழ் எனும் மூன்றெழுத்து இந்தக் கலைஞனை வெளியே விடாமல் பாசம், நேசம், கருணை, அன்பு, பக்தி, பெருமை எனும் மூன்றெழுத்துகள் வலையில் கட்டிப்போட்டு தன்னுடனேயே வைத்துக்கொண்டு விட்டது.
அவர் இறுதிக்காலக் கட்டங்களில் அவரைச் சந்திக்கும் ஒரு அருமையான வாய்ப்பு, பூக்கள் எல்லாம் தானாகவே முன்வந்து தேனைச் சொரிந்ததோடு அதை வாயிலும் ஊட்டக் கிட்டிய சந்தர்ப்பம் ஒன்று, அடியேனுக்கு வாய்த்தது. ஆமாம். சிவாஜி ஒரு நிகழ்ச்சிக்காக விசாகப்பட்டினம் வந்தார். அடுத்தநாள் காலை நானும் திரு சம்பத் அவர்களும் பத்து நிமிட அப்பாயிண்ட்மெண்ட் கிடைக்கப்பெற்று அவரைச் சந்திக்க சென்றது வாழ்க்கையில் மறக்கமுடியாத நிகழ்ச்சியாக மாறிவிட்டது என்பது என்னவோ வாஸ்தவம்தான்.
பத்து நிமிஷம் என்பது ஒரு மணி நேரத்துக்கும் மேலாகச் சென்றதும் அவரோடு பல விஷயங்களைப் பகிர்ந்து கொண்டதும் நாங்கள் மறக்க முடியாதவைதான். காமராஜர் அரசியலிலிருந்து மேயராக இருந்த ஸ்டாலின் சென்னை ஆட்சி வரை (அவர் இல்லத்து காஃபி பலரால் புகழப்படுகின்றது என்பது உட்பட) அலசினார். எனக்கு மிகவும் பிடித்த அவர் படம் புதிய பறவை என்றேன். அவரும் அதையே தனக்கு மிகவும் பிடித்த அவரது படங்களில் ஒன்றாகச் சொன்னார். சென்னை வந்தால் அவர் இல்லத்துக்கு அழைத்தார் (ஒப்புக்காகவோ நிஜமாகவோ, ஆனால் அவர் அழைப்பு எங்களுக்கு மிகப்பெரிய கௌரவமாகத்தான் அந்த வேளையில் பட்டது).
புதிய பறவை, அவர் படங்களில் மிக வித்தியாஸமான படம். இருபத்தோராம் நூற்றாண்டு தமிழ்ப்படத்தை இருபதாம் நூற்றாண்டின் மத்தியிலேயே எடுத்துவிட்டார்கள். ஒவ்வொரு கட்டத்தையும், கோணத்தையும் யோசித்து மிகவும் கஷ்டப்பட்டு எடுத்திருக்கிறார்கள் என்பதை அந்தப் படத்தை மிக உன்னிப்பாகப் பார்த்தவர்கள் சொல்வார்கள். மனைவியைக் கொன்றுவிட்டு ஊரை விட்டு ஓடிவந்தவன் பாத்திரத்தில் வெகு சிறப்பாக நடித்திருப்பார். ஒரு கட்டத்தில் நிம்மதியிழந்த மனநிலையில் அந்த மனிதன் உறங்கவேண்டும். அப்படி உறக்கம் தரும், மன நிம்மதியைக் கொடுப்பவள் ஆறுதலாக அருகே வந்து பாடத் தொடங்குகிறாள்., அந்தப் பாடலில் ஒரு சிலவரிகளைக் கேட்டுக்கொண்டே எப்படி உறங்குவது என்பதை அந்த சில தருணங்களில் சிவாஜி தன் முகபாவனையில் காண்பித்திருப்பார். நாற்காலியில் அப்படியே அமர்ந்து கண்கள் மெல்ல மெல்ல செருக தலை சற்றே பின்னே சாயச் சாய அவர் தூங்குவதாக நடிக்கும் காட்சி அதி அற்புதமானதாகப்பட்டது எனக்கு. தூங்க முடியும், தூங்குவது போல நடிக்கவும் முடியும், ஆனால் தூக்கம் எனும் உணர்வு உண்மையாகவே எப்படி நம்மைத் தழுவுகிறது என்பதை வெறும் முகபாவத்தால் தத்ரூபமாகக் காண்பிக்க முடியுமா.. முடியும் என்று நிரூபித்தவன் அந்தக் கலைஞன். அதே போல அந்தப் படத்தில் வரும் எங்கே நிம்மதி பாடலில் கூட ‘எனது கைகள் மீட்டும்போது வீணை அழுகின்றது, எனது கைகள் தழுவும்போது மலரும் சுடுகின்றது’ என்பதற்கான கட்டத்தில் வித விதமான உணர்ச்சிகளை முகபாவங்களாகக் காட்டும் (அதுவும் ஒரே ஃபிரேமில்) சிவாஜியைப் பார்க்கலாம். அதி அற்புதக் கலைஞன் என்பதில் மிகையே இல்லை.
