http://i58.tinypic.com/2hzkf0w.jpg
Printable View
தமிழக அரசியல் வார இதழ் - கேள்வி /பதில்.
http://i62.tinypic.com/2rfy1bk.jpg
இந்த வார ராணி இதழில் வெளியான செய்தி.
http://i58.tinypic.com/mwck0y.jpg
http://i57.tinypic.com/2dujhi9.jpg
Courtesy: Mayil Magazine, Singapore & Malaysia
Tmt. Sheela, Johor Bahru, Malaysia
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
An act of interpretation in Soviet Russia
http://i60.tinypic.com/10faw41.jpg
When former Chief Minister M.G. Ramachandran went to Russia in 1973, V.S. Kamala, who was a student there, played interpreter
Podozhdite pozhaluysta — meaning ‘wait please’, were the first words in Russian uttered by former Chief Minister M.G. Ramachandran in 1973 when he went there for a film festival.
V.S. Kamala, who was a student in Russia learning the language, was the woman who taught him these words. Now, in her seventies, she teaches the language at the Russian Cultural Centre in Chennai. Reminiscing about her days in Russia still brings a smile to her face.
She recalls how curious locals surrounded MGR and asked various questions. “He wanted to answer everyone and asked me how to say ‘wait please’ in their language.”
She was with MGR for a fortnight, teaching and interpreting the foreign language. “When I met MGR face to face at Hotel Russia, I was so enthralled that I could not even tell him my name when he asked,” she says. Ms. Kamala also recalls how MGR called her ‘annam itta kai’ (hands that fed) after she provided him with bread and sambar in the foreign land.
When Ms. Kamala left for Russia, she did not plan on becoming an expert in the language. In 1968, she was working in a stall at a trade fair in Anna Nagar, when officials from the Soviet information department in Chennai, impressed with her work, asked her what she wished to do. “I opted to pursue medicine in Russia and got admission in Lumumba Friendship University,” she says. However, on reaching Russia, she fell sick due to the weather and wanted to return home. “But they asked me to learn the language. So I was there till 1973.”
Since she was reportedly the only Tamil woman in the Soviet learning Russian, Ms. Kamala was roped in as am interpreter for many dignitaries. She has been an interpreter for Ma.Po.Si and Bollywood actor Jitendra, among others. “MGR went around studying the welfare schemes and said he wanted to implement them in Tamil Nadu,” she recalls.
In 1974, she returned to Chennai and met him a few times, with the last meeting being a few days before he died.
http://www.thehindu.com/news/cities/...cle6391985.ece
MAKKAL THILGAM MGR IN ''KANNI THAAI''- 10.9.1965. 50TH ANNIVERSARY .
http://i59.tinypic.com/bijlm1.jpg
http://youtu.be/GCqeyF2MIfY
இந்தப் பதிவாளர் முன்பு அந்தப் பக்கத்தில் பதிவுகள் போட்டவர். இப்போதும் அங்கே இவரது பதிவுகள் மீள்பதிவு செய்யப்படுகின்றன. மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு என்று பேரறிஞர் கூறியது போல, ‘ஆயிரத்தில் ஒருவனின்’ புகழ் பாடுகிறது இந்தப் பதிவு.
----------------------------------
சாரதா சிவாஜியின் முரட்டு பக்தை என்பது இந்த தளத்தின் வாசகர்களுக்கு தெரிந்த விஷயம். அவர் எம்ஜிஆருக்கு “எதிரி” இல்லை என்பதும் இந்த விமர்சனத்தைப் படித்தால் புரியும். ஓவர் டு சாரதா!
தமிழ்ப் படங்களில் ஆயிரத்தில் ஒருவன் படத்துக்கு ஒரு தனிச் சிறப்பு எப்போதுமே உண்டு. தமிழ்ப் படங்களில் புராணப் படங்கள் ஏராளமாக வந்திருக்கின்றன. ராஜா ராணியை மையமாக வைத்து சரித்திரப் படங்களும் அதிக அளவில் வந்துள்ளன. சமூகப் படங்கள், மற்றும் நாட்டு விடுதலையை மையமாகக் கொண்ட படங்களும், அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளின் அராஜகங்களை தோலுரித்துக் காட்டும் படங்களும் அதிகமாக வந்துள்ளன. நகைச்சுவைப் படங்களின் பட்டியலும் நீளம்தான். காதலை மையமாகக் கொண்ட படங்களோ திகட்டத் திகட்ட வந்திருக்கின்றன.
ஆனால் இது வரை கடற் கொள்ளையர்களை கதைக் கருவாகக் கொண்டு வெளி வந்த ஒரே படம் ஆயிரத்தில் ஒருவன் மட்டுமே. கதை, வசனம், காட்சியமைப்புகள், பாடல்கள், இசை, பொருத்தமான நடிகர் நடிகையர் தேர்வு, பொழுதுபோக்கு அம்சங்கள், கதையோடு ஒன்றிய கதைக் களங்கள் என, ஒரு வெற்றிப் படத்துக்குரிய எல்லா அம்சங்களும் ஒரு சேர அமைந்த படம் ஆயிரத்தில் ஒருவன்.
இப்படத்தின் கதாநாயனான ‘மக்கள் திலகம்’ எம்ஜியார் ஏற்றிருந்த மணிமாறன் என்ற கதாபாத்திரம், ஒரு கை தேர்ந்த தையற் கலைஞர் அளவெடுத்து தைத்த சட்டை பொருந்துவது போல வெகு அருமையாகப் பொருந்தியது. அவர் திறமைக்குத் தீனி போடுவது போல கத்திச் சண்டைக் காட்சிகள், அளவு மீறாத காதல் காட்சிகள், அவருக்கே பொருந்துவது போல அற்புதமாக அமைந்த பாடல்கள் என கனகச்சிதமாகச் சேர்ந்திருந்தது.
ஆயிரத்தில் ஒருவன் படத்தின் கதைச் சுருக்கத்தைச் சொல்வது என்பது அவசியமில்லாத ஒன்று. அந்த அளவுக்கு தமிழ்நாட்டு மக்களுக்கு பழகிப்போன திரைப்படம் இது. இன்றைய இளம் தலைமுறையினரும் கூட அறிந்து கொள்ளும் விதமாக, இன்றைக்கும் ஏதாவது ஒரு தொலைக்காட்சி அலைவரிசையில் ஒளிபரப்பாகிக் கொண்டே இருக்கும் படம்.
