http://s18.postimg.org/lo82yd8bt/csss.jpg
Printable View
இந்த வார குமுதம் இதழில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மதுரை வீரனின்
உண்மை கதையை விளக்கி எழுதி, அத்துடன் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.-பானுமதி
நடித்து சரித்திர சகாப்தம் படைத்த மதுரைவீரன் படத்தின் ஸ்டில் ஒன்றினை
பிரசுரம் செய்திருந்தனர். அதனை நமது நண்பர்களின் பார்வைக்கு பதிவிடுகிறேன்
http://i61.tinypic.com/29pbw4n.jpg
http://i59.tinypic.com/aw6y1.jpg
தமிழகத்தில் அதைப் போன்ற முரட்டு சாட்சியங்கள் நிறையவே பரவிக்கிடக்கின்றன .
நன்றி.:குமுதம்வார இதழ்.
http://i58.tinypic.com/2mwth04.jpg
நிருத்திய சக்கரவர்த்தி எம்.ஜி.ஆர். அவர்களின் மகாதேவி -வெளியாகி 57 ஆண்டுகள் நிறைவு ஆனது.
வெளிவந்த தேதி :22/11/1957.
சென்னையில் 6 தியேட்டர் களில் வெளியான முதல் படம்.
புரட்சி நடிகர் தோன்றும் காட்சிகள் விருவிருப்பாகாவும், சுறுசுறுப்பாகவும் இருந்தன.
வில்லன் பி.எஸ். வீரப்பாவுடன் மோதும் காட்சிகள் படு த்ரில்லிங்
இனிமையான பாடல்கள் நிறைந்த படம்.-
1. கண்மூடும் வேளையிலும் கலை -ஏ .எம்.ராஜா -சுசீலா பாடிய இனிய காதல் கீதம்.
2.குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் - டி.எம்.எஸ். குரல் இனிமையாக இருக்கும்.
3. தாயத்து அம்மா தாயத்து -டி.எம்.எஸ். பாடல்.
4.காக்கா காக்கா மை கொண்டு வா -எம்.எஸ். ராஜேஸ்வரி குழந்தை பாடுவது போல்
அருமையாக பாடினார்.
5.சிங்கார புன்னகை - எம்.எஸ். ராஜேஸ்வரி பாடிய இனிய தொட்டில் பாடல்.
6. சேவை செய்வதே ஆனந்தம் -டி.எம்.எஸ். & எம்.எஸ். ராஜேஸ்வரி பாடிய
தேனான காதல் பாடல்.
7. தந்தனா பாட்டு பாடனும் -சந்திரபாபு & எம்.எஸ். ராஜேஸ்வரி பாடிய நகைச்சுவை பாடல்.
8. உன் திருமுகத்தை - சந்திரபாபு & எம்.எஸ். ராஜேஸ்வரி பாடிய மற்றொரு நகைச்சுவை பாடல்.
வில்லன் வீரப்பாவின் வசனங்கள் மற்றும் வில்லத்தனமான சிரிப்பை கண்டு
பெண்கள் மிகவும் பயந்து ரசித்த காலம்.
அடைந்தால் மகாதேவி அல்லது மரணதேவி .
எம்.என்.ராஜம் அத்தான் என அழைக்கும்போது , இந்த சத்தான வார்த்தையில்தான் உன் அத்தான் செத்தான்.
மகாதேவியுடன் பேசும் வசனம் - என் இச்சைக்கு நீ இணங்கா விட்டால் உன் குங்குமம் அழியும் . மஞ்சள் இழப்பாய் . உன் மணவாளன் பிணமாவான் .
நீ தனியாவாய். எனக்கு கனியாவாய் .
மேற்கண்ட வசனங்கள் அந்த காலத்தில் மிக பிரபலம் .
விஸ்வநாதன் ராமமூர்த்தி இசைஅமைப்பு டைட்டில் காட்சிகளிலும் ,சண்டை காட்சிகளிலும் பல காட்சிகளில் பின்னணி இசை அருமை.
மக்கள் திலகம் தோன்றும் காட்சிகள் குறைவானது போல் ஒரு உணர்வு.