ஜூலை 21 ஆம் நாள், சிவாஜியின் நினைவுநாளன்று வல்லமை குழுவில் ஒரு கவிதை பார்த்தேன். சட்டென மனதைத் தைத்தது. ’போதும் எழுந்து வா’ என்ற கவிதை, கவிஞர் ருத்ரா 2001 ஆம் ஆண்டு எழுதியதை மறுபதிப்பாக வெளியிட்டார். நான் மேலே சொன்ன புதிய பறவை கருத்தோடு அப்படியே ஒத்துப் போகிறது பாருங்கள். இந்தக் கலைஞன் நிஜமாகவே இறந்துவிட்டானா.. அல்லது இறந்தது போல நடித்துக் காட்டுகிறானா.. இயற்கை இவனை இறக்க வைக்கமுடியுமா.. காலம் இந்தக் கலைஞனைக் காலனிடம் ஒப்படைத்து கடமையைச் செய்து விட்டதாக மார் தட்டிக் கொள்ளமுடியுமா.. தமிழன்னை தன் தலைமகனை தமிழகத்தில் இருந்தது போதும், தன்னுள்ளே அடங்கிவிடு என்று அடக்கிவிட முடியுமா, இந்த அருமையான கலைஞனைக் கொடுத்த கடவுள் இவன் இங்கே இருந்தது போதும், இனி தனக்கு மட்டுமே தன் கலையைக் காண்பிக்கட்டும் என சட்டென மறைத்துவிட முடியுமா..
ஒருவேளை புதிய பறவை படத்தில் அந்த உறக்கக் காட்சி படம் பிடித்தவுடன், ’ஷாட் ஓகே சார்.. பிரமாதமான நடிப்பு, உறங்கியது போல நடித்தது போதும், எழுந்து வாருங்கள்’ என்று சொல்வது போல, இந்தக் கலைஞனை இந்த மீளா உறக்கத்திலிருந்து எழுப்ப முடியுமா….
“மரணத்தை
இது வரை நான் காட்டியது
வெறும் அபிநயம் தான்.
இதோ
உயிர்த்துடிப்பான
ஒரு மரணத்தைப்பார்”..என
அந்த மரண தேவனுக்கு
நடித்துக்காட்ட..உன்
துடிப்பை நிறுத்தினாயா ?
இப்போதும்
அவன் ஏமாந்துதான் போனான்.
இப்போது
நீ நடித்துக்காட்டியது
ஒரு மரணத்தின்
மரணத்தை.
உனக்கு மரணம் இல்லை.
நிஜம் எது ? நிழல் எது ?
“போதும்.எழுந்து வா.”
நடித்தது போதும், இயற்கையாக நடித்திருக்கிறாய், வா, இன்னொரு படத்துக்கு நம் கடமையைச் செய்யப்போகலாம் என்று கூப்பிடத் தோன்றுகிறதே.. என்ன மாயம் செய்தால் இவன் திரும்ப வருவான்.. என்ன மந்திரம் போட்டால் மறுபடியும் இந்த மண்ணுக்கு வந்து இப்படி காலத்தையும் வென்ற படைப்புகளை அள்ளித் தருவான்..
தெரியவில்லைதான். ஆனாலும் சிவாஜி எனும் அந்த மூன்றெழுத்து கலைஞனிடம் ருத்ரா எனும் மூன்றெழுத்துக் கவிஞர் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்லவாவது ஒருமுறை சிவாஜி எழுந்து வரலாம் என்றுதான் தோன்றுகிறது.