கதாநாயகியாக ஜெயலலிதா. இதிலும் பந்துலு மற்றும் எம்ஜியாரின் துணிச்சல் பாராட்டப்பட வேண்டிய ஒன்று. அது வரை (பானுமதிக்குப் பின்) சரோஜா தேவிதான் எல்லாப் படங்களிலும் தொடர்ந்து கதாநாயகியாக நடித்து வந்தார். அப்படியிருக்க, திடீரென்று அப்போதுதான் அறிமுகமாகி ஒன்றிரண்டு படங்களில் மட்டுமே நடித்திருந்த ஜெயலலிதாவை கதாநாயகியாக (அதுவும் எம்ஜியாருக்கு ஜோடியாக) போட்டிருந்தார்கள். (ஜெயலலிதா இப்போது நாடறிந்த புள்ளியாக இருந்தாலும், அப்போது அவர் புது முகம்தானே). ஆனால் படத்தில் அவர் நடிப்பைப் பார்க்கும்போது அவரை புதுமுகம் என்று யாரும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். அந்த அளவுக்குத் தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.
பருவம் எனது பாடல் என்ற பாடல் காட்சியில் ஜெயலலிதாவை அறிமுகம் செய்வதே அழகாக இருக்கும். கண்ணின் கருவிழியிலும், தாமரைப்பூவின் நடு இதழிலும்,கோயிலின் நடு மண்டபத்திலும் அவருடைய முகத்தை அறிமுகப்படுத்துவதே ஒரு அழகு.
எம்.ஜி.ஆரின் அறிமுகம் வழக்கம் போல “வெற்றி… வெற்றி…” என்ற வசனத்துடன் துவங்கும். (பாம்பு கடிக்கு மருந்து கண்டுபிடிப்பதில் வெற்றியடைந்திருப்பார்). சர்வாதிகாரி மனோகரால் கன்னித் தீவுக்கு அடிமைகளாக விற்கப்படும் போதாகட்டும், கப்பலில் பாயாசம் கேட்டு போராட்டம் செய்வதாகட்டும், தன்னை விரும்பும் இளவரசி பூங்கொடியிடம் அவருடைய காதலுக்கு கொஞ்சமும் தகுதியில்லாதவன் என்பதை விளக்குவதாகட்டும், நம்பியாரை நல்லவர் என்று நம்பி அவரிடம் மாட்டிக் கொண்டபின் தன்னை நம்பி வந்தவர்களின் உயிரைக் காக்க தன் மனச்சாட்சிக்கு விரோதமாக ‘கடற் கொள்ளையனாக’ சம்மதிப்பதாகட்டும், மனோகர் தன் எதிரியாக இருந்தபோதும் கூட கோழைத்தனமாக நம்பியார் விஷம் தோய்ந்த கத்தியை அவர் மீது வீசியதைக் கண்டு கொதித்துப் போய் அவரைக் காப்பாற்றும் இடத்திலாகட்டும்… இப்படி எல்லா காட்சிகளிலும் எம்.ஜி.ஆரின் நடிப்பு பாராட்டும்படியாக இருக்கும்.
கத்திச் சண்டைக் காட்சிகள் மூன்று இடங்களிலும் மிக அருமையாக படமாக்கப் பட்டிருக்கும். மணிமாறனும் பூங்கொடியும் (எம்ஜிஆர்+ஜெ) குடியிருக்கும் குடிலில் எம்ஜியாருக்கும் நம்பியாருக்கும் நடக்கும் கத்திச் சண்டை (முழுக்க முழுக்க மூங்கிலிலேயே அமைக்கப்பட்ட அருமையான செட்), கார்வார் மலைப் பகுதியில் அவர்கள் இருவருக்கும் இடையே மீண்டும் வாள் சண்டை (நம்பியார்: “இப்போட்டியில் வெற்றி பெறுபவனே இந்த தீவின் தலைவனாவான். முடிந்தால் நீ தலைவனாகு. இருந்தால் நான் தொண்டனாகிறேன்”), மூன்றாவதாக மனோகரின் படை வீரர்களோடு கப்பலில் மோதும் வாள் சண்டை. இவையனைத்திலும் எம்.ஜி.ஆர். (வழக்கம் போல) தன்னுடைய திறமையைக் காட்டி அசத்தியிருப்பார்.
பின்னர் வரப் போகும் மூன்று கத்திச் சண்டைக் காட்சிகளும் ரொம்ப சீரியசாக இருக்கும் என்பதால்தானோ என்னவோ, இவற்றுக்கு முதலில், கன்னித் தீவில் கொள்ளையடிக்க வரும் நம்பியாரின் ஆட்களோடு நடக்கும் சண்டையை ரொம்பவும் நகைச்சுவை ததும்பும் விதமாக படமாக்கியிருப்பார் பந்துலு.
பாடல்களும் இசையும்:
இப்படம் இன்னொரு விதத்திலும் மறக்க முடியாத படமாக அமைந்தது. ஆம், அது வரை தமிழ்த் திரை இசையில் இரட்டையர்களாக கோலோச்சி வந்த ‘மெல்லிசை மன்னர்கள்’ விஸ்வநாதன் ராமமூர்த்தி இருவரும் கடைசியாக இணைந்து இசையமைத்தது ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்திற்குத்தான். அதனால்தானோ என்னவோ இப்படத்தின் பாடல்கள் ஒவ்வொன்றும் வெரைட்டியாகவும், இசையில் இன்றைக்கும் ஒரு சாதனையாகவும் திகழ்கின்றன. பாடல்கள் அனைத்தும் கிட்டத்தட்ட தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மனப்பாடம் ஆகிவிட்ட ஒன்று. இன்றைக்கும் ஏதாவது ஒரு வகையில் தமிழ் ரசிகர்களுக்கு விருந்தாக தொலைக்காட்சிகளில் வந்து கொண்டிருக்கின்றன. சிறப்பு தேன்கிண்ணம் வழங்க வரும் திரையுலக வி.ஐ.பி.க்கள் மறக்காமல் தொடும் பாடல்கள் இடம் பெற்ற படங்கள் ஆயிரத்தில் ஒருவன், புதிய பறவை, அன்பே வா… இவற்றிலிருந்து பாடல்களைச் சொல்லாமல் அவர்கள் நிகழ்ச்சிகளை நிறைவு செய்வதேயில்லை. காரணம் அந்த அளவுக்கு தேன் சொட்டும் பாடல்கள்.
