வருடங்கள் போனாலும் வாழும் கவிதை
பருவத் திளமையாய்ப் பார்
புதுவருட நல் வாழ்த்துக்கள்.. டோண்ட் பிஎம் மின்னா ஒங்கள ப்ரைம் மினிஸ்டரா ஆக்கக் கூடாதா..ஏஏஏன்..(தி.மோ மனோரமா போல)
Printable View
வருடங்கள் போனாலும் வாழும் கவிதை
பருவத் திளமையாய்ப் பார்
புதுவருட நல் வாழ்த்துக்கள்.. டோண்ட் பிஎம் மின்னா ஒங்கள ப்ரைம் மினிஸ்டரா ஆக்கக் கூடாதா..ஏஏஏன்..(தி.மோ மனோரமா போல)
மனோரமாவுக்கு கம்ப்யூட்டர் பத்தி தெரியுமான்னு தெரியாது..ஆனா மனோரமாவைத் தெரியும்...
சிக்கலில் வந்த நண்பர்
..ஷண்முகம் நாய னத்தை
மிக்கவே ஆவல் நெஞ்சில்
..மேவியே தானெ டுத்து
திக்கியே இசைக்கப் பார்த்து
..திகுவெனச் சிரிக்க வைத்து
மக்களைப் பக்கம் ஈர்த்த
...மனோரமா ஆச்சி தானே
வல்ல நடிப்பால் அனைவரையும்
வளைத்துப் போட்டு வைத்திருக்கும்
வெல்ல மொழியால் மனங்கவரும்
வீழாக் கலையின் நிறைகுடமாம்
நலல இரம்மிய ரமாவினை
நாடிப் புகழ்ந்த நும்கவிதை
சொல்ல இனிக்கும் விதமாகச்
சூடும் மலராய் அமைந்ததுவே.
மலேசிய நாடன்றி வேறு --- உண்டோ
மயங்காமல் நீயுண்மை கூறு
எதிர்நிற்கும் கட்சியென் றாலும் --அதை
யார்நின்று இயக்கிய போதும் --யார்க்கும்
மதிமுற்றி மாண்புற்ற நீதி -- அரசர்
மாறா முறைகூறும் நாடு.
மலேசிய நாடன்றி வேறு --- உண்டோ
மயங்காமல் நீயுண்மை கூறு!
அன்பின் சிவமாலா பாராட்டியமைக்கு நன்றி...
இந்தக் கவிதை சமீபத்திய நிகழ்வினால் எழுத்ப் பட்டதா.
ஆம், சி-க அவர்களே! அண்மைய ஒரு நிகழ்வு பற்றியதுதான்.
இங்கே சென்று சில கருத்துரைகளைக் காணலாம்:
http://www.nst.com.my/local/politics...erdict-1.30657
அரசியலே அழுக்கென்பார் அறிந்த மாந்தர்
அரசியலில் நாகரிகம் விழைவா ருள்ளார்.
உரசியதும் எரிகின்ற நெருப்புக் குச்சி
ஒத்தபலர் உலவிடுமோர் மேடை அஃதாம்,
வருசினத்திற் கடிமையென வளைந்து கையால்
வாய்வீச்சால் வம்புசெய்த வழியோர் பல்லோர்,
முரசறைந்து செயல்திட்டம் முளைப்பித்துப் பின்
முனைந்தொருகாய் பழம்படுத்தா தணைந்தோர் கோடி!.
பக்கெனத்தான் இருக்குதயயா நெஞ்சத் துள்ளே
..பாரினிலே அரசியலின் தன்மை கண்டு...
திக்குகளில் எங்கெங்கும் நோக்கும் நேரம்...
..தெரிகிறதே சுயநலந்தான் செயலில் எல்லாம்..
மக்கெனத்தான் மக்களையும் நினைத்து அந்த
..மாண்புமிகு மாந்தரவர் சேர்க்கும் காசு
தக்கப்டி தங்கிடுமோ அவர்கள் கூட..
