not sure--if this series was shared here...a honest interview ......he has touched about the VR issue etc
please check out the 4 videos in this series
https://www.youtube.com/watch?v=Jev6PNQImlA
Printable View
not sure--if this series was shared here...a honest interview ......he has touched about the VR issue etc
please check out the 4 videos in this series
https://www.youtube.com/watch?v=Jev6PNQImlA
ருத்ரய்யா - நினைவுகள் தொடர்கதை..!
http://news.vikatan.com/article.php?...utm_campaign=1
http://i1277.photobucket.com/albums/...ps7a3895fd.jpg
தமிழ் சினிமா வரலாறு பல விசித்திரங்களையும் வினோதங்களையும் கொண்டது.
தமிழ் சினிமாவின் முடிசூடா மன்னனாக விளங்கிய எம்.ஜி.ஆர், திரையுலகில் நுழைந்து தன் முகம் காட்டுவதற்குள் 30 வயதைத் தாண்டியிருந்தார்.
நடிகவேள் எம்.ஆர்.ராதா திரையுலகில் உச்சத்தில் இருக்கும்போதே, சினிமாவுக்கு முழுக்குப் போட்டுவிட்டு, நாடகங்களில் நடிக்க ஆரம்பித்து, 12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சினிமாவுக்கு வந்தார்.
இப்படியான வினோதங்களில் இன்னொன்றையும் சேர்த்துக்கொள்ளலாம். ஒரே ஒரு படத்துக்காக ஓர் இயக்குனர் காலம் முழுவதும் போற்றப்பட்டார், கொண்டாடப்பட்டார் என்றால், அந்தப் பெருமை ருத்ரய்யாவை மட்டுமே சேரும். அந்தப் பெருமைக்குரிய ருத்ரய்யா நேற்று மறைந்துவிட்டார்.
ருத்ரய்யா இயக்கியது இரண்டே படங்கள்தான். ‘அவள் அப்படித்தான்’ மற்றும் ’கிராமத்து அத்தியாயம்’. ரஜினி, கமல், ஸ்ரீப்ரியா என்று அன்றைக்கு உச்சத்தில் இருந்த மூன்று பெரிய திரைநட்சத்திரங்களின் கால்ஷீட் கிடைக்கும்போது, ருத்ரய்யா நினைத்திருந்தால் வெற்றிகரமான ஒரு கமர்ஷியல் சினிமாவைக் கொடுத்திருக்கமுடியும். ஆனால் தனித்துவமான ‘அவள் அப்படித்தான்’ என்ற திரைப்படத்தைக் கொடுத்ததால்தான் ருத்ரய்யா தமிழ் சினிமா வரலாற்றில் அழிக்கமுடியாத ஆளுமையாக இடம் பிடித்திருக்கிறார். ‘அவள் அப்படித்தான்’ படம் பலவிதங்களில் தனித்துவம் பெற்றது,
தமிழ் சினிமாவும் தமிழ் மனநிலையும் பெண், பெண்மை குறித்து உருவாக்கிய கற்பிதங்களை அடித்து நொறுக்கியதுதான் அந்தப் படத்தின் முதல் வெற்றி. பெண்கள் எப்போதும் ஆண்களால் ஆபத்துக்காலத்தில் காப்பாற்றப்பட வேண்டியவர்கள், வெட்கமும் நாணமும் பின்ன குழையக் குழைய நடக்கவேண்டியவர்கள், படித்த பெண் திமிர் பிடித்தவள், பெண்கள் ஆண்களைப் போல் உடை அணியக்கூடாது, பெண்களின் தாலி ஆர்.டி.எக்ஸ், அணுகுண்டைவிட வலிமையான ஆயுதம், பெண்ணின் தாலி மீது யாராவது கை வைத்தால் போதும், இடி இடித்து, மின்னல் மின்னி, கோயில் மணிகள் தானாக அடித்து பிரளயமே உருவாகும், காதலிக்கும்போதும் டூயட் காட்சிகளிலும் நவீன ஆடைகளும், திருமணம் ஆனபிறகு தழையத் தழைய புடவையும் அணிபவள்தான் பெண் என்றெல்லாம் தமிழ் சினிமா உருவாக்கிவைத்த பிம்பங்கள் ஏராளம்.
ஆனால் ‘அவள் அப்படித்தான்’ அதையெல்லாம் அடித்து உடைத்தது. பெண்ணுக்கான சுயத்தை இயல்பாக முன்வைத்தது. ஒரு பெண்ணுக்கு ஒருமுறைதான் காதல் வரும் என்ற அபத்தமான சூத்திரத்தைத் தகர்த்தது.
எல்லா தமிழ் சினிமாக்களிலும் பெண்களின் வாழ்க்கையை ஆண்களே தீர்மானித்துக்கொண்டிருக்க, ‘அவள் அப்படித்தான்’ சுயமாகத் தீர்மானிக்கும், ஆளுமை மிக்க பெண் பாத்திரத்தை முன்வைத்தது.