படத்தின் கதைஅமைப்பு அவ்வாறு இருந்தது.நடிக பேரரசரின் நடிப்பு உணர்ச்சிகரமாகவும் , குறிப்பாக மகாதேவியை தேடி வரும் காட்சிகள் , பார்வை இழந்தபின் வரும் காட்சிகள், இளவரசரை காப்பாற்ற துடிக்கும் காட்சிகள் , பாம்புகளை வரவழைத்து மகுடியால் ஊதிய வண்ணம் விஷத்தை முறியவைக்கும் காட்சிகள் ஆகியன என்னை கவர்ந்த காட்சிகள்.
1974 ல் முதன் முதலாக பிரபாத் அரங்கில் பார்த்தேன். பின்பு பல அரங்குகளில்
பார்த்து ரசித்த அனுபவம் உண்டு..
1970லிருந்து 2000 ஆண்டுகள் வரை பல அரங்குகளில் சக்கை போடு போட்ட படம்.
மறுவெளியீடுகளில் வசூல் சாதனை புரிந்த படம்.
ஆர். லோகநாதன்.
உயர்நீதிமன்ற நீதிபதி திரு.கற்பக விநாயகம் அவர்களின் நூல் வெளியீட்டு விழா
சென்னை தி.நகர் பி.டி.தியாகராயர் மண்டபத்தில் கடந்த ஞாயிறு (23/11/2014)
அன்று நடைபெற்றது.
நிகழ்ச்சியில் பிரபல இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் , உயர்நீதிமன்ற நீதிபதிகள்
கோகுலகிருஷ்ணன், அருணாசலம், ராமசுப்ரமணியம், சென்னை மற்றும் புதுடெல்லி வழக்கறிஞர்கள் , முன்னாள் அமைச்சர் ஆர். எம்.வீரப்பன், தினமணி ஆசிரியர்
திரு. வைத்தியநாதன், திரு. ராணி மைந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர் .
திரு. எஸ். பி. முத்துராமன் அவர்கள் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களுடன்
நெருங்கிய தொடர்பு வைத்திருந்தவர் திரு. கற்பக விநாயகம் என பேசினார்.
உயர்நீதிமன்ற நீதிபதி கோகுலகிருஷ்ணன் அவர்களும் , திரு. கற்பக விநாயகம்
அவர்கள் இந்த நிலைக்கு வருவதற்கு முக்கிய காரணமாக திகழ்ந்தவர் முன்னாள்
முதல்வர் எம்.ஜி.ஆர். அவர்கள் என பாராட்டி பேசினார்.
தினமணி ஆசிரியர் திரு. வைத்தியநாதன் பேசும்போது , மனித சமுதாயத்திற்கு
நல்வழி காட்டுவதுபோல் , தன் திரைப்படங்களில் பல நல்ல கருத்துக்கள், பாடல்கள்
மூலம் மக்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டியவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள்.
தன்னம்பிக்கைக்கு அர்த்தம் என்னவென்றால் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். பாடல்கள்தான் என்பதற்கு மறு பேச்சுக்கு இடமில்லை.அப்படிப்பட்டவரின் மடியில்
தவழ்ந்த செல்ல பிள்ளைதான் திரு. கற்பக விநாயகம் அவர்கள் என்று புகழாரம்
சூட்டினார்.
http://i62.tinypic.com/wr046.jpg
சென்னை நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள வேலு மிலிடரி ஓட்டலின் உரிமையாளர் எம்.ஜி.ஆர். பேரவை செயலாளர் .
ஓட்டலின் உள்ளே வைக்கப்பட்டுள்ள புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். புகைப்படங்கள்
நமது நண்பர்களின் பார்வைக்கு
http://i62.tinypic.com/30rkyv9.jpg
தினமணி நாளிதழ் 24/11/2014 அன்று வெளியிட்ட செய்தி
http://i60.tinypic.com/2gxid5y.jpg
இந்தியன் எக்ஸ்ப்ரஸ் நாளேட்டில் 24/11/2014 அன்று பிரசுரம் ஆன செய்தி.