..தயங்காமல் தெரிந்திடுமே காலப் போக்கில்....
முனைந்தொருகாய் பழம் படுத்தாது அணைந்தார் கோடி..என்றால்.கோடிகளை கொய்கிறார்கள் என அர்த்தமா..
நன்றாக இருக்கிறது உங்கள் எண் சீர்...
தழுவல்கள்
ஜிஞ்சும்மா பட்டும்மா செல்லப் பாப்பு
...சில்லென்றே சிரிக்கின்ற ரோஜா ஈர்ப்பு
ப்ஞ்சுகொண்ட் மென்மையிலே ஆன கன்னம்
...பார்க்கும்விழி இரண்டிலுமே கவிதை மின்னும்
துஞ்சுவது தான்விழித்தால் தாவிக் கையில்
..தூக்கியதை எடுத்திடுவாள் தோளில் கொஞ்சம்
நெஞ்சகத்தின் அமுதத்தை ஈயும் தாயின்...
..நெகிழ்வான அணைப்புமொரு தழுவல் அன்றோ..
**
பள்ளியிலே படிக்கின்ற காலம் தொட்டு
...பக்குவமாய்க் கல்லூரி முடித்த பின்னே
கல்லுக்குள் நாரெடுக்கும் கடின மான
..களமான வாழ்க்கையிலே வெற்றி தேடி
நல்லபடி மனம்நினைத்த வேலை பெற்றே
...நல்வார்த்தை தந்தையிடம் சொல்லும் நேரம்
உள்ளத்தில் பெருமிதத்தால் கைகள் நீண்டு
...உடலுடனே அணைத்திடுவார் அதற்கீ டேது...
*
சிறப்பான காலமெது வாழ்க்கை தன்னில்..
...சில்லென்றே கனவுகளும் மலரும் காலம்
உரமான உடலினுள்ளே ஊடிச் சென்று
..உணர்வுகளால் ஆட்கொள்ளும் இளமைக் காலம
கரந்தொட்டு கண்ணுக்குள் நுழைந்து விட்ட
..காதலமலர்ப் பெண்மகளை எண்ணுங் காலம்
தரமான ஆசையுடன் வெட்கம் விட்டே
...தழுவுமவள் செய்கையுந்தான் தவறா என்ன..
**
சிவந்துவிட்ட கண்களிலே சீற்றம் காட்டி
...சினத்துடனே பாஞசாலி சொன்னாள் அன்று
கவர்ந்துசென்ற என்மானம் நிலைக்கும் வண்ணம்
..கவ்ர்ந்திடுவீர் கெளரவரின் உயிரைப் பின்னே
துவங்கிடுமே என்வாழ்வும் துன்பம் நீங்கி
...துயர்மறந்த் விழிகளிலே மகிழ்ச்சி பொங்க
உவ்ந்தேநான் அணைத்திடுவேன் அழுத்தி நெஞ்சில்
..உள்ளத்தின் மகிழ்ச்சியது தெரியும் வ்ண்ணம்
ப்டபட வென்ற பேச்சை..
..பாஞ்சாலி சொல்லக் கேட்டு
கடகட வென்றே சென்ற
..காலத்தில் போரில் நன்றாய்
மடமட் வென்றே வென்று
..மறவரைக் கொன்றே செல்ல
தடந்தோளகள் ந்சுங்கும் வண்ணம்
..தயங்காமல் அணைத்துக் கொண்டாள்..
**
நேற்றுதான் தென்றலாய் தீண்டிச் சென்ற
..நயமான சுகவுணர்வு நெஞ்சில் நன்றாய்
ஊற்றுப்போல் உற்சாகம் பெருகி ஓடி
உணர்வுடனே நின்றிருந்த மரங்கள் எல்லாம்
சீற்றமுடன் முகமாற்றி சுழன்று வந்தே
..செல்லமென இருக்காமல் அடித்தே கொண்ட்
காற்ற்துவும் புயலாகக் கொண்ட தோற்றம்..