கற்பு, கலாசாரம் என்ற கற்பிதங்களைத் தாண்டி பாலியலை வெளிப்படையாகப் பேசியது. ஆண்களின் வஞ்சத்தைச் சுட்டிக்காட்டியது. இன்னொருபுறம் போலி முற்போக்கின் ஆர்வக்கோளாறுகளையும் மிகைத்தன்மையையும் விமர்சித்தது.
”வித்தியாசமா இருக்கிறமாதிரி காட்டிக்கிறது ஒரு ஃபேஷன்” என்ற ஒரு வசனம் போதும். ‘அவள் அப்படித்தான்’ படத்தின் பலங்கள் என்றால் தனித்துவமான கதை, கூர்மையான வசனங்கள், சிறந்த ஒளிப்பதிவு மற்றும் இசை எனப் பல விஷயங்களைச் சுட்டிக்காட்ட முடியும். கறுப்பு - வெள்ளைத் திரைப்படங்களின் இறுதிக்காலகட்டம் அது. ஆனாலும் ‘அவள் அப்படித்தான்’ ஒளிப்பதிவுக்கான சிறந்த விருதைப் பெற்றது.
வணிகரீதியாக ‘அவள் அப்படித்தான்’ வெற்றிகரமான படமில்லை. அதேநேரத்தில் வெளியான கமல்ஹாசனின் ‘சிவப்பு ரோஜாக்கள்’ மாபெரும் வெற்றியடைய, ‘அவள் அப்படித்தான்’ மோசமான எதிர்வினைகளையே சந்தித்தது. அதற்கு முக்கியமான காரணம், தமிழ் சினிமா ரசிகர்கள் ஊறிப்போயிருந்த பண்பாட்டு போலித்தனத்தை, நிர்வாணமாக அது அம்பலப்படுத்தியதுதான். ஆனால் அந்த நேரத்தில் சென்னைக்கு வந்திருந்த, இந்தியாவின் மிகமுக்கியமான இயக்குனர்களில் ஒருவரான மிருணாள்சென், ‘அவள் அப்படித்தான்’ படத்தைப் புகழ்ந்து பேட்டியளித்திருக்கிறார்.
ரஜினி தான் நடித்த சிறந்த படங்களாக ‘முள்ளும் மலரும்’, ‘ஆறிலிருந்து அறுபது வரை’ ஆகியவற்றைக் குறிப்பிடும்போது ‘அவள் அப்படித்தானை’ப் பெரும்பாலும் குறிப்பிடுவதில்லை. ஆனால் உண்மையில் ரஜினிக்கு இது முக்கியமான படம். ரஜினி அவ்வளவு எதார்த்தமாக நடித்து அசத்தியிருப்பார். கமலின் திரையுலகச் சாதனை பற்றிக் குறிப்பிடுகிற பலரும்கூட ‘அவள் அப்படித்தான்’ படத்தைக் குறிப்பிடுவதில்லை. ஆனால் நடிப்பைத் தாண்டி, இந்தப் படம் உருவாகுவதற்கு ஒவ்வொருகட்டத்திலும் கமல் உழைத்திருக்கிறார். ஸ்ரீப்ரியாவுக்கு இது மிக மிக முக்கியமான படம் என்பதைச் சொல்லவே தேவையில்லை.
தமிழ் சினிமா ரசிகர்களும் சினிமாக்காரர்களும்கூட கவனம் செலுத்தாத ‘அவள் அப்படித்தான்’ திரைப்படம் இன்னமும் பேசப்படுகிறது, கொண்டாடப்படுகிறது, விவாதிக்கபடுகிறது என்றால் அதற்கு முக்கியமான காரணம் நவீன இலக்கிய வெளியில் தொடர்ச்சியாக இயங்கிவரும் திரைவிமர்சகர்கள் அந்தப் படத்தைப் பற்றி எழுதி எழுதிக் கவனப்படுத்தியதுதான் என்பதை நன்றியுடன் நினைத்துப்பார்க்கவேண்டும்.
‘அவள் அப்படித்தான்’ உள்ளடக்கத்தைப் போலவே அது படமாக்கப்பட்டவிதமும் சிறந்த முன்மாதிரிதான். இந்தப் படத்துக்கென்று தனியாக காஸ்ட்யூம் டிசைனர் இல்லை. ரஜினியும், கமலும், ஸ்ரீப்ரியாவும் அன்றைக்கு என்ன உடை அணிந்துவருகிறார்களோ, அதுதான்
அன்று எடுக்கப்பட்ட காட்சிக்கான உடை. இதேபோல் ‘அவள் அப்படித்தா’னுக்கு இன்னொரு தனித்துவமும் இருக்கிறது. முதன்முதலாக ஓர் ஆவணப்பட இயக்குனரை நாயகப் பாத்திரம் (கமல்) ஆக்கியிருப்பார் ருத்ரய்யா. உண்மையில் அன்றைய தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஆவணப்பட இயக்குனர் என்ற வகையினத்தைப் பற்றித் தெரியுமா என்றுகூட தெரியவில்லை. ஆனால் இவையெல்லாம் ருத்ரய்யாவின் துணிச்சலால்தான் சாத்தியமானது.