அதே சமயத்தில் காலத்தால் மாற்றவே முடியாத இன்னொரு அதிசயம் இந்தக் கலைஞன் என்றும் சொல்லத் தோன்றுகிறது.
Courtesy - vallamai.com
அன்புள்ள பம்மலார் சார், வாசுதேவன் சார், சந்திரசேகர் சார்.... பாராட்டுக்கு நன்றி.
பம்மலார் சார்,
நீங்கள் இரட்டிப்பு மகிழ்ச்சியடைவீர்கள் என்பதற்காகவே இந்திய அணி கிரிக்கெட் வீரர்களை பெயர்களுடன் குறிப்பிட்டிருந்தேன். இன்று தாங்கள் வழங்கியுள்ள 'முதல் தேதி' முதல் வெளியீட்டு விளம்பரமும், 'என்னைப்போல ஒருவன்' மறு வெளியீட்டு விளம்பரமும் அருமை. மிக்க நன்றி
ராகவேந்தர் சார்,
திருவிளையாடல் படத்தைப்பற்றிய மீள்பதிவுகள் அருமை. அதில் எனது பதிவையும் கொண்டுவந்தமைக்கு மிகவும் நன்றி.
வாசுதேவன் சார்,
திருவைளையாடல் ஸ்டில்கள் அற்புதம். பாராட்டுக்கள். தங்கள் மூவரின் கைவண்ணத்தில் திரி ஒளிர்கிறது.
சந்திரசேகர் சார்,
நடிகர்திலகத்தின் மேக்கப் டெஸ்ட் செய்யப்பட்ட அரிய நிழற்படங்கள் அருமை. அவற்றுள் திருவள்ளுவர் வேடம் படத்துக்காக எடுக்கப்பட்டதல்ல, உலகத்தமிழ் மாநாட்டின்போது (1968) சென்னை கடற்கரையில் நடிகர்திலகத்தின் செலவில் திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டபோது அதற்கு மாடலாக போஸ் கொடுத்த ஸ்டில் அது. இதுபற்றி ஏற்கெனவே நமது ராகவேந்தர் சார் பாகம் 7-ல் குறிப்பிட்டிருந்தார்.
வினோத் சார்,
தாங்கள் தந்துள்ள 1965 செய்தித்தாள் பழைய நினைவுகளை கண்முன் கொண்டு வருகிறது. நன்றி. ஒரு தீவிர எம்.ஜி.ஆர். ரசிகர், நடிகர்திலகத்தின் திரியில் இவ்வளவு ஆர்வமாக பங்கு கொள்வது ஆரோக்கியமான நல்ல விஷயம். அதற்கு ஸ்பெஷல் பாராட்டுக்கள்.
டியர் வினோத் (esvee) சார்
ஞான ஒளி விளம்பரம், பிரேம்நகர், வசந்த மாளிகை புகைப்படங்கள் மற்றும் தங்களுடைய பதிவுகள் அருமை. நன்றி.
அன்பு பம்மலார் சார்,
முதல் தேதி அ(இ)ன்று முதல் தேதி காவியத்தின் முதல் வெளியீட்டு விளம்பரம் பதித்து எதிலும் தாங்கள் முதல்வர் என்று மீண்டும் நிரூபித்துள்ளீர்கள். காணக் கிடைக்காத விளம்பரம் அளித்ததற்கு என் முதல் நன்றிகள்.