..கண்டும்னம் தாளாமல் வீழ்ந்த தங்கே...
**
நழுவாமல் நேரத்தைத் தேக்கி வைக்க
..நயமுடனே வேற்றுமொழிக் கதைகள் தன்னை
ப்ழுதாக்கிக் கொள்ளாம்ல் ச்ற்றே மாற்றி
..ப்க்குவமாய் எடுத்திடுவார் திரையின் முன்னே
வழுவாத வசனங்கள் எல்லாம் கொண்டு
..வஞ்சியரை நடிகர்களை வைத்துக் கொண்டு
தழுவித்தான் தீந்தமிழில் எடுத்த வற்றைத்
...தழுவ்லென அலட்சியமாய்ச் சொல்ல லாமா...
*****
அன்பின் சிவமாலா..
உங்கள் எழுத்துக்க்ளில் முதிர்ச்சி தெரிந்தாலும் என்னை போல் நீரும் இளமை என் நினைத்து ஒன்று சொல்லட்டுமா...
நேற்றுப் பார்த்த ஒரு திரைப்படம் நண்பன்.. ஹிந்தியில் வந்த படத்தின் கதையைத் தமிழில் ஆரத் தழுவி எடுத்திருக்கிறார்கள்.(ஆரத் தழுவி என்றால் காட்சிக்குக் காட்சி அப்படியே – நடிகர்க்ள்,மொழி மட்டும் வேறு...கொஞ்ச்ம் விற்பனைக்காக பாடல்கள் சில கூட்டி... நன்றாய்த் தான் இருந்தது..இருந்தும், என்ன் இருந்தும் நமது ஒரிஜினல்..சுயகற்பனை இல்லையே என்பது கொஞ்சம் நிரடிய்து...
அப்படியே சிந்தித்தபடி எனது தாரத்தையும் தமிழையும் தழுவியிருந்ததில் எழுந்த் எண்ணம் இது...! கவிதையா இல்லையா எனத் தெரியாது...
**
தழுவி, தான் எடுத்தவற்றைப் பிறர் அங்ஙனம் அலட்சியப் படுத்துவது, கவலை தரக்கூடும்.Quote:
தழுவித்தான் தீந்தமிழில் எடுத்த வற்றைத்
...தழுவ்லென அலட்சியமாய்ச் சொல்ல லாமா...
போட்ட பணம் திரும்பி வந்துவிட்டால், கவலை தீர்ந்துவிடுமே.....
போட்ட பணம்திரும்பப் போகும் கவலையெலாம்
ஆட்டமுடன் பாட்டமதன் பின்.
How did the film do at the box office?
பட்டறிவு மிக்கப்பா வல்லவர் --என்றுQuote:
ஜிஞ்சும்மா பட்டும்மா செல்லப் பாப்பு
...சில்லென்றே சிரிக்கின்ற ரோஜா ஈர்ப்பு
ப்ஞ்சுகொண்ட் மென்மையிலே ஆன கன்னம்
...பார்க்கும்விழி இரண்டிலுமே கவிதை மின்னும்
துஞ்சுவது தான்விழித்தால் தாவிக் கையில்
..தூக்கியதை எடுத்திடுவாள் தோளில் கொஞ்சம்
நெஞ்சகத்தின் அமுதத்தை ஈயும் தாயின்...
..நெகிழ்வான அணைப்புமொரு தழுவல் அன்றோ..
பார்த்தவுடன் நான்கண்டு கொண்டேனே.
இட்டகவி தழுவற்குக் காவியம் -- நெஞ்சுக்
கிதமான கோவைச்சொல் ஓவியம்.
அனைத்தும் இனிய விருத்தங்கள்.
இப்போதைக்கு அரங்கு நிறைகாட்சிகள் தான்..பட் போகப்போகத்தாந்தெரியும்..கொஞ்ச்ம் நீளம்..மூன்றே கால் மணி நேரம்..ஹிந்தியில் பார்த்தபோதே சற்று கண் வ்லித்தது...