1. பருவம் எனது பாடல்
நான் முதலிலேயே சொன்னபடி, கதாநாயகி ஜெயலலிதா அறிமுகம் ஆகும் பாடல். தோழிகளோடு அவர் ஆடிப்பாடும் காட்சி என்பதால், பி.சுசீலாவின் குரலோடு கோரஸ் சிறப்பாக சேர்க்கப்பட்டிருக்கும்.
பருவம் எனது பாடல்
பார்வை எனது ஆடல்
கருணை எனது கோயில் கலைகள் எனது காவல்
கருணை உனது கோயில் கலைகள் உனது காவல
பல்லவியை பாடி முடித்த சுசீலா, உச்ச ஸ்தாயியில் ஹம்மிங் ஆரம்பித்து அப்படியே படிப்படியாக கீழ் ஸ்தாயி வரையில் கொண்டு வர*, கூடவே அதுக்கு அனுசரணையாக கோரஸ் கலந்து ஒலிக்க, அப்பப்பா.. மெல்லிசை மன்னர்கள் இங்கு மெல்லிசை சக்கரவர்த்திகளாக உயர்ந்து நிற்பார்கள். பல்லவி முடிந்த
இதயம் எனது ஊராகும் இளமை எனது பேராகும
என்று சரணம் தொடங்கும்போது, பாங்கோஸ் அருமையாக பாடலை அணைத்துச் செல்லும். அதனால்தான், பிற்காலத்தில் எத்தனையோ இசைக்கொம்பர்கள் வந்தும் கூட இந்தப் பாடல்களை மக்கள் மனத்திலிருந்து அகற்ற முடியவில்லை.
(நண்பர்கள் நிச்சயம் இங்கு அதற்கான ‘link’ தருவார்கள். Songs கேட்டுப் பாருங்கள். வேறொரு உலகத்துக்குப் போவீர்கள்).
2. ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்க்கையில்லை
வழக்கம் போல எம்.ஜி.ஆரின் தன்னம்பிக்கை ஊட்டும் பாடல் வரிசையில் ஒன்று.
ஓராயிரம் ஆண்டுகள் ஆகட்டுமே
நம் பொறுமையின் பொருள் மட்டும் விளங்கட்டுமே
வரும் காலத்திலே நம் பரம்பரைகள்
நாம் அடிமையில்லை என்று முழங்கட்டும
இந்திய சுதந்திரப் போராட்ட தியாகிகள் எல்லாம் இப்படி எண்ணியதால்தானே இன்று நாம் சுத*ந்திரக் காற்றை சுவாசித்துக் கொண்டு இருக்கிறோம்.
3. ஓடும் மேகங்களே ஒரு சொல் கேளீரோ
இந்தப் பாடலைப் பற்றி நண்பர்கள் ஏற்கெனவே இங்கு சொல்லியிருக்கிறார்கள். மக்கள் திலகம் பல கவிஞர்களிடம் பாடல் எழுதியும் திருப்தியடையாமல், அப்போது தன்னிடம் கருத்து வேறுபாடு கொண்டிருந்த கவியரசர் கண்ணதாசனை அழைத்து இந்தப் பாடலை எழுதச் சொல்லி திருப்தியடைந்தார் என்பார்க*ள். பாதிப் பாட*ல் அர*ண்ம*னை செட்டிலும் பாதிப்பாட*ல் கார்வார் க*ட*ற்க*ரையிலும் க*ண்டினியூட்டி கெடாம*ல் எடுக்க*ப்ப*ட்டிருக்கும்.
4. உன்னை நான் ச*ந்தித்தேன் நீ ஆயிர*த்தில் ஒருவ*ன்
பி.சுசீலா தனியாக*ப் பாடிய* பாட*ல். கூட*வே ஆண்க*ளின் கோர*ஸ். ம*ணிமாற*னைப் பிரிந்த* பூங்கொடி, செங்க*ப்ப*ரின் அர*ண்ம*னையில் சோக*மே உருவாக* பாடும் பாட*ல், கூட*வே க*ப்ப*லில் போய்க்கொண்டிருக்கும் ம*ணிமாற*னைக் காண்பிக்கும்போது, அவ*ர*து கூட்டாளிக*ளின் உற்சாக*மான* கோர*ஸ்.
பொன்னைத்தான் உட*ல் என்பேன் சிறு பிள்ளை போல் ம*ன*மென்பேன்
க*ண்க*ளால் உன்னை அள*ந்தேன் தொட்ட* கைக*ளால் நான் ம*ல*ர்ந்தேன்
உள்ள*த்தால் வ*ள்ள*ல்தான் ஏழைக*ளின் த*லைவ*ன
அடுத்து வ*ரும் இசை ‘பிட்’டைக் கேட்க* முடியாது, கார*ண*ம் ப*ல*த்த* கைத*ட்ட*லும், விசில் ச*த்த*மும். பாட*ல் முடியும்போது, கோர*ஸுட*ன் க*ப்ப*ல்க*ள் முல்லைத்தீவு க*ரையில் ஒதுங்குவ*தாக* காட்டுவ*து அருமை. (கப்பல்கள் கரை ஒதுங்கும்போது, முல்லைத்தீவின் அரசியான எல்.விஜயலட்சுமி கறுப்பு நிற உடையில் அழகுப் பதுமையாக நடந்து வருவது எடுப்பான காட்சி).
4. ஆடாமல் ஆடுகிறேன்
கடற்கொள்ளையின்போது கிடைத்த பொருட்கள் மட்டுமின்றி, மனிதர்கள் கூட பொருட்களாக கருதப்பட்டு ஏலத்தில் விடப்பட வேண்டும் என்ற தீவின் சட்டப்படி, ஜெயலலிதா ஏலம் விடப்படும்போது அவர் மனம் நொந்து ஆண்டவனை அழைக்கும் பாடல். சுசீலா மேடத்துக்கு இப்படத்தில் அற்புதமான மூன்று தனிப்பாடல்கள், அதில் இதுவும் ஒன்று. இசை அருமையோ அருமை. முதலில் சாட்டையடி சத்தம், அதைத் தொடர்ந்து ஒவ்வொரு சாட்டையடிக்கும் அதைப் பிரதிபலிக்கும் வண்ணம் வயலினின் ஓசை.