அவர் இயக்கிய இரண்டு படங்களில் இரண்டாம் படமான ’கிராமத்து அத்தியாயம்’ அவருக்கு எந்த வகையிலும் பெருமை சேர்க்கவில்லை. அது முதல் படத்திற்கு மாறாக முற்றிலும் சுமாரான படம் என்றுதான் சினிமா விமர்சகர்கள் பதிவு செய்கிறார்கள். ஒரு வெற்றிகரமான இயக்குனராக இல்லாததாலோ என்னவோ அதற்குப்பிறகு ருத்ரய்யா படங்கள் எதையும் இயக்கவில்லை. ஆனால் ருத்ரய்யா என்ற ஆளுமையை நினைப்பதற்கும், கொண்டாடுவதற்கும், எதிர்காலத் தலைமுறைக்குக் கற்பிப்பதற்கும் ‘அவள் அப்படித்தான்’ மட்டுமே போதும்/
இளையராஜாவின் இசையில் என்றும் நம் நினைவுகளை இனிக்கவைக்கும் ‘அவள் அப்படித்தான்’ பாடல் வரிகள் இவை...
உறவுகள் தொடர்கதை
உணர்வுகள் சிறுகதை
ஒருகதை என்றும் முடியலாம்.
முடிவிலும் ஒன்று தொடரலாம்
இனி எல்லாம் சுகமே!
ருத்ரய்யா காலாகாலமும் நம் நினைவுகளில் தொடரக்கூடியவர்.
Kamal has spoken about this movie many times in the past. He has also helped to get this movie out. That's because he understood this back in the day. Many of this recent interviews reflects this sensibility. But one thing to note -- in any media article whenever Kamal & Rajini are mentioned together it is always Rajini, Kamal. Never the other way around, even by mistake. But, undoubtedly, Kamal has been the box office king for a much longer time. The last 10 years were probably different.
http://www.thehindu.com/features/cin...cle6615265.ece
Kamal's perspective....A big contrast to the Vikatan story
Quote:
Kamal Haasan pays homage to Rudhraiya, director of Aval Appadithaan, who passed away earlier this week
“I first heard of director Rudhraiya from my mentor and writer Ananthu as this ‘brilliant student from the film institute.’ Of course, back then, we all knew him by his real name — Arumugam. He was this dashing young gold medallist from the Chennai film institute. He was also the students’ union leader and had the reputation of being a rebel. He made it quickly into our inner circle, a group of people driven by the passion to transform the world of Tamil cinema, such as myself, R. C. Shakthi, and Ananthu. In fact, there was a time when people would dread our meeting, as they knew that we’d be busy talking for hours together. One of my earliest memories of Arumugam has him helping me settle into the role of Prasanna, the protagonist with leftist views, in Apoorva Raagangal. A man with similar beliefs, he offered me invaluable advice.
I remember the conversations we would have back then. Films by directors such as Godard, Polanski, Rossellini, and Bresson featured regularly in our afternoon conversations. His connections with the Chennai film institute ensured that we were able to procure foreign films from there and send them a day later to the Pune film institute after watching them. It was like a Woodstock festival at Eldam’s Road. We were driven to make a film that we could be proud of, a film that would elevate our industry. The result: Aval Appadithaan.
I remember him as a man driven by a lot of anger. That’s perhaps why he rechristened himself Rudhraiya. His debut film was a pet project of our gang. That differentiated all of us from being just talkers. We were also doers. For a film that was shot mainly during my spare time (it was a year when I was acting in more than 20 films), we managed to give it great touches. The opening scene when I look into the camera and say “Konjam left-la ukaarunga” was meant as an encouragement to the audience to have leftist leanings. For a project born out of anger against the mainstream content of Tamil cinema, it could have easily turned out to be a whiny film, but it didn’t. Of course, the lack of finance meant it wasn’t a technically great film. Ilaiyaraaja was busy, and yet, we managed to arm-twist him into composing music.
It was amazing that during such a time, Rudhraiya, as he would have liked to be called in this piece, brought all of us together. He got us shooting with whatever camera we could lay our hands on. The good intention of the project meant that people like Rajini and Sripriya agreed to work, even though there was very little money in it. Ananthu and he wrote about women’s liberation at that time. Even when shooting, we would discuss so much about foreign cinema. Before a shot, for example, we could be heard asking each other how Godard would probably shoot that scene, how much exposure would he have used… We shot the film in two-hour sessions over four-five months, and when it came out, the result was amazing.