நன்றி சிவமாலா...
தாராட்டில் தான்மயங்கும் சேயினைப் போலுங்கள்
பாராட்டு மான தெனக்கு... (ஹிஹி..கண்ணா ஜஸ்ட் லைக்தட் குறள் எழுதிட்டடா)
வசிஷ்டரின் வாயால் பிரம்மரிஷிப்பட்டம் பெற்றாற்போலிருக்கிறது...
iniya ponggal vazththukkaL, ungkaLukkum anaivarukkum.
time 2 something in Malaysia, bye for now......
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்...இனிய இரவு...
Quote:
எழுந்த் எண்ணம் இது...! கவிதையா இல்லையா எனத் தெரியாது...
எதுகவிதை என்பதற்கோ இயலறிந்த ஆசிரியர்
எடுத்துரைக்கும் காரணங்கள் பலவே;
புதுவகையோ மரபுவழிப் போம்கவியோ யாதெனினும்
பொதிந்துவைத்த உணர்வுகளே கவியாம்;
மதுமலர்க்குள் வண்டினங்கள் மாந்தினது தேனன்றி
மற்றெவையும் குறியாதல் உளதோ?
பதிவுணர்வு தானன்றிப் பாட்டுக்குள் எதுவேண்டும் ?
இதுகவியென் றாடிடுக இனிதே.
அன்புடைய சி.க. அவர்களுக்கு என் நன்றி.
அழகிய விருத்தம் சிவமாலா நன்றி.
வதைக்கும்விழி அழைப்பால்மனங் கலங்கிக்குளச் சுழலாய்
பதைக்கும்பொழு தினிலேயவள் பருவத்தெழில் துணையில்
விதைப்பாள்சில விருப்பங்களை இதய்ம்மகிழ்ந் திடவே
கதைகள்பல் சொலியேமுகம் களிக்கும்படி உரைப்பாள்
பக்க்த்து வீட்டு பாட்டுக்குப் பாட்டிற்காக அதிகரீணியில் முய்ன்றது...
என்னவென்று தெரிய்வில்லை..வஞ்சியையும் புரிந்துகொள்ள முடியவில்லை..வஞ்சி விருத்தததையும்..கொஞ்ச்ம சொல்லிக் கொடுங்களேன்..
Wow!
மீன்குஞ் சடிக்க முயல்கின்ற நீச்சலின்முன்Quote:
என்னவென்று தெரிய்வில்லை..வஞ்சியையும் புரிந்துகொள்ள முடியவில்லை..வஞ்சி விருத்தததையும்..கொஞ்ச்ம சொல்லிக் கொடுங்களேன்..
நான்சொல் கொடுக்கவோ! நன்று,,,,
ஓடையின் பக்கலில் ஓசைகுன்றித் தான்பறக்கும்
பாடறியாப் பாப்பாத்தி நான்.
எண்ணியாங்கு பாடும் எழுபா வலர்கைக்குள்
வஞ்சி வடித்தால் வரும்.
ஹை..இது தான் நழுவல் என்பது...
கழுவும் பொழுதிலே கையிலே சிக்கா
நழுவும் மீனாமோ நீர்...
Quote:
ஹை..இது தான் நழுவல் என்பது...
கழுவும் பொழுதிலே கையிலே சிக்கா
நழுவும் மீனாமோ நீர்...
ஊஹூம், நான்thAn பறக்கும் பூச்சி என்று சொல்லிவிட்டேனே.
பூச்சியெனப் பெயராமே
சூச்சுமமாய்த் தவஞ்செய்வீர்
கூச்சமதை அகற்றியுந்தான்
மூச்சுவிட்டுக் கவிபுனைவீர்..