ஆடாமல் ஆடுகிறேன்… பாடாமல் பாடுகிறேன்
ஆண்டவனைத் தேடுகிறேன் வா…வா…வா….
நான் ஆண்டவனைத் தேடுகிறேன்
வா…வா…வா…. வா….வா…வா…
முதல் இரண்டு வரிகளுக்கு பாங்கோஸ் இசைக்க, ‘ஆண்டவனைத் தேடுகிறேன்’ என்ற வரி ஆரம்பிக்கும்போது அருமையாக தபேலா ஆரம்பிக்கும். இடையிசையில் முதலில் வயலின், பின்னர் கிடார், அடுத்து ஃப்ளூட், பின் மீண்டும் வயலின் அடுத்து தபேலா சோலோ என்று மாறி மாறி ஒலித்து பாடலை எங்கோ கொண்டு செல்லும்.
விதியே உன் கை நீட்டி வலை வீசலாம்
ஊரார்கள் என்னைப் பார்த்து விலை பேசலாம்
அழகென்ற பொருள் வாங்க பலர் கூடலாம்
அன்பென்ற மனம் வாங்க யார் கூடுவார
‘கன்னித்தீவின் இளவரசியாக கவலையில்லாமல் வாழ்ந்தேனே, இன்று இவர்கள் கையில் மாட்டி ஏலம் போகவா செங்கப்பரை வற்புறுத்தி கடல் பயணம் வந்தேன்’ என்ற ஏக்கம் பொங்க ஜெயலலிதா காட்டும் முகபாவம் நம் கண்களில் நீரை வரவழைக்கும். வயலினும் தபேலாவும் உச்ச ஸ்தாயியில் போய் பாடல் முடியும்போது மழை பெய்து ஓய்ந்த மாதிரி இருக்கும்.
(மெல்லிசை மன்னர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் அருமையான ‘send off ‘கொடுத்திருக்கிறார்கள் இப்படத்தில்).
5. நாணமோ… இன்னும் நாணமோ
நீ இளவரசி, நான் அடிமை யென்று பேதம் பார்த்து ஒதுங்கிருந்த மணிமாறனை ஒருவழியாக (விஷம் அருந்தியதாக பொய் சொல்லி) தன் காதலுக்கு சம்மதிக்க வைத்தாயிற்று. பின்னர் என்ன? காதலர்களுக்கு ஒரு பாடலாவது வேண்டாமா? அதுதான் இந்தப் பாடல். சிங்கம் ஒரு குட்டி போட்டாலும் அது சிங்கக் குட்டியாக இருக்கும் என்பது போல, படத்தில் இடம் பெற்றது ஒரேயொரு டூயட் பாடல் என்றாலும், மனதை அள்ளிக்கொண்டு போகும் பாடல். பாடலின் ‘prelude’அருமையாக துவங்கும். (prelude, interlude என்பவை என்ன என்று தெரிந்து கொள்ள இன்றைய இளைஞர்கள் இதுபோன்ற படங்களின் பாடல்களைக் கேட்பது நல்லது).
தோட்டத்துப் பூவினில் இல்லாதது
ஒரு ஏட்டிலும் பாட்டிலும் சொல்லாதது
ஆடையில் ஆடுது வாடையில் வாடுது
ஆனந்த வெள்ளத்தில் நீராடுது – அது எது?
ஆடவர் கண்கள் காணாதது
அது காலங்கள் மாறினும் மாறாதது
காதலன் பெண்ணிடம் தேடுவது
காதலி கண்களை மூடுவது – அது இத
பாடலின் முதல் பாதியில் ஜெயலலிதாவுக்கு பூக்களால் ஆடை செய்திருப்பார்கள். மறுபாதியில் எம்ஜியார், ஜெயலலிதா இருவருக்கும் ஆடை அழகாக கண்ணைக் கவரும் வண்ணம் இருக்கும்.
6. அதோ அந்தப் பறவை போல வாழ வேண்டும்
அடிக்கடி தொலைக்காட்சியில் கேட்டு, பார்த்து ரசித்த பாடல். எல்லோருமே இப்பாடலை பாராட்டிப் பேசுவார்கள். ஆகவே நானும் இழுத்துக் கொண்டு போவது அவசியமற்றது. கப்பலில் எம்ஜியார், ஜெயலலிதா, நாகேஷ், நம்பியார் என அனைவரும் இடம்பெறும் பாடல் காட்சி. பாடலின் பல்லவியை முதலிலேயே கிடாரில் ‘prelude’ ஆக வாசித்துக் காட்டுவார்கள். இதன் இடையிசையில் வரும் ல..லா..லா.. ல..லா.. லா என்ற கோரஸ் ரொம்ப பிரசித்தம்.
கோடி மக்கள் சேர்ந்து வாழ வேண்டும் விடுதலை
கோயில் போல நாடு காண வேண்டும் விடுதலை
அச்சமின்றி ஆடிப்பாட வேண்டும் விடுதலை
அடிமை வாழும் பூமியெங்கும் வேண்டும் விடுதல
இன்றைக்கு இந்தப்பாடல்களை தொலைக்காட்சியில் வசதியாக கண்டு ரசிக்கிறோம். ஆனால், இது போன்ற வசதியற்ற அந்நாட்களில் இப்படத்தின் பாடல்களை தமிழர்களின் காதுகளுக்கு கொண்டு சென்று சேர்த்த பெருமை இலங்கை வானொலியைச் சேரும் என்பதை நாம் நன்றியோடு நினைத்துப் பார்க்கிறோம்.
இப்படத்தில் நாகேஷின் நகைச்சுவை நம்மை வயிறு குலுங்க சிரிக்கவைக்கும். உதாரணத்துக்கு ஒன்று. பூங்கொடியின் தோழி தேன்மொழியை (மாதவி) நாகேஷ் ஏலத்தில் எடுத்து வருவார். அப்போது எம்ஜியார் “என்னப்பா, தேன்மொழியை நீ ஏலத்தில் எடுத்தியா?”