I was supposed to have acted in his second film, Raja Ennai Mannithuvidu, which unfortunately didn’t take off. It was a great story, but my work in films such as Sagalakalavallavan thwarted our coming together again. The industry had also humbled me a bit after Raja Paarvai. He didn’t take kindly to my acting in Sagalakalavallavan. And I remember patiently trying to calm his outburst by explaining that we needed money to make good films, and the commercial films I had taken to acting in, were only a means to that end. In its place, he made Gramathu Athiyayam and I had a few disagreements with him over it. I liked the idea, but felt that Aval Appadithaan’s synergy wasn’t there.
He was a different man in a way. It’s a pity that we mainly remember and herald the commercial successes more than the critical ones. He had so many more films in him, but could only make those two. This is why the West has festivals like Sundance that ensure such people aren’t left frustrated. Perhaps the strong revival of films like Aval Appadithaan will force people to consider bringing in an alternative movement, an alternative platform for parallel films.
He was also a man who took fierce pride in his work. He wouldn’t settle for working under somebody else. He knew so much about cinema and expected to take control. The camaraderie that was part of Aval Appadithaan, I think, he expected from other films. But it was not to be.
I met him again a year ago. Even during his last years, it was clear he hadn’t given up hopes of making another movie. Moviemaking, as many of us know, is an addiction. Some have stepped away, and some others keep trying. He belonged to the second category and I respect him for it. He needed more help from the industry. Just like Bharati will forever be remembered for his poetry, Rudhraiya will forever be remembered for the great film he made.
The world will remember him for Aval Appadithaan, a film that shook the foundations of the Tamil film industry and still does. College students still watch it and generations are scratching their heads over how we managed to bring it out. I will remember him for his passion for cinema. He was one of those directors who wouldn’t mind holding a reflector aloft, if it meant that a scene would look better.”
will search market for cd of Aval Appadithan, never seen it. panner pushpangale was sung by nammavar with such innocence and heart-rendering voice. some songs touch our soul and remains there which we recollect all of a sudden for reasons unknown. Uravugal Thodarkathai is one such song for me, other one is anbu megame ingu odiva, dont know MD of it.
Fantastic movie. Superb performancea by all 3 leads ... especially sripriya.
கமலஹாசனின் சினிமா வாழ்க்கை புத்தகமாகிறது. பிரசாத் பிலிம் அகாடமி முதல்வர் ஹரிகரன் இந்த புத்தகத்தை எழுதுகிறார்.
கமல் சினிமாவில் அறிமுகமானதில் இருந்து இன்று வரை நடித்த படங்கள் பற்றிய விவரங்கள் இந்த புத்தகத்தில் இடம் பெறுகிறது.
அவ்வைசண்முகி, அபூர்வ சகோதரர்கள், ஆளவந்தான், தேவர் மகன், தசாவதாரம் உள்ளிட்ட படங்களில் வெவ்வேறு வேடங்கள் ஏற்று நடித்தது. சினிமாவில் சந்தித்த ஏற்றத் தாழ்வுகள், வெற்றிகரமாக ஓடிய படங்கள் பற்றிய விவரங்கள். கேரக்டர்களில் நடிப்பதற்காக மேற்கொண்ட மெனக்கெடல்கள் போன்ற அனைத்து விவரங்களும் இந்த புத்தகத்தில் இடம் பெறுகிறது. விரைவில் இது ரிலீசாக உள்ளது.
இந்த புத்தகம் குறித்து கமலஹாசன் கூறும்போது, ஹரிகரன் சினிமா சம்பந்தமான என் தொழிலை நெருக்கமாக இருந்து பார்த்துள்ளார். அவர் எழுதியுள்ள புத்தகம் முழுக்க என் சினிமா வாழ்க்கை சம்பந்தமானதாக இருக்கும். தனிப்பட்ட சொந்த வாழ்க்கை இதில் இடம் பெறாது. சொந்த வாழ்க்கை பற்றி எழுதினால் சிலர் மனதை புன்படுத்த வேண்டி இருக்கும்.
அதில் எனக்கு விருப்பம் இல்லை. இந்த புத்தகம் என் சினிமா வாழ்க்கை சம்பந்தப்பட்டதாக இருக்கும் என்றார்.
#IFFI2014 pays tribute to great dancers in Indian cinema; dance performance by Actor-dancer shri Vineet:Live from Goa
http://i1277.photobucket.com/albums/...ps18c92293.jpg
Second that. SriPriya was kinda playing the lead role in my opinion. What a perspective in early 80's! Rajini-Kamal interactions were again quite entertaining with one of those sarcastic villain roles played by Rajini.
I remember a scene where he tells Kamal 'poda fool - she's a sex crazed bit**' !!
Sorry to point out something that might seem trivial. I feel kamal rajni is the correct order by seniority in the industry. At least in films like aval appadithaan ..... where KH had a bigger role. Rajni kamal is ok in moondru mudichu for example.