நடிகர் திலகத்தின் நாயகியர். (ஒரு விஷுவல் தொடர் பதிவு)
(தொடர்-1)
நடிகர் திலகம் அவர்களுடன் ஜோடியாக நடித்து தங்களுக்குப் பெருமையையும், மங்காத புகழையும் சேர்த்துக் கொண்ட நடிகைகள் பலர். தலைவருக்கு இந்த நடிகைதான் சரியான ஜோடி... இந்த நடிகைதான் ராசியான ஜோடி, தலைவர் அழகுக்கேற்ற ஜோடி இவர்தான், தலைவர் நடிப்பிற்கு ஓரளவிற்கு ஈடு கொடுக்கக் கூடிய நடிகை இவர்தான், வயதான ரோல்களின் நடிகர் திலகம் நடித்தால் இவர்தான் ஜோடியாக சரிப்படுவார்... லவ் சீன்களில் தலைவரோடு கலக்கலாக டூயட் பாடி நடிக்க ஏற்றவர் இவர்தான்... என்று பட்டி மன்றம் வைக்கும் அளவிற்கு நம்மிடையே ஆரோக்கிய வாதங்கள் ஏற்படுவதுண்டு. ஏன் வம்பு? தலைவருடன் நடித்த எல்லா ஜோடிகளையும் புகைப்படங்கள் வாயிலாகவும், வீடியோக்கள் வாயிலாகவும் பார்த்து ஒரு முடிவெடுத்து விடலாமே என்ற சீரிய நோக்கில் தொடங்கப் படுவதுதான் இந்த 'நடிகர் திலகத்தின் நாயகிகள்' என்ற புதிய தொடர் பகுதி. வழக்கம் போல இந்த புதிய தொடருக்கும் தங்கள் மேலான ஆதரவு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் நடிகர் திலகத்தின் முதல் கொடுத்து வைத்த ஜோடியான பண்டரிபாய் அவர்களின் நடிகர் திலகத்துடனான நிழற்படத்தையும், நடிகர் திலகத்துடன் அவர் ஜோடி சேர்ந்த பாடல் ஒன்றையும் பதிப்பிக்கிறேன். தங்கள் அனைவரது மேலான கருத்துக்களை ஆவலுடன் எதிர்நோக்குகிறேன். நன்றி!
நடிகர் திலகத்தின் நாயகியர் (1) பண்டரிபாய்
படம்:பராசக்தி
http://i1087.photobucket.com/albums/...1355/1-120.jpg
தலைவருக்கு முதல் காதல் பாடல். தலைவர் படத்தில் பாடாமல் இருந்தாலும் முதல் காதல் டூயட் பாடல் போலல்லவா இது. ரசித்து மகிழ்வோமா?...
"புதுப் பெண்ணின் மனசைத் தொட்டுப் போறவரே!"
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=PGBryGdL0FQ
(ஜோடிகள் தொடரும்)
அன்புடன்,
வாசுதேவன்.
வாசுதேவன் சார்,
புதிய கோணங்களில் புதிய பார்வைகளில் புதிய அணுகுமுறைகளில் புதிய பரிணாமங்களில் நடிகர் திலகம் என்கிற பல்கலைக்கழகத்தின் ஒவ்வொரு துறையிலும் புகுந்து ஆய்வு செய்யும் தங்கள் முயற்சிகளுக்கு நம் அனைவரின் ஆதரவும் என்றென்றும் உண்டு. நடிகர் திலகத்தின் சண்டைக் காட்சிகளைப் பற்றித் தாங்கள் அளித்த பதிவுகள், எப்பேர்ப்பட்ட ஆராய்ச்சி வல்லுநர் பார்வையிலும் படாதது, எப்பேர்ப்பட்ட மேதாவிகளும் அணுகாதது, திரும்பத் திரும்ப தில்லானா மோகனாம்பாள், திருவிளையாடல், தேவர் மகன் என பிரபலமான சில குறிப்பிட்ட படங்களையே சொல்லி நடிகர் திலகத்தை ஒரு குறுகிய வட்டத்துக்குள் சிலர் அடைக்க செய்த முயற்சிகளை முறியடித்து அவர் உண்மையிலேயே பல்துறை வித்தகர் என்பதற்கு மற்றுமோர் சான்றாக என் தம்பி, தங்கை, ராஜா, மற்றும் மக்களால் அதிகம் அறியப் படாத படங்களிலிருந்தும் காட்சிகளை வழங்க உள்ள, நடிகர் திலகத்தின் சண்டைக் காட்சிகளைப் பற்றிய, தங்களுடைய அலசலும் அணுகுமுறையும் பல சிவாஜி ரசிகர்கள் நெஞ்சில் பால் வார்த்தது. . அந்த வரிசையில் இந்த நாயகியர் அணிவகுப்பும் இடம் பெறும் என்பது திண்ணம். அன்றைய தலைமுறை நாயகியர் தொடங்கி வெவ்வேறு தலைமுறை நடிகையருடன் இணையாக நடித்த அவருடைய சிறப்பினை எடுத்தியம்பும் ஆவணமாக இந்தப் பகுதி இடம் பெறும்.