நாகேஷ்: “அட நீங்க வேறே. இவள் வாயைப் பார்த்ததும்தான் திடலே காலியா போச்சே. பழகின தோஷத்துக்காக சும்மா பாத்துக்கிட்டு நின்னேன். என்னைப்பார்த்து ‘ஈ’ன்னு சிரிச்சா. ‘கொன்னுடுவேன்’ அப்படீன்னு ஒரு விரலைக் காட்டினேன். அந்த ஏலக்காரன், நான் ஒரு பவுனுக்கு இவளைக் கேட்கிறேனாக்கும்னு நினைச்சு இவளை என் தலையில் கட்டிட்டான்”.
‘ஆயிரத்தில் ஒருவன்’ திரையிடப்பட்டபோது சென்னை புரசைவாக்கம் மேகலா தியேட்டரில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோருடன் பந்துலுவும் அமர்ந்து படத்தைப் பார்த்தார். படத்தின் முதல் நாள் முதல் காட்சியிலேயே தெரிந்து விட்டது, படம் மாபெரும் வெற்றி யென்பது. தமிழ்நாட்டின் பல ஊர்களில மாபெரும் வெற்றி பெற்று சாதனை புரிந்தது.
எப்போது பார்த்தாலும் புத்தம் புதியதாகவும் பிரமிப்பூட்டும் படமாகவும் அமைந்த படம் தான் ஆயிரத்தில் ஒருவன். இப்படத்தைப்பற்றிய கருத்துக்களை உங்களுடன் பகிர்ந்து கொண்டது பற்றி மிகவும் சந்தோஷம்.
‘ஆயிரத்தில் ஒருவன்’ பற்றிய எனது கருத்துக்களைப் படித்த அன்பு இதயங்களுக்கு நன்றி.
நன்றி ------ அவார்டா கொடுக்கறாங்க இணையதளம்
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் திக்கெட்டும் பரவட்டும்.
CAPTAIN SARAVANAN - KANNITHAAI
http://i59.tinypic.com/24zlz61.jpg
கன்னித்தாய் -10.9.1965
தேவர் பிலிம்ஸ் தயாரிப்பில் வந்த படம் . மக்கள் திலகத்துடன் ஜோடியாக ஜெயலலிதா நடித்த
இரண்டாவது படம் .
சென்னை - சபையர் அரங்கில் வந்த முதல் தமிழ் படம் . 6 வாரங்கள் மட்டும் என்று விளம்பரத்துடன் வந்த படம் .இனிமையான பாடல்கள் நிறைந்த படம் .
''கேளம்மா சின்ன பொண்ணு கேளு '' - அருமையான தத்துவ பாடல் .மற்றும் என்றும் பதினாறு வயது பதினாறு பாடல் படம் .
மக்கள் திலகத்தின் பொழுது போக்கு படம் . ரசிகர்களின் மனதில் இடம் பெற்ற இனிய காவியம் .
கேப்டன் சரவணன் ஸ்டில் அட்டகாசம். அன்பும் சாந்தமும் தவழும் அந்த காந்தக் கண்கள்... பேச வருவதுபோல் என்ன ஒரு தத்ரூபம்? நன்றி எஸ்.வி. சார்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
வெற்றி-திருப்புகழ் வேந்தன்- பாட்டுடைத் தலைவன்-
அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.
https://www.youtube.com/watch?v=TLbG...ature=youtu.be
இங்கே காவல்காரனின் வசூல் சாதனை விவரங்களை பார்த்தவுடன் , அவர்கள் நடிகரின் 200 வது பட விளம்பரத்தை வெளியிட்டுள்ளனர். இது குறித்து இங்கே நாம் ஏற்கனவே பலமுறை பதில் கூறியாகிவிட்டது. அவர்கள் முகாமைச் சேர்ந்த, அவர்களது நடிகரை வைத்து படம் எடுத்த முக்தா சீனிவாசன் அவர்களே புரட்சித் தலைவரின் இதயக்கனி படம் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து கொடுத்ததாக பகிரங்கமாக பொது மேடையிலேயே கூறியுள்ளார். ஆகவே அவர்களது படம் ஒன்றும் புதிய சாதனையை ஏற்படுத்தவில்லை.
சரி அதுதான் போகட்டும். இதுவரை அந்தப் படம் ரூ.1 கோடி வசூலித்ததாக கூறி வந்தவர்கள் (விளம்பரமும் அப்படித்தான் கூறுகிறது. ஏற்றுக் கொள்வோம்) திடீரென்று ரூ.2 கோடி வசூலித்ததாக அள்ளி விடுகிறார்கள். ஆயிரத்தில் ஒருவன் மிகப் பெரிய வெற்றி என்று நாம் சொன்னால் உடனே, சென்னையில் மட்டும் ஓடிய மர்மம் என்ன? ஏன் ஒரு தியேட்டரில் மட்டும் ஓடியது? (உண்மையில் இரண்டு தியேட்டர்கள், கர்ணன் ஒரு தியேட்டர்தான்) என்று கேட்பவர்கள், அவர்களது இந்த ரூ.2 கோடி வசூல் மர்ம முடிச்சை அவிழ்க்க வேண்டும். உண்மையிலேயே அவர்களது படம் ரூ.2 கோடி வசூலித்திருந்தால் அந்த விளம்பரத்தையும் பதிவிடலாமே?
அன்புடன்: கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
கோபால்,
நீங்கள் ஆத்திரப்படுவதில் இருந்தே திரிசூலம் படம் ரூ.2 கோடி வசூலித்ததற்கான ஆதாரம் இல்லை என்று தெரிகிறது. எங்களை எதற்கெடுத்தாலும் ஆதாரம் கேட்கிறீர்களே? பிட் நோட்டீஸ் என்கிறீர்களே? அந்த பிட் நோட்டீஸ் ஆதாரத்தையாவது (ரூ.2 கோடிக்கு)நீங்கள் காட்டுங்கள் என்றால் ‘மரியாதை’ காட்டுவோம் என்கிறீர்கள். ஆத்திரப்படாதீர்கள். ‘ஆத்திரக்காரனுக்கு.....’