என்னென்று உரைப்பதம்மா
தன்னடக்கம் கொளும்நெஞ்சை
வண்ணமய இசைச்சாறாய்
எண்ணமுடன் எழுதியவர்
தாழ்ந்தப்டி பறப்பவரோ
ஆழ்ந்துமனம் உழுபவரோ
சூழ்ந்துவரும் இடரினிலும்
வீழ்ந்துபடா திருப்பவரே...
நன்றி..கொஞ்சம் கஷ்டப் பட்டு வஞ்சித் தாழிசை (உபயம் அ.கி.பரந்தாமனார்) ப்டிச்சு எழுதிப் பார்த்தேன்..சரியா
ஒரே நாளில் - "வஞ்சி வருமென்று " நான் புகன்றதை ஐயமற நிறுவிவிட்டீர்.
பறக்கும் பூச்சி, நீச்சல் வீரரான மீனுக்கு வேறென்ன விளம்ப முடியும்!
The poochchi seems to make some noise, It is now decoded for you, follows:-
மனம்போல் பாடல்புனைவீரே
விரைந்தே பாவகைகள் அறிந்தே...
உம்மனம் ஒன்றை நினைத்தால் - அதைத்
திண்ணமாகச் செய்து முடிப்பீர்,
உயர் கல்வி கலைகளில் முயன்றே
உண்மையாய்ப் பண்பினால்.....(மனம்போல்) -
பூச்சியொன்று பறந்தநேரம்
மீன்களுக்கு நல்லநேரம்;
ஆச்சுதென்று குஞ்சுமீனும்
ஆழநீரில் நீச்சலிடும்.
புதுவெள்ளம் இதுவென்று
பொடிமீனோ அஞ்சவில்லை.
நதி நீரின் ஓடுவேகம்
நழுவவில்லை கண்டபின்பும்,
பாராட்டுக்கள்.
நன்றி சிவமாலா..கொஞ்சம் கலிவிருத்தமா...
பொடிமீனா பொடியவனா பைந்தொடியே யானறியேன்
மடிநிறையப் பொரிபோலே மலரடுக்காய்க் கற்பனைகள்
வடிவமைக்க மனக்குளத்தில் வந்துவிழ அவைதொடுக்க
படித்ததையே தான்முயல பாவந்தே இசைத்ததுவே
நேற்று மாலை, பார்த்தீர்களென்றால், என் அ.மாடிக் குடியிருப்பில் எனது மூன்றாவது மாடிப் பலகணியில் அந்தக்கால கறுப்பு வெள்ளை நிறத்தில்
ஒரு புறா வந்துவிட்டது..
கைப்பிடிச் சுவர் பெரிதோ அல்லது உடல் நிலை சரியில்லையோ தெரியவில்லை... அதனால் மறுபடி பறக்க இயலவில்லை.என் மனைவிதான் முதலில் பார்த்தது..( நான் அலுவலகம் முடித்து இரவு ஏழு மணிக்குத் தான் வருவேன்)
கொஞ்சம் பொரி வைத்தாள்..ம்ஹீம் சாப்பிடவில்லை.. சோர்வாய் மூலையில் சென்று உறங்கிவிட்டதாம்.. நேற்று கொஞ்சம் குளிர்காற்று நிறைய..எனில் குளிரில் நடுங்கியபடி.. நான் வந்தபின்பும் பார்த்தால் தலையை உள்செலுத்தி நல்ல தூக்கம்..
இன்று காலையில் அலுவல் கிளம்பும் போதும் பார்த்தால் உறக்கம் தான்..
நான் சென்றபிறகு சமர்த்தாய்க் கண் விழித்து வீட்டுக்காரி போட்ட கோதுமை தானியங்களைக் கொத்தி கிண்ணத்தில் வைத்த காலைக்காப்பிபோன்ற தண்ணீரை அருந்திவிட்டு அன்ன நடை போட்டுக் கொண்டிருந்ததாம்
சொல்ல மறந்துவிட்டேனே..இன்று என் தந்தையாரின் நினைவு நாள்.பலவருடங்களுக்கு முன் இந்நாளில் தான் என் தகப்பனார் வானுலகம் சென்றிருந்தார்.