And to be shedding off chaunisms ..... i would say sripriya, kamal and rajni ..... for this particular movie.
Anyway .... its a matter of personal opinion. No big deal.
சம்பிரதாய தமிழ் திரைக்கதை அமைப்பை மாற்றியமைப்பதில் கமலுக்கு தனி பங்குண்டு.
- எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணன்.
திரைகதையாடல் என்ற வகையில் அவர் செய்துள்ள முயற்சிகள் இந்திய சமூகத்தின் சம கால நிகழ்வுகளின் எதிர்வினை கொண்டதாக அமைந்துள்ளன. 80 ஆண்டு தமிழ் சினிமாவில் எழுத தெரிந்த நடிகர் என்று குறிப்பிட்டு சொல்லும்படியாக உள்ள கலைஞர் கமல்ஹாசன், நடிகராக மட்டுமல்லாமல் தன்னை ஒரு கவிஞராக, இலக்கிய வாசகராக, திரைக்கதை ஆசிரியராக, வசனகர்த்தாவாக தனது படைப்பு திறனை வெளிபடுத்துக் கொண்ட முன்னோடி ஆளுமை. சினிமாவின் தொழில் நுட்ப வளர்ச்சியை உணர்ந்து, அதை பயன்படுத்திக் கொள்வதிலும் கமலே முன்னோடி. ஆவிட் எனப்படும் நான்லீனியர் எடிட்டிங் துவங்கி ஸ்பெஷல் எபெக்ட், டிஜிட்டல் பிலிம் மேக்கிங், ஆன்லைன் எடிட்டிங், இன்று ரெட் காமிரா வரை சினிமாவின் புதிய தொழில் நுட்பங்களை உள்வாங்கிக் கொண்டு, அதை தனது திரைப்படங்களுக்கு சரியாக பயன்படுத்திக் கொள்கிறார். அதை போலவே ஒப்பனை மற்றும் வட்டார பாஷையை அதன் உச்சரிப்பு சுத்தத்தோடு பேசுவதில் அவர் காட்டும் அக்கறையும் கவனமும் தனித்துவமானது. தென்னிந்திய மொழிகள் யாவும் அவர் நடித்துள்ளார். குறிப்பாக மலையாள திரையுலகில் அவருக்குள்ள நெருக்கமும் உறவும் யதார்த்தமான கதைகளும் நிகழ்வுகளையும் சினிமாவாக்குவதற்கான உந்துதலை அவருக்குள் உருவாக்க கூடும். பக்கம் பக்கமாக வசனம் பேசுவது, குரலை உயர்த்தி கர்ஜித்துக்கொண்டிருக்கும் காலத்தில் பேசும்படம் என்ற மௌன படத்தில் அவர் நடித்ததே அவரது நடிப்பாற்றலுக்கு சான்று. ஒரு நடிகனாக தனது உடலையும் பாவனைகளையும் கொண்டு வசனங்களின்றி தன்னை முழுமையாக வெளிபடுத்திய விதம் அவரது நுண்திறனை வெளிபடுத்தியது. — எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணன்.
http://i1277.photobucket.com/albums/...ps8b68c63d.jpg
Kalakkal simple Kamal
சகலகலா வல்லவன் பட வெற்றி ருத்ரய்யாவுடன் நான் சேர்வதைத் தடுத்தது!- கமல்
இயக்குநர் ருத்ரய்யாவின் முதல் படத்தின் நாயகனான கமல் ஹாஸன், அவருடனான தனது அனுபவங்கள் நினைவுகளை தி இந்து நாளிதழில் பகிர்ந்து கொண்டுள்ளார்.
இதோ கமலின் நினைவுப் பகிர்வு... "சினிமாவில் எனது வழிகாட்டிகளில் ஒருவரான அனந்து தான் முதன்முதலில் ருத்ரய்யா குறித்து என்னிடம் பேசியது. 'திரைப்படக் கல்லூரியிலிருந்து புத்திசாலி மாணவர்' என குறிப்பிட்டார். ருத்ரய்யாவின் இயற்பெயர் ஆறுமுகம். அவரை அப்படித்தான் நாங்கள் முதலில் அறிந்திருந்தோம். சென்னை திரைப்படக் கல்லூரியில் தங்கப் பதக்கம் பெற்ற துடிப்புள்ள இளைஞர். அங்கு மாணவர்கள் யூனியனுக்குத் தலைவராக இருந்து தீவிரமாக செயல்படும் போராளியாகவே பெயர் பெற்றிருந்தார்.