அன்புடன் : கலைவேந்தன்
The digitized version of “Ayirathil Oruvan”
The digitized version of “Ayirathil Oruvan” starring MGR and Jayalalitha celebrated its Silver Jubilee on Monday. AIADMK Chief Secretary Jayalalitha, first play with MGR was “Ayirathil Oruvan”.
She declared that the film had paved the way for her entry in to politics.
The movie played by MGR and Jayalalitha and directed by B.R.Panthulu was released in 1965.
Jayalalitha’s first movie to pair with MGR and the pair continued to act 28 films together. She also has said that film gave her unforgettable and lifelong experience.
In a letter sent to Divya Films that released the digitized version of the movie, she has written, “It was a successful film, and it gave me an opportunity to meet MGR and converse with him”.
“Even after 50 years after its release, the film remains like a fresh lotus depicted in a beautiful painting,” she said.
“It stands testimony to the quality of the story and the talent of those who participated in the making of the film,” she said. She has said that the director B.R.Panthulu is like a father to her and had regards to her.
She added that if she had known about the celebration before she could not have accepted for other engagements and would have attended the function.
She wished the team to make more achievement.
http://kuwaitnris.com/2014/09/02/the...rathil-oruvan/
திரு கலைவேந்தன் சார், உங்களின் நற்பதிவுகள் அருமை...வேலூர் திரு ராமமூர்த்தி அவர்கள் வேலூர் records - மக்கள்திலகம் MGR., அவர்களின் எவரும் நெருங்க முடியாத சாதனைகளை பதிவிட்டவுடன் அங்கே நம் தோழர்கள் உஷ்ண பெரு மூச் விடுகிறார்கள்... ஒன்று!!! நண்பர்களே, அடிப்படையிலேயே மக்கள்திலகத்தின் சாதனை- வரலாறுகளுக்கும்--- மற்றவர்கள் செயல்பாடுகளுக்கும் பெருத்த வித்தியாசம் இருக்கிறது...அதனால் புரட்சி தலைவரின் சாதனை செயல்பாடுகளுடன் ஒப்பிட இயலாது என்பதனை பாசத்துடன் தெரிவித்து கொள்கிறேன்...
கலைவேந்தன், நாங்கள் முன்னே கேட்டது: கர்ணன் vs AO பாக்ஸ் ஆபீஸ் ஓட்டம் பற்றி ? நான் ஏற்கெனவே AO rerelease ஒரு flop என்பதை டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிகையின் proof கொடுத்துள்ளேன். கர்ணன் rerelease 5 cr வசூல் ஆகிவுள்ளது. AO collection என்ன?
AO ஓட்டம் என்பது ADMK / MGR fanskku மட்டும் தான் - AO ஓட்டபடுகிறது. கர்ணன் ஓடிய படம் - கர்ணன் rerelease வெற்றி என்பது அனைவரும் ஏற்று கொண்ட உண்மை. கர்ணனின் வெற்றி நடிகர் திலகத்தின் வெற்றி - முழுவதும் BO மன்னர் சிவாஜிக்கே.
AO 175 நாட்களில் எத்தனை show ஓடிவுள்ளது - 175 shows இருக்குமா? NT கர்ணன் முதல் சில வாரங்களில் daily 4 shows ஓடிவுள்ளது. AO முதல் சில நாட்களில் அத்தனை தியேட்டர் இருந்து தூக்கப்பட்டது, இந்த 2 தியேட்டர் தவிர்த்து .மீண்டும் மீண்டும் கேட்கிறோம்: AO வசூல் என்ன? இந்த விவரத்தை காட்டுங்கள், பிறகு பேசலாம். அது வரை நடிகர் திலகம் தான் என்றும் சாதனை சக்கரவர்த்தி என்பத்தை ஏற்று கொண்டு சற்று மனித தன்மையை காட்டுங்கள். ஒரு FLOP rerelease வெற்றி வெற்றி என்று சொன்னால் வெற்றி ஆகாது. படம் ஓட வேண்டும் - இந்த இன்டர்நெட் யுகத்தில் AO MGR படமே தவிர பொது மக்கள் படம் ஆகவில்லை.
if Muktha was so happy with Idhyakkani, why didn't he make movie with MGR? When was the last time Muktha films made a successful movie? Before Nayagan, it was again NT helped him with Keelvanan sivakkum. முக்தாவை support அழைக்கும் போதே தெரிகிறது - தங்களிடம் சரக்கு இல்லை என்று.
Regards
திரு கலைவேந்தன் சார், அவர்கள் இருநூறாவது பட சாதனை தகவல்களை கோபத்துடன் போடுவதாக கூறினீர்கள்... அந்த படமும் - மக்கள்திலகம் முதல்வராக பதவி ஏற்றபின் கொண்டு வந்த சினிமாவை வாழ வைக்கும் திட்டமான" ticket tax "-முறையாகும் ...அது கூட பொன்மனச்செம்மல் என்ற ஒரே மகத்தான மனிதரினால்தான் என திட்டவட்டமாக கூறி கொள்வதில் பெருமிதம் அடைகிறேன்...அது மட்டுமல்ல சார், அவர்கள் படத்தையெல்லாம் பழம் பெரும் -சாதாரண காங்கிரஸ் தொண்டர்கள் பார்த்ததும் முக்கிய காரணமாகும்...மற்றும் வேறு நம்பிக்கையும் இல்லாமல் 200- படவிழா - என்ற சைடு ரீல் - வசூல் விழுந்ததுமே இடையில் செருகி காண்பிக்கபட்டதுமே ---என்பதும் அனைவரும் அறிந்த உண்மையாகும்...இது கூட அறியாதவரா அங்கே பதிவிடுகின்றனர்?