http://i57.tinypic.com/2uorl1s.jpg
டியர் ரவிQuote:
அன்புள்ள திரு கலை வேந்தன் - MT திரியில் பதிவு போட என்னை அழைத்தற்கு மிகவும் நன்றி . உங்கள் கை வண்ணத்தில் தொடங்கி உள்ள 12வது பாகம் பல வெற்றி பாதைகளை கடக்கும் என்பதில் சந்தேகம் இல்லை - ஒரு சமயம் நான் நினைப்பதுண்டு - இரு பெரும் தலைவர்களும் இன்று நம்மிடையே இல்லை - மனம் நிறைந்து வாழ்கிறார்கள் என்பது வேறு விஷயம் -- ஆனால் இன்னும் எவ்வளவு நாட்கள் தான் போட்டியும் , பொறாமையுடன் , வேண்டாத விருந்தாளிகளாக வாழப்போகிறோம் ? - இருவரும் திரை உலகை பல ஆண்டுகள் ஆண்டவர்கள் - பல வெற்றிகளை சந்தித்தவர்கள் , ஒற்றுமையை கடை பிடித்தவர்கள் - ஆனால் இன்னும் நமக்கு ஏன் அந்த பக்குவம் வரவில்லை? நாம் வாழ்வது தமிழ் நாடு என்பதினாலா ? அவர்கள் இருவரிடமும் இருக்கும் பல நல்ல திறமைகளை இரண்டு திரிகளிலும் பகிர்ந்து கொள்ளலாமே பிறர் மனம் நோகாமல் ------ இது ஒரு சின்ன வேண்டுகோள் மட்டுமே - உடனே நடக்க வேண்டும் என்று சொல்லவில்லை - நடந்தால் நான் அடையும் மகிழ்ச்சிக்கும் அளவு இருக்காது - பல திறமையானவர்கள் MT திரியில் இருப்பதை உணர்கிறேன் - எல்லோரும் ஒன்று சேர்ந்தால் பல திறமையான பதிவுகளை எல்லோருக்கும் வழங்கலாமே - நமக்கு ஒரு பெரிய முட்டுக்கட்டையாக இருப்பது இந்த வசூல் சம்பந்தப்பட்ட விஷயங்கள் மட்டுமே - அதை தவிர்த்து பார்த்தால் இருவரை பற்றி சொல்வதற்கு ஒரு கோடி விஷயங்கள் உள்ளன ---- மதுரகானத்தில் நான் போட்ட இந்த பதிவை பார்த்து இருக்க மாட்டீர்கள் - உங்களுக்காகவும் , இன்னும் சந்திக்காத MT திரியின் பல நண்பர்களுக்கும் இதை இங்கே பதிவிடுகிறேன் - எல்லோருக்கும் என் அன்பார்ந்த வணக்கங்கள்
அன்புடன்
ரவி
====
தங்களுடைய பதிவிற்கு முதலில் என் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
வெற்றி தோல்வி என்பது சந்தர்ப்ப சூழ்நிலைகளால் அமைவது. அந்தந்த நிலைகளில் ஒரு தலைவர் எடுக்கும் முடிவுகள் மக்களிடம் வரவேற்புப் பெறவில்லை என்பதற்காக அவர் தலைவரில்லை என்றோ, அவருக்கு செல்வாக்கில்லை என்றோ அனுமானித்து விடமுடியாது.
நான் முன்னரே கூறியது தான். இருந்தாலும் மீண்டும் கூற விரும்புகிறேன்.
சிவாஜி எம்.ஜி.ஆர். இருவருமே சினிமாவைத் தாண்டி பொது வாழ்க்கையிலும் தங்களை அர்ப்பணித்துக் கொண்டவர்கள். தங்கள் ரசிகர்களுக்கு வழி காட்டியவர்கள். இயக்கத்தை அடையாளம் காட்டியவர்கள். நல்வழிப்படுத்தியவர்கள். இன்று வரையிலும் இருவர் செல்வாக்குமே குறையவில்லை என்பதே உண்மை. அரசியலில் தைரியமாக இறங்கி வெற்றி தோல்வியைப் பற்றிக் கவலைப்படாமல் சமுதாயம் நன்றாக இருக்க வேண்டும் என்கின்ற எண்ணத்தில் தங்கள் ரசிகர்களை வழி நடத்தி, தங்களுக்குப்பின்னரும் அவர்களைத் தங்கள் வழியில் நடக்க வைத்துள்ள மிகப் பெரும் தலைவர்கள். வருவேனா மாட்டேனா என்றெல்லாம் ரசிகர்களின் மேல் அவநம்பிக்கையோடும் அரைகுறை மனதோடும் சஸ்பென்ஸ் வைக்காமல் தைரியமாக இரு பெரும் இயக்கங்களுக்கு ஆதரவளித்து அரசியலில் தங்கள் நிலைப்பாட்டை வெளிப்படையாகக் கொண்டு சென்றவர்கள்.