தமிழ் சினிமாவை உருமாற்ற வேண்டும் என்ற ஆர்வத்தோடு இருந்த நான், ஆர்.சி. சக்தி, அனந்து ஆகியோர் அடங்கிய எங்கள் குழுவிற்கு சீக்கிரத்திலேயே நெருக்கமானார். நாங்கள் சந்தித்தால் மணிக்கணக்கில் எங்கள் பேச்சு நீளும் என்பதால் எங்களது சந்திப்பு குறித்து அச்சப்பட்டவர்களும் இருந்தனர். அபூர்வ ராகங்கள் திரைப்படத்தில் பிரசன்னா என்ற பாத்திரத்தில் ஒன்றி நடிப்பதற்கு ருத்ரய்யா எனக்கு உதவினார். அந்தப் பாத்திரத்தைப் போலவே ருத்ரய்யாவும் இடதுசாரி கொள்கை உடையவர் என்பதால், அவரால் எனக்கு சிறப்பாக வழிகாட்ட முடிந்தது.
முதன்முதலில் ஆறுமுகத்துடன் எனது நினைவுகள் இதுவே. எங்களது உரையாடல்கள் எனக்கு ஞாபகத்தில் உள்ளன. கோடார்ட், போலன்ஸ்கி, ரோஸெலினி, பிரெஸ்ஸான் ஆகிய இயக்குநர்களது படங்கள் எங்கள் பேச்சில் அடிக்கடி வந்து போகும். சென்னை திரைப்படக் கல்லூரியில் அவருக்கு இருந்த செல்வாக்கை வைத்து, வெளிநாட்டுத் திரைப்படங்களை வரவழைத்து, பார்த்து, அதை ஒரு நாள் தாமதமாக பூனே திரைப்படக் கல்லூரிக்கு அனுப்புவோம். எல்டாம்ஸ் சாலையில் ஒரு சிறிய திரைப்பட விழாவைப் போலவே இருக்கும். நாங்கள் பெருமைபட்டுக் கொள்ளுமாறு, தமிழ் சினிமாவை அடுத்தத் தளத்திற்கு எடுத்துச் செல்லுமாறு ஒரு திரைப்படத்தை எடுக்க நினைத்தோம்.
அதன் விளைவே 'அவள் அப்படித்தான்'. கோபத்தால் உந்தப்பட்ட ஆளாக ஆறுமுகம் எனக்குத் தோன்றினார். ஒருவேளை அதனால்தான் தன் பெயரை ருத்ரய்யா என்று மாற்றிக் கொண்டார் என நினைக்கிறேன். அவரது முதல் படம் எங்கள் குழுவின் செல்லப் படமாக இருந்தது. அதனால் வெறும் பேச்சு மட்டுமல்ல, செய்தும் காட்டுவோம் என மற்றவர்களிடமிருந்து நாங்கள் வித்தியாசப்பட்டு நின்றோம். ஒரு வருடத்திற்கு 20 படங்கள் வரை நான் நடித்த காலகட்டம் அது. எனவே, என் ஓய்வு நேரத்தில்தான் படப்பிடிப்பு நடந்தது. அப்படி இருந்தும் படத்திற்கு எங்களால் சிறப்பான வடிவத்தைத் தர முடிந்தது.
அவள் அப்படித்தான் படத்தின் முதல் காட்சியில், நான் கேமராவைப் பார்த்து "கொஞ்சம் லெஃப்ட்ல உட்காருங்க" என்று கூறுவது, இடதுசாரி சிந்தனையை ரசிகர்கள் வளர்த்துக் கொள்ளவேண்டும் என ஊக்குவிக்கும் குறியீடுதான். அப்போதைய தமிழ் சினிமாவின் மீது இருந்த கோபத்தின் விளைவாகவே அவள் அப்படித்தான் துவங்கப்பட்டது. சலிப்பை ஏற்படுத்தும் படமாக அது மாற வாய்ப்பிருந்தது, ஆனால் அப்படி ஆகவில்லை. பணத் தட்டுப்பாடு இருந்ததால் தொழில்நுட்ப ரீதியில் படத்துக்கு சிறப்பு சேர்க்க முடியாமல் போனது. அப்போது, இளையராஜா பிஸியாக இருந்தார். ஆனாலும் எங்களுக்காக அவரை வலுக்கட்டயமாக இசையமைக்க வைக்க முடிந்தது. கையில் கிடைத்த கேமராவைக் கொண்டு, எங்களை வைத்து ருத்ரய்யா நடத்திய படப்பிடிப்பு ஆச்சரியமானதாக இருந்தது. எங்கள் நோக்கம் ஒழுங்காக இருந்ததால், சிறிய பட்ஜெட்டாக இருந்தாலும் அனந்து, ரஜினி, ஸ்ரீப்ரியா போன்றோர் படத்தில் இணைய ஒப்புக் கொண்டனர். பெண் விடுதலையைப் பற்றி அனந்து அப்போதே எழுதினார். படப்பிடிப்பு சமயத்திலும் நாங்கள் வெளிநாட்டுத் திரைப்படங்கள் குறித்து நிறையப் பேசுவோம். ஒவ்வொரு காட்சிக்கு முன்பும், இதை கோடார்ட் எடுத்தால் எப்படி எடுப்பார், கேமராவின் கோணம் எப்படி இருக்கும் என பேசிக் கொண்டிருப்போம். ஐந்து மாதங்கள், இரண்டு இரண்டு மணி நேரங்களாக எங்கள் படப்பிடிப்பு நடந்தது. படத்தைப் பார்த்தபோது வியப்பாக இருந்தது.