எனில் அலுவலகம் சென்றபோது தொலைபேசி.. அப்பாவுக்கு என்ன ஸ்வீட் ப்ண்ணி படைக்கிறது...சரி கேசரி செய்யேன்..
செய்து படைத்தபோது பால்கனி வழியாக அந்தப் புறா கண்ணாடிக் கதவைக் கொத்திக் கொண்டிருந்ததாம்.. பின் தீபாராதனைகாட்டும் போதும் கொஞ்சம் தன்னைத் தானே சுற்றியதாம்.. கண்ணில் ஒற்றிவிட்டு பால்கனியில் கண்ணை ஓட்டினால்.. அது இல்லை..காணோம்..எப்படிப் பறந்ததென்றும் தெரியவில்லை..
மாலை வந்து கொஞ்சம் விளையாடலாம் என எண்ணியிருந்த எனக்கு சற்றே ஏமாற்ற்ம் தான்..
அதைக் கொஞ்சம் எழுதிப்பார்த்தேன்..
புறவே புறவே அழகுறும் அலகுடன்
உறவு கொளவே ஓடிவந் தனையோ
துறவைத் திடுமென துணிந்தே எடுத்தே
விரைந்த துமேனோ விளக்குவாய் நீயே
வானில் பறந்தே வகையாய் மகிழ்வைப்
பேணிய படியே இருந்திருக் கலாமே
நேற்று வந்தாய் நெஞ்சு நிறைத்தாய்
ஊற்றாய் உளத்தில் சோகம் பொங்குதே..
இட்ந்தான் மாறி இங்குவந் தாய்நீ
இனிதா கவேதான் இருந்திருக் கலாமே
திடமா யொருமுடி வெடுத்தே சென்றாய்
தவிக்கும் மனதுன் அழகின் நினைவிலே
எங்கோ பறந்தாய் மகிழ்வாய் இருந்தாய்
இங்கே இருந்த இடமும் வெற்றாய்
வெறுமையாய்ப் பாலையாய்த் தெரிந்தே
புறவே உந்தன் நினைவைச் சொலுமே..
**
எலி சென்று மறைந்ததுவோர் ஏமாற்றமே
வலி நெஞ்சில் கரைந்திடவே வருமாற்றமே
என்றிருந்த நண்பருக்குப் புறவேற்றமே
சென்றமன மகிழ்வினையே மீளேற்றுமே,
இப்படியான் எதிர்பார்த்து நின்றபோதில்
இப்புறவும் பறந்ததுவோ இன்றுகாதில்
செப்பரிய துன்பியல்சேர் செய்திமாதே!
ஒப்பிடவே ஏமாற்றம் இனியொன்றேதே!
எனவாங்கு,
யானுமென் கவலை ஈண்டு பதிவேன்,
ஊணும் உறக்கமும் மீண்டு
காணும் நன்மை அனைத்தும் மீளவே.
நல்லா இருக்கு...இது வஞ்சி தானே..
பக்கத்து வீட்டு பாட்டுக்குப்பாட்டில் மா காய் காய் காய் என எழுதியிருக்கிறேன்..பார்த்துச் சொல்லுங்கள்..(இங்கும் இடலாம்..ஆனால் இரண்டு இடுகையாகுமென இடவில்லை..
ஞானும் நல்லதுபோல தெரக்கி நோக்கி, அது கிட்டிட்டில்லா ஸாரே! ஏ திரி,நிங்ஙள் எவிட இட்டு?
I am sorry
anbudan
ரசிகத் தன்மையில்
கைதேர்ந்தவள் வஞ்சி,
ராகத்தில் சிறந்தது
நாட்டைக் குறிஞ்சி
என்றொரு பாடலில் இசைப்பா அரசர் பாபநாசம் சிவன் அவர்கள் பாடியுள்ளார்.