தங்களுக்குப் பின்னரும் தங்கள் வழியில் தங்கள் தொண்டர்களை தக்க வைத்துக் கொண்டு பின்பற்றவும் வைத்துள்ள இந்தியாவின் இரு பெரும் தலைவர்கள் சிவாஜியும் எம்.ஜி.ஆரும் மட்டுமே.. இந்தப் பெருமை வேறெந்தத் தலைவருக்கும் கிடையாது, பெருந்தலைவர் பெயர் சொல்வோராகட்டும், பேரறிஞர் பெயர் சொல்வோராகட்டும், இவர்கள் பெயர்கள் சொல்லப்படுவதோடு சரி. பின்பற்ற யாருமில்லை என்பதே இன்றைய நிலை.
இந்த அடிப்படையில் யார் உயர்ந்தவர் என்ற தர்க்கத்திற்கு இடமில்லாமல் இருவருமே சமம் என்கின்ற மனப்பான்மையோடு சிவாஜி எம்.ஜி.ஆர். ரசிகர்கள் தொடர்ந்து பரஸ்பரம் கருத்துப் பரிமாறிக்கொண்டால் என்றுமே அது நன்மை பயக்கும் என்பதில் ஐயமில்லை.
திரியின் ஒவ்வொரு பாகத்தையும் அர்ப்பணிப்பு உணர்வோடு கூடிய பங்களிப்பில் வெற்றிகரமாக கொண்டு செல்லும்அனைத்து எம்.ஜி.ஆர். ரசிகர்களுக்கும் என் உளமார்ந்த பாராட்டுக்கள்.
இனிய நண்பர் திரு ராகவேந்திரன் சார்
http://i58.tinypic.com/24eqa7o.jpg
மக்கள் திலகமும் நடிகர் திலகமும் எந்த அளவிற்கு ஒற்றுமையாக இருந்தார்கள் என்பதற்கு கீழ் கண்ட பாராட்டு பதிவுகளே சாட்சி . மக்கள் திலகம் எம்ஜிஆர் திரிக்கு தங்களின் பாராட்டுக்கு நன்றி .
http://i60.tinypic.com/b9hfzt.jpg[IMG]http://i59.tinypic.com
நண்பர்களுக்கு வணக்கம்.
மக்கள் திலகம் திரி 12ம் பாகத்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ள சகோதரர்கள் திரு.செல்வகுமார், திரு.லோகநாதன் ஆகியோருக்கு மிக்க நன்றி.
திரு.லோகநாதன் சார் பதிவிட்டுள்ள நீதியரசர் கற்பக விநாயகம் அவர்களின் நூல் வெளியீட்டு விழா படங்கள், செய்திகள் அருமை. மகாதேவி விமர்சனம் பிரமாதம் சார்.
திரு.எஸ்.வி.சார் அவர்களின் சிரித்து வாழ வேண்டும் படம் பார்த்த அனுபவம் நாமும் அன்று அங்கே இருந்தது போலிருந்தது.
பண்பாளர் திரு.ராகவேந்திரா அவர்களின் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது.
திரு. திருப்பூர் ரவிச்சந்திரன் அவர்கள் பதிவிட்ட படங்களும் செய்திகளும் அற்புதம்.