பாவம்?!...எதுவுமே புரியாமல், அல்லது அறிந்து கொள்ள கூட ஆர்வம் இல்லாத விஷயாதி - ரசிகர்கள்தான் அந்த பெரிய நடிகரின் பெரிய பலவீனம் என்பதை அவர்கள் மீண்டும் தண்டோரா போடுகிறார்கள்... சரி... அவர்கள் வீண் ஆசையை நாம் ஏன் கெடுப்பானேன்? டிஜிட்டல் செய்து வெளியிட்ட அவர்கள் படம் ஓடியது என்றால், பின் வந்த மூன்று டிஜிட்டல் வெளியிடுகள் என்ன ஆனது? ஆகையால் -நாங்கள் மோத வேண்டிய அவசியம் நிச்சயமாக உங்களுடன் ---இல்லை!!! அப்புறம் மன-மாச்சிரியங்கள் ஏற்படும் அளவுக்கு பற்பல கருத்துக்களை, உண்மை-நிலையை கூற கூடிய அவசியத்தை உண்டாக்க மாட்டீர் -என நினைகிறோம்... because ...ONE SUN , ONE MOON , ONE MGR ...
திரு சொக்கலிங்கம் தான் சொல்லவேண்டும் 5 கோடியா இல்லை ஐம்பது லட்சம்மா டைம்ஸ் ஒப் இந்தியா proof சொல்பவர்கள் தி ஹிந்து proof ஏற்க மறுக்கிறார்கள் . ஆயிரத்தில் ஒருவன் இடைவெளி இல்லாமல் ஓடிய படம் உங்கள் கர்ணன் மறுவெளி யீடு தகவல்கள் உண்டா ?
1977 முதல் சென்னை உள்பட திரையரங்கு வாரியாக யார் படம் அதிகஅளவில் திரையீட்ட தகவல்கள் வேண்டுமா இல்லை நேரில் விளக்கம் வேண்டுமா தெரியும் யார் வசூல் சக்கரவர்த்தி
எப்பொழுதும் எங்கள் மக்கள்திலகம் தான் வசூல் சக்கரவர்த்தி இது உலகறிந்த உண்மை
திரைப்பட விநியோகஸ்தர், புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.பக்தர்
பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர். நற்பணி சங்க ஆலோசகருமான திரு. எஸ். நீலகண்டன் அவர்களின் மகளுக்கும் திரு. ரமேஷ் (பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர். நற்பணி சங்க நிர்வாகி ) அவர்களின் உடன்பிறவா சகோதரருக்கும் நாளை காலை (10/09/14) சென்னை கொருக்குபேட்டையில் நடைபெற உள்ளது.
அனைத்து எம்.ஜி.ஆர். மன்ற அமைப்புகளை சார்ந்த பக்தர்கள்
இன்று நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து
கொண்டனர்.
கோவையில் இருந்து பொறியாளர் திரு. துரைசாமி அவர்களும் திரு. உலகப்பன் , கோவை -டிலைட் அரங்க மேலாளர் அவர்களும் , திருமதி ஜெயந்தி கண்ணப்பன் (ஏ .எல் .எஸ்.) அவர்களும் கலந்து கொண்டனர்.
திருமண மண்டபத்தில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். உருவங்கள் அடங்கிய பேனர்கள் /சுவரொட்டிகள் வைக்கபட்டிருந்தன .
அதன் புகைப்படங்களை காண்க .
http://i62.tinypic.com/2ecztky.jpg
நாம் ஏற்கனவே பல முறைகள் கூறியது----- மக்கள்திலகம் அவர்களின் ரசிகர்கள், பின்னர் தொண்டர்கள், இப்பொழுது பக்தர்கள் -என பரிணாம வளர்ச்சி -என்று கூறுவதை போல் பிரம்மாண்டமாக வளர்ந்து விட்ட - நிலையில் வேறொரு நடிகரோ, அரசியல் வாதியோ -எவரும் எம்.ஜி.ஆரை .நெருங்கவோ, நினைத்து கூட பார்க்க இயலாத -நிலையில் திரும்ப, திரும்ப இவருடன் ஒப்பிடு செய்ய கூட முயற்சிக்க வேண்டாம் என்பது அனைவரின் எண்ணப்பாடு - காரணம் மக்களதிலகமும் - அவரை சார்ந்தோரும் சாதித்தவர்கள்- எனும் ஒரே நிலைப்பாடு -தான் ...இது எந்தவொரு ஆணவமோ, அகங்காரமோ அல்ல- என உறுதிபட கூறுகிறோம்...நன்றி...
சென்னை மாநகரில் தலைவரின் படங்கள் திரை இடாத திரை அரங்குகளே இல்லை . சாந்தி தவிர
ஒளிவிளக்கு படத்தின் மறு வெளியீடுக்கு வசூலுக்கு முன்னால் எந்த நடிகரின் படமும் நெருங்கமுடியாது .
admk கட்சி யாருடையது தலைவர் அவர்களால் உருவாக்கப்பட்டு இன்றும் கூட ஆட்சியில் அமர்ந்து இருபதற்க்கு கோடானு கோடி ரசிகர்களின் தயவால் தான் .
புகைபடத்தில் மணமக்களுடன் திருவாளர்கள்:பி.எஸ். ராஜு,நசீர் அகமது ,மாரிமுத்து , பி.ஜி.சேகர், நீலகண்டன் ,
ஆர். லோகநாதன், உலகப்பன் (கோவை -டிலைட் அரங்க மேலாளர் ) ஆகியோர்.
http://i59.tinypic.com/9jlhms.jpg
நமது எம்.ஜி.ஆர். தினசரி - (05/09/2014)
http://i61.tinypic.com/14kfoz8.jpg
என் தலைவர் நினைத்து இருந்தால் 1969 ஆண்டே முதல்வராக பதவிக்கு வந்து இருக்கலாம் . வந்து இருந்தால் தொடர்ச்சியாக 18 ஆண்டுகள் முதல்வராக நீடித்து இருப்பார் .
நமது எம்.ஜி.ஆர். தினசரி - 09/09/2014-இன்று புகைப்படத்துடன்
வெளியான கவிதை வரிகள்.
http://i61.tinypic.com/505y4z.jpg
1984-இல் இதே கருணாநிதி என் நண்பர் அமெரிக்காவில் உயிர் பிழைத்து வந்தால் இந்த முதல்வர் பதவி கொடுத்துவிடுகிறேன் என்று அண்ணா நகர் தொகுதியில் பிரச்சாரம் செய்தவர் . அந்த தேர்தலில் திமுக தோற்றவுடன் தமிழர்களே என்னை நீங்கள் கடலில் போட்டாலும் கட்டுமரமாக மாறுவேன் நீங்கள் அதில் ஏறி பயணம் செய்யலாம் நான் துவழ்ந்து வீடமாட்டேன் என்று முரொசொலியில் கடிதம் எழுதினார் .