நாட்டைக் குறிஞ்சிக்கு ஒத்துவரும்படி வஞ்சி யாப்பில் அல்லது அதன் சாயலில் ஏதேனும் தரமுடியுமா?
அன்புடன்
தோழீ ஈஈஈ... ரொம்ப் எதிர்பார்க்கறீங்க.. முயற்சி செய்யறேன்..
அது ப்வள்மணிக்காவோட கவிதைக்குக் கவிதை பாட்டுக்குப் பாட்டு பொய்ம்ஸ்/க்விதைகள்ல முதல் திரி...
உலகின் மறுபெயர் துன்பம் - இதை
ஒதுங்கின பேரகளுக் குள்ளதாம் இன்பம்!
அளவிடும் ஆழறி வுள்ளார் --பல்
லாண்டுகள் முன் நம தேட்டினில் சொன்னார்.
புயல்மழை காற்றொடு வாட்டும் -- படு
குளிர்பெருந் தீ புகை என்றிவற் றோடு
கொலைகள வாம்வெடி வைப்பு -- எனக்
கூறுதற் கில்லாத பட்டியல் நீட்டம்.
வான்வழிச் செய்திகள் தம்மில் -- இந்த
வன்மைகள் தின்மைகள் வற்றி இஞ் ஞாலம்
கூன்படல் இல்லாத வாழ்வை -- மக்கள்
கொண்டுயர்ந்தார் எனக் கேட்பதெந் நாளோ!
என்னால எல்லாம் உலகத்துயரிலிருந்து ஒதுங்கெல்லாம்முடியாது! இன்னும் வயதாகலையோன்னோ...!
நல்ல கவிதை நன்றி..
ம்லேசிய் நாட்டிலோர் மாலா – அட
பலேயெனச் சொலும்பாடல் புனையுமோர் ஆளா!
கலையுடன் கவிதைகள் தந்தே – நெஞ்சில்
நிலையாக என்றுமே நிற்பாரே இங்கே
நன்றிதனை நான்நவில்வேன்
மன்றுபுகழ் சின்னக்கண்ணர்
நன்றுநன்றும் கவிதையென்றே
இன்றினிதே உரைத்தமைக்கு.
அம்மாவை நினைத்தபோது
சும்மாவிளித் திடும்குழந்தை
நம்மால்வே றியலாதென்றே
சும்மாநான் எழுதிப்பார்த்தேன்
கவிதையம்மை வந்தாளென்று
நவின்றதாலே நான்மகிழ்ந்தேன்;
செவிமடுத்த சீரோர்யார்க்கும்
இவண்வணங்கி அமைகின்றேன்.
இவர் யாரோவெனின்,
கவிதைக்குக் கவிதைபாடும் மன்னர்;
கலைமொழி புனையுவிற் பன்னர்;
நிலையாக நிறுத்திவைத்த
சிலைபோலும் ஒருபோதும்
கலையாத சொற்களையே
கவித்து அழகுகாட்டிய கவி;
இவர் ஈண்டு நிகழ்த்திய விந்தை
யாதோவெனின்,
அதுதான்,
தோட்டத்துச் சிறுமலரை
நாட்டியது நன்மலை நயந்த மதுமலராய்.
இத்துணைப் புகழ்ச்சியோ இச்சிறு மலருக்கு?
கொல்லையிற் கிடந்தே எல்லையுட் பட்ட
முல்லை எனவே முகிழ்த்து
பிறபுகழ் விழையா துறைந்தனம் யாமே.
உறுமீனாய் நிற்காமல் ஓடுகின்றார் செந்தமிழில்
சிறுமலராம் ந்ம்புவா யா..
அட அட நன்றியையும் அழகான பாக்களில் சொன்னீர்...
கொப்பளிக்கும் வெம்மை -- ஒரு
குளிரறை தேடிட வைத்ததே எம்மை;
தெப்பக்குளம் அண்மை -- எனில்
தேங்கா ததிற்சென்று வீழுவோம் உண்மை.