திரு.யுகேஷ் பாபு அவர்கள் பதிவிட்டுள்ள உலகம் சுற்றும் வாலிபன் ஸ்டில்லை பார்த்ததும் ‘ராபின்சன் வீடு’ காட்சியை எழுத வேண்டும் என்ற ஆசை வந்து விட்டது.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
http://i58.tinypic.com/v5zfba.jpg
‘சிரித்து வாழ வேண்டும்’
‘சிரித்து வாழ வேண்டும்’... பெயரே உற்சாகத்தையும் தன்னம்பிக்கையையும் அளிக்கக் கூடியது. இதயவீணைக்கு பிறகு பத்திரிகையாளர் மணியனின் உதயம் புரொடக்க்ஷன்ஸ் சார்பில் எடுக்கப்பட்ட படம் இது. ஆனந்த விகடனின் ஆசிரியராக இருந்தவரும் ஜெமினி அதிபர் திரு.எஸ்.எஸ்.வாசன் அவர்களின் புதல்வருமான திரு.பாலசுப்பிரமணியன் அவர்களும் ஒரு பங்குதாரராக சேர்ந்து கொண்டதுடன் படத்தை எஸ்.எஸ்.பாலன் என்ற பெயரில் இயக்கியும் இருந்தார். மதுரையில் 100 நாள் கொண்டாடியதுடன் மற்ற சென்டர்களிலும் வசூலை அள்ளிக் குவித்த வெற்றிப் படம்.
படம் வெளியான நேரம் சரியில்லை என்பது என் கருத்து. உரிமைக்குரல் படம் வெளியான 24வது நாளில் ‘சிரித்து வாழ வேண்டும்’ வெளியானது. உரிமைக்குரல் படம் 12 சென்டர்களில் 100 நாட்கள் ஓடியது. மதுரையிலும் நெல்லையிலும் வெள்ளிவிழா கண்ட காவியம். மதுரையில் 200 நாட்கள் ஓடியது. உரிமைக்குரல் முழுமையாக ஓடி முடிந்த பின் சிரித்து வாழ வேண்டும் வெளியாகி இருந்தால் உரிமைக்குரல் 20 சென்டர்களில் 100 நாட்கள் ஓடியிருக்கும். அதுமட்டுமல்ல, சிரித்து வாழ வேண்டும் படமும் மதுரையைப் போல பல சென்டர்களில் 100 நாட்கள் ஓடியிருக்கும்.
* இந்தியில் அமிதாப்பச்சன் நடித்த ‘ஜன்ஜீர்’ படத்தின் தமிழாக்கம் சிரித்துவாழ வேண்டும்.
*தலைவர் இதில் அப்துல் ரகுமானாகவும் இன்ஸ்பெக்டர் ராமுவாகவும் இரட்டை வேடங்களில் அருமையாக வித்தியாசம் காட்டியிருப்பார்.
*ரகுமானாக வரும் தலைவரின் குரல் கொஞ்சம் கரகரப்பாக இருக்கும். போலீஸ் ஸ்டேஷனில் ராமுவாக வரும் தலைவரோடு வாக்குவாதம் செய்து விட்டு லுங்கியை பின்னால் லேசாக உயர்த்தியபடி காலை அகட்டி வைத்து நடந்து வருவார்.
*தனது வீட்டில் தொழுகை செய்யும் காட்சி ஒரு இஸ்லாமியர் செய்வதைப் போலவே இருக்கும்.
*அப்துல் ரகுமான் நடத்தும் கேளிக்கை விடுதிக்கு இன்ஸ்பெக்டர் ராமு வரும் சீனில் சிவப்பு நிற சூட்டில் விடுதியை சுற்றிலும் பார்வையை ஓடவிட்டு எடைபோட்டபடியே தலைவர் நடந்து வரும் ஸ்டைல் அவருக்கே உரியது. ரகுமான் பாய் வீசும் கத்திகளை மேக்னடிக் பெல்ட்டில் அனாயசமாக தேக்கும் காட்சியில் ரசிகர்களின் உற்சாக ஆராவரத்தில் தியேட்டரில் இருக்கைகள் உடையும்.
* இரண்டு பேரும் மோதிக் கொள்ளும் சண்டை காட்சிகள் தலைவரின் சுறுசுறுப்புக்கு மட்டுமின்றி எடிட்டிங் திறமைக்கும் சான்று.