'ராஜா என்னை மன்னித்துவிடு' என்ற ருத்ரய்யாவின் இரண்டாவது படத்திலும் நான் நடிப்பதாக இருந்தது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக அந்தப் படத்தை எங்களால் தொடங்க முடியவில்லை. அந்தப் படத்தின் கதை சிறப்பாக இருந்தது. ஆனால் 'சகலகலா வல்லவன்' போன்ற படங்களின் வெற்றி, எங்கள் கூட்டணியை தடுத்தது. தமிழ் சினிமாவில் ராஜபார்வைக்குப் பிறகு என் மீதான நம்பிக்கை மிகுந்தது. அதே வேளையில், 'சகலகலா வல்லவன்' திரைப்படத்தில் நான் நடித்தது ருத்ரய்யாவுக்கு பிடிக்கவில்லை. வணிக ரீதியிலான படங்களில் நடிப்பதன் மூலம் கிடைக்கும் பணத்தைக் கொண்டுதான் நாம் நினைக்கும் சிறந்த படங்களை எடுக்க முடியும் என்று அவரை சமாதனப்படுத்தியது என் நினைவில் உள்ளது.
அப்போது அவர் 'கிராமத்து அத்தியாயம்' திரைப்படம் எடுத்தார். அதில் எங்களுக்குள் சில கருத்து வேறுபாடு நிலவியது. அந்தக் கரு எனக்குப் பிடித்திருந்தாலும், அவள் அப்படித்தானில் இருந்த அடர்த்தி அதில் இல்லை. ருத்ரய்யா வித்தியாசமான மனிதர். சிறந்த விமர்சனங்களைவிட, வணிகரீதியிலான வெற்றியையே நாம் நினைவில் வைத்துக் கொண்டாடுவது பரிதாபகரமானது. ருத்ரய்யாவிடம் பல படங்களுக்கான கதைகள் இருந்தன. ஆனால், அவரால் இரண்டு படங்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இப்படிப்பட்ட கலைஞர்கள் விரக்தியடைக் கூடாது என்றுதான் மேற்கத்திய நாடுகளில் 'சன்டான்ஸ்' போன்ற திரைப்பட விழாக்கள் நடத்தப்படுகின்றன. அவள் அப்படித்தான் படத்தை நினைவுகூர்வதன் மூலம் மாற்று சினிமாவுக்கான தளத்தை அமைக்க சிலர் முயற்சிக்கலாம்.
தனது படைப்பின் மீது அதீதமான பெருமை கொண்டவராக ருத்ரய்யா இருந்தார். வேறு யாரிடமும் பணியாற்ற அவர் விரும்பவில்லை. சினிமாவைப் பற்றி நிறைய தெரிந்து வைத்திருந்ததால், தன்னை யாரும் கட்டுப்படுத்துவதை அவர் விரும்பவில்லை. தான் கட்டுப்படுத்துவதையே அவர் விரும்பினார். அவள் அப்படித்தான் திரைப்பட தயாரிப்பில் இருந்த தோழமை, மற்ற படங்களிலும் இருக்கும் என்று அவர் நினைத்தார். ஆனால் அது நடக்கவில்லை.
ஒரு வருடத்திற்கு முன்னால் அவரை சந்தித்தேன். அப்போதும்கூட, அடுத்த படம் எடுப்பதற்கான நம்பிக்கையை அவர் விட்டுவிடவில்லை. உங்களில் சிலருக்குத் தெரிந்திருக்கலாம். படம் எடுப்பது போதையைப் போல. சிலர் விலகினாலும், சிலர் தொடர்ந்து முயற்ச்சித்திக் கொண்டே இருப்பார்கள். ருத்ரய்யா இரண்டாம் வகையைச் சேர்ந்தவர். அதற்காக அவரை நான் மதிக்கிறேன். துறையிலிருந்து அவருக்கும் இன்னும் உதவிகள் செய்யப்பட்டிருக்கலாம். பாரதியின் கவிதைகளுக்காக அவரை எப்போதும் நினைவில் வைத்துக் கொள்வது போல, ருத்ரய்யாவும் அவர் எடுத்த ஆகச் சிறந்த படத்திற்காக நினைவில் நிற்பார். தமிழ் சினிமாவின் அடித்தளத்தையே உலுக்கிய 'அவள் அப்படித்தான்' எடுத்ததற்காக இந்த உலகம் அவரை என்றும் நினைவுகூரும். இன்றும் கல்லூரி மாணவர்கள் பலர், படத்தைப் பார்த்து, இது எப்படி இவர்களால் சாத்தியமானது என்று யோசிக்கின்றனர். சினிமாவின் மீது காதல் கொண்ட ஒருவராக ருத்ரய்யா என் நினைவில் நிற்கிறார். ஒரு காட்சி சிறப்பாக வரவேண்டும் என்றால், தெர்மகோலை தூக்கிப் பிடிக்கும் வேலை செய்யவும் தயங்கமாட்டார் ருத்ரய்யா.