இப்படித் துன்புறவே -- கண்ட
இயற்கைதந் தாள்பெய்க! பெய்யென் பொழிவே!
செப்படி வித்தையன்றே--இந்தச்
சீர்மிகு நன்மலை நாட்டிலி(து) இயல்பே.
நான்கு பருவங்களோ -- இல்லை!
நாமறிந் தோம்வெயில் மாரி இ ரண்டே
பாங்குற வாழ்வதற்கு -- இயற்கை
பண்பாடும் பொன்மலை நன்னாடு போலுண்டோ?
ஹாய் மால்ஸ்! நேற்று உங்கள இடுகைக்கு முன்னால் நழுவல் என்ற் தலைப்பில் எழுத ஆரம்பித்து பாதியிலேயே நிறுத்திவிட்டேன்.இன்று பார்த்தால் அனல் அடிக்கும்பாட்டு..சூட்டோடு சூட்டாக மீதியையும் எழுதி விட்டேனே...! நிறைய எழுத் நினைத்துச் சுருக்கிவிட்டதால் கொஞ்ச்ம் சுமாராய்த் தான் இருக்கும்.
***
நழுவல்கள்
**
விரும்பி எழவும் முடியவில்லை
…விழித்து நோக்கவும் தெரியவில்லை
குருட்டாம் போக்காய் குறுகித்தான்
...ஒடுங்கி நன்றாய் இருந்தாச்சு
புருவஞ் சுருக்கிக் கண்மூடிப்
...பொய்யா யுறங்கி இருந்ததுவும்
இருட்டில் நழுவி ஓர்நாளில்
...உலகம் பார்க்க வந்தாச்சு.
விழிகள் வெற்றாய்ப் நோக்குங்கால்
...வெளிச்சம் கண்ணில் அடித்திடவே
கிலியால் உதடுகள் தான்கோணி
...கோவென் றழுதால் அன்னையவள்
வலியச் சேர்த்தே அணைத்த்படி
...அமுதம் தன்னை புகட்டுங்கால்
துளீயாய்ச் சிரித்துத் துஞ்சியதில்
...சென்ற நேரம் கொஞ்சமல்ல.
கிட்ட இருந்தும் வாராமல்
...கூவி அழைத்தும் கேளாமல்
எட்டி எடுக்க் முடியாமல்
...ஏயென் றழவும் அன்னையும்தான்
தட்டித் தழுவிப் புற்ம்போட்த்
...தவழ்ந்து பொம்மை தானெடுத்துக்
கட்டிப் பிடித்தே தூங்கியதில்
....கழிந்த காலம் எத்தனையோ
தளர்நடை பழ்கும் போது
....த்யக்கமும் கொண்டி டாமல்
உள்றலாய்ச் சொற்க ளோடு
...உயரமாய் உள்ள வற்றை
மலர்ச்சியாய் எடுக்கப் பார்த்து
...ம்றுபடி முய்ற்சி செய்து
கலவரம் அடைந்து க்த்தும்
...காலமும் போன தங்கே.
பள்ளியில் படித்த பாடம்
...பருவமும் அடைந்த பின்பு
துல்லிய மாக மேலே
...தொட்ர்ந்த்து வேறு திக்கில்..
கல்வியும் முடித்த பின்பு
...கனிவுடன் வேலை தேடி
நல்லிடம் த்னிலே சேர
...ந்ழுவிய் காலம் பலவே
பழுதுகள் ஏதும் இல்லா
...பக்குவ மாக வேலை
பார்த்த்தில் மனைவி சேய்கள்
...பாய்ந்துதான் சேர இன்றோ
வழுக்கிடும் தரையைப் போலே
...வாழ்வதன் சுவைகள் எல்லாம்
நழுவுது மெல்லக் கொஞ்சம்
....நாரணன் பேரைச் சொல்லி