*சிறுவயதில் கண்ணுக்கு எதிரே பெற்றோர் சுட்டுக் கொல்லப்பட்ட கொடூரத்தை பார்த்ததால் குற்றவாளிகளை கண்டால் உணர்ச்சிவசப்பட்டு புரட்டி எடுக்கும் மன உணர்வை, மனோகரை அடித்து துவைக்கும் காட்சியில் தலைவர் அருமையாக வெளிப்படுத்தியிருப்பார்.
* நம்பியார் வைக்கும் பார்ட்டியில் கலந்து கொள்வதற்காக பிளாக் சூட்டில் வரும் தலைவரின் அழகைக் காண கண் கோடி வேண்டும். ‘என்னை விட்டு போகாதே..’ பாடலுக்கு ஆடும் நடிகை (காஞ்சனா) தலைவரை கையைப் பிடித்து ‘வாருங்கள்’ என்று இழுப்பார். தலைவர் அசையாமல் அவரை உற்றுப் பார்த்தபடியே நிற்பார். ‘ப்ளீஸ்’ என்று கோரிய பிறகுதான் நகர்வார். தன் அனுமதியின்றி யாரும் தன்னை இழுக்க முடியாது என்பதையும் பெண்கள் கூப்பிட்டால் போய்விடுபவன் அல்ல என்பதையும் அற்புதமாக இந்த ஒரு உடல் மொழியிலேயே காட்டியிருப்பார்.
*பாடல்கள் தேனாறு. ‘கொஞ்ச நேரம் என்னை மறந்தேன்’... பாடல் உண்மையிலேயே நம்மையும் சூழ்நிலையை மறக்க வைக்கும். தலைவர் ஒரு பாடல் காட்சியில் அதிகமான உடைகளில் (8 உடைகள்) வந்த பாடல் இதுதான்.
*‘பொன்மனச் செம்மலை புண்படச் செய்தது யாரோ?’ பாடல் ஆரம்பிக்கும் முன், நம்பியாரின் ஆட்கள் தாக்கியதால் காயமடைந்து கட்டுக்களோடு சிகிச்சை பெற்று வரும்போது, இப்படி பண்ணி விட்டார்களே? என்ற கோபத்தையும், அடுத்து இவர்களை என்ன செய்யலாம்? என்ற யோசனையையும் முகத்தில் தேக்கியபடி வசனமே இல்லாமல் சுவற்றை வெறித்துப் பார்த்தபடி இருக்கும் காட்சி தலைவரின் நடிப்புத் திறனுக்கு உதாரணம்.
*படத்தில் வசனம் இன்னொரு சிறப்பு. திரு.நம்பியாரின் வசனங்களிலும் ஆங்காங்கே நகைச்சுவை தெளிக்கப்பட்டிருக்கும். ‘இனிமேல் மோசடி கும்பலில் இருக்க மாட்டேன்’ என்று தனது பாஸிடம் திருச்சி சவுந்தரராஜன் சொல்லிவிட்டு செல்லும்போது, ‘என்ன பாஸ், சூடா ஒரு டம்ப்ளர் ஞானப்பால் குடிச்ச மாதிரி பேசறான்?’ என்றும், உங்களது பாஸ் இப்போது என்ன செய்கிறார்? என்று நம்பியாருடன் இருக்கும் பெண் கேட்க, ‘ஒரு இடத்தில் இரண்டு அறிவாளிகள் இருந்தால் அங்கு வேலை நடக்காது, விவாதம்தான் நடக்கும். அதனால், நான்தான் அவரை கொன்றேன்’ என்றும் நம்பியார் கூலாக சொல்லும் காட்சிகளில் தியேட்டரில் சிரிப்பலை. ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்துக்கு வசனம் எழுதிய திரு.ஆர்.கே.சண்முகம்தான் இந்த படத்துக்கும் வசனகர்த்தா.
சதியால் இன்ஸ்பெக்டர் ராமுவாக வரும் தலைவர் சிறைக்கு அனுப்பப்படுவார். அங்கு தன்னைப் பார்க்க வரும் லதாவிடம், ‘கசப்பான அனுபவங்கள்தான் ஒரு மனிதனை பக்குவப்படுத்தும்’ என்று தலைவர் கூறுவார். எத்தனை உண்மையான வார்த்தைகள்.