ஏன் என்றல் எங்கள் சரித்திர நாயகர் திரையில் மற்றும் அரசியலில் தோல்வியே எதிரிக்கு பரிசு அளித்து பழகியவர் எங்கள் மன்னாதி மன்னர்
அவருக்கு வேறு விதமாக விளக்கம் கேளுங்கள் தலைவரின் புனித அரசியல் சரித்திரத்தை கேலி செய்யாதிர்கள் . கடைசி வரை தமிழக மக்களுக்காக தன்னை தானே தியாகம் செய்த மனித தெய்வம் தன் ஆட்சி காலத்தில் தனக்கு என்று ஒரு சென்ட் நிலம் வாங்காத கரை படியாத தெய்வ கைகள் . இருப்பதை எல்லாம் ஏழை எளியவர்க்கு அள்ளி தந்த இந்த உலகின் ஒரே வள்ளல்
நன்றி rks மிஸ்டர் mgr என்று எழுதியவர் இப்பொழுது மக்கள்திலகம் என்று எழுதியதற்கு
அரசியலை பற்றி நான் பேசவில்லை !
மக்கள் திலகத்தின் அரசியல் வீச்சின் பலம் அனைவரும் அறிந்ததே !
25 ஆண்டுகளுக்கு பின்னரும் admk அரியணை ஏற்றுள்ளது என்றால் அது அவருக்கு மட்டுமே உள்ள சக்தி !
அவரால் தொடங்கப்பட்ட கட்சியால் மட்டுமே அது முடியும் இன்னும் பல நூறு ஆண்டுகள் ஆனாலும் !
திரை உலகில் மக்கள் திலகம் அவர்கள் தோல்விகளை பரிசாக கொடுத்திருக்கலாம் ..பலருக்கு ...!
திரை உலகில் தான் இருக்கும் வரை ....அனைவருக்கும் தனது வெற்றியை மட்டுமே பரிசாக கொடுத்து பழகியவர் நடிகர் திலகம் !
திரை உலகை பொருத்தவரை நடிகர் திலகத்திற்கு தோல்வி என்ற பரிசை கொடுக்கவேண்டும் என்ற எண்ணத்துடன் கனவு கண்டவர்கள் பலர்
தருணம் காத்து இருந்திருக்கலாம் ! இருந்திருக்கிறார்கள் !
ஆனால் நடிகர் திலகத்தின் திரை உலக சாம்ராஜ்யத்தை ...அவர் நிலையை இந்திய நடிகர் மட்டுமல்ல ...உலக நடிகர்கள் கூட நெருங்கியதாகவோ...எட்டிபிடித்ததாகவோ ...தகர்த்ததாகவோ ..வெற்றிகண்டதாகவோ ..வரலாறு இல்லை...சரித்திரமும் இல்லை ..!
அது எந்த ஜென்மத்திலும் இனி இருக்கபோவதும் இல்லை !
அவருடைய அரசியல் பற்றி நான் கேலி செய்வதா ...?
திரு யுகேஷ் அவர்களே ..அது இக்காலம் அல்ல எக்காலத்திலும் நடக்காது !
முதல்வராக இருந்தும் தனக்கும் சரி தனது தாய்க்கும் சரி ...தனது சுற்றத்தார்க்கும் சரி உறவினர்க்கும் சரி !...பொதுமக்களுக்கு என்ன உண்டோ அதுமட்டுமே உங்களுக்கும் உண்டு வேறு எந்த சலுகைகளும் எதிர்பார்கலாகாது என்று நேர்மையுடன் அரசாட்சி கண்டு மக்களுக்கு தமிழகத்துக்கு சிறந்த திட்டங்கள் கொண்டுவந்து செயல்படுத்திய கர்ம வீரர் வழி பின்பற்றுபவன் நான் அவரை "காமராஜ் என் தலைவன்" என்று கூறிய மக்கள் திலகம் அவர்களை அதுவும் அரசியலை நான் கேலி பேச நான் கண்ணியம் இல்லாத இந்த கால அரசியல்வாதி அல்ல திரு யுகேஷ் அவர்களே ! !
மூண்ணூறு திரைப்படங்கள் வெற்றி படங்களா ? முண்ணூறு படங்களும் இன்றும் வெளிவந்து கொண்டே இருக்கிறதா ? அப்படி என்றால் சிவாஜி இந்த உலகிலே அதிகம் பணம் வாங்கி நடித்த ஒரே நடிகரா ?
தெரியாமல் போனது .
பரவாயில்லை தலைவரை புகழ வார்த்தை தேடினேன் நீங்களே கொடுத்து விட்டிர்கள்
மக்கள் திலகத்தின் திரை உலக சாம்ராஜ்யத்தை ...அவர் நிலையை இந்திய நடிகர் மட்டுமல்ல ...உலக நடிகர்கள் கூட நெருங்கியதாகவோ...எட்டிபிடித்ததாகவோ ...தகர்த்ததாகவோ ..வெற்றிகண்டதாகவோ ..வரலாறு இல்லை...சரித்திரமும் இல்லை ..!
அது எந்த ஜென்மத்திலும் இனி இருக்கபோவதும் இல்லை !
கனடா நாட்டில் இரண்டு திரையரங்கில் மறுவெளியீடு செய்த ஒரே காவியம் எங்கள் மணிமாறனின் ஆயிரத்தில் ஒருவன்
AAYIRATHIL ORUVAN TODAY CANADA THEATERS POSITION 02.04.14
Times
Movie
Trailer
Pictures
Reviews
Switch to 24-hour system
Woodside (Golden)
1571 Sandhurst Circle, Agincourt
Today (Tue): 10:00
Wed, Thu: 10:00
Fri: 4:00, 10:00
Sat, Sun: 4:00
Mon: 10:00
York Cinemas
115 York Blvd, Richmond Hill
Today (Tue): 7:30
Wed, Thu: 7:30
Sun: 7:00, 10:00
Mon: 7:30
http://www.cinemaclock.com/showtimes...il_Oruvan.html