Read more at: http://tamil.filmibeat.com/specials/...ya-031949.html
Vishwaroopam2 and papanasam are sure shot blockbusters...worrying or uncertain thing is uthamavillain...hoping it should not be in the lines of manmadha ambu or Mumbai express...I also wanna c kamal-shankar combo again...it will be mind blowing
Kamal's greatness is he is the only actor in south India who have two kind of fan base...one people lik me who like his experimental movies like mahanadhi,vishwaroopam,thevar magan and luv virumandi,Indian,vv,thenali,pt,pks,vasool raja ,dasa etc and watch it n number of times...aboorva sagathorgaI is the best example till now how a quality commercial movie should be made..i feel he at least should do these kind of movies once in two years
K VAAI MOZHI - ULAGANAYAGAN KAMAL HAASAN Introduction
https://www.youtube.com/watch?v=k-85FRl-e6M#t=11
# Kamal Haasan with Union Minister for Minority Affairs Najma Heptullah at a seminar in Chennai, yesterday.
http://i1277.photobucket.com/albums/...ps6ac21262.jpg
what a contrast....
nammavar sitting with a central minister of minority affairs vs he having to sit with allu sullu of the same last yr for something else....
shows how matured and broadminded he was...
சார்லி மற்றும் பாஸ்கர் பேசிய காணொளிகள் நன்றாக இருந்தன..
கிரேசி மோகன் பேசும்போது இருவருக்கும் உள்ள ஆழமான நட்பு புரிந்தது.. வழக்கமான நகைச்சுவையுடன் அவர் பேசியதில் நேரம் போனதே தெரியவில்லை. காந்திக்கு சத்யமேவ ஜெயதே! என்றால் கமலுக்கு சுத்தமேவ ஜெயதே! சரியாக இருக்கும் என்றது சூப்பர்.. அதையே வாய்மையே வெல்லும் மற்றும் தூய்மையே வெல்லும்! என்று தமிழ்ப்படுத்தியது அட்டகாசம்..
"பசுத்தோல் போர்த்திய கழுதைப் புலிகள்..." - அறச்சீற்றம்!
https://www.youtube.com/watch?v=6BkRMrnxPyk
இதெல்லாம் வேற லெவல்..
நன்றி கமல்..
:notworthy:
Another video from K- Vaaimozhi..
https://www.youtube.com/watch?featur...&v=qxCaZOnjU-g
Just got Kamal 60 spl edition of Kumudam .
Fellow Kamal fans ,, worth one ..go for it.
Whats ur take on someone who has 2 of those books ..... Autographed by the Man himself ..... one sign in Tamil and the other in English. 😆
In Malayalam hardly movies make it to 175 days.
Eetta was a super hit, Madanolsavam was a trend setter and craze among youth, Chanakyan - his last movie was a hit.
Dubbed movies - Premabhishekam (Vazhve mayam) and Sagara Sangamam were also super hits.
But none of these, in my knowledge, ran 175 days.
பாடல்கள் இல்லாமல் படம் எடுக்கவே யோசித்து கொண்டிருந்த இந்திய திரையுலகத்திற்கு, வசனமே இல்லாமல் படம் எடுத்து, பொன்விழாவே காண முடியும் என்று 1987-ல் நிரூபித்து காட்டியவர் நம் உலகநாயகன்!!!
பேசும்சினிமா வந்து ஐம்பத்தைந்து ஆண்டுகளான பிறகு, பேசாத படத்தில் நடித்து சாதனை படைத்தார் நம்மவர் . படத்திற்கு 'பேசும்படம்' என்றும் பெயர் வைத்தார்.!.
27-நவம்பர்-1987 அன்று வெளியான உலகநாயகனின் புஷ்பக விமானா (கன்னடம்) / பேசும் படம் (தமிழ்) என்ற பேசாத படத்திற்கு
இன்று 27 வது ஆண்டு விழா!!!
http://i1277.photobucket.com/albums/...pse66ff6c3.jpg
Ulaganayagan Kamal hasan's is always open to any new experiments in Indian cinema. Continuing with his initiatives, Tamil superstar Kamal Haasan has bagged the remake rights of recently released super hit experimental Malayalam movie 'Ithihasa'. The actor who is highly impressed with the movie's plot is planning to remake the movie in his own banner Rajkamal films. Kamal's eldest daughter, actress Shruthi Haasan will reprise the lead role played by Anusree in the original, while an young star from Tamil cinema will do the male lead.
http://www.indiaglitz.com/Kamal-Bags...am-news-119645