சமீபத்தில் படித்த ஒரு செய்தியை.... செய்தி என்பதை விட வாழ்க்கையில் 24 மணி நேரத்தில் ஒருவருக்கு ஏற்பட்ட வேதனையை, கசப்பான அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
அமெரிக்காவைச் சேர்ந்த அவரது பெயர் கென்னத் டேட். அட்லான்டா நகரில் உள்ள நோய் கட்டுப்பாடு, தடுப்பு மைய பாதுகாப்பு அதிகாரியாக பணிபுரிந்து கொண்டிருந்தவர். ‘எபோலா வைரஸ் தடுப்பு முறை குறித்து அறிய இங்கு வரும் அதிபர் ஒபமாவை நீங்கள்தான் அருகில் இருந்து அழைத்து வர வேண்டும்..’ என்று கென்னத் டேட்டின் மேலதிகாரி கூறியபோது அவருக்கு சந்தோஷத்தில் தலைகால் புரியவில்லை.
சிகாகோ நகரில் பிறந்த ஆப்ரிக்க-அமெரிக்கரான டேட், தான் மிகவும் மதிக்கும் கறுப்பின வம்சாவளியை சேர்ந்த அதிபர் ஒபாமாவை வரவேற்பது தனக்கு கிடைத்த பிறவிப் பயன் என்று கருதிக் கொண்டார். பாதுகாப்பு பணிக்கான கைத்துப்பாக்கியையும் அதில் போடுவதற்கான தோட்டாக்களையும் நிர்வாகத்தினர் டேட்டுக்கு அளித்தனர். நிகழ்ச்சி நிரல்படி, சரியான நேரத்துக்கு வந்த ஒபாமாவையும் உடன் வந்த அவரது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சூசன் இ.ரைஸையும் வரவேற்று அழைத்துச் சென்று அவர்கள் போக வேண்டிய இடம் வரை கொண்டு போய் விட்டார் டேட். லிப்டில் செல்லும்போது, ‘‘எப்படி இருக்கிறீர்கள்? உங்கள் பெயர் என்ன?’’ என்று ஒபாமா தன்னிடம் கேட்டதை அதிபரின் மெய்காவலர்களில் ஒருவரிடம் பெருமிதம் பொங்க கூறினார் . ‘‘அதிர்ஷ்டக்காரரய்யா நீர்! என்னிடம் அவர் 2 ஆண்டுகள் கழித்துதான் பேசினார்’ என்று அந்த காவலர் சொன்னபோது உலகையே ஜெயித்து விட்ட மகிழ்ச்சியை அடைந்தார் டேட்.
பணிகளை பார்வையிட்டு விட்டு ஒபாமா மீண்டும் வந்ததும் அவரை வாசலுக்கு அழைத்துச் சென்று கார் வரை கொண்டு விட்டார் கென்னத் டேட். அதிபரின் கார் புறப்படும் சமயத்தில் அவருக்கு ஒரு ஆசை. காரையும் அதிபரையும் தனது செல்போனில் படம் பிடித்தார். அதுதான் பிரச்னையே. செல்போனில் படம் பிடித்தது மட்டுமின்றி அவரிடம் நிர்வாகம் அளித்திருந்த துப்பாக்கியை பார்த்த அதிபரின் மெய்க்காவலர்கள் பாதுகாப்பு குறைபாடு என்று கோபப்பட, வேலையை இழந்து நிற்கிறார் கென்னத் டேட். அந்த நிறுவனத்தில் பணியாற்றி வந்த அவரது மகனும் ஆட்குறைப்பு என்ற பெயரில் நீக்கப்பட்டது இன்னும் கொடுமை.
முதல் நாள் அதிபர் ஒபாமாவை வரவேற்கப் போகும் மகிழ்ச்சியில் தூக்கம் இல்லாமல் இருந்த கென்னத் டேட், மறுநாள், தான் எந்த தவறும் செய்யாத நிலையில் வேலை போன வேதனையில் தூக்கம் இல்லாமல் தவித்திருக்கிறார்.