தங்களுக்கு உளமார்ந்த நல்வாழ்த்துக்கள்.
காவியக் காட்சிகள் : 2
பொக்கிஷாதி பொக்கிஷம்
வளர்பிறை(1962)
'பேசும் படம்' இதழிலிருந்து...
[உதவி : நல்லிதயம் திரு. ஜி.மாணிக்கவாசகம்]
இந்த அரிதும் அரிதான விஷுவல் ஆவணப்பதிவை நமது மூத்த சகோதரர் திரு.ராகவேந்திரன் அவர்களுக்கு Dedicate செய்கிறேன்..!
http://i1110.photobucket.com/albums/...GEDC6170-1.jpg
http://i1110.photobucket.com/albums/...GEDC6171-1.jpg
http://i1110.photobucket.com/albums/...GEDC6172-1.jpg
http://i1110.photobucket.com/albums/...GEDC6173-1.jpg
http://i1110.photobucket.com/albums/...GEDC6174-1.jpg
http://i1110.photobucket.com/albums/...GEDC6175-1.jpg
http://i1110.photobucket.com/albums/...GEDC6176-1.jpg
http://i1110.photobucket.com/albums/...GEDC6177-1.jpg
பக்தியுடன்,
பம்மலார்.
[QUOTE=vasudevan31355;917217]நடிகர் திலகத்தின் நாயகிகள். (ஒரு விஷுவல் தொடர் பதிவு)
இந்த 'நடிகர் திலகத்தின் நாயகிகள்' என்ற புதிய தொடர் பகுதி. வழக்கம் போல இந்த புதிய தொடருக்கும் தங்கள் மேலான ஆதரவு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் நடிகர் திலகத்தின் முதல் கொடுத்து வைத்த ஜோடியான பண்டரிபாய் அவர்களின் நடிகர் திலகத்துடனான நிழற்படத்தையும், நடிகர் திலகத்துடன் அவர் ஜோடி சேர்ந்த பாடல் ஒன்றையும் பதிப்பிக்கிறேன். தங்கள் அனைவரது மேலான கருத்துக்களை ஆவலுடன் எதிர்நோக்குகிறேன். நன்றி![/color][/B][/size]
டியர் வாசு சார்,
எப்போதும் போல் தங்களின் முயற்சிகளுக்கு அனைவரின் ஆதரவும் என்றும் உண்டு, ஒரு வேண்டுகோள்! கதாநாயகி சமந்தப்பட்ட படம் மற்றும் வீடியோ உடன் அவர் எத்தனை படங்களில் நம் தலைவருடன் பங்கேற்றார் என்பதையும் குறிப்பிட்டால் நன்று.
டியர் வாசுதேவன் சார்,
தங்களின் இதயபூர்வமான பாராட்டுக்களுக்கு எனது இதயம் நிறைந்த நன்றிகள்..!
இறைவனாரின் இனிய நிழற்படங்கள், ஒரு கோவிலுக்கு சென்று வந்தது போன்ற உணர்வை ஏற்படுத்தியது..!
'நடிகர் திலகத்தின் நாயகியர்' விஷுவல் தொடருக்கு எனது பரிபூரணமான நல்வாழ்த்துக்கள்..! ஆரம்பமே அமர்க்களம்..! அவரது வெள்ளித்திரை முதல் நாயகியான பண்டரிபாய் அவர்களோடு இந்நெடுந்தொடரைத் தாங்கள் துவக்கியிருப்பது மிகப் பொருத்தமான ஒன்று..! தொடர்ந்து அசத்துங்கள்..! கண்டு களிக்க காத்திருக்கிறோம்..!
அன்புடன்,
பம்மலார்.
டியர் mr_karthik,
நான் மகிழ்ச்சி அடைவேன் என்பதற்காக தங்களது நட்சத்திர கிரிக்கெட் பதிவில், வந்திருந்த இந்திய அணிவீரர்களைக் குறிப்பிட்டு எழுதியிருந்ததற்கும், தங்களின் மனமார்ந்த பாராட்டுக்கும் எனது ஸ்பெஷல் நன்றிகள்..!
அன்புடன்,
பம்மலார்.