‘மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்’ படத்தில் பத்மபிரியா வந்து போன பிறகு, அங்கு வரும் நம்பியாரைப் பார்த்து ‘பெருமைக்கு பின்னாலேயே சிறுமையும் வரும் என்று எனக்கு தெரியும். இளவரசிக்கு பின்னாலேயே நீங்கள் வரவில்லையா?’’ என்று தலைவர் கேட்பாரே? அது கென்னத் டேட் விஷயத்தில் எவ்வளவு பொருத்தமாக இருக்கிறது? அதே படத்திலேயே, ‘அரசியலில் நான் சந்திக்காத சூழ்ச்சியா?’ என்றும் தலைவர் கேட்பார். வாழ்க்கையில் அவர் சந்திக்காத கஷ்டங்களா? அரசியலில் அவர் சந்திக்காத சூழ்ச்சிகளா? இரண்டையும் தனது முயற்சியாலும் உழைப்பாலும் திறமையாலும் எதிர்த்து போராடி முறியடித்து அவர் பார்க்காத வெற்றிகளா?
தலைவரின் படங்கள் மட்டுமல்ல, படத்தின் தலைப்புகளும் பாடங்களே. விருப்பம் இருக்கும்போது வாய்ப்பு இருக்காது. வாய்ப்பு கிடைக்கும் விருப்பம் இருக்காது. ஆசைப்படும்போது கிடைக்காது. கிடைக்கும்போது ஆசை இருக்காது ஏற்றம் வரும், இறக்கம் வரும், பெருமை வரும், சிறுமை வரும். இந்த எதார்த்தத்துக்கு பெயர்தான் வாழ்க்கை. இன்பம் வரும்போது துள்ளாமலும், துன்பம் வரும்போது துவளாமலும் இருக்க, எந்த நிலை வந்தாலும் எப்போதும் சம நிலையில் இருந்து அனைவரும் ‘சிரித்து வாழ வேண்டும்’.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
கலைவேந்தன் சார்
சிரித்து வாழ வேண்டும் - படத்தை பற்றிய உங்கள் விமர்சனம் சூப்பர். நடுவே நீங்கள் தந்த நடப்பு கசப்பான செய்தியை சரியான நேரத்தில் , இடத்தில் இணைத்து பொருத்தமாக எழுதியமைக்கு பாராட்டுக்கள் .
மதுரை -புதூர் - விஜய் பாரடைஸ் அரங்கில் மக்கள் திலகத்தின் ''அன்பே வா '' தற்போது நடை பெற்று வருகிறது .
12வது பாகத்தில் மக்கள் திலகத்தின் திரி. மிகக் குறுகிய காலத்தில் பெரும் சாதனை. தொடங்கி வைத்த கலைவேந்தன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
திருப்பூர் ரவிச்சந்திரன் சார், உங்களது புகைப்படப் பதிவுகளைக் கண்டு நான் சொக்கிப் போனேன். அபாரமான வேலைத் திறன். அழகு ஜொலிக்கிறது.
முத்தையன் சார், மக்கள் திலகத்தின் படங்களைப் பார்க்கும் போது எந்தெந்த காட்சிகளில் மக்கள் திலகத்தின் குளோசப் சாட் மிக அதிகமாக ரசிக்கப்பட்டதோ அவற்றையெல்லாம் தேடிப் பிடித்து பதிவிட்ட உங்களது அபார ரசனைக்கு வந்தனங்கள்.
கலைவேந்தன் சார், தங்களது விமர்சனங்கள் மக்கள் திலகத்தின் ரசிகர்கள் அனைவருடைய எண்ண ஓட்டங்கள். அத்துணை பேரின் எண்ணங்களையும் நீங்கள் எழுத்தாக்கிவிடுகிறீர்கள். பாராட்டுக்கள்.
வினோத் சார், எப்பொழுதும் போல் இப்பொழுதும் தங்களது பதிவுகள் டாப் கிளாஸ்.
பேராசிரியர் சார், அபூர்வமான புகைப்படங்கள் மற்றும் தகவல்களுக்கு நீங்கள் தான். Library of MGR.
ராமமூர்த்தி சார், வெற்றிகரமாக தாய்லாந்து சென்று வந்த தங்களுக்கு வாழ்த்துக்கள். தங்களது பயணங்களைப் பற்றிய விரிவான கட்டுரையை தங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன். வேலூர் ரெக்கார்டுகள் இது வரை எங்கும் பார்க்காதது. நன்றி நன்றி.